விறகு அடுப்பு

396 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Dec 2, 2012, 10:16:55 PM12/2/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், nadpudan, piravakam, வல்லமை, தென்றல், vishalam's page
5 பேர் கொண்ட எங்க குடும்பம்..
 என் சின்ன வயசில (6-10 வயது வரை இருக்கலாம்)
  20 அடி * 20 அடி சின்ன குடுசை வீட்டில் தான் இருந்தோம் ..
ஒரு மூலையில் ஒரு விறகு அடுப்பும், பாத்திரங்கள் வைக்க பக்கத்தில் ஒரு ஸ்டாண்டும் இருக்கும்
 அதான் சமையலறை.

அடுப்பு எரிக்க தேவையான விறகுகளை, விறகு கடையிலிருந்து தான் வாங்கனும்.
விறகோடு சிறிது மண்ணென்ணையும் தேவை..
மண்ணென்ணை ரேசனில் கொடுப்பாங்க.. அதுக்கு 4 அல்லது 6 மணி நேரம் வரிசையில்
நின்னு வாங்கனும்.. பெரும்பாலும் அம்மா  வாங்கி வருவாங்க.. சனி , ஞாயிறுகளில்
சில சமயம் நான் போய் லைனில் நின்னு வாங்கனும்.. கொடுமையா இருக்கும்..
சில சமயம் சண்டை வேற போட்டுக்குவாங்க மக்கள். என்ன ஒரே ஜாலினா..
நிறைய கலர் கலரான  பூக்களும் , காய் கனிகளும் வந்து லைனில் நிற்கும்.. 

பல வருடங்களுக்கு முன்னால தெருவுக்கு ஒரு விறகு கடையாவது இருக்கும்..
விறகு கடைக்குள் நுழைந்தாலே ஒரு வித மர வாசனை அடிக்கும்.. மிகவும் பிடித்த வாசனை அது.
(இப்ப அந்த வாசனை என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது)

விறகு வாங்கி வீட்டில் ஸ்டாக் வைப்பதெல்லாம் இல்லை.. அப்பப்ப தேவையான விறகை
கடையில் போய் வாங்கிவர வேண்டியது தான்.

பெரும்பாலும் எங்க அண்ணன் தான் வாங்கிட்டு வருவான்.. 
சில சமயம் நான் போய் வாங்கிட்டு வரணும்.. இது இன்னொரு கொடுகையான விசயம்..
சில சமயம் காலை 6 மணிக்கு வாங்கிட்டு வரவேண்டி இருக்கும்.
விறகு கடையிலிருந்து வீடு வரை சில தெரிந்த தோழிகள் வீடு இருக்கு.. அவங்க நான் விறகு தூக்கிட்டு வருவதை பார்திட்டா என்ன ஆகும்.....^(&*)*(&()_(.!

2கி அல்லது 4 கிலோ விறகை இரண்டு கைகளில் தூக்கிட்டு  4 தெரு நடந்து வரணும்..
விறகு வாங்கியதும்.. நாம கை நீட்டி நிற்கனும்..கடை காரர் விறகுகளை
நம் கையில் அடுக்கி வைப்பார்.. விறகை இறக்கு வைக்கும் வரை கைகளை எதற்கும் உபயோகிக்க முடியாது..
வீடு போய் சேரும் வரை, விறகு குத்தினாலோ, கொசு கடித்தாலோ,  நாய் துரத்தினாலோ, டிரவுசர் கழண்டு விழுந்தாலோ.. அவ்ளோ தான்.!!!!!!!!!!

விறகு அடுப்பில் நெருப்பு குறையும் போது ஒரு ஊது குழல்( பெயர் மறந்து விட்டது) கருப்பா, உருளையா ,நீளமா இருக்கும்  அதை கொண்டு ஊதினால் நெருப்பு பிடிக்கும்...

சில சமயம் அம்மா வேறு வேலையா இருக்கும் போது பார்த்துக்க சொல்லுவாங்க...
அவ்ளோ தான் புகை கண்ணில் போய் எரியும்...

விறகு அடுப்பில் சமைக்கப்படும் சோறும் , குழம்பும் தனி ருசி தான். !

மின்சாரமில்லா  தமிழகத்தில் விரைவில் வீடுகளில் இந்த விறகு அடுப்பு திரும்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதான் விறகு அடுப்பு.
 (நல்ல விறகு அடுப்பு படம் கிடைக்க வில்லை)
Inline image 1

.........................


காமேஷ்

unread,
Dec 3, 2012, 12:41:55 AM12/3/12
to thamizh...@googlegroups.com, பண்புடன்
 ஹ ஹ ...
 வி.வி.சி



2012/12/3 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
காமேஷின் மடல் படித்த எனக்கு அந்த நாள் நினைவு வந்தது.

எங்கள் வீட்டில் வெட்டிய மரத்துண்டுகளாக வண்டியில் வரும் விறகினை பூரா வண்டியுமாக வாங்குவார்கள். 
பின் கோடாலி தூக்கிக் கொண்டு, "விறகு வெட்டலீயோ விறகு" என்று கத்திக் கொண்டு வருபவரைக் கூப்பிட்டு
வெட்டச் சொல்லுவார்கள்.  வெட்டிய விறகுத் துண்டுகளை வென்னீர் உள்ளே (அதான் குளியலறை உள்ளே) 
கொண்டு அடுக்க வேண்டியது எங்கள் வேலை.  இரு கைகளையும் நீட்டிப் பிடித்துக் கொண்டு முழங்கை முதல் 
மணிக்கட்டு வரை அடுக்கியதை வாசலில் இருந்து கொல்லை வரை தூக்கிச் செல்ல வேண்டும்.  ஒரொரு சமயம்
சிலாம்புகள் கைகளில் குத்தும்.  விறகு வெட்டி வரவில்லை என்றால் நாங்களேவும் உடைக்க வேண்டி வரும்.

புதிதாக உடைக்கப் பட்ட மரம் எழுப்பிடும் வாசனையெ தனிதான்.

கான்பூரில் நடந்த ஒரு சம்பவம்:

எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் விறகு தேவைப் பட்டது.  வீட்டுக்குப் புதிதாய் வந்திருந்த ஒரு சிறுவனை விறகுக் கடைக்கு அனுப்பினார்கள்,  "சாலீஸ் கிலோ லக்டி பேஜ்னா" ன்னு சொல்லி இந்த ரூபாயெக் குடு கடெய்க் காரங்கிட்டெ.  அவன் அனுப்புவான்" என்று சொல்லி.

கடைக்குச் சென்றவன் சிறிது நேரத்திற்லகெல்லாம்திரும்பி வந்தான், "கடைக்காரன் தரமாட்டேங்கறான், வீட்டுலெ யாராவது பெரியவங்களெ அனுப்புன்னு சொல்றான்" என்றபடி.  என் நண்பர் கடைக்குச் சென்றார் என்னவென்று விசாரித்து வர.

கடைக்காரன் சொன்னான், "பாபூஜி லட்கா சாலீஸ் கிலோ லட்கி மாங்க்றகாத்தா.  மைனே போலா பாபூ தூ தோ இத்னா சோடே ஹோ.  சாளீஸ் கிலோ லட்கி லேகே தும் க்யா கரோகெ.  கிசி படே ஆத்மீக்கு பேஜோ கற்கே போலா மைனே" என்று சிரித்தார்.  (லக்டி = கட்டை/விறகு.  லட்கி = பெண்)
 

2012/12/3 Balaji Baskaran <bas.b...@gmail.com>
நல்லா எழுதியிருக்கீங்க காமேஷ்... 

காமேஷ்

unread,
Dec 3, 2012, 12:43:46 AM12/3/12
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், nadpudan, piravakam, வல்லமை, தென்றல், vishalam's page
இதோ இதே அடுப்பு தான்..

ஓவியமா இது ?  நம்பவே முடியல..

பட்டு பாவாடை போட்டு  அடுப்பு அருகே உட்காருவது ஆபத்து தான்.

.........................




2012/12/3 Ponchandar K <ponch...@gmail.com>
Inline images 1

தீ மூட்டி குழல்

ஓவியம் : இளையராஜா
 
images.jpg

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 3, 2012, 1:36:28 AM12/3/12
to பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், nadpudan, piravakam, வல்லமை, தென்றல், vishalam's page
விறகு காசு குடுத்து வாங்கும் பணக்காரர்களா நீங்கள் ?  விறகுகளை நாங்கள் மலைக்குச் சென்று வெட்டி எடுத்து வரவேண்டும். இல்லாவிட்டால் கருவேல முள் போன்றவற்றை வெட்டி எடுத்து உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.  விறகு புராணம் சற்றே இரத்தம் சொட்டும் புராணம். எழுதத்தான் வேண்டுமா என்ன ?


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/3 காமேஷ் <kame...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

images.jpg

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:07:00 AM12/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன்
தெற்கே இதை ”தீ மூட்டி குழல்’ என்பார்கள். பேச்சு வழக்கில் தீமட்டிகுழல். இப்போ அது பயன்பாட்டில் இல்லைனு நினைக்கிறேன்.

தீ நின்று எரிய தெற்கில் உமி/வரட்டி பயன்படுத்துவார்கள்.

தீ பற்ற வைப்பதற்கு தென்னை/பனை ஓலை அல்லது எள்ளு/வெள்ளைப்பயர் சருகை பயன்படுத்துவார்கள். தீ வேகமா எரிய துவரங்குச்சி/கள்ளி (கற்றாளை) /பனை மட்டை பயன்படுத்துவார்கள்.

தென்னை மட்டை, பனியா மர கம்பு, முருங்கை கம்பு ஆகியவற்றை எரித்தால் அதிக சாம்பல் சேரும்.

2012/12/3 காமேஷ் <kame...@gmail.com>
விறகு அடுப்பில் நெருப்பு குறையும் போது ஒரு ஊது குழல்( பெயர் மறந்து விட்டது) கருப்பா, உருளையா ,நீளமா இருக்கும்  அதை கொண்டு ஊதினால் நெருப்பு பிடிக்கும்...

//
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser


Gokul Kumaran

unread,
Dec 3, 2012, 2:14:31 AM12/3/12
to Panbudan
எங்கள் ஊரில் “ஒலாம்பெட்டி” என்று சொன்னதாக ஞாபகம். கேட்டுச் சொல்கிறேன்.

2012/12/3 Ramesh Murugan <rames...@gmail.com>

தெற்கே இதை ”தீ மூட்டி குழல்’ என்பார்கள். பேச்சு வழக்கில் தீமட்டிகுழல். இப்போ அது பயன்பாட்டில் இல்லைனு நினைக்கிறேன்.



--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 3, 2012, 2:22:53 AM12/3/12
to பண்புடன்
நாங்க ஊதாங்கோல்னு சொல்லுவோம்.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/3 Gokul Kumaran <gokul...@gmail.com>

Gokul Kumaran

unread,
Dec 3, 2012, 2:28:42 AM12/3/12
to Panbudan
ம்ம் மறந்து போச்சு. ஊதாங்குழல்-னு கூட ஞாபகம் :)

உலம்பெட்டி என்பது மண்சட்டியை மூடுவதற்கு உள்ள சாதனம்.

2012/12/3 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

நாங்க ஊதாங்கோல்னு சொல்லுவோம்.

Ganesh kumar

unread,
Dec 3, 2012, 3:26:10 AM12/3/12
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com
On 12/3/12, Ramesh Murugan <rames...@gmail.com> wrote:
> தெற்கே இதை ”தீ மூட்டி குழல்’ என்பார்கள். பேச்சு வழக்கில் தீமட்டிகுழல்.
> இப்போ அது பயன்பாட்டில் இல்லைனு நினைக்கிறேன்.


எங்கம்மா
அடுப்பாங்குழல்னு சொல்லுவாங்க

Gokul Kumaran

unread,
Dec 3, 2012, 3:27:15 AM12/3/12
to Panbudan
இது தான் சரின்னு நினைக்கேன். ச்சே ரொம்ப வயசாகிப்போச்சு :(

2012/12/3 Ganesh kumar <mara...@gmail.com>
எங்கம்மா
அடுப்பாங்குழல்னு சொல்லுவாங்க

PRASATH

unread,
Dec 3, 2012, 3:36:39 AM12/3/12
to Groups
எங்க ஊருலயும் ஊதாங்கோல் தான்....
 
ஊதுகுழலில் இருந்து வந்தது இந்த ஊதாங்கோல்... காற்று ஊதுவதற்கு பயன்படுவதால் ஊதுகுழல்...


2012/12/3 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
நாங்க ஊதாங்கோல்னு சொல்லுவோம்.


 

காமேஷ்

unread,
Dec 3, 2012, 3:36:51 AM12/3/12
to panb...@googlegroups.com, muththamiz, தமிழ் சிறகுகள், nadpudan, piravakam, வல்லமை, தென்றல், vishalam's page
//  விறகு புராணம் சற்றே இரத்தம் சொட்டும் புராணம்//
வாவ் அப்படியே.. 
போடுங்களேன் பாக்கலாம்...!

//விறகுகளை நாங்கள் மலைக்குச் சென்று வெட்டி எடுத்து வரவேண்டும்.//

உங்க ஊர்ல ஏதுங்க மலை ? நான் கேள்விபட்டதே இல்லியே !
.........................




2012/12/3 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
விறகு காசு குடுத்து வாங்கும் பணக்காரர்களா நீங்கள் ?  விறகுகளை நாங்கள் மலைக்குச் சென்று வெட்டி எடுத்து வரவேண்டும். இல்லாவிட்டால் கருவேல முள் போன்றவற்றை வெட்டி எடுத்து உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.  விறகு புராணம் சற்றே இரத்தம் சொட்டும் புராணம். எழுதத்தான் வேண்டுமா என்ன ?
 

காமேஷ்

unread,
Dec 3, 2012, 3:42:30 AM12/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன்
பாட்டியுடன் சேர்ந்து வரட்டி தட்டிய காலம்.. ஒரு காலம்..ஹ ஹ..
அதை எடுத்து பிழிஞ்சி..கசக்கி.. வட்டமா உருட்டி எடுத்து , பின் வட்டமாக தட்டி..
சில சமயம் புழுக்களா இருக்கும்.. உவ்வேனு வரும்..

எங்க பக்கத்து வீட்டு மளயாளீஸ் வீட்டில் மாடு இருந்திச்சி.. 
அவங்க வீட்டு சுவரில் தினம் வரட்டி தட்டுவாங்க..

கன்னு போட்டா எங்க வீட்டுக்கு முதல் பால் (ஏதோ சொல்லுவாங்க) அது வந்திடும்..
அதை சுண்ட காச்சி.. சர்க்கரை போட்டு கொடுப்பாங்க..
திக்கா இருக்கும்..  இனி ஒரு முறை அது மாதிரி சாப்பிட கிடைக்குமானு தெரியல..

மாட்டு சாணம் வாசம் வித்தியாசம்.

//எள்ளு/வெள்ளைப்பயர் சருகை //
// துவரங்குச்சி/கள்ளி (கற்றாளை//
//பனியா மர கம்பு, //
நான் பார்த்ததே இல்லை
.........................




2012/12/3 Ramesh Murugan <rames...@gmail.com>
தெற்கே இதை ”தீ மூட்டி குழல்’ என்பார்கள். பேச்சு வழக்கில் தீமட்டிகுழல். இப்போ அது பயன்பாட்டில் இல்லைனு நினைக்கிறேன். ஆகியவற்றை எரித்தால் அதிக சாம்பல் சேரும். 

ஆசாத்

unread,
Dec 3, 2012, 3:46:47 AM12/3/12
to panb...@googlegroups.com
> காமேஷ் wrote:
கன்னு போட்டா எங்க வீட்டுக்கு முதல் பால் (ஏதோ சொல்லுவாங்க) 

சீம்பால்.

PRASATH

unread,
Dec 3, 2012, 3:50:09 AM12/3/12
to vallamai, Groups, தமிழ் சிறகுகள், nadpudan, தென்றல்
ஹ்ம்ம்... அடுப்பு சமையலைப் பத்தி நெறைய பேசலாம்...
 
வேலையை முடிச்சுட்டு வர்றேன்..

காமேஷ்

unread,
Dec 3, 2012, 3:55:25 AM12/3/12
to panb...@googlegroups.com
ஆமா ஆமா சீம்பால் !

என்னைக்கு கன்னு போடும்னு தெரியும்.. அதை பார்க்க..
என்ன தான் முழுசிட்டு இருக்க டிரை பண்ணாலும்..தோல்வி தான்.


2012/12/3 ஆசாத் <banu...@gmail.com>
> காமேஷ் wrote:
கன்னு போட்டா எங்க வீட்டுக்கு முதல் பால் (ஏதோ சொல்லுவாங்க) 

சீம்பால்.

--  

Gokul Kumaran

unread,
Dec 3, 2012, 3:57:38 AM12/3/12
to Panbudan
இனிப்பு பண்டங்கள் போடும் சமையல்காரர் ஒருவர் சொல்வார், அடுப்பில் தான் டெம்பரேச்சர் கண்ட்ரோல் சரியாகப் பண்ண முடியுமாம்.

2012/12/3 PRASATH <pras...@gmail.com>

ஹ்ம்ம்... அடுப்பு சமையலைப் பத்தி நெறைய பேசலாம்...
 
வேலையை முடிச்சுட்டு வர்றேன்..

PRASATH

unread,
Dec 3, 2012, 3:58:15 AM12/3/12
to Groups
ஒரு ரெண்டு வாரம் முன்னால கூட நான் சீம்பால் குடிச்சேன்... எங்க சித்தப்பா வீட்டு மாடு கண்ணு போட்டிருந்தது...
 
நாங்க சீமபாலுக்கு வெல்லம் போட்டு தான் காய வைப்போம்... வெல்லம் இல்லாத சமயம் தான் சர்க்கரை...


2012/12/3 காமேஷ் <kame...@gmail.com>
ஆமா ஆமா சீம்பால் !

ஆசாத்

unread,
Dec 3, 2012, 4:04:45 AM12/3/12
to panb...@googlegroups.com
மரத்தூள் அடுப்பும் எனக்குத் தெரியும். மேற்புறம் மட்டும் முழுதுமாகத் திறந்து மோன்று மூக்குகள் கொண்ட உருளை வடிவில் இருக்கும். உருளையின் பரப்பில் கீழே ஒரே ஒரு துளை இருக்கும். 

மேலே ஒரு உருட்டும்க்கட்டயை வைத்துப் பிடித்துக்கொண்டு, கீழே உள்ள துளை வழியாக இன்னொரு உருட்டுக்கட்டையை செங்குத்தாக நிற்கும் உருட்டுக்கட்டையைத் தொடும்படியாக வைத்து, மரத்தூளைக் கொட்டி அடுப்பை நிறைப்பார்கள். கொஞ்சம் கெட்டிப்படுத்துவார்கள். பிறகு இரண்டு உருட்டுக்கட்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து உருவி எடுத்துவிடுவார்கள். 

இப்போது கீழிருக்கும் துளையில் ஒரு சுள்ளியை நுழைத்து எரியவிடுவார்கள். தீ மேலே எழும் வழியில் மரத்தூளை எரிக்கும் எரியும் மரத்தூள் அப்படியே நிற்கும். நின்று எரியும். கணகணவென அடுப்பில் நிலையான சூடு இருக்கும். 


Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 4:04:45 AM12/3/12
to panb...@googlegroups.com
கறந்ததை சீம்பால்னும், காய்ச்சியபின் கடம்புன்னும் சொல்லுவங்க.

sk natarajan

unread,
Dec 3, 2012, 8:08:31 AM12/3/12
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், nadpudan, piravakam, தென்றல், vishalam's page
என் வீட்டில் என்னுடைய சிறிய வயதில் குமுட்டி அடுப்பு அடுப்புக்கரி உபயோகித்து பயன் படுத்துவார்கள் ,மண்ணெண்ணை ஸ்டவ் சமையலுக்கும் , விறகு  அடுப்பு குளிக்க வெந்நீர் போடுவற்கும் பயன் படுத்தினார்கள் 76 க்குப் பிறகு காஸ் அடுப்பும் விறகு அடுப்பும் தொடர்ந்தது 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

துரை.ந.உ

unread,
Dec 3, 2012, 11:04:33 AM12/3/12
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், nadpudan, piravakam, தென்றல், vishalam's page

அருமை காமேஷ்.... 
அப்டியே விடாமல் தொடருங்கள் .... 

2012/12/3 காமேஷ் <kame...@gmail.com>
5 பேர் கொண்ட எங்க குடும்பம்..
--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

காமேஷ்

unread,
Dec 3, 2012, 8:17:13 PM12/3/12
to panb...@googlegroups.com
அப்படியா.. வெல்லம் போட்ட சீமபாலை நான் கேள்விபட்டது கூட இல்லை பிரசாத் ஜி..!


.........................




2012/12/3 PRASATH <pras...@gmail.com>

காமேஷ்

unread,
Dec 3, 2012, 8:19:03 PM12/3/12
to panb...@googlegroups.com
இது நல்ல யோசனையா தான் இருக்கு..
அடுப்பை அணைக்காமல் மீண்டும் எப்படி மரத்தூளை நிரப்புவது ?

.........................




2012/12/3 ஆசாத் <banu...@gmail.com>

காமேஷ்

unread,
Dec 3, 2012, 8:21:19 PM12/3/12
to panb...@googlegroups.com
// காய்ச்சியபின் கடம்புன்னும் சொல்லுவங்க//

ஆமாங்க சரி தான்.. 
எத்தனை வார்த்தைகள் / விசயங்களை மறந்திட்டே வரோம்.

சின்ன வயசில எங்க வீட்டில் ஆல்வலிகிழங்கு / பனங்கிழங்கை 
பூமியிலிருந்து நோண்டி எடுத்து சாப்பிடுவோம்..
என் பொண்ணு சொன்னா நம்புமானு தெரியல.. !
.........................




2012/12/3 Ramesh Murugan <rames...@gmail.com>
கறந்ததை சீம்பால்னும், காய்ச்சியபின் கடம்புன்னும் சொல்லுவங்க.

 

காமேஷ்

unread,
Dec 3, 2012, 8:24:44 PM12/3/12
to nadp...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், piravakam, தென்றல், vishalam's page
அட ஆமா எங்க வீட்டிலும் இருந்தது.. 
(நிலக்)கரி அடுப்பு..
அப்ப கடைகளிலும் (நிலக்)கரி கிடைக்கும்னு நினைக்கிறேன்..

.........................




2012/12/3 sk natarajan <sknatar...@gmail.com>

காமேஷ்

unread,
Dec 3, 2012, 8:28:27 PM12/3/12
to nadp...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், முத்தமிழ், piravakam, தென்றல், vishalam's page
அப்படியே தலைவரே ! 
இன்னும் எத்தனையோ விசயங்கள் இருக்கு..
நம்ம சங்கம் பற்றி ஒரு மேட்டர் ஆரம்பிச்சி பல நாட்கள் ஆகுது முடிக்கவே முடியல..

.........................




2012/12/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

AbulKalam Azad

unread,
Dec 3, 2012, 10:36:04 PM12/3/12
to panb...@googlegroups.com
> காமேஷ் <kame...@gmail.com>
இது நல்ல யோசனையா தான் இருக்கு..
அடுப்பை அணைக்காமல் மீண்டும் எப்படி மரத்தூளை நிரப்புவது ?

முடியாதுஜீ.

காலைல எரியற அடுப்புல சூடு இருந்துக்கிட்டே இருக்கும். எல்லா சமியலும் முடிஞ்சப்புறந்தான் அடுப்பை அணைப்பாங்க. அப்பவும் அதுவாத்தான் அணையும். ஒரு பாத்திரத்துல தண்ணி புடிச்சு அதுல வெச்சுருவாங்க. தண்ணி சூடாயிட்டே இருக்கும். 

அதுவா அணைஞ்சப்புறம் சாம்பலக்கொட்டிட்டு அடுத்த நாள் காலைல அடுத்த நிரப்பல்.

சும்மா ஒரு டீ போர்ரதுக்கெல்லாம் இந்த அடுப்பு செரியாவாது :-) காலைல பத்த வெச்சா மொத்த சமையலும் முடியற வரைக்கும் :-)

 

துரை.ந.உ

unread,
Dec 3, 2012, 10:39:42 PM12/3/12
to panb...@googlegroups.com


2012/12/4 AbulKalam Azad <banu...@gmail.com>
ஆசாத் ஜீ... நடுவுல பாட்டில வச்சி நாங்க  (லேசா தண்ணி தெளிச்சு ) மரத்தூள் அடைப்போம்.. எடுக்க ஈசியா இருக்கும் ..

கொஞ்ச சமையல்ன்னா ..பாதி அடுப்புக்கு தூள் அடைப்போம் ..இல்ல்லேன்னா குட்டியூண்டு அடுப்பும் தனியா உண்டு :))
 

 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

காமேஷ்

unread,
Dec 3, 2012, 10:52:35 PM12/3/12
to panb...@googlegroups.com
//நடுவுல பாட்டில வச்சி நாங்க  (லேசா தண்ணி தெளிச்சு ) //

என்னது அடுப்புக்கு நடுவுல பாட்டிய வச்சா ? 
பாட்டி பாவமில்லியா ?

.........................

2012/12/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

 
ஆசாத் ஜீ... நடுவுல பாட்டில வச்சி நாங்க  (லேசா தண்ணி தெளிச்சு ) மரத்தூள் அடைப்போம்.. எடுக்க ஈசியா இருக்கும் ..

காமேஷ்

unread,
Dec 3, 2012, 10:54:01 PM12/3/12
to panb...@googlegroups.com
அப்படியா.. அவ்ளோ நேரம் தாங்குமா..?
பரவால்லியே..இது ரொம்ப விலை குறைவான அடுப்பா இருக்கே !

இப்பவும் இந்த அடுப்பு இருந்தா உதயனிடம் படம் எடுத்து வைக்க சொல்லுங்க..!
வருங்கால மக்களுக்கு காட்டலாம்..!


2012/12/4 AbulKalam Azad <banu...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Dec 3, 2012, 11:30:20 PM12/3/12
to பண்புடன்
​பொட்டு அடுப்பு - மரத்தூள் அடுப்பு என்பது தான் து​ரை அவர்கள் கூறுவது.
மரஅறுப்பு ஆ​லைகள் இருக்கும் பகுதியினில் இத​னை காணலாம்.
இதில் நடுவில் பாட்டி​லை ​வைத்து சுற்றியும் மரத்தூ​ளை நிரப்புவது நடக்கும்.

2012/12/4 காமேஷ் <kame...@gmail.com>

//நடுவுல பாட்டில வச்சி நாங்க  (லேசா தண்ணி தெளிச்சு ) //

என்னது அடுப்புக்கு நடுவுல பாட்டிய வச்சா ? 
பாட்டி பாவமில்லியா ?

AbulKalam Azad

unread,
Dec 3, 2012, 11:40:17 PM12/3/12
to panb...@googlegroups.com
> <vce.pr...@gmail.com>
ஆசாத் ஜீ... நடுவுல பாட்டில வச்சி நாங்க  (லேசா தண்ணி தெளிச்சு ) மரத்தூள் அடைப்போம்.. எடுக்க ஈசியா இருக்கும் ..

இந்த யோசனை நம்மாளுங்களுக்குத் தோணலையே :-( ஒரு சீவின உருட்டுக்கட்டையத்தான் உபயோகிச்சாங்க. 
Reply all
Reply to author
Forward
0 new messages