நாய்வளர்த்தக் காரணத்தை... நாயே அறியுமுன்னே!!..

68 views
Skip to first unread message

Jeeva

unread,
Feb 26, 2013, 6:56:28 AM2/26/13
to பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
ஒரு ஏழெட்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்ப கோழி வளக்கலாம்னு ஆசை வந்தது. இந்தக் கூடைல கலர்க் கோழிக்குஞ்சுகளா கொண்டுவருவாங்களே, அதுல ஒரு நாலஞ்சு வாங்கி அது கிச்சுசுசுசு கத்திக்கிட்டே இங்கயும் அங்கயும் ஓடி போடுற தானியங்களைத் தின்னு வளர்ந்திட்டிருந்த ஒரு நல்ல நாளின் பேயிரவில்  பூனை ஒன்று இரண்டு கோழிக் குஞ்சுகளை கூடையிலேயே தின்றுவிட்டு ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட, சத்தம் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் எல்லாம் முடிஞ்சுப் போச். ஒரே கோழிக் குஞ்சு மிச்சம் இருந்தது. அதுவும் ரெண்டே நாள்ல பயத்துலயே  எதுவும் திங்காம செத்துப் போச்சு. 

பூனை வளக்கலாம்னா எனக்கு பூனை மேல அவ்ளோ கோவம். பக்கத்து அக்கத்து வீடுகள்ல இருந்து ஓடி வந்து கால்ல உரசி கண்ணாபின்னான்னு அசிங்கம் பண்ணிட்டுப் போகும். ஒரு முறை வீட்டுல குட்டிப் போட்ட பூனைகள் பாக்க அழகா இருந்துச்சேன்னு கொஞ்ச நாள் வச்சிருந்து பின்னாடி  அத ஒரு பைக்குள்ள வச்சு கொண்டு போய் தூரத்துல விட்டுட்டு வீட்டுக்கு வந்து பாத்தா எனக்கு முன்னாடி வந்து விளையாடிட்டு இருக்குது.  ஒரு நாளஞ்சு முறை இது மாதிரி செஞ்சுட்டு விட்டுட்டோம்.

அப்புறம் தான் நாய் வளர்க்கலாம்னு ஒரு யோசனை வந்தது. ஏன்னா எங்க பக்கத்து வீட்டு பெரியப்பா வீட்டுல ஜானின்னு கூப்ட உடனே ஒரு நாய் ஓடி வந்து நிக்கும். சாப்டு மிச்சமானத எல்லாம் அதுக்குப் போடுவாங்க. பொறை வாங்கியாந்து போடுவாங்க. சமயத்துல அந்தப் பொறைய நமக்குத் தரமாட்டாங்களான்னு பசிச்ச வயிறு கதறியக் காலங்களும் உண்டு.  அது வேற கதை.

எத்தனை முறை நாய் வளர்த்தாலும்,  நாய்களுக்கும் வைக்கப் படும் பெயர்களில் மாற்றம் இருக்காது.  ஜானி தான் பெரும்பாலும் நாய்களுக்கான பெயராய் இருந்தது. போனாப் போகுதுன்னு டைகர்னு எப்பவாச்சும் பேரு வைப்போம்.  இப்படியாக ஒரு அழகான குட்டி நாயைத் தேர்ந்தெடுத்து குலவழக்கப் படி அதற்கு ஜானி என்று நாமகரணம் சூட்டி கழுத்தில் பட்டைக் கட்டி எங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டாகிவிட்டது.

ஜானி இல்லாத சேட்டைகளைச் செய்யும்.  சைக்கிளில் வேகமாய் போனால் பின்னாடியே ஓடிவரும்.  இந்த நாய் வளர்த்ததில் நாய்கள் மேல் பயம் குறைந்து போயிருந்தது.  அன்று ஊர்த் திருவிழா, ஊரில் கர்ணமோட்சம் நாடகம் போட்டார்கள். அப்போது நகர்வலம் வருவதற்காக   அண்ணன் & கோ உடன் நானும் ஜானியும் இணைந்து  சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒரு நாய் எங்களை பிள்ளையார் கோவில் முன் வழி மறித்தது. கிர்ர் கிர்ர் என்று சப்தித்த படி. குரைக்கவில்லை.  ஜானி மட்டும் வள் வள் என்று எங்களுக்குப் பின்னால் நின்று குரைத்துக் கொண்டிருந்தது.

" டேய் இது பொல்லாத நாய்டா.. யாரும் ஓடாதீங்க. ஓடுனா தொரத்தி வந்து கடிக்கும் "

பெரியவர்  ஒருவர் கத்தினார்.  நமக்குத்தான் நாய் பயமெல்லாம் போய்விட்டதே,  எல்லாரும் நிற்கும் போது நான் மட்டும் தைரியமா முன்னாடி ஓட நாய் துரத்தி வந்து கணுக்காலில் வாய் வைத்துவிட்டது. லேசான காயம். 

" நாஞ்சொன்னேன்ல " அந்த பெரியவர் பெருமையாய் சொன்னார்.  அதற்கப்புறம் அந்த இரவே  என்னை அழைத்துப் போய் நாட்டு மருந்து  கொடுத்தார்கள்.

" இந்த பச்சில  மருந்து சாப்டதும் நல்லா தூங்கிட்டான்னா பிரச்சினை இல்லைம்மா. ஆனா தூக்கம் வராம முழிச்சிருந்தான் ... கடிச்சது வெறிநாய்னு கன்ஃபர்மா சொல்லிடுவேன். அப்படியும் காப்பாத்திடலாம். கவலப் படாதீங்க "

வைத்தியர் கிலியை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார்.  யாம் அது பற்றி எந்தக் கவலையும் இன்றி கொடுத்ததைத் தின்று விட்டு நன்றாக தூங்கிவிட்டிருந்தேன். கிட்ட தட்ட பத்து மணிநேரம்.  அப்புறம் ஒரு வாரத்துக்கு பத்திய சாப்பாடு சாப்பிட்டு உயிரை வெறுத்துவிட்டிருந்தேன். அப்போது தான் நாய்கள் மீது கோபம் எழுந்தது.

அப்புறம் ஒரு அசுபவேளையில் ஜானியும் பஸ்ஸில் மாட்டிக் கொண்டு இறந்துப் போய்விட, எல்லாரும் கண்ணீர்விட்டு அழுது அதைப் புதைத்து முடித்த பின் நாய்கள் வளர்ப்பது என்றாலே எனக்கு பிடிக்காமல் போய்விட்டது. பெங்களூர் வந்த பிறகு ரொம்ப நாள் கழித்து நாய் வாங்கினார்கள்.  குடும்ப வழக்கத்தை விட முடியாமல் அந்த நாய்க்கும் ஜானி என்றே பெயர் இடப்பட்டது.  பெரிய எலிக் குட்டிப் போல   அந்த நாய் வீட்டுக்கு வந்து எல்லாரிடமும் குழைந்து குழைந்து இருந்தாலும் நான் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன் அந்த நாயிடமும். அதன் ஆயுட்காலம் முடியும் நேரத்தில்  காப்பகத்தில் கொண்டு சேர்த்துவிட்டோம். விடைபெறும் போது அதன் கண்ணில் அத்தனை சோகம்.

ஒரு நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்த போதும் இப்படித்தான் நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. குரைக்கிற நாய் கடிக்காது என்கிற  பழமொழியைச் சொல்லி உள்ளே வாடா என்றான் நண்பன். அந்தப் பழமொழியை முதலில் நாய்க்குச் சொல்லிக் குடு. அதுவரைக்கும் நாயைக் கட்டிப் போடு என்று சொல்லி நாயைக் கட்டிய பிறகு தான் உள்ளே சென்றேன் என்றால் பாருங்கள் எத்தனைப் பெரிய மாவீரன் நான் என்று.

இப்போதும் நாய்கள் என்றால் எனக்கு பயம் குறையவில்லை. தெருவில்  பைக் ஓட்டிக் கொண்டு போகும் போது  பின்னாடி ஏதும் நாய் துரத்திக் கொண்டு வந்தால் தொண்டை வரண்டு இரண்டு காலால் பைக்கை  இறுக்கிக் கொண்டு வேகமாய் நகர்ந்து விடுவேன். நடந்து செல்லும் போது எதிரே நாய் வந்தால்  கிலி வந்துவிடும். எங்கே நம்மீது விழுந்து பிராண்டிவிடுமோ என்று. கையில் ஏதும் இல்லை என்றால் தெருவோரத்தில் இருக்கும் கற்கள் நாலைந்து எடுத்து வைத்துக் கொள்வேன். பாதுகாப்பான இடம் போகும் வரைக்கும் அந்தக் கற்கள் கையிலேயே இருக்கும்.  

வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு  என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.




Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

துரை.ந.உ

unread,
Feb 26, 2013, 7:03:50 AM2/26/13
to thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்


2013/2/26 Jeeva <jee...@gmail.com>

  அத ஒரு பைக்குள்ள வச்சு கொண்டு போய் தூரத்துல விட்டுட்டு வீட்டுக்கு வந்து பாத்தா எனக்கு முன்னாடி வந்து விளையாடிட்டு இருக்குது.  

ஹா ஹா ஹா ...
 
" நாஞ்சொன்னேன்ல " அந்த பெரியவர் பெருமையாய் சொன்னார்.  .

ஹா ஹா ஹா 
 
குரைக்கிற நாய் கடிக்காது என்கிற  பழமொழியைச் சொல்லி உள்ளே வாடா என்றான் நண்பன். அந்தப் பழமொழியை முதலில் நாய்க்குச் சொல்லிக் குடு. அதுவரைக்கும் நாயைக் கட்டிப் போடு என்று சொல்லி

 ஹா ஹா ஹா 

தெருவில்  பைக் ஓட்டிக் கொண்டு போகும் போது  பின்னாடி ஏதும் நாய் துரத்திக் கொண்டு வந்தால் தொண்டை வரண்டு இரண்டு காலால் பைக்கை  இறுக்கிக் கொண்டு வேகமாய் நகர்ந்து விடுவேன்.

 ஹா ஹா ஹா ...
 நான் கார்லயே இப்பிடித்தான் செய்வேன் :))
 
வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு  என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.

இதுக்குப் பேருதான் லொள் லொள் லொள்ளு :))
 




Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

அச்சு !!!

unread,
Feb 26, 2013, 7:44:53 AM2/26/13
to பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
 
ஹிட்டனா எழுதறதுல நீங்க கில்லாடினே.

#கொளுத்திப்போடு.



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு

Jeeva

unread,
Feb 26, 2013, 7:47:57 AM2/26/13
to தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்

 
வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு  என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.

இதுக்குப் பேருதான் லொள் லொள் லொள்ளு :))

தலைவரே.. இதுவரைக்கும் ஊருக்குப் போனா ஆட்டுக் குட்டியப் புடிச்சுக் கொஞ்சுறது, கோழிகளைப் புடிச்சுக் கொஞ்சுறதுன்னு அம்மினி கலாட்டா பண்ணிட்டிருக்காங்க. கொஞ்ச காலமா குட்டி நாயா இருந்தா விளையாடலாம் இல்லையாப்பான்னு கேக்க ஆரம்பிச்சாச்சு. அதான் கவலையா இருக்கு :))

துரை.ந.உ

unread,
Feb 26, 2013, 7:54:33 AM2/26/13
to thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்


2013/2/26 Jeeva <jee...@gmail.com>


 
தலைவரே.. இதுவரைக்கும் ஊருக்குப் போனா ஆட்டுக் குட்டியப் புடிச்சுக் கொஞ்சுறது, கோழிகளைப் புடிச்சுக் கொஞ்சுறதுன்னு அம்மினி கலாட்டா பண்ணிட்டிருக்காங்க. கொஞ்ச காலமா குட்டி நாயா இருந்தா விளையாடலாம் இல்லையாப்பான்னு கேக்க ஆரம்பிச்சாச்சு. அதான் கவலையா இருக்கு :))

பாப்பா கேக்குதுன்னா ’லாப்’புதான் பெஸ்ட் .... (வளர்ந்த பிறகு பார்க்க (மட்டும்தான் ) டெர்ர்ரரா இருக்கு :)
விலையும் கைக்கு அடக்கமா இருக்கும் 

’பக்’கெல்லாம் கைக்கு அடக்கமா இருக்கும் ..ஆனா ரொம்ப விலை ....

ட்ரை பண்ணுங்க .... :)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Jeeva

unread,
Feb 26, 2013, 7:57:20 AM2/26/13
to தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்
ஹ்ம்க்கும். தினம் தினம்  வள் வள்நு எனக்கு திட்டு விழும்.  சரியா பராமரிக்கலைன்னா.  #அவளே புட்டானி நாய்மரி.. அவளுக்கேனுகே இன்னொந்து நாய்மரி ?


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/2/26 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 26, 2013, 8:16:18 AM2/26/13
to thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்
எனக்கொரு  நண்பர் இருந்தார் , அவர்  நாய் வளர்ப்பதில் மிகவும் பிரியம் கொண்டவர்

 

அவர் வீட்டிலே இல்லாத  நாய்களே  (ஜாதி)  இல்லை
 
ஒரு நாள் என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார்
 
அவர் வீட்டுக்கு சென்றேன்
 
உள்ளே கிட்டத்தட்ட  நாற்பது நாய்கள்
 
அனைத்தையும் பார்த்தேன் பயந்து கொண்டே
 
அவர்  கடிக்காது பயப்படாதே என்றார்
 
அது உனக்கு தெரியும் நாய்க்கு தெரியுமா  என்றேன்
 
கடைசியில் ஒரு வழியாக அனைத்து நாய்களைப் பற்றியும் விளக்கிவிட்டு
 
இப்போ நீ என்ன நெனைக்கிறே என்றார்
 
அப்போது நினைத்ததை அப்படியே   சொன்னேன்

 

இங்க வந்து பார்த்தப்புறம் குழப்பம்   என்றேன் என்ன குழப்பம் என்றார்

 

நீ  எது ?  நாய் எதுன்னே   தெரியலே என்றேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/2/26 Jeeva <jee...@gmail.com>

துரை.ந.உ

unread,
Feb 26, 2013, 8:38:29 AM2/26/13
to thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள்


2013/2/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
எனக்கொரு  நண்பர் இருந்தார் , அவர்  நாய் வளர்ப்பதில் மிகவும் பிரியம் கொண்டவர்

 

நீ  எது ?  நாய் எதுன்னே   தெரியலே என்றேன்

Inline image 1 :))
 

 
reverse.gif

Asif Meeran AJ

unread,
Feb 26, 2013, 8:41:15 AM2/26/13
to panb...@googlegroups.com
இழையில் அசம் போட்டு இழையை நீர்த்ுப் போகச் செய்யும் நீசேலையிரும்பும் ொடங்கி விட்டீர்குரை அவக்ளே?!!

(கோச்சுக்கிட்டு போயிடங்கய்யா. சும்மத்ான் சொன்னேன். அந்த இழிர்த்ு எல்லா இழைலும் போடங்கப்பூ. நான் இருக்கம்லா உங்கூட. (அானே பா இருக்கு எனக்குன்னு உங்கைண்ட் வாய்ஸ் சொல்லா? :-)


PRASATH

unread,
Feb 26, 2013, 9:39:54 AM2/26/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
என் பொண்ணு நாய்க்குட்டி தான கேட்குறா...
 
அதுக்கு ஏன் இப்படி கரைச்சலைக் கொடுக்கறீரு... வாங்கித் தராம...
 
அடுத்த முறை நான் வீட்டுக்கு வரும் போது நாய் இருக்கணும்(எங்கேயாச்சும் ஒரு மூலைல கட்டிப் போட்ட படி...)... நான் வீட்டை விட்டு கிளம்பியதும் அவுத்து விட்டுக்குங்க...

2013/2/26 Jeeva <jee...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
Feb 26, 2013, 11:00:57 AM2/26/13
to panb...@googlegroups.com


2013/2/26 Asif Meeran AJ <asifm...@gmail.com>

இழையில் அசம் போட்டு இழையை நீர்த்ுப் போகச் செய்யும் நீசேலையிரும்பும் ொடங்கி விட்டீர்குரை அவக்ளே?!!

(கோச்சுக்கிட்டு போயிடங்கய்யா. சும்மத்ான் சொன்னேன். அந்த இழிர்த்ு எல்லா இழைலும் போடங்கப்பூ. நான் இருக்கம்லா உங்கூட. (அானே பா இருக்கு எனக்குன்னு உங்கைண்ட் வாய்ஸ் சொல்லா? :-)


 

 
:) 

Swathi Swamy

unread,
Feb 26, 2013, 11:21:36 AM2/26/13
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல்
நாய் கடிச்சால் தொப்புளை சுற்றி 24 ஊசி போடணும்ன்னு சொல்லுங்க..அப்புறம் நாயா அப்படின்னா என்னன்னு கேட்பாங்க . என் பையன்களுக்கு நான் ரெடி பண்ணி வைச்சிருக்கிற  பதில் இது தான்.. ஆல்ஸோ ஆஸ்துமாவுக்கு நாய் பூனை முடிகள் என்றால் அலர்ஜி..அதையும் சொல்லலாம் என் பக்கத்தில்..ஏன் என்றால் எனக்கும் என் மூத்த மகனுக்கும் ஆஸ்துமா இருப்பதால்.....    :) 

2

sk natarajan

unread,
Feb 26, 2013, 7:48:24 PM2/26/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
 ஜிம்மி ,டைகர்  என இரு நாய்களை வளர்த்துள்ளேன்
திருடர்களை  விரட்டிய சம்பவம் , பெருச்சாளியை கொதறியது ,........நிறைய  சம்பவங்கள் மனதில் நிழலாடுது
ஆனால் அவர்களின் மரணம்  மனதில் பெரும் சோகத்தை தந்தது
நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா .........(ஒரே ஒரு  ஊரிலே )  என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது
உண்மையும்  கூட
நல்ல பதிவிற்கு வாழ்த்துகள் ஜீவ்ஸ் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/2/26 Jeeva <jee...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2013, 9:39:32 PM2/26/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்


26 பிப்ரவரி, 2013 6:56 AM அன்று, Jeeva <jee...@gmail.com> எழுதியது:



வீட்டில் நாய் வளர்க்கலாம் என்று திடீரென மகள் அடம்பிடித்தால் அதற்கு  என்ன பதில் சொல்வதென்று கொஞ்சம் ஆலோசனைக் கூறுங்களேன். உதவியாக இருக்கும்.



நாய்களை  பிள்ளை போல வளர்க்க முடியுமானால் வளர்த்துங்கள். அவைகளை கூண்டில் அடைத்துபோட்டோ கட்டிவைத்தோ வதைப்பது என்றால் வேண்டாம். நாய்களுக்கும் நம்மைபோல் எல்லா உணர்வுகளும் இருக்கு. அவை நம் காலடியில் இருக்கவே விருப்பப்படும்.

மகள் கேட்டார்கள் என்று வாங்கினால், வேலை அதிகம் இருக்கும். அதை யார் செய்வது என முடிவு செய்யணும். குளிப்பாட்டுவது, ஆய் போக வெளியே கூட்டிபோவது, " If your dog poops you scoop",  செய்யணும். நாய்கள் தம் எஜமானருடன் நடப்பது பெருமிதமாக கருதும்.

 சும்மா பழைய சாதம் மட்டும் போட்டு வளர்க்கலாம். சரிவரலைனா விரட்டி விடலாம் என்பது கல்நெஞ்சம்

 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வில்லன்

unread,
Feb 27, 2013, 12:24:15 AM2/27/13
to panb...@googlegroups.com, தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
லச்சுனு வச்சிருக்கலாம் சுப்பினு வச்சிருக்கலாம்
அதென்ன ஜானி!
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>


--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

Jeeva

unread,
Feb 27, 2013, 2:20:50 AM2/27/13
to பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
ஜானி, ஜிம்மி, டைகர் - இது தான் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பெயர் வைக்கும் பாரம்பர்யம்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/2/27 வில்லன் <oms...@gmail.com>

ஸ் பெ

unread,
Feb 27, 2013, 2:26:55 AM2/27/13
to panbudan
ஊரில் எனது பெரியம்மா வீட்டில் இருந்த நாய் பெயர் 'டைகர்'. ஒரு கோழியை பார்த்து 'பிடி டைகர்' என்றேன்.. ரத்தம் சொட்ட,சொட்ட கோழியின் சதையோடு அரை மணி நேரம் கழித்து வந்தது..கோழியின் உரிமையாளர்கள் 'ஐயோ' என சத்தம் இட. ஒரு சில மணி நேரம் 'நெய்தது பெரையில்' ஒழித்து கிடந்தேன் :)

பின் நானே வளர்த்த நாய் பெயர் 'ராஜா'. இப்போ எனது மாமனார் வீட்டில் வளரும் நாய்களின் பெயர்கள் ஸ்பார்க், ஸ்பிக்கி 


2013/2/27 Jeeva <jee...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Jeeva

unread,
Feb 27, 2013, 2:41:22 AM2/27/13
to பண்புடன்

2013/2/27 ஸ் பெ <stalinf...@gmail.com>

பின் நானே வளர்த்த நாய் பெயர் 'ராஜா'. இப்போ எனது மாமனார் வீட்டில் வளரும் நாய்களின் பெயர்கள் ஸ்பார்க், ஸ்பிக்கி 

mm. இப்ப நாய்க்கு பெயர் வைக்கிறதுலயும் கலாச்சாரம் விட்டுப் போச்சு. டைகர், ஜிம்மி, ஜானி, ராமு.. இதுவல்லவா நம்  பாரம்பரியம் ? :))) பாரம்பரியத்த விட்டாலும், இங்லீஷ்ல தான் பேர் வைக்கனும்னு  இன்னும் தொட்டுத் தொடரும் பாரம்பரியத்தக் கட்டிக் காப்பாத்தின உங்க மாமனாருக்கு ஒரு சவ்வாசு சொல்லுங்க

ஸ் பெ

unread,
Feb 27, 2013, 2:45:27 AM2/27/13
to panb...@googlegroups.com
With Spark $ Spicky

Inline images 1

Inline images 2

2013/2/27 Jeeva <jee...@gmail.com>


545787_168692946590272_341952428_n.jpg
541993_168692966590270_1835554404_n.jpg

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Feb 27, 2013, 3:04:15 AM2/27/13
to panb...@googlegroups.com

சூப்பர் ப்ளாக் லேப்ர&#0;டர் ...

--
541993_168692966590270_1835554404_n.jpg
545787_168692946590272_341952428_n.jpg

Omprakash

unread,
Feb 27, 2013, 3:12:49 AM2/27/13
to panb...@googlegroups.com
வீட்டு பக்கம் வந்திடாதிங்க என்று சொல்றாரு போல...

அமைதிச்சாரல்

unread,
Feb 27, 2013, 11:19:58 PM2/27/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன்
எங்கள் வீட்டிலும் என் பெண் ரொம்ப நாளா "வீட்ல நாய் வளர்க்கலாம்மா"ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. ஹட்ச் வெளம்பரத்துல வர்ற மாதிரி நாய் வேணுமாம். "வளர்க்கலாம்.. ஆனா, நீதான் அதுக்கு கர்.. மன்னிச்சூ.. கேர் டேக்கரா இருக்கணும். சாப்பாடு கொடுக்கறது, வாக் கூட்டிப்போறது, இத்யாதிகள்ன்னு நீதான் பார்த்துக்கணும். ஓ.கேயா"ன்னு கேட்டேன். அம்மணி கப்சுப் :-)))

எங்க பில்டிங்கில் இருக்கும் ஒரு நாயோட பேரு "ஹனி".. அந்தப் பேரைச்சொல்லிக் கூப்பிடும்போதெல்லாம் நாயைக்கூப்பிடுறாங்களா?.. மக்கள்ஸ் ஒருத்தரையொருத்தர் கூப்பிட்டுக்கறாங்களான்னு டவுட்டா இருக்கு :-)))

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Feb 28, 2013, 2:24:12 AM2/28/13
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


On Thursday, February 28, 2013 9:49:58 AM UTC+5:30, அமைதிச்சாரல் wrote:

எங்க பில்டிங்கில் இருக்கும் ஒரு நாயோட பேரு "ஹனி".. அந்தப் பேரைச்சொல்லிக் கூப்பிடும்போதெல்லாம் நாயைக்கூப்பிடுறாங்களா?.. மக்கள்ஸ் ஒருத்தரையொருத்தர் கூப்பிட்டுக்கறாங்களான்னு டவுட்டா இருக்கு :-)))

நண்பர் : ஏம்பா வார்த்தைக்கு வார்த்தை ஹனி ஹனிங்கறயே வைஃப்மேல அவ்ளோ பாசமா.
நண்பர்2 - யோவ் அது எங்க வீட்டு நாயிய்யா..
நண்பர் : அடப்பாவி.. அப்ப அந்தச் சனியன் கோவம் வந்தா நகத்துல பொராண்டும், லொள் லொள்நு  கத்தும்.... சமயத்துல கடிச்சும் வைக்கும்னியே ...
நண்பர்2 : ம்ம்.. உண்மை தான். என் பொண்டாட்டித்தான் அது.


sk natarajan

unread,
Feb 28, 2013, 3:50:12 AM2/28/13
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com
ஹா ஹா ஹா ....

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/2/28 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

அமைதிச்சாரல்

unread,
Feb 28, 2013, 4:02:16 AM2/28/13
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
ஜூப்பரு :-)) 

Asif Meeran AJ

unread,
Feb 28, 2013, 11:06:31 PM2/28/13
to panb...@googlegroups.com
ஐயப்ப

ாய் வங்கி அுக்கு ஹின்னேரு வைக்கத்ிகை பாக்குறங்குறைக் கூடிடா எவ்வு அழாச் சொல்லிட்டீ? ;-)

Gokul Kumaran

unread,
Feb 28, 2013, 11:18:57 PM2/28/13
to panb...@googlegroups.com
எங்க ஊருப்பக்கம் வந்தீங்கன்னா ராஜபாளையம் நாய் பார்க்கலாம். வர்றீங்களா?




--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

Reply all
Reply to author
Forward
0 new messages