சுட்டது

867 views
Skip to first unread message

Ramesh Murugan

unread,
Dec 24, 2012, 5:57:47 AM12/24/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
நன்றி: http://puthiyathalaimurai.com/this-week

இரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை!

கல்யாண்குமார்

‘உலகம் முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்’ என்கிற அதிர்ச்சித் தகவலோடு ஆரம்பிக்கிறார் ஜெனிதா. இவர் இந்தியாவில் ஊட்டியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும்  Freedom firm  என்ற உலகம் தழுவிய அமைப்பின் பொறுப்பாளர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுமிகளை மீட்டெடுத்து, அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைப்பது அல்லது கல்வி அறிவு கொடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.


‘பாட்னா, புனே, டெல்லி, நாக்பூர், சென்னை போன்ற இடங்களில் இதுமாதிரியான பாலியல் தொழில் விடுதிகள் இப்போது அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காகவே சில தரகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகளோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2007லிருந்து செயல்படும் எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 250 சிறுமிகள் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்த்த சிறுமிகளும் உண்டு" என்கிறார் ஜெனிதா.


பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் இதுபோன்ற கடத்தலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.


தஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள் பன்னிரெண்டு வயதாகும் கலைச்செல்வி. அப்பாவின் திடீர் மறைவால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. நோயாளியான அம்மாவுக்கும் வேலை பார்க்கத் தெம்பு இல்லாததால், சென்னையிலிருக்கும் தாய்மாமன் வீட்டில் கலையும் அவள் அம்மாவும் அடைக்கலம் புகுந்தார்கள். தாய்மாமன், கலையை அடுத்தவருடம் பள்ளிக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி, தன் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது மனைவி, இரண்டு பெண்குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, கடைகளுக்குப் போவது என்று அவள் வயதுக்கும் உடம்புக்கும் மீறிய வேலைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டாள் கலை. ஒருநாள் கடைக்குப்போன இடத்தில் தன்னிடம் மிகவும் வாஞ்சையோடு பேச்சுக் கொடுத்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியிடம்  தனது கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுதாள் கலை.


தன்னோடு வந்தால் கலைக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக மூளைச் சலவை செய்த அந்தப் பெண்மணியை நம்பி அன்றே அவரோடு போனாள் கலை. இரண்டு நாட்கள் ஏதோ ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட கலை, அடுத்த நாள் மும்பைக்கு இரண்டு தடியர்களின் துணையோடு ரயிலேற்றப்படுகிறாள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வழிமுழுக்க இருமல் மருந்து என்று போதை திரவத்தைக் குடிக்க வைத்து அவளை அரை  மயக்கத்திலேயே கொண்டு போயிருக்கிறார்கள். ரெட் லைட் ஏரியாவில் இரண்டு வருடங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டதோடு, போதை வஸ்துகளுக்கும் அவள் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அங்கே ரெய்டு நடந்தபோது 14 வயதாகி இருக்கும் கலையும் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அந்தத் தொண்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் கொடுத்தும் போதைப் பழக்கத்திலிருந்து மட்டும் அவளை மீட்க முடியவில்லை. அவள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு அவளது அம்மாவைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.  தற்போது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட, சிறப்புச் சிகிச்சைக்காக புனேவிலிருக்கும் ஒரு சேவை இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள், கலை.


இந்தியாவில் 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் இதற்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம். தெரியாத வெளி ஆட்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக தங்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் வசம் பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளச் சொல்லி ஒப்படைத்துவிட்டுப் போகிறார்கள். அவர்களில் சிலர்தான் இதுமாதிரியான வக்கிரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்று ஓர் ஆவறிக்கையைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார், மனநல நிபுணர் டாக்டர்.திருநாவுக்கரசு.


பாலியல் வக்கிரங்களுக்காக மட்டுமல்ல, பிச்சைஎடுக்கும் ‘தொழிலில்’ ஈடுபடுத்தவும் பெண்குழந்தைகள் விலை கொடுத்து வாங்கப்படுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வி என்ற பெண்மணி, ஏற்கெனவே தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், நவம்பர் 12ம்தேதி தனக்குப் பிறந்த பெண்குழந்தையை, ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, நூறு ரூபாய் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு மூலக்கடையைச் சேர்ந்த முனியம்மா என்ற பெண்ணிடம் விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. அதை வாங்கிய முனியம்மா, கோயம்பேடு பஸ் நிலையத்தில் அந்தக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்தபோது சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். பிச்சையெடுக்க வைக்க அந்தக் குழந்தையை வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து செல்வியும் முனியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தை, ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


குழந்தைப் பேறின்மையும் குழந்தைகள் வாங்கப்படுவதற்கு ஒரு காரணம். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இரவெல்லாம் அழுதுகொண்டிருந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுத்து சமாதானப்படுத்துமாறு அதன் தாய் வற்புறுத்தப்பட்டார். ஆனால், குழந்தை அப்படிக் கதறிக் கொண்டிருக்கும்போதுகூட  பால் கொடுக்கத் தயங்கினார் அந்தப் பெண். சந்தேகப்பட்டு விசாரித்தபோது நவம்பர் மாதம் 6ம் தேதி பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் குழந்தையை அவர் இன்னொருவரிடம் வாங்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து இப்போது அந்தக் குழந்தை கைமாறிய ஐந்து பேரிடம் விசாரணை நடந்துவருகிறது.


குழந்தைகளை விற்பது, வாங்குவது மட்டுமல்ல திருடவும்படுகின்றன. குழந்தையில்லாத சில பெண்கள் அதுமாதிரி திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.தாய்மை அடையத் தாமதமாகும் பெண்களை நாம் மனரீதியாகக் காயப்படுத்தி, அந்த நிலைக்கு அவர்களைத் துரத்துகிறோம் என்பதால் நாமும் ஒருவகையில் இதற்குக் காரணம்தான். தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக நீங்கள் அறிந்திருக்கக் கூடிய அசோக் ரத்தினம், தான் வாசித்த செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ‘பொய்க்குடம்’  என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார். 


நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு குழந்தைப்பேறு இல்லாத வருத்தத்தில் இருந்திருக்கிறார். உறவினர்கள் இவரை பல விதத்திலும் மனதை வருத்தி இருக்கிறார்கள். குழந்தையின்மையைக் காரணம் காட்டி, அவரது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனக்கு ஏற்பட்ட குறையை மறைக்கவும் தன் அன்புக் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும், தான் கர்ப்பமடைந்திருப்பதாக அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார்.பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க ஒருவித தவிப்பிலேயே இருந்தவர், ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் பிறந்த குழந்தை ஒன்றை திருடப் போனபோது கையும் களவுமாகப் பிடிபட்டு பொதுமக்களிடம் அடிபட்டிருக்கிறார். ‘உறவினர்களின் கொடுமையான வார்த்தைகளே என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டியது’ என்று அழுதிருக்கிறார் அந்தப் பெண்மணி. இந்தச் சம்பவத்தையே தன் ‘பொய்க்குடம்’ என்ற குறும்படத்திற்கான மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறார் அசோக் ரத்தினம். அவரது திருட்டுக்குக் காரணம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை நடத்திய விதம்தான். அதனால், தாய்மை அடைய தாமதமாகும் பெண்களை யாரும் காயப்படுத்தாதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே, நானே அறுபதாயிரம் ரூபாய் செலவுசெய்து, ‘பொய்க்குடம்’ என்ற இந்தக் குறும்படத்தை எடுத்தேன்" என்கிறார் அசோக் ரத்தினம்.


பிறந்த சிறு குழந்தைகளின் நிலைமை இப்படியென்றால், கருவிலேயே அது பெண் குழந்தை என்றால் கலைத்துவிடும் அவலமும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது" என்கிறார், CASSA (campaign against sex selective abortion) என்ற அமைப்பின் மையக்குழு உறுப்பினர் ஜீவா. மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து நாங்கள் நடத்திய ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கையின் நியதிப்படி 1,000 ஆண்குழந்தைகளுக்கு 952 பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், 17 மாவட்டங்களில் 952க்கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளன" என்கிறார்.


பெண்குழந்தைகளை கருவில் கொலை செய்வதோடு, ஒரு வயதுக்குள் இறக்கும் பெண்குழந்தைகள் மற்றும் காணாமல் போகும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அளவில் இது 33 லட்சமாக உயர்ந்திருக்கிறது" என்கிறார் ஜீவா.


பெண்குழந்தைகளுக்கெதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு சார்பில் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?


பிச்சையெடுக்க தங்கள் பெண் குழந்தைகளையே ஈடுபடுத்தும் அம்மாவையோ, அப்பாவையோ அதற்கென உருவாக்கப்பட்ட யூனிஃபார்ம் அணியாத போலீஸ் படை ( J.A.P.U. ) பிடித்துக் கொண்டு எங்களிடம் வருவார்கள். அந்தப் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்து, பிள்ளைகளை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து அந்தச் சிறுமிகளை தமிழக அரசே நடத்தும் புரசைவாக்கத்தில் இருக்கும் குழந்தைகள் நலக் குழும இல்லத்தில் (C.W.C.) சேர்த்து கவனித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு படிப்போடு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து வருகிறோம். சில தனியார் நிறுவனங்களும் எங்களுக்கு உதவுவதால் இங்கிருந்து போன இரண்டு குழந்தைகள், தற்போது மருத்துவம்  மற்றும் விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார், இந்தக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ஆக்னஸ் சாந்தி. இவர் ஒரு மனநல ஆலோசகரும் கூட.


பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் எங்கள் குழுமத்தில் பராமரிக்கப்படுகிறார்கள். தங்களின் பெற்றோர், ஊர் குறித்த விவங்களைச் சரியாகச்  சொல்ல முடியாதபோது அவர்கள் கூறும் ஏதாவது சின்னத் தகவல்களையாவது பெற்று, கூகுள் மேப் மூலமாகவும் இந்தியா முழுக்க இருக்கும் ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாகவும் முயற்சித்து, அவர்களைப் பெற்றோரிடம் சேர்த்து வைக்கிறோம்" என்கிறார், ஆக்னஸ் சாந்தி.


நாம் என்ன செய்ய முடியும்?


ஏதாவது பொருள் வாங்கவோ அல்லது பள்ளிக்கே செல்லும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு விலாசத்தையோ, செல்போன் நம்பரையோ மனப்பாடம் செவித்தோ அல்லது அதை அவர்களது பாக்கெட்டில் எழுதி வைப்பதையோ பெற்றோர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வழி தெரியாமல் தவிக்கும் சில குழந்தைகள், உடனடியாக பெற்றோரைச் சேரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.


ஏழ்மை நிலையின் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், அழைத்துச் செல்பவர்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அனுப்ப வேண்டும். மாதம் ஒருமுறையாவது அந்தச் சிறுமியைச் சந்தித்து, அவளுக்கு இருக்கும் சங்கடங்களை வெளிப்படையாகப் பேசச் சொல்லி கேட்க வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்  Freedom firm அமைப்பின் பொறுப்பாளர் ஜெனிதா.


மீடியாக்களும் குழந்தைகள் காணாமல் போவதை கட்டணமில்லாத ஒரு சேவையாகவே எடுத்துகொண்டு அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்: வழக்கு எண் 18/9" என்ற படத்தில் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பால மந்திர் இல்லத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதில் காட்டப்பட்ட ஒரு குழந்தையை படத்தில் பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, அது சில வருடங்களுக்கு முன் காணாமல் போன எங்களது குழந்தை என்று தேடி இங்கே வந்தார்கள். தகுந்த ஆதாரங்களை சரிபார்த்த பின்னர், அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்" என்கிறார், குழந்தைகள் நலக் குழுமத்தின் கமிட்டி உறுப்பினராகவும் பரிசு டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி அமைப்பை நடத்தும் ஷீலா சார்லஸ் மோகன்.


பெண் குழந்தைகளின் புன்னகையைத் திருடி, அதற்கும்கூட ஒரு விலையை நிர்ணயிக்கும் கல் நெஞ்சுக்காரர்களை மன்னிக்கவே கூடாது. கடுமையான தண்டனைகள் வேண்டும்.

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

காமேஷ்

unread,
Dec 24, 2012, 7:04:32 AM12/24/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், நட்புடன்
பாவம்.
ஒரு முறை நேபாளத்திலிருந்து கடத்து கொண்டுவரப்பட்டு மும்பையில்
விற்கப்படும் பெண் குழந்தைகள் பற்றிய படம் பார்த்து கண்கள் கலங்கி விட்டன.
அந்த மாதிரி கொடுமை யாருக்கு நடக்க கூடாது.

இணங்காத குழந்தைகளை சின்ன சின்ன பொந்துக்குள் அடைத்து பயங்கரமா
சித்திரவதை செய்றாங்க.

மும்பை சிவப்பு விளக்கு பகுதியை ஏன் காலி செய்யவே முடியல ?


.........................



2012/12/24 Ramesh Murugan <rames...@gmail.com>

sk natarajan

unread,
Dec 24, 2012, 9:30:00 PM12/24/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், நட்புடன்
ஜெனிதா,ஆக்னஸ் சாந்தி .ஷீலா சார்லஸ் மோகன்அவர்களுக்கு , அவர்களின் சேவைகளுக்கு வாழ்த்துகள்
நல்லதொரு இடுகைக்கு நன்றி ரமேஷ் முருகன் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/24 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jan 5, 2013, 9:02:17 AM1/5/13
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன்

நன்றி: ஞாநி

ஆர் யூ தேர் மேடம் சி.எம் ?

இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்து சொன்னால், வாராவாரம் இந்த சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கலாம்.

டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத் தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன்.எகிப்திலே செய்தார்கள். டெல்லியிலே செய்தார்கள். என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.

“புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும்படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். cmc...@tn.gov.in” என்று ஓர் வேண்டுகோளை பேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.

அதில் கிடைத்த முக்கியமான செய்தி — இந்த சி.எம் செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.

“ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்ற சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சிஎம் செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு….பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூட போறாங்க?” என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி எம் செல்  கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக் இருக்கிறது.

“விபத்தாக சித்தரிக்கப் பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்ப படும் விஷயம் சி.எம்.செல்லுக்கு தான் முதலில் அனுப்பப்பட்டது அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவுலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை.அந்த கேஸ் மூடப்பட்டது. ஒரு வருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவுலகத்திற்கு சென்று கேட்டபோது , அது முடிந்து போன விஷயம் என புகாரையே எடுக்க வில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்து சென்று புகாரை பதிவு செய்தேன் ஒரு வருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது.” என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.

சிஎம்செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.சூளைமேடு மாநகராட்சி பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு.க ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்ம்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சிஎம்செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே !

சென்னை மேயர் சைதை துரைசாமியின் பேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்பொது பார்த்தால் அந்த தளத்தில் எதுவும் உருப்படியாக் நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தன் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாந்கராட்சி, மின்வாரியம் குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களை சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை.எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.

சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும்படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ‘ ரொம்ப வேலை பளு. நேரம் ஒதுக்குவதற்கில்லை ” என்று கூட இன்று வரை அதற்கு பதில் கிடையாது. சமூகப் பிரச்சினையைப் பற்றி தன்னிடம் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தனக்கு டெல்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறார் ! என்ன கொடுமை இது !

சிஎம்செல் வேஸ்ட். சிஎம் ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்…. ? இதோ இன்னொருவர் பேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: “சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்ற சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள் குழந்தைகள் எல்லாரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம்,போரூர்,மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள்,பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது.”

தெருவில் இறங்கிப் போராடினால் போலீசை வைத்து அடி உதை மிரட்டல்…. சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை சொந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் ப்குதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத்திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத்தேவையில்லை என்றுபதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஒரு அமைச்சரோ அந்த அமைதியான மக்களை சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த புதிதில் வாரவாரம் பத்திரிகையாளரை சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும் யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும் கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது.  இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னைக் குப்பை நகரமாக இருப்பது வரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்கு புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்கு பிரச்சினையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

தன் குடிமக்களுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில்   தன் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்கு தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா?  இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துகொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.

இப்படி தன்னைத்தானே ஒரு இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்கு சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்கு சொல்லவேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தன்னைத்தானே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேவை.

கடந்த ஆண்டில் பல முறை முதல்வருக்கு பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் முதுகெலும்புள்ள எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டி பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.

கல்கி 5.1.2013

Ramesh Murugan

unread,
Jan 6, 2013, 9:41:36 AM1/6/13
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
http://www.calendarlabs.com/wallpaper/

இதுல என் வீட்ல இருக்குறவங்களோட ஃபோட்டோக்களைப்போட்டு ப்ரிண்ட் எடுத்துக்கிட்டேன். ஜெஹஃபர் அண்ணே, உங்களுக்கு இது பயன்படும்னு நினைக்கிறேன்.

Ramesh Murugan

unread,
Jan 10, 2013, 4:03:15 AM1/10/13
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

Ramesh Murugan

unread,
Jan 10, 2013, 4:06:49 AM1/10/13
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
இதுல துபாய் ஏர்போர்ட்டை ஜூம் பண்ணிப் பார்த்தேன், ஃப்ளைட் ஏறுவது இறங்குவதுகூட தெரியுது... என்னா டெக்னாலாஜி..

2013/1/10 Ramesh Murugan <rames...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Jan 10, 2013, 4:39:01 AM1/10/13
to பண்புடன், tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய அரசியல்சட்ட்டம் உருத்தெரியாத அளவு திருத்தப்படாவிட்டால், தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டால், மதச்சார்பின்மை பெரும்பாலும் பரவியிருந்தால்,நாட்டுமக்கள் தாங்கள் விரும்பும் மொழியில் எழுதவும் பேசவும் முடிந்தால், ஒருங்கிணைந்த சந்தையும் சுமார்திறமைகொண்ட ஆட்சிப்பணி அமைப்பும் இருந்தால், கூடவே சொல்ல மறந்துவிட்டேனே இந்திப்படங்கள் பார்க்கப்பட்டுப் பாடல்கள் கேட்கப்பட்டால் இந்தியா நிலைத்துவாழும்’
- ராமச்சந்திர குகா
இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு - பாகம் 1
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு- பாகம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Ramesh Murugan

unread,
Jan 10, 2013, 4:44:47 AM1/10/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், tamil...@googlegroups.com
செமயா இருக்குது.

ப்ரியன்

unread,
Jan 10, 2013, 4:51:47 AM1/10/13
to panb...@googlegroups.com

வாவ் அருமை ரமேஷ்...

ப்ரியன்

unread,
Jan 10, 2013, 4:53:06 AM1/10/13
to panb...@googlegroups.com
தமிழ் நாட்டின் தென் பகுதியில் ஓடும் இரயில்களின் எண்ணிக்கையையும் கேரளாவில் ஓடும் இரயில்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்களேன் ;)

Ramesh Murugan

unread,
Jan 15, 2013, 9:22:03 AM1/15/13
to பண்புடன், நட்புடன்
அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம்
by உண்மைத்தமிழன்
13-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வருட இறுதியில் 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்', 'புதுமுகங்கள் தேவை' என்று நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்து தமிழ்ச் சினிமா மீதான நம்பிக்கையை இந்தாண்டின் துவக்கத்திலேயே கொடுத்துள்ள நிலையில், இந்தப் படத்தின் மூலம் அதனை முற்றிலுமாக சிதைத்து, மீண்டும் குப்பைக் கூடத்திற்கே அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர் சுராஜ்..!

சைட் எபெக்ட் விளைவிக்கும் மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய மாநிலத்தின் முதலமைச்சர் அனுமதிக்க மறுக்கிறார்.. அந்த அனுமதியைப் பெற வேண்டி அவருடைய மகளான அனுஷ்காவை, ரவுடியான கார்த்தியின் மூலமாக கடத்துகிறார்கள் கொள்ளைக்காரர்கள். இறுதியில் உண்மை தெரிந்ததும் கார்த்தி என்ன செய்கிறார் என்பதை நீங்களே யூகித்திருப்பீர்கள்..!


இந்த கமர்ஷியல் கதையை கொஞ்சமும் சுணங்காமல் மாற்றான் வழியிலேயே கொண்டு போயிருக்கலாம்..! அதைவிட்டுவிட்டு தெலுங்கு மணவாடுகளுக்குப் பிடித்ததுபோல் திரைக்கதையை எழுதி, முற்பாதி முழுவதும் ஆபாசக் கூத்தடித்திருக்கிறார்கள். கார்த்தி இதில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இதுபோல் இன்னும் 2 படங்களில் நடித்தாலே போதும்.. இவரின் மார்க்கெட் தானாகவே கீழிறங்கிவிடும்..!

சொந்தத் தயாரிப்பு என்றால் கேள்வி கேட்காமல் நடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? தெலுங்கில்தான் அதிகம் கூச்ச நாச்சமே இல்லாமல் பாலியல் வேட்கையை வெள்ளித்திரையில் திறந்து வைப்பார்கள்.. இப்போது போகிற போக்கில் நாம் அவர்களை தோற்கடித்துவிடுவோம் போலிருக்கிறது..!

சந்தானத்தின் மூன்று தங்கைகளுடன் கார்த்தி அடிக்கும் லூட்டியும், விளையாட்டும், செய்கைகளும், பேச்சையும் கேட்டுவிட்டும், பார்த்துவிட்டும் யு சர்டிபிகேட்டை பொறுப்பாக வழங்கிய சென்சார் போர்டுகாரர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

மூன்று பேருமே கார்த்தியை விரும்புவதாகவும், நினைத்தால் உடனேயே படுக்கவும் தயாராக இருப்பதாகவும் போல் காட்டியிருப்பது கேவலமானது.. குனிய வைத்து விளையாடுவது.. இதில் அம்மாவும் சேர்ந்து எண்ணெய் தேய்த்துவிடுவது.. தங்கையொருத்தி வாந்தி எடுக்கும்போது சந்தானம் பேசும் பேச்சு.. பல இடங்களில் கார்த்தியுடன் பேசும் டபுள் மீனிங் டயலாக்குகள்..!  அடிக்கடி கடைசி தங்கச்சி எப்படியிருக்கா என்று கார்த்தி விசாரிப்பது.. கேரம் போர்டு காட்சியில் சந்தானம் தனது கால்களை விரித்துக் காட்டுவது.. அவ்வப்போது 'அதே' இடத்தில் அவருக்கு அடிபடுவது..! இந்தக் காவியத்தையெல்லாம் பார்க்கணுன்னா 2 கண்ணு போதாது கண்ணுகளா..!!! குடும்பத்தோட எப்படிய்யா இந்தக் கண்றாவிகளை பார்க்குறது..?

இதுதான் இப்படியென்றால் இடைவேளைக்கு பின்பு  அனுஷ்காவை தொடை தெரிய உட்கார வைத்து, மனோபாலாவின் பனியனுக்குள் இருக்கும் செல்போனை அனுஷ்காவின் கால்கள் மூலமாக வெளியே எடுக்கும் அற்புதமான கற்பனைத் திறன் கொண்ட காட்சிக்காக தமிழ் கூறும் நல்லுலகம் இயக்குநர் சுராஜுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது..! வாழ்க இயக்குநர்..!

போய்த் தொலையட்டும் என்று இதையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால் படத்தில் வேறு ஒன்றுமேயில்லை..! மூட்டை, மூட்டையாக லாஜிக் மீறல்கள்.. கமர்ஷியல் ஸ்பீட்ல இதையெல்லாம் மக்கள்ஸ் யாரும் பார்த்திர மாட்டாங்க என்று நினைத்துவிட்டார்கள்..! ஒரு உருப்படியான, மனதைத் தொடும் காட்சிகளும் இல்லை.. நடிப்பும் இல்லை.. நடிக்க வைக்கவும் இல்லை..

முதல் காட்சியில் ஓடும் ரயிலை முன்புறமாக மாடு வைத்து இழுத்துச் சென்றார்களோ என்று தெரியவில்லை..! அவ்வளவு வேகமாக ஓடுகிறது.. அனுஷ்காவும், பின்னே கார்த்தியும் ஓடி வரும் வேகத்திற்கு ரயிலும் உடன் நடித்திருப்பதை பார்த்தவுடனேயே வயிற்றில் கிலி பிடித்தது.. சனி துவங்கியதென்று..! அந்தச் சனியனை அப்படியே படத்தின் இறுதிவரையிலும் மெயின்டெயின் செய்திருக்கிறார் இயக்குநர்..!

அப்போது காணாமல் போகும் அனுஷ்கா, ஒரு மணி நேரம் கழித்துதான் திரும்பி வருகிறார். தெலுங்குலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தேவதையை தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், ஏதோ டிவி சீரியல் நடிகையைப் போல படம் முழுக்க பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குநர்..! ரயில் சண்டை காட்சிகளில் ஏதோ ஈனஸ்வரத்தில் ஐயோ என்று அனுஷ்கா அவ்வப்போது கொடுக்கிற சவுண்ட்டை கேட்கும்போது, அனுஷ்காவே இந்தப் படத்தை ஜென்மத்தில் மறக்க மாட்டார் என்று நினைக்கிறேன்..!

கார்த்தியின் அதே எகத்தாள பார்வை.. சிரிப்பு.. ஸ்டைலான நடை.. இதையே இன்னும் எத்தனை படங்களில் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது..? சண்டை பயிற்சியாளர் கணேஷ்குமார் இந்தப் படத்தில்தான் அதிகமாக வேலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் ரோப் ஸ்டண்ட்டுகளை பயன்படுத்துவதே ஏதாவது ஒரு ஸ்டண்ட் சீனில்தான் இருக்கும்.. இப்படத்தில் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் கார்த்தி பறந்து பறந்து அடிக்கிறார்..! அதிலும் பல இடங்களில் ஸ்லோமோஷன் வேறு..!

இடைவேளைக்கு பின்பு காட்டுக்குள் வரும் பபூன் மனோபாலா கேரக்டரே டோட்டல் வேஸ்ட்டு..! அவருடைய மைண்ட் வாய்ஸில் வரும் சில வசனங்களின் மூலம் அவரே கொஞ்சம் ஆறுதல் அளித்தார் என்றாலும், படம் எந்தப் பக்கம் போகுது என்பது கூட தெரியாமல் தத்தளிக்கிறது..! போரடிக்கும் இந்தத் தகவல் இயக்குநர் டீமுக்கு தெரிஞ்சிருச்சு போல..! தியேட்டர்களில் மனோபாலாவின் காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சியிலும் கத்திரி போடப்பட்டிருக்கிறதாம். அப்படியே முற்பாதியையும் சுருக்கி 1 மணி நேர படமாகக் கொடுத்தால்கூட சந்தோஷம்தான்..!

இசையமைப்பாளர் ஏதோ ஆடுவதற்கேற்றாற்போல் டியூனை போட்டுக் கொடுத்திருக்கிறார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் இஷ்டத்திற்கு ஆட வைத்திருக்கிறார். பேட்பாய் டான்ஸில் மூன்று பேருடன் ஆடும் கார்த்தியின் ஆசை  இத்தோடு முடிந்தால் அவருக்கும், நமக்கும் நல்லதுதான்.. நல்லவேளை அவங்க அம்மாவை ஆட வைக்காம போயிட்டாங்களே.. அதுவரைக்கும் சந்தோஷம்..!

சி.எம். பொண்ணை கடத்தியிருக்காங்கன்றதை சஸ்பென்ஸா வைச்சு உடைச்சதும், உடைச்ச இடமும் சரியானதுதான்.. ஆனா இந்த டிவிஸ்ட்டையே நகரத்துக்குள்ள இருக்கிற மாதிரியும், போலீஸ் சேஸிங் மாதிரியும் கொண்டு போயிருந்தாலாச்சும் நல்லாயிருந்திருக்கும்.. இப்படி காட்டுக்குள்ள கொண்டு போய் கும்மியடிச்சு நம்மையும் நோகடிச்சிருக்க வேணாம்..!

வருஷத்துக்கு ஆயிரம் கோடி கிடைக்குதேன்னு எவனாவது சி.எம்.மை கொல்ல துப்பாக்கியைத் தூக்குவானா..? அப்புறம் ஆயிரம் கோடியை அவன் எப்படி கண்ணால பார்ப்பான்..? கமிஷனர் கூட்டு.. செகரட்டரி கூட்டு.. சாமியார் கூட்டுன்னு இத்தனை கூட்டையும் தாண்டி சி.எம். கடைசி நேரத்துல புத்திசாலித்தனமா தன்னுடைய செக்யூரிட்டிகளை வைச்சு அவங்களைச் சுட்டுக் கொல்றதா ஒரே நிமிஷத்துல படத்தை முடிச்ச அந்த ஸ்பீடை முதல் காட்சியிலேயே வைச்சுத் தொலைஞ்சிருந்தா எல்லாருக்கும் பணமும், நேரமும் ரொம்பவே மிச்சமாயிருக்கும்..!

ஏதோ இந்தப் படத்தைப் பத்தி சந்தானம் ஏதோ கமெண்ட் அடித்து, அது கார்த்தி காதுக்கு போய் இனி தன் படத்தில் சந்தானம் வேண்டாம்ன்னு அன்னார் கோபித்துக் கொண்டதாக சினிமா செய்திகள் சொல்கின்றன.. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், நிச்சயமாக இதுவொரு நல்ல விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை..! சந்தானம், கார்த்தி இருவருக்குமே இந்தப் படம் நிச்சயமாக பேட் பாய்ஸ் என்ற கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!

கார்த்தியின் அடுத்த படமாவது அவரோட குடும்பமாவது ரசிச்சு பார்க்குற மாதிரி வரட்டும்..! காத்திருப்போம்..!

காமேஷ்

unread,
Jan 15, 2013, 7:49:17 PM1/15/13
to nadp...@googlegroups.com, பண்புடன்
ஹ ஹ..  நல்ல காலம் எங்க ஏரியாவிலே ரிலீஸ் ஆகவே இல்லை..


.........................



2013/1/15 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jan 16, 2013, 1:08:30 AM1/16/13
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com
நேற்று பாதி படம் பார்த்தேன்.
படம் பார்க்கும்போது அவ்ளோ நெருடலா இல்ல காமெடியாத்தான் இருந்திச்சி . ஆனா உ.த கட்டுரையை வாசிச்ச பின்னாடி அந்த படத்தை பார்த்தா ஒரு மார்க்கமாத்தான் இருக்குது.

படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள், லாஜிக் மீறல்கள்னு ஏராளமா இருக்குது. ஆனாலும் படம் ஓடிடும்னு நினைக்கிறேன்.

2013/1/16 காமேஷ் <kame...@gmail.com>

ஹ ஹ..  நல்ல காலம் எங்க ஏரியாவிலே ரிலீஸ் ஆகவே இல்லை..

Jeeva

unread,
Jan 16, 2013, 1:16:48 AM1/16/13
to பண்புடன், nadpudan
//ஆனா உ.த கட்டுரையை வாசிச்ச பின்னாடி அந்த படத்தை பார்த்தா ஒரு மார்க்கமாத்தான் இருக்குது.

படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள், //

அப்ப படம் கண்டிப்பா ஓடிடும்.

2013/1/16 Ramesh Murugan <rames...@gmail.com>

ஆனா உ.த கட்டுரையை வாசிச்ச பின்னாடி அந்த படத்தை பார்த்தா ஒரு மார்க்கமாத்தான் இருக்குது.

படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள்,




Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

விழியன்

unread,
Jan 16, 2013, 1:18:41 AM1/16/13
to panb...@googlegroups.com, nadpudan

அப்ப படம் கண்டிப்பா ஓடிடும்.

எங்கே?

Asif Meeran AJ

unread,
Jan 16, 2013, 6:50:20 AM1/16/13
to panb...@googlegroups.com
நல்லவேளையா படம் ஊத்திக்கிச்சாம்.
கோவையில் இரண்டு தியேட்டர்களில் வெளியிட்டு முதல்நாளில் காட்சிக்கு 18 பேர் வந்ததால்
காட்சியை ரத்து செய்த கூத்தும் நடந்ததாகக் கேள்வி
விஜயின் தந்தை அவரது படங்களில்தலையிட்டு குட்டிச்சுவராக்கியது போல கார்த்தியும் அவரது
குடும்பமும் படங்களில் தலையிடுகிறார்களாம். வெளங்கும்

விஜய் ஏதோ திருந்தப் பார்க்குறா மாதிரி இருக்கு
இந்தப்பய திருந்துவானான்னு பார்க்கணும்

Ramesh Murugan

unread,
Jan 23, 2013, 4:57:24 AM1/23/13
to பண்புடன்

சென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்

நன்றி: பத்ரி.

இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ. மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம். நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.

இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
  1. கிமு கிபி
  2. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  3. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
  4. பிரபல கொலை வழக்குகள்
  5. மோட்டார் சைக்கிள் டைரி
  6. ராஜராஜ சோழன்
  7. ஸீரோ டிகிரி
  8. ஜாலியா தமிழ் இலக்கணம்
  9. திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
  10. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  11. ஜப்பான்
  12. அக்பர்
  13. சே குவேரா: வேண்டும் விடுதலை
  14. ஹிட்லர்
  15. கோணல் பக்கங்கள் - பாகம் 1
  16. இட்லியாக இருங்கள்
  17. இரண்டாம் உலகப் போர்
  18. முதல் உலகப் போர்

வில்லன்

unread,
Jan 23, 2013, 8:05:29 AM1/23/13
to panb...@googlegroups.com
ஐ சாரு புத்தகம் இரடூ

On 1/23/13, Ramesh Murugan <rames...@gmail.com> wrote:
> சென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர்
> பட்டியல்<http://www.badriseshadri.in/2013/01/blog-post_23.html>நன்றி:
> பத்ரி.
>
> இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி,
> கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக்
> கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ.
> மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை
> குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம்.
> நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில்
> சேர்க்கவில்லை.
>
> இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு
> கிபி’தான்.
>
> 1. கிமு கிபி <https://www.nhm.in/shop/978-81-8368-118-6.html>
> 2. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு
> முன்மாதிரி<https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html>
> 3. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும்
> பரவலும்<https://www.nhm.in/shop/978-81-8493-790-9.html>
> 4. பிரபல கொலை வழக்குகள் <https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html>
> 5. மோட்டார் சைக்கிள்
> டைரி<https://www.nhm.in/shop/978-81-8493-788-6.html>
> 6. ராஜராஜ சோழன் <https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html>
> 7. ஸீரோ டிகிரி <https://www.nhm.in/shop/978-81-8493-765-7.html>
> 8. ஜாலியா தமிழ் இலக்கணம்
> <https://www.nhm.in/shop/978-81-8493-744-2.html>
> 9. திராவிட இயக்கம்: புனைவும்
> உண்மையும்<https://www.nhm.in/shop/978-81-8493-743-5.html>
> 10. ஸ்ரீரங்கத்து
> தேவதைகள்<https://www.nhm.in/shop/978-81-8493-654-4.html>
> 11. ஜப்பான் <https://www.nhm.in/shop/978-81-8493-782-4.html>
> 12. அக்பர் <https://www.nhm.in/shop/978-81-8493-781-7.html>
> 13. சே குவேரா: வேண்டும்
> விடுதலை<https://www.nhm.in/shop/978-81-8368-244-2.html>
> 14. ஹிட்லர் <https://www.nhm.in/shop/978-81-8368-249-7.html>
> 15. கோணல் பக்கங்கள் - பாகம்
> 1<https://www.nhm.in/shop/978-81-8493-766-4.html>
> 16. இட்லியாக இருங்கள் <https://www.nhm.in/shop/978-81-8368-142-1.html>
> 17. இரண்டாம் உலகப் போர் <https://www.nhm.in/shop/978-81-8493-141-9.html>
> 18. முதல் உலகப் போர் <https://www.nhm.in/shop/978-81-8493-587-5.html>
>
>
>
>
> --
> என்றும் அன்புடன்,
> ரமேஷ்
>
> ---
>
> Sent via Epic Browser
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>


--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

Ramesh Murugan

unread,
Jan 28, 2013, 3:42:40 AM1/28/13
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )

by தி.தமிழ் இளங்கோ


வலைப்பதிவுகளில் அடிக்கடி நான் காணும் ஒரு வாசகம்இதுவும் கடந்து போகும்  என்பது. ஆங்கிலத்தில்THIS TOO SHALL PASS ” . இந்த வாக்கியத்தை எப்போதோ எதிலோ படித்ததாக நினைவு! உடனே நினைவுக்கு வரவில்லை. எனவே அங்கும் இங்கும் தேடியதில் எழுதியது இந்த கட்டுரை.

சாலமன் மன்னன் ( KING SOLOMON)
 
பண்டைய ஒன்றுபட்ட யூதா இஸ்ரேல் நாட்டின் மன்னரா இருந்தவர் மன்னன் சாலமன் (King Solomon). இவர் தாவீதின் குமாரர். இசுலாமியர்கள் இவரை சுலைமான் என்று அழைக்கிறார்கள். இவரது ஆட்சியில் ஜெருசலேம்(Jerusalem) நாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு உலகின் முதல் கோயிலை (First temple) சாலமன் கட்டியதாகச் சொல்கிறார்கள். மன்னன் சாலமனைப் பற்றி பல கதைகள் உண்டு. மன்னன் சாலமனின் தீர்ப்புகள் ( Solomon's birth and judgments);  மன்னன் சாலமனின் அறிவுக் கூர்மை (Solomon's wisdom and knowledge);  மன்னன் சாலமனின் அதிகாரமும் பெருமையும் (Solomon's power and magnificence); மன்னன் சாலமனின் மந்திரக் கம்பளம் (Solomon's magic carpet); மன்னன் சாலமனும் இளவரசி ஷீபாவும் (Solomon and the Queen of Sheba; daughter of the pharaoh) என்று நிறைய கதைகள்.

சாலமன் என்றதும் எனது நினைவுக்கு வருவது சின்ன வயதில் நான் படித்த “ SOLOMON GRUNDY”  என்ற ஆங்கிலக் கவிதைதான். இந்த கவிதையை 1842 இல்  முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர் James Orchard Halliwell என்பவர்.

Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.

மேலே சொல்லப்பட்ட ஆங்கில கவிதை (Nursery rhyme) சொல்லும் சாலமன் க்ரண்டி,  மன்னன் சாலமனைக் குறிக்கவில்லை.

மன்னன் சாலமன் கேட்ட அதிசய மோதிரம்:

மன்னன் சாலமனுக்கு விசுவாசமான ஒரு அமைச்சர் இருந்தார். பெயர் பெனையா பென் யெஹோயடா ( Benaiah ben Yehoyada.) ஒருநாள் அந்த அமைச்சரிடம் சாலமன்  அமைச்சரே! ஒரு அதிசயமான மோதிரம் ஒன்று உள்ளது. அதனை நீ கொண்டு வரவேண்டும். உங்களுக்கு அதனைக் கண்டுபிடிக்க ஆறுமாத காலம் அவகாசம் தருகிறேன். வரும் சுகோட் (Sukkot) திருவிழா சமயம் அதனை நான் என் கைவிரலில் அணிய வேண்டும்என்றார். அமைச்சர் உடனேமாட்சிமை பொருந்திய மன்னரே! இந்த உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நான் அந்த மோதிரத்தைக் கண்டு கொண்டு வருவேன்! அந்த மோதிரத்தில் அப்படி என்ன அதிசயம் உள்ளது?” என்று கேட்டார். அதற்கு மன்னன் சாலமன்  " மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவன் அந்த மோதிரத்தைப் பார்த்தால் துயரமாகி விடுவான்; துயரமாக இருக்கும் ஒருவன் அதனை பார்த்தால் மகிழ்ச்சியாகி விடுவான் (“If a happy man looks at it, he becomes sad, and if a sad man looks at it, he becomes happy.") என்று சொன்னார்.

வசந்தகாலம் முடிந்து கோடைகாலமும் வந்தது. அமைச்சரால் எங்கு தேடியும் அந்த அதிசய மோதிரத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு மோதிரமே கிடையாது. மன்னன் விளையாட்டாகச் சொன்னதைக் கேட்டு அமைச்சர் அதனை தேடிக் கொண்டிருந்தார். சுகோட் திருவிழாவிற்கு முதல்நாள் ஜெருசலேம் நகரின் கடைத் தெருவில் சோகமாக சென்று கொண்டிருந்தார் அமைச்சர். அப்போது  வியாபாரத்தை முடித்துவிட்டு தனது பொருட்களை பழைய கம்பள விரிப்பு ஒன்றில் வைத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவரைக் கண்டார். தான் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார். அந்த பெரியவர் தனது கம்பளவிரிப்பைத் திறந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அதன்மேல் சில சொற்களை செதுக்கி கொடுத்தார். அந்த மோதிரத்தில் இருந்த வாக்கியத்தைப் படித்துப் பார்த்த அமைச்சரின் முகத்திலே புன்னகை தோன்றியது. மோதிரம் கிடைத்து விட்டது.

அடுத்தநாள் சுகோட் திருவிழா. அரசவையில் மன்னன் சாலமன் அமைச்சரிடம் புன்னகைத்தவாறேஎன்ன நண்பரே! பொருள் கிடைத்ததா?” என்று கேட்டார். எல்லோரும் நகைப்புடன் அமைச்சரைப் பார்த்தனர். உடனே அமைச்சர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம்மாட்சிமை பொருந்திய மன்னருக்கு! இதோ!” என்று தான் வாங்கிய மோதிரத்தைக் கொடுத்தார். மோதிரத்தை வாங்கிய மன்னர் சாலமன் அதன்மேல் இருந்த வாசகங்களைப் படித்தார்.அவது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது


அந்த மோதிரத்தின் மேல்  ” இதுவும் கடந்து போகும்  (THIS  TOO SHALL PASS ) “  என்ற அர்த்தம் பொதிந்த மூன்று ஹீப்ருமொழி சொற்கள் இருந்தன. அதனைப் படித்த மன்னன் சாலமனுக்கு  தன்னிடம் இப்போது இருக்கும் அதிகாரம், அளவற்ற செல்வம், அறிவு யாவும் ஒருநாள் நீங்கிவிடும் என்ற ஞானம் பிறந்தது.. இதனால் அவருடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து துயரம் வந்தது. கொஞ்சநேரம் சிந்தனையில் இருந்த மன்னன் சாலமன் தான் அணிந்து இருந்த வைரமோதிரத்தை எடுத்துவிட்டு அமைச்சர் கொடுத்த அந்த அதிசய மோதிரத்தை அணிந்து கொண்டார்.


பழமொழியின் உட்பொருள்:


இதுவும் கடந்து போகும்  ( THIS TOO SHALL PASS )என்ற இந்த வாக்கியத்தின் உட்பொருள்எதுவும் நிலையில்லாததுஎன்பதுதான். மனித வாழ்வில் மகிழ்வும் துயரமும் மாறி மாறி வருவன.எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பவனின் மகிழ்ச்சியும் ஒருநாள் முடிந்து போகும். துயரத்தையே நினைத்துக் கொண்டிருப்பவனின் துயரமும் ஒருநாள் முடிந்து போகும். எனவே எல்லாமே சிலநாட்கள் மட்டுமே. 

இது ஒரு நாட்டுப்புற இலக்கியம் (Folklore) ஆகும். மக்கள் மத்தியில் சொல்லப்படும் கிராமிய நாடோடிக் கதைகளில் ஒன்று. பைபிளில் (Bible) இந்தகதை இல்லை. இந்த பழமொழியானது துருக்கி நாட்டு பழங்கதைகளிலும் பாடல்களிலும் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது சொற்பொழிவு ஒன்றில் இந்த வாக்கியத்தை மேற்கோள்  காட்டி பேசினார். அன்று முதல் இந்த சொற்றொடர் பிரபலமாகி விட்டது.   

இந்த வாக்கியம் பொறிக்கப்பட்ட ஸ்டெர்லிங் சில்வர் மோதிரம் அணிந்து கொள்வதும்  நாகரிகம் (Fashion) ஆக உள்ளது.
 

கட்டுரை எழுத உதவியவை:
MY THANKS TO:
https://www.google.co.in  


விழியன்

unread,
Jan 28, 2013, 4:16:33 AM1/28/13
to panb...@googlegroups.com
இந்த பட்டியலில் இருக்கும்  'மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி' - ஆசிரியர் சரவணன் தங்கதுரை எங்க அலுவலகத்தில் தான் இருக்கின்றார்.

Ramesh Murugan

unread,
Jan 28, 2013, 4:20:29 AM1/28/13
to panb...@googlegroups.com
உங்க ஆபிஸ்ல நிறையபோரு புத்தகம் போடுறவங்களா இருக்கிங்களே எப்படி?? பலர் சினிமா துறையிலுள்ளோரின் உறவினர்களாகவும் இருக்காங்க.

2013/1/28 விழியன் <uman...@gmail.com>

இந்த பட்டியலில் இருக்கும்  'மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி' - ஆசிரியர் சரவணன் தங்கதுரை எங்க அலுவலகத்தில் தான் இருக்கின்றார்.

//

அச்சு !!!

unread,
Jan 28, 2013, 4:52:48 AM1/28/13
to பண்புடன்
2013/1/28 விழியன் <uman...@gmail.com>
இந்த பட்டியலில் இருக்கும்  'மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி' - ஆசிரியர் சரவணன் தங்கதுரை எங்க அலுவலகத்தில் தான் இருக்கின்றார்.

என்னுடைய பிரதிக்கான ராயல்ட்டி அவருக்கு வந்திடுச்சானு கேட்டு சொல்லுங்க..



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு

sk natarajan

unread,
Jan 28, 2013, 8:03:27 PM1/28/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், நட்புடன்
அதிர்ச்சியளிக்கும் பதிவு
அறிவுரைகள் ஏற்கப்படவேண்டியவை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/24 Ramesh Murugan <rames...@gmail.com>

விழியன்

unread,
Jan 29, 2013, 11:39:48 PM1/29/13
to panb...@googlegroups.com
இதுமட்டும் இல்லை ரமேஷ் பாடகி ரேனு (பப்பரப்பா - வேட்டை), பாடகர் பாலாஜி தேவநாதன் (மலையாள படங்களில்), கேப்டன் டிவி தொகுப்பாளர் ஒருவர், சில குறும்பட இயக்குனர்கள், குறும்பட நடிகர்கள், இப்படி இன்னும் கொஞ்ச பேரும் இருக்காங்க. எப்படின்னு தெரியலப்பா.

Ramesh Murugan

unread,
Feb 2, 2013, 6:36:18 AM2/2/13
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன்

தமிழ் மென்பொருட்கள்-Android

by தகவல் தொழில்நுட்பப் பூங்கா
உலகின் இணையத்தேடலில் சாதனை படைத்த கூகிளானது(GOOGLE) இன்று பல்வேறுபட்ட விடயங்களிலும் காலடி பதித்துள்ளது. அந்தவகையில் கூகிளின் android இயங்குதளமானது கைத்தொலைபேசிகள், Tablets, Tabs,மற்றும்  Pads (Apple iPad  அல்ல). போன்ற பல்வேறுபட்ட இலத்திரனியல் ஊடக சாதனங்களில் இயங்குதளமாக செயற்படுகிறது. அவற்றில் பயன்ப்படுத்தவென சில பயனுள்ள மென்பொருட்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்.


தமிழ் எழுத்துருக்கள் சார்ந்த மென்பொருட்கள்.


தமிழ் சார்ந்த மென்பொருட்கள் 


தமிழ் நூல்கள்


இன்னும் பல தமிழ் சார்ந்த விடயங்கள் பல உள்ளன.

அடுத்த பதிவில் கட்டுமானங்கள் தொடர்பான மென்பொருட்களை தருகிறேன்.

Ramesh Murugan

unread,
Feb 2, 2013, 7:54:59 AM2/2/13
to panb...@googlegroups.com
வாழ்த்துகள்.
கனிமொழி மாதிரி உங்க கம்பேனியும் சங்கம் வச்சி தமிழை வளர்க்கிறாங்களா? :)

2013/1/30 விழியன் <uman...@gmail.com>

இதுமட்டும் இல்லை ரமேஷ் பாடகி ரேனு (பப்பரப்பா - வேட்டை), பாடகர் பாலாஜி தேவநாதன் (மலையாள படங்களில்), கேப்டன் டிவி தொகுப்பாளர் ஒருவர், சில குறும்பட இயக்குனர்கள், குறும்பட நடிகர்கள், இப்படி இன்னும் கொஞ்ச பேரும் இருக்காங்க. எப்படின்னு தெரியலப்பா.

Ramesh Murugan

unread,
Feb 5, 2013, 2:13:49 AM2/5/13
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன்

http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server

ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்

by Thenammai Lakshmanan
ப்ளூம்பாக்ஸ் எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்க ( 3 ஆண்டுகளில் ) தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கும் நேரம் நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க விரும்புறேன்.

நம்ம ஊரைச் சேர்ந்த கே. ஆர் . ஸ்ரீதர் கண்டுபிடிச்ச ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலமா ஆக்சிஜனும் ( ஆக்சிஜனையும் தயார் செய்து  அனுப்பணும் ) இயற்கை எரிபொருள் அல்லது சூரிய சக்தி சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்தை  நாமே தயாரிச்சுக்கலாம். ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கா..

மின்சாரத்தை நாம் இதுவரை தெர்மல் பவர் ஸ்டேஷன்களில் இருந்தும், அடாமிக் எனர்ஜி மூலமாவும் அதிக அளவில்  பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  விண்ட் மில், மற்றும் ஹைட்ரோ பவர் மூலம் கிடைக்கும் மின் சக்தியை சேமித்து அனுப்ப முடியாமல் இருக்கிறது. பயோ காஸ் மூலம் மற்றும் சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின் சக்தியை எல்லா நேரமும் உபயோகப்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ப்ளூம் பாக்ஸ்  மூலமா ஆக்சிஜனையும் இயற்கை எரிபொருள் அல்லது பயோ காஸ் அல்லது சூரிய சக்தியை சேர்த்து அனுப்பினால் ஓரளவு இந்தியாவில் உள்ள இரு வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை ஒரு ப்ளூம் பாக்ஸ் மூலமா பெறலாம்.

இதுவரை இதை மிகப் பெரிய நிறுவனங்களே பயன்படுத்தி வந்தன.இனிதான் இதைப் பொதுமக்களுக்கும் வழங்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். கூகுள், நெட்ஸ் கஃபே, அமேசான், போன்ற நிறுவனங்கள் இதை ஒரு லட்சம் டாலர் செலவில் நிறுவி இருக்கின்றன. இதனால் மின்சார செலவு இல்லை. ஆனால் இது வந்து 10 வருடங்களான பின்புதான் பொதுமக்களுக்கு வழங்க உத்தேசித்து இருக்கிறார்கள். முன்பே வந்திருந்தால் அணு உலைக்கெல்லாம் தேவையே ஏற்பட்டிருக்காது. இதனால் ஏற்படும் அணுக்கழிவுகள் மனிதர்களை  எந்த அளவு பாதிக்கும் என இன்று நடக்கும் போராட்டமும் ஏற்பட்டிருக்காது.

இந்த ப்ளூம் பாக்ஸ் சந்தைக்கு வரும்போது அதன் விலை 3.000 டாலரா இருக்குமாம். அப்படியானால் மின்சாரத்துறைக்கே வேலை இல்லாமல் போய்விடலாம். இந்திய மதிப்புப் படி 1.50.000/- ரூபாய் ஆகிறது. எல்லா எளிய மக்களாலும் இந்தத் தொகையை செலுத்த இயலுமா எனத் தெரியவில்லை. மானியத்தில் கிடைத்தால் நல்லது. ஆனால் நாமே மின் உற்பத்தி செய்து  தன்னிறைவு அடையும்போது மின்சார செலவில்லாமல் போய்விடும்.

கட்ட மறந்து விட்டால் ஃப்யூசை எடுத்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயமோ ஒவ்வொரு யூனிட்டுக்கும் எவ்வளவு கூடுமோ என்ற கவலையுமோ ஏற்படாது என்பது கூடுதல் சந்தோஷம்.

பார்க்கலாம் இந்திய சந்தையில் ப்ளூம் பாக்ஸ் எப்போது வரப் போகிறது என..

தமிழ்ப் பயணி

unread,
Feb 5, 2013, 4:18:04 AM2/5/13
to பண்புடன்
ர​மேஷ்,

           இது பற்றிய விவாதம் முன்ன​ரே வந்த ​போது திரு.ராஜசங்கர் மற்றும் திரு.​செல்வன் இருவராலும் இது தவறானது, ​வெற்றிகரமானதல்ல என்பதா விவாதிக்க பட்டுள்ளதா எனக்கு நி​னைவு. ப​ழைய இ​ழைக​ளை ​தேடினால் ​மேலதிக விவரங்கள் கி​டைக்க கூடும். யார் என்ன ​சொல்லியுள்ளார்கள் என்பதில் ஒரு ​வே​ளை என் நி​னைவு தவறானதாகவும் இருக்க கூடும். ஆனால் முன்ன​ரே இது பற்றிய விவாதம் வந்துள்ளது நி​னைவில் இருக்கு.


2013/2/5 Ramesh Murugan <rames...@gmail.com>

http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server

ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்

by Thenammai Lakshmanan
ப்ளூம்பாக்ஸ் எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Ramesh Murugan

unread,
Feb 5, 2013, 4:24:31 AM2/5/13
to panb...@googlegroups.com
ஓஹ்...
எனக்கு படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை. நல்ல கான்செப்ட்டா இருக்கேன்னு இங்க காப்பி & பெஸ்ட் பண்ணினேன்.. அந்த இழையை தேடிப் பார்க்கிறேன்.

2013/2/5 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ர​மேஷ்,

           இது பற்றிய விவாதம் முன்ன​ரே வந்த ​போது திரு.ராஜசங்கர் மற்றும் திரு.​செல்வன் இருவராலும் இது தவறானது, ​வெற்றிகரமானதல்ல என்பதா விவாதிக்க பட்டுள்ளதா எனக்கு நி​னைவு. ப​ழைய இ​ழைக​ளை ​தேடினால் ​மேலதிக விவரங்கள் கி​டைக்க கூடும். யார் என்ன ​சொல்லியுள்ளார்கள் என்பதில் ஒரு ​வே​ளை என் நி​னைவு தவறானதாகவும் இருக்க கூடும். ஆனால் முன்ன​ரே இது பற்றிய விவாதம் வந்துள்ளது நி​னைவில் இருக்கு.




//

sk natarajan

unread,
Feb 5, 2013, 8:59:58 PM2/5/13
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன்
இந்த திட்டம் வெற்றி பெற்றால் நன்மையே 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/2/5 Ramesh Murugan <rames...@gmail.com>

sadayan sabu

unread,
Feb 6, 2013, 3:46:12 AM2/6/13
to panbudan

இது உண்மையா  ? அல்லது டுபாக்கூரா ?

 
 

 
 
 
 
 

Mr.Kalayanasundaram worked as a Librarian for 30 years. Every month in his 30 year experience(service), he donated his entire salary to help the needy. He worked as a server in a hotel to meet his needs. He donated even his pension amount of about TEN(10) Lakh rupees to the needy.

He is the first person in the world to spend the entire earnings for a social cause. In recognition to his service, (UNO)United Nations Organization adjudged him as one of the Outstanding Peo ple of the 20th Century.. An American organization honored him with the ‘Man of the Millennium’ award. He received a sum of Rs 30 cores as part of this award which he distributed entirely for the needy as usual.

Moved by his passion to help others, Super Star Rajinikanth adopted him as his father. He still stays as a bachelor and dedicated his entire life for serving the society.

We all Indians should be PROUD. UNO has honored him but we Indians don’t even know that such a personality exist amongst us.
At least have the courtesy to pass this on and on till the whole world comes to know about him and his passion… so plz share it :)


eswar sivakrishnan

unread,
Feb 6, 2013, 3:50:04 AM2/6/13
to panb...@googlegroups.com
இது  மெய்யோ பொய்யோ தெரியதுங்க ஆனால், பெரும்பாலான தமிழர்கள் டைஸ்மாக் வழியாக தம் சம்பாத்தியத்தை அரசுக்கு கொடுத்து உதவுகிறது மட்டும் உண்மைங்க.....

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
http://svjeswar.blogspot.in/ 

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

Asif Meeran AJ

unread,
Feb 6, 2013, 3:55:53 AM2/6/13
to panb...@googlegroups.com
எனக்கு தேசிய விருது பெற்ற நடிகர் சலிம் குமார் சொன்னது நினைவுக்கு வருது

‘எல்லா நடிகர்களும் தங்கல் சம்பாத்தியத்துல் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம்
தானமா கொடுப்பாங்க. ஆனா, நான் ஒருத்தன் தான் கிடைக்குற மொத்த சம்பளத்தையும்
அப்படியே ஏழைகளுக்குக் கொடுத்துவேன்”
“அப்படியா?” என்று நிருபர்கள் அதிசயப்பட
ஆமா என் மனைவி மக்கள் எல்லாம் ரொம்ப ஏழைகள்’ 

இது  மெய்யோ பொய்யோ தெரியதுங்க ஆனால், பெரும்பாலான தமிழர்கள் டைஸ்மாக் வழியாக தம் சம்பாத்தியத்தை அரசுக்கு கொடுத்து உதவுகிறது மட்டும் உண்மைங்க.....

இப்படி ஒருத்தரு உண்மையிலேயே செயல்பட்டு வாழ்நாள் விருது வாங்கியிருந்தா எவனும் கண்டுக்க மாட்டான்
ஆனா சூப்பர் ஸ்டாரே தத்தெடுத்திருந்தா அதையே நாலு நாள் நியூசாக்கி காயடிச்சிருப்பானுங்க. பொழப்பத்தவனுங்களும்
ஆஹா பாரு சூப்பர் ஸ்டாரின் மகிமையை. வயசான காலத்துல கூட அப்பாவை தத்தெடுக்குறாரு. அவரல்லவா மனுசன்னு
எழுதி காயடி பட்ட இடத்துலேயே திரும்பவும் காய்டிச்சிருப்பானுங்க. அப்பைட் எதுவும் நடக்காததால இந்த செய்தி பொய்யாயிருக்கவே
வாய்ப்புகள் அதிகம் 

கமல்

unread,
Feb 6, 2013, 5:16:33 AM2/6/13
to panb...@googlegroups.com

உண்மைதான்.சில ஆண்டுகளுக்கு முன் விகடனில் படித்த நினைவு

http://vikatandiary.blogspot.in/2010/04/blog-post.html




2013/2/6 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
கமல்.

sadayan sabu

unread,
Feb 6, 2013, 5:33:58 AM2/6/13
to panb...@googlegroups.com
2013/2/6 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எனக்கு தேசிய விருது பெற்ற நடிகர் சலிம் குமார் சொன்னது நினைவுக்கு வருது

‘எல்லா நடிகர்களும் தங்கல் சம்பாத்தியத்துல் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம்
தானமா கொடுப்பாங்க. ஆனா, நான் ஒருத்தன் தான் கிடைக்குற மொத்த சம்பளத்தையும்
அப்படியே ஏழைகளுக்குக் கொடுத்துவேன்”


மலையாள தங்கல்கள்/முசலியார்கள் நடிகர்களிடம் பணம் வாங்குவது புதிய செய்தி

Ahamed Zubair A

unread,
Feb 6, 2013, 5:37:39 AM2/6/13
to panb...@googlegroups.com
சாபத்தா,

சினிமாவுக்கும் தங்கல்களுக்கும் ஆகாது.

இப்படிக்கு,

அகமதுசுபைர் கோயா தங்கள் ;)

2013/2/6 sadayan sabu <sadaya...@gmail.com>

Kasali Mohammed

unread,
Feb 6, 2013, 5:51:05 AM2/6/13
to panb...@googlegroups.com
உண்மைதான் ஆசிப்.

ஒருமுறை என்.சி.மோகன்தாசும் நானும் இவருடன் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அப்போது அவருடன் பேசியதிலிருந்து:
ஶ்ரீவைகுண்டத்தில் தனது வேலையிலிருந்து ஓய்வுபெற்றவுடன் கிடைத்த 10 லட்ச ரூபாயை அப்படியே நன்கொடையாகக் கொடுத்து விட்டார். பாலம் என்ற அமைப்பு ஏற்படுத்தி இயலாதவர்களுக்கு உதவுகிறார். ரஜினி தத்தெடுத்தது உண்மைதான். தன் வீட்டிலேயே தங்கவும் சொன்னார். ஆனால் இவருக்கு கூச்சமாகி அங்கு தங்கவில்லை.
குவைத்திலிருந்து ஃபிரண்ட்லைனர் அமைப்பு இவருடைய பாலம் அமைப்புக்கு நிறைய உதவிகள் செய்துள்ளது. 
இவர் ஒரு servaholic!

அன்புடன்,
கஸாலி


2013/2/6 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எனக்கு தேசிய விருது பெற்ற நடிகர் சலிம் குமார் சொன்னது நினைவுக்கு வருது

Ramesh Murugan

unread,
Feb 11, 2013, 4:09:46 AM2/11/13
to panb...@googlegroups.com
நம்ம குழுமத்தில் யார்கிட்டையாவது இந்த புத்தகம் இருக்குதா??? நல்லா இருந்தா சொல்லுங்க. எனக்கொரு பார்சல் வேணும்.

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - வாசிப்பனுபவம் சுபத்ரா

by IdlyVadai

குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டுகளைப் பெற்றது திரு. பா. ராகவன் எழுதிய ‘பாகிஸ்தான் அரசியல் வரலாறு’. அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக ‘மதி நிலையம்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாசிக்கத் தொடங்கிய முதல் அத்தியாயத்திலேயே ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டையர்கள் போல ஆங்கிலேயரிடமிருந்து சுதந்தரம் பெற்றுப் பிரிந்த இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு சகோதர நாடுகளும் அடித்துக் கொள்வது ஒரே ஒரு “காஷ்மீரு”க்காக. அந்தக் காஷ்மீர் மொத்தமும் ஒரு காலத்தில் ரூ.60 லட்சத்திற்காக விற்கப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இந்தியாவுடனும் சேராமல் பாகிஸ்தானுடனும் சேராமல் “காஷ்மீர் எங்கள் பரம்பரைச் சொத்து” என்று பிடிவாதமாகக் கூறிவந்த மன்னர் ஹரிசிங் இறுதியில் இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் எவ்வாறு கையெழுத்திட்டார்? இந்தியாவிற்கு முன் பின் வந்தேயிராத சர் சிரில் ராட்கிளிஃப் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை எவ்வாறு பிரித்தார்? புதிதாகப் பிறந்த பாகிஸ்தான் குழந்தை ஜின்னாவின் திடீர் மறைவிற்குப் பிறகு எவ்வாறு வளர்ந்தது? I.S.I. எப்படி எதற்காக உருவானது? பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் என்ன பங்கு வகிக்கிறது?

காஷ்மீர் பிரச்சனைக்குச் சுமுக தீர்வு காண்பதற்காக இந்தியா வரவிருந்த அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆயூப்கானை எது தடுத்தது? 1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போருக்கு “ஆபரேஷன் கிப்ரால்டர்” என்று பெயர் வைத்தது ஏன்? புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது என்ன? பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் விடுதலை பெறும் காட்சியில் இந்தியா ஏன் வந்தது? அதில் அதிரடிப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? அது வழிவகுத்த 1970 பாகிஸ்தான் போரை இந்தியா எவ்வாறு கையாண்டது?

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிக முக்கியவராகக் கருதப்பட்ட ஜூல்பிகர் அலி புட்டோ எந்நிலையில் தூக்கிலிடப்பட்டார்? அவரது மகள் பேனசிர் புட்டோ எந்நிலையில் ஆட்சி நாற்காலியில் அமர்ந்தார்? கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் மும்பையில் வேரூன்றியது எப்படி? தாலிபான்களுக்கும் I.S.I.க்கும் இருந்த தொடர்பு என்ன? நவாஸ் ஷெரிப் ராணுவத் தளபதியாக பர்வேஸ் முஷாரஃப்பை ஏன் நியமித்தார்? 2001-ல் முஷாரஃப் இந்தியாவுடன் நிகழ்த்திய அமைதிப் பேச்சுவார்த்தை என்ன ஆனது? அமெரிக்க – ஆப்கன் யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு என்ன?

இவை போக, காஷ்மீரைத் தவிர இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வேறு என்னென்ன பிரச்சனைகள் நிலவுகின்றன? உலகின் மிக முக்கிய தீவிரவாத இயக்கங்கள், பாகிஸ்தானின் தேர்தல் முறைகள் என எண்ணற்ற விசயங்கள் அடங்கிய ஒரு புத்தகம் இது.

இந்தியா சுதந்தரம் பெற்றது 1947. அதற்கென ஒரு அரசியல் அமைப்புச் சாசனம் (Constitution) உருவாகியது 1950-ல். ஆனால் இந்தியாவிற்கு ஒரு தினம் முன்பு சுதந்தரம் வாங்கிய பாகிஸ்தானுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் எழுதத் தேவைப்பட்டது ஏறத்தாழ பத்து வருடங்களாம்...! இந்தியாவிற்கு இணையான அல்லது இந்தியாவைவிடச் சிறந்த ஒரு வல்லரசாக உருவாகும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்து பின்தங்கியது எதனால்? இது போன்ற எண்ணற்ற தகவல்களும் இந்நூலில் புதைந்து கிடக்கின்றன.

புத்தகத்தைப் படித்து முடித்த பின்னர் பாகிஸ்தான் மீது இதுவரை இருந்துவந்த உணர்வுகள் மாறி அது நம் சகோதர நாடு என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை.. :-)


- சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.in

Ramesh Murugan

unread,
Feb 12, 2013, 7:45:01 AM2/12/13
to panb...@googlegroups.com

அறிவியல்...அறிவு...அறிவுரை..

by விஜயன்

சரம்-2

அறிவியல்:

வரலாற்று சுவடுகள் : தமிழ் வலை உலகில் ,இது போன்ற வலைப்பூக்கள் மிக குறைவு, விமர்சன்ங்கள், கதை,கவிதை,மொக்கை போட ஆயிரக்கணக்கான பதிவர்கள் உள்ளனர்.அறிவியல் பதிவுகள் எழுத குறைந்த நபர்களே உள்ளனர்.குறைவான நபர்களில் நிறைவான பதிவுகள் தருகிறார் வரலாற்று சுவடுகள்( இவ்வலைப்பூ உரிமையாளர் பெயர் எனக்கு தெரியவில்லை ) வ.சு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் !



அறிவியல் நம்பி : அறிவியல் நம்பி எழுதியுள்ள அணுசக்தி தொடர்பான தொடர் எனக்கு மிகவும் பிடித்த தொடர்,அணு விஞ்ஞானத்தை அணு அணுவாக இவர் விளக்கியுள்ளார்.இவர் சில அறிவியல் புத்தகங்களும் வெளியிட்டுள்ளர் .அறிவியலை எளிய தமிழில் புரிகிற மாதிரி சொல்லி தருகிறார்.



அவிழ்மடல் :

அறிவியல், தொழில் நுட்பம், என பல விசயங்களை சுவாரசியமாக விளக்குகிறார் நம்மா ஆளுங்க ... போய் பாருங்க ...

விண்ணியல் சம்பந்தமான விசயங்கள் இந்த வலைப்பூவில் நிறைய உள்ளன ,அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய அறிவியல் வலைப்பூ 

உயிர்மை இதழில் ராஜ் சிவா எழுதும் தொடர் : உலக அழிவும் மாய இன மக்களும் என்ற தொடரை எழுதி பரபரப்பு கிழப்பிய ராஜ் சிவா அவர்கள் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு விடை தேடும் வித்தியசமான தொடர் ஒன்றை உயிர்மை இதழில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.வாசிக்க வாசிக்க பிரமிப்பூட்டும் தொடர்... ,என்னுடைய விருப்பமான தொடர்.






ஜெய தேவ் :ஜெயதேவ் அவர்கள் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அருமையாக தருகிறார்.கடவுள் துகள் , ஜீரோ கிராவிட்டி,பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.   ஒளியின் [Light] வேகத்துக்கும் எல்லை உண்டு போன்ற சிக்கலான இயற்பியல் விசயங்களை கூட எளிய முறைகளில் விளக்கமாக விளக்கி சொல்கிறார்.இவரின் பிற பதிவுகளைவிட அறிவியல் பதிவுகளில் இவர் திறமை கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுகிறது .இயற்பியலை இயல்பு நடையில் சொல்லித் தரும் ஜெயதேவ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்


மாணவன்  : பல தலைவர்கள் ,விஞ்ஞான மேதைகள் ,வரலாற்று நாயகர்கள் போன்றவர்களின் வரலாற்றை தொகுத்து தரும் சிம்பு அவர்களுக்கு வலையுலக வரலாற்று ஆசிரியர் என்ற பட்டம் கொடுக்கலாம் .



அறிவு :

TNPSC, TET - போட்டித்தேர்வுகளுக்கான குறிப்புகள் :  போட்டி தேர்வர்களுக்கு தேவையான தகவல்கள் கொண்ட தளம்  
அண்ணன் மதுமதி அவர்களின் முயற்சி என்னை புல்லரிக்க வைக்கிறது  (இவரை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் கூறுகிறேன்.. )

ஜேய் வின்  
upsc தேர்வுக்கான குறிப்புகள், பழைய வினாத்தாள்கள் ,புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக ... 

அறிவுரை:

தமிழ் பேரன்ட்ஸ் : அண்ணன் சம்பத் குமார் அவர்களின் வலைப்பூ இது ,குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக சகல விசயங்களும்,இத்தளத்தில் உள்ளன.திருப்பூரில் நடந்த "உறவோடு" விழாவிற்கு சென்றிருந்த போது, இவரின் அறிமுகம் கிடைத்தது."என் பாப்பா பிறந்தவுடன் குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக சில தகவல்களை படித்தேன்,அதன் பிறகு அந்த தகவல்களை தொகுத்து பலருக்கும் பயனளிக்கும் விதமாக வலைப்பூ துவங்கினேன்" என்று கூறும் சம்பத் அண்ணன் அவர்களின் முயற்சிகள் பாராட்டுக்குறியது.இவர் cuteparents.com என்ற ஒரு ஆங்கில வலைப்பூவும் வைத்துள்ளார்.


counsel for any : இவ்வலைப்பூ ஒரு " ஆன்லைன் தமிழ் கவுன்சிலிங்க் " வலைப்பூ,பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறவர்கள் இந்த வலைப்பூவில் உள்ள தகவல்களை நாடுங்கள்,உங்கள் பிரச்சனைகளுக்கு இலவசமாக கவுன்சிலிங்க் கிடைக்கலாம்.

மனநலம் வலைப்பூ : மனநலம் சார்ந்த பல பயனுள்ள தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.மறக்காமல் படியுங்கள்.

தமிழில் : மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் வலைப்பூ, இந்த வலைப்பூவில் உள்ள தகவல்கள் புத்தக வடிவிலும் வந்துள்ளன,டாக்டர் ஷாலினி அவர்களின் ஆழ்ந்த கருத்துக்கள் ஆண்,பெண்,மனநலம் என சகல தளங்களிலும் பரவி இந்த வலைப்பூவில் விரவிக்கிடக்கின்றன.


சட்ட அலோசனைகள்:

மக்கள் சட்டம் (PEOPLE&#39;S LAW) :சட்டம் சம்பந்தமான உங்கள் சாந்தேகங்களுக்கு இந்த வலைப்பூ நிச்சயம் விடை தரும்.இந்த வலைப்பூ ஆசிரியர்களின் முயற்சி நமக்கு வியப்பளிக்கிறது.இந்த வலைப்பூவில் இன்ன பிற சட்ட அலோசனைகள் வழங்கும் தளங்களின் முகவரிகளையும் "இணைப்புகள்" கொடுத்துள்ளனர்.அனைவரும் அவசியம் செல்ல வேண்டிய வலைப்பூ.

Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: சமூக பிரச்சனைகளுக்கு சட்டபூர்வமான தீர்வுகள் இவ்வலைப்பூவில் உள்ளன.

நாளைய சரத்தில் சந்திக்கிறேன் .... 

Ramesh Murugan

unread,
Feb 17, 2013, 1:31:51 AM2/17/13
to panb...@googlegroups.com

101. CONFESSIONS of an ECONOMIC HIT MAN

by Gnanasekar J S

மிகவும் வேண்டப்பட்ட விரோதியும், வேண்டப்படாத நண்பனுமாகிய பிரேம்குமார் இந்தப் பதிவு மூலம் எங்களுடன் இணைகிறார்.
- சேகரும் சேரலும்

You Control the Debt, you control everything.
- The International (movie)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Confession of an Economic Hit Man
ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ்
வெளியீடு : Plume (December 27, 2005)
பக்கங்கள் : 300
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
30 வருடங்களாகச் செதுக்கப்பட்ட போராட்டங்கள் நம் கண்முன்னே துடைத்து எறியப்பட்ட அதே வேளையில் லிபியாவில் திடீரென்று தோன்றிய போராளிகள் ஆட்சியைப் பிடித்தனர். ஒரு திரைப்படத்தைப் போல் நாம் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் எண்ணெய் வயல்களைத் தனதாக்கிக் கொண்டது British Petroleum நிறுவனம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதாகச் சொல்லி எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைத் தனதாக்கிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவனங்கள். ஐநாவின் பொருளாதார தடையினால் இராக்கில் மருத்துவ உதவியின்றி பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் இறந்தனர். இராக்கினால் இனி எந்த பேரழிவு ஆயுதங்களைப் பற்றியும் யோசித்து கூட பார்க்க முடியாது என்று ஆய்வு செய்து ஐநாவில் அறிக்கை சமர்பித்த ஆறு மாதத்தில் பேரழிவு ஆயுதம் இருப்பதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இராக்கின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவன‌ங்கள். இவற்றை எல்லாம் செய்திகளில் நீங்கள் எளிதாக பார்க்கமுடியாது. ஏனெனில் மிகப்பெரிய ஊடகங்கள் அனைத்தும் பெரும் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. NBC  - General Electric, ABC - Disney, CBS -Viacom, CNN - AOL & Time Warner.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள்  உலக நாடுகள் மீது மூன்று வகையான தாக்குதல்களைத் தொடுக்கின்றன.
1. பொருளாதாரத்தை ஆயுதமாகக் கொண்டு நாடுகளைக் கடனாளி ஆக்குவது - இந்தோனேசியா, சௌதி
2. புரட்சி வெடிப்பதாக அறிவித்து அல்லது விபத்தை ஏற்படுத்தி  ஆட்சியாளர்களைத் தீர்த்துக் கட்டுவது அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பது
ஜெய்மி ரோல்டோஸ்  (இகுவேடார் ஜனாதிபதி)
ஓமர் டொரிஜோஸ் (பனாமா ஜனாதிபதி)
அலெண்டே (சிலி ஜனாதிபதி)
முகமது மொசதே (ஈரான்)
3. போர் அறிவித்து நாட்டை ஆக்கிரமிப்பது - பனாமா, ஈராக்

இதில் முதல்வகை தாக்குதலைத் தொடுப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ்  போன்றவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். ஆலோசனை நிறுவனம் ஒன்றில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஜான் பெர்கின்ஸ் முதன்மை பொருளாதார வல்லுநர், பொருளாதாரம் மற்றும் பிராந்திய திட்டமிடல் மேலாளர் என பல பதவிகள் வகித்தாலும் இவருடைய பணி அமெரிக்க பெரும்  நிறுவனங்களின் இலாபத்திற்காக நாடுகளை மீள முடியாத கடனில் சிக்கவைப்பது. மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போவதாக நம்பவைத்தோ அல்லது லஞ்சமாக பெண்ணோ பணமோ பொருளோ கொடுத்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மிகப்பெரிய அளவில் கடன் பெறவைப்பது. கடனைத் திருப்பி செலுத்த முடியாத போது இந்நாடுகளின் இயற்கை வளங்களும் மக்களும் பெரும் நிறுவனங்களுக்கு இரையாகின்றன.
(http://www.ingoodbooks.com)
ஜான் பெர்கின்ஸ் இப்புத்தகத்தில்  அவர் பங்குபெற்ற திட்டங்களைப் பற்றியும் அதன் விளைவுகளையும் விவரிக்கிறார். இவரைப் போன்றோரின் வெற்றி, நாடுகளை வளர்ச்சியின் மாயையில்  சிக்கவைத்து அடிமைகளாக்கி விடுகிறது. இவர்களின் தோல்வி, பல நேரங்களில் மக்களை நேசிக்கும் தலைவர்களின் மரணத்தில் முடிகிறது. இகுவேடாரின் ஜனாதிபதி  ஜெய்மி ரோல்டோஸ், பனாமா ஜனாதிபதி ஓமர் டொரிஜோஸ் தனது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்ததற்காக விபத்தில் கொல்லப்பட்டனர். சிலியின் ஜனாதிபதி தனது இடதுசாரி கொள்கையின் மூலம் பெருநிறுவன‌ங்களை எதிர்த்துக் கொண்டதால் புரட்சியில் தன் உயிரை இழக்க நேர்ந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த  Summer Institute of Linguistics என்ற கிறிஸ்துவ அமைப்பு அமேசான் காடுகளில்  எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் உணவுகளை வழங்கி பிற்பாடு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உடைகள் மற்றும் உணவு வழங்கி அவர்களை எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக இடம்பெயர வைத்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமக்கு ஆதரவளிக்க யாருமில்லாததால் இம்மக்கள் போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தலின் மூலம் வரும் பணத்தில் ஆயுதம் வாங்கி தம் காடுகளையும் தாம் நேசிக்கும் உயிரினங்களையும்  காப்பதற்காக போராடுகின்றனர். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு இவர்கள்   வெறும் போதை பொருள் வியாபாரிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முனைகின்றன ஊடகங்கள்.

வெனிசுவேலாவிலும் ஈரானிலும் ஏற்பட்ட தோல்விகளை உங்களின் வாசிப்பிற்கே விட்டு விடுகின்றேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் இந்நூலின் தமிழாக்கத்தை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

குடும்ப அட்டைகளைப் பிடுங்கிக்கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டங்களையும் பெரும் முதலாளிகளின் நலனிற்காக தேசிய முதலீட்டு வாரியத்தை எல்லா சட்டத் திட்டங்களுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டதாகவும் உருவாக்கத் துடிக்கும் அரசு; உலகில் பட்டினியாய் இருப்பவர்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் இருக்கையில் பெரும் நிறுவன‌ங்கள் பண்ணையார்களாவதற்கு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேர அறிவுறுத்தும் அரசின் பிரதம மந்திரி. ஓர் இனத்தின் அழிவு அணு உலை வடிவத்தில் நம் வாயிலை நெருங்கிவிட்ட நிலையில் வால்மார்ட் நம் வாழ்வாதாரத்தைப் பறிக்கத் துடிக்கின்ற இந்நேரத்தில் செய்திகளுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மையைக் கண்டுணர்வது நம் கடமையாகிறது.

- பிரேம்குமார்
 (http://premkumarkrishnakumar.wordpress.com/)

Ramesh Murugan

unread,
Feb 17, 2013, 1:37:07 AM2/17/13
to panb...@googlegroups.com

100. JERUSALEM - The Biography

by Gnanasekar J S
(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்)

தொடர்ந்து படிப்பதற்கு முன் 'நிலமெல்லாம் ரத்தம்' புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள்.

FOREIGNER! DO NOT ENTER WITHIN THE GRILLE
AND PARTITION SURROUNDING THE TEMPLE
HE WHO IS CAUGHT
WILL HAVE ONLY HIMSELF TO BLAME
FOR HIS DEATH WHICH WILL FOLLOW
- சாலமன் தேவாலயச் சுவர் வாசகம் (c23BCE)

மதத்தின் பெயரால் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று இங்கே பாருங்கள்.
- Harriet Martineau

Everybody has two cities, his own and Jerusalem.
-Teddy Kollek (மேற்கு ஜெருசலேம் மேயராக இருந்தவர்)

எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறித்து (விவிலியம்)

Jerusalem is an old nymphomaniac who squeezes lover after lover to death, before shrugging him off her with a yawn, a black widow who devours her mates while they are still penetrating her.
- Amos Oz (இஸ்ரேலிய எழுத்தாளர், A Tale of Love and Darkness)

Well, if either one side stops complaining, you will be dismissed.

இங்கிலாந்து பிரதமர் ஜெருசலேம் ஆளுநரிடம் சொன்னது

I am sitting where a god has stood.

- Mark Twain
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : Jerusalem - The Biography
ஆசிரியர் : Simon Sebag Montefiore
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Orion Books, London
முதற்பதிப்பு : 2011
விலை : 595 ரூபாய்
பக்கங்கள் : 640
------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வு தரும் நம்பிக்கையில் மக்களைத் தன்நோக்கி ஈர்க்கும் நகரங்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்து ஆண்டாண்டு காலமாய் மரணம் தேடி மக்கள் போகும் நகரம் அறிவீர்களா? கையளவு மண்ணில் கடலளவு கதை சொல்லும் ஜெருசலேம் நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

ஜெருசலேமிற்குள் நுழைவது அவ்வளவு சுலபம் அல்ல. 1950ல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் உயிரியல் பூங்காவில் உள்ள 1 சிங்கம், 1 புலி, 2 கரடிகளுக்கு உணவிடுவதில் வந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு இரு சமரசங்களைப் பரிந்துரை செய்தது. இஸ்ரேலிய பணத்தில் அரபு நாடுகளின் குரங்குகளை வாங்கலாம். அல்லது இஸ்ரேலிய நாட்டின் குரங்குகளை ஜோர்டான் நாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் வழியாகக் கொண்டு போகலாம்.

(http://wikimedia.org)

ஜெருசலேம். அதில் கிழக்கு ஜெருசலேம். அதில் பழைய ஜெருசலேம் நகரம். ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவான பரப்பு. உலகப் பாரம்பரிய சின்னம். இஸ்ரேல் சொந்தம் கொண்டாடினாலும் நாடற்ற நிலம். இங்குதான் கிறித்தவ இஸ்லாமிய யூத ஆர்மேனியர்களுக்கு என தனித் தனியே புராதனக் குடியிருப்புகளும், முப்பெரும் மதங்களும் சொந்தமெனும் கோயில் மலையும் (Temple Mount) உள்ளன. கோயில் மலை என்பது ஈசாக்கைக் கடவுள் ஆணைப்படி ஆபிரகாம் பலி கொடுக்கப் போன இடம் மற்றும் சாலமோன் தேவாலயம் இருந்த இடம் என்பது யூத நம்பிக்கை. இன்று மேற்குச் சுவர் (Western Wall) மட்டும் எஞ்சி நிற்கிறது. முகம்மது நபி சொர்க்கம் சென்று மீண்டும் திரும்பிய இடமாக இஸ்லாமியர்களால் நம்பப்படும் Dome of Rock மற்றும் அதன் அருகில் உள்ள அல் அக்சா மசூதியும் கோவில் மலையில் உள்ளன. இயேசு கிறித்து கொல்லப்பட்ட இடம் (Holy Sepulchre) கிறித்தவக் குடியிருப்புப் பகுதியில் உள்ளது.

பழைய ஜெருசலேமைச் சுற்றி மதில். அதற்கு 8 வாயில்கள். அதில் கிழக்கே இருக்கும் தங்க வாயில் (Golden Gate) 400 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கே இருக்கும் இன்னொன்று வாயிலில் இரு சிங்கச் சிற்பங்கள் இருப்பதால் அதற்குச் சிங்க வாயில் (Lion's Gate) என்று பெயர். அச்சிங்கச் சிற்பங்கள் எப்படி வந்தன என்பதற்குப் பல கதைகள் உள்ளன.

1) 1516ல் ஜெருசலேமைக் கைப்பற்றிய ஒட்டாமன் பேரரசன் முதலாம் செலிமின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. மேடாய் இருக்கும் ஜெருசலேமை மட்டப்படுத்த நினைத்ததற்குத் தண்டனை என சொல்கின்றன. அப்படி செய்ய மாட்டேன், சுற்றி சுவர் கட்டுகிறேன் என்று சொன்னபின் விட்டுவிடுகின்றன.
2) முதலாம் செலிமுக்குப் பின் ஆண்ட சுலைமான் தான் ஒட்டாமன் வெற்றியைக் கொண்டாட சிங்கச் சிற்பங்களை வைத்தான்.
3) சுலைமானின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. கனவு விளக்கம் சொல்பவர்களிடம் கேட்கிறான். 'தூங்கப் போகும் முன் என்ன சிந்தனையில் இருந்தீர்கள்?'. 'வரி கட்டாதவர்களை எப்படி தண்டிப்பது என்ற யோசனை'. 'புனித பூமியின் குடிமக்களைத் தண்டிக்க நினைத்ததற்காக ஆண்டவனின் தண்டனை இத்துர்க்கனவு'.
இரண்டு சிங்கச் சிற்பங்களுக்கு இத்தனை கதைகளா? அதுமட்டுமல்ல, இன்றுதான் அதன் பெயர் சிங்கவாயில். ஒரு காலத்தில் அதன் பெயர் புனித ஸ்டீவன் வாயில். இதே போல் ஜெருசலேமின் ஒவ்வொரு வீதிக்கும் குறைந்தது 3 பெயர்கள். ஜெருசலேமிற்கே வரலாற்றில் 70 பெயர்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை. சரி, சிங்கவாயில் கதைகளில் எதுதான் உண்மை? ஜெருசலேமை வென்றவர்கள் தங்கள் தேசங்களில் இருந்து கொண்டு வந்த பொருட்களில் ஜெருசலேமைக் கட்டியதை விட, ஏற்கனவே இருந்தவற்றை இடம் மாற்றி வைத்ததைத் தான் பலமுறை செய்திருக்கிறார்கள். அப்படித்தான் இவ்விரு சிற்பங்களை நகரின் வடமேற்கில் இருந்து எடுத்து வந்து செலிம் கட்டிய மதிலில் ஒரு வாயிலில் வைத்து சிங்கவாயில் எனப் பெயர்வரச் செய்தான் சுலைமான். அவ்விரு சிற்பங்களும் ஒட்டாமனுக்கு முன் ஆட்சி செய்த எகிப்திய மம்லூக் சுல்தான்களில் ஒருவனான‌ பைபார்ஸ் தன் குருவிடம் இருந்து 300 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டவை. எப்படி இருக்கிறது உண்மை? உண்மையின் கடைசித் துளியையும் சேர்த்து சீரணித்துக் கொள்ளுங்கள். அவ்விரு சிற்பங்களும் சிங்கங்க‌ள் அல்ல, சிறுத்தைகள்!
ஜெருசலேம் பற்றி இணையத்திலும் புத்தகங்களிலும் மதமும் அரசியலும் சாராத கற்பனைகளற்ற‌ உண்மையைத் தேடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதற்குச் சிங்க வாயில் ஓர் உதாரணம். 1800 முதல் 1875 வரை ஆங்கிலத்தில் மட்டும் ஜெருசலேம் பற்றி 5000 புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. பெரும்பாலும் இன அல்லது மதச்சார்பு உடையவை. அல்லது உலக அழிவைப் பற்றி பயம் காட்டுபவை. என் நேரத்தை வீணாக்காமல் நடுநிலையுடன் உள்ளதை உள்ளபடி புரியும்படி, பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இன்றைய பிரச்சனைகளை விதையில் இருந்து விளக்கும் ஒரு புத்தகம் தேடினேன். இப்போது ஜெருசலேமுடன் புத்தகத்திற்குள் போகலாம்.
Simon Sebag Montefiore அவர்களின் Jerusalem - The Biography. பல இனங்கள் மொழிகள் மதங்கள் பேரரசுகள் என பின்னிப் பிணைந்து கிடக்கும் ஒரு நகரத்தின் கதையை அற்புதமாக புத்தகப்படுத்தி இருக்கிறார். ஜெருசலேம் சம்மந்தப்பட்டவர்களின் வம்சாவழியினரைப் பேட்டி கண்டு அவர்களின் இன்றைய நிலையை ஆங்காங்கே சொல்கிறார். இயேசு கிறித்துவின் சிலுவையைப் பாதுகாத்து வந்த குடும்பம் இன்று சுற்றுலா வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்று படிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 

53 தலைப்புகளில் கதை சொல்கிறது புத்தகம். ஜெருசலேம் நகரை உண்டாக்கிய இஸ்ரேலின் இரண்டாம் மன்னன் தாவீது முதல் எகிப்தின் இரண்டாம் அதிபர் கமால் அப்துல் நாசர் வரை. 1050BCE முதல் இன்றைய நிலைக்குக் காரணமான 1967 யுத்தம் வரை. முன்கதைச் சுருக்கமாக‌ ஆபிராம் முதல் சவுல் வரை. பின்கதைச் சுருக்கமாக 2010ல் பராக் ஒபாமா, பெஞ்சமின் நெடான்யாஹூ வரை. 32 பக்கங்களுக்குப் புகைப்படங்கள். சில குடும்ப மற்றும் ஆட்சியாளர்களின் 5 வம்சாவழிப் பட்டியல்கள். வெவ்வேறு காலக் கட்டங்களில் இஸ்ரேல் - பாலஸ்தீன் எல்லைகளைக் காட்டும் 11 வரைபடங்கள். எந்தவொரு தகவலையும் பின்னாளில் எளிமையாகக் கண்டுபிடிக்கும் அளவிற்கு அருமையாகப் பகுத்து இருக்கிறார்.

ஜெருசலேம் பற்றி ஆசிரியரின் முன்னுரை இது: ஜெருசலேமின் வரலாறு என்பது உலகத்தின் வரலாறு. உலகத்தின் மையம் என்று நம்பப்படும் ஜெருசலேம் கண்டிப்பாக இன்றைக்கு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் மையமேதான். நாகரீகங்களின் போர்க்களம். தெய்வ நம்பிக்கைகளும் மறுப்புகளும் வெட்டிக் கொள்ளும் புள்ளி. தலைசுற்ற வைக்கும் சதிகளின் பிறப்பிடம். நம்பிக்கைகளால் கட்டப்பட்ட புனித நகரம். ஒரே கடவுளின் வீடு. இரு மக்களின் தலைநகரம். மூன்று கடவுளர்களின் கோவில். பூமி சொர்க்கம் என ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் ஒரே நகரம்.

335 கப்பல்கள் 35,000 வீரர்கள் மற்றும் 167 விஞ்ஞானிகளுடன் எகிப்திற்குப் படையெடுத்துச் சென்ற நெப்போலியன், பாரீசுக்கு இப்படி கடிதம் அனுப்புகிறார்: I would found a religion. I saw myself marching on the way to Asia, mounted on an elephant, a turban on my head, in one hand a new Koran I would have composed myself.... By the time you read this, it's possible I will be standing in the ruin's of Solomon's Temple.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் தன்னைக் கடற்பயணம் அனுப்பிய அரசிக்கு இப்படி கடிதம் அனுப்புகிறார்: Before the end of the world, all prophecies have to be fulfilled, and the Holy City has to be given back to the Christian Church.

தெரியாமல் அல்லது உண்மையென அல்லது உண்மைபோல் நான் நம்பிக் கொண்டிருந்த சில அடிப்படை விசயங்களை இப்புத்தகம் புரட்டிப் போட்டது.
1) யூதர்களின் கடவுள் ஜெஹோவா என்பது தவறு. ஹீப்ருவில் சுருங்கிய வடிவமான YHWH ஐ, ஆங்கிலத்தில் தவறாக உச்சரிக்கப் போய் வந்ததுதான் ஜெஹோவா என்ற சொல்லாடல். யூதர்கள் தங்கள் ஒரே கடவுளின் பெயரை உச்சரிப்பதில்லை. ஜெருசலேமில் சாலமோன் தேவாலயம் இருந்த காலத்தில் தலைமைக் குருவிற்கு மட்டும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உச்சரிக்க அனுமதி இருந்தது.
2) விவிலியம் தவிர வேறெங்கும் சான்று இல்லாத தாவீது மன்னனின் இருப்பை, 1993ல் இஸ்ரேலின் வட எல்லையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு (Tel Dan Stele) தான் நிரூபித்தது.
3) ஆப்ராம் குடியேறுவதற்கு முன், தாவீது ஜெருசலேமை உருவாக்குவதற்கு முன் அங்கிருந்த பூர்வகுடிகள் யார்? அவர்களின் தெய்வம்?

ஜெருசலேம் எக்காலத்தில் எதற்காக எவரிடம் இருந்தது என்று அறிய முயன்றாலே, ஆசிரியர் சொல்வது போல், உலக சரித்திரம் அடங்கிவிடும். கடவுளையே எதிர்த்து கோபுரமும் தொங்கும் தோட்டமும் அமைத்த பாபிலோனியர்கள். பேரரசன் சைரஸ், அவனுக்குப் பின் வந்து 3 கண்டங்களை முதன்முதலில் ஆட்சி செய்த டேரியஸ் என பெர்சியர்கள். பெர்சியர்களைத் தொடர்ந்தால் தாஜ்மகால் வரை வரலாம். அலெக்சாண்டர் தலாமி என்று மாசிடோனியர்கள். அலெக்சாண்டரைத் தொடர்ந்தால் இந்திய எல்லை தொடலாம். பிறகு இயேசு கிறித்து. ரோமானிய மன்னன் காலிகுலாவைத் தொடர்ந்தால் ஒரு XXX திரைப்படத்தை எதிர் கொள்ளலாம், நீரோவைத் தொடர்ந்தால் 666 என்ற எண்ணின் மேல் பயத்துடன் ஒலிம்பிக்கில் நிர்வாணமாக டுவதைப் பார்க்கலாம். 

ரோமானியர்கள் கிழக்கே கால் பதிக்கப் போய் கான்ஸ்டான்டிநோபிள் நகரை உருவாக்கிய மன்னன் கான்ஸ்டன்டைன் என பைசாந்தியர்கள். கிறித்தவ‌த் தலைமைப் பீடத்தில் குளறுபடிகள். பிறகு அரபு மக்களுக்குச் சரித்திரம் தந்த முகமது நபி. கலீபாக்களின் முப்பெரும் தலைமைப் பீடங்கள். அரபு கலீபாக்களின் சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களின் 4 வம்சங்கள். சிந்துபாத், அலிபாபாவும் 40 திருடர்களும், அலாவுதினும் அற்புத விளக்கும் போன்ற கதைகள். ஷியா இஸ்லாமியர்களின் 12வது இமாம். உலகின் மிக நீண்ட போரான சிலுவைப் போர்கள். தைமூர், செங்கிஸ்கான் என மங்கோலியர்கள். உலகின் கடைசிப் பேரரசான ஒட்டாமன் பேரரசு. நெப்போலியன். முதலில் புகைப்படம் எடுக்கப்பட்ட கிரீமியன் யுத்தம். புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரஷ்யா. உலகப் போர்கள்.

ஒட்டாமனுக்கு முன் மம்லுக் (Mamluk) என்ற அடிமை வம்சம். அவர்களின் வம்சாவழியைத் தொடர்ந்தால் குத்புதீன் ஐபக். அவரைத் தொடர்ந்தால் திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வழியாக மதுரை ஆயிரம் கால் மண்டபம் வரை வரலாம். முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் சிதறிய துண்டுகளைப் பார்த்தால் அரபு நாடுகள். முகமது நபியின் வம்சாவழிகளைத் தொடர்ந்தால் சவூதி ஜோர்டான் ஈராக் மொராக்கோ ஈரான் என்று நம் காலத்தவர்களையும் அறியலாம். லெபனான் மற்றும் எகிப்தின் வரலாற்றைப் படிக்கச் சொல்லி ஜெருசலேம் கட்டாயப்படுத்தும். சவூதியின் அமெரிக்கச் சார்பு, ஈரானின் அமெரிக்க எதிர்ப்பு, ஐரோப்பாவின் துயரம் (Sickman of Europe) என்று துருக்கி ஒதுக்கப்படும் வரலாற்றுப் பின்னணி அறியலாம். உண்மையிலேயே ஜெருசலேமின் வரலாறு என்பது உலகத்தின் வரலாறுதான்.

தன் ஆண் காதலன் நைல் நதியில் மூழ்கி இறந்து போக அவன் நினைவாக ஒரு நகரத்தை உண்டாக்கி அவனின் நிர்வாணச் சிலைகளைத் தேசமெங்கும் நிறுவிய பேரரசன். எதிரிகளுக்குப் பானத்தில் விசம் கலந்து வைத்துவிட்டு, மறுந்துபோய் அதைக் குடித்து இறந்து போன மன்னன். சாகின்ற மனிதனைப் பெட்டிக்குள் அடைத்து வைத்து உயிர் எப்படி வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்த மன்னன். செரிமானம் ஆராய்ச்சிக்கு உயிருள்ள மனிதனின் குடலை வெட்டிய மன்னன். குழந்தைகள் எப்படி மொழிகளைக் கற்கிறார்கள் என்று கண்டறிய அவர்களைத் தனியறைகளில் அடைத்து வைத்த மன்னன். தன் செல்லப் பிராணி குரங்குடன் எப்போதும் வலம் வரும் இளவரசன். இது போன்ற விசித்திரக் கதாப்பாத்திரங்களை ஜெருசலேமின் வாழ்க்கையில் சந்திக்கலாம்.

மனித வரலாற்றில் நீண்ட காலம் பேசப்பட்ட நகரங்கள் எதென்ஸ் மற்றும் ஜெருசலேம் மட்டும்தான். பிறந்தது முதல் இன்றுவரை ஜெருசலேமின் கவர்ச்சி மங்கவே இல்லை. ஜெருசலேமில் இல்லாதவர்கள் ஜெருசலேமையும் தத்தம் மதநூல்களில் சொல்லப்படும் காட்சிகளையும் தாம் வாழும் இடத்திலேயே கற்பனை செய்து கொண்டார்கள். அக்கற்பனைகளின் விளைவாக அமெரிக்காவில் மட்டும் 18 ஜோர்டான், 12 கானான், 66 சேலம், 18 ஹெப்ரான், 1 இஸ்ரேல், 4 ஜெருசலேம், 9 பாலஸ்தீன் என்ற நகரங்கள் உள்ளன. நசரேத் என்ற பெயரில் 2 நகரங்களைத் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டிருக்கிறேன். சரி, தமிழ்நாட்டுச் சேலம் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரியுமா?

அக்கற்பனைகள் தூரத்துத் தேசங்களின் அரசியலைக் கூட ஆக்கிரமித்து இருந்தன என்பதை அறிய, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு அதன் சின்னமாக (American Great Seal) தாமஸ் ஜெபர்ஸன் பரிந்துரை செய்த படத்தை இணையத்தில் பாருங்கள். யூதர்களின் சாலமோன் தேவாலய‌த்திற்குப் போட்டியாக கான்ஸ்டான்டிநோபிளில் ரோமானியர்களால் கிறித்தவர்களின் ஹேகியா சோபியா கட்டப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனபின் மசூதியாகி இன்று அருங்காட்சியகமாக இருக்கிறது. அதற்குப் போட்டியாக ஜெருசலேமில் இஸ்லாமியர்களின் அல் அக்சா மசூதி கட்டப்பட்டது.

யூதர்களுடன் சமரசம் பேசியதற்காக‌ எகிப்தின் அதிபர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார். அரபுகளுடன் சமரசம் பேசியதற்காக‌ இஸ்ரேலியப் பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார். ஜெருசலேமைப் பகிர்ந்து கொள்ள உருவான 40 திட்டங்கள் இதுவரை தோல்வி அடைந்துள்ளன. கோயில் மலையைப் பகிர்ந்து கொள்ள மட்டும் 13 மாதிரிகள் கிடப்பில் உள்ளன. 400 வருடங்கள் கிறித்தவ, 1300 இஸ்லாமிய, 1000 வருடங்கள் யூத சாயலுடன் இருந்த ஜெருசலேம், மதங்களின் அதிகாரம் அரசியல் சண்டைகள் இல்லாமல் மதநல்லிணக்கத்துடன் சில காலங்கள் இருந்திருக்கிறது. அவை பொற்காலங்கள்! புத்தகத்தின் கடைசியில் அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் பழைய ஜெருசலேம் எப்படி படிப்படியாக எழுந்து தனது மத ஆராதனைகளுடன் தினமும் தன் பணிகளைத் தொடங்குகிறது என அழகாக விளக்குகிறார் ஆசிரியர். யூதம் கிறித்தவம் இஸ்லாம் மதங்கள் தங்களுக்குள் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அந்த மதிலுக்குள் தங்கள் மத அடையாளங்களைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி அற்புதம்.
(http://www.dancutlermedicalart.com)
20‍/07/1951. அல் அக்சா மசூதிக்குள் ஜோர்டன் மன்னர்
முதலாம் அப்துல்லாவைக் கொன்றவனின் உடல்
ஜெருச‌லேம் வரலாறு பற்றிய எனது சொந்தக் கருத்துகள்: 
பிடித்த நபர்கள்:
1. முகம்மது நபி
2. சுல்தான் சலாவுதீன்
3. யாஸர் அராபத் (ஜெருச‌லேம் மீது யூத‌ர்க‌ளின் உரிமையை ஒட்டுமொத்த‌மாக‌ ம‌றுத்த‌து த‌விர‌)
4. தியோட‌ர் ஹெர்ஸ‌ல்
5. முத‌லாம் உம‌ர் 
6. முத‌லாம் முஆவியா (Muawiyah I)
7. ஒட்டாம‌ன் பேர‌ர‌ச‌ன் சுலைமான் (Suleiman the Magnificent)
8. பெஞ்ச‌மின் டிஸ்ரேலி (Benjamin Disraeli)
9. ரோமானியப் பேரரசன் இர‌ண்டாம் ஃப்ர‌டெரிக் (Frederick II)
10. ரோமானியப் பேரரசன் ஜீலிய‌ன் (Julian)

பிடிக்காத நபர்கள்:
1. போப் அர்பன் 2
2. அடால்ப் ஹிட்லர்
3. ப‌ல‌ ரோமானிய‌ ம‌ன்ன‌ர்க‌ள். குறிப்பாக காலிகுலா நீரோ ஹாட்ரியன்
4. மார்டின் லூதர்

திரிந்துபோன வரலாற்றிற்காக‌ பரிதாபப்பட்டேன்:
1. அப்சலோம் - தாவீதின் மகன்
2. மம்லுக் சுல்தான் பைபார்ஸ்
3. தொழுநோய் மன்னன் நான்காம் பால்ட்வின் (Baldwin IV)
4. ஒட்டாமன் பேரரசு
5. பரபாஸ் - இயேசு கிறித்துவிற்குப் பதிலாக விடுதலை செய்யபட்டதற்காக கெட்டவனாகி விட்டார்

(http://briannibbe.files.wordpress.com)
Dome of the Rockக்கும் 1,50,000 கல்லறைகளுக்கும் இடையில் தங்க வாயில்
கனவு கற்பனை நம்பிக்கை என்ற சக்திகளால் தான் இதுவரை ஜெருசலேம் வாழ்ந்து கொண்டிருக்கிறது; இனிமேலும் வாழும். நம்பிக்கை ஜெருசலேமின் அடையாளம். தனது மீட்பர்களைத் தவிர வேறு யாரையும் அது நம்புவதில்லை. உலக அழிவு பற்றிய புரளிகளை நம்புவதில்லை. பல போலிகளை நிராகரித்து விரட்டி இருக்கிறது ஜெருசலேம். உண்மையை நிரூபிக்க தீக்குளித்தவனைக் கூட நம்புவதில்லை ஜெருசலேம். எந்தவொரு கொடிய சம்பவத்திலும் அந்த நம்பிக்கைதான் ஜெருசலேமை முன்னோக்கி நகர்த்தி இருக்கிறது. இன்றைய ஜெருசலேமின் நிலைமையைப் பார்க்கும் நமக்கெல்லாம் பரிதாபமாக இருக்கலாம். ஆனால் பிரிட்டன் மறைமுகமாகத் துண்டாட நினைத்தபோது, பேரரசர்கள் தங்கள் மத அடையாளங்களை மீட்டெடுக்க ஜெருசலேமைச் சுற்றிச் சுற்றி வந்த‌போது, தங்கள் புனிதத்தலங்கள் சிதில‌மாகியபோது என்று பல கொடூர சம்பவங்களைச் சந்தித்த ஜெருசலேமிற்கு இன்றைய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று வரலாற்றின் பக்கங்கள் நினைக்க‌ வைக்கும். எந்த நிலையும் மாறும் என்பதில்தான் ஜெருசலேமின் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் தங்கவாயிலின் வாசலில் 1,50,000 மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. எந்த நிலை மாறினாலும் தங்கவாயில் மட்டும் உலக அழிவு வரை திறக்கப்படாது!

- ஞானசேகர்

Ramesh Murugan

unread,
Feb 21, 2013, 4:58:08 AM2/21/13
to panb...@googlegroups.com

இணையம் வெல்வோம் - 1

by சுடுதண்ணி

ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர்.
இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று விளங்கும் www.reddit.com தளத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
ஆரொன் ஸ்வார்ட்ஸ்
இணையத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் உலகத்திலுள்ள அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று போராடும் Open Access Movement எனும் குழுவின் கதாநாயகன், அதற்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டு வந்த SOPA (Stop Online Piracy Act) எனும் சட்டத்தினை எதிர்த்து Demand Progress எனும் இயக்கத்தினை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டவர். கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் முக்கிய ஆர்வலர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் சமூகவியல் படித்து விட்டு அங்கு அறிவுப்பூர்வமான சூழல் இல்லை என்று காரணம் கூறி விலகி கல்வியாளர்களை வியர்க்க வைத்தவர். பின்பு ஹார்வர்டில் ஒழுக்கவியல் குறித்தான ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். தமிழ் சினிமாவில் காதலர்களுக்கே யோசனை சொல்லும் குழந்தைகளுக்கு இணையாக கணிணித் தொழில்நுட்பத்தில் சிறு வயதிலேயே கோலோச்சிய ஆரொனின் சிந்தனையெல்லாம் இணையத்தில் தகவல்களை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதிலேயே இருந்தது. தன் 21வது வயதில் அமெரிக்க நீதிமன்றங்களின் வழக்கு விசாரணை ஆவணங்களை இணையத்தில் கட்டணச்சேவை மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருந்த PACER (Public Access to Court Electronic Records) என்னும் தளத்தின் வழங்கியில் தன் சொந்த செலவில் ஏறக்குறைய அனைத்து ஆவணங்களையும் தரவிறக்கம் செய்து இணையத்தில் இலவசமாக உலவ விட்டு உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் முதல் FBI வரை விசாரணை செய்தும் முடிவில் குற்றம் சாட்ட சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர்.

இப்படி இணைய உலகின் அசகாயசூரனாக அனைவராலும் பார்க்கப்பட்ட ஆரொன், கடந்த ஜனவரி 11, 2013 அன்று புரூக்ளினில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, ஆரொன் குறித்து அறிந்தவர்களனைவருக்கும் பேரதிர்ச்சியையும், தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது. கோபத்திற்குக் காரணம் தற்கொலைக்கு முன்பான 24 மாதங்களில் ஆரொனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆவணக் களஞ்சியமான JSTOR (Journal Storage) எனும் இணையத்தளத்தின் வழங்கியில் இருந்து எக்கச்சக்கமான ஆவணங்களைத் தரவிறக்கம் செய்தார் ஆரோன். இத்தளத்திலிருந்து எல்லோராலும் தரவிறக்கம் செய்து விட முடியாது. ஆனால் ஹார்வர்டின் ஆராய்ச்சி மாணவர் என்ற வகையில் ஆரொனுக்கு JSTOR தளத்தினைப் பார்வையிடவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் உரிமை இருந்தது. இது தவிர MIT (Massachusetts Institute of Technology) வளாகத்தினுள் இருக்கும் வலையமைப்பில் உங்களை விருந்தினராகப் பதிவு செய்து கொண்டாலும் JSTOR தளத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை யாரும் பதிவு செய்து கொள்ள முடியும்.


ஆரொன் MIT வளாகத்தினுள் ஒரு மடிக்கணிணியினை வைத்து விருந்தினராக அவர்களின் வலையமைப்பில் பதிவு செய்து, தான் எழுதிய ஒரு நிரல் மூலம் கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களையும் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட கணிணி மட்டும் ஏகப்பட்ட ஆவணங்களைத் தொடர்ந்து மேய்வதைக் கண்ட கண்காணிப்பாளர்கள் அந்த கணிணியின் MAC (Media Access Control) முகவரியினைத் தடை செய்தனர். வலையமைப்பின் பாதுகாப்பு சூட்சுமங்களை அறிந்த அன்பர்களுக்கு MAC முகவரியினை மாற்றுவதன்பது நம்மூரில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குப் போடுவதை விட எளிதானது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஆரொன் ஆவன செய்து தனது தரவிறக்க வேட்டையினைத் தொடர்ந்தார். JSTOR வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் இம்சை தொடர்வது கண்டு, இம்முறை எத்தடையினையும் உருவாக்காமல், அதன் மூலத்தை நோக்கி தங்கள் தேடல் குதிரையை முடுக்கி விட்டனர், அது சென்று சேர்ந்த இடம் ஆரொன். கையும், கணிணியுமாக மாட்டிக் கொண்ட ஆரொன், ஆவணங்களனைத்தையும் திரும்ப ஒப்படைத்து JSTOR உடனான பஞ்சாயத்தினை முடித்து கொண்டார். MIT இது குறித்து வாயே திறக்கவில்லை.

ஆனால் ஆரொனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த அமெரிக்க அரசாங்கம் இப்பிரச்சினையை விடுவதாக இல்லை. MAC முகவரியினை மாற்றியது, நிரல் மூலம் விதிமுறைக்குப் புறம்பாக ஆவணங்களைத் தரவிறக்கம் செய்தது, மற்றும் பலப்பல காரணங்களைக் கூறி ஆரொன் மேல் வழக்குத் தொடர்ந்தது. இன்று பிறந்த குழந்தையை, இது வளர்ந்து 25 வயதில் திருடுவதற்குத் தான் இது பிறந்திருக்கிறது என்று கூறி கைது செய்வது போல, தரவிறக்கம் செய்த ஆவணங்களை, மாட்டியிருக்காவிட்டால் அவற்றை இணையத்தில் உலவ விட்டிருப்பார் ஆரொன் என்பதும் அமெரிக்க அரசின் முக்கியக் குற்றச்சாட்டு.

MAC முகவரியினை மாற்றுவதென்பது அனேக இணைய வல்லுநர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று, ஆனால் சட்டப்படி அது ஆள்மாறாட்டம், தவறாக அடையாளப்படுத்தி ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்கு ஒப்பாகும் என்று ஒப்பாரி வைத்ததின் விளைவாக ஆரொனுக்கு சுமாராக 35 வருடங்கள் சிறையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமிருப்பதாக நீதிமன்றம் கூறியது, அதுவரை குற்றத்தினை ஒத்துக் கொள்ளாத ஆரொன், ஒப்புக் கொண்டால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது. விசாரணை, வாய்தா என்று இவ்வளவும் நடந்து முடிய இரண்டு வருடங்கள் ஆனது, இதனால் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலும், குற்றத்தினை ஒப்புக் கொள்ளாவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனை குறித்தான பயமும் ஆரொனை தூக்கில் தஞ்சமடைய வைத்து விட்டது.

மேலே ஆரொனின் மேல் சாட்டப்பட்டுள்ள அனைத்தும் கணிணி வலையமைப்புக் குறித்து அறிந்த, உணர்ச்சி வசப்படும் நபர்கள் அனைவரும் அவ்வப்போது செய்யும் செயல்கள். ஆனால் சட்டத்தின் படி உங்கள் வலையமைப்பில் உங்கள் அடையாளத்தினை வலையமைப்பு எண் மூலமாகவோ அல்லது MAC முகவரி மூலமாகவோ விதிமுறைகளை மீறி தரவிறக்கம் செய்வதை எந்த நாட்டிலும், எவரையும் ஆதாரமிருந்தால் தண்டிக்க முடியும். தினம், தினம் ராமசாமியும், கந்தசாமியும் இவற்றைச் செய்யும் பொழுது ஏன் ஆரொனை நோக்கி இப்படி கழுகெனப் பாய்ந்தது அமெரிக்க அரசு?. காரணம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ்.

ஜூலியன் அசான்ஞ்
Collateral Murder காணொளியினை விக்கிலீக்ஸ் தளத்திற்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் பிராட்லி மேனிங் விசாரணையின் போதும், சிறையிலும் நடத்தப்படும் விதம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார் ஆரொன். மேலும் இணையத்தில் கட்டற்ற தகவல் முறையினைத் தடுக்கும் சட்டமான SOPA வினை எதிர்த்து வெற்றி காண்பதில் ஆரொனுக்கு உறுதுணையாக இருந்தது அனானிமஸ் எனும் இணையப் போராளிகள் இயக்கம். இது இரண்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் ரேடார் பார்வையில் ஆரொனைக் கொண்டு வந்து நிறுத்தியது.

இணையத்தின் எதிர்காலத்தை ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவாலும், சமூகப் பார்வையாலும் நிர்ணயிக்கப்போகும் சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப் பட்ட ஆரொனின் மரணத்திற்குப் பிறகு, ஆரொன் எங்கள் நீண்ட கால நண்பர் என்றும், தாங்கள் வெளியிட்ட சில தகவல்களை அனுப்பியவர்கள் யார் என்பதற்கான ஆதாரமில்லையென்றாலும் ஆரொன் கொடுத்திருக்கலாம் என்று சேதாரமில்லாமல் தங்கள் தொடர்பினைத் தெரிவித்து விக்கிலீக்ஸ் அஞ்சலி தெரிவித்தது, 2010-2011 காலகட்டத்தில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசான்ஞ் உடன் நேரடித் தொடர்பில் ஆரொன் இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் தங்கள் நட்பினைக் கூறி அஞ்சலி செலுத்த, அதிரடி ஆட்டக்காரர்களான அனானிமஸ் குழு அஞ்சலி செய்த விதம் அமெரிக்க அரசை அலற விட்டது. சட்டத்தினையும், அதன் விளைவானத் தண்டனைகளையும் காட்டி, நெருக்கடியில் தள்ளி ஆரொனை தற்கொலைக்குத் தூண்டியதாக அமெரிக்க நீதித்துறையினை நேரடியாகக் குற்றம் சாட்டிய அனானிமஸ், அவர்களின் இணையத்தளங்களுள் ஒன்றான www.ussc.gov தளத்தினை ஹேக் செய்து, அதில் ஆரொனுக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்களை  வலையேற்றினர். அதிர்ந்து போன அமெரிக்க அரசு, உடனே வலைத்தளத்தினை சரி செய்தது. அடுத்த சில நாட்களில் அதே தளத்தினை மீண்டும் ஹேக் செய்து தங்கள் வலிமையை உணர்த்திய அனானிமஸ், தளத்திற்கு வருபவர்கள் இன்புறும் வண்ணம் கணிணியில் குழந்தைகள் விளையாடும் ஒரு விளையாட்டினையும் வலையேற்றி அமெரிக்க அரசிற்கு வெறியேற்றியது. மேலும் வழங்கியில் இருந்த அனைத்து குறியீடாக்கப்பட்ட ஆவணங்களனைத்தையும் (encrypted files) இணையத்தில் விநியோகித்தது. ஆரொனின் தற்கொலைக்குக் காரணமான இணையக் குற்றங்களுக்கானக் கடும் சட்டங்களை மாற்றியமைக்கா விட்டால் விநியோகிக்கப்பட்ட ஆவணங்களை அனைவரும் படிக்கும் வண்ணம் அவற்றுக்கான குறியீட்டுச் சொற்களை வெளியிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

அமெரிக்காவின் போர்முறைகளில் ஒன்றாக இணைய யுத்தம் (Cyber warfare) மாறி பலகாலமாகிவிட்ட சமயத்தில், உலக நாடுகளில் தங்கள் வலையமைப்பின் பாதுகாப்புக்காக அதிகம் செலவு செய்யும் நாடான அமெரிக்காவிற்கு அனானிமஸின் வலைத்தளத் தாக்குதல் வரலாற்றில் மறைக்க முடியாத வடு. இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 2500க்கும் மேலான வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக அறிவித்திருப்பதின் மூலம் இச்சம்பவத்தின் ஆழத்தினை புரிந்து கொள்ளலாம். அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் கணிசமான அளவினை முழுங்கும் அளவிற்கு வலையமைப்பின் பாதுகாப்பிற்கு எப்படி செலவு செய்கிறார்கள், அப்படி என்ன தான் ஒன்றுக்கு பத்தாய் பூட்டுகள் போட்டாலும் அதனை போகிற போக்கில் போட்டுத்தள்ளும் இந்த அனானிமஸ் குழுவினரின் வலிமையின் ரகசியம் என்ன, அவர்கள் யார், அவர்களின் வீரதீர சாகசங்கள், சத்தமில்லாமல் திரைமறைவில் நடக்கும் இணைய யுத்தங்களின் கருப்புப் பக்கங்கள், அவற்றுக்கு பலியான ஆரொன் போன்றவர்கள், இவற்றின் மூலம் இணையமென்னும் ரத்த பூமியில், பஞ்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் தேடி மனம் போன போக்கில் பின் விளைவுகள் குறித்து அறியாமல் அலைந்து திரியும் சாமனியர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன...?.. அடுத்த பகுதியில்..


www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து....

Ramesh Murugan

unread,
Feb 21, 2013, 5:14:00 AM2/21/13
to panb...@googlegroups.com

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

by Maalaimalar

இட்லி ஒரு ரூபாய்!
தயிர் சாதம் மூன்று ரூபாய்!
சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்!
நம்ப முடியாத விலை!
அதுவும் சென்னை பட்டணத்தில்...!

உழைக்கிற பணத்தில் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிட்டால் கையில் பத்து ரூபாய் கூட மிஞ்சாது என்ற தவிப்போடு இரு வேளை சாப்பாடு, ஒரு வேளை பட்டினி என்று நாட்களை கடத்துபவர்கள் பலர்...

இந்த வரிசையில் கூலித் தொழிலாளர் மட்டுமல்ல! படித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தவர்கள்... மிக குறைந்த மாத சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே இடம் பிடித்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் தான் மலிவு விலை உணவகங்கள்.

நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்தார். விலையை கேட்டதும் வயிற்றில் பால் வார்த்தது போல் மகிழ்ச்சி அடைந்தவர்கள் இந்த உணவகங்களுக்கு படையெடுக்கிறார்கள்.

தற்போது மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 உணவகங்கள் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது. இந்த உணவகங்களை நிர்வகிக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் அதிகாலை 4 மணிக்கே வந்து விடுகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் பூ போன்ற இட்லி தயாராகிறது. காலை 6 மணிக்குள் சுமார் 2 ஆயிரம் இட்லியை தயார் செய்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு இட்லியும் 100 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது உத்தரவு. காலை 7 மணிக்கு கடை திறந்ததும் சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் காத்து நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் இட்லியும் விற்று தீர்ந்துவிடுகிறது. இதே நிலைதான் அனைத்து உணவகங்களிலும் நிலவுகிறது.

இதனால் இன்று முதல் 2500 இட்லி தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் உணவு தயாரிக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு செல்கிறார்கள். வெளியே சாப்பிட்டால் குறைந்தது 50 ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு 5 ரூபாயில் காலை டிபனை முடித்து விட்டேன் என்ற பூரிப்பை அவர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.

இப்போது இட்லிக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. தேங்காய், மல்லி, புதினா இவற்றில் ஏதாவது ஒரு சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது வேண்டுகோள். அதே போல் மதியம் சாம்பார் சாதத்துடன் அப்பளம், தயிர் சாதத்துடன் ஊறுகாயும் வழங்கினால் மதிய சாப்பாடும் அமர்க்களமாய் இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.

சாப்பாடு எப்படி? என்று விசாரிக்க சென்ற அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் நேரிலேயே தங்கள் வேண்டுகோளை வைத்தனர். அதிகாரிகளும் இதுபற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். விரைவில் சுவையான தகவல் வரும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து 200 வார்டுகளிலும் வார்டுக்கு 1 வீதம் 200 உணவகங்களை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது தொடங்கி இருப்பது டிரையல்தான்.

தேவைக்கேற்ப தினமும் இட்லி, சாம்பார்சாதம், தயிர் சாதத்தை கூடுதலாக தயாரிக்க சொல்லி வருகிறோம். யாரும் உணவகத்துக்கு வந்துவிட்டு உணவு கிடைக்காமல் திரும்பி செல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலிவு விலை உணவை ருசித்து பசியாற்றிய சிலர் மகிழ்ச்சியுடன் கூறியது...

ராஜா மணி (கூலித் தொழிலாளி):-

நான் தியாகராயநகரில் கூலி வேலை செய்து வருகிறேன். காலையில் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்படும் நான் மதிய உணவுக்கு திண்டாடி வந்தேன். மலிவு விலை உணவால் மதிய உணவு 8 ரூபாயில் முடிந்து விட்டது. (ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம்). திருப்தியாக சாப்பிட்டு பசியாற்றிவிட்டேன். இந்த திட்டத்தை என்னைப் போல் ஏராளமான கூலித் தொழிலாளர் வரவேற்கிறார்கள். இதே போல் கடைகள் பல இடங்களில் திறக்கப்பட வேண்டும்.

தினகரன் (தனியார் நிறுவன ஊழியர்):-

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலை விஷயமாக தி.நகர் வந்தேன். பெரிய ஓட்டலுக்கு சென்றால் மதிய சாப்பாடு ரூ.70க்கு மேல் ஆகும். இங்கு ரூ.10 ரூபாயில் முடித்து விட்டேன். உணவு தரமாக உள்ளது. சாம்பார் சாதத்துக்கு ஒரு அப்பளமும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் ஊறுகாயும் தந்தால் பிரமாதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரகாஷ்: மிகவும் பசியோடு வந்தேன். சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கு டோக்கன் வாங்கினேன். தட்டு நிறைய உணவு வழங்கினார்கள். வயிறு நிரம்பி விட்டது. காலையிலும், மதியமும் 15 ரூபாயில் சாப்பாட்டை முடித்து விடுவதால் இரவிலும் ஏதாவது சாப்பிட்டு மூன்று வேளையும் பசியில்லாமல் திருப்தியாக சாப்பிட்டு வருவதாக பலர் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவுதான் ‘அன்னசத்திரம் ஆயிரம் வேண்டும்’ என்பது. காலங்கள் கடந்தாலும் கனவுகள் மெய்ப்படுகிறது.

C.M உதயன்

unread,
Feb 21, 2013, 5:15:33 AM2/21/13
to panb...@googlegroups.com

எம்.பி.எலக்சனில் வெற்றி பெற்று எம்.பி.ஆனாலும் நான் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன்-டி.ராஜேந்திரர் ## சிரிக்காமல் படிக்கவும் ..சிரிச்ச நீங்க அவுட்
 
 



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Ramesh Murugan

unread,
Feb 21, 2013, 5:41:31 AM2/21/13
to panb...@googlegroups.com

பார்க்க ரசிக்க...சில வலைப்பூக்கள்.

by விஜயன்

எல்லா மொழியினருக்கும் புரியும் மொழி ஓவியம்,எண்ணங்களை வண்ணங்களாக்கும் ரசவாத கலை அது.நம் பதிவுலகில் பதிக்கப்பட்டிருக்கும் சில ஓவிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு

ஓவிய கண்காட்சியை துவக்குங்கள்..

என் மனதிலிருந்து... பிரியா அக்கா பக்காவா பென்சில் ஆர்ட் செய்கிறார்கள்.இவரது ஓவியங்கள் நிச்சயம் நம்மை "ஓ" போட வைக்கும்.மறக்காம பாருங்க...


மேய்ச்சல் மைதானம்... இந்த வலைப்பூவில் சில ஓவியங்களை பாலகணேஷ் அவர்கள் தொகுத்து தந்துள்ளார்.

என் இனிய ஓவியம் : இந்த தளத்தில் கலாகுமாரன் அவர்கள் அருமையான மற்றும் உலக புகழ் பெற்ற சில ஓவியங்களை பகிர்ந்துள்ளார்.

கூல் ஓவியம்: நன்பர் சிவா தான் வரைந்த ஓவியங்களை உங்கள் பார்வைக்கு விருந்தாக படைக்கிறார்

artright@portrait இவ்வலைப்பூவின் உரிமையாளர் மார்டின்,
இவர் ஒரு ஓவியர் இவர் தளத்தில் டிஜிடல் ஓவியங்கள் நிறைய உள்ளன


இந்த வலைப்பூவில் குழந்தைகள் வரைந்துள்ள ஓவியங்கள் நிறைய உள்ளன,மழலை மொழி போல மழலை ஓவியமும் அழகுதான்..


முனைவர் குணசீலன் அவர்களின் வலைப்பூவில் கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை அழகிய தொகுப்பாக்கி தந்திருக்கிறார்.

கர்டூன் ஓவியங்கள்: அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கார்டூன்கள்

இன்னும் சில புகைப்பட  பதிவுகள்! பார்க்க ரசிக்க



வலைச்சரத்தில் இன்று எனக்கு கடைசி தினம் .இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவடைகிறது ....

Ramesh Murugan

unread,
Feb 24, 2013, 1:58:21 AM2/24/13
to panb...@googlegroups.com

அம்மா மெஸ்: சென்னையில் மேலும் 24 இடங்களில் இன்றுமுதல் 1 ரூபா இட்லி!!

by rishie

சென்னை மாநகராட்சி சார்பில் 15 மலிவு விலை உணவகங்களை கடந்த 19-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். மக்கள் மத்தியில் ‘அம்மா மெஸ்’ என அறியப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்கள் பெரும் ஆதரவை பெற்றுள்ளன. காலையிலேயே கியூ வரிசை தொடங்கி விடுகிறது.

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மேலும் 24 இடங்களில் அம்மா மெஸ் கிளைகள் தொடங்கப்படவுள்ளன.

திருவொற்றியூர் மண்டலம் மணலி எக்ஸ்பிரஸ் சாலை,

மணலி மண்டலம் பெருமாள் கோயில் தெரு.

மாதவரம் மண்டலம் நேரு நகர் சென்னை மாநகராட்சி மிடில் பள்ளி,

தண்டையார்பேட்டை மண்டலம் புதிய வினோபா நகர் சமுதாய நலக்கூடம்,

புதிய வண்ணாரப்பேட்டை மல்டி பர்பசல் ஹால்,

ராயபுரம் மண்டலம் அண்ணா பிள்ளை தெரு,

எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில்,

திருவிக நகர் மண்டலம் செம்பியம் பேப்பர்ஸ்மில்ஸ் சாலை,

ஓட்டேரி வள்ளுவன் தெரு,

அம்பத்தூர் மண்டலம் மேனாம்பேடு மாரியம்மன் கோயில் தெரு,

அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு மங்களபுரம் 7வது தெரு,

எம்.எம்.டி.ஏ காலனி எம்.ஜி.ஆர் 3வது தெரு,

தேனாம்பேட்டை மண்டலம் ராயப்பேட்டை முத்தையா தெரு,

கோடம்பாக்கம் மண்டலம் கோயம்பேடு அய்யப்பன் நகர் பிரதான சாலை,

கோடம்பாக்கம் காமராஜ் காலனி பிரதான சாலை,

வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் மாதா கோயில் தெரு,

ஆலந்தூர் மண்டலம் ஆலந்தூர் ராஜா தெரு முதல் சந்து,

ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம் பிரதான சாலை,

அடையாறு மண்டலம் அடையாறு திருவேங்கடம் தெரு,

பெசன்ட்நகர் 1வது அவின்யூ (மீன் மார்க்கெட் அருகில்),

பெருங்குடி மண்டலம் எம்.ஜி.ஆர். நகர் வேளச்சேரி தரமணி சாலை,

பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை,

பள்ளிக்கரணை வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை,

சோழிங்கநல்லூர் மண்டலம் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு

ஆகிய 24 இடங்களில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம் இன்று திறக்கப்படவுள்ளது.

Ramesh Murugan

unread,
Feb 27, 2013, 8:07:52 AM2/27/13
to panb...@googlegroups.com

பாரதிராஜாவின் சீற்றம்!

by பால கணேஷ்
புகழின் உச்சியில் இருக்கற இயக்குனர்களுக்கு அவங்க நல்ல முயற்சியில ஈடுபடறப்ப எதாவது காரணத்தால தோல்வி ஏற்பட்டுச்சுன்னா, கடுங்க‌ோபம் வரும். அந்த மேதைகள் அதுக்கான காரணங்களை ஆராயாம மக்களின் ரசனையிலதான் குறைன்னு முடிவு கட்டிடுவாங்க. ஒருமுறை பாரதிராஜா அப்படித்தான் கடும் கோபமடைஞ்சாரு. நெறையப் பேருக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு தோணறதால ப்ளாஷ் பேக்குல என் மாணவப் பருவத்துக்கு உங்களைக் கூட்டிட்டுப் போய் அதைச் சொல்லப் போறேன்...!

நான் தேவகோட்டையில பள்ளி மாணவனா இருக்கறப்ப ‘நிழல்கள்’னு ஒரு படம் பாரதிராஜாவோட இயக்கத்துல வெளியாச்சு. படம் பாத்தவங்களை வெறுப்பேத்தி தோல்வியாச்சு. கதையில ஹீரோ ராஜசேகருக்கு காதல்லயும் வெற்றி கிடைக்காது; வேலை தேடி அலையற அவருக்கு கடைசி வரைக்கும் வேலையும் கிடைக்காது. இன்னொரு ஹீரோ சந்திரசேகர் சினிமா இசையமைப்பாளராகணும்கற வெறியோட படம் பூரா அலைஞ்சு வாய்ப்புக் கிடைக்காம கடைசியில சட்டையக் கிழிச்சுட்டு பைத்தியமா அலைவாரு. படம் பாத்த நாமளும் கிட்டத்தட்ட அந்த நிலையிலதான் தியேட்டரை விட்டு வெளிய வருவோம்கறது வேற விஷயம்!

நான் சொல்ல வந்தது... அந்த்ப படத்துல இளையராஜா + வைரமுத்து கூட்டணியில பாடல்கள் அத்தனையும் இப்பவும் ரசிக்க வைக்கிறவை. பாரதிராஜாவோட ரசிகர்கள்லாம் அந்த டயத்துல ‘படம் புரியவில்லைன்னு சொல்லுங்கள், பிடிக்கவில்லைன்னு சொல்லாதீர்கள்’ அப்படின்னு ‌போஸ்டர் அடிச்சு ஒட்டினது இன்னொரு ஹைலைட்டான விஷயம். அப்ப பாரதிராஜாவை ரொம்பவே சந்தோஷப்படுத்தியிருக்கும் இந்த விஷயம்னு நினைக்கிறேன். நான் குறிப்பிடற அந்தச் சீற்றம் அவருக்கு வந்த சமயத்துல ரசிகர்கள் இப்படி போஸ்டர் ஒட்டியிருந்தா கூலாகியிருப்பாரோ என்னவோ...

அதன்பிறகு பல வருஷங்கள் கழிச்சு ‘காதல் ஓவியம்’ அப்படின்னு ஒரு படத்தை எடுத்தாரு பாரதிராஜா. இந்தப் படத்துலயும் இளையராஜா + வைரமுத்து கூட்டணி அசத்துச்சு. ஒவ்வொரு பாட்டையும் இப்பக் கேட்டாலும் தலை ஆடும்; கூடவே பாடத் தோணும். படத்தோட கதையும் அப்படி ஒண்ணும் திராபைன்னு ‌சொல்லிட முடியாது. ரசிக்கிற மாதிரிதான் ‌சொல்லியிருந்தாரு பாரதிராஜா. இருந்தாலும் தமிழக மக்கள் அந்தப் படத்தைத் தோல்வியடைய வெச்சாங்க. இந்த முறை ரசிகர்கள் ‘புரியலைன்னு ‌சொல்லுங்க, பிடிக்கலைன்னு சொல்லாதீங்க’ன்னு போஸ்டர் எதும் ஒட்டலை! ‘ஒரு நல்ல படத்தையா தோல்வியடைய வெக்கறீங்க?’ அப்படின்னு இயக்குனர் இமயத்துக்குக் கடுங்கோபம் வந்துச்சு. கோபப்பட்ட அவர் என்ன செஞசாருன்னு சொல்றதுக்கு முன்னால, படம் ஏன் தோல்வியடைஞ்சுச்சுங்கற விஷயத்தைப் பாத்துடலாம்...

பின்னாட்கள்ல அவர் மகன் மனோஜை ஹீரோவா வெச்சு அவர் இயக்கின ‘தாஜ்மகால்’ங்கற படத்தைப் பார்த்திருப்பீங்க. படம் பார்க்காத பாக்கியசாலிகள் ‘ஈச்சி எலுமிச்சி, ஏண்டி கருவாச்சி’ன்னு ஒரு பாட்டையாவது டிவில போடறப்ப பார்த்துடுங்க. கருவாச்சின்னு மனோஜ் பாடற ரியா சென்னோட செவப்பு நெறத்தையும், கருவாச்சின்னு சொல்ற மனோஜோட நிறத்தையும் கண்டு அந்த நகைமுரணை வியந்து மனம் விட்டுச் சிரிப்பீங்க... இப்படி ஒரு விஷயம்தாங்க ‘காதல் ஓவியம்’ விஷயத்துலயும் நடந்தது. ஹீரோயின் அற்புதமா பரதம் ஆடறவன்னு கேரக்டரை வடிவமைச்சாரு பாரதிராஜா. அதுக்கு ராதாவை கதாநாயகியாப் போட்டிருந்தாரு. ராதா ஒரே நேரத்துல கையால உலக்கை குத்தியும், காலால சாணி மிதிச்சும் அற்புதமா பரதநாட்டியம்(?) ஆடியிருந்தாங்க. பின்னாட்கள்ல அவர் கண்டுபிடி்ச்ச ரேவதிய அப்பவே கண்டுபிடிச்சிருந்தாருன்னா படம் பொழச்சிருக்கும். சரி, ஹீரோயின் இப்படீன்னா ஹீரோ... பார்வையற்றவர் கேரக்டர்னா கண்ணை மேல்நோக்கிப் பார்த்தபடி வசனம் பேசினாப் போறும், அதான் அற்புதமான நடிப்புன்னு யாரோ அவருக்கு தப்பா சொல்லிக் குடுத்திருக்கணும். அதுவே போதும்னு நினைச்சதால அதுக்கு மேல அவர் எதுவும் மெனக்கிடலை.

இப்படியான விஷயங்கள்னால படம் தோல்வியடைஞ்சதும், அதுக்கான காரணங்களை ஆராயாம கோபப்பட்ட பாரதிராஜா, ‘‘கடை விரித்தேன்; கொள்வாரில்லை. ஆகவே, ‘சாக்கடை’ விரிக்கிறேன்’’ அப்படின்ற தொனியில பேட்டி குடுத்துட்டு தன்னோட அடுத்த (கேவலப்) படமான ‘வாலிபமே வா வா’ படத்தை எடுத்தாரு. முந்தைய படத்துல சாணி மிதிச்ச அதே ராதாவை ஹீரோயினாக்கி, எவ்வளவு கிளாமராக் காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக் காட்டினாரு. படத்தோட கதையே ‘உவ்வே’ பண்ண வைக்கிற ரகம்தான். தனக்கு ஆண்மையில்லைன்னு நம்பற கதாநாயகன் கார்த்திக், சிட்டுக்குருவி லேகியம், லாட்ஜ் விலைமாது உட்பட அத்தனை கேடுகெட்ட வழிகளிலும் அலைந்து, ஞானம் பெற்று கடைசியில் ராதாவுடன் சேர்வதுதான் கதை.

படத்தோட க்‌ளைமாக்ஸே ஹீரோயின் ராதா, ஹீரோ கார்த்திக்குக்கு வீரத்தை வரவழைக்கிற விதம்தாங்க! அதும் எப்பு்டி? கீழே இவங்களோட நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்துட்டிருக்கும் போது, மாடில ராதா, கார்த்திக்கைப் பாத்து, ‘‘உன்னால எனக்கு ஒரு குழந்தையத் தர முடியாது’’ன்னு உசுப்பேத்திவிட, அவரோட ‘வீரம்’(?) தூண்டப்பட்டு, உடனே சட்டையைக் கழற்றிவிட்டு ராதா மேல் பாய்வாரு. கீழே பெரியவர்கள் ‘மாப்பிள்ளை பெண்ணை அழைச்சுட்டு வாங்க’ன்னு சொல்ல, அழைக்க வரும் நபர், இவர்களின் உடலுறவைப் பார்த்துவிட்டு (கண்றாவி!) கீழே வந்து பெரியவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாம, அத்தனை பேரும் ஏதோ அந்த வருடத்தின் மிகச்சிறந்த ஜோக்கைக் கேட்டுவிட்ட மாதிரி வாய்விட்டுச் சிரிப்பார்கள். ‘வணக்கம்’ கார்டு வரும்.

கேட்கறதுக்கே புல்லரிக்குதா உங்களுக்கு! டைட்டில் கார்டுல பாரதிராஜான்னு பேர் வர்றதை நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். அதை கன்ஃபர்ம் பண்ணிக்கவே மறுபடி படம் பாத்தேன் நான். (‘‘டேய்ய்ய்... அந்த வயசுல ராதாவோட க்ளாமருக்காகப் பாத்தேன்னு உண்மையச் சொன்னா குறைஞ்சா போய்டுவ...?’’ ‘‘ஹய்யய்யோ... இந்த உருப்படாத மனஸ் என் இமே‌ஜை டாமேஜ் பண்ணிட்டுத்தான் ஓயும் போலருக்கே... இத வெச்சுக்கிட்டு... முடியல!’’) பின்னாட்கள்ல இ.இமயம் எடுத்த (என்னைப் பொறுத்த வரை) நல்ல படமான ‘வேதம் புதிது’ சரியானபடி ஓடாதப்ப நல்லவேளையா இவருக்கு மறுபடி சீற்றம் வரலை. வயது தந்த பக்குவமாக இருக்கும்னு எனக்குத் தோணுது.

இமயம் இப்படின்னா... சிகரம் மட்டும் சும்மாவா? இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ஒரு சமயம் ‘எங்க ஊர் கண்ணகி’ன்னு ஒரு படம் எடுத்தாரு. அப்பாவும், பையனும் ஒரே விலைமாது வீட்டுக்கு சேர்ந்து போற மாதிரி அவர் பாணியில புரட்சிகரமான சிந்தனைகளோட பச்சை நிறத்தில் காட்சிகளை அமைத்து படமெடுத்திருப்பாரு. அது எங்கயும் இப்ப கிடைக்காது, நீங்க பாக்கவும் முடியாதுங்கறது வேற கதை. அந்தப் படத்தைப் பத்தி இப்ப அவர்கிட்ட கேட்டீங்கன்னா, அதைப் பத்தி பேசக்கூட விரும்ப மாட்டாருன்னு நினைக்கறேன்! இயக்குனர் இமயத்துக்கும், இயக்குனர் சிகரத்துக்கும் இந்தத் திரைப்படங்கள் சரியான திருஷ்டிப் பொட்டு.

Ramesh Murugan

unread,
Mar 5, 2013, 1:56:16 PM3/5/13
to panb...@googlegroups.com

sk natarajan

unread,
Mar 5, 2013, 9:15:23 PM3/5/13
to panb...@googlegroups.com
உண்மை தான்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்ததே 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




On Wed, Feb 6, 2013 at 2:16 PM, sadayan sabu <sadaya...@gmail.com> wrote:

Ramesh Murugan

unread,
Mar 12, 2013, 10:52:35 AM3/12/13
to panb...@googlegroups.com

கோரிக்கை சாமிகள்

by egnath raj
ஊரில் அனாதையாக நிற்கிற கருவை முட்களை வெட்டி விறகு விற்கிற கந்தன்தான் மந்திர மூர்த்தி கோவிலில் பட்றையன் சாமிக்கு ஆடுகிறவர். திருகிய மீசையும் ஒடுங்கிய கண்களுமாக இருக்கிற அவருக்கு விறகு வெட்டி விற்பது தொழில். என்றாலும் சாமிகொண்டாடி என்று அழைப்பதை அதிகம் ரசிப்பார். மற்ற எதிலும் கிடைக்காத மரியாதை இதில் கிடைப்பதால் ‘சாமிகொண்டாடி’யை பிடித்திருந்தது. வலது காலை கெந்தி கெந்தி நடக்கிற அவருக்கு தெய்வம்தான் எல்லாம். எல்லாவற்றையும் தெய்வத்திடம் கேட்டே செய்வதாகச் சொல்வார்.

அவர் சாமியாடுகிற கோவிலில் மந்திரமூர்த்தி, சங்கிலி பூதத்தார், பலவேசக்காரன் உள்ளிட்ட மெயின் சாமிகள் பல இருக்க, பட்றையன் சாமிக்கும் தூண்டில் மாடன் சாமிக்கும் ஒரு ஓரமாக சிறு பீடம் அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த சாமிகளுக்கு மட்டும் ஏன் ஓரமாக பீடம் என்றால், இது ஏவல் சாமிகள். அதாவது வீட்டில் முதலாளி இருந்தால் வேலைக்காரர்கள் வெளியில்தான் நிற்க வேண்டும். அவர் வருகிறார் என்றால் ஓடி போய் ஓரமாக நின்று வழியனுப்பும் வேலையை பார்க்க வேண்டும். அதே போலதான் இந்த சாமிகளும். மந்திரமூர்த்தி என்கிற முதலாளியின் ஏவலாளாக பட்றையனும் தூண்டில் மாடனும் இருந்தார்கள்.

தான் ஒரு ஏவல் சாமி என்கிற விஷயம் கந்தனுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சாமி என்றால் எல்லாம் ஒன்றுதான் என்பதே. அப்படி அவருக்குப் புரிந்தால், மந்திரமூர்த்தி என்கிற பெரிய சாமிக்கு ஆடுகிற முத்தையாவை எப்படி எதிர்கொள்வார் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவரை விட வயது குறைந்த முத்தையா இவரை எப்படி ஏவலாம்? என்கிற கேள்வி வரக்கூடும். ஆனால் அந்த சிக்கல்களுக்குள் எல்லாம் அவர் சிக்கவில்லை. தினமும் கோயிலுக்கு வந்து எல்லா சாமிகளையும் கும்பிட்ட பிறகுதான் கந்தன் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விறகுக்குப் போவார்.

பெரும்பாலும் ஊருக்கு வெளியே குளத்தங்கரையில் இருக்கிற கருவை முட்கள் மற்றும் சாலையோர வாகை, புளி உள்ளிட்ட மரங்களின் கிளைகளை வெட்டுவதுதான் வேலை. பச்சையாக இருக்கிற இவற்றை வெட்டி வீட்டு வாசலில் காய வைப்பார். ஆற்றோரம் சென்றார் என்றால் அங்கு மரக்கிளைகளை வெட்டி, வேலி ஓரமாக காயப்போட்டுவிட்டு வருவார். அந்த கிளைகள் கொஞ்சம் காய்ந்ததும் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுவார். பிறகு கேட்டவர்களுக்கு விற்பார். கல்யாண நாள்களுக்கென்று அதிகமாக விறகுகளை சேர்த்து வைத்துக்கொள்வார் கந்தன். திடீரென அதிகமாகக் கேட்டால் எங்கு போய் விறகு வெட்டுவது? மற்ற நாளில் ஒரு கட்டு இருபது ரூபாய் என்றால் கல்யாண சீசன்களில் இருபத்தைந்து ரூபாய். பந்தி சோறாக்க விறகு கண்டிப்பாகத் தேவை என்பதால் கேட்டதை கொடுத்துவிட்டு வாங்கிப் போவார்கள்.

தெருக்கார இளசுகள் கருத்தப்பிள்ளையூர் மலைகளில் போய் விறகு பொறுக்கிவிட்டு வருகிறார்கள். அதில், ஆண் கட்டுக்கு இருபத்தைந்து ரூபாய். பொம்பளை கட்டுக்கு இருபது ரூபாய். அவர்கள் பெரும்பாலும் தாட்டாம்பட்டி, கோவன்குளம், பூவன்குறிச்சிகளில் விற்றுவிட்டு காசோடு வருவார்கள். அங்கு இல்லை எனில் உள்ளூர் கருவேலப்பிறை சுவரில் சாய்த்து வைத்திருப்பார்கள் கட்டுகளை. அதன் அருகில் சும்மாட்டோடு உட்கார்ந்திருக்கும் அவர்களிடம் பேரம் நடக்கும். இருட்டுவதற்குள் விற்றால்தான் வீட்டில் உலை ஏறும் என்பதால் அதுவரை பார்ப்பார்கள். பிறகு கேட்ட விலைக்கு கொடுத்துவிட்டு நகர்வார்கள். கந்தன் அப்படியில்லை. தனது விலையில் இருந்து எப்போதும் குறைத்துக் கொடுத்ததில்லை.

‘முள்ளு வெட்டுதது என்ன சும்மாவாடே? ரத்தத்தை சிந்தியாங்கும் வெட்டுது. கையில பாரு முள்ளு தச்ச எடங்களெ. அதை வெட்டி காயப் போட்டு, ஆயிரம் வேல பாக்க வேண்டியிருக்கு. பெறவு எதுக்கு அவனுவ கேட்ட வெலக்கு விய்க்கணும்?‘ என்பார்.

கந்தனும் கருத்தப்பிள்ளையூர் போய் விறகு வெட்டி வந்தவர்தான். இப்போது முடியவில்லை. அவ்வளவு தூரம் நடக்க முடியவில்லை. உடலில் வலு இருந்தாலும் சடவு வந்துவிடுகிறது. ‘இங்கயே இவ்வளவு கருவை கெடக்கு. இத வெட்டவே ஆளில்ல. எதுக்கு அவ்ள தூரம் போவான?‘ என்று நினைத்துக்கொள்வார். ஆனால், மலையில் கிடைக்கிற விறகுகள், கருவையை விட நன்றாக எரியும் வகையை சார்ந்தவை என்கிற நுட்ப விஷயங்களை ஊர் மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

இப்படி விறகு விற்று காலம் தள்ளுகிற கந்தனுக்கு சாமியாடி என்பதால், வீட்டில் எப்போதும் தனி மரியாதை. அவர் மனைவி கூப்பிட்ட வேலைகளுக்கு சென்று வருபவள். களை எடுக்க, சிறு கிழங்கு எடுக்க, கடலை பிடுங்க என்று அக்கம் பக்கத்து ஊர்களுக்கு கூட தூக்குச் சட்டியில் சோற்றைக் கட்டிக்கொண்டு செல்வாள். அவர்களின் மகன் சுடலையும் அம்மாவுடன் வேலைக்கு செல்கிறவன்தான். இந்த சின்ன குடும்பத்துக்கு கிடைக்கிற காசே போதுமானதாக இருந்தது. ஆனால், பிழைப்புக்காக வெளியூருக்கு இடம் பெயர்ந்துவிட்ட உள்ளூர் சாமியாடிகள், அவ்வப்போது கந்தனுக்கு ஏதாவது செய்துவந்தனர்.

ஏனென்றால் கோயில் கொடை, அது தொடர்பான கால்நாட்டு மற்றும் உள்ளூர் தகவல்களை சரியாக அவர்களுக்கு தெரிவிக்கும் வேலையை செய்துவந்ததால் இந்த உதவி. இவரது தகவல் காரணமாக சொந்தங்கள் தங்கள் வேரை விட்டுவிடாமல் பாதுகாத்து வந்தனர். அவர்கள் ஊருக்கு வரும்போது, கந்தனுக்கு புது வேட்டி, துண்டு நிச்சயம் உண்டு. பிறகு கந்தனுக்கு செய்கிற உதவியாக ஒரு சாமியாடி, அவர் மகன் சுடலையை சென்னைக்கு அழைத்து சென்றார் வேலைக்காக.

கொடை இல்லாத நாட்களில் வெயில், மழையில் நனைந்து கரைந்து போகும் கோயில் பீடங்கள், மீண்டும் கொடை காலங்களில் மட்டுமே புதுப்பிக்கப்படும். பீடம் எப்படி சிதைந்திருந்தாலும் கந்தனுக்கு கவலை இல்லை. ஏனென்றால் சாமி தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மற்ற பீடங்கள் அப்படியே இருக்க, பட்றையன் சாமிக்கு மட்டும் சூடம் (கற்பூரம்) காட்டி கும்பிடுவார் கந்தன். அந்த வழியாகப் போகிற அல்லது வருகிற மற்ற சாமியாடிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. கொடை நேரம் மட்டுமே அவர்களுக்கு கோயிலும் சாமிகளும். இவர் இப்படி செய்கிறார் என்பதற்காகவே பெரிய சாமி கொண்டாடியும் அவ்வப்போது இங்கு வந்து சாமி கும்பிட்டுப் போவார்.

கொடையின் போது பத்து நாளுக்கு முன்பே தெரு களை கட்டிவிடும். கோயிலுக்கு சிமெண்ட் பூச்சு, வெள்ளையடித்தல், கோயில் மரக்கிளைகளை பந்தலுக்காக வெட்டுதல், வில்லுப்பாட்டுக்காரர், மைக் செட் காரர்களுக்கு அட்வான்ஸ் என்று பரபரப்பாகும் ஊர். அதிலும் சாமியாடிகளுக்கு கேட்கவே வேண்டாம். விரதம் இருக்கத் தொடங்கி இருப்பார்கள். கடைகளில் காபி, தண்ணீர் குடிப்பதில்லை என சுத்த பத்தம் பார்க்கப் படும். பிறகு தொடங்கும் கொடையில், கொண்டாட்டம்தான்.

கொடையின் இரண்டாம் நாள் பக்தர்கள் சாமியிடம் ஆசி வாங்குவார்கள். அப்படி வாங்கும்போது மெயின் சாமிகளிடம் ஆசி வாங்கும் பக்தர்கள், பட்றையனுக்கு ஆடும் கந்தனிடம் மட்டும் யோசித்தே செல்வார்கள். யாராவது ஆசி வாங்க போனால், அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு சாமியாடுவார் பட்றையன் சாமியான கந்தன். பிறகு, ‘ஒம் பிரச்னய எல்லாம் நா பாத்துக்கிடுதென். எனக்கு வெள்ளியில சூடன் தட்டு வாங்கி வைப்பியா?‘ என்று கேட்பார். ‘அடுத்த கொடைக்குள்ள எம் பிரச்னை தீந்தா, சாமிக்கு செய்தேன்‘ என்பார்கள் பக்தர்கள். பிறகு பட்றையன் பீடத்தை பார்த்து பல்லைக் கடித்துவிட்டு திருநீறு பூசுவார். பின் ‘சூடன் தட்டு வெள்ளியில என்ன வெல வரும்?‘ என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டே செல்வார்கள் பக்தர்கள்.

போன கொடையில் இவர் கோரிக்கை வைத்து, சிலர் மட்டுமே கேட்டதை கொண்டு வந்திருப்பார்கள். கொடுக்காதவர்களிடம், ‘நா அத கேட்டேன். கொடுக்கலயே?‘ என்று ஞாபகமாகக் கேட்பார்.

‘என்னய நல்லா வச்சிருந்தா தாரென்னு சொன்னேன். சாமி அப்டி ஒண்ணுஞ் செய்யலயே?‘ என்பார்கள். பிறகு, ‘சரியா போவும். அடுத்த கொடைக்கு கொண்டாந்து தா‘ என்பார்.

மற்ற சாமிகள் இப்படி ஏதும் கோரிக்கை வைப்பதில்லை. கொஞ்சம் வதியான உள்ளூர் ஆட்களே, கொடைக்கு முன்பு, ‘கோயிலுக்கு ஏதும் வேணுமாய்யா?‘ என்று சமூகத்து ஆட்களிடம் கேட்டு வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் அப்படிக் கேட்பதற்கு கொடுக்கப்படும் பொருளில், அன்பளிப்பு என்று அவர்கள் பெயர்களை பெரிதாக எழுதிக்கொள்ளலாம் என்பது காரணம்.

இப்படித்தான் ஒரு கொடையில், தென்னையில் இருந்து விழுந்து, கால் ஒடிந்து அவதிப்பட்டு வந்த பலவேசம், கந்தனிடம் திருநீறு பூச வந்தான். வழக்கம் போல அவரும், ‘எனக்கு வெள்ளியில செம்பு வாங்கி வை. ஒங்கால சரியாக்கிருதென்‘ என்றார் சாமியாடிக்கொண்டே. ஏற்கனவே வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த பலவேசத்துக்கு எரிச்சல். தன் கையை பிடித்திருந்த கந்தனின் கையை வெடுக்கன தட்டிவிட்டு விட்டு ஒன்றும் சொல்லாமல் பெரிய சாமியிடம் திருநீறு வாங்க போய்விட்டான். இதை கந்தன் எதிர்பார்க்கவில்லை.

‘நானே என்னா கெட கெடந்து, கஞ்சி தண்ணி குடிக்காம கஷ்டப்பட்டுட்டு இருக்கென். எனக்கு அத கொடு இத கொடுன்னா, எங்க போயி கொடுப்பென்? வீட்டுல பொண்டாட்டிட்ட தாலி கூட இல்ல. சாமின்னாலும் ஒரு இது வேண்டாமாய்யா?‘ என்று ஒருவர் பிடித்துக்கொள்ள, கால் வலியோடு நடந்துகொண்டே சொன்னான் பலவேசம்.

‘ஒங்க சித்தப்பன்தானடெ அவரு?‘

‘அதுக்கு? மனுஷன் கஷ்டம் தெரியலன்னா, பெறவு என்ன சாமிடெ? நாமதான் சாமிட்ட, ‘எனக்கு அது வேணும் இது வேணும்’னு கேக்கணும். சாமியே கேட்டா, நாம எங்க போவ?‘ என்று பலவேசம் சொன்ன பிறகுதான் பட்றையன் சாமி பக்தர்களிடம் வைக்கும் ‘கோரிக்கை’ பற்றி எல்லாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து ஒவ்வொரு கொடையின் போதும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கந்தனிடம் திருநீறு பூசிக்கொண்டு குறி கேட்டனர். அல்லது வெளியூரில் இருந்து வந்திருக்கும் சொந்தங்கள். மற்றவர்கள், அவர் ஏதும் கேட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே திருநீறு பூசலானார்கள். ஆனாலும் அவர் விடவில்லை. முன்பு எல்லோரிடமும் கேட்பவர், இப்போது ஆள் பார்த்து கேட்கத் தொடங்கினார்.

இப்போது அப்படியில்லை. பார்வை மங்கி உடல் தளர்ந்து போன கந்தன், கொடையின் போது பீடத்துக்கு அருகில் உட்கார்ந்துகொள்கிறார். சென்னையில் வேலைபார்க்கும் மகன் அவர் இடத்தில் சாமியாடுகிறான். திருநீறு பூச வருகிறவர்களிடம் ‘எல்லாத்தையும் சாமி பாத்துக்கிடுவாரு. போங்கெ‘ என்று நம்பிக்கை விதைக்கிறான். கோரிக்கை வைக்காத பட்றையனை குதூகலமாகப் பார்க்கிறார்கள் பக்தர்கள்.

நன்றி: குங்குமம் வார இதழ்

Ramesh Murugan

unread,
Mar 19, 2013, 8:26:05 AM3/19/13
to panb...@googlegroups.com
இந்த கட்டுரை பலருக்கு பிடிக்காது. இருந்தாலும் கருத்தில் கொள்ள வேண்டியது.

அரை உண்மைகளின் அபாயம்

by Tamilpaper Editorial

images (3)லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.

இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.

மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.

இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).

கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.

கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.

ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.

இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.

இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.

கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.

இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.

பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.

பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.

ஸ் பெ

unread,
Mar 19, 2013, 8:29:22 AM3/19/13
to panb...@googlegroups.com
ஹி ஹி ஹி... போங்கையா போங்க.. :))

//பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன.//

2013/3/19 Ramesh Murugan <rames...@gmail.com>

இந்த கட்டுரை பலருக்கு பிடிக்காது. இருந்தாலும் கருத்தில் கொள்ள வேண்டியது.



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Ramesh Murugan

unread,
Mar 19, 2013, 8:32:56 AM3/19/13
to panb...@googlegroups.com
அந்த வரி, பிஜேபிக்கு ஓட்டு போடுங்க என்பதைப்போன்ற வரிதான்.

ஆனால் கட்டுரையின் சாரம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேன்டியதே..!

2013/3/19 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஹி ஹி ஹி... போங்கையா போங்க.. :))


//

ஸ் பெ

unread,
Mar 19, 2013, 8:38:33 AM3/19/13
to panb...@googlegroups.com
தெற்காசியாவில் தனது பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த இலங்கை விடயத்தில் இந்தியா அணுகும் முறை சரியே...
காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் சரியே.. அப்போது தான் யாரும் காஸ்மீரி இன போராட்டத்தில் பங்குக்கொள்ள பயப்படுவார்கள்..
மணிப்பூரில் இந்தியாவின் கொள்கை சரியே...
என்று அப்பட்டமாக இந்தியாவின் மீது நின்று பேசும் எனது மலையாளி அறைத்தோழனுக்கும், இந்த கட்டுரையாளருக்கும் வித்தியாசமே கிடையாது...

ஒரு தமிழனாக என்னிடம் இதை சொன்னால்... போங்கையா, போங்க பாரத மாதா(who is that white lady) புடவ கிழிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு என்பேன்....


2013/3/19 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

PRASATH

unread,
Mar 19, 2013, 9:08:09 AM3/19/13
to panb...@googlegroups.com
:(((

2013/3/19 ஸ் பெ <stalinf...@gmail.com>

Naresh Kumar

unread,
Mar 20, 2013, 12:10:01 AM3/20/13
to panb...@googlegroups.com
என்னமோ இந்தியாவுக்கு ஒண்ணும் தெரியாதாம்... அப்படியே சதி பண்ணி சிக்கி விட்டுடாங்களாம்!

தலைப்பைப் போன்றே, அரைகுறை நியாயங்களை மட்டும் பேசிவிட்டு தம்முடைய கருத்தை மட்டும் தூவிவிட்டு சென்றிருக்கிறார்!

2013/3/19 Ramesh Murugan <rames...@gmail.com>

ப்ரியன்

unread,
Mar 20, 2013, 2:08:38 AM3/20/13
to panb...@googlegroups.com
முதல் பத்தியில் தன்னெழுச்சியான என குறிப்பிடுவதிலேயே தெரிந்துவிடுகிறது கட்டுரையாளரின் நோக்கம்...

ப்ரியன்

unread,
Mar 20, 2013, 2:44:15 AM3/20/13
to panb...@googlegroups.com

வர்ணத்துக்குத் திரும்புவோம்

B.R. மகாதேவன்Tweet

5-Ambedkar Jiமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 28

இந்து மதத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்கள் முதலும் கடைசியுமாகச் சொல்வது என்னவென்றால், அதன் சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்புதான் அனைத்து வீழ்ச்சிக்கும் காரணம் என்பதே. இந்த சாதி அமைப்புக்கு இந்து மதத்தின் முழு அங்கீகாரம் இருக்கிறது எனவே, சாதி அழிய வேண்டுமானால், இந்து மதம் அழிய வேண்டும் என்பதுதான் இவர்களுடைய இலக்கு. இந்து மதத்தின் பழங்கால நூல்களில் சாதி என்ற வார்த்தையே இல்லை என்பதும் அவை சொல்வதெல்லாம் வர்ண அடிப்படையிலான சமூகக் கட்டுமானம்தான் என்பதும் சொல்லிக் காட்டப்பட்டால், அந்த வர்ணமும் சேர்ந்தே அழிய வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி தரப்படவேண்டும்; அதன் மூலம் அவர் பெறும் திறமைக்கு ஏற்ப சமூகத்தில் அவருடைய வேலையும் இடமும் தீர்மானிக்கப்படவேண்டும் என இன்றைய நவீன சமூகம் எதைச் சொல்கிறதோ அதையேதான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைக்கிறது என்றாலும் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் சாதி எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு சமூக நல்லிணக்கமோ மேம்பாடோ அல்ல என்பதையே உறுதிப்படுத்திவருகிறார்கள்.

வர்ணத்துக்கும் சாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோல், நால் வகை வருணங்களை நானே சிருஷ்டித்தேன், குணங்கள், கர்மங்களின் அடிப்படையில். இதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆதாரம். இதில் முதல் வாக்கியத்தை மட்டுமே வைத்துக் கொண்டுதான் அனைத்து திரிபு வேலைகளும் நடந்துவருகின்றன. ‘கருணாநிதி ஒரு முட்டாள் என்று சொல்வது தவறு’ என்று ஒரு வாக்கியம் எழுதப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் மூன்று வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்டால் எப்படிப் பிழையாக இருக்குமோ அது போன்றதுதான் கீதையில் கிருஷ்ணர் சொன்ன வாக்கியத்தில் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மேலும் கீழும் குதிப்பதும்.

வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொரு மனிதருடைய குணமே அவருடைய வேலையையும் சமூக அந்தஸ்தையும் தீர்மானிப்பதாக இருந்தது. சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக அதை மாற்றியது. வர்ணம் சாதியாக மாறியது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

வர்ணாஸ்ரம தர்மத்தில் முதலில் ஒவ்வொரு மனிதருடைய வர்ணமும் சப்தரிஷிகள், மனு என்ற குழுவினரால் தீர்மானிக்கப்பட்டன. அதாவது, சமூகத்துக்கு எத்தனை சத்ரியர்கள் தேவை, எத்தனை வைசியர்கள் தேவை, எத்தனை பிராமணர்கள் தேவை எத்தனை சூத்திரர்கள் தேவை என்றவற்றின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கும் நபர்களைப் பிரித்து வகைப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தமக்கு என்ன வர்ணம் தரப்பட்டதோ அதற்குரிய பணியைச் செய்து வந்தார்கள். இன்று ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதுபோல் அன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் நடந்தது. யார்யாரெல்லாம் தங்கள் வர்ணத்தின் பணியைச் சிறப்பாகச் செய்தார்களோ அவர்கள் தொடர்ந்து அதே வர்ணத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். திறமையாகச் செயல்படாதவர்கள் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றப்பட்டனர். ஒரு வர்ணத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்களும்கூட வேறு வர்ணத்துக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டனர். சூத்திரராக இருந்த ஒருவர் பிராமணராகவோ வைசியராகவோ சத்ரியராகவோ ஆக முடிந்தது. பிராமணர்களில் இருந்து சிலர் சூத்திரர்களாக ஆக்கவும் பட்டிருக்கிறார்கள். இப்படி வர்ணங்களை மாற்றிக் கொண்டதற்கு ஏராள உதாரணங்கள் பழங்கால நூல்களில் காணப்படுகின்றன. வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆரம்பநிலை என்பது இதுதான். இப்படிப் பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்திருக்கிறது.

இந்த அனுபவங்களில் இருந்து வேறு சில படிப்பினைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வருடம் ஒரு வர்ணத்தில் இருந்தவர் வேறொன்றுக்கு மாற்றப்பட்டதால் அவருடைய சமூகப் பங்களிப்பு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டிருக்கிறது. தனிநபர் என்ற வகையில் அவருக்கும் அது எந்த நலனையும் செய்திருக்கவில்லை. விவசாயத்துறையில் நான்கு வருடம் இருந்த ஒருவர் புரோகிதத்துறைக்கு மாற்றப்பட்டபோது அவரால் புரோகிதத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. விவசாயத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. இதனால், ஒவ்வொருவருடைய வர்ணத்தையும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவதை மறுபரிசீலனை செய்தார்கள்.

இது இன்றைய சூழலில் நமக்கும் நன்கு புரிந்துகொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். பத்திரிகைத் துறையில் நான்கு வருடம் பணி புரிந்த ஒருவரை அதற்கு அடுத்த நான்கு வருடத்துக்கு வங்கித் துறைக்கு மாற்றினால் அவரால் இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியாமல் போக வாய்ப்பு உண்டு அல்லவா. கிணற்றுக்குக் குழி வெட்டுவதானால், ஒரே இடத்தில் தொடர்ந்து வெட்டினால்தானே நீர் கிடைக்கும். ஓரிடத்தில் நான்கு அடி இன்னொரு இடத்தில் நான்கு அடி என்று வெட்டினால் நீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு துறையில் நான்கு வருடங்கள் பணி புரிவதால் கிடைக்கும் திறமையும் அனுபவ அறிவும் கவனத்தில் கொள்ளவேண்டியவைதானே. புதிய துறைக்கு மாற்றினால் அதைக் கற்றுக் கொள்ள சில மாதங்கள் ஆகும். அதுவரை பல தவறுகள் நடக்கும். தட்டுத்தடுமாறி விஷயங்களைக் கற்றுத்தேர்ந்து வரும் நிலையில் வேறொரு துறைக்கு மாற்றுவது மீண்டும் குழப்பத்தையே தானே கொண்டுவரும். எனவேதான், நான்கு வருடத்துக்கு ஒரு வர்ணம் என்ற முறையை மாற்றி ஒரு ஆயுள் முழுமைக்கும் ஒரு வர்ணம் என்று கொண்டுவந்தார்கள். இன்று 60 வயது வரை ஒரே துறையில் வேலை என்று சொல்கிறோமே அதுபோல். இந்த முறை நல்ல பலனைத் தந்தது. ஒவ்வொருவருடைய அனுபவ அறிவும் முழுவதும் சமூகத்துக்குப் பயன்பட்டது. தனி நபரின் நலனுக்கும் அது பெரிதும் உபயோகமாக இருந்தது. அப்படியாக ஒரு வர்ணம் (வேலை) என்பது ஒரு ஆயுள் முழுமைக்குமாக ஒருவருக்கு வந்தது.

ஆனால், இந்தக் காலகட்டத்திலும் தந்தை என்ன வர்ணமோ அதுதான் அவருடைய வாரிசுகளுக்கும் என்று தீர்மானமாகியிருக்கவில்லை. ஒருவர் ஆயுள் முழுவதும் புரோகிதராக இருந்திருக்கலாம். அவருடைய மகன் புரோகிதத்துறைக்கான திறமையோ ஆர்வமோ இல்லாதவராக இருந்தால் அவர் சூத்திரராகவோ வைசியராகவோ ஆக இடம் இருந்தது. ஒரு சூத்திரரின் மகன் சத்திரியராகவோ பிராமணராகவே ஆக முடிந்தது. இந்த அமைப்பு பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இந்த அமைப்பில் இன்னொரு குறை இருந்தது. ஒவ்வொருவருடைய வர்ணம் என்பது சப்த ரிஷிக்கள் என்ற குழுவினரால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. அதாவது, சூத்திர வர்ணத்துக்கான மனோபாவம் கொண்ட ஒருவரை பிராமணராகத் தவறாக தீர்மானித்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்துக்கு முழு வலிமையுடன் பங்களிக்க முடியாமல் போடுவிடும். தனிநபர் என்ற அளவிலும் அவருக்கு அந்தத் தீர்மானம் பெரும் தீங்கையே விளைவித்திருக்கும். இதைக் களைவதற்காக இன்னொரு வழிமுறையை அந்த சமூகத்தினர் கண்டடைந்தனர். அதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு. கல்வியின் அடிப்படையில் வேலைகள் (வர்ணம்) தீர்மானமாக வேண்டும் என்ற இன்றைய அதி நவீன சமூகங்கள் முன்வைக்கும் அதே வழிமுறையைத்தான் அன்று நம் முன்னோர்கள் அதில் அமல்படுத்தினார்கள்.

அதாவது, ஒவ்வொரு மனிதரும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டு 12 வருடங்களுக்கு நான்கு வர்ணங்களிலும் முறையான பயிற்சி பெறவேண்டும். 12 வருட முடிவில் எந்த வர்ணத்தின் குணாம்சங்கள் ஒருவரிடம் மிகுதியாக இருக்கிறதோ அவர் அந்த வர்ணத்தினராக வேண்டும். இப்படியான தேர்வு அனைவருக்கும் உகந்ததாகவும் சமூக மேம்பாட்டுக்கு கூடுதல் பலனளிப்பதாகவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மிகவும் நியாயமானதாக இருந்தது. இதுவே வர்ணாஸ்ரமத்தின் உண்மையான வடிவம்.

காலப்போக்கில் இந்த அமைப்பு வேறு வடிவை அடைய ஆரம்பித்தது. இந்த இடத்தில்தான் இன்னொரு முக்கியமான அம்சம் செயல்பட ஆரம்பிக்கிறது. அதுதான் வர்ணத்தை சாதியாக மாற்றியது.

ஒவ்வொரு மனிதருடைய ஆளுமையையும் மூன்று விஷயங்கள் பாதிக்கும். முதலாவதாக, ஒருவருடைய மரபணுக்கள். நிறத்தில் ஆரம்பித்து உடல் உயரம், வலு, பருமன் என அனைத்தும் இந்த மரபணுவால்தான் தீர்மானமாகும்.

இரண்டாவதாக, ஒரு மனிதருடைய சிந்தனை, நடத்தை ஆகியவற்றை அவர் எந்தச் சூழலில் வாழ்கிறாரோ அது பெருமளவுக்குத் தீர்மானிக்கும். பாலியல்/பாலுறவு தொடர்பான சொற்களை இயல்பாகப் பேசும் சமூகச் சூழலில் வளரும் குழந்தை அந்த வார்த்தைகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும். ஸ்லோகங்களைக் கேட்டபடி வளரும் குழந்தை இயல்பாகவே சுலோகங்களைச் சொல்லியபடி வளரும். மொழியைக் கற்றுக் கொள்வதுபோல் பல விஷயங்களைக் குழந்தைகள் தாம் வாழும் சூழலில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.

மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இருக்கும் உள்ளார்ந்த அம்சங்கள். இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். மாபெரும் கலைஞர்கள் உருவாவதெல்லாம் இந்தத் தனிப்பட்ட உள்ளார்ந்த திறமையின் விளைவாகத்தான். இதை திட்டமிட்டு ஒருவரால் உருவாக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இப்படியாக ஒரு மனிதருடைய ஆளுமையைத் தீர்மானிப்பதில் பிறப்பு, வளர்ப்பு, உள்ளார்ந்த திறமை என மூன்று விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

இதில் முதல் இரண்டு அம்சங்களை மீறி வேறொரு வாழ்க்கைப் பார்வையையோ திறமையையோ ஒருவர் பெறுவது முற்றிலும் தற்செயலான நிகழ்வு. அது ஒருவகையில் விதி விலக்குதான். சமூகத்தை முன்னகர்த்திச் செல்வது இத்தகைய விதிவிலக்குகள்தான் என்பது உண்மையே. என்றாலும் சமூகங்கள் அமைக்கப்படுவது விதிகளின்படித்தான். விதிவிலக்குகளின் படி அல்ல. மக்களில் பெரும்பாலானவர்கள் பிறப்பு, வளர்ப்பு என்ற இரண்டின் செல்வாக்குக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது, தனது பெற்றோர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதையே விரும்பி, திறமையாகச் செய்பவர்களாக இருப்பார்கள். வர்ணம் காலப்போக்கில் சாதியாக அதாவது பிறப்பின் அடிப்படையில் வேலைகளையும் அதன் மூலம் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கும் அமைப்பாக மாறியதற்கு மனிதர்களின் இந்த இரண்டு அம்சங்களே காரணம். அவரையை நட்டால் அவரைதான் முளைக்கும். துவரை முளைக்காது என்பது மிகவும் எளிய, எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். அதன் அடிப்படையில் பிராமணரின் மகன் பிராமணரானதையும் சூத்திரரின் மகன் சூத்திரரானதையும் நம் கடந்த கால சமூகம் மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அம்பேகர், வர்ணம் சாதியாக மாறியதை சதித் திட்டத்தின் அங்கமாகச் சொல்கிறார். அதாவது பிராமண, சத்ரிய, வைசிய வர்ணங்கள் உயர்வானவை. அந்த வர்ணங்களில் இருந்தவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் இருந்தன. நிறைய வசதி வாய்ப்புகள் இருந்தன. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் அதை விட்டுக்கொடுக்க, குறிப்பாக, சூத்திரர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பவில்லை. எனவே, வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொருவருடைய குணத்துக்கு ஏற்ப வர்ணம் தீர்மானமாவதை அவர்கள் மாற்றி அமைத்தனர். குரு குலப் பயிற்சிக்குப் பிறகு ஒருவருடைய வர்ணம் தீர்மானமாகும் முறையை மாற்றி ஒவ்வொரு குழந்தையின் அப்பாவே தன் வர்ணத்தைக் குழந்தைக்கு கை மாற்றித் தருவதாக ஆக்கினார்கள். இதன்படி பிராமணரின் மகன் குருவிடம் கல்வி கற்று அதன் பிறகு பிராமணராக ஆவதற்குப் பதிலாக பிராமணருக்குப் பிறந்ததன் மூலமே பிராமணராக ஆகிவிட்டார். இதுதான் சூத்திரரை சூத்திரராகவே இருக்கும்படிச் செய்துவிட்டது என்று அவர் சொல்கிறார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பிறப்பதன் மூலமே மகனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக மதிக்கப்பட்டுவிடமுடியுமா என்ற வாதத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்து தீர்மானமாவதைக் கேள்விக்குட்படுத்துவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை இங்கு கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பிறப்பின் மூலம் கிடைத்த முன்னுரிமை என்பது ஒரு பள்ளியில் எளிதில் அனுமதி கிடைப்பதற்குச் சமமானது மட்டுமே. அந்தப் பள்ளியில் கடினமாக உழைத்து, ஒழுங்காகப் படித்து முடித்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதலிடம் தரப்பட்டது. ஒரு மன்னரின் குழந்தை உரிய காலத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல், தேரோட்டுதல் போன்றவற்றில் ஆரம்பித்து ராஜாங்க விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டே அரசர் பதவிக்கு வந்து சேர்கிறார். ஒரு பிராமணரின் குழந்தை உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டு, வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்து, மது மாமிசத்தில் இருந்து விலகி நின்று, பாலியல் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்ததன் மூலமே சமூக அந்தஸ்தை வென்றெடுக்கிறார். தன் தந்தை பிராமணராக இருந்ததன் மூலம் அவருக்குக் கிடைப்பது ஒரு எளிய முன்னுரிமை மட்டுமே. எஞ்சிய சாதனைகளை அவர் சுயமாகச் செய்துதான் அந்த மரியாதைப் பெறுகிறார். இது எப்படி என்றால், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கடினமாக உழைத்து தானும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது. இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது.

சாதியப் போராளிகளுக்குப் புரியும்படிச் சொல்வதானால், பெரியாரின் சீடரும் அண்ணாவின் தம்பியும் பகுத்தறிவுப் பகலவனும் தமிழினத் தலைவரும் தலித் சம்பந்தியும் கூடவே கம்யூனிஸ்டுமான திருக்குவளை மு. கருணாநிதி, முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்தின் மூலம் பதவிக்கு பின்வாசல் வழி வந்தவரால் நடத்தப்படும் தொலைக்காட்சியில்  திமுக ரவுடிக்கூட்டத் தலைவன் என்று அடையாளப்படுத்தப்பட்ட மதுரையின் கட்டை பஞ்சாயத்து மன்னரான மு.க. அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது போல் அல்ல இது. பாளையங்கோட்டைச் சிறையில் பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே தந்தை வாடியதுபோல் மிசா காலகட்டத்தில் சிறையில் வாடி, கட்சித் தொண்டனாக இருந்து இளைஞர் அணித் தலைவராகி, எம்.எல்.ஏவாகி., மேயராகி, துணை முதல்வராகி இன்று அடுத்த முதல்வராக ஆவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போலவேதான் அன்றைய பெரும்பாலான மன்னர்களும் வைசியர்களும் பிராமணர்களும் உரிய படிநிலைகளைக் கடந்தே அந்தந்த வர்ணத்தின் தொழிலைச் செய்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். யாரும் வெறும் பிறப்பை மட்டுமே வைத்து உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துவிடவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் வர்ணத்தின் அடிப்படையிலான அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களாக எந்த சூத்திரர் பிரிவை அம்பேத்கர் சொல்கிறாரோ சாதிக் கட்டமைப்பில் அதே சூத்திரர்களை (பிற்பட்ட சாதியினர்) சாதி இந்துவாக கட்டம்கட்டித் தாக்கவும் செய்கிறார். அப்படியானால், அவர்கள் யார்.. நல்லவர்களா… கெட்டவர்களா..? பாதிக்கப்பட்டவர்களா… பாதிப்பை ஏற்படுத்தியவர்களா?

அம்பேதகர் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகப் பட்டியலிடுபவற்றில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். முதலாவதாக, அவர் பட்டியலிடுபவை, ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர் அங்கு சிகிச்சை பெறும் அனைவருடைய நோய்களையும் ஒரே ஒரு நபருக்கு நேர்ந்ததாகச் சொல்வதைப் போன்றது. தலித் என்ற வகைக்குள் நில உடமையாளரான தலித், குத்தகைதாரரான தலித், விவசாயக் கூலியான தலித், சிகை அலங்காரம் செய்யும் தலித், ஆடு மாடு மேய்க்கும் தலித், வெட்டியானாக இருக்கும் தலித், மலம் அள்ளும் தலித், துணி வெளுக்கும் தலித் என எத்தனையோ பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் அனுபவங்களும் ஒவ்வொருவிதமானவை. அதிலும்கூட மன்னர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தலித்தின் வாழ்க்கை வேறானது. நிலப்பிரபுக்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் நபர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் சிகை அலங்காரம் செய்பவர்களின் வாழ்க்கை வேறானது. இவர்கள் அனைவருமே கூட சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வரமாட்டார்கள். இங்கு வர்க்கமும் சேர்ந்து செயல்படும்.

இந்த தலித் என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடைக்கப்படும் ஒவ்வொருவருமே தமக்கான தெய்வ வழிபாட்டுமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்திலும் வித்தியாசமானவர்கள். மேல்சாதியினருடனான இவர்கள் அனைவருடைய பரிமாற்றமும் வேறுபட்டவை. மன்னருக்கு சேவகம் செய்த தலித் பிரிவினர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டு அவர்கள் நில உடமையாளராகவே இருந்திருக்கிறார்கள். பல இடங்களில் குத்தகைதாரராக தலித்கள் இருந்திருக்கிறார்கள். அது அரை உடமையாளருக்கு சமமான நிலை. விளைச்சலில் கணிசமான பங்கை குத்தகைதாரர் எடுத்துக்கொள்ள வழி உண்டு. ஊடு பயிராக நடப்படுபவையும் நன் செய் நீங்கலாக நடப்படும் பயிர்களும் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும். வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டத்தை நில உடமையாளரும் சேர்ந்தேதான் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த தலித்கள் பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானவர்கள். அம்பேகர் கண்ணில் இப்படியான ஒருவர்கூட பட்டிருக்கவில்லை.

கழுத்தில் கலயத்தைக் கட்டிக் கொள்ளவேண்டும்; இடுப்பில் விளக்கமாறைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் தலித்களில் ஐந்து சதவிகித மக்களுக்குக் கூட விதிக்கப்பட்டிருக்காத ஒரு வழிமுறை. துணி வெளுப்பவர்கள் இரவு நேரத்தில் உணவை யாசகம் கேட்டுச் செல்வார்கள். பிற பல தலித்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். மலம் அள்ளுதல் ஒரே ஒரு பிரிவு தலித்கள் மட்டுமே செய்யும் பணி. பிற தலித்கள் யாரும் அதைச் செய்யமாட்டார்கள். இந்தச் செயல்களுக்கான காரணங்களையும் இதில் இருந்து தப்ப என்னென்ன வழிகள் இருந்தன என்பதையும் பற்றியெல்லாம் எதுவுமே அம்பேத்கர் சொன்னது கிடையாது. மேலும் தலித்களுக்கு இருந்த சாதகமான விஷயங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அனைத்து இழிநிலைகளையும் ஒரே ஒரு தலித் என்ற பிரிவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லும்போது மிகப் பெரிய அநீதி நடந்ததுபோல் தென்படும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்து மதத்தின் மீது சாதி இந்துக்கள் மீதும் கட்டுக்கடங்காத வெறுப்பையும் கோபத்தையும் அம்பேத்கர் கட்டமைத்துக்கொள்கிறார். இது அடிப்படையிலேயே தவறு.

இரண்டாவதாக, அவர் ஒடுக்குமுறைகளாகப் பட்டியலிடுபவை எல்லாமே ஒருவகையில்  ஒடுக்குமுறையே அல்ல. அவையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சமம்தான் என்ற சவாலை அதிரடியாக முன்வைத்ததால் நடந்தவையே. ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் அனைவரும் சமம் என்பது உண்மைதான். சம வாய்ப்பும் சம வசதிகளும் அனைவருக்கும் தரப்படவேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், பழைய வாழ்க்கை முறையில் அந்த சமத்துவம் குறித்த கருத்துகள் இரு தரப்பிலுமே இருந்திருக்கவில்லை. வர்ணாஸ்ரம காலகட்டத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் சம வாய்ப்பு என்பது புதிய சிந்தனையே. ஆனால், பல நூறு ஆண்டுகளாக சிலரை மேலானவர்களாக மதித்து வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் நாங்கள் உங்களுக்குச் சமமே என்று கோஷங்கள் இடுவது நடைமுறையைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையே. எளிய மக்களைப் பகடைக்காயாகவைத்து நடத்தப்படும் இதுபோன்ற அரசியல் கலகங்கள் ஆக்கபூர்வமான நோக்கத்தைக் கொண்டவை அல்ல. எதிர் தரப்பில் இருக்கும் மேல் சாதியினரை எதிரிகளாகவே ஆக்கும் குயுக்தி அரசியல்தான் இது.

வர்ணாஸ்ரம/சாதிய கட்டமைப்பைப் பற்றி விமர்சிக்கும்போது அம்பேத்கர் வெகு சாமர்த்தியமாக, கடினமான இழிவான வேலைகளை தலித்கள் செய்ய நேர்ந்தது குறித்து பெரிதாக எதுவும் சொல்லாமல் இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். ஏனென்றால், என்னதான் ஒரு சமூகத்தின் அறிவு வர்க்கத்துக்குத்தான் அனைத்து மக்களின் நலனுக்காக சிந்திக்கும் பொறுப்பு உண்டு என்று சொன்னாலும் கடினமான கேவலமான வேலையைச் செய்து வந்தவர்களுக்கும் அதை மேம்படுத்தும் பொறுப்பு இருக்கிறது என்ற உண்மை அவருக்குத் தெரியும். எனவேதான் அது பற்றி அதிகம் அவர் பேசுவது இல்லை. சாதி அடுக்கில் தலித்கள் மேலேற முற்பட்டபோது சாதி இந்துக்கள் எப்படியெல்லாம் அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையே அவர் தன் வாதங்களுக்கு அடிப்படையாக வைத்துக்கொள்கிறார். தேர்ந்த வக்கீல் அல்லவா..? உண்மையைவிட வாதத் திறமைதானே வெல்லும் என்பது அவருக்குத் தெரியுமே.

இதனால்தான் தலித்களுக்குள்ளும் சாதி வெறி இருக்கிறதே என்ற உண்மையைச் சொல்பவர்களை விஷமிகள் என்று அம்பேத்கர் சொல்கிறார். தன் தரப்பு மக்களிடம் இருக்கும் குறைகளையும் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் சக மனிதர்களை சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் நடத்தும் பண்பு மனித குலத்துக்கு இயல்பாகக் கைகூடும் ஒன்றாகவோ நீடித்து நிற்கும் ஒன்றாகவோ இல்லை. விழிப்பு உணர்வு பெற்ற ஒரு சிலர்தான் இதை மக்கள் மத்தியில் விதைத்து நிதானமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உண்மைகளைப் புரிந்துகொண்டிருப்பார். இந்து சமூகத்தை அதன் மூலம் ஒரு மறுமலர்ச்சிக்கு அவர் கொண்டு சென்றிருக்க முடியும். காந்தி அதைத்தான் செய்தார். ஆனால், அம்பேத்காருக்கோ இந்து தன் குறைகளைத் திருத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற பிரிட்டிஷாரின் உத்தரவை தன்னுடைய கண்டுபிடிப்பாகவும் உரிமைப்போராட்டத்தின் முதல் முழக்கமாகவும் வைத்துக்கொண்டு சுய சிந்தனையாளர்போல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தக் காரணத்தினால்தான் வர்ணாஸ்ரமத்தையும் அவர் அழிய வேண்டும் என்று கூறுகிறார். அவருக்கு வர்ணம் என்பது சாதியைவிடப் பல மடங்கு உயர்ந்தது என்பது தெரியும். அதை அவரே விரிவாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். நவீன உலகம் முன்வைக்கும் சமூக அமைப்பு என்பது வர்ணாஸ்ரம தர்மமே என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு மனமில்லை. அதாவது, பிரிட்டிஷாருக்கு அது உவப்பானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் அது ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை. தொட்டியில் வாழும் தங்க மீனுக்குக் கடலின் அருமை எப்படித் தெரியும்?

0

ப்ரியன்

unread,
Mar 20, 2013, 2:45:58 AM3/20/13
to panb...@googlegroups.com
வர்ணத்துக்குத் திரும்புவோம் ன்னு எழுதிய அதே 'சிந்தனையாளர்' தான் அரை உண்மைகளின் அபாயம் ன்னு எழுதியவர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...

மோரு

unread,
Mar 20, 2013, 3:14:17 AM3/20/13
to பண்புடன்
வெசத்த சீஸ் மாதிரி தூவி பீட்சா செஞ்ருக்காரு .

பொதுவா இந்த மாதிரி ஆட்கள் கருணாநிதிய விமர்சிக்கிறப்ப ஒன்னு நல்லா வெளங்குது இன்றைய அரசியல் காலக்கட்டத்தில் அவர் செய்த தவறுகளுக்காக அவரை கடுமையா விமர்சிக்க வேண்டியிருந்தாலும் திராவிட அரசியலில் தவிர்க்க முடியாத வரலாறு கருணாநிதி.

அவரை விமர்சிக்க இந்த மாதிரி ஆட்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.​

//இரண்டாவதாக, ஒரு மனிதருடைய சிந்தனை, நடத்தை ஆகியவற்றை அவர் எந்தச் சூழலில் வாழ்கிறாரோ அது பெருமளவுக்குத் தீர்மானிக்கும். பாலியல்/பாலுறவு தொடர்பான சொற்களை இயல்பாகப் பேசும் சமூகச் சூழலில் வளரும் குழந்தை அந்த வார்த்தைகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும். ஸ்லோகங்களைக் கேட்டபடி வளரும் குழந்தை இயல்பாகவே சுலோகங்களைச் சொல்லியபடி வளரும். மொழியைக் கற்றுக் கொள்வதுபோல் பல விஷயங்களைக் குழந்தைகள் தாம் வாழும் சூழலில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.//

//இரண்டாவதாக, அவர் ஒடுக்குமுறைகளாகப் பட்டியலிடுபவை எல்லாமே ஒருவகையில்  ஒடுக்குமுறையே அல்ல. அவையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சமம்தான் என்ற சவாலை அதிரடியாக முன்வைத்ததால் நடந்தவையே.//



2013/3/20 ப்ரியன் <mailt...@gmail.com>

வர்ணத்துக்குத் திரும்புவோம் ன்னு எழுதிய அதே 'சிந்தனையாளர்' தான் அரை உண்மைகளின் அபாயம் ன்னு எழுதியவர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

senshe senshe

unread,
Mar 20, 2013, 3:16:48 AM3/20/13
to panb...@googlegroups.com
எனக்கு பி ஆர் மகாதேவனின் திரைப்பட விமர்சனங்கல் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நான் எடுத்திருந்தால்ன்னு அவர் சொல்லுற கதை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்..

வர்ணத்துக்குத் திரும்புவோம் - இந்த படம் எப்ப ரிலீஸ் ஆகப்போகுது??

2013/3/20 ப்ரியன் <mailt...@gmail.com>
வர்ணத்துக்குத் திரும்புவோம் ன்னு எழுதிய அதே 'சிந்தனையாளர்' தான் அரை உண்மைகளின் அபாயம் ன்னு எழுதியவர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...

-- 

ஸ் பெ

unread,
Mar 20, 2013, 3:21:19 AM3/20/13
to panb...@googlegroups.com
+100

2013/3/20 மோரு <mors...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Asif Meeran AJ

unread,
Mar 20, 2013, 3:44:38 AM3/20/13
to panb...@googlegroups.com
எனக்கு பி ஆர் மகாதேவனின் திரைப்பட விமர்சனங்கல் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நான் எடுத்திருந்தால்ன்னு அவர் சொல்லுற கதை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்..
வர்ணத்துக்குத் திரும்புவோம் - இந்த படம் எப்ப ரிலீஸ் ஆகப்போகுது??

எலே பக்கி.. ஓடிப்போயிடு :-)

Ramesh Murugan

unread,
Mar 20, 2013, 8:52:32 AM3/20/13
to panb...@googlegroups.com

பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்?

by jeyamohan

வணக்கம் ஜெ.மோ,
நான்(24) IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் . கடந்தே இரு வருடங்களாகத் தங்களது இணையத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். வாழ்வின் பொருள் அறிய ஆன்மீகத் தேடலில் அங்கும் இங்கும் அலைந்து பின் மீண்டும் என் IAS தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நம் சமூகம் தொடர்ந்து செல்ல சில நாயகர்கள் ( காந்தி , போஸ் , விவேகானந்தர் , பிரபாகரன் , அன்னை தெரசா ,கலாம் , பில் கேட்ஸ்… போன்றோர்) அனைத்துத் துறைகளிலும் வேண்டும் என்பது என் கருத்து . அவர்களது உண்மைகளை ஆராயும் போது சிலரது சில நல்ல பிம்பங்கள் உடையத்தான் செய்கின்றன . ஆனால் அவை அனைத்தையும் பொது வெளியில் வைத்துத்தான் ஆக வேண்டுமா. இவ்வாறு அனைவரது பிம்பங்களும் உடைக்கப்படுமானால் பின் சராசரி மனிதர்களுக்கும், இளம் தலை முறைகளுக்கும் ஒரு ‘முன் மாதிரியாக ‘ யாரைத்தான் முன்னிறுத்த முடியும் .

இது உங்கள் “வரலாற்றின் வண்டலில்…” கட்டுரை படித்ததினால் எழுந்த கேள்வி. சில விடயங்களை, அவை உண்மையாய் இருப்பினும் அதைப் பொது வெளியில் உலக நன்மை கருதி மறைப்பது நல்லது(ஜனநாயகத்தை மீறாமல்) என்பது என் எண்ணம். என்னுள் உடைக்கப்பட்டது ‘போசி’னுடைய பிம்பம் அல்ல இந்திய தேசிய ராணுவத்தினுடையது . இச்சமூகத்தை நேசிப்பவராகவும், ஆழ்ந்த அனுபவமும் மிக்க உங்களது கருத்துக்காகக் காத்துக்கொண்டிருக்றேன் .

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெ.மோ,
-பெ .ர .சந்தோஷ் கிருஷ்ணன் .

அன்புள்ள சந்தோஷ்,

நீங்கள் சொல்வதற்கு இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. சென்றகாலத்தில் உள்ள நல்லவற்றை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்வது, வாழ்ந்த மனிதர்களைக் கடவுள்களாக ஆக்கிக்கொண்டு அவர்களின் குறைகளைத் தாண்டிச்செல்வது. அதை நம் பெற்றோர் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இயல்பாகவே அது சரி என நாம் நினைக்கிறோம்.

இன்னொரு மரபு உள்ளது. அதை ஐரோப்பாவில் உருவானது எனலாம். அது சென்றகாலங்களை, மறைந்த ஆளுமைகளை எல்லாப் பக்கங்களையும் கணக்கில்கொண்டு கறாராக மதிப்பிட்டு ஆராய்வது. உண்மையை மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வது.

நம்முடைய மதிப்பீட்டை நாம் நிலப்பிரபுத்துவ காலத்துக்குரியது எனலாம். ஐரோப்பிய மதிப்பீட்டை நவீன காலகட்டத்திற்குரியது எனலாம். மூதாதை வழிபாடும் வீரவழிபாடும் வேரூன்றிய காலகட்டத்திற்குரியது நம்முடைய வழி. நவீன ஜனநாயகமும் அறிவியலும் வளர்ந்த காலகட்டத்திற்குரியது ஐரோப்பாவின் வழி. நான் ஐரோப்பாவின் வழியே இன்று பொருத்தமானது என நினைக்கிறேன்.

நம்முடைய மரபான பார்வை இன்று நடைமுறைச் சாத்தியம்கூட அல்ல என்பதைக் காணலாம். காரணம் நம்மைச்சுற்றி ஜனநாயகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கே எல்லா கருத்துக்களும் தாராளமாக முன்வைக்கப்படுகின்றன.

ஜனநாயகம் என்பது கருத்துக்களின் அதிகாரம். ஆகவே ஒவ்வொரு கருத்தும் இன்னொன்றை மறுக்கிறது. உடைக்க முயல்கிறது. அந்நிலையில் ஒரு கருத்தின் உருவமாக உள்ள மனிதரை விமர்சிப்பது தவிர்க்கமுடியாததாகிறது. அதிலிருந்து எவரையும் பாதுகாக்க முடிவதில்லை.

பிம்பங்களை உடைக்கவேண்டாம் என்று சொல்பவர்களைக் கவனியுங்கள். அவர்கள் தங்களுக்குச் சாதகமான பிம்பங்கள் உடைபடும்போது மட்டுமே அதைச் சொல்வார்கள். ஆனால் தங்களுக்கு எதிரான பிம்பங்களை உடைக்கும்போது அதை உண்மைக்கான தேடல் என்றுதான் அவர்களும் சொல்வார்கள்

ஓர் உதாரணம் சொல்கிறேன். 1992 வாக்கில் நான் தினமணியில் ஒருகட்டுரை எழுதினேன். அதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் சிந்தனையைப் புரிந்துகொள்வதில் எந்த அளவுக்குப் பங்காற்றுகிறது என எழுதியிருந்தேன். அதில் கார்ல்மார்க்ஸுக்கும் அவரால் பாலுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பணிப்பெண்ணான ஹெலென் டெமுத்துக்குமான உறவைப்பற்றிச் சொல்லியிருந்தேன்.

அந்தக் கட்டுரை இங்குள்ள இடதுசாரிகளைக் கொந்தளிக்கச் செய்தது. ஏனென்றால் இங்கே அதுவரை கார்ல் மார்க்ஸ் பற்றி முன்வைக்கப்பட்ட சித்திரமே வேறு. மார்க்ஸுக்கும் ஜென்னிக்குமான தெய்வீகக்காதலைப்பற்றிய காவியங்கள் மட்டுமே இங்கே பாடப்பட்டிருந்தன. ஹெலென் டெமுத்தின் பெயரை எவரும் உச்சரித்ததே இல்லை.என்னுடைய கட்டுரையை அவதூறு என எவராலும் மறுக்கமுடியாது, ஏனென்றால் அந்தத் தகவல்கள் உலகளாவ ஒப்புக்கொள்ளப்பட்டவை.

இடதுசாரிகள் இருவகையில் எதிர்வினையாற்றினர். மார்க்ஸின் சிந்தனைகளை மட்டுமே பார்க்கவேண்டும், அவரது படுக்கையறைக்குள் தலையைவிடுவது அநாகரீகம் என்று ஒருசாரார் சொன்னார்கள். மார்க்ஸ் செய்தது ஐரோப்பிய சூழலில் இயல்பான ஒன்றே என ஒருசிலர் எழுதினார்கள்.

நான் அவற்றுக்கு இவ்வாறு பதில் சொன்னேன். மார்க்ஸின் சிந்தனைகளை அவரது செயல்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியுமா? பாட்டாளிகளின் சிந்தனையாளர் ஒரு பாட்டாளியைப் பாலியல்ரீதியாக்ச் சுரண்டியது அச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான தகவல் இல்லையா என்ன?

ஒருவேளை அப்படிப்பிரித்துப்பார்க்க மார்க்ஸியர் தயாராக இருந்தாலும் பிறரும் அப்படிச்செய்யவேண்டுமென சொல்ல அவர்களுக்கு ஏது உரிமை? மேலும் மார்க்ஸின் செய்கை ஐரோப்பியச்சூழலில் சாதாரணமான ஒன்று என்றால் அதை ஏன் இங்குள்ள மார்க்ஸியர் ஒளித்துவைத்தார்கள்?

அதைவிட நான் கேட்ட முக்கியமான கேள்வி ஒன்றுண்டு. இந்த நியாயங்கள் மார்க்ஸியர்களின் எதிரிகளுக்கும் பொருந்துமா? காந்தியை அரைநூற்றாண்டாக மார்க்ஸியர் தனிப்பட்ட முறையில் மட்டுமே விமர்சித்துவருகிறார்கள். அவரது பாலியல்சோதனைகளை மேடைகள் தோறும் திரித்தும் வளைத்தும் பேசியிருக்கிறார்கள். அவருக்கும் அவரது பிள்ளைகளுக்குமான உறவைப்பற்றி வெறும் பொய்களை எழுதி பேசிப்பரப்பியிருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் அது தனிப்பட்ட தாக்குதல் அல்லவா என்று கேட்கப்பட்டபோது காந்தி மீதான நம்பிக்கையை உடைக்க அது தேவைதான் என இவர்கள்தான் வாதிட்டார்கள். அதாவது உண்மையான பிம்பங்களைக்கூட அவர்கள் உடைப்பார்கள். அவர்களின் போலிப்பிம்பங்களை எவராவது தொட்டால்கூடக் கொதிப்பார்கள்

திராவிட அரசியல்வாதிகள் இதில் இன்னும் ஒரு படிமேல். அவர்கள் மேடைகள் தோறும் காந்தியையும் நேருவையும் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததற்கு அளவே இல்லை. ஆனால் அவர்களின் புனிதபிம்பங்களான ஈவேரா அண்ணாத்துரை பற்றி உண்மையான தகவல்களை, அவர்களின் நெருக்கமான தோழர்களான பாரதிதாசன், கண்ணதாசன் போன்றோர் எழுதியவற்றைச் சொல்லிப்பாருங்கள், கொந்தளிப்பார்கள்.

ஈவேரா வைக்கம்போராட்டத்தில் மிகச்சிறிய ஒரு பங்கையே வகித்தார் என்பது அப்பட்டமான வரலாறு. முழுக்கமுழுக்க தகவல்ரீதியானது. அவர்தான் அதை தொடங்கி நடத்தினார் என்ற பொய்யை எழுபது வருடங்களாகச் சொல்லி நிலைநாட்டிவிட்டனர்.அந்த உண்மையை சொன்னமைக்காக என்னை வசைபாடி ஐம்பது கட்டுரைகளாவது எழுதப்பட்டிருக்கின்றன.

எப்போதுமே இதை நீங்கள் கவனிக்கலாம். காந்தியை எந்த எல்லைவரைக்கும் சென்று வசைபாடுபவர்கள்தான் பகத்சிங்கையோ சேகுவேராவையோ சுபாஷ் சந்திர போஸையோ பற்றிய உண்மைத்தகவல்களைச் சொன்னால் பிம்பங்களை உடைப்பதன் அபாயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள்.

ஆக பிம்ப உடைப்பு இங்கே நிகழ்கிறது. அப்படியென்றால் எல்லா பிம்பங்களையும் உடைத்துப்பார்ப்போம். எது சாரமுள்ளதோ அது நீடிக்கட்டும். அதுதானே முறை?

உங்கள் வினாவுக்கு நேர்நிலைப் பதில் என்றால் இப்படிச் சொல்வேன். வரலாறு என்பது வெறுமே தெரிந்து வைத்திருக்கும் தகவல் மட்டுமல்ல. அது இன்றைய நடைமுறைக்கான பாடங்கள் கொண்டது. ஆகவே அது உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். பொய்களின் அடிப்படையில் அமைந்திருந்தால் பொய்யான பாடங்களை அளிக்கும். அந்தப் பாடங்கள் வழியாகச்செல்லும்போது அழிவே எஞ்சும்

சுபாஷ் சந்திரபோஸின் வரலாற்றையே எடுத்துக்கொள்வோம். சுபாஷ் பிரம்மாண்டமான ஒரு ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ் ராணுவத்திடம் போரிட்டு இந்தியாவை மீட்க முயன்றார், கிட்டத்தட்ட வெற்றிபெற்றார் என்ற பொய்க்கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படும்போது அது வன்முறையின் வழியை நியாயப்படுத்துவதாக ஆகிறது. வன்முறை மூலம் எளிதில் சுதந்திரம் பெற்றிருக்கலாம், காந்திதான் அகிம்சைப்போராட்டம் மூலம் அதைத் தாமதப்படுத்தினார் என விளக்கப்படுகிறது.

இந்த பிம்பம் இன்றைய அரசியலில் வன்முறையின் பாதையை வலியுறுத்துபவர்களால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்படுகிறது. இந்தப் போலிவரலாறு அளிக்கும் பாடம் வன்முறைமூலம் அரசியல் மாற்றமும் சமூக மாற்றமும் உருவாகும் என்று கற்பிக்கிறது. அதன் விளைவாக இளைஞர்கள் வன்முறையை நம்பி ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. வன்முறை அரசியலின் எல்லா அழிவுகளுக்கும் பாதை திறக்கிறது.

உண்மையில் சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் அன்றைய சூழலில் தேவையான வெறும் பொம்மையாகத்தான் இருந்தார். அவர் திரட்டிய ராணுவம் என்பது சரணடைந்த பிரிட்டிஷ் படைவீரர்களால் ஆனது. அவ்வீரர்கள் போர்க்கைதிகளாக இருப்பதைவிட ராணுவசேவை அதிக வசதிகளை அளிக்கும் என்பதற்காகவே அதில் சேர்ந்தார்கள்.

சுபாஷின் படை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை எதிர்கொண்ட இரண்டே இரண்டு போர்முனைகளில் அவர்கள் சரணடையவே முயன்றார்கள். அதன்பின் ஜப்பான் அப்படையை எடுபிடிப்படையாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவை வென்றபின் இங்கே அவர்களுக்கு ஒரு பொம்மை ஆட்சியாளர் தேவைப்படுமென்பதனால்தான் ஜப்பானியர் சுபாஷை முன்னிறுத்தினர்

சுபாஷ் ஜப்பானியரால் அவமதிக்கப்பட்டார். கண்ணெதிரே ஏழை இந்தியர்கள் சயாம் மரணப்பாதையில் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை எதிர்த்து ஒரு சொல் பேச அவரால் முடியவில்லை. அவரது சகாவான மோகன்தாஸ் அந்தமான் சிறையில் ஜப்பானியரால் வதைக்கப்படும்போது அஅவர் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதெல்லாம் உண்மையான வரலாறு

இந்த உண்மையான வரலாறு அளிக்கும் பாடங்கள் என்ன? வன்முறையின்பாதை என்பது தற்காலிகமானது. அது ஏற்கனவே வலிமையுடன் இருப்பவர்களுக்கானது. வலிமை இல்லாதவர்களின் வன்முறைவழி என்பது கடைசியில் வலிமையுடைய எதிரிக்கு எதிரியாகிய இன்னொரு வலிமையுடையவனின் அடிமையாகச்சென்று சேர்வதில்தான் முடியும்.

இந்தியா போன்ற ஒரு தேசம் ஏராளமான உள்முரண்பாடுகள் கொண்டது. வன்முறைப்பாதை முன்னெடுக்கப்பட்டால் அந்த முரண்பாடுகள் சகோதரச்சண்டைகளாகவே மாறும். அதுவும் சுபாஷின் வரலாறு அளிக்கும் பாடம்.

ஒருவேளை சுபாஷ் வென்றிருந்தால் நமக்கு ஜப்பானின் பொம்மையரசு ஒன்றுதான் கிடைத்திருக்கும் . அது அன்றைய பிரிட்டிஷ் அரசைவிட பலமடங்கு கொடூரமானதாக இருந்திருக்கும். ஜப்பானியர் சயாம் மரண ரயிலில் தமிழர்களைக் கொன்றழித்ததே சிறந்த ஆதாரம்.சுபாஷ் தன் உணர்ச்சிகரமான முட்டாள்தனத்தால் இந்தியாவை ஒரு மாபெரும் அபாயத்தின் விளிம்புக்குக் கொண்டுசென்றார். அது இன்னொரு பாடம்.

இந்த உண்மையான வரலாறு அளிக்கும் சரியான பாடங்கள்தான் நாம் இன்றைய சூழலை எதிர்கொள்ள உதவும். என்ன காரணத்தால் காந்தி அகிம்சையையும் ஜனநாயகப் போராட்டத்தையும் முன்வைத்தார் என்று புரிந்துகொள்ளமுடியும்.

சுபாஷின் பொய்யான பிம்பம் ஏன் உடைக்கப்படவேண்டும்? நேரடியான உதாரணமே உள்ளது. சுபாஷ் என்ற பொய்யான பிம்பத்தில் இருந்து ஊக்கம் கொண்டு அவரை முன்னுதாரணமாக எண்ணித்தான் இலங்கையில் ஆயுதப்போராட்டம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. அது உருவாக்கிய எல்லா அழிவுகளுக்கும் காரணமாக சுபாஷின் போலிப்பிம்பத்தைச் சொல்லலாம்

இத்தகைய பொய்பிம்பங்கள் கண்ணிவெடிகளைப்போல நம் சிந்தனைக்குள் புதைந்துகிடக்கின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டெடுத்துக் களையவேண்டியது அவசியம்

ஜெ

ஸ் பெ

unread,
Mar 20, 2013, 8:54:16 AM3/20/13
to panb...@googlegroups.com
போட்டுட்டியா தம்பி.. நேத்து வாசிச்சு கடுப்பாகிட்டேன்..
இரு தண்ணி குடிச்சிட்டு வந்து பதில் அடிக்கிறேன்.. 


2013/3/20 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Mar 20, 2013, 8:56:04 AM3/20/13
to panb...@googlegroups.com
நானும் காலைலயே படிச்சிட்டேன்... குழுமத்துல வேற யாரும் பகிர்ந்துல்லகையேன்னுட்டு, நானே கோதாவுல குதிச்சிட்டேன் :))

2013/3/20 ஸ் பெ <stalinf...@gmail.com>

போட்டுட்டியா தம்பி.. நேத்து வாசிச்சு கடுப்பாகிட்டேன்..
இரு தண்ணி குடிச்சிட்டு வந்து பதில் அடிக்கிறேன்.. 



//

தமிழ்ப் பயணி

unread,
Mar 20, 2013, 9:49:31 AM3/20/13
to பண்புடன்
கா​லையில் படிச்சுட்டு ​இங்​கே பகிரனுமுன்னு நி​னைச்சுட்டு இருந்​தேன். எப்படி​யோ தவறி ​போச்சு.

2013/3/20 Ramesh Murugan <rames...@gmail.com>

நானும் காலைலயே படிச்சிட்டேன்... குழுமத்துல வேற யாரும் பகிர்ந்துல்லகையேன்னுட்டு, நானே கோதாவுல குதிச்சிட்டேன் :))


2013/3/20 ஸ் பெ <stalinf...@gmail.com>
போட்டுட்டியா தம்பி.. நேத்து வாசிச்சு கடுப்பாகிட்டேன்..
இரு தண்ணி குடிச்சிட்டு வந்து பதில் அடிக்கிறேன்..

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Mar 20, 2013, 10:37:39 AM3/20/13
to panb...@googlegroups.com
Reply cover..

காந்தியின் வரலாற்றையும் நாம் சீர்துக்கி பார்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.குழந்தை பருவம் துவங்கி கல்லூரி செல்லும் வரை காந்தியைப்  பற்றி இச்சமூகம் கற்றுத் தரும் பாடம் அவர் ஒரு மாகாத்மா என்பதே..அவரும் ஒரு சராசரியான ஒரு அரசியல்வாதி தான் என யாருமே நமக்கு சொல்வதில்லை. இந்தியா என்ற பிரமாண்ட நிலப்பரப்பு ஒரு கற்பித்த தேசமாக உருமாறிய வரலாற்றை தாங்கிப் பிடிக்க காந்தி என்ற முகமூடி பலருக்கும் தேவைப்படுகிறது.. காந்தி எப்போதில் இருந்து தேசப்பிதா ஆனார் என்று ஒரு சிறுமி கேள்விக்கேட்டு இவர்கள் முகமூடியை சமீபத்தில் கிழித்தெறிந்தாள்...

காந்தியின் பாலியல் தொடர்பான சோதனைகள் எந்த வளர்தலைமுறைக்கு தெரிவதும் இல்லை.... காந்தியின் பார்வையில் வேண்டுமானால் சோதனைகள் சரியாக இருக்கலாம் ஆனால் பதினெட்டு வயது கூட பூர்த்தியாகாத மானுவின் பார்வையில் இது ஒரு வக்கிரமானதாகவே இருந்திருக்கும் என்று யாருமே சுட்டிக்காட்டுவது இல்லை..
தலித்துகளுக்கு சரியான பிரதிந்தித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அண்ணலின் எல்லா முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை இட்டார்..ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டாவது பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களுக்கு பிரதிந்த்துவம் கிடைக்காமல் போனதற்கு இவரது அப்பட்டமான பிடிவாதமே காரணம். 

தேசம் முழுவதும் அவர் ஒழுக்கமானவராக கட்டமைக்கபட்டிருந்தாலும் தனிப்பட்ட அவரது வாழ்க்கை முறை மிககேவலமாகவே இருந்தது. ரபீந்திரனாத்தின் உறவுக்கார பெண்ணான சரலாதேவியுடன் அவர் உடல் ரீதியான தொடர்பில் இருந்தார். இத்தனைக்கும் சரளாதேவி, சுதந்திரத்திற்கு போராடி சிறை சென்ற ஒருவருடைய மனைவி. 

இப்படிப் பட்ட பிம்பத்தின் நீட்சியில் தான் இன்றைய அரசியல்வாதிகள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.. அரசுக்கு எதிரான எந்த போராட்டமும் கலகமாக வர்ணிக்கப்படுகிறது. எந்த பிரச்சனைகளுக்கும் களத்தில் வராமல் ஓட்டு போடுவதோடு நமது கடமை முடிந்தது என்று நம்பவைக்க காந்தியின் பிம்பமும், குல்லாவுமே இந்திய அதிகார வர்க்கத்திற்கு தேவை..

ஆக, காந்தி உடைக்கப்பட வேண்டிய பிம்பம்.. இந்தியா என்ற மாயையில் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களை மீட்க  முதலில் கல்லெறிய வேண்டியது இந்த பொய் பிம்பத்தையே..

//
//இந்த உண்மையான வரலாறு அளிக்கும் சரியான பாடங்கள்தான் நாம் இன்றைய சூழலை எதிர்கொள்ள உதவும். என்ன காரணத்தால் காந்தி அகிம்சையையும் ஜனநாயகப் போராட்டத்தையும் முன்வைத்தார் என்று புரிந்துகொள்ளமுடியும்.

சுபாஷின் பொய்யான பிம்பம் ஏன் உடைக்கப்படவேண்டும்? நேரடியான உதாரணமே உள்ளது. சுபாஷ் என்ற பொய்யான பிம்பத்தில் இருந்து ஊக்கம் கொண்டு அவரை முன்னுதாரணமாக எண்ணித்தான் இலங்கையில் ஆயுதப்போராட்டம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. அது உருவாக்கிய எல்லா அழிவுகளுக்கும் காரணமாக சுபாஷின் போலிப்பிம்பத்தைச் சொல்லலாம்

இத்தகைய பொய்பிம்பங்கள் கண்ணிவெடிகளைப்போல நம் சிந்தனைக்குள் புதைந்துகிடக்கின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டெடுத்துக் களையவேண்டியது அவசியம்////

தமிழ்ப் பயணி

unread,
Mar 20, 2013, 11:22:44 AM3/20/13
to பண்புடன்
ஸ் ​பெ,

       இதுக்கும் ​மே​லே சிலவற்​றை எதிர்பார்த்​தேன். ​ரொம்ப ப​ழைய, கீறல் விழுந்த கிராம​போனில் பாட்டு ​கேட்பது ​போல உள்ளது.
காந்தியின் மீதான பிம்ப உ​டைப்​பை தான் அ​னைவரும் ​செய்கிறார்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் அ​தை ​மட்டும் பேசுவதால் ​வே​றென்ன ​​சொல்ல.

        ஆம் பிம்பம் உ​டைப்பது ​தே​வைதான் என்று ​சொல்லி ​நேதாஜி மற்றும் பிரபாகரன் பற்றி சற்​றேனும் ​தொடுவீர்கள் என்று எண்ணியிருந்​தேன்.
தனது இனத்​தை சார்ந்த சகஇயக்கத்தின​ரை​யே ​கொன்​றொழித்து தான் வளர்ந்த வரலாற்​றை எடுத்து ​சொல்லுவீர்கள் என்றும் எண்ணியிருந்​தேன்.
அது சரி புனித பிம்பம் கட்டு​டையபட்டு விட்டால் புரட்சி ​பேச இயலா​தே.

2013/3/20 ஸ் பெ <stalinf...@gmail.com>

Reply cover..

காந்தியின் வரலாற்றையும் நாம் சீர்துக்கி பார்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.குழந்தை பருவம் துவங்கி கல்லூரி செல்லும் வரை காந்தியைப்  பற்றி இச்சமூகம் கற்றுத் தரும் பாடம் அவர் ஒரு மாகாத்மா என்பதே..அவரும் ஒரு சராசரியான ஒரு அரசியல்வாதி தான் என யாருமே நமக்கு சொல்வதில்லை. இந்தியா என்ற பிரமாண்ட நிலப்பரப்பு ஒரு கற்பித்த தேசமாக உருமாறிய வரலாற்றை தாங்கிப் பிடிக்க காந்தி என்ற முகமூடி பலருக்கும் தேவைப்படுகிறது.. காந்தி எப்போதில் இருந்து தேசப்பிதா ஆனார் என்று ஒரு சிறுமி கேள்விக்கேட்டு இவர்கள் முகமூடியை சமீபத்தில் கிழித்தெறிந்தாள்...

ஸ் பெ

unread,
Mar 20, 2013, 12:09:41 PM3/20/13
to panb...@googlegroups.com
தமிழ்பயணி ஜி,
Cool.. அதுதான் Reply cover என சொல்லிவிட்டேனே...
காந்தியை மட்டுமே நம்பி அவர் கைதடி தான் இவ்வுலகத்தை உய்வித்தது என்று நம்பி செல்பவர்களிடம் எந்த புரட்சிகள் பற்றியும் பேச முடியாது...கொலை,வன்முறை என்று கீறல் விழுந்த சி.டி யாகவே பேசிக்கொண்டிருப்பார்கள்... ஜெயமோகனும் அதில் விதிவிலக்கல்ல..

நேத்தாஜி வழியாக பிரபாகனையும் தூக்கி அவர் வீசுவதால் எழும் கோபம் என நினைத்தால் அது தவறு...ஜெயமோகன் முன்வைக்கும் இதே 'பிம்ப உடைப்பு' எதிர்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் சாத்தியம் என்பதற்காகவே அதை எழுதினேன்..

ஜெயமோகன் தவறவிடுவது,, இந்த பிம்பஉடைப்பினால் நாங்கள் அதிகம் இழக்கப்போவது இல்லை(ஏற்கனவே இழந்து விட்டோம்).. ஆனால், காந்திய\இந்திய பிம்ப உடைப்பின் பாதிப்பு ஜெயமோகன்களுக்கு அதிக பாதிப்பை தரும்.. Cheers!





2013/3/20 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Namakkal Shibi

unread,
Mar 20, 2013, 12:11:52 PM3/20/13
to panb...@googlegroups.com
Enna Nadakkuthu Inge?

20 மார்ச், 2013 9:39 PM அன்று, ஸ் பெ <stalinf...@gmail.com> எழுதியது:

C.M உதயன்

unread,
Mar 20, 2013, 12:32:57 PM3/20/13
to panb...@googlegroups.com
மகாத்மா காந்தி பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
காந்திக்கு அறவழியில் பயணிக்க ஆலோசனை வழங்கியவர் சமணரே. அவர் பெயர் நியாபகம் வரவில்லை யாராவது எடுத்து கொடுங்கப்பா.



2013/3/20 ஸ் பெ <stalinf...@gmail.com>
--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

ஸ் பெ

unread,
Mar 20, 2013, 12:34:18 PM3/20/13
to panb...@googlegroups.com
அந்த சமணர் மதுரை-திருபரம்குன்றத்தை சில,பல நாட்கள் சுற்றி திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..



2013/3/20 C.M உதயன் <udhay...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

C.M உதயன்

unread,
Mar 20, 2013, 1:05:31 PM3/20/13
to panb...@googlegroups.com
அவர் செத்தே 50 வருஷம் ஆச்சு.

மோரு

unread,
Mar 20, 2013, 1:43:07 PM3/20/13
to பண்புடன்
தமிழ்ப்பயணி ஜி காந்திய பத்தி பேசுனாலே நீங்க உணர்ச்சிவசப்படுவதாக தெரிகிறது. நீண்டநாள் அவதானிப்பு இது.​

2013/3/20 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
ஸ் ​பெ,

       இதுக்கும் ​மே​லே சிலவற்​றை எதிர்பார்த்​தேன். ​ரொம்ப ப​ழைய, கீறல் விழுந்த கிராம​போனில் பாட்டு ​கேட்பது ​போல உள்ளது.

தமிழ்ப் பயணி

unread,
Mar 20, 2013, 10:48:41 PM3/20/13
to பண்புடன்
இல்​லைங்க ​மோரு ஜி. பல நூறு மு​றை ஸ்​பெ அவர்க​ளே காந்தி​யை பற்றி ​பேசியுள்ளார். அதனால் இதுக்​கெல்லாம் ​பொங்கினால் ​பொழப்பு என்னாவது.. :) காந்தி ​சொந்த ​பேரனுக்​கே ​​சொத்து எழுதி ​வைச்சதா ​தெரிய​லே. எனக்கு மட்டும் என்ன பினாமியாவா எழுதி ​கொடுத்திருப்பாரு.. :) :)

சமகாலத்தில் பல லட்சம் ​பேர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்க​ளை பற்றி சிறிதும் ​பேசாமல் ​வெறு​மே காந்தி​யை மட்டும் இழிச்சவாயராக ​கொண்டு பேசுவது தான் பிரச்சி​னை. 

2013/3/20 மோரு <mors...@gmail.com>

தமிழ்ப்பயணி ஜி காந்திய பத்தி பேசுனாலே நீங்க உணர்ச்சிவசப்படுவதாக தெரிகிறது. நீண்டநாள் அவதானிப்பு இது.​

2013/3/20 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
ஸ் ​பெ,

       இதுக்கும் ​மே​லே சிலவற்​றை எதிர்பார்த்​தேன். ​ரொம்ப ப​ழைய, கீறல் விழுந்த கிராம​போனில் பாட்டு ​கேட்பது ​போல உள்ளது.

--

துரை.ந.உ

unread,
Mar 20, 2013, 11:22:46 PM3/20/13
to panb...@googlegroups.com


2013/3/20 மோரு <mors...@gmail.com>

தமிழ்ப்பயணி ஜி காந்திய பத்தி பேசுனாலே நீங்க உணர்ச்சிவசப்படுவதாக தெரிகிறது. நீண்டநாள் அவதானிப்பு இது.​

மோரு :))))))))))))
 நீங்கள்ளாம் பாசக்காரப் புள்ளைங்கய்யா.... :)

 

2013/3/20 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
ஸ் ​பெ,

       இதுக்கும் ​மே​லே சிலவற்​றை எதிர்பார்த்​தேன். ​ரொம்ப ப​ழைய, கீறல் விழுந்த கிராம​போனில் பாட்டு ​கேட்பது ​போல உள்ளது.




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

Sahul Hameed

unread,
Mar 21, 2013, 3:29:30 AM3/21/13
to panb...@googlegroups.com
என்னவோ போங்க பன்னீர்செல்வம்...! கீழ வுழுந்தா அப்படியே தூங்கிடுறீங்க.......எழுந்திருங்க.......அட யாராவது தண்ணி தெளிச்சு எழுப்பிடுங்கப்பா.....!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

ப்ரியன்

unread,
Mar 21, 2013, 3:42:04 AM3/21/13
to panb...@googlegroups.com
மேடையில் அமர்ந்திருக்கும் இன்னொருவரின் ரியாக்ஸன் டாப்பு...

Sahul Hameed

unread,
Mar 21, 2013, 3:47:44 AM3/21/13
to panb...@googlegroups.com
 
 
 

 
 
 

 
2013/3/21 ப்ரியன் <mailt...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

தியாகு

unread,
Mar 21, 2013, 4:41:53 AM3/21/13
to பண்புடன்
//காந்தியின் பாலியல் தொடர்பான சோதனைகள் எந்த வளர்தலைமுறைக்கு தெரிவதும் இல்லை.... காந்தியின் பார்வையில் வேண்டுமானால் சோதனைகள் சரியாக இருக்கலாம் ஆனால் பதினெட்டு வயது கூட பூர்த்தியாகாத மானுவின் பார்வையில் இது ஒரு வக்கிரமானதாகவே இருந்திருக்கும் என்று யாருமே சுட்டிக்காட்டுவது இல்லை..
தலித்துகளுக்கு சரியான பிரதிந்தித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அண்ணலின் எல்லா முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை இட்டார்..ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டாவது பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களுக்கு பிரதிந்த்துவம் கிடைக்காமல் போனதற்கு இவரது அப்பட்டமான பிடிவாதமே காரணம். //

தோழர் எஸ்பெ,
காந்தியோ அல்லது வேறு ஒருவரோ ஒரு தலைவருடைய தனிபட்ட வாழ்க்கையை விமர்சிக்க ஆரம்பித்தால் அது முடிவற்ற தொடராகும்


மார்க்சியவாதிகள் இதை ஆதரிப்பதில்லை .

காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள் அல்லது அவர் யாருடன் உடல்ரீதியான தொடர்பு வைத்திருந்தார் என்பதெல்லாம் நமக்கு தேவை அற்றவை ஆனால் காந்தியின் அரசியல் மீது நாம் விவாதிக்க கடமை பட்டுள்ளோம்

கிஞ்சித்தும் காந்தி அல்லது பெரியார் அல்லது அண்ணா போன்றோரின் தனிபட்ட வாழ்வின் மீது அல்ல



2013/3/21 Sahul Hameed <sahu...@gmail.com>



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

C.M உதயன்

unread,
Mar 21, 2013, 9:58:41 AM3/21/13
to panb...@googlegroups.com



அமெரிக்கா எப்படி தோழர்? .. அயோக்கியப்பிசாசுகள்.. உருசியர்கள்... அவன் எதிரியின் நண்பன்... சீனா... மொள்ளமாறி . . . . கியூபா... அவனும் எதிரியின் நண்பன்... நெதர்லாந்து... துரோகி... மலையாளிகள்... அயோக்கியப்பசங்க... கன்னடர்கள்... த்தூ.. அவங்கள்ளாம் மனுசனுகளே அல்ல... சிங்களர்கள்... முட்டாப்பயலுக... அப்போ தோழர் .... ஜெயலலிதா?.... அந்தமா சோ வோட ஆளு.. நம்ப முடியாது... கலைஞர்.... பக்கா சுயநலவாதி... நாம் தமிழர்கள்.... சின்னப்பசங்க... வைகோ... அடுத்த காருக்கு ஆசைப்படுகிறார் பாவம்... நெடுமாறன்... பெரிசு பாவமுங்க . . . கொளத்தூர் மணி... தீவிரவாத ஆதரவாளர்... வீரமணி அய்யா? . .. . அய்யே அவரு கலீஞர் ஜால்ரா ... இசுலாமியர்கள்... அவுங்க தமிழராகவே நடக்கமாட்டாங்க... கிருத்துவர்கள்... அவங்க அமெரிக்காவின் ஏஜண்டுகள்... அப்போ யாருதான் நமக்கு நல்லவங்க... நண்பர்கள்... தோழா ? . . . . நீங்களும் நானும் மட்டும்தான்.... ! ( மனசுக்குள் ... ஓவரா கேள்வி கேக்குறான்.. இவனுக்கும் சீக்கிரம் துரோகிபட்டம் கட்டிவிடனும் )

ஸ் பெ

unread,
Mar 21, 2013, 12:02:44 PM3/21/13
to panb...@googlegroups.com
தோழர்,
மன்னிக்க.. இதை துவங்கி வைத்தவர் அவரே..
இந்தவரிகளை பாருங்கள்..
//அதில் கார்ல்மார்க்ஸுக்கும் அவரால் பாலுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பணிப்பெண்ணான ஹெலென் டெமுத்துக்குமான உறவைப்பற்றிச் சொல்லியிருந்தேன்.

நான் அவற்றுக்கு இவ்வாறு பதில் சொன்னேன். மார்க்ஸின் சிந்தனைகளை அவரது செயல்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியுமா? பாட்டாளிகளின் சிந்தனையாளர் ஒரு பாட்டாளியைப் பாலியல்ரீதியாக்ச் சுரண்டியது அச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான தகவல் இல்லையா என்ன?//

ஏம்பா, பொஞ்சாதி ஆஸ்ரமத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களுடன் உனக்கு என்ன சோதனை வேண்டிக்கிடக்கு என்று நாம் கேட்கலாமா கூடாதா?

இன்று இந்தியா உருவாக்கி உள்ள பிம்பம் பெரும்பாலும் கற்பனவாததினால் உருவானது..

பொருளாதாரரீதியான நெருக்கடி  இந்தியாவை, பிரிட்டிஷார் கைவிட ஒரு முக்கியமான காரணி என்று சொன்னால் அதை யாரும் நம்ப தயாராக இல்லை..  தமிழ்நாட்டின் பக்கம் இருக்கும் சிலோனில் யார், யார் சுதந்திரத்திற்காக உக்கிரமாக போராடினார்கள்.. இப்படி, போராடாமலே அவர்கள் கைகழுவி விட்ட தேசங்கள் பல.. 
வரலாற்று புனைவாலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இப்படியான வரலாறுகள் தேவை... பாகிஸ்தான்-இந்தியா-பங்களாதேஷ் என்று ஒருங்கிணைந்த ஒரு தேசத்திற்காக தானே குரல்கொடுத்தார்கள்.. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருந்தும், பங்களாதேஷ் பகுதியில் இருந்தும் போராடிய பெயர்கள் நமக்கு  எப்போதாவது சொல்லப்படுகிறதா? இல்லை.. ஆக, இவர்கள் கட்டமைக்க நினைக்கும் தேசியம் என்ன?

முன்பு ஜெயமோகன் தன்னுடைய பதிவில் எழுதி இருந்தார் 'குமரிமாவட்ட சர்சுகளில் காந்தியை குறித்து வாரவாரம் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள்' என.. அதை கடுமையாக மறுத்தேன்.. ஆனால், இந்த காந்திசதானவாதிகளின் 'பிம்பஉடைப்பு' கட்டுரைகள் அதை தீர்க்கமாக செய்யத் தோன்றுகின்றன..

சுருக்கமாக, நாங்கள் பேசும்,முன்வைக்கும் அரசியலுக்கு வரலாறு இல்லை என்றால் நீங்கள் பேசும் அரசியலுக்கும் வரலாறு இல்லை.. 

ஜெயமொகன்களுக்கு மறுபடியும், மறுபடியும் சொல்லிக்கொள்ள விளைவது ஒன்று தான் 'பிம்பஉடைப்பை துவங்கினால் எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை நீங்கள் இழக்க போவது 66 வருட கற்பிதம்...அதிக பாதிப்பு உங்களுக்கு தான்..'





2013/3/21 தியாகு <seewty...@gmail.com>



--

ஸ் பெ

unread,
Mar 21, 2013, 12:10:52 PM3/21/13
to panb...@googlegroups.com
இன்னொன்றையும் சொல்லிகொள்கிறேன்..
இவர் சுட்ட உளுந்து,பருப்பு வடைகள் அனைத்தும் இவர் படித்த சட்ட நிபுணத்துவத்தால் வந்தது.. சட்டத்தின் வழி உரிமையை பெற, பேச முடிந்தது.. அவ்வளவே..

பிரிட்டிஷாரின் வருகைக்கும் முன் இதே டயலாக்கை மன்னர்களிடம் விட்டு இருந்தால் 'ராஜ துரோகி' என்று சொல்லி தூக்கி முதலையிடம் போட்டிருப்பார்கள்....
:--)

Ramesh Murugan

unread,
Mar 24, 2013, 5:19:10 AM3/24/13
to panb...@googlegroups.com
வரலாற்றுப் பின்புலத்தில் ஒரு நட்பின் கதை
பட்ட விரட்டி - நூல் அறிமுகம்

                              

நான் திரும்பி ஓடினேன். அது ஒரு புன்னகை மட்டுமே. அதற்கு மேல் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் நான் சரி செய்துவிடவில்லை. அந்த புன்னகை எல்லாவற்றையும் சரி என்றும் ஆக்கிவிடவில்லை. ஒரு புன்னகை மட்டுமே. மிகச் சிறிய ஒன்று. இலையுதிர்ந்து போன மரத்தில் ஒரு புதுத்துளிர். பறக்க எத்தனிக்கும் பறவையின் சிறகு உதறல். வசந்தகாலம் வருகையில் பனிப்படர்வின் முதல் அடுக்கையே முதலில் உருக வைக்கும். அந்த முதல் உருகுதலை அந்த புன்னகையில் நான் பார்த்திருக்கலாம்.
நான் ஓடினேன். குழந்தைகளுடன் சேர்ந்து ஒடும் ஒரு வளர்ந்துவிட்ட மனிதன். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என் முகத்தில் காற்றடிக்க பஞ்ச்ஷேர் சமவெளி அளவுக்கு விரிந்த புன்னகையுடன் நான் ஓடினேன். நான் ஓடினேன்.

   
இதுதான் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான பட்ட விரட்டி (ஜிலீமீ ரிவீtமீ ஸிuஸீஸீமீக்ஷீ) நாவலின் இறுதி வரிகள்.

   
குழுந்தைகளுடன் ஓடியவன் அமீர்ஜான் என மரியாதையுடன் அழைகப்பட்ட ஒரு எழுத்தாளன். இளம் வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் மிக்கவன். அமெரிக்காவில் வளர்ந்த புகழ்மிக்க மனிதன். ஒரு பட்டத்தை விரட்டி குழந்தைகளுடன் ஓடக்காரணம் ஹசன்.  யார் இந்த ஹசன்? சனோபர் - அலி தம்பதியின் குழந்தை.

   
தாய் சனோபர்..? ஹசன் குழந்தையாய் இருக்கும் போதே அவனது தந்தை அலியை விடுத்து மாற்றானுடன் சென்றுவிட்ட ஒரு தாய். அதுமட்டுமல்ல சனோபர் ஹசனுக்கு மட்டுமல்ல அமீர்ஜானுக்கும் பாலூட்டிய செவிலித் தாயும்கூட. அது சரி இப்போது அமீர்ஜான் ஹசனுக்காவா ஓடுகிறான்? இல்லை. பிறகு யாருக்காக? அமீர்ஜான் தந்தையின் நெருங்கிய நண்பன் ரஹீம்கானின் தொலைபேசியின் மூலம் பின்நோக்கி பயணிக்கும் நாவல் இது.

   
இரு நண்பர்களின் கதைதான் ஆனால் இதன் பின்னணியில் ஒரு வரலாறு மாற்றம் மிகவும் நுட்பமாக பதிவு செய்யப்படுள்ளது. இந்திய சைவ வைணவ மதங்களைப் போல இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுகள் கடுமையாக மோதிய, மாற்று அடையாளத்தினரை, வன்செயல் மூலம் அழித்தொழிக்கும் காலத்திலும், நேரடியாக மோதிய காலத்திலும், அதற்கிடையில் புரட்சிகர கம்யூனிச கருத்துக்கள் நஜிபுல்லா எனும் அடையாளத்துடன் நுழைந்த காலகட்டத்தில், அதை ஒழிக்க அமெரிக்காவின் ஆயுத தளவாட மற்றும் நிதியுதவியுடன் மதவெறியர்களான தாலிபான்கள் கொடூரமாய் மக்களை வேட்டையாடிய காலகட்டத்திலும் பயணிக்கும்  நாவல் இது.  

   
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் செல்வவளம் மிக்க குடும்பம் அது. அக்குடுமபத்தின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. நால்வரும் ஆண்களே. அமீர்ஜான் அவனது தந்தை, அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஹசன் அவனது தந்தை. இவர்களின் வாழ்க்கையினூடாக சம்பவங்கள் விரிந்து செல்கிறது.  ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற பட்டம் விடும் போட்டியில் அமிர்ஜான் புகழ்பெறுகிறான். ஆனால் வெற்றி பெரும் பட்டம் இறுதியாக வெட்டிவிடும் பட்டத்தை விரட்டும் கலையில் நிபுணன் அமீர் அல்ல ஹசன். இவர்கள் நட்பு அதீதமானது. அன்பானது. அமீர்ஜானுக்காக ஹசன் எதையும் செய்வான். ஆனால் ஆப்கானில் இருந்த பெரும்பான்மையான இஸ்லாமிய மதவெறியர்கள் வெறுக்கும் ஹசாரா இனத்தை சேர்ந்தவன் ஹசன். இதனாலேயே அமீர்ஜான் அவனது நண்பர்களால் மிரட்டபடுகிறான்.

   
ஆனாலும் இவர்களது நட்பு தொடர்கிறது.  ஒருநாள் அமீர்ஜானுக்காக பட்டத்தை விரட்டிச் செல்லும் ஹசனை, ஆஸிப் என்பவன் அவனது நண்பர்கள் உதவியுடன் வன்புணர்சி செய்கிறான். மறைவிலிருந்து இதை பார்க்கும் அமீர்ஜான் பயத்தின் காரணமாக உதவி செய்ய முடியாமல் ஓடி விடுகிறான். இதன் பின்னால் வரும் நாட்களில் அமீர்ஜானின் குற்ற உணர்ச்சி ஹசனை பார்க்கும் போதெல்லாம் வாட்டுகிறது. இந்த குற்ற உணர்ச்சியின் இயலாமை ஹசன் மீதான வெறுப்பாய் கவிழ்கிறது. எனவே பொய் குற்றச்சாட்டை சுமத்தி ஹசனையும் அவனது தந்தை அலியையும் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறான். நாட்கள் நகர்கிறது.

   
ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும் சோவியத் படைகளுக்கும் சண்டை வலுவடையத் தொடங்கியது.  பல பகுதிகளில் தாலிபான்களின் கொடூரத்தை தாங்க முடியாமல் பலபேர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அமீர்ஜானும் அவனது தந்தையும் கடுமையான பயணத்திற்குப் பிறகு அமெரிக்கா வந்தடைகின்றனர். அமீரின் தந்தை ஒரு பெட்ரோல் பங்கில் வேலைதெடிக்கொண்டு அமீரை அங்கே படிக்கவைக்கிறார். அமிர் இலக்கியத்தில் பட்டம் பெறுகிறான். காலங்கள் உருண்டோடினாலும்  அவனது மனதில் ஹசனின் நினைவுகள்  நெருடிக்கொண்டே இருக்கிறது.

   
அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். இதற்கிடையில் புற்றுநோயில் அமீரின் தந்தை மரணமடைகிறார். இந்த பின்னணியில் அவரது தந்தையின் உற்ற நண்பனான ரஹீம்கானிடமிருந்த தொலைபேசி வருகிறது. அவரை சந்திக்க அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் செல்கிறான். பெஷாவரில் உடல்நலக் குறைவால் மெலிந்து பொயிருந்த ரஹீம்கானை சந்திக்கிறான். அவர் மூலமாக ஹசன் குறித்து அறிந்துகொள்கிறான். ஹசனும் அவனது மனைவி ஃபர்ஸானாவும் தாலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டதை அறிந்து கண்ணீர் சிந்துகிறான். அதைவிட அதிர்ச்சியான தகவல் அவனுக்கு அப்போதுதான் கிடைக்கிறது. ஹசன் அவர்கள் வீட்டு வேலைகாரன் அலியின் பிள்ளை அல்ல, அமீரின் தந்தைக்கு பிறந்தவன் என்பது. ஆக ஹசன் அமீர்ஜானின் தம்பி.

   
என்றாவது ஒரு நாள் அமீர்ஜான் வந்தால் கொடுக்க வேண்டும் என ஹசன் கொடுத்த கடிதத்தை ரஹீம்கான் கொடுக்கிறார். அதில் தாலிபான்களால் ஆப்கானில் நடக்கும் கொடூரத்தையும் தனது மனைவி ஃபர்ஸாசானா மற்றும் மகன் ஷெஹ்ராப் குறித்தும் ஹசன் எழுதியதை படித்து கண்ணீர் வடிக்கிறான். கடிதத்தை படித்து முடித்ததும், ரஹீம்கான் அமீர்ஜானிடம் ஆப்கானிஸ்தான் சென்று ஹசன் மகன் ஷெஹரப்பை மீட்டு அவனுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என சொல்கிறான். முதலில் மறுக்கும் அமீர்ஜான் பின்பு சம்மதித்து  ஆப்கானிஸ்தான் செல்கிறான்.

   
ஆப்கானிஸ்தானில் போலியான மீசை தாடியுடன் ஷெஹரப்பை தேடி அலைகின்றனர். உடைந்த வீடுகளும், தோட்டாக்களினால் சல்லடையாக்கப்பட்ட  சுவர்களும், பயந்த கண்களுடன் முகங்களை மூடிய பெண்களும் இனம் புரியாத பயத்தை ஏற்படுத்துகின்றனர். அங்கு ஒரு அனாதை விடுதியில் ஷெஹரப் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறான். ஆனால் சில தினங்களுக்கு முன் ஷெஹரப்பை தாலிபான் தலைவர்களில் ஒருவன் கொண்டு சென்றது தெரிகிறது. அந்த தாலிபான் இருக்குமிடத்தை தேடிச்செல்லும் போது ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு கொடூர காட்சியை பார்க்க நேர்கிறது. மதவிரோதமாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணையும் பெண்ணையும் கால்பந்து விளையட்டு மைதானத்தில் கழுத்தளவு புதைத்து கல்லாள் அடித்து கொள்கின்றனர். அதை நிறைவேற்றும் கொடூரன்தான் அமீர்ஜான் தேடிவந்தவன்.

   
நேரில் சந்திக்கும் போதுதான் தெரிகிறது அந்த கொடூரன் சிறுவயதில் ஹசனை பாலியல் வண்புனர்வு செய்த ஆஸீப் என. அவனும் அமீர்ஜானை அடையாளம் கண்டுகொள்கிறான். ஆஸிப்பினால் துன்புறுத்த பட்ட ஹசன் மகன் ஷெஹரப்பை கடுமையான மோதலுக்கு பிறகு மீட்டு வருகிறான் அமீர். எப்படியும் தன்னை அமீர் மீட்டு வெளிநாடு அழைத்துச் செல்வான், இந்த நரகத்திலிருந்து வெளியேறலாம் என மகிழ்ச்சியடைகிறான் ஷெஹரப். ஆனால் விசா கிடைக்காமல் சில தினங்கள் பாகிஸ்தானில் தங்கும் சூழல்  எற்படுகிறது. மீண்டும் விடுதியில் சேர்க்கப்படலாம் என்ற பயத்தில் ஷெஹரப் தற்கொலைக்கு முயல்கிறான். இளம் வயதிலேயே வாழ்கையின் அனைத்து துன்பங்களையும்   அனுபவித்த ஷெஹரப் பிழைத்துவிடுகிறான். அமீர்ஜான் அவனை தன்னோடு அமெரிக்கா அழைத்துச் சென்று விடுகிறான்.
   
ஆனால் ஷெஹரப் மீது அன்பை பொழியும் அமீர்ஜான் சுரையா குடும்பத்தினருடன் அவனால் இணையமுடியவில்லை. மெல்ல மெல்ல அவனை மீட்க நினைக்கிறான் அமீர்ஜான். அப்படியான ஒரு முயற்சியாகத்தான் பட்டம் விட அவனை அழைத்து செல்கிறான். மற்றொரு பட்டத்தை அமீர் வெட்டிவிட பட்டவிரட்டியான ஹசனின் மகனான ஷெஹரப் இதழிலிருந்து ஒரு மெல்லிய புன்னகை வருகிறது. அதற்காக.. அந்த ஒரு துவக்க புன்னைக்காக அமீர்ஜான் வெட்டிய பட்டத்தை விரட்டி ஓடினான்.
   
அத்துடன் நாவல் நிறைவு பெருகிறது.

   
ஆனால் படித்து முடிக்கும் வாசகனின் சிந்தனையில் காலித் ஹ§சைனியின் இந்த நாவல் தொடர் சலனத்தை துவக்கி வைக்கிறது. முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களம். ஒரு தேசத்தின் சோகத்தை நாவலின் பின்னணியாக இணைத்தது, நட்பின் ஆழம், வலி மிகுந்த துரோகம், புலம்பெயர் வாழ்க்கை, மதவெறியின் கோரதாண்டவம் அனைத்தும் ஒரு புது வாசிப்பு அனுபவத்தை வாசகனுக்கு கொடுக்கிறது. மொழி பெயர்ப்பு நாவல் என தெரியாமல் உயிரோட்டமுடன் தமிழில் மொழி பெயர்த்த எம்.யூசுப் ராஜா வாழ்த்துக்குரியவர். அவசியம் நமது வாசிப்பு பட்டியலில் இருக்க வேண்டிய புத்தகம் இது. படியுங்கள்.
(24.03.13 அன்று தீக்கதிரில் வெளிவந்தது. இடம் கருதி சுருக்கி வெளியிட்டிருந்தனர். அத்ன் முழு வடிவம் இது)

Ramesh Murugan

unread,
Mar 27, 2013, 10:05:29 AM3/27/13
to panb...@googlegroups.com

வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்

by கலையரசன்


ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று நடந்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியை சேர்ந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள், சைப்ரஸ் நாட்டு வங்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.  அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மக்களின் சேமிப்புப் பணத்தில் இருந்து ஒரு தொகை, வெளிநாட்டு கடனை அடைக்க பயன்படுத்தப் படப் போகின்றது. ஒரு சேமிப்பாளர் ஒரு இலட்சம் யூரோக்களுக்கு அதிகமாக பணம் வைப்பிலிட்டு இருந்தால், அந்த தொகையில் பத்து சத வீதம் கழிக்கப் பட வேண்டும். 

சைப்ரஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான Laiki Bank, முதலாளித்துவ பயங்கரவாதிகளால் முற்றாகத் தகர்க்கப் பட்டுள்ளது. இந்த "பயங்கரவாத தாக்குதல்" காரணமாக, ஆயிரக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவி என்ற பெயரில், ஐரோப்பிய ஒன்றிய வழங்கிய கடனை அடைப்பதற்காக, இன்னும் பல்லாயிரம் வேலைகள் பறிக்கப் படவுள்ளன. இதனால், சைப்ரஸ் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப் படுவதுடன், வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரிக்கும். 

மேற்கு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர், தமது சேமிப்புப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் வைப்பிலிட விரும்புவதில்லை. ஆனால், இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ விடுமுறையை கழிப்பதற்கு செல்லும் நேரம், அங்குள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட்டு விட்டு வருவார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "ஐரோப்பிய வங்கிகளில் சேமிப்பு பணத்திற்கு கொடுக்கும் வட்டி வீதம் குறைவு. நமது நாட்டு வங்கிகளில், பல மடங்கு அதிகமான வட்டி கொடுக்கிறார்கள்."  குறைந்த வட்டி கொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் வங்கிகளுக்கும், அதிகளவு வட்டி கொடுக்கும் கீழைத்தேய நாடுகளின் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

மேற்கத்திய நாடுகளில் உள்ள வங்கிகளில், ஏற்கனவே வட்டி வீதம் குறைவாக இருப்பது மட்டுமல்ல, அது பண வீக்கத்திற்கு ஏற்ப அதிகரிப்பதில்லை என்பது ஒரு தீமை தான். அதே நேரத்தில், குறைந்தளவு வட்டி கொடுத்தாலும், வங்கித் துறையும், அரசுகளும் நிலையானவை. பெரும் மூலதனத்தின் நேரடிப் பயன்களை அனுபவிப்பவை. அதனால் எமது பணத்திற்கு ஒரு பாதுகாப்புக் கிடைக்கின்றது. அதற்கு மாறாக, கீழைத்தேய வங்கிகளிடம் என்ன குறைகள் உள்ளன? அண்மையில் சைப்ரசில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்தக் குறைபாட்டை புரிந்து கொள்வோம். 

ஒரு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் தீவு, எழுபதுகளில் நடந்த போர் காரணமாக இரண்டாகப் பிரிந்தது. மூன்றில் ஒரு பங்கு வடக்கு சைப்ரசை, துருக்கிப் படைகள் ஆக்கிரமித்தன. துருக்கி மொழி பேசும் சைப்ரஸ் மக்களுக்கான பாதுகாப்பு பிரதேசமாக, "வடக்கு சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் தனிநாடு போன்று இயங்கி வருகின்றது. ஆனால், அதனை எந்தவொரு உலக நாடும் அங்கீகரிக்கவில்லை. கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும் தெற்கு பகுதி மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சைப்ரஸ் குடியரசு ஆகும். நாங்கள் சைப்ரஸ் என்று சொன்னால், அந்தப் பகுதியைத் தான் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த சைப்ரஸ், மூன்றாமுலக நாடுகள் போன்று வறிய நாடாக இருந்தது. பலர் பிரிட்டனுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து, ஊருக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், துருக்கியுடனான போர் முடிந்த பின்னர், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. சூரிய வெப்பத்தை தேடி வரும், குளிர் வலைய மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த, உல்லாசப் பிரயாணிகளின் வருகை.  
2. வங்கித் துறையின் அபார வளர்ச்சி. கறுப்புப் பண முதலைகள், தமது பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சைப்ரஸ் உதவியது. சாதாரணமாக, சைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டாலே போதும். அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது மட்டுமல்ல, ஒரு நாடு கடந்த கம்பனி அமைப்பதற்கான சட்டங்களும் இலகுவானவை. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, பெரும் வணிக நிறுவனம் ஒன்று அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மிகக் குறைவு. (மேற்கு ஐரோப்பாவில் 30% - 40% கார்ப்பரேட் வரி கட்ட வேண்டும். சைப்ரசில் வெறும் 10% மட்டுமே!) 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், வர்த்தகம் செய்வது என்ற போர்வையின் கீழ், ஊர் மக்களின் பணத்தை சுரண்டி கொழுத்த பணக்கார மாபியா கும்பல், சைப்ரஸ் நாட்டை புகலிடமாக கருதியதில் வியப்பில்லை. அங்கே பெயருக்கு ஒரு கம்பனியை பதிவு செய்து விட்டு, ரஷ்யாவில் கிடைத்த இலாபம் என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை, சைப்ரஸ் கணக்கிலத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்படி மாற்றுவதன் மூலம், வரி ஏய்ப்புச் செய்து இன்னும் நிறைய சம்பாதித்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய பணக்காரர்கள், ரஷ்ய உழைக்கும் மக்களிடம் சுரண்டிய பணத்தை, தனது காலடியில் கொண்டு வந்து கொட்டுவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும். 

ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரஸ் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மீட்பு நிதி அளித்து விட்டு, அந்தக் கடனை அறவிடுவதற்காக, சைப்ரஸ் மக்களின்  பணத்தில் ஒரு பகுதியை, மறைமுகமாக கொள்ளையடித்து விட்டது. ஏற்கனவே இது போன்ற நெருக்கடி வரப் போகின்றது என்று, சைப்ரஸ் ஜனாதிபதி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு எச்சரித்திருக்கிறார். அவர்கள் தமது பணத்துடன், வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். இவ்வாறு கோடிக் கணக்கான பணம், திருட்டுத் தனமாக  சைப்ரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இறுதியில் பாதிக்கப் பட்டது, மத்தியதர வர்க்க சைப்ரஸ் மக்கள் தான். (குவைத் போன்ற வளைகுடா நாடுகளைப் போன்று, சைப்பிரஸ் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒப்பந்த அடிப்படையில் வந்து வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தான் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குகிறார்கள்.)

இப்போது எமது அடிப்படைக் கேள்விக்கு வருவோம். சைப்ரஸ் நாட்டின் பொருளாதார பிரச்சினை எங்கே, எப்படி ஆரம்பமாகியது ? நான்கு வருடங்களுக்கு முன்னர், கிரேக்க நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அனைவருக்கும் நினைவிருக்கலாம். கிரேக்க பெரும்பான்மையினரைக் கொண்ட சைப்ரஸ் நாட்டவர்கள், தீவிரமான கிரேக்க தேசியவாதிகள். நீண்ட காலமாக "தாய் நாடான" கிரேக்கத்துடன் சேர்ந்திருக்க விரும்பி வந்தனர். இன்றைக்கும், சைப்ரஸ் தேசியக் கொடியுடன், கிரேக்க கொடியும் பறப்பதை, அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் அவதானித்திருக்கலாம். சைப்ரஸ் நாட்டு வங்கிகளும், கோடீஸ்வரர்களும், தமது "தாய் நாடான" கிரேக்கத்தில் முதலிட்டு வந்தனர். 

கிரேக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்த பின்னர், "தொப்புள்கொடி உறவுகளை" காப்பாற்றும் நோக்கில், பல கோடி பெறுமதியான அரச கடன் பத்திரங்களை சைப்ரஸ் வங்கிகள் வாங்கின. ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு வங்குரோத்தான நிலையை அடைந்தது. "ஐயா, உங்கள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் கடனில் ஒரு பகுதியை இரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் ..." என்று தொப்புள் கொடி உறவுகளிடம் கையை விரித்தது. அதனால் வந்தது கேடு. பெருமளவு சைப்ரஸ் நிதி, கிரேக்கத்தில் முடங்கி விட்டதால், சைப்ரஸ் வங்கித் துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆனால், அந்த உண்மையை  தமது வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியுமா? 

வங்கியில் நாம்  போட்டிருக்கும் சேமிப்புப் பணத்திற்கு, "வட்டி எங்கிருந்து வருகின்றது?" என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?  ஆகாயத்தில் இருந்து கடவுள் அள்ளிக் கொட்டுகிறாரா ? "பக்தர்களே, உங்கள் வீடுகளில் லட்சுமி படத்தை வைத்து, தினந் தோறும் பூஜித்து வந்தால், லட்சுமி கையில் இருந்து பணம் கொட்டுவது போல, வீட்டிலும் பணம் கொட்டும்..." என்று ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றுவது போல, வங்கிகள் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், எமது முதலீட்டுக்கு கிடைக்கும் இலாபப் பங்கும், கடனாக கொடுத்த தொகைக்கு கிடைக்கும் வட்டியும், யாரோ ஒருவரது உழைப்பில் இருந்து சுரண்டப் பட்ட பணம் தான். அந்த பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து விட்டால், வாத்தும் செத்து விடும், பொன் முட்டையும்  கிடைக்காது. 

வங்கிகள் நமது சேமிப்புப் பணத்தை, அப்படியே பத்திரமாக பூட்டி வைப்பதில்லை. நமது பணத்தை எடுத்து, இன்னொருவருக்கு கடனாக கொடுக்கின்றன. அந்தக் கடனாளி, வங்கி நிர்ணயிக்கும் வட்டியை கட்டி வருகிறார். கடனாளியிடம் வங்கி அறவிடும் வட்டியானது, நமது சேமிப்பு பணத்திற்கு வங்கி கொடுக்கும் வட்டியை விட அதிகமாகும். நமது சேமிப்புக்கு கொடுக்கும் வட்டியை விட, பல மடங்கு வருமானம் வங்கிக்கு கிடைக்கிறது. தற்போது கடனாளியான கிரேக்கம் கையை விரித்து விட்டதால், சைப்ரஸ் வங்கிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், மறுபக்கத்தில் சேமிப்பாளர்களுக்கு மாதாமாதம் வட்டி கட்டியாக வேண்டிய நிலைமை. அதாவது வங்கியின் கணக்குப் புத்தகத்தில், ஒரு பக்கம் "மைனஸ்", இன்னொரு பக்கமும் "மைனஸ்" என்று இழப்பு ஏற்படுகின்றது. அதுவே சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. 

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி பற்றிய அறிவிப்பு வெளியானவுடனே,  சைப்ரஸ் நாட்டு வங்கிகள், குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. அதன் அர்த்தம், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, வங்கி அட்டையை பயன்படுத்தி கடையில் எதையும் வாங்க முடியாது. நாணயத் தாள்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இன்டர்நெட் மூலமான பணப்பரிமாற்றமும் தடுக்கப் பட்டது. "வளர்ச்சி அடைந்த" மேற்கத்திய நாடுகளில், பெரும்பாலான மக்கள் எந்நேரமும் பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதில்லை. எல்லா இடங்களிலும், ATM மெஷின்களும், வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியும் இருப்பதால், பணம் வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

"பணத்தையே கண்ணால் காணாத அளவுக்கு நாகரிக வளர்ச்சி கண்ட சமூகத்தில்", ஒரு வாரத்திற்கு வங்கிகள் எதுவும் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்து விட்டால், அன்றாட உணவிற்கே பணமின்றி கஷ்டப் பட வேண்டியிருக்கும். அந்த திகில் காட்சிகளை சைப்ரஸ் மக்கள் நேரடியாக அனுபவித்தார்கள். நல்ல வேளையாக, தினசரி குறிப்பிட்டளவு பணம் மட்டும் எடுக்கலாம் என்று மட்டுப் படுத்தப் பட்டது. அதுவும் இல்லையென்றால்? "நான் இத்தனை காலமும் முதலாளித்துவத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தை குறை சொல்பவர்களை எதிர்த்து திட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நானும் அவர்களைப் போல குறை கூறத் தொடங்கி விட்டேன்..." என்று பல சைப்ரஸ் பிரஜைகள் தமது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்க்கின்றனர்.  

வங்கிகள் திறக்கப் பட்டால், பொதுமக்கள் வங்கியில் போட்டிருக்கும் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நிலவியது. அது உண்மை தான். வங்கிகள் மீது நம்பிக்கையிழந்த பொதுமக்கள், தமது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் வழித்து துடைத்து எடுத்துக் கொண்டு, தப்பினோம், பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடிப்போகத் தான் நினைப்பார்கள். பொது மக்கள் தமது பணத்தை மீளப்பெற்றுக் கொண்டால், தவிர்க்கவியலாது வங்கிகள் திவாலாகும். பொது மக்களின் சேமிப்புத் தொகையில் பத்து வீதத்தை கழித்து, வெளிநாட்டு கடன்களை அடைக்கும் திட்டத்திற்கு, சைப்ரஸ் மக்கள் எதிர்த்து வந்தார்கள். இவ்வளவு காலமும் சொகுசாக வாழ்ந்த மக்கள், தாமாகவே வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  மக்களின் எதிர்ப்பலையை கண்டு அஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. IMF, ஐரோப்பிய வங்கிகளின் திட்டத்தினை, ஒரு ஐரோப்பிய நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக எதிர்த்துள்ளமை இதுவே முதல் தடவை. 

துபாய் போன்று, சைப்ரசும் வீட்டுமனைகள் கட்டி விற்று வந்தது. அதுவும் சைப்ரசின் தேசியப் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. சைப்பிரசில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கியது. அதன் மூலம், சில வருடங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில், குறைந்தது முப்பதாயிரம் பணக்கார ரஷ்யர்கள் சைப்பிரசில் வீடுகளை வாங்கியுள்ளனர். சைப்ரசில் ஏராளமான ரஷ்ய பணக்காரர்கள் வசிப்பதால், ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் நிதியுதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், ரஷ்யாவோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு தட்டிக் கழித்து விட்டது.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், சைப்ரஸ் என்று அடுத்தடுத்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப் பட்டுள்ளன. அது போன்று, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற "பணக்கார" ஐரோப்பிய நாடுகளும், எதிர்காலத்தில் பாதிக்கப் படுமா?  இன்றைய நிலையில், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏன் அப்படி? ஏனென்றால், இவற்றை  "Triple - A நாடுகள்" என்று பொருளாதார நிபுணர்கள் வகைப் படுத்தி உள்ளனர். அதன் அர்த்தம், இந்த நாடுகள் எந்த நிபந்தனையுமின்றி கடனுதவி பெறலாம். அதாவது, முதலீட்டாளர்கள் இந்த நாட்டு பொருளாதாரம் பாதுகாப்பானது என்று இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நெருக்கடியினால் பாதிக்கப் பட்ட நாடுகள் மீது அந்த நம்பிக்கை கிடையாது. அதனால், அவை கடன் கேட்டாலும் பல கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகு தான் பெற்றுக் கொள்கின்றன. 

"மன்னிக்கவும், எல்லாமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகள் அல்லவா? இப்படி எல்லாம் பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா?" ஆம், முதலாளித்துவ பொருளாதார விதிகளின் படி அது நியாயமானது. இதனை புரிந்து கொள்ள கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலை படிக்க வேண்டும். உலகில் சில நாடுகளில் மட்டுமே, மூலதனம் குவிந்துள்ளது. சர்வதேச மூலதனம் எந்த நாடுகளில் உள்ளதோ, அந்த நாடுகள் மட்டுமே உலகில் பலமானவை. "அதிக பலசாலியே வெல்வான்" என்பது அனைத்து முதலாளித்துவ ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்ட தத்துவம் ஆகும். இதையே ஜோர்ஜ் ஆர்வெல், விலங்குப் பண்ணை என்ற நாவலில் அழகாக எழுதி இருந்தார். "அடிப்படையில் எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால், சில விலங்குகள்  பிற விலங்குகளை விட அதிகம் சமமானவை." ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் அனைத்து நாடுகளும் சமமானவை என்று கடதாசியில் எழுதி உள்ளது. ஆனால், நடைமுறையில் ஜெர்மனி போன்ற பெருமளவு மூலதனத்தை திரட்டியுள்ள நாடுகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன."

C.M உதயன்

unread,
Mar 27, 2013, 10:51:01 AM3/27/13
to panb...@googlegroups.com


நாம் டம்ளர் வரலாறு!

கட்சியின் தலைவர் சிறைக்கு சென்ற காரணத்தை கேட்டால் அதிர்ந்து சிரிப்பீர்கள்...
அண்ணாச்சியும் , அப்போதைய நடிகர் சங்கத்தலைவருமான நாட்டாமை தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது அப்போதைய முதல்வரை எழுத்தில் பதிய முடியாத வார்த்தைகளால் கேவலமாக சொல்லி கிண்டலாக பேசிக்கொண்டுள்ளனர். இதனை வழக்கம்போல ஒட்டு கேட்பு பதிவில் கேட்ட அப்போதைய முதல்வர், அவனை புடிச்சு உள்ளப்போடுங்கையா என்றார்...
இது மறைமுக வரலாறு...உள்ளே சென்றதே ஏதோ தமிழர் பிரச்னைக்காக சென்றதுபோல் திசைமாறி இயக்கம் வளர்வதை பார்த்த அதே முதல்வர் பின்னர் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது தனிக்கதை.
Like · · Share · 29 minutes ago ·

  • தண்டபாணி சன்னாசி நடராஜன் கொசுகடிகேல்லாம் வரலாறு...
  • Kishore Kswamy அய்யயோ அப்ப என்னுடைய கைபேசி உரையாடல்களையும் கருணாநிதி ஒட்டு கேட்டிருப்பாரா ? அப்படி இவரை அசிங்கமாக பேசியதற்கு சிறையில் தள்ள வேண்டும் ,என்றால் ராடியாவிடம் , எங்கப்பா ஒரு கிழம் ... அதுக்கு காதும் கேக்காது சுய புத்தியும் கிடையாது என்று சொன்ன கனிமொழியைத் தானே முதலில் சிறையில் தள்ளியிருக்க வேண்டும் ? நாட்டிற்கே எதிராக சதி செய்த வழக்கில் திகாரில் கதவில்லாத கழிவறையில் 100 நாள் விழா கொண்டாடிவிட்டு , எனது தந்தை சாகக் கிடக்கிறார் என்று பொய்'சொல்லி பிணை வாங்கி வந்தவருக்கு செண்டை மேளத்துடன் விழா எடுக்கலாம் என்றால் .... சீமான் கருணாநிதியை வசை பாடியது மிகப் பெரிய தமிழ் தொண்டு என்று பெருமை படுவதில் தவறே இல்லை ..... என்னைக் கேட்டால் கருணாநிதியை வசை பாடுவதும் ஒரு சிறந்த தமிழ் தொண்டு தான்
  • Anbalagan Veerappan இது காது கொடுத்து கேக்கவே கூசும் வார்த்தைகள்!
  • Anbalagan Veerappan சிரிக்க நிறைய விசயம் இருக்கு...நமக்கு சீரியசா நிறைய வேலை இருக்கு என்பதால் இதனையெல்லாம் இவ்வளவு நாள் கண்டுகொள்ளவில்லை...
  • Kishore Kswamy கருணாநிதி அதிகாலையில் சண் டிவி ,ஊழியர்களையும் முரசொலி ஊழியர்களையும் தொடர்பு கொண்டு பேசும் வார்த்தைகளை விடவா ?
  • Prem Ananth இதுக்கெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணுவாங்களா பாஸ்??
  • Anbalagan Veerappan கைது பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா, எப்படி வேணும்னாலும் பண்ணலாம் பாஸ்!
  • Kishore Kswamy agree with anbalagan sir
  • Prem Ananth எப்டி வேணா பண்ணலாம் ஆனா தேசிய பாதுகாப்பு சட்டம் ரொம்ப அதிகம்...
  • Kamal Kannan வரலாறு தொடருமா.... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
  • Anbalagan Veerappan நாம் டம்ளர் கட்சியில் இருக்கும் இளைஞர்களே, உணர்ச்சிவயப்படாமல் உண்மை நிலை அறியுங்கள்!
  • Anbalagan Veerappan இளைஞர்கள் மீது நமக்கும் அதிக கரிசனம் உண்டு!
  • சீர்காழியான் முகநூல் நீங்க லேட் அண்ணே..அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு எல்லாரையும் வழக்கமா பேசுவதை மாநில ஒருங்கினைப்பாளர்களை கேட்டால் அவங்களே சொல்லிட போறாங்க...
  • Anbalagan Veerappan கண்டனூர் சசிகுமார் க்காக பதிவிட்டது!
    சிரிப்பவர்களுக்காக தனியே ஒரு பதிவு போடும்படி ஆயிடுச்சு!

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Mar 27, 2013, 2:13:47 PM3/27/13
to panb...@googlegroups.com

ரமு ...

செல்வன் ஜி இதைப்பற்றி 'லிபரலிசம் ஒரு ஜோக்' நு 10வரிகளில் மிக சி&#0;றப்பாக எழுதி இருக்காரு...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 

Ramesh Murugan

unread,
Mar 27, 2013, 2:30:44 PM3/27/13
to panb...@googlegroups.com
படிச்சிருந்தேன்...
எடுத்தெதுக்கெல்லாம் ஐயரோப்பாவை கைகாட்டுறவங்க படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை :))

2013/3/27 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

ரமு ...

செல்வன் ஜி இதைப்பற்றி 'லிபரலிசம் ஒரு ஜோக்' நு 10வரிகளில் மிக சி&#0;றப்பாக எழுதி இருக்காரு...



//

sadayan sabu

unread,
Mar 28, 2013, 9:38:21 AM3/28/13
to panb...@googlegroups.com


தமிழர்களின் புற்றுநோய்
----------------------------------

கடந்த சில வாரங்களாக நடந்துவரும் தமிழ் மாணவர் போராட்டங்களும், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்புமுனைகளையும் கண்டு இந்தியாவின் பல்வேறு ஊடகங்கள் தமிழகத்தின் பக்கம் நோக்கித் திரும்பியுள்ளன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள், திமுகழகம் மத்திய அரசில் இருந்து விலகல், தொடர்வலிமையடைந்து கொண்டிருந்த மாணவர், மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் போன்ற நெறுக்குதல்களால் இந்தியா வேறு வழியின்றி ஐக்கிய சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது. ஆனாலும் இந்தத் தீர்மானத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நீர்த்துப் போகச் செய்து, தான் சிங்கள அரசுக்கு நன்றியுள்ள நண்பன் என்று காட்டிக்கொண்டது. இது இந்தியா தன் சொந்த மண்ணில் வாழும் தமிழர்களுக்குச் செய்த பச்சைத் துரோகம். இப்பச்சைத் துரோகத்தின் காரணமாக தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல்லாது கடல்கடந்து உலகம் முழுவதும் வாழும் இந்தியத் தமிழர்களனைவரும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பட்டை எடுத்திருப்பதற்கும் இந்த காங்கிரஸ் அரசு காரணமாக இருந்துவருகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கமே இத்தகைய சூழலில் தமிழகத்தில், மக்களின் ஒருமித்த நிலைப்பாடு என்ன? தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டிருந்தனரா? தமிழகத்தில் மக்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் நிலவியதா? தமிழர்கள் தங்களுடைய பிரச்சனைகளை ஊடகங்கள் வாயிலாக தமிழரல்லாத மற்ற இந்தியப் பொதுமக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா? போன்ற கேள்விகளுக்கு நான் தொடர்ந்து ஊடகங்களை கவனித்துவந்ததிலிருந்து என்னால் புரிந்துகொள்ளப்பட்டவற்றை பகிர்ந்துகொள்வதுதான்.

ஆங்கில ஊடகங்கள் தமிழர் பிரச்சனை என்று வந்தவுடனேயே பேச அழைக்கும் பேச்சாளர்கள் யாரென்று பார்த்தால் சுப்ரமணிய சாமி, பார்த்தசாரதி, என்.ராம், அதிலும் சிங்களர் பிரச்சனை என்றால் இந்துவில் பணியாற்றும் ஆர்.கெ. இராதாகிருஷ்ணன் மற்றும் சிலர். இந்தப் பேச்சாளர்கள் யார், இவர்களுடைய நிலைப்பாடு என்ன? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் இவர்கள் தமிழர்களின் பிரதிநிதியாக, தமிழர்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது, இவர்களின் கருத்துக்கள் தமிழக பொதுமக்களின் கருத்துக்களாக வடக்கு மாநிலங்களின் மக்கள் செய்திகளின் வாயிலாக ஒளிபரப்பப்படுகின்றன. இது எந்த அளவுக்கு தமிழர்களின் போராட்டங்களைத் தவறுதலாக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் சொல்கிறது போன்றவை மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய ஒன்று. பிற்காலத்தில் இதுபோன்ற தமிழர் தம் எதிரிகள், தங்களை தமிழர்களாகவும் அடையாளம் காட்டிக்கொண்டு தமிழர்களின் முதுகில் குத்தாதவாறு பார்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இது போன்ற தீவிர தமிழ் எதிர்ப்புக் குழு (Fringe group) தமிழகத்தின் மேல் மட்டத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது. இக்குழு, தான் இந்தியன் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையைப் புறந்தள்ளி இந்தியாவின் பழமையான வம்சாவழியினரை (Ethnicity) தன்னுடைய பிரித்தாலும் கொள்கையினால் அழித்து மேலான்மை செய்யமுனைந்து கொண்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதரவாக இவர்கள் நடத்திவரும் ஊடகங்களும், தனிப்பட்ட வேதாந்திகளும் கட்டுரைகள் எழுதியும், விமரிசனங்கள் எழுதியும், இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

தற்சமயம் செல்வி ஜெயலலிதா மட்டைப் பந்து போட்டிகளில் சிங்களர்கள் கலந்து சென்னையில் விளையாட அனுமதி மறுத்த பொழுது இவர்களனைவரும் தங்களுடைய முகமுடிகளைக் கிழித்து உண்மை முகங்களைக் காட்டிக்கொண்டனர். இவர்களின் உண்மை முகங்களை நீங்கள் அறிய வேணுமாயின், இந்து பத்திரிக்கையிலும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையிலும் இதுசம்பந்தமாக வந்த செய்திகளையும், அதில் எழுதியிருக்கும் விமரிசனங்களையும் படித்தாலே புறிந்து கொள்ள முடியும். இந்து ஒரு படி மேலே போய் எந்த எந்த செய்திகள் தமிழருக்கு எதிரான செய்திகளாக இருக்கின்றனவோ அவைகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. அதிலும் யார் யார் நான் தமிழன் ஆனால், இந்த தமிழர் எதிர்ப்பு இந்தியாவின் வெளிஉறவுக்கொள்கைக்கு உடன்பாடானது அல்ல என்று அறிவுஜீவித்தனம் காட்டுகிறார்களோ அவர்களுடைய விமரிசனங்களே மேலதிகமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழராதரவு விமரிசனங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களின் உயிரை விட, கிரிக்கெட் என்னும் மட்டைப் பந்து விளையாட்டு பெரிதாகப் போய்விட்டது இந்த் ஒட்டுண்ணிகளுக்கு. தமிழர் பிரச்சனை ஒரு பழமையான இனத்தின் மக்கள் பிரச்சனை, இவ்வினத்தை சாராதவர்கள் தாங்கள் தாங்களாகவே இந்த பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் அல்லது நாங்கள் தமிழர்கள் இல்லையென்று வெளிப்படையாக பிரச்சாரம் செய்துகொள்ள வேண்டும். இவ்விரண்டையும் செய்யாமல் உள்ளுக்குள்ளேயே கலந்து ஒரு புற்றுநோய் கிருமியாக பரவியிருக்கும் இந்நோய் தமிழர்களை அழிக்காமல் போகாது என்பது திண்ணம்.

இத்தகைய fringe groupன் பிடியில் இருந்து தமிழர்களை மீட்பது எவ்வாறு என்று என்னிடம் கேட்டால், முதலில் இத்தகைய ஒட்டுண்ணிகளை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும், பின்பு புறக்கனிக்கவேண்டும். அவ்வளவே.

- மாணிக்கம் பரமேஸ்வரன்


ஓய் ஆசிப்


இதை எழுதியது யாரெனத் தெரிகிறதா ? நம் அமீரக தமிழிணைய நண்பர்களின் மூத்த உறுப்பினர் பரமு


Asif Meeran AJ

unread,
Mar 28, 2013, 9:46:58 AM3/28/13
to panb...@googlegroups.com
மாம் சாத்தா
வே எழுதியிருக்ரு நம்மாளு
அந்நாள் ஞாகம் நெஞ்சிலே வந்தே சாபத்தா சாபத்தா சாத்தா! :-)

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 11:31:37 AM3/28/13
to panb...@googlegroups.com
மொழிய அடிப்படையா வச்சி தனி தமிழ்நாடு வேணும் நு சில பேரு சொல்றாங்களே அதுலயும் மனஸ்தாபம் வந்தா ஜாதிய அடிப்படையா வச்சி தனி நாடு கேட்பாங்களோ????#டவுட்டு.
 

ஸ் பெ

unread,
Mar 28, 2013, 11:41:28 AM3/28/13
to panb...@googlegroups.com
ராஜ பூபாலன் கிட்ட பாகிஸ்தானையும் இந்தியா கூட இணைக்க யோசனை சொல்லுங்க... இன்னும் பெரிய தேசமா இருக்கும்...

2013/3/28 C.M உதயன் <udhay...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

தியாகு

unread,
Mar 29, 2013, 2:49:12 AM3/29/13
to பண்புடன்
//
மொழிய அடிப்படையா வச்சி தனி தமிழ்நாடு வேணும் நு சில பேரு சொல்றாங்களே அதுலயும் மனஸ்தாபம் வந்தா ஜாதிய அடிப்படையா வச்சி தனி நாடு கேட்பாங்களோ????#டவுட்டு//


ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையும் ஜாதியும் ஒன்றல்ல



2013/3/28 ஸ் பெ <stalinf...@gmail.com>



--

C.M உதயன்

unread,
Mar 29, 2013, 8:20:20 AM3/29/13
to பண்புடன்

தமிழகத்தில் தனித்து போட்டியிடவே காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

# டேய் நாதஸ்..ஒரு காங்கிரஸ் தலைவனையும், தொண்டனையும் கூட்டிட்டு வர சொன்னனே..கூட்டியாந்தியா ?

(ஈவிகேஎஸ்ஸை காட்டி)..இதோ..இவருதான்னே..

சரி..தலைவர் இங்கிருக்காரு ..தொண்டன் எங்கடா?

அவருதான்னே இவரு..

அடேய்..

Ramesh Murugan

unread,
Apr 1, 2013, 8:00:53 AM4/1/13
to பண்புடன்

'என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும்...' - மணிவண்ணன்

by சே. குமார்
அமைதிப் படையின் இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ அரசியல் படம்தான். ஆனால் யாராயும் குறிவைத்துத் தாக்கும் படமல்ல. இன்றைய அரசியல் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் படம். இப்படிப் படம் எடுத்ததால் தாக்குதல் நடத்துவார்களோ என நான் பயப்படவில்லை. என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேச முடியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிப்பட இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். 1994-ல் அவர் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார்.

இயக்குநராக இது அவருக்கு 50 வது படம். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் மணிவண்ணனின் பேச்சு. இதுவரை இப்படியொரு பேச்சைக் கேட்டதில்லை எனும் அளவுக்கு அரசியல் நையாண்டியும்உணர்ச்சிமயமானதாகவும் அமைந்தது அவரது பேச்சு. 

மணிவண்ணன் பேசியதாவது: "நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்... இளையராஜாவால் இயக்குநர் ஆனேன்... அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். 


ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன். ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன். 

அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான். ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல, ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும். 

அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குதான் நன்றாகத் தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு! நாங்கள் இருவருமே கணவன் - மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான் கட் சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, 'தலைவரே.. கட் சொல்லுங்க' என்பார். 

யாருக்கும் பயப்படவில்லை அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை. அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன். 

ஆனால்... மவனே... என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும். 50 நாளில் நேர்த்தியாக படமெடுக்கலாம்... சரியாக திட்டமிட்டுப் படமெடுத்தால் ஒரு நல்ல, பெரிய படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடிக்கலாம். 


நான் இளைஞன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். பெரிய பெரிய செட் போட்டிருந்தார்கள். பின்னி மில் முழுக்க செட்கள்தான். நானும் அந்தப் படப்பிடிப்புக்கு போவேன். நாள் பூரா சும்மாதான் உட்கார்ந்திருப்பேன். எப்போதாவது கூப்பிடுவார்கள். சார், டிபன் சாப்பிடுங்க என்பார்கள். இப்படித்தான் அந்தப் படப்பிடிப்பு போனது. படம் வெளியான பிறகு, அந்தப் படம் முழுக்க தேடிப் பார்த்தேன். அந்த செட்களில் ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை! 

இன்றைக்கு ஊடகங்கள் பெருகிவிட்டன. பல முகங்கள் எனக்குத் தெரியவே இல்லை. தினமும் பேப்பர்ல பேரு வரலேன்னா அரியல்வாதிகளுக்கு அடுத்த வேளை சோறு இறங்காது. அதிலும் அந்தக் கட்சிக்கு பெரிசாவும், இந்தக் கட்சிக்கு சின்னதாவும் செய்தி வந்தா அன்னிக்கு தூக்கமே போயிரும் அவங்களுக்கு. நாம அப்படியெல்லாம் கேக்கல. ஆனாலும் எதாவது எழுதுங்கப்பா... என்னைப் பத்தியும் ஏதாவது பிட்டு போடுங்க அப்பப்ப... என்ன.. என்னைப் பத்தி எதுவும் கிசுகிசு எழுதினா யாரும் நம்ப மாட்டாங்க...! -இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

கருணாநிதியைக் கலாய்த்த மணிவண்ணன்:

இளைஞன் என்றொரு படம், அன்றைய முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது, ஒருமுறை கருணாநிதி தளத்துக்கு வந்திருக்கிறார். அப்போது தனக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடலை நேற்று இப்படி வர்ணிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.

கலைஞர்: என்னய்யா மணிவண்ணன்.. என்ன ஓரமா நிக்கிற.. வாய்யா...

மணிவண்ணன்: இருக்கட்டும் தலைவரே... நான் இப்படியே நிக்கிறேன்..

கலைஞர்: (இயக்குநரைப் பார்த்து) நம்மாளுய்யா மணிவண்ணன்... ஆமா, ஏன் நொண்டி நொண்டி நடக்கிறே, என்னாச்சி.. 

மணிவண்ணன்: அது வந்து தலைவரே.. முதுகு தண்டுவடத்துல ஒரு எலும்பு உடைஞ்சு போச்சுங்க... அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். அதான்... 

கலைஞர்: ஆக, உனக்கும் எனக்கும் ஒரே வியாதிதான்... 

மணிவண்ணன்: வியாதி ஒண்ணுதானுங்க... ஆனா உங்ககிட்ட இருக்கிற பாஸ்புக் அளவுக்குகூட என்கிட்டே பணம் இல்லைங்ண்ணா! 

கலைஞர்: யோவ்... இவ்ளோ வயசாகியும் உன் குசும்பு போகல பாத்தியா!! - 

படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம்: 

கேரக்டர் 1: நான் மகளிர் அணித் தலைவராகிடப் போறேன். 

கேரக்டர் 2: யோவ் நீ எப்படிய்யா மகளிர் அணித் தலைவராக முடியும்... 

கேரக்டர் 1: ஆமா... வயசானவங்கள்லாம் இளைஞர் அணித் தலைவரா இருக்கும்போது, நான் மகளிர் அணி தலைவராக முடியாதா! -இது ஒரு சாம்பிள்தான்!

நன்றி : தட்ஸ்தமிழ் இணைய இதழ்


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

ஸ் பெ

unread,
Apr 1, 2013, 8:19:17 AM4/1/13
to panbudan


2013/4/1 Ramesh Murugan <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Ramesh Murugan

unread,
Apr 1, 2013, 1:00:44 PM4/1/13
to பண்புடன்

துரை.ந.உ

unread,
Apr 1, 2013, 11:04:17 PM4/1/13
to பண்புடன்


2013/4/1 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

It is loading more messages.
0 new messages