தமிழர் விளையாட்டுக்கள்

4,514 views
Skip to first unread message

stalin felix

unread,
May 31, 2010, 2:01:06 PM5/31/10
to panbudan

கிட்டிப் புள்ளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கிட்டிப் புள்ளு விளையாட்டு தமிழகத்தின் பழமையான ஒரு தமிழர் விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். மட்டைப்பந்து என்பது தமிழரின் கிட்டிப் புள்ளு வியைளாட்டில் இருந்து தோன்றினது என்பார். [1]

[தொகு]வரலாறு

சிறுவர்களிடம்தான் அது மிகவும் பிரபலம். பள்ளி செல்லும் காலங்களில் கிள்டிப் புள்ளு விளையாடும்போது எங்கே புள்ளு கண்ணில் படுமோ என்ற பயமும் இருக்கும். இரு பக்கமும் கூராக ஒரு சிறு குழியின்மேல் கிடைமட்டமாக இருக்கும் புள்ளை, நீண்ட ஒரு பக்கம் கூராக உள்ள தடியால்(கிட்டி) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும். அதன்பின்னர் புள்ளு வீழ்ந்த இடத்திலிருந்து குழியைநோக்கி புள்ளு வீசப்படும், அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும் (கிட்டிப்புள்ளு விளையாடும் முறையை நான் மறந்துவிட்டேன், நினைவில் இருந்தததையே எழுதியுள்ளேன்).

மட்டைப்பந்து விளையாட்டிற்கும் கிட்டிப்புள் விளையாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை மேலே தரப்பட்ட விவரத்திலிருந்து நீங்கள் காணலாம். மட்டைப்பந்தில் கிட்டிக்குப் பதிலாக மட்டையையும், புள்ளிற்குப் பதிலாக பந்தையையும் பாவிக்கிறார்கள். மேலும் மட்டைப்பந்தில் இரண்டு 'wickets' ஊன்றப்பட்டு அவற்றின் மேல் இரண்டு 'bails' வைக்கப்படுகின்றன. கிட்டிப்புள்ளில் இரண்டு பக்கமும் கூராக்கப்பட்டு பாவிக்கப்படும் சிறு குத்தியான புள்ளைத்தான் ஆங்கிலத்தில் 'bail' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு விக்கற்றிலும்(wicket) மூன்று 'stumps' இருக்கும், அவற்றைக் குத்திகள் என்று இராமகி ஐயா அழைக்கிறார். விக்கற்(wicket) என்பதற்கு கிட்டியைப் பாவிக்கலாம் என இராமகி ஐயா பரிந்துரைத்திருக்கிறார்.

[தொகு]விரிவாக்கம்

மட்டைப்பந்து தமிழ் மூலம் உடையதாக மட்டும் பார்க்காமல், மட்டைப்பந்தில் பாவிக்கப்படும் ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களைப் பாவிப்பது நன்றாக இருக்கும், மட்டைப்பந்திற்கும் தமிழருக்குமான தொடர்பை வலுப்படுத்தும். இராமகி ஐயா பரிந்துரைத்த சொற்களும் வேறு சிலவும் கீழே தரப்பட்டுள்ளன.

எங்களிடமிருந்து உருவாகிய மட்டைப்பந்தை உருவாக்கியவர்கள் வேறாக இருந்தாலும் அதன் ஊற்று தமிழ்தான். மட்டைப்பந்து எவ்வாறு கிட்டிப்புள்ளிலிருந்து வந்ததோ, அவ்வாறு கிளித்தட்டு, சடுகுடு, சட்டி குட்டி போன்ற விளையாட்டுக்கள் விருத்தியடையச் செய்ய வேண்டும்.

ket - மட்டைப்பந்து, துடுப்பாட்டம் wicket - கிட்டி stump - குத்தி bail - புள்ளு bat - மட்டை batsman - மட்டையாளர் ball - பந்து balling - பந்து வீச்சு bowler - பந்து வீச்சாளர் bounce - குதிப்பு fast bowl - வேகப்பந்து spin bowl - சுழற்பந்து inning - உள்ளாங்கு innings match - உள்ளாங்குகள் போட்டி over - பந்துமாற்றம் one day match - ஒரு நாள் போட்டி pitch - பட்டிகை catch - பிடி, ஏந்து throw - எறி field - களம் fielder - களத்தர் fieldsman - களத்தர்கள் sixture - ஆறு boundry - எல்லை four - நாலு run - ஓட்டம் leg bye - காலோடு hit wicket - கிட்டி வீழ்ப்பு wide ball - அகலப்பந்து out - ? not out - ? run out - ? no ball - ?


--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


stalin felix

unread,
May 31, 2010, 2:02:12 PM5/31/10
to panbudan

ஓணப்பந்து விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஓணப்பந்து அல்லது பந்தடி விளையாட்டு தமிழகத்தின் பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்ட பிரபலமான விளையாட்டாகும். இது முறையே 7 வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால்பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.

பொருளடக்கம்

 [மறை]

[தொகு]ஓணப்பந்து

எருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது துடுப்பாட்டப் ( Cricket ) பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

[தொகு]ஓணப்பந்து மைதானம்

ஓணப்பந்து மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நாட்டப்படுகிறது.

ஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணிகட்டப்பட்டிருக்கும்.

[தொகு]கட்டங்கள்

இவ்விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை:

  1. ஒற்றை,
  2. இரட்டை,
  3. முறுக்கி,
  4. தாளம்,
  5. காவடி,
  6. ஓட்டம்,
  7. பட்டம்.

ஒரு கட்டத்திற்கு 3 பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும்.

[தொகு]அணி

இவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட 7 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

[தொகு]விளையாடும் முறை

நாணய சுண்டல் முறையில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியினர் முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.

[தொகு]அடித்தாட்டமும் தடுப்பாட்டமும்

அடித்தாடும் அணியின் முதல் வீரர்(எண் 1) முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல‌ வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.

எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.

அடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார்.

இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.

ஆனால் முதல் வீரர் 3 பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.

விளையாடும்மோது 7 வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.

[தொகு]ஓட்டம்

இவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என‌ முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் 3 பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான‌ பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற‌ நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.

முதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற‌ அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.

இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்

[தொகு]விதிமுறைகள்

  • அணி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் வரிசையில்தான் விளையாட வேண்டும். இருப்பினும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆட்டம் முடிந்த பின் எண்களை மாற்ற தடையேதுமில்லை.
  • பந்தை பிடிக்கும்போது பந்தை கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும் தரையிலோ உடம்பிலோ படக்கூடாது.
  • பந்தை கால்களால் திரும்பச்செலுத்தும்போது ஒருவர் செலுத்திய பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை செலுத்தலாகாது.
  • பந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் கையை உயர்த்தினால் அவரே அப்பந்தை பிடிக்கும் தகுதியை பெறுகிறார்.
  • பந்து வேகமாக வரும்போதே பந்தை திரும்பச்செலுத்த வேண்டும்.பந்து வேகம் குறைந்து நின்ற பின் பந்தை அடித்தலாகாது.
  • பந்தை செலுத்தும்போது பந்து வீரரின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவற விட்டதாகவே கருதப்படும்.
  • பந்து எல்கை கம்பத்தின் மீது பட்டாலும் எல்கைக்கு வெளியே சென்றதாக கருதப்படும்.

[தொகு]நடுவர்கள்

ஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப‌ நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும்

stalin felix

unread,
May 31, 2010, 2:03:12 PM5/31/10
to panbudan

கிளித்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கிளித்தட்டு

கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் தமிழீழத்தில் பரவலாக விளையாடப்படும்விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும்.

[தொகு]போட்டி விதிமுறைகள்

மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்பது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும்.

கிளிதட்டு மைதான அமைப்பு


யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை சேர்ந்தவர் கிளி என்று அழைக்கப்பட்டு, எந்த கோடுகளாலும் செல்ல வல்லவர். கிளியால் தொடப்பட்டால் புகும் குழு உறுப்பினர் ஆட்டமிழப்பார்.


முதலில் கிளி ஒரு தொங்கலிலும், புகுபவர்கள் ஒரு தொங்கலும் நிற்பார்கள். கிளி கூவிக்கொண்டு முன்னோக்கி வருவார். கிளி கூவியவுடன் புகுபவர்கள் உச்சி, தெண்டி அடுத்த எல்லைக்கு செல்ல முயல வேண்டும். தாண்டும் பொழுது மறிப்பவரால் தொடப்பட்டால் தாண்டுபவர் ஆட்டமிழப்பார். தாண்டும்போது மட்டுமே மறுப்பவர் தட்ட முடியும், சும்மா அருகில் நிற்க்கும் பொழுதோ, உச்சும் பொழுதோ தட்ட முடியாது. ஆனால், கிளி எங்கும் சென்று யாரையும் எப்பொழுதும் தட்டலாம். அதாவது, எட்டியும் தட்டலாம்.


உச்சி, தப்பி எல்லைக்கு சென்றவர்கள் பழம் என்று கருதப்படுவர். வந்து கொண்டிப்பவர்கள் காய்கள். பழமானவர், மீண்டும் புகுந்த எல்லைக்கே சென்றால் தான் அந்த அணியினருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். ஆனால், மீண்டும் வரும் பொழுது, பழம் காய் உள்ள ஒரு பெட்டிக்கு போகவது அவ்வளவு நல்லதல்ல, காரணம், இருவருக்கும் உச்சுவதற்க்கு குறுகிய இடமே கிடைக்கும். மேலும், கிளி பூட்டு போட்டு தட்ட முயல்வார்.


எந்த அணி கூடிய புள்ளிகளைப் பெறுகின்றதோ அவர்களுக்கே வெற்றி. பலருடன் சேர்ந்து விளையாடும் பொழுது, இந்தவிளையாட்டு மிகவும் வேகமாகவும், விறு விறுப்பாகவும் அமையும்

stalin felix

unread,
May 31, 2010, 2:03:51 PM5/31/10
to panbudan

சடுகுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கபடி(சடுகுடு) விளையாடும் வங்கதேசக் குழந்தைகள்

கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி.[1] இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.


இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

பொருளடக்கம்

 [மறை]

[தொகு]விளையாட்டு

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப்பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.

ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

[தொகு]கபடிப் பாடல்கள்

தரமான கபடித் தளம்
நாந்தான் வீரன்டா

நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.

கீத்து கீத்துடா

கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.....

[தொகு]ஆடுகளம்

ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும் (இன்னும் எழுத வேண்டியுள்ளது)

stalin felix

unread,
May 31, 2010, 2:08:17 PM5/31/10
to panbudan

எட்டுக்கோடு


எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே பங்குபற்றுவது வழக்கம்.

பொருளடக்கம்

 [மறை]

[தொகு]தேவையானவை

எட்டுக்கோடு விளையாடுவதற்கான கட்டம்

இதை விளையாடுவதற்கான களத்தில் 8 கட்டங்கள் அமையக்கூடியவாறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். (அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும்) கட்டங்களின் அளவு ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குக் கெந்திப் பாய்வதற்கு (ஒற்றைக் காலில் பாய்தல்) வசதியாக அமைந்திருக்கும்.

இவ் விளையாட்டுக்கு அண்ணளவாக ஒரு அங்குல விட்டமுள்ள சிறிய, தடிப்புக் குறைந்தமட்பாண்டத் துண்டொன்று பயன்படுகின்றது. இதைச் "சில்லி" என்று அழைப்பார்கள்.

இது பல மட்டங்களாக விளையாடப்படுகிறது.

எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.

[தொகு]விளையாடும் முறை

[தொகு]முதல் கட்டம்

சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.

ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.

இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.

[தொகு]எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம்

இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.

[தொகு]மூன்றாவது கட்டம்

சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.

[தொகு]நான்காவது கட்டம்

சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.

மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.

[தொகு]அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்

இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

stalin felix

unread,
May 31, 2010, 2:09:24 PM5/31/10
to panbudan

போர்த்தேங்காய்


போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு சிறப்பு நாட்களிலும் நடக்கும். கடைகளில் இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, தேங்காய்களை வாங்கி வைத்திருந்து, ஒரு கோயில்வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக்கள் கூடி, அங்கு தேங்காய் அடி நடைபெறும்.

[தொகு]போட்டி விதிகள்

போட்டியாளர் ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து போர்த் தேங்காய்களை வைத்திருப்பார். ஒருவர் ஒன்றை நிலத்தில் உருட்டி விடுவார். மற்றொருவர் அதனுடைய லேசாக உடையக்கூடிய பகுதி எவ்விடத்தில் இருக்கிறதென்று சுற்றிவந்து அவதானித்துத் தனது கைத்தேங்காயை அதன்மேல் ஓங்கி அடிப்பார். நிலத்துத் தேங்காய் உடைந்து விட்டால் அவருக்கு வெற்றி; கைத்தேங்காய் உடைந்தால் அடித்தவருக்குத் தோல்வி. தோற்றவர் இன்னுமொரு தேங்காயைப் பாவிப்பார். இப்படியாகத் தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று பிடிக்கும் தேங்காயின் சொந்தக்காரர் தான் வெற்றியாளர். அவருக்கு மாலை போட்டுக் கௌரவிப்பார்கள்

stalin felix

unread,
May 31, 2010, 2:09:59 PM5/31/10
to panbudan

பல்லாங்குழி


பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர்'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்' என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் 'பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)' என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது[1].

பொருளடக்கம்

 [மறை]

[தொகு]அமைப்பு

பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது.

[தொகு]ஆட்ட வகைகள்

தான்சானியா நாட்டின் பல்லாங்குழிப் பலகை

பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினைக் குறிப்பிடுகிறார் பாவாணர். பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் பல்லாங்குழி ஆட்டத்தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் அவ் வகைகள் ஆடப்படும் பகுதிகள் என விரிவான அட்டவணை தந்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நூலாகும் இது[1].

பல்லாங்குழி ஆட்டத்தின் அடிக்கூறுகளை பின்வருமாறு வரையறை செய்து கொள்ள முடியும்:

  • இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக்குழியாக இருந்தால் வலது கைப்பக்கக் குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.
  • தன்னுடைய காய்களை எடுத்து ஒருவர் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது.
  • எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன.
  • சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு) யினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றன.
  • ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.
  • இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.
  • காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.
  • ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.
  • தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

[தொகு]ஏனையவை

3 பேர் விளையாடும் மிகவும் விறுவிறுப்பான "ராஜா பாண்டி", ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் "சீதா பாண்டி" (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் "காசி பாண்டி"

stalin felix

unread,
May 31, 2010, 2:10:58 PM5/31/10
to panbudan

குழை எடு


-- குழை எடு ஆட்டம் ஆடு புலி ஆட்டம் என்றும் அழைக்கப்படும். இது மிகவும் எளிய விளையாட்டு. ஒரு வட்டத்தினுள்ளே குழை இருக்கும். வட்டம் ஏறைக்குறைய 50 யாட் விட்டம் கொண்டது. வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு. படத்தை பார்க்கவும். யாரவது ஒருவர் வட்டத்துக்குள் இருக்கும் குழையை எடுத்துக்கொண்டு தன் பக்கம் மற்றவர் தொட முதல் ஓடி விட வேண்டும். மாட்டிக் கொண்டால் அவர் ஆட்டமிழப்பார்.
குழை எடு ஆட்டம் மையான அமைப்பு

[தொகு]வெளி இணைப்புகள்


stalin felix

unread,
May 31, 2010, 2:11:40 PM5/31/10
to panbudan

வெளிக்கள விளையாட்டுக்கள்




--
அன்புடன்

stalin felix

unread,
May 31, 2010, 2:12:03 PM5/31/10
to panbudan

stalin felix

unread,
May 31, 2010, 2:18:02 PM5/31/10
to panbudan

தாயக் கட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாயக் கட்டை பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோசெய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

பொருளடக்கம்

 [மறை]

[தொகு]தாயம்

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

[தொகு]வரலாறு

தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது.

[தொகு]நான்முக தாயக் கட்டை

நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

[தொகு]அறுமுக தாயக் கட்டை

அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்


2010/5/31 stalin felix <stalinf...@gmail.com>

stalin felix

unread,
May 31, 2010, 2:18:19 PM5/31/10
to panbudan

கொக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கொக்கான் ஒர் இருந்து விளையாடும் விளையாட்டு. இவ்விளையாட்டைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவார்கள். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு (மார்பிள்) மேலெழும்பாது.

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும் (மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும்.

[தொகு]கொக்கான் வெட்டும் முறை

முதலில் கைகளுக்குள் கற்களை வைத்துக் கொண்டு மார்பிளை மேலெறிந்து விட்டு, அது கீழே விழுந்து மீண்டும் மேலெழுந்து விழுவதற்குள், சுட்டு விரலால் நிலத்தைத் தொட்டு விட்டு மார்பிளை ஏந்த வேண்டும்.

மார்பிளை இரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ, நிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ, மார்பிளை பிடிக்காமல் விட்டாலோ, பிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ ஆள் அவுட். எந்தக் கட்டத்திலும் மார்பிள் இருதரம் தரையைத் தொடக் கூடாது.

இரண்டாவதாக,

மார்பிளை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். மார்பிள் நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு மார்பிளை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் மார்பிளை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக,

இரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே மார்பிளையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது மார்பிள் கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ ஆள் அவுட்.

நான்காவதாக,

இரண்டாவது மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.)

ஐந்தாவதாக,

கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டா விட்டால் மார்பிளை விட்டு விடுவீர்கள்.

ஆறாவதாக,

நான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.

ஏழாவதாக,

ஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். ஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.

எட்டாவது, (பழம்)

கற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் ஆள் அவுட்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் அவுட்டானால் அடுத்தவர் தான் அவுட்டான இடத்திலிருந்து தொடர வேண்டும்.


2010/5/31 stalin felix <stalinf...@gmail.com>

stalin felix

unread,
May 31, 2010, 2:18:48 PM5/31/10
to panbudan

பல்லாங்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.


2010/5/31 stalin felix <stalinf...@gmail.com>

stalin felix

unread,
May 31, 2010, 2:19:11 PM5/31/10
to panbudan

ஆடும் புலியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆடுபுலி கட்டம்

ஆடுபுலி ஆட்டம் இந்தியாவில் பரவலாக விளையாடப்படும் ஒரு மிகப் பழமையான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை ஐந்து அகவைக்கு (வயதுக்கு) மேற்பட்ட இருவர் விளையாடலாம். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களைக் கொண்டு விளையாடலாம்.

[தொகு]வரலாறு

ஆடுபுலி ஆட்டம் மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியவில்லை.

[தொகு]விதி முறைகள்

  • ஐந்து வயதுக்கு மேற்பட்ட இருவர் இவ்விளையாட்டை விளையாடலாம்.
  • 15 ஆடுகளுக்கும் 3 புலிகளுக்கும் வெவ்வேறு காய்களை பயன்படுத்த வேண்டும்.
  • முதலில் ஒரு ஆட்டையோ அல்லது ஒரு புலியையோ கட்டத்தின் ஒரங்களில் உள்ள புள்ளியிட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
  • ஒரு ஆடு தனித்து இருந்தால் புலி அதைத் தாண்டி குதித்து சாப்பிட்டுவிடும். இதனால் எப்பொழுதும் ஒரு ஆட்டுக்குப் பின்னர் இன்னொரு ஆடு இருக்க வேண்டும். புலி விழுங்கிய ஆடுகளை ஆட்டத்திலிருந்து உடனே நீக்கிவிட வேண்டும்.
  • அனைத்து காய்களையும் கட்டங்களின் ஓரத்தில் வைத்த பின்னர் மாறி மாறி ஆட்டையும் புலியையும் நகர்த்த வேண்டும். காய்களை புள்ளியிட்ட பகுதியில்தான் நகர்த்த வேண்டும். கட்டங்களுக்கு நடுவோ அல்லது கட்டங்களுக்கு வெளியேயோ காய்களை நகர்த்தக் கூடாது.
  • மூன்று புலிகளையும் வேறு கட்டங்களுக்கு நகர விடாமல் ஆடுகள் முற்றுகை இட்டால் ஆடுகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அவ்வாறு இல்லாமல் அனைத்து ஆடுகளையும் புலிகள் விழுங்கிவிட்டால் புலிகளே வெற்றிபெட்டதாகக் கருதப்படும்

2010/5/31 stalin felix <stalinf...@gmail.com>

உள்ளக விளையாட்டுக்கள்

stalin felix

unread,
May 31, 2010, 2:20:13 PM5/31/10
to panbudan

தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.

>> TUESDAY, JULY 17, 2007


உங்களுக்கு, கிட்டிப்புள்ளு (கிட்டிப்பொல்லு, கில்லி) விளையாட்டு, விளையாடும் முறை ஞாபகமிருக்கிறதா? என சென்றவாரம் இணையத்தூதில் உரையாடியபோது நண்பரொருவர்,கேட்டார். என்ன திடீரென கிட்டிப்புள் விளையாட்டைப் பற்றி அக்கறையாக் கேட்கிறியள் என்ற கேள்வியோடு, உரையாடல் தொடர்ந்த போது, விளையாட்டு முறைகள் சற்று ஞாபகமற்றுப் போயிருந்தது எனக்கும் உறைத்தது.

ஒருகாலத்தில், நாளும் பொழுதும் இந்த விளையாட்டுக்களோடு திரிந்த நமக்கே, வாழ்நிலைச்சூழலின் சறுக்கலில் அவை நினைவற்றுப்போயுள்ளன. அப்படியாயின், போரும் வாழ்வுமாகிப்போன, எங்கள் புலத்திலோ, அந்நியச்சூழலே நம் வாழ்தளம் என்றாகிப்போன புலம்பெயர்சூழலிலோ, வாழுகின்ற நம் இளைய தலைமுறைக்கு, இந்த விளையாட்டுக்கள் பற்றி ஏதேனும் தெரிய முடியுமா?

இப்படியொரு கேள்வி இப்புலம்பெயர் சூழலில் எழுந்தபோதுதான், தொடக்கக் கேள்வி என்னையும் நோக்கி வந்தது. எதுவுமற்ற ஏதிலிகளாக, வேதனைகளைச்சுமந்த வண்ணம், இருப்பினை எண்ணிக் கொண்டு, புலம்பெயர்ந்த வேளையிலோ, பின் வந்த வெறுமை மிகு வாழ்க்கைக் காலங்களிலோ விளையாட்டுக்கள் எங்கள் மனதை நிறைத்திருக்கவில்லை. அதனால் அவை மறக்கப்படுமாறுமாயிற்று. வறண்டுபோன எங்கள் வாழ்வியலில், புது வசந்தங்களென் எங்கள் பிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் ஓடியாடி விளையாடும் தருணங்கள் வந்தபோது, எங்கள் மனங்களிலும், இளமைக்கால ஞாபகங்கள் எழுந்து உட்கார்ந்தன. வீதிகளிலும், விளையாட்டுத்திடல்களிலும், நாங்கள் ஆடிய விளையாட்டுக்கள் ஞாபகத்திற்கு வந்தன. கூடவே, இவைபற்றியும் எங்கள் செல்வங்களுக்கு சொல்லிக்கொடுக்கவோ அல்லது சொல்லி வைக்கவோ வேண்டுமல்லோ என்ற எண்ணங்கள் இப்போ எல்லாத் திக்குகளிலும், எழும்பத் தொடங்கியுள்ளன.

இப்படியான இன்றைய காலச் சூழலில், சுவிற்சர்லாந்து தமிழ்மன்றத்தின் விளையாட்டுத்துறை, தனது பத்தாம் ஆண்டு நிறைவை மலர்வெளியிட்டு நினைவுப்படுத்த விரும்பியபோது, மேற்சொன்ன எண்ணங்கள் வீச்சாக எழ,வாழ்த்துச் செய்திகளோடல்லாது, வளமான தமிழர் நம் விளையாட்டுக்கள் குறித்த சங்கதிகள் பலவற்றுடன், வீச்சு என்ற விளையாட்டுச்சிறப்பிதழ் மலர்ந்துள்ளது. அருமையான வடிவமைப்பில், அழகான படங்களுடன், அருமையான கட்டுரைகளும் அடங்கிய வீச்சு, உண்மையில் நம் விளையாட்டுத்துறைசார் வெளியீடுகளில் பெருவீச்சாகவே உள்ளது.

விளையாட்டிலிருந்து வினைதீர்க்கும் மருத்துவம்வரை ஒரு அஞ்சலோட்டம் எனும், ஏ.ஜி. யோகராஜாவின் நீளமான கட்டுரை, வெறுமனே ஒரு கட்டுரை எனச் சொல்லிவிட முடியாது. எங்கள் சமூகத்தின் வாழ்வியல் கூறொன்றினை விரிவாகப் பார்க்கக் கூடிய புத்தகமொன்றின் முதல்வாசிப்பு எனச் சொல்லத்தக்கது. புலம்பெயர் சூழலில் தொடங்கி, ஆன்மீகம்வரை அஞ்சலோட்மெனச் செல்லும் கட்டுரையில், எத்தனை எத்தனை எண்ணங்கள், சான்றுகள், நோக்குகள்.

யாழ்ப்பாணத்திலிருந்து, பொன். சுந்தரராஜன் எழுதியுள்ள, தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒரு ஆய்வுக்கான அறிமுகம் எனும் கட்டுரை, எங்கள் பாரம்பரிய விளையாட்டுக் பலவற்றையும், சுருக்கக் குறிப்பில் அறிமுகம் செய்து வைக்கிறது. கிளித்தட்டு,கிட்டிப் புள் அடித்தல், பட்டம் விடுதல், படகோட்டல், மாட்டுவண்டில் சவாரி,போர்த்தேங்காய் அடித்தல், காளை அடக்குதல், பேய்பந்து அடித்தல், காயா, பழமா, சடுகுடு விளையாட்டு, புலியும் ஆடும், நொண்டி அடித்தல் அல்லது கெந்துதல், பகலாட்ட தாகம், என்உலக்கை குத்து, பச்சைக்குதிரை, அம்மானை, கீச்சுமாச்சுத் தம்பலம், தட்டாங்கல் என கட்டுரையில் பல விளையாட்டுகள் வந்து போகின்றன. இவை மட்டுமல்லாது, சுவிற்சர்லாந்தில் விளையாடப்படும் கோடைகால, குளிர்கால வினளயாட்டுக்கள் என்பன பற்றிய மதுரா குணசிங்கத்தின், சுவிஸ் சாரல்களில் எனும் கட்டுரையும், வேறுசில கட்டுரைகளும், கவிதைகளும், உள்ளடக்கி வீச்சு வந்திருக்கிறது.

புலம்பெயர் சூழலில் இத்தகைய முயற்சிகள், அவசியமானது ஆரோக்கியமானது. ஆனால் இத்தகைய முயற்சிகளின் வெற்றியும், உந்துதலும் பெற வேண்டுமாயின், நாமும், நமது இளைய தலைமுறையும், இவற்றை வாசிக்கவும், சுவாசிக்கவும் வேண்டும். அதுவே இத்தகைய பணிகளில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும், உயர்வுக்கும் கொண்டு செல்லும். பயன்பெறவும் தரவும் விரும்புவோர், சுவிஸ்,லுசேர்ண் தமிழமன்றத்துடன் தொடர்பு கொள்ளலாம் .

stalin felix

unread,
May 31, 2010, 2:20:55 PM5/31/10
to panbudan

தமிழர் விளையாட்டுகள்

4 பதிவுகள் • பக்கம் 1 மொத்தம் 1

தமிழர் விளையாட்டுகள்

பதிவிடுஆல் பரஞ்சோதி » செவ் ஆக 23, 2005 4:20 am

தமிழர் விளையாட்டுகள் 

மாத்தளை சோமு 

ஈழத்தில் பிறந்து, ஆஸ்திரேýயாவில் வசிக்கும் மாத்தளை சோமு, அவர்களின் தேசம் (சிறுகதைகள்), அந்த உலகத்தில் இந்த மனிதர்கள், எல்லை தாண்டா அகதிகள், மூலஸ்தானம் (புதினங்கள்) ஆகிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். தமிழாய்வுக்காக 'உதகம்' என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அண்மையில் இவருடைய வியக்கவைக்கும் தமிழர் அறிவியல் என்ற நூல் வெளியாகியுள்ளது. அதில் தமிழரின் உலகம், மொழி, பிறப்பும் வாழ்வும், உழவு, உடை, உணவு, உடல் அறிவியல், தமிழர் மருத்துவம், இலக்கியம், நுண்கலை, தமிழிசை, ஆடல் கலை, அணிகலன், தாவரவியல், தமிழர் அளவைகள், கடல் நாகரிகம், கட்டடக் கலை, மண்ணியல், வானவியல், விளையாட்டு என இருபது தலைப்புகளில் தமிழரின் அறிவியல் சிந்தனைகளைச் சிறப்புற ஆராய்ந்துள்ளார். அதிýருந்து தமிழர் விளையாட்டுகள் என்ற பகுதியின் சுருக்கத்தை இங்கு தருகிறோம். 

இன்றைக்கு உலகெங்கும் பரவியிருக்கிற கிரிக்கெட் (இழ்ண்ஸ்ரீந்ங்ற்), டென்னிஸ் (பங்ய்ய்ண்ள்), ஹாக்கி (ஏர்ஸ்ரீந்ங்ஹ்), பேட்மின்டன் (ஆஹக்ம்ண்ய்ற்ர்ய்), உதைப் பந்தாட்டம் (ஊர்ர்ற் ஆஹப்ப்) எனப் பல விளையாட்டுகள்யாவுமே மேற்றிசை நாடுகளில் உருவாக்கப் பட்டவை. இவற்றைப் பரப்ப ஆங்கில ஏகாதி பத்தியம் தனது காலனித்துவ ஆட்சியின் மூலம் உதவியது. இன்றைக்கு மேற்சொன்ன விளையாட்டுகளோடு கூடிய வர்த்தகத்தின் தொகை கணக்கிட முடியாது. இவற்றின் மூலம் நேரடியாக - மறைமுகமாக லாபம் அடைந்தவர்கள் மேல்நாட்டவரே! 

மேற்சொன்ன விளையாட்டுகளை ஆங்கிலத் திரைப்படங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தின. இதே போன்று புரூஸ்ý என்ற நடிகரால் கராத்தே, குங்பூ, தேக்கேவா போன்ற விளையாட்டுகள் உலகெங்கும் பரவின. இதற்குத் தமிழகம் விதி விலக்கு அல்ல. தமிழகத்தில் சிறிய-பெரிய நகரங்களில் சீன, ஜப்பானிய விளையாட்டுகளைச் சொல்ýக் கொடுக்கிற சிறு சிறு நிலையங்கள் உருவாகிவிட்டன. 

இவ்வகை விளையாட்டுகளைத் தமிழ்த் திரைப்பட நாயகர்களும் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். தமிழர்களைச் சுலபமாக சென்றடையக் கூடிய தொலைக்காட்சி ஒளிபரப்புகள், அந்நிய விளையாட்டுகளைத் தூக்கிப் பிடிக்கின்றன. பெரும்பாலான நாளிதழ்களும் வார இதழ்களும் ஏனைய ஊடகங்களும் இதே வழியையே பின்பற்றுகின்றன. 

இதன் எதிரொýயாக கராத்தே, குங்பூ, தேக்கோவா போன்றவை பயிற்சி வகுப்புகளாக இங்கு பரவி இருக்கின்றன. பெண்களும் இவற்றைப் பழகுகின்றனர். ஏனையோர் கிரிக்கெட், பேட்மிட்டன், உதைப்பந்தாட்டம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளைப் பயின்று வருகிறார்கள். மிகக் குறைந்தோரே தமிழர் விளையாட்டுகளைப் பயின்று வருகிறார்கள். 

தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெள்ள மெள்ள தமிழர்களுக்கே மறந்து வருகிறது. 

ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் கிராம விளையாட்டு களாகத் தள்ளப்பட்டன. கிராமங்களிலும் அவை வலுவிழந்து தள்ளப்பட்டன. அவை ஆண்களுக்கான சல்ýக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், உரிமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுý ஆட்டம், மல், வில் பெண்களுக்கான தாயம் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, உயிர்மூச்சு, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம். 

நேற்றுவரை கிராமப்புறத் தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காண வில்லை. அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நியக் கலாசாரமேயாகும். கண் மூடித்தனமான ஆங்கில வழிக்கல்வியுடன் கூடிய நாகரிகம், கிராமத்துத் தமிழ்மரபுகளை இன்று எல்லாத் துறைகளிலும் அழித்து வருகிறது. ஆங்கிலம் சார்ந்த விளையாட்டு வேண்டாம் என்பது என் கருத்தல்ல. தமிழரின் விளையாட்டும் இருக்கட்டுமே. உலகெங்கும் வாழ்கிற எட்டு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் தனித்தன்மை யுடன் கூடிய தமிழர் விளையாட்டை முன் னெடுக்க முடியாதா என்ன? தமிழர் சுய அடை யாளத்தைப் பறிகொடுத்து இன்னோர் இனத்தின் அடையாளத்தைச் சுமக்க வேண்டுமா? 

தமிழரின் விளையாட்டுகளைப் புறக்கணிப் பது நம்மை நாமே புறக்கணிப்பதற்குச் சமமானது. 

சங்க காலத்தில் விளையாட்டை வினைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கடுவன் இள மள்ளனார், கருவன் மள்ளனார், ஞாழார் மகனார் மள்ளனார், மள்ளனார் ஆகிய நான்கு புலவர்களின் பெயர்கள், மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றன. இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆகவே அக்காலத்தில் இயற்றமிழிலும் உடல்பயிற்சிக் கலையிலும் வல்லவர்கள் இருந்திருக்க வேண்டும். 

தற்காலத்தில் உடல்பயிற்சி நிலையங்கள் இருப்பதைப் போல் சங்க காலத்தில் இருந்த தற்கான சான்றுகளாக போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பயிற்சிக் கூடங்களுக்காக இருந்திருக்கின்றன. பட்டினப் பாலையில் 'முரண்களரி' என்பது பயிற்சிக்கூடமே. இன்றைக்குக் களரி என்ற சொல், கேரளாவில் இருக்கிறது. களரிப் பணிக்கர் என்பது உடல்பயிற்சிக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியரே. 

சங்க கால இலக்கியக் குறிப்புப்படி 37-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் விரிவாகக் காணலாம். 

1) ஊசல் எனும் ஊசலாட்டம்: 
இது இப்போது ஊஞ்சல் எனப்படுகிறது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர் விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க காலத்தில் தலைவியை ஊஞ்சýல் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. 

2) ஒரையாடல்: 
மகளிர் ஆடும் ஒரு வகை விளையாட்டு, நண்டு, ஆமை என்பனவற்றைச் சிறு கோல் கொண்டு அலைத்து விளையாடும் விளையாட்டே ஒரையாடல் ஆகும். இன்றும் கடற்கரை, நதிக்கரை, குளக்கரை ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஊர்ந்து திரியும் சில பூச்சிகளைக் கோல் கொண்டு அலைத்து ஆடி மகிழ்வர். 

3) ஏறுகோள் : 
இது ஆடவரின் வீர விளையாட்டு. கூரிய கொம்புகளை உடைய எருதுகளை ஆயுதம் ஏதுமின்றித் தம் உடல் வýமையால் இளைஞர்கள் அடக்குவர். இதுபற்றிக் கýத்தொகை, சிலப்பதி காரம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது. இதுவே இன்று சல்ýக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுக்கட்டு என உருமாறித் தற்காலத்தில் நிகழ்ந்து வருகிறது. 

4) குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும்: 
குதிரை, யானை மூலம் ஓடுவது, அசைவது போன்ற விளையாட்டு. குதிரை ஓட்டமும் இதன் வழியே வந்ததுதான். இதுவும் பழங்கால விளையாட்டே! 

5) சிறுதேர்: 
தேரினை உருட்டியும் இழுத்தும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதற்கு உருள், சகடம், தேர் எனப் பெயரிட்டு அழைத்தனர். கிராமங்களில் தென்னை மரங்களிýருந்து விழும் பிஞ்சு இளநீர்க் காய்களின் மூலம் தேர் செய்து விளையாடுவர். 

6) நீர் விளையாடல்: 
நீரிலே விளையாடுவது, நீச்சலடிப்பது, உயரமான இடத்திýருந்து குதிப்பது, பட கோட்டுவது என்பன நீர் விளையாட்டு. இதனைப் 'புனலாடல்' என்பர். தமிழில் சங்க இலக்கியங் களிலும் சிற்றிலக்கியங்களிலும் இவ்விளையாட்டு, மிகச் சிறப்பான இடம் பெற்றுள்ளது. 

7) பந்து: 
பந்தெற்களம், பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. பந்து என்றே சங்க இலக்கியம் விளக்குகிறது. பந்துகளைப் பஞ்சடைப் பந்து, செம்பொன் செய்த வரிப்பந்து, பூப்பந்து என்ற வகைகள் இருப்பதாக அதன் மூலம் தெரிகின்றது. இருபத்தொரு பந்துகளைப் பயன்படுத்தி 'எண்ணாயிரம் கை' பந்தடித்த மானணீகை என்ற பெண்ணைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. 

8) கழங்காடுதல்: 
மகளிர் விளையாட்டுகளில் கழங்காடுதல் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது சற்று மேடான பகுதிகளில் 'கழங்கினை' வைத்து (கழங்கு - சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) ஆடுவர். பொன்னாலான கழங்கினை வைத்துத் திண்ணைகளில் ஆடிய செய்தி, புறநாநூற்றிலும் பெரும்பாணாற்றுப்படையிலும் சொல்லப் படுகிறது. இப்பொழுது கழங்கிற்குப் பதில், சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

9) வட்டாடல்: 
பண்டைத் தமிழர் விளையாட்டுகளில் சிறப்புற்றிருந்த ஒன்று வட்டாடுதல். (வட்டாடல்-வட்டை உருட்டிச் சூதாடுதல்) இதற்காக அரங்கம் இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம், ஒருவகைச் சூதாட்டத்தை ஒத்தது. கல்லாத சிறுவர்கள் வேப்ப மரத்து நிழýல் வட்டரங்கிழைத்து நெல்ýக்காயை வட்டாகக் கொண்டு ஆடிய செய்தியை நற்றிணையில் காணலாம். இவ்விளையாட்டைத் திருவள்ளுவர், 
அரங்குஇன்றி வட்டுஆடி அற்றேநிரம்பிய 
நூல்இன்றிக் கோட்டி கொளல் (401) 
என்ற திருக்குறளில் சுட்டிக் காட்டுகிறார். ஆகவே இந்த வட்டாடல் எனும் விளையாட்டு, குறள் காலத்து விளையாட்டு என்று ஆகிறபோது அதன் வயது 2036 ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்பது உறுதியாகத் தெரிகின்றது. எனவே பழந் தமிழரும் விளையாட்டுகளிலும் அறிவியல் வழி சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார் கள் என்பதே தமிழருக்கு மரபு சார்ந்த பெருமையாகும். 

தமிழர் ஒýம்பிக் 

தற்காலத்தில் எல்லாப் பொழுதுபோக்கு ஆட்டங்களையும் (டப்ஹஹ்ள்) விளையாட்டுக்களாக (எஹம்ங்ள்) எடுத்துக்கொள்வது இல்லை. ஒரு செயலை விளையாட்டாகக் கருத வேண்டுமானால் ஐந்து விதிகளுக்குள் அது அமைய வேண்டும். அந்த ஐந்து விதிகள்: 
1) அமைப்பு கொண்ட விளையாட்டாக இருக்கவேண்டும். 
2) போட்டியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். 
3) இரண்டு அல்லது அதற்கு மேற்பட் டோர் குழுக்களாக இருந்து பங்கேற்க வேண்டும். 
4) வெற்றியை ஏற்றுக்கொள்ளத் தக்க விதிகளை உள்ளடக்கி இருக்கவேண்டும். 
5) பாதுகாப்புக் கவசம் கொண்டதாக இருக்க வேண்டும். 
மேற்கண்ட ஐந்து விதிகள் இருந்தால்தான் நவீன உலகில் ஒரு விளையாட்டு, உலக மயமாகக் கூடியதாக இருக்கும். இந்த வகையில் பார்க்கிற போது தமிழரின் தனித்துவமான விளையாட்டுகள் உலகமயமாக்கப் படுகிறபோது பல சிக்கல்களைச் சந்திக்கும். இது அனுபவபூர்வமான உண்மை. 

மேலும் பழந்தமிழர் விளையாட்டுகள் பரவலாக்கபடாமல் குறிப்பிட்ட மக்கள் சார்ந்த பகுதியில் இருப்பதால் அவை எல்லைகளைக் கடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்நிய படையெடுப்புகளினால் இவ்விளையாட்டுகள் வலுவிழந்து கரையத் தொடங்கின. சில உருமாறிப் பெயர் மாறத் தொடங்கியது. உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம். 

1) மல், மற்போர்: 
கருவிகளின் துணையில்லாமல் தமது உடல் வýமையால் இருவர் தமக்குள் சண்டையிடும் ஒருவகை வீர விளையாட்டு. இதற்கு நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். மற்போரின் தொடக் கத்தை மற்பறை ஒýத்து அறிவிக்க, அரசர், வீரர், பெண்டிர் அனைவரும் காண மகிழ்ந்து குழுமிய செய்தியைப் 'பெருங்கதை' என்ற (52;3155-3117) இலக்கியத்திலே காணலாம். சிலப்பதிகாரத்தில் இருவர் மோதிய மல்யுத்தத்தை 'அளையும் யானை போற் பாய்ந்து மல்லொற்றியும்' என்று வர்ணித் துள்ளார் இளங்கோ அடிகள். அதாவது இரு யானைகள் மோதி பொருந்துவது போல் மல்யுத்தம் நிகழ்ந்துள்ளது. 

நம்முடைய இந்த மல்யுத்தம் ஜப்பானில் அப்படியே விளையாட்டாக நிலவி வருகிறது. அது இங்கிருந்து போனதுதான். இன்று மல்யுத்தம் ஏனைய நாடுகளில் மேல்நாட்டினர் வகுத்த விதிமுறைகளுடன் மல்யுத்தமாக (ரதஉநபகஐசஎ) நடத்தப்படுகின்றது. அதே நேரத்தில் இவ்விளையாட்டு மாற்றம் பெற்றுப் பல தற்காப்புக் கலை விளையாட்டுகளாக உருப்பெற்றுள்ளது. 

2) வில் விளையாட்டு: 
வில் விளையாட்டு என்பது அம்பினைச் செறித்துக் குறிபார்த்து எய்தல். வில்வித்தையினைக் கற்றுத்தரக் கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர், வாட்போர் ஆகிய வற்றைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜ சோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. ஆங்கிலத்தில் 'அதஇஏஉதவ' (வில்வித்தை) என்று அழைக்கப்படும். இவ்விளையாட்டு, நவீனப் படுத்தப்பட்டு 'ஒýம்பிக்' வரை வந்துவிட்டது. 

3) கலைக்கூத்து: 
கலைக்கூத்து எனப்படும் கயிற்று நடனம். 60களிலே திரைப்படங்களிலே இருந்த இக்கலை, வலுவிழந்து போய் இருக்க, மேலை நாடுகளில் அது பல பரிணாமங்கள் பெற்று உடல்வித்தையாக (எவஙஅசஅபஐஇந) மாறி நிற்கிறது. 

4) கிý கிýயாடல்: 
கிý கிýயாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒýயெழுப்பி மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. 

5) கோழிப்போர்: 

கோழிப்போர்-தமிழர்கள் விலங்கு கள், பறவைகள் போன்ற வற்றுக்கும் வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவற்றை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண் டிருந்தனர். சங்க இலக்கியமான குறுந் தொகையில் 'குப்பைக் கோழித் தனிப் போர் போல' என்று குறிப்பிடுவதிýருந்து கோழிப்போர் சங்க காலத்திலேயே வழக்கிýருந்தமையை அறிய முடிகிறது. 
இன்றும் சிறிய நகரங்களில், பெரிய கிராமங்களில் சிறுசிறு கத்திகள் கட்டிப் பறவைகளை மோதவிடு கிறார்கள். மேலைநாடுகளில் மிருக, பறவை பாதுகாப்பு இயக்கம் என்றதன் பேரில் இப்போட்டிகளைத் தடை செய்துவிட்டனர். விதி விலக்காக கிரீஸ், இத்தாý நாடுகளில் மட்டும் நடக்கிறது. 

6) சடுகுடு: 
இது, தமிழர்களின் விளையாட்டு. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இது இருக்கிறது. தமிழகத்தில் 'தினத்தந்தி' நாளிதழை நிறுவிய சி.பா.ஆதித்தனார் இவ்விளையாட்டு வளர, பல முயற்சி களை மேற்கொண்டார். 60களில் சடுகுடு வாக இருந்த இவ்விளையாட்டை, இப்போது 'கபடி'யாகத் தமிழ்த் திரைப் படம் அடையாளப்படுத்துகிறது. இது, திராவிட விளையாட்டு. இப்போது, இந்திய விளையாட்டாக மாறிப் போய்விட்டது. 

7) தாயம்: 
தாயம், இது தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. உள்ளரங்க விளையாட்டு (ஐய்க்ர்ர்ழ் எஹம்ங்) எனச் சொல்லலாம். பழங்கால நாகரிகத்தில் தாய விளையாட்டில் சுடுவண் காய்களைப் பயன்படுத்தி விளையாடியதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். 

8) பல்லாங்குழி: 
இது பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. தரையில் அல்லது மரப் பலகையில் உள்ள பதினான்கு அல்லது இருபத்துநான்கு குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவர். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணித முறை சார்ந்த விளையாட்டாகும். சிக்கலான இவ்விளையாட்டு, சதுரங்க விளையாட்டுக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. 

9) கிட்டிப்புள்: 
இது ஆடவர்களால் ஆடப்படும் வெளி அரங்க (ஞன்ற்ஈர்ர்ழ் எஹம்ங்) விளையாட்டு. இந்த விளையாட்டில் பெரிய குச்சியும் சிறிய குச்சியும் பயன்படுகின்றன. கிராமங்களில் பரவலாக இருந்த விளையாட்டு. இதுதான் தற்கால கிரிக்கெட் விளையாட்டிற்கு மூல வடிவமாகக் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டை நவீனப்படுத்தினால் உலகப் புகழ்பெற வாய்ப்புண்டு. 

10) சிலம்பம்: 
சிலம்பத்தை ஒரு கலையாக முதற்சங்க காலம் முதற்கொண்டே மூவேந்தர்கள் ஆதரித்து வந்துள்ளார்கள். திருவிளையாடற்புராணத்தில் சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. வைத்திய நூலான 'பதார்த்த குணசிந்தாமணி'யில் சிலம்பப் பயிற்சி, குதிரைப் பயிற்சி மூலம் ஒருவரின் உடல் வலுவடையுமென்றும் பல நோய்களைத் தீர்க்கும் என்றும் சொல்லப் படுகிறது. சிலம்பாட்டத்தின் முக்கியத்துவம் அதன் அடி (கால்) வரிசையில் இருக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் தனித்தனிப் பெயருண்டு. இவ்வடிவரிசை பரதத்தோடு பொருந்தி வருகிறது. 

சிலம்பாட்டம் என்பது கம்பை மட்டும் வைத்து விளையாடுவதல்ல. சுருள்வால், ஈட்டி, கட்டாரி, சங்கிý, மான்கொம்பு வைத்தும் இவ்விளையாட்டை விளையாடலாம். முன்பு போர்ச்சிலம்பம் இருந்தது. அதைப் போருக்கு மட்டும் பயன் படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது அலங்காரச் சிலம்பம். திருவிழாக் காலங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் கம்பைப் பல விதமாகச் சுழற்றுவது. தீச்சிலம்பம், இரவில் சிலம்புக் கம்புடன் தீப்பந்தம் வைத்து சுழற்றுவது. 

வேலூரில் உள்ள ஒரு கோட்டையில் சிலம்பக் கூடம் இருக்கிறது. குறுநில மன்னர்களின் ஆட்சியிலும் சிலம்பம் பரவியிருந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு வளர்ச்சி குன்றியது. 

இன்றைக்குச் சிலம்பம் உலக விளையாட்டாகப் பரிணமிக்கிற காலம் வந்து கொண் டிருக்கிறது. அதற்குக் காரணம், மலேசியாவில் இயங்கும் சிலம்பக் கழகம், சிலம்பத்தைக் கலை என்ற வட்டத்தில் இருந்து மீட்டு, விளையாட்டாக மாற்றியதே ஆகும். அவ்வடிப் படையில் ஆஸ்திரேýயா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் சிலம்பம் அறிமுகமாகியிருக்கிறது. இதே போல் தமிழரின் ஏனைய கலைகளையும் மறு சீரமைத்து விளையாட்டாக மாற்றினால் இன்றைக்கு 40 நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் கலந்துகொள்கிற தமிழர் ஒýம்பிக் விளையாட்டு நடத்தலாமே! 


stalin felix

unread,
May 31, 2010, 2:25:20 PM5/31/10
to panbudan

தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள்


தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள்

பதிவிடுஆல் பரஞ்சோதி » சனி மே 28, 2005 8:03 pm

தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள் - வி. இரமேஷ்குமார் 

விளையாட்டு மனிதனின் உடன்பிறப்பு ஆகும். எவ்வளவு சமுதாயம் தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது அச்சமுதாயம் ஆடிய விளையாட்டும். ஒரு சமுதாயத்தின் நாகரிகம், பண்பாட்டோடு இணைந்ததே அந்தந்த நாட்டின் விளையாட்டுகள். விளையாட்டுகள் பொழுது போக்கிற்கு மட்டுமன்றி உடல்நலம் மனநலம் பேணுபவையாகவும் உள்ளன. 

மனித வரலாற்றில் ஆய்ந்து நோக்கின் முதலில் இயற்கையுடனும், பின்னர் விலங்குகளுடன் போராட வேண்டியிருந்தது. பின்னர் வாழ்க்கைக்காகப் போராட வேண்டியிருந்தது. போராட்ட வாழ்க்கையில் தன்னைச் சமாளிக்கவும் வேட்டையாடலில் வில் முதலியவற்றைப் பயன்படுத்தவும் போரில் ஈடுபட உடல் வலிமை பெறுதலும் விளையாட்டுகளுக்குத் தோற்றமாக அமைந்தன. 

விளையாட்டு - விளக்கம்:- 

ஆங்கிலத்தில் (Play, Game, Sports) என்னும் சில சொற்கள் வழக்கில் இருப்பது போல, தமிழகத்திலும் ஆடல், ஆட்டு, ஆட்டம், விளையாட்டு போன்ற சொற்கள் காணப்படுகின்றன. ஆடு என்னும் வினைச் சொல்லோடு ஆல் என்னும் தொழிற் பெயர் விகுதியைச் சேர்க்க ஆடல் என்னும் பெயர்ச்சொல் தோன்றுகிறது. இது கூத்து, விளையாட்டு என்னும் பொருள்களில் ஆளப்படுகிறது. 

பாடு என்னும் வினையடிச் சொல்லிலிருந்து பாட்டு என்னும் பெயர்ச்சொல் தருவிக்கப்பட்டது. இதற்குச் சான்றாக. இதனை, 

மன்று தொறு நின்ற குரவை சேரிதோறும் 
உரையும் பாட்டும் விரைஇ என்னும் 

மதுரைக் காஞ்சி அடிகளைக் கூறலாம். இப்போது ஆட்டு என்ற சொல்லோடு ஆம் என்னும் விகுதி சேர்ந்து ஆட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். மொழிப்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் விளை என்றால் விருப்பம் எனப் பொருள் கொண்டு விரும்பியாடும் விளையாட்டு என்று விளக்குகிறார். 

சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்பது பெரும்பாலும் நிலத்தில் ஆடப்படுகின்ற விளையாட்டோடு சேர்ந்து காணப்படுகிறது. ஆடுதல் என்பது நீரோடு சேர்ந்து சங்க இலக்கியத்தில் வருகிறது. 

விளையாட்டு - வரைவிலக்கணம்:- 

விளையாட்டு என்றால் என்ன என்பதற்குப் பழங்காலப் புலவர்கள் வரையறுத்துக் கூறவில்லை. இருப்பினும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகை களன்களைக் கூறுமிடத்துத் தொல்காப்பியர் விளையாட்டையும் ஒன்றாகக் கூறுகின்றார். இதிலிருந்து மன மகிழ்ச்சி ஊட்டும் ஒரு செயலே விளையாட்டு என்னும் வரைவிலக்கணத்தைப் பெறலாம். 

விளையாட்டு - வகைப்பாடு:- 

தொல்காப்பிய உரியியலில் கெடவரல் பண்ணை ஆயிரண்டு விளையாட்டே (உரி 21) என்ற நூற்பாவில் இருவகைப்பட்ட விளையாட்டுகளைத் தொல்காப்பியர் விளக்குகிறார். 

1. நீர் விளையாட்டு 
2. நில விளையாட்டு 

என்று பிரித்துக் கூறுவர். பொதுவாகத் தற்காலத்தில் பால், வயது, இடம், கருவி, உடலின்பங்கு, மனத்தின் ஈடுபாடு ஆகிய கூறுகளின் அடிப்படையில் வகைப்படுத்துவர். 

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் இன்றும் பல விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இவ்விளையாட்டுகளை அறிதல் தமிழரின் தொன்மையை அறிவதற்குச் சான்றாக அமையும். கிராமப்புறங்களில் விளையாடும் ஆடவர் விளையாட்டு மகளிர் விளையாட்டு, சிறுவர் சி 
றுமியர் விளையாட்டு முதலிய விளையாட்டுகளைப் பலவாறு வகைப்படுத்தலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுகள் உள. அவற்றில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் காணலாம். 

1. சிலம்பாட்டம்:- 

கையிலுள்ள கம்பினை வீசி ஒலி எழுப்பி விளையாடும் விளையாட்டிற்குச் சிலம்பாட்டம் என்று பெயர். கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாக வீசுந்திறன் இம்மூன்றும் சிலம்ப விளையாட்டில் அடிப்படைகளாகும். இது வீரத்தின் அடிப்படையில் எழுந்த விளையாட்டாகும். இச்சிலம்பாட்டத்தினை மராட்டிய மொழியில் லாட்டி என்றும், குஜராதி மொழியில் டல்லாக்கடி என்றும் வங்க மொழியில் லாடி žலா என்றும் மலையாளத்தில் நெடுவடி என்றும் வழங்குவர் என்றும் குறிப்பிடுகிறார் டேவிட் மேனியல்ராஜ். 

2. சடுகுடு:- 

சடுகுடு விளையாட்டைப் பழந்தமிழரின் விளையாட்டென்பர். இதனைப் பலிஞ்சடுகுடு என்றும் பலின்சடுகுடு என்றும் கபடி என்றும் கூறுவர். இதனைப் பலின்சப்பளம் எனத் தெலுங்கிலும் வழங்கப்படுகிறது. இவ்விளையாட்டைத் தொல்காப்பியர், வெட்சிவீரன் நிரைகவர்தலும் கரந்தை வீரன் மீட்பதுமாகிய செயல்கள் இருந்தன. இதனடிப்படையில் போரும் எழுந்தது. போரில் வெற்றியடையக் காளியை வணங்கினர். போரின் செயல்பாடு விளையாட்டிலும் இருப்பதால் பலிசடுகுடு என்று மாறிவந்திருக்கலாம் என்கிறார் ச. நடராஜ் செல்லையா. 

இவ்விளையாட்டினை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று விளையாடுவர். ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குப் போகும் போது அப்பக்கத்திலுள்ள வரைத் தொட்டுவிட்டால் விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும். இவ்விளையாட்டு இன்றும் கிராமப்புறங்களில் பகலிலும், இரவிலும் நடைபெறுவதுண்டு. தமிழினம், தமிழகப் பண்பாட்டை காக்க விழைவோர் இவ்விளையாட்டை ஊக்கப்படுத்தி வளரச் செய்ய வேண்டும். 

3. பதினைந்தாம் புலி:- 

இக்கட்ட விளையாட்டினைப் பதினைந்தாம் புலி என்றும் ஆடுபுலி ஆட்டம் என்றும் கூறுவர். இருவர் பங்குகொள்ளும் இவ்வாட்டத்தில் (ஆடாக இருப்பவர்) பதினைந்து காய்களையும், (புலியாக இருப்பவர்) மூன்று காய்களையும் வைத்து விளையாடுவர். ஆடாக இருப்பவர் காய்களை நகர்த்திக்கொண்டே இருக்க, ஒரு காய் இருக்குமிடத்தில் ஒரு புள்ளியில் காய் இல்லாவிட்டால் அக்காயை வெட்டலாம். புலியின் காய்களை நகர்த்த முடியாத அளவிற்குக் காய்களை வைத்துவிட்டால் ஆடாக இருப்பவர் வெற்றி பெறலாம். காய்களைப் பார்த்து அடைபடாமல் தப்பித்து எதிரியின் காய்களை வெட்டி முடித்துவிட்டால் புலியாக இருப்பவர் வெற்றி பெறலாம். இதனை பொது இடங்களில் கிராமப்புறங்களில் காணலாம். 

மகளிர் விளையாட்டு:- 

1. தாயம்:- 

மகளிர் விளையாடும் இவ்விளையாட்டினைத் தாயம் என்றும் விளையாடுவதற்கு வரையப்படும் கட்டத்தினைத் தாயக்கட்டம் என்றும், உருட்டும் பகடையைத் தாயக்கட்டை என்றும் கூறுவர். சோழிகள் முதலியவற்றை வைத்து விளையாடுவர். நான்கு கட்டத்தாயம், 8 கட்டத் தாயம், 10 கட்டத் தாயம் எனப் பலவகையுண்டு. குறைந்தது இருவர் விளையாட்டில் பங்கு கொள்வர். 

2. பல்லாங்குழி:- 

பல்லாங்குழி என்பதனைத் தமிழ்ப் பேரகராதி பதினான்னு+குழி என்றும், மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் பண்னை+குழி என்றும் எஸ். நடராஜ் செல்லையா பல்-அம்-குழி என்றும் இரா. பாலசுப்பிரமணியம் பரல்+ஆடும்+குழி என்று பிரித்து விளக்குவார். 

மேலும், பண்ணை என்பதற்கு நிலம் என்ற மற்றொரு பொருளும் உண்டு. நிலத்தில் குழி தோண்டி ஆடிய விளையாட்டு என்பதால் பண்ணைக்குழி விளையாட்டு திரிந்து பண்ணாங்குழி என்றும் பல்லாங்குழி எனவும் வழங்கப்படுகின்றது. 

பல்லாங்குழியை மலையாளத்தில் பல்லாங்குழி என்றும், கன்னடத்தில் சென்னமனே என்றும், பஞ்சாபியில் குட்கா போய்யா என்றும் ஒரிசா மொழியில் கஞ்குடி என்றும் வழங்குகின்றனர். 

3. தட்டாங்கள்:- 

ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அதனைக் கீழே விழாமல் தரையினைத் தட்டிப் பிடிக்கும் விளையாட்டைத் தட்டாங்கள் விளையாட்டு என்பர். இலக்கியங்களில் காணப்படும் கழங்காடுதலுக்கும் இதற்கும் தொடர்பு உண்டென்பர். 

சிறுவர் சிறுமியர் விளையாட்டு:- 

கண்ணாம்பூச்சி - சிறுவர், சிறுமியர் கண்ணை மூடிக் கொண்டு விளையாடும் விளையாட்டிற்குக் கண்ணாம்பூச்சி என்று பெயர். இது ஓடி ஒளிந்து இருப்பவர்களைக் கண்டு பிடிக்கும் விளையாட்டாகும். 

நொண்டி விளையாட்டு:- 

ஒரு காலினைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டம் நொண்டி விளையாட்டாகும். ஒருவர் நொண்டியடித்துக் கொண்டு மற்றவர்களை தொடும் விளையாட்டு. 

கிட்டுப்புள்:- 

இரு சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. நீளக்குச்சி, கிட்டி என இரண்டு வகை வைத்திருப்பர். நிலத்தில் சிறிது பள்ளம் தோண்டி அவற்றில் கிட்டியை வைத்து நீளக் கோளாள் அடிப்பர். எதிரே உள்ளவன் பிடித்து விட்டால், அடித்தவன் காயாகி விடுவான். இவ்வாறு இருவரும் மாறி மாறி விளையாடுவர். 

பம்பரம்:- 

பம்பரம் என்னும் விளையாட்டுப் பொருளைக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குப் பம்பர ஆட்டம் என்று பெயர். வட்டமிட்டு அதனுள் ஒரு பம்பரத்தை வைத்து வெளியேற்றுவர். வெளியேற்றியவுடன் அனைவரும் சாட்டையால் பம்பரத்தைச் சுற்றிக் கையால் எடுக்க வேண்டும். 

குண்டு விளையாட்டு:- 

சிறுவர்கள் விளையாடும் இவ்விளையாட்டினைக் குண்டு விளையாட்டு என்றும் கோலி விளையாட்டு என்றும் கூறுவர். நிலத்தில் குழித்தோண்டி அதனை நோக்கிக் குண்டை அடித்து அதில் விழச் செய்யவேண்டும். கிராமத்துச் சிறுவர்களிடையே, இவ்விளையாட்டினைக் காணலாம். 

பட்டம் விடுதல்:- 

கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் காற்றுக்காலத்தில் பட்டம் விடுவது சிறுவர்களுக்குப் பொழுதுப் போக்கான விளையாட்டாகும். 

கரகரவண்டி:- 

சிறுமியர்கள் பலர் நின்று கொண்டு சுற்றிக்கொண்டேயிருப்பர். யார் கடைசி வரையில் சுற்றுகிறார்களோ? அவரே வென்றவராவார். கரகரவண்டி காமாட்சி வண்டி எனப் பாடிக் கொண்டே விளையாடுவார். 

குழந்தை பாடல்கள் குழந்தை விளையாட்டுகள்:- 

குழந்தை விளையாட்டுகளைப் பல விதமாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஆண்குழந்தை, பெண்குழந்தை விளையாடுவதாகவும், இருவரும் இணைந்து விளையாடுவதாகவும், இருவருள் ஒருவர் மட்டும் விளையாடுவதாகவும் நான்காகப் பகுப்பர் சு. சண்முகசுந்தரம் 

இதனை, 

ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா 
கூடி விளையாடு பாப்பா - ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா 

என்று பாடினார் பாரதி, இவர் கூறிய விளையாட்டு மனிதனின் சுவாசப் பயிற்சிக்கும் உகந்த விளையாட்டான சடுகுடு கிராமப்புறங்களில் காணப்படும் ஒன்றாகும். 

நான்தான் வீரன் 
நல்லமுத்துப் பேரன் 
வெள்ளிப் பிரம்பு எடுத்து 
விளையாட வாரேண்டா 
தங்கப் பிரம்பு எடுத்து தாலிக்கட்ட 
வாரேண்டா வாரேண்டா 

என்பது குழந்தைகளின் விளையாட்டுப் பாடல்கள். 

விளையாட்டு பற்றிய திரையிசைப் பாடல்கள்:- 

ஆண், பெண் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் எல்லோரும் இணைந்து விளையாடும்போது, 

குலை குலையா முந்திரிக்கா 
நரியே நரியே ஓடிவா 

என்ற வரிகள் நாட்டுப்புறப்பாடல் வரிகள், திரைப்படப் பாடலில் இடம் பெற்றிருக்கக் காண்கின்றோம். 

என் சோட்டு பிள்ளைகளா 
இள வாழைத் தண்டுகளோ 
வாழைக் குருத்துகளா 
வாருங்கோ விளையாட 

என்ற விளையாட்டுப் பாடல் வரிகள், திரை இசையில் காணப்படுகின்றன. 

திராவிட மக்களின் விளையாட்டுக்கள் பலதரப்பட்டவை. செழுமையானவை. சில வெளிநாட்டுப் பண்பாடுகளோடு தொடர்புடையவை. வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பும் கொண்ட கிராமமக்கள் சிக்கலான போட்டி அமைப்புகளையும், பளுவான விளையாட்டுகளையும் கொண்டுள்ளனர். பெரும்பாலான நகர மக்கள் நாட்டுப்புற விளையாட்டுகளை மறந்தும், துறந்தும் மேனாட்டு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராமிய மக்களிடத்தும் திராவிடர்களின் மரபு விளையாட்டுகள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன. 

நன்றி: வேர்களைத் தேடி.

stalin felix

unread,
May 31, 2010, 2:29:09 PM5/31/10
to panbudan

ஏறு தழுவுதல்

தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பது இன்று மெல்ல-மெல்ல மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கென்று விளையாட்டுகள் இல்லை என்ற எண்ணக்கூடிய காலம் உருவாகியுள்ளது வருந்தற்தக்க செய்தியாகும்.அவ்வகையில் தமிழர்களால் மறக்கப்பட்டு வருகின்ற தமிழர் விளையாட்டுகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழந்தமிழர்கள் வாழ்வில் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்று வந்துள்ளன. அவ்வகையில் தமிழ்நாட்டுப்புற மக்களால் இன்றளவும் பேணி போற்றப்பட்டு விளையாடிவரும் விளையாட்டு சல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலாகும். மாடி வாசலில் முரட்டுக் காளையினைத் தனித்து நின்று அடக்குதல் இவ்விளையாட்டின் நோக்கமாகும்.


இலக்கியங்களில் சுட்டப்படும் சல்லிக்கட்டும் ஏறுதழுவுதலும் ஒன்றே. ஆனால், மேனாட்டுக் காளைப் போர் சண்டையும் நம் பழந்தமிழரின் சல்லிக்கட்டையும் இணைத்துப் பார்த்தல் கூடாது. ஏனெனில், காளைப்போர் சண்டையின் இறுதியில் காளைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், காளைகளை அடக்குதல் என்ற செய்கை மட்டுமே இவ்விளையாட்டில் இடம்பெறுவதால் ஏறு தழுவுதலைத் தமிழருக்கே உரிய விளையாட்டாகக் கொள்ளலாம்.

ஏறு தழுவுதல் என்பது மிகுந்த துணிச்சலும் திறமையும் நிறைந்த விளையாட்டாக இன்றளவும் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டில் வீரமும் திறமும் கொண்ட இளைஞர்கள் பங்கெடுத்துக் கொள்வர். சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு(காளைகளைப் பொது வீதியில் ஓடவிட்டு அவற்றை விரட்டுவது) மற்றும் எருது கட்டுதல்(காளைகளைக் கயிற்றால் கட்டி அடக்குதல்) எனும் விளையாட்டுகள் நடைப்பெற்றன எனக் கூறுகின்றனர். பின்னாளில் தமிழகத்தில் ஜமீன்தார்கள் தங்கள் பலத்தை உறுதிப்படுத்த பலமுள்ள முரட்டுக் காளைகளை வளர்த்தார்கள் என்ற தகவலும் உண்டு. ஆனால், அக்காளைகளை யாரும் அடக்கி வென்றுவிட்டால் தங்கள் மதிப்பினை இழந்து விடுவோம் என்று பயந்து சல்லிக்கட்டு போட்டிகள் எதையும் வைக்கவில்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு நடைப்பெற்றது என்ற கருத்தை வலியுறுத்த நீலகிரிப்பகுதியில் கரிக்கியூர் என்ற ஊரில் உள்ள கற்பாறை ஓவியங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவ்வோவியங்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது அறிஞர் பெருமக்கள் முடிந்த முடிபாகும்.
Reply all
Reply to author
Forward
0 new messages