ஓரினச் சேர்க்கை - ஜெ.மோவை ரசிக்கும் தருணங்கள்

433 views
Skip to first unread message

நந்தா

unread,
Mar 28, 2011, 3:39:03 AM3/28/11
to பண்புடன்

ஒரு சில முரண்பாடுகள் இருந்தாலும் ஜெ.மோவின் இந்தக் கட்டுரையை ரொம்பவே ரசித்தேன்.


நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன்.

எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் புலப்பட வில்லை. ஒருவேளை என் மனதின் பாரம் குறைந்தாலும் குறையலாம் (இதன் நிகழ்தகவு குறைவு தான் என்றாலும்).

இப்பொழுது நான் ஓர் ஓரின சேர்க்கையாளன் என்று அறிவித்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரும்?
௧. என் நண்பர்களை இழக்க வேண்டி இருக்கும்.
௨. பெற்றோருக்கு புரிய வைப்பதே பெரும் பாடாக இருக்கும். நிறையக் கண்ணீர் காண நேரிடும். நீங்களே சொல்லுங்கள், எப்படி ஐம்பது வயதை தாண்டிய நபருக்கு, பெற்றோருக்கு, இதை புரிய வைப்பது !
௩. கல்லூரியில், அலுவலகத்தில் எல்லோரும் ‘ஒரு மாதிரி’ காண்பார்கள். விலகி விடுவார்கள். மதிய உணவையும், இரவு உணவையும் தனியே வெறித்துச் சாப்பிட வேண்டி இருக்கும்.
௪. உறவினர் பக்கம் தலை வைத்து படுக்க முடியாது.
௫. அல்லது இது மன நோய், உடற் நோய், என்று சரியாக புரிந்து கொள்ளாத நண்பர்களிடமிருந்தோ பெற்றோரிடமிருந்தோ ‘சிகிச்சைகள்’ பெற வேண்டி இருக்கும்.

இவ்வளவு இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதால் எப்படி ஒருவன் பகிரங்கமாக வெளிப் படுத்த முடியும்.
கண்டிப்பாக இன்னும் குறைந்தது பத்து வருடம் ஆகும், ஒருவன் தமிழ்நாட்டில் தான் ஓர் ஓரினன் என்று அறிவிப்பதற்கு.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மிகவும் இடர்க்கையான ஒன்று, வாழ்க்கையில் திருமண வயதை எட்டுவது தான். பெற்றோர் உறவினர் எல்லோரும் தொடர்ந்து திருமணத்தை வற்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். மிகவும் சிக்கலான தீர்மானம் எடுக்க வேண்டிய சமயம்.
௧. திருமணம் செய்து கொண்டு சகித்துக் கொண்டு வாழ்தல்,
௨. திருமணம் செய்யாமல் தனியே, தன்னந்தனியே என்றிருத்தல்,
௩. திருமணம் செய்யாமல், தனக்குப் பிடித்த நபரோடு வாழ்தல்.

இதில் மூன்றாவதாக இருப்பது சற்றுக் கடினம் தான்.
முதலாவது மனதளவில் மிகக் கடினம். விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டு நீலகண்டனைப் போல் வாழ்வது.
இரண்டாவது, முதலில் சற்று பயமாக, கடினமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடும் (என்று நினைக்கின்றேன்). ஆனால் இந்த முடிவில் என்ன நெருடல் என்றால், மற்றவரை, பெற்றோரை நண்பர்களை, வருத்தப் பட அல்லது இழக்கவும் நேரலாம்.

இந்த சூழ்நிலைக்கான காரணம்,
௧. சரியாக புரிந்து கொள்ளாமலிருத்தல், மனநோய் என்று மருத்துவரிடம் காட்டல்.
௨. திருமணம் என்ற அமைப்பு தமிழ் நாட்டில் இன்றியமையாது இருத்தல்.
௩. ‘குடும்ப மரம்’ வளர வேண்டுதல்.
௪. ஓரினன் என்றால் ‘தப்பானவன்’ என்று முத்திரை குத்தல். (“ஓரின சேர்க்கையாளன் என்மனார் தவறெனக் கருதே” என்று தொல்காப்பியன் சொல்லி விட்டானா என்று தெரியவில்லை)

ஓரின சேர்க்கையில் என்ன தவறு என்று இது வரை எனக்குப் புலப்படவில்லை. தங்களுக்குப் புலப்பட்டால் பகிரவும்.

காலம் தந்து படித்ததற்கு,
நன்றி
விஜய்.

********************

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் அனுப்பிய சென்ற அஞ்சலைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் மிகவும் தன்னலமாக ஆதங்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. I lost the big picture.

இந்தியாவில், தமிழகத்தில் ஓரின சேர்க்கைக்கு இன்றைய நிலைமை என்ன ?
ஒரு பெட்டிக்குள் அடைந்து வாழ வேண்டிய வாழ்க்கை. உண்மையை மறைத்து வாழ வேண்டிய வாழ்க்கை. பொய்யான வாழ்க்கை. Living and crying inside a cupboard.

எல்லாரிடமும் ஒரு தப்பான அபிப்ராயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்போது கூட section 377 அமுல் பட்ட போது என்ன நேர்ந்தது ? எவ்வளவு சர்ச்சை. இதை ஏதோ கலவிக்காக மட்டும் தான் என்று பார்க்கிறார்கள். காதலாகக் கண்டு கொள்வதே இல்லை. அனுமதித்தால் ஏதோ சாலையெல்லாம் முத்தம் கொடுத்து அசிங்கப் படுத்தி விடுவார்கள் என்பதுபோல் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

தங்களின் கருத்து என்ன ?

நன்றி,
விஜய்.

********************

அன்புள்ள விஜய்,

1996ல் நித்ய சைதன்ய யதியைப் பார்க்கவந்த ஒருவர் அவரது பேச்சுக்கு முன் கேள்வி வேளையில் கிட்டத்தட்ட இந்த கேள்விகளைக் கேட்டதை நினைவுறுகிறேன். அவரது பதிலை ஒட்டியே நான் இப்போது யோசிக்கிறேன். அன்று அவர் கேட்ட முதன்மையான கேள்வியே ‘ஓரினச்சேர்க்கை’யை இந்துமதம் குற்றமாக கருதுகிறதா, விலக்குகிறதா என்றுதான்.

நித்யா அதற்குச் சொன்னார். இந்து மரபைப்பொறுத்தவரை ஒழுக்கம் என்பது புனிதமானது அல்ல. இறைவனால் உருவாக்கப்பட்டதும் அல்ல. அது கால இடத்துக்குக் கட்டுப்பட்டது. ஆகவே மாறக்கூடியது. அது ஒரு சமூக நெறி மட்டுமே. அது அறம் அல்ல, ஒரு காலஇடத்தில் அறத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒருசில விதிகள் மட்டுமே

ஆகவே, ஒழுக்கத்தைப்பற்றிப் பேசும் நூல்கள் ஸ்மிருதி எனப்பட்டன. அவை நிரந்தரமானவை அல்ல. அழியாத தரிசனங்களையும் தத்துவங்களையும் பற்றி பேசும் நூல்களே ஸ்ருதிகள். ஸ்மிருதிகள் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் இப்போது அம்பேத்கார் ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆக இதை அறப்பிரச்சினையாக எண்ணுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதாவது இதை தப்பா சரியா என்று எப்போதைக்குமாக வகுத்துக்கொள்ளும் விவாதத்துக்கே இந்திய சூழலில் இடமில்லை. இங்கே இது மதத்தின் பிரச்சினை அல்ல.

அப்படியானால் இது ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. அதாவது இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழலில் நடைமுறைத்தளத்தில் வைத்து மட்டுமே இதைப்பற்றி நாம் பேசவேண்டும். அதற்கான வரலாற்றுப்பின்னணியுடன் விவாதிக்கவேண்டும்.

ஒழுக்கநெறிகள் இரு அடிப்படைகளில் உருவாக்கப்படுகின்றன.

  1. சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தையும் சமூக நிறுவனங்களையும் நிலைநிறுத்துவது
  2. தனிநபர் உறவுகளை சீர்ப்படுத்தி மேலான சகவாழ்க்கையை நிலைநிறுத்துவது.

இந்நோக்கில் சிறிதும் பெரிதுமான ஏராளமான ஒழுக்கநெறிகளுக்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம். ஒரு இடத்தில் வரிசையைப் பேணுவது முதல் முன்பின் தெரியாதவரை முகம் மலர்ச்சியுடன் எதிர்கொள்வது வரை ஒழுக்கநெறிகளே. ஒழுக்க நெறிகள் பொதுவாக மனிதனின் இயல்பான குணங்களான காமம், வன்முறை, சுயநலம்,பேராசை முதலியவற்றை கட்டுப்படுத்தக்கூடியவையாக இருக்கும்

ஆனால் பாலியல் ஒழுக்கநெறிகளைப்பற்றியே நாம் அதிகமும் பேசுகிறோம். அவற்றை பாலியல் கட்டுப்பாடுகளாக மட்டுமே காணக்கூடிய ஒரு போக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா உருவாக்கி நமக்கு அளித்தது. நவீன சமூகஉயிரியல், பரிணாம உயிரியலின் கொள்கைகளின்படி அந்த கோட்பாடுகள் தூக்கி வீசபட்டுவிட்டபின்னரும் சிந்தனையில் அவை நீடிக்கின்றன.

பாலியல் ஒழுக்கநெறிகள் நம்முடைய ஆதாரமான உயிர்விசையை கட்டுப்படுத்துகின்றன. கட்டற்று செல்லும் பாலியல் விசையையே இயற்கை நமக்கு அளித்துள்ளது. எல்லா உயிர்களிலும் பாலுறவு என்பது தீவிரமான போட்டி வழியாக தகுதியானவை மட்டும் இனப்பெருக்கம் நிகழ்த்துவதாகவே உள்ளது. அதற்கான வன்முறை அங்கே நிகழ்ந்துகொண்டே உள்ளது. மனித இனம் பாலுறவு மீதான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் வழியாக பாலுறவில் இருக்கும் வன்முறைப்போட்டியை மெல்லமெல்ல இல்லாமலாக்கி கொண்டது.

அத்துடன் நிரந்தரமான குடும்பம் என்ற அமைப்பை மனித இனம் உருவாக்கிக் கொண்டது. இது குழந்தைகளின் இளமைப்பருவத்தை நீட்டித்தது. அதன் விளைவாக கல்விப்பருவம் நீட்டிக்கப்பட்டது. பண்புக்கூறுகள், சிந்தனைகள் முதலியவை தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட இது வழியமைத்தது.

ஒழுக்கநெறிகள் மனிதனை வெற்றிகரமாக சமூகங்களாக தொகுத்தன. அதன் மூலமே மனிதகுலத்தின் பெரும் பண்பாட்டுப்பாய்ச்சல்கள் சாத்தியமாயின. மானுட இனத்தின் பரிணாம வரலாற்றில் ஒழுக்கம் என்பது அது கண்டுபிடித்த ஒரு முக்கியமான ஒரு கருவி. அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒழுக்கம் பெருமளவுக்கு பங்களிப்பாற்றி இருக்கிறது.

அகவே ஒழுக்க நெறிகளை எதிர்மறையானவையாக பார்க்காமல் பயனுள்ளவையாக, தவிர்க்கமுடியாதவையாக பார்க்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒழுக்க நெறிகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச்சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப்பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை

ஒரு நல்ல சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகளை மாற்றுவதற்காக அந்தச் சமூகத்தின் தீவிரமான ஒரு பகுதியினர் எப்போதும் முயன்றபடியே இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் எப்போதுமே எச்சமூகத்திலும் அதன் ஒழுக்கபிரக்ஞ்ஞையில் ஒரு பகுதி காலாவதியான விஷயங்களால் ஆனதாகவே இருக்கும்.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பழங்குடி மனநிலை கொஞ்சம் நீடிக்கும். முதலாளித்துவ காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ மனநிலை நீடிக்கும். அது இயல்பு. அந்த பழைய அம்சங்களை களையவும் புதிய சூழலுக்கேற்ப புதிய ஓழுக்கங்களை உருவாக்கவும் ஒரு சாரார் போராடத்தான் வேண்டும்.

இந்த பின்புலத்தில் உங்கள் கேள்விக்கு வருகிறேன்

நம்முடைய சமூகம் இன்று நடைமுறையில் முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் நடுவே உள்ளது. நம்முடைய மனமோ பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ ஒழுக்கங்களால் ஆனதாக உள்ளது.

நிலப்பிரபுத்துவம்முதலாளித்துவம் இரண்டுக்கும் நடுவே அடிப்படையான ஒரு வேறுபாடு உள்ளது. நிலப்பிரபுத்துவம் மனிதர்களை அவர்களின் பொதுத்தன்மைகளின் அடிப்படையில் தொகுக்க முயன்றது. பொதுவான அளவுகோல்களே அனைவருக்கும் போடப்பட்டன. பொதுமைப்படுத்துவதன் மூலம் உருவாகும் ஒழுக்கவிதிகளும் நடைமுறைகளுமே அனைவருக்கும் அளிக்கப்பட்டன. மனிதனை அது சமூகத்தின் ஒரு அலகு மட்டுமாக பார்க்கிறது. தனித்தன்மைகள், தனிவிருப்புகள் பொருட்படுத்தப்படுவதில்லை.

ஊரோடு ஒத்துவாழ் என்ற சொல்லே அதன் நெறிகளின் அடிப்படை. நிலப்பிரபுத்துவத்தின் எல்லா நெறிகளுமே மிகப்பொதுவாக வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு ஆண் இப்படி இருக்கவேண்டும், ஒரு பெண் இப்படி இருக்கவேண்டும், தந்தை இப்படி இருக்கவேண்டும், ஆசிரியர் இப்படி இருக்கவேண்டும் என அது முற்றாக வகுத்துரைக்கிறது. அதில் அடங்காத தனித்தன்மைகளை எல்லாம் அது மீறல்களாகவே பார்க்கிறது. அங்கே தனிமனிதன் இல்லை, சமூகப்பாத்திரங்களே உள்ளன.

இன்று தமிழகத்தில் வீட்டுமனை விற்பனையாளர்களிடம் கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். கிராமங்களுக்குள் உள்ள நிலங்களுக்கு விலை இல்லை. கிராமத்துக்கு வெளியே பொட்டல்களில் உருவாக்கப்படும் மனைகளுக்கே மதிப்பு. ஏன்? கிராமங்களுக்குள் வாழ்ந்தோமென்றால் கிராமக்கட்டுப்பாடுகளுக்கு அடங்கிச்செல்லவேண்டியிருக்கும். அங்கே தனிமனித ரசனைக்கும் சுதந்திரத்துக்கும் இடமே இல்லை. அதாவது அங்கே நிலப்பிரபுத்துவம் உள்ளது. வெளியே உள்ள ‘நகர்’களில் முதலாளித்துவம் உருவாக்கிக் கொள்ளப்படுகிறது.

முதலாளித்துவம் அந்த பொதுமைப்படுத்தலுக்குள் உள்ள தனிக்கூறுகளை கணக்கில் கொள்கிறது. அதில் தனிமனிதன் இருக்கிறான். அவனுடைய தனித்தன்மை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனித்தன்மைக்குரிய சுதந்திரத்தை அவன் பொதுவான சமூக அமைப்புக்கு ஊறு விளைவிக்காமல் அடையலாம் என்று அது அனுமதிக்கிறது.

இந்த எண்ணங்களும் , இந்த உரிமைகளும் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை வெறும் ஐம்பது வருடங்களில் அடையப்பெற்றவை என்பதை நாம் இப்போது உணர்வதில்லை. புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துக்களில் இந்த உரிமைகளுக்காக வேகத்துடன் பேசியிருக்கிறார்கள். கல்யாணி என்ற புதுமைப்பித்தன் கதையை இன்று வாசித்தால் அந்த சிக்கலே ஆச்சரியமூட்டும். ஒரு சுதந்திர வாழ்க்கையை ஏன் கல்யாணி உதறுகிறள்? அவள் ஒரு தனி ஆளுமை, அவளுக்கென ஒரு மனமும் வாழ்க்கையும் இருக்கலாமென அவளுக்கே தெரியாது. சமூகம் பற்றித்தான் அவளுக்கு கவலை.

ஜெயகாந்தனின் முழுப் போராட்டமும் தனிமனித ஆளுமைக்காகவே என்றால் அது மிகையல்ல. ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ போன்ற அவரது தலைப்புகள் வழியாக சென்றாலே போதும், ஒரு சித்திரம் கிடைத்துவிடும்

முதலில் சமூகத்தில் உள்ள அத்தனைபேருக்கும் அவர்களின் தனித்தன்மையை அவர்களே உணரச்செய்வதாக, அவர்களை தனிமனிதர்களாக அறியச்செய்வதாக இச்சிந்தனைகள் செயல்பட்டன. அதன் பின்னரே அச்சமூகத்தின் சற்றே வித்தியாசமான உறுப்பினர்களின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை உருவாகியது

நம் சமூகத்தில் ஐம்பதுகள் வரைக்கும்கூட பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப்பற்றிய பிரக்ஞை வந்து இருபது வருடங்கள்கூட ஆகவில்லை. திருநங்கைகளுக்கான உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் உருவாகி பத்து வருடங்கள்கூட ஆகவில்லை.

இன்னமும் கூட இந்த உரிமைப்பிரக்ஞைகள் நம் கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை. ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியான பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் மெல்லமெல்லத்தான் அது சென்று சேரும். சமூகமாற்றங்கள் எப்போதும் பலபடிகளாக மெதுவாகவே நிகழமுடியும். ஏனென்றால் அவை பல லட்சம் மனிதர்களின் சிந்தனைகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்களுடன் தொடர்புள்ளவை.

இந்த உரிமைக்குரல்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுப்புவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே இலக்கியத்தில் அவை அழுத்தமாக பதிவாகியிருப்பதை காணலாம். உதாரணமாக தமிழிலக்கியத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிகளை உண்மையின் தீவிரத்துடன் பதிவுசெய்து அதை ஒரு மானுடப்பிரச்சினையாக காணச்செய்தவர் கி.ராஜநாராயணன்.

இந்த வகையில்தான் ஓரினப்புனர்ச்சியாளர்களின் உரிமைகளைப்பற்றிய பிரக்ஞையும் வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனித்தன்மை கொண்ட பிரிவினர். அவர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாகி பண்பாட்டுத்தளங்களில் வலுப்பெற்று மக்கள்மனத்தில் நிலைபெற்று சமூகமாற்றமாக ஆக கொஞ்ச காலம் பிடிக்கும். இங்கே இன்னும் அது ஆரம்பிக்கப்படவே இல்லை.

இங்கே அதற்குச் சாதகமாக உள்ள அம்சம் என்னவென்றால் சாராம்சத்தில் இந்து மதம் அதற்கு எதிரானது அல்ல என்பதே. அதன் பல்வேறு பிரிவினர் தனிப்பட்ட எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்புகளை வெல்வதற்கான எல்லா ஆதாரங்களையும் இந்துமதமே அளிக்கிறது. நிறுவன மதத்தின் எதிர்ப்பு இவ்விஷயத்தில் நிகழாது. திருநங்கைகளின் விஷயத்தில் இன்று உலகிலுள்ள பல நாடுகளில் நிறுவன மதங்கள் அளிக்கும் எதிர்ப்பை பார்க்கையில் இந்தியாவில் அந்த மாற்றம் சுமுகமாக நிகழ்வதை எவரும் காணமுடியும்.

ஒருபால்புணர்ச்சியாளர்களைப்பற்றிய உங்கள் வருத்தங்களைப்பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்….

பழங்குடிச்சமூகங்களிலும் அவற்றில் இருந்து நிலப்பிரபுத்துவச் சமூகங்களிலும் வேரூன்றிய ஒரு கருத்துநிலை ஆண்மை என்பது. வீரம் என்பதுடன் அது நேரடியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. நம் பண்டைய இலக்கியங்களில் ஆண்மை என்ற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதைக் கண்டால் அது விளங்கும். அச்சொல்லுக்கு , கௌரவம், நிமிர்வு என பல அர்த்தங்கள்.

போராலேயே நிறுவபப்ட்டு வளர்ந்த அச்சமூகங்கள் உடல்சார்ந்த, வன்முறைசார்ந்த வீரத்தை மைய விழுமியமாக போற்றியதில் ஆச்சரியமில்லை. அப்படி ஒருவிழுமியம் இருந்தால்தான் வீரர்கள் உருவாவார்கள். சமூகத்துக்காக போர்முனைகளில் சாவார்கள். இன்றும் நம் மொழியிலும் ஆழ்மனதிலும் அவ்விழுமியம் இருக்கத்தான் செய்கிறது. இன்று வீரர்கள் விளையாடுகிறர்கள், சினிமாவில் நடிக்கிறார்கள்.

ஆண்மைக்கு எதிரானவை, ஒவ்வாதவை என்பதனாலேயே ஓரினச்சேர்க்கை, மூன்றாம்பாலினம் போன்றவற்றின் மேல் சமூகம் இழிவான நோக்கை உருவாக்கிக் கொண்டது. போர்ச்சமூகங்களில் அந்த துருவப்படுத்தல் இன்னும் தீவிரமாக இருக்கும். பேடி, பொண்ணன் போன்ற சொற்கள் வசைச்சொற்களாகவே சமூக மனதில் ஊறின.

அந்த வெறுப்பையும் நிராகரிப்பையும் தப்புசரி என்று பார்ப்பதை விட நேற்றைய போர்ச்சமூகத்திற்கு தேவை என்பதனால் அது உருவாக்கிக்கொண்ட ஒரு விழுமியம் என்று பார்ப்பதே சரியானது. அன்று உருவாக்கிக்கொண்ட எத்தனையோ கருவிகள் இன்று அருங்காட்சியகத்தில் உள்ளன. கருத்துக்களும் அப்படித்தான். அவை அப்படிப்பட்ட கருத்துக்கள்.

மூன்றாம்பாலினத்தை பொறுத்தவரை அது சம்பந்தப்பட்டவரின் பிழை அல்ல என்ற எண்ணம் சமூகத்தில் உள்ளது. ஒருபால்புணர்ச்சிக்கு அந்தச் சலுகை இல்லை. அது அந்தத் தனிநபரின் கோணலானரசனை என்ற எண்ணம் இருந்தது, இருக்கிறது. அது இயற்கைக்கு மாறானது என்று நம்பப்படுகிறது.

ஒருபால் புணர்ச்சிக்கான உந்துதல் என்பது இயற்கையானது, எல்லா உயிர்களிலும் காணப்படுவது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு முப்பது வருடங்கள்கூட ஆகவில்லை. ஐரோப்பாவில் அதற்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டபோதுகூட அது தனிமனித உரிமை என்றுதான் பார்க்கப்பட்டதே ஒழிய அதுவும் ஒருவகையில் இயற்கையானது என்பதனால் அல்ல. எழுபதுகளில்தான் பல்வேறு விலங்கியல், சமூகஉயிரியல் ஆய்வுகள்மூலம் அதுவும் இயற்கையானதே என நிறுவப்பட்டது.

எண்பதுகளின் இறுதியில்தான் இதுசார்ந்த சில பேச்சுக்கள் இந்தியச்சூழலில் உருவாயின. எண்பத்தெட்டில் இந்த விஷயம் சார்ந்து மனித உரிமைக்கழகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு மாபெரும் மனுவில் நானும் கையெழுத்திட்டிருந்தேன். இந்த விஷயம் சார்ந்து பொது ஊடகங்களில் இன்னும் விரிவான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

பல்வேறு மதங்களின் கலவையாக உள்ள இந்தியா இந்த விஷயத்தில் சட்டபூர்வமாக ஒரு நிலைப்பாடு எடுக்கக் கொஞ்சம் தாமதிக்கும் என்றே நினைக்கிறேன். இஸ்லாமிய சமூகம் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் ஒன்றை இந்திய அரசு எளிதில் சட்டமாக ஆக்கிவிடமுடியாது. ஆனாலும் அது நிகழும் என்பதில் ஐயமில்லை.

ஓரினப்புணர்ச்சியாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் பேணப்படுவதும் அவர்கள் சமூகத்தின் இயல்பான உறுப்பினர்களாக ஆவதும் படிப்படியாக சாத்தியமாகக்கூடிய ஒன்றே.

கடைசியாக உங்கள் தனிப்பட்ட பிரச்சினை பற்றி..

ஒரு அற்பமான விஷயத்தைச் சொல்கிறேனே. நான் இப்போது முழுநேர எழுத்தாளன். நாள்முழுக்க வீட்டில் இருக்கிறேன். என் மனைவி வேலைக்குச் செல்கிறாள். இது என் சூழலில் உருவாக்கும் குழப்பத்தையும் சங்கடத்தையும் கிண்டலையும் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

நான் வீட்டில் எரிவாயு வாங்கி வைக்கிறேன். பால் வாங்கி வைக்கிறேன். வீட்டை கூட்டுகிறேன். துணி துவைக்கிறேன். என் மகளுக்கு ஏதாவது சமைக்கிறேன். இவை பெண்களுக்குரிய செயல்கள். ஆகவே என்னை ஆணுக்கு உகக்காத ஒன்றைச் செய்பவனாக நினைக்கிறார்கள். கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய ஒன்றாக நினைக்கிறார்கள்.

தெருவில் துணி இஸ்திரி போடுபவர், நாளிதழ் போடுபவர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை கிண்டலாக ஏதேனும் சொல்கிறார்கள். நான் என் மனைவியை விட ஐந்து மடங்கு சம்பாதிப்பவன் என்று தெரிந்தவர்களுக்கும்கூட இது சங்கடமாக இருக்கிறது. இன்றும்கூட துணி துவைக்கும், வீட்டில் இருக்கும் கணவனைப்பறிய நகைச்சுவைத்துணுக்குகள் ஆனந்தவிகடனில் வந்துகொண்டுதான் உள்ளன.

என் மனைவிக்கே சங்கடம். நான் ஒருமாதமாக வீட்டில் இருந்தால் எங்காவது கிளம்பிப்போ, வேலைக்கு போயிருக்கிறார் என்று பக்கத்துவீட்டில் சொல்கிறேன் என்கிறாள்.

இந்த விஷயத்திலேயே இப்படி என்றால் உங்கள் விஷயத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும். அப்பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள இரு வழிகள் உள்ளன. ஒன்று அதை வெளிப்படையாக வைப்பது. அந்த உரிமைகளுக்காக போராடுவது. உங்கள் வாழ்க்கையை உங்களைப்போன்றவர்களின் உரிமைக்கான போராட்டமாக ஆக்கிக் கொள்வது. அப்படி ஆக்கிக்கொள்பவர்களே சமூகத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஆனால் அந்த வாழ்க்கையில் தியாகம் மட்டுமே உண்டு. அபாரமான மனபலம் இல்லாமல் அதைத் தேர்ந்தெடுக்க முடியாது. இழப்புகளுக்காகத் தயாராக இல்லாமல் அவ்வழி செல்லமுடியாது

எஞ்சும் ஒரேவழி இந்தச்சூழல் உங்களுக்காக மாறும் வரை உங்கள் தனி வாழ்க்கையை ரகசியமாக வைத்திருப்பதே. எப்போதும் நம் சமூகத்தில் உங்களைப்போன்றவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வேறு வழியே இல்லை

நம் சமூகத்தில் ஏதேனும் வகையில் தனித்தன்மை உள்ள மனிதர்கள் தங்களைப்போன்றவர்களுடன் இணைந்து ஒரு உபசமூகமாக ஆகித் தங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள். அதையே உங்களுக்கும் சொல்வேன். அதை ஒரு இழிநிலையாக, தண்டனையாக அல்லாமல் ஒரு வாய்ப்பாக, தவிர்க்கமுடியாத ஒரு வழியாக நினைத்தால் போதுமானது

ஜெ

Asif Meeran AJ

unread,
Mar 28, 2011, 3:49:33 AM3/28/11
to panb...@googlegroups.com
நீ ரொம்பவே ரசிப்பதற்கு விசேஷமான காரணங்கள் ஏதேனும் உண்டா நந்தா?!
ஒரு ஆர்வம்தான்

Raja sankar

unread,
Mar 28, 2011, 5:03:27 AM3/28/11
to panb...@googlegroups.com
சாமான்ய காரணங்களாகக்கூட இருக்கலாம்.

ராஜசங்கர்



2011/3/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Mar 28, 2011, 5:14:46 AM3/28/11
to panb...@googlegroups.com, Raja sankar
நல்ல வேளை... எழுத்துப்பிழை இல்லை :)))))

2011/3/28 Raja sankar <errajasa...@gmail.com>

VJagadeesh

unread,
Mar 28, 2011, 5:12:46 AM3/28/11
to panb...@googlegroups.com

இவனைலாம் ஒன்னும் சொல்லாதிங்க

 

ஆனா கௌதம் மேனனை மட்டும் திட்டுங்க,

--

சென்ஷி senshe

unread,
Mar 28, 2011, 5:41:28 AM3/28/11
to panb...@googlegroups.com
வில்லன், இவனைலாம்னு யாரை சொல்லுறீங்க.. ஜெமோவையா, நந்தாவையா?!

2011/3/28 VJagadeesh <VJaga...@prouindia.com>

Naresh Kumar

unread,
Mar 28, 2011, 5:41:37 AM3/28/11
to பண்புடன்
திட்டி இவரை பெரிய ஆளாக்க விரும்பலை...

ஆனாலும், சுபைரு ‘பெரிய’ ஆளுதான்...

VJagadeesh

unread,
Mar 28, 2011, 5:37:53 AM3/28/11
to panb...@googlegroups.com

So Sad.

 

வேலைப்பளு காரணமா இப்பலாம் குழுமம் பக்கம் வரமுடியலைனு சொல்லிட்டிருந்திங்களே இப்ப மட்டும் என்ன பளு குறைஞ்சி போச்சா...

 

போயி வேலையை பாருமய்யா

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ?????? senshe
Sent: Monday, March 28, 2011 3:11 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] ஓரினச் சேர்க்கை - ஜெ.மோவை ரசிக்கும் தருணங்கள்

 

வில்லன், இவனைலாம்னு யாரை சொல்லுறீங்க.. ஜெமோவையா, நந்தாவையா?!

பிரசாத் வேணுகோபால்

unread,
Mar 28, 2011, 6:05:56 AM3/28/11
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா... சென்ஷி அண்ணனுக்குத்தான் நந்தாளரை இவன்னு யாராச்சும் சொல்வாய்ங்களானு எவ்ளோ எதிர்பார்ப்பு...

2011/3/28 சென்ஷி senshe <me.s...@gmail.com>

தியாகு

unread,
Mar 28, 2011, 6:13:04 AM3/28/11
to panb...@googlegroups.com
//நித்ய சைதன்ய யதியைப் //

இது நித்தியானந்தா வா

2011/3/28 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
ஹா ஹா ஹா... சென்ஷி அண்ணனுக்குத்தான் நந்தாளரை இவன்னு யாராச்சும் சொல்வாய்ங்களானு எவ்ளோ எதிர்பார்ப்பு...


2011/3/28 சென்ஷி senshe <me.s...@gmail.com>
வில்லன், இவனைலாம்னு யாரை சொல்லுறீங்க.. ஜெமோவையா, நந்தாவையா?!



--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Umanath Selvan

unread,
Mar 28, 2011, 6:16:04 AM3/28/11
to panb...@googlegroups.com
நித்ய சைதன்யா யதி - ஜெயமோகனின் ஆன்மீக குரு. அவரும் நித்யானந்தாவும் வேறு. நித்ய சைதன்யா இப்போது இல்லை.

விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/3/28 தியாகு <seewty...@gmail.com>

தியாகு

unread,
Mar 28, 2011, 6:27:13 AM3/28/11
to panb...@googlegroups.com
விளக்கத்துக்கு நன்றி விழியன் ஏனென்றால் இந்த நித்தியானந்தாவுடன் குழப்பி கொள்ள இருந்தேன் நித்திய சைதன்யாவை

2011/3/28 Umanath Selvan <uman...@gmail.com>

Raja sankar

unread,
Mar 28, 2011, 6:29:12 AM3/28/11
to panb...@googlegroups.com
//இஸ்லாமிய சமூகம் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் ஒன்றை இந்திய அரசு எளிதில் சட்டமாக ஆக்கிவிடமுடியாது. ஆனாலும் அது நிகழும் என்பதில் ஐயமில்லை.//

இத யாரும் ஜெமோவின் வழக்கமான இந்துத்துவ நுண்ணரசியல் என யாரும் சொல்லக்காணோமே?

இந்த வரிய யாரும் படிக்கல போல :-)))))))))

ராஜசங்கர்

2011/3/28 நந்தா <meetn...@gmail.com>

VJagadeesh

unread,
Mar 28, 2011, 6:23:58 AM3/28/11
to panb...@googlegroups.com

நான் இரண்டு மூன்று பாரா படிச்சதுமே போரடிச்சி டெலிட் பண்ணிட்டேன்.

 

அப்படித்தான் எல்லாரும் டெலிட்டிருப்பாங்க

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja sankar
Sent: Monday, March 28, 2011 3:59 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] ஓரினச் சேர்க்கை - ஜெ.மோவை ரசிக்கும் தருணங்கள்

 

//இஸ்லாமிய சமூகம் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் ஒன்றை இந்திய அரசு எளிதில் சட்டமாக ஆக்கிவிடமுடியாது. ஆனாலும் அது நிகழும் என்பதில் ஐயமில்லை.//

தியாகு

unread,
Mar 28, 2011, 6:34:12 AM3/28/11
to panb...@googlegroups.com
ஸ்ரூதிகள் -ஸ்மிருதிகள் லிஸ்டு யாராவது தரமுடியுமா




2011/3/28 VJagadeesh <VJaga...@prouindia.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

நந்தா

unread,
Mar 28, 2011, 6:34:57 AM3/28/11
to panb...@googlegroups.com
ஒரு சில முரண்பாடுகள் இருந்தாலும் ஜெ.மோவின் இந்தக் கட்டுரையை ரொம்பவே ரசித்தேன்.


2011/3/28 Raja sankar <errajasa...@gmail.com>

VJagadeesh

unread,
Mar 28, 2011, 6:28:07 AM3/28/11
to panb...@googlegroups.com

அந்த வரிகளில் உங்களுக்கென்ன முரண்பாடு?

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ?????


Sent: Monday, March 28, 2011 4:05 PM
To: panb...@googlegroups.com

Subject: Re: [பண்புடன்] ஓரினச் சேர்க்கை - ஜெ.மோவை ரசிக்கும் தருணங்கள்

--

Umanath Selvan

unread,
Mar 28, 2011, 6:37:55 AM3/28/11
to panb...@googlegroups.com
வில்லன், திரும்ப வாசிக்கவும். நல்ல கட்டுரை.


விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/3/28 VJagadeesh <VJaga...@prouindia.com>
--

Raja sankar

unread,
Mar 28, 2011, 6:39:35 AM3/28/11
to panb...@googlegroups.com
அதுல என்ன முரண்பாடு?

ராஜசங்கர்



2011/3/28 நந்தா <meetn...@gmail.com>
ஒரு சில முரண்பாடுகள் இருந்தாலும் ஜெ.மோவின் இந்தக் கட்டுரையை ரொம்பவே ரசித்தேன்.

நந்தா

unread,
Mar 28, 2011, 6:45:38 AM3/28/11
to panb...@googlegroups.com
அந்த வரிகள் அந்த இடத்தில் சற்றே விலகி நிற்பது மாதிரி தோன்றியது. இதை எதிர்க்கும் கிறித்துவ மதவாதிகளையும் அந்த இடத்தில் சேர்த்திருந்தால் ஒரு வேளை இந்த எண்ணம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

அல்லது குறிப்பிட்டு இஸ்லாமிய மதவாதிகள் இதை எந்த முறையில் எதிர்க்கிறார்கள் என்று எழுதி இருந்தால் கூட அந்த எண்ணம் எழாமல் இருந்திருக்கும். மாறாக பொதுமைப் படுத்தியதுதான் விலகி நிற்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.



2011/3/28 Raja sankar <errajasa...@gmail.com>
அதுல என்ன முரண்பாடு?

தியாகு

unread,
Mar 28, 2011, 6:46:26 AM3/28/11
to panb...@googlegroups.com
குடும்பம் அரசு தனிசொத்து ஆகியவற்றின் தோற்றம் -நூலில்  எங்கெல்ஸ்

பல்வேறு பாலியல் விதிகள் இருந்ததை மார்கன் வகைபடுத்துகிறார்
கிரேக்கத்தின் ஒரு பெண் பெண்ணாக இருக்கவே முதல் தகுதி அவள் பொது பெண்ணாக (விபச்சாரியாக இருக்கவேண்டும் என்று ஆதிகாலத்தில் இருந்துள்ளதை வரையறுக்கிறார்)

முதலில் ஒரு மணவகை ஆண்கள் இன்னொரு மணவகை பெண்களை அடையலாம் என்பது எழுதப்படாத விதியாக இருந்திருக்கிறது
அதன் பிறகு அடுத்த கட்டமாக இந்த வட்டம் பத்து ஆண்களும் பத்து பெண்களும் என சுருங்கி தற்போதுள்ள குடும்ப அமைப்புக்கு வந்துள்ளது

தற்போதுள்ள குடும்பம் உருவாக அடிப்ப்டை தேவையாக ஒரு ஆணும் அவனுக்கு ஒரு பெண்ணும் என்கிற நிலை இல்லாமல் சொத்து என்பது இருக்காது என்பதே உண்மை

மேலும் இன்னாருக்கு இன்னார் என தெரியாதபோது சச்சரவுகள் ஏற்படுவது பற்றி மட்டும் ஜெயமோகன் எழுதி இருப்பது சமுகவரலாற்று புரிதல் அல்ல

இதில் ஸ்ருதிகள் ஸ்மிருதிகள் என உள்ளே கோர்த்து விட்டு இருப்பது என்னமோ பார்பனிய
சட்டங்கள் உலகம் முழுவதும் இருந்ததாக் ஒரு தோற்றத்தை வச்சிடுறார்

அப்படி இல்லை - பாலியல் உறவு எப்படி இருந்தது எப்படி வரலாற்று ரீதியில் மாறி வந்துள்ளது என்பதை சமூகத்தை ஆய்வு செய்யாமல் அறிய முடியாது

ஒரு பால் உறவு சரியா தப்பா என்பதை சமூகம் அதன் வளர்ச்சி போக்கில் தீர்மானிக்கும் எப்படி குடும்பம் என்கிற உறவுக்கு வந்தடைய ஒரு குறிபிட்ட காலம் ஆனதோ அம்மாதிரியே ஒரு பால் உறவை ஏற்றுகொள்ளத்தக்க சமூக பொருளாதார காரணம் அமையாத வரை முடியாது

நந்தா

unread,
Mar 28, 2011, 6:57:13 AM3/28/11
to panb...@googlegroups.com
//ஆகவே, ஒழுக்கத்தைப்பற்றிப் பேசும் நூல்கள் ஸ்மிருதி எனப்பட்டன. அவை நிரந்தரமானவை அல்ல. அழியாத தரிசனங்களையும் தத்துவங்களையும் பற்றி பேசும் நூல்களே ஸ்ருதிகள். ஸ்மிருதிகள் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் இப்போது அம்பேத்கார் ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆக இதை அறப்பிரச்சினையாக எண்ணுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதாவது இதை தப்பா சரியா என்று எப்போதைக்குமாக வகுத்துக்கொள்ளும் விவாதத்துக்கே இந்திய சூழலில் இடமில்லை. இங்கே இது மதத்தின் பிரச்சினை அல்ல.//


//இந்த வகையில்தான் ஓரினப்புனர்ச்சியாளர்களின் உரிமைகளைப்பற்றிய பிரக்ஞையும் வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனித்தன்மை கொண்ட பிரிவினர். அவர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாகி பண்பாட்டுத்தளங்களில் வலுப்பெற்று மக்கள்மனத்தில் நிலைபெற்று சமூகமாற்றமாக ஆக கொஞ்ச காலம் பிடிக்கும். இங்கே இன்னும் அது ஆரம்பிக்கப்படவே இல்லை.

இங்கே அதற்குச் சாதகமாக உள்ள அம்சம் என்னவென்றால் சாராம்சத்தில் இந்து மதம் அதற்கு எதிரானது அல்ல என்பதே. அதன் பல்வேறு பிரிவினர் தனிப்பட்ட எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்புகளை வெல்வதற்கான எல்லா ஆதாரங்களையும் இந்துமதமே அளிக்கிறது. நிறுவன மதத்தின் எதிர்ப்பு இவ்விஷயத்தில் நிகழாது. திருநங்கைகளின் விஷயத்தில் இன்று உலகிலுள்ள பல நாடுகளில் நிறுவன மதங்கள் அளிக்கும் எதிர்ப்பை பார்க்கையில் இந்தியாவில் அந்த மாற்றம் சுமுகமாக நிகழ்வதை எவரும் காணமுடியும்.//

முரண்பட்டு நிற்கும் இடங்கள் அல்லது இன்னும் சரியாகச் சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் இடங்களில் இவைகளும் ஒன்று.

Raja sankar

unread,
Mar 28, 2011, 6:58:05 AM3/28/11
to panb...@googlegroups.com
பெரும்பாலான கிருஸ்துவ நாடுகளில் ஓரினைச்சேர்க்கை குற்றம் அல்ல. பல ஐரோப்பிய நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும். ஓரினைச்சேர்கையாளர்கள் கிருஸ்துவ மதகுருமார்களாகவும் இருக்கிறார்கள். ஆங்கிலிக்கன் சபை இதை அங்கீகரிக்க முயல்கிறது.

இவைகள் ஏதேனும் ஒரு முஸ்ஸீம் நாட்டில் உண்டா?

ராஜசங்கர்

2011/3/28 நந்தா <meetn...@gmail.com>
இதை எதிர்க்கும் கிறித்துவ மதவாதிகளையும் அந்த இடத்தில் சேர்த்திருந்தால் ஒரு வேளை இந்த எண்ணம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

தியாகு

unread,
Mar 28, 2011, 6:59:16 AM3/28/11
to panb...@googlegroups.com
ஒரு பாலியல் சுதந்திரத்துக்காக ஒரு தனிநபரை போராட சொல்லும் தீர்வு மட்டும்தான் இவரிடம் இருக்கும் இது அவர் தப்பில்லை

2011/3/28 நந்தா <meetn...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Raja sankar

unread,
Mar 28, 2011, 7:01:23 AM3/28/11
to panb...@googlegroups.com
வேண்டுமென்றால் அமைப்பாக ஆகியோ இல்லை அமைப்பில் சேர்ந்தோ போராடு என்று தான் சொல்லியிருக்கிறார். இந்த சமூக உரிமைகள் எல்லாம் அவரவருக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்ளப்படுபவை.

புரட்சிக்குழு கூடி தனிமனித உரிமையை முடிவு செய்தால் எப்படியிருக்கும் என வரலாறு பதிவு செய்திருக்கிறது.

ராஜசங்கர்



2011/3/28 தியாகு <seewty...@gmail.com>
ஒரு பாலியல் சுதந்திரத்துக்காக ஒரு தனிநபரை போராட சொல்லும் தீர்வு மட்டும்தான் இவரிடம் இருக்கும் இது அவர் தப்பில்லை

நந்தா

unread,
Mar 28, 2011, 7:01:42 AM3/28/11
to panb...@googlegroups.com
அல்லது குறிப்பிட்டு இஸ்லாமிய மதவாதிகள் இதை எந்த முறையில் எதிர்க்கிறார்கள் என்று எழுதி இருந்தால் கூட அந்த எண்ணம் எழாமல் இருந்திருக்கும். மாறாக பொதுமைப் படுத்தியதுதான் விலகி நிற்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


2011/3/28 Raja sankar <errajasa...@gmail.com>
பெரும்பாலான கிருஸ்துவ நாடுகளில் ஓரினைச்சேர்க்கை குற்றம் அல்ல. பல ஐரோப்பிய நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும். ஓரினைச்சேர்கையாளர்கள் கிருஸ்துவ மதகுருமார்களாகவும் இருக்கிறார்கள். ஆங்கிலிக்கன் சபை இதை அங்கீகரிக்க முயல்கிறது.

Raja sankar

unread,
Mar 28, 2011, 7:04:31 AM3/28/11
to panb...@googlegroups.com
அங்கு குறிப்பிடுவதற்கு ஏதும் கிடையாது.

கடவுள் தந்த சட்டப்படி ஓரினச்சேர்க்கை குற்றம். அவ்வளவு தான். ஏன் எதற்கு என்பதெல்லாம் கிடையாது.

ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்று ஏதேனும் ஒரு முஸ்ஸீம் சொல்லிவிட முடியுமா?

அப்புறம் என்ன பொதுமைப்படுத்துதல், தனிப்படுத்தல் எல்லாம்.

ராஜசங்கர்

2011/3/28 நந்தா <meetn...@gmail.com>
அல்லது குறிப்பிட்டு இஸ்லாமிய மதவாதிகள் இதை எந்த முறையில் எதிர்க்கிறார்கள் என்று எழுதி இருந்தால் கூட அந்த எண்ணம் எழாமல் இருந்திருக்கும்.

தியாகு

unread,
Mar 28, 2011, 7:05:57 AM3/28/11
to panb...@googlegroups.com

//வேண்டுமென்றால் அமைப்பாக ஆகியோ இல்லை அமைப்பில் சேர்ந்தோ போராடு என்று தான் சொல்லியிருக்கிறார். இந்த சமூக உரிமைகள் எல்லாம் அவரவருக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்ளப்படுபவை. //

அடிப்படையில் ஜனநாயகமில்லாத சமூகத்தில் புரிதலை இம்மாதிரி போராட்டங்கள் ஏற்படுத்தாது

சமுகமாற்றத்துக்கான போராட்டத்தினூடாகே இணைந்து செய்யப்படாத இவ்வகை போராட்டங்கள் மக்களிடல் எள் முனையளவு கூட போய் சேராது

VJagadeesh

unread,
Mar 28, 2011, 7:36:22 AM3/28/11
to panb...@googlegroups.com

அன்புள்ள ஜெ.

 

நான் உங்களது இணையப்பக்கத்தின் நீண்ட நாள் வாசகன் மற்றும் உங்கள் ரசிகன். சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய பதிபவில் ஸ்மிருதி, ஸ்ருதி போன்றவைகளை என்னால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. அவற்றை விளக்குங்களேன்.

 

இப்படினு ஒரு பின்னூட்டத்தை அவரோட இணையத்திலே போட்டு பதிலை பெறாமல், முரண்பட்டு நிற்கும் இடங்கள் என இங்கே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?

 

முரண்பட்டு நிற்கும் இடங்கள் அல்லது இன்னும் சரியாகச் சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் இடங்களில் இவைகளும் ஒன்று.

--

நந்தா

unread,
Mar 28, 2011, 7:44:49 AM3/28/11
to panb...@googlegroups.com
//ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்று ஏதேனும் ஒரு முஸ்ஸீம் சொல்லிவிட முடியுமா? //

ஆம் சொல்லுகின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

சென்ஷி senshe

unread,
Mar 28, 2011, 7:46:29 AM3/28/11
to panb...@googlegroups.com
ராஜசங்கர் - ஓரினச் சேர்க்கை குற்றமில்லைன்னு சொல்லிட்டா என்ன செய்ய முடியும்? :))

2011/3/28 நந்தா <meetn...@gmail.com>
//ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்று ஏதேனும் ஒரு முஸ்ஸீம் சொல்லிவிட முடியுமா? //

ஆம் சொல்லுகின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
- senshe

Asif Meeran AJ

unread,
Mar 28, 2011, 7:49:18 AM3/28/11
to panb...@googlegroups.com
சொல்லக் கூடும் நந்தா :-)
ஆனால் ராஜசங்கர் சொலவ்தே உண்மை

திருக்குரானில் ஒரு சமூகத்தினர் வெட்கமின்றி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அது தடுக்கப்பட்டதென்று திருக்குரான் சொல்கிறது

தடுக்கப்பட்டதென்று திருக்குரான் சொல்லிவிட்டால் அது இஸ்லாத்தைப் பொருத்தவரையில் தடுக்கப்பட்டதுதான். சில இஸ்லாமியர்களைப்பொறுத்தவரை வேண்டுமானால் வெறும் வாய்ச்சொல்லாக சொல்லப்படலாம்

இங்கே ராஜசங்கரோடு உடன்படுகிறேன். :-)

Asif Meeran AJ

unread,
Mar 28, 2011, 7:50:06 AM3/28/11
to panb...@googlegroups.com
ராஜசங்கர் - ஓரினச் சேர்க்கை குற்றமில்லைன்னு சொல்லிட்டா என்ன செய்ய முடியும்? :))

ஜெமோ சூதானமாக இருக்க வேண்டியிருக்கும்
ப்கதர்கள் தொல்லை எல்லை மீறிப்போய்விடலாம் :-)

சென்ஷி senshe

unread,
Mar 28, 2011, 7:54:05 AM3/28/11
to panb...@googlegroups.com
அண்ணாச்சி - :)))))))))))))))))))))

நான் எழுத ஆரம்பிச்சு முடிக்கலை. நீங்க எழுதிட்டீங்க..

2011/3/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>

ராஜசங்கர் - ஓரினச் சேர்க்கை குற்றமில்லைன்னு சொல்லிட்டா என்ன செய்ய முடியும்? :))

ஜெமோ சூதானமாக இருக்க வேண்டியிருக்கும்
ப்கதர்கள் தொல்லை எல்லை மீறிப்போய்விடலாம் :-)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
- senshe

தியாகு

unread,
Mar 28, 2011, 8:10:39 AM3/28/11
to panb...@googlegroups.com
கருத்து முதல் வாத தீர்வு ஆய்வுக்கு மார்க்சியத்தையும் பயன்படுத்தும் நபர்கள் ஜொமோ பெற்ற இந்த முடிவைத்தான் குழப்பத்துடன் பெறுவார்கள்

பதில் இந்திய சூழலை மனதில் கொண்டு உலகலாளாவிய பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறது இது அது குழப்பம்

மேற்சொன்ன முரண் மற்றும் குழப்பங்கள் அடங்கிய இந்த பதிலை நந்தா லைக்கியமைக்கு
ஆச்சரியபடுகிறேன்

தியாகு

unread,
Mar 28, 2011, 8:12:54 AM3/28/11
to panb...@googlegroups.com
வாசிக்க :

விடுதலை இயக்கங்களில் நிலவுகின்ற பாலியல் வகை மாதிரிப் பாத்திரங்கள் பாலியல் வன்முறை, தொல்லைகள், நிறுவனமயமாக்கப்பட்ட தாய்மை, வீட்டு வேலைமுறையிலும் உழைப்புச் சந்தையிலும் பெண்களின் நிலை இன்னும் பல விடயங்கள் குறித்தும் அக்கறையோடு அலசுகின்ற ஏராளமான எழுத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் பலவும் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. பெண்ணிய ஆய்வுகள் இத்தகைய பிரச்சனைகளை நோக்கும் முறையையே மாற்றியமைத்திருக்கிறது.


இந்தக் கட்டுரை தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் வழக்கங்கள், அவற்றின் சமூகப் புலம் குறித்து அலசி ஆராய்ந்து விளக்கிறது. கார்ல்மார்க்சின் மதிப்பு விதி குறித்த கோட்பாட்டை ஒத்தமுறையில் ஓரினச் சேர்க்கை மற்றும் ஆண்-பெண் சேர்க்கை பால் உறவுகள் ஆராயப்படுகிறது. ஆண்-பெண் சேர்க்கை உறவுகள் பெண்களின் பாலியல் இன்ப நுகர்வு நிறைவெய்வதைப் பொருட்படுத்தாது, ஆண்களின் இன்ப நுகர்ச்சியை திருப்தி செய்யும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு கட்டுரை வருகின்றது. இதற்கு மாறாக, ஓரினச் சேர்க்கையாளரின் பாலுறவு இயக்கங்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இருவருக்குமே நிறைவு தருவதாக இருப்பது தெரிய வருகிறது. ஆதிக்கம், அதிகாரம், ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு பாலியல் அமைப்பைக் கட்டமைக்க வேண்டுமென்றால் நிலவுகின்ற ஆண்-பெண் சேர்க்கை உறவுகளின் கட்டமைப்புகளிலிருந்து விலகி புணர்ச்சியை பாலியல் நடவடிக்கையின் மையமாக வரையறுக்காத ஒரு பாலியல் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும், கட்டமைக்கப்பட வேண்டும்.


இன்னும் சொல்லப் போனால் Ann Kodrs (1971) “The myth of the viginal orgasm” மற்றும் Shese hires the hires report (1976) குறித்த தவறிய நம்பிக்கை என்ற புத்தகமும் அறிக்கையும் பெண்பாலுறவு பற்றிய முக்கிய இரண்டு ஆய்வேடுகளாய் நாம் கருத்தில் கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டுமே பெண்பாலுறவு என்ற ஒன்றை அரசியலோடு பின்னிப் பிணைத்த மனித உயிரியல் தொடர்பான ஒரு கூட்டுக் கலவையாக பாவிக்கின்றன.


சொந்த ”அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்” நிலையில் இருந்து முன்னேறி ஆண்கள் எப்படி பாலுறவு என்ற அமைப்பை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் ஷெய்ட் பல உதாரணங்கள் மூலம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாலுறவு முறையில் ஆணுடைய திருப்தியே மேலானதாக கருதப்படுகிறது என்பதை ஹெய்ட் தன்னுடைய அறிக்கையில் விளக்குகிறார். பாலுறவு முறைகளே சமுதாயத்தில் உருவாக்கப்படும் கட்சியமைப்புகள் என்று கூறும் ஹெய்ட்டினுடைய தெளிவான பார்வையே அவருடைய ஆய்விற்கு ஒரு இன்றியமையாத சிறப்பை வழங்குகிறது.


அவருடைய புத்தக தரவானது நன்முறையிலான பாலியல் செயற்பாடுகளை தெளிவாக விவாதிப்பதோடு திருமணம் ஆக்கப்படாத பாலுறவு முறையே அமைவதையே நோக்கமாக கொண்டு பிரயோகித்த போல ஆண்வழி சார்ந்த சமூகத்தின் பாதிப்போடு கூடிய நாம் பாலுறவு முறையே விரும்புவதற்கு முறையான ஒரு பாலுறவு தொடர்பான மேலும் ஒரு ஆய்வை வழங்குவதும் மறைக்கப்படும். அல்லது வெளியில் பேசப்படாத சில பாலியல் நுனுக்கங்களை வெளியே கொண்டு வருவதும் என்னுடைய நோக்கமாகும். என்னுடய இந்த முறையை இருபாலுறவின் 'சரிசம இன்பம்” என்று கருதப்படும் ஒன்றைப்பற்றி நன்றாக ஆராய்வதன் மூலம் இருபாலினரிடையே இருக்கும் சமத்துவமற்ற தன்மையை திரைவிலக்கி காட்ட விரும்புகிறேன். சல்லாபமுறை ஆண்-பெண் உறவை மட்டுமே பிரத்தியகப்படுத்தி சாட்டுப் போக்கையும் ஆண்-பெண் சேர்க்கையில் பெண் அடையும் இன்பம் இரண்டாம் தரமாக கருதப்படும் நிலையையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்ற கோட்பாடாக பரப்பி பழக்கப்படுத்தி வந்திருக்கிறது.


அதாவது ஆண்-பெண் சேர்க்கைதான் பாலுறவு முறை என்பது போலவும் அதில் மிகுதியான அன்பு இன்பம் தயக்கப்­படுவதாலும் அதுவும் ஈடுபாட்டின் இருபாலருக்குமே சமபங்கு திருப்தி கிடைப்பதாகவும் சல்லாபக் கோட்பாட்டின் படி நம்பப்படுகிறது. எனினும் இப்படிப்பட்ட பிரகடனங்கள் இருந்தாலும் உண்மையில் ஆண்-பெண் உறவென்பது சமத்துவமற்ற ஆற்றலுடன் கூடிய உறவாகவும் ஆண்களுக்கு மட்டுமே பாலுறவில் பெருமளவு இன்பம் வழங்கக் கூடிய முறையாகவும் திகழ்கிற அரங்கத்தை ஒத்ததாக இருக்கிறது.


உறவு பிணைப்பின் மூலம் ஆண்களுக்கு மட்டுமே பெருமளவு பாலின்ப பங்கை ஒதுக்கின்ற சூழலோடு பாலுறவில் பெண்கள் பொருளாதார ரிதியில் ஆண்களை சார்ந்த நிலையின் தாக்கம், ஆண்களின் வன்முறை, காழ்புணர்ச்சியோடு ஓரினச்சேர்க்கையா­ளரை பழிவாங்கும் சமூகப் போக்கு, இப்படிப் பழிவாங்குவதன் மூலம் சமமற்ற அண்-பெண் சேர்க்கை முறையை சமூகம் பாதுகாத்து வளர்க்கும் விதம் என்ன விற்றை எல்லாம் வியக்க இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் பின்னணியில் ஓரினச் சேர்க்கை பற்றியும் பார்க்கலாம். அவ்வுறவு முறைகளைப் பற்றி ஆராயலாம்.


ஓரின சேர்க்கை உறவு முறையின் படி இப்பாலுறவு முறையில் ஈடுபடும் அடுத்தவரை தங்களுடைய சக சமுதாய உறுப்பினராகவே பார்க்கும் மனோபாவத்­தோடு பாலுறவு இன்பம் சம அளவில் நுகரப்படுவதாக தெரிகிறது. இதுவே இக் கட்டுரையின் மையக் கருத்தாகும். இருப்பினும் இத்தகைய ஓரின உறவு பழக்கத்தை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்­தும் நோக்கத்தில் அப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவோர் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள். எனவே தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தைப் பரப்பும் இயக்கத்தின் இன்றியமையாமையையும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு எல்லா பெண்களுக்குமே (ஓரின அல்லது ”நேரான” உறவுப்பழக்கமுள்ள­வராக இருந்தாலும்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவாக்க விரும்புகின்றேன். இறுதியாக பாலுறவு முறை சீர்திருத்தப்பட்டு ஒரு புதிய உறவு முறை மலர வழிவகுக்கும். சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்மொழிய இருக்கின்றேன். இந்தக் கட்டுரை எப்படி ஆண் சார்ந்த சமூக உறவுமுறையை உருவாக்கியிருக்ககூடும் என்ற கேள்வியைப் பற்றி ஆராய்ந்து எடுக்கும் நோக்கம் அல்ல. இந்த ஆண் ஆதிக்க உறவுமுறைக்கு வழிவகுத்திடும் கருத்துக்களை நம்மால் யூகிக்கத்தான் முடியும்.


பெண்களை ஒடுக்கும் சூழலின் போக்கை குறித்தும் சமத்துவமற்ற நிலை என்பது ஆண்களின் அதிகார மிரட்டலா அல்லது பெண்களின் பொருளாதாரப் பலவீனத்தாலா என்பவற்றைக் குறித்தெல்லாம் அடிக்கடி பெண்ணிய வாதிகளுக்கு இடையே விவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆய்வுகள் பாலியல் இயல்பையும் பெண்ணிய வாதிகளையும் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள உதவுகிற அதேவேளையும் தற்கால சமூக யதார்த்த நிலையை மையமாகக் கொண்ட ஒரு அலசல் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமே அப்படிப்பட்ட தற்கால பாலியல் நடைமுறை மற்றும் அதனுடைய சமுதாய பின்னணி போன்றவற்றைக் குறித்து விவாதிப்பதுதான். எப்படி ஆணை மையப்படுத்துகிற ஈரினச் சேர்க்கை ஆணுக்கு எந்த முக்கியத்துவம் கொடுக்கிறது அதை சமுதாயம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறது என்பதை எல்லாம் வெறுப்புதன் தோன்றுகிறது. இந்நிலைமையின் அடிப்படையை அலசுவது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டதாகும்.



ஈரின உறவு முறைகள்:-

Shere hite (1976) சியர் ஹெய்ட்டின் அறிக்கையில் பெண் பாலுறவு குறித்த தேசிய அளவிலான கருத்தாய்வின்படி கணக்கில் எடுக்கப்பட்ட பெண்களில் 82 சத வீதத்தினர் தாம் சுய இன்பம் அனுபவிப்பதாகவும் அவர்களே 95 சதவீதம் பாலுறவு பரவச நிலையை சுலபமாக அடிக்கடி அனுபவிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ஹெய்ட்டின் கண்டுபிடிப்பின்படி பாலுறவு பரவச நிலையையும் சுய இன்பத்தையும் ஒன்றாகவே பெண்கள் கருதுகிறார்கள். சுய இன்பத்தின் பொழுது பெண்கள் பரவச நிலையை அடைகிறார்கள் என்ற உண்மை பெண்கள் பாலுறவில் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்­தாதவர்கள் என்றும் பெண்கள் பரவச நிலையை ஆற்றல் அற்றவர்கள் என்றும் நம்பப்படும் தவறான வாதத்தை இருக்கிறது. இந்த நம்பிக்கை கூற்றோடும், யூகத்தோடும் தொடங்கி மேலும் ஹெய்ட் இருபால் உறவுமுறை கூறுகளான


( Fore play Peneteration )


செயல்பாடுகள் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றது என்று விளக்குகிறார்.

ஹெய்ட்டின் அய்வின்படி 30 சாவீதப் பெண்கள் மட்டும் தான் பாலுறவு பரவச நிலையை ஆண், பெண் புணர்ச்சியின் பொழுது அடைவதாக கூறியுள்ளார்கள். அத்தோடு அப்பரவச நிலை என்பது வழக்கமாக பெரும்பாலும் பெண்ணின் கணக்கின் முயற்சிகளின் மகளிர்சத்தை தூண்ட எடுத்துக் கொள்ளப்படும் பெண்ணின் கணக்கிட்ட ஒரு துல்லியமான முயற்சியின் விளைவாகத்தான் பெண்கள் பரவச நிலை எட்ட முடிகிறது. அதிலும் குறிப்பாக இந்த தூண்டல் ஆணினுடைய பொது உறுப்பால் தூண்டப்படுவதால் மட்டுமே வழக்கமாக அடைய முடிகிறது. புணர்ச்சியின் போது ஆண் பிறப்பு உறுப்பு உள்ளே செலுத்தப்படுவதால் மட்டுமே மறைமுகமாக ஏற்படுத்தப்படும் தூண்டல் பெண்களுக்கு பரவச நிலையை உண்டாக்குவதற்கு போதுமானதாக இல்லை. (ர்வைந 1976 - 168) அதே சமயம் புணர்ச்சி ஆண்களின் பால் இன்பத்தை நல்ல முறையில் அணுகுகிறது. புணர்ச்சியின் போது ஆண் உறுப்பு பெண் மர்ம உறுப்பு சுவர்களின் உராயச் செய்வதன் மூலம் சுய இன்பத்தின் போது பெறப்படும் தூண்டல் உறுதி செய்யப்படுகிறது. எனவே வழக்கமாக ஆண்கள் புணர்ச்சியின் போது பரவச நிலையை அடைவார்கள். இது ஆண்களின் உடல் சார்ந்த உயிரியல் அமைப்பிற்கு உகந்ததாய் இருக்கிறது. இப்படி செய்வதால் எல்லா ஆண்களும் எப்பொழுதும் புணர்ச்சியின் பொழுது பரவச நிலையை அடைகிறார்கள் என்று பொருளாகாது. எடுத்துக் காட்டாக ஆண்கள் தம்முடைய விரைப்புத் தன்மையை புணர்ச்சியின் போது இழக்கலாம். இருந்தாலும் ஆண்களிடையே இந்த பாலுறவில் செயலாற்றும் திறனில் ஏற்படும் கோளாறும் சமுதாயத்தில் அதிகரிக்கப்பட்டு நிறுவனமாக்கப்பட்டுள்ள காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வருகின்ற பாலியல் முறையின் ஏற்றத் தாழ்வான நிலையால் ஏற்படுவதில்லை. அண்களுடைய பாலியல் பிரச்சனைகள் பேசிய (ஆண்மைத் தன்மையின் மேல் மலட்டுத் தன்மை, போதை மருந்து பழக்கம், மது அருந்தும் பழக்கம், பெருஞ்சோர்வு, தளர்வு நிலை) பூதாகமான பிரச்சனைகளின் விளைவாக தோன்றுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. (hite- 1981-402)


மற்ற பல்வேறு வகையான பாலுறவு வெளிப்பாடுகளை விட ஆண், பெண் புணர்ச்சி வடிவம் செலுத்துகிற ஆதிக்க நிலையும் புணர்தல் ஒன்றுதான் பாலுறவு இன்பத்தின் அடிப்படை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையும் பெண்களை ஒடுக்குகிற கோட்பாட்டையும் பாலியல் அல்லது சமுக உறவு முறைகளையும் தான் கொண்டு இருக்கிறது. ஈரினச் சேர்க்கை உறவு முறை வகுக்கப்பட்ட விதத்தின் படி ஆண்கள் விந்து வெளியேற்றலுக்கான வழியை வரையறையைச் செய்யப்பட்ட பாலுறவு முறைகளால் ஆண்கள் பாலுறுவு பரவச நிலையை பெருமளவு அடைகிறார்கள். ஆனால் அதே சமயம் மகளிர் கந்து தூண்டல் என்ற ஒன்று வெறும் பாலுறவு சல்லாப நிளையாட்டாகவே கருதப்படுகிறது. அதாவது வெறும் சாதாரண நேரம் கடத்தும் இன்ப விளையாட்டாகவே கருதப்படுகிறது. 'சல்லாப கோரிக்கை விளையாட்டு” என்ற இந்த வார்த்தையே (Fore play) பாலுறவில் அது அவ்வளவாக முக்கியம் இல்லை. உண்மையில் ஆணுறுப்பின் ஊடுதலை சுலபமாக்குவதற்காக நடத்தப்படும் ஒரு முன்கூட்டிய விளையாட்டு என்றுதான் குறிக்கிறது. இந்த இன்ப கேளிக்கை விளையாட்டைக் குறிக்கும் இந்த விளக்கம் மகளிர் கந்து தூண்டப்படும் விதத்தை மற்றும் அதன் முக்கியத்துவத்தையே பாதிக்கிறது. உதாரணமாக ஷெய்ட் கூறுவது போல புணருதல் ஒன்றுதான் பாலுறவில் முக்கிய செயலாக கருதப்படுவதில் ஆண்கள் பொதுவாக தங்கள் விறைப்புத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளவே பெரிதும் பதட்டமடைகிறார்கள். எனவே அவர்கள் புனர்வதற்கு முன்பாக நடக்க வேண்டிய மற்ற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள். அச்செயல்களுக்காக சிறிதளவு கால அளவை செலவிடுகிறார்கள்.


ஆய்விற்காக கணக்கில் எடுக்கப்பட்­டவர்களில் 45 சத வீதத்தினர் மட்டுமே சம்பந்தப்பட்ட மற்றவாpன் செய்கையின் மூலம் காமப்பரவச நிலையை உணர்ந்திருப்பதாகவும் அனால் 95 சத வீதத்தினர் இக்காமப் பரவச நிலையை சுயஇன்பத் தூண்டல் மூலமே அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. (hite – 1972-209) மேலும் பெருமளவு எண்ணிக்கையிலான ஆண்கள் சம்பந்தப்பட்ட பெண் கூட்டாளிகளுக்கு எந்தவிதமான மகளிர் கந்து தூண்டல் 'இன்பத்தையும் (Clitorolstrimutation) வழங்கவே இல்லையாம். (1976 - 212) இப்பிரச்­சனையின் அடிப்படையே பிரத்தியேகமாக அண்,பெண் சேர்க்கை மட்டும் தான். பாலுறவு முறை என்று வரையறுக்கப்பட்ட நிலைமைதான் இந்த ஆண் சமூக மூடநம்பிக்கையின் விளைவாக ஆண் காம பரவச நிலைக்கு முழு உத்திரவாதம் கொடுக்கும் ஒரு பாலுறவு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகளிர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் கந்து தூண்டல் ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போதாவது நடத்தப்படுகின்ற அல்லது எப்போதுமே நடத்தப்படாத செயலாகவும் தான் கருதப்படுகிறது.


தற்போது நடைமுறையில் உள்ள ஆண், பெண் பாலுறவு முறைக்கு இருபாலருக்குமே ஒருவருக்கொருவர் 'சம அளவில் முழு இன்பம்” வழங்கக் கூடியது என்ற நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்ய சமூக அங்கீகாரம் பெற்ற குடும்ப முறை புணர்ச்சியை உணர்த்திக காட்டுகின்ற வக்கிரமான கலாச்சார சூழலில் போன்றவற்றின் மூலம் பெரும்பாலான மககள் காலம் காலமாக பழக்கப்பட்­டிருக்கிறார்கள். ஆனால் இந்த பாலுறவு சூழ்நிலை தலைகீழாய் மாறுவதாய் கற்பனை செய்தால் அதாவது ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எப்போதாவது ஆணுறுப்புத் தூண்டப்பட்டு அதன் மூலம் பரவசநிலை அடைந்ததாகவோ அல்லது இப்பரவச நிலையை ஆண்கள் எட்டாத நிலைமை இருப்பதாகவும் அதேசமயம் பெண்கள் எப்போதுமே மகளிர் கந்து தூண்டப்பட்டு பரவசநிலையை பெரும்பாலும் அல்லது எப்போதும் அடைவதாகவும் இருந்தால், அடையும் பரவச நிலையில் இருக்கும் விகிதாசார ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் மிகவும் தெளிவாக புலப்படும் அல்லவா? ஆனால் பாலுறவில் அண்களை மேலானதாய் மதித்து பெண்களை இரண்டாம் தர அல்லது முக்கியத்துவமற்ற நிலைக்கு தள்ளுகின்ற போக்கு நம் சமுதாயத்தில் நிலவுவதால் மிகச் சிலர் மட்டுமே தற்போது நடமுறையில் உள்ள பாலுறவு பரவசநிலை ஏற்றத்தாழ்வு குறித்து அதிர்ந்து போகிறார்கள். துரதிஸ்டவசமாக பாலுறவு நனடைமுறையில் இருக்கும் இந்த ஏற்றத் தாழ்வான நிலைமை குறித்த பெரும்பாலான விவாதங்கள் வெறும் விவரித்தல் நிலைமையோடு நின்று விடுகின்றன. இத்தனை விவாதங்கள் பிரச்சனைகளை விபாpத்து பேசும் நிலையை கடந்து போவதில்லை. இந் நிலைமைக்கு காரணமே மாக்ஸின் மூலதன கொள்கைக்கு நிகரான ஒரு பரந்த ஆற்றல் வாய்ந்த பாலுறவு முறையில் சுரண்டல் நிலையை நன்கு விளக்கும் ஒரு கோட்பாட்டு வரையறை உருவாக்கப்படாததுதான். மதிப்பு ரிதியான மாக்ஸின் தொழில் கொள்கை பொருளாதாரச் சுரண்டலை மிகவும் தெளிவான வகையில் விவாதிக்க வழிவகை செய்திருக்கிறது. தொழில் ஆற்றல் என்பது அத்தகைய மதிப்பிற்கு ஏற்ற வாங்கவோ அல்லது விற்றகவோ படுகிறது. அதன் மதப்பு மற்ற விற்பனைப் பொருள்களைப் போலவே அதன் உற்பத்திக்குத் தேவையான வேலை நேரத்தைப் பொறுத்தே நிர்ணயம் செயயப்படுகிறது. ஒரு தொழிலாளியின் சராசரி தின வருமானம் ஈட்டப்படுவதற்கு ஆறுமணி நேரமானால் சராசாயாக அவன் ஆறு மணி நேரம் நிச்சயம் வேலை செய்து ஆகவேண்டும். அவனுடைய உழைப்பத்­திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு நாளில் சராசரியாக ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அவனுடைய தொழிலாற்றல் என்ற விற்பனை விளைவாகத்தான் அடைந்து நன்மையை வேறு வகையில் ஈடு கட்டி விடுகிறான். எனவே அவனுடைய வேலை நாளுக்குத் தேவையான நேரம் அறு மணிநேரம் என்று கணக்காகிறது.


எனவே வாங்கிய அளவிற்கு கொடுக்கிற சமஅளவு கொள்கையாக (Caeteris parivus) இது ஆகிறது. இந்த யுகத்தை அனுபவமாக கொண்டுதான் நாம் கிரகித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆனால் இதில் வேலை நாளில் அளவு அல்லது எந்த அளவு வேலை நாள் நீடிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வரையறை இல்லை. (1967 : 231) முதலாளித்து சமுகத்தில் தொழிலாளிகளின் உழைப்புத்திறனுக்கு பதிலாக இந்த வேலை நாளின் கால அளவு 'அடைந்து லாபம் அல்லது மதிப்பை ஈடுகட்ட தேவையான” நேரத்திற்கு மேலாக நீடிக்கப்படுகிறது. இதைத்தான் மிகுதியான இலாபத்தை முதலாளிகளுக்கு விளைவிக்கிற, உழைப்பை சுரண்டுகிற போக்காகும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மார்க்சின் இந்த மதிப்பு ரிதியான தொழில் கொள்கையைப் போன்று ஒரு கோட்பாட்டை பாலுறவு நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அலச உதவும் வகையில் உருவாக்க முடியுமா என்று நாம் இப்போழது பார்க்கலாம். உதாரணமாக ஊதியத்திற்கு தக்க வேலை என்று ஏற்படுத்துகின்ற உறவு முறையை வாங்கி வேலைத்திறனை விற்பதால் திணிக்கப்டும் சமத்துவமற்ற சமூக உறவு முறைகள் 'சுதந்திரம் மற்றும் சமத்துவம்” போன்றவற்றில் புதைக்கப்­பட்டிருப்பதை நாம் நன்கு காண முடியும். பாலுறவு பிரச்சனைகளை இந்தக் கோணத்தில் இருந்து நாம் அனுகினால் ஆண்களும் பெண்களும் கூட சுதந்திரமான சமத்துவமான உறவில் நுழைவதாக அளிக்கும்மாயத் தோற்றத்தை நம்மால் உணர முடியும். இருப்பினும் இருபால் கூடலில் கையாளப்படும் முக்கிய முறையே பெண் காம இச்சசைக்கு எதிராக அல்லது அதைப் பொருட்படுத்தாது ஆண் இச்சையத் திருப்திப்படுத்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. பாலுறவு என்பதே ஆண், பெண் புணர்ச்சியின் மூலமே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதால் பெண்களை விட ஆண்களே பெருமளவு காம இன்பத் தூண்டலை பெறுகின்றனர். உண்மையில் ஆண், பெண் பாலுறவு முறையின் படி பெரும்பாலும் அண் காமபரவச நிலையை எட்டியபின் பெண்ணின் பரவச நிலையும் முடிவுக்கு வந்தாக வேண்டும்.



எனவே ஆண், பெண் உறவு முறை ஒரே அளவு இன்பத்தை இருவரும் நுகரச் செய்யும் தன்மை உடையதாக தோன்றினாலும் உண்மையில இது ஒருவர் இன்பத்தின் அப்பாற்பட்டதேயாகும். ஆண், பெண்ணிடம் இருந்து பெற்ற காமத் தூண்டலை மிகச் சிறிய அளவில் தான் திரும்பத் தருகிறான். இதனால் பெண் பரவச நிலையை அடைவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. பெண்ணின் பாலுறவுச் செயல்கள் யாவுமே ஒரு குறிப்பிட்ட சமூக உறவுமுறையின் பின்னணியில் நிர்ப்பந்திக்கப்பட்ட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளோடு மட்டுமே இழையோக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனித்துவத்தோடு தானாக நிகளும் வெளிப்பாடு என்ற நிலையில் இருந்து விலகி ஆண், பெண் உறவு முறையானது முன்கூட்டியே சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவும் மிகவும் வரையறுக்கப்ட்ட கட்டுமானங்களோடு கூடிய ஒரு கட்பாயமாகவும் தான் இருக்கிறது.


இப்படிப்பட்ட ஈரினச்சேர்க்கையின் கூறுகளும் நிகழ்த்தப்படும் விதமும் ஆண் ஆதிக்க சமூக உறவு முறையின் பிரதிபலிப்பகளாகவே இருக்கினறன. தேனிவாகப் பார்த்தால் பாலுறவு நடைமுறையில் சமத்துவமின்மை என்பது அடிப்படையில் பெறப்படும் இன்பத்தின் சமத்துவமின்மையோடுதான் தொடர்புடைய­தாய் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக காம இன்ப அளவை தனிமனிதர்களுக்கிடையே ஒப்பிட்டு வரையறை செய்வதோ அல்லது ஒவ்வொரு தடவையும் எந்த அளவு ஆத்மதிருப்தியோடு ஒரு தனிமனிதன் காம பரவச நிலையை அடைகிறான் என்பதை அளப்பதோ மிகவும் அரிதான செயலாகும். இருப்பினும் காம பரவச நிலை (விந்து, மற்றும் மதனநீர்) ஒன்றுதான் பாலுறவில் இன்பத்தை நன்கு பார்க்க மற்றும் கணக்கிட முடியும் ஒரே வெளிப்பாடாகும். காமத்தில் இப்பரவசநிலையை இருபாலருமே எட்டமுடியும். மேலும் இப்பரவச நிலைதான் காமத்தில் அடையப்பட வேண்டிய மற்றும் விருப்ப படுகின்ற விளைவாக கருதப்படுகி­றது.


இந்தப் பின்னணியில் என்னுடைய ஆதங்கம் என்னவெனில் ஆண், பெண் கூடலில் காமப்பரவசநிலையை அடையும் திறனில் ஆண்கள் மற்றும் பெண்களுக்­கிடையே இருக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு ஆற்றலில் சமத்துவமற்ற உறவு முறையைத்தான் தெளிவாக காட்டுகிறது என்பதுதான், தரம், தன்மை போன்ற அடிப்படைகளில் பெண்கள் அண்களைவிட சிறந்த உயர்ந்த நிலையில் பரவச நிலையில் பரவசநிலை அடைகிறார்கள். இது அவர்கள் அண்களைவிட காலஅளவு விகிதாசாரத்தில் குறைந்து இருப்பதை ஈடுகட்டிவிடுகிறது என்று ஒருவர் விவாதித்தால் அன்றி மற்றப்படி உறுதியாக அண், பெண் கூடல் முறையில் அண்களின் சுரண்டல் மற்றும் அண்கள் பெண்கள் இன்பத்தை புறக்கணித்து அளவில் அதிகமாக பரவச நிலையை அடையும் நிலை போன்றவற்றை குறித்து ஒரு பெரிய முறையீடு பதிவு செய்யும் அளவற்கு இப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈரினச் சேர்க்கை உறவு முறையில் பெண்கள் ஒட்டகப்படுகின்ற கோட்பாட்டை வேறு எந்த கோட்பாட்டை பயன்படுத்தி பெண்களை விட அண்கள் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகளவு காம இன்ப பரவசநிலையை அடைகிறார்கள் என்ற எதார்த்த நிலையை கருத்தளவில் விலகிக் காட்ட முடியும்? சூழ்நிலையை பாலுறவுச் சுரண்டல் என்று கூறுவதால் மாக்சின் மதிப்புக் கொள்கையை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொருளாகாது. மதிப்பு ரிதியான மார்க்சின் தொழில் கொள்கையை வியாபாரத்தை உறவுகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் பெண் அடையும் இன்பத்தை புறக்கணித்து அதிக அளவு விகிதாசாரத்தில் அடையும் அண்பரவசநிலை என்ற ஒப்பீடு மிகவும் பயனுள்ளதாகிறது. ஏனெனில் இதன் மூலம் ஆண்களை பால் ஆதிக்க உணர்வு கொண்டவர்கள் என்று பொருட்படுத்தி காட்ட முடியும்.


ஈரினச் சேர்க்கையின் பெரும்பாலான அமைப்பு முறையினால் ஆண்கள் அடையும் ஆதாயத்தால்தான் இவர்களுக்கு இந்த ஆதிக்க போக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி அவர்கள் அடயும் ஒரு முக்கியமான இலாபம் அவர்கள் பாலுறவின் போது ஈரினச் சேர்க்கையில் பெருமளவு உடல் தூண்டல் இன்பம் பெண்களை விட அதிக அளவு அடைவதுதான். அதன் விளைவாக முன்பு சொன்னது போலவே ஆண்கள் மட்டுமே பெருமளவு காம பரவச நிலையை பெண்களை விட அடைகிறார்கள்.


பெண் அடையும் இன்பத்தை புறகணித்து சுரண்டி ஆண் அனுபவிக்கும் இந்த பரவச நிலையை காரணமாக கொண்டு அபூர்வமாக சில பெண்கள் பாலியல் மருத்துவர்களை அணுகியும் இருக்கிறார்கள். (Ress:1978 - 2) அவ்வேளைகளில் அப்பெண்கள் மனரீதியான உளைச்சலையும், எhpச்சலையும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் சார்ந்த அறிகுறிகளையும் எடுத்துக் காட்டி திருமணத்தை குறித்த தங்கள் அறிகுறியை தெரிவித்திருக்கிறார்கள். (Bornar-1971 :148 to 152) இங்கே இருண்டு முக்கிய கருத்துக்கள் கவனத்திற்குரியவை முதளில் ஈரினச்சேர்க்கை நடைமுறையில் அண் இன்று திருப்தியை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகள் கூட இல்லை. ஏனெனில் நடைமுறையில் சமூதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பாலியல் உறவு முறைகள் அண்களின் விருப்பத்­திற்கேற்ப பாலின்பம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கூட ஊக்குவிப்பதில்லை. ஆண்கள் ஒரு சீரான கால அளவில் அல்லது அடிக்கடி வாய் நுகர் இன்பம் (Fellotio) தாங்கள் பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக பரவசநிலையை அடையும் வகையில் தங்களுக்கு அந்த இன்பம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி தெரிவிப்பதாக ஹெய்ட் கண்டறிந்தார் (1981 : 538)


இதிலிருந்து ஆண்கள் வேறுபட்ட பாலின்ப வழிகளின் மூலம் இன்பம் நுகர்ந்து திருப்தி அடைகிறார்கள் என்று நன்றாக புலப்படுகிறது. மேலும் பல்வேறு அல்லது வேறுபட்ட வழிகளில் காம பரவச நிலையை அடைய பாலின்ப செயலை மாற்றுவதற்கே ஆண்கள் அடிப்படையில் விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் ஆண் குறியை மையமாக வைத்து பல்வேறு வழிகளில் உடலுறவு இன்பத்தை நுகரலாம்! ஆனால் பெண் இன்ப நெகிழ்வு அல்லது தூண்டலுக்கு பாதகமான ஆண் உடலின்ப தூண்டலை முக்கியத்துவ படுத்துகிற பாலுறவு நடைமுறைகளின் வெளிப்பாடாக உடலுறவில் பெண்ணின் இன்பத்தை இரண்டாந்தரப்படுத்தலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்பதைத்தான் அண்களின் உடலுறவு முறையை பெண்களுக்கு இன்பமளிக்கும் வகையில் மாற்ற விரும்பாத பிடிவாதமான விருப்பமின்மை உணர்த்துகிறது. இது தான் ஆண், பெண் பாலுறவு அமைப்பிலிருந்து ஆண்கள் அடையும் இலாபமாகும்.


இரண்டாவதாக காமப்பரவச நிலையும், பாலுறவில் முழு திருப்தி நிலையும் ஒன்றென்று நான் கூறவரவில்லை. ஐயமின்றி முழுமையான பாலுறவு திருப்திய­டைய மற்ற பல்வேறு கூறுகளும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பெண்கள் மிகச்சிறிய அளவில் எப்போதாவது பாலுறவு பரவசத்தை அடைகின்ற நிலைமை அவர்களது பாலுறவு அனுபவம் போதுமான அளவு மகிழ்ச்சி தருவதாய் இல்லை என்பதையும் உணர்த்துகிறது.


எனவே அதிகளவு புழக்கத்திலுள்ள ஆண், பெண் கூடலில் பெண்களுக்கும், அண்களுக்கும் அடைய வேண்டிய இலக்குகள் வெவ்வேறாய் இருக்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியை அடைந்துவிடுவதில்லை. அண்களுக்கு தங்கள் பாலின்ப வெளிப்பாட்டை அதிகப்படுத்த வேணடுமென்ற அங்கலாய்பு இருக்கலாம்! அனால் பெண்களோடு அவர்களை ஒப்பிடுகையில் அண்கள் பெருமளவில் பாலின்ப திருப்தி அடையத்தான் செய்கிறார்கள். ஆண்கள் உயிரியல் அல்லது அண் விந்து வெளியேற்றல் தேவை என்ற யதார்த்த நிலை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப உடல் இன்ப தூண்டல் வழங்கும் விதத்தில் தான் பாலுறவு என்ற ஒன்றே வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அனால் பெண்களில் பெண்களின் பாலின்பத்தை பொறுத்தவரையில் (Female Sexuality ) அது கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாகலாம். ஆண் பாலின்பத்திற்கு சுகம் சேர்க்கும் ஒர் இரண்டாந்தரம் போலதான் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அத்தோடு கூட அதிக அளவிலான ஆண் பரவசநிலை சமூகத்தில் பெருமளவு பரவியிருக்கும் ஆணை பிரத்தியகப்படுத்தும் போக்கின் பிரதிபலிப்பே அகும். உடலுறவு நடைமுறையில் இருக்கும் பாலின்ப செயல் பங்கீடு பெண்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தவரையில் தொழில் நிறுவனங்களில் பால் ரிதியான வேலை பங்கீட்டு முறையோடு ஒத்ததுதான் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆணின் பாலுறவு அல்லது பொருளாதார நிலைமையில் எவ்வளவு குறை இருந்தாலும் அல்லது அதிருப்திக­ரமான நிலையிலிருந்தாலும் பெண்களில் வாழ்நிலை அதைவிட கீழாக தாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்பதை உறதி செய்கின்றன.


இத்தோடு கட்டுரையின் இப்பிரிவின் இறுதியான மற்றொரு முக்கிய கருத்தைக் காணலாம். ஆண்கள் பெருமளவில் காமப்பரவச நிலையை எட்டுவதற்கு காரணமே அண்கள் ஈரினச் சேர்க்கையில் ஆண்சார்ந்த பாலுறவு முறையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படும் நிலைதான். இக்கருத்தை நிரூபிக்க ஆதாரம் இருப்து போல் தெரிகிறது. ஹய்ட்டின் ஆண் பாலுறவு ஆய்வில் ஆண்கள் தாங்கள் அடிக்கடி புணர்ச்சியில் இடுபட வேண்டும் என்ற சமூக கட்டாயத்தை உணர்ந்ததாக கூறினர்.


எனினும் புணர்ச்சி பாலுறவில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாலுறவில் ஆண்களின் முக்கிய செயலாக அடையாளம் காணப்படுகிறது. உடலுறவில் புணர்ச்­சியே விருப்பமாக நிகழ்த்தக்கூடியதொன்றாக வைத்துக் கொள்ளும் படி ஹய்ட் தெரிவித்த யோசனை ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களில் பலரை திடுக்கிட வைத்ததாம். எனினும் ஆய்விற்கு எடுக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையானோர் ஈரினச் சேர்க்கையில் புணர்ச்சியை விலக்கி வைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று உணர்ந்து இந்த யோசனையைப் புறக்கணித்து விட்டார். (hite– 1981 : 461 to 468). மேலும் வரையறுக்கப்பட்ட சமூக சட்டங்களால் தம்முடைய வாழ்க்கை பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆண்கள் பாலுறவில் ஆண், பெண் பங்கு குறித்து பேசக்கூடிய பெண்ணிய சிந்தனையாளர்களின் பெண்ணிய இணக்கத்தையும் அங்கீகரிக்க மறுத்தனர். அர்த்தமற்ற வகையில் அவர்கள் இவற்றை தங்களுக்கு பாதகமாக பாலுறவில் சமத்துவ நிலையை அடைய எத்தனிக்கும் பெண்ணின் முயற்சியை பெரிதும் வெகுண்டு கண்டித்தனர். (hite : 303 to 328).


இதிலிருந்து ஈரினச்சேர்க்கையில் அண்களின் இந்தச் சார்பு நிலை புழக்கத்தில் உள்ள ஈரினச் சேர்க்கை உறவு அமைப்பு முறையை பாதுகாத்துக் கொள்வதால் அவர்கள் இலாபம் அடைகிறார்கள் என்பதால்தான் தெரிகிறது.

2011/3/28 தியாகு <seewty...@gmail.com>
கருத்து முதல் வாத தீர்வு ஆய்வுக்கு மார்க்சியத்தையும் பயன்படுத்தும் நபர்கள் ஜொமோ பெற்ற இந்த முடிவைத்தான் குழப்பத்துடன் பெறுவார்கள்

தியாகு

unread,
Mar 28, 2011, 8:13:22 AM3/28/11
to panb...@googlegroups.com
எடுத்த இடம் http://aadhirah.blogspot.com/

V Ramesh

unread,
Mar 28, 2011, 9:32:41 AM3/28/11
to panb...@googlegroups.com
என்னது லைக்கியமையா ? நான் வரலை இந்த விளையாட்டுக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

2011/3/28 தியாகு <seewty...@gmail.com>
கருத்து முதல் வாத தீர்வு ஆய்வுக்கு மார்க்சியத்தையும் பயன்படுத்தும் நபர்கள் ஜொமோ பெற்ற இந்த முடிவைத்தான் குழப்பத்துடன் பெறுவார்கள்

பதில் இந்திய சூழலை மனதில் கொண்டு உலகலாளாவிய பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறது இது அது குழப்பம்

மேற்சொன்ன முரண் மற்றும் குழப்பங்கள் அடங்கிய இந்த பதிலை நந்தா லைக்கியமைக்கு
ஆச்சரியபடுகிறேன்



--
நட்புடன்
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்

தியாகு

unread,
Mar 28, 2011, 9:36:04 AM3/28/11
to panb...@googlegroups.com

பயன்மிகு புது சொற்களை உருவாக்கும் முயற்சி இது :)
2011/3/28 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Raja sankar

unread,
Mar 28, 2011, 9:53:11 AM3/28/11
to panb...@googlegroups.com
உணமையை ஒப்புகொண்டமைக்கு என்னுடைய பாராட்டுக்கள்.  :-))

இங்கு பிரச்சினை முஸ்ஸீம்கள் கடைப்பிடிக்கிறார்களா இல்லையா என்பது அல்ல. அதை எல்லாரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லும்போது தான் சிக்கலே.

ஓரினச்சேர்க்கை தவறு என்றால் அதை செய்பவர்கள் முஸ்ஸீம்களாக இருந்தாலும் ஷரியா படி தண்டனை தரப்படவேண்டும் என்பதை இந்தியாவில் கேட்க கூடாது. ஏனென்றால் மதச்சார்பற்ற நாடு அல்லவா. அதே போல் முஸ்ஸீம்களுக்கு பலதார மணம் இருப்பதை மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்துக்களுக்கு பசு புனிதம் என்பதற்காக அதை யாரும் சாப்பிடக்கூடாது என்றால் முஸ்ஸீம்கள் ஒப்புகொள்வார்களா என்ன? ஆனால் பசுவதைச்சட்டம் பல மாநிலங்களில் உள்ளது. தேவைப்பட்டால் யார் மேலாவது வழக்கு போடவேண்டும் என்றால் அது அமலுக்கு வரும். :-).

இந்த சட்ட சிக்கல் தான் பிரச்சினையே. இதிலே இன்னொரு சிக்கலும் உண்டு. மதமாற்ற தடைச்சட்டம் வேண்டாம் என்று சொல்பவர்கள், முஸ்ஸீம் மதத்தில் இருந்து ஒருவர் இன்னொரு மதம் போவதை ஒப்புகொள்வார்களா என்றால் கிடையாது என்று தான் பதில் வரும்.

18 வயதை தாண்டியவர்கள் அவர்களுடைய தனிப்பட்டவாழ்வில் யாரும் தலையிட உரிமை இல்லை என்று வரும் போது தான் இதற்கு எல்லாம் தீர்வு. பணம் வாங்கிக்கொண்டு மதம் மாறினாலும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்று இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. பலதார மணம், ஓரினச்சேர்க்கை பற்றி எல்லாம் விவாதிக்கவே வேண்டியதில்லை, தனி உரிமையில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை என்று ஒப்புக்கொண்டால்.

ஆனால் பிரச்சினை தனி உரிமையில் தலையிட அரசுக்கு/மதத்துக்கு உரிமை இருக்கிறது என்று மதவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்கிறார்கள். அதிலே சிக்கல் பெரிதாகிறது.

ராஜசங்கர்

2011/3/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Raja sankar

unread,
Mar 28, 2011, 10:01:28 AM3/28/11
to panb...@googlegroups.com
உங்களை மாதிரியான பக்தர்களின் தொல்லையா? :-)

ராஜசங்கர்



2011/3/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>
ஜெமோ சூதானமாக இருக்க வேண்டியிருக்கும்

இறைவன்

unread,
Mar 28, 2011, 11:01:48 AM3/28/11
to panb...@googlegroups.com


28 மார்ச், 2011 5:46 am அன்று, தியாகு <seewty...@gmail.com> எழுதியது:

ஒரு பால் உறவு சரியா தப்பா என்பதை சமூகம் அதன் வளர்ச்சி போக்கில் தீர்மானிக்கும் எப்படி குடும்பம் என்கிற உறவுக்கு வந்தடைய ஒரு குறிபிட்ட காலம் ஆனதோ அம்மாதிரியே ஒரு பால் உறவை ஏற்றுகொள்ளத்தக்க சமூக பொருளாதார காரணம் அமையாத வரை முடியாது

எந்த சமூகம்? காட்டுமிராண்டி சமூகமா?

"பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின் அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும். மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன் ராண்ட்

ஒருத்தன் யாருடன் படுப்பது என்பதை எல்லாம் ஒரு சமூகம் தடை செய்வது, கட்டுபடுத்துவது என வந்தால் அப்புறம் அதை நாகரிக சமுதாயமாக கருத முடியாது. காட்டுமிராண்டி சமூகமாக கருதலாம்..காட்டுமிராண்டி சமூகமாக இருப்பது குற்றமில்லை தான்.ஆனால் என்றாவது அது நாகரிகத்தை நோக்கி நகர்ந்து தானே ஆகவேண்டும்?

--
இறைவன்

நீயும் நானும் ஒண்ணு
இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பண்ணு



www.holyox.blogspot.com

ராஜசுப்ரமணியன் S

unread,
Mar 28, 2011, 8:56:51 PM3/28/11
to பண்புடன்
அடுத்து சுய இன்பம் இயற்கையானதே,அதற்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்பார்
ஒருவர்.இவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. தான் செய்வது சரி
என்று நினைக்கும் ஒருவர் எதற்காக சமூக அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்க
வேண்டும்?
ஜனநாயக் நாட்டில் நிறைய பேர் செய்வது சரி என்றும்,மிகச்சிலர் செய்வது
தவறு என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.ஒரினப் புணர்ச்சி இயற்கையானது
என்று வாதிடுவதும் அதற்கு விலங்கியலில் ஆதாரம் காட்டுவதும் நகைப்புக்கு
இடமாகும். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.எல்லாரும் ஓரினப் புணர்ச்சிக்கு
மாற்விட்டால் மனித குலம் வளர்வது எப்படி?
ராஜசுப்ரமணியன் S

On Mar 28, 12:39 pm, நந்தா <meetnan...@gmail.com> wrote:
> *ஒரு சில முரண்பாடுகள் இருந்தாலும் ஜெ.மோவின் இந்தக் கட்டுரையை ரொம்பவே
> ரசித்தேன்.*
>
> *
> *
>
> நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி
> அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில்
> ஆரம்பிக்கின்றேன்.
>
> எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற
> கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச்
> சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள்,
> அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக்
> கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் புலப்பட வில்லை. ஒருவேளை என் மனதின்
> பாரம் குறைந்தாலும் குறையலாம் (இதன் நிகழ்தகவு குறைவு தான் என்றாலும்).
>
> இப்பொழுது நான் ஓர் ஓரின சேர்க்கையாளன் என்று அறிவித்து விட்டேன் என்று
> வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரும்?
> ௧. என் நண்பர்களை இழக்க வேண்டி இருக்கும்.
> ௨. பெற்றோருக்கு புரிய வைப்பதே பெரும் பாடாக இருக்கும். நிறையக் கண்ணீர் காண
> நேரிடும். நீங்களே சொல்லுங்கள், எப்படி ஐம்பது வயதை தாண்டிய நபருக்கு,
> பெற்றோருக்கு, இதை புரிய வைப்பது !
> ௩. கல்லூரியில், அலுவலகத்தில் எல்லோரும் ‘ஒரு மாதிரி’ காண்பார்கள். விலகி
> விடுவார்கள். மதிய உணவையும், இரவு உணவையும் தனியே வெறித்துச் சாப்பிட வேண்டி
> இருக்கும்.
> ௪. உறவினர் பக்கம் தலை வைத்து படுக்க முடியாது.
> ௫. அல்லது இது மன நோய், உடற் நோய், என்று சரியாக புரிந்து கொள்ளாத
> நண்பர்களிடமிருந்தோ பெற்றோரிடமிருந்தோ ‘சிகிச்சைகள்’ பெற வேண்டி இருக்கும்.
>
> இவ்வளவு இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதால் எப்படி ஒருவன் பகிரங்கமாக
> வெளிப் படுத்த முடியும்.
> கண்டிப்பாக இன்னும் குறைந்தது பத்து வருடம் ஆகும், ஒருவன் தமிழ்நாட்டில் தான்
> ஓர் ஓரினன் என்று அறிவிப்பதற்கு.
>
> ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மிகவும் இடர்க்கையான ஒன்று, வாழ்க்கையில் திருமண
> வயதை எட்டுவது தான். பெற்றோர் உறவினர் எல்லோரும் தொடர்ந்து திருமணத்தை
> வற்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். மிகவும் சிக்கலான தீர்மானம் எடுக்க வேண்டிய
> சமயம்.
> ௧. திருமணம் செய்து கொண்டு சகித்துக் கொண்டு வாழ்தல்,
> ௨. திருமணம் செய்யாமல் தனியே, தன்னந்தனியே என்றிருத்தல்,
> ௩. திருமணம் செய்யாமல், தனக்குப் பிடித்த நபரோடு வாழ்தல்.
>
> இதில் மூன்றாவதாக இருப்பது சற்றுக் கடினம் தான்.
> முதலாவது மனதளவில் மிகக் கடினம். விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டு
> நீலகண்டனைப் போல் வாழ்வது.
> இரண்டாவது, முதலில் சற்று பயமாக, கடினமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடும்
> (என்று நினைக்கின்றேன்). ஆனால் இந்த முடிவில் என்ன நெருடல் என்றால், மற்றவரை,
> பெற்றோரை நண்பர்களை, வருத்தப் பட அல்லது இழக்கவும் நேரலாம்.
>
> இந்த சூழ்நிலைக்கான காரணம்,
> ௧. சரியாக புரிந்து கொள்ளாமலிருத்தல், மனநோய் என்று மருத்துவரிடம் காட்டல்.
> ௨. திருமணம் என்ற அமைப்பு தமிழ் நாட்டில் இன்றியமையாது இருத்தல்.
> ௩. ‘குடும்ப மரம்’ வளர வேண்டுதல்.
> ௪. ஓரினன் என்றால் ‘தப்பானவன்’ என்று முத்திரை குத்தல். (“ஓரின சேர்க்கையாளன்
> என்மனார் தவறெனக் கருதே” என்று தொல்காப்பியன் சொல்லி விட்டானா என்று
> தெரியவில்லை)
>
> ஓரின சேர்க்கையில் என்ன தவறு என்று இது வரை எனக்குப் புலப்படவில்லை.
> தங்களுக்குப் புலப்பட்டால் பகிரவும்.
>
> காலம் தந்து படித்ததற்கு,
> நன்றி
> விஜய்.
>
> ********************
>
> அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
>
> நான் அனுப்பிய சென்ற அஞ்சலைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் மிகவும்
> தன்னலமாக ஆதங்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. I lost the big picture.
>
> இந்தியாவில், தமிழகத்தில் ஓரின சேர்க்கைக்கு இன்றைய நிலைமை என்ன ?
> ஒரு பெட்டிக்குள் அடைந்து வாழ வேண்டிய வாழ்க்கை. உண்மையை மறைத்து வாழ வேண்டிய
> வாழ்க்கை. பொய்யான வாழ்க்கை. Living and crying inside a cupboard.
>
> எல்லாரிடமும் ஒரு தப்பான அபிப்ராயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்போது கூட
> section 377 அமுல் பட்ட போது என்ன நேர்ந்தது ? எவ்வளவு சர்ச்சை. இதை ஏதோ
> கலவிக்காக மட்டும் தான் என்று பார்க்கிறார்கள். காதலாகக் கண்டு கொள்வதே இல்லை.
> அனுமதித்தால் ஏதோ சாலையெல்லாம் முத்தம் கொடுத்து அசிங்கப் படுத்தி விடுவார்கள்
> என்பதுபோல் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?
>
> தங்களின் கருத்து என்ன ?
>
> நன்றி,
> விஜய்.
>
> ********************
>
> அன்புள்ள விஜய்,
>
> 1996ல் நித்ய சைதன்ய யதியைப் பார்க்கவந்த ஒருவர் அவரது பேச்சுக்கு முன் கேள்வி
> வேளையில் கிட்டத்தட்ட இந்த கேள்விகளைக் கேட்டதை நினைவுறுகிறேன். அவரது பதிலை
> ஒட்டியே நான் இப்போது யோசிக்கிறேன். அன்று அவர் கேட்ட முதன்மையான கேள்வியே
> ‘ஓரினச்சேர்க்கை’யை இந்துமதம் குற்றமாக கருதுகிறதா, விலக்குகிறதா என்றுதான்.
>
> நித்யா அதற்குச் சொன்னார். இந்து மரபைப்பொறுத்தவரை ஒழுக்கம் என்பது புனிதமானது
> அல்ல. இறைவனால் உருவாக்கப்பட்டதும் அல்ல. அது கால இடத்துக்குக் கட்டுப்பட்டது.
> ஆகவே மாறக்கூடியது. அது ஒரு சமூக நெறி மட்டுமே. அது அறம் அல்ல, ஒரு காலஇடத்தில்
> அறத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒருசில விதிகள் மட்டுமே


>
> ஆகவே, ஒழுக்கத்தைப்பற்றிப் பேசும் நூல்கள் ஸ்மிருதி எனப்பட்டன. அவை

> நிரந்தரமானவை அல்ல. அழியாத தரிசனங்களையும் தத்துவங்களையும் பற்றி பேசும்
> நூல்களே ஸ்ருதிகள். ஸ்மிருதிகள் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. நாம்


> இப்போது அம்பேத்கார் ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
>
> ஆக இதை அறப்பிரச்சினையாக எண்ணுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதாவது இதை

> தப்பா சரியா என்று எப்போதைக்குமாக வகுத்துக்கொள்ளும் விவாதத்துக்கே இந்திய
> சூழலில் இடமில்லை. இங்கே இது மதத்தின் பிரச்சினை அல்ல.
>
> அப்படியானால் இது ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. அதாவது இன்றைய காலகட்டத்தில்,
> இன்றைய சூழலில் நடைமுறைத்தளத்தில் வைத்து மட்டுமே இதைப்பற்றி நாம் பேசவேண்டும்.
> அதற்கான வரலாற்றுப்பின்னணியுடன் விவாதிக்கவேண்டும்.
>
> ஒழுக்கநெறிகள் இரு அடிப்படைகளில் உருவாக்கப்படுகின்றன.
>
>    1. சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தையும் சமூக நிறுவனங்களையும்
>    நிலைநிறுத்துவது
>    2. தனிநபர் உறவுகளை சீர்ப்படுத்தி மேலான சகவாழ்க்கையை நிலைநிறுத்துவது.
>
> இந்நோக்கில் சிறிதும் பெரிதுமான ஏராளமான ஒழுக்கநெறிகளுக்கு நாம்
> கட்டுப்பட்டுள்ளோம். ஒரு இடத்தில் வரிசையைப் பேணுவது முதல் முன்பின் தெரியாதவரை
> முகம் மலர்ச்சியுடன் எதிர்கொள்வது வரை ஒழுக்கநெறிகளே. ஒழுக்க நெறிகள் பொதுவாக
> மனிதனின் இயல்பான குணங்களான காமம், வன்முறை, சுயநலம்,பேராசை முதலியவற்றை
> கட்டுப்படுத்தக்கூடியவையாக இருக்கும்
>
> ஆனால் பாலியல் ஒழுக்கநெறிகளைப்பற்றியே நாம் அதிகமும் பேசுகிறோம். அவற்றை
> பாலியல் கட்டுப்பாடுகளாக மட்டுமே காணக்கூடிய ஒரு போக்கை பத்தொன்பதாம்
> நூற்றாண்டில் ஐரோப்பா உருவாக்கி நமக்கு அளித்தது. நவீன சமூகஉயிரியல், பரிணாம
> உயிரியலின் கொள்கைகளின்படி அந்த கோட்பாடுகள் தூக்கி வீசபட்டுவிட்டபின்னரும்
> சிந்தனையில் அவை நீடிக்கின்றன.
>
> பாலியல் ஒழுக்கநெறிகள் நம்முடைய ஆதாரமான உயிர்விசையை கட்டுப்படுத்துகின்றன.
> கட்டற்று செல்லும் பாலியல் விசையையே இயற்கை நமக்கு அளித்துள்ளது. எல்லா
> உயிர்களிலும் பாலுறவு என்பது தீவிரமான போட்டி வழியாக தகுதியானவை மட்டும்
> இனப்பெருக்கம் நிகழ்த்துவதாகவே உள்ளது. அதற்கான வன்முறை அங்கே நிகழ்ந்துகொண்டே
> உள்ளது. மனித இனம் பாலுறவு மீதான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் வழியாக பாலுறவில்
> இருக்கும் வன்முறைப்போட்டியை மெல்லமெல்ல இல்லாமலாக்கி கொண்டது.
>
> அத்துடன் நிரந்தரமான குடும்பம் என்ற அமைப்பை மனித இனம் உருவாக்கிக் கொண்டது.
> இது குழந்தைகளின் இளமைப்பருவத்தை நீட்டித்தது. அதன் விளைவாக கல்விப்பருவம்
> நீட்டிக்கப்பட்டது. பண்புக்கூறுகள், சிந்தனைகள் முதலியவை தொகுக்கப்பட்டு அடுத்த
> தலைமுறைக்கு கையளிக்கப்பட இது வழியமைத்தது.
>
> ஒழுக்கநெறிகள் மனிதனை வெற்றிகரமாக சமூகங்களாக தொகுத்தன. அதன் மூலமே
> மனிதகுலத்தின் பெரும் பண்பாட்டுப்பாய்ச்சல்கள் சாத்தியமாயின. மானுட இனத்தின்
> பரிணாம வரலாற்றில் ஒழுக்கம் என்பது அது கண்டுபிடித்த ஒரு முக்கியமான ஒரு கருவி.
> அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒழுக்கம் பெருமளவுக்கு பங்களிப்பாற்றி


> இருக்கிறது.
>

> அகவே ஒழுக்க நெறிகளை எதிர்மறையானவையாக பார்க்காமல் பயனுள்ளவையாக,
> தவிர்க்கமுடியாதவையாக பார்க்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
>
> ஆனால் ஒழுக்க நெறிகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை
> உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச்சூழலும் பல்வேறுபட்டவை. அவை
> சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த
> சமூகப்பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை.
> இதுவே ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை
>
> ஒரு நல்ல சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகளை மாற்றுவதற்காக அந்தச்
> சமூகத்தின் தீவிரமான ஒரு பகுதியினர் எப்போதும் முயன்றபடியே இருப்பார்கள் என
> நான் நினைக்கிறேன். ஏனென்றால் எப்போதுமே எச்சமூகத்திலும் அதன்
> ஒழுக்கபிரக்ஞ்ஞையில் ஒரு பகுதி காலாவதியான விஷயங்களால் ஆனதாகவே இருக்கும்.
>
> நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பழங்குடி மனநிலை கொஞ்சம் நீடிக்கும்.
> முதலாளித்துவ காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ மனநிலை நீடிக்கும். அது இயல்பு.
> அந்த பழைய அம்சங்களை களையவும் புதிய சூழலுக்கேற்ப புதிய ஓழுக்கங்களை
> உருவாக்கவும் ஒரு சாரார் போராடத்தான் வேண்டும்.
>
> இந்த பின்புலத்தில் உங்கள் கேள்விக்கு வருகிறேன்
>
> நம்முடைய சமூகம் இன்று நடைமுறையில் முதலாளித்துவத்திற்கும்
> நிலப்பிரபுத்துவத்திற்கும் நடுவே உள்ளது. நம்முடைய மனமோ பெரும்பாலும்
> நிலப்பிரபுத்துவ ஒழுக்கங்களால் ஆனதாக உள்ளது.
>
> நிலப்பிரபுத்துவம்முதலாளித்துவம் இரண்டுக்கும் நடுவே அடிப்படையான ஒரு வேறுபாடு
> உள்ளது. நிலப்பிரபுத்துவம் மனிதர்களை அவர்களின் பொதுத்தன்மைகளின் அடிப்படையில்
> தொகுக்க முயன்றது. பொதுவான அளவுகோல்களே அனைவருக்கும் போடப்பட்டன.
> பொதுமைப்படுத்துவதன் மூலம் உருவாகும் ஒழுக்கவிதிகளும் நடைமுறைகளுமே
> அனைவருக்கும் அளிக்கப்பட்டன. மனிதனை அது சமூகத்தின் ஒரு அலகு மட்டுமாக
> பார்க்கிறது. தனித்தன்மைகள், தனிவிருப்புகள் பொருட்படுத்தப்படுவதில்லை.
>
> ஊரோடு ஒத்துவாழ் என்ற சொல்லே அதன் நெறிகளின் அடிப்படை. நிலப்பிரபுத்துவத்தின்
> எல்லா நெறிகளுமே மிகப்பொதுவாக வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு ஆண் இப்படி
> இருக்கவேண்டும், ஒரு பெண் இப்படி இருக்கவேண்டும், தந்தை இப்படி இருக்கவேண்டும்,
> ஆசிரியர் இப்படி இருக்கவேண்டும் என அது முற்றாக வகுத்துரைக்கிறது. அதில்
> அடங்காத தனித்தன்மைகளை எல்லாம் அது மீறல்களாகவே பார்க்கிறது. அங்கே தனிமனிதன்
> இல்லை, சமூகப்பாத்திரங்களே உள்ளன.
>
> இன்று தமிழகத்தில் வீட்டுமனை விற்பனையாளர்களிடம் கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள்.
> கிராமங்களுக்குள் உள்ள நிலங்களுக்கு விலை இல்லை. கிராமத்துக்கு வெளியே
> பொட்டல்களில் உருவாக்கப்படும் மனைகளுக்கே மதிப்பு. ஏன்? கிராமங்களுக்குள்
> வாழ்ந்தோமென்றால் கிராமக்கட்டுப்பாடுகளுக்கு அடங்கிச்செல்லவேண்டியிருக்கும்.
> அங்கே தனிமனித ரசனைக்கும் சுதந்திரத்துக்கும் இடமே இல்லை. அதாவது அங்கே
> நிலப்பிரபுத்துவம் உள்ளது. வெளியே உள்ள ‘நகர்’களில் முதலாளித்துவம் உருவாக்கிக்
> கொள்ளப்படுகிறது.
>
> முதலாளித்துவம் அந்த பொதுமைப்படுத்தலுக்குள் உள்ள தனிக்கூறுகளை கணக்கில்
> கொள்கிறது. அதில் தனிமனிதன் இருக்கிறான். அவனுடைய தனித்தன்மை
> அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனித்தன்மைக்குரிய சுதந்திரத்தை அவன்
> பொதுவான சமூக அமைப்புக்கு ஊறு விளைவிக்காமல் அடையலாம் என்று அது அனுமதிக்கிறது.
>
> இந்த எண்ணங்களும் , இந்த உரிமைகளும் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை வெறும் ஐம்பது
> வருடங்களில் அடையப்பெற்றவை என்பதை நாம் இப்போது உணர்வதில்லை. புதுமைப்பித்தன்
> முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துக்களில் இந்த
> உரிமைகளுக்காக வேகத்துடன் பேசியிருக்கிறார்கள். கல்யாணி என்ற புதுமைப்பித்தன்
> கதையை இன்று வாசித்தால் அந்த சிக்கலே ஆச்சரியமூட்டும். ஒரு சுதந்திர வாழ்க்கையை
> ஏன் கல்யாணி உதறுகிறள்? அவள் ஒரு தனி ஆளுமை, அவளுக்கென ஒரு மனமும் வாழ்க்கையும்
> இருக்கலாமென அவளுக்கே தெரியாது. சமூகம் பற்றித்தான் அவளுக்கு கவலை.
>
> ஜெயகாந்தனின் முழுப் போராட்டமும் தனிமனித ஆளுமைக்காகவே என்றால் அது மிகையல்ல.
> ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ போன்ற அவரது தலைப்புகள்
> வழியாக சென்றாலே போதும், ஒரு சித்திரம் கிடைத்துவிடும்
>
> முதலில் சமூகத்தில் உள்ள அத்தனைபேருக்கும் அவர்களின் தனித்தன்மையை அவர்களே
> உணரச்செய்வதாக, அவர்களை தனிமனிதர்களாக அறியச்செய்வதாக இச்சிந்தனைகள்
> செயல்பட்டன. அதன் பின்னரே அச்சமூகத்தின் சற்றே வித்தியாசமான உறுப்பினர்களின்
> உரிமைகள் பற்றிய பிரக்ஞை உருவாகியது
>
> நம் சமூகத்தில் ஐம்பதுகள் வரைக்கும்கூட பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை
> வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப்பற்றிய
> பிரக்ஞை வந்து இருபது வருடங்கள்கூட ஆகவில்லை. திருநங்கைகளுக்கான உரிமைகள்
> பற்றிய பேச்சுக்கள் உருவாகி பத்து வருடங்கள்கூட ஆகவில்லை.
>
> இன்னமும் கூட இந்த உரிமைப்பிரக்ஞைகள் நம் கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை.
> ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியான பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் மெல்லமெல்லத்தான்
> அது சென்று சேரும். சமூகமாற்றங்கள் எப்போதும் பலபடிகளாக மெதுவாகவே
> நிகழமுடியும். ஏனென்றால் அவை பல லட்சம் மனிதர்களின் சிந்தனைகள், உணர்ச்சிகள்,
> பழக்கவழக்கங்களுடன் தொடர்புள்ளவை.
>
> இந்த உரிமைக்குரல்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுப்புவதற்கு நெடுநாட்களுக்கு
> முன்னரே இலக்கியத்தில் அவை அழுத்தமாக பதிவாகியிருப்பதை காணலாம். உதாரணமாக
> தமிழிலக்கியத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிகளை உண்மையின் தீவிரத்துடன்
> பதிவுசெய்து அதை ஒரு மானுடப்பிரச்சினையாக காணச்செய்தவர் கி.ராஜநாராயணன்.


>
> இந்த வகையில்தான் ஓரினப்புனர்ச்சியாளர்களின் உரிமைகளைப்பற்றிய பிரக்ஞையும்
> வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனித்தன்மை கொண்ட பிரிவினர். அவர்களின் உரிமைகள்
> காக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாகி பண்பாட்டுத்தளங்களில் வலுப்பெற்று
> மக்கள்மனத்தில் நிலைபெற்று சமூகமாற்றமாக ஆக கொஞ்ச காலம் பிடிக்கும். இங்கே
> இன்னும் அது ஆரம்பிக்கப்படவே இல்லை.
>
> இங்கே அதற்குச் சாதகமாக உள்ள அம்சம் என்னவென்றால் சாராம்சத்தில் இந்து மதம்

> அதற்கு எதிரானது அல்ல என்பதே. அதன் பல்வேறு பிரிவினர் தனிப்பட்ட எதிர்ப்புகளை


> தெரிவிக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்புகளை வெல்வதற்கான எல்லா ஆதாரங்களையும்
> இந்துமதமே அளிக்கிறது. நிறுவன மதத்தின் எதிர்ப்பு இவ்விஷயத்தில் நிகழாது.
> திருநங்கைகளின் விஷயத்தில் இன்று உலகிலுள்ள பல நாடுகளில் நிறுவன மதங்கள்
> அளிக்கும் எதிர்ப்பை பார்க்கையில் இந்தியாவில் அந்த மாற்றம் சுமுகமாக நிகழ்வதை
> எவரும் காணமுடியும்.
>

> ஒருபால்புணர்ச்சியாளர்களைப்பற்றிய உங்கள் வருத்தங்களைப்பற்றி என் கருத்தைச்
> சொல்கிறேன்….
>
> பழங்குடிச்சமூகங்களிலும் அவற்றில் இருந்து நிலப்பிரபுத்துவச் சமூகங்களிலும்
> வேரூன்றிய ஒரு கருத்துநிலை ஆண்மை என்பது. வீரம் என்பதுடன் அது நேரடியாக தொடர்பு
> படுத்தப்பட்டுள்ளது. நம் பண்டைய இலக்கியங்களில் ஆண்மை என்ற சொல் எப்படியெல்லாம்
> கையாளப்பட்டுள்ளது என்பதைக் கண்டால் அது விளங்கும். அச்சொல்லுக்கு , கௌரவம்,
> நிமிர்வு என பல அர்த்தங்கள்.
>
> போராலேயே நிறுவபப்ட்டு வளர்ந்த அச்சமூகங்கள் உடல்சார்ந்த, வன்முறைசார்ந்த
> வீரத்தை மைய விழுமியமாக போற்றியதில் ஆச்சரியமில்லை. அப்படி ஒருவிழுமியம்
> இருந்தால்தான் வீரர்கள் உருவாவார்கள். சமூகத்துக்காக போர்முனைகளில் சாவார்கள்.
> இன்றும் நம் மொழியிலும் ஆழ்மனதிலும் அவ்விழுமியம் இருக்கத்தான் செய்கிறது.
> இன்று வீரர்கள் விளையாடுகிறர்கள், சினிமாவில் நடிக்கிறார்கள்.
>
> ஆண்மைக்கு எதிரானவை, ஒவ்வாதவை என்பதனாலேயே ஓரினச்சேர்க்கை, மூன்றாம்பாலினம்
> போன்றவற்றின் மேல் சமூகம் இழிவான நோக்கை உருவாக்கிக் கொண்டது.
> போர்ச்சமூகங்களில் அந்த துருவப்படுத்தல் இன்னும் தீவிரமாக இருக்கும். பேடி,
> பொண்ணன் போன்ற சொற்கள் வசைச்சொற்களாகவே சமூக மனதில் ஊறின.
>
> அந்த வெறுப்பையும் நிராகரிப்பையும் தப்புசரி என்று பார்ப்பதை விட நேற்றைய
> போர்ச்சமூகத்திற்கு தேவை என்பதனால் அது உருவாக்கிக்கொண்ட ஒரு விழுமியம் என்று
> பார்ப்பதே சரியானது. அன்று உருவாக்கிக்கொண்ட எத்தனையோ கருவிகள் இன்று
> அருங்காட்சியகத்தில் உள்ளன. கருத்துக்களும் அப்படித்தான். அவை அப்படிப்பட்ட
> கருத்துக்கள்.
>
> மூன்றாம்பாலினத்தை பொறுத்தவரை அது சம்பந்தப்பட்டவரின் பிழை அல்ல என்ற எண்ணம்
> சமூகத்தில் உள்ளது. ஒருபால்புணர்ச்சிக்கு அந்தச் சலுகை இல்லை. அது அந்தத்
> தனிநபரின் கோணலானரசனை என்ற எண்ணம் இருந்தது, இருக்கிறது. அது இயற்கைக்கு
> மாறானது என்று நம்பப்படுகிறது.
>
> ஒருபால் புணர்ச்சிக்கான உந்துதல் என்பது இயற்கையானது, எல்லா உயிர்களிலும்
> காணப்படுவது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு முப்பது வருடங்கள்கூட
> ஆகவில்லை. ஐரோப்பாவில் அதற்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டபோதுகூட அது
> தனிமனித உரிமை என்றுதான் பார்க்கப்பட்டதே ஒழிய அதுவும் ஒருவகையில் இயற்கையானது
> என்பதனால் அல்ல. எழுபதுகளில்தான் பல்வேறு விலங்கியல், சமூகஉயிரியல்
> ஆய்வுகள்மூலம் அதுவும் இயற்கையானதே என நிறுவப்பட்டது.
>
> எண்பதுகளின் இறுதியில்தான் இதுசார்ந்த சில பேச்சுக்கள் இந்தியச்சூழலில்
> உருவாயின. எண்பத்தெட்டில் இந்த விஷயம் சார்ந்து மனித உரிமைக்கழகத்துக்கு
> அளிக்கப்பட்ட ஒரு மாபெரும் மனுவில் நானும் கையெழுத்திட்டிருந்தேன். இந்த விஷயம்
> சார்ந்து பொது ஊடகங்களில் இன்னும் விரிவான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.
>
> பல்வேறு மதங்களின் கலவையாக உள்ள இந்தியா இந்த விஷயத்தில் சட்டபூர்வமாக ஒரு
> நிலைப்பாடு எடுக்கக் கொஞ்சம் தாமதிக்கும் என்றே நினைக்கிறேன். இஸ்லாமிய சமூகம்


> மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் ஒன்றை இந்திய அரசு எளிதில் சட்டமாக
> ஆக்கிவிடமுடியாது. ஆனாலும் அது நிகழும் என்பதில் ஐயமில்லை.
>

> ஓரினப்புணர்ச்சியாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் பேணப்படுவதும் அவர்கள்
> சமூகத்தின் இயல்பான உறுப்பினர்களாக ஆவதும் படிப்படியாக சாத்தியமாகக்கூடிய
> ஒன்றே.
>
> கடைசியாக உங்கள் தனிப்பட்ட பிரச்சினை பற்றி..
>
> ஒரு அற்பமான விஷயத்தைச் சொல்கிறேனே. நான் இப்போது முழுநேர எழுத்தாளன்.
> நாள்முழுக்க வீட்டில் இருக்கிறேன். என் மனைவி வேலைக்குச் செல்கிறாள். இது என்
> சூழலில் உருவாக்கும் குழப்பத்தையும் சங்கடத்தையும் கிண்டலையும் சொன்னால்
> நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
>
> நான் வீட்டில் எரிவாயு வாங்கி வைக்கிறேன். பால் வாங்கி வைக்கிறேன். வீட்டை
> கூட்டுகிறேன். துணி துவைக்கிறேன். என் மகளுக்கு ஏதாவது சமைக்கிறேன். இவை
> பெண்களுக்குரிய செயல்கள். ஆகவே என்னை ஆணுக்கு உகக்காத ஒன்றைச் செய்பவனாக
> நினைக்கிறார்கள். கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய ஒன்றாக நினைக்கிறார்கள்.
>
> தெருவில் துணி இஸ்திரி போடுபவர், நாளிதழ் போடுபவர் முதல் பக்கத்து
> வீட்டுக்காரர் வரை கிண்டலாக ஏதேனும் சொல்கிறார்கள். நான் என் மனைவியை விட ஐந்து
> மடங்கு சம்பாதிப்பவன் என்று தெரிந்தவர்களுக்கும்கூட இது சங்கடமாக இருக்கிறது.
> இன்றும்கூட துணி துவைக்கும், வீட்டில் இருக்கும் கணவனைப்பறிய
> நகைச்சுவைத்துணுக்குகள் ஆனந்தவிகடனில் வந்துகொண்டுதான் உள்ளன.
>
> என் மனைவிக்கே சங்கடம். நான் ஒருமாதமாக வீட்டில் இருந்தால் எங்காவது
> கிளம்பிப்போ, வேலைக்கு போயிருக்கிறார் என்று பக்கத்துவீட்டில் சொல்கிறேன்
> என்கிறாள்.
>
> இந்த விஷயத்திலேயே இப்படி என்றால் உங்கள் விஷயத்தில் எவ்வளவு பிரச்சினைகள்
> இருக்கும். அப்பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள இரு வழிகள் உள்ளன. ஒன்று அதை
> வெளிப்படையாக வைப்பது. அந்த உரிமைகளுக்காக போராடுவது. உங்கள் வாழ்க்கையை
> உங்களைப்போன்றவர்களின் உரிமைக்கான போராட்டமாக ஆக்கிக் கொள்வது. அப்படி
> ஆக்கிக்கொள்பவர்களே சமூகத்தை முன்னெடுக்கிறார்கள்.
>
> ஆனால் அந்த வாழ்க்கையில் தியாகம் மட்டுமே உண்டு. அபாரமான மனபலம் இல்லாமல் அதைத்
> தேர்ந்தெடுக்க முடியாது. இழப்புகளுக்காகத் தயாராக இல்லாமல் அவ்வழி
> செல்லமுடியாது
>
> எஞ்சும் ஒரேவழி இந்தச்சூழல் உங்களுக்காக மாறும் வரை உங்கள் தனி வாழ்க்கையை
> ரகசியமாக வைத்திருப்பதே. எப்போதும் நம் சமூகத்தில் உங்களைப்போன்றவர்கள்
> அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வேறு வழியே இல்லை
>
> நம் சமூகத்தில் ஏதேனும் வகையில் தனித்தன்மை உள்ள மனிதர்கள்
> தங்களைப்போன்றவர்களுடன் இணைந்து ஒரு உபசமூகமாக ஆகித் தங்களுக்குள் வாழ
> ஆரம்பிக்கிறார்கள். அதையே உங்களுக்கும் சொல்வேன். அதை ஒரு இழிநிலையாக,
> தண்டனையாக அல்லாமல் ஒரு வாய்ப்பாக, தவிர்க்கமுடியாத ஒரு வழியாக நினைத்தால்
> போதுமானது
>
> ஜெ

வில்லன் .

unread,
Mar 28, 2011, 10:27:28 PM3/28/11
to panb...@googlegroups.com
ஓஹ் காட் சுய இன்பத்திற்கு சட்ட அங்கிகாரம் கிடைக்கலையா இன்னும்.

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--
இப்படிக்கு

"ஸ்ரீ"

"கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும்,
புதுமையான தமிழகம் உருவாக வாக்களிப்பீர்
முரசு சின்னத்திற்க்கு"

செல்வன்

unread,
Mar 28, 2011, 10:29:20 PM3/28/11
to panb...@googlegroups.com


28 மார்ச், 2011 7:56 pm அன்று, ராஜசுப்ரமணியன் S <subrama...@gmail.com> எழுதியது:

அடுத்து சுய இன்பம் இயற்கையானதே,அதற்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்பார்
ஒருவர்.இவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. தான் செய்வது சரி
என்று நினைக்கும் ஒருவர் எதற்காக சமூக அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்க
வேண்டும்?

அப்புறம் சுய இன்பத்தையும் தடை செய்ய வேண்டும் என்கிறீர்களா? எனக்கு மயக்கமே வருது:-)

தற்போதைய சட்டப்படி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் போலிஸ் கைது செய்யும்.அதை மாற்ற சொல்லிதான் ஓரினசேர்க்கையாளர்கள் கேட்கிறார்கள். அதை தவிர ஓரினசேர்க்கையாளன் என்பதால் ஒருவனை வெறுத்து ஒதுக்குவதோ, பணியிடத்தில் டிஸ்க்ரிமினேட் செய்யாமலோ இருக்கவேண்டும்..இதுக்கு தான் அங்கீகாரம் கேட்கிறார்களே ஒழிய அவர்களை யாரும் விழா எடுத்து போற்றி கொண்டாடி அங்கீகாரம் தர சொல்லி கேட்கவில்லை


ஜனநாயக் நாட்டில் நிறைய பேர் செய்வது சரி என்றும்,மிகச்சிலர் செய்வது
தவறு என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.

அது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது.உதாரணத்துக்கு இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள்.பார்சிகள்,யூதர்கள் சிறுபான்மையினர்..சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மதத்தை தடுத்துவிடலாமா?


ஒரினப் புணர்ச்சி இயற்கையானது
என்று வாதிடுவதும் அதற்கு விலங்கியலில் ஆதாரம் காட்டுவதும் நகைப்புக்கு
இடமாகும்.

ஆதாரத்தை காட்டுவதில் நகைப்புக்கு என்ன இடம் இருக்கு என தெரியவில்லை.மனிதனுக்கு எதாவது மருந்தை கொடுக்கவேண்டுமெனில் மிருகங்களுக்கு தந்து சோதனை செய்துவிட்டு தான் கொடுக்கிறார்கள்.அறிவியலில் இது இயல்பானதே


கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.எல்லாரும் ஓரினப் புணர்ச்சிக்கு
மாற்விட்டால் மனித குலம் வளர்வது எப்படி?

எல்லோரும் ஓரினசேர்க்கைக்கு எப்படி மாறுவார்கள்? ஓரினசேர்க்கை குற்ரமல்ல் என சட்டம் வந்தால் அதன்பின்னும் உலகில் நூற்றுக்கு 99% மாற்றுபாலினத்துடன் தான் புணர்ந்து பிள்ளைகளை பெறுவார்கள்.ஒரு 1 அல்லது 2% சட்டம் இருக்கா இல்லையா என்பதை பற்றி கவலைபடாமல் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு கொண்டுதான் இருப்பார்கள்.

--
செல்வன்

Raja sankar

unread,
Mar 28, 2011, 11:43:13 PM3/28/11
to panb...@googlegroups.com


ராஜசங்கர்



2011/3/29 வில்லன் . <vom...@gmail.com>
361.gif

Raja sankar

unread,
Mar 28, 2011, 11:45:17 PM3/28/11
to panb...@googlegroups.com
//இதுக்கு தான் அங்கீகாரம் கேட்கிறார்களே ஒழிய அவர்களை யாரும் விழா எடுத்து போற்றி கொண்டாடி அங்கீகாரம் தர சொல்லி கேட்கவில்லை


சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மதத்தை தடுத்துவிடலாமா?
ஆதாரத்தை காட்டுவதில் நகைப்புக்கு என்ன இடம் இருக்கு என தெரியவில்லை.மனிதனுக்கு எதாவது மருந்தை கொடுக்கவேண்டுமெனில் மிருகங்களுக்கு தந்து சோதனை செய்துவிட்டு தான் கொடுக்கிறார்கள்.

ஒரு 1 அல்லது 2% சட்டம் இருக்கா இல்லையா என்பதை பற்றி கவலைபடாமல் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு கொண்டுதான் இருப்பார்கள்.

//




ராஜசங்கர்



2011/3/29 செல்வன் <hol...@gmail.com>

sadayan sabu

unread,
Mar 28, 2011, 11:54:37 PM3/28/11
to panb...@googlegroups.com

Flash News
 
இன்றைய express  முதல் பக்கத்தில் காந்திஜி ஓரின சேர்க்கையாளர் என செய்தி வந்துள்ளது.

Raja sankar

unread,
Mar 29, 2011, 1:09:27 AM3/29/11
to panb...@googlegroups.com
அதை நல்லா படிங்க.

இருபால் சேர்கையாளராக இருக்கலாம் என அவர் எழுதிய கடிதங்களை வைத்து ஊகம் செய்துள்ளார்கள். அவர் அந்த கடிதங்களை அவருடைய நண்பரும் சக சத்யாகிரயும் ஆன ஹெர்மன் கேலென்பாச் க்கு எழுதியுள்ளார்.

அது என்ன கடிதம்மின்னு கிடைச்சா இங்க சுட்டு போடுறேன்.

ராஜசங்கர்

2011/3/29 sadayan sabu <sadaya...@gmail.com>

நந்தா

unread,
Mar 29, 2011, 2:13:27 AM3/29/11
to panb...@googlegroups.com
ராஜ சுப்பிரமணியனிற்கு நான் சொல்ல வேண்டிய பதில்களை செல்வன் அவர்கள் சொல்லி விட்டார். 

ராஜ சுப்பிரமணியனின் வாதத்தை முற்றிலும் தவறு என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.

Asif Meeran AJ

unread,
Mar 29, 2011, 3:13:41 AM3/29/11
to panb...@googlegroups.com
உணமையை ஒப்புகொண்டமைக்கு என்னுடைய பாராட்டுக்கள்.  :-))

உண்மையை உண்மைன்னு சொல்றதுக்குக் கூடபாராட்டுகள் தேவைப்படுது இப்பல்லாம் :-)
 
இங்கு பிரச்சினை முஸ்ஸீம்கள் கடைப்பிடிக்கிறார்களா இல்லையா என்பது அல்ல. அதை எல்லாரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லும்போது தான் சிக்கலே.

முஸ்லீம்கள் ஓரினச்சேர்க்கையிலீடுபடுவதைத்தான் திருக்குரான் எதிர்க்கிறது
செல்வனுக்கெல்லாம் எதிர்ப்பைச் சொல்வதில்லை :-))
 
ஓரினச்சேர்க்கை தவறு என்றால் அதை செய்பவர்கள் முஸ்ஸீம்களாக இருந்தாலும் ஷரியா படி தண்டனை தரப்படவேண்டும் என்பதை இந்தியாவில் கேட்க கூடாது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை குறித்து குர் ஆன் ஏதும்சொல்லவில்லை
அது ஓர் இழிவான் செயல் என்று மட்டுமே சுட்டுகிறது

இந்த சட்ட சிக்கல் தான் பிரச்சினையே. இதிலே இன்னொரு சிக்கலும் உண்டு. மதமாற்ற தடைச்சட்டம் வேண்டாம் என்று சொல்பவர்கள், முஸ்ஸீம் மதத்தில் இருந்து ஒருவர் இன்னொரு மதம் போவதை ஒப்புகொள்வார்களா என்றால் கிடையாது என்று தான் பதில் வரும்.

நீங்கள் அடிப்ப்டைவாதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள் ராஜாசங்கர்
முஸ்லீம் மதத்தை விட்டுப் போனவர்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களின் கூற்றாக இருந்தாலும் அப்படிப் போகிறவர்களை எவரால் தடுக்க முடிந்திருக்கிறது?

Raja sankar

unread,
Mar 29, 2011, 4:59:28 AM3/29/11
to panb...@googlegroups.com
முஸ்ஸீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் ஓரினச்சேர்க்கை பற்றி பேசிவிட முடியுமா? தெரிந்தாலே மரண தண்டனை தான். வேண்டுமென்றால் ஓ.ஐ.சியில் இருக்கும் 57 நாடுகளில் சட்டங்களையும் பாருங்கள். குரான் மட்டும் தான் ஷரியாவா??

சரி, ஒரு ஓரினச்சேர்க்கையாளர் முஸ்ஸீமாக இருந்துவிட்டு மதம் மாறிவிடலாம் என்றால் அதுவும் முடியாது. எந்த ஒரு முஸ்ஸீமாவது, இஸ்ஸாத்தில் இருந்து வேறு ஒரு மதம் போவதோ அல்லது கடவுள் இல்லை என்று சொல்லுவது சரி என்றோ சொல்லிவிட முடியுமா?

முஸ்ஸீம்கள் மதம் மாறுவது தனிமனித உரிமையை பாதுகாக்கும் மேலைநாடுகளில் தான் நடக்கிறதே தவிர, இந்தியாவிலோ, வளைகுடா நாடுகளிலோ கிடையாது. மலேசியாவில் முஸ்ஸீம் என்று தவறுதலாக அரசாங்க பதிவுகளில் பதியப்பட்டாலும் அவர் முஸ்ஸீமாகத்தான் வாழ்ந்தாகவேண்டும். இதை செய்பவர்கள் மதவாதிகள் மட்டுமா? மதம் மாறுவது சரி என்று சொல்லக்கூடியது ஒரு முஸ்ஸீமை காட்டுங்கள் பார்க்கலாம். தமிழ் வலையுலகில் கொண்டாடப்பட்ட ஜாகிர் நாயக் போன்ற ஆசாமிகள் முஸ்ஸீம் மதம் மாறினால் மரணதண்டனை அளிப்பது சரியே என்று பேசியிருக்கிறார்கள்.

சிறுபானமையாக இருக்கும்போது மதச்சார்பின்மை, தனிமனித உரிமை என்றெல்லாம் பேசும் முஸ்ஸீம்கள், அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகள் நடைபெறும் அக்கிரமங்களை கண்டுக்கொள்ளாமல் விடும்போதுதான் எல்லாரையும் பொதுமைப்படுத்தவேண்டியிருக்கிறது. முஸ்ஸீம்களின் உரிமைகளை பறிக்கிறார்கள் என இஸ்ரேலுக்கு எதிராக இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தும்போது மலேசியாவில் இந்துக்கள் படும் துயரம் பற்றி பேசக்கூடாதா?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால், காக்கி டவுசரை போட்டு கையில் ஒரு கம்ப குடுத்து நேரா ஆர். எஸ். எஸ் ஷாகவுக்கு கொண்டு விட்டு நீ இருக்க வேண்டிய இடம் இதுதான் சொல்றாய்ங்க.

ராஜசங்கர்

2011/3/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
361.gif

VJagadeesh

unread,
Mar 29, 2011, 4:58:02 AM3/29/11
to panb...@googlegroups.com

சென்னையிலே ஆர் எஸ் எஸ் அலுவலகம் எங்கே இருக்கு?

image001.gif

V Ramesh

unread,
Mar 29, 2011, 7:20:26 AM3/29/11
to panb...@googlegroups.com
இதுக்கு அங்கீகாரம் வேற தேவையா ? அப்போ புடிச்சிட்டு போயிடுவாங்களா என்ன ?

2011/3/29 Raja sankar <errajasa...@gmail.com>
--
நட்புடன்
ரமேஷ் 
361.gif

தியாகு

unread,
Mar 29, 2011, 9:28:03 AM3/29/11
to panb...@googlegroups.com
இஸ்லாத்தில் நீங்க போய் கேள்வி எல்லாம் கேட்கவே முடியாது

Asif Meeran AJ

unread,
Mar 29, 2011, 9:32:44 AM3/29/11
to panb...@googlegroups.com
ரொம்ப சரியாச் சொன்னீங்க தியாகு :-)
இஸ்லாம் ரொம்பத் தெளிவா இருக்கு

ஏக இறைவன் அல்லாஹ்
அவனது இறை மற்றும் இறுதித்தூதர் முகம்மது
வானவர்கள்
திருக்குரான்
இவைகளை முழுமையாக நம்பினால்தான் அவன் இஸ்லாமியன்

அப்படி இருக்கும்போது கேள்விகள் கேட்பதில் பொருளேதுமில்லை :-)

Gokul Kumaran

unread,
Mar 29, 2011, 9:36:22 AM3/29/11
to panb...@googlegroups.com
2011/3/29 வில்லன் . <vom...@gmail.com>
ஓஹ் காட் சுய இன்பத்திற்கு சட்ட அங்கிகாரம் கிடைக்கலையா இன்னும்.


இந்த ஒரு அதிர்ச்சிக்கு அப்புறம் தான் இன்னிக்கு நீ எழுதுறதெல்லாம் சரியா இருக்குன்னு அண்ணாச்சி சொல்றாரு :))))

--
Gokul Kumaran

Raja sankar

unread,
Mar 29, 2011, 9:44:27 AM3/29/11
to panb...@googlegroups.com
அதத்தான ஜெமோவும் சொன்னாரு. இஸ்ஸாமிய சமூகம் குற்றமாக கருதும் ஒன்று என. அவரு சொன்னதுக்கு மதவாதிகளை மட்டும் எடுத்துக்கிட்டு பேசுறீங்கன்னு அந்தாள திட்டுன்னீங்க.

பொதுமைப்படுத்துதல், மதவாதிகளை மட்டும் கருதுதல் என ஜல்லியடிச்சா சரி. வெளிப்படையா சொன்னா தப்பா?

அடுத்து என்ன

பூவ பூவுன்னு சொல்லலாம். புய்ப்பம் ன்னு சொல்லாம், நீங்க சொல்றமாதிரியும் சொல்லாமா? :-)))

ராஜசங்கர்

2011/3/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அப்படி இருக்கும்போது கேள்விகள் கேட்பதில் பொருளேதுமில்லை :-)

தியாகு

unread,
Mar 29, 2011, 9:57:32 AM3/29/11
to panb...@googlegroups.com

சங்கர் என்ன செய்றீங்க போய் ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கனும்னு வினவு எழுதிய கட்டுரையை படிக்காம :)


2011/3/29 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Asif Meeran AJ

unread,
Mar 29, 2011, 10:00:07 AM3/29/11
to panb...@googlegroups.com
ராஜசங்கர்

சில விசயங்களை நாம் அணுகும் முறை வேறு

ஐந்து வேளையும் தொழுவது இஸ்லாத்தில் கடமை எத்தனை இஸ்லாமியர்கள் நிறைவேற்றுகிறார்கள்?
பொறுப்பான கடமையையே நிறைவேற்றாத ஒரு சமூகம் அப்படியே குரானின் வரிகளைப்பின்பற்றியே இந்த உலகத்தில் குழ்ப்பம் விளைவிப்பது போல திரிபுவாதம் செய்யும் மேற்குலகின் இந்தியக்குரல் ஜெமோவினுடையது

பூவை பூவென்று சொல்வதில் தவறில்லை
மல்லிகைப்பூவை ஊமத்தம்பூ என்று சொல்வதில்தான் பிரச்னை :-)

29 மார்ச், 2011 5:44 pm அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

தியாகு

unread,
Mar 29, 2011, 10:04:53 AM3/29/11
to panb...@googlegroups.com
மீரான் ஜெமோ சொல்வதின் உள்குத்து முதல் வரியிலேயே வந்துடுச்சு அதான் அடிச்சு விட்டாரே ஸ்ருதி ஸ்மிருதின்னு என்னவோ உலகம் பூரா பார்ப்பனிய வாதிகள் இருந்தமாதிரி உலகம் தழுவிய பிரச்சனைக்கு பார்பனியம் தீர்வு சொல்லுவது மாதிரி இஸ்லாம் சொல்லாதது மாதிரி

2011/3/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
ராஜசங்கர்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Mar 29, 2011, 11:04:44 AM3/29/11
to panb...@googlegroups.com


29 மார்ச், 2011 2:13 am அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:

முஸ்லீம்கள் ஓரினச்சேர்க்கையிலீடுபடுவதைத்தான் திருக்குரான் எதிர்க்கிறது
செல்வனுக்கெல்லாம் எதிர்ப்பைச் சொல்வதில்லை :-))


இயல்பாவே ஒழுக்கமா இருக்கரவனுக்கு அட்வைஸ் தேவைபடாதுன்னு எனக்கு சொல்லியிருக்க மாட்டாங்க போல:-)

Raja sankar

unread,
Mar 29, 2011, 11:17:34 AM3/29/11
to panb...@googlegroups.com
கைய அறுத்தவனுக்கு சுண்ணாம்பு தராம எப்படி கைய அறுத்தான்னு கேட்கதான் கூட்டம் வரும்.

அது மாதிரி தான் இதுவும். நல்லது செய்ங்கன்னா வராதாவிங்க கெட்டது ன்னா ஓடி வருவாங்க. அதுவும் நம்முடைய மதத்துக்கு ஆபத்து ன்னா வேற என்ன வேணும்?

ராஜசங்கர்


2011/3/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
பொறுப்பான கடமையையே நிறைவேற்றாத ஒரு சமூகம் அப்படியே குரானின் வரிகளைப்பின்பற்றியே இந்த உலகத்தில் குழ்ப்பம் விளைவிப்பது போல திரிபுவாதம் செய்யும் மேற்குலகின் இந்தியக்குரல் ஜெமோவினுடையது

Reply all
Reply to author
Forward
0 new messages