மனிதனுக்குள்ளே மிருகம் - மதன்

555 views
Skip to first unread message

வில்லன்

unread,
Jul 9, 2009, 12:32:10 AM7/9/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்
(மனிதனுக்குள்ளே மிருகம் என்ற நூலில் இருந்து சில பகுதிகள் மட்டும்)

மனிதன் - மிருகம் என்று இரண்டு வகையாகப் பிரிப்பது நியாயம்தானா? அதாவது, மனிதர்களாகிய நாம் ஒரு பக்கம், உயர்ந்த மேடையில்! .
மற்ற அத்தனை உயிரினங்களும் இன்னொரு பக்கம். தாழ்ந்த நிலையில்! இது சரியான கருத்தா, திமிரான கருத்தா?!

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, ‘மனிதன் யார்?’ என்கிற கேள்விக்குப் போக வேண்டியிருக்கிறது!

நியாயமாக இந்தத் தொடருக்கு ‘விலங்குக்குள் ஒரு மிருகம்..’ என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும்! யானை, குரங்கு, காண்டாமிருகம்,
ஒட்டகம் போல நாமும் ஒரு விலங்கினம்தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை! நாம் சற்று விசேஷமான ஒரு விலங்கு என்பதை
வேண்டுமானால் ஒரு மரியாதைக்காக ஒப்புக்கொள்ளலாம்!

மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களுக்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளி இருப்பது உண்மைதான். அந்த இடைவெளியை
வெற்றிகரமாகத் தாண்டி ‘பகுத்தறிவு’ என்கிற நிலப்பரப்பின்மீது குதித்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே!

விலங்குகளால் சாதிக்க முடியாத பல ஆச்சர்யங்களை மனிதன் சாதித்திருக்கிறான். மனிதன் பேசினான், பாடினான், மொழிகளை
உருவாக்கினான், சிக்கலான உபகரணங்களைத் தயாரித்துக்கொண்டான்! இவை தவிர, மனிதன் மட்டுமே உடைகள் அணிந்தான்.

ஓவியங்களையும் சிற்பங்களையும் கவிதைகளையும் உருவாக்கி ரசிப்பது மனிதன் மட்டுமே. உச்சகட்டமாக அவன் கண்டுபிடித்த
விசித்திரமான ஒன்று  மதம்!

அதே சமயம், கொலை, சித்ரவதைகளை ரசித்துச் செய்வது, போர் தொடுத்து ஒரு நாட்டு மக்களைப் பூண்டோடு அழிப்பது, போதை
வஸ்துக்களைப் பயன்படுத்துவது... இதிலெல்லாம் ரசனையோடு ஈடுபடுகிற ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே!

மனிதன் என்பவன் பிரத்யேகமாக இறைவனால் உருவாக்கப்பட்டவன்’ என்கிற ஆழ்ந்த நம்பிக்கையுடன் மனிதன் பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளாக வாழ்ந்து வந்தான். ‘கடவுளின் விசேஷமான படைப்பே நாம்!’ என்கிற அசைக்க முடியாத கருத்து உலகெங்கும்
வெகுகாலத்துக்கு நிலவியது.

1859|ம் ஆண்டு சார்லஸ் டார்வின் ‘மனித இனம் குரங்குகளிடமிருந்து தோன்றிப் பிரிந்தது’ என்கிற கண்டுபிடிப்பை முன்வைத்தபோது
உலகமே திகைத்தது. வாடிகன் சர்ச் டார்வின் தத்துவத்துக்குக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தது. உலக மக்கள் அனைவரும்
தர்மசங்கடத்துடன் ‘என்ன மடத்தனமான கருத்து!’ என்று கோபப்பட்டார்கள்.

விஞ்ஞானம் விசுவரூபம் எடுத்தவுடன் மனிதனும் ஒரு விலங்கினம்தான் என்பது சர்வ சாதாரணமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. கண்கள்,
கால்கள், மற்ற உறுப்புகள், எலும்புகள், செக்ஸ் உறுப்புகள், ஜீன்ஸ், மாலிக்யூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து, ‘நாம் எந்த வகை
விலங்கு?’ என்கிற கேள்விக்கும் விஞ்ஞானம் தெளிவாக பதில் சொல்லிவிட்டது.

மொழி இல்லாமல், வெறுமனே உறுமியவாறு காடுகளில் பிறந்த மேனியோடு மனிதன் அலைந்து கொண்டிருந்தபோது, முன்னேறிய
வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு ஒரு ‘விசிட்’ அடித்திருந்தால், மற்ற குரங்குகளோடு மனிதனையும் பிடித்து ‘ஜூ’வில் உட்கார
வைத்திருப்பார்கள்.
 
ஒரே ஒரு விஷயம் மட்டும் அவர்களுக்கு லேசான வியப்பை ஏற்படுத்தியிருக்கும். ‘இந்தக் குரங்கின் உடலில் அவ்வளவாக முடி இல்லையே!’ என்பது! (உடலில் முடி இல்லாத நாய் வகைகூட உண்டு!)

உண்மையில் மனிதன் ஒரு குரங்கு வகையே! சிம்பன்ஸிக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் ரொம்பக் குறைவு. நமக்கும்
சிம்பன்ஸிக்கும் 98.4 சதவிகிதம் ஒரே ‘ஜீன்’கள்தான்! அந்த 1.6 சதவிகித ஜீன்ஸ் நமக்குப் பெரிய மாற்றங்களைத் தந்துவிட்டது. பிக்மி (குள்ள) சிம்பன்ஸி என்று ஒரு வகை உண்டு. அது நமக்கு (‘ஜீன்’ஸைப் பொறுத்தவரை) இன்னும் நெருக்கம்!
 
மனிதனைப் போல நேருக்கு நேர் முகம் பார்த்து உடலுறவு கொள்கிற ஒரே குரங்கு வகை அது! பெண் குரங்குகள் மாசம் பூராவும் புணர்ச்சிக்குத் தயாராக
இருக்கும். மனிதப் பெண்களை போலவே அவைகளுக்கு மாதா மாதம் Ôபீரியட்ஸ்Õ உண்டு!

கொரில்லாவுக்கும் சிம்பன்ஸிக்கும் நடுவில் வரும் குரங்குதான் மனிதன். அதாவது, சிம்பன்ஸிக்கு கொரில்லாவைவிட நாம் நெருங்கிய
உறவு! மனித ரத்தத்தில் உள்ள முக்கியமான Ôஹெமக்ளோபின்Õனில் உள்ள 287 யூனிட்களும் (ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் இந்த
புரோட்டின்தான் ரத்தத்துக்கு சிவப்பு கலர் தருகிறது!) ஒரு மாற்றமும் இல்லாமல் சிம்பன்ஸி ரத்தத்திலும் உண்டு (மனித ரத்தத்தில்
‘க்ரூப்பு’கள் வேறு இருப்பதால் சிம்பன்ஸியின் ரத்தத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது வேறு விஷயம்)!

மனிதனின் நேரடி ‘கஸின் பிரதராகÕ இருக்கும் சிம்பன்ஸியை மருத்துவ பரிசோதனைகள் என்கிற பெயரில் சித்ரவதை செய்வதற்கு தற்போது
உலகெங்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. ‘யு.எஸ். தேசிய உடல் நல நிலையÕத்தில் சிம்பன்ஸிக்களைக் கட்டிப்போட்டு அவைகளுடைய
உடலில் விதவிதமான வைரஸ் கிருமிகளை ஊசியால் செலுத்திச் சோதனைகள் செய்கிறார்கள்.
 
சில சிம்பன்ஸிக்கள் ஒரு வருடம் தொடர்ந்து இந்த ‘டார்ச்சரை’ அனுபவித்துப் பிறகு பரிதாபமாகச் செத்தும் போகின்றன. கேட்பார் கிடையாது!
 
 
சரி, முதல் மனிதன் எப்போது தோன்றினான்?
 
(தொடரும்ம்ம்)
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”

வில்லன்

unread,
Jul 9, 2009, 1:51:15 AM7/9/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்
சரி, முதல் மனிதன் எப்போது தோன்றினான்?
 
 
சுருக்கமாக, நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் காடுகளில் ஒரு குரங்கு வகை நிமிர்ந்து நின்று இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தது. அதுதான் மனிதனின் முன்னோடி!
 
அந்தக் குரங்கு மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றுப் பெற்று ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் (இன்றைய) மனிதன் தோன்றினான்.
குரங்குகளில் சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான், கிப்பன் என்று நான்கு வகை இருப்பதுபோல, சில லட்சம் ஆண்டுகளுக்கு
முன்புவரை மனிதன் என்கிற குரங்கு இனத்திலும் மூன்று வகை இருந்தது.
 
அதில் ஒரு ‘குரங்கு’ மனிதன் மட்டும் சற்று கில்லாடியாக,புத்திசாலித் தனமாக இயங்கியது. அது செய்த முதல் காரியம் | மற்ற மனித இனங்களை அடியோடு அழித்ததுதான்!

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நியாண்டர்தால் என்கிற இன்னொரு மனித வகையினர் உலகில் நம்மோடு வாழ்ந்து
வந்தனர். அந்த இனமும் அடியோடு அழிந்ததற்குக் காரணம் மனிதனின் கொலைவெறிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மிஞ்சியது ஒரே
ஒரு விசேஷ மான, குரங்கு! அதுதான் நாம்!

இப்படியாக, மனிதன் தோன்றியவுடனேயே Ôமற்றவர்களை கொலை செய்வதுÕ என்கிற வன்முறைச் செயலும் தோன்றிவிட்டது!...

 சக மனிதர்களுடன் வன்முறையில் மனிதன் ஈடுபடுவதைப் போல மற்ற விலங்கினங்களும் தங்களுக்குள் சண்டையில் இறங்குவதுண்டா?!

அநேகமாக எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. சிங்கம், ஓநாய், ஆடு, மாடு, மான், ஒட்டகச்சிவிங்கி..
எல்லாமே தங்களுக்குள் சண்டையிடுவதை நாம் பார்க்கிறோம். விலங்கினங்கள் சண்டையில் ஈடுபட மூன்று காரணங்கள் உண்டு.
 
ஒன்று பெண்ணுக்காக... மற்றது எல்லைக்காக... இன்னொன்று தலைமைக்காக!

மான்கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் கலைமானுடன் இன்னொரு ஆண் மான் ஓடிவந்து தலையால் முட்டி மோதிச் சண்டையிடும். அது
ஒரு போட்டிதான்  தவிர, அது எச்சரிக்கை மிகுந்த மோதல் கொல்வதற்காக அல்ல, பலத்தை நிரூபிப்பதற்காக! அதற்கு இணையாக மேஜை மீது இரு மனிதர்கள் கைகளைப் பொருத்தி ‘கை மல்யுத்தம்’. போடுவதைச் சொல்லலாம்!
 
முட்டி மோதி சண்டையிடும் மான்களில் இரண்டே சதவிகிதம்தான் எதிர்பாராத வண்ணம் படுகாயப்படு கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

சண்டையில் தோற்ற மான், தானாகப் பின்வாங்கிவிடும். ஜெயிக்கும் மான் தலைமையேற்கும். இனி எந்தப் பெண் மானையும் முதலில்
புணரும் உரிமை அதற்குக் கிடைக்கிறது. அதேபோல ஓநாய்க்கூட்டம் இன்னொரு ஓநாய்க் கூட்டத்தின் எல்லைக்குள் அத்துமீறி
நுழைந்தால், யுத்தம் நிகழும். முக்கியமாக அந்த மோதல் தங்கள் எல்லைக்குள் கிடைக்கும் உணவுக்காக!
 
கோபம், ஆத்திரம், பொறாமை, பழிக்குப்பழி காரணமாக எந்த விலங்கினங்களும் தங்களுக்குள் மோதிக்கொள்வதில்லை. அந்த உணர்வுகள் அவற்றுக்குக் கிடையாது!

மனிதன் அப்படியல்ல! லட்சக்கணக்கான ஆண்டு களுக்கு முன் மனிதர்கள் தங்கியிருந்த காட்டுப்பகுதியில் உள்ள குகைகள், மரங்கள்,
பழங்களுக்கு அவர்கள் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சில சமயங்களில் பருவநிலை காரணமாக உணவு குறைச்சலாகவே
கிடைக்கும். குகைகளுக்குள்கூட பனிக்காலங்களில் கொடிய விலங்குகள் புகுந்துகொள்ளும்.

ஒரு குட்டையில் உள்ள தண்ணீரை மற்றவர்கள் குடிக்க மனிதர்கள் அப்போதே அனுமதி மறுத்தார்கள். பெண்களை வன்முறையாகவே

ஆண்கள் தூக்கிச் சென்று பலவந்த மாகப் புணர்ந்தார்கள். ஏற்கெனவே அந்தப் பெண்ணோடு வசித்த மனிதன் சத்தியமாக வந்தவனுடன்
மோதியிருப் பான். எல்லா மோதல்களுமே எல்லைக்காக, உணவுக்காக, பெண்களுக்காக! ஆதிகாலத்திலேயே மனிதனின் வாழ்க்கை,
நாள்தோறும் வன்முறை நிறைந்ததாகவே அமைந்தது!

இருப்பினும், மற்ற விலங்கினங்களோடு மனிதனை ஒப்பிடும்போது, அவனிடம் ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் இருந்தது.
 
அது.........

துரை.ந.உ

unread,
Jul 9, 2009, 2:58:36 AM7/9/09
to thamizh...@googlegroups.com, தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்
மிகவும் சிறப்பான தளம் தொட்டிருக்கிறீர்கள்
தொடருங்கள் நண்பரே,ஆர்வமாய்க் காத்திருக்கிறோம்

வாழ்த்துக்கள்
 
--
என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

வில்லன்

unread,
Jul 9, 2009, 5:03:45 AM7/9/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்

ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் இருந்தது. அது |

குறைவான உடல் வலிமை!


பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் உடல்ரீதியாக ‘வீக்’ ஆகவே இருந்து வருகிறான். சிங்கம், புலி, யானை, காண்டாமிருகம்,
காட்டெருமை.. எதனோடும் நேரடியாக மோதி மனிதனால் வெற்றி கொள்ள முடியாது. அவனுக்கு அதற்கான உடற்கட்டோ, நகங்களோ
கோரைப்பற்களோ கிடையாது!

நியாயமாக, இப்போது உலகில் மிஞ்சியிருக்கிற ஒரு மனித இனமும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அழிந்தொழிந்திருக்க
வேண்டும். புத்திசாலியான மனிதன் துவளவில்லை. மிருகங்களைச் சமாளிக்க, ஆயுதங்கள் தயாரிக்க ஆரம்பித்தான்!

கும்பலாகப் பதுங்கிச் சென்று காட்டெருமையைக் கூர்மையான கற்களாலோ, ஈட்டியைப் போல சீவப்பட்ட மரக்கிளைகளாலோ குத்தி
அவனால் கொல்ல முடிந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு புதுப்புது ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது அவனுடைய முக்கிய தொழிலாகிவிட்டது.
அதிலிருந்துதான் ஆயுத விஷயத்தில் இன்றுவரை எப்பேர்ப்பட்ட முன்னேற்றம்! ஒரு பட்டனைத் தட்டி விட்டால் ராக்கெட் மூலம்
அணுகுண்டுகளைக் கொண்டு சென்று ஒரு நாட்டையே அழிக்கும் அளவுக்கு மனிதனின் கண்டுபிடிப்புகள் இன்னமும் தொடர்கின்றன!

ஆதிகாலத்தில் பெண்கள் குகைகளில் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வேட்டைக்குச் சென்ற ஆண் திரும்பி வரும்வரை
பொறுமையாகக் கவலையோடு காத்திருந்தாள். ஆகவேதான் பெண்களிடம் வன்முறை உணர்வு ஆணின் அளவுக்கு வளரவில்லை.

ஆர்வத்துக்காக வித்தியாசமானதொரு கேள்வி! ஆண்கள் சக ஆண்களைக் கொல்வது, பெண்கள் பெண்களைக் கொல்வது எது
அதிகம்?

டாலி, மார்ட்டின் வில்ஸன் என்னும் விஞ்ஞான ஜோடி பிரிட்டனிலிருந்து, உகாண்டா வரை ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில், ஆண்கள்
மற்ற ஆண்களைக் கொல்வது 90 சதவிகிதம். மிச்சம்தான் பெண்கள் என்று கண்டுபிடித்தார்கள்

அதே சமயம், இன்னொரு விசித்திர மான தகவல்! இரண்டாயிரம் பெண் களில் ஒரே ஒரு பெண்ணுக்கு ஆணிடம் உள்ள அத்தனை
வன்முறை உணர்வுகளும் இருக்கக்கூடும்\ அந்தப் பெண் க்ரோமோஸோம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவளாக இருப்பாள். அதாவது, பெண்ணிடம் உள்ள இரண்டு xx க்ரோமோஸோம்களில் ஒரு x க்ரோமோஸோமின் ‘குணநலன்கள்’ பிறப்பிலேயே மிஸ்ஸிங் ஆக
இருந்து அது ‘டம்மி’யாக இருந்தால், அந்தப் பெண்களுக்கு அநேகமாகக் குழந்தை பிறக்காது என்பதைத் தவிர,
 
 திடீர்க் கோபம்,  அடிதடியில் இறங்குவது, ரொம்ப கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, தன்னிடம் அடிபட்டவர் கீழே விழுந்தால் எட்டி உதைப்பது,
அவர் மீது ஏறி நின்று ஆவேசமாகக் குதிப்பது... இதையெல்லாம் அந்தப் பெண் பின்பற்றுவாள்.
(ஆண்கள் மட்டுமே செய்கிற விஷயங்கள் இவை!).

முன்பே சொல்லப்பட்ட சில காரணங்களுக்காக விலங்குகளிடையே நேரடி மோதல்கள் நிகழலாமே தவிர, ஜூலியஸ் சீசரைக் கொல்லச்
சதியாலோசனை நிகழ்த்தி, திட்டம் வகுத்து, செனட் அரங்கத்தில் சீசர் நுழைந்த சமயம் பார்த்து, அவரை புரூட்டஸ், காஷியஸ் மற்றும்
சகாக்கள் சூழ்ந்துகொண்டு கொன்று தீர்த்த அதே கொலைவெறித்தனமான அணுகுமுறை விலங்கு களிடையே உண்டா?
இல்லை என்றுதான் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள்.

ஜேன் கூடால் என்கிற உலகப் புகழ்பெற்ற பெண்மணி, குரங்குகளை (குறிப்பாக சிம்பன்ஸிகளை) நீண்டகாலமாக
ஆராய்ச்சி செய்தவர். சிம்பன்ஸி களிடையே அவருக்கு Ôநண்பர்கள்Õகூட உண்டு!

1960\ல் டான்ஸானியா காடுகளில் ‘கோம்பி’ என்ற காட்டுப்பகுதியில் அவர் தங்கி, சிம்பன்ஸி கூட்டுக் குடும்பங்களை ஆராய்ந்ததில் \
மிகுந்த அமைதியாக, ஒற்றுமையாக, ஒன்றுக்கொன்று உதவியாக சிம்பன்ஸிகள் வாழ்ந்து வந்ததை அவர் கண்டார். அப்படியென்றால்
உலகிலுள்ள சுமார் நாலாயிரம் விதமான பாலூட்டிகள், ஒரு கோடி விதமான உயிரினங்களில் மனிதன் மட்டுமே திட்டம் போட்டு, கூட்டுச்
சேர்ந்து எதிராளியைத் தீர்த்துக் கட்டுகிற ஒரே உயிரினமா?

சில வாரங்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஜேன் கூடாலுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

திடீரென ஒருநாள், நூற்றுக்கணக்கான சிம்பன்ஸிகள் அடங்கிய கூட்டுக்குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. முதலில் சில தலைமை
சிம்பன்ஸிகள் தனிக்கட்சி ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் தொண்டர்களும் இரு தரப்பாகப் பிரியவேண்டி வந்தது.
ஓரிரவு, கோடி  என்கிற 21 வயதான ஆண் சிம்பன்ஸி (தலைவர்) அடர்ந்த காட்டில் மரம் ஓரமாக அமர்ந்து பழங்களைச்
சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

அப்போது புதர்களின் பின்னாலிருந்து பல சிம்பன்ஸிகள் மெள்ளத் தலையைத் தூக்கி நோட்டம் விட்டன. பிறகு பதுங்கி வந்த
சிம்பன்ஸிகள் வலது புறம், இடதுபுறம் என்று இடம் மாறி அமர்ந்தன. பிறகு திடீர் அட்டாக். ஜூலியஸ் சீசர் கதையேதான்!
நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட (எதிர்க்கட்சி) சிம்பன்ஸிகள், தனியாக அமர்ந்திருந்த ‘கோடி’ என்கிற அந்த ‘சிம்ப்’பைக் கிழித்துக் குதறின. ஆச்சரியம்!

படுகாயத்துடன் கீழே விழுந்த ‘கோடி’யின் கை, கால்களை நான்கு சிம்பன்ஸிகள் அழுத்திப் பிடித்துக்கொள்ள, ஒரு சிம்பன்ஸி பெரிய
கல்லைத் தூக்கி வந்து ‘கோடி’யின் தலைமீது போட்டது. ‘கோடி’யின் கதை ஓவர்!
Jane Goodall

வில்லன்

unread,
Jul 10, 2009, 1:08:40 AM7/10/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்
 
ஒரு சிம்பன்ஸி பெரிய கல்லைத் தூக்கி வந்து ‘கோடி’யின் தலைமீது போட்டது. ‘கோடி’யின் கதை ஓவர்!

அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ‘தலைவர்கள்’ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்! சில சிம்பன்ஸி தலைவர்கள்
தப்பினார்கள். அந்தக் கட்சியில் எல்லாத் தலைவர்களையும் இழந்த எதிர்க்கட்சி மீண்டும் சங்கமம் ஆனது!

உலக விஞ்ஞானிகள் இந்தத் திட்டமிட்ட வன்முறையைக்  கேட்டுத் திகைத்துப் போனார்கள். மனிதனுக்கு மிக நெருக்கமான சிம்பன்ஸிக்கும் ‘மனித வன்முறை’ இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களிடையே மிகுந்த பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது!

சிம்பன்ஸிகள் எதிர்க்கட்சித் தலைவர்களை வரிசையாகத் தீர்த்துக்கட்டியது ஏன்?

எதிராளிகளாக இருந்த சிம்பன்ஸி தலைவர்கள் எல்லோரும் இறந்தால், மீண்டும் அந்த அணி தங்களோடு சேரும், அந்த அணியில் உள்ள
அத்தனை பெண்களும் மீண்டும் நம்முடைய ‘அந்தப்புரத்துக்கு’ வரவேண்டியிருக்கும், பெரிய அளவில் தொண்டர்கள் நம்மோடு
சேருவார்கள், நம் எல்லை விரிவடையும்!

சரி, இதெல்லாம் சிம்பன்ஸிகளுக்கு எப்படித் தெரியும்?! மனிதனுக்கு மட்டுமே மூளைக்குள் தோன்றுகிற வன்முறை எண்ணங்கள் அல்லவா
அவை?!

ஒரு கொலையைச் செய்துவிட்டு நீதிமன்றத்தில், Ôஎன்னை மட்டும் குற்றம்சாட்டுகிறீர்களே? சிம்பன்ஸிகள்கூடத்தான் திட்டம் கொலையெல்லாம் செய்கின்றன! நானும் ஒரு குரங்குதான். ஆகவே, இந்தக் கொலை வழக்கில் என்னையும் சிம்பன்ஸியாகப் பாவித்து
விடுதலை தரவேண்டும் யுவர் ஹானர்!’ என்று ஒரு கொலைகாரன் வாதாடலாமோ?

மனிதனும் சரி, மற்ற உயிரினங்களும் சரி... தன்னுடைய எல்லைகளையும் இருப்பிடத்தையும் எப்பாடுபட்டாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சரி! மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்காகத் தனக்குரிய உணவைப்போராடிப் பெற்றாக வேண்டும். சரி!

இதற்கு இணையாக இன்னொரு முக்கிய விஷயம் | செக்ஸ். அதற்குத் தேவையாக

பெண்!

எல்லையை இழந்தால், தங்குவதற்கு இடம் போய்விடும். அங்கே கிடைக்கும் உணவும் கூடவே போய்விடும். பிறகு உயிர் வாழ முடியாது.

பெண் கிடைக்காவிட்டால் என்ன? இன்னொரு பெண் கிடைக்காமலா போவாள்?

அவளை அவ்வளவு எச்சரிக்கையாகப் பாதுகாத்துப் புணரவேண்டிய அவசியம் என்ன?

அவளுக்காக ஏராளமான, முக்கியமான மணித் துளிகளைச் செலவழித்துப் போராட வேண்டிய கட்டாயம் ஏன்?


வாசகர்களே! காதலைத் தயவு செய்து இங்கே இழுக்காதீர்கள். மனிதன் தோன்றிப் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த உணர்வு அது!

(மனித குலத்துக்குள் காதல் புகுந்ததால், அவனுடைய முக்கியமான உறுப்பில் காலப் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்பது

தெரியுமா? அதுபற்றிப் பிற்பாடு ஆராய்வோம்!)

இந்தத் தொடரில் Ôசெக்ஸ்Õ என்பதை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. புணர்ச்சி என்பதும் மனிதனிடம் உள்ள
அடிப்படையான, மிருகத்தனமான உணர்வுதான் (இந்த இடத்தில் Ôமிருகத்தனமானÕ என்பதை மென்மையாக உச்சரிக்கவும்!).

எல்லா உயிரினங்களுக்கும் இருப்பது போலவே மனிதனுக்கும் Ôபெண்ணுடன் உறவு கொள்ள வேண்டும்Õ என்கிற இயற்கையான
அடிப்படை உணர்வு அவன் கூடவே பிறந்த ஒன்று.

மிருகங்கள் புணர்ச்சியோடு நிறுத்திக்கொண்டன. எந்தவொரு இனமும் வளர அந்தத் தகுதி மட்டுமே போதும். ஆனால், மனிதன்
பிற்பாடு காதலைக் கண்டுபிடித்தான்! திருமண பந்தத்தை உருவாக்கிக் கொண்டான். இது அவனுக்கு மிகவும் வசதியாக இருந்தது!

இதனால் ஒரு பெண்ணைப் போராடித் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லாமல் போய்விட்டது!
ஒரு விதத்தில் மிகச் சுயநலமான, கில்லாடித்தனமான கண்டுபிடிப்பு  திருமணம்!

சற்று யோசித்துப் பாருங்கள்! உங்களோடு வாழ்ந்து, குழந்தைகள் பெற்றுத் தரக்கூடிய பெண்ணைத் தனியாக விட்டு, நீங்கள் நகர்ந்தாலே
நூற்றுக்கணக்கான ஆண்கள் அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்று புணர்வதற்காக அருகில் காத்திருக்கிறார்கள் என்றால் எப்படி
இருக்கும்?

அவர்களில் பலசாலியான ஒருவன், மற்றவர்களை அடித்துத் தள்ளிவிட்டு, அவளை அபகரித்துக்கொண்டு போய்விடுவான் என்கிற நிலை
இருப்பின், அந்தப் பெண்ணைவிட்டு நீங்கள் அகல முடியுமா? மற்ற வேலைகள் எதையேனும் கவனிக்க முடியுமா?

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மனிதன் அப்படித்தான் திகிலோடும் கவலையோடும் வாழ்ந்தான். அதற்கேற்ப, நிரந்தரமான பெண் துணை என்பதே, அவன் வாழ்க்கையில் இல்லாமல் போனது!

மனிதனிடம் செக்ஸ் உணர்வு என்பது உற்பத்தியாகிற இடம் அவன் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில்தான் அதாவது,
அடிப்படையான Ôபாம்பு மூளைÕப் பகுதி!

உண்பது, புணர்வது, தற்காத்துக் கொள்ளத் தாக்குவது | இந்த மூன்று உணர்வுகளே கொண்டிருக்கும் பாம்பு, உடலுறவுக்காக நிகழ்த்தும்களேபரமான போராட்டத்தைப் பார்த்தால், பொதுவாகவே செக்ஸ் உணர்வு என்பது எவ்வளவு வீரியமானது என்பது புரியும்
 
 
 
தொடரும்ம்ம்

வில்லன்

unread,
Jul 10, 2009, 2:16:10 AM7/10/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்

சாதாரணமாக, நல்ல பாம்புகளை எடுத்துக்கொண்டாலே, ஆண்பாம்பு தான் போகிற வழியில் பெண் பாம்பைச் சந்தித்தவுடன் உடனே
அதற்கு மூடு ஏற்பட்டு, பெண்ணை ஓரமாகத் தள்ளிக்கொண்டு போய் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும் என்கிற கதையே நடக்காது!

இரண்டு நல்லபாம்புகள் சுற்றிச் சுற்றி வந்து Ôஹிஸ்ஸ்...Õ என்ற சீறலுடன் ஒன்றன்மீது ஒன்று பலமுறை பாயும். பிறகு, இரண்டு பாம்புகளும் ஒன்றையொன்று இறுக்கிப் பின்னிப் பிணைந்து சாய்ந்தாடியவாறு செங்குத்தாக நிலத்தில் நிற்கும். பார்ப்பதற்கு Ôபாலே டான்ஸ்Õ
போலிருந்தாலும், இந்தக் Ôகட்டிப் பிடிப்பும்Õ புரளலும் மணிக்கணக்கில்.
 
சில சமயம் நாள்  ழுவதும்கூடத் தொடரும். பலமுறை இரண்டும் நிலத்தில் விழுந்து விழுந்து எழும். கடைசியில் ஒரு பாம்பு சோர்வடைந்து, சோகமாகப் பின்வாங்கும்! (சோகம் என்பது உண்மை! பிறகு, குறுக்கே ஒரு எலி போனால்கூட, அதைப் பாய்ந்து பிடிக்காத அளவுக்கு பாம்பு அப்செட் ஆகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்!)

இதைப் பார்த்துவிட்டு ஆண்|பெண் பாம்பு ஜோடி இப்படியாக ஆரத் தழுவிப் பிணைத்துக்கொண்டு பல மணி நேரம் உடலுறவில் ஈடுபடுகிறதுÕ என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். அது தப்புக் கணக்கு!

இந்தப் பாம்புகளின் அருகில் சென்று பார்த்தால், ஒரு அதிர்ச்சி காத்திருக்கும்! இந்தத் Ôதழுவலில்Õ ஈடுபட்ட இரு பாம்புகளுமே ஆண்கள்!
அது அணைப்பும் அல்ல, மல்யுத்தம்! (விலங்கினங்களிலும் ஹோமோ செக்ஸ் முயற்சிகள் உண்டு என்பது தனித் தகவல்!)

அப்படியென்றால், பெண் பாம்பு எங்கே? அது, புதருக்குப் பின்னால், பலகணியிலிருந்து பார்க்கும் இளவரசியைப் போல தேமேயென்று
காத்துக் கொண்டிருக்கிறது | மல்யுத்தத்தில் வெல்லப்போகும் சாம்பியனுடன் உடலுறவு கொள்வதற்காக!

ஒரு போட்டியாளருடன் சண்டை போட்டு ஜெயிக்காமலெல்லாம் பெண்ணுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது என்பது பாம்பு இனத்தில்

கிடையாது!

நல்ல பாம்பு இப்படியென்றால், மற்ற ஒவ்வொரு பாம்பு வகைக் கும் ஒவ்வொரு விதமான போராட்டம் தவிர்க்க முடியாதது...!
கார்ட்டர் (பாம்பு என்று ஒரு வகை உண்டு. குறிப்பாக, வடஅமெரிக்காவிலும் தென்ஆப்பிரிக்காவிலும் காணப்படும்

இந்தப் பாம்புகள் காடுகளில், பாதுகாப்பான மிகப்பெரிய பொந்துக்குள் வசிக்கும். ஒரு பொந்தில் குறைந்தபட்சம் பத்தாயிரம் பாம்புகள்
வளைந்து நெளிவதைப் பார்க்கவே உடல் நடுங்கும்! (இண்டியானா ஜோன்ஸ்Õ திரைப்படத்தில் ஹாரிஸன் ஃபோர்டு, இப்படியொரு பாம்புப் பொந்தில் தொங்கவிடப்படும் காட்சி உண்டு!).

இளவேனிற்பருவம் வந்தால் போதும்... கார்ட்டர் பெண் பாம்புகள் உடலுறவுக்குத் தயாராகி, ஒவ்வொன் றாக வெளியே வரும்.
அவைகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக, பல்லாயிரக்கணக்கான ஆண்கள் சூழ்ந்துகொண்டு நடத்தும் போராட்டம் இருக்கிறதே...

ஆயிரக்கணக்கில் பாம்புகள் உன்மத்தம் பிடித்தது போல வேட்கைச் சீறலுடன் சிலிர்த்தெழுந்து, வளைந்து நெளிந்து பாய்ந்து, செங்குத்தாக..
எழும்பி நின்று, ஒன்றையொன்றை இடித்துப் பின்னால் தள்ளி, மற்ற பாம்புகளுக்கிடையே இண்டு இடுக்கிலெல்லாம் புகுந்து
எப்படியாவது பெண் பாம்பு களுடன் உடலுறவு கொள்ளவேண்டி நிகழ்த்தும் அந்தக் கலாட்டாவைப் பார்க்கும்போது அந்த இடம் ஒரு
போர்க்களம் போல மாறிவிடும்!

ஒரு பெண்ணுக்கு நூறு ஆண்கள் என்கிற விகிதத்தில் நடக்கும் இந்தக் களேபரமான யுத்தத்தில், பலசாலிகளான ஆண்கள் மட்டுமே
ஜெயித்து, பெண்களுடன் உடலுறவு கொள்ளும். செக்ஸ் முடிந்த கையோடு, ஆண் நகர்ந்து சென்றுவிட்டால், இன்னொரு ஆண் அந்தப்
பெண்ணைப் புணர்ந்து விடக்கூடும் அல்லவா?
 
ஆகவே, ஒவ்வொரு ஆணும் Ôகாதல்Õ முடிந்தவுடன், தன் உறுப்பிலிருந்து கோந்து போன்ற திரவத்தைப் பீய்ச்சி, பெண்ணின் உறுப்பை சீல் செய்துவிடும்!

அந்தத் திரவம் உடனே கெட்டிப்பட்டுவிடுவதால், இன்னொரு ஆண் அந்தப் பெண்ணுடன் உறவுகொள்ள முடியாது! அதாவது | ஆண்,
மற்ற ஆண்களைத் தடுப்பதற்காகவே ஒரு கதவை உடனடியாகத் தயாரித்து மூடிவிடுகிறது!

இதன்மூலம், பெண் பிற்பாடு முட்டைகள் போட்டாலோ, குட்டிகளைப் பிரசவித்தாலோ (பாம்புகளில் இரு வகையும் உண்டு.) அவை
தனக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை ஆண் பாம்பு நிச்சயப்படுத்திக் கொள்கிறது! இந்த விஷயத்தில் ஆணுக்கு
அவ்வளவு அக்கறை உண்டு.

மனிதனுக்கு உள்ளே உள்ள அதே உணர்வுதான் பாம்புக்கும்! இல்லையா, வாசகர்களே..!
செக்ஸ் உட்பட எல்லா விஷயங்களிலும் தன் இனத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் கட்டுப்படுத்தி, அடக்கி ஆளும் தன்மை  விலங்கினங்களுக்கு வருவது எப்படி?
 
ஒரு இனத்தைச் சேர்ந்த விலங்கினங்களுக்குத் தலைவராக இருக்க என்ன தகுதிகள் தேவை?
 
   
கார்ட்டர் பாம்புகல்,

வில்லன்

unread,
Jul 13, 2009, 1:50:16 AM7/13/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்


ஒரு இனத்தைச் சேர்ந்த விலங்கினங்களுக்குத் ÔதலைவராகÕ இருக்க என்ன தகுதிகள் தேவை?

சிம்பிள்!
 
பலம், எடை, வேகம், துணிவு, பயமுறுத்தும் அணுகுமுறை, எதிர்ப்பவர்களை ஆரம்பத்திலேயே தட்டிவைப்பது! |அத்தியாவசியமான குணநலன்கள் இவையே (மனிதர்கள் மாதிரியேதான்!).

சில சமயம் விலங்குக் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே, தலைவர் யார் என்பதை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்!

கலைமான் தலைவர் என்றால், அதன் கொம்புகளின் சைஸும் அதில் இருந்து பிரியும் கிளைகளின் எண்ணிக்கையும் மற்ற
ஆண்களைவிடப் பெரிதாக, கம்பீரமாக இருக்கும்!

கொரில்லாவைப் பொருத்தமட்டில், அதன் எடையையும் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலையும் மற்ற கொரில்லாக்கள் அதனருகில்
வரும்போது, தலைவனிடம் காட்டும் பணிவையும் பார்த்தாலே, இவர்தான் லீடர் என்பது புரியும்.

யானை என்றால், மிகப் பெரிய தந்தங்களோடு மந்தையின் முன்னால் ராஜநடை போடும்!

சில சமயங்களில் தலைவரை உடனே நாம் கண்டுபிடிப்பது சிரமமாகவும் இருக்கக்கூடும்...

குரங்கு வகைகளில் தலைமைக் குரங்கின் உருவம், எடையெல்லாம் பெரிதாக இல்லாமலும் போகலாம். ஆனால், மற்ற குரங்குகளைவிட குயுக்தி அதற்கு அதிகம் இருக்கும்! மற்ற குரங்குகளைவிடத் தான் புத்திசாலி என்பதைப் பலவிதங்களில் நிரூபித்து, ஒருவித பயத்தை
அந்தக் குரங்கு ஏற்படுத்தியிருக்கும்.

சினிமாவில் வில்லன் சின்னவராக, குள்ளமாக இருப்பார். அதுவே அவரது அடியாள் ஏழு அடி உயரத்துக்கு ஆஜானுபாகுவாகத் தோற்றமளித்தாலும், வில்லன் எம்பி நின்று, ஒரு அறை கொடுக்கும்போது பணிவோடு அதை வாங்கிக்கொண்டு தலைகுனிந்து நிற்பான், இல்லையா?

குரங்கிலும் அப்படித் தான்!

மனிதன் உட்பட எல்லா விலங்கினங்களிலும் ஆல்ஃபா ஆண்கள் உண்டு. ஆல்ஃபா ஆண்களுக்கு எல்லாவிதத் Ôதலைமைத் தகுதிÕகளும் இருக்கும். பிறகு பீட்டா, காமா, டெல்டா

(கிரேக்க அரிச்சுவடியில் ஆல்ஃபா முதல் எழுத்து, ஒமேகா கடைசி!).

ஒமேகா ஆண்கள் பணிவான, பயப்படுகிற, பின்வாங்குகிற, அடிமை மனப்பான்மை உள்ள டைப்!

திரும்பத் திரும்ப ஆண்களைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நிலைமை அப்படித்தான்! எல்லா உயிரினங்களிலும்
ஆண்களின் ஆளுமைதான் அதிகம். ஒரு இனத்துக்குப் பெண்கள் தலைமையேற்பது மிகவும் அரிது (பெண்கள் தலைமைக்கு உதாரணமாக, வெர்வெட் குரங்கு இனத்தைச் சொல்லலாம். அதில் ஆண்கள் வெறும் தொண்டர் களே!).

அப்படியென்றால், விலங்கினங் களில் பெண்களின் நிலைமைதான் என்ன? ஆண்கள் பலசாலியாக இருந்தாலும் பெண்ணுக்குப் பிடிக்கா
மல் போகலாம், இல்லையா?

அந்த ஆணைப் பெண் நிராகரிக்க முடியுமா? ஆணின் பலவந்தத்துக்குப் பணிந்து போய்த்தான் தீரவேண் டுமா?

பணிந்து போவது என்று சொல் வதைவிட, தன்னைப் பணிய வைக்கும் ஆளுமை உள்ள ஆணைத் தான் பெண் விரும்புகிறது என்று
வேண்டுமானால் சொல்லலாம்!

இதோ, ஒரு சோதனை...

 எலி  இனத்தைச் சேர்ந்த ஆண்கள் எலியை, சோதனைக்கூடத்தில் கூண்டுக்குள் விடப்பட்டன. ஒரு மணி நேரத்துக் குள் பலவிதமான மிரட்டல்கள், மோதல்கள், துரத்தல்கள் நிகழ்ந்த பிறகு தலைவர், உபதலைவர், தொண்டர் என்று வரிசைப்படி தாங்களே ஒரு ஆட்சியை அந்த எலிகள் நிர்ணயித்துக் கொண்டன!

யார் நம்பர் 1, யார்யார் நம்பர் 2, 3 என்கிற இந்தத் Ôதலைமை வரிசையைÕ விஞ்ஞானிகள் கவனித் துக் குறித்துக்கொண்டார்கள்.

அடுத்தகட்டமாக, ஆண் எலிகள் நீண்ட செயினில் பிணைக்கப்பட் டன | நாய்களை நாம் செயினில்  கட்டிவைப்பது போல.
அதாவது, ஆண்கள் தாங்களாகச் சென்று பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது. பெண் களே வலியப்போனால்தான் உண்டு!

மறுநாள், அந்தக் கூண்டுக்குள் பெண் எலிகள் ஒவ்வொன்றாக அனுப்பப்பட்டன. ஆச்சரியம்! முதலில் போன பெண் எலி ஐந்து
நிமிடத்துக்குள் ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்தது. அது, விஞ்ஞானிகள் வரிசைப்படுத்தியிருந்ததில் நம்பர் ஒன் எலி!

இரண்டாவது பெண்எலி நுழைந்தவுடன், அது செக்ஸுக்குத் தேர்ந்தெடுத்தது உபதலைவரை (தலைவர் ஏற்கெனவே ÔபிஸிÕயாக
இருந்ததால்!).

கூண்டுக்குள் நுழைந்தவுடனேயே, பலசாலியான தலைவர் யார் என்ப தைப் பெண் எப்படிக் கண்டு பிடித்தது?!

ஜாதகப் பரிமாற்றம், விசாரணைகள், ரெகமெண்டேஷன் எதுவும் இல்லாமல் ஒரு பெண்எலி Ôநம்பர் ஒன்Õ ஆணைப் புணர்ச்சிக்காகத்
தேர்ந்தெடுத்தது எப்படி?
 
வாசனை பார்த்தே அவற்றால் தங்கள் தலைவரைக் கண்டுபிடிக்க முடியும். Ôதலைவன்Õ என்கிற உணர்வு, தனி வாசனையை உடலில்ஏற்படுத்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்
 
  
 
பரிதாபமான ஆண் வெர்வெட் குரங்கு                                                            பெண் தலைவி
 
(தொடரும்ம்)

வில்லன்

unread,
Jul 13, 2009, 2:55:58 AM7/13/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்


மாவீரன் அலெக்சாந்தரிடம் சிலிர்ப்பூட்டும் ஒருவித கற்பூர வாசனை அடித்ததாக வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் எழுதியிருக்கிறார்!

புணர்ச்சிக்காகத் தயாராகும் பெண் விலங்கினங்கள், ஆண்களுக்குத் தரும் ஒத்துழைப்பும் ஆச்சரியமானது. கூண்டுக்குள் விடப்பட்ட
பெண், நேரே ஆணிடம் சென்று, திரும்பிப் பின்புறத்தைச் சற்று தூக்கியவாறு அமர்ந்து, தடங்கலாக இல்லாத வண்ணம் தன் வாலை
அகற்றிக்கொண்டு, ஆணுக்கு ÔவசதிÕ செய்து கொடுத்தது!

பெண், உடலுறவுக்கு முன் தன் பின்புறத்தால் ஆணின் உறுப்புப் பிரதேசத்தை மிருதுவாகத் தேய்க்கவும் செய்யும். ஆணின் வேட்கையை
அதிகப்படுத்துவதற்காக அல்ல (அது உத்தரவாதம்!). பெண் தரும் Ôமெஸேஜ்Õ அது!

முக்கியமாக பெண், ஆணுக்குச் சொல்லும் தகவல் இதுதான்... Ôநான் நகரமாட்டேன். எங்கும் போய்விட மாட்டேன். உனக்கு வசதியாக
இருக் கிறதா? எந்தக் கவலையும் இல்லாமல், முழு ஈடுபாட்டுடன் என்னோடு நீ உறவு கொள்ளலாம்...Õ

இவ்வளவு இருந்தும், எந்த விலங்கின் வாழ்க்கையிலும் சட்ட திட்டங்கள், சம்பிரதாயங்கள் எதுவும் நூறு சதவிகிதம் நிச்சயமல்ல...
செக்ஸ் விஷயத்தில் சில சமயங்களில் எதுவும் மீறப்படலாம்!

அவ்வப்போது தலைவருக்கு மட்டுமே சொந்தமான பெண்ணின் கவனத்தைத் தொண்டன் ஒருவன் கவரக்கூடும்! தலைவன் அசந்து தூங்கி
விடும்போதோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ, சமயம் பார்த்து ஆண்தொண்டனுடன் தலைவி ரகசிய உடலுறவு
வைத்துக்கொள்வதும் உண்டு!

இதை kleptogamy என்கிறார்கள். kelpto என்றால் திருடுவது! gamy என்றால்| திருமண உறவு!

தலைவனின் Ôசெயல்பாடுÕ தலைவிக்குத் திருப்தி அளிக்காமல் போனாலோ அல்லது தலைவன் சற்று உடல்நலக்குறைவோடு இருந்தாலோ,
அவனுக்கு வயசாகி விட்டாலோ தொண்டனுக்கு சான்ஸ் அடிக்கும்!

அவனிடம் ஏதோ விஷயம் இருக்க வேண்டும். ஒருவேளை, அவன் பிற்பாடு தலைவனாகக்கூட ஆகலாம்! இப்படியாக, kleptogamyக்கு
பல காரணங்கள் உண்டு!

பிற்காலத்தில், அரசர்கள் அந்தப் புரத்துக்குக் காவலாளிகளாக விரைகள் நீக்கப்பட்ட ஆண்களை நியமித்ததுகூட ராணிகளைப் பற்றிய
இந்தக் கவலையினால்தான்!

வாசகர்கள் இங்கே படிக்கவிருக்கும் Ôசிம்பன்ஸிÕ பற்றிய தகவல்கள் பலரைத் தர்மசங்கடப்படுத்தி நெளியக்கூட வைக்கலாம்...!
மதன் ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதாலோ என்னவோ, அவருடைய கற்பனை தறிகெட்டு ஓடுகிறதுÕ என்றுகூடச் சிலர் நினைக்கலாம்...!

ஆனால், நான் எழுதப்போகிற விஷயங்கள் நூறு சதவிகிதம் உண்மை!

முன்னொரு சமயம் ஜெமினி நிறுவனம் தயாரித்த Ôஇன்ஸானியத்Õ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக Ôஜிப்பிÕ என்கிற
சிம்பன்ஸி Ôஹாலிவுட்Õடிலிருந்து வரவழைக்கப்பட்டது.

மீனம்பாக்கத்தில், விமானத்திலிருந்து அது தொப்பி, சூட்டுடன் இறங்கியபோது Ôஜிப்பிÕயைப் பார்க்க ஆயிரக்கணக்கில் விமானநிலையத்தில் கூடியிருந்த மக்கள், Ôஅட! மனுஷன் மாதிரியே இருக்குப்பா!Õ என்று வியப்போடு பேசிக்கொண்டார்கள். மனிதன் மாதிரி இருப்பது உண்மைதான். ஆனால் சிம்பன்ஸி Ôஎந்த அளவுக்கு மனுஷன் மாதிரி என்பது பலருக்குத் தெரியாது!

எந்த அளவுக்கு என்பதை நான் விளக்கிய பிறகு சிம்பன்ஸி பற்றி இவ்வளவு விவரமாகச் சொல்லி, எங்களுக்கு குரங்கு போன்ற உணர்வை ஏற்படுத்தியது நியாயம்தானா? என்பீர்கள் எரிச்சலாக. உண்மை அதுதான் என்பதால் நீங்கள் அதைத் தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும்!

மனிதனுக்குள்ளே பலவிதமான உயிரினங்களின் மற்றும் மிருகங்களின் குணாதிசயங்கள் இருக்கின்றன என்றாலும் அதெல்லாம் ஆளுக்கு
ஆள் மாறுபடும்!

அதாவது, சில மனிதர்களிடையே பாம்புத்தனம் அதிகம் இருக்கும். சிலரிடையே ஓநாய்த்தனம் அதிகம் இருக்கும்! ஆனால், ஒரே ஒரு
மிருகம் எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் வசிக்கிறது.
 
அது சிம்பன்ஸி குரங்கு!

கடை ஓரமாகவோ, பஸ்ஸிலோ, வீட்டிலோ இந்தத் தொடரை இப்போது படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு இந்தத் தகவல்
ஒன்றும் அவ்வளவு ஆச்சரியமானதாக இருக்காது!

இஞ்சி தின்ன குரங்கு மாதிரி...! மூஞ்சியைப் பாரு, குரங்காட்டம்...! நம்ம பையன் சரியான வாலுங்க..Õ \ ?இப்படியாக, நாமே சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனிதனைக் குரங்கோடு ஒப்பிட்டுப் பேசுகிறோம். அரசியல்வாதிகள்கூடக் கட்சிவிட்டுக் கட்சி தாவுகிறார்கள்!’
(ஆங்கிலத்தில் இன்னும் நிறைய இப்படிச் சொற்றொடர்கள் உண்டு!) இதற்குக் காரணம் மற்ற எல்லா உயிரினங்களையும்விட குரங்குகளை நாம் மிகவும் நெருக்கமான விலங்குகளாகக் கருதுவதால்தான்!

ஜீன்களைப் பொறுத்தமட்டில், மனிதனுக்கும் சிம்பன்ஸிக்கும் நூலிழையில்தான் வேறுபாடு என்பதால், எந்த நேரத்திலும் ஒரு சிம்பன்ஸி நம்மிடம் வந்து Ôஎன்ன தம்பி? என்று தோளில் கையைப் போட்டுவிடுமோ என்கிற கவலையான உள்ளுணர்வு
நம் எல்லோருக்கும்இருக்கிறது
 
chimpanze_jpg.jpg image by unmil
 
 
(தொடரும்)

வில்லன்

unread,
Jul 13, 2009, 6:35:22 AM7/13/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்


கிரேக்க மன்னன் ஹானோ, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவுக்குப் படையெடுத்தான்.

எழுபத்தைந்து கப்பல்களில் அந்த மன்னன் மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் இறங்கிப் பிற்பாடு சில வீரர்களை அழைத்துக்கொண்டு
(இன்றைய) ஸீயிராலியோன் நாட்டுக்குப் போனபோது, மலைப்பகுதியில் திடீரென்று Ôகாட்டுமனிதர்கள்Õ ஹானோவின் குழு மீது தாக்குதல்
நடத்தினார்கள்.

உடல் முழுவதும் அடர்ந்த முடியுடன், சப்பை மூக்குடன் உறுமியவாறு பாய்ந்து வந்த அந்தக் காட்டு மனிதர்களை சிரமப்பட்டுத்
துரத்தியடித்தோம். அதில் சில பெண்களை நாங்கள் கைப்பற்றியபோது, அவர்கள் ரொம்ப முரண்டு பிடித்தார்கள்.
 
எங்களை நகங்களால் கீறிக் கடித்து, அந்தக் காட்டுப் பெண்கள் செய்த ஆர்ப்பாட்டங்களைப் பொறுக்க முடியாமல் அந்தப் பெண்களை வாட்களால் குத்திக் கொல்ல வேண்டி வந்தது.
 
பிறகு கிராமத்துக்கு அவர்களுடைய உடல்களைத் தூக்கி வந்தபோதுதான் அவை மனிதர்கள் அல்ல,

கொரில்லா என்கிற குரங்குகள் என்று அங்கே வாழ்ந்த மக்கள் விளக்கினார்கள்...!Õ என்று தன் டைரியில் ஹானோ எழுதியிருக்கிறார்
ஆமாம்! ஐரோப்பியர்கள் அதுவரை சிம்பன்ஸி கொரில்லா... எதையுமே பார்த்ததில்லை! ஆனால், இந்தியாவிலும் சீனாவிலும், தென்
அமெரிக்காவிலும் குரங்குகள் பண்டைய காலத்திலேயே ரொம்பப் பிரபலம்!
 
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, மெக்ஸிகோவில் ÔமாயாÕ நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள், Ôஇறைவன் மனிதனை உருவாக்கும்
முயற்சியில் இறங்கிய போது சில தவறுகள் செய்ததால் வந்ததுதான் சிம்பன்ஸி! பிறகு மீண்டும் அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு
திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டவன்தான் மனிதன்!Õ என்று நம்பினார்கள்.

குரங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள நெருக்கத்தை எப்போதோ புரிந்துகொண்டவர்கள் இந்தியர்கள்!  இந்தியாவிலும் எகிப்திலும்
குரங்குகளுக்குக் கடவுள் அந்தஸ்துகூட தரப்பட்டது!

ஐரோப்பியர்கள் விஷயம் வேறு! விக்டோரியா மகாராணி காலத்தில் சிம்பன்ஸிகளை ஆராய்ந்த டாக்டர் தாமஸ் ஸாவேஜ் என்கிற
உயிரியல் விஞ்ஞானி சிம்பன்ஸியைப் பற்றிக் கடுமையாக விமரிசித்தார்!

சிம்பன்ஸி | கெட்டுப்போன, சீரழிந்த, கூச்சமில்லாத, ஆபாசமானதொரு உயிரினம்Õ என்றார் அவர். அதற்கு முக்கிய காரணம் \
சிம்பன்ஸி செக்ஸில் காட்டிய அதீத ஆர்வம்! (அது பற்றிப் பிற்பாடு!)

விக்டோரியா காலத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவிகள், குறிப்பிட்ட சில மலர்களை சோதனை செய்வதற்குக்கூடத் தடை
விதிக்கப்பட்டிருந்தது! அந்தப் பூக்களுக்கு ஆண், பெண் பிரத்யேக உறுப்புகளின் Ôசாயல்Õ இருந்ததுதான் காரணம்!

அந்த அளவுக்குக் கட்டுப்பெட்டித்தனம் நிலவிய காலக்கட்டம் என்பதால், செக்ஸியான சிம்பன்ஸிகள் ஐரோப்பியர்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கியதில் ஆச்சரியம் இல்லை!

பிற்பாடு, தவிர்க்க முடியாமல் லண்டன் ஜூவில் சிம்பன்ஸிகளைத் தயக்கத்தோடு கொண்டு வந்து வைத்தார்கள். ஆனால்,
குழந்தைகளோடு ஜூவுக்கு வந்த பெற்றோர் சிம்பன்ஸி கூண்டை நெருங்கினாலே பதற்றத்துடன் குழந்தைகளின் கண்களை மூடி,
வேகமாகக் கூண்டைக் கடந்து ஓடினார்கள். அம்மாக்களின் முகம் கூச்சத்தால் சிவந்துபோனது! சிம்பன்ஸி செய்த செக்ஸ் லூட்டிகள்தான்
காரணம்!

ஒருமுறை லண்டன் ஜூவில், சிம்பன்ஸிகள் Ôபப்ளிக்Õகாக(!) காதல் லீலைகளில் ஈடுபட்டிருந்ததைக் கூட்டத்தோடு நின்று பார்க்க நேர்ந்த
ஆக்ஸ்போர்டு பிஷப் ஸாமுவேல் வில்பர்போர்ஸ் மிகுந்த திகைப்புக்குள்ளாகி, கோபத்துடன் அவற்றைப் பார்த்து விரலை நீட்டி உரக்க,

உங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கூச்சமே உங்களுக்குக் கிடையாதா? என்னை நாத்திகனாக ஆக்கும் அளவுக்கு உங்கள்
நடவடிக்கைகள் என்னை வெறுப்படையச் செய்கின்றன. சே...! இவ்வளவு ஆபாசமான உயிரினத்தை இறைவன் எப்படிப் படைத்தார்
என்று ஆச்சரியமாக இருக்கிறது! என்று டோஸ்விட, அதைக் கேட்ட சிம்பன்ஸி ஒன்று கூண்டில் அவர் முன்பு வந்து அமர்ந்து
உற்சாகமாக சுய இன்பத்தில் ஈடுபட ஆரம்பித்தது. பிஷப்பின் முகம் வெளிறிப் போய்விட்டது!

பொதுவாகவே குரங்கு இனம் ரொம்ப செக்ஸி! இந்தியாவுக்கு அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்தபோது, முதலில் அவரை
எதிர்கொண்டது குரங்குகள்தான். அலெக்ஸாண்டருக்கு எதிரே அந்த பிஷப் முன்பு சிம்பன்ஸி செய்ததையே குரங்குகள் செய்தன.
 
இந்த மரியாதைக் குறைவான செயலைப் பார்த்துக் கோபம் கொண்ட மன்னர், அந்தக் குரங்குகளை வெட்டித் தள்ளும்படி வீரர்களுக்கு
ஆணையிட்டார்!
 
(பாவம், சிம்பன்ஸிக்கும் மனிதனுக்கும் 99.6 சதவிகிதம் ஜீன்கள் ஒன்றேதான் என்பது அலெக்ஸுÕக்கு தெரியாது.
அவருடைய குரு அரிஸ்டாடிலுக்கும் தெரியாது!)

வில்லன்

unread,
Jul 14, 2009, 12:54:58 AM7/14/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்


சுருக்கமாக, குதிரைக்கும் கழுதைக்கும் உள்ள வித்தியாசம்தான் நமக்கும் சிம்பன்ஸிக்கும்!

ஒவ்வொரு மனிதனும் அணிந்து கொண்டிருக்கும் Ôநாகரிகம்Õ என்கிற உடைக்குள்ளே இருந்து ஒரு சிம்பன்ஸி வெளியே வரத் துடித்துக்
கொண்டிருக்கிறது!Õ’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆகவே, சிம்பன்ஸிகளைப் பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் நம்மைப் பற்றி (நிஜமான நாம்!) புரிந்துகொள்ள முடியும்!
சிம்பன்ஸி நம்மைவிடக் குள்ளம். ஆனால், நம்மைவிடப் பலசாலி! உடல் முழுதும் அடர்த்தியான முடி அதற்கு உண்டு. அநேகமாக
எல்லா Ôசிம்ப்Õகளுக்கும் ப்ரௌன் நிறக் கண்கள் இருக்கும். அவை நாற்பது அல்லது ஐம்பது வயதுவரை வாழும்.
 
மருத்துவ ஆச்சரியங்கள் வருவதற்கு முன்பு, மனிதர்கள் நாற்பதைத் தாண்டியதே அரிது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிம்பன்ஸிகள் கைகளையும் பயன்படுத்தி (நாலு காலால்) நடக்கும். சில சமயம் இரண்டு கால்களாலும் (நம்மைப் போல!) நடக்கும்.
நாலுகால் நடை போடும் போது உள்ளங்கைகளைப் பயன்படுத்தாமல், மணிக்கட்டுகளை சர்வ அலட்சியமாக உபயோகிக்கும்.
ஆண் சிம்பன்ஸிகள் எல்லாமே முன்கோபிகள் . குடும்ப உறவு அவைகளுக்கு ரொம்ப முக்கியம்.

சிம்ப் குழந்தைக்கு ஒரு பிரச்னை என்றாலோ, அது வீறிட்டு அழுதாலோ உடனே அம்மா, பாட்டி, அத்தை எல்லோரும் பதைபதைப்போடு
ஓடிச் சென்று, குழந்தையைத் தூக்கிக் கொண்டு சமாதானப்படுத்தும்.

சிம்ப்Õகளுக்கு ப்ராங்கைடீஸ், நிமோனியா போன்ற, மனித நோய்கள் அத்தனையும் வரும். வயசானால் நெற்றியில் வரிக்கோடுகள்,
முகத்தில் சுருக்கங்கள், பல் விழுவது, முடி கொட்டுவது, நரைப்பது... எல்லாப் பிரச்னைகளும் அவைகளுக்கும் உண்டு!

முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க நேரிட்டால், இது நான்தான்! என்பதை சிம்பன்ஸிகள் புரிந்து கொள்கின்றன. குடும்பத்தினர்,
உறவினர்கள்கூட அமர்ந்து, Ôஅரட்டையடித்துக்கொண்டுÕ விருந்து சாப்பிடுவது அவைகளுக்குப் பிடிக்கும்.

அதே சமயம், மது அருந்தினால் மனிதனைப் போலவே போதையோடு தள்ளாடியவாறு | Ôடாய்Õ என்று குரல் கொடுப்பதைத் தவிர |
மற்ற எல்லா கலாட்டாக்களையும் சிம்பன்ஸி பண்ணும். அப்போது, அதன் பின்னாலேயே பெண் சிம்பன்ஸி கவலையோடு ஓடும்!

செக்ஸ்?! சிம்பன்ஸிகளின் செக்ஸ் விஷயத்தை விவரிக்க, ஒரு தனிப் புத்தகமே போட வேண்டியிருக்கும்...!

சத்தம் எழுப்பாமல் அடிமேல் அடி வைத்து என்னோடு கொஞ்சம் வாருங்கள். இது சிம்பன்ஸி பிரதேசம்! நாம் பணிவாக இருப்பது
நல்லது. சரி, அந்தப் புதருக்குப் பின்னாலிருந்துகொண்டு எட்டிப் பார்க்கலாமா? அதோ, சிம்பன்ஸி தலைவர் ஒரு பாறை மீது உட்கார்ந்து
கொண்டிருக் கிறார். என்ன கம்பீரம், பார்வையில் என்னதொரு அலட்சியம்!

அவர் காலடியில் யார் அது? இன்னொரு சிம்பன்ஸி! அது தலைவரின் காலடியருகே இருக்கும் தரையையே
பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறைகூட அண்ணாந்து பார்க்காமல்... தலைவரின் பாதங்களை அவ்வப்போது
முத்தமிடுகிறது.
 
சரேலென்று தலைவரின் கைகள் நீளுகின்றன. தொண்டனின் தோளை மென்மையாகத் தட்டிக் கொடுக்கிறார் தலைவர்.
பிறகு அதன் தலை மீது கை வைக்கிறார். சிம்பன்ஸி தொண்டன் ஏதோ தப்பு செய்திருக்க வேண்டும்.
இப்போது அது அப்பாடா தப்பித்தோம்! என்று பெருமூச்சு விடுகிறது.
 
தலைவர் மன்னித்துவிட்டார்!

தலைவர் எழுந்து மெள்ள நடக்க ஆரம்பிக்கிறார். இதுவரை சற்று தொலைவில் பவ்யமாக நின்ற மற்ற மந்திரி
பிரதானி சிம்பன்ஸிகள் அவரை நெருங்கி, அதே சமயம் அவருக்கு வழிவிட்டு இருபுறமும் நிற்கின்றன.

நடந்தவாறே சிலரை தலைவர் தட்டிக் கொடுக்கிறார். சிலரோடு கைகுலுக்குகிறார். பிடித்தமான சிலரை
அணைத்துக்கொண்டு முத்தமிடுகிறார். ஏராளமான கைகள் அவரை நோக்கி, அவருடைய தொடு தலுக்காக
நீள்கின்றன! ராயல் டச் அல்லவா!

என்ன வாசகர்களே, ஏதோ அமெரிக்க ஜனாதிபதியோ, பிரிட்டிஷ் பிரதமரோ, இந்தியத் தலைவரோ ஒரு
விழாவுக்குள் நுழைவது போலவே இருக்கிறதா?!

போகிற வழியில், துடிப்பான இரு இளம் ஆண் சிம்பன்ஸிகள் அடிதடியில் இறங்கியிருப்பதை தலைவர் பார்க்க
நேருகிறது. தலைவரின் ஒரு கடுமையான முறைப்பு போதும். உடனே அந்த இரண்டும் சண்டையை நிறுத்திவிட்டுத் தலைகுனிந்து ஓரமாகப் போய் நிற்கும்.
 
சில சமயம் திமிரோடு, அவரை கண்டுகொள்ளாமல் சண்டையை அவை தொடரலாம்! அப்படி நிகழ்ந்தால், தலைவரின் புருவங்கள் நெறியும். அவர்களை வேகமாக நெருங்கி ஆளுக்கு ஒரு அறை விடுவார். பிறகு இரண்டும் கப்சிப்!

ஒவ்வொரு Ôசிம்ப்Õபுக்கும் மற்ற நண்பர்களின், குடும்பத்தினரின் குரல் நன்றாகத் தெரியும். அதாவது, மேல் மாடியில் தாமு நண்பர்களோடு
சீட்டு ஆடிக் கொண்டிருக்கும்போது, கீழேயிருந்து Ôதாமே!Õ என்று குரல் வந்தவுடன், குரலைப் பார்த்தே புரிந்து கொள்ளும் தாமு, டேய்!
தீனா வந்துக்கிறான்... போய்க் கூட்டியா! என்று சொல்வது போல!

ஒரு வித்தியாசம் | சிம்பன்ஸிக்கு பெயர் கிடையாது! குப்புசாமி, சுரேஷ் என்றெல்லாம்... ஆனால், காட்டில் தொலைவிலிருந்து ஒரு சிம்ப்
குரல் எழுப்பினால் இங்கே கூட்டத்திலிருக்கும் குறிப்பிட்ட சிம்ப் Ôஅழைப்பு தனக்குத்தான்Õ என்று புரிந்துகொள்ளும். மற்ற நண்பர்களும்
உன்னைக் கூப்பிடறான் பாரு என்பதைப் போல அதைத் தட்டிக் கொடுத்து அனுப்பும்!

வில்லன்

unread,
Jul 15, 2009, 12:48:43 AM7/15/09
to தென்றல், தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்


மற்ற எல்லா விலங்கினங்களும் குறிப்பிட்ட சிலவற்றைத்தான் உணவாகத் தேர்ந்தெடுக்கின்றன. சிம்ப் இந்த விஷயத்தில் நம்மை
மாதிரியேதான்! ஒவ்வொரு நாளும் விதவிதமான Ôடிபன்Õ அதற்குத் தேவை!

பழங்கள், இலை, விதைகள், பூச்சி வகைகள், மீன், நண்டு, முயல், எலி, பறவை, மற்ற வகை குரங்குகள் எல்லாவற்றையும் சிம்பன்ஸிகள்
ஒரு வெட்டு வெட்டும்! மரவட்டைகள் அவைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். மனிதனுக்கு ஸ்வீட் மாதிரி \ அதற்கு மரவட்டை!

நமக்கு உணவில் உப்பு தேவைப்படுகிறது. சிம்பன்ஸிகள் உப்புச்சத்துள்ள மண்ணை  தின்கின்றன! குட்டி Ôசிம்ப்Õகள் சில சமயம்
விஷ இலை எதையாவது வாயருகே கொண்டு போனால் அம்மா அந்த இலையைத் தட்டிவிட்டு, குழந்தை முதுகில் ஒரு போடு போடும்!

சிம்பன்ஸிகளுக்கு நாள் முழுவதும் (நம்மில் சிலரைப் போல) நொறுக்குத் தீனி தேவை! நாம் நடந்தவாறே சுண்டல், வேர்க்கடலையை
வாயில் போட்டுக் கொள்வது போல Ôசிம்ப்Õகளும் நடந்தவாறு எதையாவது மென்று கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளும், இரவு நேரத்தில் மரத்தின் மேலே, அகலமான கிளைகள் மீது, பெரிய இலைகளைக் கொண்டு படுக்கை அமைத்துக்
கொள்ளும் ஒரே விலங்கினம் Ôசிம்ப்Õதான்! சிம்பன்ஸிகள் கனவு காண்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். தூக்கத்தில் திடீரென்று ஏதாவது
சத்தம் கேட்டாலோ, பயங்கரக் கனவு கண்டாலோ அது திடுக்கிட்டு எழுந்து பக்கத்தில் உள்ள Ôசிம்ப்Õபை கட்டிப் பிடித்துக் கொள்வதுண்டு!

சிம்பன்ஸிகளுக்கு கலாட்டாவான விளையாட்டுகளில் ரொம்ப விருப்பம் உண்டு. பெரிய ஆண்கள்கூட நேரம் ஒதுக்கி குழந்தை களோடு
விளையாடும். அநேகமாக பொய் குத்துச்சண்டைதான்!

அவ்வப்போது சிம்ப் படை வேட்டைக்குக் கிளம்பும்போது நாமும் கூடவே போய்ப் பார்த்தால்... திகைப்பும், வியப்பும் நம்மைச் சூழ்ந்து
கொள்ளும்!

அதோ, புதர்களுக்கிடையே உள்ள அந்த பொந்துக்குள் ஏதோ இரை இருப்பதை Ôசிம்ப்Õ ஒன்று கண்டுபிடித்துவிட்டது. உடனே அது
மெலிதாக Ôஸ்ஸ்ஸ்Õ என்று மற்ற நண்பர்களை எச்சரிக்கிறது. உடனே மற்றவை ஆங்காங்கே ஒளிந்து கொண்டு ஒரு வியூகம் வகுத்து

Ôஎஸ்கேப் ரூட்Õகளை எல்லாம் அடைத்துவிட, சில Ôசிம்ப்Õகள் பொந்து வாசலில் குச்சிகளாலும், கற்களாலும் தட்டி இரைக்கு பதற்றமேற்
படுத்துகின்றன. இரை தப்பிப்பதற்காக வெளியே பாய... அட, ஒரு குட்டிப் பன்றி! சரேலென்று சில Ôசிம்ப்Ôகள் பாய்ந்து அதைப்
பிடித்தவுடன் மறைவிடங்களிலிருந்து மற்றவை அங்கே Ôஜம்ப்Õ செய்கின்றன. பன்றி தப்பித்து ஓடினாலும் வேறு ஒரு Ôசிம்ப்Õபிடம் சத்தியமாக
மாட்டிக் கொள்ளும் என்பதைச் சொல்லத் தேவையில்லை! சிம்பன்ஸியின் பற்கள் கூர்மையானவை. சில விநாடிகளில் பன்றி காலி!

வேட்டை முடிந்ததை மிகப் பெரிய வெற்றி விழா போல சிம்பன்ஸிகள் கொண்டாடுகின்றன. குதித்து, கிறீச்சிட்டு ஒன்றையொன்று Ôசபாஷ்!Õ
என்பது போல தட்டிக் கொடுத்து, விசிலடித்து குரூப் டான்ஸ் ஆடி... அந்தக் காட்சி களேபரமாக இருக்கும்! பன்றியின் மூளையையும்,
விரைகளையும் தலைவர் முதலில் சாப்பிடுவார்! பிறகு பன்றியின் மார்புப் பகுதியை உபதலைவர் கிழித்து அதன் இதயத்தை
உருவியெடுத்து, சாப்பிடு வதற்கு முன்பு அதை உயர்த்திக் காட்ட... மற்ற Ôசிம்ப்Õகள் ÔஹோÕவென்று கரகோஷம் எழுப்பும்!
 
அந்தக் காலத்தில் மனிதன் இதேபோலத்தான் வேட்டையாடியிருக்க வேண்டும்! அப்போது மரக்கிளைகள், கற்கள் ஆயுதமாக இருந்தன. இப்போது துப்பாக்கிகள்!

சில நாட்களுக்கு ஒருமுறை எல்லா சிம்பன்ஸிகளும் படையாகக் கிளம்பி தங்கள் எல்லையை கண்காணிக்கவும், ரோந்து பார்க்கவும்
கிளம்பும். இது ஒரு முக்கியமான சம்பிரதாயம்! வேட்டை வேறு, இது வேறு! சிம்ப் எல்லைகளின் குறுக்களவு ஏழெட்டு கி.மீ. இருக்கலாம்
அல்லது முப்பது முப்பத்தைந்து கிலோ மீட்டரும் இருக்கலாம்.

எல்லையை ரோந்து பார்க்கக் கிளம்பிய Ôசிம்ப்Õ படையுடன் ஜேன் கூடாலும் ஒரு முறை கூடவே போய்விட்டு வந்து இதோ அந்த
அனுபவத்தை விவரிக்கிறார்..!

ÔÔதலைவர் முன்னால் போக, பின்னால் Ôக்யூÕ வரிசையாக மற்றவை செல்கின்றன. வழியில் ஒரு சிம்ப் கூட சத்தமெழுப்புவதில்லை. பயங்கர
மௌனம் நிலவுகிறது. நான் ஒரு முறை லேசாக இருமியபோது ஒரு சிம்பன்ஸி திரும்பி என்னைப் பார்த்து Ôஉஷ்...Õ சொன்னது!
Ôவழியெங்கும் கீழே உள்ள இலை, கிளைகள், சருகுகளை எடுத்து டெஸ்ட் பண்ணிக் கொண்டே அவை போகின்றன. சற்றுத் தொலைவில்

திடீரென ஏதாவது கிளை முறியும் சத்தம் கேட்டால்கூட அத்தனை Ôசிம்ப்Õ களும் துணுக்குற்று நின்று, விபரீத மாக எதுவுமில்லை எனத்
தெரிந்ததும் ஒன்றையொன்று பார்த்து Ôஸ்மைல்Õ செய்து முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு பயணத்தைத் தொடர்கின்றன. தங்கள்
கூட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருடைய Ôநம்பர் 2Õ வாசனை அத்தனை Ôசிம்ப்Õகளுக்கும் தெரியும். வேறு ஏதாவது அந்நிய சிம்பன்ஸி
இவற்றின் எல்லைக்குள் நுழைந்து Ôநம்பர் 2Õ போய்விட்டால் அதைச் சோதித்துக் கண்டுபிடித்து விடுகின்றன. உடனே அங்கே பரபரப்பு
தொற்றிக் கொள்கிறது.
 
உடனே Ôஏய்... எவனோ நம்ம எல்லைக்குள்ளே பூந்திருக்கான்!Õ என்பது போன்ற குரல்கள் எழும்புகின்றன. வேறு பகுதியைச் சேர்ந்த சிம்ப் எல்லையோரமாக வந்தால் தலைவர் Ôடாய்... யார்றா அது..? போடாங்க..!Õ என்பது போல மிரட்டலாக குரல் கொடுக்கிறார். ஊடுருவப் பார்த்த சிம்ப் எகிறி குதித்து ஓடி விடுகிறது. அதையும் மீறி அந்த சிம்ப் நின்றால் \ அது ஆணாக இருந்தாலும் சரி, ?பெண்ணாக இருந்தாலும் சரி.
 
நம்ம சிம்ப்கள் ஓடிப்போய், அதைப் பிடித்துக் கொள்ள, தலைவர் போய் அவசரமாக, படுவேகமாக பின்னாலிருந்து அதனுடன் உடலுறவு கொண்டுவிட்டுப் பிறகு அதை அடித்துத் துரத்திவிடுகிறார்! உண்மையில் அது முழுமையான உடலுறவு கிடையாது. ஜஸ்ட், அவமானப்படுத்துவது!

காமேஷ்

unread,
Jul 15, 2009, 1:56:09 AM7/15/09
to thamizh...@googlegroups.com, தமிழமுதம், முத்தமிழ், பண்புடன்
சிம்புவில் இத்தனை விசயங்கள் இருக்கா..


~காமேஷ்~


2009/7/15 வில்லன் <oms...@gmail.com>
360.gif

வில்லன்

unread,
Jul 16, 2009, 12:20:51 AM7/16/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


எல்லைக் கண்காணிப்பு, ரோந்து எல்லாம் முடிந்தவுடன் நடுமையத்துக்குத் திரும்பி... பிறகு மகிழ்ச்சி ஆரவாரம்தான்! டான்ஸ்,
கைகுலுக்கிக் கொள்ளுதல்... எல்லாம் அங்கே நிகழும். Ôஎங்கள் எல்லை எங்களுக்கே..! எங்கள் மண்ணைத் தொட யாரையும் அனுமதிக்க
மாட்டோம்... வாழ்க நம் தலைவர்!Õ என்று Ôசிம்ப்Õகள் குரலெழுப்புவது போலவே எனக்குத் தோன்றியது!ÕÕ என்கிறார் ஜேன் கூடால்!

அட, மறந்துவிட்டேனே... செக்ஸ்! இந்த விஷயத்தில் சிம்பன்ஸிகள் மனிதனைவிட ஒரு படி மேலே போகின்றன. செக்ஸ் சம்பந்தப்பட்ட
பல விஷயங்களில் சிம்பன்ஸிகளைப் பார்த்து நாம் பொறாமைப் படத்தான் முடியும்!....

அப்படியிருக்க, அதைப் பற்றி நான் சொல்லாமல் இருக்க முடியுமா?

செக்ஸ் இல்லையெனில், உலகிலுள்ள கோடிக்கணக்கான உயிரினங்களும் அழிந்தொழிந்துவிடும். படைப்பு என்பது அடியோடு
நின்றுபோகும். பிறகு, பூமி உயிரில்லாத, பிரமாண்டமான வெறும் பாறையாக, அகண்ட கண்டத்தில் மிதக்க வேண்டியதுதான்!

குட்டிப் பூச்சியிலிருந்து மாபெரும் நீலத் திமிங்கிலம் வரை | ஒவ்வொரு உயிரினத்தின் செக்ஸ் வாழ்க்கையும் மகா வியப்பானது!
மனிதனால் கற்பனை செய்ய முடியாத, விசித்திரமான, விபரீதமான அணுகுமுறைகளைப் பின்பற்றி உடலுறவு கொள்ளும் உயிரினங்கள் நிறையவே உண்டு! இந்த விஷயத்தில் சிம்பன்ஸி எப்படி?

சிம்பன்ஸி எந்தளவுக்கு மனிதனுக்கு மிக நெருக்கமான உயிரினம் என்பது, இந்தத் தொடரைப் படிக்கும் எல்லா வாசகர்களுக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒன்று! ஆகவே, அதனுடைய செக்ஸ் வாழ்க்கை அந்தளவுக்கு உங்களை ஆச்சரியப்படுத்தாது என்பதை முதலிலேயே சொல்ல வேண்டி இருக்கிறது!

அதே சமயம், சிம்பன்ஸியின் அணுகுமுறைகள் நம் ஆழ்மனதில் உள்ள உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவதால், அந்த உயிரினத்தைப் பற்றிப் படிக்கும்போது பலருக்குதர்மசங்கடம் ஏற்படலாம். சிலருக்கு ‘ஜூவில் சிம்ப்களின் வெளிப்படையான செக்ஸைப் பார்த்துக் கூச்சல்
போட்ட பிஷப் மாதிரி) கோபம்கூட வர வாய்ப்பு உண்டு.
 
ஆகவேதான், தொடரின் இந்தப் பகுதி முழுக்கவே எச்சரிக்கை சின்னம் போட வேண்டியிருக் கிறது!
 
>>

காதலுக்கு முன் மனிதன் மேற்கொள்ளும் மிருதுவான, படிப்படியான அணுகுமுறையை கையாளுவான். Ôசிம்ப்Õ வாழ்க்கையில் அந்த அணுகுமுறை கிடையாது!

ஒரு ஆண் சிம்ப், புணர்ச்சியை விரும்பினால் உடனடியாக, நேரடியாகக் காரியத்தில் இறங்கி விடுகிறது. பெண்ணைப் பார்த்தவுடன்
கிறீச்சிட்டவாறு மரக்கிளைகளை ஆட்டி, எகிறிக் குதித்து, இரு கரங்களையும் அவளை நோக்கி நீட்டி... அதோடு சரி! உடனே பெண்
புரிந்துகொண்டாக வேண்டும்!

புணர்ச்சிக்கான ÔமூடுÕ வரும்போது, ஆணின் உடல்மீதுள்ள முடி அத்தனையும் சிலிர்த்துக் கொள்ளும். அதன் விறைப்பான உறுப்பு, அதிக
ரத்தம் ஓட்டம் காரணமாகச் செக்கச் சிவந்துபோகும்.Ôஉன்னுடன் உடனே நான் உடலுறவு கொண்டாக வேண்டும்Õ என்பதே இதற்கு
அர்த்தம்.
 
97 சதவிகிதப் பெண் சிம்ப்கள் இதற்குக் கீழ்ப்படிகின்றன. மூன்று சதவிகிதப் பெண்கள் உடனே ஆர்வம் ஏற்படாமல், சற்று
முரண்டு பிடிக்கலாம். இது ஆணுக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கும். மனிதன் பெண்ணிடம் கத்தியைக் காட்டிப் பலாத்காரப்படுத்துவது
போல சிம்பன்ஸிகள், முரண்டு பிடிக்கும் பெண்களை வழிக்குக் கொண்டுவரச் சில வழிகளைக் கடைப்பிடிக்கின்றன...

சில சமயம் மரக்கிளை ஒன்றை ஒடித்து, அதை உயர்த்திக் காட்டி பெண்ணை எச்சரிக்கும். சற்றுப் பெரியதொரு கல்லை தூக்கிக் காட்டி
மிரட்டும். ஆணிடம் பயம் காரணமாக, அநேகமாக எல்லாப் பெண்களும் பிரச்னை ஏற்படுத்தாமல், அருகில் வந்து அமர்ந்துவிடுகின்றன.
Ôசிம்ப்Õ உலகில் எல்லா ஆண்களும் எந்தப் பெண்ணோடு வேண்டுமானாலும் உறவு கொள்கின்றன தலைவரின் மனைவிகளைத் தவிர!
அங்கேயும் கள்ளக்காதல் உண்டு!

ஒரேயொரு பெண்ணுடன் மட்டும் சிம்ப் உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர்க்கிறது. அது | தாய்! (பெரும்பாலான Ôசிம்ப்Õகள்
சகோதரிகளிடமும் உறவு கொள்வதில்லை!) சிம்ப் செக்ஸ் வாழ்க்கையில் கிடையாது (பறவைகள் உட்பட பெரும்பாலான
உயிரினங்களிடையே குடும்பத்துக்குள் உறவு உண்டு!).

எப்போதாவது சற்று அதிகப்பிரசங்கித்தனமான ஒரு சிம்ப், தாயைப் பாலியல் உணர்வோடு நெருங்குவதுண்டு. அப்போது தாய், அதன்
முதுகில் ஒரு போடு போட்டுப் பிடித்துத் தள்ளிவிடும்!

எப்போதுமே பெண் Ôசிம்ப்Õ குப்புற உட்கார்ந்துகொள்ள, ஆண் பின்புறத்தில் நின்றவாறுதான் புணரும். 99 சதவிகிதம் எல்லா
விலங்கினங்களும் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கின்றன.

அந்தக் காலத்தில் பல விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் இந்த அணுகுமுறையை சுட்டிக்காட்டி, Ôநம்மையும் சிம்பன்ஸியையும் எப்படி
ஒப்பிடலாம்? நாமும் அவையும் வெவ்வேறு விதமான உயிரினங்கள்!Õ என்று வாதிட்டார்கள்.

உயிரியல் விஞ்ஞானிகள் அந்த வாதத்தை மிகச் சுலபமாக உடைத்தார்கள். Ôபல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதஇனம் சிம்பன்ஸி
பாணியில்தான் புணர்ச்சியில் ஈடுபட்டது. நேருக்கு நேர் பார்த்தவாறு உடலுறவு கொள்வது ரொம்பத் தாமதமாக வந்த பழக்கம்!Õ என்று
அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

நேருக்கு நேர் செக்ஸுக்கு Ôமிஷனரி பொஸிஷன்Õ என்று செக்ஸ் ஆய்வாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, Ôகிறிஸ்தவ மதம்
தோன்றிய பிறகு, மரியாதை நிமித்தமாகவும் விலங்குகளைப் போல மனிதர்கள் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காகவும் ஏற்பட்ட
வழக்கம்Õ என்பது அவர்கள் விளக்கம்!

மனிதனுக்குப் பகுத்தறிவும் காதலும் மொழியும் வந்தவுடனேயே அவன் காதலியை உடலுறவின்போது நேருக்குநேர் பார்க்க விரும்பியிருக்க
வேண்டும் என்றாலும், இப்போதும் Ôசிம்ப் வகை உறவுÕ மனிதர்களிடையே பரவலாக உண்டு என்பதை மறுக்க முடியாது.

ரோமானியர்கள் காலத்தில் (ஜுலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி உட்பட!) ஆண்கள் Ôசிம்ப்Õ முறையைத்தான் உடலுறவின்போதுபின்பற்றினார்கள். அப்போது ரோம் நாட்டில், ஆண்கள் வசதியாக அமர்வதற்காக சொகுசான முக்காலிகள்கூட தயார் செய்யப்பட்டன!

காமேஷ்

unread,
Jul 16, 2009, 1:41:18 AM7/16/09
to thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
அதென்ன  'நடுமையம்‘  ?
நடு செண்டர் மாதிரியா ?



//

அதாவது, Ôகிறிஸ்தவ மதம்
தோன்றிய பிறகு, மரியாதை நிமித்தமாகவும் விலங்குகளைப் போல மனிதர்கள் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காகவும் ஏற்பட்ட
வழக்கம்Õ என்பது அவர்கள் விளக்கம்!
//

பழங்கால நம்மூர் சிற்பங்கள் எல்லா விதமான வகையிலும் இருக்கே..



~காமேஷ்~





2009/7/16 வில்லன் <oms...@gmail.com>

வில்லன்

unread,
Jul 17, 2009, 12:00:34 AM7/17/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

மனிதர்களோடு ஒப்பிடும்போது, சிம்பன்ஸிகள் ஒரு விஷயத்தில் மாறுபடுகின்றன. சிம்ப்களுக்குத் துளியும் கூச்சம், மறைவிடம், மென்மை
எதுவும் செக்ஸில் கிடையாது. வெட்டவெளியில் வெளிப்படையாக, கூட்டமாக, சிம்ப்கள் உடலுறவு கொள்கின்றன. படுவேகமாக
ஜோடிகள் மாறிக்கொண்டே இருக்கும்.

சிம்பன்ஸிகள் மனிதனைப் போல உடலுறவுக்காக நீண்ட நேரம்(?) எடுத்துக் கொள்வதில்லை. மிகச் சுருக்கமாக, ஏழெட்டு விநாடிகளில்
புணர்ச்சி முடிந்துவிடுகிறது. உடனே காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்! ஐந்து நிமிடத்துக்குள் ஆண் சிம்பன்ஸி மீண்டும்
உடலுறவுக்குத் தயாராகிவிடுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மணி நேரத்துக்குள் ஆண் ஐந்தாறு முறை உடலுறவு
கொள்ளும் | இப்படித் தொடர்ந்து மணிக்கணக்காக!

பெண் சிம்ப்களின் உறுப்புக்குள்ளே, கருத்தரிக்க முட்டை தயாராகும் சமயத்தில் (இதை மீstக்ஷீஷீus ஜீமீக்ஷீவீஷீபீ என்கிறார்கள்), ஆண் தலைவர்கள் அந்த சிம்ப்களை எச்சரிக்கையாக, தங்களுக்காகத் தக்கவைத்துக் கொள்ளும். தொண்டர்கள் அருகில் நெருங்க அனுமதி

கிடையாது.

பெண் சிம்ப்களின் பின்புறம் பெரிதாகிச் சிவந்திருப்பதை நாம் ÔஜூÕக்களில்கூடப் பார்த்திருக்கலாம்!
அந்தச் சமயத்தில் உறவு மேற்கொண்டால்தான் குழந்தை பிறக்கும். Ôஅது, என்னுடைய குழந்தையாக இருக்க வேண்டும்Õ என்பது ஆண் தலைவர்களின் எண்ணம்.

சிம்ப்கள் அநேகமாக அதிகாலையில்தான் நிறையப் புணர்கின்றன! இரவு நீண்ட நேரம் தூங்கி, காலையில் எழும்போது பொதுவாகவே
செக்ஸ் ஹார்மோன் அளவு அதிகமாக இருப்பதால் அப்படி!

செக்ஸ் விஷயத்தில் மனிதனுக்கு அடுத்தபடியாக சிம்ப்களுக்கும் பொறாமை உணர்வு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அடித்துச்
சொல்கிறார்கள். Ôமற்றவளுடன் என் ஆள் போகக்கூடாதுÕ என்கிற எண்ணம் குறிப்பாக, பெண் சிம்பன்ஸிகளுக்கு அதிகம் இருப்பதாக
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஜேன் கூடால் பார்த்து வியந்த ஒரு நிகழ்ச்சி இது...

ஆண் சிம்ப் ஒன்று உறவுக்காகப் பெண்ணை நெருங்க, அதைப் பெண் தட்டிக் கழித்து நகர்ந்து போய்விட... பொறுமையிழந்த ஆண்,
அந்தப் பெண்ணின் மகளுடன் உறவு வைத்துக்கொண்டது. திரும்பி வந்து அதைப் பார்த்த தாய், அந்த ஆணை மொத்தித் தள்ளிவிட்டது!

சில சமயம், எல்லைக்கு அப்பால் உள்ள (வேறு நாட்டு!) பெண் சிம்பன்ஸிகள் எல்லையை ஊடுருவ முயல்வதுண்டு. அப்போது Ôஉள்
நாட்டுÕ பெண்கள் கூட்டமாகக் கிறீச்சலுடன் ஓடிப்போய், Ôஏண்டி... வேற வேலை இல்லையாடி உங்களுக்கெல்லாம்? மினுக்கிக்கிட்டு
வந்துட்டாளுங்க, நம்ம புருஷங்களை மயக்க!Õ என்பதுபோல அடித்துத் துரத்துகின்றன!

கர்பகாலம் இல்லாத பெண் சிம்ப்களை (அவை பெரிய இடத்து அந்தப்புரத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் சரி) எந்தவொரு
ஆணும் புணர Ôசிம்ப்Õ தலைவர்கள் அனுமதிக்கிறார்கள்!

ஆக மொத்தத்தில், ஒரு மணி நேரத்துக்குள் பெண் சிம்பன்ஸியுடன் ஒரு டஜன் ஆண்களாவது உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு
அவசரமான, பரபரப்பான, மிகத் துடிப்பான செக்ஸ் வாழ்க்கை சிம்பன்ஸிகளுக்கு உண்டு.

இந்தளவு உழைப்புக்கு உடல் ஈடுகொடுக்க வேண்டுமே... அதற்காகவே ஆண் சிம்ப்களுக்கு Ôபெரிய விந்து உற்பத்தித் தொழிற்சாலைÕகளைஇயற்கை தந்திருக்கிறது. அதாவது, உடல் எடையோடு ஒப்பிடும்போது, சிம்ப்களின் விரைகள் மனிதனைவிட ரொம்பப் பெரிது! ஐந்து நிமிடங்களுக்குள் முழுமையான ஸ்பெர்ம் உற்பத்தி அங்கே நிகழ்ந்துவிடுவது ஆச்சரியம்தான்.  தேவை அப்படி!

ஏராளமாக செக்ஸில் ஈடுபடாத, ஓரிரு மனைவிகள் அல்லது Ôஏகபத்தினி விரதம்Õ இருக்கும் உயிரினங்களின் விரைகள் பெரிதாக
இருக்கவேண்டிய அவசியமில்லை என்று இயற்கை நிர்ணயித்திருக்கிறது. மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (மிகச் சில உயிரினங்களைப்
போல!) ஒரு மனைவியுடன்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஏதோ ஓரிரு Ôசின்ன வீடுகள்Õ இருக்கலாம்!

அதேசமயம், ஒன்றை நாம் மறக்கக்கூடாது!..

இந்த Ôஒரு தாரம்Õ விஷயம் சுய வசதிகளுக்காக, அண்மையில் | அதாவது, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு \ ஏற்பட்ட ஒன்றுதான்!
லட்சக்கணக்கான வருடங்களாக மனிதனும் போகிற போக்கில் ஏராளமான பெண்களுடன் உறவு கொள்ள வேண்டியிருந்தது. அப்போது
அவனும் விரைகள் விஷயத்தில் சிம்பன்ஸி போலத்தான் அமைந்திருந்தான்!

Ôபகுத்தறிவு வளர வளர, காதல், ஒரே ஒரு துணையுடன் உறவு என்பதெல்லாம் மெள்ள மெள்ளத் துவங்கியபோது கூடவே பரிணாம
வளர்ச்சி காரணமாக அவனுடைய விரைகளும் தேவைக்கேற்ப சிறியதாக மாறிவிட்டன!Õ என்று ஆராய்ச்சியாளர்கள் விஸ்தாரமாக
விளக்குகிறார்கள்.

ஆனால், ஆழ்மனதில் இன்றளவும் நாம் செமத்தியான சிம்பன்ஸிதான்! ஒரு பெரிய வித்தியாசம் | கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில்
மனிதன் திடீரென்று படுவேகமாக முன்னேறி கலாசாரம், மொழி வளர்ச்சி, மதம், தத்துவம், எழுதப்பட்ட சட்ட திட்டங்கள்
எல்லாவற்றையும் ஏற்படுத்திக்கொண்டுவிட்டான்!

இருப்பினும், இவை அத்தனையையும் மனிதன் தொடர்ந்து மீறிக்கொண்டிருப்பதையும் வரலாறு எடுத்துக் காட்டி, எச்சரித்தவாறுதான்
இருக்கிறது. மனிதன் அந்த எச்சரிக்கையை எடுத்துக்கொண்டு திருந்துவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை!

இந்த விஷயத்தில் மனிதனைவிட சிம்பன்ஸி நேர்மையாக, வெளிப்படையாக வாழ்கிறது என்பது உண்மை!

வில்லன்

unread,
Jul 18, 2009, 1:13:11 AM7/18/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

விலங்கினங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது மிக மிக முன்னேறிவிட்டன. ஆகவே, குரங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள உயிரியல்
ரீதியான ஒற்றுமைகளை இன்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்தக் காலத்தில் இந்த ஒற்றுமைÕ பற்றி மிகப்பெரிய
அளவில் விவாதங்கள் நடைபெற்றன.

ஆச்சரியமாக இருக்கும் | உலகப்பெரும் சிந்தனையாளர் களான ப்ளேட்டோ, அரிஸ்டாடில், மார்க்கஸ் அரேலியஸ், பாஸ்கல், டெகார்ட், ஸ்பினோஸா போன்றவர்கள்கூட மனிதனை Ôதனிப்பெரும் படைப்பாகவேÕ கருதினார்கள்.Ôஉயிரினங்கள் அத்தனையும் ஒரு பக்கம் | மனிதன் இன்னொரு பக்கம்Õ என்று அவர்கள் அடித்துச்சொன்னார்கள். Ôசிந்தனைத் திறன், பகுத்தறிவு, புரிந்து கொள்ளுதல் இவற்றைக் காரணமாகக் காட்டி, Ôமனிதன் ரொம்ப விசேஷமானவன்Õ என்று அவர்கள் வாதிட்டார்கள்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலவுகிற விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் தத்துவ மேதைகள் சித்தாந்தங்களை உருவாக்கினார்கள் என்பதால் அவர்களை நாம் ரொம்பத் தப்பாகச் சொல்ல முடியாது.

குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசங்கள் ரொம்பக் குறைவு என்கிற கருத்தை ஒப்புக் கொண்டவர்கள் (தீர்க்கதரிசிகள்?) ப்ரெஞ்சு சிந்தனையாளர் ரூஸோ, பிரிட்டிஷ் தத்துவ மேதை டேவிட் ஹ்யூம் போன்ற மிகச் சிலரே!

Ôகுரங்கிலிருந்து மனிதன்...Õ என்கிற டார்வின் சித்தாந்தத் துக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய காலகட்டம் அது.
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமாவது எழுத்துக் களைக் கோத்து வாக்கியம் அமைக்க முடியுமா?Õ | இது ஒரு கேள்வி!

முன்கூட்டியே உபகரணங்களைத் தயாரிக்கும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. உதாரணமாக, எவரெஸ்ட் மலை ஏறவேண்டுமானால்
கையோடு ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முன் அறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு! பிறகு எப்படி
மனிதனை குரங்கோடு ஒப்பிடலாம்?Õ என்றும் அவர்கள் கேள்வி கேட்டார்கள்.

கலாசார, வரலாற்று நினைவுகள் மனிதனுக்கு மட்டுமே உண்டு!Õ என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. Ôமனிதன் என்கிற உன்னதமான
படைப்புக்கு உதவியாக இருக்கவும், அவன் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கவும் மற்ற உயிரினங்களை இறைவன் படைத்தார்!Õ என்று
உணர்ச்சிகரமாக வாதிட்டவர்கள் பலர்.

டார்வின் சுருக்கமாக இதற்கெல்லாம் பதில் சொன்னார்
 
அடிமையாக்கப்பட்ட யாரையும் மனிதன் தனக்குச் சரிசமமாகக் கருதுவதில்லை! என்று.

அதாவது, நம்முடைய அடிமையாக ஒரு மனிதனே இருந்தால்கூட அவனை நாம் சரிசமமாகக் கருதமாட்டோம் என்கிற நிலையில் மற்ற
உயிரினங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை!

வெள்ளையர்கள் ஆப்பிரிக்க கறுப்பர்களை வேட்டை யாடிக் கைப்பற்றி கயிறுகளால் பிணைத்து நாயைப் போல இழுத்துச் சென்று
அடிமைகளாக நடத்தி வேலை வாங்கினார்கள். அந்த அடிமைகள் வேறொரு உயிரின மாகவே வெள்ளையர்களால் கருதப்பட்டார்கள்.

அப்படியிருக்க, குரங்குகளை நம் கஸின் பிரதர் என்று மனிதன் ஏற்றுக்கொள்வான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?!
மொத்தத்தில், மேலைநாடுகளில் பரவலாக நடந்த மனிதன்  குரங்கு பட்டிமன்றங்களும் அதற்காக நிகழ்ந்தேறிய வாதங்களும்
பிரதிவாதங்களும் சுவை யாகவும் சூடாகவும் அமைந்தன. மனிதன் என்பவன் மிகப் பிரத்தியேகமான தனிப்பிறவி என்று வாதிட்ட
வர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் டார்வின் தரப்பு ஆராய்ச்சியாளர்கள் பதில் சொன்னார்கள்.

பண்டமாற்றம், வியாபாரம் | இந்த இரண்டும் மனிதனை விசேஷமாக்குகின்றன. வேறு எந்த உயிரினமும்
இதில் ஈடுபடுவதில்லைÕ என்றார் பொருளாதாரத் தத்துவங் களை உலகுக்குத் தந்த மேதை ஆடம்ஸ்மித்.

நான் உனக்கு முதுகு தேய்த்து விடுவேன், தலையிலுள்ள பேன்களை அகற்றுவேன். பதிலுக்குச் சமர்த்தாக எனக்கு நீ செக்ஸ் தரவேண்டும்Õ
என்கிற அடிப்படை உடன்பாடு சிம்பன்ஸிகளிடையே உண்டு!

ஒரு கூண்டுக்குள் சிம்பன்ஸி அருகே துடைப்பம் இருந்தது. விஞ்ஞானி ஒரு ஆப்பிளை நீட்டி, துடைப்பத்தை சிம்பன்ஸிக்குச் சுட்டிக்
காட்டினார். சிம்பன்ஸி ஓடிப்போய்த் துடைப்பத்தை விஞ்ஞானியிடம் கொடுத்துவிட்டு ஆப்பிளை வாங்கிக்கொண்டது. இது
பண்டமாற்றம் இல்லையா?Õ என்று கேட்டார் அவர்.

இதை லஞ்சம் என்று அலட்சியமாகச் சொன்னாலும், அதுவும் பொருளாதாரத்துக்கு உட்பட்டதே!

மனிதன் மட்டுமே சமூக விலங்கு. அவன் மட்டுமே அரசியல் விலங்கும்கூட என்றார் அரிஸ்டாடில்.

நம்மைவிடக் கட்டுப்பாடான, கச்சிதமான சமூக வாழ்க்கையை எறும்புகளும், தேனீக்களும் கடைப்பிடிக்கின்றன! சிம்பன்ஸி உலகில்
தலைவன், தொண்டன் உண்டு என்பதையும் நாம் முன்பே பார்த்தோம்!

மனிதனைப் போல குழந்தைப் பராமரிப்பு அவைகளுக்கு உண்டா?!

குரங்குகளும் யானைகளும் நமக்கு இணையாக குழந்தைகளைக் கவனித்துக் கொள்கின்றன!
 
துணிவு, வீரம், தியாகம் | இவை மனிதனுக்கே உரியவை என்றார்கள் பெருமையாக!

கழுதைப் புலிகளோ, நரிகளோ தன் குஞ்சுகளை நெருங்கினால், தாய்ப் பறவை தன் சிறகுகள் முறிந்தது போல நடித்து, தத்தித் தத்தி
நடந்து, அவற்றின் கவனத்தைத் திருப்புவது பறவை ஆராய்ச்சியாளர்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! இப்படி தாய்ப்பறவை
நடந்தும், பறந்தும் எதிரியை நல்ல தொலைவு வரை ஏமாற்றி அழைத்துச் செல்வதில் புத்திசாலித்தனம், வீரம், தியாகம் எல்லாமே தான்
இருக்கிறது!

வில்லன்

unread,
Jul 20, 2009, 12:31:21 AM7/20/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


Ôசிம்பன்ஸிகளிடம் முன்கூட்டியே Ôதிட்டமிடுதல்Õ  கிடையாது. செக்ஸ் விஷயத்திலேயே அதன் அவசரத்தைப் பாருங்கள்!Õ
என்றார்கள். அவர்களைக் காட்டுக்கு அழைத்துக்கொண்டு போன ஆராய்ச்சியாளர்கள், அங்கே சிம்பன்ஸிகள் எதிரிகளை நெருங்கிச்
சண்டையிடுவ தற்கு முன் தடிமனான மரக்கிளைகளை உடைத்துத் தங்கள் முதுகுக்குப் பின்னால் ரகசியமாக எடுத்துச் சென்றதைக்
காட்டினார்கள் | மனிதர்கள் வீச்சரிவாளை முதுகில் வைத்திருப்பது போல!
 
தவிர, சிம்பன்ஸிகள் போருக்குப் போவதற்கு முன் கற்களைச்சேகரித்து கையோடு எடுத்துச் செல்கின்றன! மனிதன் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த லாரியில் கற்களை எடுத்துச் செல்வது போலவேதான்!

பழைய நினைவுகள் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு உண்டா?! என்பது ஒரு கேள்வி.

யானையின் நினைவாற்றல் நமக்குத் தெரியும். பல நாட்கள் கழிந்த பிறகும் நாய் தன் எஜமானனை நினைவில் வைத்திருக்கிறது. பூனை
ஒருமுறை அடுப்பில் சுட்டுக்கொண்டால், மறுபடி அடுப்பருகே போகாது! தவிர, பல உயிரினங்கள் தூங்கும்போது கனவு காண்கின்றன
என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாகிவிட்டது.

அழகை ரசிப்பதும், காதலுடன் முத்தமிடுவதும் மனிதன் மட்டுமே?!

சிம்பன்ஸிகள் செக்ஸ் இல்லாமல் சும்மா இருக்கும்போதும், எங்கேயாவது போய்விட்டுத் திரும்பிய உடனேயும், நிம்மதியாக அமர்ந்து
நிறைய Ôகிஸ்Õ பண்ணிக் கொள்கின்றன.

நேருக்கு நேர் பார்த்தவாறு உடலுறவு?!

போனோபோ) குரங்குகள் மனிதனைப் போலவே நேரில் கட்டிப் பிடித்து அணைத்தவாறு உறவு கொள்கின்றன!

மனிதன் மட்டுமே ரேப் செய்கிறான்! என்றார்கள் சிலர் தலைதாழ்த்தியவாறு.

உராங் உடான், சிம்பன்ஸி மற்றும் கொரில்லா பலாத்காரம் செய்து (சில சமயம் நாலு பேர் பெண்ணைப் பிடித்துக்கொள்ள!) உடலுறவு

கொள் கின்றன.

சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் மனிதர்களிடையே மட்டும் உண்டு என்கிற ஒரு வாதம் உண்டு. இது
எவ்வளவு வீக் ஆனது என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே நம்மைவிடச் சுத்தமாக இருக்கும் விலங்கினங்கள் நிறைய உண்டு!

சிரிக்கிற, அழுகிற ஒரே உயிரினம் மனிதன்தான்?!

சிம்பன்ஸிகளும் சிரிக்கின்றன. குழந்தை இறந்தால் அழுகின்றன. சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடே! பெண் சிம்பன்ஸி
ஐஸ்வர்யாராய் மாதிரியே புன்னகைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல!

ஒரே மனைவி?

கிப்பன் குரங்கு, ஓநாய் மற்றும் பல பறவைகளுக்குச் சாகிற வரைக்கும் ஒரே துணை என்கிற கட்டுப்பாடு உண்டு!

டார்வினின் எதிர்ப்பாளர்கள் விடவில்லை! மனிதன் ரொம்ப ஸ்பெஷல் என்பதை வலியுறுத்த, அவர்கள் வீசிய ஒரு கேள்விக்கணை எல்லோரையும் சற்று திகைக்கவைத்தது உண்மை!

மனிதனுக்கு லேசாகத் தலைவலி ஏற்பட்டாலோ, வயிறு சரியில்லை அல்லது காய்ச்சல் என்றாலோ உடனே Ôநான் நோய்வாய்ப்பட்டு
இருக்கிறேன்Õ என்கிற உணர்வு அவனுக்கு வருகிறது. அவனாகவே பார்மஸி சென்று மருந்து வாங்கிக்கொள்கிறான்.

அப்படியும் குணமாகவில்லை என்றால் டாக்டரிடம் போகிறான். Ôநோய்வாய்ப்பட்டிருக்கிறோம்Õ என்கிற இந்த உணர்வு, மனிதனைத் தவிர
வேறெந்த விலங்கினத்துக்கும் கிடையாது!

|இந்த முக்கியமான வேற்றுமையைச் சுட்டிக் காட்டியவர் ஹென்றி பெர்க்ஸன் என்னும் புகழ்பெற்ற தத்துவப் பேராசிரியர். எளிமையான |
ஆனால், வலுவான இந்த வாதம் எல்லோரையும் திகைக்க வைத்தது.

மனிதன் தனித்தன்மை படைத்தவன் என்று பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அதானே! என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம்
செய்தனர்! இந்த மகிழ்ச்சி பல ஆண்டுகள் நீடித்தது உண்மை.

ஆனால், அண்மைக்காலத்தில் சிம்பன்ஸிகளைப் பற்றிக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தகவல் | அவர்கள் யாருமே எதிர்பாராத ஒன்று!
ஆப்பிரிக்கக் காடுகளில் சிம்பன்ஸிகளை ஆராய்ச்சி செய்த ஜேன் கூடாலும் பிறகு டோஷிஸாடா நிஷிடா என்பவரும் Ôசிம்பன்ஸிகள்
மருந்து சாப்பிடுகின்றன!Õ என்கிற உண்மையை உலகுக்குத் தெரியப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் எல்லா சிம்பன்ஸிகளும் குறிப்பிட்ட சில செடிகளின் இலைகளை மெனக்கெட்டுப் போய்ப்
பறித்துத் தின்கின்றன.

அந்த இலைகளைச் சாப்பிடும்போது Ôசிம்ப்Õகளின் முகம் அஷ்டகோணலாகிப் போவதையும் ஜேன் கூடால் கவனித்தார். உடனே, அந்த
இலைகளைப் பறித்துக்கொண்டு வந்து சோதனைக்கூடத்துக்கு அனுப்பினார்.

அவை ஆஸ்பிலியா என்கிற மருத்துவச் செடியின் இலைகள்! அந்த இலைகளுக்கு ஆன்ட்டிபயாடிக் தன்மை உண்டு என்றும்
வயிற்றிலுள்ள பூச்சிகளை அழித்து, ஜீரண சக்தி யைச் சீராக்கும் தன்மையுடையது என்றும் சோதனைக் கூடத்தில் கண்டுபிடித்துச்
சொன்னார்கள்!

சிம்ப்கள் தினமும் கொஞ்சம் அந்த இலைகளைச் சாப்பிடுகின்றன. உடல்நிலை சரியில்லாவிட்டால், இலைகளின் அளவை சிம்ப்கள்.
அதிகப்படுத்துகின்றன!Õ என்றார் கூடால்.

இத்தனைக்கும், கசப்பான இலை அது. சாப்பிடும்போது சிம்ப்களின் முகச்சுளிப்புக்கு அதுதான் காரணம்! Ôசிம்ப்Õ குட்டிகளைத் தாய் இழுத்து
வைத்து (அந்தக் காலத்தில் பாட்டிகள், குழந்தைகளுக்குப் பலவந்தமாக விளக்கெண்ணெய் கொடுத்தது போல!) இலைகளைச் சாப்பிட
வைத்தன.

அந்த இலைகளைத் தவிர, மருத்துவக் குணமுள்ள பலவிதமான மூலிகைகளை சிம்ப்கள் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது விழுங்குவதும்
பிற்பாடு தெரியவந்தது. பாட்டி வைத்தியம்!

சிம்ப்களுக்கு இலைகளில் மருந்துகள் இருப்பது எப்படித் தெரிய வந்தது என்பது பற்றி யூகங்கள்தான் செய்ய முடிந்தது! ஒருவேளை,
பாட்டி வைத்தியம் மாதிரியே பரம்பரையாக வந்திருக்கக்கூடும்!

ஒருவேளை, சிம்பன்ஸிகளும் மனிதனைப் போல மொழியைக் கண்டுபிடித்திருந்தால், டாக்டர் சிம்ப் பிரிஸ்கிரிப்ஷன்கூட எழுதுவாரோ!
 
 
சரி, பொதுவாகவே உயிரினங்களுக்குத் தான் யார்? என்று தெரியுமா? முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் உருவம்
தன்னுடையதுதான் என்பதை விலங்கினங்கள் புரிந்துகொள்கிறதா? பெரும்பாலான விலங்கினங்களுக்கு இந்த அறிவு கிடையாதுதான்!
ஒரு நாயின் முன்பு கண்ணாடி ஒன்றை வைத்தால், நாய்க்குப் புரிவதில்லை. அது வேறொரு நாய் என்று நினைத்துக் கொஞ்ச நேரம்
குரைத்துவிட்டு, பிறகு அந்த மற்ற நாயால் ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன், ஒருவிதக் குழப்பத்துடன் அந்த இமேஜை
அலட்சியப்படுத்திவிடும்.

ஆனால், கண்ணாடியில் தெரிவது தன்னுடைய பிரதிபலிப்பு என்பதை உராங் உடானும் சிம்பன்ஸியும் மட்டுமே புரிந்து கொள்கின்றன
(கொரில்லாவுக்குப் புரிவது இல்லை!). இதை நிரூபிக்க, சிம்பன்ஸியிடம் ஒரு எளிமையான சோதனை செய்தார்கள்...

தூங்கிக் கொண்டிருந்த சிம்பன்ஸியின் முதுகில் சிவப்பு வண்ணத்தால் பட்டையாக ஒரு கோடு போட்டார்கள். Ôசிம்ப்Õ எழுந்தவுடன் அதன்
முதுகைச் சற்றுத் திருப்பிக் கண்ணாடியைப் பார்க்க வைத்தார்கள்.

சிம்பன்ஸி கண்ணாடியில் தெரிந்த சிவப்புக் கோட்டைப் பார்த்துவிட்டுத் தன் முதுகிலுள்ள கோட்டை விரலால் துடைத்து அழிக்கப்
பார்த்தது (இரண்டு வயதுவரை மனிதக் குழந்தைக்கும் கண்ணாடி இமேஜ் புரிவதில்லை!).

மனிதன், உராங் உடான், சிம்பன்ஸியைத் தவிர, கண்ணாடியில் தெரியும் இமேஜைப் புரிந்துகொள்கிற இன்னொரு உயிரினம் |
டால்ஃபின்!

வில்லன்

unread,
Jul 21, 2009, 12:11:59 AM7/21/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


மொழி?
 
 மனிதனின் ஸ்பெஷாலிட்டியாக மொழியை எடுத்துக் கொள்ளலாம்தான். ஆனால், பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக மொழி
என்பதே இல்லாமல்தான் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பல்வேறு விதமான ஒலிகளை வாயால் எழுப்பியே, தங்கள் எண்ணங்களை
மற்றவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.
 
இதையேதான் சிம்ப்களும் செய்கின்றன. நாள்தோறும் லொட லொடவென்று அவை பேசிக்கொள்கின்றன. அது என்ன மொழி என்று யாருக்குத் தெரியும்?

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், டெக்னாலஜி போன்ற திறமைகளை மனிதன் வளர்த்துக்கொண்ட ஒரே காரணத் தால், நாம் தனிப்பிறவிகள்
என்று சொல்வது சரியான வாதம் அல்ல... என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எல்லாக் கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான வளர்ச்சியும் திடீரென்று (சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில்) வந்தவை தான் என்பதை நாம்
நினைவில் கொள்ள வேண்டும்!

பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் மிருகங்களைப் போலத்தான் காடுகளில் அலைந்து கொண்டிருந்தான். அந்த மனிதர்கள், நம்
முன்னோர்களே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!

உண்மையில்,  குரங்கு வகைகளில் மனித இனமும் ஒன்று என்பதே உண்மை. வேண்டுமானால், மனிதனை ஒரு Ôடீலக்ஸ்
மாடல் குரங்குÕ என்று சொல்லலாம்!

சராசரி மனிதனின் எடையுள்ள சிம்பன்ஸியின் மூளையைவிட, மனித மூளை மூன்று மடங்கு பெரியது. ஆம்! நாம் Ôசிம்ப்Õகளைவிட
படுஸ்மார்ட் ஆனவர்கள்தான். அதே சமயம், இந்தச் சிறப்பு அம்சங்கள் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

பாம்பைவிட மீனுக்கு மூளை அதிகம். மீனைவிடப் பறவைக்கு மூளை அதிகம். பறவையைவிட குரங்குக்கு மூளை அதிகம். குரங்கைவிட
மனிதனுக்கு மூளை அதிகம்... அவ்வளவுதான்!

மனிதனின் மூளை, வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து அவனுடைய மூளையின் கார்டெக்ஸ் பகுதியும் மற்றும் பக்கவாட்டு லோபுகளும்  பலமடங்கு வளர்ந்தன. எதிர்காலத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து முடிவுக்கு வர உதவுவது நெற்றிக்கு உள்ளே இருக்கும் பக்கவாட்டு லோபுகள்தான்

இந்த ஆச்சரியமான மூளை வளர்ச்சி திடீரென்று| முப்பதே லட்சம் ஆண்டுகளில் மனிதனுக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது? என்கிற
கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை!

ஆனால், சிம்பன்ஸி இயற்கை தனக்குத் தந்திருக்கும் மூளை வளர்ச்சியைக் கச்சிதமாக, முழுமையாகப் பயன்படுத்துகிறது.
மனிதன் ஏன் அப்படிச் செய்யவில்லை?

ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து மனிதன் நிகழ்த்திக் காட்டிய அழிவுச் செயல்களைத்தானே வரலாறு என்று பெயரிட்டு
அழைக்கிறோம்.

ஏன் இப்படி?...

கோடானு கோடி உயிரினங்கள் கொப்பளித்துக் கொண்டிருக்கும் ஆச்சரியமான, வண்ணமயமான கிரகம் | பூமி! நம் அறிவுக்குத் தெரிந்தவரையில் சூரிய மண்டலத் தில் வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது. பூமி ஓர் உயிருள்ள கிரகமாக மாற அது எடுத்துக் கொண்ட
காலம் மனிதக் கற்பனைக்கு அப்பாற் பட்டது!

சுமார் ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருண்டு திரண்டு பெரும் பாறையாக உருவானது

பூமி. முதலில் கடல்கள் உருவாக, முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீருக்கடியில் முதன் முதலில் தக்குனூண்டு உயிரினங்கள் தோன்றின. பூமியைச் சுற்றி, நிலப்பகுதி மீது காற்று மண்டலம் உருவாக இன்னொரு நூறு கோடி ஆண்டுகள் பிடித்தது!

முப்பது கோடி ஆண்டு களுக்கு முன்பு ஆக்ஸிஜன் Ôஉருவாக்கும்Õ தாவரங்கள் தோன்றின. மற்ற எல்லாவித உயிரினங்களும் தோன்றுவதற்காக பூமியின் மேற்பரப்பு தயாரானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்!

மனிதன் பூமியில் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய லேட்டஸ்ட் உயிரினம்!

மனிதர்கள் குரங்குகளுக்கு நெருக்கமான உறவு என்றால், மற்ற பாலூட்டிகளுக்கு குரங்குகள் நெருக்கமான உறவு. பாலூட்டிகள்நியாண்டர்தால் மனிதன்..

பறவைகளுக்கு உறவு. பறவைகள் பாம்புகளிலிருந்து தோன்றியவை! இப்படியே பின்னோக்கிப் போனால் மைக்ராஸ்கோப் வழியாக
மட்டுமே பார்த்தால் தெரிகிற, ஒரே ஒரு செல் உள்ள உயிரினம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம்!

சூரிய ஒளியில் கிடைக்கும் சக்தியை மட்டுமே பெற்றுக் கொண்டு உயிர் வாழ்ந்த ஸயனோ பாக்டீரியா என்கிற (ஒரே ஒரு செல் உள்ள) உயிரினம்தான் மனிதனின் முதல் உண்மையான முன்னோர்! (ஒரே செல் உள்ள இரண்டு விதமான பாக்டீரியாக்களில் ஒன்றில் உயிர் பிறந்தது. மற்றொன்று நோயை ஏற்படுத்தியது. இரண்டுமே ஒரே சமயத்தில் தோன்றியவை!)
 
அதிலிருந்து படிப்படியாக இரண்டு செல், 4, 8... என்று முன்னேறி, பிற்பாடு 50 மில்லியன் மில்லியன் செல்கள் அடங்கிய ஆச்சரியமான, Ôஉயிருள்ள கட்டடம்Õதான் (ஆர்க்கிடெக்சர்!) மனிதன்.
 
ஒரு செல்லிலிருந்து துவங்கி உண்மையிலேயே விஸ்வரூபம்!

வில்லன்

unread,
Jul 22, 2009, 12:19:02 AM7/22/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


பூமியின் உயிர்த்துடிப்பான வரலாறு பற்றித் தெரிந்து கொண்ட ஒரே உயிரினம் மனிதன்தான். மிகுந்த பொறுப்பு உணர்வைத் தரவேண்டிய அறிவு அது. ஆனால் மனிதனின் நடவடிக்கைகளில் அந்த அறிவு தெரிகிறதா?!

பூமியையும், இயற்கையையும், மற்ற படைப்புகளையும் அறிவுப்பூர்வமாகக் காக்கும் ஓர் உயிரினமாக உருவெடுத்திருக்க வேண்டிய மனிதன் அழிக்கும் உயிரினமாக மாறியது எப்படி?!

ஆப்பிரிக்கக் காடுகளில் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செங்குத்தாக நிமிர்ந்து நின்று நடந்த Ôகுரங்கு மனிதன்Õ மற்ற
குரங்குகளிடமிருந்து (சிம்பன்ஸி உட்பட) ஒரு விஷயத்தில் குறிப்பாக மாறுபட்டான். அவன் கற்களைத் தேய்த்துக் கூர்மையாக்கி
ஆயுதங்கள் தயாரித்தான். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கும் சென்று தோண்டியெடுத்த இப்படிப்பட்ட கற்கால
ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் பல லட்சம் ஆண்டு களுக்கு முன்பு ஆயுதம் இல்லாமல் மனிதன் வெளியே
கிளம்பியிருக்கவே மாட்டான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது!

மனிதன் தோன்றிய பிறகு சுமார் பதினைந்து லட்சம் ஆண்டு களுக்கு ஆப்பிரிக்கக் காடுகளைவிட்டு அவன் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! பிறகுதான் மெள்ள மெள்ள ஆசியாவுக்கு, ஐரோப்பாவுக்கு என்று அவனுடைய பயணம் துவங்கியது.

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மனித இனங்கள் (நாமும் நியாண்டர்தால் இனமும்) உலகின் பல பகுதிகளுக்கு குடியேற ஆரம்பித்துவிட்டன. அப்போது மனிதன் கண்டுபிடித்த ஒரே விஷயம் | தீ!

மற்றபடி மனித இனத்துக்கு மொழி கிடையாது, விவசாயம் கிடையாது, வீடு கிடையாது, கலை கிடையாது, குடும்பம் கிடையாது... தவிர, யாருமே நாற்பது வயதைத் தாண்டாததால் மாதவிடாய் நின்றுபோவது  கூடக் கிடையாது!

ஆனால் மனிதர்களோடு கூடவே பூமியில் வளைய வந்து கொண்டிருந்த வேறொரு (நியாண்டர்தால்) மனித இனம் அடியோடு, சுமார்
40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்தொழிந்து போனது.

தன்னைவிட சற்று புத்திசாலித்தனம் குறைச்சலாக இருந்த நியாண்டர்தால் இனத்தை வேட்டையாடித் துரத்திக் கொன்று தீர்த்தவர்கள்
மனிதர்களே. கொலைகார ஆயுதங்களைத் தயாரிக்கக்கூடிய Ôஅறிவாற்றல்Õ அவன் வேலையைச் சுலபமாக்கியது! பிற்பாடு உணவுக்காகவும்,
நிலத்துக்காகவும் பெண்ணுக்காகவும் தங்களுக்குள்ளேயே மனிதர்கள் வன்முறையில் இறங்கினார்கள். எந்த உயிரையும் அழிக்க முடியும்
என்கிற ÔஅறிவுÕ மனிதனுக்கு ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது!

சுமார் நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியை ‘கிரேட்
லீப் ஃபார்வர்டு’  என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது மனிதன் முழுமையான பரிணாம வளர்ச்சி அடைந்து பிரும்மாண்டமாகத் தாவி முன்னேறிய காலக்கட்டம் அது! மொழி, கலை, குடும்பம்... எல்லாமே துவங்கியது அப்போதுதான்.

கூடவே மனிதனின் அழிவுச் செயல்களின் வேகமும் அதிகரித்தது. உதாரணமாக 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில்
மனிதன் குடியேறியவுடன் அங்கே வசித்த முக்கால்வாசி உயிரினங்களை அவன் வேட்டையாடி அடியோடு கொன்று தீர்த்தான்.

அப்போது ஆஸ்திரேலியாவில் யானை, காண்டாமிருகம் சைஸுக்கு ஏராளமான விலங்கினங்கள் வளையவந்தன. இன்று அங்கே
உயிரோடு உள்ள ஒரே பெரிய சைஸ் விலங்கினம் கங்காரு மட்டுமே என்றால் மனித இனத்தின் வேட்டை வெறியைப் புரிந்து
கொள்ளலாம்! (ஒரு காலத்தில் யானை உயர கங்காரு இனம் கூட அங்கே இருந்து, பிறகு மனிதர்களால் கொன்று அழிக்கப்பட்டது.)

பூமியை இருண்ட மேகங்கள் அடியோடு மூடிக்கொண்டது போலÕ வன்முறை மேகங்கள் அப்போதே மனித சமுதாயத்தைச் சூழ்ந்து
கொள்ளத் தொடங்கியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் வருத்தத்தோடு.

பறவைகளை எடுத்துக் கொள்வோம். ஏதாவது ஓர் உயிரினம் உலகெங்கும் நுணுக்கமாக கவனிக்கப்பட்டு வருகிறதென்றால் அது பறவை
இனமே! பறவைகள் ஒளிந்து கொள்வதில்லை. அவைகளுக்கு இரவு நடமாட்டம் கிடையாது என்பதால் அவைகளைச்
சுலபமாகக் கண்காணிக்க முடியும். தவிர, பறவைகளை வெறித்தனமாக நேசிப்பவர்கள் உலகெங்கும் ஏராளமாக உண்டு.

சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட ஒரு பறவையைக் காணோம் என்றால் கூட அவர்கள் பதை பதைத்துப் போவார்கள்!
குரங்கு இனத்தில் மனிதன், சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான், கிப்பன் என்று ஐந்து வகைகள் இருப்பதுபோல, உலகில்

சுமார் 9,000 விதமான பறவை இனங்கள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பறவை இனங்கள் இருக்கக்கூடும்.
கடந்த நானூறு ஆண்டுகளில் 108 பறவை இனங்களை அடியோடு மனிதன் அழித்துவிட்டதாக மிசிஙிறி என்று அழைக்கப்படும் சர்வதேச
இயக்கம் அறிவித்திருக்கிறது!

அண்மைக் காலத்தில் கடைசியாக அழிந்த பறவை அமெரிக்காவில், ஃப்ளாரிடா மாநிலக் கடற்கரையோரமாக வசித்த ஒருவித குருவி
இனம். அங்கே, கடற்கரையோரக் காடுகளை மனிதன் அழித்தபோது அந்தக் குருவி இனமும் கூடவே அழிந்து போனது. எப்படியோ
தப்பிப் பிழைத்து உயிரோடு இருந்த ஆறு குருவிகளை பதை பதைப்புடன் ÔஜூÕவுக்குக் கொண்டு போய் பாதுகாத்தும் பலனில்லை.

ஒவ்வொரு குருவியாக இறந்துபோக, தன்னந்தனியாக கூண்டின் ஒரு மூலையில் வெறித்துப் பார்த்தவாறு முடங்கிக் கிடந்த கடைசி
குருவி ஜூன் 16&ம் தேதி 1987&ல் உயிரைவிட்டது. மனிதனைப் போலவே பல கோடி வருஷங்கள் எடுத்துக்கொண்டு உருவான
படைப்பு அந்தக் குருவி!
 
உலகின் அத்தனை விஞ்ஞானிகளும் இணைந்தால்கூட அந்தக் குருவியை மீண்டும் உருவாக்க முடியாது!

வில்லன்

unread,
Jul 23, 2009, 12:20:50 AM7/23/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


இதே போல மனித அலட்சியத்தாலும், அவன் வேட்டையாடியதாலும், கவனக்குறைவாலும் ஏராளமான பறவையினங்கள் அழிந்து
போய்விட்டன.

அழிந்த ஒரே காரணத்தால் உலகப்புகழ் பெற்ற டோடோ என்னும் (இறக்கையில்லாத) பறவை இனம் 17&ம் நூற்றாண்டு வரை
உயிரோடு இருந்தது. 1914&ல் பாஸெஞ்சர் புறா என்னும் பறவையினத்தை மனிதன் முட்டாள்தனமாக அழித்தது அப்போது தலைப்புச்
செய்தி!
 
அதே ஆண்டில் கரோலினா பாரகீட் என்னும் கிளி வகை அழிந்தது. வடஅமெரிக்காவுக்குப் போனால் அங்கே சடை நாய்
போல முடிவளர்ந்த, நீண்ட தந்தங்கள் கொண்ட ராட்சத யானைகள்  சிங்கம், சிறுத்தை எல்லாமே ஒரு காலத்தில்
இருந்தது உண்டு. அவையெல்லாம் பிற்பாடு மனிதர்களால் அழிக்கப்பட்டன.

சைப்ரஸ் நாட்டில் தக்குனூண்டு சைஸ் யானைகள் மற்றும் நீர்யானைகளும் இருந்த காலம் ஒன்றுண்டு. அவை ஒன்றுகூட இப்போது
கிடையாது! தனித்தொடர் எழுதக்கூடிய அளவுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை மனிதன் அறிவில்லாமல் அழித்திருக்கிறான்.
தற்போதுகூட 1666 பறவையினங்கள் அழிவின் நுனியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, தான் அழிவுப் போதையில் போகிறோம் என்கிற உண்மைகூட மனிதனின் மூளைக்கு உறைக்கவில்லையோ என்பதற்கு
உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். கலிஃபோர்னியா மாநிலத்துக்கு என்று ஒரு கொடி உண்டு. அந்தக் கொடியில் உள்ள சின்னம்
கலிஃபோர்னியா காடுகளில் மட்டுமே வசிக்கும் ஒரு விசேஷமான கரடி .
 
 பல ஆண்டுகளுக்கு முன்பேஅந்த ஸ்பெஷல் கரடிகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்பது கலிஃபோர்னிய மக்கள் பலருக்கும் தெரியாது. கொடியில் மட்டும் கரடிச் சின்னம் தொடர்கிறது! எவ்வளவு விசித்திரமான சோகம் இது?! (இந்தியப் புலிகளுக்கும் அதே கதி ஏற்பட்டிருக்கும் | ஆப்ரேசன் டைகர் திட்டத்தின் மூலம் புலிகளைக் காப்பாற்றிய பெருமை முழுதும் இந்திரா காந்தியையே சேரும்!)

மனிதனைத் தவிர, வேறெந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை அடியோடு அழிப்பதிலலை. தேவைப்பட்டால் மட்டுமே அவை
வேட்டையாடுகின்றன.அதே போல, சாகபட்சிணிகள் சுற்றுச்சூழலைக் கெடுப்பதில்லை. அவை முட்டாள்தனமாக தாவரங்களை அடியோடு
அழிப்பதில்லை.

மனிதனுக்கு இல்லாத ஏதோ நுண்ணறிவு மற்ற உயிரினங்களுக்கு உண்டோ என்று கூடச் சந்தேகம் வருகிறது!

உச்சகட்டமாக....

எந்த ஓர் உயிரினமும் தங்கள் இனத்தையே அழித்துக்கொள்ள முனைந்ததில்லை. மனிதனுக்கு மட்டுமே அந்தப் Ôபெருமையும்Õ
சேர்கிறது...!

தங்கள் இனத்தவரையே ரசனையோடும் வெறியோடும் கொல்லக் கிளம்பிய ஒரே இனம் மனித இனமே  என்பதை நிரூபிக்க, உலகின்
எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று நாம் உதாரணங்கள் காட்ட முடியும்!
 
வாசகர்களே, உங்களை நான் டாஸ்மேனியாவுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அங்கே மனிதன் காட்டிய கொலைவெறி உங்களைச் சற்று நிலைகுலைய வைக்கலாம்..!டாஸ்மேனியா ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில், 200 மைல் தொலைவில் உள்ள, மலைகள் சூழ்ந்த ஓர் அழகிய தீவு.

வில்லன்

unread,
Jul 24, 2009, 12:20:42 AM7/24/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


அப்படி ஒரு தீவு இருப்பது 1642|ம் ஆண்டில்தான் வெளி உலகுக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வரும் அபார்ஜினீஸ் என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களைப் போலவே டாஸ்மேனியாவிலும் பழங்குடி மக்கள் வசித்தார்கள். அவர்களின் மக்கள்தொகை ஐயாயிரம்!
 
மிகவும் எளிமையான கற்கால மனிதர்களான அவர்களுக்கு விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பது, வில், அம்பு தயாரிப்பது, பானைகள் செய்வது போன்ற எளிமையான விஷயங்கள்கூடத் தெரியாது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் உபயோகித்த Ôபூமராங்Õகூட அவர்களுக்குப் பரிச்சயமில்லை. நாயைக்கூடப் பார்த்ததில்லை அவர்கள்.
 
அதேசமயம் அவர்களுக்கு என்று பிரத்யேகமான கலாசாரம், சம்பிரதாயங்கள் எல்லாம் இல்லாமல் இல்லை.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மேனியாவின் நிலப்பரப்பு ஆஸ்திரேலியாவுடன் இணைந்திருந்தது. அப்போதே அந்தப் பாதை வழியே நடந்து சென்று டாஸ்மேனியாவுக்குக் குடியேறிய மக்கள்தான் அந்தப்பழங்குடியினர். டாஸ்மேனியா துண்டாகிப் பிரிந்து தனித் தீவாகியது பிற்பாடுதான்.

1800|ம் ஆண்டில் அந்த அமைதியான மக்கள் வாழ்க்கையில் விதி விளையாடியது. அப்போது சில பிரிட்டிஷ் கப்பல்கள்
டாஸ்மேனியாவை அடைந்தன. வெள்ளைக்காரர்கள் முதன் முறை அந்த அழகிய தீவில் காலடி எடுத்து வைத்தனர். அங்கே ஏற்கெனவே
நாகரிகம் இல்லாத பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் விஷயம் நாகரிகம் மிகுந்த வெள்ளையர்கள்
எதிர்பார்க்காத ஒன்று!

டாஸ்மேனியர்கள் கறுப்பானவர்கள். ஆஸ்திரேலிய பழங்குடி மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நாகரிக வளர்ச்சிகூடத் தெரியாத அவர்கள் முதன் முறையாக வெள்ளையர்களைப் பார்த்தவுடன் திகைத்துப் பின்வாங்கி பயந்து போனார்கள். அவர்கள் பயந்தது நியாயமே!

அதற்கேற்ப, உடனே வெள்ளையர்கள் துப்பாக்கிகளை உயர்த்திச் சுட ஆரம்பித்தார்கள். துப்பாக்கியைப் பார்த்திராத டாஸ்மேனியர்கள் பலர் என்னவென்று புரியாமலேயே செத்து வீழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குள் ஏராளமான வெள்ளையர்கள் தொடர்ந்து கப்பல்களில் வந்து
அந்தத் தீவில் குவிந்தார்கள்.
 
இந்தக் கறுப்பு மிருகங்கள் (டாஸ்மேனியர்கள்!) வாழும் தீவை நாம் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும்Õ என்கிற முழக்கத்தோடு பழங்குடி மக்களை வேட்டையாடத்துவங்கினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்களை கூட்டமாகச்
சுற்றி வளைத்துக் கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி உடலுறவு கொண்டார்கள். (கறுப்பு மிருகங்களாக இருந்தாலென்ன?!) குழந்தைகளைப்
பிடித்துச் சென்ற வெள்ளையர்கள் அவர்களுடைய கழுத்தில் சங்கிலி பூட்டி நாய்க்குட்டிகளைப் போல கட்டி வைத்து வேலை

வாங்கினார்கள்.
 
வெள்ளையர்களின் துப்பாக்கிகளுக்கு முன் பழங்குடி மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சிலர் கற்களை எறிந்து எதிர்த்ததோடு சரி!

பிறகு அங்கே வெள்ளையர்கள் அரசு அமைக்கப்பட்டது. 1828|ம் ஆண்டு டாஸ்மேனியாவுக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்தர்
என்பவர், ஒரு கறுப்பு மனிதன்கூட கண்ணில் தென்படக்கூடாது. மலைப்பகுதி அருகே உள்ள காட்டுக்குள் அவர்கள் எல்லோரும்
போய்விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். (ஆஸ்திரேலிய, டாஸ்மேனிய பழங்குடி மக்களுக்கும் திராவிட மக்களுக்கும்
இனரீதியான பண்டைய உறவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது!)

அதே ஆண்டு (1828\ல்), Ôஎதிரே தென்படும் எந்தவொரு பழங்குடி மனிதனையும் வெள்ளையர்கள் கொல்லலாம்Õ என்று ஒரு சட்டம்
கொண்டு வந்தார்கள்! கேட்க வேண்டுமா? வெள்ளையர்கள் பொழுது போகவில்லையென்றால் துப்பாக்கிகளோடு கிளம்பிவிடுவார்கள்.
மிருகங்களை வேட்டையாடுவது போல, பரிதாபமாகப் பயந்து ஓடிஒளியும் பழங்குடி மனிதர்களைச் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொல்வது
வெள்ளையர்களின் ÔஹாபிÕயாக மாறியது. ‘கறுப்பனைப் பிடியுங்கள்!Õ என்று இந்த வேட்டைக்கு அவர்களே
பெயர் சூட்டிக் கொண்டார்கள்!
 
சண்டை போடத் தெரியாமல் ஓடும் கறுப்பர்களின் தவிப்பு வெள்ளையர்களின் உற்சாகத்தையும் கொலைவெறியையும் அதிகப்படுத்தியது. போதாதற்கு Ôஒரு கறுப்பனைக் கொன்றால், மூணு பிரிட்டிஷ் பவுண்டு வெகுமதி. ஒரு குழந்தையைப் பிடித்து வந்தால் ஒரு பவுண்டு பரிசுÕ என்று அரசு குரூரமாக அறிவித்தது!

கழுதைப்புலிகளால் சூழப்பட்ட மான்குட்டியைப் போல டாஸ்மேனிய பழங்குடி மக்கள் வெள்ளையர்களிடம் சிக்கிக்கொண்டு கூட்டம்
கூட்டமாக உயிர் விட்டார்கள்.

ஆண்டு 1860\ல் ஐயாயிரம் பேருக்கு மேல் நிம்மதியாக வாழ்ந்த பழங்குடி மக்களின் தொகை குறைந்து போய், 1830|ம் ஆண்டு உயிரோடு மிஞ்சியவர்கள் எழுபத்திரண்டு ஆண்கள், மூன்று பெண்கள். பெற்றோரைப் பிரிந்து சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அத்தனை குழந்தைகளும் செத்துப் போய்விட்டன.

சில நல்ல மனிதர்கள் இந்தக் கொலைவெறியை ஆட்சேபித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்கள்.

இதனால் சற்று தர்மசங்கடப்பட்ட வெள்ளையர் அரசு மிச்சமிருந்த பழங்குடி மக்களை சிறையில் பூட்டி வைத்தது. சிறை என்றால் ஒரு பாதாளக் குகை! அங்கே சரியான உணவில்லாமல் குடிநீரில்லாமல், காற்று இல்லாமல் அவதிப்பட்டு நோய்வாய்ப்பட்டு ஒவ்வொருவராக உயிர்விட்டார்கள். (Ôவெறி தணிந்தாலும் கொலை உணர்வு வெள்ளையர்களுக்குப் போகவில்லை.
 
ஆகவே, வேண்டுமென்றே உணவைக் குறைத்து, குடிநீர் இல்லாமல் செய்து அந்தப் பழங்குடி மக்கள் செத்துப் போக வழி செய்யப்பட்டது...Õ என்று சில வரலாற்று அறிஞர்கள் வேதனையோடு குற்றம் சாட்டுகிறார்கள்.)

வில்லன்

unread,
Jul 25, 2009, 12:26:28 AM7/25/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


1869\ம் ஆண்டு. இப்போது உயிரோடு இருந்தவர்கள் இரண்டு பெண்கள், ஒரு ஆண்!
 
இந்தச் செய்தி ஐரோப்பாவுக்கும், பிரிட்டனுக்கும் பரவியதும் விஞ்ஞானிகள் டாஸ்மேனியாவுக்கு ஓடினார்கள். டாஸ்மேனிய வெள்ளை அரசு Ôகறுப்பு மக்களைÕப் பற்றி விவரித்த விதத்தைக் கேள்விப்பட்ட அந்த விஞ்ஞானி Ôஒருவேளை, மனிதனுக்கும் குரங்குக்கும் இடையே உள்ள புதிய உயிரினம் ஏதோ கண்டுபிடிக்கப்பட்டிருக்குமோ?!Õ என்கிற ஆர்வமும், சந்தேகமும் அவர்களுக்கு வந்துவிட்டது!
 
அதே ஆண்டு, அந்த கடைசி பழங்குடி ஆண் எலும்பும் தோலுமாக ஆகி இறந்து போனான். அவனுடைய உடலை பிரிட்டிஷ் டாக்டர்களும், விஞ்ஞானிகளும் பிய்த்தெடுத்து, துண்டு துண்டாக்கி சோதனை செய்வதற்காகவும், பரிசுப் பொருளாக வைத்துக் கொள்ளவும் எடுத்துக்
கொண்டு ஓடினார்கள். Ôபிரிட்டிஷ் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்Õ அனுப்பிய டாக்டர் க்ரௌவ்தர், அந்த மனிதனின் உடலிலிருந்து
தலையை வெட்டியெடுத்துக் கொண்டு திரும்பினார்.
 
லேட்டாக வந்த சில ஐரோப்பிய விஞ்ஞானிகள் காது, மூக்கைக் கூட விட்டு வைக்காமல் பொட்டலம் கட்டிக்கொண்டு திரும்பினார்கள். பிறகு ஓரிரு ஆண்டுகளில் இறந்து போன ஒரு பெண்ணின் உடலுக்கும் அதே கதி!

1876\ம் ஆண்டு, ட்ரூகானினி என்ற பெயர் கொண்ட அந்தக் கடைசிப் பெண் (மற்ற இருவரின் உடல்களுக்கும் நேர்ந்த கதியைப்
பார்த்து) நடுங்கி ஒரு மூலையில் ஒடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. இறப்பதற்கு முன்
கடலைச் சுட்டிக்காட்டிக் கதறியவாறு ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தாள் அவள். ஆஸ்திரேலியாவிலிருந்து பழங்குடி இனத்தைச் சேர்ந்த

ஒருவரை அழைத்து வந்தார்கள். அந்தப் பெண்ணின் கதறலைச் சிரமப்பட்டு கீழ்க்கண்டவாறு அவர் மொழிபெயர்த்தார். Ôஎங்கள்
சம்பிரதாயப்படி இறந்து போன பிறகு உடலை கடலுக்கு நடுவே சென்று மூழ்கடிக்க வேண்டும். தயவு செய்து என் உடலை
சின்னாபின்னமாக்காதீர்கள். என் கடைசி ஆசையையாவது நிறைவேற்றுங்கள்..? \ இதுதான் அவள் கதறியவாறு சொன்னது.

வெள்ளையர்கள் உரக்கச் சிரித்தார்கள். ட்ரூகானினி அந்த ஆண்டே இறந்துபோனாள். அவள் கடைசி ஆசை நிறைவேற்றப்படவில்லை.
அவள் உடலை காட்டில் ஒரு மூலையில் அலட்சியமாகப் புதைத்தார்கள். பிற்பாடு அவளுடைய எலும்புக்கூட்டைக்கூட வெள்ளையர்கள்
விட்டு வைக்கவில்லை. அதைத் தோண்டியெடுத்தார்கள். டாஸ்மேனியா மியூஸியத்தில் பார்வையாளர்களுக்காக Ôகடைசிப் பழங்குடிப்
பெண்Õ என்கிற வாசகத்துடன் அது தொங்கவிடப்பட்டது. 
 
1947\ம் ஆண்டு வரை! இதற்குள் ஒருவழியாக, வெள்ளையர்களில் நல்ல இதயம் படைத்த பொதுமக்கள், இந்தப் பழங்குடி இனத்துக்கு ஏற்பட்ட கதி பற்றி தெரிந்து, குற்ற உணர்வோடு தலை குனிந்தனர்.

ட்ரூகானினியின் எலும்புக்கூட்டை இப்படி வைத்திருப்பது அநாகரிகம், மோசமான ரசனை... (றிஷீஷீக்ஷீ ஜிணீstமீ)Õ என்கிற ரீதியில் மனு
எழுதி அனுப்பி, ஊர்வலமாகப் போய்ப் போராடினார்கள். ஆகவே, நடு ஹாலில் தொங்கவிடப்பட்டிருந்த ட்ரூகானினியின் எலும்புக்
கூட்டை வேண்டாவெறுப்பாக ஒரு தனியறையில் மூலையில் உட்கார வைத்தார்கள். Ôஅட்லீஸ்ட் விஞ்ஞானிகள் அதைப் பார்க்க
விரும்புவார்கள் இல்லையா?!Õ என்பது அவர்கள் சொன்ன காரணம். பொதுமக்களில் பலர் இதற்கும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

1976\ம் ஆண்டு \ ட்ரூகானினி இறந்து சரியாக நூற்றாண்டு வந்தது. அதே நாளன்று மக்கள் கூட்டம் மியூஸியம் காப்பாளர்களைத்
தள்ளிக்கொண்டு அவர்களுடைய ஆட்சேபனைகளையும் மீறி உள்ளே புகுந்தது. அங்கே மூலையில் பரிதாபமாகக் கிடந்த ட்ரூகானினியின்
எலும்புக்கூட்டை வெளியே கொண்டு வந்தவர்கள் அதை சகல மரியாதைகளுடன் எரித்து, அந்தச் சாம்பலைப் படகுகளில் நடுக்கடலுக்குக்
கொண்டு சென்று... அந்தப் பெண்ணின் கடைசி விருப்பப்படி கடலில் சாம்பலைக் கரைத்துவிட்டுத் திரும்பினார்கள்.

மனிதர்களின் கொலைவெறிக்கு Ôடாஸ்மேனிய உதாரணம்Õ ஒன்று போதுமா வாசகர்களே..?!

வாசகர்களே! வரலாற்றில் சிவப்புத் துளிகள் பரவலாகச் சிதறிக்கிடக்கும் சில மிக மோசமான கொலைகார இடங்களுக்கு உங்களை நான்
அழைத்துச் செல்லப் போகிறேன். மனிதனின் கொலை வெறியைப் பொறுத்தமட்டில் பூகோள ரீதியான வித்தியாசங்கள் கிடையாது
என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக உலகெங்கும் உள்ள கொலைக் களங்களில் மிகச் சிலவற்றையே நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
பட்டியல் போட்டு எல்லாவற்றையும் விவரிக்க பல வால்யூம்கள் தேவைப்படும்! ஆகவே டாஸ்மேனியாவிலிருந்து கிளம்பி நாம் இப்போது
தென்அமெரிக்காவுக்குப் போக வேண்டியிருக்கிறது...!

ஒரு காலத்தில் ஆசியக் கண்டமும் அமெரிக்காவும், தலைப்பகுதியில் இணைந்திருந்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்க
வடபகுதியில் உள்ள அலாஸ்காவிலிருந்து ரஷ்யப் பகுதியான சைபீரியாவுக்கு நடந்தே போய்விடலாம். அப்படித்தான் மனிதர்கள் 12,000
ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினார்கள்.
 
அதாவது கொலம்பஸ் (மீண்டும்) அமெரிக்காவை 1492&ம் ஆண்டு கண்டுபிடிப்பதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. உண்மையில் (நம் பெயரைக்கொண்டுள்ள!) சிவப்பு இந்தியர்களின் நாடு அமெரிக்கா!

பிறகு அங்கிருந்து தென் அமெரிக்காவுக்கு மனிதர்கள் குடியேறினார்கள். அடிப்படையில் ஆசிய, மங்கோலிய முகஜாடை அமெரிக்க
இந்தியர்களுக்கு இருக்கக் காரணம் \ சிவப்பு இந்தியர்களின் முன்னோர்கள் ஆசியர்கள் என்பதால்தான்!

தென் அமெரிக்காவில், இன்றைய நாடுகளான பெரு, மெக்ஸிகோ போன்ற பகுதிகளில் குடியேறிய மக்கள் பிற்பாடு தங்களுக்கென்று
பிரத்தியேகமான கலாசாரத்துடன் ஒரு சாம்ராஜ்யமே அமைத்துக் கொண்டார்கள். தென் அமெரிக்கர்கள் விட்டுச் சென்ற மாயன், அஸ்டெக்,
இங்கா நாகரிகங்கள் இன்றும்கூட பிரமிப்பூட்டுபவை!

கொலம்பஸ் அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய பிறகு ஐரோப்பியர்கள் ருசி கண்ட பூனையானார்கள். நிம்மதியாக வாழ்ந்து வந்த தென்அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் கடல் வழியாக சூறாவளி வீச ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான்...!

வில்லன்

unread,
Jul 27, 2009, 12:20:46 AM7/27/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


பெரு நாட்டில் வண்ணமயமாக தகதகத்துக் கொண்டிருந்த இங்கா சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி அட்வால்பா!
 
கடவுளாக இங்கா மக்கள் வழிபட்டு வந்த அவருடைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலில் சில கப்பல்களில் ஐரோப்பியர்கள் அங்கே வந்திறங்கினார்கள். ஸ்பெயின் நாட்டை ஆண்டு வந்த சார்லஸ் மன்னரின் பிரதிநிதியும், கவர்னருமான பிரான்ஸிஸோ பிஸாரோ
தலைமையில் பெரு நாட்டில் இறங்கிய ஸ்பானிஷ் வீரர்களின் எண்ணிக்கை நூற்று அறுபத்து எட்டு!

அட்வால்பாவின் சாம்ராஜ்யத்தின் அகலமே மூவாயிரம் மைல்கள். அவருடைய பிரத்தியேகப்படைவீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் வீரர்கள். நம்முடைய ராஜராஜ சோழன் மாதிரி சுற்று வட்டாரத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் வெற்றிகண்டு தனிப்பெரும் மன்னராக
விளங்கியவர் அட்வால்பா.

பெரு நாட்டின் முக்கிய நகரமான காஜமார்க்காவில் அட்வால்பாவும் ஸ்பானிஷ் தளபதி பிஸாரோவும் சந்தித்த சில நிமிடங்களில் அட்வால்பாவை ஸ்பானிஷ் படை தோற்கடித்து கைப்பற்றியது \ வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற, வேதனை மிகுந்த வஞ்சக நிகழ்ச்சி!

பிஸாரோவுடன் கூடச் சென்ற அவருடைய சகோதரர் பெட்ரோ என்பவரே அந்த நிகழ்ச்சியை விவரிக்கிறார்...

இரவு சூழ்ந்தவுடன் மெள்ள முன்னேறி சுமார் இரண்டரை மைல் தொலைவிலிருந்து அட்வால்பாவின் படையைப் பார்த்தோம். எங்கள்
உடல் நடுங்கியது. காஜமார்க்கா நகரின் வெளிப்புறத்தில் மலையடிவாரத்தில் அவர்கள் களம் அமைத்திருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான
கூடாரங்கள் ஒவ்வொன்றின் முன்பும் தீ மூட்டி அதைச் சுற்றி வீரர்கள் அமர்ந்திருந்தனர். தொலைவிலிருந்து பார்க்க வானத்தில்

நெருக்கமாக ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவது போல அந்தக் கூடாரங்கள் மின்னின. கவர்னர் பிஸாரோ Ôஅங்கே சுமார் 40,000 வீரர்கள் இருப்பார்கள்Õ என்றார். அது பொய் என்று தெரியும். உண்மையில் 80,000&க்கு மேற்பட்ட Ôஇங்காÕ வீரர்கள் அங்கே காத்திருந்தனர். நாங்கள் வந்திருப்பது இங்கா மன்னருக்குத் தெரியும்!

மறுநாள் தூதுவர் ஒருவரை அனுப்பினோம். Ôஸ்பெயின் என்கிற நாட்டிலிருந்து நட்பு உணர்வோடு வந்திருக்கிறோம். மன்னரைச் சந்திக்க
ஆவலாக இருக்கிறோம்Õ என்று தூதுவரிடம் சொல்லியனுப்பினார் பிஸாரோ.

இங்கா மக்களுக்கு ஒருவர் சொல்லும் வார்த்தைகள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு போலும்! சில மணி நேரங்கள் கழித்து காஜமார்க்கா
நகருக்குள் எங்களை வரச் சொன்னார் மன்னர். தூதுவர் வந்து இதைச் சொன்னவுடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் பிஸாரோ. பிறகு
நிமிர்ந்து பார்த்து எங்கள் படையைப் பல பிரிவுகளாகப் பிரித்து சில ஆணைகள் பிறப்பித்தார். எங்களிடம் குதிரைகள், துப்பாக்கிகள்
உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

அட்வால்பா ஊர்வலமாக வந்த விதமே சிலிர்ப்பூட்டி எங்கள் உடல்களை நடுங்க வைத்தது. உண்மையில் எங்களில் சிலர் பயத்தில்
உடையிலேயே சிறுநீர் கழித்துவிட்டார்கள் என்பது உண்மை!முதலில் இரண்டாயிரம் வீரர்கள் அழகிய துடைப்பத்தால் வழிபூராவும்
பெருக்கிக்கொண்டே வந்தார்கள். பிறகு வில், அம்புகளோடு வீரர்கள் அணிவகுந்து வந்தனர். பிறகு வீராவேசமாக டான்ஸ் ஆடியபடியே
வந்தவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். அவர்கள் வரும்போது கூட்டமாக பஞ்சவர்ணக் கிளிகள் ஆடிக்கொண்டு வந்ததைப் போல
இருந்தது!
 
பிறகு பிரமாண்டமான பல்லக்கு தென்பட்டது. ஒரே மாதிரி நீல வண்ண உடையில் எண்பது பேர் சுமந்து வந்த அந்த
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அட்வால்பா ஒரு அரசருக்கு உரிய உடையுடன், கிரீடத்துடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். பல்லக்கு
தங்கத்திலும, வெள்ளியிலும் ஜொலித்தது. அவரைத் தொடர்ந்து சற்றே சிறிய பல்லக்குகளில் மந்திரி பிரதானிகள்...

கீழே இறங்காமலேயே சக்ரவர்த்தி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது.. | என்று
விவரிக்கிறார் பெட்ரோ!

கவர்னர் பிஸாரோ திரும்பித் தலையசைக்க, பாதிரியார் வின்ஸென்ட் வேல்வெர்ட் ஒரு பையில் சிலுவையுடனும் மறுகையில் பைபிள்
உடனும் அட்வால்பாவை நெருங்கினார். ஸ்பெயின் மன்னர் சார்லஸ் கத்தோலிக்கப் பிரிவைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். வாள் முனையில்
மிக ஆவேசமாக கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிய முன்னணி மன்னர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தார் அவர்.

மன்னர் அருகே சென்று வணங்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார் பாதிரியார் | மன்னரே! நாங்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்பெயின் மன்னர் உங்களுக்கு தன் நல்வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார். தாங்களும் எங்கள் மதத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்
என்பது மன்னரின் விருப்பம்! அது நம் இருநாடுகளுக்கும் நல்லது! என்று சொல்லி கிறிஸ்தவ மதத்தின் பெருமைகளையும் சுருக்கமாக
விளக்கிவிட்டு பைபிளை நீட்ட, அட்வால்பா அதை வாங்கி சில பக்கங்கள் புரட்டிப் பார்த்துவிட்டு அதைத் தூக்கியெறிந்தார். அவர்
கண்கள் மெள்ளச் சிவந்தன..!

அட்வால்பாவுக்கு படிக்கத் தெரியாது. ஸ்பானிஷ் மொழி எப்படித் தெரியும்? சூரிய பகவானை வழிபடுபவரும், ஆரிய வம்சத்தில்
தோன்றியவராகக் கருதப்படுபவருமான இங்கா மன்னரிடம் பைபிள் புத்தகத்தைத் தந்ததில் ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால், திடுக்கிட்டுப்
பயந்து போன பாதிரியார் திரும்ப ஓடி வந்து பிஸாரோவிடம் அடைக்கலம் புகுந்து ஐயையோ! பைபிள் புத்தகத்தைத் தூக்கியெறிகிறார்.
என்ன அநியாயம் இது! என்று அலற பிஸாரோவை பதற்றம் சூழ்ந்துகொண்டது.

வில்லன்

unread,
Jul 28, 2009, 12:09:46 AM7/28/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

ஒரு விஷயத்தை முக்கியமாக சொல்ல வேண்டும். அட்வால்பாவின் முன்னால் பிஸாரோ உட்பட நின்றவர்கள் ஒரு டஜன் பேர்தான்! மற்ற
ஸ்பானிஷ் வீரர்கள் சுற்று வட்டாரத்தில் ஒளிந்து கொண்டிருந்தார்கள்.

தலைக்கு மேல் போனால் ஜாண் என்ன முழம் என்ன?Õ என்கிற எண்ணத்தில் இருந்த கவர்னர் பிஸாரோ ஸான்டியாகோ! என்று
திடீரென்று ஆவேசமாகக் குரல் கொடுத்தார். ஸ்பானிஷ் வீரர்களின் போர் முழக்கம் அது!

அவ்வளவுதான்! ஒளிந்து கொண்டிருந்த ஸ்பானிஷ் குதிரைப்படை வீரர்கள் வெளிப்பட்டார்கள். அவர்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகள்
முழங்கின. குதிரைகளின் கழுத்தில் மணிகள் கட்டியிருந்ததால் அவை களேபரமாக ஒலியெழுப்ப, ஸ்பானிஷ் வீரர்கள் ஊதுகுழல்களை
கர்ணகடூரமாக ஊதியவாறு முன்னேற... சண்டையிடுவதற்காகத் தயாராக வராத இங்கா வீரர்கள் இதை எதிர்பார்க்காமல்
திகைத்துப் போனார்கள்.

நெருக்கமாக வந்த பிறகு வாட்களையும், ஈட்டிகளையும் ஏந்திய ஸ்பானிஷ் படை எதிரிகளை வெட்டியும், குத்தியும் வீழ்த்தியது.
சுதாரித்துக்கொண்ட அட்வால்பாவின் மெய்க்காவல்படை தற்காப்பில் இறங்கியும் பலனில்லை. இதற்குள் பிஸாரோவே குதிரை மீது ஏறிப்
புகுந்து பல்லக்கை நெருங்கி அட்வால்பாவின் ராஜ உடையைப் பிடித்துக் கிழித்து இழுக்க... முடியவில்லை. பல்லக்குத் தூக்கிய வீரர்களை
ஸ்பானிஷ் வீரர்கள் வெட்டித் தள்ளத்தள்ள வேறு வீரர்கள் பல்லக்கைத் தங்கள் தோள்களுக்கு மாற்றிக்கொண்டு சக்ரவர்த்தி கீழே விழாமல்
தடுத்தார்கள்!
 
கடைசியாக ஏககாலத்தில் ஆறு ஸ்பானிஷ் வீரர்கள் குதிரைகளில் பாய்ந்து வந்து பல்லக்கின் பக்கவாட்டில் மோதினார்கள்.
ஒரு வழியாக பல்லக்கு சரிய, அட்வால்பா கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்றப் போரிட்ட அத்தனை இங்கா வீரர்களும் உயிர்த்
தியாகம் செய்தார்கள்.

கிழிந்து போன உடையுடன் தடுமாறி எழுந்து நின்ற இங்கா மன்னர் திகைப்பிலாழ்ந்தாலும் கம்பீரத்தை இழக்காமல் நிமிர்ந்து நிற்க அவரை
விலங்குகளால் பிணைத்துக் கைது செய்து இழுத்து வரச் சொன்னார் பிஸாரோ.

போர் என்றால் இருபுறமும் அணிவகுத்து நின்று நேரடியாக மோதுவது என்று அப்பாவித்தனமாக நினைத்த இங்கா மன்னர் அந்நியர்களை
விசாரிப்பதற்காக நேர்மையாக, நம்பிக்கையோடு முன் வந்தபோது வஞ்சகமாக திடீர் கெரில்ல தாக்குதல் நிகழ்த்தி தன்னைக்
கைப்பற்றுவார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்!

ஆனால்  அவருக்காக விதி இன்னும் கொடூரமாகக் காத்துக் கொண்டிருந்தது...

தவறான வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் மனிதனுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் கிடைக்கலாம். அது
தற்காலிகமான மகிழ்ச்சியே.
 
நமக்கு நாமே நிறையக் கேள்விகள் கேட்டுக்கொள்வதன் மூலம் எது சரி,எது தவறு என்பதைத் தெளிவாகப் பகுத்தறிந்து புரிந்துகொள்ள முடியும். மனதுக்கு அமைதியேற்படுத்தும் நிரந்தரமான மகிழ்ச்சியை மனிதனுக்குத் தருவது இதுவே! என்றார் சாக்ரடீஸ்.

ஆனால், மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகம் தற்காலிக மகிழ்ச்சிக்காகவே தவிக்கிறது. அந்த மகிழ்ச்சி
ஏற்படுத்தவிருக்கும் பின்விளைவுகளைப் பற்றி உள்ளுக்குள்ளே இருக்கும் மிருகம் கவலைப்படுவதில்லை!
அந்த மிருகத்தை உசுப்பிவிடக் காரணமான சுயநலம் நீதி, நியாயம், கருணை போன்ற சிறந்த விஷயங்களை மிதித்துச் சிதைத்துவிடுகிறது.

கிரேக்க நாடுகளான ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் கி.மு.431|404 வரை நடந்த நீண்டதொரு ஆவேசமான போரின்போது, மெலோஸ் என்கிற குட்டித் தீவு நாடு, கூட்டுசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது. ஏதென்ஸ் அரசு அதை ஒப்புக் கொள்ளவில்லை!
நீங்கள் எங்களோடு இணைந்து போரில் ஈடுபட வேண்டும் என்று ஏதென்ஸ் ஆணையிட்டது. Ôநாங்கள் இருவரையும் எதிரிகளாகக் கருதவில்லை. யாருக்கும் தீங்கு நினைக்கவும் விரும்பவில்லை. ஆகவே, போரில் கலந்து கொள்ள மாட்டோம் என்றது மெலோஸ் அரசு.

எங்கள் நாடு பலம் மிகுந்த நாடு. நாங்கள் சொல்வதுதான் சட்டம், நீதியெல்லாம். சின்னஞ்சிறு நாடுகள் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இணங்கித்தான் போகவேண்டும். போர் நிகழும் காலக்கட்டத்தில், யாருக்கும் நாங்கள் தீங்கு நினைக்கவில்லை என்று முழங்குவதெல்லாம் அர்த்தமில்லாத வாதம்! என்று ஏதென்ஸ் அரசு எச்சரிக்கை விடுக்க...

மெலோஸ் நாட்டு அரசர், பதிலுக்கு Ôஏதென்ஸ் நாட்டிலுள்ள அறிஞர்களைக் கூப்பிட்டு, நீங்கள் சொல்வது நியாயம்தானா என்று விவாதித்து முடிவு செய்யுங்கள். யாருடனும் கூட்டு சேரக்கூடாது என்பதே எங்கள் இறுதி முடிவு!Õ என்று சொல்லி அனுப்பினார். உடனே ஏதென்ஸ் நாட்டுப் பெரும்படை மெலோஸ் நாட்டைச் சூழ்ந்துகொண்டு கைப்பற்றியது. கையோடு அந்த நாட்டிலுள்ள அத்தனை ஆண்களையும் ஏதென்ஸ் நாட்டு வீரர்கள் வெட்டிச் சாய்த்தார்கள்

(பனிஷ்மெண்ட்!). அலறி ஓடிய பெண்களைக் கூட்டம் கூட்டமாக, ஏதென்ஸ் வீரர்கள் களிப்போடு வளைத்துப் பிடித்து, பாலியல்
பலாத்காரத்துக்கு உட்படுத்தி, பிறகு அவர்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகச் சிறைப் பிடித்தார்கள். மெலோஸ் நாடு அதோடு
அழிந்து போனது!

வில்லன்

unread,
Jul 29, 2009, 12:14:15 AM7/29/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


ஆக, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற கதைதான்!

இங்கா மன்னர் அட்வால்பாவுக்கும் இதே கதிதான் நிகழ்ந்தது. இங்கா மக்கள் ஸ்பானிஷ் தளபதியிடம் Ôநீங்கள் என்ன கேட்டாலும்
தருகிறோம். எங்கள் மன்னரை விடுவித்துவிடுங்கள்!Õ என்று கெஞ்சினார்கள்.

செல்வம் கொழிக்கும் அந்நாட்டைப் பார்த்துச் சப்புக் கொட்டிய ஸ்பானிஷ் தளபதி | 22 அடி நீளம், 17 அடி அகலம், 8 அடி
உயரத்துக்குப் பிரமாண்ட ÔஅறைÕ (மேற்புறம் மூடப்படாத தொட்டி!) ஒன்றைக் கட்டச் சொன்னார்.

இதை ஒரு முறை தங்கத்தாலும் இரு முறை வெள்ளியாலும் நிரப்புங்கள். மன்னரை விடுதலை செய்கிறேன்!Õ என்றார் பிஸாரோ.
அந்த ÔஅறைÕ முழுவதையும் மக்கள் தங்கத்தால் நிரப்பினார்கள். ÔஅறைÕக்குள் மேலும் இடம் ஏற்படுத்த தங்க ஜாடிகள், பெட்டிகளையெல்லாம் ஸ்பானிஷ் வீரர்கள் உடைத்து, அடைத்து, நசுக்கி நிரப்பினார்கள்! பிறகு இரு முறை வெள்ளியால் அந்த ÔஅறைÕ நிரப்பப்பட்டது.
தங்கமும் வெள்ளியுமாக மொத்தம் 20 டன் எடை!

ஸ்பானிஷ் படையின் பேராசை தலைவிரித்தாட ஆரம்பித்தது! Ôமேலும் தங்கம் தேவை என்று ஆணையிட்டார் பிஸாரோ.

அரண்மனையில் நடுநாயகமாக இருந்த அட்வால்பாவின் சிம்மாசனத்தில் வேயப்பட்டிருந்த தங்கத் தகடுகளைக்கூடப் பிய்த்து எடுத்துக்கொண்டு வந்து பிஸாரோவின் காலடியில் இங்கா மக்கள் சமர்ப்பித்தனர்Õ என்கிறார் ஒரு வரலாற்று ஆசிரியர்.

இத்தருணத்தில் தப்பிச் சென்ற இங்கா வீரர்கள் படை திரட்டிக்கொண்டு, மன்னரை மீட்க வந்து கொண்டிருப்பதாகத் தகவல் ஒன்று வர (அது, பிஸாரோவே கிளப்பிவிட்ட வதந்தி என்றும் கூறப்படுகிறது!)... ஜூலை 26|ம் தேதி, 1533|ம் ஆண்டு அட்வால்பாவைச்
சங்கிலிகளால் பிணைத்து ஒரு மரத்திலிருந்து தொங்கவிட்டார் பிஸாரோ.

பிறகு, உடனே நீங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவேண்டும். மறுத்தால், உங்கள் உடலுக்கு அடியில் தீ மூட்டப்படும்Õ என்றார் பிஸாரோ.
அட்வால்பா அதற்கு ஒப்புக்கொண்டார். அவருடைய பெயரை ப்ரான்ஸிஸோ (பிஸாரோவின் முழுப்பெயர் பிரான்ஸிஸோ பிஸாரோ. முன்
பாதிதான் சூட்டப்பட்டது) என்று மாற்றப்பட்டது.

அதோடு விட்டிருக்கலாம்... ஆனால், Ôமன்னர் உயிரோடு இருக்கும்வரை புரட்சிகள் வெடிக்கும்Õ என்று முடிவு கட்டிய பிஸாரோ, தான்
இங்கா மக்களுக்குத் தந்த அத்தனை வாக்குறுதிகளையும் மீறி, வாளை உருவி இரக்கமில்லாமல் மன்னர் அட்வால்பாவின் தலையைச் சீவித்
தள்ளினார். ஸ்பானிஷ் வீரர்கள் துப்பாக்கிகளை உயர்த்திக் கரகோஷம் செய்தனர்!

ஸ்பெயின் நாட்டுக்கு இந்தச் செய்தி போனவுடன், அங்கே மக்கள் திடுக்கிட்டார்கள். Ôபிஸாரோ தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள்
எழும்பின. தான் இங்கா நாட்டிலிருந்து எடுத்து வரப்போகும் தங்கத்தின் எடை பற்றிய தகவலை பிஸாரோ, ஸ்பெயின் மன்னருக்கு
அனுப்பியதைத் தொடர்ந்து, ஸ்பெயின் அரசர் கப்சிப் என்று ஆகிவிட்டது வேறு கதை!

பிறகு, ஸ்பானிஷ் படை உற்சாகமாகவும் ஆவேசத்துடனும் இங்கா நாட்டில் புகுந்து விளையாடியது. நடுத்தெருவில் கட்டிப் போடப்பட்ட
ஆயிரக்கணக்கான ஆண்களின் வலதுகரமும் மூக்கும் சீவப்பட்டன. வெட்டப்பட்ட கரங்களைச் சேகரித்து Ôபிரமிட்Õ தயாரிக்கப்பட்டது.
எல்லாப் பெண்களின் மார்பகங்களும் வெட்டி எறியப்பட்டன. அறுநூறு குழந்தைகள் உயிரோடு மூட்டைகளாகக் கட்டப்பட்டு, அந்த
மூட்டைகளுக்குத் தீ வைக்கப்பட்டது!

அரண்மனையை நோக்கி ஸ்பானிஷ் வெறியர்கள் ஓட, க்யூரோவுக்லோ என்னும் ஒரு மகாராணி, தன்னைச் சூறையாடப் போகிறார்கள்
என்று பயந்து, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள உடல் முழுவதும் சாணத்தைப் பூசிக்கொண்டார்!

இதைப் பார்த்துக் கடுப்பான ஸ்பானிஷ்வீரர்கள் ஆவேசத்துடன் அவளைப் பிடித்துஇழுத்து வந்து, நடுவீதியில் கட்டிப் போட்டார்கள்.
ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான ஸ்பானிஷ் அம்புகள், ராணியின் உடலைச் சல்லடையாக்கியது!

சினிமா க்ளைமாக்ஸ் போல...எந்த ஹீரோவும் வந்து குதித்து,இங்கா மக்களையும் அவர்களுடைய கலாசாரத்தையும் காப்பாற்றவில்லை

என்பது குறிப்பிடத்தக்கது!

வன்முறையை ரசிக்கிற, அதேசமயம் வன்முறையைக் கண்டு அருவருப்படைகிற விசித்திரமானதொரு இனம் \ மனித இனம்! உணர்ச்சி
களுக்கிடையே நிகழும் இந்த ஓட்டப்பந்தயத்தில் அநேகமாக Ôவன்முறை ரசனைÕ ஜெயித்துவிடுகிறது. ÔÔஉலகெங்கும் வன்முறை தான்
அதிகம் ÔவிழாÕ எடுக் கிறது!ÕÕ என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் இகழ்ச்சி யோடு குறிப்பிடுகிறார்...

மனிதன் தன் ஆளுமையை உலகில் வெற்றிகரமாக நிர்ணயிக்க முடிந்ததற்கு முக்கியக் காரணம் \ தொலைவில் இருந்து மற்ற உயிரினங்
களைக் கொல்வதற்கு வசதியான ஆயுதங்களை அவன் தயாரித்துக் கொண்டதுதான். இந்த ஆயுதக் கண்டுபிடிப்புகள், பிற்பாடு தன்
இனத்தைச் சேர்ந்தவர் களையே அழிக்கவும் மனிதனுக்குப் பெரும் உதவியாக இருந்தது.

நெருக்கமாக நேருக்குநேர் மோதிக்கொள்ளும்போது ஏற்படும் தயக்கம், இரக்கம், கருணை போன்ற உணர்வு கள் தொலைவிலிருந்து
ஒருவரைக் கொல்லும்போது ஏற்படுவதில்லை! போரின் சோகம் என்னவென்றே தெரியாமல், வெள்ளை மாளிகையில் அமர்ந்து ÔஓகேÕ
என்கிற வார்த்தையை உதிர்த்தால்போதும் \ அணுகுண்டுகளை வீசி ஹிரோஷிமா, நாகஸாகி போல நகரங்களையே முற்றிலும் அழிக்கமுடியும் என்கிற அளவுக்கு இன்று ÔவசதிÕ பெருகிவிட்டதால்,
 
இரக்கத்துக்கு இடமேயில்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது

வில்லன்

unread,
Jul 30, 2009, 12:20:46 AM7/30/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் ரஷ்யப்படை ஆக்கிரமிப்பு செய்தபோது, ஒரு ரஷ்ய ராணுவவீரர் அங்கே நிகழ்ந்த
கொலைவெறியை வர்ணிக்கிறார் யாரையும் சுட்டுக்கொல்வது கொடூரமான, அருவருப்பான, மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்துகிற செயல்.

ஆனால், கொஞ்சநேரம் யுத்தத்தில் ஈடுபட்டு விட்டால், அந்த உணர்வுகள் அடியோடு அகன்றுவிடுகின்றன. கூட்டமாகத் துரத்திப் பலரைச்
சுட்டுத்தள்ளுவது மெள்ள மெள்ளப் பரவசமான செயலாக மாறிவிடுகிறது. உலக கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு திரும்பும்
விளையாட்டு வீரருக்கு ஏற்படும் கிளர்ச்சியோடுதான் நான் யுத்த களத்திலிருந்து கூடாரத்துக்குத் திரும்பினேன்!

உலகப் போரில் கலந்துகொண்டு பிற்பாடு வருத்த உணர்வோடு, Ôயுத்த டயரிÕ என்கிற அற்புதமான புத்தகம் எழுதிய க்ளென் க்ரே என்கிற
அமெரிக்க ராணுவவீரர், Ôகண்களில் மிருகத்தனமான ஆர்வத்தையும் வெறியையும் போரில் ஈடுபடும் எல்லா வீரர்களிடம் கண்டதாகÕக் குறிப்பிடு கிறார்.மற்றவர்களை மொத்தமாகக் கொல்வதற்கு வேண்டிய காரணங்களை மனிதன் சுலபமாக ஏற்படுத்திக் கொண்டான். அதில் முக்கியமானது

நாம் அவர்கள் என்கிற சிந்தாந்தம்! அதாவது, வேறு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்,!

ஏதென்ஸ் அரசு மெலோஸ் நாட்டு மக்களை அவர்கள் என்று கருதியதால்தான், அந்த நாட்டையே தயக்கமில்லாமல் அழிக்க முடிந்தது.
நாம்  அவர்கள் உணர்வு மனிதனின் உள்மனதில் எப்போதும் இருந்து வருகிற ஒன்று.

நம்முடைய குழந்தையின் வசதிக்காக மலையை நகர்த்த நாம் முயற்சிகள் எடுப்போம். அநாதரவாக அழுதுகொண்டிருக்கும் குழந்தைக்கு
உதவச் சுண்டுவிரலைக்கூடத் தூக்கமாட்டோம்! இரக்கம் கனிவு போன்ற நற்குணங்களுக்கு நாம் குறுகிய எல்லை கள்
வகுத்துக்கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.

அந்தச் சுயநல எல்லைக்குள் நம் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே உண்டு (இந்த எல்லையை விஸ்தரிக்க
முடியும் என்றும் அதற்கான குணநலன்களை மனிதன் வளர்த்துக்கொண்டு பழக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் சாக்ரடீஸ்,
அரிஸ்டாடில் போன்றவர்களிலிருந்து திருவள்ளுவர் வரை வலியுறுத்தியிருப்பது வேறு விஷயம்!).

லெபனான் நாட்டில் பயங்கரவாதிகளிடம் ஆறாண்டுகள் பணயக்கைதியாகச் சிறைப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட ப்ரியன் கீனன் என்பவர்,
தன் அனுபவங்களைப் பிற்பாடு புத்தகமாக எழுதினார். அதில் கொடூர மனப்பான்மை என்பது மனிதன் தீனிபோட்டு வளர்த்துக்கொள்கிற
ஒன்று. அதை விரும்பி ரசிப்பவர்கள் அரைமனிதர்களே. போகப்போக வன்முறை அவர்களை ஆள ஆரம்பித்துவிடுகிறது.
 
உண்மையில் இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை யில் வெற்றிடம் மிகுந்து இருக்கும். அர்த்தமுள்ள வாழ்க்கை அவர்களுக்கு இல்லாததால், அந்த
வெற்றிடம் வன்முறையால் நிரப்பப்படுகிறது.

ஒரு குழந்தை பயப்படும்போது போர்வையால் முகத்தை மூடிக்கொள் வது போல, மனிதன் தன்னுடைய பயங்களையும் குறைகளையும்
மூடி மறைக்க வன்முறையைப் போர்வை யாகப் பயன்படுத்துகிறான் என்கிறார் கீனன் (இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில்
பிரவேசித்த பல சைக்கோ கொலைகாரர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தது என்பது வாசகர் களுக்கு நினைவிருக்கும்!).
 
கொலைவெறி தொற்றுநோய் போலப் பார்வையாளர்களிடையேகூடப் பரவக்கூடியது. பிரெஞ்சுப் புரட்சியின்போது, பாரிஸ் நகரில் மன்னர் பதினாறாம் லூயி தலையை Ôகில்லடின்Õ மூலம் வெட்டித் தள்ளியபோது, அந்தத் தண்டனையைப் பார்க்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் நகரின் மையத்தில் கூடினார்கள். இதோ, அந்த நிகழ்ச்சியை வரலாற்று ஆசிரியர் ஒருவர் விவரிக்கிறார்...

தலை வெட்டப்பட்ட பிறகு மன்னரின் கழுத்திலிருந்து குபுகுபுவென்று ரத்தம் கொப்பளித்துப் பாய்ந்தது. அதைப் பார்த்து எண்பதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். நிறைய பள்ளிகளிலிருந்து கூட்டமாகச் சிறுவர்கள் (எக்ஸ்கர்ஷன் மாதிரி!)
அங்கே வந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் தொப்பிகளையும் புத்தகங்களையும் உயரத் தூக்கிப்போட்டுப் பிடித்து ஆரவாரித்தனர்.

மக்களில் பலர் முண்டியடித்துக்கொண்டு முன்னேறி, மன்னரின் ரத்தத்தை விரல்களால் ஆர்வத்தோடு தொட்டு முகர்ந்தார்கள். சிலர்
ரத்தத்தை நாக்கில் வைத்து ருசி பார்த்தனர். தண்டனையை நிறைவேற்றியவர், பெருந்தன்மையான புன்னகையுடன் லூயி மன்னரின்
தலையிலிருந்து முடியைப் பிய்த்து, ஆளுக்குக் கொஞ்சம் விநியோகித்தார்.
 
கடைசியில், அரட்டையடித்துக்கொண்டும் சிரித்தவாறும் திருப்தியோடு அனைவரும் தோளில் கைபோட்டவாறு திரும்பிச் சென்றதைப் பார்த்தபோது, ஏதோ கண்காட்சியிலிருந்து திரும்பியது போலத் தோன்றியது!Õ

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் சரணாகதி அடைந்து, அந்நாட்டுக்குள் அமெரிக்கப் படை வெற்றிகரமாக நுழைந்த பிற்பாடும்
தன்நாடு சரணாகதி அடைந்ததே தெரியாமல், காட்டுக்குள் சில ஜப்பானிய வீரர்கள் ஒளிந்துகொண்டிருந்தார்கள். இந்தத் தகவல்
தெரிந்தவுடன் அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தியவாறு, அந்த வீரர்களை உற்சாகமாகச் சூழ்ந்துகொண் டார்கள். உடனே
ஜப்பானியர்களைச் சுட்டுக் கொன்றிருக்கலாம்!

ஆனால், அமெரிக்க வீரர்கள் அவர்களை ஓடவிட்டு விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தார்கள். பதற்றத்துடன் ஜப்பானியர்கள் மரங்களைச்
சுற்றிச் சுற்றி ஓடி ஒளிய, விழுந்து விழுந்து சிரித்தவாறு அமெரிக்கர்கள் துரத்த... வெகுநேரம் கழித்தே அவர்களைச் சுட்டுக்
கொன்றார்கள்...
 
இந்தக் காட்டுத்தனமான வேட்டையை நேரில் பார்த்த பத்திரிகையாளர் ஒருவரின் விவரிப்பு இது!
 
இதில்நகைச்சுவைக்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை!Õ என்றும் அந்தப் பத்திரிகையாளர் வெறுப்புடன் குறிப்பிடுகிறார்.

வில்லன்

unread,
Jul 31, 2009, 12:12:32 AM7/31/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


ஒரு தனிப்பட்ட மனிதன் Ôசீரியல்Õ கொலைகாரனாக ஆகும்போது, அக்கம்பக்கத்தில் உள்ள அப்பாவி மக்கள் மட்டுமே உயிருக்குப் பயந்து நடுங்கி வாழ்வார்கள். சிலசமயம் ரத்த வெறி பிடித்தவர்கள் நாட்டுக்குத் தலைவனாக ஆவதுண்டு.
 
 அப்போது அக்கம்பக்கத்து நாடுகள் எல்லாம் கொலை நடுக்கத்துக்கு உள்ளாகின்றன. கொலைகாரத் தலைவர்களில் இரு வகையினர் உண்டு. சந்தேகம் வந்துவிட்டால் உற்றார், உறவினர் என்றுகூடப் பார்க்காமல் சித்ரவதை செய்து தீர்த்துக் கட்டிவிடுபவர்கள் ஒரு வகை.

நெருக்கமானவர்களிடம் விசுவாசமாக நடந்துகொண்டு, அதேசமயம் எதிரிகளிடம் இரக்கம் காட்டாமல், அவர்களுடைய ரத்தம் குடிக்கத் துடிப்பவர்கள் இன்னொரு வகை!

கிரேக்க மன்னன் அலெக்ஸாந்தர் இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை அலெக்ஸாந்தர் பெருந்தன்மையோடு நடத்தியது நமக்குத் தெரிந்ததே!

சிறைப் பிடிக்கப்பட்ட பிறகும் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டார் போரஸ்!

அதுவே மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் கையில் போரஸ் சிக்கியிருந்தால், கதையே வேறு!

ஆகவேதான், வரலாறு அலெக்ஸாந்தரை மாபெரும் வீரனாகவும் செங்கிஸ்கானைக் கொடுங்கோலனாகவும் சித்திரிக்கிறது!

ஒரு போர்வீரனின் குணநலன்களை, சிறுவயதில் அவன் வளர்க்கப்பட்ட முறைதான் நிர்ணயிக்கிறது. அரிஸ்டாடிலிடம் மாணவராக
இருந்தவர் அலெக்ஸாந்தர்!

செங்கிஸ்கானின் தந்தை, மற்றொரு மங்கோலியப் பிரிவின் தலைவனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சிறுவன்
செங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கி, சித்ரவதை செய்யப்பட்டான்.
 
பிற்பாடு, செங்கிஸ்கான் படை திரட்டிக்கொண்டு எதிரிகளோடு மோதியபோது, அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்களைச் சிறைப்பிடித்து, பிரமாண்டப் பானைகளில் கட்டிப் போட்டு, அடியில் தீ மூட்டி, நிஜமாகவே எதிரிகள் வறுத்தெடுத்தார்கள்!

இதையெல்லாம் பார்த்த செங்கிஸ்கானின் இதயம் இறுகிப் போய்விட்டது. நெப்போலியனின் அகராதியில் முடியாதது என்கிற
வார்த்தையே கிடையாது என்பார்கள். செங்கிஸ்கானின் அகராதியில் Ôஇரக்கம்Õ என்கிற வார்த்தை கிடையாது!

நெருப்புத் தணலாக இருக்கும் வன்முறைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ஆபத்தான காற்று, குறிப்பாக யுத்தத்தின்போதும்
அதற்கு முன்னும் பின்னும் அதிகமாக வீசுகிறது.

செங்கிஸ்கானைப் பொறுத்தவரை, அவன் மங்கோலியாவை ஆட்சி செய்த காலகட்டம் முழுவதுமே வன்முறைத் தீயின் ஜுவாலைகள்
ஓங்கி வளர்ந்து, எரிந்து கொண்டிருந்தது.

கி.பி.1162|ம் ஆண்டு பிறந்த செங்கிஸ்கானின் நிஜப்பெயர் தெமுசின். வயதுக்கு வந்தவுடன் தெமுசின் செய்த முதல் காரியம் | தன்
பெயரை மாற்றிக்கொண்டதுதான்! செங்கிஸ்கான் என்றால், முழுமையான போர்வீரன் என்று மங்கோலிய மொழியில் அர்த்தம்!

பல பிரிவுகளாக இருந்த மங்கோலிய குட்டி மன்னர்களை வாள்முனையில் ஒன்றிணைக்க அவன் இறங்கியதால், நாற்பது வயதுவரை
செங்கிஸ்கானைப் பற்றி வெளியுலகுக்குத் தெரியாமல் இருந்தது! செங்கிஸ்கான் படை மங்கோலியாவை விட்டு வெளிப்பட்டவுடன்,

முதலில் சிக்கிக்கொண்ட நாடு சீனா.
 
சீனாவின் உலகப் புகழ்வாய்ந்த கோட்டைச் சுவர் செங்கிஸ்கானுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை! அந்தச் சுவரைக் காத்த வீரர்கள் அனைவரையும் வெட்டித் தள்ளிவிட்டு, மங்கோலியப் படை சீனாவுக்குள் புகுந்து (1214|ம் ஆண்டுக்குள்!) வடசீனா முழுவதையும் கைப்பற்றிவிட்டது!
 
நாம் பேச்சுவாக்கில் வடஇந்தியா, தென்னிந்தியா என்று குறிப்பிடுவது போல், சீனாவிலும் வடசீனா, தென் சீனா என்று உண்டு. வடசீனா | இந்தியா அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு கொண்டது. ஏராளமான தனி ராஜ்யங்கள் அங்கேயும் இருந்தன!

சீனாவின் நடுவில் ஓடும் மாபெரும் மஞ்சள் நதிக் கரையோரம் வந்த பிறகுதான், மங்கோலியப் படை நின்று, சற்று மூச்சுவிட்டுக்
கொண்டது!

வடக்கு முழுவதும் ஆட்சி செய்த கின் இன அரசர், செங்கிஸ்கானின் முன் மண்டியிட்டார். அவரிடம் என் வீரர்களின் கோபத்தை
எப்படித் தணிக்கப் போகிறீர்கள்? இரண்டு இளவரசர்கள், ஐந்நூறு இளம்வீரர்கள் மற்றும் இளம்பெண்கள், மூவாயிரம் குதிரைகள்,
ஆயிரம் ஒட்டகங்களைக் கப்பமாக எங்களுடன் அனுப்பினால், உங்களை உயிரோடு விடுவேன்! என்றான் மங்கோலிய மன்னன்
இகழ்ச்சியாக.

எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு திரும்பிய மங்கோலியப் படை, மேற்குப் பக்கம் நோக்கிக் கிளம்பியது. போகிற வழியில் இருந்த
இந்தியாவுக்குள் செங்கிஸ்கான் நுழையாதது ஆச்சரியமே!
 
அதை இந்தியாவின் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.

வில்லன்

unread,
Aug 3, 2009, 12:19:22 AM8/3/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த ஒரு நாட்டின் எல்லைக்குச் சென்று எட்டிப் பார்த்த மங்கோலிய வீரர்கள், அங்கே வெட்டித்தள்ளப்பட்டார்கள். தகவல் தெரிந்தவுடன், செங்கிஸ்கானின் கண்கள் சிவக்க, மறுபடியும் ஒரு தூதர் மூலமாக, Ôஎங்களுக்குக் கீழ்ப்படிந்து விடுங்கள்Õ என்று எச்சரிக்கையை அனுப்பினான் அவன்.

செங்கிஸ்கானைப் பற்றி அவ்வள வாகத் தெரியாததாலும், மங்கோலிய நாட்டைக் குறைத்து மதிப்பிட்டதாலும் ஷா முகமது என்கிற மன்னரின் கவர்னர் ஒருவர், தூதுவனின் தலையை வெட்டி, அதை Ôபார்சலாகÕ செங்கிஸ்கானுக்குத் திருப்பி அனுப்பினார் (இந்தியா தப்பித்ததற்கு அதுகூடக் காரணமாக இருக்கலாம்!).

கோபம் தலைக்கேறிய செங்கிஸ்கான், Ôஇனி மற்ற நாட்டு மன்னர்களோடு இதுபோல பேரம் பேசிக் கொண்டிருக்கக்கூடாதுÕ என்று முடிவு செய்தது அப்போதுதான்! அதிலிருந்து எதிரிகளை மங்கோலியர்கள் நடத்திய விதமே மாறிவிட்டது!
 
ஐம்பதாயிரம் வீரர்கள் அடங்கிய மங்கோலியப் படை, ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து, அந்த நாட்டை அடியோடு கைப்பற்றிவிட்டது! முதல் வேலையாக, தூதுவனின் தலையை வெட்டியனுப்பிய கவர்னரை இழுத்துவரச் செய்த செங்கிஸ்கான், அவரையே குரூரப் புன்னகையுடன் உற்றுப் பார்க்க...

கவர்னர் Ôஎன்னை உடனே குத்திக் கொன்றுவிடுங்கள்...Õ என்று கதறினார். செங்கிஸ்கான் ÔநோÕ என்று தலையசைத்துவிட்டு தந்த தண்டனை, குரூரமானது!

செங்கிஸ்கான் பொறுமைக்குப் பெயர் போனவன் இல்லைதான். ஆனால், எதிரிக்கு என்னவிதமான தண்டனை தரவேண்டும் என்பதை பொறுமையாக குரூரமாகச் சிந்திப்பான்!

மங்கோலிய தூதுவனின் தலையை வெட்டித் தள்ளிய ஆப்கானிஸ்தானிய கவர்னரை செங்கிஸ்கான் மறக்கவில்லை என்பதுதான் முக்கியம்!

கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்ட கவர்னர், Ôஎன்னை உடனே கொன்றுவிடுங்கள்Õ என்று கதறக் காரணம் | சித்ரவதைக்குப் பயந்தே! அவரை வெறித்துப் பார்த்த மங்கோலிய மன்னன், Ôசேச்சே! உனக்கு வெள்ளியைப் பரிசாகத் தரப்போகிறேன்Õ என்றான் அடித்தொண்டையில்.

கூடவே, தன் தளபதிகளைப் பார்த்து, Ôஇங்கே அரண்மனையிலிருந்து எடுத்துவந்த வெள்ளியைக் கொதிக்கவைத்து உருக்கி, அந்தக் குழம்பை இவனுடைய கண், காது, பிறகு தொண்டைக்குள் ஊற்றுங்கள்Õ என்று ஆணையிட்டான். உடனே, கொடூரமான அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பிறகு, சமர்கண்ட் நகருக்குள் புகுந்த மங்கோலியப் படை, ஒரே நாளில் ஐம்பதாயிரம் பேரை வெட்டி வீழ்த்தியது. டெர்மெஸ் என்னும் ஊரில் செங்கிஸ்கான் முகாமிட்டபோது, ஒரு மூதாட்டி துணிவுடன் வந்து, Ôஎங்கள் ஊர்ப் பெண்களை நீங்கள் துன்புறுத்தாமல் இருந்தால், நான் உங்களுக்கு விசேஷமான பரிசு தருகிறேன்!Õ என்று மன்றாட...

செங்கிஸ்கான் ÔசரிÕயென்று தலையசைக்க... அந்தப் பெண்மணி, Ôநான் விலைமதிப்பு மிகுந்த வைரங்களை விழுங்கியிருக்கிறேன். என்னை வெட்டி, அவற்றை எடுத்துக்கொண்டு, ஊர்ப் பெண்களை விட்டுவிடுங்கள்!Õ என்றாள்.

செங்கிஸ்கானே எழுந்து, வாளை உருவி அந்த மூதாட்டியின் வயிற்றைக் கிழிக்க... உள்ளே வைரங்கள் இருந்தன! திரும்பித் தன் வீரர்களைப் பார்த்த மங்கோலிய மன்னன், Ôஒருவேளை இந்த ஊரில் எல்லாப் பெண்களும் வயிற்றில் வைரங் களைப் பதுக்கி வைத்திருப்பார்களோ?Õ என்று விஷமப் புன்னகையுடன் கேள்வி எழுப்ப...

உடனே மங்கோலிய வீரர்கள் வாட்களு டன் சென்று, அத்தனை பெண்களையும் ஆர்வத்துடன் வெட்டிச் சாய்த்து, வயிறு களைக் கிழித்துப் போட்டதுதான் மிச்சம்... வைரம் இல்லை! அதைத் தொடர்ந்து, உலகின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான ÔபுகாராÕவுக்குள் படை நுழைந்தது. அங்கே இருந்த பிரமாண்டமான மசூதிக்குள், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒளிந்து கொண்டிருந்தனர்.
 
 
முன்னணியில் செங்கிஸ்கான் செல்ல, மங்கோலியப் படை பின்தொடர... கையில் புனித குர்ஆனுடன் செங்கிஸ்கானை நோக்கிவந்த இமாம், உடனடியாக வெட்டித் தள்ளப்பட்டார். புத்தகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மசூதியின் உட்பகுதியில் மங்கோலியர்கள் நுழைவதற்குள்,

அத்தனை ஆண்களும் தங்கள் மனைவிகளைத் தாங்களே கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்கள். Ôகணவர்களின் முன்னிலையில், மசூதிக்குள்ளேயே பெண்களை மங்கோலியர்கள் பலாத்காரம் செய்யக்கூடும்Õ என்ற பயம்தான் காரணம்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் செங்கிஸ்கான் கைப்பற்றியாகி விட்டது. யுத்தத்தின் நடுவே, தளபதிகளாகப் பணியாற்றிய அவனுடைய மகன்கள் இருவர், தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிக் கேள்விப்பட்ட செங்கிஸ்கான், இரு மகன்களை அழைத்துப் பிரம்பை எடுத்து விளாசித் தள்ளிவிட்டு, பிறகு மூன்றாவது மகனை அழைத்து, Ôஇந்த இருவருக்கும் தலைமைத் தளபதியாக உன்னை நியமிக்கிறேன். இவர்கள் மறுபடியும் சண்டையில் ஈடுபட்டால், உன் உயிர் போய்விடும்!Õ என்று எச்சரித்தான்.
 
நம்மை எதிர்க்கும் நாட்டில், ஆண்கள் யாருமே உயிரோடு இருக்கக்கூடாது. சமாதானம் பேசும் நாடுகளில் உள்ள அனைத்து ஆண்களையும் அடிமைகளாக நாம் அழைத்துச்செல்ல வேண்டும்!Õ |இதுதான் செங்கிஸ்கான் போட்ட சுருக்கமான ஆணை!

துரை.ந.உ

unread,
Aug 3, 2009, 2:26:44 AM8/3/09
to thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
தலைவரே
 
மிகப்பெரிய செயல் ஒன்று உங்கள்மூலம் நிகழ்விருக்கிறது
அதற்கான அடித்தளம்தான் இந்த பதிவு
 
வாழ்த்துகள்

 
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

வில்லன்

unread,
Aug 4, 2009, 12:23:25 AM8/4/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பிய மங்கோலியப் படை, இன்றைய இரான், இராக் நாடுகளுக்குள் புகுந்து துவம்சம் செய்தது. போரில் ஈடுபட்ட செங்கிஸ்கானின் பேரன், அம்பு பாய்ந்து இறந்துபோனான். அந்த இளைஞனின் தந்தை (செங்கிஸ்கானின் மகன்) வேறொரு பகுதியில் போரில் ஈடுபட்டிருந்ததால், தகவல் தந்தைக்குப் போய்ச் சேரவில்லை!

மகனை அழைத்துவரச் சொன்ன செங்கிஸ்கான், Ôநீ உண்மையான போர்வீரன் என்றால், பிரதானத் தளபதியான என் ஆணை எதுவாக இருந்தாலும், அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். செய்வாயா?Õ என்று கேட்க... Ôசத்தியமாக!Õ என்று மகன் தலைநிமிர்ந்து சொல்ல,
 
சரி...

உன் மகன் போரில் இறந்துவிட்டான். நீ அதற்காக அழக்கூடாது என்பதுதான் என் ஆணை...Õ என்றான் செங்கிஸ்கான்!
 
மங்கோலியப் படைவீரர்கள் குளிக்கத் தேவையில்லைÕ என்பது செங்கிஸ்கானின் விசித்திரமான கொள்கைகளில் ஒன்று. காரணம்

இதுதான்| தோல் உடை, வியர்வை நாற்றம் ஒருபுறம், எதிரிகளின் கோட்டையை நோக்கிக் காற்று வீசும்போது தேர்ந்தெடுக்கப்படும் நேரம் இன்னொரு புறம்! மங்கோலியப் படை தொலைவில் வரும்போதே, Ôகும்Õமென்று துர்நாற்றம் நகருக்குள் வீசி, எதிரிகளைக் குலைநடுங்கச் செய்யும்!

வேகம் குறையாமல் தொடர்ந்து மங்கோலிய வீரர்கள் குதிரைகளை ஓட்டிச்செல்ல வேண்டும். நடுவில் ரெஸ்ட் எடுப்பதெல்லாம் செங்கிஸ்கானுக்குப் பிடிக்காது! மங்கோலியப் படை ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நூறு மைல்களையாவது கடக்கும்.

குதிரைகள் சோர்வடைந்து வேகம் குறையக்கூடாது என்பதால், ஒவ்வொரு வீரனுக்கும்| மாறிமாறி ஏறி அமர்ந்து பயணம்செய்ய வசதியாக, ஐந்து குதிரைகள் உண்டு! சீரான வேகத்துடன் படையைத் தளபதிகள் நடத்திச்சென்று, எதிரி நாட்டுக்குள் நுழையும்போது டாப் கியரில் குதிரைகளை ஓட்டுவார்கள்!இப்போதெல்லாம் காருக்குப் பின்னால் பிணைக்கப்பட்ட Ôவீடுகள்Õ  எல்லா முன்னேறிய நாடுகளிலும் வந்துவிட்டது.

இதை முதலில் கண்டுபிடித்தவன் செங்கிஸ்கான்தான்! படையை அவ்வப்போது நிறுத்தி, கூடாரங்கள் அமைத்து ஓய்வெடுப்பதால் நேரம் விரயமாகிறது என்று எடுத்துச்சொன்ன செங்கிஸ்கான், நகரும் கூடாரங்களைÕத் தயாரிக்க ஆணையிட்டான்!

பத்து அல்லது இருபது கட்டுமஸ்தான எருதுகள், அந்தக் கூடாரங்களை இழுத்துச் சென்றன. அத்தனை போர்த் திட்டங்களையும் மங்கோலிய மன்னன் மொபைல் கூடாரத்துக்குள்தான் தீட்டுவது வழக்கம்!

வழியில் உதடுகள் வறண்டாலோ, தாகம் ஏற்பட்டாலோ மங்கோலிய வீரர்கள், தாங்கள் பயணிக்கும் குதிரையின் கழுத்தருகே கத்தியால் ஒரு கீறல் போட்டு, வெளிப்படும் ரத்தத்தைச் சற்று உறிஞ்சிக் கொள்வார்கள்!

நெப்போலியன், ஹிட்லர்| இவர்களால்கூட ரஷ்யாவைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், ரஷ்யப் படைவீரர்களால் செங்கிஸ்கானின் ஆவேசமான வேகத்தைத் தடுத்துநிறுத்த முடியவில்லை! இத்தனைக்கும் இருபதாயிரம் வீரர்களை மட்டுமே பயன்படுத்தி, எண்பதாயிரம் ரஷ்ய வீரர்களைத் தோற்கடித்தான் செங்கிஸ்கான்!

பள்ளங்களில் பதுங்கிக் காத்துக்கொண்டிருந்த ரஷ்யப் படையைப் பார்த்துவிட்டுப் பயந்துபோனது போல நடித்து மங்கோலியப் படை திரும்பி ஓட... உற்சாகமடைந்த ரஷ்ய வீரர்கள் பள்ளத்திலிருந்து வெளிப்பட்டுத் துரத்த ஆரம்பித்தார்கள்.
 
திடீரென்று திரும்பியது,

மங்கோலியப் படை. திகைத்துச் சிதறிய ரஷ்ய வீரர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட ரஷ்யத் தலைமைத் தளபதியும் இளவரசருமான ஸ்டிஸ்லாவ், செங்கிஸ்கான் முன்பு நிறுத்தப்பட்டவுடன், Ôஎன்னதான் இருந்தாலும் ரஷ்யாவின் இளவரசர் ரத்தம் கீழே சிந்துவதை நான் விரும்பவில்லைÕ என்றான் செங்கிஸ்கான் இகழ்ச்சியாக.
 
அழகிய ரஷ்யக் கம்பள விரிப்புகளைக் கொண்டுவந்து, அதற்குள் இளவரசரைப் படுக்கவைத்துச் சுருட்டி, ஏற்கெனவே மூச்சுத் திணறிக்கொண்டிருந்த இளவரசரை, மங்கோலியத் தளபதிகள் எட்டி உதைத்தே கொன்றார்கள்!

பிற்பாடு மங்கோலியாவுக்குத் திரும்பிய செங்கிஸ்கான், 1227|ம் ஆண்டு அறுபத்தைந்தாவது வயதில் நோய்வாய்ப்பட்டுச் சாதாரணமாக இறந்துபோனான். இன்றும்கூட தொல்பொருள் ஆய்வாளர்கள், அவன் கல்லறையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

போரில் வன்முறை தவிர்க்க முடியாததுதான். ஆனால், அளவுக்கு மீறிய கொலைவெறியைப் போரில் காட்டினான் செங்கிஸ்கான்.இரண்டு கோடி பேருக்குமேல் மங்கோலியர்களின் வாட்களுக்கும் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் இரையானார்கள்!
 
இதற்குக் காரணமாக இருந்ததால், வரலாற்று ஆசிரியர்கள், வன்முறை மிகுந்த மன்னர்கள் பட்டியலில் செங்கிஸ்கானுக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறார்கள்!

பண்டைய காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை மிக மோசமான, அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களை மக்கள் அவ்வப்போது அரியணையில் அமர்த்திவிடுவது வரலாற்றின் சாபக்கேடு! 
 
கிறுக்குப் பிடித்த கொலைகாரர்கள், ஏராளமான அதிகாரங்களோடு ஒரு நாட்டுக்கே தலைவனாக ஆனால், மக்களின் கதி என்னவாகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!

இப்படிப்பட்ட வக்கிரமான, கொடூரமான மிருகங்கள் Ôஅரசன்Õ என்ற பெயரில் விரசம் புரிந்திருப்பதை
வரலாறு நெடுக நம்மால் காணமுடியும்!

அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும். அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் அடியோடு கெடுத்துவிடும் என்று ஆக்டன் பிரபு கூறிய பொன்மொழி உலகப் பிரசித்திப்பெற்றது.

ஆனால், சர்வாதிகாரிகள் Ôஅளவுக்கு மிஞ்சிய அதிகாரம் மிகமிகப் பரவசமானதுÕ என்று அனுபவப்பூர்வமாக நம்பினார்கள். ரோம் சாம்ராஜ்யம் அழியக் காரணமாக இருந்தது, இந்த அதிகார போதைதான்! இருப்பினும், இன்றுவரை பல நாடுகள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை!
 
ஆகவேதான் Ôவரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரே பாடம் |

வரலாற்றிலிருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே!Õ என்றார் ஒரு வரலாற்றாசிரியர்!

வில்லன்

unread,
Aug 5, 2009, 12:22:01 AM8/5/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

செங்கிஸ்கான் கொடூரமானவன் என்றாலும், தன்னுடைய மங்கோலிய மக்களை அவன் துன்புறுத்த
வில்லை. அந்த மன்னனைப் பற்றி இன்றளவும் மங்கோலிய மக்கள் பெருமித உணர்வு கொண்டிருக்கிறார்கள்!

எதிரிகளின் நாட்டையே அழிக்கும் கொலைவெறி செங்கிஸ்கானிடம் இருந்தாலும், அவனை
வக்கிரமான சைக்கோ என்று சொல்ல முடியாது. கல்வியறிவும் சற்றே நிதானமும் மட்டும் இருந்திருந்தால், அலெக்ஸாந்தருக்கு இணையாக வரலாறு செங்கிஸ்கானையும் ஏற்றுக் கொண்டிருக்கும்!
 
செங்கிஸ்கான் இறந்தபோது மங்கோலிய மக்கள் அழுதார்கள்.

அதேசமயம், இவன் எப்போது செத்து ஒழிவான்? என்று நாட்டு மக்கள் ரகசியமாகப் பிரார்த்தனை செய்யும் அளவுக்கு வெறியாட்டம் போட்ட மன்னர்களும் நிறையப் பேர் உண்டு. அவர்களில் முன்னணியில் நிற்பவன்,
ரோம் நாட்டை ஆண்ட கலிக்யூலா!

எந்தவொரு சர்வாதிகாரி இறக்கும்போதும், அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள், அடுத்த கட்டத்தைப் பற்றி எச்சரிக்கையோடு செயல்படாமல் தேமேயென்று இருப்பது வரலாற்றின் விசித்திரமான சோகங்களில் ஒன்று.

ரோம் நாட்டை ஆண்டு வந்த சர்வாதிகாரியான டைபீரியஸ் கி.பி.37|ல் செத்துப் போனவுடன், அடுத்தபடி யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பது பற்றி மக்கள் கவலைப்படவில்லை! கலிக்யூலா என்கிற பெயரில் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதை அவர்கள் சற்றும் உணராமல், டைபீரியஸ் மரணத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதிலேயே குறியாக இருந்தார்கள்!

கடைசிக் காலத்தில் டைபீரியஸ் வெறி பிடித்த கிழ அரசனாக ஆகிப்போயிருந்தான். கொலைபயம் காரணமாகத் தனக்கென்று சிறு அரண்மனையைக் கட்டிக்கொண்டு வெளியே தலைகாட்டாமல், உள்ளே சகல விதமான செக்ஸ் வக்கிரங்களிலும் ஈடுபட்ட அவன்,

குறிப்பாகச் சிறுவர்களையும் சிறுமி களையும் தன் காமப் பசிக்காக விதவிதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். இதுகண்டு அவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களேகூடக் கடுப்பாகிப் போனார்கள்.

டைபீரியஸுக்கு செக்ஸ் வக்கிரங்களில் அதீதக் கற்பனாசக்தி வேறு இருந்தது! ஸ்விம்மிங் பூல் ஒன்றை உருவாக்கி, சிறுவர்களை மீன்வேடம் தரிக்கவைத்து, அதில் நீச்சலடிக்க வைப்பான் டைபீரியஸ். பிறகு தண்ணீருக்குள் இறங்கி, அங்கே சிறுவர்களுடன் விதவிதமான பாலுணர்வு விளையாட்டுகளில் ஈடுபடுவான்.

ஓரிரவு, டைபீரியஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவனுடைய விசுவாசமான நண்பன் ஒருவனே தலையணையால் மன்னன் முகத்தை மூடி, அதன்மீது ஏறி அமர்ந்துகொள்ள, மூச்சுத் திணறிச் செத்துப்போனான் அந்த சர்வாதிகாரி!

இறப்பதற்கு முன்பு, முத்தாய்ப்பான ஒரு கொடிய காரியத்தைச் செய்யத் தவறவில்லை டைபீரியஸ். அது, தன் மருமகன் கலிக்யூலாவை அடுத்த வாரிசாக நியமித்தது!
 
எனக்குப் பிறகு கலிக்யூலா ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்கள் அத்தனை பேரும் Ôடைபீரியஸ் எவ்வளவு நல்ல
மன்னன்Õ என்று என்னைப் பாராட்டுவார்கள்!ÕÕ என்று வஞ்சகச் சிரிப்புடன் டைபீரியஸ் நெருக்கமான சிலரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு! டைபீரியஸ் சொன்னது உண்மையாகப் போனது, ரோம் நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம்!

இத்தனைக்கும் ஜூலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன் கலிக்யூலா. அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப்
பேரன். கலிக்யூலா என்பதுகூடப் புனைப்பெயர்தான். நிஜப்பெயர் கேயெஸ் சீசர் ஜெர்மானிகஸ்!

யுத்தங்கள் நடந்தபோதெல்லாம் ரோம் நாட்டு ராணுவ வீரர்களுடன் தானும் போவான் சிறுவன்கலிக்யூலா
ஜெர்மானிகஸ். ரத்தமும், கொலையும், சிதறிய உடல்களும் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அப்போது ரோம் வீரர்கள் இந்தக் கிறுக்குப் பிடித்த குட்டி இளவரசனுக்கு, போர்வீரர்கள் அணிவது
போலவே தனி Ôபூட்ஸ்Õ தயாரித்துக்கொடுத்தார்கள். ÔகரிகேÕ என்றால் லத்தீனில் Ôசிறிய பூட்ஸ்Õ என்று அர்த்தம். Ôகலிக்யூலாÕ என்று பெயர் வந்தது இப்படித்தான்!

செக்ஸ் விஷயத்தில் பிஞ்சிலேயே பழுத்தவன் கலிக்யூலா. முதன்முதலில் கலிக்யூலா Ôகாதல் வயப்பட்டதுÕ அவனுடைய சொந்த சகோதரியிடம்! உண்மையில் வக்கிரம் பிடித்த கலிக்யூலா, தன் சகோதரிகள் யாரையும் விட்டுவைக்கவில்லை!

மக்களைப் பொறுத்தவரை, கலிக்யூலா ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாகத் தப்புக்கணக்குப் போட்டு, அவன் பட்டம் கட்டிக் கொண்டதை அட்டகாசமாகக் கொண்டாடினார்கள்.

நகரத்தின் மையத்திலேயே ஒரு லட்சத்து அறுபதாயிரம் மாடுகள் வெட்டப்பட்டு, சாமானிய ரோமானியர்களுக்காக இலவச விருந்து தயாரிக்கப்பட்டது. கலிக்யூலா, ராணுவத் தளபதிகளை மறக்காமல் கூப்பிட்டனுப்பி, பொன்னும் பொருளும் வாரி வழங்கினான்.

மாமன் டைபீரியஸின் இறுதி ஊர்வலத்தைப் பிரமாண்டமாக நடத்திய கலிக்யூலா, மக்கள் தந்த பதவியை வகிக்கத் தனக்குத் தகுதி உண்டா என்கிற ரீதியில் சொற்பொழிவாற்றி, பாதி உரையில் கலங்கிக் கண்ணீர்விட்டு, மக்களையும் உணர்ச்சிப் பெருக்குடன் அழவைத்தான்!

கொடூரமான ஓநாய் விடுகிற முதலைக் கண்ணீர் அது என்பது புரியாத மக்கள், அரண்மனைப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கிவந்த கலிக்யூலா மீது பூமாரி பொழிந்து கரகோஷம் செய்தார்கள்.

Ôஎன்னுடைய பிரஜைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நகரத்தில் மக்கள் பொழுதுபோக்க, கலகலப்பான விஷயங்கள் குறைவாக இருக்கிறது. முதலில் இந்தக் குறையை நான் போக்க வேண்டும்Õ என்று அலுத்துக் கொண்ட கலிக்யூலா, ராணுவத்தில் ஒரு பிரிவை உண்டாக்கினான். அந்தப் பிரிவின் வேலை காடுகளுக்குச் சென்று சிங்கம், புலி, யானைகள், கரடிகளைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவது!
 
அந்த மிருகங்களைப் பயன்படுத்தி, மக்களுக்காக சர்க்கஸ்களைத் துவக்கிய முதல் மன்னன் கலிக்யூலாதான். ஆனால்,
அது கொடூரமான சர்க்கஸ்!

வில்லன்

unread,
Aug 6, 2009, 12:27:09 AM8/6/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
ரியாலிடி டி.விÕ&யைப் போல ஸ்டேடியத்துக்குள் கரடிகளையும் சிங்கங்களையும் விட்டு, வீரர்கள் ஈட்டிகளுடன் அவற்றை வேட்டையாடினார்கள். சர்க்கஸ் முடிந்த பிறகு, மைதானத்துக்குள் மக்கள் இறங்கி ஓடிக் கும்மாளம் போடலாம்! அங்கே மது ஆறாக ஓடியது. விலைமாதுக்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடி, மக்களைக் குதூகலிக்க வைத்தார்கள்.
 
இந்தக் கலாட்டாவுக்கு நடுவே, திருமணமாகிப் போயிருந்த கலிக்யூலாவின் மூன்று சகோதரிகளின் கணவர்களும் அடியாட்களால் அடித்துத் துரத்தப்பட்டு, சகோதரிகள் கலிக்யூலாவின் படுக்கை அறைக்குக் கொண்டு வரப்பட்டதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!
 
ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், சர்வாதிகாரிகளுக்கு நண்பர்களே கிடையாது! மனம்விட்டுத் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள் என்று யாருமே இல்லாமலிருப்பது யாருக்குமே மனோதத்துவ ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பதவியில் வேறு அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்!

நெருக்கமாக வளையவரும் Ôவிசுவாசிகளின்Õ மனதில் என்ன ஓடுகிறது என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுவதால், சர்வாதிகாரியின் ஆழ்மனதை ஒருவித ஆத்திரம் அரித்துக்கொண்டேயிருக்கும். அதைச் சமாளிக்க, அதிகாரத்தை மட்டுமே அதீதமாகப் பயன்படுத்த அவர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்!

எந்த நிமிடத்திலும் தங்கள் பதவியும் உயிரும் போய்விடக் கூடும் என்கிற அச்சம் காரணமாக, மந்திரிப் பிரதானிகள் யாருமே எந்த மாற்றுக் கருத்தையும் வெளியிடவும் மாட்டார்கள். தான் அபத்தமாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறோமோ என்பதுகூடத் தெரியாத பரிதாப மான நிலை எதேச்சாதிகாரிகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது!

அதேசமயம், சர்வாதிகாரிகள் முட்டாள்கள் அல்ல. முட்டாள் மன்னர்கள் யாருமே சில வாரங்கள்கூட அரியணையில் தாக்குப் பிடித்ததில்லை என்கிறது வரலாறு. ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பது உண்மை. அதற்காகச் சொக்காயைக் கிழித்துவிட்டுக் கொள்பவர்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது!

அப்ஸெஷன், சாடிஸம், பர்வெர்ஷன் போன்றவையும் மனநோய்களே. பல சீரியல் கொலைகாரர்களைப் போல, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மோசமான அனுபவங்கள் சர்வாதிகாரிகளுக்கும் உண்டு!

மனிதனின் குழந்தைப் பருவத்தில் ஆறுதலான, சாமான்ய அனுபவங்கள் எதுவும் இல்லாமல்
போய் விடுவது ஆபத்தான விஷயம். பிற்காலத்தில், உள்ளே இருக்கும் மிருகம் கொழுத்து
வளர்ந்து, ஆட்டம் போட இதெல்லாம் தீனியாக அமைகிறது.

சுறா நீந்திக்கொண்டே இருந்தாக வேண்டும். நீந்துவதை நிறுத்தினால் மூழ்கிவிடும் என்பதைப்
போல, சர்வாதிகாரிகள் குரூரமாக எதையாவது திட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மூளை நிதானம் அடைந்தால், சுயபச்சாதாபம்தான் மிஞ்சும்! ஆகவே Ôஅதிகார மதுÕ
அவர்களுக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது!
 
கலிக்யூலா அவ்வப்போது மந்திரிப் பிரதானிகளைப் பார்த்து, Ôநான் ஒருமுறை தலையசைத்தால் போதும். உடனே உங்கள் அத்தனை பேர் தலைகளும் கீழே உருளும். இது எப்படியிருக்கு?Õ என்று இகழ்ச்சியாகச் சொல்வது
வழக்கம்!

ஒரு நாள் தர்பாரில் Ôஉங்கள் யாரிடமும் நான் அன்பை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் பயந்து நடுங்கினால், அதுவே எனக்குப் போதும்!Õ என்று கர்ஜித்தான் கலிக்யூலா. அதற்கேற்ப, அவன் எதைச் சொன்னாலும், செய்தாலும் மௌனமாக நிற்பதற்கு எல்லோருமே பழகிக்கொண்டார்கள்!Ô
 
சில சமயங்களில் சாமான்யர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகிறார்கள். வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிறார்கள். நான் அரண்மனைக்கு உள்ளேயே இருந்துகொண்டு, உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது!Õ என்று ஒருமுறை அலுத்துக்கொண்ட கலிக்யூலா, தானும் இரவு நேரங்களில் Ôநண்பர்களுடன்Õ சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்து, அட்டகாசம் போட ஆரம்பித்தான்.

கலிக்யூலா ஏராளமாக கேளிக்கை விடுதிகளை திறந்து வைத்தான். எல்லா கேளிக்கை விடுதிகளிலும் Ôமன்னர் வருகிறாராமா?Õ என்று ஆவலோடு விசாரிக்க ஆரம்பித்தார்கள். எல்லோர் முன்னிலையிலும் பெண்களை நிர்வாணப்படுத்தி, உடலுறவு கொள்வது கலிக்யூலாவுக்குப் பிடித்தமான ஒன்று!
 
அவன் செயல்படும்போது மற்றவர்கள் சூழ்ந்து நின்று கரகோஷம் செய்வது, அந்த வெறி பிடித்தவனின் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. திடீரென்று, Ôஇந்தக் கேளிக்கைக் கூடத்தில் வசதிகள் சரியாக இல்லை. விலைமாதுக்களின் ஒத்துழைப்பும் போதாதுÕ என்று குற்றம் சாட்டி, இரவோடு இரவாக அந்தக் கட்டடத்துக்கே தீ வைக்கச் சொல்வான் கலிக்யூலா!

Ôஎல்லோரோடும் கலந்து பழகுகிறேன் என்பதால், என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது இல்லையா? எப்போதும் ஒரு பயம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி!Õ என்று இதற்கு விஷமச் சிரிப்போடு காரணம் சொல்வான் அவன்.
 
இதனால், கலிக்யூலா வருகிறான் என்றாலே, விசேஷமான வரவேற்பு ஏற்பாடுகள் அவசரமாக,
நடுக்கத்துடன் நடக்கும்!

வில்லன்

unread,
Aug 7, 2009, 12:54:42 AM8/7/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


கி.பி.38. அரியணையில் அமர்ந்து ஒரு வருடம் ஆனபோது, திடீரென்று கலிக்யூலாவுக்குக் காய்ச்சல் வந்து படுக்கையில் வீழ்ந்தான்.

மன்னர் பிழைப்பது சந்தேகம்Õ என்று நாட்டில் வதந்திகள் பரவின. பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்று, அரண்மனை வெளியே நின்று கலிக்யூலாவுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

யாரும் வேலைக்குச் செல்லாததால், தொடர்ந்து விடுமுறை! சர்ச்சுகள், கேளிக்கைகள் எல்லாம் நின்று போனது. ஒரு வாரம் கழித்துச்சரேலென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கலிக்யூலா, எனக்கு ஜுரமெல்லாம் வரவில்லை. மறுபிறவி எடுப்பதற்காகப் படுத்திருந்தேன்.

இப்போது மறுபிறவி எடுத்துவிட்டேன் | கடவுளாக!Õ என்று இரு கரங்களையும் உயர்த்தி கம்பீரமாக அறிவித்தான்.

சாத்தானாக! என்று அவன் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்! ஏனெனில், அதற்குப் பிறகு கலிக்யூலாவின் கொடூரம் பலமடங்கு அதிகமாகிவிட்டது..!

தற்கால மனோதத்துவ அறிஞர்களின் கவனத்தையும் கவர்ந்தவன் கலிக்யூலா! Ôநிச்சயமாக மனநிலை பாதிக்கப்பட்டவன் அவன் என்கிறார்கள் அவர்கள்.
 
மக்கள் எச்சரிக்கையாக இல்லாமல், வெறுமனே உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் ஒருவனை அரியணையில் அமர்த்தி வைத்து ஆர்ப்பரித்தால், அதன் விளைவுகள் என்னவாகும் என்பதற்கும் தகுதியில்லாத ஒருவனிடம் அத்தனை அதிகாரத்தையும் தூக்கித்தந்தால்,
 
அவன் எந்தளவுக்குக் கிறுக்குப் பிடித்த கொடுங்கோலனாக ஆவான் என்பதற்கும் கலிக்யூலா கச்சிதமான உதாரணம்!

தன்னைக் Ôகடவுள்Õ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, கலிக்யூலாவின் கிறுக்குத்தனம் எல்லை மீறிப் போய்விட்டது. Ôமீண்டும் சர்க்கஸ் கேளிக்கைகளை இன்னும் கோலாகலமாக நடத்துங்கள்Õ என்று ஆணையிட்டான் அவன்.
 
எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சிங்கச் சண்டையையும் வீரர்களின் வாட்போரையும் பார்த்துக் கொண்டிருப்பது? போகப் போக மக்களுக்குப் போரடிக்க ஆரம்பித்தது!

கோலாகல வீண்செலவுகள் காரணமாக, கஜானாவில் பணம் கரைய ஆரம்பித்தது. சிங்கம், புலியோடு சண்டை போடும் வீரர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்டதால், பல வீரஇளைஞர்கள் விலகிக்கொண்டார்கள். கடைசியில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இறைச்சி
வாங்கக்கூடப் பணமில்லை!

நாற்பதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஸ்டேடியத்தில், பட்டினி காரணமாக வத்தலாக மாறிய சிங்கங்களும் தொந்தியோடு கிழ வீரர்களும் அலுப்போடு மோதிக் கொள்வதைப் பார்த்த மக்கள் கிண்டலாக ஒழிக... ஒழிக! என்று குரல் கொடுத்தார்கள். இதைப் பார்த்து கலிக்யூலாவின் கண்கள் சிவந்தன.

உடனே மக்களைக் கலாட்டா பண்ணத் தூண்டிவிட்டதாக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கூச்சல் போட்ட இவர்களுடைய நாக்குகளைத் துண்டியுங்கள். பிறகு, இவர்களைச் சிங்கங்களுக்கு இரையாக ஸ்டேடியத்துக்குள் தூக்கிப் போடுங்கள்!Õ என்று ஆணையிட்டான் மன்னன்.

நாக்குகள் அறுக்கப்பட்டு, ரத்த வாசனையுடன் மைதானத்தில் விடப்பட்டவர்களைப் பார்த்துச் சப்புக் கொட்டிய சிங்கங்கள், பசியோடு அவர்கள்மீது பாய்ந்து குதறிக்கொன்று தின்றன. முதன்முறையாக மக்கள் திகைத்தது அப்போதுதான்!

Ôமிருகங்களுக்கு இறைச்சி வாங்கக்கூடப் பணமில்லைÕ என்றதற்கு, Ôஅதனாலென்ன... இறைச்சிதானே வேண்டும்? சிறையிலிருக்கும் கைதிகளைத் தினமும் மிருகங்களுக்குத் தீனியாகப் போடுங்கள்!Õ என்று ஐடியா தந்தான் கலிக்யூலா.

அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு அடியாட்கள் கடைவீதிகளில் இப்போது வசூல் செய்வதைப் போல, கலிக்யூலாவின் பிரத்தியேகக் குண்டர் படை, வியாபாரிகளையும் செல்வந்தர்களையும் மிரட்டி வசூல் செய்ய ஆரம்பித்தது.
 
அவர்களை அனுப்பியதே கலிக்யூலாதான்!

ஒரு நாள் தளபதி ஒருவன், Ôசிவப்பு விளக்குப் பகுதிகளில்கூட வசூல் செய்து வருகிறோமாக்கும்!Õ என்று மன்னனிடம் சொல்லித் தொலைக்க... திடீரென்று கலிக்யூலாவின் முகம் குரூரமாக மலர்ந்தது.
 
அன்றிரவு,
 
தன் சகோதரிகளைக் கூப்பிட்டு அனுப்பினான் அவன்.

நிதி நிலைமை மோசமாக இருப்பது உங்களுக்குத் தெரியும். எனக்காக எல்லோரும் அலைந்து உழைத்துப் பணம் வசூலித்து வர, நீங்கள் சும்மா சாப்பிட்டுவிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
 
ஆகவே, இனி உங்களுக்கும் வேலை தரப்போகிறேன்!Õ என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு உறுமிய அவன், இனி நீங்களும் பணக்கார விருந்தாளிகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும்.
 
அதற்குப் பணம் வசூலிக்கப் போகிறேன்! என்றான்.

மறுநாள் அவசரமாக அவையைக் கூட்டி, இந்த வக்கிரமான திட்டத்தை அவன் அறிவிக்க... எல்லோரும் திடுக்கிட்டுத் திகைத்துப் போனார்கள். ஆனால், கலிக்யூலாவோ Ôஎன் சகோதரிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால்,
 
ஓரிரவுக்கு ஆயிரம் பொன் நாணயங்களை எனக்குத் தரவேண்டும். என் சகோதரிகள் ராஜவம்சத்தினர் அல்லவா!Õ என்று கூச்சமில்லாமல் கட்டளை பிறப்பித்தான்.

ஒவ்வொரு இரவும் யாரெல்லாம் அந்தப்புரத்துக்கு வரவேண்டும் என்ற பட்டியலையும் அவன் போட்டுக் கொடுத்துவிட்டான்
 
 
(தொ
         ட
             ரு
                   ம் )
  

வில்லன்

unread,
Aug 10, 2009, 1:20:00 AM8/10/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்


அறிவிப்பு ஒரு கட்டாய ஆணையாகிவிட்டது!
 
சில நாட்கள் கழித்து எல்லா வி.ஐ.பி|க்களையும் மீண்டும் அழைத்த கலிக்யூலா, Ôஇனி உங்கள் மனைவி, சகோதரிகள், மகள்களையும் அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும். இதை நீங்களாகச் சொல்வீர்கள் என்று பார்த்தால், கம்மென்று இருக்கிறீர்கள்!
 
யார் யாருடன் இன்பமாக இருக்கலாம், அதற்கான தொகை எவ்வளவு எனக்குத் தரவேண்டும் என்பதெல்லாம் நாளை அறிவிக்கப்படும் என்றான் வெறிச் சிரிப்புடன்!

வயதான ஒரு அமைச்சர் மட்டும் மன்னனின் அருகில் வந்து நின்று, மிகுந்த நடுக்கத்துடனும் தயக்கத்துடனும் தங்களை நாட்டு மக்கள் எல்லோருமே ரொம்பத் தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது.
 
ஏனெனில், மன்னரை யாராவது மனதுக்குள் தவறாக நினைத்தால்கூட என்னால் தாங்க முடியாதுÕ என்று குரலைத் தாழ்த்திச் சொன்னார்.

அவரைப் பரிதாபமாகப் பார்த்துப் புன்னகைத்த கலிக்யூலா, நான் கடவுள் என்பதை மறந்துவிட்டீர்கள். கடவுள் செய்வது எதுவும் பாவகாரியம் இல்லை என்கிற அடிப்படை விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையே!Õ என்று எடுத்துச் சொன்னான்.

தான் ÔகடவுளாகÕ ஆனதை அவையில் இருக்கும் முக்கியமான ஒருவரே மறந்துவிட்டாரே என்பதால், நாடெங்கும் அதற்காக விழா எடுக்கச் சொன்ன கலிக்யூலா, கூடவே தலைநகரில் இருந்த எல்லா (முந்தைய) மன்னர்களின் சிலைகளின் தலைகளையும் உடைத்து, கழுத்துக்குமேல்
தன் தலையைத் தயாரித்து வைக்கச் சொல்லி ஆணையிட்டான்.

ரோம் நகரில் தலைவர்களுக்குச் சிலைகள் வைப்பது ரொம்ப கால வழக்கம் என்பதால், ஏராளமாக நின்றிருந்த சிலைகளை நோக்கி, நிறைய சிற்பிகள் களத்தில் குதிக்கவேண்டி வந்தது! தலைநகரம் முழுவதும் உளி, சுத்தியல் சத்தங்கள் மயம்!

மறுநாள் அவை கூடியபோது கலிக்யூலா, Ôஎல்லா ஐடியாக்களையும் நானே தரவேண்டியிருக்கிறது. எதற்கும் பிரயோஜனமில்லாமல் பதவியில் மட்டும் கம்பீரமாக உட்கார உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?Õ என்று எகத்தாளமாகச் சீறிவிட்டு,
 
உச்சக்கட்டமாகத் தான் மிகவும் செல்லமாக வளர்த்த Ôஇன்ஸிடேட்டஸ்Õ என்னும் குதிரையை அலங்காரம் செய்து, தர்பாருக்குக் கொண்டுவரச் சொன்னான்.

மீண்டும் அங்கே ஓர் அறிவிப்பு... உங்கள் எல்லோரையும்விட என் குதிரை புத்திசாலி! ஆகவே, என் அருமை இன்ஸிடேட்டஸை இன்றிலிருந்து கான்சல் பதவியில் அமர்த்துகிறேன்! (Ôகான்சல்Õ பதவி என்பது, நம்ம மத்திய காபினெட் அமைச்சருக்கு இணையானது!)

வாசகர்களே! இதுவும் இன்னொரு அத்தியாயம் என்கிற நினைப்புடன் சாதாரணமாகப் படிக்க ஆரம்பித்த உங்களுக்கு, Ôஇப்படியும் ஒரு மன்னனா?Õ என்கிற திகைப்பும் அருவருப்பும் தற்போது ஏற்பட்டிருக்கும்!

Ôஇந்தக் கொடுங்கோலனின் ஆட்சி முடிவுக்கு வந்ததா, இல்லையா?Õ என்று எரிச்சலுடன் நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது!

கலிக்யூலாவுக்கு காஷியஸ் செயிரீயா என்பவன் பிரதான மெய்க்காவலனாக இருந்தான். விசுவாசமாகப் பணிபுரிந்த அவனுடைய மனதில் வெறுப்பு துளிர்விட ஆரம்பித்தது. ஒரு நாள், செய்யாத குற்றத்துக்காக இளம் பணிப்பெண் ஒருத்தியை கலிக்யூலா இழுத்துவரச் செய்து,
சித்ரவதை செய்யச் சொன்னான்.
 
அரண்மனையில், சில வீரர்கள் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரப்படுத்தி, விதவிதமாகச் சித்ரவதை செய்தனர். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையையும் அவளுடைய கதறலையும் கேட்ட செயிரீயா, திடீரென்று மனமுடைந்து அழுதுவிட்டான்.

அன்றிலிருந்து கலிக்யூலா அவனைப் பார்க்கும்போதெல்லாம் Ôஅழுகிற பாப்பா!Õ என்கிற ரீதியில் எல்லோர் முன்னிலையிலும் தொடர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தான். Ôஒவ்வொரு நாளும் உனக்கு இதுமாதிரி ஒரு பெயர் சூட்டப்போகிறேன்!Õ என்றும் டபாய்த்தான்.

கி.பி. 41|ம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் ஓர் இரவு... சிறுவர்கள் நாடகம் ஒன்று அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டது (இதுபோன்ற நாடகங்களிலிருந்துதான் சிறுவர்களைத் தன் காம விளையாட்டுகளுக்குத் தேர்ந்தெடுப்பான் கலிக்யூலா!).
 
 எல்லோரும் தயாரானவுடன் கலிக்யூலாவின் பிரத்தியேக அறைக்குள் நுழைந்த செயிரீயா, Ôசிறுவர்கள் வந்துவிட்டனர்Õ என்று பணிவோடு அறிவிக்க...

கலிக்யூலா ஆர்வமாக வெளியே வராண்டாவுக்கு வர, மன்னா! இன்று எனக்குத் தாங்கள் ஏதும் பெயர் வைக்கவில்லையே?!Õ என்றான்

செயிரீயா. பலமாகச் சிரித்த கலிக்யூலா, Ôஆமாம்! மறந்துவிட்டேன்... சரி, இன்று உன் பெயர் மிஸ்டர் உள்பாவாடை என்று சொல்லிவிட்டு நகர... இப்போது செயிரீயாவிடமிருந்து சிரிப்பு வெளிப்பட்டது.

தன் உடைவாளைச் சரேலென்று உருவினான் அவன். திகைத்துப்போன கலிக்யூலாவின் முகம் விநாடியில் வெளிறிப் போக, தொடர்ந்து மன்னனின் உடலில் வாளைத் திரும்பத் திரும்பப் பாய்ச்ச... கலிக்யூலாவின் உடல் முழுவதும் ரத்தத்தால் நனைய, ஒருவழியாகக் கீழே விழுந்து இறந்தான் அந்தக் கொடுங்கோலன்.

அங்கிருந்து நேராக நாடக அரங்குக்குச் சென்று, மேடையில் ஏறி நின்று சாவதானமாகச் சொன்னான் செயிரீயா| Ôமன்னர் சில நிமிடங்களுக்கு முன் செத்துப் போய்விட்டார்!Õ அங்கே சற்று பயங்கர மௌனம் நிலவியது.
 
பிறகு கரகோஷம் ஆரம்பித்தது. நிற்காத, நீண்ட, மகிழ்ச்சி நிரம்பிய கரகோஷம்...

வில்லன்

unread,
Aug 11, 2009, 12:33:58 AM8/11/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

அதிகாரமும் அனுமதியும் மட்டும் ஒரு மனிதனுக்குக் கிடைத்துவிட்டால் உடனே மகிழ்ச்சியோடு கிளர்ச்சியடைவது அவனுக்குள்ளே இருக்கும் மிருகம்தான்!
 
யுத்தங்கள் நிகழும்போது, அதில் ஈடுபடும் மனிதர்கள் எந்த அளவுக்கு அடியோடு மாறி விடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தால்தான் புரியும்.
 
சராசரி நாட்களில் ஒருவர் இன்னொருவனைக் கொலை செய்தால் அவனுக்கு தூக்குத்தண்டனை
கிடைக்கும். அதுவே யுத்தத்தில் எதிரிகளை நூற்றுக்கணக்கில் அவன் சுட்டுக்கொன்றால் அரசாங்கமே அவனுக்கு பதக்கம் அணிவித்துப் பாராட்டுகிறது!

லட்சியங்கள் வெவ்வேறாக இருந்தாலும் கொலை கொலைதான்! உள்ளே இருக்கும் மிருகம் வெளிப்படாமல் யுத்தத்தில் ஒரு வீரன் வெற்றிகரமாகச்செயல்பட முடியாது!

போரில் ஈடுபடும் ஒவ்வொரு வீரனுக்குள்ளேயும் இருக்கும் மிருகத்தை தட்டியெழுப்புவதற்காக விசேஷ பயிற்சிகூட தரப்படுகிறது!  பிரிட்டிஷ் ராணுவத்தில் இதற்கு Ôமிருகமாக்குவதுÕ  என்று
பச்சையாகவே பெயர் வைத்திருக்கிறார்கள்!
 
யுத்தத்தில் காட்டுகிற வீரம் ஆண்மையின் உச்சக்கட்டமாக கருதப்படுகிறது. மேலதிகாரிகள் இடும்
கட்டளைகளை, கேள்வி எதுவும் கேட்காமல் Ôசிரமேற்கொண்டு கடைப்பிடிப்பது ஒரு சிறந்த வீரனின் கடமை... என்கிற ரீதியில் ஆரம்பித்து ஒரு வீரனைப் போருக்குத் தயார்படுத்துவதை எல்லா நாட்டு
ராணுவங்களும் பின்பற்றுகின்றன.
 
இத்தனைக்குப் பிறகும், முதன் முறையாக போர்க்களத்தில் நுழையும் ஓர் இளம் வீரனுக்கு அதிர்ச்சி
அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நிறையவே நடக்கக்கூடும். போகப் போக அவன் எல்லாக் கொடூரங் களுக்கும் பழகிவிடுகிறான்! வியட்நாம் போரில் பங்கேற்கப்போன இளம் அமெரிக்க வீரன் ஒருவன் எடுத்த எடுப்பில் பார்க்க நேரிட்ட ஒரு காட்சி அந்த இளைஞனை நிலை குலைய வைத்தது.
 
அவனைக் கடந்து சென்ற ஒரு ஜீப்பில் சிரித்தவாறு அமர்ந்திருந்த அமெரிக்க வீரர்கள் கையிலிருந்த துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்ட கத்திகளில் (நம் ஊர் ஓட்டல்களில் கல்லாவில் இருக்கும் கம்பியில் Ôபில்Õகளைச் செருகி வைப்பதுபோல!) வரிசையாக எதுவோ செருகி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அந்த இளைஞன் திடுக்கிட்டான் 
 
காரணம், அத்தனையும் மனிதக் காதுகள்!
 
அன்று எத்தனை பேரை கொன்றோம் என்று கணக்கு வைத்துக் கொள்வதற்காக Ôடோக்கன்கள்Õ போல காதுகளை மட்டும் வெட்டியெடுத்து சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் ரஷ்யா படையெடுத்தபோதும் ரஷ்ய வீரர்கள் புரட்சிப்படை வீரர்களைக் கொன்று அவர்களுடைய காதுகளை வெட்டியெடுத்து உலர்த்திப் பிற்பாடு Ôகாது நெக்லஸ்Õ தயாரித்துக் கொண்டார்கள்.
 
ஆகவே, பழகப் பழக யுத்தத்தில் கொடூரம் என்பது மிக மிக சர்வசாதாரணமாகப் போய் விடுகிறது என்பதுதான் உண்மை!

துருக்கியின் கொடூரமான கைப்பிடியில் தவித்துக் கொண்டிருந்த பல்கேரியாவில் கி.பி. 1876&ம் ஆண்டு ஒரு புரட்சி வெடித்தது. அதைசசாக்காக வைத்து துருக்கியப் படைகள் அங்கே புகுந்து நிகழ்த்திய அட்டூழியம் வரலாற்றில் பல்கேரியக் கொடுமை என்று அழைக்கப்படுகிறது.

பல்கேரியாவில் புரட்சியை நசுக்குவதோடு துருக்கி நிறுத்திக் கொள்ளவில்லை. துருக்கியப்படை பல்கேரிய மக்களை பிற்பாடு நடத்திய விதம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அநேகமாக எல்லா இளம் பெண்களும், சிறுமிகளும் அங்கே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டனர். ஆண்களின் காதுகளை ஆணியடித்து, கம்பங்களில் இரவு பூராவும் அவர்களை தொங்கவிட்டு மறுநாள் காலையில் தூக்கிலிட்டனர். வயதானவர்களையும், குழந்தைகளையும் பெரிதாகத் தீமூட்டி அதில் தூக்கியெறிந்தனர்.
 
நிறை கர்ப்பமாக இருந்த பெண்களின் வயிறுகள் கத்தியால் கிழிக்கப்பட்டு, சிசுக்கள் பறித்தெடுக்கப்பட்டன. பிறகு அந்தக் குழந்தைகளை வைத்து Ôஒரு விளையாட்டுப் போட்டிÕ நடத்தப்பட்டது. அதாவது குழந்தைகளைத் தூக்கி வானத்தில் வீசியெறிய வேண்டும்.
 
பிறகு கீழே விழும் குழந்தைகளை கத்திகளால் குத்தி Ôகாட்ச்Õ பிடிக்கவேண்டும்!

இவையெல்லாம் மிகச் சிறிய உதாரணங்கள்!
 
பல்கேரிய கொடுமைÕ பற்றி மேலைநாட்டு சிந்தனையாளர் ஒருவர், Ôஉலகில் வேறு எந்த விலங்கினமும் மனிதனைப் போலக் கற்பனா சக்தியுடனும், கலை நயத்துடனும்
கொடூரங்களை நிகழ்த்துவதில்லை! என்று குறிப்பிடுகிறார்.
 
உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதை இமானுவேல் கான்ட் சொன்னார்: ஒவ்வொரு மனிதனுக்கும் சுய கௌரவம் உண்டு. அதை மதிக்க வேண்டியது இன்னொரு மனிதனின் அடிப்படைக் கடமை. மனித உறவு என்பது ஒரு இலக்காக இருக்க வேண்டுமே தவிர சுயநலத்துக்கான கருவியாக அதைப் பயன்படுத்தக் கூடாது.
 
நாம்,| அவர்கள் என்கிற எந்தப் பாகுபாடும் இல்லாமல் யார் அவமானப்படுத்தப்பட்டாலும் அது அருவருப்பான உணர்ச்சியையும் கோபத்தையும் ஒருவனுக்கு ஏற்படுத்தினால் அவன் மனித
சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக மதிக்கிறான் என்று அர்த்தம்.

மற்றவர்களை மதிக்கும் உணர்வு அடியோடு மழுங்கிப் போனதால்தான் ஜாலியன்வாலாபாக்கில் (1919) ஜெனரல் டையர், அமைதியாக பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்த இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டான். தொடர்ந்து பத்து நிமிடங்கள்.

சரமாரியாகச் சுட்டதில் சுமார் ஆயிரம் அப்பாவிகள் செத்து வீழ்ந்தார்கள். இந்தியர்களைச் சுட்டதுதான் நம்மில் பலருக்குத் தெரியும். அந்தச் சமயம் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களை நடத்திய விதம்
கேவலமானது.
 
அமிர்த்ஸரஸ் நகரில் யாராவது பிரிட்டிஷ் அதிகாரி எதிர்ப்பட்டால் உடனே ஒவ்வொரு இந்தியனும் குடையை மடக்கி, செருப்புகளை கழற்றி ஒதுங்கி நின்று சலாம் என்று சொல்ல வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான் ஜெனரல் டையர். சலாம் சொல்லத் தவறிய இந்தியர்கள் நடுத்தெருவில் மண்டியிட்டு அமர்ந்து அந்த பிரிட்டிஷ் அதிகாரியின் பூட்ஸை நக்க வேண்டும்.
 
கூடவே பிரம்பால் முதுகில் இரண்டு அடியும் விழும். மரியாதை செலுத்தாத இந்தியர்களின் உடல்மீது பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகள் வெள்ளை சுண்ணாம்பை பிரஷ்ஷால் பூசி அனுப்பினார்கள். (கறுப்பனை நாகரிகமுள்ள வெள்ளையனாக மாற்றுவதாக அர்த்தம்!)
 
பிரிட்டிஷ் அதிகாரிகள் வசிக்கும் தெருக்களில் செல்லும் இந்தியர்கள் தெருமுழுவதையும் ஊர்ந்தவாறு கடந்து செல்ல வேண்டும் என்றும் ஜெனரல் டையர் ஆணை பிறப்பித்தான். இந்தியன் என்கிற சகமனிதனிடம் இந்த அளவுக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததால்தான் அந்த கறுப்பு நாய்களைச் சுட்டுத் தள்ளுங்கள்!Õ என்று சுலபமாக, சர்வ சாதாரணமாக ஜெனரல் டையரால் ஆணையிட முடிந்தது!

செங்கிஸ்கானுக்கும், கலிக்யூலாவுக்கும், ஜெனரல் டையருக்கும் உடையும், மொழியும்தான் வேறு. மனைப்பான்மை ஒன்றுதான்!

இப்படிப்பட்டவர்கள் முடியரசிலும் அரியணையில் அமரலாம். குடியரசிலும் ஆட்சியைப் பிடிக்கலாம்! எந்தக் காலத்திலும் இது சாத்தியம்!...

கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக் கணக்குப் போட்டால், திடீரென்று கலிக்யூலா அனுபவங்கள் நிகழ்ந்து, நாடே அதில் சிக்கித் தவிக்க நேரிடும்!

ஏதோ அந்தக் காலத்தில், முடியாட்சி இருந்தபோதுதான் இப்படிப்பட்ட கொடூரமான சோதனைகள் பொதுமக்களுக்கு நேரிட்டது என்றும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற மேலிடங்கள் உருவாகியுள்ள விழிப்பு உணர்வு மிகுந்த தற்காலத்தில் சாடிஸம் மிகுந்த சர்வாதிகாரிகள் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அசால்ட்Õடாக இருப்பது அப்பாவித்தனமானது!
 
ஆப்பிரிக்க நாடான உகாண்டா மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள்

வில்லன்

unread,
Aug 12, 2009, 2:28:32 AM8/12/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

நம்மைப் போலவே பிரிட்டிஷ் காலனியாக இருந்த உகாண்டாவை, வெள்ளைக்காரர்கள் Ôஆப்பிரிக்க முத்துÕ என்று குறிப்பிட்டனர்.

அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது!

உகாண்டா தனிநாடாக ஆன கையோடு, வழக்கறிஞராக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே, 1962|ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமரானார். எடுத்த எடுப்பிலேயே புதிய பிரதமருக்குப் பெரிய தலைவலி காத்திருந்தது.
 
ஒண்ணரை கோடி உகாண்டா மக்களும் நாற்பதுக்கு மேற்பட்ட இனங்களாக, பழங்குடிகளாக  பிரிந்து நின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவர் நம்ம ஊர் சாதித் தலைவர்கள் மாதிரி. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதற்கேற்ப, ஒவ்வொரு பழங்குடியினரும் மற்ற பிரிவினர்மீது பொறாமையும் இளக்காரமும் கொண்டிருந்தனர்.
 
முதல் வேலையாக, இவர்களையெல்லாம் இணைத்து ஒரே நாட்டு மக்களாக்க வேண்டியிருந்தது!

ஒபோடே, லாங்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அது மைனாரிட்டி இனம். புகாண்டா என்னும் பெரும்பான்மையான பழங்குடியின் தலைவரான கிங் ஃப்ரெடி என்பவரை உகாண்டாவுக்கு ஜனாதிபதியாக்கினார் ஒபோடே.

பிரிட்டிஷ்காரர்களின் (வழக்கமான) பிரித்தாளும் கொள்கையில் புகாண்டா இனம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அந்த இனத்தை ஒபோடே பகைத்துக்கொள்ள முடியாத நிலை... ஃப்ரெடி ஜனாதிபதியானவுடனேயே அவருக்கும் ஒபோடேவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், படிப்படியாக ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒபோடே பறிக்க ஆரம்பித்தார்.
 
உடனே Ôஎங்கள் இனத்துக்கு ஏற்பட்ட அவமானம் இதுÕ என்று புகாண்டா இன மக்கள் கொதித்தனர். ஆங்காங்கே கலவரங்களும் வெடித்தன.
 
இதை அடக்குவதற்காகச் செமத்தியான ஒரு ராணுவ அதிகாரி ஒபோடேவுக்குத் தேவைப்பட் டார். ஒபோடே தேர்ந்தெடுத்தது, ஆஜானுபாகுவான முரட்டுத்தனமான ஒரு ராணுவ அதிகாரி.
பெயர்  இடிஅமீன்!

இடிஅமீன் காக்வா என்னும் வேறொரு இனத்தைச் சேர்ந்தவன். படிப்பறிவு அவ்வளவாகக் கிடையாது. ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால், கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு, அடக்குவதில் கெட்டிக்காரன். ஆறடி நாலு அங்குல உயரமுள்ள இடிஅமீன்,

உகாண்டாவின் மாஜி தேசிய (ஹெவிவெயிட்) குத்துச்சண்டை சாம்பியன் வேறு! அதிகாரம் தரப்பட்டவுடனேயே இடிஅமீன் செய்த முதல் காரியம்  ராணுவ டாங்கிகளைக் கொண்டு ஜனாதிபதி மாளிகையைச் சூழ்ந்துகொண்டதுதான். இடிஅமீன் பர்சனலாக செலுத்திய பீரங்கிக் குண்டு, ஜனாதிபதியின் மாளிகைச் சுவரில் பெருத்த சத்தத்துடன் துளை போட்டது.
 
ஜனாதிபதி ஃப்ரெடிக்கு இடிஅமீனின் முரட்டுத்தனம் பற்றித் தெரியும். ஒரு பிரைவேட் விமானத்தில் ஏறித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பிரிட்டனுக்கு ஓடித் தஞ்சம் புகுந்து, சில மாதங்களில் நோயுற்று பரிதாபமாக இறந்துபோனார் அவர்.

தொடர்ந்து நான்காண்டுகளுக்கு ஒபோடேவின் விசுவாசி யாக, செல்லப்பிள்ளையாக அதே சமயம்,
தனிப்பட்ட முறையில் அட்டூழியங்களும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் செய்துகொண்டு வந்தான்
இடிஅமீன்.
 
ஜனவரி 1971|ல் ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு
விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமீன், விமானம்
கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினான்.
 
கையில் ஒயின் கோப்பையோடு விமானத்தில் ஜாலியாக அமர்ந்திருந்த ஒபோடே, ரேடியோவில் இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததுதான் மிச்சம்.

மிகப்பெரிய பொதுக்கூட்டத்தைக் கூட்டி, ராணுவ தலைமையதிகாரியின் யூனிஃபார்ம் அணிந்துகொண்டு மேடை ஏறி நின்ற இடிஅமீன், Ôஜனாதிபதி ஃப்ரெடியைக் கொல்லத் திட்டம் போட்டார் ஒபோடே! நான்தான் அவருக்கு ரகசியத் தகவல் தந்து, நாட்டைவிட்டுத் தப்பிக்க உதவி செய்தேன்.
 
தேசத் துரோகி ஒபோடே, இனி உகாண்டா திரும்ப முடியாது. என் முதல் வேலையாக, பிரிட்டனில் புதைக்கப்பட்டிருக்கும் நம் அருமை ஜனாதிபதியின் உடலை உகாண்டா கொண்டுவந்து, சகல மரியாதைகளுடன் மீண்டும் புதைத்து, அங்கே மிகப்பெரிய நினைவுச் சின்னம் அமைக்கப் போகிறேன்!Õ என்றான் உணர்ச்சிகரமாக.

ஒபோடே ஆட்சியிலிருந்தபோது பெரிதாக எதையும் கிழிக்கவில்லை என்பதால், மக்கள் கரகோஷம் செய்தனர்! ராணுவத்தில் இடிஅமீனைப் போல, பதவி ஆசை உள்ள பல சீனியர் அதிகாரிகள் இருப்பார்கள் அல்லவா? அவர்களெல்லாம் ஒன்றுகூடித் தன்னைக் கவிழ்க்கத் திட்டம் போட்டால்?!

முக்கியமான முப்பத்தாறு உயர் ராணுவ அதிகாரிகளை விருந்துக்குக் கூப்பிட்டனுப்பினான் இடிஅமீன். Ôநாமெல்லோரும் இணைந்து உகாண்டாவைச் செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றத் திட்டங்கள் தீட்ட வேண்டும்!Õ என்று அவன் சொல்லியனுப்ப, எல்லா ராணுவ அதிகாரி களும் ஆர்வத்துடன் விருந்துக்கு வந்தனர்.

இடிஅமீனுக்கு விசுவாசமான அடியாள் படையொன்று திடீரென்று ஜனாதிபதி மாளிகையின் விருந்து மண்டபத்தில் புகுந்தது. இதைக் கண்டு திடுக்கிட்டு, பாதி விருந்திலிருந்து எழுந்து ஓடப் பார்த்த எல்லா ராணுவ அதிகாரி களையும் கத்திகளாலும் பயோனட்களாலும் குண்டர்கள் குத்திக் கொன்றனர்.

மறுநாள் இடிஅமீன் ரேடியோ மூலம் மக்களுக்கு விடுத்த செய்தியில், Ôஎன்னைக் கொலை செய்யும் திட்டத்துடன் வந்த சில ராணுவ அதிகாரிகள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால், அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டி வந்தது!Õ என்று வருத்தத்துடன் அறிவித்தான்.
 
அதிர்ச்சியடைந்த ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசேன், இடிஅமீனை நேரில் சந்தித்துக் கடுமையான வார்த்தைகளால் தன் ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
 
ஆனால், அமீனைச் சந்திக்கப்போன சுலைமான் திரும்பி வரவில்லை
 
(தொடரும்ம்ம்ம்ம்)

வில்லன்

unread,
Aug 13, 2009, 12:37:27 AM8/13/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

அவரை ஒரு சாக்குப் பையில் திணித்து, ஜெயிலுக்குத் தூக்கிச் சென்ற இடிஅமீனின் அடியாட்கள், அங்கே தடிகளால் அடித்தே அவரைக் கொன்றனர். நேருக்கு நேர் நின்று என்னை மிரட்டிய சுலைமானின் தலையை மட்டும் வெட்டி எடுத்து அனுப்புங்கள்Õ என்று சொல்லியனுப்பினான் இடிஅமீன்.
 
பிறகு, டைனிங் அறையில் இருந்த Ôஃப்ரிஜ்Õஜில் சுலைமானின் தலையை வைக்கச்
சொன்னான்.

பிற்பாடு உகாண்டா நாட்டுப் பிரமுகர்கள், கலைஞர்கள், அயல்நாட்டுத் தூதுவர்களை அழைத்துப் பெரிய விருந்து கொடுத்த இடிஅமீன் இந்த விருந்தில் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும். மனித இறைச்சி வேண்டுமா? சொல்லுங்கள்! என்று உரக்கச் சொல்லிவிட்டு, எழுந்து போய் ஃப்ரிஜ்ஜிலிருந்து ஜில்லிட்டுப் போயிருந்த சுலைமானின் தலையைக் கொண்டுவந்து தூக்கிக் காட்டி, இடிச் சிரிப்புச் சிரிக்க... எல்லாரும் திகைத்துப் போனார்கள்.

உச்சக்கட்டமாக, அந்தத் தலையிலிருந்து சில துண்டுகளை வெட்டி எடுத்து, ஊறுகாயில் தொட்டுக்கொண்டு ருசித்தான் இடிஅமீன்.

அதிர்ச்சியோடு அந்தக் காட்சியைப் பார்த்த எல்லோருக்கும் இடிஅமீன் ஒரு கிறுக்குப் பிடித்த நவீன கலிக்யூலாÕ என்பதைப் புரிந்துகொண்டனர்.

ஏராளமான ராணுவ அதிகாரிகளை இடிஅமீன் பரலோகம் அனுப்பிய தகவல் உகாண்டா மக்களுக்குத் தெரியவே இல்லை! பத்திரிகைகளே இல்லாத நிலை, ரேடியோவோ... இடிஅமீன் கையில்! Ôதேசத்துரோகக் குற்றத்துக்காகச் சில ராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுÕ என்று மட்டும் ரேடியோ சுருக்கமாக அறிவித்தது.

இருப்பினும் எப்படியோ செய்தி வெளியே கசிந்து, அமெரிக்க Ôபிலடெல்ஃபியா புல்லடின்Õ பத்திரிகை நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவின் ராணுவ டெபுடி கமாண்டரான மேஜர் ஜூமா அய்கா என்பவனைச் சந்தித்து, இதுபற்றி விசாரித்தனர்.

தொடர்ந்து கேள்விக்கணைகளை இவர்கள் வீசியதால், குழப்பமடைந்த அய்கா போன் போட்டு, இடிஅமீனிடம் Ôகேள்விமேல் கேள்வி கேட்டு பேஜார் பண்ணுகிறார்கள் தலைவா!Õ என்று முறையிட... Ôமுட்டாள்! எதற்கு மெனக்கெட்டுப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?

முதல் வேலையாக அவர்களைச் சுட்டுத் தள்ளு!Õ என்று இடிஅமீனிடம் இருந்து ஆணை வந்தது. போனை வைத்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து வந்த அய்கா, இரு அமெரிக்கர்களின் நெற்றிப் பொட்டிலும் கைத்துப்பாக்கியை வைத்துச் சுட்டுத் தள்ளினான்.

அவர்களுடைய உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

போனவர்கள் திரும்பாததால், அமெரிக்க தூதரகம் விசாரிக்கத் துவங்க, Ôஅவர்கள் வந்து பேட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டார்களே! என்று அய்காவிடமிருந்து பதில் வந்தது.

இதற்குப் பிறகே உலக நாடுகள், Ôஉகாண்டாவுக்கு அதிபதி ஆகியிருக்கிறவன் திமிர் பிடித்த, சராசரி சர்வாதிகாரி இல்லை. சற்றே மனநிலை பாதிக்கப்பட்ட, ஆபத்தான கொடுங்கோலன்Õ என்று புரிந்துகொண்டு கவலைப்பட ஆரம்பித்தன.

இடிஅமீன் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டுக்குள் உகாண்டா திவால் நிலைமைக்கு வந்துவிட்டது. பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் எல்லோரும் கொல்லப்பட்டதால், தனக்குப் பரிச்சயமான குண்டர்கள், குற்றவாளிகள், சமூகவிரோதிகள் எல்லோருக்கும் மேஜர், காப்டன் என்று பதவிகள் கொடுத்து, ராணுவத்தில் சேர்த்துக்கொண்டான் இடிஅமீன்.

விசுவாசமான இந்த ரௌடிகளால் தன் பதவிக்கு ஆபத்தில்லை என்கிற நம்பிக்கை வந்தவுடன், உகாண்டாவின் பொருளாதார நிலைமையைச் சீர்படுத்த, நிதி உதவி கேட்டு பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ÔஜனாதிபதிÕ என்கிற முறையில் விஜயம் செய்தான் இடிஅமீன். எல்லா நாடுகளும் (லிபியா தவிர!) கழன்றுகொள்ள...

வெறுப்போடும் வெறுங்கையோடும் நாடு திரும்பிய இடிஅமீன்,

விமானநிலையத்திலிருந்து அரண்மனைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு இந்தியரின் பெரிய கடை அவன் கண்ணில்பட்டது.

சரேலென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் அந்தக் கொடுங்கோலன்...!இடிஅமீன்

உகாண்டாவில் 50,000\க்கு மேற்பட்ட ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொண்ணூறு சதவிகிதத்தினர் இந்தியர்கள்.

இவர்கள் தொழிலதிபர் களாகவும் டாக்டர்களாகவும் இன்ஜினீயர்களாகவும் நர்ஸு களாகவும் ஆசிரியர்களாகவும் பல துறைகளில் பணியாற்றி, உகாண்டாவின் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக் கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

காரில் சென்று கொண்டிருந்த இடிஅமீனின் கண்களில் தென்பட்ட இந்தியரின் கடை, அவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. கூடவே  பளீரென்று ஒரு ஐடியாவும் அவன் மனதில் உதித்தது.
இரண்டு நாட்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான் அந்தச் சர்வாதிகாரி.
 
பிறகு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டான்!

வில்லன்

unread,
Aug 14, 2009, 12:42:17 AM8/14/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்னைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம். அந்த சுரண்டல் பேர்வழிகள் ஒழிந்தால்தான் உகாண்டா உருப்படும். இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரேடியோவில் இடிஅமீன் மிரட்டலாக Ôஇன்னும் 75 நாள்,
74 நாள், 73 நாள்...என்று கௌண்ட்|டௌன் வேறு சொல்லி பயமுறுத்த ஆரம்பித்தான்.

பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்து, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு
முதுகெலும்பாகத் திகழ்ந்த ஏராளமான இந்தியக் குடும்பங்கள் கையில் மூட்டை மூடிச்சுடன்,
கண்களில் மிரட்சியுடன் நாட்டை விட்டு வெளியேறின.

தீனி போடாமல் குண்டர்கள் எப்படி விசுவாசமாக இருப்பார்கள்?! இடிஅமீன் அவனுடைய
பெரும் குண்டர் படையை அழைத்து, Ôபிஸினஸ் எல்லாவற்றையும் நீங்களே எடுத்து
நடத்துங்கள்!Õ என்று அறிவித்தான். சில வாரங்களுக்குள் கடைகளில் உள்ள எல்லா பொருட்
களையும் விற்றுப் பணமாக்கிக் கொண்ட குண்டர்கள் அதற்குப் பிறகு என்ன செய்வது என்று
தெரியாமல் விழிக்க கடைகள் மூடப்பட்டன.
 
பிறகு, பார்மஸிகள், மருத்துவ மனைகள், ஆபீஸ்கள், தொழிற்சாலைகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு, உகாண்டாவின் பொருளாதார நிலைமை அதலபாதாளத்துக்குப் போக ஆரம்பித்தது.

அமீன் அசரவில்லை!
 
குண்டர்களை அழைத்து, கலிக்யூலா ஸ்டைலிÕலேயே ஒரு திட்டத்தைச்
சொன்னான்!  யாரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளையடித்துக் கொள்ளுங்கள், நான் கண்டு கொள்ளமாட்டேன்Õ என்று!
 
உகாண்டா மக்கள், இறந்தவர்களின் உடல்களை மிகவும் பவித்ரமாக கையாண்டு விசேஷ சடங்குகளை (காரியம்!) செய்யும் வழக்கமுடையவர்கள். இந்த வீக்னெஸை அமீன் ஆட்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அங்குமிங்குமாக பொதுமக்களை தனித்தனியாக வேட்டையாடிக் கடத்திச் சென்று கொல்ல வேண்டியது.
 
பிறகு உடலை எங்கேயாவது ஒளித்து வைத்துவிட்டு, உடலைக் கண்டுபிடித்துக் கொடுக்கப் பணம் வசூலிக்க வேண்டியது! இது அவர்களுடைய கொடூரமான வேலையாகிவிட்டது! தவித்துப் போன உறவினர்கள் பணம் (ஏழை மக்கள் என்றால் ரூ.10,000) சேகரித்துக் கொடுக்க, Ôஸ்டேட் ரிசர்ச் பீரோÕ என்ற பெயரில் அரசு அமைப்பு ஒன்று (அதாவது அடியாட்கள் அமைப்பு!) செத்துப் போனவரின் உடலைத் தேடுவதுபோலத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பணம் வசூலித்தது.
 
இதில் ஒரு பெரும்பகுதி இடிஅமீனுக்கு! Ôசாகடித்தால் வசூல்!Õ என்கிற நிலை ஏற்பட்டதால், உகாண்டாவில் இரவு சூழ்ந்தால் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்க ஆரம்பிக்க, இந்தச் சத்தம் பற்றி Ôபிரெஞ்சு தூதரகம்Õ இடிஅமீனிடம் தூதுவரால் தூங்க முடியவில்லை!Õ
என்று முறையிட்டது என்றால் பார்த்துக் கொள்ளலாம்! இதனால் சற்று தர்மசங்கடப்பட்ட அமீன், குண்டர் தலைவன் மால்யா முங்கு என்பவனை அழைத்து, Ôசத்தமில்லாமல் கொலைகளை செய்ய முடியாதா?Õ என்று கேட்டான்.
 
நம்முடைய ஐ.ஜி. மாதிரி பெரும் பதவியில் அமர்த்தப்பட்டிருந்த மால்யா, முன்பு ஒரு தொழிற்சாலையின் கேட்கீப்பராகப் பணிபுரிந்தவன். முரட்டு ரௌடியான அவன், Ôஒன்று

செய்யலாம் தலைவா! நாம் கடத்துபவர்களை ஜெயிலில் போட்டுவிடலாம். அங்கு மற்ற கைதிகளை விட்டு இவர்கள் கழுத்தை நெரித்து, அல்லது சுத்தியலால் மண்டையில் அடித்துக் கொல்லச் சொல்லலாம். பிறகு சத்தம் வராது! கொலைகாரர்களுக்கு ஒரு தொகை கொடுத்து விடலாம்Õ என்றான்!

பலே! என்றான் அமீன். உடனே பெரிய சைஸ் மரசுத்தியல்கள் நிறைய வாங்கப்பட்டன!

ஏற்கெனவே இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்த இடிஅமீனுக்கு ஐந்து மனைவிகள் (பிற்பாடு மூன்று
பேரை விவாகரத்து செய்தான் அவன்). கேஅமீன் என்னும் ஒரு மனைவி (அமீனால்) கர்ப்பமடைந்து
பிறகு Ôடிப்ரெஷன்Õ காரணமாக தானாகவே கருச்சிதைவு செய்ய முனைந்து அதில் குளறுபடியாகி
இறந்து போனாள்.
 
தன்னை அவள் ஏமாற்றியதாக எடுத்துக்கொண்ட அமீன், கடுங்கோபம் கொண்டு
மார்ச்சுவரியில் இருந்த டாக்டர்களை அழைத்து அவளுடைய உடலிலிருந்து கைகளை வெட்டி கால்
பகுதியிலும், கால்களை எடுத்து கைப்பகுதியிலும்வைத்துத் தைக்கச் சொன்னான். இறந்த
பிறகும்அவளுக்கு பனிஷ்மெண்ட்!

மற்ற மனைவிகளை இழுத்துக் கொண்டு வந்து, Ôபாருங்கடி, என்னிடம் விளையாடினால் இதுதான் கதி! என்று அர்த்தமில்லாமல் வெறியோடு கத்தினான்!

உகாண்டா அரசுக்கு லிபியா  நாடு மட்டுமே ஏதோ நிதியுதவி அளித்து வந்தது.

லிபியாவின் ஒரே கண்டிஷன் யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பதே!

இதெல்லாம் அமீனுக்கு கரும்பு தின்னக் கூலி மாதிரிதான். ஆனால், இந்தப் பாலஸ்தீனிய புரட்சிக்காரர்களின் உறவு விபரீதத்தில் கொண்டுபோய் விட்டது.

1976 ஜூன் 28\ம் தேதி. இஸ்ரேலிலிருந்து பாரீஸ் சென்றுகொண்டிருந்த ஏர் ஃபிரான்ஸ் விமானத்தை பாலஸ்தீனிய தீவிரவாதிகள் கடத்தி உகாண்டாவில் உள்ள என்டெபி விமான நிலையத்தில் இறக்கினார்கள். விமானத்தில் முந்நூறு பயணிகள். பலர் யூதர்கள்...

இஸ்ரேலிலும், ஐரோப்பாவிலும் சிறைகளில் இருக்கும் 53 பாலஸ்தீனிய பயங்கரவாதிகளை உடனே விடுதலை செய்யவேண்டும். இல்லையெனில் அத்தனை பயணிகளும் கொல்லப்படுவார்கள்Õ என்று மிரட்டல் அறிக்கையைக் கடத்தல்காரர்கள் வெளியிட...
 
உலகத்தின் கவலையான கவனம் முழுவதும் உகாண்டா பக்கம் மீண்டும் திரும்பியது. அந்த விமானநிலையத்தில் இடிஅமீனும் ஏதோ கடத்தல்காரர்களின் தலைவன் மாதிரி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருந்ததை டி.வி\யில் பார்த்து பல உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாயின.
 
ஒரே ஒரு விஷயத்தில் கோட்டை விட்டான் இடிஅமீன். முன்னொரு சமயம் இஸ்ரேலிய தொழில் வல்லுநர்களை நாட்டைவிட்டுத் துரத்திய போது, அந்த இன்ஜினீயர்கள் என்டெபி விமானநிலையத்தின் வரைபடத்தையும் கையோடு எடுத்துப்போயிருந்தார்கள்.
 
அவர்கள் கட்டிய விமானநிலையம்தான் அது! அந்த பிளானை கொண்டு வரச்செய்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள், பயணிகள் விமானநிலையத்துக்குள்ளே எந்த இடத்தில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள் என்று (ஒற்றர்கள் மூலம்) கண்டுபிடித்தார்கள்.

ஜூலை 3\ம் தேதி நள்ளிரவு இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துகொண்டு ஒரு ராணுவ விமானம் Ôராடார்Õகளிடம் சிக்காமல் இருக்க தாழ்வாகப் பறந்து, விமானநிலையத்தின் ஒரு மூலையில் இறங்கியது.
 
விமானத்திலிருந்து மின்னலாக வெளிப்பட்ட கமாண்டோக்கள் இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கியவாறு விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள்! குறுக்கே வந்த அமீனின் இருபது ராணுவ வீரர்கள் காலி! ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட,

பிறகே விமானநிலையத்துக்கு ஓடிவந்த இடிஅமீன் ÔஓÕவென்று கூச்சல் போட்டுப் புலம்பினான் (இந்த Ôஅட்வெஞ்ச்சர்Õ பிற்பாடுதிரைப்படமாகவும் வெளிவந்தது!).
 
(தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Aug 17, 2009, 12:31:53 AM8/17/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

இதுவும், பிற்பாடு அண்டைநாடான டான்ஸானியா மீது படையெடுத்ததும் அமீனின் வீழ்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.

எந்தப் பயிற்சியும் இல்லாத உகாண்டா ராணுவத்தை துரத்தியடித்த டான்ஸானியப் படையினர் குஷாலாகி உகாண்டாவுக்குள்ளேயே  புகுந்தனர். உகாண்டா மக்கள் கரகோஷத்துடன் டான்ஸானியப் படையை வரவேற்க, திகைத்துப்போன இடிஅமீன் போரிடத் தயாராகுங்கள்!Õ என்று ராணுவத்துக்கு அறைகூவல் விடுத்தான்.
 
ஆனால், ஒரு ராணுவ வீரன்கூட வரவில்லை! இதற்குள் உலக நாடுகள் உதவியோடு மில்டன் ஒபோடேவும் நாடு திரும்ப, அவருக்கும் மக்கள் பெரும் வரவேற்பு தந்தார்கள். இந்தத் தகவலையெல்லாம் கேட்டு நடுங்கிப் போய் அழ ஆரம்பித்த இடிஅமீன், லிபியா அதிபர் கடாஃபிக்கு போன் போட்டு Ôஎன்னைக் காப்பாற்றுங்கள்!Õ என்று அலற,

கடாஃபி தன்னுடைய பிரத்தியேக ஹெலிகாப்டரை உகாண்டாவுக்கு அனுப்பினார். குடும்பத்தோடு அதில் மரண பயத்துடன் தாவியேறிக்கொண்டான் இடிஅமீன். உயிர்பிழைத்தாலும், வெளியே தலைகாட்டப் பயந்துகொண்டு சவூதி அரேபியாவில் ஒரு ஓட்டலில் தனக்கென்று அரசால் தரப்பட்ட அறையில் தங்கி கடைசி காலத்தைக் கழித்த அந்தக் கொடுங்கோலன், சில ஆண்டுகளுக்கு முன்பு
மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போனான்...

இடி(அமீன்)உடன் புயலடித்து ஓய்ந்த பிறகு, மீண்டும் ஒபோடே ஆட்சி துவங்கியது தனிக்கதை...!

இரக்கமே இல்லாத வில்லன் கூட தன் குடும்பம் என்று வரும்போது, அவர்களைக் கனிவோடு
நடத்திப் பாதுகாக்கிறான். அந்தச் சிறிய வட்டத்துக்கு வெளியே இருக்கும் எவருமே அவனுக்கு
பொருட்டாக இருப்பதில்லை. இந்த Ôநாம்|அவர்கள்Õ என்கிற சுயநலம்தான் பல மிருகத்தனமான
செயல்களுக்கு அடிப்படையான காரணமாக அமைந்து விடுகிறது.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜப்பானிய நாடாளுமன்றத்தில்,
மூத்த அரசியல் தலைவரான நாகஜீமா சிக்யூஹி என்பவர் Ôஜப்பானி யர்களாகிய நாம் மிக
உன்னதமான இனத்தைச் சேர்ந்தவர்கள். நேரடியாக கடவுளிடமிருந்து தோன்றிய இனம்
நம்முடையது.
 
உலகில் உள்ள மற்ற இனங்கள் எல்லாம் நம்மைவிடத் தாழ்ந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஆகவே மற்ற உலக மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய முக்கியமான கடமை நமக்கிருக்கிறது!Õ என்று மிகுந்த அகம்பாவத்துடன் உரையாற்றியபோது அத்தனை உறுப்பினர்களும் ஆமோதித்து கைதட்டினார்கள்.

கோணல் மூக்கோடு, உடலெங்கும் முடியோடு காணப்படுகிற அந்த வெளுப்புச் சாத்தான் களைக் கொன்று நரகத்துக்கு அனுப்புங்கள்! என்று உலகப் போருக்கு முன்பு ஒரு ஜப்பானிய ராணுவ தளபதி கர்ஜித்தார். அவர் குறிப்பிட்டது அமெரிக்கர்களை!

Ôமனிதனுக்கும் குரங்குக்கும் பிறந்த, சப்பை மூக்குள்ள மஞ்சள் தே...மகன்களைச் சுட்டுத் தள்ளுங்கள்!Õ என்று உறுமினார் யு.எஸ்.  கப்பற்படையின் அட்மிரல் ஹால்ஸே. அவர் குறிப்பிட்டது ஜப்பானியர்களை!

வியட்நாம் போரின்போது அமெரிக்கப் படை வீரர்கள் அந்த நாட்டு மக்களை Ôகரப்பான் பூச்சிகள்Õ என்று எரிச்ச லோடு அழைத்தனர்.

போரின் நடுவே, ஒரு கிராமத்து வழியே செல்ல நேர்ந்த யு.எஸ். வீரர்கள் குடிநீர் கேட்டதால், அங்கே வசித்த வயதான ஒருவர் கிணற்றிலிருந்து பக்கெட் மூலம் நீர் இறைத்து ராணுவத்தினர் குடிப்பதற்காக ஊற்றினார். மங்கலான பார்வை கொண்ட அந்த முதியவர்  தள்ளாடியவாறு பலமுறை நீர் இறைத்து ஊற்றிய பிறகு...
 
திடீரென்று ஒருயு.எஸ். சோல்ஜர் தன் கையிலிருந்த Ôகோக் டின்Õனை அந்த முதியவர் மீது வீசினான். எல்லா அமெரிக்க வீரர்களும் சிரிக்க, திகைத்துப் போன முதியவரின் உதட்டில் Ôடின்Õ பட்டு ரத்தம் வழிந்தது.

ஒருவன் பக்கெட் தண்ணீரை எடுத்து அவர் தலை மீது கவிழ்த்தான். மேலும் சிரிப்பு. பரிதாபமாகத் தடுமாறி விழுந்த அந்த முதியவரை எட்டி உதைத்தான் ஒரு வீரன். பிறகு பெரும் சிரிப்புடன் நகர்ந்தார்கள் யு.எஸ். வீரர்கள்.


இந்த மிருகத்தனம் எங்கிருந்து வந்தது?
 
இந்தக் கொடூரத் துக்கு ஓர் அடிப்படைக் காரணம் அந்நிய முகம் கொண்ட வியட்நாம் மக்கள் மனிதர்கள் இல்லை என்பதே! உலகெங்கும் அந்நிய முகம் மட்டுமே வெறுப்பு உணர்ச்சிக்கு காரணமாக இருந்ததில்லை.

தொண்ணூறுகளில் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனப்போரில் டூட்ஸி இன மக்களும், ஹூடு இனமக்களும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். படுவேகத்தில் அது உள்நாட்டு யுத்தமாக வெடித்தது.
 
போர் துவங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகம்! ஒரே நாளில் (இரு தரப்பிலும்) நாற்பதாயிரம் உடல்கள் அங்கேயுள்ள விக்டோரியா ஏரியில் மிதந்ததாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அவர்கள் உபயோகித்த ஆயுதங்களை சப்ளை செய்தது ஃபிரான்ஸ் நாடு. இரண்டு இனமக்களையும் பிரித்து வெறுப்பு உணர்வை வளர்த்தது பெல்ஜியம் (பெல்ஜிய நாட்டின் காலனியாக இருந்தது ருவாண்டா). ஹூடு மக்களுக்கு ராணுவப் பயிற்சி தந்தது யு.எஸ்.!

இனப்போர் ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே மட்டும்தான் நிகழ்கிறது என்றோ, மற்ற நாட்டு மக்கள்
எல்லோரும் நாகரிகத்தில் முன்னேறியவர்கள் என்றோ தப்புக் கணக்குப் போட வேண்டாம்!

வில்லன்

unread,
Aug 17, 2009, 1:07:34 AM8/17/09
to mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்

அயர்லாந்து, லெபனான், இராக், ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா, யுகோஸ்லேவியா என்று துவங்கி அநேகமாக எல்லா நாடுகளிலும் இனப்போர் இன்றளவும் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கிறது!
 
அமெரிக்காவில் கறுப்பர்களை வெள்ளையர்கள் வேட்டையாடினார்கள் என்றால் இந்தியாவில் (இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு) ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைத் துரத்தித்துரத்திக் கொலை செய்தார்கள்!

இத்தனைக்கும், ருவாண்டாவில் இனப்போர் நடந்தபோது ஐ.நா. மூவாயிரம் வீரர்களை (சண்டையை நிறுத்த!) அனுப்பியது. ஐ.நா.

படையைச் சேர்ந்த பெல்ஜியம் நாட்டு வீரர்கள் சிலர் அங்கே கொல்லப்பட்டவுடனே Ôஎக்கேடு கெட்டாவது போங்கள்Õ என்பதுபோலஐ.நா. தன் படை வீரர்களை 270 ஆகக் குறைத்துக் கொண்டது. ருவாண்டாவில் தங்களுக்கு எந்தக் காரியமும் ஆகவேண்டியதில்லை என்கிற நிலை காரணமாக அமெரிக்காவும் இந்த இனப்படுகொலையைக் கண்டுகொள்ளவில்லை!

ஒரு தேசத்தின் மக்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட இனப் போர்கள் நிகழக் காரணம்தான் என்ன?
 
இன உணர்வு மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் ஒன்று. தேசிய உணர்வு வந்தது அதற்குப் பிறகுதான்! நாட்டுப்பற்றை நாம் வளர்த்துக் கொள்கிறோம். ஒரு நாடு உருவெடுப்பதற்கு முன்பே மக்களிடம் இனப்பற்று வேரூன்றி விடுகிறது.
 
அந்த உணர்வு வெறியாக மாறும்போது மனிதனுக்குள்ளே உள்ள மிருகம் கோரைப் பற்களுடன் நிமிர்ந்து நிற்க, பிரச்னைகள் வெடிக்கின்றன!

இன உணர்வைப் போக்கவே முடியாது என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன் வேர்கள் ஆழமானவை. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையும் ஒரு பிரிவைச் சேர்ந்தவன் நான் என்கிற அடிப்படை உணர்வும் தேவைப் படுகிறது.
 
மனிதர்கள் ஆங்காங்கே கூட்டமாக வாழ ஆரம்பித்த கையோடு உருவாகிவிட்ட உணர்வு அது. குழந்தைப் பருவம் முடிந்தவுடனே இந்த உணர்வு, தானாக நமக்குள் தலை தூக்கத் துவங்கி விடுகிறது.
 
இதைத் தவிர்க்க முடியாது!
 
ஆனால், இந்த உணர்வு வெறியாக மாற அனுமதிக்காமல் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதாவது இன உணர்வை மிஞ்சி ஒருவன் சிறந்த மனிதனாக ஆக முடியும்!
 
ஆனால், இன உணர்வு என்பதை ஒரு Ôவீக்னஸாகÕப் பயன்படுத்தி அதை வெறியாக மாற்றி அதில் குளிர்காயும் தலைவர்கள் உலகெங்கும் தலையெடுக்கிறார்கள்.
 
யுகோஸ்லேவியா நாட்டில் அதன் அதிபர் டிட்டோ இரும்புக் கரத்தோடு ஆட்சி செய்தபோது
இனப்போர் நடக்கவில்லை. அவர் இறந்து, யுகோஸ்லேவியா சிதறிய பிறகு ஒரு அரக்கனைப் போல அந்த வெறி விசுவரூபம் எடுத்தது.

சிதறிய யுகோஸ்லேவிய நாட்டைச் சேர்ந்த தனித்தனி குட்டி நாடுகளான ஸெர்பியாவும் (கிறிஸ்துவ ஆட்சி) போஸ்னியாவும் (முஸ்லிம்) ஒருவரை ஒருவர் அடியோடு அழிக்க ஆவேசத்துடன் கிளம்பினார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸெர்பியப் படையினர் போஸ்னியாவுக்குள் நுழைந்தபோது, முதல் வேலையாக அங்கேயிருந்த, 15&ம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான 800 மசூதிகளைத் தரைமட்டமாக்கினார்கள். மசூதிகள் இருந்த ஏரியாக்கள் எல்லாம் கார் பார்க்கிங் இடங்களாக மாற்றப்பட்டன.
 
பிறகு, அங்கேயிருந்த நூலகங்கள் தீ வைக்கப் பட்டன. இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்யத்தைப்
பற்றியும், இஸ்லாமிய கலாசாரம் பற்றியும் அரிய தகவல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இங்கே முஸ்லிம் மக்கள் வாழ்ந்ததற்கான, சுவடே இருக்கக் கூடாது என்று கர்ஜித்தான் ஒரு ஸெர்பிய ராணுவ தளபதி!

நீ ஒரு நல்ல மனிதன் என்பதற்கான அடிப்படை அறிகுறி மற்ற மனிதர்களின் சுயகௌரவத்தை முதலில் நீ மதிக்க வேண்டும்.
 
ஒருவர் பணக்காரராக இருக்கலாம், அதிகாரம் உள்ளவராக இருக்கலாம், வேறொரு நாடு, இனம் அல்லது சாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். எந்த நிலையிலும், யாராக இருப்பினும் சக மனிதனை மரியாதையோடு, நாகரிகமாக நடத்துவது என்பது மிக மிக முக்கியம்.

மற்றவருக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள், சிந்தனைகள், உணர்வுகள் உண்டு. குறைந்தபட்சம் அதைச் செவிமடுப்பது ஒருதனிமனிதனின் அடிப்படைக் கடமை!Õ என்கிறார் வரலாற்று அறிஞர் ஜொனாத்தான் க்ளோவ்
 
 
(முடிஞ்சி போச்ச்ச்)

சென்ஷி

unread,
Aug 17, 2009, 3:08:01 AM8/17/09
to panb...@googlegroups.com
வில்லனுக்கு,

விகடனில் தொடராக வந்தபோது சரியாக தொடர முடியாமல் போனதை மடல் குழுமத்தில் தொடராக தினமும் தொடர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்!

2009/8/16 வில்லன் <oms...@gmail.com>



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

செல்வன்

unread,
Aug 17, 2009, 3:09:10 AM8/17/09
to panb...@googlegroups.com
நல்லதொரு தொடருக்கு நன்றி வில்லன்.தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயமாக படித்தேன்.


--
செல்வன்

www.holyox.tk

“To get rich is glorious"

Asif Meeran AJ

unread,
Aug 17, 2009, 3:56:57 AM8/17/09
to panb...@googlegroups.com
நன்றி வில்லன்!

பொதுவாகவே பின்னூட்டங்களோ ஆதரவோ இல்லாமல் போனால் பொசுக்கென்று அந்த இழையை மூடிவிடுவதுதான் வழக்கம்
ஆனால் யாருடைய விமர்சனங்களையும் ஆதரவையும் எதிர்பார்க்காமல் கடமையே கண்ணாகத் தொடர்ந்து இந்த இழையைத் தொடர்ந்து வந்த உங்களுக்கு நண்பர்கள் சார்பில் நன்றி!


வில்லன்

unread,
Aug 17, 2009, 4:04:03 AM8/17/09
to panb...@googlegroups.com
 
குழுமங்களில் 3 வருச எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே, பின்னூட்டம் வராட்டி அதை யாரும் படிக்கலைனு அர்த்தம் இல்லைனு தெரியுமே, ஏன் நானே பின்னூட்டம் அதிகம் போடாம படிக்கிறவந்தானே,

காமேஷ்

unread,
Aug 18, 2009, 1:58:28 AM8/18/09
to thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
மதிய உணவு இடைவேளையில் படிக்கும் ஒரே இழை இது தான்.

இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சது வருத்தமா தான் இருக்கு.

'கலிக்யூலா‘/ஹிட்லர்/இடிஅமீன் என்னை கவர்ந்த ஹீரோஸ்.. மூளையில் சின்ன வியாதியை தவிர இவங்க சூப்பரோ சூப்பர்.


~காமேஷ்~



2009/8/17 வில்லன் <oms...@gmail.com>

வில்லன்

unread,
Aug 18, 2009, 2:11:16 AM8/18/09
to thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
இதோட ஆரம்ப்ப அத்தியாயங்கள் போட்டது இல்லே,
 
அதை நான் சைக்கோ கில்லர்ஸ்னு பேர்ல இன்னும் டெர்ரர்ரா போடுறேன் ஒரு 2 வாரத்துக்கு

 
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”

Vishnu Rajan

unread,
Aug 18, 2009, 8:33:00 AM8/18/09
to thamizh...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன்
தொடருங்கள் வில்லன் அவர்களே ..
படிக்க காத்திருக்கிறேன் ....
 
விஷ்ணு ...
2009/8/18 வில்லன் <oms...@gmail.com>



--
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

" என் நினைவுகள் இருட்டினில் நடக்கின்றன .... துணையாக உன் மௌனம் மட்டும் ... "

என் எழுத்தோவியங்கள் : www.vishnukavithai.blogspot.com
என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com
என் காதல் : www.vichu-vishnu.blogspot.com
என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com
என் கடிதம் : www.vichuvichu.blogspot.com



Reply all
Reply to author
Forward
0 new messages