திருப்பாவை

130 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 17, 2012, 2:31:45 PM12/17/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்

மார்கழித் திங்கள்... திருப்பாவை -1


001 -
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

***
சீர்மிகுந்த ஆயர்பாடிச் செல்வச் சிறுமிகளே, மார்கழி மாதத்தில் பூர்ணச் சந்திரனொளியில் நீராடக் காத்திருக்கும் சிறுமிகளே வாருங்கள். 
பகைவர்க்கு கூர்வேலைக் கொண்டு கொடுந்தொழில் புரியும் நந்த கோபரின் மகனும், அழகிய  மலரரும்பு போன்ற கண்களையுடைய (ஏர் = அழகு , கண்ணி = அரும்பு,  மலர் மாலை ) யசோதையின்  இளஞ்சிங்கம் போன்ற புதல்வன் அவன் கருமையான உடலுடையவன். ஆனால் முகமோ ஒளிவீசும் நிலவையொத்தது.  அப்படிப் பட்ட  நாராயணன் நமக்கு வரங்கள் ( பறை = சொல் ) தருவான். அப்படிப் பாரோர் புகழும் வண்ணம்  நாம் நோன்பு நோற்று  நம் பாவையை வணங்குவோம். 
***
மார்கழி திங்கள் அதாவது மார்கழி மாதம்.  மாதங்களில் நான் மார்கழி என்று கீதையிலே கண்ணன் சொல்லுகின்றான்.

அப்படி என்ன சிறப்பு மார்கழிக்கு ?  ஆடியில காத்தடிச்சா, ஐப்பசியில் மழை பொழியும் ஆறு குளம் நிறைஞ்சிருக்கும். இந்த மழைக்காலம் முடிந்து தொடர்வது மார்கழி மாசம்.

தமிழகராதி இப்படிச் சொல்கிறது.

*மார்கழி, (p. 863) [ *mārkaẕi, ] s. The month corresponding mostly with December, ஓர்மாதம். (c.) 2. The fifth lunar mansion, மிரகசீரிடம். W. p. 658. MARGA. மார்கழித்திருவாதிரை. The time when the moon at full is at or near ஆதிரை.


ஆதிரை என்பது சற்றேரக் குறைய மார்கழி  பாதிக்கு மேல் அதாவது ஜனவரி முதல் வாரங்களில்  முழுநிலவுடன் தெளிவாகத்  தெரியக் கூடிய நட்சத்திரம்.  திருவாதிரை சிவ வழிப்பாட்டிற்கு மிக உகந்த நாள்.  சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனத்திற்கு லட்சக் கணக்கில் மக்கள் குவிந்து கிடப்பார்கள்.  இதே மார்கழியில் தான் வைகுண்ட ஏகாதசியும் வருகிறது.  ஸ்ரீரங்கம் முதற்கொண்டு அனைத்து வைணவத்தலங்களும் அன்று நிரம்பி வழியும் நாள்.

மேலும் மார்கழிக் காலைக் காற்றில் ஓஸோன் நிரம்பி இருப்பதால் சுவாசத்துக்கு நல்லது என்பது மருத்துவக் குறிப்பு. சிலர் மார்கழியைப் பீடை மாதம் என்பார்கள்.  பீடு உடைய மாதமா அல்லது பீடை மாதமா என்பது அவரவர் நோக்கில்.

 இப்படியான மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்பது  பழங்கால வழக்கம்.  அதாவது தன் குலதெய்வத்தை அல்லது தன் விருப்பக் கடவுளை மணலால்  ஒரு சிலை போல வடித்து அல்லது பொம்மை வைத்து அதற்கு மலர் சூடி வணங்கி தனக்கு வேண்டியவாறு கணவன் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதலும் கூடவே ஊரும் உலகமும் நலம் பெற மழை பெய்து உலகம் உய்யவேண்டும் என்று வேண்டுவதும் பாவை நோன்பின் முக்கிய நோக்கமாகும்.  இவ்வகை நோன்பு நோற்றல் ஆற்றங்கரைகளில் தான் நடக்கும்.

மார்க்கத்தின் வழியில் நடப்பது மார்கழி என்றானதாகவும் கொள்ளலாம். அல்லது மாரி கழிந்ததும் வரும் மாதம் எனவும் கொள்ளலாம்.

பாவை நோன்பு குறித்து மேலும் அறிய இங்கே செல்லுங்கள்.

(தொடரும் )

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 17, 2012, 2:33:49 PM12/17/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்

வையத்து வாழ்வீர்காள்... (திருப்பாவை -02)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
**
வையத்துள் வாழ்வோரே, நாம் நம் பாவைக்கு செய்யும் (வழிபாட்டு) முறைகள் கேளீரோ ? பாற்கடலில் மென்மையாக உறங்கும் பரமனின் அடி (புகழ்ந்து) பாடுவோம். ( இவ்வேளைகளில்) நெய் உண்ணோம், பாலுண்ணோம். காலையில் நீராடிய பின்  கண்ணுக்கு மையிடோம். தலைக்கு மலரிட்டு முடிய மாட்டோம். செய்யத் தகாத செயல்களை செய்ய மாட்டோம். கோள் சொல்லுதல், பொய்யுரைத்தல் போன்ற தீமையான செயல்களைச் செய்ய  மாட்டோம்.  ( குறளை = பொய்யுரைத்தல், கோள்மூட்டுதல், கடுஞ்சொற்கள், இழிவான சொல், பயனற்றச் சொல் ). இந்நாட்களில் தர்மமும், பிச்சையையும் இடும் இடங்களையும் முடிந்த வரைக்கும் மற்றவர்களுக்குச் சொல்லி ( ஆந்தனை = முடிந்த அளவு )  உய்வோமென்று எண்ணி மகிழ்ந்து பாவையை வழிபடுவோம். 
**



மொத்தப் பாட்டுக்கும்னு பாக்காம கொஞ்சம் எனக்குப் புரிஞ்சத உளறிக் கொட்டறேன்.

வையத்து வாழ்வீர்காள். நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ...

 அதென்ன வாழ்வீர்காள் ? ஏன் வையத்து மாந்தர்களே, வையத்திலிருப்போரே  இல்லை ?

சிறையில் இருப்பார்கள். வீட்டில் வாழ்வார்கள். மேலும் இங்கே வையத்தில் இருக்கும் மானுடர்கள் மட்டுமன்றி வாழும் அனைத்துயிரையும் குறிப்பதாகக் கருதலாம்.

//பையத் துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்//


பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடிப் பாடி..

ரொம்ப  மோசமானவருங்க இந்த நாராயணன். பாம்பென்றால் படையே நடுங்குமாம். இவரு பாம்பு மேலயே படுத்து தூங்கறாராமா. தூங்கிட்டிருக்கவன எழுப்ப முகத்துல தண்ணி  தெளிச்சு எழுப்புவோமில்லீங்களா ? ஆனா இந்த பரமனோ எப்பவும் அலைகளெழும்பி நீர் தெளிக்கும் பாற்கடல்ல படுத்துட்டு தூங்கறாராமா. அதுவும் பையத் தூங்கறாராமா.  பையன்னா Gently/Softly/with out noise  இப்படில்லாம் அர்த்தம் வருது. அதாவது தூங்கறதே பாற்கடல்ல, பாம்பு படுக்கை மேல அதுல இவரு சுத்தி எதுவும் நடக்காத மாதிரி பையத் தூங்கறாராமா. என்ன ஒரு கள்ளத்தனம் பாத்தீங்களா ? ஏனப்படித் தூங்கறாருன்னு யோசிச்சோமா ?

நீங்க வழக்கமா சின்ன சத்தத்துக்கும் எழுந்துக்கறவர்னே வச்சுப்போம். வீட்ல தூங்கறீங்க. குழந்தை ஏதோ பொம்மை தூக்கிப் போடுது.  உங்களுக்கு தூக்கம் கலைஞ்சு பொசுக்குன்னு கோவம் வருது. குழந்தைய, மனைவிய வையறதோட இல்லாம தலைல ரெண்டு அடி அடிச்சுக்கிட்டு இழுத்துப் போர்த்தித் தூங்க ஆரம்பிக்கிறீங்க.  சரி. இதே வந்து ஒரு நாள் காலைல இருந்து சரியான வேலை. உடலுழைப்பு அதிகம். உங்க வீடு கிரஹப் பிரவேசம்னு வச்சுப்போம். வரவங்கள கைக்கூப்பி வரவேற்கிறதோட சிலரைக் கைக்குலுக்கி வரவேற்கனும். சில சமயம் பெண்களையும் கைக்குலுக்கி வரவேற்பிங்க. பக்கத்துல உங்க மனைவி இருந்தா ஒரு இடி ... தோள்ல இலவசமா கிடைக்கும்.

 " சார் சாம்பார் போதுமா இன்னும் செய்யனுமா " சமையலறைல இருந்து குரல் வரும் சமையல் காரர் கிட்ட இருந்து. அங்க ஓடனும். " அவரை வரச்சொல்லுங்கோ... பூஜை ஆரம்பிக்கனும். " எல்லாத்தையும் தடால்னு விட்டு ஓடி வந்து உக்காருவீங்க.  யாகப் புகையில் கண்ணெரிய பூஜை முடிஞ்சு அக்கடான்னு உக்காரலாம்னு பாத்தா ரொம்ப தூரத்துல இருந்து ஒரு பெரியவர் வருவார். அவரை அழைச்சுட்டு வந்து அவருக்கு தேவையானத செஞ்சு குடுத்து.... அடடே உங்க பெரியக்கா தனக்கு செஞ்ச மரியாதைல கொஞ்சம் குறைச்சலா இருக்கேன்னு கோச்சுட்டு உக்காருவாங்க. அவங்கள சமாதானப் படுத்தி முடிக்கிறதுக்குள்ள..." சார் பேமெண்ட்டு " தலை சொரிஞ்சுட்டு  பணியாட்கள் நிற்பார்கள். அவங்க வயித்துல அடிக்க முடியுமா? அவங்க கேட்டதுக்கும் கூடவே ஒரு இருநூறு குடுத்து அனுப்பி வைச்சதும் வீட்டப் பாத்தா களேபரமா இருக்கும்.   அதெல்லாம் சரிபண்ணி முடிக்கும் போது மணி பத்தாகிருக்கும். வயிறு கவாங்க் கவாங்க்னு பசிக்கும். கிடைச்சத சாப்டு  போயி படுக்கறீங்க.   இப்ப உங்களுக்கு பக்கத்துல ஆட்டம்பாமே வெடிச்சாலும் உங்களுக்கு கவலை இருக்காது.  இல்லையா ?



அது மாதிரி  ஒவ்வொரு அவதாரத்துக்கும் எவ்ளோ வேலை இருக்குல்லீங்களா ? மச்ச, கூர்ம,வராக,நரசிம்ம,வாமன, ராம,பலராம,பரசுராம,கிருஷ்ண அப்படின்னு இதுவரைக்கும் ஒன்பது அவதாராம் எடுத்தாரில்லையா ? இதுல கடைசி ரெண்டு அவதாரத்துல அவர் பட்டப் பாடு கொஞ்சமா நஞ்சமா ? சீதையத் தேடி தேடி அலைஞ்சு அவர் கால்கள்  ஓய்ந்தது. அதான் பாரதத்துல சொகுசா  தேர் ஓட்டிக்கிட்டே காலம் தள்ளலாம்னு பாத்தா எங்க விடறாங்க .. ஆனா ஊனா கண்ணா, மாமணி மார்பா,  மதுசூதனான்னு இவனைல்ல கூப்டு ஒரு வழி பண்ணிட்டாங்க.  அதனால கல்கி அவதாரம் வரைக்கும் சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறார்.  சுத்தி நடக்கிற எந்த  இடைஞ்சலும் அவருக்குப் பொருட்டே அல்ல. ஆனால் பக்தர்களின் குரல்  மட்டுமே அவரை எழுப்பக் கூடியது. அதுனாலத்தான் தூங்கும் போது கூட காது பக்கத்துல கை வச்சு பக்தர்களின் குரல் நல்லா காதுல  கேக்கனும் தூங்கறார். அப்படி பக்தர்களின் குரலுக்குக் காத்திருக்கும் அந்தப் பரமனடிப் பாடி,


நாங்க நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் -- ஏங்க இதெல்லாம் உண்ணக் கூடாது ? இது தினசரி உணவு தானே ? இதே ஆண்டால் பின்னாடி

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

அப்படிங்கறார். ?  தத்துவார்த்தமான விளக்கங்கள்  சொல்லலாம் ஆனா அது வேண்டாம்.  கொஞ்சம் வேற மாதிரி பாப்போமே.
நெய்யும், பாலும் மந்தத் தன்மை ஏற்படுத்துபவை. பாலுண்டால் தூக்கம் வரும். மனசு கண்ணன் மேல போகாது. ஊரெல்லாம் சுத்தும்.  அப்புறம்


" மார்கழித் திங்கள்.."
பால் பாயாசம் செஞ்சுருக்கலாமோ
"மதி நிறைந்த நன்னாளாய் "

 அடடே... இந்த முருங்கைக் கீரைக்கு நெய்யூத்திப் பிசைஞ்சு  சாப்பிட்டா ? அப்படின்னு புறச் சுவைககளில் மனம் ஈடுபடும்.  அதனாலத்தான் நெய்யுண்ணோம், பாலுண்ணோம் ? ஏன் இதை நைவேத்தியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றால்...

மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்று புற உணர்ச்சிகளைத் தவிர்க்கிறாரே ஆண்டாள் அதனுடன் இதையும் இணைத்தால் புரிந்துவிடும்.
**
ஐயம் என்பதை தருமம் என்றும் கொள்ளலாம்.  உஞ்ச விருத்தி என்பது தவறாக அர்த்தம் கொள்ளப் பட்டிருக்கிறது.

1. உஞ்ச விருத்தி:

உஞ்சம் - பொறுக்குவது. அறுத்த வயலில் உதிர்ந்த தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்து, அதன்மூலம் உயிர் வாழ்வது - இப்படி வாழ்ந்தவர் குசேலர்.

2. கபோத விருத்தி:

கபோதம் - புறா, புறா தானியங்களைச் சேர்த்துவைக்காது, இன்றைக்குச் சேர்த்தது இன்றைக்கு, மிச்சத்தை விட்டுப் போய்விடும். இன்று தந்த இறைவன் நாளையும் தருவான் - பல ஆன்மீகவாதிகள் ( பழங்கதை:)) )

3. அஜகர விருத்தி:

அஜகரம் - மலைப் பாம்பு. இது உணவுக்கு என்று நகர்ந்து போகாது. யதேச்சையாக வந்த பிராணிகளைப் பிடித்து உண்ணும், இல்லையென்றால் பட்டினி கிடக்கும் - பட்டினத்தார் இப்படி வாழ்ந்தவர்.

 - உபயம் - கிருபானந்த வாரியார் - தேன் விருந்து

ஐயம் என்றாலும் பிச்சை இடுவது என்றொரு அர்த்தம் வரும். ஆனால்  அடுத்த வார்த்தையே பிச்சை என்பதால் முதல் வார்த்தை தருமம் என்றே கொள்ளவேண்டும். தேவை என்று வருவோர்க்கு நம்மால் ஆனதைச் செய்வோம் ஆகாவிடினும் தருமம் செய்பவர்களைக் கைக் காட்டி விடுவோம்.   அது போலவே சில பெரியோர்கள் தாமிருக்கும் இடம் பிறழ்ந்துச் சென்று இது வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். வந்தால் வரவு அவ்வளவே. அப்படியானவர்களைக் கண்டு நாம் உதவுவதே ஐயம். இதை வாசல் தேடி வரும் யாசகத்துடன் ஒப்பிடக் கூடாது.

ஐயமிட்டு உண் என்ற அவ்வையாரே ஏற்பது இகழ்ச்சி என்கிறார். ஐயமிடுதல் - தருமம் செய்தல். பிச்சை எடுத்தலை அவர் ஐயம் என்று  கூறவில்லை என்பது என் கருத்து.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 17, 2012, 2:34:37 PM12/17/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - (திருப்பாவை -03)

003 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

**
 வாமனனாய் அவதரித்து, பின் ஓங்கி உயர்ந்து தன் திருவடிகளால் உலகத்தை மூவடியில் அளந்த அந்த எம்பெருமானின் திருநாமத்தைப் பாடி நாம் நம் பாவைக்கு நம் கோரிக்கையை சொல்லி நீராடினாள், எந்த ஒரு தீங்கும் அணுகாமல், மாதம் மும்மாரி மழை பெய்யும். வயல்கள் உயர்ந்து வளரும். அப்படி வளரும் வயலில் தேங்கும் நீரில் கயல் மீன்கள் ஊடே துள்ளி விளையாடும்.  அந்த வயல்களில் கிடக்கும் குவளை மலர்களில் புள்ளிகள் உடைய ( பொறி = Spot/Mark, புள்ளி/அடையாளம் ) வண்டுகள் படுத்துறங்கும்.   அதன் மடியைப் பற்றியதும்  தன்னுள் கொஞ்சமேனும் இருக்கட்டும் என்று தேக்கி வைக்காமல் குடத்தை நிறைக்கும் வள்ளல்கள் அப்பெரும் பசுக்கள். நம் பாவைக்கு நாம் நோன்புற்று வேண்டினால் நீங்காத செல்வம் எங்கும் நிறைந்து உலகம் செழிக்கும்.

**

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய கதை ஒன்றில் " ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி " என்பதை " Bare Body " என்று கதாநாயகன் சொல்லுவது போல் கையாண்டிருப்பார்.
**

மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம்மும்மாரி மழை பொழிகிறதா ...
இல்லை மகாராஜா.. அதற்காகத்தான் வருணபகவானுக்கு கடகட்டு தந்தி அனுப்பி இருக்கிறோம்.
-- பராசக்தி வசனம்.

அதென்ன மாதம் மும்மாரி?

 நாட்டு மக்களின் வாழ்வின் நலம் கருதி, தன்னலமற்றும் வேதமோதும் வேதியர்க்காக ஒரு மழை, நீதி வழுவா நிலை நின்ற செங்கோல் மன்னன் ஆட்சிக்கு ஒரு மழை, பத்தினிப் பெண்களுக்கு ஒரு மழை என்பது கணக்காம்.
**

இந்த கயல் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி  சற்றேறக் குறைய இதே காட்சிப்படுத்தலாக  பல பாடல்களில் காணக் கிடைக்கிறது. பன்னிருத் திருமுறையில் முதலாம் திருமுறையில் சம்பந்தரின் பாடல் ஒன்று ( நன்றி http://www.thevaaram.org)


பங்க யங்கண் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையும் மிறையாரே.

பொழிப்புரை :

எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.


 ஒன்பதாம் திருமுறைப் பாட்டு ( நன்றி: தேவாரம் வலைத்தளம் ) ஒன்றிலும் காணலாம்.

தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
    கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
    பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
    அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
    தென்னுள் நின்றனவே. 

பசுக்கூட்டங்கள் வயல்களில் களையாக முளைத்த தாமரைக் கொடிகளின் பூக்களை மேயவும் அவற்றின் கால்களில் மிதிபட்டுக் கருப்பஞ்சாறு வயல்களில் பாயவும், தாக்குண்ட கயல் மீன்கள் வருந்தி நீர்மடையை நோக்கிப் பாயும் தில்லையம்பதியிலுள்ள அம்பலப்பெருமானுடைய முறுக்கிய நீண்ட சடையும், அச்சடையில் சிறிது மலர்ந்த மொட்டோடு கூடிய ஊமத்தம் பூக்களும் பிறைச் சந்திரனும் உடைய திருமுடிகள் என்றும் நீங்காது அடியேனுடைய உள்ளத்தில் நிலை பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் ஆவான்.

(தொறுக்கள் =பசுக்கள்)

shylaja

unread,
Dec 17, 2012, 8:21:24 PM12/17/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
இந்தப்பாசுரத்தில்   உத்தமன் என்கிறாள்  ஏன்   உத்தமனின் குணம் என்ன தெரிகிறதா?   தீங்கின்றி  நாடெல்லாம்...அதாவது பெருமழையும் கூடாது  தூறிட்டும் போகக்கூடாதாம்  தீமை செய்யாத நல்ல மழையாம்  இப்படி வரிக்குவரி பொக்கிஷங்கள்

2012/12/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>



--
ஷைலஜா
 


sk natarajan

unread,
Dec 17, 2012, 9:46:20 PM12/17/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
இன்று மார்கழி மூன்றாம் நாள்
அருமையான திருப்பாவையுடன்  இன்றைய நாளை  துவங்கி வைத்த ஜீவ்ஸ் அவர்களுக்கு நன்றி 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

பாலா பாலாஜி

unread,
Dec 17, 2012, 10:14:44 PM12/17/12
to panb...@googlegroups.com
சிறு வயதில் இருந்தே எனக்கு திருப்பாவை கேட்பது பிடிக்கும். ஜீவ்ஸ் க்கும் அக்காவுக்கும் நன்றி..



2012/12/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - (திருப்பாவை -03)

003 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Life is Short... Keep SMILING...

Balaji.R

மோரு

unread,
Dec 18, 2012, 2:53:23 AM12/18/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்

கயல் என்றாலே மீன் தானே அதென்ன கயல் மீன்கள்.

கரும்புவயலில் எப்படி தாமரை வளரும்.

மார்கழி முதல் நாள் என அறிந்திருக்காமலே அவ்வழி போகையில் திருப்பதி திருவேங்கடவனின் அண்ணனை தரிசிக்கும் வாய்ப்பு இந்த வாரம் கிட்டியது.

# நடப்பதெல்லாம் நன்மைக்கே. உணர்ந்துக்கொள் மோரு.

2012/12/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
தொறுக்கள் வான்கம லம்ம லருழக்

    கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
    பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
    அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
    தென்னுள் நின்றனவே. 

பசுக்கூட்டங்கள் வயல்களில் களையாக முளைத்த தாமரைக் கொடிகளின் பூக்களை மேயவும் அவற்றின் கால்களில் மிதிபட்டுக் கருப்பஞ்சாறு வயல்களில் பாயவும், தாக்குண்ட கயல் மீன்கள் வருந்தி நீர்மடையை நோக்கிப் பாயும் தில்லையம்பதியிலுள்ள அம்பலப்பெருமானுடைய முறுக்கிய நீண்ட சடையும், அச்சடையில் சிறிது மலர்ந்த மொட்டோடு கூடிய ஊமத்தம் பூக்களும் பிறைச் சந்திரனும் உடைய திருமுடிகள் என்றும் நீங்காது அடியேனுடைய உள்ளத்தில் நிலை பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் ஆவான்.



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

PRASATH

unread,
Dec 18, 2012, 1:31:42 PM12/18/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
நல்ல இழை அண்ணே...

தொடருங்கள்...

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 18, 2012, 2:10:05 PM12/18/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
http://kaladi.blogspot.com/2012/12/04.html

ஆழிமழைக் கண்ணா... (திருப்பாவை -04)

004 ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந்  தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

**
ஆழி மழையைத் தரும் கண்ணா வருணனே, அவற்றை நீ உன் கையில் தேக்கி வைத்துக் கொள்ளாதே. கடலினுள் புகந்து நீரை முகந்து கொண்டு, ஆர்த்து ஏறி ( ஆர்த்தல் = நிறைந்த/ பெருத்த ஓசை / கட்டுதல்/உணவளிக்க . அதாவது  நிறைந்த உடன் அல்லது பெருத்த ஓசையுடன் அல்லது அந்த நீரை கீழே விழவிடாமல் கட்டி/ அல்லது உணவளிக்க  என பலவகைகளிலும் பொருத்தமான  அர்த்தம் வருகிறது. ) ஊழி முதல்வன் அதாவது எம்பெருமான் நாராயணனைப் போல  போல உடல் கறுத்து ( மேகம் கறுப்பது ) பாழியந்தோள் ( பாழி = அகன்ற/ வலிமையான ) உடைய பத்மநாபன் கையில் இருக்கும் ஆழி போல ( ஆழி = வட்டம் / சக்கரம் ) போல மின்னி, வலம்புரிச் சங்கம் போல நின்று இடிமுழக்கம் எழுப்பி, தாமதியாமல் ( தாழ் = தாமதம். தாழாதே = தாமதிக்காதே ), எப்படி சாரங்கத்தின் நாணுதைத்த சரங்கள் மழையெனப் பெய்கிறதோ அது போல நாங்களும் மார்கழி நீராடி மகிழ, உலகம் வாழ உலகினில் பெய்ந்திடு. ( எம்பாவாய் - பாவையிடம் வைக்கும் வேண்டுகோள். )

**
மேகங்கள் கடல் நீரைக் கொண்டு மழையாகப் பெய்வதை பல இலக்கியப் பாடல்களில் காணலாம்.

சில உதாரணங்கள் கீழே :

திருக்குறள் :

  நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
   தான்நல்கா தாகி விடின்.

மழை பெய்வதற்காக, மேகமானது கடல் நீரை அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு, கடலானது நீரை வழங்காது விட்டால், அந்த நெடுங்கடலும் கூட வளம் குன்றிப் போகும்.

தடிந்தெழிலி = முகந்து கொடுத்தல்.
***
கம்பராமாயணம். அயோத்தியா காண்டம் - கங்கை காண் படலம்.:


    இக் கரை இரைத்த சேனை
     எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன
     அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன
     போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும்
     அகல் மழை நிகர்த்த அம்மா!

     இக் கரை - (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை
எறிகடல் -ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி
முகந்து - விரும்பிஏற்றுக்கொண்டு; அக்கரை - தென்கரையில்; அடைய
வீசி - முழுவதும் இறக்கிவிட்டு; வறியன - ஒன்றும் இல்லாதனவாய்;
அணுகும் - (வடகரை வந்து) சேரும்; நாவாய் - மரக்கலம்; அலை ஆழி
புக்கு - அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் -மிகுதியான நீரை;
பொறுத்தன - சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக்கி -
(மழைப்பெய்து) கழித்துக் கழித்து;  அக்கணத்து - அடுத்த கணத்திலேயே;
உவரிமீளும் - (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல்
மழை- அகன்ற மேகத்தை;  நிகர்த்த - ஒத்திருக்கின்றன.  ( நன்றி தமிழ் இணைய பல்கலைக் கழக தளம் )


அகநானூறில் இருந்து ஒரு பாடல்.

பாடல் எண் - 43. திணை :  பாலை
 

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை

சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,

என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி

கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
5
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,

குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது

கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,

தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே

கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
10
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,

பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை

நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்

அளியரோ அளியர்தாமே அளி இன்று

ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
15
இன் துணைப் பிரியும் மடமையோரே!
முழுப்பாடலையும் விளக்கத்துடன் வாசிக்க இங்கே செல்லவும்

மேலும் சில  அகநானூறு  பாடல் இங்கே & இங்கே


பன்னிருத் திருமுறைப் பாடல் : இங்கே 
இன்னும் பரிபாடல், நற்றிணை என  இக்கருத்து விரவிக் கிடக்கிறது.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/19 PRASATH <pras...@gmail.com>
நல்ல இழை அண்ணே...

தொடருங்கள்...


2012/12/18 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 18, 2012, 2:41:00 PM12/18/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
2012/12/18 மோரு <mors...@gmail.com>


கயல் என்றாலே மீன் தானே அதென்ன கயல் மீன்கள்.

கயல்னா என்னான்னு தெரியாதவங்க அதை மீன்கள்நு சொல்லிக்கிடட்டுமே.. நடு செண்ட்டர் மாதிரி.


 

கரும்புவயலில் எப்படி தாமரை வளரும்.

அந்தக் காலத்தில் நிலங்கள் அவ்வளவு செழிப்பில் இருந்திருக்கிறது. பயிர்களின் இடையே களையாக குவளை மலர்களும், கமல மலர்களும் இருந்ததாக பல குறிப்புகள் பல பாடல்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. 
 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 18, 2012, 2:52:36 PM12/18/12
to பண்புடன்
அக்கோவ்...

தன்னையும் அழித்து பிறரையும் அழிப்பவன் அதமா அதமன்.
பிறரை அழித்து தான் மட்டுமே வாழ்பவன் அதமன்
பிறரும் வாழ தானும் வாழ நினைப்பவன் மத்யமன். யாருக்கும் நல்லதும் இல்லை தீமையும் இல்லை. நடுத்தரம்.
தனக்கென்று வாழாது தன்னை இழந்தாவது பிறருக்கு நன்மை செய்பவன் உத்தமன்.

மச்ச,கூர்ம வராக, நரசிம்ம என மிருகங்கள் அளவில் தன்னைத் தாழ்த்தி அவதரித்ததாகட்டும்,  வாமனனாய் தன்னைக் குறுக்கியாகட்டும், இராம, பலராம, பரசுராம, கிருஷ்ணனாக வந்த போதாகட்டும்  உலக நன்மை ஒன்றே அவன் குறிக்கோள் அல்லவா? அப்படியானால் அவனை உத்தமன் என்று தானே சொல்லனும் ?

அவ்வ்.. ஒவ்வொரு பாட்டுக்கும், ஒவ்வொரு வரிக்கும் ஆழ்ந்த விளக்கம்னா இதுலயே நேரம் போக போக எழுதிட்டே இருக்கனும். நீங்களும் கைக் குடுங்க.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/18 shylaja <shyl...@gmail.com>
--
ஷைலஜா
 


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 18, 2012, 3:01:05 PM12/18/12
to பண்புடன்
ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஏன் பாடுனாங்கன்னு கேப்பீங்க அடுத்து.

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;


தான்னு கேட்டு வாங்கறது இழிந்த செயல்னு சொல்றாங்க. அப்படி குடுக்கறேன்னு ஒருத்தர் வந்தாலும் அதை வேண்டாம்னு சொல்றது உயர்ந்த செயல். அப்படின்னு புறநானூறுல பாடிருக்காங்க. சரி. திருவள்ளுவர் என்ன சொல்றாரு ?

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.  ( மு.வ உரை: இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.)

அத்தோடவா ? பசுவுக்கே பாவம் பார்த்து அந்த பசுக்கு கொஞ்சம் தண்ணி குடுன்னு கேக்கறதே மஹா பாவம்னு சொல்றார்

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில். (மு.வ உரை:பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.)

 உலக நன்மைக்காக மஹாபலியிடம்  அப்படிப் பட்ட இழிச் செயலான இரத்தலை, மூவடி அளக்க இடம் தான் என்று யாசகம் செய்தவன் உத்தமன் தானே ?


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Dec 18, 2012, 9:15:52 PM12/18/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
அருமை ஜீவ்ஸ்,   தொடருங்கள் ....தொடர்கின்றோம் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

shylaja

unread,
Dec 19, 2012, 1:03:45 AM12/19/12
to panb...@googlegroups.com


2012/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அக்கோவ்...

தன்னையும் அழித்து பிறரையும் அழிப்பவன் அதமா அதமன்.
பிறரை அழித்து தான் மட்டுமே வாழ்பவன் அதமன்
பிறரும் வாழ தானும் வாழ நினைப்பவன் மத்யமன். யாருக்கும் நல்லதும் இல்லை தீமையும் இல்லை. நடுத்தரம்.
தனக்கென்று வாழாது தன்னை இழந்தாவது பிறருக்கு நன்மை செய்பவன் உத்தமன்.

மச்ச,கூர்ம வராக, நரசிம்ம என மிருகங்கள் அளவில் தன்னைத் தாழ்த்தி அவதரித்ததாகட்டும்,  வாமனனாய் தன்னைக் குறுக்கியாகட்டும், இராம, பலராம, பரசுராம, கிருஷ்ணனாக வந்த போதாகட்டும்  உலக நன்மை ஒன்றே அவன் குறிக்கோள் அல்லவா? அப்படியானால் அவனை உத்தமன் என்று தானே சொல்லனும் ?

அவ்வ்.. ஒவ்வொரு பாட்டுக்கும், ஒவ்வொரு வரிக்கும் ஆழ்ந்த விளக்கம்னா இதுலயே நேரம் போக போக எழுதிட்டே இருக்கனும். நீங்களும் கைக் குடுங்க.

<<<<வரேன் ஜீவ்சு  கொஞ்சம் பிசி:)  உன் விளக்கம்  நன்றாகவே இருக்கு



--
ஷைலஜா
 


இனியவன்

unread,
Dec 19, 2012, 4:08:25 AM12/19/12
to panb...@googlegroups.com

கிளிவிடு தூது..



மரகத மலை மேலே 
மனமு மிக மகிழ்ந்து 
சிறகடித் திருப்பாயடி -கிளியே 
சிறிது (நீ) செவி சாயடி   1

நாயகன் என் கண்ணன் உற்ற 
நகர் மீது நீ பறந்தால் 
நேயமுடன் எடுத்தோதடி -கிளியே 
நெஞ்சம்  எடுத்தோதடி   2

 




முன்னரவன் சோலைதனில் 
முத்தம் ஒன்று வைத்த பின்னே 
சொன்ன சொல்லை மறந்தானடி -கிளியே 
சோர்வு மிகவாச்சடி   3 

கோலமுடன் பவனி வந்து 
கைத்தலம் பிடிப்பேன் என்றான் 
காலமிக  வாச்சுதடி -கிளியே 
காத்திருக்க லாகாதடி  4 

பேயுமெனைப் பிடித்ததென 
பந்தமெல்லாம் நினைத்து விட்டார் 
போயவனுக் குரைப்பாயடி -கிளியே 
போக்கிடம் எனக்கேதடி   5


சூனியந்தான் வைத்தார் என்று 
சோதரியும் நினைந்து விட்டாள் 
சூனியக் காரனடி -கிளியே 
சூதகமாய் பேசடி   6

திருமணம் செய்வதற்கே 
தந்தையவர் எத்தனித்தால் 
சிறுமனம் பொறுக்காதடி -கிளியே 
சிறியவள் நிலை சொல்லடி   7 

கட்டிய உடுக்கையுடன் 
கண்ணனை தொடர்வதென்று 
கட்டுறுதி ஏற்றேனடி  -கிளியே 
கடிதினில் நீ செல்லடி  8

 தயிர்வழிப் பின்தொடர்ந்து 
திருடிக் களித்தவன் தான் 
உயிர்வலி அறிவானோடி -கிளியே 
 உண்மைநிலை சொல்லடி 9 




மாதரின் உடைகவர்ந்து 
மரமேறி அமர்ந்தவன்தான் 
காதலை உணர்வானோடி -கிளியே 
கண்கள் பனிக்குதடி 10

கள்ளனைப் போல் நாளும்நாளும் 
களவாடித் திரிந்தவன்தான் 
உள்ளநோய் அறிவானோடி -கிளியே 
உள்ளதை எடுத்தோதடி  11
  




பெற்றவர்கள் சிறையிருக்க 
பாடிக் களித்தவர்க்கு 
மற்றவர்கள் பொருட்டோ அடி-கிளியே 
மனமிக நோகுதடி  12

ராதையினை மறந்துவிட்டு 
ராப்பொழுதில் கிளம்புவோர்க்கு 
பேதையிவள் பொருட்டோ அடி -கிளியே 
பேச்சு(ம்) குளறுதடி!  13


தக்க தருணத்தில் வந்து 
தவறாமல் காப்பேன் என்றான் 
மிக்க துயர் ஆச்சுதடி -கிளியே 
மீள வழியென்னடி 14

சுகந்தரும் சோலைதன்னில் 
சொக்கித் திரிந்ததெல்லாம் 
பகல்கனவாச்சுதடி -கிளியே 
பேதையின் நிலைசொல்லடி  15 

தோடியிலும் கமாசிலும் 
தொழுது காம்போதியிலும் 
பாடியதை மறந்தானடி -கிளியே 
பாவியின் நிலை சொல்லடி  16


உறக்கம் வருவதில்லை 
உண்ணவும் இயலவில்லை 
இரக்கம் இலையோ அடி -கிளியே 
ஏழையின் நிலை சொல்லடி  17


ஒப்பனையில் மனம் இல்லை 
உடையில் கவனம் இல்லை 
கற்பனையில் ஆடுதடி -கிளியே 
கண்டநிலை சொல்லடி  18


பித்தம் பிடித்ததென்று 
பேசிடுவர் தோழியர்தாம் 
நித்தமொரு  கதையாச்சடி -கிளியே 
நிறுத்த வழியென்னடி  19 






தாமத(மு)ம் செய்தான் என்றால் 
தாங்காது இதயமென்று
ஆமவனுக் கெடுத்தோதடி -கிளியே 
அழவும் இயலாதடி  20 

காதலியைத் தவிக்கவிட்டு 
குவலயம் புரப்பதுதான் 
மாதவனுக் கழகோ அடி -கிளியே 
மனமதை எடுத்தோதடி  21 

பூணுகிற அணி களைந்து 
பண்டவன் செய்ததை சொல்ல 
நாண மிகவாகுதடி  -கிளியே 
நல்லபடி நீ கூறடி 22
  
காலம் அதிகம் இல்லை 
கடிதில் வருக வென்பாய் 
சீலம் இழந்தேனடி -கிளியே 
சீக்கிரம் நீ செல்லடி 23

எப்படி எடுத்துரைப்பேன் 
யாரிடம் எடுத்துரைப்பேன் 
செப்படி வித்தையடி -கிளியே 
செய்தவன் அவன்தானடி  24

முகத்தில் உறும் நகையும் 
முகுந்தன் அவன் மொழியும் 
அகத்தை வதைக்குதடி -கிளியே 
ஆவியும் வேகுதடி  25
  
சுழலில் இருத்தி விட்டான் 
சுகத்தைப் பறித்துவிட்டான்  
கழலில் விழுந்தேனடி -கிளியே 
கடிதில் வரச்சொல்லடி 26


தாமரைத் திருவிழியும் 
தேன்வடியும் உதடும் 
சாமத்தில் வாட்டுதடி -கிளியே 
சொல்லவியலாதடி 27




பாவையிவள் கண்ணீருக்கு 
பதில் உரைத்திடனும் என்றே 
கூவி நீ உரைப்பாயடி -கிளியே 
காதில் உரைப்பாயடி 28 

கலவரம் ஆச்சுதடி 
கண்கள் மயங்குதடி -
நிலவரம் உரைப்பாயடி -கிளியே 
நெஞ்சம் உரைப்பாயடி 29

கண்ணன் என்னை எண்ணாவண்ணம் 
கன்னியர்கள் தடுத்தனரோ 
என்ன தெரியுமடி -கிளியே 
ஏழையும் ஆனேனடி  30

அய்யன் அவன் கண்ணயர்ந்து 
அமளியில் உறங்குகையில் 
பையநீ புகல்வாயடி -கிளியே 
பார்த்ததை சொல்வாயடி 31

பண்டொருநாள் பிரிந்துசென்ற 
பாவையின் றவனை  எண்ணி 
கொண்ட தவம் சொல்வாயடி -கிளியே 
கோலமும் சொல்வாயடி 32

எப்பொழுதவன் வருவான் 
எப்பொழுதருள் தருவான் 
முப்பொழுதும் தவித்தேனடி -கிளியே 
 மொத்தமும் சொல்வாயடி 33 

இனிச்சொல்ல ஏதும் இல்லை  
இதயமும் தாளவில்லை 
னிச்சொல்லில் நீ சொல்லடி -கிளியே 
கண்டதை எடுத்தோதடி  34

நீயும் சென்று திரும்பிடுவாய் 
நல்ல சேதி கொணர்திடுவாய் 
மாயவனின் நகர் செல்லடி -கிளியே 
மங்கையென் நிலை சொல்லடி 35
















 


--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

shylaja

unread,
Dec 19, 2012, 11:30:31 AM12/19/12
to panb...@googlegroups.com
யார் எழுதினது  இது  இனியவன்? 

2012/12/19 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 19, 2012, 1:20:59 PM12/19/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
http://kaladi.blogspot.in/2012/12/05.html

மாயனை மன்னு வடமதுரை - திருப்பாவை -05

 
05 - 
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் 
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் 
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது 
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் 
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
***** 

மாயங்கள் செய்யும் அந்த பரந்தாமனை, நிலையான வட மதுரையின் மைந்தனும், தூய்மையயாகப் பெருக்கெடுத்தோடும்  நீருடையதுமான யமுனைத் துறையில் வாழ்பவனை, ஆயர் குலத்திலே தோன்றிய அணையா விளக்குப் போன்றவனை, தன்னை ஈன்ற தாயின் வயிற்றுக்குப்  நீங்காத பெருமை சேர்த்தவனை  நாம் தூய்மையான  வந்து, நல்ல தூய மலர்கள் தூவித் தொழுது நம் வாயால் பாடி, மனதால் சிந்தித்தால், முன்னம் வினைகளையும் நீக்கி மேலும் வினைகள் நம்மை அண்டவிடாமல் நின்று போகும், அது தீயின் முன்பு தூசு போன்று ஆகுமென்று சொல்வாயென் பாவையே
*****

என்ன மாயங்கள் செய்தான் தாமோதரன் ? உதாரணம் ஒன்று பார்க்கலாமா ? இங்கே தாமோதரன்  என்பது கண்ணனைக் குறிக்கும். தாம உதரன்.  தாமம் என்பது கயிறைக் குறிக்கும். உதரம் வயிற்றைக் குறிக்கும்.

மஹா பாரதத்துல சகாதேவனிடம் கண்ணன் கேக்குறான். எப்பத் தெரியுங்களா?  துரியோதனன் கிட்டப் போயி .. டேய் அப்பா, உனக்குத் தெரியாததில.. பாண்டவங்க உன்னோட பங்காளிங்க. அவங்க இடத்த அவங்களுக்கே குடேன்னு கேக்கப் போறான் கண்ணன். ஆனா அதுக்கு முன்னாடி என்ன செய்யறான்னா... ஒவ்வொருத்தர் கிட்டயா போயி இந்தப் போரை நிறுத்த என்ன வழின்னு கேக்கறான்.  ஒரு பயலும் கேக்கல.

  கண்ணா நீ போறது சமாதானம் பேச.  உன்னால முடியாததுன்னு ஏதும் இருக்கான்னு எவனும் நினைக்கல. .  ஆனா சகாதேவன் கிட்ட இந்த மாயம் பலிக்கல.

 சகாதேவா, இந்த போர் நடக்காம இருக்க  உனக்கேதும் உபாயம் இருந்தா சொல்லேன். நீதான் பரம விற்பன்னனாச்சே.. உனக்குத் தெரியாததான்னு கொக்கிப் போடறான்.  உண்மையில சகாதேவன் பரம விற்பன்னன் தான்.  பாரதியார் சகாதேவனப் பத்தி சொல்றத கேளுங்க

"'எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி, உலகம் ஓர் ஆடல்போல் எண்ணி, தப்பின்றி  இன்பங்கள் துய்த்திடும் வகைதான் அறிந்தான் சகதேவனாம் " அப்படிங்கற்ஆர்.

சகாதேவன்  சொல்றான்.

         ”பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முதலிற் கொன்று,
        அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி,
        நேராக நின்னையும் யான் பிடித்துக் கட்டுவேனானால்
        வாராமல் தடுக்கலாம் மாபாரதம்.. “

"அடேய் மாயக் கண்ணா, இந்தப் போரை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தவனே நீ தானே. அப்படி என்றால் போர் எப்படி நிற்கும்? இந்தப் போர் நிற்க வேண்டுமென்றால் சில வழி முறைகள் உண்டு."

"ம்ம்"
" இந்த கர்ணனுக்கு பாராளும் உரிமையத் தந்துடனும் "
 "ஓஹோ..ம்ம்? "
"கர்ணனுக்குப் பகையான(இகல்)  அர்ஜ்ஜுனனைக் கொன்னுடனும்.  கர்ணனுக்கு எதிரா வீராவேசம் பேசிட்டு வந்தானே... உயிரும் வில்லுமிருந்தா தானே வீராவேசம் செல்லும் ?"
"ம்ம் அப்புறம் ?"
" திரவுபதிக்குத் தொடர்ந்து மொட்டை அடிக்கனும். அப்பத்தானே  விரிந்தக் கூந்தலை முடியேன் என்ற சபதம் பொய்க்கும். "
"இதெல்லாம் பண்ணா இந்தப் போர் நின்னுடுமா?  நான் வேணும்னா தருமன் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேனே"
" ம்ஹூம்... இதெல்லாம் பண்ணா போர் நிக்காது. இதுக்கு எல்லாத்துக்கும் மூலக் காரணமான உன்னைக் காலில் கட்டிப் போட்டு   நான் சிறைப் பிடித்தால் இந்தப் போர் நின்னுடும் "

 " என்னை அறிந்தவன் நீ .. என்னைக் கட்டிப் போட உன்னால் முடியுமா ? எங்கே கட்டுப் பாக்கலாம் "

" டேய் கண்ணா.. ரொம்ப சேட்டைப் பண்ற.. உன்னை உரல்ல கட்டப் போறேன்."
 " ஓ கட்டுவியா எங்கே கட்டுப் பாக்கலாம் "

சகாதேவன் முன் பற்பல உருவங்களில்,  வடிவங்களில் எங்கும் வியாபித்திருக்கிறான் கண்ணன். யசோதைக் கட்ட முயல்கிறாள். ஒரு முடிச்சுக்கு குறைவாக கயிறு நிற்கிறது. யசோதை திகைக்கிறாள்.

சகாதேவன, கண்ணனின் அத்தனை உருவங்களையும் விட்டு அதில் தான் அறிந்த மூல உருவத்தினை மனதில் எண்ணி உருகிப் போற்றுகிறான். அத்தனை உருவங்களும் ஒன்றுபட்டு சகாதேவனின் அன்பில் கட்டுண்டுக் கிடக்கிறான் கண்ணன்.

கண்ணா கட்டுண்டு விடு என்று மனதால் அவனை வேண்டுகிறாள்.  கயிறு  கொண்டு இப்போது கட்ட முடிகிறது.  உரலோடு விளையாட வா.. கண்ணா... நீ உரலோடு விளையாட வா கண்ணா என்று பாடலாம்.ஏனென்றால் இப்போது கண்ணன் கட்டுப் பட்டுவிட்டான். அவனைக் கட்ட அன்புக் கயிறு மட்டுமே  உதவும் என்பதை மாயங்களால் உணர்த்திய மாயாவியல்லவா  அவன் ?
**

என்ன தவம் செய்தனை.. இந்தக் கண்ணனை உன் வயிற்றில்  மகனெனப் பெற  என்று ஊரும் உலகமும்  போற்றிப் புகழும் வண்ணமாய் தான் பிறந்த மணிவயிற்றிற்கு புகழ் சேர்த்தததால் "தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்"   என்று நாச்சியார் அழைக்கிறார்

**
தாயைக் குடல் விளக்கம் செய்தது கண்ணனாகப் பிறந்த போது மட்டுமா ? இல்லை இராகவனாக வந்த போதிலும் அதைச் செய்திருக்கிறான்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!


***
 //
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் //
 
கோவிந்தா... நாராயணா.. ஏம்பா நேத்து ரெண்டு லோடு மணல அதிகாரிங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வரச்சொன்னேனே... பல்லாண்டு பல்லாண்டு... நாளைக்கு வந்துடு அதுக்கு காசு குடுத்துடறேன்.. பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்...  என்று  வழிபடுவது அல்ல நோன்பு.
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்கனும். இது முக்கியம். வாக்கு, சிந்தனை, செயல்   அனைத்திலும் நாம் இறைவனை வைத்தால், இறைவன் நமக்கு முன்வினை நீக்கி, வருவினை அண்டாமல் செய்வான் என்பது நாச்சியார் மொழி.  அவர் மொழி பொய்க்குமா என்ன ?

PRASATH

unread,
Dec 19, 2012, 1:36:06 PM12/19/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
அது என்ன வாயினால் பாடி... மனதினால் சிந்திக்க...

இது நடக்குமா... வாய் பாடுன பின்னால மனசு சிந்திக்குமா.... மனசு சிந்திச்ச பின்னால வாய் பாடுமா...

நம்ம ஊருல ஒரு சொல்வழக்கு உண்டு... வாய் தவறி சொல்லிட்டேன்டா மன்னிச்சுடுடான்னு யாருனா தன்னையும் அறியாமல் செய்யும் தவறுக்குச் சொன்னா, கோபத்திலிருப்பவர் சொல்லுவார்... மனசுல இருக்குறது தானே வாய்ல வரும்னு... 

அப்படி இருக்குறப்ப வாய்ல வந்த பின்னால மனசுக்கு எப்படி அண்ணே போகும் விஷயம்...


2012/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 19, 2012, 1:37:58 PM12/19/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
விளக்கமா  அப்புறம். ஆனா ::))

டேய் தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன் ஆனா மனசறிஞ்சு அந்த வார்த்தைய நான் சொல்லல... ;) இப்படியும் சொல்லுவாங்க.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/20 PRASATH <pras...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 19, 2012, 1:41:40 PM12/19/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
பிரசாத். இதை விளக்கமா அடையாளப் போலிகள் ல எழுதிருந்தேனே :))

அடையாளப் போலிகள் - 6

" அடடே வாங்க சார் வாங்க. எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோமே. ரொம்ப  காலையிலேயே வந்திருக்கீங்க ?  ஒரு ரெண்டு நிமிஷம் இருக்கீங்களா ? பூஜைய முடிச்சுட்டு வந்துடறேன்.
" சரிங்க நாராயணன். அவசரமே இல்லை பூஜைய முடிச்சுட்டே வாங்க "
"கௌசல்யா சுப்ரஜா .. ஆமா நீங்க எதிர்த்த வீட்டு கௌசல்யாக்கு வரன் பாக்கறதா சொல்லிட்டிருந்தீங்களே.. எந்த அளவில  இருக்கு...  ராம பூர்வா "
" அதையேன் கேக்குறீங்க. ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறாங்க. அதான் தள்ளிட்டேப் போகுது"
" சந்த்யா பிரவர்த்ததே.... உத்திஸ்ட்ட...  அடடே... டீ சந்தியா ? பெரியவளை எழுப்பிட்டியா இல்லையா  அவளுக்கு இன்னைக்கு மதியம் கம்ப்யூட்டர் க்ளாஸ்ல எக்ஸாம்னு சொன்னாளே படிக்க வேண்டாமா, அப்புறம் நீங்க சொல்லுங்க சார்.. அப்படி என்ன கண்டிஷன்ஸ் போடறாங்க  உத்திஸ்ட நரசார்தூல கர்த்தவ்யம்"
" அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகுங்கறதே டவுட்டா இருக்கு சார் "
" தெய்வமான்விதம்.... அச்சச்சோ அப்படி எல்லாம் காலைல காலைல அபசகுனமா பேசாதீங்க சார். தப்பு.  ஒரு நிமிஷம் சார்... ஏண்டீ... கட்டையில போறவளே... எத்தனை முறை கத்திட்டு இருக்கேன். பெரியவளை எழுப்பி விடுன்னு...  உத்திஸ்டோ உத்திஸ்ட்ட.. அப்படி என்ன தான் சார் கண்டிஷன் போடறாங்க ? கோவிந்த உத்திஸ்ட்ட கருடத்வஜ "
" பெத்தவங்க  இருக்கக் கூடாதாம், அக்கா தங்கச்சி இருக்கக் கூடாதாம், அண்ணந்தம்பி இருக்கக் கூடாதாம். ஒரே பையனா இருக்கனுமாம். தனிக் குடித்தனம் வந்துடனமாம் கல்யாணம் ஆன உடனே "
" எழவெடுத்தவங்க இப்படியா கண்டிஷன்ஸ் போடறாங்க... "
" இதுவே பரவால்ல சார் இது கவர்ன்மெண்ட் வேலை கூடாதாம்... ஐடி ல வேலை கூடாதாம்.. மாசம் ஒரு லட்சமாவது சம்பாதிக்கனுமாம் "
" கைத்தலம் நிறைகனி.. அப்பமோடவல் பொரி... உண்மை தான் சார். நீங்க சொல்றது சரிதான். இதுங்களுக்கு கல்யாணம் ஆகி... அந்தப் பய்யன் பாவம் "
" சார் தினமும் பூஜைப் பண்ணுவீங்களோ  ?"
" இல்லையாப் பின்ன. என்ன இருந்தாலும்  காலைல ரெண்டு மணி நேரம் மனசுருக பாட்டுப் பாடி இது மாதிரி பூஜைப் பண்ணா  அதோட பலனே ரொம்ப அதிகம் சார் "
"  அதென்னமோ உண்மை சார். நானும் உங்க கூட பாடலாம்ல.. "
"வாங்களேன்.. பாடுவோம் "
" கப்பிய கரிமுகன் அடிப்பேணி... கற்றிடும் அடியவர்... புத்தியில் உறைபவர் கற்பகம் என வினை கடிதேகும்.."

*********



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

PRASATH

unread,
Dec 19, 2012, 1:44:10 PM12/19/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
இதெல்லாம் ஒத்துக்க முடியாது... புதுசா எதும் சொல்லுங்க...


2012/12/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
பிரசாத். இதை விளக்கமா அடையாளப் போலிகள் ல எழுதிருந்தேனே :))

PRASATH

unread,
Dec 19, 2012, 2:01:07 PM12/19/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
நல்ல விளக்கம்...


இடையில் எனது அன்புக்குரிய சகாதேவனைச் சேர்த்திருப்பது இன்னும் அருமை...

சகாதேவனும், விதுரனும் மகாபாரதத்தால் என்னுள் ஆத்மார்த்தமாக வந்தமர்ந்த வழிகாட்டிகள்... ஹ்ம்ம்... இவர்களைப் பற்றி எத்துனை பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... தொடருங்கள் அண்ணா...


2012/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Dec 19, 2012, 8:49:54 PM12/19/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
அருமை ,மார்கழி மழையில் நனைகின்றோம் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Dec 19, 2012, 8:58:10 PM12/19/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல்
ஆஹா ....அருமையான விளக்கம் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Dec 19, 2012, 8:59:41 PM12/19/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல்
இப்படித் தான் பலரது வாழ்க்கையும் ,பொழுதும் கடந்துபோகின்றது
அருமையான அலசல் ஜீவ்ஸ் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
பிரசாத். இதை விளக்கமா அடையாளப் போலிகள் ல எழுதிருந்தேனே :))

இனியவன்

unread,
Dec 19, 2012, 10:39:25 PM12/19/12
to panb...@googlegroups.com

சமுத்ரா எழுதியது ஜி.



2012/12/19 shylaja <shyl...@gmail.com>

யார் எழுதினது  இது  இனியவன்? 

துரை.ந.உ

unread,
Dec 19, 2012, 11:03:04 PM12/19/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல்
வாழ்க ஜீவ்ஸ் ....

உங்கள் வழித் தொடர்கிறேன் .... 

2012/12/20 sk natarajan <sknatar...@gmail.com>



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 20, 2012, 11:39:53 PM12/20/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
http://kaladi.blogspot.in/2012/12/06.html


புள்ளும் சிலம்பினகாண் - திருப்பாவை -06

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய் எழுந்திராய்!பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.[திருப்-6] 
***

புள்ளும் = பறவைகள், புள்ளரையன் = பறவைகளுக்குத் தலைவன் அல்லது பறவையின் தலைவன். இங்கே கருடனின் தலைவன் நாராயணன் எனக்கொள்ளுதல் தகும்.  சிலம்பின = ஒளித்தன. இன்றும் சலம்புதல் என்று வட்டார வழக்கில் வழங்கி வருகிறது. 

எழுந்திருங்கள்  பெண்களே, காலையில் இந்தப் பறவைகளின் ஒலி சலசலத்துக் கேட்கிறது. கருடனின் தலைவனான பெருமான் நாராயணனின் கோவிலில் வெண்சங்கு நம்மை அழைக்கும் பேரோசை கேட்கலையோ ?


// 
                      ...    பேய்முலை நஞ்சுண்டு,
 கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை//

பூதனை எனுமரக்கி கம்சனின் தூண்டுதலால் கண்ணனை அழிக்க என்று வந்த போது அவளிடம் இருந்த நஞ்சு கலந்த பாலை உண்டு அவளை அழித்து,  நிழல் வேண்டுமென்று குழந்தைக் கண்ணனை வண்டியின் நிழலில் படுக்க வைத்திருந்த போது சக்கரம் ஒன்றில் புகுந்து கண்ணனை  அழிக்க வந்த  சகடாசூரனை தன் காலால் அழித்தவனும், பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டவனுமான நாராயணனை உள்ளத்தில் கொண்ட யோகிகளும் முனிவர்களும் தம் அதிகாலை தவம் முடித்து மெல்ல எழுந்து ஹரி ஹரி என்று போற்றும் பேரோசை நம் உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறது  - என் பாவையே.
****


 நாச்சியார் தன் இளையோர்களை எழுப்புகிறார் பாவை நோன்பிற்கு.   பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  பொழுது புலர்ந்து பறவைகள் கீச்சிடுகின்றன, நாரணன் கோவில் சங்கோசை ஓங்கி ஒளிக்கிறது, ஞானிகளின் முனிவர்களின் பக்தியோசை உள்ளம் பேருவகைக் கொள்ளும்வகையில் கேட்கிறது ஆயினும் இன்னும் எழமால் தூங்குகிறீர்களே..  எழுந்திருங்கள் விரைவில் எழுப்புகிறார். 

இறையின் மீதான பக்தி ஏதோ கடமைக்கு என்று இருக்கக் கூடாது, பொழுது புலர்ந்தும் உறங்கினா பாவை நோன்பு தடைபடும் அல்லவா.  ஆத்மார்த்தமாக செய்யும்  நோன்பே பிரதானம்.

கூழுக்கு ஆசைப் பட்டு கோவிலுக்கு செல்பவர்களைப் போல செல்பவர்களை எங்கள்  குழுவோடு சேர்க்க மாட்டோம் என்கிறார் பெரியாழ்வார்.  

வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

என்பது பல்லாண்டுப் பாட்டு.
*****

பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று
உனக்கிடமா யிருக்கஎன்னை உனக்குஉரித் தாக்கினையே.

 பெரியாழ்வார் உருகும் இடம் ...  அருமை :)
**

குளிர்ந்தப் பாற்கடலில் அதுவும் எப்படி ? நீரில் படுத்தால் நீரும் உறுத்துமென்று பாம்பை பஞ்சணையாய்  இருப்பவன் தானிருக்கும் இடம் மறந்து தன்னையே நினைக்கும் பக்தரின் மனதில் இது தான்  என் இடம் என்று பள்ளி கொள்ள ஓடு வருவானாம்.  எல்லாரும் தூங்கும் போது படுத்திருப்பாங்க. ஆனா நாச்சியார் சொல்லுவதைப் பாருங்கள்...

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

துயில் அமர்ந்து ? என்ன ஒரு அருமையான வார்த்தைப் பிரயோகம் பாருங்களேன். துயில்பவன் அமர வேண்டிய காரணம் என்ன ? ஏண்டான்னா எவண்டா என்னை எப்பக் கூப்டுவான்னு காத்துட்டு அமர்ந்திருக்கானாம் கள்ள நாராயணன்.  கோதை ஆண்டாள்... தமிழை ஆண்டாள். 
 **


PRASATH

unread,
Dec 21, 2012, 3:21:47 AM12/21/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
வெள்ளத்தரவில் - வெள்ளம் மீது இருக்கும் அரவு மீதினில் 
 
வெள்ளத்தரவில் = வெள்ளத்தின் அலை ஏற்படும் அரவத்தின் மத்தியில் ????

நல்லாருக்கு... தொடருங்க.... தொடர்கிறேன்...
2012/12/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Dec 21, 2012, 5:57:03 PM12/21/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
அருமை , தொடருங்கள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 21, 2012, 10:47:02 PM12/21/12
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
http://kaladi.blogspot.in/2012/12/07.html


கீசு கீசென்று ஆனைச்சாத்தன் - திருப்பாவை- 07

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்"
**

கீசு கீசு என்று ஆனைச் சாத்தன் (செம்போத்துப் ) பறவை தங்களுக்குள்ளே பேசும் பேச்சரவம் கேட்கவில்லையா பேய்ப் பெண்ணே? பகலாகியும் இன்னும் உறங்குகிறாயே? காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும்  அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர்குலத்துப் பெண்கள் மத்தினால் ஓசையோடு தயிர் கடையும் அரவம் கேட்கலையோ? நீ இவர்களின் தலைவியான பெண்பிள்ளை ஆயிற்றே, நாராயணன் மூர்த்தி கேசவனைப் நாங்கள் பாடக் கேட்டும் நீ படுத்திருக்கிறாயே, ஒளியுடையவளே கதவைத் திறவாய்..  என்பாவாய்.
**

பேயும், நோயும் இரவில் பாயும் பழமொழி.  பேய் இரவில் பாய்ந்து பகலில் உறங்குமாதலால் பகலில்  பறவைகள் சலசலக்கும் ஓசைக் கேட்டும் உறங்கும் பெண்ணே,  அதிகாலைச் சோம்பலே பெரும் நோய். அது பேயல்லவா அதைக் கொண்ட நீ பேய்ப்பெண்ணே என்கிறார் கோதை.
**
// காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து //

ஒருச் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் அதுவும் அந்தப் பாடலுக்குப் பொருந்தக் கூடியதாகவே வைத்துத் தமிழைச் செம்மைப் படுத்தியவர் கோதை.

காசு = குற்றம், பணம், பொன், பெண்கள் கழுத்தில் அணியும் ஆபரணம்
பிறப்பு = உற்பத்தி, தோன்றுதல், ஆரம்பம், நெருக்கம்

குற்றத்தினால் முடிவுறாத மறுபிறப்பாகப் பிறந்து கைபேர்த்து
கழுத்தில் அணிந்த மாலைகள் நெருக்கத்தினால் தயிர்கடையும் போது கையசைந்து ஓசை எழுப்ப,
கழுத்தில் அணிந்த பொன் ( கைவளை முதற்கொண்டு சகலவித பொன்னாபரணங்கள் ) தயிர் கடையும் போது வெளித்தோன்றி உராய்ந்த ஓசை எழுப்

என பலவிதமான கற்பனைகளுக்கு நம்மை ஆட்படுத்திச் செல்லுவது கோதையின் பாடல்களில் வெகு சாதாரணமாக நடக்கக் கூடியதே.

இன்னுமொன்று சொல்லவேண்டுமென்றால் ஆனைச்சாத்தன்.  ஆனையைச் சாய்த்தவன் ( கண்ணனாக, தன் மேல் கம்சனால் ஏவிவிடப்பட்ட குவலயபீடம் என்னும் யானையை மாய்த்தவன் ). அந்த ஆனைச்சாத்தனுடன் நாங்கள் கீசு கீசென்று கலந்துப் பேசும் பேச்சரவம் கேட்டிலையோ ?
 **
நாயகப் பெண் பிள்ளையே - தலைவியே, நாங்கள் நாராயணனைப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம், நீ அதைக் கேட்டும் தூங்கலாமா, தேசம் உடையவளே எழுந்திரு

இங்கே தேசம் என்பதை வடமொழியில் "தேஜஸ்" என்பதின் தமிழ் வடிவமாகக் கொண்டால் ஒளி பொருந்தியவளே என அர்த்தம் காணலாம். இன்னொரு வகையில் " நாயகப் பெண் பிள்ளை " என்றதால்,  அந்தப் பிள்ளை அந்த  இடத்தை ஆளக் கூடியவரின் மகளாகவும் இருக்கலாம். அப்படி ஆளக் கூடிய தேசத்தை உடையவளே என்றும் பொருள் கொள்ளலாம்.
**
கேசி என்ற அரக்கனைக் கொன்றதால் கேசவன் என்று பெயர் நாராயணனுக்கு உண்டு.  நல்ல கேசம் உடையவனென்றும் கொள்ளலாமே ?
**
இன்னும் மூதேவி மாதிரி தூங்கறியேடிக் கழுதே.. எந்திரிடி .. என் செல்லமில்ல என் பட்டுல்ல. என்று அம்மாவின் வசையுடனானக் கொஞ்சல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா :)

இந்தக் குறும்புக் கண்ணன் கோதை வாசலில் இட்டக் கோலத்தை எல்லாம் வந்து அழித்து விட்டானாம். அதைக் கோதை சொல்லும் அழகைப் பாருங்கள்.

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
      விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
      அழித்தி யாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால்
      உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
      முகத்தன கண்கள் அல்லவே

கோலப் பொடி கொண்டு  வீட்டின் முன்னால் அழகாக இழைத்தக் கோலத்தை நீ அழித்தாயாகிலும் உன் மேல் உள்ளம் ஓடி  உருகுதே அல்லாமல் கோபம் ஒன்றும் இல்லையே கண்டாயோ.. கள்ள மாதவா .. கேசவா..  அப்படிச் செய்வது உன் கண்களே அல்லவா ?  என்று மயங்குகிறார்.

அம்மாவின் வாஞ்சைக்கு நாச்சியாரின் வாஞ்சைக் குறைந்ததா என்ன ?

sk natarajan

unread,
Dec 22, 2012, 7:09:21 AM12/22/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
அருமை, அருமை 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/22 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 25, 2012, 11:25:34 PM12/25/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
( இன்னும் ரெண்டு பெண்டிங்.. வந்துடறேன் குயிக்கா )
**
08-

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!

****


கீழ்வானம் வெளுத்துவிட்டது. எறுமைகள் காலை பால்கறப்பிற்கு முன்பான  சிறுதீனிக்கு மேய்ந்து கொண்டிருக்கின்றன வந்து பாரேன். நோன்பிற்கு சிரத்தையாய் கிளம்பிச் சென்ற மிச்சமிருக்கும் பிள்ளைகளையும் போகாமல் நிறுத்தி உன்னைக் கூப்பிட வந்து நிற்கிறோம். குதூகலமுடைய பெண்ணே, எழுந்திரு.  மாவாய் ( கேசி எனும் அரக்கக் குதிரையின் வாய் ) பிளந்தவனை, தன் மாமன் கம்சனால் ஏவி விடப்பட்ட மல்லர்களை மாய்த்தவனுமான தேவாதி தேவனை நாம் சென்று சேவித்தால், ஆகாவென்று நம்முன்னே வந்து நம் குறைகளை ஆராய்ந்து தீர்த்து  அருள் புரிவான் - என் பாவையே..

திருப்பாவை முழுக்க "எம்பாவாய்" என்றே முடியும். இந்த பாவையை அழகானப் பெண் என்றும் கொள்ளலாம் அல்லது பாவை நோன்பிற்கு தான் வழிபடும் பாவை என்றும் கொள்ளலாம்.
**

என்னை நோக்கி நீங்கள் நடந்து வருவீர்களேயாயின் உங்களை நோக்கி நான் ஓடி வருகிறேன். (நூல்: புகாரி, முஸ்லிம்).
என்னை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், நான் உங்களை நோக்கி பத்தடி எடுத்து வைக்கிறேன் ( சாயிபாபா )
**

ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
      என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
      கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே

-- நம்மாழ்வார் திருமொழி.

நம்மாழ்வாராவது கைத் தொழறேன்.. ஸ்ரீ ரங்கத்தானே, வான நாயகனே ,  மாணிக்கச் சுடரே, என்னப்பா, கண்ணா வந்து எனக்கு அருள் புரிங்கறார். ஆனா ஆண்டாளுக்கு அதெல்லாம் இல்லை. நாம தொழறோம், அவன் வரான் அவ்ளோ தான், இதுல எதுக்கு வேண்டுதல். என்ன இருந்தாலும் இந்த கண்ணன் நம்ம பய இல்லையா. கூப்பிட்ட குரலுக்கு யானைக்கே அருள்புரிந்தவன் நமக்கு அருள் புரிய மாட்டானா என்ன ?
*****************************************

-09



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்


*******

குற்றங்களற்ற தூய மணிகளைக் கொண்ட மாடத்தில் சுற்றும் விளக்கெரிய,  நறும்புகை வாசம் எங்கும் நிரம்பிக்  கமழ மென்மையான பஞ்சணையில் தூங்கிக் கொண்டிருக்கும் மாமன் மகளே, மணிக்கதவம் தாழ் திறவாய்.  மாமியே, அவளை எழுப்ப மாட்டீர்களோ,  உங்கள் மகளென்ன ஊமையா  அல்லது செவிடா ? அல்லது உறக்கம் பீடித்தவலா ( அனந்தல் = காலை உறக்கம் ), அல்லது தூக்கத்தில் இருந்து எழாத படி யாரேனும் மந்திரித்து விட்டிருக்கிறார்களா ?  மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று பல நாமங்களைச் சொல்லி எழுந்திரு என் பாவையே

**
பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ
மன்ணணினா வலன்செய் மறை காடரோ
கண்ணினா உனை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செயமிலே
தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
--
மதுரம் மறை நான்காம் துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறை காட்டுறை மைந்தா
இது நன்கு இறை பெய்த்தருள் செய்த எனக்கும்
கதவன் திருகாப்பு கொள்ளும் கருத்தாக
--

ஞான சம்பந்தருடன் அப்பர் உருகி உருகிப் பாடி  திருமறைக்காட்டு ஆலயத்தின் திருக்கதவம் தாழ் திறக்கச் செய்கிறார்கள் .  இங்கே ஆண்டாளோ பகவானின் பக்தையை தாழ் திறக்கச் சொல்லி கெஞ்சுகிறாள்.  அடியாரின் உள்ளத்துறை அருமருந்தானவன் இறைவன் என்பதை ஆண்டாள் உணராதவரா என்ன ?
***

PRASATH

unread,
Dec 26, 2012, 12:32:59 AM12/26/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
நானும் ஆபிஸ் வேலையை கொஞ்சம் ஒழிச்சுக் கட்டி பிறகு வர்றேன்...
 
நீங்க என்ன தான் வேகமா போனாலும், நான் பின்னால வந்து முன்னால நீங்க போட்ட பாடலுக்குள்ள இருந்து கேள்வி கேப்பேன் ஏதும் கேள்வி இருந்தா....


2012/12/26 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
 

shylaja

unread,
Dec 26, 2012, 12:34:56 AM12/26/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
இந்த  எருமை சிறுவீடுக்கு  நல்ல  பொருள் ஒன்றும் உண்டு...அதேபோல
கோதுகலமுடைய பாவாய் என்பதன்  பொருளையும்  ஆராயலாம்

2012/12/26 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
>

--
SHYLAJA

Gokul Kumaran

unread,
Dec 26, 2012, 12:53:59 AM12/26/12
to panb...@googlegroups.com
Bhavatharini @bhavatharini

Hi ppl.. Got a wonderful news for u all.. My bro @raajakarthik devotional album is going to release this friday,its bout goddess andal




--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

Gokul Kumaran

unread,
Dec 26, 2012, 12:55:32 AM12/26/12
to panb...@googlegroups.com
Bhavatharini @bhavatharini

And the most wonderful thing is that myself @raajakarthik @Raja_Yuvan nd dad have all sung for the first time in one album

Bhavatharini @bhavatharini

@muralidharan_r the album name is sri andal



On Wed, Dec 26, 2012 at 9:53 AM, Gokul Kumaran <gokul...@gmail.com> wrote:
Bhavatharini @bhavatharini

Hi ppl.. Got a wonderful news for u all.. My bro @raajakarthik devotional album is going to release this friday,its bout goddess andal

 

PRASATH

unread,
Dec 26, 2012, 2:19:59 PM12/26/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
எல்லா பாடலும் எம்பாவாய்னு முடியாது... ஒரு பாடல் எக்செப்ஷன்னு எங்கோ படிச்ச நியாபகம்...


2012/12/26 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
( இன்னும் ரெண்டு பெண்டிங்.. வந்துடறேன் குயிக்கா )
*

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 26, 2012, 2:35:56 PM12/26/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
30 பாடலும் எம்பாவாய்னு தான் முடியும்.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2012/12/27 PRASATH <pras...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 26, 2012, 3:31:29 PM12/26/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
10 - நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
   மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
   நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
   போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
   கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
   தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
   ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
   தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
***

நோற்று - நோன்பிருந்து,  அந்தப் புண்ணியத்தால் சுவர்கம் செல்லும்(செல்லப் போகும் ) அம்மனாய்,  நீ இருக்குமிடம் சொர்க்கமே ஆகட்டும்,  வாசல் திறவாமல் போனாலும், பேசவும் கூடாதா என்ன?   நறுமணமிக்க துளசியை அணிந்த நாராயணன் நம்மால் போற்றப் படும் புண்ணியன் இருக்க, முன்பு ஒருமுறை தான் செய்த பிழையினால் தூக்கத்தை வரமாகப் பெற்றுப் பின் இராவணனுக்காகப் போரிட்டிறந்த கும்பகரணன், தான் இறக்கும் முன் அந்தப் பெருந்துயிலை உனக்கு தந்துவிட்டானோ?  நன்றாக ஆழ்ந்த துயிலை (அனந்தம் = துயில்  ) நல்லாபரணமாய் கொண்டவளே (அல்லது )  ஆழ்ந்த தூக்கத்தை உடையவளே, நல்லாபரணம் போன்றவளே,  தெளிந்து ( தேற்றமாய் ) வந்து கதவைத் திறந்திடு என் பாவையே

**

இந்தப் பாடல் முழுதும் ஒருவகையான எள்ளல் தொனி  இருப்பதை கவனிக்கலாம். இப்படித் தூங்கியே சொர்க்கம் போகப் போகிறாயா பெண்ணே ?  உன் கிட்ட கும்ப கர்ணனே தோத்துடுவான் போல இருக்கே ? தூக்கத்தையே நல்லாபரணமா போட்டவள் போல இருக்கே... தாயே பரதேவதே.. கொஞ்சம் தூக்கம் தெளிஞ்சு வந்து கதவத் திறடியம்மா... ( ம்ஹூம்.. முடியல்ல ஆண்டாளம்மாவாலயே போல )

**
இராவணாதியர்கள் தவம் கிடக்கிறார்கள் பிரம்மனிடம் சாகா வரம் வேண்டும் என்று. கும்பகர்ணனின் தவம் உக்கிரமாக இருந்தது. பிரம்ம தேவனோ  உடனுக்குடன் மனம் மகிழ்ந்து வரம் கொடுக்கும் வள்ளலாக இருந்தார்.  இந்தாடாப்பா கும்ப கர்ணா உனக்கு என்ன வரம் வேணும்னு மெனு சொல்லு... அப்படின்னு  கைல ஓலைச்சுவடி வச்சுட்டு நிக்கிறார் மெனுவ எழுதிக்க. இராவணன் கிட்ட ஏற்கனவே பட்ட அனுபவம் தான். எம்மாம் பெரிய லிஸ்ட்டுங்கறீங்க.   கும்ப கர்ணன் நித்யத்துவம் வேண்டும் என்று கேட்க நாவெடுக்கிறார். நாமகள் அவன் நாக்கைப் புரட்டி "நித்திரத் துவம்" என்று கேட்க வைத்துவிடுகிறாள். அதன் படி ஆறுமாதம் உறக்கம், ஆறு மாதம் விழிப்பு என்று செல்கிறது அவன் வாழ்க்கை.

உண்மையில் இராமாயணத்தில் கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமையானது.  இராவணனுக்கு முடிந்த அளவுக்கு அறிவுரைச் சொல்லிப் பார்க்கிறான். ஹ்ம்ஹூம்... இராவணனன் மசியவே இல்லை. சரி அண்ணனுக்காக போருக்குப் போகிறான். அவனின் முடிவு அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது.  போர்க்களத்தில் எதிரில் விபீஷணன் இருக்கிறான். அப்பாடா நம் குலம் தழைக்க ஒருத்தனாவது இருக்கானேன்னு மகிழ்ந்திருக்கும் சமயமா பாத்து விபீஷணன் கும்ப கர்ணனை நோக்கி வரான்.

முந்தி வந்து இறைஞ்சினானை
மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய்
என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித்
தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியே? என்றான்
மழையின் நீர் வழங்கும் கண்ணான்.

டேய் அப்பா, என் தம்பியே, என் செல்வமே, நீ ஒருத்தனாவது உயிர் பிழைத்து போனாயேன்னு நினைச்சு மகிழ்ந்திருந்தேன்.   ஓட்டைப் பாத்திரத்துல தண்ணி ஊத்தி வச்சா அது மொத்தமும் சிந்தி வீணா போறா மாதிரி உன் சிந்தனை எல்லாம் வழிஞ்சு போயிடுச்சா? ஏண்டா இங்க தனியா வந்தே.. அப்படின்னு மழை பெய்யறாமாதிரி கண்ணீர் விட்டு அழுதானாம்.

விபீஷணன் சொல்றான். அண்ணா, நீ நல்லவன். வந்துடு .. ராமன் கிட்ட போயிடலாம்னு. அதுக்கு கும்ப கர்ணன் சொல்லுவதைப் பாருங்க.


நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;
தார்க்கோல மேனி மைந்த! என துயர் தவிர்த்து ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.

இந்த வாழ்க்கை நீரினால் போட்டக் கோலம் போன்றது. இதை விரும்பி இத்தனை நாள் என்னை வளர்த்து ஆளாக்கி, எனக்குப் போர்க்கோலம் பூட்டி அனுப்பினவனுக்கு என் உயிரைக் கொடாமல் போவேனா ?   என் மகனைப் போன்ற என் தம்பியே... போடா என் துயரைக் களையனும்னா உடனே அந்த இராமன் கிட்ட போய்டுங்கறான்.


ஏற்றிய வில்லோன், யார்க்கும்
இறையவன், இராமன் நின்றான்;
மாற்றரும் தம்பி நின்றான்;
மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்றது;
தோற்றல் எம்பக்கல் ஐய!
வெவ்வலி தொலைய வந்தாய்

அந்தப் பக்கம் யார் நிக்கிறாங்கற? உலகத்தைக் காக்கும் பரம்பொருள் இறைவனே நிக்கிறார். அவர் பக்கத்துல அவன் தம்பி, வானரக் கூட்டமும் மட்டுமா நிக்குது.. எங்களைக் கொல்லும் விதியும் எமனும் சேர்ந்து நிக்குது. நான் போனாலும் நீ இருக்கனுண்டா தம்பின்னு அனுப்பி வைக்கிறான்.

ஹரியண்ணா கும்பகர்ணனைப் பற்றி எழுதிய விளக்கங்கள் தேடிக் கிடைத்தால் பகிர்கிறேன்.  படிக்க வேண்டிய ஒன்று

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 26, 2012, 3:37:02 PM12/26/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
ஒருவகையில இராமனுக்குக் கொடுத்த அந்தப் பெருமையை கும்ப கர்ணனுக்கும் கம்பர் கொடுத்தார்னே சொல்லனும்.


தோள் கண்டார் தோளே கண்டார்னு  இராமனைச் சொன்னாரில்லையா ?  அது மாதிரி கும்ப கர்ணனைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க

"
தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "

இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்து முடிக்கவே பல நாளாகுமாம். ஒரு மலைக்கு கைக் காள் முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு :)


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2012/12/27 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 26, 2012, 3:58:28 PM12/26/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
தூக்கத்துல கந்தரக்கோலமாய்டுச்சு. ஹரியண்ணா வந்து திட்டறதுக்குள்ள சரி பண்ணிடறேன் :)
******



ஒருவகையில இராமனுக்குக் கொடுத்த அந்தப் பெருமையை கும்ப கர்ணனுக்கும் கம்பர் கொடுத்தார்னே சொல்லனும்.


தோள் கண்டார் தோளே கண்டார்னு  இராமனைச் சொன்னாரில்லையா ?  


சூர்ப்பநகை இராமனைப் பாத்து மோகித்து நிற்கும் போது சொல்வது

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "


இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்ததாலயா என் கண்ணு இவ்ளோ நீளமாச்சு ? இல்ல இல்ல. இவனோட மார்பு அப்படி பரந்து விரிந்திருக்கிறது அப்படிங்கிறா சூர்ப்ப நகை. இப்ப  கம்பர் இதே உவமையை எங்க எடுத்து அடிக்கிறார்னு பாருங்க.



தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால் நடுவண் நின்றதோர்
தாளுடை மலைகொலாம் சமரம் வேட்ட
ஆளென் றுணர்கிலேன் ஆர்கொ லாம்இவன்?

. ஒரு மலைக்கு கைக் கால்  முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு இந்தத் தோள்ல இருந்து அடுத்த தோள் பாத்து முடிக்கவே நாளாகுமாம். அப்படின்னு யார் சொல்றது ? இராமனே சொல்றானாம்.  இது கும்பகர்ணனுக்கு அளித்த பெருமை தானே ?




sk natarajan

unread,
Dec 26, 2012, 8:21:48 PM12/26/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
அருமை  தொடருங்கள் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/26 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Dec 26, 2012, 8:23:54 PM12/26/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல்
கண்டிப்பாக கேள்விகள் கேட்க வேண்டும்  பிரசாத்
அடிக்கடி  ஜீவ்ஸ் காணாமல் போய் விடுகின்றார் இதையும் சேர்த்து :)


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/26 PRASATH <pras...@gmail.com>

sk natarajan

unread,
Dec 26, 2012, 8:24:43 PM12/26/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
அருமையான விளக்கங்கள் ஜீவ்ஸ் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2012/12/27 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

PRASATH

unread,
Dec 26, 2012, 10:44:40 PM12/26/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
//கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
//
 
இந்த இருவரிகளுக்கு ஏனோ நீங்கள் கொடுத்த பொருள் முழுமையா இருக்குறாப்புல தெரியலை..
 
 //முன்பு ஒருமுறை தான் செய்த பிழையினால் தூக்கத்தை வரமாகப் பெற்றுப் பின் இராவணனுக்காகப் போரிட்டிறந்த கும்பகரணன், தான் இறக்கும் முன் அந்தப் பெருந்துயிலை உனக்கு தந்துவிட்டானோ? //
 
இதுதானே நீங்கள் சொன்ன பொருள்.... மேல் சொன்ன இருவரிகளுக்கும் இந்த அர்த்தத்திற்கும் ஏறத்தாழ தொண்ணூறு சதம் பொருந்தி வந்தாலும் முழுமையடைஞ்சாப்புல ஒரு பீல் வரலை....
 
மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு....

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 27, 2012, 5:31:15 AM12/27/12
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
என்னா முழுசா வரலையோன்னு தெரியலையே .. அவ்வ்வ்..  ஊரு உலகத்துல ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு தம்பி வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்காங்க.  நான் இவன் ஒருத்தன் கிட்ட மாட்டிட்டுப் படற அவஸ்த்த இருக்கே ..

***
//

//கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
//
 
கூற்றம் = இயமன்.
மற்று பிற அரக்கர்களை எம்பெருமான் வதம் செய்தார். முந்தைய பாடல்களில்  சகடா சூரன், மல்லர்கள் என பல அரக்கர்களைக் கூறி  அவர்களை வதம் செய்தவன் நாராயாணன் அப்படியானவனின் புகழைப் பாடுவோம்னு சொன்னாங்களே, அது  மாதிரி இறைவனால்  கும்ப கர்ணன் " கூற்றத்தின் வாய்" வீழ்ந்தான். அப்படியான கும்ப கர்ணன் தோன்றி உனக்கு அவனோட பெரும் உறக்கத்தை உனக்குக் குடுத்துட்டுப் போய்ட்டானா ? அப்படிங்கறாங்க. இதுல வேறேதும் டவுட்டு ?



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2012/12/27 PRASATH <pras...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
Dec 27, 2012, 5:52:25 AM12/27/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
தோற்றும்...= தோல்வி...
 
இந்த தோற்றும் என்பது கும்பகர்ணன் இராமனிடம் தோற்றதா..
 
தோற்றும் = தோன்றியா....
 
தோற்றும் தோன்றி என்ற பொருளில் வேற எங்கும் வந்திருக்கா....
 
இதை கொஞ்சம் விளக்கமாச் சொல்லலாமே...

2012/12/27 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
என்னா முழுசா வரலையோன்னு தெரியலையே .. அவ்வ்வ்..  ஊரு உலகத்துல ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு தம்பி வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்காங்க.  நான் இவன் ஒருத்தன் கிட்ட மாட்டிட்டுப் படற அவஸ்த்த இருக்கே ..

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 27, 2012, 6:09:39 AM12/27/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்

தோற்று, (p. 638) [ tōṟṟu, ] கிறேன், தோற்றினேன், வேன், தொற்ற, s. [used com. in the neuter only. with the datire of person.] To ap pear, to become visible, to come izn sight, காணப்பட. 2. To rise, to originate, to spring forth, to come into existence, to emanate, to be born, உற்பலிக்க. 3. To spring, to sprout, முளைக்க. 4. To be evolved, produced --as worlds, creatures, &c., from original elements, உண்டாக. 5. To appear to the mind, to seem, to be evident, மனதுக்குத் தோன்ற. 6. To be presented as images ideas, &c.,to the imagination, to be com prehended by the mind, பாவனையாய்க்காண. 7. To appear on the stage, கூத்தில்வர. 8. To be felt, perceived, &c., by any of the senses, &c., விடயமாக. 9. To cause to appear, to show, to produce, தோன்றச்செய்ய; [ex தோன்று.]

தோற்றாமல், [neg. v. part.] Being imperceptible or invisible.
தோற்றாமற்கொண்டுபோக, inf. To take away unseen. 2. To pilfer by little and little.
தோற்றுவாய், s. Introduction to a literary work, a preface, பாயிரம். (p.)
தோற்றுவாய்செய்ய, inf. To introduce a subject to make an exordium.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2012/12/27 PRASATH <pras...@gmail.com>
தோற்றும்...= தோல்வி...

PRASATH

unread,
Dec 27, 2012, 6:12:27 AM12/27/12
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
நான் தோற்று என்னும் சொல் தோன்றி என்ற பொருளில் வரும் பாடலைத் தானே கேட்டேன்...
 
அதுக்கு ஏன் இப்படி லீவ் லெட்டர் எல்லாம் எழுதி பயப்படுத்துறீங்க....


2012/12/27 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

தோற்று, (p. 638) [ tōṟṟu, ] கிறேன், தோற்றினேன், வேன், தொற்ற, s. [used com. in the neuter only. with the datire of person.] To ap pear, to become visible, to come izn sight, காணப்பட. 2. To rise, to originate, to spring forth, to come into existence, to emanate, to be born, உற்பலிக்க. 3. To spring, to sprout, முளைக்க. 4. To be evolved, produced --as worlds, creatures, &c., from original elements, உண்டாக. 5. To appear to the mind, to seem, to be evident, மனதுக்குத் தோன்ற. 6. To be presented as images ideas, &c.,to the imagination, to be com prehended by the mind, பாவனையாய்க்காண. 7. To appear on the stage, கூத்தில்வர. 8. To be felt, perceived, &c., by any of the senses, &c., விடயமாக. 9. To cause to appear, to show, to produce, தோன்றச்செய்ய; [ex தோன்று.]

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 27, 2012, 6:17:00 AM12/27/12
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் பிரவாகம்
தோற்றும் என்பது  - அந்த கும்பகர்ணனே உங்கிட்ட தோத்துப் போயிட்டான் அப்படின்னு அர்த்தம் கொள்ளலாம்.

தோற்றுவாய் = உற்பத்தி இடம். தோன்றுதல், appear. 3. To spring, to sprout, முளைக்க. என்றும் அர்த்தம் வரும்.

ஹரியண்ணா சொன்னது : உங்கிட்டயே தோத்துட்டான் அந்தக் கும்ப கர்ணன் தூக்கத்துல

PRASATH

unread,
Dec 27, 2012, 6:20:12 AM12/27/12
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
ம்ம்ம்...
 
இன்னொரு பாட்டு எங்க இருந்தாச்சும் எடுத்துப் போடுவீங்க... இன்னும் விஷயம் வாங்கலாம்னு பார்த்தேன்... நடக்காது போல....
 
சரி அடுத்த பாட்டுக்குப் போலாம் ரைட்டு...


2012/12/27 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
தோற்றும் என்பது  - அந்த கும்பகர்ணனே உங்கிட்ட தோத்துப் போயிட்டான் அப்படின்னு அர்த்தம் கொள்ளலாம்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 19, 2013, 5:50:25 AM12/19/13
to panb...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்

On Thursday, December 27, 2012 4:50:12 PM UTC+5:30, பிரசாத் வேணுகோபால் wrote:
ம்ம்ம்...
 
இன்னொரு பாட்டு எங்க இருந்தாச்சும் எடுத்துப் போடுவீங்க... இன்னும் விஷயம் வாங்கலாம்னு பார்த்தேன்... நடக்காது போல....
 
சரி அடுத்த பாட்டுக்குப் போலாம் ரைட்டு...
 
 
its one yr now. I request Prasad to continue this now :| 

PRASATH

unread,
Dec 19, 2013, 6:00:04 AM12/19/13
to தமிழ் வாசல், Groups, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
இதெல்லாம் நல்லதுக்கில்லை சொல்லிப்புட்டேன்...
 
எங்கேயோ வருஷக் கணக்கா தூங்கிட்டு இருந்த மடலை எல்லாம் ஏன் எடுத்து போடுறீங்க மறுபடியும்...
 
பெரியவங்க மன்னிக்கணும்... அலுவலக வேலை அதிகமானதாலும், புத்தி நாளுக்கு நாள் மட்டுப்பட்டுக் கொண்டே போவதாலும் எதையும் பேசுற நிலையில நான் இல்லை... பெரியவங்க யாராச்சும் சொன்னா கேட்டுக்கிடுறேன் சந்தோஷமா...
 
நன்றி...


2013/12/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages