அதிகாரமும் அனுமதியும் மட்டும் ஒரு மனிதனுக்குக் கிடைத்துவிட்டால் உடனே மகிழ்ச்சியோடு கிளர்ச்சியடைவது அவனுக்குள்ளே இருக்கும் மிருகம்தான்!
யுத்தங்கள் நிகழும்போது, அதில் ஈடுபடும் மனிதர்கள் எந்த அளவுக்கு அடியோடு மாறி விடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தால்தான் புரியும்.
சராசரி நாட்களில் ஒருவர் இன்னொருவனைக் கொலை செய்தால் அவனுக்கு தூக்குத்தண்டனை
கிடைக்கும். அதுவே யுத்தத்தில் எதிரிகளை நூற்றுக்கணக்கில் அவன் சுட்டுக்கொன்றால் அரசாங்கமே அவனுக்கு பதக்கம் அணிவித்துப் பாராட்டுகிறது!
லட்சியங்கள் வெவ்வேறாக இருந்தாலும் கொலை கொலைதான்! உள்ளே இருக்கும் மிருகம் வெளிப்படாமல் யுத்தத்தில் ஒரு வீரன் வெற்றிகரமாகச்செயல்பட முடியாது!
போரில் ஈடுபடும் ஒவ்வொரு வீரனுக்குள்ளேயும் இருக்கும் மிருகத்தை தட்டியெழுப்புவதற்காக விசேஷ பயிற்சிகூட தரப்படுகிறது! பிரிட்டிஷ் ராணுவத்தில் இதற்கு Ôமிருகமாக்குவதுÕ என்று
பச்சையாகவே பெயர் வைத்திருக்கிறார்கள்!
யுத்தத்தில் காட்டுகிற வீரம் ஆண்மையின் உச்சக்கட்டமாக கருதப்படுகிறது. மேலதிகாரிகள் இடும்
கட்டளைகளை, கேள்வி எதுவும் கேட்காமல் Ôசிரமேற்கொண்டு கடைப்பிடிப்பது ஒரு சிறந்த வீரனின் கடமை... என்கிற ரீதியில் ஆரம்பித்து ஒரு வீரனைப் போருக்குத் தயார்படுத்துவதை எல்லா நாட்டு
ராணுவங்களும் பின்பற்றுகின்றன.
இத்தனைக்குப் பிறகும், முதன் முறையாக போர்க்களத்தில் நுழையும் ஓர் இளம் வீரனுக்கு அதிர்ச்சி
அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நிறையவே நடக்கக்கூடும். போகப் போக அவன் எல்லாக் கொடூரங் களுக்கும் பழகிவிடுகிறான்! வியட்நாம் போரில் பங்கேற்கப்போன இளம் அமெரிக்க வீரன் ஒருவன் எடுத்த எடுப்பில் பார்க்க நேரிட்ட ஒரு காட்சி அந்த இளைஞனை நிலை குலைய வைத்தது.
அவனைக் கடந்து சென்ற ஒரு ஜீப்பில் சிரித்தவாறு அமர்ந்திருந்த அமெரிக்க வீரர்கள் கையிலிருந்த துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்ட கத்திகளில் (நம் ஊர் ஓட்டல்களில் கல்லாவில் இருக்கும் கம்பியில் Ôபில்Õகளைச் செருகி வைப்பதுபோல!) வரிசையாக எதுவோ செருகி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அந்த இளைஞன் திடுக்கிட்டான்
காரணம், அத்தனையும் மனிதக் காதுகள்!
அன்று எத்தனை பேரை கொன்றோம் என்று கணக்கு வைத்துக் கொள்வதற்காக Ôடோக்கன்கள்Õ போல காதுகளை மட்டும் வெட்டியெடுத்து சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் ரஷ்யா படையெடுத்தபோதும் ரஷ்ய வீரர்கள் புரட்சிப்படை வீரர்களைக் கொன்று அவர்களுடைய காதுகளை வெட்டியெடுத்து உலர்த்திப் பிற்பாடு Ôகாது நெக்லஸ்Õ தயாரித்துக் கொண்டார்கள்.
ஆகவே, பழகப் பழக யுத்தத்தில் கொடூரம் என்பது மிக மிக சர்வசாதாரணமாகப் போய் விடுகிறது என்பதுதான் உண்மை!
துருக்கியின் கொடூரமான கைப்பிடியில் தவித்துக் கொண்டிருந்த பல்கேரியாவில் கி.பி. 1876&ம் ஆண்டு ஒரு புரட்சி வெடித்தது. அதைசசாக்காக வைத்து துருக்கியப் படைகள் அங்கே புகுந்து நிகழ்த்திய அட்டூழியம் வரலாற்றில் பல்கேரியக் கொடுமை என்று அழைக்கப்படுகிறது.
பல்கேரியாவில் புரட்சியை நசுக்குவதோடு துருக்கி நிறுத்திக் கொள்ளவில்லை. துருக்கியப்படை பல்கேரிய மக்களை பிற்பாடு நடத்திய விதம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அநேகமாக எல்லா இளம் பெண்களும், சிறுமிகளும் அங்கே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டனர். ஆண்களின் காதுகளை ஆணியடித்து, கம்பங்களில் இரவு பூராவும் அவர்களை தொங்கவிட்டு மறுநாள் காலையில் தூக்கிலிட்டனர். வயதானவர்களையும், குழந்தைகளையும் பெரிதாகத் தீமூட்டி அதில் தூக்கியெறிந்தனர்.
நிறை கர்ப்பமாக இருந்த பெண்களின் வயிறுகள் கத்தியால் கிழிக்கப்பட்டு, சிசுக்கள் பறித்தெடுக்கப்பட்டன. பிறகு அந்தக் குழந்தைகளை வைத்து Ôஒரு விளையாட்டுப் போட்டிÕ நடத்தப்பட்டது. அதாவது குழந்தைகளைத் தூக்கி வானத்தில் வீசியெறிய வேண்டும்.
பிறகு கீழே விழும் குழந்தைகளை கத்திகளால் குத்தி Ôகாட்ச்Õ பிடிக்கவேண்டும்!
இவையெல்லாம் மிகச் சிறிய உதாரணங்கள்!
பல்கேரிய கொடுமைÕ பற்றி மேலைநாட்டு சிந்தனையாளர் ஒருவர், Ôஉலகில் வேறு எந்த விலங்கினமும் மனிதனைப் போலக் கற்பனா சக்தியுடனும், கலை நயத்துடனும்
கொடூரங்களை நிகழ்த்துவதில்லை! என்று குறிப்பிடுகிறார்.
உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதை இமானுவேல் கான்ட் சொன்னார்: ஒவ்வொரு மனிதனுக்கும் சுய கௌரவம் உண்டு. அதை மதிக்க வேண்டியது இன்னொரு மனிதனின் அடிப்படைக் கடமை. மனித உறவு என்பது ஒரு இலக்காக இருக்க வேண்டுமே தவிர சுயநலத்துக்கான கருவியாக அதைப் பயன்படுத்தக் கூடாது.
நாம்,| அவர்கள் என்கிற எந்தப் பாகுபாடும் இல்லாமல் யார் அவமானப்படுத்தப்பட்டாலும் அது அருவருப்பான உணர்ச்சியையும் கோபத்தையும் ஒருவனுக்கு ஏற்படுத்தினால் அவன் மனித
சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக மதிக்கிறான் என்று அர்த்தம்.
மற்றவர்களை மதிக்கும் உணர்வு அடியோடு மழுங்கிப் போனதால்தான் ஜாலியன்வாலாபாக்கில் (1919) ஜெனரல் டையர், அமைதியாக பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்த இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டான். தொடர்ந்து பத்து நிமிடங்கள்.
சரமாரியாகச் சுட்டதில் சுமார் ஆயிரம் அப்பாவிகள் செத்து வீழ்ந்தார்கள். இந்தியர்களைச் சுட்டதுதான் நம்மில் பலருக்குத் தெரியும். அந்தச் சமயம் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களை நடத்திய விதம்
கேவலமானது.
அமிர்த்ஸரஸ் நகரில் யாராவது பிரிட்டிஷ் அதிகாரி எதிர்ப்பட்டால் உடனே ஒவ்வொரு இந்தியனும் குடையை மடக்கி, செருப்புகளை கழற்றி ஒதுங்கி நின்று சலாம் என்று சொல்ல வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான் ஜெனரல் டையர். சலாம் சொல்லத் தவறிய இந்தியர்கள் நடுத்தெருவில் மண்டியிட்டு அமர்ந்து அந்த பிரிட்டிஷ் அதிகாரியின் பூட்ஸை நக்க வேண்டும்.
கூடவே பிரம்பால் முதுகில் இரண்டு அடியும் விழும். மரியாதை செலுத்தாத இந்தியர்களின் உடல்மீது பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகள் வெள்ளை சுண்ணாம்பை பிரஷ்ஷால் பூசி அனுப்பினார்கள். (கறுப்பனை நாகரிகமுள்ள வெள்ளையனாக மாற்றுவதாக அர்த்தம்!)
பிரிட்டிஷ் அதிகாரிகள் வசிக்கும் தெருக்களில் செல்லும் இந்தியர்கள் தெருமுழுவதையும் ஊர்ந்தவாறு கடந்து செல்ல வேண்டும் என்றும் ஜெனரல் டையர் ஆணை பிறப்பித்தான். இந்தியன் என்கிற சகமனிதனிடம் இந்த அளவுக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததால்தான் அந்த கறுப்பு நாய்களைச் சுட்டுத் தள்ளுங்கள்!Õ என்று சுலபமாக, சர்வ சாதாரணமாக ஜெனரல் டையரால் ஆணையிட முடிந்தது!
செங்கிஸ்கானுக்கும், கலிக்யூலாவுக்கும், ஜெனரல் டையருக்கும் உடையும், மொழியும்தான் வேறு. மனைப்பான்மை ஒன்றுதான்!
இப்படிப்பட்டவர்கள் முடியரசிலும் அரியணையில் அமரலாம். குடியரசிலும் ஆட்சியைப் பிடிக்கலாம்! எந்தக் காலத்திலும் இது சாத்தியம்!...
கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக் கணக்குப் போட்டால், திடீரென்று கலிக்யூலா அனுபவங்கள் நிகழ்ந்து, நாடே அதில் சிக்கித் தவிக்க நேரிடும்!
ஏதோ அந்தக் காலத்தில், முடியாட்சி இருந்தபோதுதான் இப்படிப்பட்ட கொடூரமான சோதனைகள் பொதுமக்களுக்கு நேரிட்டது என்றும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற மேலிடங்கள் உருவாகியுள்ள விழிப்பு உணர்வு மிகுந்த தற்காலத்தில் சாடிஸம் மிகுந்த சர்வாதிகாரிகள் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அசால்ட்Õடாக இருப்பது அப்பாவித்தனமானது!
ஆப்பிரிக்க நாடான உகாண்டா மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள்