பாகம்-17அரசின் பகுதியிலும் ஒரு சுங்கம் மற்றும் சோதனைச் சாவடி. அங்கே நீண்ட
வரிசையில் மக்கள். கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல், உடையிலும்
தோற்றத்திலும் யுத்தம் அவர்கள் மீது திணித்து விட்ட ஏழ்மை பளிச்சென்று
தெரிந்தது. சிரிப்பையே மறந்து விட்ட வாடி வதங்கிய முகங்கள்.நானும்
அவர்களோடு வரிசையில் சென்று நின்றேன். தூரத்தில் ‘சன்’ தொலைக்
காட்சியினர் கொழும்பை நோக்கியும், இப்போதைய சட்ட அமைச்சர் ரவூஃப்
ஹக்கீம் தன் சகாக்களுடன் வன்னி நோக்கியும் போவதைக் கண்டேன்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி என்னருகில் வந்து
”(Where is your Paper) உங்கள் சீட்டு எங்கே..? என்று கேட்டார். நான் என்னிடம்
சீட்டு எதுவும் இல்லை பாஸ்போர்ட் தான் இருக்கிறதென்றேன். வாங்கிப்
பார்த்துவிட்டு, Oh.. from India ! You came for the conference right? என்று வினவிய
போது “ ஆமாம் பத்திரிகையாளர் சந்திப்புக்குத்தான் வந்தேன்." என்றேன்.
“எல்லோரும் நேற்றே போய் விட்டார்களே !” ஆமாம், ஆனால் பிரபாகரனைச்
சந்தித்தேன். அதனால் சுணங்கி விட்டது” என்றேன். "Oh.. you did. Fine very fine "
என்றார். நேற்று இராப்போசனம் அவருடன் தான்” என்றேன். அவருக்கு நம்ப
முடியாத ஆச்சரியம். என்னைப் பற்றிக் கேட்டார். சொன்னேன். படித்தது
இலங்கையில் என்றேன். என் பால்ய நண்பரும் பள்ளித் தோழரும் அஸ்வர் MP
என்றேன். ஆரம்பத்திலிருந்த விறைப்பு இப்போது இல்லை.
“பிரபாகரன் எப்படி இருக்கிறார்..?. “நன்றாக இருக்கிறார்.” ஓ.. நாங்கள் இலங்கையர்
அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் (Irony of Fate) நாங்கள் எதிர்
எதிர் முகாம்களில் இருக்கிறோம். “ It is really very unfortunate (துரதிர்ஷ்ட வசமானது)
என்றபோது. “ஆம். அப்படித்தான் (Yes . It is ) என்றேன் நான்.
You know one thing after Israel's Moshe Dayan, Praba is the best Military Strategist. I should feel
very proud about him ( உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்குப்
பிறகு ராணுவத் திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப் பற்றி நான் பெருமைப்பட
வேண்டும்) என்றார். ஒன்றைக் கவனித்தேன். ‘பெருமைப் படுகிறேன்’ என்று சொல்ல-
வில்லை. ‘பெருமைப்பட வேண்டும்’ என்று தான் சொன்னார்.
சட்டென்று , “ Can I quote you..? ' (இதை உங்கள் கருத்தாகக் குறிப்பிடலாமா.?” என்று
கேட்டேன். சிலிர்த்து விட்டார். 'This is the trouble with you media felloows. Look here you
never met me and I never spoke to you. Let us keep things at that level...okay..? ( இதுதானப்பா
இந்த பத்திரிகைக் காரன்களோடுள்ள சங்கடம். இங்கே பாரும் நீர் என்னைக் காணவும்
இல்லை. நான் உம்மோடு பேசவும் இல்லை..சரியா..?” என்று விட்டு, “வரிசையில்
நிற்க வேண்டாம். நேராகப் போகலாம்" என்று சாவடிக்குள் அழைத்துக் சென்று அங்கு
நின்றிருந்த ஓர் அதிகாரியிடம், “ மே மஹாத்தியாகே பேக் எக்க செக் கராகண்ட” என்றார்.
அவர் பையை பிசுக்கிப் பார்த்துவிட்டு ‘சாக் பீசால்’ ஒரு கிறுக்குக் கிறுக்கினார். சோதனை
முடிந்தது.
வெளியில் வந்த போது கொழும்பு செல்லும் பேருந்தே நின்றிருந்தது. பயணச் சீட்டு இன்னும்
வழங்கத் துவங்கவில்லை. நேராக நடத்துநரிடம் சென்று, “ மே மஹாத்தியாட்ட ஹொந்த
ப்ளேஸ் எக்க தெண்ட” (இந்த தொரைக்கு நல்லதோர் இடம் கொடுங்கள்) என்றூர். “ஓண
ப்ளேசெக்கேய்ன் வாடிவெண்ட கியாண்ட (இஷ்டமுள்ள இடத்தில் உட்காரச் சொல்லுங்கள்)”
என்றார்.நடத்துனர். பிறகு என்னைப்பார்த்து, “ தேவத்ரு எக்க பொமுத..? (தே-நீர் ஒன்று
குடிப்போமா) என்று கேட்டார். “ நே..மஹாத்தியா...யப்பா...மகே ஹித்தட்ட பொஹோம
சந்தோஷவுனா.. மங் கிஹில்ல யன்னாங் ( இல்லை.. தொரை... வேண்டாம்.. என மனதுக்கு
மெத்த மகிழ்ச்சி.. நான் போய் வருகிறேன்)” என்றேன். “ எஹேன்னாங்... எஹேமத்-தமாய்
ஆயுபோவன்... Take Care ( அப்படியென்றால் அப்படி...வணக்கம். உங்கள கவனிச்சுக்கோங்கோ)
என்று கை குலுக்கி விடை பெற்றார். அழுத்தமான அந்தப் பிடியில் நட்பார்ந்த அன்பு தெரிந்தது.
( வந்து விட்டோம்....ஊர் இன்னும் சற்று எட்டும் தொலைவில் தான்...)