முதன் முதலாக அவர்கள் தயாரித்தது சின்ன அளவிலான ‘சீனி’ வெடியைத்தான். பிறகு என்ன சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பு தொழில் சக்கை போடு போட ஆரம்பித்தது. அடுத்தடுத்து இவர்களது வாரிசுகளும் இதே பட்டாசு தொழிலில் இறங்க, இப்போது சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 750க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம். ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. டி.ஆர்.ஓ., லைசென்ஸ் கொடுப்பதோடு சரி. முறையான கண்காணிப்போ.. விதிமுறை மீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் பட்டாசு ஆலைகள், அதிகாரிகளுக்கு பணம் காய்க்கும் மரம் என்பதால்தான்..
ஒரு நாளைக்கு 100 ரூபாய்தான் சம்பளம். இவ்வளவு பட்டாசுகளை தயாரித்தால் போதும் என்ற ரீதியில் பட்டாசு தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்ட சின்ன பட்டாசு ஆலை அதிபர்கள் கொண்டு வந்ததுதான் இந்த லேபர் கான்ட்ராக்ட் முறை. (இதற்கு என்று தனியாக கான்ட்ராக்ட்காரர்கள் இருக்கின்றனர்) அதாவது ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு எவ்வளவு பட்டாசு தயாரித்து கொடுக்கிறார்களோ அதற்கு ஏற்ப சம்பளம். ஒரு நாளைக்கு 500 ரூபாய் கூலிக்கு பட்டாசு தயாரிக்க முடியும் என்றால் அதற்கும் ஓ.கே.தான். இப்படி அநியாயமாக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தொழிலாளர்கள், அவசர அவசரமாக பாதுகாப்பு வசதி இன்றி பட்டாசுகளை தயாரிக்கும் ஆபத்தான வேலை தான் பல வெடி விபத்துக்களும், உயிர் இழப்புகளுக்கும காரணம். இதற்கு ஒரு பரிதாபமான உதாரணம்...கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் 40 பேரை காவு வாங்கிய வெடி விபத்துதான். முதலிப்பட்டி ஓம் சக்தி பயர் ஓர்க்ஸ்சின் உரிமையாளர் விருதுநகரை சேர்ந்த முருகேசன். பட்டாசு ஆலை நலிவடையவும், திருத்தங்கல்லை சேர்ந்த லேபர் கான்ட்ராக்ட்காரர் பால் பாண்டி அந்த பட்டாசு ஆலையில் இருந்த சில ரூம்களை குத்தகைக்கு எடுத்து அதில் 200க்கு அதிகமான தொழிலாளர்களை கான்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தி, ராப்பகலாக பட்டாசுகளை தயாரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ஃபேன்சி ரக வெடிகளுக்கான மணி மருந்து தயாரிக்கும் போதுதான் திடீரென்று விபத்து ஏற்பட்டு 40 பேரை காவு வாங்கிய துயர சம்பவம் நடந்தது. இந்த சம்வத்திற்கு பிறகு இன்னமும் பல இடங் களில் இப்படி ஆபத்தான முறையில் பட்டாசு தயாரிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. |
|
பட்டாசு தொழிலில் கான்ட்ராக்ட் லேபர் முறைக்கு மாறியதால் ஏற்படும் விபரீதங்களை பற்றி பார்த்தோம். இனி, ஏதோ சோறாக்கி, குழம்பு வைப்பது போல் வீடுகளில் சர்வ சாதாரணமாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பட்டாசு தயாரிக்கப்படும் விபரீதங்களை பார்க்கலாம். கடந்த ஆண்டு வெம்பக்கோட்டையில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறு அறையில் அணு குண்டு
வித விதமான கலர்களை கொடுப்பதற்கு சிவப்பு வெடி உப்பு, பச்சை வெடி உப்பு, நீலக்கலர் வெடி உப்பு என்று எவ்வளவு கலர் வேண்டுமோ அதற்கு ஏற்ப வெடி மருந்தை இதில் சேர்ப்பார்கள். மணி மருந்து கலவை ரொம்பவும் ரிஸ்க் என்பதால்தான் அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூலியும் அதிகம். சில மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதால் தொழிலாளர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதை செய்கிறார்கள். சில நேரங்களில் இந்த மணி மருந்து கலவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலையில் 'கட்டிங்' போட்டு விட்டு இந்த வேலையை செய்யும் போது கவனக்குறைவால் வெடி விபத்துக்கள் நடந்த சம்பவங்களும் உண்டு. மணி மருந்து காய்வதற்குள் அதில் சின்ன கல் விழுந்தாலோ, வெயில் அதிகரித்தாலோ எளிதில் தீப்பற்றி வெடித்து விடும் அபாயம் இதில் உண்டு. சமீபத்தில் சிவகாசி நாராயணபுரத்தில் ரத்னா பட்டாசு ஆலையில் காலை 10.30 மணிக்கு ஒரு மரத்தடிக்கு கீழே மணி மருந்து கலவை தயாரிக்கும் போதுதான் கொளுத்தும் வெயில் காரணமாக மணி மருந்து கலவை வெடித்து சிதறி 10 பேர் பலியாகினர். கொள்ளை லாபம் தரும் இந்த ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதில்தான் பட்டாசு ஆலைகளுக்கு இடையே போட்டி. வானத்தில் மாயஜாலம் காட்டி வித விதமான கலர்களை அள்ளி தெளிப்பதற்காக மணி மருந்து கலவையில் அளவுக்கு அதிகமான வீரியமான கெமிக்கலை கலக்கிறார்கள். இதனால் மணி மருந்து கலக்கும் போது திடீர் உராய்வு ஏற்பட்டு விபத்து உண்டாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த வெடி விபத்துக்களில் மணி மருந்து கலக்கும் போது ஏற்பட்ட விபத்துதான் அதிகம். பெரிய பெரிய பட்டாசு ஆலை அதிபர்களின் கொள்ளை லாபத்துக்கும், பேராசைக்கும் கொத்துக் கொத்தாய் தொழிலாளர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். எனவே பட்டாசு தொழிலில் ஃபேன்சி ரக வெடிகள் தயாரிப்பதற்கு தடை விதித்தாலே ஒரளவு விபத்தையும், உயிர் இழப்பையும் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
குறிப்பாக ஃபேன்சி ரகத்திற்கான மணி மருந்து கலவையின் போது ' பிஸ்மத் டிரை ஆக்சைட்' என்ற கெமிக்கலை கலந்தால் அது உராய்வு ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் மணி மருந்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும். இதன் விலை கிலோ ஆயிரத்து 500 ரூபாய். ஆனால், ஒரு கிலோ 150 ரூபாய் என்பதால் செந்தூரம் என்ற சிவப்பு வெடி உப்பை இதில் கலக்கின்றனர். இது விஷத்தன்மை மற்றும் வீரியம் கொண்ட கெமிக்கல். இதை நாங்கள் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளோம். ஆனால், குறைந்த விலை என்பதால் பல பட்டாசு ஆலைகள் இந்த செந்தூரத்தை மணி மருந்தில் கலக்கின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமாரின் நாராயணபுரம் ரத்னா பட்டாசு ஆலையில் 8 பேர் பலியான விபத்தில் மணிமருந்து கலவையில் 'செந்தூரம்' என்ற சிவப்பு வெடி உப்பை பயன்படுத்தியதுதான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது" என்றார். சிவகாசி பட்டாசு தொழிலில் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடப்பதாக அரசின் புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால், நிஜத்தில் பட்டாசு தொழில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடப்பதாக தொழில் அறிந்தவர்கள் சொல்கின்றனர். கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பட்டாசு ஆலைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக கட்டுவதில்லை. அதுசரி, மீண்டும் மீண்டும் விபத்துகள் நடந்து உயிர்களை குடிப்பதற்கு லஞ்சம் மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது நிர்வாக சிக்கல்கள் இருக்கின்றனவா? அதுபற்றி நாளை பார்க்கலாம்... பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 1 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க |
-எம்.கார்த்தி
|
ஆனால் பாழாய்போன லஞ்சம் இதிலும் மூக்கை நுழைத்து விடுகிறது. பிறகென்ன...? "அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைத்திருக்கிறீர்கள், தொழிலாளர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிக்கவில்லை" என்று ஏதாவது விதிமுறை மீறல்களை சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் விதித்து வசூல் செய்து பாக்கெட்டை நிரப்பும் ஆயுதமாகத்தான் இந்த ரெய்டு நடவடிக்கைகள் இருக்கிறது. இதுவரை அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஏழாயிரம் பண்ணை பாண்டியன் பயர் ஒர்க்ஸ், வெம்பக்கோட்டை ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் உள்பட 3 பட்டாசு ஆலைகளின் லைசென்ஸ் மட்டுமே நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே பட்டாசு ஆலைகளில் உயிர் இழப்பு ஏற்பட்டால் ஆலை அதிபர் மற்றும் ஃபோர்மேன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்ற குரல், பல்வேறு தரப்பிலும் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் கூட விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டால் ஆலை அதிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஆலை அதிபர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதுபோல் ஒவ்வாரு அறைகளுக்கும் இடையே சிமிண்ட் ரோடு அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 15 மீட்டர் தூரத்தை 40 மீட்டர் தூரமாக்க வேண்டுமானால் பிற பட்டாசு 'அறைகள்' இடிபடும். அதனால் ஒரு பட்டாசு ஆலையில் 20 அறைகள் இருந்தால் அவற்றின் எண்ணிக்கை 10 ஆக குறையும். மேலும் சிமிண்ட் ரோடு அமைப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் என்று சொல்லி பட்டாசு ஆலைகள், வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது இப்போது நிலுவையில் இருக்கிறது. பட்டாசு ஆலைகளை, இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற நிர்ப்பந்திக்க முடியாமல் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பேன்சி வெடிக்கு தடை விதித்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். அதே நேரம் சீனாவில் இருந்து பேன்சி ரக வெடிகள் அதிக அளவில் இறக்குமதியாகும் என்று பட்டாசு ஆலைகள் இதற்கு எதிர்ப்பு கொடி காட்ட தொடங்கியிருக்கின்றனர். இன்னும் பல பகீர் தகவல்களை நாளை பார்க்கலாம்... பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க |
|
மேலும் பட்டாசு ஆலைகளின் விதிமுறை மீறல்களை தடுக்க வேண்டிய அதிமுக அரசின் அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக நடப்பதினால்தான் உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளன என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தின. உடனே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் சட்டசபையில், "வெடி விபத்துகளுக்கு காரணம் மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரின் அலட்சிய போக்குத்தான்" என்று பதில் சொல்லி எதிர்கட்சிகளின் தாக்குதல்களை சமாளித்தார். இதையடுத்துதான் முதல்வர் ஜெயலலிதா பட்டாசு ஆலை விபத்துக்கள் விவகாரம் குறித்து சீரியஸாக எடுத்துக்கொண்டார். சிவகாசி பட்டாசு ஆலைகளில் என்ன தான் நடக்கிறது; ஏன் இத்தனை உயிர் இழப்புகள்; அதிகாரிகள் ஒழுங்காக செயல்படுகிறார்களா? என்று விசாரித்ததோடு, பட்டாசு ஆலைகளின் விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர் ஷீலா வேகம் எடுத்த அரசின் நடவடிக்கைகள் பட்டாசு ஆலை தொடர்பான விபத்துக்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பான அதிகாரிகளின் ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் அதுவரை ஏதோ பெயரளவுக்குத்தான் நடந்து கொண்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதா தலையீட்டுக்கு பிறகு பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக அதிகாரிகளின் நடவடிக்கைகள் இப்போது தடதடக்க தொடங்கியுள்ளது. மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பட்டாசு ஆலைகளிலும் ரெய்டு நடத்தி, விதிமுறை மீறல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு இதுவரை 36 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த போலீஸ் எஸ்.பி. முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டுக்கு பிறகு பட்டாசு ஆலைகளின் வெடி விபத்து தொடர்பாக போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதுவரை பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு எவ்வளவு உயிர்கள் பலியானாலும் போலீஸை பொறுத்த வரை, நாம் ஏற்கனவே கூறியபடி அது இ.பி.கோ., 304 என்ற செக்ஷனின் கீழ் விபத்து என்று வழக்கு பதிவு செய்யப்படும். பட்டாசு ஆலை லைசென்ஸ்தாரர் மற்றும் ஃபோர்மென், மேனேஜர் ஆகியோர் மீது பெயரவில் இந்த வழக்கு பதிவு செய்யப்படும். பிறகு கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று அவர்கள் சுதந்திரமாக வெளியே உலா வருவார்கள். வழக்கம் போல் பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி ஜரூராக நடக்கும்.
அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வைகைச்செல்வனும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லப்பாண்டியன், ஒவ்வொரு முறையும் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு உயிர்பலி அதிகமாகும் போது முதல்வர் ஜெயலலிதாவிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் இருப்பதற்கு சின்ன உதாரணம். தமிழ்நாடு பட்டாசு உரிமையாளர்கள் சங்க தலைவர் விஜயகுமாருக்கு சொந்தமான நாரயணபுரம் ரத்னா பட்டாசு ஆலையில் விடுமுறை நளான ஞாயிற்றுக்கிழமை ஆலை திறக்கப்பட்டு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைக்கு லீவு விட்டிருந்தால் அந்த 8 அப்பாவி தொழிலாளர்கள் உயிரை விட்டிருக்க வேண்டியதிருக்காது. எனவே இனிமேல் விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளை இந்த அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது" என்று அவரது பேச்சில் அனல் பறந்தது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை. பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 3 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும் |
-எம்.கார்த்தி
|
பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் பொறுப்பும் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை, இப்போது 750 யை தாண்டி விட்டது. ஒரே ஒரு தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகியோரால் அத்தனை தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் 40 பேர் பலியான சம்பவத்தை பார்வையிட வந்த வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பட்டாசு விபத்து பற்றி ஆய்வு செய்தபோதுதான் ஜீப்பே இல்லாமல் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் பணியாற்றிய லட்சணம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்புறம்தான், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இவருக்கு புது ஜீப் வழங்கப்பட்டது.
இந்த துறைகளின் மத்தியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. எனவே பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்க வருவாய்த்துறை மட்டுமின்றி பிற துறை அலுவலர்களை கொண்டு பட்டாசு தொழில் மற்றும் அதன் விபத்துக்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தி இந்த தொழிலை வரைமுறைப்படுத்த வேண்டும். தீவிர ஆய்வு பணியை முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், ஆய்வு நடத்தி இஷ்டம் போல் இயங்கும் இந்த பட்டாசு தொழிலை வரைமுறைப்படுத்தினால் மட்டுமே அப்பாவி தொழிலாளர்களின் உயிர் இழப்புக்களை தடுக்க முடியும். இல்லையென்றால் பட்டாசு தொழிலில் விபத்துக்களையும், உயிர் இழப்புக்களையும் தவிர்க்க முடியாது" என்று மேலும் கூறியிருந்தார். ஆனால் அந்த ரிப்போர்ட்.டை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இப்போதைய நவீன காலத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டும் பணி நடக்கும் போது திடீரென்று சரிந்து விழுந்தால் கட்டடப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தின் உரிமையாளர், இன்ஜினியர் ஆகியோர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அதுபோல் ஒரு சட்டத்திருத்தம் பட்டாசு தொழிலுக்கும் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பாக கொலை முயற்சி மற்றும் உயிர் இழப்புக்கு காரணமாக இருத்தல் போன்ற ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால்தான். ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் போர்மென்கள் விபத்து ஏற்படாத வகையில் ஜாக்கிரதையாக பட்டாசு தயாரிக்க முனைப்பு காட்டுவார்கள். பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை: புதிய தொடர் நாளை... |