--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
> <luckyshaja...@gmail.com> wrote:
> கேட்டுவிட்டு வாலி அடித்த கமெண்ட் : இவரரிந்த பாட்டில எழுதாம
> விட்டது பிரதர் இன் லாவும் ஃபாதர் இன் லாவும் மட்டும் தான் போ
வைரமுத்துவின் திறமையை அவரது over confidence அழித்து விடுகிறது.
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' என்று ஒரு வரி. இது எப்படி கவிதையாகும்?
பாட்டை நீயும் பாடி விடு உயிரோடிருந்தால் (முழுக்க) கேட்கிறேன் என்று கத்த வேண்டும் போல இருக்கும்.
>ஏன் கண்ணுக்கு மை அழகு.. நிறைய சொல்லலாம் அண்ணா<
உண்மையில் கவிஞன் காதலியை இப்படி சொல்ல மாட்டான் என்றே நினைக்கிறேன்.
காதலியின் கண்ணானது மையினால் அழகாகிறது என்பது செய்தியாகுமே ஒழிய கவிதையாகாது.
இமைத் தொட்டு நிறம் பெற மையதுவும் தவம் செய்யும் என்பது போல் வந்தால் காதல் கவிதையாகும். காதல் கவிதையில் மிகைப்படுத்துதல் இயல்பு.
இங்கே அதுவும் குழப்பமாகிவிட்டது.
>இந்த மூணுபேரும் என்பதில் வாலியும்,புலமைபித்தனையும் விட வைரமுத்துவின் பாடல்கள் ஒரு படி மேல் என்பது என் கருத்து.<
வாலி பற்றி சொல்ல தெரியவில்லை. புலமைப்பித்தன் நல்ல திறமைசாலி. வைரமுத்து தன் திறமையை தன் அதீத தன்னம்பிக்கையால் அழித்து விடுகிறார்.
வைரமுத்து தன் திறமையை தன் அதீத தன்னம்பிக்கையால் அழித்து விடுகிறார்.
>எங்கே நிம்மதி எங்கே நிம்மதி" கண்ணதாசனின் வரிகள் இவை. இதில் கவிதை எதிர்பார்ப்பதைவிட் அந்த சூழ்நிலையை புரிந்துகொள்ளல் அவசியமாகிறது.<
நிச்சயமாக உங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன் நண்பரே!
எங்கே நிம்மதியில் ஒரு இயல்பான நடையாவது இருக்கிறது. 'காதல் வந்தால் சொல்லியனுப்பில்' அதுவும் இல்லை.
>இவ்வரிகள் கப்பலில் வேலை பார்ப்பவனின் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் ஒளிந்திருக்கும் வலி இப்பாடலில் வெற்றியாக அமைகிறது.<
'காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' என்பதில் ஒரு மாலுமியின் எண்ணவோட்டம் எங்கே தெரிகிறது? இந்த வரியை ஒரு கல்லூரி இளைஞனும் சொல்லலாம்.
>இயக்குனர் கதை சொன்ன பிறகு இசையமைப்பாளர் தத்தகாரம் சொல்லியபிறகு
யோசித்துக் கொண்டே வந்த கவிஞர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தபோது
பிறந்தது முதல் வரி.. பின் ரசம் வருவதற்குள் முழுப்பாடலும் வர தொலைபேசியிலேயே
சொல்லிவிட்டாராம் முழுபாடலை..<
:))))))))))))))))))))
'காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' என்பதில் ஒரு மாலுமியின் எண்ணவோட்டம் எங்கே தெரிகிறது? இந்த வரியை ஒரு கல்லூரி இளைஞனும் சொல்லலாம்.
>அதுக்காக
ஆசையே அலைபோல...
ஓடம் கரையில்னிலே ஒருவன் மட்டும்
காகித ஓடம் கடலைலை மீது
அப்படின்னு சூழல வச்சா எழுத முடியும் பிரதர்:-)<
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
என்று எழுதினதும் இப்போதைய இளம் கவிஞர்தானே (நா. முத்துக்குமார்)? மனதை முகம் பார்க்கும் கண்ணாடியோடு ஒப்பிட்டு, அதில் எதுவும் நிலைத்து படியாத தன்மையை சொன்னதும் கவிதைதானே!
இங்கே அந்த சூழலை வைத்து எழுத வேண்டாம். ஒரு மூத்த கவிஞர் ஒரு கனமான காதல் சூழ்நிலைக்கு எழுதுகிற வரியா அது? ஆனால் எல்லோருமே எழுத முடிகிற வரியை எழுத கவிஞன் எதற்கு? அவனிடம் சொல்லும், பொருளும் அற்புதமாய் நடமிட வேண்டாமா?
நன்றி:http://www.tamilnation.org/literature/lyricwriters/vairamuthu/index.htm
எனக்கென்னமோ அவர் வழக்கத்தை விட பணிவா பேசியிருக்கறா மாதிரி தோணுது. :)
பிரேம் குமார்,
அதை நான் நக்கலாகவோ, கிண்டலாகவோ கேட்கவில்லை.
'காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' என்பதில் கவிச்சுவை இல்லை என்று என் பார்வையில் பட்டதை சொன்னேன்.
அக்கறை இல்லாமல் சடபடவென அந்த பாடல் எழுதப்பட்டதாக கருதினேன்.
அந்த வரிகளை நான் எழுதி அதே இசைஅமைப்பாளரிடமும், அதே இயக்குநரிடமும் காட்டி இருந்தால் போய் வாப்பா என கவிதையோடு என்னை அனுப்பி வைத்திருப்பார்கள்.