தேர்வுகள் பலவிதம்

433 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Apr 29, 2013, 9:39:03 AM4/29/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
Thanks: Vikatan

சிறப்புத் தொடர்

ரு காலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிகளில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வுக்காக மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள் மாணவர்கள். இப்போதெல்லாம் எல்.கே.ஜி.யிலேயே துவங்கிவிடுகிறது நுழைவுத்தேர்வுகள்.

சாதாரண எல்.கே.ஜி படிப்பில் இருந்து பி.ஹெச்டி படிப்பு வரை நுழைவுத் தேர்வுகள். அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர் முதலே எல்லாப் பணிகளுக்குமே போட்டித் தேர்வுகள் மூலமே நியமனம் செய்யப்படுவதால், இன்றைய இளைஞர்களின் உலகமே தேர்வுகள் சூழ் உலகமாகிவிட்டது.

இந்தப் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் பற்றிய அறிமுகத்தை இந்தத் தொடரில் பார்க்கலாம்.

குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam)

இந்தியாவில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும் பெருமதிப்புடையதாகவும் கடினமானதாகவும் கருதப்படும் தேர்வு இது. IAS, IPS, IFS, IRS போன்ற நிர்வாக அடுக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் 26 உயர்பதவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு(Under Graduate Degree) படித்திருக்க வேன்டும். திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தொலைநிலைப் பல்கலைக் கழகங்களிலும் கூடப் படித்திருக்கலாம். இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தேர்வெழுதலாம். முதன்மைத் தேர்வு எழுதும் காலகட்டத்திற்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 21 வயது முதல் 30 வயதிற்குள் நான்கு முறையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 21-33 வயதிற்குள் ஏழு முறையும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 21-35 வயதிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதத் தகுதியுடையவர்கள்.

மூன்று பிரிவுகள்:

முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination),
முதன்மைத் தேர்வு (Main Examination),
நேர்முகத் தேர்வு (Interview)

தேர்வுக்கான அறிவிப்புகள் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் upscயால் வெளியிடப்படும். முதல்நிலைத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெறும். முதன்மைத் தேர்வுகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும். நேர்முகத் தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இவ்வாறு இத்தேர்வானது ஓராண்டு முழுவதும் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே முதன்மைத் தேர்வை ஒரு தேர்வர் எழுத முடியும், இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்குச் செல்ல முடியும்.

முதல்நிலைத் தேர்வில், பொதுஅறிவுத் தாள் மற்றும் CSAT எனப்படும் திறனறியும் தேர்வு என இரண்டு தாள்களைக் கொண்டது. ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்களைக் கொண்டது.

முதன்மைத் தேர்வில், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை ஒவ்வொன்றும் 300 மதிப்பெண்கள் கொண்டது, கட்டுரைத் தாள் 250 மதிப்பெண்கள் கொண்டது, நான்கு பொது அறிவுத்தாள்கள் ஒவ்வொன்றும் 300 மதிப்பெண்கள் கொண்டது, விருப்பப் பாடம் இரண்டு தாள்களைக் கொண்டது, ஒவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்கள் கொண்டது. ஆக, முதன்மைத் தேர்வு மொத்தமாக 1750 மதிப்பெண்கள் கொண்டது.

தேர்வருடைய ஆளுமைத் தன்மையைச் சோதிக்கும் நேர்முகத் தேர்வு 275 மதிப்பெண்களைக் கொண்டது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இரண்டிலும் மொத்தம் 2025 மதிப்பெண்களில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டே பணிகள் அளிக்கப்படுகிறது.

இத்தேர்வின் மூன்று படிநிலைகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதைவிட, மாணவர்கள் ஒவ்வொரு படிநிலையிலும் வடிகட்டப்படுகிறார்கள். பணியிடங்களின் எண்ணிக்கையை விட பத்திலிருந்து 12 மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் செல்வார்கள். அதிலிருந்து இரு மடங்கு தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்வர்களிம் எண்ணிக்கை மாறுபடுமே ஒழிய இந்த விகிதத்தில் பெருமளவு மாற்றம் இருக்காது.

குடிமைப் பணித் தேர்வுகளுக்கு டெல்லிக்குச் சென்று பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தேர்வடைய முடியும் என்ற மாயைகள் உடைந்து சென்னையில் இருந்த படியே படிக்க முடியும் என்பதும், தேர்வடைய முடியும் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக நிரூபணம் ஆகிவருகிறது. அதிக அளவிலான பயிற்சி மையங்களும், சிறந்த நூலக வசதிகளும் மாணவர்களுக்கு பெரிய வாய்ப்பினை உண்டாக்கித் தந்திருக்கிறது. சென்னை மட்டுமல்லாது எல்லா மாவட்ட மைய நூலகங்களிலும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவும் இயங்கி வருகிறது. தேவை விடாமுயற்சியும் மன உறுதியும் மட்டுமே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடத்தை நீக்கி திறனறித் தேர்வைக் கொண்டு வந்ததைப் போல, முதன்மைத் தேர்வில் சில மாற்றங்களைக் கொன்டு வர UPSC முடிவு செய்தது. இரண்டு விருப்பப் பாடங்களை ஒன்றாகக் குறைத்து, அந்த மதிப்பெண்களை ஈடு செய்யும் பொருட்டு பொது அறிவுத் தாள்களின் எண்ணிக்கையை நான்காக கூட்டுவதாகவும், மொழிப்பாடங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே இலக்கியப் பாடங்களை விருப்பப் பாடமாக எடுக்க முடியும் போன்ற விருப்ப மொழி சார்ந்த தேர்வுகளில்(Choices) சில மாற்றங்களை முன்வைத்தார்கள்.

இந்த மாற்றங்கள் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஆங்கிலம் அல்லது இந்திக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கும் பெரும் எதிர்ப்புகள் எழுந்ததாலும் இந்த ஆண்டு பழைய முறைப்படியே தேர்வுகள் நடைபெறுகின்றன. இனிவரும் காலங்களில் இது போன்ற மாற்றங்களையே தேர்வுகளில் எதிர்பார்க்கலாம், அல்லது என்ன முடிவை UPSC எடுக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், பல சமயங்களில், UPSC  என்பது Un Predictable Service Commission ஆகவே செயல்பட்டு வந்திருக்கிறது.

குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்புடைய பயனுள்ள இணைப்புகள்:

http://upsc.gov.in/
http://www.ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm
http://threeauthors.com/
http://saidaiduraisamysmanidhaneyam.com/
http://upscportal.com/civilservices/

- சுப. தமிழினியன்

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Apr 29, 2013, 9:39:48 AM4/29/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com

முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்குத் தகுதியடைவதற்கும் (Lectureship), முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்புக்குத் தகுதியுடையவர், இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) ஆவதற்கும் பல்கலைக் கழக மாணியக்குழுவால் (UGC - University Grants Commission) நடத்தப்படும் தேர்வு NET - National Eligibility Test.
 
கலைப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக் கழக மாணியக்குழு நடத்துகிறது. அறிவியல் பொறியியல் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தேர்வை பல்கலைக் கழக மாணியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமும் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து நடத்துகிறது. 

விரிவுரையாளர் பதவிக்கு மட்டுமான தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. JRF தேர்வை எழுத பொது பிரிவினருக்கு வயது வரம்பு 28 ஆண்டுகள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு மேலும் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதுநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்களது முதுநிலைப் பாடப்பிரிவு, துறையில் இந்த தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் படிப்பில் 55% மதிப்பெண்ணிற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள்  50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

UGC-NET:

UGC-NET தேர்வுக்கு http://ugcnetonline.in என்ற முகவரியில் இணைய வழியில் பதிவு செய்யலாம். பொதுப் பிரிவினருக்கு கட்டணம் 450 ரூபாயும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 225 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 110 ரூபாயும் கட்டணம். வங்கியில் பணம் செலுத்திய ரசீதையும், இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தையும் அச்செடுத்து, தேர்வர் தேர்ந்தெடுத்திருக்கும் தேர்வு மையம் உள்ள பல்கலைக் கழகத்திற்கும் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

ஓர் ஆண்டில் இரண்டு முறை இத்தேர்வுகள் நடத்தப்படும். ஜூன் மாதத்தில் ஒரு முறையும் டிசம்பர் மாதத்தில் ஒரு முறையும் நடைபெறும். அந்த மாதங்களின் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வுகள் நடைபெறும்.

இத்தேர்வுகள் மூன்று தாள்களைக் கொண்டிருக்கும். எல்லாத் தேர்வுகளுமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி வினா வகையைக் கொண்டவை. தாள்-I மற்றும் தாள்-II ஒவ்வொன்றும் நூறு மதிப்பெண்களைக் கொண்டவை, ஒவ்வொரு தாளுக்கும் கால அளவு 75 நிமிடங்கள். முதல் தாளில் 60 வினாக்களில் இருந்து 50 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இரண்டாம் தாளில் 50 வினாக்களுக்குமே விடையளிக்க வேண்டும்.  மூன்றாவது தாள் 150 மதிப்பெண்கள் கொண்டவை. இத்தாள் 75 வினாக்கள் கொண்டது, அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். முதல் தாள் தேர்வரின் திறனறி சோதனை மற்றும் ஆராய்ச்சி அடிப்படை முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் மூன்றாம் தாள் தேர்வர் தேர்ந்தெடுத்த பாடங்களை அடிப்படையாகக் கொன்டது. தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவது கிடையாது.

தேர்ச்சிக்கான மதிப்பெண் அடிப்படை:

ஒவ்வொரு பாடத்திலும், பிரிவிலும் முதல் 15% இடங்களைப் பெறும் தேர்வர்கள் மட்டுமே விரிவுரையாளர் பணிக்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

இதற்கு முன்பு கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டியிருந்த மூன்றாம் தாளும் இப்போது கொள்குறி வினா வகைக்கு மாற்றப்பட்டுள்ளது, அதே போல Negative Mark எனப்படும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் பழக்கம் இல்லாததால், அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாக யோசித்து, நிதானமாகவே பதிலளிக்கலாம், நேரமும்  தாராளமாகவே இருக்கிறது. ஒரு வினாவுக்கு இரண்டு நிமிடங்கள் வரை கால அவகாசம் உள்ளது. 

CSIR UGC-NET :

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைய வழியில் http://csirhrdg.res.in இந்த தளத்தில் விண்னப்பிக்கலாம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது விபிபி  மூலம் பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 200 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 ரூபாயும் கட்டணம் விதிக்கப்படுகிறது.

200 ம்திப்பெண்களைக் கொண்ட தேர்வுத்தாள் Part- A, Part- B, Part- C என்ற மூன்று பிரிவைக் கொன்டுள்ளது. எல்லாப் பாடங்களும் Part- A பொதுவானது, இப்பிரிவில் பொது அறிவியல், திறனறிதல், ஆராய்ச்சி அடிப்படைகள் தொடர்பான கேல்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 20 கேள்விகளிலிருந்து 15 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். Part- Bயில் தேர்வரது விருப்பத் தேர்வில் இருந்து 50 கேள்விகள் இருக்கும், அவற்றில் 35 கேள்விகளுக்கு பதிலளிக்க வேன்டும். இவ்விரு பிரிவிலும் எல்லாக் கேள்விகளும் இரண்டு மதிப்பெண்கள் கொண்டவை. Part- C பிரிவில், விருப்பத் தேர்வில் இருந்து உயர்நிலைக் கேள்விகள் இடம்பெறும். அறிவியல் கோட்பாடுகளை, கேட்கப்பட்டிருக்கும் சிக்கல்களில் பயன்படுத்தி தீர்வு கானும் விதமான கேள்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 75 கேள்விகளில் 50 கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேன்டும். ஒவ்வொரு கேள்வியும் நான்கு மதிப்பெண்களைக் கொண்டது. எல்லாப் பிரிவுகளிலும் தவறான விடைகளுக்கு 25% மதிப்பெண் கழிக்கப்படும். 

SLET/SET:

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேறுபாட்டால், தேசிய அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது அனைத்துப் பாடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த போதாது என்பதால் UGC, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்த SLET அல்லது SET (State level eligibility test) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அமைப்பு பாடத்திட்டம் அனைத்தும் NET தேர்வையே ஒத்தது.

- சுப.தமிழினியன்


முந்தைய அத்தியாயம்: தேர்வுகள் பலவிதம் 1 - குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam)

sk natarajan

unread,
Apr 30, 2013, 9:50:08 PM4/30/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, chenna...@googlegroups.com
பயன் தரும் பகிர்விற்கு நன்றி ஸ்பெ 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
Thanks: Vikatan


--

Sheik Mohamed Shajahan

unread,
May 1, 2013, 1:22:28 AM5/1/13
to panb...@googlegroups.com

+1
2013/5/1 sk natarajan <sknatar...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

ஸ் பெ

unread,
May 3, 2013, 5:24:21 AM5/3/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com

அறிவியல் ஆர்வலர்கள் கவனத்துக்கு !

க்ரூப் II (A)... அறிவியல் பாடத்தில் அசத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ள மாணவர்களுக்கு ஏற்றது.

ப்யூர் சயின்ஸ் என்று அழைக்கப்படும் இந்த க்ரூப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்கள் உள்ளன. இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார், தஞ்சாவூர் - மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், வெ.ராஜமோகன்.

''பத்தாம் வகுப்பில் அறிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் பரிசீலிக்க வேண்டிய க்ரூப் இது. அத்துடன், கணிதத்தில் ஆர்வம் குறைந்தும், அறிவியலில் ஈடுபாடு மிகுந்தும் காணப்படும் மாணவர்களுக்கு ஏற்றது.

இந்தக் க்ரூப்பைத் தேர்ந்தெடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் நிச்சயம் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேளை, மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை எனில், கால்நடை மருத்துவம், பிசியோதெரபி மற்றும் பார்மஸி படிப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும். குறிப்பாக, பெண்கள் நர்ஸிங் படித்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைப் பெற, இந்த க்ரூப் உதவும். இவை மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்புகள், அறிவியல் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகள் நிறைய இருப்பதால், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்கள் தாராளமாக இந்த க்ரூப்பை டிக் செய்யலாம்'' என்கிறார் ஆசிரியர் வெ.ராஜமோகன்.

ஸ் பெ

unread,
May 3, 2013, 5:26:21 AM5/3/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com

''நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?''  - கோ.நந்தினி, நாகப்பட்டினம்

பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை:

''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)  நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed)  எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள்அமைந்திருக்கும்.

ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.''

sk natarajan

unread,
May 3, 2013, 10:33:24 PM5/3/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, chenna...@googlegroups.com
மிகவும் பயன் தரும் தகவல்
நன்றி ஸ்பெ 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/3 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

வேந்தன் அரசு

unread,
May 3, 2013, 10:39:16 PM5/3/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, chenna...@googlegroups.com
அரட்டை அரங்கத்தில் பேசிய அனுபவம் இருந்தால்தான் ஆசிரியர் ஆகமுடியும் என விதி இருக்கணும்

அரட்டைஅரங்கத்தில் உறக்கம் வருவது இல்லை. வகுப்பறையில் கொட்டாவி அடக்க முடியலே

3 மே, 2013 10:33 PM அன்று, sk natarajan <sknatar...@gmail.com> எழுதியது:

மிகவும் பயன் தரும் தகவல்
நன்றி ஸ்பெ 



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

துரை.ந.உ

unread,
May 3, 2013, 11:48:57 PM5/3/13
to தமிழ் சிறகுகள், panbudan, stalinfelix
arumaiyaana பகிர்வுகள் ... நன்றி ஸ்பெ


2013/5/3 ஸ் பெ <stalinf...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

ஸ் பெ

unread,
May 10, 2013, 9:27:03 AM5/10/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
அகில இந்திய அளவில் காத்திருக்கும் 60 தேர்வுகள்!
எஜுகேஷன்

து... கல்லூரி நேரம்! பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அடுத்த கட்டமாக என்ன மாதிரியான கல்லூரிப் படிப்பு வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன என்கிற தேடலில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதோடு... பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான குரூப் தேர்வு வழிகாட்டல்களையும் இங்கே தருகிறார், சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் சமூக ஆர்வலர், நெடுஞ்செழியன்.

''பொதுவாக பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள் என்று தன்னைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வதையே... எதிர்கால கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுப்பதற்கான வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவர்களின் ஆலோசனைகளுடன், ஒரு மாணவனின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் இன்றுள்ள பலவகையான படிப்புகளைப் பற்றிய அவன் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் தனக்கான படிப்பை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  

இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் உயர்கல்வியில் பலவகையான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. மத்திய அரசாங்கம் எந்தெந்த துறைகளில் மனிதவளம் குறைவாக இருக்கிறது என கண்காணித்து, அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு கவனம் கொடுத்து வருகிறது. உதாரணமாக, சோஷியல் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி, மேனேஜ்மென்ட், ஃபுட் புராஸஸிங் போன்ற அதிக கவனம் கிடைக்காத, எண்ணற்ற துறைகளில், போட்டியில்லாத... செழிப்பான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்ற துறை சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பள்ளித் தேர்வை முடித்ததோடு, கல்லூரியில் அட்மிஷனுக்காக காத்திருக்காமல், அகில இந்திய அளவில் பல கல்லூரிகளுக்கும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எழுதுவது அவசியம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு, கல்லூரி சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் கிட்டத்தட்ட 60 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறை என நாட்டில் உள்ள தலைசிறந்த அரசுக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் இவை. உதாரணமாக, JEE, AIEEE, BITSAT போன்ற அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்காக நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எழுதலாம். எல்லா தேர்வுகளிலும் இல்லை என்றாலும், அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியும் பயிற்சியும் ஏதாவது ஒரு தேர்விலாவது நல்ல மதிப்பெண்களை கொண்டுவந்து சேர்க்கும். அதன் அடிப்படையில் அட்மிஷன் பெறலாம்.

அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு என்றவுடன், அது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ சிலபஸில் படித்த மாணவர்களுக்குதான் சுலபமாக இருக்கும் என, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தயங்கத் தேவையில்லை. தேர்வுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் கேள்வி - பதில் வடிவத்தில் படிக்கும் பழக்கத்தை மறந்து, பாடங்களை முழுக்கவும் படிக்கப் பழகினாலே... நுழைவுத்தேர்வு சுலபமாகிவிடும்.

அகில இந்திய அளவிலான கல்லூரிகளில் சேர்வதற்கு... நுழைவுத்தேர்வுடன், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 850 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற ஒரு மாணவி, அகில இந்திய பிரீ மெடிக்கல் தேர்வில், நுழைவுத்தேர்வு வாயிலாக 150-வது ரேங்கில் வெற்றிபெற்று, இன்று சென்னை, அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு எழுதியதால்தான், அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, கல் எடுக்காததால்தான் மாங்காய் கிடைக்காமல் போகிறது என்பதை உணர வேண்டும்'' என்று சொன்ன நெடுஞ்செழியன்,

''14 அரசு சட்டக் கல்லூரிகள் மத்திய அரசு நிர்வாகத்தில் இயங்குகின்றன. இங்கு படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்புகள் ஏராளம். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டம், அதேநேரத்தில் 'ஐசிஎஸ்ஐ'யில் கம்பெனி செக்ரெட்டரிஷிப் இரண்டையும் ஒன்றாக முடித்து வெளியில் வரும்போது, நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துக் கொள்வார்கள்.

மும்பையில் உள்ள 'டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’-ல் படிப்பவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் சமூகநலத் துறையில் காத்திருக்கின்றன வேலைவாய்ப்புகள். பி.காம், பி.பி.ஏ போன்ற படிப்புகளுக்கும் எதிர்காலம் விரிந்திருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்த 30 வயதுக்குட்பட்ட ஒரு மாணவர், சி.ஏ மற்றும் கம்பெனி செக்ரெட்டரிஷிப் ஆகியவற்றை முடித்து சென்னையில் மாதம் 3 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என்பதிலிருந்தே... அதன் எதிர்காலத்தை நீங்கள் உணரலாம்'' என்று, ஆதாரப்பூர்வமாக சொன்னார்!


ஸ் பெ

unread,
May 15, 2013, 7:12:40 AM5/15/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com

தொழிற்படிப்பு

    சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகம்!
    Posted Date : 12:04 (22/04/2013)Last updated : 17:05 (04/05/2013)

    சென்னை: சூரிய சக்தி மின் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த புதிய பயிற்சித் திட்டங்களை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.

    இதுகுறித்து  சென்னை கிண்டி ஐ.டி.ஐ. கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மைய இணை இயக்குநர் ஜெயச்சந்திரன் கூறும்போது, 'சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சித் திட்டங்களில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது, ஒரு மாத கால படிப்பு ஆகும் (மொத்தம் 120 மணி நேரம்) என்றார்.

    தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட சூரிய மின்சக்தி கொள்கையில், சூரிய மின்சக்தி மூலம் 2015-ம் ஆண்டுக்குள் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய மின் தேவையில் 6 சதவீதத்தை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் பெற வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்தத் துறை வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ப தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையும் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஃபோட்டோ வோல்டயிக் சோலார் எலெக்ட்ரிக் சிஸ்டம் மற்றும் சிறிய அளவிலான ஃபோட்டோ வோல்டயிக் சோலார் பொருள்கள் உற்பத்தி ஆகிய இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த பயிற்சிக்களுக்கான கட்டணம் ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பாட புத்தகங்கள் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவையும் அடங்கும். 

    இந்தப் படிப்பில் விருப்பமுள்ளவர்கள், சென்னை கிண்டி ஐ.டி.ஐ. கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மைய இணை இயக்குநரை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும், 044 - 22501011, 8754590964 ஆகிய தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களில் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம்.

Sahul Hameed

unread,
May 15, 2013, 7:57:34 AM5/15/13
to tamizhs...@googlegroups.com, panbudan, stalinfelix
 
இப்படி ஆளாளுக்கு உசுப்பேத்தி விட்டா
 
ஸ்.பெ. அண்ணன் - விகடன் ஜர்னலிஸ்ட்டாக மாறிடுவாங்க
 
(நோ ஆங்க்ரி :)))
 
 
 
 
எல்லாமே நல்ல  பகிர்வுகள் ... நன்றி ஸ்பெ அண்ணா

 
 



 
 

 
2013/5/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

arumaiyaana பகிர்வுகள் ... நன்றி ஸ்பெ




--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

sk natarajan

unread,
May 15, 2013, 9:47:42 PM5/15/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
மிகவும் பயன் தரும் பகிர்வு
நன்றி ஸ்பெ 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

sk natarajan

unread,
May 15, 2013, 9:49:29 PM5/15/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, chenna...@googlegroups.com
புதிய களம்
இதற்கு வாய்ப்புகள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் அதிகம் இருக்கும் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/15 ஸ் பெ <stalinf...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
May 15, 2013, 10:32:38 PM5/15/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, chenna...@googlegroups.com
>இந்த பயிற்சிக்களுக்கான கட்டணம் ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பாட புத்தகங்கள் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவையும் அடங்கும்.

இது ரொம்ப அதிகம். எதை எதையோ இலவசமாக த்ருகையில் பயிற்சி இலவசமாக்கலாம். பத்து பேருக்கு சொல்லி கொடுத்தால் அவர்கள் 100 பேருக்கு கற்றுத்தருவாங்க.

ஸ் பெ

unread,
May 17, 2013, 4:51:43 AM5/17/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்?: Group III&IV- நீங்களும் பிரேமா ஆகலாம்!
Posted Date : 11:05 (13/05/2013)Last updated : 11:05 (13/05/2013)

டாக்டர், இன்ஜினீயர் படிப்பு மட்டும்தானா மதிப்பு மிக்கது? இந்த இரண்டுக்கும் இணையாக பல துறைகள் இருக்கின்றன. அதற்கு அடித்தளமாக இருக்கிறது மூன்றாவது க்ரூப் (Group III).

கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய கட்டாயப் பாடங்களையும், வணிக கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர் மற்றும் அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாகவும் கொண்டதே இந்தப் பிரிவு.

மூன்றாவது க்ரூப்பை யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்? அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார், விருதுநகர் - கிருஷ்ணாபுரத்தில் உள்ளபெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.செல்வராஜ்.

''பொதுவாக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம் இல்லாத மாணவர்கள் மூன்றாவது க்ரூப்பைப் பரிசீலிப்பார்கள். ஆனால், கணக்குப்பதிவியல் என்ற பாடம் இருப்பதால், அவர்களில் பலருக்கும் தயக்கம் இருக்கும். வழக்கமான கணிதத்துக்கும், கணக்குப்பதிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் பாடத்தில் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகள் மட்டுமே துணைபுரியும். மற்ற எந்தக் கணக்குகளுக்கும் இதில் தொடர்பு இல்லை.  

வியாபார அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுத் துறை அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் வரவு - செலவு ஏடுகள் முறைப்படி பராமரித்து வர வேண்டும். இந்தக் கணக்குகளை முறைப்படி கணக்கேடுகளில் எழுதுவதற்கு சிறப்புத் தேர்ச்சியும், வியாபாரச் சட்டங்கள் சார்ந்த அறிவும் தேவை. அதைத்தான் கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகள் சொல்லித்தருகின்றன.

இந்தப் பிரிவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பி.காம், எம்.காம் போன்ற பட்டப்படிப்பில் பயின்று பட்டம் பெற்று, தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்பவர்களுக்கு, உள்ளூரில் தொடங்கி உலக நாடுகள் வரை உயர் பதவிகள் காத்திருக்கின்றன.

வணிகவியல் பிரிவில் கற்கும் திறமையுள்ள மாணவர்கள், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்.  போன்ற பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை வகிக்க முடியும். இந்தப் படிப்புகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் படிப்புகள்போல் அதிக செலவுகள் ஆகாது என்பது மற்றொரு சிறப்பு. பொருளியலும் முக்கியப் பாடமாக இருப்பதால், பிற்காலத்தில் போட்டித் தேர்வுகளில் அசத்த முடியும். நிர்வாகம், வணிகவியல் சார்ந்த துறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், நீங்கள் ப்ளஸ்-2 முடிப்பதற்குள் இன்னும் புதுப்புது உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

எனவே, நீங்கள் க்ரூப்-1, க்ரூப்-2 பிரிவுகளில் சேர்வதற்குத் தேவையான அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வணிகவியல், கணக்குப்பதிவியல் முதலான பாடங்களில் ஆர்வம் இருந்தால், தாராளமாக இந்தக் க்ரூப்பைத் தேர்வு செய்ய்யலாம். சமீபத்தில், சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தாரே... பிரேமா. அவரைப் போல் நீங்களும் அட்டகாசமான ஆடிட்டர் ஆகலாம்'' என்கிறார் செல்வராஜ்.

***

வெற்றி நிச்சியம்!

இலக்குகளை நிர்ணயித்துப் படித்தால், சமூகத்தில் உயரிய இடத்தைப் பிடிக்க வழிவகுப்பது க்ரூப்-IV.

வரலாறு, பொருளியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களைக்கொண்ட இந்த க்ரூப்பில் பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், அட்வான்ஸ்டு லாங்வேஜ் தமிழ் ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவைபற்றி சொல்கிறார், பெரம்பலூர் - பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், எஸ்.ஷேக் சலீம்.

''பொதுவாக, மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இந்த க்ரூப் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கான அடித்தளம் இதிலே கிடைக்கும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தாராளமாக இந்த க்ரூப்பைப் பரிசீலிக்கலாம். தங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதையட்டிப் படித்து பல பேர் சாதித்து இருக்கிறார்கள்.

பொலிட்டிக்கல் சயின்ஸை விருப்பப் பாடமாகச் சேர்த்துப் படிப்பவர்கள், அரசியல் மற்றும் சட்டம் சார்ந்தபடிப்புகளைப் படித்து, அந்தத் துறைகளில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. பொருளியல் சார்ந்த படிப்புகள் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் உள்ளன. அருங்காட்சியகம் சார்ந்த பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் சார்ந்த படிப்புகள் என இந்த க்ரூப் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர் படிப்புகளுக்கும் ஏற்றது இது.

மேலும், நம் பொது அறிவை வெகுவாக வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் இந்தப் பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கடுமையான முயற்சிகள் செய்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். தேர்வுகளில் வெற்றியாளராக வலம் வர முடியும். இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவும். எனவே, தங்களது எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குப் பயன்படும் வகையில் இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது அவசியம்'' என்கிறார் ஷேக் சலீம்.

ஸ் பெ

unread,
May 17, 2013, 4:52:06 AM5/17/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்? - தொழில் கல்வி பயில விரும்புவோருக்கு..!
Posted Date : 11:05 (15/05/2013)Last updated : 11:05 (15/05/2013)

தொழில் கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியிலே வொகேஷனல் க்ரூப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

இந்தப் பிரிவுகளில் உள்ள பாடங்கள், இதன்மூலம் மாணவர்கள் தங்கள் உயர்கல்வியில் பெறும் வாய்ப்புகள்பற்றி முழுமையாக வழிகாட்டுகிறார், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர், கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன்.

''தற்போது தமிழகத்தில் 1,605 மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பாடப் பிரிவுகள் நடைபெற்று வருகின்றன. ஒன்பது தொழில் கல்விப் பாடங்கள் 2010-11 கல்வி ஆண்டு முதல் 11-ம் வகுப்பில் இருந்தும், 2011-12 கல்வி ஆண்டில் இருந்து 12-ம் வகுப்புக்கும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அந்த ஒன்பது பாடப் பிரிவுகள்:

1. பொது இயந்திரவியல் (General Machinist)

2. மின் இயந்திரங்களும், சாதனங்களும்  (Electrical Machines and Appliances)

3. மின்னணு சாதனங்கள் (Electronic Equipments)

4. துணிகளும் ஆடை வடிவமைத்தலும் (Textiles and Dress Designing)

5. வேளாண் செயல்முறைகள் (Agricultural Practices)

6. உணவு மேலாண்மையும் குழந்தை நலனும் (Food Management and Child Care)

7. செவிலியர் துறை (Nursing)

8. கட்டடப் பட வரைவாளர் (Draughtsman Civil)

9. அலுவலக மேலாண்மை (Office Secretaryship)

இந்தப் பாடப் பிரிவுகளில் வேளாண் செயல்முறைகள் என்ற புதிய பாடப் பிரிவு  தமிழ்வழியிலும், இதரப் பாடப் பிரிவுகளைத் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் நடத்தப்படுகிறது. ஒன்பது பாடத் திட்டங்களுடன் பழைய பாட திட்டத்தின்படி உள்ள மூன்று பாடப் பிரிவுகள் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவையே அந்தப் பாடத் திட்டங்கள்.

தொழில் கல்வி பயின்றால்...

* பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ப்ளஸ்-1ல் தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், அனைத்துப் பிரிவு மாணவர்களைப் போல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பெற முடியும்.

* தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் கல்வி பெற, 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

* தொழில் கல்விப் பிரிவில் பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், கட்டடப் பட  வரைவாளர், ஆட்டோ மெக்கானிக் படிக்கும் மாணவர்கள், பொறியியலில் லேட்ரல் என்ட்ரி (Lateral entry) எனப்படும் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்புள்ளது.

* பொறியியல் கல்வி எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தால் 10 சதவிகித இடங்கள் அளிக்கப்படுகின்றன. தொழில் கல்வி மாணவர்களுக்குத்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலில் நேர்காணல் நடத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

* இந்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சித் துறையின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சிச் சட்டப்படி, ஒரு வருடம் உதவித்தொகையுடன் பயிற்சி பெற வாய்ப்புள்ளது.

* தொழிற்கல்வி மாணவர்கள், இந்திய அரசால் தொழில் பழகுநர் பயிற்சியை ஓர் ஆண்டுக்கு 9000 மாத உதவித்தொகையுடன் பெற முடியும். அதன்பின், பெரிய நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

* சுய தொழில் செய்யவும், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறவும் தொழில் கல்வி மாணவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

* வேளாண் செயல்முறைகள் என்ற விவசாயப் பாடத்தினை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப் படிப்புகள் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

* செவிலியர் துறை, உணவு மேலாண்மை, குழந்தை நலன், ஆடை வடிவமைத்தல் என்ற பாடப் பிரிவினை அதிக அளவில் பெண்கள் எடுத்துப் படிக்கின்றனர். அவர்கள் இதன்மூலம் மேல்படிப்புப் பெறவும், சுய தொழில் செய்யவும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அனைத்து மாணவர்களும் ஒரே விதமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்காமல், அவரவர் விருப்பப்படி பல்வேறு பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்'' என்கிறார் ஜனார்த்தனன்.

ஸ் பெ

unread,
May 18, 2013, 3:11:18 AM5/18/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
Posted Date : 15:05 (17/05/2013)Last updated : 15:05 (17/05/2013)

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பொறியாளர்களின் பணியிடங்களை தகுதியான பொறியாளர்களைக் கொண்டு நிரப்புவதற்காக இத்தேர்வு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்றன.

இயந்திரவியல், சிவில், மின் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய ரயில்வே, கப்பற்படை, பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்பு துறை மற்றும் அதன் துனைத்துறைளில் இத்தேர்வுகளின் மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இளநிலைப் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் பட்டப் படித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கானத் தேர்வுகள் நடத்தப்படும்போது அத்துறையில் முதுநிலை அறிவியல் (இயற்பியல், கணினி அறிவியல்) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்களுக்கு 35 வயது வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 33 வயது வரையும், பிற அரசுத் துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கும் வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.

எழுத்துத் தேர்வு மொத்தம் ஐந்து தாள்களைக் கொண்டது. எழுத்துத் தேர்வுகள் மூன்று நாட்களில் நடத்தப்படுகின்றன. முதல் மூன்று தாள்கள் கொள்குறி வினா வகைத் தேர்வுகொண்டது. இறுதி இரண்டு தேர்வுகள் பெரு கட்டுரை வடிவம் கொண்டவை. முதல் மூன்று தாள்களுக்கு தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் நடைமுறை உண்டு.

முதல் நாளன்று, முதல் தாள் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அடுத்த நாள், இரண்டாவது மற்றும் மூன்றாம் தாள்கள் தேர்வர் தேர்ந்தெடுக்கும் பொறியியல் பிரிவிலிருந்து (இயந்திரவியல், சிவில், மின் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு) வினாக்கள் கேட்கப்படும். நான்காவது மற்றும் ஐந்தாவது தாள்கள் இறுதி நாளன்று நடைபெறும். முதல் மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அடுத்த இரண்டு தாள்கள் திருத்தவே எடுத்துக் கொள்ளப்படும்.

ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்களைக் கொண்டது. மொத்தமாக எழுத்துத் தேர்வு 1000 மதிப்பெண்களைக் கொண்டது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 200 மதிப்பெண்களைக் கொண்டது. நேர்முகத் தேர்வு தேர்வரது ஆளுமை, முடிவெடுக்கும் திறன், நாட்டு நடப்பு, நிகழ்வுகள் போன்றவற்றைச் சோதித்தறியும் வகையில் அமையும். 

இந்தத் தேர்வு தொடர்பான பயனுள்ள இணைப்புகள்:

http://upsc.gov.in 

http://www.examrace.com/IES/IES-Free-Study-Material/

ஸ் பெ

unread,
May 20, 2013, 4:59:23 PM5/20/13
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com
சிறந்த கல்லூரி: எப்படி தேர்வு செய்வது?
Posted Date : 14:05 (20/05/2013)Last updated : 14:05 (20/05/2013)

எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப்பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

எனவே, எல்லாவகையிலும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாணவனின்  கடமை. அதனை அக்கறையோடு செய்துதரவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப்படையில் அந்தக் கல்லூரி நிறுவனம் சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது? என்கிற கேள்விகளுடன் கல்வி மற்றும் சமூக ஆர்வலர் தா.நெடுஞ்செழியனிடம் பேசினோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

மூன்று விஷயங்கள்!

''இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள், தொலைக்காட்சியில் வரும் கல்லூரிகள் தொடர்பான விளம்பரங்களைப் பார்த்தோ, உறவினர்களின் கட்டாயத்தின் அடிப்படையிலோதான் தங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைத் தீர்மானிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.  

பொதுவாக, கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது முக்கியமான மூன்று விஷயங்களைக் கவனிக்கவேண்டும். கல்லூரி ஏ.ஐ.சி.டி.இ-யிடம் (All India Council for Technical Education - AICTE) அனுமதி பெற்றிருக்கிறதா?, கல்லூரிகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறதா?, கல்லூரிகளில் சிறப்பு வசதிகள் ஏதேனும் இருந்து அதற்கான சிறப்பு அங்கீகாரத்தை கல்லூரிகள் பெற்றிருக்கிறதா? என்பதைக் கவனிக்கவேண்டும்.

கல்லூரியில் உள்ள லேப் வசதி, போதுமான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகளை ஆராய்ந்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியிருந்தால் மட்டுமே பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்தும். படித்துமுடித்தவுடன் பல்கலைக்கழகப் பட்டமும் வழங்கும். எனவே, இது மிக முக்கியம்'' என்று ஆரம்பித்தவர், இதுதொடர்பாக  கவனிக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

வெளிப்படையான விஷயங்கள்! (Moderate Disclosure)

ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, கல்லூரி சம்பந்தப்பட்ட சில முக்கியமான தகவல்களை கல்லூரி நிர்வாகத்தின் இணையதளத்திலோ அல்லது ஆண்டு மலரிலோ வெளிப்படையாக, தெளிவாக குறிப்பிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறது. சில கல்லூரிகள் மட்டுமே இந்த விவரங்களை முழுமையாக  தருகின்றன. பல கல்வி நிறுவனங்கள் இவ்விவரங்களை தராமலே தவிர்த்துவிடுகின்றன.  

* ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் அனுமதி பெற்ற கல்லூரி களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நம்பர் வழங்கப்படும். அந்த நம்பரை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* ஒரு கல்லூரியில் என்னென்ன துறை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன, துறை வாரியாக பேராசிரியர்களின் விவரங்களையும் தெரிவிக்கவேண்டும். (பேராசிரியர்களின் பெயர்கள், அவர்களின் புகைப்படங்கள், படிப்பு விவரங்கள், அவர்கள் படித்த கல்லூரி, அனுபவம், ஆராய்ச்சி பற்றிய தகவல்களை  தெளிவாகத் தெரியப்படுத்துவது அவசியம்).

* கல்லூரி நிர்வாகக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் யார் என்பதையும், அவர்களின் விவரங்களையும் குறிப்பிடுவது அவசியம்.

* மூன்று ஆண்டுகளாக எவ்வளவு பேர் கல்லூரியில் படிக்கிறார்கள் (துறைவாரியாக பிரித்துக் குறிப்பிடுவது அவசியம்), அவர்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை கல்லூரி நிறுவனம் அமைத்து தந்திருக்கிறது என்கிற விவரங்களை தெரியப்படுத்தவேண்டும்.

* எதன் அடிப்படையில்  மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை விளக்கமாக  எடுத்துச் சொல்லவேண்டும்.

* கல்லூரி வளாகத்திற்குள் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன, மாணவ, மாணவிகளின் தங்கும் விடுதியில் எத்தனை ரூம்கள் இருக்கின்றன என்கிற விவரங்களும் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

எப்படி தேர்வு செய்வது?

துண்டு பிரசுரங்களிலோ அல்லது கல்லூரியின் இணையதளத்திலோ வெளியிடப்பட்டிருக்கும் கட்டட படங்களைப் பார்த்தோ, அவர்களின் சிறப்பம்சங்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை இணையதளத்தில் படிப்பதால் மட்டுமே, எந்த ஒரு கல்லூரியையும் தேர்வு செய்யக்கூடாது. படத்தில் உள்ள கட்டடங்கள் வேறு எங்கோ எடுக்கப்பட்டதாககூட இருக்கலாம். அல்லது நீங்கள் செலுத்தப் போகும் கல்லூரிக் கட்டணத்தினால்கூட கட்டப்படலாம். தவிர, கல்லூரியின் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் சரியானதுதானா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். அந்தக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையோ அல்லது அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவர் களில் சிலரிடமோ விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.

சாய்ஸ் வேண்டும்!

நீங்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது, ஒரே ஒரு கல்லூரியை மட்டும் தேர்வு செய்யாதீர்கள். மூன்று கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டால்தான், ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியும். நீங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால், சோர்ந்து போகாதீர்கள். நீங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரி உலகிலேயே சிறந்தது; நீங்கள் தேர்வு செய்துள்ள படிப்பு உலகிலேயே சிறந்தது என்கிற நம்பிக்கையோடு படிக்க ஆரம்பியுங்கள்.

ஏமாற வேண்டாம்!

முன்பெல்லாம் கல்லூரி என்பது கல்வி பயிற்றுவிக்கும் இடமாக இருந்தது. இன்றைக்கு அது பணம் சம்பாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. அதுமாதிரியான கல்வி நிறுவனங்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என்று முடித்தார் நெடுஞ்செழியன்.

பெற்றோரும், குழந்தைகளும் கொஞ்சம் விழிப்பு உணர்வோடு தேடினால், நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் சிறந்த கல்லூரிகளை நிச்சயம் தேர்வு செய்ய முடியும்.

sk natarajan

unread,
May 20, 2013, 10:39:17 PM5/20/13
to tamizhs...@googlegroups.com, panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, chenna...@googlegroups.com
மிகச் சிறந்த செய்தி தாங்கிய கட்டுரை
மிகவும் பயன் தரும்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/21 ஸ் பெ <stalinf...@gmail.com>
சிறந்த கல்லூரி: எப்படி தேர்வு செய்வது?
Posted Date : 14:05 (20/05/2013)Last updated : 14:05 (20/05/2013)

எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது முக்கியம்.


ஸ் பெ

unread,
Aug 22, 2013, 10:19:58 AM8/22/13
to தமிழ் சிறகுகள், panbudan, Tamil2Friends digest சந்தாதாரர்கள, chenna...@googlegroups.com
அதிக செலவின்றி ஐ.ஏ.எஸ்.!

''அடுத்த வருடம் கல்லூரிப் படிப்பை முடிக்கவிருக்கும் நான், ஐ.ஏ.எஸ். தேர்வெழுத விரும்புகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வு நிலைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான அடிப்படைத் தகுதி குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் அதிக செலவின்றி இந்த தேர்வுகளுக்கு தயாராக வழியுண்டா? கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயலுமா என்றும் விளக்கம் ப்ளீஸ்..!''

- எல்.சங்கீதா, நாகப்பட்டினம்

எம்.செந்தில்குமார், சென்டர் டைரக்டர்,‘T.I.M.E’ ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர், அண்ணாநகர், சென்னை:

''ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி (UPSC)  நடத்துகிறது. முதல்நிலை,முதன்மை, நேர்முகம் (Preliminary, Main, Interview) என மூன்று நிலைகளில் இதற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மூன்றில் எந்த நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தேர்வுகளை முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும்.

ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies), ஜெனரல் அப்டிட்யூட் டெஸ்ட் (General Aptitude Test) என முதல்நிலைத் தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள். முதல் தாளில் தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 100 வினாக்கள் இருக்கும். இரண்டாவது தாளில் தலா 2.5 மதிப்பெண்கள் என மொத்தம் 80 வினாக்கள் உண்டு. அதாவது, முதல்நிலைத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 400. இதில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. மூன்று தவறான விடைகளுக்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் என்ற அளவில் அமைந்திருக்கும்.

சிவில் சர்வீஸ் நடப்பு காலிப்பணிஇடங்களை ஒட்டி முதல்நிலைத் தேர்வில்இருந்து அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை பொதுவாக காலிப்பணியிடத்தைப் போல சுமார் 13 மடங்காக இருக்கும். முதன்மைத் தேர்வில் மொத்தம் 9 தாள்கள். முதலிரண்டு தாள்களான ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிக்கான தாள்கள் தகுதி மதிப்பெண்ணுக்குரியது. தலா 250 மதிப்பெண்கள் உடைய இந்த இரண்டு தாள்களில் பெறும் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண் என்கிற வகையில் சேராது. ஏனைய 7 தாள்களில் முதலில் வருவது Essay Writing; அடுத்ததாக General Studies என்பதில் 4 தாள்களும், Optional Subjects என்பதில் 2 தாள்களுமாய் இருக்கும். தாள் ஒவ்வொன்றும் தலா 250 மதிப்பெண்களுக்கானது. ஆக, இந்த 7 தாள்களுக்கான மொத்த மதிப்பெண்கள் 1750.

காலிப் பணியிடத்தில் 2.3 மடங்காக... தேர்வாளர்கள் முதன்மைத் தேர்விலிருந்து நேர்முகத் தேர்வை எட்டுவார்கள். இதுவரை பாட ரீதியாக சோதிக்கப்பட்ட தேர்வாளர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் ஆற்றல், அவர்கள் இந்திய குடிமைப்பணிக்கு பொருந்திப்போகும் திறன் உள்ளிட்டவை, பல வல்லுநர்களால் நேரிடையாகவே மதிப்பிடப்படும். நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 275. இத்துடன் முதன்மைத் தேர்வின் 1750 மதிப்பெண்களையும் சேர்க்கக் கிடைக்கும் 2025 என்ற மொத்த மதிப்பெண்ணிலிருந்து கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படும். இதன் அடிப்படையில் முதல் ஆயிரம் பேர்களில் இருந்து, குடிமைப் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும். பாடங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மத்திய தேர்வாணையத்தின் தளத்தை - www.upsc.gov.in நாடலாம்.

தேர்வாளர்களுக்கான அடிப்படை தகுதியாக குறைந்தது 21 வயது அடைந்திருக்க வேண்டும்; அதிகபட்சமாக 30 வயது முடிந்திருக்கக் கூடாது. சமூகப்பிரிவை ஒட்டி அதிகபட்சமாக எத்தனை முறை இந்த தேர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் ஒரு வரையறை இருக்கிறது. OC பிரிவினர் 30 வயதுக்குள் 4 முறை தேர்வெழுதலாம். OBC பிரிவினருக்கு வயதில் கூடுதலாக 3 ஆண்டுகள் அல்லது தேர்வு எழுதும் எண்ணிக்கையில் 7 என சலுகை நீட்டிப்பு உண்டு. SC/ST பிரிவினருக்கு தேர்வு எழுதுவதற்கான எண்ணிக்கையில் வரம்பில்லை. ஆனால், வயது வரம்பு 35. தேர்வு எழுதும் எண்ணிக்கை, அதிகபட்ச வயது இரண்டில் முதலாவதாக எட்டுவதை கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது தகுதியோடு, பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்கள்கூட விண்ணப்பிக்கலாம். அதேசமயம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பட்டப்படிப்பு தேறியதற்கான சான்று இணைத்தாக வேண்டும்.      

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளமான இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. மனித நேய மன்றம் டிரஸ்ட் நடத்தும் பயிற்சி மையத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு உண்டு. தமிழக அரசின் சார்பிலும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. அடையாறில் அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனம் இதற்காக நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகிறது. முகவரி: 163/1, பி.எஸ் குமாரசாமிராஜா சாலை, ஆர்.ஏ.புரம் (க்ரீன்வேஸ் சாலை), சென்னை-28. தொ.பே: 044 - 24621475, 24621909. இணையதளம்:www.civilservicecoaching.com

மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி-யின் நிதி உதவியின் கீழ் பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இலவசப் பயிற்சியை வழங்குகின்றன. சில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் உதவியுடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த மதம் மற்றும் சமூகப்பிரிவு சார்ந்தும் பல்வேறு சேவை அமைப்புகள் ஆங்காங்கே இலவச பயிற்சிகளை வழங்குகின்றன. ஆன்லைனில் ஏராளமான இலவச பயிற்சிகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு... http://mrunal.org/

ஐ.ஏ.எஸ். கனவில் கல்லூரி மாணவப்பருவத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அடிப்படையிலான பள்ளிப் புத்தகங்களில் பயிற்சி, தி ஹிந்து போன்ற ஆங்கில தினசரிகளை சுலபமாகவும் விரைவாகவும் வாசித்துக் குறிப்பெடுக்கும் பயிற்சி, பொது அறிவு தலைப்பிலான புத்தகங்களில் தேர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். இந்தப் பயிற்சிகள், பிற்பாடு நீங்கள் முழுநேரமாக குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும்போது மிகவும் கைகொடுக்கும்.''

Yogesh J

unread,
Aug 22, 2013, 11:27:57 AM8/22/13
to panb...@googlegroups.com
அருமையான, விரிவான, பயனுள்ள தகவல்
தகவலுக்கு நன்றி அண்ணா!

On 8/22/13, ஸ் பெ <stalinf...@gmail.com> wrote:
> அதிக செலவின்றி ஐ.ஏ.எஸ்.!
>
> ''அடுத்த வருடம் கல்லூரிப் படிப்பை முடிக்கவிருக்கும் நான், ஐ.ஏ.எஸ்.
> தேர்வெழுத விரும்புகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வு நிலைகள் மற்றும்
> விண்ணப்பித்தலுக்கான அடிப்படைத் தகுதி குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
> மேலும் அதிக செலவின்றி இந்த தேர்வுகளுக்கு தயாராக வழியுண்டா? கல்லூரிப்
> படிப்பை முடிக்கும் முன்பே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயலுமா என்றும்
> விளக்கம் ப்ளீஸ்..!''
>
> - எல்.சங்கீதா, நாகப்பட்டினம்
>
> எம்.செந்தில்குமார், சென்டர் டைரக்டர்,‘T.I.M.E’ ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர்,
> அண்ணாநகர், சென்னை:
>
> ''ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்)
> தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி (UPSC)
> நடத்துகிறது. முதல்நிலை,முதன்மை, நேர்முகம் (Preliminary, Main, Interview)
> என மூன்று நிலைகளில் இதற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மூன்றில் எந்த
> நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தேர்வுகளை முதலில் இருந்துதான்
> தொடங்கியாக வேண்டும்.
>
> ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies), ஜெனரல் அப்டிட்யூட் டெஸ்ட் (General
> Aptitude Test) என முதல்நிலைத் தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள். முதல் தாளில்
> தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 100 வினாக்கள் இருக்கும். இரண்டாவது தாளில் தலா
> 2.5 மதிப்பெண்கள் என மொத்தம் 80 வினாக்கள் உண்டு. அதாவது, முதல்நிலைத்
> தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 400. இதில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ்
> மதிப்பெண் உண்டு. மூன்று தவறான விடைகளுக்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் என்ற
> அளவில் அமைந்திருக்கும்.
>
> சிவில் சர்வீஸ் நடப்பு காலிப்பணிஇடங்களை ஒட்டி முதல்நிலைத் தேர்வில்இருந்து
> அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
> தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை பொதுவாக
> காலிப்பணியிடத்தைப் போல சுமார் 13 மடங்காக இருக்கும். முதன்மைத் தேர்வில்
> மொத்தம் 9 தாள்கள். முதலிரண்டு தாள்களான ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிக்கான
> தாள்கள் தகுதி மதிப்பெண்ணுக்குரியது. தலா 250 மதிப்பெண்கள் உடைய இந்த இரண்டு
> தாள்களில் பெறும் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண் என்கிற வகையில் சேராது.
> ஏனைய 7 தாள்களில் முதலில் வருவது Essay Writing; அடுத்ததாக General Studies
> என்பதில் 4 தாள்களும், Optional Subjects என்பதில் 2 தாள்களுமாய் இருக்கும்.
> தாள் ஒவ்வொன்றும் தலா 250 மதிப்பெண்களுக்கானது. ஆக, இந்த 7 தாள்களுக்கான மொத்த
> மதிப்பெண்கள் 1750.
>
> காலிப் பணியிடத்தில் 2.3 மடங்காக... தேர்வாளர்கள் முதன்மைத் தேர்விலிருந்து
> நேர்முகத் தேர்வை எட்டுவார்கள். இதுவரை பாட ரீதியாக சோதிக்கப்பட்ட
> தேர்வாளர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் ஆற்றல், அவர்கள் இந்திய
> குடிமைப்பணிக்கு பொருந்திப்போகும் திறன் உள்ளிட்டவை, பல வல்லுநர்களால்
> நேரிடையாகவே மதிப்பிடப்படும். நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 275.
> இத்துடன் முதன்மைத் தேர்வின் 1750 மதிப்பெண்களையும் சேர்க்கக் கிடைக்கும் 2025
> என்ற மொத்த மதிப்பெண்ணிலிருந்து கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படும். இதன்
> அடிப்படையில் முதல் ஆயிரம் பேர்களில் இருந்து, குடிமைப் பணியிடங்களுக்கான
> காலியிடங்கள் நிரப்பப்படும். பாடங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மத்திய
> தேர்வாணையத்தின் தளத்தை - www.upsc.gov.in நாடலாம்.
>
> *
> --------------------------------------------------------------------------------------------------------------
> *
> *இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
> இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
> இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
> -------------------------------------------------------------------------------------------------------------------------
> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
> ----------------------------------------------------------------------------------------------
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
your friend yogesh
you can't study well with out
techknology, today!
you can't stand steadily with out techknology, tomorrow
so keep learning

skype me
romio.yogesh, yogesh92
FB
yogeshyogi
twitter
romioyogesh

ஸ் பெ

unread,
Jan 31, 2014, 10:58:41 AM1/31/14
to panbudan, தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, stalinfelix, sxcce_it2005, chenna...@googlegroups.com

ஐஏஎஸ் தேர்வுக்கு  இலவசப் பயிற்சி

ஜி.மீனாட்சி


அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் ‘புதிய தலைமுறை கல்வி’ இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் இலவசப் பயிற்சியில் சேர என்ன தகுதி வேண்டும்? மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?


அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், இருப்பிடமும், பயிற்சியும் இங்கு இலவசம்.


ஆதிதிராவிட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்காக தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தமிழக அரசு அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மையமாக பிப்ரவரி 2000 முதல் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நுழைவுத் தேர்வின் மூலம் முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination) 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி (Main Examination)  அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே மாதிரி ஆளுமைத்தேர்வு (Mock-Interview) நடத்தப்படுகிறது. அவர்கள் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட சலுகைக் கட்டணத்தில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.


இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இப்போது அரசு அதை 2,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. பிரதானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஊக்கத் தொகையும், ஆளுமைத் தேர்வுக்கு தில்லி சென்று வர 200 ரூபாய் வழிச் செலவுக்கும் அளிக்கப்படுகிறது.


இந்த மையத்தில் சேர ஒரு நுழைவுத் தேர்வை நாங்கள் நடத்துகிறோம். பட்டப்படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு வரவும், நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இங்கிருக்கும் நூலகம் போட்டித் தேர்வுகள் எழுத அனைத்து வசதிகளும் கொண்ட அருமையான நிலையமாகும்.  இங்கு 21,000 புத்தகங்கள் உள்ளன. கணினிக்கென்றே தனி அறையும் உள்ளது. இங்குள்ள கருத்தரங்குக் கூடம் குளிர்சாதன வசதி கொண்ட அருமையான அரங்கமாகும்.  


இந்த நிறுவனத்திலேயே இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த பேராசிரியர்களும், வல்லுநர்களும் அழைப்புப் பேராசிரியர்களாக தருவிக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்ற அலுவலர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கி இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள்.  தில்லி போன்ற நகரங்களில் பயிற்சி மையம் நடத்தும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிகிறவர்களையும் அவ்வப்போது பாடங்களை நடத்தவும், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தவும் பயன்படுத்திக் கொள்கிறோம். மாணவர்களே விருப்பப்படும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களும் இங்கு வந்து வகுப்புகளை கவனிக்க தடையேதும் நாங்கள் விதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து நிறைய பேர் இப்பணிகளுக்குச் சென்று, நம் பெருமையை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.


இந்தப் பயிற்சி மையத்தில் எத்தனை பேர் பயிற்சி பெறுகிறார்கள்? எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்?

தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 300 பேர் ஒவ்வொரு வருடமும் பயிற்சி பெறுகிறார்கள். 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 432 தமிழக மாணவர்கள் பல்வேறு குடிமைப்பணி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய பயிற்சி மையத்திலிருந்து 2010-ஆம் ஆண்டில் 48 பேரும், 2011-ஆம் ஆண்டில் 47 பேரும், 2012-ஆம் ஆண்டில் 49 பேரும் அகில இந்திய அளவில் உயர்ந்த இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு மையத்தை தங்கள் மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் வந்து பார்த்தவண்ணம் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் இருந்தும் இதைப் பார்ப்பதற்காக வருகை புரிய உள்ளார்கள்.


முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவோருக்காக மாதிரி நேர்முகத் தேர்வை (Mock Interview) நடத்துகிறீர்களா?

ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அவசியம். எனவே மத்திய தேர்வாணயம் நடத்துவது போலவே நாங்கள் நான்கு ஐந்து முக்கியமான அலுவலர்கள், தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள், மனநல வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்டு அச்சு அசலாக மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்துகிறோம். இதனால் மாணவர்கள் பயமும், பதற்றமும் இன்றி தில்லியில் நடக்கும் ஆளுமைத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கவும் செய்கிறோம். இவையெல்லாம் அவர்களை மெருகேற்றுகின்றன.


வருங்காலத் திட்டங்கள் எவை?

அண்ணா மேலாண்மை நிறுவனம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு துணை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், வணிக வரி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற அ தொகுதி அலுவலர்களுக்கு ஐந்து வார அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற ஆ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.


பவானி சாகரில் அரசு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படைப் பயிற்சியும், துணை வட்டாட்சியர்களுக்கு 28 நாட்கள் இடைநிலைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.


இந்திய வனப்பணி, முதல் பிரிவு போட்டித் தேர்வு போன்றவற்றிற்கும் அறிமுகப் பயிற்சியை நடத்தலாம் என்று பரிசீலித்து வருகிறோம். அது தவிர அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை குழு விவாதமாகவும், கலந்துரையாடலாகவும், ரோல் ப்ளேவாகவும் நடத்தி பயிற்சியை வாழ்க்கையோடும், பணியோடும் தொடர்புபடுத்தும் விதமாக மாற்ற இருக்கிறோம். இப்போது தமிழக அரசு 36.23 கோடி ரூபாய் ஒதுக்கி, பவானி சாகரில் மிகச் சிறந்த பயிற்சிக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.   


இங்கு பயிற்சியாளர்களுக்கு நல்ல நூலகம், கணினி அறை, விளையாட்டுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் இந்தப் பயிற்சி மையம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி தரப்படாமல் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் அழைப்புப் பயிற்சி அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக பயிற்சியின் தரத்தை எல்லா வகைகளிலும் பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். பயிற்சியாளர்களும் இந்த மாற்றங்களை நேசித்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் போட்டிகள், படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் சஞ்சிகைகள் போன்றவற்றை ஏற்படுத்தி பயிற்சியை அயர்ச்சியில்லாத அனுபவமாக மாற்றியிருக்கிறோம்.


சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் தாங்கள் காணும் பொதுவான குறைபாடுகள் என்ன?

நமது மாநில மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.


சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி?  

சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.  இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக  நடத்தப்படுகிறது.  பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.  


இத்தேர்வை எழுத குறைந்தபட்ச வயது  21.  பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.  பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.  


இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.  


மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.  


முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.


ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.  


சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாரவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம்.   


ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் வலம் வரும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களாக நீங்கள் கருதுவது என்ன?

உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, கனிவு, கருணை, மக்களோடு பணியாற்றும் ஆர்வம், பணத்திற்கு ஆசைப்படாத எளிமை, எப்போதும் மற்றவர்கள் சந்திக்கும் அளவு இயல்பான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட மாணவர்கள் காத்திரமான அலுவலர்களாகப் பரிமளிப்பார்கள்.



--

Sk Natarajan

unread,
Jan 31, 2014, 11:58:41 PM1/31/14
to தமிழ்ச் சிறகுகள், panbudan, stalinfelix, chenna...@googlegroups.com
பயன் தரும் பகிர்விற்கு நன்றி ஸ்பெ


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2014-01-31 ஸ் பெ <stalinf...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages