

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டு எழுந்த தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு
அன்றுதான், பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் கொலை செய்யப்பட்டார். மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலை, ஒரு தனிமனிதர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டு எழுந்த தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு. ஆஷ் கொலை... ஓர் எச்சரிக்கை மணியைப் போலத்தான் ஒலித்தது. ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோன வாஞ்சிநாதனின் உயிர்த் தியாகம் மகத்தானது.
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இத மாதிரி எழுதினா நாங்க காக்கிக்கு ஆதரவா மாறிடுவோம்,அத மாதிரி எழுதினா நாங்க மோடிக்கு ஆதரவாளர் ஆகிடுவோம் அப்பிடின்னு சொல்றதே நம்ம சார்பு நிலையை தான் கட்டுது..
டி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்தை ஒரு காவி கலவையாக உருவாக்க என்ன பாடுபடுகிறார்கள் பாருங்கள்..கிறிஸ்தவ மதம் பரப்ப வந்தவர்களுக்கும், இங்கிருந்த ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கும் இருந்த முரண்பாடுகள் கடைசியில் இங்கிலாந்து ராணியின் முன் வெடித்தது வரலாறு.. இணையம் முழுக்க அது குறித்தான தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது..ஒரு பதிவு எழுதும்போது, வெந்தது வேகாதது அப்பிடின்னு எதுவும் கிடையாது.. ஆங்கிலேயனா அவன் மதம் பரப்ப வந்தவன் என எழுத வேண்டியது.. அப்போ தானே நாம இங்க அரியணை ஏற முடியும் ;-)\
உங்க கண்ணுக்கு இத மட்டும்தான் தெரியும்னு நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு.
ஒரு கட்டுரையில் எதை என்னால் தீர்க்கமாக விவாதிக்க முடியும் என்று நம்புகிறேனோ அதை பற்றி எழுதுகிறேன்.. அவ்வளவே..
அப்பிடி பார்த்தா நானும், இன்னும் பிறரும் சிறுபான்மையினத்தவரின் காவலாளியாக (குறிப்பா குமரியில்) காட்டிக்கொள்ளும் காங்கிரசை கட்டிக் கொண்டு அழணும் ;-)
அன்போடு
மோரு
இன்னேரம் நானும் காவி ட்ரொவசர் மாட்டி இருப்பேன் நல்லவேளை
வாவ்.... ஐ லைக் திஸ் பொலிடிஷியன் வார்ட்...:)))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
சாதி வெறியாளர் யார்?
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.
*****************************************************************************************************************************************************************வாஞ்சிநாதனை பற்றி எனக்கு இருக்கும் பிம்பம் சிம்பிள் – வ.உ.சியும், சிவாவும் தூத்துக்குடி வட்டாரத்தில் ஒரு புரட்சிகரமான மன நிலையை உருவாக்கினார்கள். அவர்களை கலெக்டர் வின்ச்சும், சப்-கலெக்டர் ஆஷும் அடக்க முயன்றார்கள். இந்த தலைவர்கள் ஜெயிலுக்கு போனதும், வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, மாடசாமி ஆகியோரின் பழக்கமும் அவரை கொந்தளிக்க வைத்தது. கோபம் தலைக்கேறி அவர் ஆஷை சுட்டார். தப்பிக்க வழி இல்லாததால் அவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
தமிழ் நாட்டில் அனேகமாக எல்லாருக்கும் இந்த பிம்பம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்று திரு. சரவணன் வாஞ்சி பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். அதில் ஆஷ் குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்கலாம் என்ற நிலையை மாற்றியதாகவும் அலுவலகத்தில் எல்லாரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும் என்றும், ஒரே குடத்து தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகவும் அதனால் கோபம் அடைந்த வாஞ்சி ஆஷை சுட்டதாகவும் எழுதப் பட்டிருக்கிறது.
இருக்கலாம். 1886-இல் பிறந்த ஒரு பிராமணருக்கு ஜாதி உணர்வு இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். வ.உ.சி. கூட சிறையில் தனக்கு ஒரு வேளாளரோ, இல்லை பிராமணரோ சமையல் செய்து தர வேண்டும், தலித் செய்யக்கூடாது என்று கேட்டாராம். (வ.உ.சி. ஒரு தலித்தை தன் வீட்டு மனிதராகவே பாவித்ததாகவும் ம.பொ.சி. சொல்கிறார், எது சரியோ யானறியேன்) நிலைமை இப்படி இருக்கும்போது சம பந்தி போஜனம் என்று ஒரு வெள்ளைக்கார “மிலேச்ச” கலெக்டர் சொன்னால் கோபம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே. அன்று இருந்த சமுதாய நிலையில் ஆஷ் அப்படி சொல்லி இருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
ஆனால் வாஞ்சியின் கடைசி கடிதத்தை பார்த்தால் அவர் ஆஷின் “ஜாதி ஒழிப்பு
முயற்சிகளால்” கோபம் அடைந்து அவரை சுட்டதாக தோன்றவில்லை. அந்த கடிதம்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறது. குறிப்பாக சுதேசி கப்பல்
கம்பெனியை பற்றி வேறு சொல்லி இருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளபடி அவரது
மரண வாக்குமூலம் கீழே.
I dedicate my life as a small contribution to my motherland. I am alone responsible for this.
3000 youths of this brave country have taken an oath before mother Kali
to send King George to hell once he sets his foot on our motherland. I
will kill Ashe, whose arrival here is to celebrate the crowning of King
George in this glorious land which was once ruled by great samrats. This
I do to make them understand the fate of those who cherish the thought
of enslaving this sacred land. I, as the youngest of them, wish to warn
George by killing Ashe who is his sole representative and has destroyed
the Swadeshi shipping company and several other freedom fighters by
subjecting them to severe torture.
Vande Mataram. Vande Mataram. Vande Mataram
சரவணன் அவர்களும் வாஞ்சியின் மரண வாக்குமூலம் என்று பதித்திருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளதற்கும் அவர் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சரவணனின் version-இல் சுதேசி கப்பல் கம்பெனி பற்றி எதுவும் இல்லை. பசு மாமிசம், சனாதன தர்மம் என்று இரண்டு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதிலும் ஜாதியை பற்றியோ ஆஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் “சீர்திருத்த” ஆவலைப் பற்றியோ எதுவும் இல்லை.
ஆஷ் குற்றால அருவியை எல்லாருக்கும் உரியதாக ஆக்கி இருக்கலாம். அவர் யாராவது ஒரு அருந்ததியர் பெண்ணை பிராமணர் தெரு வழியாக கொண்டு சென்றிருக்கலாம். அது ஆஷ் மேல் உள்ள கோபத்தை அதிகப் படுத்தி இருக்கலாம். ஆனால் வாஞ்சியின் காரணங்கள் வேறு என்றுதான் தோன்றுகிறது. வாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பிம்பம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதே நேரத்தில் நாம் icon-களாக நினைப்பவர்கள் மீது ஒரு உண்மையான பரிசீலனை நடத்தப்பட வேண்டும், அவர்களது குற்றம் குறைகள் மறைக்கப்படக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இது மாதிரி முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் icon-களை பற்றி உள்ள பிம்பங்களை கலைத்து அவை icon-கள் இல்லை என்று நிறுவ முயற்சி செய்யும்போது ஆதாரங்களையும் வெகு கவனமாக கொடுக்க வேண்டும் – செங்கோட்டையில் பலரிடம் பேசினேன் என்று மொட்டையாக சொன்னால் போதாது. யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரங்கள், ஆஷ் என்ன செய்தார் என்பதற்கான ஆதாரங்கள், பாரத மாதா சங்கம் ஆஷின் இந்த சீர்திருத்த ஆவல் பற்றி என்ன எழுதினார்கள் என்ற விவரங்கள் ஆகியவையும் சுட்டப் பட வேண்டும். வாஞ்சிநாதன் இறந்து கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சம காலத்தவர் அல்ல, நம் ஞாபகங்கள், இல்லை முந்திய ஒரு ஜெனரேஷனின் ஞாபகங்கள் போதும் என்று சொல்ல. இந்த பதிவர் சைக்கிள் காப் கூட இல்லாத இடத்தில் லாரியே ஓட்ட முயற்சி செய்வது போல் இருக்கிறது.
ஆனால் இவர் அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இதை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர் கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. அந்த புத்தகத்தில் மேல் விவரங்கள் இருக்கிறதோ என்னவோ? இந்த புத்தகத்தை யாராவது பார்த்திருந்தால் படித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!
Reverse casteism – டோண்டு ராகவன் வாஞ்சியின் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய பென்ஷன் தி.மு.க. ஆட்சியினால் மறுக்கப்பட்டது என்று எங்கோ சொல்லி இருந்தார். டோண்டு, என் ஞாபகம் சரிதானா?
உறுதிபடுத்துகிறார். அவரது ஆதாரம் திராவிட கழகத்தினரின் விடுதலை
பத்திரிகைதான். விடுதலை பத்திரிகையே சொல்வதால் இதில் சந்தேகப்பட எதுவும்
இல்லை. பிராமண விதவை என்பதற்காக அவரது பென்ஷன் மறுக்கப்பட்டது மிகவும்
கீழ்த்தரமான விஷயம். (ஆனால் அவருக்கு ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின்
ஆட்சியிலும் ஏன் பென்ஷன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.) இதைப் பற்றி
முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசியதாகவும்,
பென்ஷன் வாங்கிக் கொடுக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும்
ராமகுமரன் அவர்கள் ஒரு சுட்டியை காண்பிக்கிறார்.
செங்கோட்டைக்காரரும், வாஞ்சியின் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்தவருமான திரு. திரவியம் நடராஜன் எழுதிய மறுமொழிகளில் வாஞ்சி ஜாதி வெறியர் என்ற கருத்து அபத்தம் என்று சொல்லி இருக்கிறார். இது வாஞ்சி பற்றி எனக்கு இருக்கும் பிம்பத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாஞ்சியை பற்றி மேலும் எழுதுவதாகவும் சொல்லி இருக்கிறார், காத்திருப்போம்.
ஆஷ் பற்றி, குறிப்பாக குற்றாலம் அருவியை அவர் பொதுவாக்கியது பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
Vanchinathan was born in 1886 in Shenkottai to Raghupathy Iyer and Rukmani Ammal. His actual name was Shankaran. He did his schooling in Shenkottai and graduated in M.A. from Moolam Thirunal Maharaja College in Thiruvananthapuram. Even while in college, he married Ponnammal and got into a lucrative Government job.
............. தலையே சுத்துகிறது...
சில கேவலமான மனங்கள் வீர வாஞ்சி ஆஷை கொன்றதற்கு சாதி ரீதியாக காரணங்கள் கற்பித்து தம்மை தாமே சொறிந்து சுகம் காண்கின்றன. வெள்ளைகாரனே கற்பிக்காத பொய்களை கற்பித்து வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு தாசானுதாசன்களாக இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? அரசு அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் என்ன சொல்கிறது? Haran Prasanna


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இந்தியன் சிட்டிசனையே அங்க போய்டுங்க நு சொல்றாங்க. இதில அங்கேர்ந்து இங்கே கொண்டு வருவாராக்கும்?அட்லீஸ்ட் உத்தரகண்டாக இருந்தாலும் 15000 பேரை காரில் ஏற்றி காப்பாற்றி வரலாம்.
இப்ப பக்கத்து பாகிஸ்தானில் ஷியா, சுன்னி மக்கள் இடையே சண்டை என்பதால் இந்தியா பாக் மேல் படை எடுத்து ஷியா மக்களை மீட்கலாமா? அப்படி செய்தால் மோடிக்கு பாகிஸ்தானில் சிலை வைப்பார்களா? இல்லை நீங்கள் கேட்ட மாதிரி ரேகன் சிலையை ஆப்கானிஸ்தானில் வைத்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்களா? :-)
--செல்வன்https://www.facebook.com/groups/tamilhealth/ (ஆரோக்கியம் & நல்வாழ்வு)