| வித்யாசாகர் |
| - நிர்மலா கணேஷ் |
எந்தையின் கனவு
இன்றும் என் கனவு
பொறியியல் படித்தும்
பணம் செய்யும்
வாழ்வியல் படிக்காததால்
இன்றும் "என்" வீடு கனவே
பணம் செய்யும் மாயம் கற்றாலும்
உணவளிக்கும்
விளை நிலங்களில்
வீடமைக்கும் எண்ணம் எனக்கில்லை
நாளைய உலகம் பட்டினியில் சாகாமலிருக்க
என் வீடு கனவாகவே அமைக...
-
| வெங்கடேஷ் |
-
| பழநி செல்வகுமார் |
| ரிஷ்வன் |
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
| கு.நித்யானந்தன் |
| செம்பூர் நீலு |
| பஃக்ருத்தீன் |
| இரா.ச.இமலாதித்தன் |
| - ரா.காமராசு |
| - பத்மஜா நாராயணன் |
| இரா .இரவி |
| ருத்ரா |
| ருத்ரா |
| புஷ்பா ஜானு |
| அ.இராஜகோபாலன் |
| விவேக் |
| அரவிந்தன் |
| விசாலம் |
| விசாலம் |
| ஆறுமுகம் முருகேசன் |
இன்று சமயம் 6.30p.m. ல்
கடவுளர்களில் சிலர் செத்துப்போவார்களென்ற
உறுதியோடு பேசத் துவங்கினான் நண்பன்
ஏப்ரல் 19-ல் இடது கை மட்டும் போனதில் இக்பாலுக்கு
சிறு வருத்தமும் இருப்பதாய் இல்லை
மேலும் நிறைந்த மகிழ்ச்சியே
என்பதிலெனக்கு சற்று அயர்ச்சியும் கூட
( நான் புதியவன் அவனது இடத்திற்கு என்பதாலும் இருக்கலாம் அயர்ச்சிக்கு )
4.10p.m., சலீமா பள்ளி விட்டுத் திரும்பினாள்
அனாரும் நானும் சலீமாவுடன்
இரயில் விளையாட்டும் யானை விளையாட்டுமாய் மகிழ்ந்தோம்
உறங்கிப்போயிருந்தாள் 5.50p.m.-கெல்லாம் அவள்
எனக்கும் நண்பனுக்குமாய் தேநீர் தயாரிக்கச் சென்றாள் அனார்
தொலைக்காட்சியை ஆன் செய்யச் சொல்லியவாறே இக்பால் தொழுகைக்கு அழைத்தான்
துல்லியமாக 6.30p.m.க்கு கடவுளர்களில் சிலர் செத்தே போய்விட்டனர்
வெடி வெடித்த கனவு வீட்டிற்குள்
சலீமாவும், சற்று முன் கண்கள் சிதைந்த பர்வீனுமாய் ஓடி விளையாடத் துவங்கினர்
இக்பாலும் நானும் அனாரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறோம்
தேநீர் மிகுந்த சுவை உடையதாக இருந்ததென
கவிதை - 025
வீடில்லை, சாலையில் உறங்குகிறேன்
என்கிறான் அவன்.!
காவல்துறையின் அதட்டலுக்கு...
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
அவனுக்கு.!
தான் உறங்கும் இடம்
பறவைகளின் வீடாய் இருந்ததென்று
ஒருகாலத்தில்.!
-
| பிரசாத் வேணுகோபால் |
கவிதை - 026
இரவு விழித்திருக்கும் வீடு
நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய
அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது
இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்
சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்
காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த
உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை
பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்
அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது
மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்
ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன
களைகளகற்றுமுன் வலிய கைகளை
நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது
மூதாதையர் தோண்டிய கிணற்றில்
ஒரு துளி நீரிருக்கவில்லை
நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில்
அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்
அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும்
விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்
தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை
நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை
உன் குடிசைக்கு எடுத்து வருகையில்
மனைவிக்கும் தவறாயெண்ணத் தோன்றவில்லை
விதைக்கும் காலத்தில் சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்
கடன்களாய் முளைத்திருந்தன
உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று
ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை
வெயிலின் முதல் கிரணம் முற்றத்தில் வீழ்ந்த
அன்றினது விடிகாலையில் உன்னோடு ஓய்ந்த பாடல்
எழவேயில்லை உன் வீட்டில்
எல்லோரையும் உறங்க வைத்த அன்றைய இரவு
விழித்திருந்தது என்றென்றும்
-
| ரிஷான் ஷெரீப் |
கவிதை - 027
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்
சமையலறையில் உறைகிறது
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு
ஏறிச் செல்லப் பாதங்களில்லை
கூடத்தில்
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று
காலணி தாங்கும் தட்டு
தடயங்களைக் காக்கிறது
ஒரு தண்ணீர்க் குவளை
தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று
வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி
வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு
என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை
பிரகாசிக்கும் கண்கள்
செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென
ஆகாயம் எண்ணும்படியாக
பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்
கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்
எந்த விருந்தினரின் வருகையையோ
எதிரொலிக்கிறது காகம்
அவர் முன்னால் அரங்கேற்றிடவென
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்
ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது
இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன
காதலின் பெருந்தீபம்
சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு
மௌனத்தைப் பிணைத்திருக்கிறது
என்னிலும் உன்னிலும்
கவிதை - 028
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மா, பலா, வாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.
-
| ஜெயந்தி |
கவிதை - 029
சூரியன் போல்
வெளிச்சம் பாய்ச்சும்
விளக்குகள் நிறைந்த
படிக்குமறையில் நுழைந்து
''எல்லாத்தையும்
மூட்டகட்டிகிட்டியா?” என்றதும்
ஆறுவயது மகன்
அழுதுகொண்டே தலையாட்டினான்.
விலையுயர்ந்த குளியல் தொட்டி
கொண்டிருக்கும்
குளியலறையின் கதவை தட்டி
' போதும்மா… வெளியில் வா!'
என்றதும்
"கடைசியா ஒருதரம்ப்பா”
எட்டு வயது மகளின் குரல்
ஏக்கத்துடன் வெளிவந்தது
பளிங்கு கல் பதித்த
படுக்கையறையில் நுழைந்து-
மனைவியிடம்
"வெயில் மழை தெரியாம
ஒரு வருசம் இருந்தோமா?"
என கேட்க
பெருமூச்சிக்குகிடையில் அவள்;
"ஆமாங்க. ..ஆமாம் "என்றாள்
இரண்டாயிரம் சதுரடி
மாடி வீட்டில்
குடும்பத்தோடு
இத்தனை நாள்
கொத்தனாராகவும்
காவலாளியாகவும்
இருந்தவன்
ஓட்டை குடிசை நோக்கி
குடியேற வேண்டிய வேளை
இந்த புதிய கட்டிடத்திற்கு
புதுமனை புகுவிழா நாளை
-
| புதுவைப் பிரபா |
கவிதை - 030
தன்
தலைவரின்
புதுமனை
புகு விழாவிற்கு
வைக்கப்பட்டிருந்த
பேனர்களை
கெஞ்சிக்
கேட்டு
வாங்கி
வந்த
தொண்டன்
ஒருவன்
சாளகத்தோரம்
கூடாரம்
அமைத்து
குடியேறினான்
| முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் |
| நம்பிக்கைபாண்டியன் |
| காயத்ரி வைத்தியநாதன் |
| சிவ.அசோகன் |
| சிவ.அசோகன் |
| ஸ்நாபக் வினோத் |
| ‘பரிவை’ சே.குமார் |
| ஸ்நாபக் வினோத் |
| ஆசிப் மீரான் |
| எழுதியவர் : பஃக்ருத்தீன் |
கவிதை - 019குறளடி வஞ்சிப்பாவீடென்பது உயிர்வாழ்வதுவீடென்பது உறவானதுவீடென்பது வளந்தருவதுவீடென்பது இறைவாழ்வதுவீடென்பது உயிர்தழைப்பதுவீடென்பது வாசலுள்ளதுவீடென்பது வாழ்வுள்ளதுவீடென்பது மெய்யானதுவீடென்பது ஐம்புலனது-
அரவிந்தன்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பரிசு பெற்ற கவிஞர் களுக்கு வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்,அரும்பானவன்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நன்றி அக்கா!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அப்படின்னா இப்னு ஹம்துன் அண்ணன் பாட்டு மைபாவை விட பேரழிவு ஆயுதமா?? :)))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On 11/10/12, Ahamed Zubair A <ahamed...@gmail.com> wrote:
> அப்படின்னா இப்னு ஹம்துன் அண்ணன் பாட்டு மைபாவை விட பேரழிவு ஆயுதமா?? :)))
>
>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கவிதைப் போட்டி நடந்தது யாவரும் அறிந்ததே. கவிதைப் போட்டிக்கு வந்த கவிதைகள் வரிசையாக இங்கு பதியப் படுகிறது. வாசித்து உங்களின் கருத்துக்களை கருத்துக்களுக்கென தொடங்கும் மற்றொரு இழையில் சொல்லுங்கள்.எல்லா கவிதைகளும் இங்கு வெளியிட்ட பின்னர் , நடுவர்களின் முடிவு அறிவிக்கப்படும்.கவிதை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது நன்றிகளும் & வாழ்த்துக்களும்...நடுவர் சென்ஷிக்கு எங்களது நன்றிகள்...