பண்புடன் ஆண்டு விழா - கவிதைப் போட்டி - கவிதைகள் தொகுப்பு

1,346 views
Skip to first unread message

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 1:18:13 PM10/24/12
to panb...@googlegroups.com
பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கவிதைப் போட்டி நடந்தது யாவரும் அறிந்ததே. கவிதைப் போட்டிக்கு வந்த கவிதைகள் வரிசையாக இங்கு பதியப் படுகிறது. வாசித்து உங்களின் கருத்துக்களை கருத்துக்களுக்கென தொடங்கும் மற்றொரு இழையில் சொல்லுங்கள்.

எல்லா கவிதைகளும் இங்கு வெளியிட்ட பின்னர் , நடுவர்களின் முடிவு அறிவிக்கப்படும்.

கவிதை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது நன்றிகளும் & வாழ்த்துக்களும்...

நடுவர் சென்ஷிக்கு எங்களது நன்றிகள்...

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 1:18:43 PM10/24/12
to panb...@googlegroups.com
கவிதை - 001

எனக்கொரு வீடு இருந்தது..

அங்கே எனக்கொரு போர்வை
எனக்கென ஒரு தலையணை
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..

என் தலையணையிடம் நான் நிறைய
பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன்
தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..

வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும்
நான்கு கைகொண்டு வீடு எனை
அணைத்துக் கொள்ளும்..

எட்டி வெளியே பார்த்தால்
வாசலில் மல்லிகைத் தெரியும்
மல்லிகை வீடெல்லாம் எனக்காக மணக்கும்..

மல்லிகை எனக்கெனப் பூத்திராவிட்டாலும்
தினமும் பூக்கும் மல்லிகைச் செடியொன்று எனக்கென
அந்த வீட்டில் இருந்தது..

அந்த வீட்டில் அப்பா எனக்கு
முத்தமிட்டிருக்கிறார்
அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..

நான் எடுத்த முதல்மதிப்பெண்ணின் அங்கீகாரம்
சந்தோசங்களெல்லாம்
அந்த வீட்டில்தான் புதைந்திருக்கின்றன..

என் தோழி என்னருகிலமர்ந்துப் பேசிய மாலைநேரம்
அவளென் மடியில் சாய்ந்துக் கொண்டு
எனைப் பார்த்த பார்வையின் தருணசுகம்

அவள் புரட்டிப் புரட்டிக் காட்டிய புத்தகத்தின் வாசத்தில்
கலந்திருந்த அந்நாட்களின் ரசனைகள் என
எல்லாமே அந்த வீட்டின் திறந்த கதவுகளைத் தாண்டி
காலத்தால்  மூடப்பட்டுக் கிடக்கிறது..

நான் கண்ட முதல் கனவு
ஒவ்வொரு முடிச்சாக கழன்று விழுந்த
எனக்கும் அந்த வீட்டிற்கான நெருக்கம்
இனி கிடைக்குமா என நான் ஏங்கி நழுவவிட்ட எல்லாமே
அந்த வீட்டிலிருக்கிறது..

அந்த வீட்டில் நான் பிறந்த நொடியின்
கனம் இன்றும்
சந்தோசத்தால் நிறைந்தேயிருக்கிறது..

நான் சத்தமிட்டு சிரித்த சிரிப்புகளையும்
அந்த வீடுவிட்டு வருகையில் அழுத கண்ணீரையும்
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு..

எனக்கென இன்னும் ரெண்டு மனசு அங்கே
ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது..

என் உயிர் எனக்குத் தெரியாமலே
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன?

போகட்டும்,
போகட்டும்தான் ஆனால்
அந்த வீடு ?

அந்த வீடு ஒரு ஏக்கத்தின் பெருமூச்சு
எனக்கென அப்பா அம்மா அண்ணன்
அவர்களுக்கென நான் என ஒரு ஒட்டுமொத்தப் பேரின்
பெருமூச்சில் தான் உயிகொண்டிருக்கிறது அந்த வீடு..

இப்போதும் வருடங்கழித்து அங்கே செல்கையில்
மண்தரையில் கைவைத்து அந்த வீட்டின் நினைவுகளை
களைத்துப் பார்த்துக் கொள்கிறேன்..

ஒரு  தேம்பிய அழையின் கண்ணீர்சிந்தி
அந் நினைவுகளையெல்லாம்
அங்கேயே புதைத்துவிடுகிறேன்..

அந்த வீட்டை நினைவுபடுத்தும் பாடல்
திரைப்படம் தொலைக்காட்சியைக் கூட
இங்கு வந்தால் பார்க்கமறுக்கிறேன்..

ஏதோ கலங்கிய உணர்வினைக் கண்டு
என் குழந்தைகள் கணவர் அத்தையிங்கே விசாரிக்கையில்
ச்ச ச்ச ஒன்றுமில்லையே என சற்றே உதறி விடுகிறேன் அந்நாட்களின்
அவ்வீட்டின் நினைவுதனை

அது கண்ணீராய் அடைபட்டு
என்றேனும் கத்தியழுதுவிடும் ஒரு நாளிற்குள் புதையுண்டுக்
கிடக்கிறது; உள்ளிருக்கும் மரணம்போல்!!

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 1:19:36 PM10/24/12
to panb...@googlegroups.com
கவிதை - 002

அது நாங்கள் வாழ்ந்த வீடு..

எங்கள் வீட்டை
அன்று நாங்கள் வெடிசப்தமில்லா
தருணத்தில் தான் கட்டினோம்..

இன்று அந்த வீடும்
வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும்
சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது
காய்ந்த ரத்தமுமே இருக்கிறது..

நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து
அழுகிறோம்
அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று
எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்..

ஒருவேளை அந்த வீட்டின் உடைந்த சுவரும்
சுவற்றின் ரத்தமூறிய மண்ணும் நாளை
வேறொரு இனத்தின் வீடாக மாறலாம்

மாறியபின் எங்களை வென்றதாக
அந்த இனத்தின் மக்களும் குழந்தைகளும்
பேசிக்கொள்ளலாம் -

ஆனால் அந்த வீட்டின் உயிர்ப்பில்
ஒரு கனவுண்டு 
நாங்கள் கண்ட கனவின் வலியூறியதன் வடு 
அந்த வீட்டின் மண்ணோடு மண்ணாக கலந்துண்டு

அப்படிக் கலந்த
எங்களின் உயிர்பிசைந்த வீடுகளங்கே
அம்மண்ணில் நிறைய இருக்கின்றன -

அவ்வீடுகளால்
அம்மண்ணிலிருந்து மீண்டும் முளைவிடும் எமது சுதந்திரம்
எமது சுதந்திரத்தைக் கொண்டாட 
அன்று அந்த வீடு மீண்டும் எங்களுக்குச் சொந்தமாகும்..
அந்த வீட்டின் சுவர்களுக்கு மீண்டும்
தமிழ்பேசுமெங்கள் குரல் கேட்கும்.. 

அந்த தெரு வழியே போகும் ஜனங்கள்
மீண்டும் நாங்கள் வந்துவிட்டதைக் கண்டு
சிரித்துக் கொள்வார்கள்
மயிர்க்கால் சிலிர்க்க பூரித்துப் போவார்கள்..

அதுவரை
அந்த வீட்டில் அடைபட்டிருக்கும் எங்களின் சிரிப்பொலியும்
நாங்கள் கத்தி கதறி ஓலமிட்ட குரல்களும்
ஒரு மூத்தக் குடியின் விடுதலை வேட்கையும்!!

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 1:22:52 PM10/24/12
to panb...@googlegroups.com
கவிதை - 003

அது ஒரு அழகான
வீடு!

நம் வீட்டு கான்கிரீட் கூடாரத்தைப்போல
அவ்வளவு கடினமானதில்லை

அந்த வீட்டின்
மண்ணாலான
கூடாரம்!

ஆனாலும் அதிகாலை மஞ்சள் சூரியனை
ஒளிபெயர்ப்பதும்
நடுநிசி
மழைத்துளிகளை
ஒலிபெயர்ப்பதும்
அதற்கு அவ்வளவு எளிது!

காக்கைகளுக்கும்
கிளிகளுக்கும்
மட்டுமே
வசப்பட்டுவந்த அந்த
முக்கோண மொட்டைமாடி
ஏதாவதொரு
காரணத்திற்காக
ஏறியிறங்கும்
எடைகுறைந்த
சிறுவர்களுக்கும்
சிலசமயம்
வசப்படும்!

முற்றத்து துளசியில்
கண்விழிக்கும்
கவிதா அக்காவும்
முன்வாசல் திண்ணையில்
கண்ணயரும்
முத்துசாமி
தாத்தாவும்
வடியும் மழைநீரை
வாளியில்
சேகரிக்கும்
கிருஷ்ணவேணி
அம்மாவும்
வாழ்ந்துவந்த
அந்த வீடு
எதுதெரியுமா?

செட்டியாரிடம்
பத்தாயிரம் ரூபாய்க்கு
விற்றுவந்த
எங்கள் கிராமத்து
ஓட்டுவீடுதான்!

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 9:38:10 PM10/24/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கிடக்கிறது; உள்ளிருக்கும் மரணம்போல்!!

வித்யாசாகர்

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 9:39:20 PM10/24/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
ஒரு மூத்தக் குடியின் விடுதலை வேட்கையும்!!

ப்ரியன்

unread,
Oct 24, 2012, 9:40:31 PM10/24/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 003

அது ஒரு அழகான
வீடு!

நம் வீட்டு கான்கிரீட் கூடாரத்தைப்போல
அவ்வளவு கடினமானதில்லை

அந்த வீட்டின்

- நிர்மலா கணேஷ்

ப்ரியன்

unread,
Oct 25, 2012, 11:35:30 AM10/25/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 004

எந்தையின் கனவு
இன்றும்
  என் கனவு
பொறியியல் படித்தும்
பணம் செய்யும்
வாழ்வியல் படிக்காததால்
இன்றும் "என்" வீடு கனவே
பணம் செய்யும் மாயம் கற்றாலும்
 உணவளிக்கும் விளை நிலங்களில்
வீடமைக்கும் எண்ணம் எனக்கில்லை
நாளைய உலகம் பட்டினியில் சாகாமலிருக்க
என் வீடு கனவாகவே அமைக...

வெங்கடேஷ் 

ப்ரியன்

unread,
Oct 25, 2012, 11:36:45 AM10/25/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 005

கடலோடு  உறவாடினோம் 
கடலோடு  விளையாடினோம் 
வலை  நிறைய  மீன்கள்  தந்தது  கடல் 
இனிய  இல்லம்  தந்தது கடல் 
இல்லத்தில்  இன்பத்தை  தந்தது  கடல் 
 
இன்று, 
அலை  பேரலை  எங்கள்  வீட்டை 
சூறையாடி  விட்டது 
செங்கற்களின்  குவியலில்  வீட்டை 
தேடிகொண்டிருக்கிறோம்
 
சிலேட்டை  தேடி  
அலைகிறாள்  தங்கை!
வலையை  தேடி 
அலைகிறார்  அப்பா! 
பாத்திரங்களை  தேடி 
அலைகிறாள்  அம்மா!
பத்தாம்  வகுப்பு  சான்றிதழ் 
தேடி  அலைகிறேன்  நான்!
எங்களை  அலைய விட்டுவிட்டு 
அலை  வீசி  கொண்டிருக்கிறது   கடல்!
 
வெப்ப  காற்று வீசும் 
கடலை  வெறித்து  பார்த்து 
வெறுப்பை  உமிழ்ந்தேன்
என்  உமிழ்  நீரிலும்  
கடல்  தந்த  உப்பு!
  
மீண்டும்  எங்களுக்கு  
வீட்டை  தரும்  
என்ற  நம்பிக்கையில் 
கடலை  கையெடுத்து 
கும்பிட்டேன் !

பழநி செல்வகுமார்

ப்ரியன்

unread,
Oct 25, 2012, 11:39:24 AM10/25/12
to panb...@googlegroups.com
கவிதை - 006

வரைமுறையாய் கட்டிய வீட்டை
அறைஅறையாய் சென்று
கண் குளிர ரசித்தான்...!
அரையாண்டு உழைப்பில்
வானுயர்ந்த தன் கனவை
அணுவணுவாய் புசித்தான்...!
தரைமுதல் தளம் வரை - பல
தலைமுறை தாங்கும்படி
நிலையாய் கட்டுவித்தவன்..!
நரைவிழுந்த அப்பாவுக்கு
நடுக்கூடப் பக்கத்தில் - தனி
அறையை ஒப்புவித்தான்..!
மனைவி மக்களுக்கு
மேல்தள அறைதனை - அவரவர்
விரும்பியபடி தந்தவன்
ஆளுக்கொரு அறையை
ஆளச்செய்து விட்டு
ஆசையாய் கட்டிய இல்லத்தில்
தான் மட்டும் தங்காமல்
தன் பிழைப்பைத் தேடி  - அயல்நாடுக்கு
பொருள் ஈட்ட பறந்து சென்றான்
கட்டிய வீட்டின் கடனை அடைக்க...!

ரிஷ்வன்

காமேஷ்

unread,
Oct 26, 2012, 2:22:12 AM10/26/12
to panb...@googlegroups.com
// மற்றொரு இழையில் சொல்லுங்கள்.//

அந்த இழையை காணோம்.. இதிலேயே சொல்லலாமா ?
இந்த இழை பக்கத்திலேயே அந்த இழையையும் வைக்க கூடாது ?


//

அந்த வீட்டை நினைவுபடுத்தும் பாடல்
திரைப்படம் தொலைக்காட்சியைக் கூட
இங்கு வந்தால் பார்க்கமறுக்கிறேன்..//


முதல் கவிதை சூப்பர்.. வெரி டச்சிங்..
இதிலிருந்து மீளாமலிருக்க அடுத்த கவிதையை இன்னும் படிக்கவில்லை.

.........................




2012/10/25 ப்ரியன் <mailt...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

ப்ரியன்

unread,
Oct 28, 2012, 2:06:57 AM10/28/12
to panb...@googlegroups.com
கவிதை - 007

என் வீடு 
அன்னையின் 
அழகிய கைவண்ணம்...

நிலநடுக்கம்
என்று சொன்னாலே நடுங்கும்...

செழித்த பயிர்களுக்கு நடுவே
பழுத்த இலைகளாலான மாடி வீடு...
மாடி வீடு, 
  என் மனமகிழ்ச்சிக்கு
  நான் வைத்த செல்லப்பெயர்!!!!

மழை பெய்தால் மன்வாசனை
வீதியிலும் 
என் வீட்டிலும்...

சுவர்கள்
கலவையினால் அல்ல
என் கவலைகளால்.......

இரவில் விளக்கேற்றுகிறது
விட்டில்கள்

கதவை திற காற்று வரட்டும்
திறக்கவே வேண்டாம்
வரும்
கிழிந்த கீற்றுகளின் வாயிலாக.......

விதவையின் நெற்றியாய் 
வாசல்
கோலமின்றி
அலங்கோலமாய்.....!

மோட்டுவளையில் எலியும்
கதவோரதில் குருவியும் 
அவ்வப்போது அரவமும்
இவர்களின் கூட்டுகுடித்தனதிற்கு நடுவே
என் ஒண்டிக்குடித்தனம்.....!

வரவேற்பறை சமையலறை படுக்கையறை
யாவும் ஒரேயிடத்தில்
காடுகள் இருப்பதால்
கழிவறையை மட்டும் கழித்துவிட்டேன்...!

என் உயரிய பொழுதுபோக்கு
பொத்தல் அடைப்பது....!

என்னை பாதுகாத்த வீட்டை
நான் பாதுகாக்க மறந்துவிட்டேன்....!

வெட்டியான்களே,
கட்டைத்தேடி சிரமம் வேண்டாம்
என் கட்டையை எரிக்க..
விடைகொடுங்கள்
வீட்டிற்கும் வீட்டிளிருந்த எனக்கும்....
சொர்கமா??
நரகமா??

-  
கு.நித்யானந்தன்

ப்ரியன்

unread,
Oct 28, 2012, 2:07:43 AM10/28/12
to panb...@googlegroups.com
கவிதை - 008

வீடு

இந்த தலைப்பில் எழுத நினைத்தேன்
நினைவலைகள் சென்றது
கடந்த காலம் நோக்கி நான் பிறந்து
வாழ்ந்த வீட்டை நினைத்தேன்
கிராமத்தின் நடுவில் அரை மனை வீடு
திறந்திருக்கும் வாசல் கதவு
வாசல் நிலத்தில் அழியா கோலம்
என் பாட்டி இடும் கோலத்தின் அழகு
இன்றும் நினைவில் வருகிறது
பெருமாள் கோவிலின் மணியடித்ததும்
பெண்கள் ஆண்கள் எல்லோரும்
வீட்டை விட்டு வெளியில் வந்து
தெருவின் நடுவில் நின்று கைகுவித்து
பெருமளாளை வணங்கும் காட்சி
திண்ணையில் நின்றுகொண்டே
அடுத்த வீட்டாருடன் பேசுவது
நல்லது கேட்டது எல்லாவற்றிற்கும்
பக்கத்து மற்றும்  எதிர் வீட்டுடன் பங்கு
கொள்ளும் மனப்பாங்கு
திண்ணையில் இளவட்டங்களின்
அரட்டை , இரவில் பாட்டியின் மடியில்
தலை வைத்து கேட்கும் கதை அப்படியே
ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டது
பண்டிகைகள் ஏராளம் பங்கு கொள்வோம்
அனைவரும் ஒருமித்து
உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
அனைவரும் அழைப்பில்லாமல்  வந்து
போகும் மனப்பான்மை அன்யோன்யம்
கள்ளம் கபடமில்லாத வாழ்க்கை எப்படி
வாழ்ந்தோம் என்ற மகிழ்வான  நினைப்பு
புதிய வீடு கான்கிரீட்டால் உருவாக்கிய
ஜெயில் போன்ற பாசறை
மூடிய கதவு தட்டினால் மட்டும் திறக்கும்
பக்கத்து எதில் வீட்டில் யார் இருக்கிறார்கள்
எப்படி இருக்கிறார்கள் என்ற நினைப்பும்
இல்லாமல் இயந்திரம் போல்   இப்படியும்
வாழுகிறோமே என்று வெட்கி தலை
குனியும் நினைப்பு

-  
செம்பூர் நீலு

ப்ரியன்

unread,
Oct 28, 2012, 2:10:27 AM10/28/12
to panb...@googlegroups.com
கவிதை - 009

வீடென்ப வீடில்லை; வீடென்று சொன்னாலே
  ஓரமைதி மனதுள்ளே குடைவிரிக்கும் இவ்வுலகில்
கூடொன்றில் பறவையினம் கொள்கின்ற மனமகிழ்ச்சி;
  குளக்கரையின் தென்றல்போல் குளிர்ச்சியினை மனங்காணும்
தேடல்கள் வீட்டுக்கே! தெள்ளியநல் வழிமுறையை
   தேர்ந்தெடுத்து நடப்பவர்க்கு தித்திக்கும் வீடுபேறு!
மாடங்கள்; மாளிகைகள்; மண்குடிசை மதிப்பீட்டில்
  மனம்ஏற்றால் அதுவீடு!  மற்றபணம் வெறுந்தாளே!

கருவாகத் தாய்வயிற்றில் குடியிருந்தோம்; காலத்தே
     கண்விழித்தோம் மண்ணிதிலே! கவினுலகம் மறுவீடு
திருவாக ஆனபின்னர் தேடுகின்றோம் தனிவீடு.
    திக்கெல்லாம் அலைந்தாலும் தலைசாய்க்க இடம்வேண்டும்
விருப்பந்தான் வீடாகும்; வெறுப்புகளைப் புறந்தள்ளி
   விழைகின்ற நலம்யாவும் வீட்டுக்குச் சேர்க்குமுன்னே
வருகைக்குச் சான்றளிக்க வீடொன்று எழுப்பிடுவோம்
    வீடென்றால் வீடில்லை; வியப்பளிக்கும் வரலாறே!

எண்ணமதன் வீடாகும் இதயந்தான்; ஏற்றமிகு
   எந்தமிழே வீடென்பேன் கவிதைக்கு. - பெண்ணவளின்
கண்ணதனை வீடென்பார் காதலிப்பார். - கடவுளவன்
   கருணையிலே உறைபவர்தாம் வேறெதனை வீடென்பார்?                  
வண்ணமதன் வீடென்றால் ஓவியந்தான் - வாழ்விதிலே
    வகைவகையாய் வீடுண்டு; வசிப்பனவும் நினைவுகளே!        
சின்னமகள் சிரிப்பழகில் சிலநேரம் வாழ்ந்துவிட்டால்
  சிந்தனையில் வீடென்று சிறப்பதுவும் வேறிலையே! 

கலைநட்பும் வீடாகும்;  கடுமனதும் கனமிழக்க
 கண்ணீரே மனங்கழுவும் கடவுளவன் வீட்டினிலே!
இலக்கிங்கே வீடென்றால் எல்லாமும் வீடுகளே
    இலைப்புழுவா? விண்மீனா? எண்ணம்போல் வாழ்வாகும்
நிலைகொள்ளும் ஓரிடமே நிம்மதியின் வீடென்போம்
   நிலையாமை இவ்வாழ்க்கை நிதர்சனமாய் அறிந்தபின்னே
விலையில்லா வீடென்றால் விண்ணகம்தான் உள்ளபடி
     உயர்வான வீட்டுக்கே விழைந்திடுவோம் பண்புடனே!  

பஃக்ருத்தீன்

ப்ரியன்

unread,
Oct 28, 2012, 12:51:14 PM10/28/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 010

யாரோ ஆண்டவனாம் 
சிலகாலம் மனிதர்களோடு 
வாழ்ந்துவிட்டு போகலாமென 
பூமிக்கு வந்திருப்பதாய்
விடிகாலை கனவில் வந்து 
நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;
அவனைத்தேடி நான் போக எத்தனிக்க 
வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன் 
வாடகைக்கு வீடுத்தேடி 
விசாரித்து கொண்டிருந்தான்;
நான் காலி செய்த வீட்டையே 
அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று; 
வணக்கம் வைத்து வரவேற்று 
அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்!

வள்ளுவனே வாடகைக்கு குடிபுகுந்தால்
குறளில் சொல்லாத நான்காம் அதிகாரம் 
அவனையும் சோதித்து பார்க்கலாம்;     
அறம் பொருள் இன்பத்தோடு  
வீடுபேறே கிடைத்தாலும் 
சொந்த வீடில்லாமால் வாழ்வது வீண் 
என்றிருப்பானென்றேன்! 

மறுதலிப்பு ஏதுமில்லாமல் 
என்னை பார்த்து புன்னகைத்தான் அவன்;
 
விலை நிலங்களெல்லாம் மனைகளாவதற்கு  
வாடகை தந்தும் வசவுகளை வாங்கும் 
இடைநிலை குடும்பத்தினருக்கு   
சொந்தமாய் ஒரு வீடு இல்லாததுதான்
காரணமாய் இருந்திருக்கலாமென்றேன்!

ஒன்றுமே சொல்லவில்லை அவன்
தலையை கூட சற்று தாமதமாகவே ஆட்டினான்;

ஆண்டவனாகவே இருந்தாலும்
வீட்டு உரிமையாளரிடம் 
அடிபணிந்துதான் போகவேண்டுமென்றேன்;  
இதுபோல பல இலவச அறிவுரைகளை 
கேட்டுக்கொண்டிருந்தவன்  
வெகுநேர மௌனத்திற்கு பிறகு
பேச தொடங்கினான்; 
நானே ஆண்டவன் தானென்றான்!
நாரதன் சொன்னது நினைவுக்கு வந்தது 
ஆச்சரியத்தோடு அவனை பார்த்து  
கட்டியணைத்து ஆறுதல் சொன்னேன்
விதி வலியதென்று!

கண்கள் விழித்து பார்த்தேன் 
இப்போதுதான் கனவு முடிந்திருக்கிறது போல;   
உண்மையிலேயே வாசலுக்கு வெளியே 
யாரோ காத்துக்கொண்டிருப்பது போலிருந்தது; 
ஒருவேளை அவர்  
வாடகை வசூலிக்க வந்த 
வீட்டு உரிமையாளராக இருக்கலாம்! 
  
இரா.ச.இமலாதித்தன்

ப்ரியன்

unread,
Oct 28, 2012, 12:52:37 PM10/28/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 011

நாடே இல்லை
எங்களுக்கு ஏது
வீடு ?

நாங்கள் தான்
நாட்டை பிரிக்கும்
பிரிவினைவாதிகள் !

எங்களோடு வாழும்
நாய்களும் கூடவா
பிரிவினைவாதிகள் ?

தமிழன் வீட்டில்
வளரும் நாய்களும் கூட
நடை பிணமாய் ...

ஏதிலிகளாய் 
நாங்கள்
எதிரிகள்
யாருமில்லை
எங்களுக்கு !..

எங்கள்
ரத்த துரோகிகள்
 இருக்கும் வரை !

எங்கள்  வீடு
தாயின்
கருவறையே ......

-
ரா.காமராசு 

ப்ரியன்

unread,
Oct 28, 2012, 12:53:57 PM10/28/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 012

வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்  

ஒரு வீடு யாரையும் எப்போதும்
வெறுப்பதே கிடையாது
அது எல்லா ரகசியங்களையும்
தன்னுளேயே பொதிந்து கொள்கிறது .

வாசற்படியில் கழற்றப் படும்
அப்பாவின் செருப்பு சுமக்கும்
கோபத்திற்கும் உற்சாகத்திற்கும்
மாறி மாறி அது தாங்கு கல்லாகிறது

ஜன்னல் கம்பி தேய தேய
கனவு காணும் அக்காவின்
கன்னங்களின் பாதியை
அது ஏற்றுக் கொள்கிறது

கதவேறி காத தூரம் பறக்கும்
சின்னவனுடன்
யாருக்கும் தெரியாமல் அது
அந்தரங்க சிநேகம் கொள்கிறது

திண்ணை மூலையில்
அவ்வப்போது சாயும் பாட்டியின்
பெருமூச்சுகளின் எண்ணிக்கையை
அது மறப்பதேயில்லை.

மூக்குப் பொடியை
தேய்த்து தேய்த்து கருத்த மூலையில்
தாத்தனின் கண்ணீரையுமது
சுமந்து நிற்கிறது

சும்மாடு கழற்றி
நீர் அருந்தும் மோர்காரக் கிழவியின்
கணக்கனாய் கோடுகள் சுமந்து
அலுக்காமல் சிரிக்கிறது
பல பிறப்பு இறப்பின் ஆன்மாக்கள் 
பெருமூச்சுடன் உலவும் அதன் காமிரா அறை
எப்போதும் வெளிச்சம் கண்டதே இல்லை
இந்த அம்மாவைப் போலவே

படி தாண்டி உள்வரும்
அனைவரையும்
சேர்த்தணைக்கும் தாயாய்
அது அகண்டு புன்னகைக்கிறது .

காசுக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவனுக்கு
விற்கப்பட்டு
வன்புணர்ச்சியாய்  அதன் கதவுகள்
உடைய நேரிடும் போது கூட
வீடு யாரையும் எப்போதும் வெறுப்பதே கிடையாது

ஆயினும் அழிந்த நம் ஆன்மாவை நினைத்து மட்டும்
காலம் கடந்த அதன் கண்களில்
வடிகின்றன  இருசொட்டுக் கண்ணீர் துளிகள்
கால வெள்ளமென .


பத்மஜா நாராயணன் 

ப்ரியன்

unread,
Oct 29, 2012, 2:05:14 PM10/29/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 013

நிம்மதியின் நிகழ்விடம்
நல் மதியின் பிறப்பிடம்
குடும்பங்களின் மகிழ்விடம் 
குதூகலத்தின் சிறப்பிடம்
மங்கையுடன் வாழ்விடம்
மழலைகளின் உறைவிடம்
மனதிற்கு பிடித்த இடம்
உள்ளம் விரும்புமிடம்
உவகை தருமிடம்
ஈடு இணையற்ற இடம்
இன்பத்தின்  இருப்பிடம்
மண்ணில் உள்ள சொர்க்கம்  வீடு
மனிதர்களின் இன்பக்கூடு 

-
இரா .இரவி

ப்ரியன்

unread,
Oct 29, 2012, 2:06:14 PM10/29/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 014

கொழுப்பெடுத்தவன் கொச்சைப்படுத்தினான்
மாட்டுக்கொழுப்பு பன்றிக்கொழுப்பு என்று...
நம் உயிர் மூச்சை.

ஒருவன் கடலையே நீந்தினான்.
ஒருவன் நெஞ்சில் அடி வாங்கினான்.
ஒருவன் மாடுபோல் செக்கிழுத்தான்.
தொழுநோயைக்கூட தன் மீது பூசிக்கொண்டான் ஒருவன்.

மீசை முறுக்கி தமிழ்ப்பாட்டால் வேட்டு முழங்கினான் ஒருவன்.
அந்த ஆகஸ்டு 15 நள்ளிரவு தன் "முதல் இரவு"என்று
தன் முதல் இரவை கடைசி இரவு ஆக்கிக்கொண்டான் ஒருவன்.
அவன் வந்தேமாதரம் என்றது இங்கிலாந்துக்கே பூகம்பம்!

பீரங்கிகள் தூளாகும்படி "பிறப்புரிமை" என கர்ஜித்தான் ஒருவன்.
மூன்று பேராய் ஒரே கயிற்று முடிச்சுக்குள் கரைந்து போனார்கள்.
ஒருவன் கோடிக்கணக்கான மக்களின் இதயமாக துடித்தான்..
தொட்டாக்களின் தோட்டத்தை மார்பில் பதியம் போட்டான்.

நம் தாய் முலைப்பால் லாவாவில்
அந்த "அலிசகோதரர்கள்"கூட அக்கினிப்புயல் தான்
குரானும் கீதையும் அச்சிட ஒரே சுதந்திர ரத்தம் தான்.
ஜாலியன் வாலா பாக்கில் தான் நம் வீடு பூச
ரத்த சாந்து அரைக்கப்பட்டது......வெள்ளை அரக்கர்களால்.
எலும்புகளுடைந்து இதயங்கள் கிழிந்து முளைத்த நம் இனிய வீடு

ருத்ரா

ப்ரியன்

unread,
Oct 29, 2012, 2:07:01 PM10/29/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 015

அடித்தளம் எல்லாம் பகத்சிங் சிவப்புக்கனவுகள்.
எலும்புகள் உடைந்து சுவர் கட்டினோம்.
ஜலியன்வாலாபாக்கில் நம் ரத்த சாந்து..ஒரு
வெள்ளை அரக்கன் அரைத்தது.

தன்"முதல் இரவை"தள்ளிவைத்தான் ஒருவீரன்.
ஒரு ஆகஸ்டு பதினைந்து நள்ளிரவு வரைக்கும்.
இரவு வந்தது..அவன் உயிர்தான் இல்லை!

ஜன்னல்கள் வைத்தோம்
"வந்தேமாதரம்" மூச்சுகள் திறந்து!
வீட்டுக்கூரை தெரியும் முன்னே
வெள்ளைக்கொத்தன் விஷமம் செய்தான்.
நம் இதயம் பிளந்தான்.

கோடி கோடியாய்
நாளங்கள் பின்னின, நரம்புகள் துடித்தன!
ஒன்று திரட்டிய நம் "தந்தையின் மார்பில்"
தோட்டாக்களின் தோட்டம் பதியம் ஆனது.
வேலி விழுந்த பின்னே..இது
இன்னும் வானம் பார்த்த வீடு.
அதனால்
"விடியல்"மட்டுமே இன்னும் பாக்கி!

-
ருத்ரா

ப்ரியன்

unread,
Oct 31, 2012, 8:56:19 PM10/31/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 016

காட்சிக்கு ஒரு நோக்கமில்லை
மனநிலையில் அழுகிறான்!

சிரிக்க வைக்கும் காட்சியில்லை
மனநிலையில் சிரிக்கிறான்

போலச் செய்தலும்
போலிச் செய்தலும்
பிழைப்பென்று காண்

அண்ணனைப்போல் என்னை
போலச் செய்தால் அன்னை
அம்மா என்று அழைத்து
போலச் செய்தேன் நானும்

உற்றுப்பார் இரவுமில்லை  பகலுமில்லை
உணர்ந்துப்பார் உறவுமில்லை பகையுமில்லை
முற்றும்பார் நீயும்மில்லை நானுமில்லை
செத்துபார் புரியுமந்த புத்தநிலை

அதிகம் தேடி அதிகாரம் தேடி
புகழில் நெளியும் புழுவே

அலைவதல்ல ஞானம்
ஆள்வது
அறிவதல்ல ஞானம்
புரிவது

காற்றுக் கோதாத மரங்களில்லை
மனிதரில்லை
கடந்து போகாமல் மாற்றமில்லை
குண்டுசட்டிக்குள் தூரமில்லை தொலைவுமில்லை

கொள்கை தொலைத்தவனுக்கு
கோவிலில் இடமுமில்லை
தலைமுட்டிய குடிசையிலும்
கலைகட்டிய குருவிக்கூடு
தப்பட்டைக்கு பஞ்சமில்லை
கொஞ்ச சிட்டுக்குருவியில்லை

அன்பிலார் பண்பிலார்
அரசியல் கூட்டில்

மிஞ்சியது ஒன்றுமில்லை
அம்மா நகைகள்
அடகு கடையில்
அன்பு நண்பரிடம் கடன்பட்டேன்

புஷ்பா ஜானு

ப்ரியன்

unread,
Oct 31, 2012, 8:57:15 PM10/31/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 018

நெடுந்தூரம் நடந்ததனால் களைப்பு இடையில்
.....நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
....ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
.....கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
.....கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.

'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
......'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
......எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
......அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
......முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.

'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
......தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
.....தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
.....உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
......வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?

சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
......சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாமல் எப்ப டித்தான்
......நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
......பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்தீர்!
பெற்றதனை மறந்தாலும் ஒருநா ளும்முன்
......வற்றலுடல் தாடிமுகம் மறக்கா தையா'! 

-
அ.இராஜகோபாலன்

ப்ரியன்

unread,
Oct 31, 2012, 8:57:56 PM10/31/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 017

ப்ரியன்

unread,
Oct 31, 2012, 8:58:42 PM10/31/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, shyl...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 018

உன் வீட்டு வேலியில்
என் வீட்டு ரோஜாக் கிளை
கத்தியோடு உனர் அப்பா
ஒவ்வொரு காலையிலும்
தலைதுடைக்கும் சாக்கில்
உன் வீட்டு வேலி தாண்டி
என்னைத் தேடும்
உன் பார்வைகள்
யார் வருவாரோ கத்தியோடு ?

-
விவேக்

shylaja

unread,
Nov 1, 2012, 6:13:36 AM11/1/12
to ப்ரியன், panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
மீதக்கவிதைகள்  எங்கே?

2012/11/1 ப்ரியன் <mailt...@gmail.com>



--
shylaja
 
"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்"
 
பாரதி

ப்ரியன்

unread,
Nov 1, 2012, 6:42:20 AM11/1/12
to panb...@googlegroups.com, ப்ரியன், vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
வரும்...

ப்ரியன்

unread,
Nov 1, 2012, 12:27:44 PM11/1/12
to panb...@googlegroups.com, ப்ரியன், vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 019

குறளடி வஞ்சிப்பா
 
வீடென்பது உயிர்வாழ்வது
வீடென்பது உறவானது
வீடென்பது வளந்தருவது
வீடென்பது இறைவாழ்வது
வீடென்பது உயிர்தழைப்பது
வீடென்பது வாசலுள்ளது
வீடென்பது வாழ்வுள்ளது
வீடென்பது மெய்யானது
வீடென்பது ஐம்புலனது

-
அரவிந்தன்

ப்ரியன்

unread,
Nov 1, 2012, 12:28:51 PM11/1/12
to panb...@googlegroups.com, ப்ரியன், vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 020

மறந்த மற்றும்  மறைந்த உறவுகள்

                 கிராமத்தின் அப்பாவின் பூர்வீக வீட்டை 
                        இடித்து புதுவீடு கட்ட முடிவெடுத்தேன் 
                  அம்மாவின் கடைசி விருப்பம் இப்போது
                        தான் நிறைவேற்ற முடிந்தது 
                  அதில் கிடைத்தது ஒரு பழைய பெட்டி
                       அதன் மேல் தாத்தாவின் பெயர் 
                  ஆசையுடன் பூட்டை உடைத்து திறந்தேன்
                       இற்றுப்போன காகிதத்துண்டுகளுடன்
                 அடியிலிருந்தது ஒரு சாக்குப்பை  
                       நன்றாக நூலினால் தைக்கப்பட்டிருந்தது  
                  தையலை பிரித்து பையை திறந்தேன் 
                       அதனுளளில் இன்னொரு துணிப்பை
                 அதனுள் அழகாக மடித்து வைக்கப்பட்ட 
                       போஸ்ட் கார்டுகள் இன்லண்டு லெட்டர்கள் 
                 கவர்களுடன் காகிதங்கள் எல்லாமே 
                       கருப்பு மையினால் எழுதப்பட்டிருந்த  
                  எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தது                  
                       ஆவலுடன் ஒரு போஸ்ட் கார்டினை 
                  படிக்கத் துடங்கினேன்  கண்களில் பெருகியது 
                       கண்ணீர   அடக்கமுடியவில்லை 
                  ஆவலுடன் ஒவ்வொன்றாக எடுத்து 
                       படிக்கத் துடங்கினேன் படித்தேன்     
                 தாத்தா பாட்டிக்கு அவர்களின் உறவினர்கள் 
                        எழுதிய கடிதங்களின் வரிகளில் 
                 பாசத்தின் அன்பின் அழுத்தத்தை கண்டேன் 
                        எப்படியிருந்தார்கள் அந்த கால உறவினர்கள் 
                அன்று பணம் இல்லை ஆனால் பாசத்திற்கும்
                        அன்பிற்கும் குறைவில்லை இருப்பதை 
                எல்லோருக்கும் கொடுத்து  பகிர்ந்து கொள்ளும் 
                        மனப்பாங்கு தன்னிடம் இருந்த பட்டுப்புடவைகள் 
                ஒன்றிரண்டு நகைகள் எல்லாவற்றையும் 
                        உறவினர்களுடன் பகிர்ந்துகொண்டு  அவர்கள் 
                முகத்தின் மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் 
                        நினைத்துப் பார்த்தேன் சிந்தித்தேன்  
                எங்கு போயிற்று அந்த பாசமுள்ள உறவுகள்  
                        மாமன் மாமி, அத்தை , அத்தான் , அக்கா 
               அத்தங்கார் , அம்மங்கார் எல்லாமே 
                        மறந்தும்  விட்டது  மறைந்தும்  விட்டது
               மிஞ்சியது அங்கிள் ஆண்டி , கஸின்
                        வாய்விட்டு ஆசையுடன் அழைக்க 
                மனது இல்லை  அப்படி அழைத்தாலும் பதிலுக்கு
                        சொல்வதற்கு  வார்த்தையில்லை 
                கலியாணம் கருமாதி எல்லாமே காண்ட்ராக்ட் 
                        மரியாதையையும்   காண்ட்ராக்ட்  
                வாய்விட்டு சிரிப்பதற்கு மனதில்லை 
                        மனதுவிட்டு  அழுவதற்கு  உறவு இல்லை 
                எல்லாமே மாயமாய் மறைந்துவிட்டதே

ப்ரியன்

unread,
Nov 1, 2012, 12:33:13 PM11/1/12
to panb...@googlegroups.com, ப்ரியன், vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 021

வாடகையில்லா வீடு இது .
வந்து தங்க  பாடு இது .
பத்து மாத கால  அவகாசம் தான் ,
பாதியில் காலி செய்ய  வினாசம் தான் .
மாதாமாதம்   ஒரு   புது அனுபவம் ,
மாதுவுக்கு  கிடைக்கும்  அத்புத வைபவம்.
தாய் என்ற பதவிக்கு  இந்த   மனை ,
தங்கச்செல்வம் தங்கும் அரண்மணை
அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் தரும் .
அப்பா ,அம்மா உறவும் அங்கு   வலிவாகும் .
இன்பம்  சேர்க்க  ஒரு அதிசய மனை
இடம் கிடைக்காவிட்டால் அது  அவரவர் வினை.

-
விசாலம்

ப்ரியன்

unread,
Nov 1, 2012, 12:33:53 PM11/1/12
to panb...@googlegroups.com, ப்ரியன், vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 022

மகனின் பிறந்த நாள்.
"என்னவேண்டும் மகனே "என்றேன்
அழகான வீடு வேண்டுமென்றான்
தந்தை இல்லாத  செல்ல மகன்.
எல்லா பணமும் போட்டேன் .
வங்கியில் கடனும் வாங்கினேன்.

 இதோ எழுந்து நிற்கிறது ,
அழகான ஒரு வீடு
 என் ,அன்பு மகனுக்கு,

பார்த்துப் பார்த்து இழைத்தேன் ,
அவன் ருசியில் கட்டினேன் ,
ஒவ்வொரு அறையும்  பேசும் ,
என் மகனின்  வாசனை  வீசும்
சுவற்றில் பல விசிறிகள்
"ஜாக்கி சேனனின்  போஸ்டர்கள்
கூடவே டென்னிஸ் வீரர்கள்
அழகிய கிரிக்கெட் மன்னர்கள்,
மனம் பிடித்து வசித்தோம் ,
ஒரு வருடம்   மகிழ்ந்தோம்.

மேலே மேலே படிப்பு ,
ஹாஸ்டலில்  இருப்பு ,
அவன் அறை என்றும் காலி,
எல்லாமே ஒரே  போலி, ,
பல பொருட்களில்,அவன் நினைவு ,
எப்போதும்  அவன் கனவு   ,
கிடைத்தது வேலை அயல் நாட்டில் ,
தனித்திருந்தேன் நான் நம்  நாட்டில்
முதலில் வந்தன அன்பு கடிதங்கள் ,
கூடவே வந்தது திருமணப்படங்கள்
அவன்  அறை என்னைப் பார்த்து சிரித்தது
என் ஏக்கத்தை அது ரசித்தது ,
வருடங்கள் உருண்டன ,
கண்ணீரும் பெருகின
கீதைக் கண்களைத் திறந்தது
தாமரை இலைப் போல்
ஞானம் பிறந்தது
மாயையை உணர்ந்தது ,
பற்றுடன் பற்றற்றவளானேன்
கடமைச் செய்யும் தாயானேன் ,
எங்கிருந்தாலும்  வாழ்க
உன் நினைவில் நான்  மலர்வேன்,
பெறவேண்டும் நான் அந்த வீடு
விற்க இருப்பது இந்த வீடு  .

-
விசாலம்

ப்ரியன்

unread,
Nov 1, 2012, 12:47:22 PM11/1/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 023

அவள்
குளியலறையில் தூக்கு மாட்டிக்கொண்ட வீட்டினுள்
ஒரு மிகிழ்வான இசை சலிக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது
நான் கடக்கும் சமயங்களிலெல்லாம்

அனாரின் குழந்தைகள் இடம்பெயர்ந்து விட்டன

கைகளைப்பற்றி அழுந்த முத்தமிட்டபடி 
அந்த இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்
தோழி
முன் எப்பொழுதும் போலல்லாததாக இருந்தது அது
மனம் அத்தனை லேசாக இருப்பதாக
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்

விடியற்காலையில் நான் திரும்பியிருந்தேன்
எனது வீட்டில் பர்வீனா காத்துக்கொண்டிருப்பாள்

அன்று நான் அனாரை சந்திக்காமல்
இருந்திருக்கலாம்   

-
ஆறுமுகம் முருகேசன் 

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:38:35 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 024

இன்று சமயம் 6.30p.m. ல்

கடவுளர்களில் சிலர் செத்துப்போவார்களென்ற

உறுதியோடு பேசத் துவங்கினான் நண்பன்

ஏப்ரல் 19-ல் இடது கை மட்டும் போனதில் இக்பாலுக்கு

சிறு வருத்தமும் இருப்பதாய் இல்லை

மேலும் நிறைந்த மகிழ்ச்சியே

என்பதிலெனக்கு சற்று அயர்ச்சியும் கூட

( நான் புதியவன் அவனது இடத்திற்கு என்பதாலும் இருக்கலாம் அயர்ச்சிக்கு )

4.10p.m., சலீமா பள்ளி விட்டுத் திரும்பினாள்

அனாரும் நானும் சலீமாவுடன்

இரயில் விளையாட்டும் யானை விளையாட்டுமாய் மகிழ்ந்தோம்

உறங்கிப்போயிருந்தாள் 5.50p.m.-கெல்லாம் அவள்

எனக்கும் நண்பனுக்குமாய் தேநீர் தயாரிக்கச் சென்றாள் அனார்

தொலைக்காட்சியை ஆன் செய்யச் சொல்லியவாறே இக்பால் தொழுகைக்கு அழைத்தான்

துல்லியமாக 6.30p.m.க்கு கடவுளர்களில் சிலர் செத்தே போய்விட்டனர்


வெடி வெடித்த கனவு வீட்டிற்குள்

சலீமாவும், சற்று முன் கண்கள் சிதைந்த பர்வீனுமாய் ஓடி விளையாடத் துவங்கினர்

இக்பாலும் நானும் அனாரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறோம்

தேநீர் மிகுந்த சுவை உடையதாக இருந்ததென

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:39:13 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com

கவிதை - 025


வீடில்லை, சாலையில் உறங்குகிறேன்

என்கிறான் அவன்.!

காவல்துறையின் அதட்டலுக்கு...

தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

அவனுக்கு.!

தான் உறங்கும் இடம்

பறவைகளின் வீடாய் இருந்ததென்று

ஒருகாலத்தில்.!


-

பிரசாத் வேணுகோபால்

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:40:08 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com

கவிதை - 026


இரவு விழித்திருக்கும் வீடு


நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய

அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது

இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்

சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்

காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த

உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை


பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்

அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது

மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்

ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன

களைகளகற்றுமுன் வலிய கைகளை

நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது

மூதாதையர் தோண்டிய கிணற்றில்

ஒரு துளி நீரிருக்கவில்லை


நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில்

அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்

அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும்

விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்


தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை

நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை

உன் குடிசைக்கு எடுத்து வருகையில்

மனைவிக்கும் தவறாயெண்ணத் தோன்றவில்லை

விதைக்கும் காலத்தில் சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்

கடன்களாய் முளைத்திருந்தன

உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று

ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை


வெயிலின் முதல் கிரணம் முற்றத்தில் வீழ்ந்த

அன்றினது விடிகாலையில் உன்னோடு ஓய்ந்த பாடல்

எழவேயில்லை உன் வீட்டில்

எல்லோரையும் உறங்க வைத்த அன்றைய இரவு

விழித்திருந்தது என்றென்றும்


ரிஷான் ஷெரீப்

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:41:21 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com

கவிதை - 027


எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று

வர்ணத் திரைச்சீலைக்கப்பால்

சமையலறையில் உறைகிறது

வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்

யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு

ஏறிச் செல்லப் பாதங்களில்லை


கூடத்தில்

வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது

பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று

காலணி தாங்கும் தட்டு

தடயங்களைக் காக்கிறது


ஒரு தண்ணீர்க் குவளை

தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று

வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி

வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு

என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை


பிரகாசிக்கும் கண்கள்

செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென

ஆகாயம் எண்ணும்படியாக

பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்

கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்


எந்த விருந்தினரின் வருகையையோ

எதிரொலிக்கிறது காகம்

அவர் முன்னால் அரங்கேற்றிடவென

வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்

ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது


இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன

காதலின் பெருந்தீபம்

சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு

மௌனத்தைப் பிணைத்திருக்கிறது

என்னிலும் உன்னிலும்

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:42:26 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com

கவிதை - 028


வாசலிலே நிதம் பூத்து

இதமான மணம் பரப்பும்

நித்ய மல்லிக்கொடி,

வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த

நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,

விசாலமான அறைகள்,

வீடு நிறைய மனிதர்கள்,

தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,

சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,

கருவண்டு கண்கள் சுழற்றி

நொடிக்கொரு சேட்டை செய்யும்

குஞ்சு குளுவான்கள்,

புது மனிதர் வருகையை

கட்டியம் கூறும்

பைரவர் வாசலிலே,

கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்

எப்போதும் வற்றாத கிணறு,

மா, பலா, வாழை மரங்கள்,

தினத் தேவை பூர்த்தி செய்யும்

காய்கறிச் செடிகள்,

இப்படி என் பிறந்த வீடு போலவே

புகுந்த வீடும் இருக்கும்

என்ற கனவுகளுடன்

கை பிடித்த மணாளனுடன்

மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து

நிலம் பதித்து புது வீடு

வந்து சேர்ந்தேன்.

ஒன்றல்ல, இரண்டல்ல

எண்ணிலா புறாக்கூண்டுகள்

விருந்தினர் வருகையை

சூசகமாகத் தடுப்பது போல்

ஒற்றைப் படுக்கையறை,

பக்கத்து வீட்டில் இருப்பது

யார் என்று தெரியவே

பல நாட்களாயிற்று.

வாசலில் வந்து பார்த்தாலும்,

சாளரத்தின் வழியே பார்த்தாலும்

கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!

காய்கறி வண்டிக்காரன்,

விற்பனையாளன்,

அறிமுகம் இல்லாதவர்

அனைவருமே நிறுத்தப்பட்டனர்

வெளி வாசலிலேயே

பாதுகாப்பான இடம்

தண்ணீர் வசதி

எப்பொழுதும் மின்சாரம்

அன்பான கணவன்

இல்லை என்ற சொல்லுக்கே

இடமில்லாத ஒரு வாழ்க்கை

ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.

அடியே! நீ ஒரு

தங்கக் கூண்டுக்கிளி’ என்று.


ஜெயந்தி

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:43:22 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com

கவிதை - 029


சூரியன் போல்

வெளிச்சம் பாய்ச்சும்

விளக்குகள் நிறைந்த

படிக்குமறையில் நுழைந்து

''எல்லாத்தையும்

மூட்டகட்டிகிட்டியா?” என்றதும்

ஆறுவயது மகன்

அழுதுகொண்டே தலையாட்டினான்.


விலையுயர்ந்த குளியல் தொட்டி

கொண்டிருக்கும்

குளியலறையின் கதவை தட்டி

' போதும்மா… வெளியில் வா!'

என்றதும்

"கடைசியா ஒருதரம்ப்பா”

எட்டு வயது மகளின் குரல்

ஏக்கத்துடன் வெளிவந்தது


பளிங்கு கல் பதித்த

படுக்கையறையில் நுழைந்து-

மனைவியிடம்

"வெயில் மழை தெரியாம

ஒரு வருசம் இருந்தோமா?"

என கேட்க

பெருமூச்சிக்குகிடையில் அவள்;

"ஆமாங்க. ..ஆமாம் "என்றாள்


இரண்டாயிரம் சதுரடி

மாடி வீட்டில்

குடும்பத்தோடு

இத்தனை நாள்

கொத்தனாராகவும்

காவலாளியாகவும்

இருந்தவன்

ஓட்டை குடிசை நோக்கி

குடியேற வேண்டிய வேளை


இந்த புதிய கட்டிடத்திற்கு

புதுமனை புகுவிழா நாளை


புதுவைப் பிரபா

ப்ரியன்

unread,
Nov 5, 2012, 8:44:19 AM11/5/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com

கவிதை - 030


தன் தலைவரின்
புதுமனை புகு விழாவிற்கு
வைக்கப்பட்டிருந்த பேனர்களை
கெஞ்சிக் கேட்டு
வாங்கி வந்த
தொண்டன் ஒருவன்
சாளகத்தோரம்
கூடாரம் அமைத்து
குடியேறினான்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:53:20 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 031

இருப்பைச் சொல்வேன் ஈரடியில் :

உனக்கென வேண்டும்ஓர் துண்டுநிலம்; சுண்டெலிக்கும்
தங்கும் வளைதான் பலம்

திரண்டுருண்டு பேருவம் கொண்டு மிரட்டவரும்            
வீட்டின்மேல் வாங்கும் கடன்                                       

அமைதியாய் வீடும் அமைந்துவிட்டால்; சுற்றிச்
சமைவ(து) அனைத்தும் விருந்து

ஓட்டை அடைக்காமல் உள்வீட்டின் சூட்டைக்
கிளப்பினால் தீங்க(து) உனக்கு

வீட்டை அடகாக்கி வாங்கித் திளைப்போர்க்குக்
’கேட்’டில் இடமுண்(டு) உணர்

- துரையன்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:54:09 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 032

அப்பாவை இழந்த பிறகு
அவர் வாழ்ந்த வீட்டில்
காலடி எடுத்துவைக்கிறேன்
’வாம்மா’ என்கிறது வாசல்படியில்
வாத்சல்யமான அப்பாவின் குரல்!
 
கூடத்திற்கு வந்ததும்
பின்கட்டுப்பக்கம் தலை திருப்பி,’
‘குழந்தை வந்திருக்கிறாள் குழந்தைகளுடன்’
அடுக்களையில் இருக்கும்
அம்மாவின் செவிகளுக்குசென்று
விழும்படி உரக்ககூவுகிறது
 அப்பாவின் உற்சாகக்குரல்!
எத்தனை வயதாலும் பெற்றோருக்கு
 நாம்குழந்தைகள்தான்!
 
”மாப்பிள்ளை வரவில்லையா
அவருக்கு ஆபிசில் ஆயிரம் வேலை இருக்கும் பாவம்”
தன்  கேள்விக்கு தானே பதில் சொல்லிக்கொண்டு
‘ஏதும் சாப்பிட்டுவாம்மா பி்றகு பேசுவோம்’
 
ஊஞ்சலில் அமர்ந்தபடி அப்பாவின் அன்புக்குரல்
 
’மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்’

பூஜை அறையில் அப்பாவின் கணீர்க்குரல்

’உன் கையால்  அந்த  மிளகுரசம் சாப்பிடவேண்டும் அம்மா’.
சாப்பிடும்போது கெஞ்சுதலான  நேசக்குரல்!
 
படுக்கும்போது அருகில் அமரச்சொல்லி
பாரதி பாட்டினைபாடக்கேட்டு
பரவசத்தில்  கண்கள் பனிக்க
பாரதியைப்போற்றிப்புகழ்ந்த குரல்!

நினைவுகளை  மட்டுமல்ல
குரல்களையும் பரப்புவதில்
வீடுகள் தவறுவதில்லை.

- ஷைலஜா

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:54:55 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 033

பாடுபொருள் வீடெனவே பணித்ததொரு குழுமம்
பாடிடவே நானும்வந்தேன் பாரினிலோர் கவிஞன்
கூடிவாழும் வாழ்க்கையினைக் கற்றுத்தரும் வீடு
மாடியென்ன கூடமென்ன மகிழ்ச்சிதரும் வீடு

ஆடிடவும் பாடிடவும் அனுமதிக்கும் வீடு
வாடிநின்ற போதினிலே வருடிவிடும் வீடு
தேடிவரும் எதிரியையும் தங்கச்சொல்லும் வீடு
ஓடிவிளை யாடிடவே உறவுதந்த வீடு

அன்புதனைக் குறைவின்றி அள்ளித்தரும் வீடு
கண்களிலே தூசிபட்டால் கலங்குமிந்த வீடு
தன்னலமே கருதாமல் தாங்கிநிற்கும் வீடு
அன்னைதந்தை அக்காதம்பி உறவுகளின் கூடு

பத்துமாதம் தன்மகவை பத்திரமாய்க் காத்துவந்து
பத்தியமும் தானிருந்து பசிவலியைப் பொறுத்தேதான்
செத்துச்செத்துத் தான்பிழைத்து சிரமங்கள் பலஏற்று
நித்திலமாய் ஓர்மகவை நெடுவீட்டில் பிரசவிப்பாள்

அன்புடனே தன்மகவை அள்ளிமுத்தம் தந்திடுவாள்
தன்வலியைப் பொறுத்தேதான் தாலாட்டிப் பாலூட்டிக்
கண்களுடைக் கருமணிபோல் கருத்துடனே காத்திடுவாள்
அன்புநிறை தந்தையவன் அதட்டலுடன் வளர்த்திடுவான்

அத்தைமாமன் தாத்தாபாட்டி அன்புநிறை வீடு
எத்தனையோ உறவுகளை நாம்பெற்ற போதும்
முத்தமிடும் காதலியும் மனைபுகுந்த போதும்
சித்தமதில் நிழலாடும் சமுதாயக் கவலை

தாய்நிலத்தில் தனக்கென்று வீடின்றி நம்தமிழன்
மாய்ந்தானே ஈழத்தில் மருந்திடுமா எதிர்காலம்?
வாயில்லாப் பூச்சிபோலே வாழ்கின்றோம் தமிழகத்தில்
வாய்திறந்து வழக்காடிக் காத்திடவே முடியவில்லை

நாதியில்லா ஏழைகட்கு நடைபாதை வீடு
ஜாதியில்லாச் சமுதாயம் நாமமைப்போம் பாடு
நத்தையாரின் முதுகிலேயோர் நல்லதொரு கூடு
முத்தமிழைப் போற்றுவோர்க்கு தமிழகமே வீடு

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:55:43 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 034

அம்மா அப்பா
அண்ணன் தங்கை
அக்கா தங்கை
மாமா அத்தை
சித்தி சித்தப்பா
பெரியம்மா பெரியப்பா
மைத்துனன் மைத்தினி
கொளுந்தியா கொளுந்தன்
தாத்தா பாட்டி
எத்தனையோ
அழகிய உறவுகளோடு
வாழும் மாந்தர்களிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
அன்பினை வாரிவாரி வழங்கும்
உறவுகளின் உன்னத இடமே
வீடு

வறுமையின் பிடியில்
வாழுமிந்த ஏழைகளிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
நடைபாதையே வீடென்று

வியர்வைசிந்தி உழைக்கும்
பணத்தையெல்லாம்
வீணாய்த்தான் மதுவாங்கி
குடிக்கின்ற ‘குடி’மகனிடம்
‘வீடெது உனக்கு?’ என்று
கேட்டால் பதில்வரும்
டாஸ்மாக்கே வீடென்று

சிங்கள வெறிநாய்களால்
சிதிலமடைந்த உடலுறுப்புகளோடு
உறவுகளை இழந்து
உடமைகளை இழந்து
உரிமைகளை இழந்து
நிர்கதியாய் நிற்கும்
நம்ஈழத்தமிழ் சொந்தங்களிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
மனிதநேயம் கொண்டு
எங்களை ஆதரிக்கும்
மாந்தர்களின் கருணைமிகு உள்ளமே
எங்களின் வீடென்று

இறையைமட்டுமே அனுதினமும்
துதித்து வாழும்
பக்தர்களிடம் மதக்குருமார்களிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
கோயிலே வீடென்று

கட்சி வளர
மாடாய் ஓடிஉழைத்து
செருப்பாய்த் தேய்ந்து
கொடிபிடித்து கோசமிடும்
தொண்டர்களிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
தலைவனின் வீட்டுவாசலே
தன்வீடென்று

பிள்ளைகளால் கைவிடப்பட்ட
முதியோர்களிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
முதியோர் இல்லமே வீடென்று

தமிழரையே நேசிக்கும்
தமிழையே சுவாசிக்கும்
கவிஞர்களிடம்
‘வீடெது உங்களுக்கு? ’என்று
கேட்டால் பதில்வரும்
தாய்த்தமிழ்நாடே வீடென்று

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:56:38 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 035

நீ இல்லாத நம் வீடு!

நீ
ஊருக்குச்சென்ற
நாளொன்றில்
உனக்கான முத்தங்கள்
அனைத்தையும் வாங்கி
சிரித்துக்கொன்டிருக்கிறது !
வீட்டிலிருக்கும்
உன் புகைப்படம்!
                 *
நேரத்தில் சாப்பிடு
நேரத்தில் தூங்கு" என
எளிதில் சொல்லிவிடுகிறாய்
தொலைபேசியின் வழியே
நிச்சயம் முடிவதில்லை
நீ இல்லாத நாட்களில்!
                 *
நீ அருகிலிருந்து கொடுக்கும்
நூறு முத்தங்களின் மகிழ்ச்சியை!
தொலைபேசி பேச்சின்
முடிவில் கொடுக்கும்
ஒற்றை முத்தம்
கொடுத்துவிடுகிறது!
                  *
நீ அருகிலிருந்து
ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களிலும்
அமைதியான வீடாக உணர்ந்து
எளிதில் தூங்கிவிடுகிறேன்!
நீ ஊருக்குச்சென்ற நாட்களில்
தனிமையில் இருந்தாலும்
இரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து
தூக்கமின்றி தவிக்கிறேன்!

நம்பிக்கைபாண்டியன்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:58:02 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 036

நினைவு பொக்கிஷங்களை
சுமந்த படி 
என் பாழடைந்த வீடு....
நினைவுகள் பின்னோக்கி 
பயணிக்க அமர்ந்தேன்
வீட்டு திண்ணையில்....

இதே இடம் தான்
என் தாத்தாவும் 
பக்கத்து வீட்டு வாண்டு
மலரின் தாத்தாவும்
உரையாடும் இடம்... 

தள்ளாத வயதிலும்
பாங்கோடு வீட்டை
பராமரிக்கும் 
என் பாட்டிக்கு தான்
விடுமுறை என்றால்
மிக இன்பம்... 

மழழை செல்வங்களையும்
மக்கட்செல்வங்களையும்
எதிர் நோக்கி
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருக்கும் தாத்தா...

விடுமுறைக்கு ஊருக்கு
வரும் போதெல்லாம்
என்னை எதிர்பார்த்து
காத்திருக்கும் 
என் அத்தை மகள்... 

அன்று குழந்தைகள்
நாங்கள் சண்டையிட்டு
குழுவாக பிரிந்தோம்...
விளையாட்டுக்கு கூட
சண்டை வேண்டாம்
சொன்னார் தாத்தா...  

இன்று ஆளாளுக்கு
சண்டையிட்டு 
கூறு போட்ட வீட்டை
பாழடைய விட்டனர்...
சண்டை வேண்டாம்
என சொல்ல இன்று
இல்லை தாத்தா... 

முதுகெலும்பு இல்லாத 
நாற்காலியில்
உடைந்து நொறுங்கி 
வாரிசுகளை எண்ணி 
கண்ணீர் வடிக்கிறார் 
எங்கள்  தாத்தா !!!

- ருக்மணி

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:58:46 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 038

பாசமெனும் கல்லும்,
மண்ணுமெடுத்து..
வியர்வை நீரூற்றி
குழைத்து..
உள்ளத்து உணர்வுகளுக்கு
அழகிய உருவம் கொடுத்து
உயிரோட்டமாய் வீடமைக்க...

இல்லாள் இல்லா இல்லம்
இல்லமுமாகும...??

இன்முகத்துடன்
இனியவளாய் இல்லாள் அமைய
வண்ணமிகு சுவற்றினிலே
வாஞ்சையாய்
கிறுக்குவதற்கு
மழலைச்செல்வங்களும்....

வாழ்க்கையில் வழிகூற
வயோதிகப் பெற்றோரும்
உடனிருக்க...

நேர்மைப்பாதையில்
நிமிர்ந்த நெஞ்சோடு
உழைத்துவரும்
ஆடவனுமாய்..
இல்லத்தோட்டத்தில்

எங்கும் இன்பம் பூத்துக்குலுங்கும்
இன்பநாளுக்காய்
ஏக்கமுடன் காத்திருக்கிறேன்..!!
காயத்ரி வைத்தியநாதன்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 12:59:18 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 037

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:00:27 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 038

மனிதன்:
சிட்டுக்கும் சிறுவீடு கட்டும் திறனை
சிந்தைக்குள் பூட்டி வைத்த இறைவா
எட்டடுக்கு மாளிகை எமக்கு வேண்டா
எட்டுக்குப் பத்து போதும் ஒழுகாமல்
இறைவன்:
சிட்டுக்கும் பன்மடங்காய் சிந்தை வைத்தேன்-நீ
கட்டுக்குள் அடங்காத ஆசை வைத்தாய்
யானென்றும் எனதென்றும் பிரிவினை செய்தாய்
நானொன்றும் செய்வதற்கு இல்லை மனிதா

சிட்டுலகில் போட்டியில்லை பொறாமை இல்லை
கட்டுவதும் ஒருவீடு பற்பல இல்லை
திட்டமில்லைத் திருடுதற்கு; சட்டமில்லைத் தடுப்பதற்கு
நட்டக்கல் எல்லையில்லை, நாடுமில்லை தலைமையில்லை.

சந்ததிக்கு சேர்ப்பதில்லை சார்ந்தவையும் வாழ்வதில்லை
சிந்தனைக்கு வேலையில்லை தற்கனத்தில் வாழ்வதினால்
முந்தைவினை சுமையில்லைக் கணம்கணமும் பிறப்பதினால்
நிந்தைஎனை செய்யாதே உன்நிலைக்கு நீ பொறுப்பு.

சிவ.அசோகன்


ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:01:22 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 039

சுவரும் கூரையும் வீடு-உடன்
உறவும் உரிமையும் இல்லம்.
தவறுகள் என்பது இருக்கும்-நீ
தண்மை கொள்வது சிறப்பு.

இல்லத்தில் நல்லறம் மலர-இந்த
உலகத்தில் நல்லறம் வளரும்
பள்ளத்தில் வீழ்ந்தோர் உயர்வர்-அந்தப்
பாறை மீதவர் அமர்வர்

உலகம் என்பது தொகுவீடு-நம்
தேசம் அதிலோர் பகுவீடு
கலகம் செய்தால் தொகுப்பழியும்-நம்
கன்னத்தில் கண்ணீர் கோலமிடும்.

சட்டம் என்பது எதற்கு?-நீ
சமத்துவ நெறியினில் நடந்தால்
வட்டம் என்பது ஆட்சிக்கு-அது
வேண்டுமா மனித மீட்சிக்கு?

சிவ.அசோகன்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:02:51 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 040

(கிராமத்து கிடிசை வீடு)
 
எங்கள் வீடு 
அன்பு பாசம் மகிழ்வு எழில்மிகு குடிசை வீடு
 
சுற்றிலும் ஆற்று கால்வாய், ஏரி, குளம், கிணற்று நீர் பாய்ச்சும்
பசுமை நெல் விளையும் வயல் காடு
 
அதுவும் தாண்டி புளியமரம், பனைகளோடு
கடலை பயிறு விளையும் புன்செய் காடு
 
பள்ளி முடித்து விடுமுறையில் இரவுவரை
வீட்டு முற்றத்தில் தோழி தோழர்களோடு விளையாட்டு
 
வீட்டைசுற்றி அழகு மரங்கள் நட்டு
நீர் ஊற்றி வளர்ப்போம் மெனக்கெட்டு
பசுமை துளிர்ந்து பூக்கள் மலர்வதைக் கண்டு 
இசையாக வாழ்வு செல்லும் மகிழ்வோடு
 
ஒட்டி ஒட்டி படுத்தும் கனவில் விரிக்க
அம்மா பாடுவாள் நிலாப் பாட்டு
நிம்மதியாய் தூங்குவோம் அதைக் கேட்டு
 
நிலமிருந்தும் அதோடு அம்மா அப்பாவிற்கு அடுத்த தோட்டத்திலும் வேலை
இருந்தும் வசதிகள் இல்லை தினம் பலகாரம் இல்லை
ஆயினும் எங்கள் குலசாமி கோடை என்றால்
அப்பா வாங்கிவருவார் புத்தாடையோடு வெட்டு
எங்களுக்கோ வானத்தில் மிதப்பதாய் உணர்வு
வேட்டை நண்பர்களோடு வெடித்து
புத்தாடையை உடுத்தி ஊரெங்கும் காட்டி அந்த நாள் முழுக்க களிப்பு
அன்றுதான் எங்கள் வீட்டில் நல்ல பலகாரத்தொடு சாப்பாடு
 
எங்கள் ஊர்
எங்கள் வீடு
உறவுகளின் அன்பு
இதற்கு ஈடு ஏதுமுண்டோ...?
 
ஐயகோ...
இதைவிட சிறந்த வாழ்வு
பாரினில் வாழ்ந்தவர் உண்டோ...?
 
அந்நியரிடம் இருந்து விடுதலை என்றார்கள்
எங்கள் ஊர் அரசியல்வாதியிடமிருந்து விடுதலை எப்போ?
 
உயர்சாதி என்றான்
பண்ணையாராய் இருந்தான்
முதலாளியாய் ஆனான்
இப்போ அரசியல்வாதி வேடத்தில் இருக்கிறான்
 
ஆலை வைத்து நிலத்தை கெடுத்தான்
மண்ணைக் கடத்தி நீரைக் கெடுத்தான்
உலையை வைத்து வளத்தை சுரண்டினான்
ரியல் எஸ்டேட்டு வைத்து எங்கள் உலையில் அடித்தான்
 
பள்ளிகள் கட்டி அதைப் பணசாலை ஆக்கினான்
அரசுப் பள்ளித் தரத்தைக் குறைக்க சம்பளம் தனியே தந்தான்
பொது நிறுவனத்தை அவனே தகுதி குறைத்து தனியார் நிறுவனம் வைத்தான்
 
சாதி ஏற்றத்தாழ்வு
பொருளாதார ஏற்றத்தாழ்வு
வளரும் குழந்தை என்ன செய்தது
கல்வியிலும் ஏற்றத்தாழ்வு
அனைவருக்கும் சமச்சீர் கல்வி, தரமான கல்வி எப்போதும் கனவுதானா?
 
விவசாயம் போனது
எங்கள் நிலம் எங்களைத்திட்டும் சொல்லோடு பறிபோனது
கடின உழைப்பால் பெரும் முயற்சியால்
குடிசை வீடு போய் காங்கிரேட்டு கூரை வந்தது
ஆண்யினும் எங்கள் தரம் உயரவில்லை சூழல் மாறவில்லை
குழந்தைகளுக்கு கல்வி தரமாக இல்லை தொழில் நிரந்தரமில்லை
ஆரம்ப சுகாதாரம் இருந்தும் மருந்தில்லை மருத்துவரில்லை
பணம் எவ்வளவு சம்பாதிச்சும் அது கையில் இருப்பதில்லை
தொலைக்காட்சி பெட்டி இருக்கு மின்கட்டணம் கட்ட முடியவில்லை
அரசோ எங்களோடு இல்லை எங்களுக்காயும் இல்லை
 
இந்த அரசியல்வாதியின் பணத்தை மீறி
அவனின்/அவர்களின் கட்டமைப்பை மீறி
எங்கள் குரல் அதிகாரமையத்தில் கேட்கும் நாள் எந்நாளோ?
வாழ்வாதாரம் உயரும் நாள் எங்கள் காலத்திலாவது வருமோ?
மக்களாட்சி எங்கள் வீட்டையும் தட்டும் நாள் காண்போமோ?
 
பின்னோக்கி பார்த்தேன்!
 
எங்கள் வீடு 
அன்பு பாசம் மகிழ்வு எழில்மிகு குடிசை வீடு!!!
 
ஆம், அது நிறைவான வாழ்வு....
இவைகளை மீண்டும் என்று தருமோ இந்த நாடு!!!

ஸ்நாபக் வினோத்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:03:48 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 041

சுற்றிலும் பச்சைப் பசுமை 
சுகந்தமான காற்று...
அழகான தோப்புக்குள்ள
அழகியலாய் எங்க வீடு...

தென்னையும் வாழையும் தெற்கே....
மாவும் பலாவும் மேற்கே...
மோட்டார் கேணி வடக்கே...
கீரையும் காய்கறிகளும் கிழக்கே...

வீட்டுக்கு முன்னே வேம்பு
அதனடியில் அப்பாவின் கட்டில்
வேப்பங்காற்று தாலாட்டில்
நாங்களும் தூங்கலாம் சில நேரம்...

உறவுகள் நிறைந்த திண்ணை
எப்போதும் உயிர்ப்புடன்...
அம்மாவின் கமகம காபியும்
வாசமாய் வீற்றிருக்கும்...

விளையாடும் இடம் முற்றம்
நாங்களோ பதினெட்டு
எங்களோடு மேலவீட்டு முத்து 
விளையாண்ட இடம் இது...

எப்போதும் சந்தோஷம்
எல்லா நாளும் திருவிழா...
மகிழ்ச்சி நிறைந்த 
மங்கள வீடிது...

அண்ணன் தம்பி
அக்கா தங்கை
மாமன் மச்சான்
சித்தப்பா பெரியப்பா
சித்தி பெரியம்மா
கூட்டு குடித்தனம்
குதூகலித்த வீடிது

கருவை மரங்களுக்கு மத்தியில்
நினைவுகளை தேக்கி வைத்து
சிதைந்து நின்ற வீட்டை
சின்னப் பிள்ளையாய் தடவி

பழைய நினைவில் தாத்தா
கண்கள் நிறைய சொன்ன போது...
இடிந்து நின்ற வீட்டின் முன்
நொடிந்து போய் உட்கார்ந்தேன்...
‘பரிவை’ சே.குமார்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:04:52 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 042

(ஈழத்து வீடு) 
 
எங்கள் வீடு செழுமையான வீடு
சுற்றி மரங்கள் நிறை சோலை
 
கண்பார்க்கும் திசையெங்கும் பசுமை செழிப்பு
எங்கள் மனங்களில் நிரம்பி இருந்தது களிப்பு
 
எத்தனை ரம்மியமான கிராமங்கள்
எத்துனை ஆரவாரமில்லா நகரங்கள்
 
விவசாயம் எங்கள் கண்டுபிடிப்பு
நாகரீகம் அடைந்ததே எங்கள் சிறப்பு
 
விவசாயமும் வீரமும் எங்கள் பண்பாடு
மருத்துவம் கலாச்சாரம் அடைந்தோம் மேம்பாடு
 
கட்டுமரங்கள் படகுகள் கப்பல்கள் கண்டோம்
மீன் பிடிக்க, வாணிபம் செய்ய கடல் கண்ட முதல் இனமானோம்
 
பாரெங்கும் போய் வாணிபம் செய்தவர்கள்
எங்கள் மூதாதேயர்தான்...
எல்லாத்துறையிலும் சிறந்து விளங்கிய
எங்களுக்கு இணை யார்தான்?
 
மனித நேயத்தையும் சமத்துவத்தையும் போதித்தோம்
வாழ்வு வேண்டி பிழைக்க வந்தவரை அன்போடு வாழவைத்தோம்
 
நன்மை என்றிருந்தால் தீமை இருக்கும் தானே
நல்லோர் வாழ்வைக் கெடுக்க எதிரிகள் முளைப்பார்கள் தானே...
 
எங்கள் நல்லெண்ணத்திற்கு வாழ வந்தவர்களால் கிடைத்த பரிசு?
ஒடுக்குமுறை, வன்முறை, இனப்படுகொலை, கற்பழிப்பு!!!
 
எங்கள் மண்ணை பறித்தார்கள்.. எதிர்த்தோம்
எங்களின் அத்தனை உரிமைகளையும் பறித்தார்கள்.. போராடினோம்
எங்களின் உடுமைகளை பிடுங்கி நாடு கடத்தினார்கள்... கொதித்தோம்
எங்கள் சகோதரர்களைக் கொன்றார்கள், சகோதரிகளைக் கற்பழித்தார்கள்...
 
நாங்கள் மனிதநேயமிக்கவர்கள்,
அனைவரையும் நேசிப்பவர்கள்
தான்
ஆனால்
சொரனையற்றவர்கள்
அல்ல,
வீரம் குன்றியவர்கள்
அல்ல...
 
வீட்டை இழந்தோம்
உடமை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்
கற்பை இழந்தோம்
தேசத்தையும் இழந்தோம்
 
மானத்தை இழக்க முடியாது... ஒடுக்கப்பட்டவர்கள் மானத்தோடு வாழக்கூடாது போலும்...
 
அடிமை விலங்கை அறுத்தெறிய கிளம்பினோம்
எங்கள் சகோதர சகோதிரிகளை காக்க புறப்பட்டோம்
சேனை அமைத்தோம் புலிகளாணோம் எதிரிகளை விரட்டினோம்
தேசத்தை மீட்டோம் உரிமை வாழ்வைப் பெற்றோம்
முப்படைகளை உருவாக்கினோம் அரசமைத்தோம்
 
எதிரிகளை நாங்கள் உருவாக்கவில்லை
எதிரிகள் எங்களை வெகுண்டு எழ வைத்தார்கள்
எங்கள் தேசத்தை மீட்டதும் அறத்தொடு வாழ்ந்தோம்
எதிரிகள் உட்பட யாருக்கும் தொல்லை இல்லை நன்மையே
 
எதிரிகள் உறங்கிவிடுவார்களா
நிம்மதியாய் இருந்துவிடுவார்களா
 
எதிரிகளின் கூட்டமும்
குள்ளநரிகளின் கூட்டமும்
ஒன்றாய் சேர்ந்தது
 
மீண்டும் ஒடுக்க கிளம்பியது
யத்தம் செய்தது
போராடினோம்
முடியும் வரை போராடினோம்
உயிர் உள்ளவரை போராடினோம்
 
இம்முறை எதிரி ஒருவன் அல்லவே
பெருங்கூட்டமன்றோ
குள்ளநரிகளின் சேர்க்கையன்றோ
 
மீண்டும் ஒடுக்குமுறை
பெரிய குடியரசுகளின் நிழல் யுத்தம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வரலாறு கண்டிராத இனப்படுகொலை
மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்
எல்லை மீறிய போர்க்குற்றங்கள்
அரசே தன் குடிகள் என்று சொல்லிக்கொண்டு கொல்லுமா?
 
ஒன்றை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள்
தங்கள் மொழியால் இனத்தால் மாண்டார்கள்...
அவர்கள் செய்த தீங்கென்ன?
தமிழனாய் பிறந்ததைத் தவிர அவர்கள் செய்த தீங்கென்ன?
 
எங்கள் வீடு போச்சு
நிலம் போச்சு
சொந்தங்கள் போச்சு
ஆயுதங்கள் போச்சு
எங்கள் தேசமே கண்முன்னால் பறிபோச்சு...
 
எங்களின் வீரம் துளியும் குறையவில்லை...
எங்கள் இனம் அழிந்துவிடவில்லை...
எங்கள் உறவுகள் முற்றிலும் மண்ணோடு மண்ணாகவில்லை...
என்ற நம்பிக்கை எங்களை வாழவைக்கிறது...
 
தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்...
இந்திய நாட்டோடு கையறு நிலையில் இணைந்து இருந்தும்
முத்துக்குமார் உயிர் ஈகையில் காட்டாறாய் இளைஞர்கள் வீதியில் வந்தும்
எலும்புத் துண்டு கடித்த அரசியல் ஆசான் துரோகத்தால் அணைகள் இட்டுத் தடுக்கப்பட்டோம்
தமிழகத்தின் தமிழர்களுக்கு நாடும் மோசம், அரசும் மோசம்... அரசியல் படுமோசம்...
 
சாதி மதம் அரசியல் என்று பிரிக்க நிறைய இருக்கு
இணைக்க என்ன இருக்கு...???
 
எங்கள் மொழி இருக்கு... 
பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் இருக்கு...
தமிழன் என்ற உணர்வு இருக்கு....
 
தமிழனாய்
பாரினில் தமிழர்
அனைவரும் ஒன்றிணைந்தால்
நம்மை ஒடுக்க, தடுக்க சக்திகள் உண்டோ?
 
உலகில் மொத்தம் பனிரெண்டு கூடி தமிழர்கள்
இணைந்தால் நம்மை எதிர்ப்பவர்கள் எவர்கள்?
 
ஈழத் தமிழகத்தின் விடுதலைக்கே
ஒன்றாய் இணைந்து போராடினாலே 
ஆயுத யுத்தம் அல்ல அரசியல் யுத்தம் செய்தாலே
உரிமை வாழ்வோடு கிடைக்கப்போவது தமிழ் ஆளும் ஒரு தேசமன்றோ...
 
துணிந்து நின்றால் தமிழ் மீளும்
இணைந்து நின்றால் தமிழ் ஆளும்
 
அம்மா என்ற அழைக்க சொல்லி
இனி குழந்தைகளை வளர்ப்போம் தமிழைச் சொல்லி
 
எதிரியை கொடுங்கோலை இனங்காடுவோம்
நாளும் செழிப்பாய் விழிப்பாய் இருப்போம்
 
தமிழீழ விடுதலைக்கே
முனைப்பாய் களமிரங்குவோமே
 
ஒவ்வொரு நாளும் முயற்சிகள் எடுப்போம்
ஒவ்வொரு நொடியும் இணைந்தே உழைப்போம்
 
உலகத்து நாடுகள் முன்பே
இனப்படுகொலைக்கு விசாரணை கேட்போமே
 
குற்றவாளிக்குத் தண்டனையும்
அநீதி மறுக்கப்பட்டவனுக்கு நீதியும்
கிடைக்க பாரினில் வழி செய்வோமே...
 
குற்றவாளி பேரினவாத அரசாய் இருக்கின்றமையால்
அந்த அரசுடன் எப்படி நம்மினம் இனிமேல் இணைந்திருக்கும்?
 
குற்றவாளியை ஐநாவிடமும் ஒப்படைக்கச் சொல்வோம்
நம் ஈழ மக்களுக்கு தனிநாடு வாக்கெடுப்பு கோருவோம்
அது தானே நீதி! அதுதானே நியாயம்!!
 
தமிழுக்கென்றே தேசம்
அதுத் தமிழீழத் தேசம்
அங்கே சமத்துவம் வீசும்
சகோதரத்தொடு சுதந்திரம் பேசும்
 
பசுமையான தேசமன்றோ
அது பாசம் நிறைந்த சமூகமன்றோ
உறவுகள் பிணைப்போடு இருக்கமன்றோ
எங்கள் வீடும் அழகாய் மகிழ்வாய் நிறையுமன்றோ!!!


ஸ்நாபக் வினோத்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:05:56 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதை - 043

வரவேற்பறையின் வண்ணம்
திரைச்சீலைகளின் நேர்த்தி
சுவருக்கான ஓவியங்கள்
படுக்கையறைக்கான விளக்குகள்
படிப்பதற்கான சாய்வு நாற்காலி
அகலமான குளியலறை
காற்றோட்டமான சமையல் கூடம்
மொட்டை மாடியில் ஊஞ்சல்
வானம் பார்த்த கூடம்
பார்த்து பார்த்து
நீ
வடிவமைத்த
நமக்கே நமக்கான வீடு
இப்போதும் இருக்கிறது
நீ இல்லாமல்

வெறும் கட்டடமாய்

ஆசிப் மீரான்

ப்ரியன்

unread,
Nov 6, 2012, 1:07:24 PM11/6/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதைப் போட்டி முடிவுகள் நாளை மாலை அறிவிக்கப்படும்.

ப்ரியன்

unread,
Nov 7, 2012, 12:27:26 PM11/7/12
to panb...@googlegroups.com, vidhyas...@gmail.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
அன்பான உறவுகளே,

பண்புடன் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கவிதை போட்டிக்கான முடிவுகள் இதோ...

முதல் பரிசு

கவிதை எண் - 23
எழுதியவர் : ஆறுமுகம் முருகேசன் 

இரண்டாம் பரிசு

கவிதை எண் - 27
எழுதியவர் : ரிஷான் ஷெரீப்

மூன்றாம் பரிசு - 

கவிதை எண் - 9
எழுதியவர் : பஃக்ருத்தீன்

வெற்றி பெற்ற படைப்பாளிக்களுக்கு குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்கள்...
போட்டியில் ஆர்வத்துடன் பங்கு கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

வெற்றி பெற்றவர்கள் "பண்புடன் படைப்புகள்" மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது மட்டறுத்துனர்களுக்கு உங்களின் தகவல்களை அனுப்புங்கள்...பரிசுகள் உங்களை  வந்தடையும்.

நன்றி...

வித்யாசாகர்

unread,
Nov 7, 2012, 8:49:19 PM11/7/12
to ப்ரியன், panb...@googlegroups.com, ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
றவுகளுக்கு வணக்கமும் அன்பும்,

அதோடு வெற்றிபெற்ற படைப்பாளிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் மகிழ்ச்சியின் வெளிப்பாடும்..

வித்யாசாகர்


2012/11/1 ப்ரியன் <mailt...@gmail.com>
கவிதை - 019

குறளடி வஞ்சிப்பா
 
வீடென்பது உயிர்வாழ்வது
வீடென்பது உறவானது
வீடென்பது வளந்தருவது
வீடென்பது இறைவாழ்வது
வீடென்பது உயிர்தழைப்பது
வீடென்பது வாசலுள்ளது
வீடென்பது வாழ்வுள்ளது
வீடென்பது மெய்யானது
வீடென்பது ஐம்புலனது

-
அரவிந்தன்




--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

shylaja

unread,
Nov 7, 2012, 9:33:35 PM11/7/12
to panb...@googlegroups.com, ப்ரியன், ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, munaivendri.n...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
கவிதைகள்  பல அருமையாக இருந்தன..  தேர்வு பெற்ற கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்கு  வாழ்த்துகள்!

2012/11/8 வித்யாசாகர் <vidhyas...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
shylaja
 
"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்"
 
பாரதி

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

unread,
Nov 7, 2012, 9:59:19 PM11/7/12
to shylaja, panb...@googlegroups.com, ப்ரியன், ganesh...@gmail.com, mailz...@gmail.com, mspa...@yahoo.in, sures...@gmail.com, andrew...@gmail.com, sneelak...@gmail.com, fakhru...@gmail.com, emalat...@gmail.com, kamar...@gmail.com, kpadmaja...@gmail.com, erae...@gmail.com, eps...@gmail.com, pushpa...@gmail.com, appan.ra...@gmail.com, vivek...@gmail.com, arvinpa...@gmail.com, rvis...@gmail.com, sixfa...@gmail.com, pras...@gmail.com, mrish...@gmail.com, jayanth...@gmail.com, puthuv...@gmail.com, vce.pr...@gmail.com, nambika...@gmail.com, rukma...@gmail.com, gayu....@gmail.com, sivaa...@gmail.com, snaba...@gmail.com, kuma...@gmail.com, asifm...@gmail.com
பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

2012/11/8 shylaja <shyl...@gmail.com>



--
=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
------------------------------------------------------------------
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi - 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 10:27:16 PM11/7/12
to panb...@googlegroups.com
பரிசு பெற்ற கவிஞர் களுக்கு வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Sheik Mohamed Shajahan

unread,
Nov 8, 2012, 5:06:27 AM11/8/12
to panb...@googlegroups.com
கலந்து கொண்ட பண்புடன் குழும/ குழும அல்லாத நண்பர்களுக்கு பாராட்டுகள்
 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

2012/11/8 Arumbanavan A <arumb...@gmail.com>
பரிசு பெற்ற கவிஞர் களுக்கு வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Fakhrudeen Ibnu Hamdun

unread,
Nov 8, 2012, 5:58:56 AM11/8/12
to panb...@googlegroups.com

மகிழ்ச்சி, நன்றி, நல்வாழ்த்துகள்.

என் கவிதையும் நடுவர்களை ஈர்த்து, தேர்வு பெற்றதில் மகிழ்ச்சி.

தேர்ந்தெடுத்தவர்களுக்கும், கவிதையைப் பாராட்டிய, விமர்சித்த நல்லுள்ளங்களுக்கும், குறைநிறை சொன்ன நண்பர்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

கலந்துகொண்ட சக கவிஞர்களுக்கும், வென்றவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

2012/11/8 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>



--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com




rajupandian raju

unread,
Nov 8, 2012, 6:03:35 AM11/8/12
to panb...@googlegroups.com
 வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.

2012/11/8 Fakhrudeen Ibnu Hamdun <fakhru...@gmail.com>



--
நட்புடன்

நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

shylaja

unread,
Nov 8, 2012, 6:04:56 AM11/8/12
to panb...@googlegroups.com
இப்னுக்கு ஸ்பெஷலா  இனிய வாழ்த்து!

2012/11/8 Fakhrudeen Ibnu Hamdun <fakhru...@gmail.com>



--
shylaja
 
இதனை  இதனால்  இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்  விடல்
 
 
குறள்.

Fakhrudeen Ibnu Hamdun

unread,
Nov 8, 2012, 6:24:47 AM11/8/12
to panb...@googlegroups.com
நன்றி அக்கா!

2012/11/8 shylaja <shyl...@gmail.com>

இப்னுக்கு ஸ்பெஷலா  இனிய வாழ்த்து!

வித்  மை.பா?! :-)

shylaja

unread,
Nov 8, 2012, 6:31:19 AM11/8/12
to panb...@googlegroups.com
   உங்க   “பா”  முன் என்  மைபா  எம்மாத்திரம்  இப்னு?:)
2012/11/8 Fakhrudeen Ibnu Hamdun <fakhru...@gmail.com>
நன்றி அக்கா!

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ahamed Zubair A

unread,
Nov 10, 2012, 1:37:20 AM11/10/12
to panb...@googlegroups.com
அப்படின்னா இப்னு ஹம்துன் அண்ணன் பாட்டு மைபாவை விட பேரழிவு ஆயுதமா?? :)))

2012/11/8 shylaja <shyl...@gmail.com>

Sheik Mohamed Shajahan

unread,
Nov 10, 2012, 1:42:25 AM11/10/12
to panb...@googlegroups.com


ஹா ஹா ஹா பத்த வச்சிட்டியே பரட்டை :-)


 

2012/11/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அப்படின்னா இப்னு ஹம்துன் அண்ணன் பாட்டு மைபாவை விட பேரழிவு ஆயுதமா?? :)))


2012/11/8 shylaja <shyl...@gmail.com>
   உங்க   “பா”  முன் என்  மைபா  எம்மாத்திரம்  இப்னு?:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

Ahamed Zubair A

unread,
Nov 10, 2012, 2:18:29 AM11/10/12
to panb...@googlegroups.com
என் கடமையைச் செஞ்சேன் ;)))

2012/11/10 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>

Hamdun Fakhrudeen

unread,
Nov 10, 2012, 3:58:42 AM11/10/12
to panb...@googlegroups.com
உன்னைப் போன்ற புல்லுருவிகளை ஒன்றுமில்லாமல் செய்தால் தான் நீ சொல்வது
சரியாகும் :-)

On 11/10/12, Ahamed Zubair A <ahamed...@gmail.com> wrote:
> அப்படின்னா இப்னு ஹம்துன் அண்ணன் பாட்டு மைபாவை விட பேரழிவு ஆயுதமா?? :)))
>
>

Ahamed Zubair A

unread,
Nov 10, 2012, 4:02:50 AM11/10/12
to panb...@googlegroups.com
புல் பூண்டே இல்லாம பண்ணிடலாமாம்... :)))

2012/11/10 Hamdun Fakhrudeen <fakhru...@gmail.com>

shylaja

unread,
Nov 10, 2012, 7:37:47 AM11/10/12
to panb...@googlegroups.com

:) இப்பதான் பார்த்தேன்  இந்த சுபைருக்கு என்ன தைரியம்?:)
2012/11/10 Hamdun Fakhrudeen <fakhru...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.





--
Regards
shylaja
 

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Nov 13, 2012, 1:38:53 PM11/13/12
to panb...@googlegroups.com
தூக்குமாட்டிக்கொண்ட வீடு
=======================================ருத்ரா


முதல் பரிசு பெற்ற 
கவிதைக்கும்
அதன் கவிஞருக்கும்
என் வாழ்த்துக்கள்.


ஒரு ம‌ர‌ண‌த்தின் சுவ‌டு
அங்கு குளித்துக்கொண்டிருக்கிற‌து.
பூந்திவ‌லை நீர்க்கோடுக‌ள்
ஒரு ஊசி ம‌ழை தூவுகிற‌து.
மூச்சு நின்ற‌ பிற‌கும்
ராக‌ம் 
ஆலாப‌னை செய்து கொண்டிருக்கிற‌து.
த‌விர்க்க‌ப்பட்டிருக்க‌வேண்டிய‌
ச‌ம்ப‌வ‌ம் ஒன்று
ஊமைக்காய‌த்துட‌ன்
ர‌த்த‌ம் ஒழுகாம‌ல்
ச‌த்த‌ம் விழுது இற‌ங்காம‌ல்
ஒரு ம‌கா ஆர‌ண்ய‌மாய்
அங்கு ப‌ட‌ர்ந்து நிற்கிற‌து.
முள்ளை முள்ளால் உர‌சி
ரோஜாவை நீட்டிய‌
அற்புத‌க்க‌விதை இது.

=========================================

(இங்கே பந்தி போட்டிருப்பதை பாராமல் 
அங்கே ஒரு தனி மடல் விரித்து உட்கார்ந்திருக்கும்
 என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்)



On Wednesday, October 24, 2012 10:18:13 AM UTC-7, ப்ரியன் wrote:
பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கவிதைப் போட்டி நடந்தது யாவரும் அறிந்ததே. கவிதைப் போட்டிக்கு வந்த கவிதைகள் வரிசையாக இங்கு பதியப் படுகிறது. வாசித்து உங்களின் கருத்துக்களை கருத்துக்களுக்கென தொடங்கும் மற்றொரு இழையில் சொல்லுங்கள்.

எல்லா கவிதைகளும் இங்கு வெளியிட்ட பின்னர் , நடுவர்களின் முடிவு அறிவிக்கப்படும்.

கவிதை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது நன்றிகளும் & வாழ்த்துக்களும்...

நடுவர் சென்ஷிக்கு எங்களது நன்றிகள்...
Reply all
Reply to author
Forward
0 new messages