யானையை தடவி பார்த்த கண் தெரியாதவர்கள் சொன்ன கதை போல தான் சென்னை எனக்கு அறிமுகம் ஆனது. சென்னை போய் வந்தவர்கள் சொன்ன கதையை விட கதை கேட்டு கதை சொன்னவர்களின் கதை மிக சுவராஸ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் கேட்டு இப்படித் தான் என்று சென்னை வந்து திரும்பி பார்த்தால் 11 வருடம் கடந்து விட்டது.
எந்த பிழைப்புமின்றி தஞ்சம் புகுந்தோர்க்கும், சாதி மதம் மொழி பேதமில்லாமல் சகல தரப்பு மக்களுக்கும், வாழ்வு தந்து காலத்துக்கேற்ற வசதிகளை செய்து கொடுத்து, அடையாளம் இல்லாதவனையும் அடையாளப்படுத்த தெரிந்த சென்னைக்கு
அடையாளத்தையே அடையாளமாக தர ஆசை.
சென்னையின் ஒவ்வோரு அடையாளத்தையும் ஒரு எழுத்தாக வடிவமைத்து இருக்கிறேன்
C - கடல் அலை
H - சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடம்
E - LIC கட்டிடம்
N N - நேப்பியர் பாலம்
A - கோவில்
I - கலங்கரை விளக்கம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com