வேதாகமம் என் பார்வையில் - ஜி.ஜே.தமிழ்ச்செல்வி!

994 views
Skip to first unread message

G J Thamil Selvi

unread,
Sep 1, 2015, 5:59:08 AM9/1/15
to panb...@googlegroups.com
எனக்கு கொடுக்கப்பட்ட வேதாகமம்.

விடயங்களை ஆராய்ந்து அறியமுடியாத வயதில் என் கைகளில் சில நேரமும், என் தலையருகே சில நேரமும் பரிசுத்த வேதாகமம் வைக்கப்பட்டிருக்கும். அந்த பால்யப்பருவத்தில் நான் போலியோவினால் பாதிக்கப்பட்டிருந்த போது கிறித்துவ குடும்பத்தில் பிறந்த என் தாயாருக்கு, வேதாகமம் என் அருகில் இருப்பது என் உயிரைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கை.

அந்த வகையில் வேதாகமம்  என் பார்வையில், வேதாகமம் என்பது நம்பிக்கையின் ஊடகம். அது மனிதனை நம்பிக்கையின் வழியே நடத்த அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட தன்னம்பிக்கை புத்தகம்.

பிற்காலத்தில் அது புனிதமாக்கப்பட்ட வரலாறு எனக்குத் தெரியாதாகையால் கூகுளில் தேடி  ஜீவதண்ணீர் வலைதளம் மூலமாக, தமிழில்மொழிப்பெயர்க்கப்பட்ட முதல் நூல் வேதாகமம் என்பதை அறிந்தேன்.

செவி வழி செய்தியாக வேதாகம் குறித்து அநேகம் அறிந்திருந்த போதும் அவை எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாதாகையால், வேதாகமம் முழுமையாக படித்த வரையில் அதன் மேல் வைத்திருக்கும் உண்மையான மதிப்பினாலும் அக்கால மக்களின் மேல் வைத்திருக்கும் மரியாதையினாலும், ஒரு பேரினத்தின் வரலாற்றை அந்த புத்தகம் பேசுவதினாலும், உண்மையானவற்றைத் தேடி பதிவிட விரும்புகிறேன்.

தமிழில் பரிசுத்த வேதாகமம் பிறந்த வரலாறு

இந்தியாவில் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும் மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இது தமிழுக்கு ஓரு தனிச்சிறப்பு. அதுவும் இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சிடப்பட்ட அந்த நூல் நமது பரிசுத்த வேதாகமம் தான் என்பது தமிழ் மொழியின் மற்றொரு தனிச்சிறப்பு.

சீகன் பால்க்

தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இந்தியாவின் மேல் இருந்த ஊழிய பாரம் அவரை மிஷனரிகளை அனுப்புமாறு தீவிரம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாக ஜெர்மானியரான 23 வயது சீகன் பால்க் இந்தியாவிற்கு மிஷனரியாக பணியாற்ற வந்தார். சீகன் பால்க் தனது 16ஆவது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்கு பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவாலான வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. "புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவில்லுள்ள ஒரு கிறிஸ்தவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்". இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிஷனரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீர சுகவீனம் என இவைகளின் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்கு மிஷனரியாக செல்ல தன்னை ஆயத்தப்படுத்தினார். ஆனால் அது அவருக்கு ஒரு சவாலாகத் தான் இருந்தது. ஏனெனில் ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளி நாட்டிற்கு மிஷனரியை அனுப்பவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக அந்நாட்கள் இருந்தன.

ஒரு வழியாக எல்லா எதிர்ப்புகளையும் கடந்து 1705 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் தன் நண்பர் - 29 வயது நிரம்பிய ப்ளூட்சுடன் சேர்ந்து இந்தியாவிற்கு பிராட்டஸ்டண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனரிகளாக தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் அவர்கள் இந்தியாவின் தரங்கம்பாடியில் வந்து சேர்ந்தனர். அன்று கப்பலில் இருந்து அவர்களை கரைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் இல்லை. எனவே கடற்கரைவில் இறங்க முடியாமல் அநேக நாட்களாய் கப்பலிலேயே உண்ண உணவும் இல்லாமல் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக, அந்த கப்பல் இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த ஒரு படகில் ஏறி கரை நோக்கி போனார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தியாவின் சுவிசேச சரித்திரத்திலே மறக்கமுடியாத நாள். 1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.

ஆனால், டேனிஷ் கிழக்கிந்திய அதிகாரிகளுக்கு இவ்வருகை வெறுப்பையே தந்தது. மன்னரால் அனுப்பப்பட்டிருந்த இருவரும் தங்கள் வேலைகளை கண்காணித்து அரசருக்கு தெரியப்படுத்தும் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகித்தனர். அதன் காரணமாக, முறையான உபசரிப்பு இல்லை, தங்க நல்ல இடம் கொடுக்கப்படவில்லை. எனவே, சீகனும் அவர்து தோழரும் போர் கைதிகளையும், போர்ச்சுகீசிய அடிமைகளையும் அடைத்து வைக்கும் கூரைகளில் தங்கினர். டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியால் போதுமான அனுசரிப்பு இல்லாவிட்டாலும், இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மானியர்கள் அவருக்கு உதவினர். ஆங்கிலேயர்களும் தங்கள் உதவியை அளித்து சீகன்பால்க்கின் மிஷனரி ஊழியத்தை தாங்கினர். இந்தியாவில் தங்கள் காலனி ஆதிக்கத்தை நாட்ட டென்மார்க், போர்ச்சுகல், ஃபிரான்ஸ், இங்கிலாந்து என பல ஐரோப்பிய தேசங்கள் தங்களுக்குள் போராடி வ‌ந்த நேரமது. இருந்தாலும், அவர்கள் ஒன்றிப் போனது இது போன்ற‌ சில மிஷனரி ஊழியங்களில் தான். சீகன்பால்க் டேனிஷ் மன்னரால் அனுப்பப்பட்ட போதகரெனினும், அவர் கிறிஸ்துவின் சுவிசேஷ பணிக்காக தன்னை அர்ப்பணித்ததால் அவருக்கு உதவ ஜெர்மானியர்களும் ஆங்கிலேயர்களும் முன்வந்தனர்.

சீகன் தன் அருட்பணியைத் தொடங்கினார். அவருக்கு இடையூறு அளித்த மற்றொன்று மொழி. தமிழ் மொழி அறியாது சுவிசேஷத்தை அறிவிக்க திணறினார். இத்திணறல் அவரை தமிழ் மொழி கற்றுக்கொள்ள வகை செய்தது. அப்போது அவருக்கு முதலியப்பா என்ற இந்தியரும் ஒரு தமிழ் மொழி புலவரும் உதவிக்கரம் கொடுத்தனர். அவர்களது உதவியோடு தமிழ் மொழியை கற்றுக் கொண்டார். 5000த்திற்கும் மேலான தமிழ் வார்த்தைகளைத் திரட்டி மனனமிட்டுக் கொண்டார். சிறுக சிறுக இலக்கண இலக்கியங்களை பயின்று, கடற்கரை மணலில் சில எழுத்து பயிற்சிகளை மேற்கொண்டு தமிழில் நல்ல தேர்ச்சிப் பெற்றார். தனக்கு கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு இந்தியர்களுக்காக ஒரு சுவிசேஷ பள்ளியை ஆரம்பித்தார், மேற்கத்திய மொழிகளில் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமங்கள், சுவிசேஷ புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், தியான நூல்கள் முதலிய பல நூல்கள் அடங்கிய ஒரு நூலகமும் அவரால் நிறுவப்பட்டது. இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கு நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவரது முயற்சியால், புராட்டஸ்டன்டு கிறித்துவ ஆலயம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டது. முந்நூறு ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் பழமையான  தமிழ் லுத்தரன் திருச்சபை தான் அந்த ஆலயம்!

சீகனது சுவிசேஷப் பணிக்கு பெரும் இடையூறு செய்தவர் ஹாசியஸ் (அக்கால டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியின் கவர்னர்). இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் மேற்கத்திய வியாபாரம் பாதிக்கப்படும் என ஹாசியஸ் கருதினார். எனவே மிஷனரிகளால் நற்செய்தி அறிவிக்கப்படாமல் இருக்க பல இன்னல்களை கொடுத்தார். அதே நேரத்தில் பல ஐரோப்பியர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு இந்தியர்களை பயன்படுத்தி வந்தனர், அடிமை வர்த்தகமும் இலகுவாக நிலவி வந்தது. இச்செயல்களெல்லாம் வேதத்திற்கு எதிரானவை என சீகன் பால்க் மக்களிடையே போதித்து வந்தார். ஹாஸியசின் கொள்கையை மீறி சுவிசேசமும் அறிவிக்கப்பட்டது. சீகனின் திருப்பணிகள் கவர்னருக்கு வெறுப்பை உண்டாக்கின. அதன் விளைவாக, இரவு வேளை ஒன்றில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த சீகன் பால்க்கை போலீசார் கைது செய்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். சிறைவாசத்தின் போது, சுவிசேசத்திற்காக ஒரு கிறிஸ்தவன் அனுபவிக்கும் இன்னல்களின் பாக்கியத்தை உணர்ந்தார். அவைகளை விவரிக்கும் இரண்டு நூல்களையும் எழுதினார்.

சிறைவாசத்திற்கு பின்பு, சீகனின் அருட்பணி தொடர்ந்தது. பல மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக வழி நடத்தப்பட்டனர். இருப்பினும் தமிழ் மொழியில் வேதாகமம் இல்லாதது ஒரு பெரிய இழப்பாக இருந்தது. தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிப் பெயர்ப்பதின் மூலம் பல தமிழ் மக்களுக்கு சத்தியத்தை அறிவிக்க முடியும் என சீகன் உணர்ந்தார். அதனால், கிறிஸ்துவுக்குள் வந்த தமிழ் மக்களும் ஆழமான உண்மைகளை அறிந்து கொண்டு, இயேசு கிறிஸ்து காட்டிய வழிக்குள் நிலைத்திருப்பார்கள் என கருதினார். எனவே அதற்கான பணிகள் தொடங்கின. கருத்தோடு வேதாகமத்தை தமிழ் மொழியில் எழுத தொடங்கினார்.

பரிசுத்த வேதாகமத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்க்கும் போது அதற்குச் சரியான பதங்கள் கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்குரிய வார்த்தைகளை ஆராய பல இலக்கியங்களை சீகன் பால்க் ஆய்வு செய்தார். கத்தோலிக்க சபையார் பயன்படுத்தி வந்த சில வார்த்தைகளை தனது மொழி பெயர்ப்பில் பயன்படுத்தினார். மேலும் ஸ்கிமிட்டின் கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை தனது மொழி பெயர்ப்புக்கு ஆதாரமாக வைத்துக் கொண்டார். இதற்காக இரவு பகலென பாராது நேரமெடுத்து உழைத்தார். இறுதியில் தேவ ஒத்தாசையோடு அந்த கடின முயற்சியில் வெற்றியும் பெற்றார். மனித வாழ்வின் இருளை அகற்றும் ஒளியாகிய தேவ வார்த்தைகள் அடங்கிய முழு புதிய ஏற்பாட்டையும் 1711 மார்ச் 31இல் மொழிபெயர்த்து முடித்தார்.

மொழிபெயர்த்த இப்புதிய ஏற்பாட்டை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமானால் பல பிரதிகள் எடுக்க வேண்டும். அதற்கு அவைகளை அச்சேற்ற வேண்டுமென விரும்பினார். அந்த நாட்களில் இந்தியாவில் எங்கும் அச்சகங்கள் கிடையாது. எழுத்து ஓலையும், காகிதத்தில் மையினால் எழுதுவதுமே பழக்கமாக இருந்தது. எனவே ஜெர்மனியில் உள்ள தனது நண்பர்களுக்கு இதைத் தெரியப்படுத்தினார். அவர்களின் நன்கொடையால் அச்சு எந்திரமும் அச்சு எழுத்துக்களும் கப்பல் மார்க்கமாக இந்தியாவின் மண்ணில் தரை இறங்கியது. இவைகளை அச்சேற்றும் பணி 1713ஆம் வருடம் தொடங்கியது. காகிதப் பற்றாக்குறை அச்சு எழுத்துக்கள் கிடைக்காமை ஆகிய தடைகள் இருந்தாலும் தேவ கிருபையால் எல்லாத் தடைகளையும் தனது கடின முயற்சியால் சீகன் பால்க் மேற்கொண்டார். 1715ஆம் வருடம் ஜூலை மாதம் 15ஆம் நாள் தமிழ் புதிய ஏற்பாடு அச்சாகி வெளிவந்தது.

சீகன் பால்க் வெளியிட்ட
புதிய ஏற்பாட்டின் முதல் பக்கம்

"தேவனுக்காக நாம் எடுக்கும் பிராயசங்கள் ஒரு நாளும் வீணாகாது" என்பது சீகன் பால்க்கின் வாழ்வில் உண்மையானது. இப்படியாகத்தான் நம் கரங்களில் தவழும் இந்த அரிய பொக்கிஷம் அன்று வெளி வந்தது. அது மட்டுமா? இந்தியாவிலேயே தமிழிலேயே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் பைபிள் என்ற மகிமை உண்டானது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். மேலும், பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்க்கும் பணியில் சீகன் பால்க் ஈடுபட்டார். ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்த சமயத்தில் தீடீரென சரீரத்தில் ஏற்பட்ட பெலவீனத்தினால் 1719ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள், தனது 37ஆம் வயதில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். தனது மரண நாளில் காலை எழுந்து குடும்ப ஜெபம் செய்தபின் தனக்கு விருப்பமான பாடலை பாடுமாறு செய்து அப்படியே தேவ இராஜ்ஜியம் கடந்து சென்றார். அவர் விட்டுச் சென்ற மீதி பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனரியாக பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் முடித்து அச்சேற்றினார்.

அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் பைபிள்

சீகன் பால்க்கின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம் நாம் எவ்வளவு நாட்கள் வாழ்கிறோம் என்ற நீளத்தை விட கர்த்தருக்காய் எவ்வளவு சாதித்தோம் என்ற ஆழம் தான் முக்கியம் என்பதே. அனேக தியாகங்களுக்குப் பிறகுதான இந்த பரிசுத்த வேதாகமம் வந்தது என்பதை நமது கரத்தில் இருக்கும் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும்போதும் பார்க்கும்போதும் நினைவில் வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த புனித நூலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அவைகளை நம் கால் மிதிபடும் இடத்தில் வைக்காமல் அல்லது பாடல் புத்தகங்களுக்கு பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தாமல் தேவனின் வார்த்தைகளின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அதை மிகுந்த ஜாக்கிரதையோடு காத்துக் கொள்வோம். அந்த வார்த்தைகளை அனுதினம் தியானிப்போம், அவைகள் நம்மை நித்திய வாழ்வுக்கு நேராய் வழிநடத்தும். ஆமென்.


yesu rajan

unread,
Sep 1, 2015, 6:00:47 AM9/1/15
to panb...@googlegroups.com
ஆகா அருமை

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

G J Thamil Selvi

unread,
Sep 1, 2015, 6:02:05 AM9/1/15
to panb...@googlegroups.com
வேண்டாங்க இங்க பிரச்சாரம் 

G J Thamil Selvi

unread,
Sep 1, 2015, 6:08:10 AM9/1/15
to panb...@googlegroups.com
நன்றி சகோ!

2015-09-01 15:30 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Sep 1, 2015, 6:13:30 AM9/1/15
to பண்புடன்
 நல்ல முயற்சி ... வாழ்த்துகள் சகோ 

2015-09-01 15:29 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

G J Thamil Selvi

unread,
Sep 1, 2015, 6:16:13 AM9/1/15
to panb...@googlegroups.com
நன்றிங்க அண்ணா!

துரை.ந.உ

unread,
Sep 1, 2015, 6:33:22 AM9/1/15
to பண்புடன்
புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு - இடையே உள்ள மாற்றக்கள் /  விளக்கங்களையும் எளிமையாகப் பதிய வேண்டுகிறேன் 

G J Thamil Selvi

unread,
Sep 1, 2015, 6:51:52 AM9/1/15
to panb...@googlegroups.com
முயற்சி செய்கிறேன் அண்ணா!

G J Thamil Selvi

unread,
Sep 1, 2015, 3:27:31 PM9/1/15
to panb...@googlegroups.com
வேதாகமத்தின் இரு பெரும் பிரிவுகள்

வேதாகமம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  இயேசுக்கிருஸ்துவின் பிறப்பிற்கு முன், இயேசுக்கிறிஸ்துவின் வருகையை முன் குறித்து தீர்க்கத்தரிசிகளால் எழுதப்பட்டது பழைய ஏற்பாடு என பொதுவாக கிறித்துவர்களால் கருதப்படுகிறது.

புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் போதனைகளைக் குறித்து இயேசுக்கிறிஸ்துவின் சீடர்கள் எழுதியவைகளும்,  சீடர்கள் சபைக்கு எழுதிய கடிதங்களும், வரப்போகிற அந்திக்கிறிஸ்து என்னும் சாத்தானின் செயல்களையும், வரப்போகிற இயேசுக்கிறிஸ்துவின் மறு வருகையையும் பற்றி எழுதப்பட்டுள்ளது.

வேதாகமத்தில் ஒரு புள்ளியையையும் மாற்றக் கூடாது என்று பொதுவாக இருப்பினும், வேதாகமத்தில் தள்ளுபடி ஆகமங்கள் 12 பகுதிகள் உள்ளன. 

12 தள்ளுபடி ஆகமங்கள் குறித்து கூகுளில் தேடியபோது....http://www.jesusmaycometoday.com/2015/02/12-apocryphal-books.html என்ற வலைப்பக்கத்தில் இருந்து இப்பகுதி எடுக்கப்பட்டது. (இந்த வலைப்பக்கத்தில் நகல் எடுக்க முடியவில்லை ஆகையால் இதைத்தட்டச்சு செய்யும் படி நேரிட்டது. நான் அறியாமல் எழுத்துபிழை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டும் படி கேட்டுக்கொள்கிறேன்.)

அப்போக்ரிஃபாஸ் (A –po kry – phos) என்ற கிரேக்கச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்பது பொருள். இந்த பதம் சந்தேகத்திற்குரிய புத்தகங்களுக்கு அல்லது ஏவப்பட்டதற்கு சாட்சி இல்லாத ஆனால் தனிப்பட்ட முறையில் வாசித்தால் பயனிருப்பதாக கருதப்படும் புத்தகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் கனோனின் விதிகளை சில புத்தகங்கள நிறைவேற்றவில்லை. யோசுவா, சாமுவேல், எஸ்றா போன்றோர் மட்டுமல்லாமல் பல தீர்க்கத்தரிசிகள் உரைத்த திருவாக்குகள் எல்லாம் தனித் தனியாய் பிரிந்து கிடந்தன. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களில் கற்றுத் தேர்ந்த வேதபாரகனாகிய எஸ்றாவின் தலைமையில் பழைய ஏற்பாடு  தொகுக்கப்பட்டதாக பாரம்பரியம் கூறுகிறது. எவைகளை புனித எழுத்துக்கள் என்று அங்கீகரிப்பது என்ற திட்டத்திற்கு அல்லது குழுவிற்கு அல்லது ஏற்பாட்டிற்கு கனோன் என்று பெயர். கனோன் என்ற வார்த்தைக்கு திருமறைத் தொகுப்புச் சட்டம் என்று பொருள்.

எஸ்றா தொகுக்கும் போது, நியாயாதிபதிகளும் ரூத்தும் ஒன்றாக இருந்தது.

எஸ்றாவும் நெகேமியாவும் ஒன்றாக இருந்தது.

எரேமியாவும் புலம்பலும் ஒன்றாக இருந்தது.

சிறிய தீர்க்கதரிசிகள் பனிரெண்டு புத்தகமும் ஒன்றாக கருதப்பட்டது.

எனவே பாலஸ்தீனாவின் புழக்கத்திலிருந்த இந்த 22 ஆகமங்களே இவைகள் அனைத்தும் ஒன்றுபடுத்தி யூதருடைய வேதப் புத்தகமாக்கினார். இது எபிரேயம் மற்றும் அரமாயிக் மொழியில்  இருந்தது.

கிரேக்க சாம்ராஜ்யத்தின் எல்ல முழுவதும் பரவிக்கிடந்த இஸ்ரயேலர் கிரேக்க மொழியைக் கற்பதும், பேசுவதும் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. எபிரேய மொழியை விட கிரேக்க மொழியின் வழக்கே சிதறிக் கிடந்த அக்கால இஸ்ரவேலர் மத்தியில் மிஞ்சி நின்றது. இந்நிலையில் கி.மு. 3ம் நூற்றாண்டின் முற்பகுதியில்  (B.C.285-247) எகிப்தை ஆண்ட பிலடெலபஸ் (தாலமி-2) என்ற மன்னன் வருவதற்கு யூத அறிஞர்களை நியமித்தார்.

கோத்திரத்திற்கு ஆறு பேர் வீதம் பனிரெண்டு கோத்திரத்திற்கு எழுபத்திரண்டு பேரை தேர்வு செய்தார். இந்த எழுபத்திரண்டு யூத அறிஞர்கள் ஒருங்கிணைந்து எழுபத்திரண்டே நாட்களில் எபிரெய மொழி வேதாகமத்தை கிரேக்க மொழிக்கு கொண்டு வந்தார்கள். இந்த கிரேக்க வேதாகமத்திற்கு ஒரு காரணப் பெயர் வைக்கப்பட்டது. கிரேக்கத்தில் எழுபது என்று அர்த்தங்கொள்ளும் ஜெப்துவஜிந்து (Spetuagint) என்ற பெயர் சூட்டப்பட்டது. இதனை Lxx என்று குறிப்பிடுவர்.

கிரேக்கப் பேரரசுக் காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து எகிப்தின் அலெக்சாந்திரியாவுக்கு இடம்பெயர்ந்த யூதர்கள் தங்களோடு எபிரெய வேதத்தை எடுத்துக்கொண்டு போனபொழுது மல்கியாவிற்கு பிறகு எழும்பிய பல நூல்களையும் உடன் எடுத்துச் சென்றனர். கிரேக்க மொழிப்பெயர்ப்பு வேதம் உருவாக்கப்பட்ட பொழுது நற்போதனைகள் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய,

1மக்கபேயர் – சரித்திரம்

2மக்கபேயர் – சரித்திரம்

தோபீத் – நேசக்கதைகள்

யூகித்து – நேசக்கதைகள்

மனாசேயின் ஜெபம் – அழகிய சங்கீதம்

1எஸ்ட்ராஸ் – தரிசன நூல்

2எஸ்ட்ராஸ் – தரிசன நூல்

எஸ்தர் – சரித்திரம் (இணைப்பு)

மூன்று வாலிபரின் பாடல்

பேலும், வலுசர்ப்பமும்

பாருக் – போதனை

சீராக்கின் ஞானம்

சாலமோன் ஞானம்

எரேமியாவின் நிருபம்.

இந்தப் பதினான்கு ஆகமங்களையூம் அத்தோடு சேர்த்துவிட்டனர். எனவே பாலஸ்தீனா தொகுப்பில் 39 ஆகமங்களும் அலெக்சாந்திரியா தொகுப்பில் இந்தக் கூடுதல் பதினான்கு ஆகமங்களும் உண்டாயின.

ஆனால் அதன் பின் கூடின யூத மகாசபை இந்த நூல்களை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இந்தக் கூடுதல் புத்தகங்களை உண்மையான யூதர்கள் அங்கீகரிக்கவில்லை. அலெக்சாந்திரியாவிலிருந்து வந்த திருமறைத் தொகுப்பில் இந்தக் கூடுதல் புத்தகங்கள் சேர்க்கப்பட்டன. ஆனால் பாலஸ்தீனாவில் புழக்கத்திலிருந்த எபிரேய வேதாகமத்தில், 39 ஆகமங்கள் இருந்தன.

1546ல் டிரென்ட் ஆலோசனைக் கூட்டத்தில், ரோமன் கத்தோலிக்க சபை இப்புத்தகங்களை ஏற்றுக்கொண்டாலும் புரட்டஸ்தாந்து சபைகள் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள்இவை அல்லவென்று நிராகரித்து விட்டன. ஒரு வேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும், திறமைகளும் இருந்தாலும் இவைகள் கீழ்காணும் காரணங்களால் தள்ளப்படுகின்றன.

1.        இவைகள் தீர்க்கத்தரிசியாலோ அல்லது தீர்க்கத்தரிசியின் அங்கீகாரம் பெற்றோ எழுதப்படவில்லை.

2.        இவைகள் யூதர்களால் ஆவிக்குரிய புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

3.        இயேசுகிறிஸ்துவாலோ அல்லது அப்போஸ்தலர்களலோ இப்புத்தகங்களிலிருந்து ஒரு மேற்கோளும் காட்டப்படவில்லை.

4.        பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கத் தரிசியாகிய மல்கியாவிற்கும் இயேசுகிறிஸ்துவிற்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது மல்கியா 3:1ன்படி மேசியாவின் வருகைக்கும் ஆயத்தம் பண்ணும தூதனுக்கு முன்பான இருண்ட காலங்களில் எழுதப்பட்டவைகள்தான் இந்த புத்தகங்கள்.

5.        2மக்கபே 15:38ஐ வாசிக்கும் போது வேதத்தில் அதிகாரத்தையும மாறாத தன்மையையும், தேவன் தான் இவ்வெழுத்தாளர்களுக்கு தந்தார் என்று உறுதியாக அவர்களால் கூறமுடியவில்லை என்பதை அறியலாம்.

6.        வேதாகமத்தின் சரித்திரங்களும் இதற்கும் வேறுபாடுகள் உண்டாகிறது.

7.        ஒன்றுக்கெதிரான கருத்து மாறுபாடுகளும் அவைகளுக்குள்ளேயே இருக்கின்றன.

8.        அப்போஸ்தல நாட்களில் இருந்த ஜோஸப்பஸ் என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் இன்றைக்கும் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட வேதம் என்று கூறியுள்ளார்.

9.        தீர்க்கத் தரிசன நிறைவேறுதல் இதில் இல்லை. மற்றும் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகள் திரித்து கூறப்பட்டுள்ளது.

10.      ஆதிகால சபை பிராக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்ற தேவமனிதர்கள் இப்புத்தகங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இவைகளுக்கு எதிராக பேசினார்கள்.

11.      தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக:1மக் 4:46, 11மக் 2:23, 15, 38)

12.      அநேக கிரேக்க மொழிபெயர்ப்பில் இவைகள் இடம் பெற்றிருந்தாலும் எபிரேயு பதிப்பில் இவைகள் இடம்பெறவில்லை.

13.      ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் யூதர்கள் இவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

14.      இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டு கதைகளும் காணப்படுகின்றன. உதாரணம், ஜூடித் என்ற மறைவு நூலில் நேபுகாத்நேசர் பாபிலோனில் அல்ல நினிவேயைத் தலைமையிடமாகக் கொண்டு அரசாண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

15.      வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை உபதேசிக்கின்றது (தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கான ஜெபம் போன்ற காரியங்களை நியாயப்படுத்துகின்றது) அதாவது ரோமானிய சபைகளின் சில போதனைகளுக்கு தள்ளுபடி ஆகமங்களின் ஆதரவு எனும் ஒப்புதல் இருப்பதால் அவைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, மரித்தவர்களின் மீட்புக்காக ஜெபிப்பது (2மக்கபேயர் 12:45,46) நற்கிரியைகள் மூலம் மீட்புறலாம் (டோபிட் 12:19) வேதத்துக்கு புறம்பான இந்த இடைச்செருகலை திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையாகவே தேவ ஒப்புதல் பெற்ற சித்தாந்தமாக ஏற்க முடியாது.

16.      முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேத சம்பந்தப்பட்ட ஆலோசனைக்கூட்டங்களில் இவைகள் அங்கீகரிக்கப்படவில்லை.

17.      சீர்த்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும தள்ளுபடி ஆகமங்களை நிராகரித்தனர். உதாரணம், கார்டினல் கஜட்ரன் வெளியிட்ட புதிய ஏற்பாட்டில் உள்ள வரலாற்று நூல்களின் விளக்கம் என்ற புத்தகத்தில் மேற்சொன்ன 11 புத்தகங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18.      பழைய ஏற்பாட்டு நூல்கள் எல்லாம் எபிரேய மொழியில் இருக்கும்போது, இந்த மறைவு இலக்கியங்கள் கிரேக்க மொழியில் செப்டோஜன் (70 பேர்) மொழிப்பெயர்ப்பில் மட்டுமே உள்ளது.

19.      தள்ளுபடி நூல்கள் 15 இருக்க அதில் 11நூல்களை மட்டுமே ரோமனிய சபைகள் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்நூல்களுக்கு ஏனைய அங்கீகரிக்கப்பட்ட விவிலிய நூல்களுக்குரிய இடத்தை தராமல் இரண்டாம் இடத்திலேயே அச்சபை வைத்துள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சந்தேகத்திற்குறிய சம்மதம் சம்மதமாகாதே.

20.      பழைய எபிரேய வேதாகமத்தில் ஆதி நூல் முதல் நூலாகவும் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது ஆபேலின் இரத்தம் முதல் …. சகரியாவின் இரத்தம் வரை (மத் 23:34,35)என்ற இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள ஆபேல் ஆதி நூலில் இருந்து எடுக்கப்பட்ட கதாப்பாத்திரம். அப்படியே சகரியா 2 நாளாகமத்தில் இருந்து எடுக்கப்பட்ட நபர், (இயேசுவும் இந்த வரிசையை அங்கீகரித்தக் காரணத்தால்) இந்த வசனத்தின்படி பார்த்தால் தள்ளுபடி ஆகமங்கள் கிறிஸ்துவால் ஏற்கப்படவில்லை என்பது அவைகளை எழுதியவர்களையும், தேவன் அனுப்பிய தீர்க்கர்களாக அவர் அங்கீகரிக்கவில்லை என்பதையும் நாம் அறிய முடியும்.

21.      தேவ ஆவியால் ஏவப்பட்டதாக முதலாம் மக்கபே புத்தகத்தை கருதவே முடியாது. ஆனாலும் அதில் அக்கறைக்குரிய சரித்திர தகவல் அடங்கியுள்ளது. பொ மக்கபேயர்களின் ஆசாரிய குடும்பத்தின் தலைமையில் யூதர்கள் சுதந்திரத்துக்காகப் போராடிய விவரத்தை இது அளிக்கிறது. இந்தத் தள்ளுபடி ஆகமங்களின் மற்ற புத்தகங்களில் புராணக் கதைகளும் மூட நம்பிக்கைகளும் உள்ளன.

22.      பைபிள் கல்விமானாகிய ஜெரோம், லத்தீன் வல்கேட் பைபிள் மொழிபெயர்ப்பை செய்து முடித்தார்;  அவர் தள்ளுபடி ஆகமங்களைக் குறித்து தெளிவான கருத்துடையவராக இருந்தார். ஜொஸிஃபஸைப் போலவே ஏவப்பட்ட புத்தகங்களை அவர் வரிசையாக பட்டியலிட்டார். அவரைப் போலவே அதே எண்ணிக்கையைப் பயன்படுத்தி, தேவ ஆவியால் ஏவப்பட்ட எபிரேய வேதாகமத்தின் 39 புத்தகங்களை 22 ஆக கணக்கிட்டார். வல்கேட் மொழிப்பெயர்ப்பில் சாமுவேல் மற்றும் இராஜாக்கள் புத்தகங்களுக்கு அவர் அளித்த முன்னுரையில் பின்வருமாறு எழுதினார். இவ்வாறு இருப்த்திரண்டு புத்தகங்கள் உள்ளன. நாங்கள் எபிரெயுவிலிருந்து லத்தீனுக்கு மொழிபெயர்க்கும் எல்லா புத்தகங்களுக்கும் இந்த முன்னுரை பாதுகாப்பான அணுகு முறையாக உதவக்கூடும். இவற்றிற்கு அப்பாற்பட்ட எதையும் தள்ளுபடி ஆகமங்களில் வைக்க வேண்டும் என்பதிலிருந்து நாங்கள் தெரிந்துக்கொள்வது.

 

2கொரி.3:14 கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்டது பழைய ஏற்பாடு. இது  39 புத்தகங்கள் அடங்கியது. எபிரேய பாஷையில் எழுதப்பட்டுள்ளது.

 

2கொரி.3:6 கிறிஸ்துவுக்கு பின் எழுதப்பட்டது புதிய ஏற்பாடு இ 27 புத்தகங்கள் அடங்கியது. கிரேக்க பாஷையில் எழுதப்பட்டுள்ளது. இவை இரண்டும் அடங்கிய புத்தகம் Bible ஆகும்.

 

சத்திய வேதத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் மனிதகுலத்துக்கு அருளப்பட்ட தேவ வார்த்தைகள். இதை மீறி 11 புத்தகங்கள் பழைய ஏற்பாட்டோடு சேர்க்கப்பட்டு ரோமானிய சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேவ வார்த்தையோடு ஒன்றை கூட்டவோ, குறைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லையே. (வெளி 22:18,19) அப்படிச் செய்தால் நித்திய வாழ்வும் நமக்கும் பறிபோகுமே. (இவ்விடத்தில் ஒரு பயமுறுத்தல் நிறுவப்படுகிறது. தள்ளப்பட்ட ஆகமங்களை சேர்க்காதபடிக்கு எதிர்கால சந்ததிகளை அச்சுறுத்த இவ்வாக்கியம் எழுதப்பட்டுள்ளது என்பது என் கருத்து).

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


என் சிந்தனையில் உதித்தவை!

செய்தி ஊடகங்கள் அதிகம் இல்லாத காலகட்டங்களில், தன்னால் தன் இனத்தால் தன் சாதியினரால்,  தான் சார்ந்த இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று மட்டுமே சிறந்தது என்று முன் வைத்தல் என்னவோ நியாயமாக பட்டாலும், தற்போதைய காலகட்டத்தில் அநேக புத்தகங்கள் நம்மிடம் இருக்கையில் அநேக புத்தகங்களை படிக்கவும், புரிந்துக்கொள்ளவும் காலம் இருக்கும் வேளையில் இது மட்டுமே சிறந்தது என்றும், இதுவே தேவனால் படைக்கப்பட்டது என்று முன் வைத்து வாதிடுவது சரியாக எனக்குத் தோன்றியதில்லை. இது பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது என்று கூறுவதிலும், வேதாகமத்தை எழுத மனித உழைப்பு எள்ளளவு இல்லை என்பதிலும் எனக்கு உடன்பாடியில்லை. தேவன் முன் வைக்கப்படும் பொருட்டு, மனிதன்  

தன்னை பின் வைத்துக்கொண்டாலும் இத்தகைய ஆராய்ச்சிக்கு போவதை நிறுத்திக்கொள்கிறேன். தேவன் இருக்கிறார் என்றோ, தேவன் இல்லை என்றோ நிரூபிக்க இந்த இழையை நான் துவங்கவிலலை.


மனிதர்கள் தன் மீது தான் வைக்கவேண்டிய நம்பிக்கையை விட தனக்கு அப்பாற்பட்ட ஒன்று தன்னை தாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதனாலேயே கடவுளர்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். வேதாகமத்தில் ஒரு நிகழ்வு. மோசே தேவனிடத்தில் உரையாட மலையின் மேல் சென்றிருக்கும் போது தங்களுக்கென்று தங்களிடத்தில் இருந்த ஆபரணங்களை உருவாக்கி கன்றுக்குட்டி சிலையை தெய்வமாக உருவாக்கினார்கள் அம்மக்கள். 

தங்களுக்கென்று ஒரு நம்பிக்கையை அவர்கள் உருவாக்கிக்கொண்டார்கள்.

நல்ல சிந்தனையோடு வேதாகமம் ஒரு மனிதரால் எழுதப்பட்டது. உருவற்ற ஆவியினால் எப்படி எழுத முடியும். பத்துக்கட்டளைகளும் மோசேவினால் எழுதப்பட்டது. அதன் பின் எழுதப்பட்ட வருணைகள் எழுத்தாளரின் புனைவு என்று எனக்குத் தோன்றுகிறது. தற்போதைய சட்டத் திட்டங்களை போல மோசே அக்காலத்தில் அவருடைய, அவர் அழைத்து வந்த மக்களுக்காக எழுதிய சட்டங்கள் அவை. 


வேதாகமத்தில் நான் படித்த முதல் வசனம்:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாகவும் இருந்தது. (யோவான் எழுதின சுவிசேஷம் 1 அதிகாரம் 1வசனம்)

வேதாகமம் வாசிக்க எனக்கு அறிவுறுத்தப்பட்ட போது வாசிக்க சிபாரிசு செய்யப்பட்ட புத்தகம் யோவான் எழுதின சுவிசேஷமாகும். இப்புத்தகம் ஸ்குரில் என்னும் கேரளத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாளில் என்னை நடக்க வைப்பதற்காக என் கால்களில் அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு, ஒர்த் அறக்கட்டளை காட்பாடியில் சேர்க்கப்பட்டிருந்தேன்.  முதல் கட்ட அறுவை சிகிக்சை செய்யப்பட்டு விடுதி வந்து சேர்ந்த போது, விளையாட்டாய் ராணி என்ற என் சிநேகிதி என் மீது தவறி விழுந்து விட தையல் பிரிந்து  மரித்துப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக மீண்டும் சிஎம்சி மருத்துவமனை வேலூரில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இரத்தக் கசிவு நிற்க வேண்டும் என்பதற்கா என்னைத் தலைக்கீழ் நிலையில் படுக்கையில் கிடத்தியிருந்த போது, நான் மரித்துப்போவேன் என்றும், என் தமக்கையாரையும், தம்பிகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று என் தாயாரிடம் நான் கூறியதாக கூறிவிடுங்கள் என்று அந்த நர்சிடம் கூற, அவரோ நீ மரிக்கப்போவதில்லை. இவ்வுலகத்தில் பெரிய காரியங்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாய் என்று கூறினார். நான் மயக்க நிலையில் இருந்த போதும் கூட அந்த நர்ஸ் அதைத் திரும்ப திரும்ப உச்சரித்ததை அரை மயக்க நிலையில் என்னால் கேட்க முடிந்தது. 

வேதாகம வார்த்தைகள் அன்று எனக்குள் நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டாகவே எனக்கு உபதேசிக்கப்பட்டது.




துரை.ந.உ

unread,
Sep 1, 2015, 11:27:36 PM9/1/15
to பண்புடன்
​வாழ்க சகோ ...ஒருவரி வேண்டுதலை சிரமேற்கொண்டு செய்துமுடித்த ஈடுபாட்டிற்குத் தலைவணங்குகிறேன் ....

அருமையான உழைப்பு .../ வாழ்த்துகள் ....​

துரை.ந.உ

unread,
Sep 1, 2015, 11:28:38 PM9/1/15
to பண்புடன்

2015-09-02 0:57 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
அதைத் திரும்ப திரும்ப உச்சரித்ததை அரை மயக்க நிலையில் என்னால் கேட்க முடிந்தது. 

வேதாகம வார்த்தைகள் அன்று எனக்குள் நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டாகவே எனக்கு உபதேசிக்கப்பட்டது.

​தன்னம்பிக்கையின் வாழும் எடுத்துக்காட்டு ...​

yesu rajan

unread,
Sep 2, 2015, 1:36:43 AM9/2/15
to panb...@googlegroups.com
சகோதரிக்கு,


தேவனுடைய வாசகங்களை கேட்பதற்கும் அதை உணர்வதற்கும் அவனது கிருபை வேண்டும்
அந்த தேவ கிருபை அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கிறேன்

--

தியாகு

unread,
Sep 2, 2015, 2:32:04 AM9/2/15
to பண்புடன்
ஒன்னுமே புரியலே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மாய் இருக்குது


--
தியாகு

-

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 2, 2015, 2:54:55 AM9/2/15
to பண்புடன்
உங்களின் உழைப்புக்கு ஒரு சல்யூட்

G J Thamil Selvi

unread,
Sep 2, 2015, 11:26:03 AM9/2/15
to panb...@googlegroups.com
நன்றிகள் இப்பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும்! உடன் நன்றி கூற முடியவில்லை! பயணத்தில் இருந்ததால்.

2015-09-02 12:24 GMT+05:30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>:
உங்களின் உழைப்புக்கு ஒரு சல்யூட்

G J Thamil Selvi

unread,
Sep 2, 2015, 11:56:54 AM9/2/15
to panb...@googlegroups.com

தற்போது பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஆகமங்கள் பின்வருமாறு:

 

பழைய ஏற்பாட்டின் ஆகமங்கள்

ஆதியாகமம்

யாத்திராகமம்

லேவியராகமம்

எண்ணாகமம்

உபாகமம்

யோசுவா

நியாயாதிபதிகள்

ரூத்

I. சாமுவேல்

II.சாமுவேல்

I.இராஜாக்கள்

II.இராஜாக்கள்

I.நாளாகமம்

II.நாளாகமம்

எஸ்றா

நெகேமியா

எஸ்தர்

யோபு

சங்கீதம்

நீதிமொழிகள்

பிரசங்கி

உன்னதப்பாட்டு

ஏசாயா

எரேமியா

புலம்பல்

எசேக்கியேல்

தானியேல்

ஓசியா

யோவேல்

ஆமோஸ்

ஒபதியா

யோனா

மீகா

நாகூம்

ஆபகூக்

செப்பனியா

ஆகாய்

சகரியா 

மல்கியா

 

புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

அப்போஸ்தலருடைய நடபடிகள்

ரோமர்

I.கொரிந்தியர்

II.கொரிந்தியர்

கலாத்தியர்

எபேசியர்

பிலிப்பியர்

கொலோசெயர்

I.தெசலோனிக்கேயர்

II.தெசலோனிக்கேயர்

I.தீமோத்தேயு

II.தீமோத்தேயு

தீத்து

பிலேமோன்

எபிரெயர்

யாக்கோபு

I.பேதுரு

II.பேதுரு

I.யோவான்.

II.யோவான்

III.யோவான்

யூதா

வெளிப்படுத்தின விசேஷம் ஆகியவைகளே.

 

வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள் புதிய ஏற்பாட்டில் அடங்கி உள்ள I.கொரிந்தியரில் 13 ஆம் அதிகாரம், 1 முதல் 13 வசனங்கள் முடிய.

 

1.    நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

 

2.    நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

 

3.    எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

 

4.    அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.

5.    அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

 

6.    அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

 

7.    சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

 

8.    அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.

 

9.    நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.

 

10. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

 

11. நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

 

12. இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

 

13. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

 

 

 

G J Thamil Selvi

unread,
Sep 2, 2015, 11:57:52 AM9/2/15
to panb...@googlegroups.com
தற்போது என்று துவங்கும் அவ்வார்த்தையை தற்போதுள்ள என்று படிக்கவும்.

G J Thamil Selvi

unread,
Sep 2, 2015, 12:27:50 PM9/2/15
to panb...@googlegroups.com
பரிசுத்த வேதாகமத்தின்  பழைய ஏற்பாடின் முதல் ஆகமமான ஆதியாகமத்தைக் குறித்து கூகுளில் தேடுகையில் கீழ்கண்ட பகுதி கிடைத்தது. இப்பகுதியை வாசிக்கையில் இந்த ஆகமத்தை எழுதியவர்கள் ஆதாம் மற்றும் ஏவாள் என்பது போன்ற கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது எது வரையில் உண்மை என்பது எனக்குத் தெரியாது. இப்பகுதி திருமறைத் தீபம் என்ற வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

முதல் கோணல், முற்றும் கோணல்

Bible and Scienceசமீபத்தில் ஓர் ஆங்கிலக் கட்டுரையில் நான் ஆதியாகமத்தைப் பற்றிய ஒரு விஷயத்தை வாசிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ‘ஆதாமும். ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். வரலாற்று ஆதாமையும் (Historical Adam), கர்த்தர் அவனோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையையும், அவனே மானுடத்தின் பிரதிநிதி (Federal headship) என்பதையும் இன்று நேற்றில்லாமல் அடிப்படை நம்பிக்கைகளாகக் கொண்டமைந்ததே வேதபூர்வமான கிறிஸ்தவம். இவற்றை நிராகரிப்பதோ அல்லது இவற்றிற்கு மாறான வேறு விளக்கங்களைத் தருவதோ அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளை அடியோடு சிதைத்துவிடும். ஆதியாகமத்திற்கு புது விளக்கம் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் புதுவிளக்கங்களைக் கொடுக்கிறவர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள்; கிறிஸ்தவர்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

ஆதியாகமம் வேதத்தின் முதல் நூலாக மட்டும் இருக்கவில்லை; அனைத்திற்கும் ஆதாரமான ஆரம்ப நூலாகவும் இருக்கின்றது. ஆதியாகமத்தின் முதல் பதினோரு அதிகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றின் அடிப்படையிலேயே வேதத்தின் ஏனைய போதனைகள் அமைந்திருக்கின்றன. நான் பழைய ஏற்பாட்டு இறையியலைக் கற்றுக்கொண்ட இறையில் கல்லூரியில் அதைப் போதித்த, நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் ஜோன் வெயிட் (Professor John Waite) ஒரு முறை சொன்னார், ‘ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களை இல்லாமலாக்கினால் வேதம் இருக்க வழியில்லை’ என்று. இது சத்தியமான வார்த்தைகள். பிசாசு ஆதியாகமத்தைத் தாக்கும் முயற்சியை இன்றுவரைக் கைவிடவில்லை. ஆண்டவராகிய இயேசுவுக்கே வேதத்திற்கு புதுவிளக்கம் கொடுக்க முயன்றவனாயிற்றே அவன்.

ஆதியாகமத்தின் முதல் பதினோரு அத்தியாயங்களில் காணப்படும் அடிபடைப் போதனைகளை ஒரு முறை பார்ப்போம்.

  1. கர்த்தரைப் பற்றியும், திரியேக தேவனைப் பற்றியதுமான அடிப்படைப் போதனை (ஆதி 1).
  2. ஆறு நாட்களில் கர்த்தரால் உலகம் படைக்கப்பட்டவிதம் (ஆதி 1-2).
  3. தேவதூதர்கள் (ஆதி 1).
  4. ஆதாம், ஏவாள் படைக்கப்பட்ட விதம் (ஆதி 1-2).
  5. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விதிக்கப்பட்ட நியாயப்பிரமாணம் (ஆதி 3:2-3).
  6. ஆதாம், ஏவாளுக்கு விதிக்கப்பட்ட சமுதாயக் கடமைகள். (ஆதாமின் தலைமைத்துவமும், ஏவாளின் பங்கும்) (ஆதி 1-3).
  7. ஆணும், பெண்ணும் மட்டும் திருமணத்தில் இணைதல் (ஆதி 1-2).
  8. குடும்ப வாழ்க்கை (ஆதி 2-3).
  9. தொழில் (ஆதி 1-2).
  10. சபத்து நாள் (கிறிஸ்தவ ஓய்வு நாள்) (ஆதி 2).
  11. பிசாசு பற்றிய போதனை (ஆதி 2-3).
  12. பாவத்தின் தோற்றம், அதனால் ஏற்பட்ட சீரழிவு, பாவத்திற்குத் தண்டனை (ஆதி 2-3).
  13. கிறிஸ்தவ சுவிசேஷமும், இரட்சிப்பும் (ஆதி 3:15).
  14. கர்த்தரின் கோபமும், நியாயத்தீர்ப்பும் (ஆதி 9-11).

இத்தனைப் போதனைகளுக்குமான அத்திவாரத்தை நாம் ஆதியாகம் 1-11 வரையுள்ள அதிகாரங்களில் காண்கிறோம். இப்போதனைகளுக்கான புதிய ஏற்பாட்டின் விளக்கங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் அவர்களுடைய போதனைகளை நிலைநிறுத்துவதற்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்களைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதை மறுக்க முடியாது. உண்மையில் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இருபத்திஐந்து இடங்களில் ஆதியாகமத்தில் முதல் பதினொரு அதிகாரங்களின் பகுதிகளையே இயேசு கிறிஸ்துவும், ஏனைய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். அதுவும் இந்த ஆதியாகமப் பகுதிகளை எழுத்துபூர்வமாக, வரலாற்று நிகழ்வுகளாகக் கணித்தே விளக்கியுள்ளனர். அந்தளவுக்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்கள் முக்கியமானவை. இந்த அதிகாரங்களை சிதைத்தால் மட்டுமே வேதநூல்களில் ஏனைய பகுதிகளில் காணப்படும் போதனைகளுக்கு புதுவிளக்கம் கொடுக்க முடியும். இப்போது தெரிகிறதா, பலர் ஏன் இந்த அதிகாரங்களைச் சிதைக்கக் கங்கணம் கட்டிச் செயல்பட்டிருக்கிறார்கள், தொடர்ந்தும் செயல்பட்டுவருகிறார்கள் என்று.

ஆதியாகமம் கற்பனைக் கதையா?

லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் இந்த அதிகாரங்களைக் கற்பனைக் கதைகள் (Myth) என்று சொல்லுகிறார்கள். லிபரல் போதனையாளர்கள் வேத அதிகாரத்தில் நம்பிக்கையற்றவர்கள். வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் ஆதியாகமம் மெய்யான வரலாற்று நூலல்ல. லிபரல் இறையியல் அறிஞர்களுக்கு உதாரணமாக கார்ல் பார்த், எமில் புரூனர், புல்ட்மான் போன்றோரைக் குறிப்பிடலாம். வில்லியம் பார்க்கிளே, ஜேம்ஸ் டெனி போன்றோரும் இதே போக்கிலேயே இறையியல் விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர்.

இன்று சுவிசேஷ இயக்கத்தில் பலரும், நியோ-கல்வினிசம் என்று அழைக்கப்படும் புது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதியாகமத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டாலும், அதன் முதல் மூன்று அதிகாரங்களை, முக்கியமாக முதலாவதைக் கவிதையாகவும் (Poetical), உருவகமாகவும் (Allegorical or Figurative) பார்க்க முனைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே ஆதியாகமத்தைப் பற்றிய ஒரேவிதமான கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியாது. இவர்களில் பலர் ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் பல பகுதிகளை எழுத்துபூர்வமாகவும், சிலவற்றை உருவகமாகவும், அடையாள மொழியாகவும் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மட்டுமே இவர்களால் நாம் மேலே பார்த்த அடிப்படை உண்மைகளை நிராகரிக்கவோ அவற்றிற்கு புதுவிளக்கம் கொடுக்கவோ முடியும். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களைக் கவிதையாகவோ, உருவகமாகவோ அல்லது அடையாளமொழியாகவோ பார்க்கிறவர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவர்களில் Bruce Waltke, (who was professor of Old Testament at Westminster Theological Seminary), Fuller Seminary theologian Paul K. Jewet, Charles E. Hummel, John H. Stek, Howard Van Till, John Frame (who was a professor of theology at Westminster Seminary in Escondido, California) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆதியாகமத்தை வரலாற்று நூலாகக் கணிக்காமல் உருவகமாகவோ, இறையியல் போதனையை மட்டும் தரும் உருவகப் போதனையாகவோ மட்டும் கணிப்பது அநேக சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களிடமும், இவெஞ்சலிக்கள் இறையியல் கல்லூரிகளிலும், கிறிஸ்தவ கல்லூரிகளிலும், ஏன், பல சீர்திருத்த இறையியல் அறிஞர்களிடமும் இன்று பொதுவாக இருந்து வருகிறது. அதுவும் போஸ்ட்-மொடர்ன் காலப்பகுதியில் நாம் வாழ்வதால், உண்மை என்று எதுவும் இல்லை என்று வாதிடும் போஸ்ட்-மொடர்ன் சிந்தனை கிறிஸ்தவர்களைப் பாதித்து போஸ்ட்-மொடர்ன் சிந்தனையின் அடிப்படையில் ஆதியாகமப் பகுதிகளுக்கு விளக்கங்கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதை மேலைநாட்டுக் கிறிஸ்தவத்தில் அன்றாடம் காண்கிறோம். கீழைத்தேய நாடுகளுக்கு இந்தப்போக்கு நிச்சயம் ஏற்றுமதி செய்யப்படும். இது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.

ஆதியாகமத்தில் ஆரம்ப அதிகாரங்கள் கவிதையோ அல்லது உருவகமோ அல்ல, முழு வரலாற்று நூல் என்றும், உலகத்தோற்றத்தை விளக்கும் எழுத்துபூர்வமான நூல் என்றும் ஆதியில் இருந்து கிறிஸ்தவர்கள் நம்பி வந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு எப்படி ஆபத்து வந்தது? முதலில், விஞ்ஞான வளர்ச்சியும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்தித்து ஆய்வு செய்யும் முறையும் வளர ஆரம்பித்தது இந்த ஆபத்திற்கு வழிகோளியது. விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் நம்மைப் படைத்த கர்த்தரே. அவரின்றி மனிதனில் அறிவு மேம்பட வாய்ப்பில்லை. அந்த அறிவை மனிதன் படைத்தவருக்கு எதிராகப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து ஏற்படுகிறது. ஆதியில் மனிதன் பேருயரத்தில் ஒரு கோபுரத்தை உருவாக்கியதில் தவறில்லை (ஆதி 9). கர்த்தரை எட்டும் நோக்கத்தில், விண்ணைத்தொட அகங்காரத்தோடு அதைக் கட்டியதுதான் தவறு. விஞ்ஞானத்தை எதற்காக, எப்படி, எதில் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனத்தோடு இருக்க வேண்டும்.

வேதமும் விஞ்ஞானமும்

விஞ்ஞான வளர்ச்சியும், ஆய்வு மனப்பான்மையும் ஏற்பட்ட காலத்தில் இறையியலறிஞர்கள் இறையியல் கல்லூரிகளில் விஞ்ஞான அடிப்படையில் வேதத்தை ஆராயவும், அதற்கு விளக்கங்கொடுக்கவும் முற்பட்டார்கள் (Higher Criticism). விஞ்ஞானத்தின் அடிப்படையிலான வேத ஆய்வு முறை ஆதியாகமத்தின் வரலாற்று நிகழ்வுகளுக்கு உலகரீதியிலான விளக்கங்கொடுக்க வழிகோளியது. அநேகருடைய விஞ்ஞானக் கண்ணோட்டமே அவர்கள் ஏதேன் வாழ்க்கையையும், நோவா காலத்து ஜலப்பிரவாக உலக அழிவையும், பாபேல் கோபுரத்தையும் வரலாற்று நிகழ்வுகளாக ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. அத்தோடு கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் உருவாக்கியிருக்க முடியாது என்ற எண்ணமும் இவர்கள் மத்தியில் உருவானது. ஆதியாகமத்தில் ‘நாள்’ என்ற வார்த்தையை இருபத்திநான்கு மணித்தியாளங்கள் கொண்ட நாளாகப் பார்க்காமல் அதைவிட அதிகமான காலமாக விளக்கங்கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. டார்வினின் பரிமாணவளர்ச்சிக் கோட்பாட்டை (Evolutiontheory) நியாயப்படுத்தும் வகையில் ஆதியாகமத்திற்கான விளக்கங்கள் கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. ஆதியாகமத்தை இவர்கள் பொதுவாகக் கற்பனையாகவும், உருவகமாகவும், அடையாளமொழியாகவும் கருதி விளக்கினார்கள். இதை லிபரல் இறையியலறிஞர்களிடம் பார்க்கலாம். இந்தியாவில் முக்கியமாக யூனியன் பிப்பிளிக்கள் செமினரி, அரசரடி இறையியல் கல்லூரிகள் போன்றவற்றில் இந்தப் போக்கே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதை ஸ்ரீ லங்காவில் பிலிமத்தலாவை இறையியல் கல்லூரியிலும், லங்கா வேதாகமக் கல்லூரியிலும் காணலாம். பொதுவாகவே இந்தவகையில் போதனை தராத இறையியல் கல்லூரிகள் இருப்பது இன்று அரிதாக இருக்கின்றது.

கடவுளை அடிப்படையாகக் கொண்ட பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு

சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டபோதும் அதிலுள்ள அனைத்து சம்பவங்களையும், போதனைகளையும் எழுத்துபூர்வமாக எடுத்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டனர். இவர்கள் டார்வினின் லிபரல் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதற்கு ஒத்துப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க ஆரம்பித்தார்கள். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் வழியில் உருவான, கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் ஒரு போதனைக்குப் பெயர்தான் Theistic evolution. நியோ-கல்வினிசத்தைப் பின்பற்றும் டிம் கெலர் இதைத்தான் நம்புகிறார். இவரைப் பொறுத்தவரையில் ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் ஒரு கவிதை The Reason for God). இந்தப் போதனை, கர்த்தர் ஓரிரு அடிப்படை அற்புத செய்கைகளின் மூலம் உலகத்தையும், அதிலுள்ள அனைத்தையும் தோற்றுவித்தபோதும், தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அதற்குப் பிறகு பரிணாம வளர்ச்சிமுறையிலே உருவாயின என்று விளக்குகிறது. இந்தப் போதனை விஞ்ஞானத்தை உயர்வானதாகக் கணித்து அதற்கேற்ற முறையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறது. இந்த விளக்கத்தின்படி படைப்பில் கர்த்தரின் அற்புதச் செய்கைகளும், இயல்பான படிப்படியான பரிணாமவளர்ச்சியும் இணைந்து காணப்படுகின்றன. இது வேதம் போதிக்கும் உண்மையல்ல.

இடைவெளிக் கோட்பாடு

இன்னுமொரு கோட்பாடு ஆங்கிலத்தில் Gap theory என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போதனை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் நாளை இருபத்தி நான்கு மணித்தியாளங்கொண்ட நாளாக ஏற்றுக்கொண்டபோதும், ஒரு நாளுக்கும் அடுத்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தை அதைவிட நீண்ட காலப்பகுதியாக விளக்கங்கொடுக்கிறது. இதை Gap creationism என்றும் அழைப்பார்கள். இது வேறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது (ruin-restoration creationism, restoration creationism). இதிலும் வித்தியாசமான விளக்கங்கள் காணப்படுகின்றன. இந்தப் போதனை உலகம் மிகமிகப் பழமையானதாகவும், அது தோன்றுவதற்கு ஆறாயிரம் ஆண்டுகளைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளோ, அதைவிட நீண்ட காலங்களோ எடுத்திருக்க வேண்டும் என்று நிருபிக்கப் பார்க்கின்றது. இந்தப் போக்கை ‘நியோ’ அல்லது ‘நியூ-கல்வினிச’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் காண்கிறோம் (ஜோன் பைப்பர், டிம் கெலர்). இந்தப் போக்கிற்குக் காரணம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் உலகம் மிகப்பழமையானது என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என்று இவர்கள் நம்புவதால்தான். ஆகவே, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு இடங்கொடுக்கும் விதத்தில் இவர்கள் ஆதியாகமத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள்.

வேதத்தில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கை

‘படைப்பை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி விளக்க முடியாது’ என்று ஜோன் மெக்காத்தர் எழுதியிருக்கிறார். கர்த்தர் படைத்த அனைத்தையும் வைத்தே விஞ்ஞானிகளால் எந்த ஆய்வையும் செய்ய முடிகிறது. அதனால் படைப்புக்கு பின்னால் வந்த விஞ்ஞானம் படைப்பைப் பற்றி விளக்கங்கொடுக்க வழியில்லை. கர்த்தரின் அற்புத படைப்புச் செயலுக்கு எதிராக விளக்கங்கொடுக்கும் ‘இயற்கைவாதிகளைப்’ (Naturalisits) பார்த்து நாம் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தரின் வேதத்தில் நம்பிக்கை வைத்து வேதம் போதிப்பதை விசுவாசித்து தைரியத்தோடு விசுவாசிக்க வேண்டும், விளக்கவேண்டும். இவெஞ்சலிக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வெயின் குரூடம் (Wayne Grudem) என்ற இறையியலறிஞர், ‘உலகத்திற்கு எத்தனை வயது என்ற விஷயத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று அவருடைய இறையியல் விளக்க நூலில் எழுதியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இது வேதத்தின் ஏனைய போதனைகளைவிட முக்கியமானதல்ல. ஆனால், வெயின் குரூடத்தின் கூற்று மிகத்தவறானது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு இடங்கொடுத்து உலகத்தின் வயதைக் கூட்டிக்காட்ட முயலும் கூட்டம் வேத நம்பிக்கைகளை சிதரடிக்கப் பார்க்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்றைய சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்த பெரும்பாலான இறையியல் கல்லூரிகளும், அறிஞர்களும் உலகம் இளமையானது (young earth) என்ற நம்பிக்கையை என்றோ இழந்துவிட்டிருக்கிறார்கள்.

கர்த்தர் ஆறு நாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், ஒரு நாள் இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாள் என்பதையும், முதலாம் நாளுக்கும் இரண்டாம் நாளுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை என்பதையும், ஏனைய போதனைகளை வழங்கும் ஆதியாகமம் பதினொரு அதிகாரங்களையும் எழுத்துப்பூர்வமாக, உண்மை வரலாற்று நிகழ்வுகளாக ஏற்று, நம்பி விசுவாசிக்க வேண்டியது இன்று கிறிஸ்தவனின் தவிர்க்கமுடியாத கடமையாக இருக்கின்றது. இதற்கு கிறிஸ்தவனுக்குத் தேவை விசுவாசம் மட்டுமே. விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைத்து வேதத்தை அதற்கேற்றபடி மாற்றுவது பாலில் விஷத்தைக் கலப்பதற்கு சமமானதாகும்.

பரிணாம வளர்ச்சிக்கோட்பாட்டின் அடிப்படையிலான அனைத்து ஆதியாகம விளக்க முறைகளிலும், ஆதியாகமம் மெய்யான வரலாறு என்பதை மறுக்கும் போதனைகளிலும் உள்ள ஆபத்து என்ன தெரியுமா?

1. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதென்பதை இக்கொள்கைகள் மறுக்கின்றன.

பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களுக்கான எந்த விளக்கமும் கர்த்தரின் வேதம் அருளப்பட்ட முறையை சந்தேகக்கண்ணோடு பார்த்து அதை விசுவாசிக்க மறுக்கின்றன. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதாக (God breathed – theopneustos – 2 TIm 3:16) நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இதற்கு அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் சாதாரண  மனிதர்களைப் பயன்படுத்தி, அவர்களை வழிநடத்தி வேதத்தை எழுத வைத்தார் என்பதே. இதை ஆங்கிலத்தில், Inspiration என்று அழைப்பார்கள். இது வேதம் அருளப்பட்ட தன்மையைக் குறித்த முக்கிய உண்மை. உலக மனிதர்களின் எழுத்துக்களில் காணப்படாத ஒரு தெய்வீக வழிநடத்துதல் இது. அதனால்தான் வேதம் மனித எழுத்துகளைவிட மாறுபட்டதாக இருக்கின்றது. இந்தத் தெய்வீக ஆவியின் வழிநடத்துதல் வேதத்தின் போதனைகள் மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் வேதத்தின் வார்த்தைகளோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. அதாவது, பரிசுத்த ஆவியானவர் வேதத்தை ஊதி அருளியபோது அதை எழுதியவர்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துமாறும் பார்த்துக்கொண்டார். வேதம் எழுதப்பட்ட மூல மொழிகளில் (எபிரெயம்-கிரேக்கம்) ஒவ்வொரு வார்த்தையும், சகல பகுதிகளும் கர்த்தரால் தெரிந்து கொடுக்கப்பட்டவை (Verbal plenary inspirtation). அதனால்தான் வேதத்தில் காணப்படும் வார்த்தைகளையும், எந்தப் பகுதிகளையும் நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கமும் வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை சத்தியத்தை மாசுபடுத்துகின்றன; மறுக்கின்றன. அவை அனைத்துமே வேத வார்த்தைகளுக்கு கர்த்தர் தந்துள்ள அர்த்தத்தைவிட மறுபொருள் கொடுப்பதோடு, வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனையாகவும், கவிதை மொழியாகவும், உருவகமாகவும் பார்க்கின்றன. கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கத்தையும் Theistic evolution and Gap theory) நாம் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

2. வேதத்தின் அதிகாரத்தை நிராகரிக்கின்றன.

பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும், அதை அடிப்படையாகக் கொண்ட ஏனைய போதனகளும் (Theistic evolution and Gap theory) வேதத்தின் அதிகாரத்தை மாசுபடுத்துகின்றன. வேதவார்த்தைகளுக்கும், போதனைகளுக்கும் கர்த்தர் நினைத்திராத விளக்கங்களைக் கொடுக்கின்றபோது அத்தகைய செயல்கள் வேதத்தை மாசுபடுத்தி அதன் அதிகாரத்தைக் குறைவுபடுத்துகின்றன. வேதம் கர்த்தருடைய தவறுகளற்ற, சத்தியமான வார்த்தை என்பதை பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான சகல விளக்கங்களும் நிராகரிக்கின்றன. கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாட்களாக ஒவ்வொரு நாட்களும் இருந்தன என்பதையும் ஏற்றுக்கொள்ள இருதயம் மறுக்கின்றபோது அந்த இருதயத்தில் கர்த்தரின் வேதத்தைப் பற்றிய சந்தேகம் எழுந்துவிட்டதென்றே அர்த்தம்.

3. கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், அதோடு தொடர்புடைய Theistic evolution,  Gap theory  போன்றவையும் கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன. இறையாண்மையுள்ள கர்த்தரால் முடியாதது என்று ஏதாவது இருக்க முடியுமா? எதுவுமில்லாததிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனால் செய்ய முடியாதது என்ன? நம்மைப் படைத்த கர்த்தரால் செய்ய முடியாதது என்று என்ன இருக்கின்றது. நோவாவின் காலத்தில் உலகத்தை அழித்து எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, சோதோம், கொமோராவை அக்கினியினால் அழித்து, யோனைவை மீன் விழுங்க வைத்து இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களைச் செய்த கர்த்தருக்கு உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்குவது என்பது பெரிதா? இதை விசுவாசிக்கத் தெரியாத கிறிஸ்தவ விசுவாசம் எத்தகைய விசுவாசமாக இருக்க முடியும்?

4. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சிதைக்கின்றன.

ஆதியாகமத்தின் படைப்பு சம்பந்தமான மெய் வரலாற்றுப் போதனைகளும், அதன் முதல் பதினோரு அதிகாரங்களில் காணப்படும் சத்தியங்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தோடு தொடர்புள்ளவை என்பதைப் பலர் நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆதியாகமத்தில் 3:15ல் தான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முதன் முறையாக வாசிக்கிறோம். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் வரலாற்றுத் தன்மையை சிதைத்தால் கர்த்தரின் அற்புதங்களும், அவ்வதிகாரங்களின் போதனைகளும் சிதைக்கப்பட்டுவிடுகின்றன. மனிதனின் தோற்றம், ஏதேனில் அவனுடைய வாழ்க்கை, அவனுடைய பாவம் பற்றிய போதனைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவை பாதிப்புக்குள்ளாகும்போது கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைத் தன்மையும் பாதிப்புக்குள்ளாகின்றது. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, கிறிஸ்துவின் அற்புதச் செய்கைகள், கிறிஸ்துவின் மரணம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் இல்லை என்றாகி விடுகின்றது (1 கொரி 15:17-19). ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பைத் தவிர்க்க வழியில்லை. அதனால்தான் ‘ஆதாமும், ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி ஒருவர் எழுதியிருந்தார்.

எந்த ரூபத்திலும், எந்த நோக்கத்தோடும் ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறவர்களின் மாயையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடக்கூடாது. அத்தகைய புது விளக்கங்களை நம்ப ஆரம்பிப்பது கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையை இழப்பதில் மட்டுமே கொண்டுபோய் விடும். ஆதியாகமம் கர்த்தருடைய வார்த்தை என்ற அடிப்படை நம்பிக்கையோடே அதை அணுக வேண்டும். நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம். வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்கிறவனே கிறிஸ்தவன் (2 தீமோ 3:16-17). ஆதியாகமத்தையும், அதன் ஆரம்ப அதிகாரங்களில் காணப்படும் அத்தனை நிகழ்வுகளையும், போதனைகளையும் உள்ளது உள்ளபடியே விசுவாசிக்க மறுக்கும் இருதயம் கர்த்தரை விசுவாசிக்கும் இருதயமாக இருக்க வழியில்லை. கிறிஸ்துவோடு இல்லாதவன் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்காதவனை அவர் மறுஉலகத்தில் நிராகரிப்பார் என்பதை நினைவுகூருங்கள். அடுத்தமுறை ஆதியாகமத்தை வாசிக்கிறபோது அது ஆண்டவருடைய, ஆவியால் அருளப்பட்ட வார்த்தை என்ற தேவபயத்தோடு வாசியுங்கள். முதல் கோணல், முற்றும் கோணல் என்பது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இப்போது புரிகிறதா?

Helpful resources:

  1. Coming to Grips with Genesis: Biblical Authority and the Age of the Earth edited by Terry Mortenson, Thane Hutcherson Ury, Master Books.
  2. In the Beginning, E. J. Young, The Banner of Truth Trust.
  3. Genesis 3, E.J. Young, The Banner of Truth Trust.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

yesu rajan

unread,
Sep 2, 2015, 11:42:48 PM9/2/15
to panb...@googlegroups.com
//எந்த ரூபத்திலும், எந்த நோக்கத்தோடும் ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறவர்களின் மாயையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடக்கூடாது. அத்தகைய புது விளக்கங்களை நம்ப ஆரம்பிப்பது கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையை இழப்பதில் மட்டுமே கொண்டுபோய் விடும். ஆதியாகமம் கர்த்தருடைய வார்த்தை என்ற அடிப்படை நம்பிக்கையோடே அதை அணுக வேண்டும். நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம்//

மிகவும் உண்மையான வார்த்தைகள்

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 1:06:23 AM9/3/15
to panb...@googlegroups.com
//எந்த ரூபத்திலும், எந்த நோக்கத்தோடும் ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறவர்களின் மாயையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடக்கூடாது. அத்தகைய புது விளக்கங்களை நம்ப ஆரம்பிப்பது கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையை இழப்பதில் மட்டுமே கொண்டுபோய் விடும். ஆதியாகமம் கர்த்தருடைய வார்த்தை என்ற அடிப்படை நம்பிக்கையோடே அதை அணுக வேண்டும். நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம்//

மிகவும் உண்மையான வார்த்தைகள் 


(நீங்கள்  பதிவிலிருந்து சுட்டிக்காட்டியிருப்பது என்னுடைய கருத்துக்கள் அல்ல அதை எழுதியவர்களுடையது. புனிதம் என்று சொல்லக்கூடிய எந்த புத்தகமும், மதமும், கொள்கைகளும் மனிதர்களுக்காகவும் அவர்களைப் பக்குவப்படுத்துவதற்காகவும் நம்முன்னோர்களால் படைக்கப்பட்டது. அறிவுரைக் கூறினால் எந்த மனிதர்களும் விரும்புவதில்லை. எனவே கொஞ்சம் பயமுறுத்தி இதை செய்! இதை செய்யாதே என்று கூற வேண்டியிருக்கிறது. 

நீங்கள் சுட்டியுள்ள

நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம்//

இது மட்டுமே நிஜமானது. நாம் அவ்வாறு நம்பிக்கொண்டிருக்கிறோம். அது தவறான நம்பிக்கையாகவும் இருக்கலாம். அதனால் நன்மை ஏற்படும் போது அதனால் எந்த பாதகமும் இல்லை.

கிறிஸ்து ஒருவரே தேவன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கைகளை சீர்குலைப்பது நாகரீகமற்ற செயல்.

எந்த கடவுளர்களையும் நாம் கண்கூடாக கண்டதில்லை.

yesu rajan

unread,
Sep 3, 2015, 1:11:53 AM9/3/15
to panb...@googlegroups.com
//


கிறிஸ்து ஒருவரே தேவன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கைகளை சீர்குலைப்பது நாகரீகமற்ற செயல்.

எந்த கடவுளர்களையும் நாம் கண்கூடாக கண்டதில்லை.//

சில கிறித்தவர்கள் அவ்வாறு சொல்வதை கேட்கிறேன்

ஆனால் இந்த நாம ரூபங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான்

கிணற்றை தோண்ட நாம் கடப்பாறை மண்வெட்டி பயன்படுத்து கிறோம் அல்லது இயந்திரங்களை பயன்படுத்துகிறோம் ஆனால் தண்ணீர் வந்துவிட்டால்

இந்த சாமான்களை தூர எறிந்து விட்டு தண்ணீரை பருகுவோம்

ஆகவே எந்த கருவி என்றாலும் அதை பயன்படுத்துவது தண்ணீர் எடுக்கும் நோக்கத்தோடே

இயேசு என நம்பி அழைத்தால் வரும் இறைவன்

கிருஸ்ணா என அழைத்தால் வராமல் இருப்பானா?

அவன் காதுகள் எங்கும் இருக்கிறது

அவன் கண்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறது

எல்லா புகழும் அவனுக்கே

அவனே அல்லா

அவனே ஏசு
அவனே கிறித்து

எல்லாம் அவனே

 

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 1:21:58 AM9/3/15
to panb...@googlegroups.com
அவன் தானா? ஏன் அவளாக இருக்கக் கூடாதா?...அப்படி பாலினத்தில் அடைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவனோ ஒருத்தியோ இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

அது ஆற்றலாக இருந்தாலும்! (இதுவும் எனக்குத் தெரியாதாகையால்) இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு இல்லை. அவர்கள் முரண்களையும், கற்பிதங்களையும் விரும்புகிறார்கள்.


yesu rajan

unread,
Sep 3, 2015, 1:24:34 AM9/3/15
to panb...@googlegroups.com
//அவன் தானா? ஏன் அவளாக இருக்கக் கூடாதா?...அப்படி பாலினத்தில் அடைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவனோ ஒருத்தியோ இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.//

அவன் என்று சொல்வது ஒரு அடையாளத்துக்குதான்

மாபெரும் சக்தி அனைத்து வல்லவர்/ன் எப்படி பாலினத்துக்குள் அடைபட முடியும்

yesu rajan

unread,
Sep 3, 2015, 1:26:25 AM9/3/15
to panb...@googlegroups.com
//எந்த கடவுளர்களையும் நாம் கண்கூடாக கண்டதில்லை/

எந்த கடவுளர்களையும் நாம் கண்டால் கண்டதில்லை என்பது ரொம்ப பொதுவாக இருக்கு சகோ

உங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லிக்கிடலாமே இங்குள்ள யாருமே கடவுளை கண்ணால் கண்டதில்லை என்று உங்களால் அறுதி இட்டு கூற முடியாது

நமக்கு தெரியாது கடவுளை கண்டவர்கள் இருக்கலாம் இல்லையா?

துரை.ந.உ

unread,
Sep 3, 2015, 1:40:17 AM9/3/15
to பண்புடன்
2015-09-03 10:41 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//

கிறிஸ்து ஒருவரே தேவன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கைகளை சீர்குலைப்பது நாகரீகமற்ற செயல்.

எந்த கடவுளர்களையும் நாம் கண்கூடாக கண்டதில்லை.//

சில கிறித்தவர்கள் அவ்வாறு சொல்வதை கேட்கிறேன்


முதல் நிமிடம் அதிராமல் தாண்டினால் சாதனை..முழுதும் பார்த்தால் / கேட்டால் மூர்ர்சயாகிவிடும் வாய்ப்புண்டு​
 
​...முன்னேற்பாடோடு பார்க்கவும்
ஓ எம் ஜி !!!​

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 1:46:59 AM9/3/15
to panb...@googlegroups.com
//நமக்கு தெரியாது கடவுளை கண்டவர்கள் இருக்கலாம் இல்லையா? // (உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன்)
நான் பார்த்த கடவுளர்கள் அத்தனையரும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 1:48:21 AM9/3/15
to panb...@googlegroups.com
வீட்டுக்குப் பொய் தான் பார்ப்பேன்! 

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 1:49:22 AM9/3/15
to panb...@googlegroups.com
நான் கடவுளைப் பார்த்ததில்லை! ஒரு வேளை கடவுளைப்பார்த்தவர்கள் இருக்கலாம். அதையும் நான் மறுக்கவில்லை.

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 1:51:35 AM9/3/15
to பண்புடன்

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,

காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,

பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,

கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.


2015-09-03 10:51 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
அவன் தானா? ஏன் அவளாக இருக்கக் கூடாதா?...அப்படி பாலினத்தில் அடைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவனோ ஒருத்தியோ இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

அது ஆற்றலாக இருந்தாலும்! (இதுவும் எனக்குத் தெரியாதாகையால்) இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு இல்லை. அவர்கள் முரண்களையும், கற்பிதங்களையும் விரும்புகிறார்கள்.




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 2:07:50 AM9/3/15
to பண்புடன்
​ஜி 
கான்பரன்ஸ் ரூம்ல டீ, காபி பிஸ்கெட் எதுவும்  குடுத்தாங்களாமா ..

2015-09-03 11:09 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
முதல் நிமிடம் அதிராமல் தாண்டினால் சாதனை..முழுதும் பார்த்தால் / கேட்டால் மூர்ர்சயாகிவிடும் வாய்ப்புண்டு​
 
​...முன்னேற்பாடோடு பார்க்கவும்
ஓ எம் ஜி !!!​




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 2:08:59 AM9/3/15
to பண்புடன்
​கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

2015-09-03 11:19 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
நான் கடவுளைப் பார்த்ததில்லை! ஒரு வேளை கடவுளைப்பார்த்தவர்கள் இருக்கலாம். அதையும் நான் மறுக்கவில்லை.




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 2:09:30 AM9/3/15
to பண்புடன்
​நேரம் கிடைக்கும் போது வீட்டில் உண்மையும் பாருங்கள்

#சொல்வதெல்லாமுண்மை.....​

2015-09-03 11:18 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
வீட்டுக்குப் பொய் தான் பார்ப்பேன்! 




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 11:35:55 AM9/3/15
to panb...@googlegroups.com
வேதாகமத்தில் இரு மொழிப்பெயர்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. திரு விவிலியம் என்பது தூயத் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். பரிசுத்த வேதாகமத்தில் சமஸ்கிருத சொற்களுடன் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. என்னிடத்தில் இருக்கும் வேதாகமம் பரிசுத்த வேதாகமம் ஆகும். 

எடுத்தக்காட்டாக திருவிவிலியத்தில்

ஆதியாகமம் கீழ்கண்டவாறு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் 1

கடவுள் உலகைப் படைத்தல்


1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது.
ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது.
நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3 அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. 
4 கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5 கடவுள் ஒளிக்குப் 'பகல்' என்றும் இருளுக்கு 'இரவு' என்றும் பெயரிட்டார்.
மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.


பரிசுத்த வேதாகமத்தில் கீழ்கண்டவாறு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

1.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் திருஷ்டித்தார்.

2.பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது;  ஆழத்தின் மேல் இருள் இருந்தது;  தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4.வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5.தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.


--

G J Thamil Selvi

unread,
Sep 3, 2015, 2:05:04 PM9/3/15
to panb...@googlegroups.com
வேதாகமத்தில் பழைய ஏற்பாடு எபிரேயு மொழியிலிருந்து தமிழுக்கும், புதிய ஏற்பாடு மூல பாஷையாகிற கிரேக்கிலிருந்து தமிழுக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆதியாகமத்தில் முதல் வசனம் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார் என்றிருக்கிறது.

வானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானம் அல்லது ஆகாயம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது வளிமண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். வானியலில்வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே சூரியன்நிலாவிண்மீன்கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம். முகில்வானவில்வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும்பொழிவு (வானிலையியல்)மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே.

வானம்
அந்திநேரத்தில், சூரியன் மறையும்போது வானில் தோன்றும் செம்மஞ்சள் நிற வானம்
புவியிலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு அப்பால் இருந்து பார்க்கையில், வானின் நிறம்வேறுபட்ட தோற்றங்களைக் காட்டும். (நிலைத்த இறக்கை வானூர்தியில்இருந்து பெறப்பட்ட படம்)

பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும்[1][2][3][4]. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமமானது, சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறுநிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது. நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதாகருநீலம்ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் க்கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்திநேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jump up John Tyndall (December 1868). "On the Blue Colour of the Sky, the Polarization of Skylight, and on the Polarization of Light by Cloudy Matter Generally".Proceedings of the Royal Society of London 17: pp. 223–233. doi:10.1098/rspl.1868.0033.
  2. Jump up Lord Rayleigh (June 1871). "On the scattering of light by small particles". Philosophical Magazine 41, 275: pp. 447–451.
  3. Jump up J.G. Watson (June 2002). "Visibility: Science and Regulation"J. Air & Waste Manage. Assoc 52: pp. 628–713. பார்த்த நாள்: 2007-04-19.
  4. Jump up Gibbs, Philip (May 1997). "Why is the sky Blue?". Usenet Physics FAQ. பார்த்த நாள் 11 December 2012.















புவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவி  புவியின் வானிலைக் குறியீடு
அப்போலோ 17லிருந்து காணம் புவியின் வண்ணப் படம்
அப்போலோ 17லிருந்து எடுக்கப் பட்ட புகழ்மிக்க வண்ணப் படிமம்
தகுதி நிலை
பெயரடைTerrestrial, Terran, Telluric, Tellurian, Earthly
சுற்றுப்பாதை பண்புகள்
காலகட்டம் J2000.0[note 1]
ஞாயிற்றண்மை வீச்சு147,098,074 km
0.9832898912 AU
அரைப்பேரச்சு149,597,887.5 km
1.0000001124 AU
வட்டவிலகல்0.016710219
சுற்றுக்காலம்365.256366 days
1.0000175 yr
சராசரி சுற்றுப்பாதை வேகம்29.783 km/s
107,218 km/h
சாய்வுக் கோணம்1°34'43.3"[1]
to Invariable plane
நெடுவரை இறங்கு கணு348.73936°
இறங்கு கணு சிறும வீச்சுக் கோணம்114.20783°
துணைக்கோள்1 (the Moon)
இயற்பியல் பண்புகள்
சராசரி ஆரம்6,371.0 km[2]
நடுவரை ஆரம்6,378.1 km[3]
துருவ ஆரம்6,356.8 km[4]
சமதளமாக்கல்0.0033528[3]
சுற்றளவு40,075.02 km (equatorial)
40,007.86 km (meridional)
40,041.47 km (mean)
நீள்கோளமேற்பரப்பளவு510,072,000 km²[5][6][note 2]

148,940,000 km² land  (29.2 %)

361,132,000 km² water (70.8 %)
கனஅளவு1.0832073×1012 km3
நிறை5.9736×1024 kg[7]
சராசரி அடர்த்தி5.5153 g/cm3
நடுவரை நில ஈர்ப்பு9.780327 m/s²[8]
0.99732 g
விடுபடு திசைவேகம்11.186 km/s 
உடு சுழற்சிக் காலம்0.99726968 d[9]
23h 56m 4.100s
நடுவரை சுழற்சி திசைவேகம்1,674.4 km/h (465.1 m/s)
கவிழ்ப்பச்சு23.439281°
எதிரொளிதிறன்0.367[7]
மேற்பரப்புவெப்பம்
   கெல்வின்
   செல்சியஸ்
குறைநடுமிகை
184 K287 K331 K
−89 °C14 °C57.7 °C
வளிமண்டலம்
மேற்பரப்புஅழுத்தம்101.3 kPa (MSL)
பொதிவு78.08% Nitrogen (N2)
20.95% Oxygen (O2)
0.93% Argon
0.038% Carbon dioxide
About 1% water vapor (varies with climate)[7]

புவி (Earthசூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள்விட்டம்நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம்,நீலக்கோள் ,[note 3] எனவும் குறிப்பிடுகின்றனர்.

மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் [10] வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில்உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது,[11][12][13][14] மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன்வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின, ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது.[15] இக்காலகட்டங்களில் புவியின் பௌதிக தன்மையினாலும் புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. தற்போதுள்ள, உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[16]

புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள்தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது, மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகம் எனலாம்.[17] [18][19] அடர்ந்த திட மூடகம் (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளி மையம் மற்றும் திட உள் மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது.

புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனயும் சுற்றி வருகிறன்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம்.[note 4]புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து,[20] 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு வெப்ப ஆண்டுக்கு (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைகோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனை சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்ச்சியையும் சிறிது சிறிதாக குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (Late Heavy Bombardment) நடந்த வேளையில் பெரு விண்கற்கள் (asteroid) தாக்கம் புவியின் சுற்று சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது.

புவியின் கனிம வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, தட்டையான புவி அல்லதுஅண்டத்தின் மையத்தில் புவி உள்ளது போன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளடக்கம்

  [மறை

காலவரிசை[தொகு]

அறிவியல் அறிஞர்கள் புவியின் கடந்த கால வரலாற்றை பற்றி விரிவாக வரையறுத்துள்ளனர். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பழமையான பொருள் 4.5672 ± 0.0006 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது.[21] கடந்த 4.54 பில்லியன் வருடங்களுக்குள் (1% ஐயப்பாட்டுடன்)[11][12][13][14] பரிதி உருவாகி, எஞ்சிய வாயு மற்றும் தூசுப்பொருட்களால் ஆகிய தட்டு வடிவத்தில் இருந்த சூரிய நெபுலாவிலிருந்து புவி மற்றும் மற்ற கோள்கள் தோன்றின. இவ்வாறு இயற்கையான சேர்மானத்தால் 10–20 மில்லியன் வருடங்களுக்குள் புவியின் பெரும்பான்மையான பகுதி உருவாகியது.[22] வளிமண்டலத்தில் நீர் சேர ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய நிலையில் இருந்த புவியின் மேற்பரப்பு குளிர்ந்து இறுகத் தொடங்கியது. இதற்குப்பின் புவியின் இயற்கை துணைக்கோள் நிலா உருவானது. நிலா, செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த ஒரு விண் வெளி பொருள் (தீயா என்று சில சமயம் அழைக்கப்படும்), புவியின் பத்தின் ஒரு பங்கு திண்மத்தை [23] கொண்டதுமாகிய அப்பொருள் புவியின் மீது கொண்ட தாக்கத்தால் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.[24] இவ்வேற்றுலக பொருளின் ஒரு பகுதி புவியுடன் கலந்திருக்கலாம் எனவும் மற்ற பகுதிகள் விண் வெளியில் சிதறியும், புவியின் காந்த விசையால் புவியை சுற்றும் பாதையை அடைந்து சந்திரனாகவும் மாறியிருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது.

எரிமலை சீற்றம் மற்றும் வாயுக்களின் வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால புவியின் வளிமண்டலத்தை உருவாக்கின. விண் பெருகற்கள், வால் நட்சத்திரம், பெரிய முன்கிரகங்கள் மற்றும் நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள சூரிய மண்டலத்திலுள்ள விண் வெளிப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பனிக்கட்டி, நீர் ஆகியனவும் வளிமண்டலத்திலிருந்து சுருங்கும் நீராவியினாலும்சமுத்திரங்கள் உருவாகின.[25]

கண்டங்களின் படிப்படியான வளர்ச்சியை விவரிக்க இரு மாதிரிகள் விவரிக்கப்பட்டுள்ளன:[26] இன்றுவரை நிலையான மாற்றத்தினால் அவை உண்டானது என்பதும்[27] மற்றொன்று புவியின் ஆரம்பகாலத்திலேயே துரித மாற்றத்தினால் அவை ஏற்பட்டன என்பதுவாகும்.[28] தற்போதைய ஆய்வின்படி இரண்டாவது கூற்றே, அதாவது புவியின் ஆரம்பத்திலேயே துரித வளர்ச்சியுடன் கண்டங்களின் ஓடு[29] உருவாகிவிட்டதென்றும், பிறகு அவை நிரந்தர கண்ட பரப்பாக உருவாகியதே ஏற்கக்கூடியதாக உள்ளது.[30][31][32] பல நூறு மில்லியன் வருட கால அளவில் நோக்கும் போது, புவியின் மேற்பரப்பு கண்டங்கள் தொடர்ச்சியாக உருவாவதாலும் அழிவதாலும் மாறிக்கொண்டு வந்துள்ளது. இதனால் கண்டங்கள் புவியின் மேற்பரப்பில் நகர்ந்து எப்போதாவது ஒன்றோடு ஒன்று இணைந்து மகா கண்டங்கள் உருவாகின. தோராயமாக 750 மில்லியன் வருடங்களுக்கு முன் (மிமு), அப்போதறிந்த மகாகண்டம் ரோடினியா (Rodinia), உடைய ஆரம்பித்தது. அது பின்னர் இணைந்து பென்னோஷயா (Pannotia) என்ற கண்டமாக உருமாறி பின், 600–540 மிமுவின், பின் இறுதியில் பாஜ்சியா (Pangaea) என்ற கண்டமாக உருவடைந்து, பின் 180 மிமுவில் மீண்டும் உடைந்து பிரிந்தது.[33]

உயிர்களின் பரிணாம வளர்ச்சி[தொகு]

இன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது.[34] நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றல் மிகு வேதியியல் வினைகளால் சுயமாக உருவாகும் மூலக்கூறுகள் ஏற்பட்டன, பிறகு அரை பில்லியன் வருடங்களுக்குள் எல்லாஉயிரினங்களின் பொது மூதாதையரான உயிரினம் உருவாகியது.[35] தாவர உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத் தன்மையினால் சூரிய ஆற்றலை உபயோகப்படுத்தின; இந்த வேதி வினையினால் ஏற்பட்ட பிராணவாயு (ஆக்சிஜன்) வளிமண்டலத்தை நிரப்பியது. மேலும் ஓசோன் (ஆக்சிசன் மூலக்கூறின் ஒருவடிவம் [O3]) படலம் மேல் வளி மண்டலத்தில் உருவாக உதவியது. பல சிறு செல்கள் பெரிய செல்களுடன் சேர்ந்ததினால்நுணுக்கமான செல்கள் யூகேர்யோட்டுகள் (eukaryotes) உருவாகின.[36] இப்படிப்பட்ட காலனிகளில் அடங்கிய செல்கள் தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியபோது உண்மையான பல செல் படைத்த உயிரினங்கள் உருவாகின. மேலும் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் அமைந்த ஓசோன் மண்டலம்வெளியிலிருந்து புவிக்கு வரும், கேடு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியதால் பூவுலகில் உயிர்கள் தழைத்தன.[37]

1960 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்கள், நியோபுரோட்டிசோயிக் காலத்தில் அதாவது 750 மற்றும் 580 மிமுவில் புவியின் பெரும்பகுதி பனியால் மூடியிருந்ததென்றும் மற்றும் மிகப்பல பனிக்கட்டியாறுகள் ஓடியதென்றும் அறிவிக்கின்றனர். அந்தக் காலத்திய புவியை "பனிப்பந்து புவி" என அழைக்கின்றனர். அந்த காலகட்டம் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது ஏனெனில் இது பல செல் உயிரினங்கள் தோன்றி பரவிய கேம்ப்ரியன் விரிவாக்க காலத்திற்கு முன்னால் வந்தது.[38]

கேம்ப்ரியன் காலத்து விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.[39] கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்களைத் தவிர்த்து மற்ற எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியைப் போன்ற ஷ்ரூ என்றழைக்கப்படும் பாலுண்ணிகளே. கடந்த 65 மில்லியன் வருடங்களில் பாலுண்ணிகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன, சில மில்லியன் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்கா கண்டத்தில் மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது.[40]அவ்வாறு நின்றதால் கருவிகளை உபயோகிக்கவும் தகவல் பரிமாறவும் முடிந்தது, இதுவே மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த மனிதனே முதலில் புவியில் விவசாயம் மற்றும் நாகரீகத்தையும் அறிமுகப்படுத்தினான். இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் போக்கு இவற்றை மாற்றியமைத்தது.[41]

இப்போதுள்ள பனிக்கால சுழற்சி 40 மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்டதென்றும் மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன் பிளாய்டோசீன் காலத்தில் தீவிரமடைந்தது என்றும் கூறப்படுகிறது. அது முதல் துருவப் பகுதிகளில் உள்ள பனி 40–100,000 ஆண்டுகளுக்கொரு முறை உருகியும், உறைந்தும் ஏற்படுகின்றது. கடைசி பனிக்காலம் 10,000 வருடங்களுக்கு முந்தி முடிவடைந்தது.[42]

எதிர்காலம்[தொகு]

பரிதியின் வாழ்க்கைச் சுழற்சி புவியின் எதிர்காலம் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியனின் உட்கருவில் சேர்ந்து வரும் ஹீலியம் வாயுவினால், அதன் மொத்த ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும். சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த 1.1கிகா ஆண்டுகளில் (1.1 நூறு கோடி வருடங்கள்) 10 சதவிகிதமும் அடுத்த 3.5 கிகா [43] ஆண்டுகளில் 40 சதவிகிதமும் அதிகரிக்கும். காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும் அதிக கதிர்வீச்சு, கடல் இழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.[44]

புவியின் மேற்பரப்பு வெப்பம் அதிகரிப்பதால் அசேதன CO2 சுழற்சியை துரிதப்படுத்தி, அடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு (C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்) வளிமண்டலத்தில் குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிஜன் தடைப்படும், அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும்.[45] சூரியன் அழிவில்லாத மற்றும் நிலையான ஒன்றாக இருந்தாலும், குறைந்த எரிமலையாக்கத்தின் காரணமாக புவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திருக்ககூடும்.[46] அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும்.[16]மேலும் புவியின் சராசரி வெப்பநிலை 70 °C யை வந்தடையும்.[45] அந்தக் காலக் கட்டத்திலிருந்து அடுத்த 500 மில்லியன் வருடங்களுக்கு புவி வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரோஜன் நீக்கப்படுமானால் இது மேலும் 2.3 பில்லியன் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.[47]

சூரியன் அதன் பரிணாம வளர்ச்சியில் மற்றும் 5 பில்லியன் வருடங்களில் ஒரு மாபெரும் சிகப்பு நட்சத்திரமாக மாறும். சூரியன் தற்போதைய அரைவிட்டத்தை போல தோராயமாக 250 மடங்கு விரிவடையும் என்று உருமாதிரிகள் கணிக்கின்றன.1 AU (150,000,000 km)[43][48] புவியின் தலைவிதி தெளிவாகத் தெரியவில்லை. மாபெரும் சிகப்பு நட்சத்திரமாகிய சூரியன், தன்னுடைய அதிகபட்ச ஆரத்தை எட்டும் போது, சூரியன் தன் எடையில் 30% த்தை இழக்கும் அப்போது அலைகளினால் ஏற்படும் தாக்கம் இன்றியே, புவி சூரியனிலிருந்து 1.7 AU (250,000,000 km) அளவு கொண்ட சுற்றுப்பாதைக்குத் தள்ளப்படலாம். அவ்வாறு தள்ளிப்போவதால், சூரியனின் வெளி மண்டலத்தின் தாக்கத்திலிருந்து புவி தன்னைக் காத்துக் கொள்ளும், ஆனால் சூரியனின் அதிகமாகும் ஒளிர்வுக் கதிர்களால், எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்.[43] எனினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி அலைகளால் ஏற்படும் தாக்கத்தால், புவி அதன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, மாபெரும் சிகப்பு நட்சத்திரமான சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்த முழுவதுமாக கரைந்து போகலாம்.[48]

புவியின் சேர்மானமும் கட்டமைப்பும்[தொகு]

புவி ஒரு திடமான கிரகம், அதாவது முழுவதும் காற்றாலே ஆன மாபெரும் வாயுக்கிரகமான வியாழன் போலல்லாது கடினமான உடலால் ஆனது. இது சூரியக் குடும்பத்திலுள்ள நான்கு திட கிரகங்களுள் உருவத்திலும் திண்மத்திலும் மிகப் பெரியது. இந்த நான்கு கிரகங்களில், புவி அதிக அடர்த்தியானதும், மிகுந்த மேற்பரப்பு புவியீர்ப்பு விசையைக் கொண்டதும், வலிமையான காந்தப் புலனைக் கொண்டதும் மற்றும் வேகமான சுழற்ச்சியைக் கொண்டதுமாகும்.[49] திடக் கிரகங்களிலேயே புவியில் மட்டுமே டெக்டோனிக் தட்டுகளின் நகர்தல் காணப்படுகிறது.[50]

வடிவம்[தொகு]

உட்கிரகங்களின் அளவு ஒப்பீடு (இடமிருந்து வலமாக): புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்

புவியின் உருவம் துருவங்களில் தட்டையாகவும் நிலநடுக் கோட்டிற்கு அருகில் விரிவடைந்தும் உள்ளநீள்வட்ட கோளத்தைப் போல் காணப்படுகின்றது.[51] புவியின் சுழற்சியால் இந்த இடை விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் விட்டங்களை ஒப்பிடுகையில் நிலநடுக்கோடு துருவங்களை விட 43 கிமீ அதிகமாயுள்ளது.[52] இக் கோளத்தின் சராசரி விட்டம் 12,742 கிமீ அதாவது 40,000 கிமீ/π, ஏனென்றால் மீட்டரைமுதலில் வரையறுக்கும் போது அது பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்திற்கு பிரான்ஸில் உள்ளபாரிஸ் நகர வழியாக கணக்கிடும் தூரத்தில் 1/10,000,000 ஈடாக கொள்ளப்பட்டது.[53]

புவி அதன் இடவமைப்பான (topography) சிறு மேடு பள்ளங்களை வைத்து காணும் போது கோள வடிவிலிருந்து புவி மாறுபடும் ஆனால் மொத்தத்தில் இந்த வேறுபாடு மிகவும் சிறியது: உண்மையான கோளத்தோடு ஒப்பிடுகையில் புவி 584 அல்லது 0.17% விலகியுள்ளது, இது பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பில்லியர்ட் பந்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய 0.22% மாற்றத்தை விட சிறியதே.[54]புவியின் மேற்பரப்பில் மிக அதிகமாக கோள வடிவிலிருந்து விலகியுள்ள இரு இடங்கள் எவரஸ்ட் சிகரம் (கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம்) மற்றும்மரியானா ட்ரென்ச் (கடல் மட்டத்திலிருந்து 10,911 மீ கீழுள்ளது). புவி, நிலநடுக்கோட்டருகே விரிந்திருப்பதால் பூமியின் நடுவிலிருந்து மிகவும் தள்ளி உள்ள இடம் நில நடுக்கோட்டருகே உள்ள ஈக்வெடார் நாட்டின் (Ecuador) சிம்போராசோ சிகரமாகும்.[55][56]

எப்.டபிள்யூ. கிளார்க்கின் ஆக்சைடு அட்டவணை
சேர்மம்சூத்திரம்சேர்மானம்
சிலிக்காSiO259.71%
அலுமினாAl2O315.41%
சுண்ணாம்புCaO4.90%
மெக்னீஷியாMgO4.36%
சோடியம் ஆக்சைடுNa2O3.55%
இரும்பு (II) ஆக்சைடுFeO3.52%
பொட்டாஷியம் ஆக்சைடுK2O2.80%
இரும்பு(III) ஆக்சைடுFe2O32.63%
நீர்H2O1.52%
டைட்டானியம் டை ஆக்சைடுTiO20.60%
பாஸ்பரஸ் பென்டாக்சைடுP2O50.22%
மொத்தம்99.22%

புவியின் இரசாயன சேர்மானம்[தொகு]

பூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும் அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது.[57]

புவியியலாளர் எப். டபிள்யூ. கிளார்க் 47 விழுக்காட்டுக்கு சிறிது கூடதலான பிராணவாயு இருப்பதாக கணக்கிட்டுள்ளார். பூமியின் மேற்பரப்பில் பரவியிருக்கும் கற்கள் பெரும்பாலும் ஆக்சைடுகளாலேயே ஆனது. மற்ற குளோரின், சல்பர், ப்ளூரின் இவை 1% க்குள் அடங்கும். இவற்றில் முதன்மையான ஆக்சைடுகள் சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்சைடு, சுண்ணாம்பு, மெக்னீசியா, பொட்டாஷ் மற்றும் சோடா ஆகும். சிலிகா அமிலத்தைப் போல் செயல்பட்டு சிலிக்கேட்டுகளை உருவாக்குகின்றது. பெரும்பாலும் தீப்பாறையில் காணப்படும் எல்லா கனிமங்களும் இதைப் போலவே செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,672 வகையான பாறைகளை ஆராய்ந்து பார்த்ததில் புவியியலாளர் கிளார்க் 11 வகையான ஆக்சைடுகள் (வலது பக்கம் உள்ள அட்டவணையைப் பார்க்க) 99.22% இருப்பதாக கண்டறிந்துள்ளார். இதர எல்லா தனிமங்களும் வெகு சிறிதளவே இவற்றில் அடங்கியுள்ளது.[note 5]

புவியின் உள்கட்டமைப்பு[தொகு]

முதன்மைக் கட்டுரை: புவியின் கட்டமைப்பு

புவியின் உட்பகுதி மற்ற திட கோள்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல் (பாய்வு) பண்புகளின் திடப்போருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது. புவியின் மேலோடு மூடகத்திலிருந்து மோஹோரோவிசிக் தொடர்பின்மையினால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலோட்டின் தடிமன் சமச்சீராக இல்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கி.மீட்டரும் நிலப்பரப்பில் 30–50 கி.மீ. வரையிலும் உள்ளது. புவியின் மேலோடு மற்றும் குளிர்ந்த, கடினமான மேல் மூடகம் இணைந்தது லித்தோ அடுக்கு (lithosphere) ஆகும்; நிலவியல் பலகைகள் இந்த லித்தோ அடுக்கிலேயே அமைந்துள்ளது. லித்தோ அடுக்கிற்கு கீழே இருப்பது அஸ்த்னோ அடுக்கு (asthenosphere), ஒப்பிடுகையில் குறைந்த பாகு நிலையில் உள்ள இந்த படிவத்தின் மேலே லித்தோ அடுக்கு நகர்கின்றது. மூடகத்தினூடே முக்கியமான பளிங்கு கட்டமைப்பு மாறுதல்கள் 410 முதல் 660 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது, இந்த மாறுதல் வளையம் மேல் மற்றும் அடி மூடக படிவங்களைப் பிரிக்கின்றது. மூடகத்தினூடே மிகவும் குறைந்த பாகுநிலையில் வெளிக்கருவும் அதனடியில் திடமான உட்கருவும் உள்ளது.[58] உட்கருவானது மற்ற புவியின் பகுதிகளை விட அதிகமான கோண வேகத்தில் சுழல்கிறது, அதாவது ஒவ்வொரு வருடமும் 0.1–0.5° அதிகமாகிறது.[59]

புவியின் பல்வேறு அடுக்குகளின் தோற்றம்
Earth-crust-cutaway-Tamil.png

உட்கரு முதல் எக்சோ அடுக்கு வரையிலான புவியின் குறுக்கு வெட்டு தோற்றம்.
ஆழம்
கிமீ
புவியின் பல்வேறு அடுக்குஅடர்த்தி
கி/செமீ3
0–60லித்தோ அடுக்கு[note 6]
0–35...மேல் ஓடு[note 7]2.2–2.9
35–60மேல் மூடகம்3.4–4.4
100–700மூடகம்3.4–5.6
35–2890அஸ்த்னோ அடுக்கு
2890–5100வெளிக்கருவம்9.9–12.2
5100–6378உட்கருவம்12.8–13.1

பூமியின் வெப்பம்[தொகு]

பூமியின் உட்புற வெப்பம் கிரகச் சேர்க்கையினால் உண்டாகும் மீத வெப்பத்தாலும் (சுமார் 20%) மற்றும் அணுச் சிதைவுகளாலும் (80%) உருவானது.[60]பூமியில் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் ஐசோடோப்புகள் பொட்டாசியம்-40யுரேனியம்-238, யுரேனியம்-235 மற்றும் தோரியம்-232 ஆகும்.[61]பூமியின் மத்தியில் வெப்பம் 7,000 கெல்வினையும் மற்றும் அழுத்தம் 360 கிகாபா (GPa)-வையும் அடையலாம்.[62] பூமியின் வெப்பம் பெரும்பாலும் அணுச்சிதைவிலிருந்து உருவாவதால், அறிவியலாளர்கள் பூமியின் ஆரம்பகால கட்டத்தில், குறைந்த அரை வாழ்வு கொண்ட ஐசோடோப்புகள் மறையுமுன், புவியின் வெப்பம் அதிகமாயிருந்திருக்கும் என்றும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன் [60] தற்போதைய வெப்பத்தை விட இருமடங்கு வெப்பம் உற்பத்தி ஆகிய போது, பூமியின் வெப்பம்சார் தன்மைகள் மாறியிருக்கும், அதிகமான மூடக பரப்பலும்டெக்டோனிக் பலகை நகர்தலும், மேலும்கோமடைட்ஸ் (komatiites) என்ற தீப்பாறைகள் உருவானதும் (இவை இன்று உருவாவதில்லை) ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றனர்.[63]

தற்போது அதிக வெப்பத்தை உருவாக்கும் ஐசோடோப்புகள்
[64]
ஐசோடோப்வெளியிடும் வெப்பம் [வா/கிகி ஐசோடோப்]அரை வாழ்வு [ஆண்டு]சராசரி மூடக அடர்த்தி [கிகி ஐசோடோப்/கிகி மூடகம்]வெளியிடும் வெப்பம் [வா/கிகி மூடகம்]
238U9.46 × 10-54.47 × 10930.8 × 10-92.91 × 10-12
235U5.69 × 10-47.04 × 1080.22 × 10-91.25 × 10-13
232Th2.64 × 10-51.40 × 1010124 × 10-93.27 × 10-12
40K2.92 × 10-51.25 × 10936.9 × 10-91.08 × 10-12

பூமியிலிருந்து ஏற்படும் மொத்த வெப்ப இழப்பு 4.2 × 1013 Watts163 4.2 × 1013 Watts[65] உட்கருவின் வெப்ப ஆற்றலில் ஒரு பகுதி மூடக ஆழ் கிணறுகளின்(mantle plumes) மூலமாக மூடகத்திற்கு கடத்தப்படுகிறது; இது ஒருவகை அதி வெப்பப் பாறை எனலாம். இந்த வெப்ப ஆழ் கிணறுகள் வெப்ப மையங்களையும் வெப்ப பாறை வெள்ளத்தையும் ஏற்படுத்தவல்லது.[66] பூமியின் மிகையான வெப்ப இழப்பு டெக்டோனிக் பலகை நகர்வதாலும் நடுக்கடல் மேடுகளுடன் சேர்ந்து மூடகங்கள் மேல்நோக்கி நகர்வதாலும் ஏற்படுகின்றது. இறுதியாக மிக அதிக வெப்ப இழப்பு, லித்தோ அடுக்கின் வெப்ப கடத்தலால் ஏற்படும், அதாவது பெரும்பாலும் அவை கடல் வழியே ஏற்படும் ஏனெனில் தரையை விட கடலினடியில் உள்ள லித்தோ அடுக்கின் பருமன் குறைவு.[65]

நிலப்பலகைத் தட்டு[தொகு]

புவியின் முக்கிய தட்டுகள் [67]
Plates tect2 ta.svg
தட்டின் பெயர்பரப்பளவு
106கி.மீ.²
ஆப்பிரிக்க தட்டு[note 8]78.0
அண்டார்டித் தட்டு60.9
ஆத்திரேலியத் தட்டு47.2
யுரேசியத் தட்டு67.8
வட அமெரிக்கத் தட்டுத் தட்டு75.9
தென் அமெரிக்கத் தட்டு43.6
பசுபிக் தட்டு103.3
முதன்மைக் கட்டுரை: நிலப்பலகையியல்

மிகவும் இறுக்கமான புவியின் மேல் பரப்பு, லித்தோ அடுக்கு எனப்படும் இது, நிலப்பலகைத் தட்டுகளாகஉடைந்து பிரிந்திருக்கின்றது. இந்தத் தட்டுகள் இறுக்கமான அமைப்புகளைக் கொண்டது மேலும் அவை ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை முறையேகுறுகும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்தல், விலகும் எல்லைகள், பலகைகள் ஒன்றைவிட்டு மற்றொன்று விலகுதல் மற்றும் உருமாறும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்வது என்பனவாம். இந்த செயல்களால் தட்டுகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடிப் படுபள்ளங்கள்உருவாகுகின்றன.[68] நிலப்பலகைத் தட்டுகள் அசுதனோ அடுக்கின் மேல் நகர்ந்துச் செல்கின்றது, அதாவது இவ்வடுக்கின் பாகு நிலையிலுள்ள ஆனால் திடமான மேல் மூடகத்தின் பகுதிகள் நிலப்பலகைத் தட்டுகளுடன் நகரக்கூடிய தன்மையைக் கொண்டதாய் உள்ளது,[69] மேலும் இவற்றின் இயக்கம் புவியின் மூடகத்தின் உள்ளே ஏற்படும் இயக்க மாதிரிகளை சார்ந்தே அமைகின்றது.

நிலப்பலகை தட்டுகள் கோளின் மேற்பரப்பில் நகர்வதால், குறுகும் எல்லைகளில் உள்ள பெருங்கடல் தரைகள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகின்றது. அதே சமயம், தட்டுகளில் விலகு எல்லைகளால் மூடகப் பொருட்கள் வெளியேறி நடுப் பெருங்கடல் அகழிகள் உருவாகின்றன. இந்த இரு செயல்களாலும் பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு தொடர்ச்சியாக மூடகத்தோடு மீள் சுழற்சியில் ஈடுபடுகின்றது. இந்த மீள் சுழற்சியால், பெரும்பாலான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. உலகிலேயே பழமையான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு சராசரியாக 200 மில்லியன் ஆண்டுடையது.[70][71] இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில் பழமையான கண்டங்களின் மேலோடு 4030 மில்லியன் வருடம் பழமையானது.[72]

மற்ற முக்கிய தட்டுகள், இந்தியத் தட்டு, அரேபியத் தட்டு, கரீபியத் தட்டுதென் அமெரிக்காவின்வடகரையில் இருக்கும் நாசுகாத் தட்டு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சுகோசியத் தட்டு என்பனவாம். ஆஸ்திரேலியத் தட்டு இந்தியத் தட்டுடன் 50 முதல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இணைந்தது. பெருங்கடல் தட்டுகளிளே மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பவை, இதில் கோகோசுத் தட்டு வருடத்தில் 75 மீட்டரும்[73] மற்றும் பசிபிக் பெருங்கடல் தட்டு ஆண்டிற்கு 52–69 மி.மீ. வரையிலும் நகர்கின்றன. மறுபுறத்தில் மிகவும் மெதுவாக நகரும் தட்டுகளில் யுரேசியன் தட்டு ஆகும், இது வருடத்திற்கு 21 மீட்டர் தூரம் நகர்கின்றது.[74]

மேற்பரப்பு[தொகு]

பூமியின் நிலம் இடத்திற்கு இடம் மிக வேறுபட்டுள்ளது. பூமியின் மேற்பகுதி 70.8%[75] நீரினால் சூழப்பட்டுள்ளது மேலும் கண்டங்களின் அடுக்குப் பகுதிகள்கடலுக்கடியே உள்ளன. நீரால் மூழ்கப்பட்ட இடங்களில் மலை போன்ற அமைப்புகள், பூமி முழுவதும் பரவியுள்ள நடுப்பெருங்கடல் மலைத்தொடர்,எரிமலைகள்,[52] பெருங்கடல் அகழிகள்ஆழ்கடல் படுபள்ளங்கள்பெருங்கடல் பீடபூமிகள் மற்றும் ஆழமான கணக்கிலடங்கா சமவெளிகள் இவையாவும் அடங்கும். இதைத் தவிர்த்து பூமியின் மீது தண்ணீருக்கு வெளியே உள்ள 29.2% இடத்தில் மலைகள்பாலைவனங்கள்சமவெளிகள்பீடபூமிகள் மற்றும்நிலப்பரிமாண அமைப்புகளும் அடங்கும்.

பூமியின் மேற்பரப்பு டெக்டோனிக் செயல்கள் மற்றும் அரித்தலால் காலப்போக்கில் உருமாறிக் கொண்டே இருக்கிறது மேற்பரப்பில் டெக்டோனிக் பலகை நகர்தலால் ஏற்படும் குவிந்த மற்றும் தகர்ந்த அமைப்புகள் மேலும் மழைகளால் (precipitation) சிதைவதும் வெப்ப சுழற்சி மற்றும் ரசாயனங்களாலும் தாக்கப்படுகின்றன. பனியாறு உருவாதல், கடற்கரை அரிப்பு, பவளப்பாறைகள் ஏற்படுதல் மற்றும் பெரும் விண்கற்களின் தாக்கம்[76] ஆகியவற்றாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றியமைக்கப்படுகின்றது.

பூமியின் தற்போதைய உயரம் மற்றும் ஆழம் தேசிய பௌதிக தகவல் மையத்தின் நிலம் சார்ந்த டிஜிட்டல் நில மாதிரி.

கண்டங்களின் மேலோடு குறைந்த திண்மத்தையுடைய தீப்பாறைகள், கிரானைட் மற்றும் அன்டிசைட்களால் (andesite) ஆனது. பசால்ட் எனப்படும் அதிக திண்மத்தைக் கொண்ட தீப்பாறைகள் அரிதாக காணப்படுகின்றன.[77]மேலும் இவையே கடற்கரையில் காணப்படும் முக்கிய பாறைவகையாம். படிவுப்பாறைகள் வண்டல்கள் அழுத்தத்தினால் உருமாறி ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன. படிவுப்பாறைகள் பூமியின் மேலோட்டில் 5% உள்ளது எனினும் அவை கண்டங்களின் மேற்பரப்பில் 75% மாக உள்ளது.[78] பூமியின் மீது காணப்படும் மூன்றாவது வகைப் பாறைகள் உருமாறிப்பாறைகள், இவை மற்ற பாறைகள் அதிக அழுத்தம், அதிக வெப்பம் அல்லது இரண்டினாலும் உருப்பெயருவதால் ஏற்படுபவை. பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் (pyroxene) மற்றும் ஒலிவைன் (olivine) ஆகும்.[79] பொதுவாக காணப்படும் கார்பனேட்டுகள் கால்சைட் (சுண்ணாம்பு கற்களில் காணப்படுவது), அராகோனைட் மற்றும் டோலோமைட் ஆகும்.[80]

புவியில் எல்லாவாற்றிற்கும் மேலே உள்ள பரப்பு பீடோ அடுக்கு (pedosphere). இது மண்ணால் ஆனது மற்றும் இதுமண் உருவாகும் செயலுக்கும் உட்பட்டது. இது லித்தோ அடுக்கு, வளிமண்டலம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளத்திற்கு இடையே உள்ளது. தற்போதைய நிலையில் பூமியின் மேற்பரப்பில் 13.31% மட்டுமே காற்றோட்டமான நிலமாகும் மற்றும் இதில் 4.71% இல் மட்டுமே நிரந்தர விவசாயம் செய்ய ஏற்றதாக இருக்கிறது.[6] பூமியின் நிலப்பரப்பில் 40% இடம் விவசாயத்திற்கும், மேய்ச்சல் நிலத்திற்கும் பயன்படுகின்றது, அதாவது, தோராயமாக விவசாயத்திற்கு 1.3×107 கிமீ² நிலமும், மேய்ச்சலுக்கு 3.4×107 கிமீ² நிலமும் பயன்படுத்தப்படுகின்றது.[81]

பூமியின் மேற்பரப்பிலிருந்து நிலத்தோற்றத்தைக் காணும் போது மிகவும் தாழ்வான இடம் −418 மீ ஆழத்தில் உள்ள சாக்கடல் (Dead Sea), மற்றும் 2005 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிகவும் உயரமான இடம் 8,848 மீட்டர் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரம் ஆகும். நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 840 மீட்டர் ஆகும்.[82]

நீர்க்கோளம்[தொகு]

புவியின் மேற்பரப்பு பக்கத்தோற்ற வரைபடம். புவியின் மேற்பரப்பு தோராயமாக 71% நீரால் சூழப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் அதன் தனித் தன்மையாகும் மற்றும் இதுவே நம் "நீலக்கிரகத்தை" சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கிரகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. பூமியின் நீர்க்கோளம் முதன்மையாக பெருங்கடல்களால் ஆனது. ஆனால் முழுதாக கணக்கிலெடுத்தால் உள்நாட்டுக் கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் 2,000 மீட்டர் வரையுள்ள நிலத்தடி நீரும் இதிலடங்கும். அதிக ஆழமான நீருக்கடியில் இருக்கும் இடம் -10,911.4 மீட்டரில் பசிபிக் பெருங்கடலிலுள்ள மரியானா அகழியில் அமைந்திருக்கும் சாலஞ்சர் ஆழமாகும்.[note 9][83] பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3,800 மீட்டர் ஆகும், இது கண்டங்களின் சராசரி உயரத்தைவிட நான்கு மடங்கு அதிகம்.[82]

பெருங்கடல்களின் சராசரி நிறை 1.35×1018 மெட்ரிக் டன்கள், அல்லது பூமியின் மொத்த நிறையில் 1/4400, மற்றும் 1.386×109கிமீ3 கனஅளவு இடத்தைப் பிடித்துள்ளது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமமாக பரவியிருக்குமானால் நீரின் மட்டம் நிலத்தின் மீது 2.7 கி.மீ. உயர்ந்து இருக்கும்.[note 10] மொத்த நீரில் 97.5% உப்பு நீராகும் மற்ற 2.5% தூய நீராகும். இதில் பெரும்பான்மையான தூயநீர், அதாவது 68.7% தற்போது பனிக்கட்டிகளாக உள்ளது.[84]

பெருங்கடல்களின் மொத்த நிறையில் 3.5% உப்பாலானது. இந்த உப்பானது எரிமலை நிகழ்வுகளாலும் மற்றும் குளிர்ந்த தீப்பாறைகளிலிருந்தும் வெளிப்பட்டதாகும்.[85] வளிமண்டலத்திலுள்ள பல வாயுக்கள் பெருங்கடலில் கரைந்து அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாய் உள்ளது.[86] கடல் நீர் உலகின் பெரிய வெப்ப தேக்கமாக செயல்படுவதால் புவியின் வானிலையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.[87] பெருங்கடல்களில் வெப்பப் பங்கீட்டில் மாற்றம் நேரும் போது குறிப்பிடும் வகையில் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் எல் நினோ தெற்கு திசை ஊசலாட்டம் (ElNiño -Southern Oscillation) போன்றவை ஏற்படும்.[88]

வளிமண்டலம்[தொகு]

இந்த புவியின் மேற்பரப்பில் உள்ள வளி மண்டல அழுத்தம் சராசரியாக 8.5 கி.மீ. அளவு உயரம் வரை 101.325 கிலோபா (KPa) ஆக இருக்கிறது.[7] இது 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன் மற்றும் சிறிய அளவில் நீராவி, கரிமிலவாயு போன்ற மற்ற வாயு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. அடிவளிமண்டல(Troposphere) உயரமானது பூமியின் கிடைமட்ட பரப்பை பொறுத்து மாறும். தட்பவெப்ப மற்றும் காலநிலை மாறுபாட்டின் காரணமாக இது துருவங்களில் 8 கி.மீ. முதல் பூமத்தியரேகையில் 17 கி.மீ. வரை இருக்கும்.[89]

புவியின் உயிர்கோளம் வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டபிராணவாயு ஒளிச்சேர்க்கை முதன்முதலில் தற்போதுள்ள நைட்ரஜன் - ஆக்சிஜன் வளி மண்டலத்தை உருவாக்கியது. இந்த மாற்றமானது வளி சார்ந்த உயிரினங்கள் வளர்ச்சி மற்றும் ஓசோன் படலத்தையும் உருவாக்கியதோடு, புவியின் காந்தபுலம் புற ஊதாக் கதிர்கள் சூரியனின் கதிர்வீச்சு ஆகியவற்றை தடுத்து, புவியில் உயிரினங்கள் வாழ வழிசெய்கிறது. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நீராவி பரிமாற்றம், வாயுக்கள், சிறியவிண்கற்களை புவியை தாக்கும்முன் எரியசெய்தல் மற்றும் மிதமான வெப்பநிலை போன்றவற்றை அளிப்பதில் வளி மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.[90] இறுதியாக குறிப்பிட்ட வளிமண்டல வெப்பநிலை மாற்றத்தை கிரீன் ஹவுஸ் மாற்றம் என குறிப்பிடுவர் (Greenhouse Effect): இது நிலத்தில் இருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை வளிமண்டலத்தில் உள்ள சிறிதளவிலான மூலக்கூறுகள் சிறைப்படுத்தி அதன் மூலம் வளி மண்டலத்தின் சராசரி வெப்பத்தை உயர்த்துவதை குறிக்கும். கார்பன் டை ஆக்சைடு, நீராவி, மீத்தேன் மற்றும் ஓசோன் போன்றவை புவியின் வளி மண்டலத்தில் உள்ள பிரதானகிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆகும். இந்த வெப்பம் தக்கவைத்தல் நடக்காவிடில் புவியின் மேற்புற வெப்பம் −18° செ ஆக இருந்திருக்கும் மற்றும் உயிரினங்கள் வாழ ஏதுவாய் இருந்திருக்காது.[75]

வானிலை மற்றும் பருவ நிலை[தொகு]

புவியின் வளிமண்டலத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை கிடையாது, அது உயரே செல்ல செல்ல மெலிந்து அண்ட வெளியில் மறைந்து போகின்றது. வளி மண்டலத்தின் மொத்த நிறையில் மூன்றில் ஒரு பகுதி பூமியின் மேற் பரப்பிலிருந்து முதல் 11 கி.மீ.ரிலேயே அடங்கி விடுகின்றது. இந்த அடியில் உள்ள அடுக்கே அடிவளிமண்டலம் ஆகும். சூரியனிலிருந்து வரும் வெப்ப சக்தி இந்த அடுக்கை மற்றும் இதனடியில் உள்ள பூமியின் மேற்பரப்பையும் சூடு படுத்தி பிறகு இதனுடன் தொடர்புள்ள காற்றை விரிவாக்குகின்றது. இந்த குறைந்த அடர்த்தியுடைய காற்று மேலெழுகிறது, அவ்விடத்தை அதிக அடர்த்தியுள்ள குளிர்ந்த காற்று நிரப்புகின்றது. இவ்வாறு ஏற்படும் செயல் வளிமண்டலத்தில் சுழற்சியை ஏற்படுத்துகின்றது அதனால் வெப்ப சக்தி நகர்ந்து வானிலை மற்றும் பருவநிலை ஏற்பட காரணமாகின்றது.[91]

முதன்மை வளிமண்டல சுழற்சியின் தடத்தில் நிலநடுக்கோட்டிலிருந்து 30° பாகைகள் உருவாகும் வியாபாரக் காற்றுகள் மற்றும் மேற்கத்திய காற்றுகள் இவை மத்திய-நில நேர்ககோட்டில் 30° மற்றும் 60° பாகைக்குள் உருவாகின்றன.[92] பெருங்கடல்களின் ஓட்டமும் வானிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன, முக்கியமாக வெப்ப ஹேலைன் சுழற்சி பூமத்திய கடல்களில் இருந்து துருவக்கடல்களுக்கு வெப்ப ஆற்றலைப் பரப்புகிறது.[93]

பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நீராவி, சுழற்சியான முறையில் வளிமண்டலத்தை சென்றடைகிறது. வளிமண்டலத்தின் நிலை அனுமதிக்கும் போது சூடான ஈரப்பதம் மிக்க காற்று மேலெழும்பி, பிறகு குளிர்ந்து, மழையாகி, பூமியை அடைகின்றது.[91] இது பெரும்பாலும் ஆற்றின் மூலமாக பெருங்கடல் அல்லது ஏரிகளை சென்றடைகிறது இந்நீரின் சுழற்சி பூமியில் உயிரினங்கள் வாழ மிக முக்கியமானது மற்றும் வெகு காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புவியின் மேற்புற அமைப்புகளின் அரிப்புகளுக்கும் காரணமாகின்றது. மழை பொழிவது இடத்திற்கு இடம் வெகுவாக வேறுபடுகின்றது, அது பல மீட்டரில் இருந்து சில மில்லி மீட்டர் வரை மாறுபடுகின்றது. ஒவ்வொரு இடத்திலும் காணப்படும் வளிமண்டல சுழற்சி, மேற்புற அமைப்பு மற்றும் வெப்ப மாற்றத்தை பொறுத்தே அவ்விடத்து மழை அமையும்.[94]

பூமியின் பகுதிகளை அதன் நில நேர்க்கோட்டின் படி சராசரியான ஒரே தட்பவெப்ப நிலைகள் உள்ளவைகளாக பிரிக்கலாம். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்கள் வரையிலான தட்பவெப்பத்தை வெப்ப வளையம் (அல்லது ஈக்வடோரியல்), மிதவெப்ப வளையம், மிதமான வளையம் மற்றும் துருவ வளைய தட்பவெப்பம் என பிரிக்கலாம்.[95] தட்பவெப்பத்தை வெப்பம் மற்றும் பெய்யும் மழையைக்கொண்டும் வகைப்படுத்தலாம், அதாவது அவ்வவ்விடத்தின் சீரான காற்றின் அடர்த்தியைக் கொண்டும் பிரிக்கலாம். பொதுவாக உபயோகத்தில் உள்ள கோப்பெனின் தட்பவெப்ப முறையின் படி (விளாடிமிர் கோப்பெனின் மாணாக்கர் ருடால்ப் கைகர் மாற்றியமைத்தது) தட்பவெப்பங்களை ஐந்து பெரும் பிரிவுகளாக (ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதி,வறண்ட பகுதிகள், ஈரப்பதம் மிக்க மத்திய நில நேர்க்கோட்டு பகுதிகள், மிதமான குளிர் பகுதிகள் மற்றும் மிகக்குளிர் துருவ பகுதிகள்) பிரித்துள்ளார், மேலும் இவை குறிப்பிட்ட உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.[92]

மேல் வளிமண்டலம்[தொகு]

இந்த சுற்றுப் பாதையிலிருந்து பார்க்கும் போது, புவியின் வளிமண்டலம் முழுநிலவை பாதி மறைக்கிறது. நாசா படம்.

வளிமண்டலத்தில், அடி வளிமண்டலத்தின் மேற்பகுதி, வழக்கமாக ஸ்ட்ரடோ அடுக்கு (stratosphere), மீசோ அடுக்கு (mesosphere), வெப்பஅடுக்கு என பிரிக்கப்படுகிறது.[90] ஒவ்வொரு அடுக்கும், அதன் உயரத்திற்கு ஏற்ப, தோன்றும் வெப்ப மாறுபாட்டிற்கு ஏற்றாற்போல் வெவ்வேறு இழப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும். இவற்றை தாண்டி, எக்சோ அடுக்கு எனப்படும் வெளி அடுக்கு மெலிந்து காந்த அடுக்கில் கலந்துவிடுகிறது. இந்த அடுக்கில்தான், பூமியின் காந்த புலம் சூரியக் கதிர் காற்றுடன் ஊடாடுகிறது.[96] பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ஒரு பகுதி வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு ஆகும், இது ஸ்ட்ரடோ அடுக்கில் இருந்துகொண்டு பூமியின் மேற்பரப்பை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கார்மன் கோடு வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையை நிர்ணயிக்கிறது.[97]

வெப்ப ஆற்றலால், வளிமண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள சில மூலக்கூறுகளின் வேகம் அதிகரித்து ஒரு சமயம் அவை புவியின் ஈர்ப்பு சக்தியிலிருந்த விடுபடுகின்றது. இதன் விளைவாக நிதானமாக அதே சமயம் நிலையாக வளிமண்டலம் விண்வெளியில் நுழைகிறது. ஏனெனில், நிலையற்ற ஹைட்ரஜன்மூலக்கூறு நிறை குறைவாக இருப்பதால், அது மிக விரைவிலேயே விடுபடும் வேகத்தை அடைகிறது. மேலும் மற்ற வாயுக்களை விட மிக வேகமாக விண்வெளிக்குள் நுழைகிறது.[98] இதுவே பூமி ஆரம்ப ஒடுக்க நிலையிலிருந்து தற்போதையஆக்சிஜனேற்ற நிலையை அடைவதற்கு காரணமாகும். ஒளிச்சேர்க்கை ஆக்சிஜன் மிகுதியாக கிடைக்க வழி செய்கிறது. அதே சமயத்தில், ஒடுக்கும் காரணியான ஹைட்ரஜன் குறைவதற்கும் காரணமாகிறது. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாக பரவுவதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது.[99] எனவே, பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறக்கூடிய ஹைட்ரஜனின் தன்மை, பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது.[100] தற்போதைய ஆக்சிஜன் நிறைந்த வளிமண்டலத்தில், ஹைட்ரஜன் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும் முன்னரே, நீராக மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் மீத்தேனின் அழிவே, ஹைட்ரஜன் இழப்பிற்கு காரணமாகிறது.[101]

காந்தப்புலம்[தொகு]

புவியின் காந்தப்புலம், இருதுருவங்களை ஒத்திருக்கிறது.

புவியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள், அதன் இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது. இயக்கவியல் கொள்கையின்படி, காந்தப்புலமானது, பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில், வெப்பம் கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில், உருவாக்கப்படுகிறது. இதுவே, பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. வெளிக்கருவில், வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். மேலும், அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். இந்த காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இந்த மாற்றம் 700,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.[102][103]

இந்த புலமானது காந்த அடுக்கை (magnetosphere) ஏற்படுத்தி, சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது. சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock) நுனி புவியின் ஆரத்தை போன்று 13 மடங்கைக் கொண்டது. காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் உண்டாகிறது. அது பொது மையமாகக்கொண்ட, டாரஸ் (torus) வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள்கொண்ட பகுதியாகும். பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல்(அரோரா) ஆக மாறுகிறது.[104]

பூமியின் கோளப்பாதை மற்றும் சுழற்சி[தொகு]

சுழற்சி[தொகு]

புவியின் சாய்ந்த அச்சுக்கும் (அல்லது சாய்நிலை) அதன் சுழலும் அச்சு மற்றும் கோளப்பாதைக்கும் இடையே உள்ள தொடர்பு.

பூமியின் சுழலும் காலம் சூரியனை ஒப்பிடுகையில்-அதன் சராசரி சூரிய நாள்-அதாவது சராசரி சூரிய நேரத்தில் 86,400 விநாடிகளாகும். இந்த ஒவ்வொரு வினாடியும் எஸ்.ஐ (SI) முறை வினாடியை விட சிறிது கூடுதல். ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடும் போது தற்போதைய பூமியின் சூரிய நாள் அலை முடுக்கத்தால்சிறிதே நீண்டிருக்கிறது.[105]

புவியின் சுழற்சிக் காலத்தை நிலையான விண்மீன்களுடன் ஒப்பிடுவதை, அதன் ஸ்டெல்லர் நாள் எனசர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பிடு காரணி அமைப்பு (IERS) கூறுகிறது, இது சராசரி சூரிய நேரத்தில் (UT1)86164.098903691 seconds அல்லது 23h 56m 4.098903691s. [106][note 11] பூமியின் சுழற்சிக் காலத்தை அதன் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றம் அல்லது சராசரி வெர்னல் இஃகுவினாக்ஸ் உடன் ஒப்பிடுவதை, ஒரு விண்மீன் நாள் என தவறாக பெயரிடப்பட்டது, இது 86164.09053083288 seconds சராசரி சூரிய நேரம் (UT1) ஆகும்(23h 56m 4.09053083288s).[106] எனவே ஒரு விண்மீன் நாள் ஸ்டெல்லர் நாளை விட 8.4 ms.[107] சிறியது. SI நிமிடங்களில் 1623–2005[108] மற்றும் 1962–2005[109] காலங்களுக்கு சராசரி சூரிய நேரம் IERS -லிருந்து கிடைக்கப் பெறும்.

வளிமண்டலத்துள் விண் கற்கள் (meteor) தாழ் சுழற்சி விண்கலங்கள் மற்றும் அனைத்து விண்ணுலக பொருட்களையும் பூமியின் மீதிருந்து பார்க்கும் போது மேற்கு நோக்கி மணிக்கு 15° = நிமிடத்திற்கு 15' என்ற அளவில் போவது போல் தோன்றும். இந்நகர்தல் இரு நிமிடத்தில் சூரியன் அல்லது சந்திரன் அடையும் விட்டமாகும்; நம் கண்களுக்கு சூரியனும் சந்திரனும் ஒரே அளவினவாகத் தோன்றும்.[110][111]

கோளப்பாதை[தொகு]

பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 சூரிய நாட்களில் 150 மில்லியன் கி.மீ. அல்லது ஒரு விண்மீன் ஆண்டை (sidereal year) கடக்கின்றது. இதனால் சூரியன், நட்சத்திரங்களை ஒப்பிடுகையில் கிழக்கு நோக்கி நாளொன்றுக்கு 1° நகர்வதாக அல்லது சூரியன் அல்லது சந்திரன் விட்டத்தை 12 மணி நேரத்தில் கடப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் செயலால் சராசரியாக ஒரு சூரிய நாள் அல்லது 24 மணி நேரத்தில் பூமி தன் அச்சிலேயே ஒருமுறை சுழன்று சூரியன் அதன் ஆரம்ப நிலை மெரிடியனை வந்தடைகின்றது. பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும்.[7]

சந்திரன் பூமியுடன் சேர்ந்து பொதுவான ஒரு பேரி மையத்தை (barycenter), அதன் பின் காணப்படும் விண்மீன்களை ஒப்பிடுகையில் 27.32 நாட்களில் சுழன்று வருகிறது. சூரியனைச் சுற்றி, பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பொதுவான சுழற்சியைச் சேர்த்தால், சைனோடிக் மாத காலமாகும், பௌர்ணமியிலிருந்து பௌர்ணமி வரை 29.53 நாட்களாகும். விண்வழி வட துருவத்திலிருந்து காணும் போது பூமி, சந்திரன் மற்றும் அவற்றின் அச்சு சுழற்சி, எதிர்மறை சுழற்சியாக தோன்றும். பூமி மற்றும் சூரியன் ஆகியவற்றின் வட துருவத்திலிருந்து காணும் போது பூமி சூரியனை எதிர்மறையாக சுழன்று வருவது தெரியும். பூமியின் கோளப்பாதையும் அச்சுத் தட்டும் ஒன்றி அமையவில்லை: பூமி சூரிய தட்டின், செங்குத்தான கோட்டிலிருந்து 23.5 கோணங்கள் பூமியின் அச்சு சாய்ந்து காணப்படுகிறது மற்றும் பூமி சந்திரன் தட்டு பூமி சூரிய தட்டிலிருந்து ஐந்து கோணங்கள் பெயர்ந்து உள்ளது. இந்தச் சாய்வான அமைப்பு இல்லையென்றால் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இருவாரங்களுக்கு ஒருமுறை ஏற்படும் அமைப்பு இருக்கும்.[7][112]

ஹில் அடுக்கு (Hill sphere) அல்லது புவியீர்ப்பு அடுக்கு பூமியிலிருந்து 1.5 கிகா மீட்டர் (அல்லது 1,500,000 கிலோமீட்டர்கள்) ஆரமுடையதாகும்.[113][note 12]பூமியின் புவியீர்ப்பு விசை மற்ற விண் பொருட்களாகிய சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக இருக்கும் மற்றும் அதிகபட்ச தொலைவில் இருக்கும் இடமுமாகும். பூமியின் கட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் இந்த தொலைவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் மீறினால் அவை சூரியனின் ஈர்ப்பு விசையினால் பூமியை விட்டு வெளியேறி விடும்.

சூரியனின் இடத்தைக் காட்டும், பால்வெளி மண்டல விளக்கப்படம்.

பூமி சூரிய மண்டலத்தோடு பால்வெளி (Milky Way) கேலக்ஸியில் (galaxy) அதன் மையத்தை 28,000 ஒளி ஆண்டுகளில்சுழலும் பாதையில் அமைந்துள்ளது. இது தற்போது இந்த மண்டலத்தின் நில நடுதட்டிலிருந்து (equatorial plane) 20 ஒளி ஆண்டுகள் மேலேயும் ஓரியன் மண்டலத்தின் சுழல் கையிலும் (Orion spiral arm) அமைந்துள்ளது.[114]

பூமி அச்சின் சாய்வும் காலங்களும்[தொகு]

பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளார்தத்தின் கோடை காலமும், அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது. கோடை காலத்தின் நாட்கள் நீண்டும் சூரியன் வானில் உயரேயும் காணப்படுகின்றது. குளிர் காலத்தில், தட்பவெப்ப நிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் மற்றும் நாட்கள் குறுகியும் காணப்படும். ஆர்ட்டிக் வளையத்திற்கு மேல் ஓர் அதீதமான செயல் காணப்படுகின்றது, அங்கே வருடத்தின் ஒரு பகுதி காலத்தில் வெளிச்சமே இருப்பதில்லை - இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த காலங்களுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது.

செவ்வாயிலிருந்து புவி மற்றும் சந்திரன், செவ்வாய் உலக ஆய்வாளரால் எடுக்கப்பட்ட படம். விண்வெளியிலிருந்து காணும் போது, சந்திரன் வெவ்வேறு தோற்றங்களை பெறுவதைப் போல பூமியும் மாறுபட்ட தோற்றங்களை பெறுவதைக் காணலாம்.

வானியல் மரபுப்படி, நான்கு பருவ காலங்களும், புவி தனது கோளப் பாதையில் சூரியனை நோக்கி அல்லது சூரியனிலிருந்து விலகும் அதிகபட்ச அச்சு சாய்வுப் புள்ளியான சால்ஸ்டிஸ் (solstice) என்பதையும், இஃவினாக்ஸ் (equinox) சாயும் திசை சூரியனை நோக்கிச் செங்குத்தாக இருக்குமானால், இவை இரண்டையும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. குளிர் கால சால்ஸ்டிஸ் டிசம்பர் 21 அன்று ஏற்படும், கோடை கால சால்ஸ்டிஸ் ஜூன் 21 தேதி வாக்கில் ஏற்படும், வசந்தகால இஃவினாக்ஸ் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் ஏற்படும், இலையுதிர்கால இஃவினாக்ஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி வாக்கில் ஏற்படும்.[115]

புவியின் சாய்வு கோணம் பல காலங்களுக்கு நிலையாக இயங்கக்கூடியது. இருப்பினும் இந்தச்சாய்வும் சிறிதளவு ஒழுங்கற்ற இயக்கம் (nutation) கொண்டிருக்கிறது, அதாவது மிகச்சிறிய ஒழுங்கற்ற இயக்கம் 18.6 ஆண்டுகளில் ஏற்படுகின்றது. புவி அச்சின் நிலையும் (கோணமல்லாது) காலவாக்கில் மாறுகின்றது, 25,800 ஆண்டு காலம் ஒரு முழு வட்டப்பாதையில், சிறிய ஆனால் தொடர்ச்சியான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றத்துடன் (precessing) சுழன்று வருகிறது; இந்த மாற்றமே விண்மீன் ஆண்டு மற்றும் வெப்ப ஆண்டிற்கு இடையே உள்ள வேறுபாட்டிற்கான காரணமுமாகும். இந்த இரண்டு நகர்தலும் புவியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்தின் மீது சூரியன் மற்றும் சந்திரனின் வேறுபட்ட கவர்ச்சியினால் ஏற்படுகிறது. புவியிலிருந்து காணும் போது, துருவங்கள் கூட சில மீட்டர் தூரம் மேற்பரப்பில் நகர்கிறது. இந்த துருவ நகர்தல் பல சுழற்சி பகுதிகள் அடங்கியதாகும், இந்த பல பகுதிகள் மொத்தமாக பகுதி கால நகர்தல் என்றழைக்கப்படுகின்றது. இந்த நகர்தலுக்கு ஒரு வருட சுற்றோடு 14 மாத சுற்றும் உள்ளது, அதை சாண்ட்லேர் தள்ளாட்டம் என குறிப்பிடுகின்றனர். பூமியின் சுழல் வேகமும் தின நேர மாற்றம் என்ற செயலால் பாதிக்கப்படுகின்றது.[116]

இந் நாட்களில் புவியின் சூரிய சிறும வீச்சு ஜனவரி மூன்றாம் தேதியும் சூரிய பெரும வீச்சு ஜூலை நான்காம் தேதியும் ஏற்படுகின்றது. இந்த நாட்கள் நிலையானதல்ல, இவை காலப்போக்கில் புவியின் சுழற்சியாலும் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றங்களாலும் மாறிக்கொண்டே இருக்கின்றது மேலும் இது மிலன்கோவிட்ச் சுற்று எனும் சுழல் அமைப்பை பின்பற்றுகின்றது. சூரியன் மற்றும் பூமிக்கிடையே ஆன தூரம் அதிகமாகிக்கொண்டிருப்பதால் சூரிய சிறும வீச்சுக்கும் பெரும வீச்சுக்கும் இடையே பூமியை அடையும் கதிர் வீச்சில் 6.9% [117] வேறுபாடு உள்ளது. பூமி சூரியனின் மிக அருகே செல்லும் போது அதன் தென் துருவம் சூரியனை நோக்கி இருப்பதால் அதற்கு சூரிய சக்தி வட துருவத்தை ஒப்பிடுகையில் ஒரு வருடத்தில் அதிகமாகக் கிடைக்கின்றது. ஆனால் தென் துருவம் இந்த வகையில் அடையும் சக்தி அது புவி அச்சின் சாய்வு மற்றும் அதிக ஆற்றலை உறிஞ்சும் தென் துருவ நீரினால் கிடைக்கும் மொத்த சக்தியை விட மிக குறைவே ஆகும்.[118]

நிலா[தொகு]

சிறப்பியல்புகள்
விட்டம்3,474.8 கி.மீ.
2,159.2 mi
நிறை7.349×1022கிகி
8.1×1019 (குறுகிய டன்கள்)
அரை-முதன்மை அச்சு384,400 கிமீ
238,700 mi
சுற்றிவரும் காலம்27 நா 7 ம 43.7 நி
முதன்மைக் கட்டுரை: நிலா

சந்திரன் பூமியை விட பெரிய, நிலம் சம்பந்தப்பட்ட, செயற்கைக்கோள் போன்ற ஒரு கோளாகும், இதன் விட்டமானது பூமியின் விட்டத்தைப் போன்று கால் மடங்கு பெரியதாகும். அதன் கோளோடு ஒப்பிடுகையில் சந்திரன்தான் சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரியதாகும். (சாரன் (Charon) என்பதுசிறிய கோளான ப்ளூடோவை விட பெரியதாகும்) மற்ற கோள்களைச் சுற்றி வரும் இயற்கையான செயற்கைக்கோள்கள் பூமியினுடையதைப் போலவே "சந்திரன்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு சக்திதான் புவியில் பேரலைகள் உண்டாகக் காரணமாக இருக்கிறது. இதுவே சந்திரனில் பேரலை நிறுத்தத்திற்கும் காரணமாகிறது: இதன் சுழற்சிக் காலமானது அது பூமியைச் சுற்றி வரும் காலத்திற்குச் சமமாகும். இதன் காரணமாகவே, இது பூமிக்கு எப்பொழுதும் ஒரே பகுதியைக் காட்டுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், அதன் வெவ்வேறு பகுதிகள் சூரியனால் ஒளிரச் செய்யப் படுகின்றன. மேலும், இது சந்திரனின் முகங்களைக் காட்டுகிறது; சந்திரனின் இருள் பகுதிகள் ஒளிர்கின்ற பகுதியிலிருந்து சூரியனின் ஒளிக்கற்றைகளால் பிரிக்கப்படுகிறது.

இந்தப் பேரலைகள் ஊடாடுவதன் காரணமாக, சந்திரன் பூமியை விட்டு வருடத்திற்கு 38 மி.மீ. விலகிச் செல்கிறது. பல மில்லியன் வருடங்களுக்கு மேலாக, இந்த சிறு மாற்றங்களும்-ஒரு வருடத்திற்கு 23 µs வீதம் பூமியின் ஒரு நாள் நீள்வதும், பல குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.[119] எடுத்துக்காட்டாக, தேவோனியன் காலத்தின் பொழுது, (தோராயமாக 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) ஒரு வருடத்திற்கு 400 நாட்களும், ஒரு நாளுக்கு 21.8 மணிநேரமுமாக இருந்தது.[120]

பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றுவதன் மூலம் சந்திரன் பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. தொல்லுயிர் ஆராய்ச்சியின் முடிவுகளும் மற்றும் கணினியின் மாதிரிகளும் பேரலைகளுக்கு சந்திரனுடன் உள்ள கவர்ச்சியினால்தான் பூமியினுடைய அச்சின் சாய்வு நிலையாக உள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது.[121] சூரியனும் இதர கோள்களும் பூமியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்திற்கு கொடுக்கும் உந்து அழுத்தத்திற்கு எதிராக இந்த நிலைப்புத்தன்மை இல்லையெனில் பூமியின் சுழலும் அச்சு ஒரு நிலையிலன்றி குழப்பமானதாக இருந்திருக்கும், மேலும் செவ்வாய் கோளில் நடப்பதைப் போல மில்லியன் வருடங்களுக்கு மேல் நிலைமாறான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என சில கொள்கையாளர்கள் நம்புகிறார்கள்.[122] பூமியின் சுழலும் அச்சு நீள்வட்டப்பாதையை அடைய நேர்ந்தால் உயர்ந்தபட்ச காலநிலை மாறுபாடுகளினால் உயர்ந்தபட்ச மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு துருவம் கோடைக்காலத்தில் சூரியனை நோக்கியும் குளிர்காலத்தில் சூரியனுக்கு எதிர் திசையிலும் அமைந்திருக்கும். இதனை ஆராய்ந்த வான் கோள் அறிவியலாளர்கள் இது எல்லா பெரிய விலங்குகளையும் மற்றும் உயர்ந்த தாவரங்களையும் அழிக்கக்கூடும் என கருதுகின்றனர்.[123] எனினும் இது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாகும், மேலும் பூமியைப் போலவே சுழற்சியையும்சுழலும் காலத்தையும் உடைய ஆனால் பெரிய சந்திரனும் திரவ உட்கருவும் இல்லாத செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சி இதற்கு ஒரு தீர்வைக் கொடுக்கலாம்.

பூமியிலிருந்து பார்க்கும்பொழுது, சந்திரன் வெகு தொலைவில் இருப்பது போலவும் சூரியனைப் போன்றே சிறிய கோள வடிவத்திலும் காட்சியளிக்கிறது. இந்த இரண்டின் கோண அளவும் (அல்லது திட கோணம்) ஒத்திருக்கிறது ஏனெனில், சூரியனுடைய விட்டம் சந்திரனுடையதைப் போல 400 மடங்கு பெரியதாக இருந்தாலும், அது சந்திரனை விட 400 மடங்கு அதிக தொலைவிலும் இருக்கிறது.[111] இது பூமியில் முழு மற்றும் வருடாந்திர கிரகணம் ஏற்பட காரணமாகவும் இருக்கின்றது.

புவி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் அளவீட்டு மாதிரி

சந்திரனின் தோற்றம் பற்றிய உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி (giant impact), செவ்வாயின் அளவை ஒத்த தேயியா (Theia) எனப்படும் மாதிரி கோளும் ஆதிகால பூமியும் மோதிக்கொண்டதனால் ஏற்ப்பட்டது. இந்தக் கூற்றின்படி (மற்றவைகளுடன்) சந்திரனில், பூமியை ஒப்பிடுகையில் குறைந்த அளவு இரும்பு மற்றும் ஆவியாகக்கூடிய தனிமங்கள் இருப்பதும் மற்றும் அதனுடைய கட்டமைப்பு ஏறக்குறைய பூமியின் மேலோட்டை ஒத்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.[124]

பூமிக்கு குறைந்தது இரண்டு துணை-சுற்று பெரு விண்கற்கள், 3753 க்ருதினே மற்றும் 2002 AA29 என இருக்கிறது.[125]

புவியில் உயிர்களின் புழக்கம்[தொகு]

ஒரு கோள், உயிர்களை தக்க வைத்துக் கொள்ளுமானால் உயிர்கள் அங்கே தோன்றாவிடினும் அது உயிர்கள் புழங்கத்தக்கதாக கருதப்படுகிறது. பூமி (தற்போதைய கூற்றுகளின் படி) உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய திரவ நீர், சுற்றுச் சூழலில் கடினமான உயிர் வேதியல் மூலக்கூறுகள் உருவாகும் தன்மை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான சக்தி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது.[126] பூமி சூரியனிலிருந்து உள்ள தூரம், அதன் சுழற்சியில் காணப்படும் முரண், சுழலும் வேகம், அச்சுச் சாய்வு, புவியின் வரலாறு, வளிமண்டல தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாக்கும் காந்தப்புலன் இவையாவும் இந்த கிரகத்தில் உயிர்கள் உருவாக மற்றும் தக்க வைத்துக் கொள்ள காரணிகளாகச் செயல்பட்டுள்ளன.[127]

உயிர்க்கோளம்[தொகு]

புவியின் உயிர்கள் சேர்ந்து அதன் "உயிர்க்கோள"த்தை அமைக்கின்றது. இந்த உயிர்க்கோளம் பூமியில் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகிபரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது. அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக தற்போது நாமறிவோம். சில அறிவியலாளர்கள் பூமியைப் போன்ற உயிர்க்கோளம் அரிதானது என நம்புகின்றனர்.[128]

இந்த உயிர்க் கோளம் பல உயிர்க்கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒத்த தாவர மற்றும் விலங்கு வகைகளை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் நிலநீர்க்கோடு மற்றும் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள உயரம் இரண்டும் உயிர்க்கட்டுகளைப் பிரிக்கிறது. ஆர்ட்டிக்அண்டார்ட்டிக் வளையங்களுக்குள் அல்லது அதிக உயரமான இடங்களிலும் காணப்படும் நில உயிர்க்கட்டுகளில் மிக அரிதாகவே தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன, ஆனால் பூமத்திய ரேகை அருகே காணப்படும் உயிர்க்கட்டில் நீண்ட பலவகை உயிரினங்கள் காணப்படுகின்றன.[129]

இயற்கை வளங்கள் மற்றும் நிலம் பயன்பாடு[தொகு]

முதன்மைக் கட்டுரை: இயற்கை வளங்கள்

பூமி, பயனுள்ள பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் பல வளங்களை மனிதனுக்கு அளிக்கிறது. இவற்றில் சில புதுப்பிக்க இயலாத வளங்கள் (non-renewable), அதாவது தாது எரிபொருள் போன்றவை குறுகிய காலத்தில் உருவாவதில்லை.

அதிக அளவிலான தொல்லுயிர் படிம எரிபொருட்கள் பூமியின் மேலோட்டிலிருந்து கிடைக்கின்றது, அவை நிலக்கரிபெட்ரோல்இயற்கை வாயு மற்றும்மீத்தேன் கிளாத்ரேட்டுகளாம். இந்த எரிபொருட்களை ஆற்றல் உருவாக்குதலுக்கும், வேதி பொருட்கள் உருவாக்க முன்னோடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூமியின் மேலோட்டில் கனிம தாதுக்கள் படிமங்களாக தாது உருவாக்கல் மூலம் மற்றும் அரித்தல், பலகை டெக்டோனிக் மூலம் உருவாகி படிந்துள்ளன.[130] இவை உலோகம் மற்றும் உபயோகமுள்ள தனிமங்கள் உருவாக்குவதற்கு ஒருநிலைப்பட்ட மூலமாக பயன்படுத்தப்படுகிறது.

புவியின் உயிர்க்கோளம் மனிதனுக்குத் தேவையான பல உயிர் பொருட்களை உருவாக்குகின்றது, இவை உணவு, மரம், ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர்க்கழிவுகளின் மறுசுழற்சி ஆகியவையாகும். நில ஆதாரமான சூழலமைப்பு மேல்மண் மற்றும் தூயநீரை சார்ந்தும் மற்றும் கடல் சூழலமைப்பு நிலத்திலிருந்து கரைந்து கடலை அடையும் ஊட்ட பொருட்களைச் சார்ந்தும் உள்ளது.[131] மனிதர்களும் நிலத்தில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். 1993 கணக்கெடுப்பின் படி, மனிதர்கள் உபயோகப்படுத்தும் நிலம் தோராயமாக:

நில உபயோகம்விழுக்காடு
விவசாயம்:13.13%[6]
நிலையான பயிர்:4.71%[6]
நிலையான மேய்ச்சல் நிலம்:26%
காடுகள் மற்றும் வனப்பகுதி:32%
நகரங்கள்:1.5%
மற்றவை:30%

1993 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி விவசாயம் செய்யப்படும் நிலம் 2,481,250 சதுர கி.மீ.[6]

இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் அபாயம்[தொகு]

பூமி மீதுள்ள பல இடங்கள் அதீதமான வானிலையால் அதாவது புயல்சூறாவளி, சுழல்காற்று ஆகியவற்றால் பாதிப்படைகின்றன. மேலும் பல இடங்களில் நில நடுக்கம், நில சறுக்கம், ஆழிப் பேரலைகள்எரிமலைகள், சுழற்காற்று, புதைகுழிகள், பனிப்புயல், வெள்ளம்வறட்சி மற்றும் விபத்துகளும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன.

பல இடங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுப்புற மாசு, காற்று மற்றும் நீரை பாதித்ததோடல்லாமல், அமில மழை, நச்சுப்பொருட்கள், பயிரழித்தல் (மிகையான மேய்ச்சல், காட்டை அழித்தல், பாலைவனமாக்கல்), வன உயிர்கள் அழித்தல், உயிரினங்களின் மறைவு, மண் அழிப்பு, மண் மறைவு, மண் அரிப்பு மற்றும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை அறிமுகப்படுத்தல் போன்றவற்றையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அறிவியல் அமைப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவினால் கோள வெதும்பல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. இதனால் பனிக்கட்டியாறு மற்றும் பனிக்கட்டி மலை (ice sheet) உருகுதல், அதீதமான வெப்பநிலை மாற்றங்கள், வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட அளவு உயருதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் எனக் கண்டறிந்துள்ளனர்.[132]பூமியின் மேல் வளிமண்டலத்தில் மனிதனால் அனுப்பப்பட்ட செயற்க்கைக்கோள்களில் 3,000 தான் தற்சமயம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை 8,000 செயற்க்கைகோள்களை உலக நாடுகள் அனுபிவைத்துள்ளன. இவை அனைத்தும் பூமிக்கு மேலே 250 கிலோ மீட்டர் முதல் 850 கிலோ மீட்டர்கள் உயரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. [133]

மனிட புவியியல்[தொகு]

North AmericaSouth AmericaAntarcticaAfricaEuropeAsiaOceaniaOceansContinents vide couleurs.png
இப் படத்தைப் பற்றி

வரைபடவியல், வரைபடங்களைப் பற்றி அறிந்து, அவற்றை உருவாக்கும் முறை மற்றும்புவியியல் இவை இரண்டும் புவியை வரையறுக்க உதவியாய் இருந்தன. ஆய்வின் மூலம் இடங்கள் மற்றும் தூரங்களை தீர்மானிப்பதும் மற்றும் சிறு அளவில் பயண திசை தீர்மானம் செய்தல், மேலும் ஒன்றின் நிலையையும் அதன் திசையும் கண்டறிதல் யாவும் வரைபடவியல் மற்றும் புவியியலோடு சேர்ந்து வளர்ந்து தேவையான மற்றும் பொருந்தக்கூடிய விளக்கங்களை அளித்திருக்கின்றது.

நவம்பர் 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புவியில் 6,740,000,000 மனிதர்கள் வாழ்கின்றனர்.[134] உலக மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியனை எட்டும் எனவும் 2050 ஆம் ஆண்டுக்குள் 9.2 பில்லியனை எட்டும் எனவும் நம்பப்படுகிறது.[135] இந்த வளர்ச்சிவளர்ந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நெருக்கம் உலகில் வெவ்வேறு விதமாக உள்ளது, ஆனால் பெரும்பான்மையினர் ஆசியாவில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள் தொகையில் 60% மக்கள் கிராமபுரங்களில் அல்லாமல்நகரங்களில் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.[136]

புவியின் மேற்பரப்பில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனிதன் வாழ உகந்ததாக கணக்கெடுப்பு காட்டுகின்றது மேலும் மூன்றில் ஒரு பங்கு நீராலும் மற்றும் நிலத்தில் பாதி பாலைவனமாகவோ,(14%)[137] உயர்ந்த மலைகளாகவோ (27%),[138] அல்லது குறைந்த தகுதி உடைய இடங்களாகவோ உள்ளன. புவியின் வடகோடியில் இருக்கும் நிரந்தர குடியிருப்பு கனடா நாட்டிலுள்ள நுனாவட் (Nunavut) மாகாணத்திலுள்ள, எல்லெஸ்மியர் தீவிலுள்ள (Ellesmere) அலர்ட்(Alert) நகரமாகும்.[139](82°28′N) அதே போன்று தென் கோடியில் இருக்கும் குடியிருப்பு, அண்டார்ட்டிகாவில் தென் துருவத்திலிருக்கும், அமண்ட்சன் - ஸ்காட் தென் துருவ நிலையம் ஆகும். (90°S)

புவியின் இரவுத் தோற்றம், DMSP/OLS என்ற சேர்மத்தின் உதவியால் இரவு நேர உலகின் மாதிரியை வடிவமைத்து எடுத்த நிலத்தின் ஒளிர்வு படம். இந்த படம் நிழற்படம் அல்ல, நேரடியாக பார்ப்பவருக்கு இதில் உள்ள பல அம்சங்கள் மிகவும் பிரகாசமாக காணப்படலாம்.

சுதந்திர ஏகாதிபத்ய நாடுகள் அன்டார்ட்டிகாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, பூமியின் மொத்த நிலப்பரப்பையும் ஆக்ரமித்துள்ளன. 2007 ஆம் ஆண்டின் படி பூமியில் 201 ஏகாதிபத்திய நாடுகள்உள்ளன இதில் 192 ஐக்கிய நாடுகளின் அங்கத்தினராக இருக்கும் நாடுகளும் அடங்கும். இதைத்தவிர 59 சார்ந்த இடங்களும், பல தனித்தியங்கும் இடங்களும் மற்றும் சர்ச்சைக்குரிய இடங்களும் இவற்றில் அடங்கும்.[6] புவியின் வரலாற்றில் அதன் மொத்த பரப்பும் ஓர்ஏகாதிபத்திய அரசின் கீழ் இருந்ததில்லை, ஆனால் பலமுறை பல நாடுகள் மொத்த உலக அதிகாரத்தையும் பெற முயற்சித்து தோல்வியுற்றுள்ளன.[140]

ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பு, இது நாடுகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை போர்கள் மூலமல்லாது சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள நிறுவப்பட்டது.[141] இருந்தாலும் இது ஓர் உலக அரசாங்கமன்று. ஐ.நா சபை சர்வதேச சட்டத்தை அளித்து, பொதுவான விதிகளைக் கடைபிடிக்கின்றது, மேலும் அங்கத்தினர்களால் ஒரு சேர தீர்மானிக்கும் போது ஆயுதமேற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர்,[142] ஐநா சபை பெரும்பாலும் சர்வதேச அரசாங்க விவகாரங்களைத் தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.

பூமியை சுற்றிய முதல் மனிதர் யூரி காகரின் ஆவார், இவர் ஏப்ரல் 12, 1961 அன்று இதைச் செய்தார்.[143] 2004ஆம் ஆண்டு வரை மொத்தம் 400 மனிதர்கள் வெளி அண்டத்திற்குச் சென்று மீண்டும் பூமியை அடைந்துள்ளனர், மேலும் இதில் அப்போலோ திட்டத்தின் கீழ் பனிரெண்டு பேர் சந்திரனில் நடந்துள்ளனர்.[144][145][146] பொதுவாக விண்வெளியில் வாழக்கூடிய மனிதர்களாக இருப்பவர்கள்சர்வதேச விண்வெளி மையத்தில் வசிப்பவர்கள் தான். இந்த மையத்தில் இருக்கும் மூன்று நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர்.[147] இதுவரையில் பூமியிலிருந்து அதிகமான தூரத்தை மனிதர்கள் 1970 ஆம் ஆண்டில் அப்போல்லோ 13 விண்கலத்தில் பூமியிலிருந்து 400,171 கி.மீ. தூரத்தில் கடந்துள்ளனர்.[148][149]

கலாச்சார பார்வை[தொகு]

விண்வெளி வீரர்களால் அப்போலோ 8-லிருந்து எடுக்கப்பட்ட முதல் "புவி உதய", நிழற்படம்

புவிக்கு ஆங்கிலத்தில் "எர்த்" (Earth) என்ற பெயர் இதற்கு நிலம் அல்லது மண் என்ற பொருள்படும் ஆங்கிலோ-சாக்சன்வார்த்தையான எர்டா (erda) என்பதிலிருந்து உருவானது. பழங்கால ஆங்கிலத்தில் இது இயோர்த் (eorthe) என்றும்இடைக்கால ஆங்கிலத்தில் எர்தெ (erthe) என்றும் ஆனது.[150] புவியின் வானியல் சின்னம் ஒரு வட்டத்தைச் சார்ந்த கூட்டல் குறியை உள்ளடக்கி இருந்தது.[151] தமிழில், ஆர்(பெரியது) --> தர் --> தரை(terra) என்றாகும். மற்றும், ஓலா--> உலா --> நெலா --> நிலா -> நிலம் என்றும் ஆகும். புவியை ஒரு தெய்வமாக, குறிப்பாக ஒரு பெண் தெய்வமாகஉருவகப்படுத்தி வழிபடுகின்றனர். பல கலாச்சாரத்தில் பெண் தெய்வத்தை, தாய் மண் என்று அழைப்பதோடு, மனித வள தெய்வமாக உருவகப்படுத்துகின்றனர். பல மதங்களின் படைப்பு இதிகாசங்களில் புவி உருவான வரலாறு பற்றி கூறும் போது புவி அதிக சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் அல்லது தெய்வங்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. பல்வேறு சமயப் பிரிவுகள், அடிப்படைவாத பிராட்டஸ்டண்ட் பிரிவினர்[152] அல்லது இஸ்லாம் சமயத்தவர்,[153] புனித உரைகளில்படைப்பு இதிகாசத்தை பற்றிய தமது விளக்கங்கள் உண்மையானவை அவை உலகம் உருவான விதம் மற்றும் உயிர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி [154] பற்றிய அறிவியல் விளக்கங்களுடன் அல்லது அவற்றிற்கு பதிலாக அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இத்தகைய வாதங்களை அறிவியல் சமூகம்[155][156] மற்றும் மற்ற சமய குழுக்கள்[157][158][159] எதிர்க்கின்றன. இதற்கு பிரபலமான எடுத்துக்காட்டு படைப்பு பரிணாம விவாதம்.

பண்டைய காலத்தில் பூமி தட்டையானது [160] என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியுள்ளது ஆனால் இதுவே மனிதன் உலகை சுற்றி வந்து பார்த்த பிறகு உலகம் உருண்டையானது தான் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.[161] விண்வெளி கலங்களில் வெளியே பறந்து அண்டத்திலிருந்து பூமியை பார்க்கும் போது அதன் பரிமாணம் வேறுபட்டதாய் தெரிந்தது, அதாவது தற்போது புவியின் உயிர்க்கோளம் என்பது உலகளாவிய நோக்கிலேயே கருதப்படுகின்றது.[162][163] இதன் பிரதிபலிப்பு வளரும் சுற்றுசூழ் பாதுகாப்பு அமைப்புகள் மனிதரால் புவிக்கு ஏற்படும் மாறுதல்கள் மற்றும் கேடுகளைப் பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளன.[164]

குறிப்புகள்[தொகு]

  1. Jump up All astronomical quantities vary, both secularly and periodically. The quantities given are the values at the instant J2000.0 of the secular variation, ignoring all periodic variations.
  2. Jump up Due to natural fluctuations, ambiguities surrounding ice shelves, and mapping conventions for vertical datums, exact values for land and ocean coverage are not meaningful. Based on data from the Vector Map and Global Landcover datasets, extreme values for coverage of lakes and streams are 0.6% and 1.0% of the earth’s surface. Note that the ice shields of Antarctica and Greenland are counted as land, even though much of the rock which supports them lies below sea level.
  3. Jump up நீலக்கோள் என்பது பல படங்களின் பெயராக Blue Planet மற்றும் The Blue Planet என பயன்படுத்தப்பட்டுள்ளது, லைப் (பத்திரிக்கை) (Life) என்பதன் நம்பமுடியாத ஆண்டு '68 (The Incredible Year '68) என்ற இதழில் புவி உதயத்தின் படத்தை போடும் போது ஜேம்ஸ் டிக்கே என்ற கவியின் வரிகளாக Behold. The blue planet steeped in its dream/Of reality என குறிப்பிடப்பட்டுள்ளது http://yalepress.yale.edu/yupbooks/excerpts/poole_earthri. e.pdf பக்கம் 7-8http://www.northjersey.com/entertainment/books/36520714.html மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகாமின் அறிக்கையின் தலைப்பாக 'நீலக் கோளத்தின்' நீர் சுழற்சியை ஆய்ந்தறிதல் (Exploring the water cycle of the 'Blue Planet') http://www.esa.int/esapub/bulletin/bulletin137/bul137b_drinkwater.pdf என குறிப்பிடப்பட்டுள்ளது.
  4. Jump up சூரிய நாட்களின் எண்ணிக்கை, விண்மீன் நாட்களை விட ஒன்று குறைவாகும், ஏனெனில் புவி சூரியனை சுற்றும் போது தனது அச்சில் ஒன்று கூடுதலாக சுழலுகிறது.
  5. Jump up இந்தக் கட்டுரையில் article "Petrology" in the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் 11ம் பதிப்பில் இருந்து உரை எடுத்தாளப்பட்டுள்ளது. இது தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
  6. Jump up 5 முதல் 200 கி.மீ. வரை மாறுபடும்.
  7. Jump up 5 முதல் 70 கி.மீ. வரை மாறுபடும்.
  8. Jump up சோமாலியத் தட்டு உட்பட, இது தற்போது ஆப்பிரிக்க தட்டிலிருந்து தோன்றும் செயலில் உள்ளது. பார்க்க:Chorowicz, Jean (October 2005). "The East African rift system".Journal of African Earth Sciences 43 (1–3): 379–410. doi:10.1016/j.jafrearsci.2005.07.019.
  9. Jump up இந்த அளவீடு கைக்கோ (Kaikō) என்பதால் மார்ச் 1995 ஆம் ஆண்டில் எடுத்தது, இன்று வரை இதுவே மிகத்துல்லியமான அளவீடாக நம்பப்படுகிறது. மேலும் தகவலுக்கு சாலஞ்சர் ஆழம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
  10. Jump up புவியின் கடலின் மொத்த கொள்ளளவு 1.4×109கிமீ3. புவியின் மொத்த மேற்பரப்பு 5. 1×108கிமீ². எனவே, சராசரி ஆழம் இந்த இரண்டின் விகிதம் அல்லது 2.7 கி.மீ.
  11. Jump up இந்த எண்களின் மூலத்தில், "சராசரி சூரிய நேர நிமிடங்கள்" என்பதற்குப் பதிலாக "UT1 நிமிடங்கள்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.—Aoki, S.; Kinoshita, H.; Guinot, B.; Kaplan, G. H.; McCarthy, D. D.; Seidelmann, P. K. (1982). "The new definition of universal time"Astronomy and Astrophysics 105 (2): 359–361. பார்த்த நாள்: 2008-09-23.
  12. Jump up புவிக்கு, ஹில் ஆரம் என்பது
    \begin{smallmatrix} R_H = a\left ( \frac{m}{3M} \right )^{\frac{1}{3}} \end{smallmatrix},
    m என்பது புவியின் நிறை, a என்பது வானியல் அலகு மற்றும் M என்பது சூரியனின் நிறை. A.U. வில் உள்ள ஆரம்: \begin{smallmatrix} \left ( \frac{1}{3 \cdot 332,946} \right )^{\frac{1}{3}} = 0.01 \end{smallmatrix}.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jump up Allen, Clabon Walter; Cox, Arthur N. (2000). Allen's Astrophysical Quantities. Springer. பக். 294. ISBN 0387987460.
  2. Jump up Various (2000). David R. Lide. ed. Handbook of Chemistry and Physics (81st ed.). CRC.ISBN 0849304814.
  3. ↑ Jump up to:3.0 3.1 IERS Working Groups(2003).McCarthy, Dennis D.; Petit, Gérard "General Definitions and Numerical Standards". IERS Technical Note No. 32, U.S. Naval Observatory and Bureau International des Poids et Mesures. 2008-08-03 அன்று அணுகப்பட்டது..
  4. Jump up Cazenave, Anny (1995). Ahrens, Thomas J.. ed (PDF). Global earth physics a handbook of physical constants. Washington, DC: American Geophysical Union. ISBN 0-87590-851-9. பார்த்த நாள்: 2008-08-03.
  5. Jump up Pidwirny, Michael (2006-02-02). Surface area of our planet covered by oceans and continents.(Table 8o-1). University of British Columbia, Okanagan. பார்த்த நாள்: 2007-11-26.
  6. ↑ Jump up to:6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Staff (2008-07-24). "World". The World Factbook. Central Intelligence Agency. பார்த்த நாள் 2008-08-05.
  7. ↑ Jump up to:7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Williams, David R. (2004-09-01). "Earth Fact Sheet". NASA. பார்த்த நாள் 2007-03-17.
  8. Jump up Yoder, C. F. (1995) p. 12.
  9. Jump up Allen, Clabon Walter; Cox, Arthur N. (2000). Allen's Astrophysical Quantities. Springer. பக். 296. ISBN 0387987460.
  10. Jump up May, Robert M. (1988). "How many species are there on earth?"Science 241 (4872): 1441–1449. doi:10.1126/science.241.4872.1441பப்மெட் 17790039. பார்த்த நாள்: 2007-08-14.
  11. ↑ Jump up to:11.0 11.1 Dalrymple, G.B. (1991). The Age of the Earth. California: Stanford University Press. ISBN 0-8047-1569-6.
  12. ↑ Jump up to:12.0 12.1 Newman, William L. (2007-07-09). "Age of the Earth". Publications Services, USGS. பார்த்த நாள் 2007-09-20.
  13. ↑ Jump up to:13.0 13.1 Dalrymple, G. Brent (2001). "The age of the Earth in the twentieth century: a problem (mostly) solved"Geological Society, London, Special Publications 190: 205–221. doi:10.1144/GSL.SP.2001.190.01.14. பார்த்த நாள்: 2007-09-20.
  14. ↑ Jump up to:14.0 14.1 Stassen, Chris (2005-09-10). "The Age of the Earth". TalkOrigins Archive. பார்த்த நாள் 2008-12-30.
  15. Jump up Harrison, Roy M.; Hester, Ronald E. (2002). Causes and Environmental Implications of Increased UV-B Radiation. Royal Society of Chemistry. ISBN 0854042652.
  16. ↑ Jump up to:16.0 16.1 Carrington, Damian (2000-02-21). "Date set for desert Earth". BBC News. பார்த்த நாள்: 2007-03-31.
  17. Jump up Malik, Tariq (2007-03-02). Rover reveals Mars was once wet enough for life.Space.com (via MSNBC). பார்த்த நாள்: 2007-08-28.
  18. Jump up Simulations Show Liquid Water Could Exist on MarsUniversity of Arkansas. 2005-11-07. பார்த்த நாள்: 2007-08-08.
  19. Jump up Tinetti, G. et al. (July 2007). Water vapour in the atmosphere of a transiting extrasolar planet448. 169–171. doi:10.1038/nature06002.
  20. Jump up யோடர், சார்லஸ் எப். (1995:8).
  21. Jump up Bowring, S. (1995). "The Earth's early evolution". Science 269: 1535.doi:10.1126/science.7667634பப்மெட் 7667634.
  22. Jump up Yin, Qingzhu; Jacobsen, S. B.; Yamashita, K.; Blichert-Toft, J.; Télouk, P.; Albarède, F. (2002). "A short timescale for terrestrial planet formation from Hf-W chronometry of meteorites". Nature 418 (6901): 949–952. doi:10.1038/nature00995.
  23. Jump up Canup, R. M.; Asphaug, E.(Fall Meeting 2001). "An impact origin of the Earth-Moon system". Abstract #U51A-02, American Geophysical Union. 2007-03-10 அன்று அணுகப்பட்டது..
  24. Jump up R. Canup and E. Asphaug (2001). "Origin of the Moon in a giant impact near the end of the Earth's formation"Nature 412: 708–712. doi:10.1038/35089010.
  25. Jump up Morbidelli, A.; Chambers, J.; Lunine, J. I.; Petit, J. M.; Robert, F.; Valsecchi, G. B.; Cyr, K. E. (2000). "Source regions and time scales for the delivery of water to Earth".Meteoritics & Planetary Science 35 (6): 1309–1320. பார்த்த நாள்: 2007-03-06.
  26. Jump up Rogers, John James William; Santosh, M. (2004). Continents and Supercontinents. Oxford University Press US. பக். 48. ISBN 0195165896.
  27. Jump up Hurley, P.M.; Rand, J.R. (1969). "Pre-drift continental nuclei". Science 164: 1229–1242.doi:10.1126/science.164.3885.1229பப்மெட் 17772560.
  28. Jump up Armstrong, R.L. (1968). "A model for the evolution of strontium and lead isotopes in a dynamic earth". Rev. Geophys. 6: 175–199. doi:10.1029/RG006i002p00175.
  29. Jump up De Smet, J (2000). "Early formation and long-term stability of continents resulting from decompression melting in a convecting mantle". Tectonophysics 322: 19.doi:10.1016/S0040-1951(00)00055-X.
  30. Jump up Harrison, Tm; Blichert-Toft, J; Müller, W; Albarede, F; Holden, P; Mojzsis, Sj (December 2005). "Heterogeneous Hadean hafnium: evidence of continental crust at 4.4 to 4.5 ga.".Science (New York, N.Y.) 310 (5756): 1947–50. doi:10.1126/science.1117926.பப்மெட் 16293721.
  31. Jump up Hong, D (2004). "Continental crustal growth and the supercontinental cycle: evidence from the Central Asian Orogenic Belt". Journal of Asian Earth Sciences 23: 799.doi:10.1016/S1367-9120(03)00134-2.
  32. Jump up Armstrong, R.L. (1991). "The persistent myth of crustal growth". Australian Journal of Earth Sciences 38: 613–630. doi:10.1080/08120099108727995.
  33. Jump up Murphy, J. B.; Nance, R. D. (1965). "How do supercontinents assemble?"American Scientist 92: 324–33. doi:10.1511/2004.4.324. பார்த்த நாள்: 2007-03-05.
  34. Jump up Purves, William Kirkwood; Sadava, David; Orians, Gordon H.; Heller, Craig (2001). Life, the Science of Biology: The Science of Biology. Macmillan. p. 455. ISBN 0716738732.
  35. Jump up Doolittle, W. Ford (February 2000). "Uprooting the tree of life". Scientific American 282(6): 90–95. doi:10.1038/nature03582.
  36. Jump up Berkner, L. V.; Marshall, L. C. (1965). "On the Origin and Rise of Oxygen Concentration in the Earth's Atmosphere"Journal of Atmospheric Sciences 22 (3): 225–261.doi:10.1175/1520-0469(1965)022<0225:OTOARO>2.0.CO;2. பார்த்த நாள்: 2007-03-05.
  37. Jump up Burton, Kathleen (2002-11-29). "Astrobiologists Find Evidence of Early Life on Land". NASA. பார்த்த நாள் 2007-03-05.
  38. Jump up Kirschvink, J. L. (1992). Schopf, J.W.; Klein, C. & Des Maris, D.. ed. Late Proterozoic low-latitude global glaciation: the Snowball Earth. The Proterozoic Biosphere: A Multidisciplinary Study. Cambridge University Press. பக். 51–52. ISBN 0521366151.
  39. Jump up Raup, D. M.; Sepkoski, J. J. (1982). "Mass Extinctions in the Marine Fossil Record".Science 215 (4539): 1501–1503. doi:10.1126/science.215.4539.1501.பப்மெட் 17788674. பார்த்த நாள்: 2007-03-05.
  40. Jump up Gould, Stephan J. (October 1994). "The Evolution of Life on Earth"Scientific American. பார்த்த நாள்: 2007-03-05.
  41. Jump up Wilkinson, B. H.; McElroy, B. J. (2007). "The impact of humans on continental erosion and sedimentation"Bulletin of the Geological Society of America 119 (1–2): 140–156.doi:10.1130/B25899.1. பார்த்த நாள்: 2007-04-22.
  42. Jump up Staff. "Paleoclimatology - The Study of Ancient Climates". Page Paleontology Science Center. பார்த்த நாள் 2007-03-02.
  43. ↑ Jump up to:43.0 43.1 43.2 Sackmann, I.-J.; Boothroyd, A. I.; Kraemer, K. E. (1993). "Our Sun. III. Present and Future" (PDF). Astrophysical Journal 418: 457–468. doi:10.1086/173407. Bibcode: 1993ApJ...418..457S. பார்த்த நாள்: 2008-07-08.
  44. Jump up Kasting, J.F. (1988). "Runaway and Moist Greenhouse Atmospheres and the Evolution of Earth and Venus"Icarus 74: 472–494. doi:10.1016/0019-1035(88)90116-9. பார்த்த நாள்: 2007-03-31.
  45. ↑ Jump up to:45.0 45.1 வார்ட் மற்றும் பிரவுன்லே (2002)
  46. Jump up Guillemot, H.; Greffoz, V. (March 2002). "Ce que sera la fin du monde" (in French).Science et Vie N° 1014.
  47. Jump up Britt, Robert (2000-02-25). "Freeze, Fry or Dry: How Long Has the Earth Got?". மூல முகவரியிலிருந்து 2000-07-06 அன்று பரணிடப்பட்டது.
  48. ↑ Jump up to:48.0 48.1 Schröder, K.-P.; Smith, Robert Connon (2008). "Distant future of the Sun and Earth revisited". Monthly Notices of the Royal Astronomical Society 386: 155.doi:10.1111/j.1365-2966.2008.13022.xarXiv:0801.4031.
    இதனையும் பார்க்கவும்Palmer, Jason (2008-02-22). "Hope dims that Earth will survive Sun's death"NewScientist.com news service. பார்த்த நாள்: 2008-03-24.
  49. Jump up Stern, David P. (2001-11-25). "Planetary Magnetism". NASA. பார்த்த நாள் 2007-04-01.
  50. Jump up Tackley, Paul J. (2000-06-16). "Mantle Convection and Plate Tectonics: Toward an Integrated Physical and Chemical Theory". Science 288 (5473): 2002–2007.doi:10.1126/science.288.5473.2002பப்மெட் 10856206.
  51. Jump up Milbert, D. G.; Smith, D. A.. "Converting GPS Height into NAVD88 Elevation with the GEOID96 Geoid Height Model". National Geodetic Survey, NOAA. பார்த்த நாள் 2007-03-07.
  52. ↑ Jump up to:52.0 52.1 Sandwell, D. T.; Smith, W. H. F. (2006-07-07). "Exploring the Ocean Basins with Satellite Altimeter Data". NOAA/NGDC. பார்த்த நாள் 2007-04-21.
  53. Jump up Mohr, P.J.; Taylor, B.N. (October 2000). "Unit of length (meter)". NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST Physics Laboratory. பார்த்த நாள் 2007-04-23.
  54. Jump up Staff (November 2001). "WPA Tournament Table & Equipment Specifications". World Pool-Billiards Association. பார்த்த நாள் 2007-03-10.
  55. Jump up Senne, Joseph H. (2000). "Did Edmund Hillary Climb the Wrong Mountain". Professional Surveyor 20 (5): 16–21.
  56. Jump up Sharp, David (2005-03-05). "Chimborazo and the old kilogram". The Lancet 365 (9462): 831–832. doi:10.1016/S0140-6736(05)71021-7.
  57. Jump up Morgan, J. W.; Anders, E. (1980). "Chemical composition of Earth, Venus, and Mercury"Proceedings of the National Academy of Science 71 (12): 6973–6977.doi:10.1073/pnas.77.12.6973பப்மெட் 16592930. பார்த்த நாள்: 2007-02-04.
  58. Jump up Tanimoto, Toshiro (1995). Thomas J. Ahrens. ed (PDF). Crustal Structure of the Earth. Washington, DC: American Geophysical Union. ISBN 0-87590-851-9. பார்த்த நாள்: 2007-02-03.
  59. Jump up Kerr, Richard A. (2005-09-26). "Earth's Inner Core Is Running a Tad Faster Than the Rest of the Planet". Science 309 (5739): 1313. doi:10.1126/science.309.5739.1313a.பப்மெட் 16123276.
  60. ↑ Jump up to:60.0 60.1 Turcotte, D. L.; Schubert, G. (2002). "4". Geodynamics (2 ed.). Cambridge, England, UK: Cambridge University Press. பக். 136–137. ISBN 978-0-521-66624-4.
  61. Jump up Sanders, Robert (2003-12-10). "Radioactive potassium may be major heat source in Earth's core". UC Berkeley News. பார்த்த நாள்: 2007-02-28.
  62. Jump up Alfè, D.; Gillan, M. J.; Vocadlo, L.; Brodholt, J; Price, G. D. (2002). "The ab initiosimulation of the Earth's core" (PDF). Philosophical Transaction of the Royal Society of London 360 (1795): 1227–1244. பார்த்த நாள்: 2007-02-28.
  63. Jump up Vlaar, N (1994). "Cooling of the earth in the Archaean: Consequences of pressure-release melting in a hotter mantle". Earth and Planetary Science Letters 121: 1.doi:10.1016/0012-821X(94)90028-0.
  64. Jump up Turcotte, D. L.; Schubert, G. (2002). "4". Geodynamics (2 ed.). Cambridge, England, UK: Cambridge University Press. பக். 137. ISBN 978-0-521-66624-4.
  65. ↑ Jump up to:65.0 65.1 Sclater, John G (1981). "Oceans and Continents: Similarities and Differences in the Mechanisms of Heat Loss". Journal of Geophysical Research 86: 11535.doi:10.1029/JB086iB12p11535.
  66. Jump up Richards, M. A.; Duncan, R. A.; Courtillot, V. E. (1989). "Flood Basalts and Hot-Spot Tracks: Plume Heads and Tails"Science 246 (4926): 103–107.doi:10.1126/science.246.4926.103பப்மெட் 17837768. பார்த்த நாள்: 2007-04-21.
  67. Jump up Brown, W. K.; Wohletz, K. H. (2005). "SFT and the Earth's Tectonic Plates". Los Alamos National Laboratory. பார்த்த நாள் 2007-03-02.
  68. Jump up Kious, W. J.; Tilling, R. I. (1999-05-05). "Understanding plate motions". USGS. பார்த்த நாள் 2007-03-02.
  69. Jump up Seligman, Courtney (2008). "The Structure of the Terrestrial Planets". Online Astronomy eText Table of Contents. cseligman.com. பார்த்த நாள் 2008-02-28.
  70. Jump up Duennebier, Fred (1999-08-12). "Pacific Plate Motion". University of Hawaii. பார்த்த நாள் 2007-03-14.
  71. Jump up Mueller, R.D.; Roest, W.R.; Royer, J.-Y.; Gahagan, L.M.; Sclater, J.G. (2007-03-07). "Age of the Ocean Floor Poster". NOAA. பார்த்த நாள் 2007-03-14.
  72. Jump up Bowring, Samuel A. (1999). "Priscoan (4.00-4.03 Ga) orthogneisses from northwestern Canada". Contributions to Mineralogy and Petrology 134: 3.doi:10.1007/s004100050465.
  73. Jump up Meschede, M.; Udo Barckhausen, U. (2000-11-20). "Plate Tectonic Evolution of the Cocos-Nazca Spreading Center". Proceedings of the Ocean Drilling Program. Texas A&M University. பார்த்த நாள் 2007-04-02.
  74. Jump up Staff. "GPS Time Series". NASA JPL. பார்த்த நாள் 2007-04-02.
  75. ↑ Jump up to:75.0 75.1 Pidwirny, Michael (2006). "Fundamentals of Physical Geography". PhysicalGeography.net. பார்த்த நாள் 2007-03-19.
  76. Jump up Kring, David A.. "Terrestrial Impact Cratering and Its Environmental Effects". Lunar and Planetary Laboratory. பார்த்த நாள் 2007-03-22.
  77. Jump up Staff. "Layers of the Earth". Volcano World. பார்த்த நாள் 2007-03-11.
  78. Jump up Jessey, David. "Weathering and Sedimentary Rocks". Cal Poly Pomona. பார்த்த நாள் 2007-03-20.
  79. Jump up Staff. "Minerals". Museum of Natural History, Oregon. பார்த்த நாள் 2007-03-20.
  80. Jump up Cox, Ronadh (2003). "Carbonate sediments". Williams College. பார்த்த நாள் 2007-04-21.
  81. Jump up FAO Staff (1995). FAO Production Yearbook 1994 (Volume 48 ed.). Rome, Italy: Food and Agriculture Organization of the United Nations. ISBN 9250038445.
  82. ↑ Jump up to:82.0 82.1 Sverdrup, H. U.; Fleming, Richard H. (1942-01-01). The oceans, their physics, chemistry, and general biology. Scripps Institution of Oceanography Archives. பார்த்த நாள்: 2008-06-13.
  83. Jump up "7,000 m Class Remotely Operated Vehicle KAIKO 7000". Japan Agency for Marine-Earth Science and Technology (JAMSTEC). பார்த்த நாள் 2008-06-07.
  84. Jump up Igor A. Shiklomanov et al. (1999). "World Water Resources and their use Beginning of the 21st century" Prepared in the Framework of IHP UNESCO". State Hydrological Institute, St. Petersburg. பார்த்த நாள் 2006-08-10.
  85. Jump up Mullen, Leslie (2002-06-11). "Salt of the Early Earth". NASA Astrobiology Magazine. பார்த்த நாள் 2007-03-14.
  86. Jump up Morris, Ron M.. "Oceanic Processes". NASA Astrobiology Magazine. பார்த்த நாள் 2007-03-14.
  87. Jump up Scott, Michon (2006-04-24). "Earth's Big heat Bucket". NASA Earth Observatory. பார்த்த நாள் 2007-03-14.
  88. Jump up Sample, Sharron (2005-06-21). "Sea Surface Temperature". NASA. பார்த்த நாள் 2007-04-21.
  89. Jump up Geerts, B.; Linacre, E. (November 1997). "The height of the tropopause". Resources in Atmospheric Sciences. University of Wyoming. பார்த்த நாள் 2006-08-10.
  90. ↑ Jump up to:90.0 90.1 Staff (2003-10-08). "Earth's Atmosphere". NASA. பார்த்த நாள் 2007-03-21.
  91. ↑ Jump up to:91.0 91.1 Moran, Joseph M. (2005). "Weather". World Book Online Reference Center. NASA/World Book, Inc.. பார்த்த நாள் 2007-03-17.
  92. ↑ Jump up to:92.0 92.1 Berger, Wolfgang H. (2002). "The Earth's Climate System". University of California, San Diego. பார்த்த நாள் 2007-03-24.
  93. Jump up Rahmstorf, Stefan (2003). "The Thermohaline Ocean Circulation". Potsdam Institute for Climate Impact Research. பார்த்த நாள் 2007-04-21.
  94. Jump up Various (1997-07-21). "The Hydrologic Cycle". University of Illinois. பார்த்த நாள் 2007-03-24.
  95. Jump up Staff. "Climate Zones". UK Department for Environment, Food and Rural Affairs. பார்த்த நாள் 2007-03-24.
  96. Jump up Staff (2004). "Stratosphere and Weather; Discovery of the Stratosphere". Science Week. பார்த்த நாள் 2007-03-14.
  97. Jump up de Córdoba, S. Sanz Fernández (2004-06-21). "100 km. Altitude Boundary for Astronautics". Fédération Aéronautique Internationale. பார்த்த நாள் 2007-04-21.
  98. Jump up Liu, S. C.; Donahue, T. M. (1974). "The Aeronomy of Hydrogen in the Atmosphere of the Earth"Journal of Atmospheric Sciences 31 (4): 1118–1136. doi:10.1175/1520-0469(1974)031<1118:TAOHIT>2.0.CO;2. பார்த்த நாள்: 2007-03-02.
  99. Jump up David C. Catling, Kevin J. Zahnle, Christopher P. McKay (2001). "Biogenic Methane, Hydrogen Escape, and the Irreversible Oxidation of Early Earth"Science 293 (5531): 839–843. doi:10.1126/science.1061976பப்மெட் 11486082.
  100. Jump up Abedon, Stephen T. (1997-03-31). "History of Earth". Ohio State University. பார்த்த நாள் 2007-03-19.
  101. Jump up Hunten, D. M.; Donahue, T. M. (1976). "Hydrogen loss from the terrestrial planets".Annual review of earth and planetary sciences 4: 265–292.doi:10.1146/annurev.ea.04.050176.001405. பார்த்த நாள்: 2008-11-07.
  102. Jump up Fitzpatrick, Richard (2006-02-16). "MHD dynamo theory". NASA WMAP. பார்த்த நாள் 2007-02-27.
  103. Jump up Campbell, Wallace Hall (2003). Introduction to Geomagnetic Fields. New York: Cambridge University Press. பக். 57. ISBN 0521822068.
  104. Jump up Stern, David P. (2005-07-08). "Exploration of the Earth's Magnetosphere". NASA. பார்த்த நாள் 2007-03-21.
  105. Jump up "Leap seconds". Time Service Department, USNO. பார்த்த நாள் 2008-09-23.
  106. ↑ Jump up to:106.0 106.1 Staff (2007-08-07). "Useful Constants". International Earth Rotation and Reference Systems Service (IERS). பார்த்த நாள் 2008-09-23.
  107. Jump up Seidelmann, P. Kenneth (1992). Explanatory Supplement to the Astronomical Almanac. Mill Valley, CA: University Science Books. பக். 48. ISBN 0-935702-68-7.
  108. Jump up Staff. "IERS Excess of the duration of the day to 86400s ... since 1623". International Earth Rotation and Reference Systems Service (IERS). பார்த்த நாள் 2008-09-23.—இறுதியில் உள்ள வரைபடம்.
  109. Jump up Staff. "IERS Variations in the duration of the day 1962–2005". International Earth Rotation and Reference Systems Service (IERS). பார்த்த நாள் 2008-09-23.
  110. Jump up Zeilik, M.; Gregory, S. A. (1998). Introductory Astronomy & Astrophysics (4th ed.). Saunders College Publishing. பக். 56. ISBN 0030062284.
  111. ↑ Jump up to:111.0 111.1 Williams, David R. (2006-02-10). "Planetary Fact Sheets". NASA. பார்த்த நாள் 2008-09-28.—சூரியன் மற்றும் சந்திரன் பக்கங்களில் உள்ள விட்டத்தைப் பார்க்கவும்.
  112. Jump up Williams, David R. (2004-09-01). "Moon Fact Sheet". NASA. பார்த்த நாள் 2007-03-21.
  113. Jump up Vázquez, M.; Montañés Rodríguez, P.; Palle, E. (2006). "The Earth as an Object of Astrophysical Interest in the Search for Extrasolar Planets" (PDF). Instituto de Astrofísica de Canarias. பார்த்த நாள் 2007-03-21.
  114. Jump up Astrophysicist team (2005-12-01). "Earth's location in the Milky Way". NASA. பார்த்த நாள் 2008-06-11.
  115. Jump up Bromberg, Irv (2008-05-01). "The Lengths of the Seasons (on Earth)". University of Toronto. பார்த்த நாள் 2008-11-08.
  116. Jump up Fisher, Rick (1996-02-05). "Earth Rotation and Equatorial Coordinates". National Radio Astronomy Observatory. பார்த்த நாள் 2007-03-21.
  117. Jump up சூரிய பெரும வீச்சு, சூரிய சிறும வீச்சிலிருந்து 103.4% தூரத்தில் உள்ளது. இன்வர்ஸ் ஸ்குயர் விதியால், சூரிய சிறும வீச்சிலிருந்து வரும் கதிர்வீச்சு, சூரிய பெரும வீச்சிலிருந்து வரும் ஆற்றலிலிருந்து 106.9% மாக இருக்கும்.
  118. Jump up Williams, Jack (2005-12-20). "Earth's tilt creates seasons". USAToday. பார்த்த நாள் 2007-03-17.
  119. Jump up Espenak, F.; Meeus, J. (2007-02-07). "Secular acceleration of the Moon". NASA.மூல முகவரியிலிருந்து 2012-12-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-20.
  120. Jump up Poropudas, Hannu K. J. (1991-12-16). "Using Coral as a Clock". Skeptic Tank. பார்த்த நாள் 2007-04-20.
  121. Jump up Laskar, J.; Robutel, P.; Joutel, F.; Gastineau, M.; Correia, A.C.M.; Levrard, B. (2004). "A long-term numerical solution for the insolation quantities of the Earth"Astronomy and Astrophysics 428: 261–285. doi:10.1051/0004-6361:20041335. பார்த்த நாள்: 2007-03-31.
  122. Jump up Murray, N.; Holman, M. (2001). "The role of chaotic resonances in the solar system".Nature 410 (6830): 773–779. doi:10.1038/35071000. பார்த்த நாள்: 2008-08-05.
  123. Jump up Williams, D.M.; J.F. Kasting (1996). "Habitable planets with high obliquities"Lunar and Planetary Science 27: 1437–1438. பார்த்த நாள்: 2007-03-31.
  124. Jump up R. Canup and E. Asphaug (2001). "Origin of the Moon in a giant impact near the end of the Earth's formation". Nature 412: 708–712. doi:10.1038/35089010.
  125. Jump up Whitehouse, David (2002-10-21). "Earth's little brother found". BBC News. பார்த்த நாள்: 2007-03-31.
  126. Jump up Staff (September 2003). "Astrobiology Roadmap". NASA, Lockheed Martin. பார்த்த நாள் 2007-03-10.
  127. Jump up Dole, Stephen H. (1970). Habitable Planets for Man (2nd ed.). American Elsevier Publishing Co.. ISBN 0-444-00092-5. பார்த்த நாள்: 2007-03-11.
  128. Jump up Ward, P. D.; Brownlee, D. (2000-01-14). Rare Earth: Why Complex Life is Uncommon in the Universe (1st ed.). New York: Springer-Verlag. ISBN 0387987010.
  129. Jump up Hillebrand, Helmut (2004). "On the Generality of the Latitudinal Gradient". American Naturalist 163 (2): 192–211. doi:10.1086/381004.
  130. Jump up Staff (2006-11-24). "Mineral Genesis: How do minerals form?". Non-vertebrate Paleontology Laboratory, Texas Memorial Museum. பார்த்த நாள் 2007-04-01.
  131. Jump up Rona, Peter A. (2003). "Resources of the Sea Floor"Science 299 (5607): 673–674.doi:10.1126/science.1080679பப்மெட் 12560541. பார்த்த நாள்: 2007-02-04.
  132. Jump up Staff (2007-02-02). "Evidence is now ‘unequivocal’ that humans are causing global warming – UN report". United Nations. பார்த்த நாள் 2007-03-07.
  133. Jump up விண்வெளி?இந்து தமிழ் பார்த்த நாள் ஏப்ரல் 22 2015 புதன்
  134. Jump up United States Census Bureau (2008-01-07). "World POP Clock Projection". United States Census Bureau International Database. பார்த்த நாள் 2008-01-07.
  135. Jump up Staff. "World Population Prospects: The 2006 Revision". United Nations. பார்த்த நாள் 2007-03-07.
  136. Jump up Staff (2007). "Human Population: Fundamentals of Growth: Growth". Population Reference Bureau. பார்த்த நாள் 2007-03-31.
  137. Jump up Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification"Hydrology and Earth System Sciences Discussions4: 439–473. பார்த்த நாள்: 2007-03-31.
  138. Jump up Staff. "Themes & Issues". Secretariat of the Convention on Biological Diversity. பார்த்த நாள் 2007-03-29.
  139. Jump up Staff (2006-08-15). "Canadian Forces Station (CFS) Alert". Information Management Group. பார்த்த நாள் 2007-03-31.
  140. Jump up Kennedy, Paul (1989). The Rise and Fall of the Great Powers (1st ed.). Vintage.ISBN 0679720197.
  141. Jump up "U.N. Charter Index". United Nations. பார்த்த நாள் 2008-12-23.
  142. Jump up Staff. "International Law". United Nations. பார்த்த நாள் 2007-03-27.
  143. Jump up Kuhn, Betsy (2006). The race for space: the United States and the Soviet Union compete for the new frontier. Twenty-First Century Books. p. 34. ISBN 0822559846.
  144. Jump up Ellis, Lee (2004). Who's who of NASA Astronauts. Americana Group Publishing.ISBN 0966796144.
  145. Jump up Shayler, David; Vis, Bert (2005). Russia's Cosmonauts: Inside the Yuri Gagarin Training Center. Birkhäuser. ISBN 0387218947.
  146. Jump up Wade, Mark (2008-06-30). "Astronaut Statistics". Encyclopedia Astronautica. பார்த்த நாள் 2008-12-23.
  147. Jump up "Reference Guide to the International Space Station". NASA (2007-01-16). பார்த்த நாள் 2008-12-23.
  148. Jump up Cramb, Auslan (2007-10-28). "Nasa's Discovery extends space station". Telegraph.
  149. Jump up Stathopoulos, Vic (2009-01-08). "Apollo Spacecraft". பார்த்த நாள் 2009-03-23.
  150. Jump up Random House Unabridged Dictionary. Random House. July 2005. ISBN 0-375-42599-3.
  151. Jump up Liungman, Carl G. (2004). "Group 29: Multi-axes symmetric, both soft and straight-lined, closed signs with crossing lines". Symbols -- Encyclopedia of Western Signs and Ideograms. New York: Ionfox AB. பக். 281–282. ISBN 91-972705-0-4.
  152. Jump up Dutch, S.I. (2002). "Religion as belief versus religion as fact" (PDF). Journal of Geoscience Education 50 (2): 137–144. பார்த்த நாள்: 2008-04-28.
  153. Jump up Taner Edis (2003) (PDF). A World Designed by God: Science and Creationism in Contemporary Islam. Amherst: Prometheus. ISBN 1-59102-064-6. பார்த்த நாள்: 2008-04-28.
  154. Jump up Ross, M.R. (2005). "Who Believes What? Clearing up Confusion over Intelligent Design and Young-Earth Creationism" (PDF). Journal of Geoscience Education 53 (3): 319. பார்த்த நாள்: 2008-04-28.
  155. Jump up Pennock, R. T. (2003). "Creationism and intelligent design". Annu Rev Genomics Hum Genet 4: 143–63. doi:10.1146/annurev.genom.4.070802.110400.பப்மெட் 14527300.
  156. Jump up அறிவியல், பரிணாமம் மற்றும் படைப்பியல் தேசிய அகாடமி பிரஸ், வாஷிங்க்டன், டிசி 2005
  157. Jump up Colburn, A.; Henriques, L. (2006). "Clergy views on evolution, creationism, science, and religion". Journal of Research in Science Teaching 43 (4): 419–442.doi:10.1002/tea.20109.
  158. Jump up Frye, Roland Mushat (1983). Is God a Creationist? The Religious Case Against Creation-Science. Scribner's. ISBN 0-68417-993-8.
  159. Jump up Gould, S. J. (1997). "Nonoverlapping magisteria" (PDF). Natural History 106 (2): 16–22. பார்த்த நாள்: 2008-04-28.
  160. Jump up Russell, Jeffrey B.. "The Myth of the Flat Earth". American Scientific Affiliation. பார்த்த நாள் 2007-03-14.; இதனையும் பார்க்கவும் காஸ்மஸ் இண்டிகோப்லூஸ்டஸ்(Cosmas Indicopleustes)
  161. Jump up Jacobs, James Q. (1998-02-01). "Archaeogeodesy, a Key to Prehistory". பார்த்த நாள் 2007-04-21.
  162. Jump up Fuller, R. Buckminster (1963). Operating Manual for Spaceship Earth (First ed.). New York: E.P. Dutton & Co.. ISBN 0-525-47433-1.http://www.futurehi.net/docs/OperatingManual.html. பார்த்த நாள்: 2007-04-21.
  163. Jump up Lovelock, James E. (1979). Gaia: A New Look at Life on Earth (First ed.). Oxford: Oxford University Press. ISBN 0-19-286030-5.
  164. Jump up உதாரணத்திற்கு: McMichael, Anthony J. (1993). Planetary Overload: Global Environmental Change and the Health of the Human Species. Cambridge University Press.ISBN 0521457599.

ஆதார தொகுப்பு[தொகு]




(வானம் என்ற ஒன்று இல்லை என்று கேள்விப்பட்டதாக நினைவு! வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றால், எப்படி? வேதம் சொல்கிறது உருவாகு என்று கூறினார் உருவாயிற்று!

வேதம் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

புதிய ஏற்பாட்டில் யோவான் இந்த விதமாய் எழுதுகிறார்

ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;  உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

இந்த வசனங்களின் மூலம் இயேசுக்கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகிறார் யோவான்.

ஆதியிலே வார்ததை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது
 
மேற்குறிப்பிட்ட வசனங்களின் மூலம் இயேசுக்கிறிஸ்துவை தான் எழுதிய வார்த்தைகளினால் தேவன் என்று ஸ்தாபிக்கிறார் யோவான்.

(நாமே ஒரு காட்சியை கண்டுவிட்டு எழுதும் பொழுது, அதில் சிறு மாறுதல்கள் ஏற்படும், அதை நம்மை அறியாமலேயே நிகழ்வதுண்டு. சமீபத்தில் என்னுடைய மாறிச்செல்லும் மாற்றங்கள் கட்டுரைகளை படித்த ஒருவர் உண்மையை அப்படியே எழுதக்கூடாது என்றும் அதில் சிறு மாறுதல்களை ஏற்படுத்தி சமுதாயத்திற்கு முன்மாதிரியாய் எழுத வேண்டும் என்று கூறினார். ஒரு பேரினத்தின் புனித நூலாக தொகுக்கப்பட்டுள்ள இவ்வாகமங்களில் புனைவுகள் கலந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. )

G J Thamil Selvi

unread,
Sep 5, 2015, 2:31:00 AM9/5/15
to panb...@googlegroups.com
ஆதியாகமத்தை எழுதியவருக்கு இவ்வுலகம் படைக்கப்பட்ட விதம் குறித்து, ஒரு கேள்வி எழுந்திருக்க வேண்டும். அதற்கான பதிலை அவர் தேடியிருக்கலாம். அல்லது உலகம் இன்னவிதமாய் உருவாகியிருக்கலாமோ என்று அவருக்கு தோன்றவும் செய்திருக்கலாம். அவர் அதை எழுதியும் வைத்திருக்கலாம்.

ஆதியாகமம் ஒன்றாவது அதிகாரம் ஒன்றாவது வசனம் இப்படி கூறுகிறது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

முதல்ல வானத்தையும், அதன் பிறகு பூமியையும் படைத்திருக்கிறார்.

அறிவியல் பாடத்தில் நாம் படித்துக்கொண்டிருப்பது,  பூமியானது சூரிய குடும்பத்தில் ஒரு கோள்.

நாம் பொதுவாக கூறுவது சூரியன் வானத்தில் இருக்கிறது என்று. அப்படி என்றால், சூரிய குடும்பத்தில் ஒன்றான பூமி ஏன் வானத்தில் இல்லை. உண்மையில் வானம் என்ற ஒன்று இருக்கிறதா?

வானத்தை உருவாக்கிய தேவன், அப்போழுதே சூரியனையும், நட்சத்திரத்தையும் படைத்து விட்டாரா?

    பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
இருள் இருந்தது. இருளை தேவன் உருவாக்கவில்லையா? தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 

ஜலத்தை  தேவன் எப்போது படைத்தார்?

    தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
    உண்டாகுன்னு ஒரு ஆணைப் பிறப்பித்தார். வெளிச்சம் உண்டாயிற்று.
முன் கூறப்பட்ட வசனத்துல இருள் இருந்தது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருள் ஏற்கனவே இருந்தது என்று பொருள்படுகிறதே. தேவன் அதை உருவாக்கவில்லை என்றும் கொள்ளலாமோ?

தேவ ஆவியானவர் அசைாவடிக்கொண்டிருந்தார். தேவ ஆவி! எனும் போதே அவருக்கு உருவம் இல்லை என்றாகிறது. ஆவியினால் பேசமுடியுமா?

(இத்தனைக் கேள்விகள் எனக்கு எழுந்திருக்கிறது.)  



ஸ் பெ

unread,
Sep 5, 2015, 2:38:24 AM9/5/15
to panbudan
சகோதரி,

பைபிளில் உள்ள வார்த்தைகளை எந்த விதத்திலும் மாற்றக்கூடாது என பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் கூட மாற்றப்படாமல் வந்திருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா ?



yesu rajan

unread,
Sep 5, 2015, 3:44:00 AM9/5/15
to panb...@googlegroups.com
//இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் கூட மாற்றப்படாமல் வந்திருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா ?//


மாறி இருக்கலாம் என நீங்கள் எதை வைத்து கருதுகிறீர்கள் அன்பரே ,

காலம் அதிகமாகும் போது அதில் இருக்கும் கருத்து மாறிவிடும் என்று அர்த்தமல்லவே

2015-09-05 12:08 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
சகோதரி,

பைபிளில் உள்ள வார்த்தைகளை எந்த விதத்திலும் மாற்றக்கூடாது என பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் கூட மாற்றப்படாமல் வந்திருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா ?



G J Thamil Selvi

unread,
Sep 5, 2015, 3:59:24 AM9/5/15
to panb...@googlegroups.com
பெந்தகொஸ்தே கிறித்துவர்கள் மட்டும் அல்ல சகோ, அனைத்துக்கிறித்துவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் மொழிப்பெயர்க்கும் போதே மூல பாஷைக்கு ஒத்த வார்த்தைகளைத் தானே தேடி போட வேண்டியிருக்கும். நேரடியான வார்த்தைகள் சில கிடைக்காமல் போயிருக்குமே!

வேதத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கும் சகோ!

2015-09-05 12:08 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
சகோதரி,

பைபிளில் உள்ள வார்த்தைகளை எந்த விதத்திலும் மாற்றக்கூடாது என பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் கூட மாற்றப்படாமல் வந்திருக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா ?



G J Thamil Selvi

unread,
Sep 5, 2015, 4:00:12 AM9/5/15
to panb...@googlegroups.com
வார்த்தைகள் மாறும்போது கருத்துக்களிலும் மாறுதல்கள் ஏற்படும்  என்று எண்ணுகிறேன்

Iyappan Krishnan

unread,
Sep 5, 2015, 5:21:07 AM9/5/15
to பண்புடன்
ஸ்பெவின் கேள்வி ரொம்ப வேலிடான ஒண்ணு. 
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்பும் எந்த ஒரு குழுவும் கை வைப்பது மத சம்பந்தமான புத்தகங்களில் தான். 

G J Thamil Selvi

unread,
Sep 5, 2015, 5:33:23 AM9/5/15
to panb...@googlegroups.com
இது எனக்கு புதிய செய்தி!

2015-09-05 14:51 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
ஸ்பெவின் கேள்வி ரொம்ப வேலிடான ஒண்ணு. 
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்பும் எந்த ஒரு குழுவும் கை வைப்பது மத சம்பந்தமான புத்தகங்களில் தான். 

--

Iyappan Krishnan

unread,
Sep 5, 2015, 5:47:12 AM9/5/15
to பண்புடன்
​Witch Hunting,  சூன்யக் காரர்களை வேட்டையாடுதல், கேள்விப் பட்டிருக்கிறீர்களா.. :) ?  ஏன் தமிழக அரசியலில், சமணமும் இந்து மதமும் என ஆரம்பித்து அதிகாரம் கொண்ட கதை எல்லாம் வரலாறாகப் படித்தவை தானே ?

G J Thamil Selvi

unread,
Sep 5, 2015, 5:51:04 AM9/5/15
to panb...@googlegroups.com
வேதாகமத்தில் கூட குறி சொல்பவர்களையும் சூனியக்காரர்களையும் கொன்றிருக்கிறார்கள் என்று வசனம் இருக்கிறதே 

2015-09-05 15:17 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​Witch Hunting,  சூன்யக் காரர்களை வேட்டையாடுதல், கேள்விப் பட்டிருக்கிறீர்களா.. :) ?  ஏன் தமிழக அரசியலில், சமணமும் இந்து மதமும் என ஆரம்பித்து அதிகாரம் கொண்ட கதை எல்லாம் வரலாறாகப் படித்தவை தானே ?

--

ஸ் பெ

unread,
Sep 5, 2015, 1:16:41 PM9/5/15
to panbudan
ஏசுராஜன்,

கலிலியோ உலகம் உருண்டை என சொன்ன போது அவருக்கு யாரால் நெருக்கடி வந்தது என நீவீர் அறியாதது அல்ல(உலகம் தட்டை என மதவாதிகள் கூறிக்கொண்டு இருந்தனர்.). வாடிகன் 1990 வாக்கில் இந்த விசயத்துக்காக மன்னிப்பு கேட்டது.. ஆக, இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன ?
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Asif Meeran

unread,
Sep 6, 2015, 5:50:41 AM9/6/15
to பண்புடன்
இந்த இழையைக் காமெடியாகக் முயலும் துரை ஐயாவின்சதியை வன்மையாகக் கண்டிக்கிறேன்

தேவனைக் காண அவர் ஆத்மா சென்றதாம். நம்ம குழுமத்துல இருக்குற தேவனா இருக்குமோ? :-)

அவ்வப்போது ஓம் என்று பிர்ணவ மந்திரத்தையும் அவர் உச்சரிப்பது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு

VJagadeesh

unread,
Sep 6, 2015, 5:51:49 AM9/6/15
to பண்புடன்
ஓம் அண்ணாச்சி 

Asif Meeran

unread,
Sep 6, 2015, 5:52:30 AM9/6/15
to பண்புடன்
உங்கண்ணன் ஓம்ஶ்ரீயை எங்க காணோம்?

VJagadeesh

unread,
Sep 6, 2015, 5:53:55 AM9/6/15
to பண்புடன்
நான் தான் ஒரிஜினல் ஓம் ஸ்ரீ... 

மத்தவங்க 2 பேரும் எனக்கு முன்ன பிறந்த டூப்ளிகேட்.

2015-09-06 15:22 GMT+05:30 Asif Meeran <asifme...@gmail.com>:
உங்கண்ணன் ஓம்ஶ்ரீயை எங்க காணோம்?

ஓம் அண்ணாச்சி

G J Thamil Selvi

unread,
Sep 6, 2015, 11:26:30 AM9/6/15
to panb...@googlegroups.com
வேதாகமத்தைப் பற்றி எழுதுதால்,  திருச்சபைகள் என்ன செய்கின்றன என்றொரு ஆவல் ஏற்பட்டதின் நிமித்தம் இன்று செங்கம் ஆற்காடு லுத்ரன் திருச்சபைக்குச் சென்றிருந்தேன். நான் செல்லும்முன்பு நிகழ்ச்சி துவங்கியிருந்தது. இதற்கு முன்பும் அவ்விடத்திற்கு சென்றிருக்கிறேன்.  குறிப்பாக பதினைந்து வருடங்களுக்கு முன்பு. அநேக மாற்றங்கள். பாக்கியநாதன் நினைவு கண் மருத்துவமனை கட்டியிருக்கிறார்கள். கல்லறைத் தோட்டம்  வரிசையான மரங்களால் எழிலாக்கப்பட்டிருக்கிறது. புதியதாக சர்ச்சின் பின் புறம் கழிப்பறை கட்டியிருப்பதாகவும், அதற்கு உதவியவர்களுக்கு நன்றியும், காணிக்கைத் தொகையின் கணக்குகளையும் படித்தது புதியதாகத் தோன்றியது. 

பிரசங்கம் பாவத்தினால் வரும் வியாதிகள் குறித்து என்று எண்ணுகிறேன். பிரசங்கத்தின் பாதியில் போனதால் முழு தொகுப்பையும் என்னால் கிரகிக்கமுடியவில்லை.

உள்ளே நுழையும் போதே எயிட்ஸ் என்ற வார்த்தை தான் காதில் விழுந்தது.

சரி உள்ளே போனால் அனைவர் கவனமும் என்பக்கம் திரும்பும் என்பதால் வாயிலில் இருந்த நாற்காலியிலேயே அமர்ந்து விட்டேன்.

பாவத்தினால் வியாதிகள் வரும் என்பதால் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதோடு, எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறினார்.

ஒருவர்  அவருக்கு போன் செய்ததாகவும், அப்பொழுது போதகர் நலம் விசாரித்திருக்கிறார். போன் செய்தவர் நான் நலமில்லை பாஃதர். என்று கூறி, தன்னுடைய அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தாயார் வலியால் வருந்துவது மன உளைச்சலைத் தருவதாகவும் கூறியிருக்கிறார்.

பொதுவாக நாம் மறைத்துப் பேசுபவர்கள் என்றும், வேண்டாம் என்றால் வேண்டும், என்று பொருள் என்றும். கூறினார். அந்த நண்பர் நலமில்லை என்று வெளிப்படையாக பேசியது அவர் மனதை தொட்டதாக கூறினார்.

இன்னும் பல எடுத்துக்காட்டுகள்.

மக்கள்  ஆறுதலுக்காகவும்,  அமைதிக்காகவும்   அலைகிறார்கள். ஆறுதல் தரும் வேலையை எல்லா மதங்களும் செய்துக்கொண்டிருக்கின்றன  என்று தோன்றியது.

நிற்க!

அரசியல் பேசும் சிலர் அமைதிக்காக்காமல் கடைசி வரிசையில் தொண தொணத்தது எரிச்சல் மூட்டியது.

இந்துக் கோயில்களில் காணப்படும் சடங்குகள் போல இங்கும் சில சடங்குகள் நிகழ்ந்தது.

குறிப்பாக ரா போஜனம்.

அம்மா நீங்க ரா போஜனம் எடுக்கனுமா? இங்கேயே வந்து தரச் சொல்லட்டுமா? என்று ஒருவர் கேட்க,  தெரிந்தவர்கள் கண்ணில் படும் முன் அங்கிருந்து போக வேண்டும் என்று வெளியே வந்துவிட்டேன்.

கூடுதல் விவரம், ஒரு வெள்ளைக்கார பெண்மணி,  இந்த பாத்திரம் தூய்மையாக இல்லாததால் ரா போஜனம் எடுக்கவில்லையாம். அதையும் பிரசங்கத்தில் எடுத்துக்காட்டாகத்தான் கூறினார்.

கிறிஸ்துவின் சரீரம் என்று ராகமாய் பாடியது நன்றாக இருந்தது. உண்மையிலேயே ஒரு மனிதருக்கு அத்தனை கஷ்டங்கள் ஏற்பட்டும், கஷ்டப்படுத்தியவர்களை மன்னித்திருப்பார் என்றால் மகா புருஷர் தான்.

 


G J Thamil Selvi

unread,
Sep 6, 2015, 11:32:36 AM9/6/15
to panb...@googlegroups.com
எழுதுதால் - எழுதுவதால் (தட்டச்சுப் பிழை)

yesu rajan

unread,
Sep 7, 2015, 1:10:53 AM9/7/15
to panb...@googlegroups.com
//கலிலியோ உலகம் உருண்டை என சொன்ன போது அவருக்கு யாரால் நெருக்கடி வந்தது என நீவீர் அறியாதது அல்ல(உலகம் தட்டை என மதவாதிகள் கூறிக்கொண்டு இருந்தனர்.). வாடிகன் 1990 வாக்கில் இந்த விசயத்துக்காக மன்னிப்பு கேட்டது.. ஆக, இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன ?//

திருச்சபை தவறு செய்தது மன்னிப்பும் கேட்டு விட்டது அல்லவா சோதரா

Jaisankar Jaganathan

unread,
Sep 7, 2015, 1:12:07 AM9/7/15
to panb...@googlegroups.com
ஏராளமான பேரை கொன்ற பின்பு கேட்கும் மன்னிப்பு யாருக்கு வேண்டும் இயேசு ராஜன் சார் 
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Sep 7, 2015, 1:29:02 AM9/7/15
to panb...@googlegroups.com
//ஏராளமான பேரை கொன்ற பின்பு கேட்கும் மன்னிப்பு யாருக்கு வேண்டும் இயேசு ராஜன் சார்//

சகோதரா,

சமணர்களை கழுவில் ஏற்றி கொன்ற சைவர்கள் ஏன் இன்னும்  மன்னிப்பு கேட்கவில்லை

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 1:34:22 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 10:59 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//ஏராளமான பேரை கொன்ற பின்பு கேட்கும் மன்னிப்பு யாருக்கு வேண்டும் இயேசு ராஜன் சார்//

சகோதரா,

சமணர்களை கழுவில் ஏற்றி கொன்ற சைவர்கள் ஏன் இன்னும்  மன்னிப்பு கேட்கவில்லை

​////
ஆகவே எனக்கு எல்லா தெய்வமும் ஒன்றுதான்
​/////
அதானே ...ஏன் கேட்கவில்லை 
 

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 1:36:34 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 10:59 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//ஏராளமான பேரை கொன்ற பின்பு கேட்கும் மன்னிப்பு யாருக்கு வேண்டும் இயேசு ராஜன் சார்//

சகோதரா,

சமணர்களை கழுவில் ஏற்றி கொன்ற சைவர்கள் ஏன் இன்னும்  மன்னிப்பு கேட்கவில்லை

​இதுக்குப் பேருதான் 
’ ஒருகண்ணத்தில் அடித்தால் ...மறு கண்ணத்தில் திருப்பிக்கொடு ‘​
 

yesu rajan

unread,
Sep 7, 2015, 1:39:30 AM9/7/15
to panb...@googlegroups.com
//இதுக்குப் பேருதான் 
’ ஒருகண்ணத்தில் அடித்தால் ...மறு கண்ணத்தில் திருப்பிக்கொடு ‘​//

நண்பரே ,

நாம் எப்போதுமே மற்றவர்களின் குறைகளையே பார்கிறோம்

கிறித்தவ மடாலயங்கள் தவறு செய்திருந்து மன்னிப்பு கோரி உள்ளன

ஆனால் சைவம் தழைத்த வேளையிலே சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றார்கள்

அதற்கு எதாவது மடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறதா ?

மிக மிக சாதாரண கேள்வி






--

Ahamed Zubair A

unread,
Sep 7, 2015, 1:53:57 AM9/7/15
to பண்புடன்
மாம்ஸ்..

கன்னம் தெரியும்.. அது என்ன கண்ணம்??

--

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 1:54:11 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 11:09 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//இதுக்குப் பேருதான் 
’ ஒருகண்ணத்தில் அடித்தால் ...மறு கண்ணத்தில் திருப்பிக்கொடு ‘​//

நண்பரே ,

நாம் எப்போதுமே மற்றவர்களின் குறைகளையே பார்கிறோம்

கிறித்தவ மடாலயங்கள் தவறு செய்திருந்து மன்னிப்பு கோரி உள்ளன

ஆனால் சைவம் தழைத்த வேளையிலே சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றார்கள்

​​
அதற்கு எதாவது மடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறதா ?


​/////
​/////
நாம் எப்போதுமே மற்றவர்களின் குறைகளையே பார்கிறோம்
​//////​
 
​...

நீங்களே 
1,விடுதை போட்டு , விடையும் சொல்லும்
2.விடையைச் சொல்லிவிட்டு விடுகதை போடும்  உங்கள் பாணி எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது ஐயா ..
 

மிக மிக சாதாரண கேள்வி

​அதை எங்கே நின்னு கேக்கீங்கங்குறதுதான் முக்கியக் கேள்வி ​
 








2015-09-07 11:06 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2015-09-07 10:59 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//ஏராளமான பேரை கொன்ற பின்பு கேட்கும் மன்னிப்பு யாருக்கு வேண்டும் இயேசு ராஜன் சார்//

சகோதரா,

சமணர்களை கழுவில் ஏற்றி கொன்ற சைவர்கள் ஏன் இன்னும்  மன்னிப்பு கேட்கவில்லை

​இதுக்குப் பேருதான் 
’ ஒருகண்ணத்தில் அடித்தால் ...மறு கண்ணத்தில் திருப்பிக்கொடு ‘​
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 2:32:15 AM9/7/15
to பண்புடன்
​சமணர்கள் கழுவேற்றம் குறித்த செய்திகள், ஆதாரங்கள் தற்போது ஆராயப் பட்டு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று  " சமணர்களே " சொல்கிறார்கள்.  

கழுவேற்றம் நடந்தததாகச் சொல்லப் படும் காலக் கட்டத்தில் இருக்கும் இலக்கியங்களில் அது குறித்தக் குறிப்புகள் ஏதும் இல்லை. ( ஞானசம்பந்தர் பாடல்களிலும் இல்லை. இருந்தால் எடுத்துக் காட்டலாம் ).  இது பற்றிய குறிப்பு சில நூற்றாண்டுகள் கழித்து தான் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டதாக அறிகிறேன். ( பெரிய  புராணம் குறித்த என் கருத்து இங்கே தேவையற்றது ).


திரு பானுகுமார் ( தீவிர சமணர் ) இது குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை  வேறு குழுமங்களில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும்ம்ம்ம்ம்

சைவர்களுக்கு என்று தனித் திருச்சபை என்றெல்லாம் இல்லை.  சிவனைப் பற்றுபவர் அனைவரும் சைவரே. இதில் எத்தனை பேருக்கு பெரிய புராணம் தெரிந்திருக்கும் ? 

ஆகவே.... கனம்  கோர்ட்டார் அவர்களே.... 



2015-09-07 10:59 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
சமணர்களை கழுவில் ஏற்றி கொன்ற சைவர்கள் ஏன் இன்னும்  மன்னிப்பு கேட்கவில்லை



yesu rajan

unread,
Sep 7, 2015, 2:35:41 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பரே ,

தொடர்ந்து ஆதாரங்களை தருவேன்

http://suvanappiriyan.blogspot.in/2015/03/blog-post_13.html

சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!



(இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)

//இது என்னங்க புதுசா கீது யாரவது அண்ணணுக்கு மட்டுமே தெரிஞ்ச வரலாற கொஞ்சம் இந்த பச்சமண்ணுக்கு எடுத்து சொல்ரிங்களா//
-Suriya Prakssh shanmugam!

சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!

மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது.

சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதில் சமணர்கள் தோற்கின்றனர். தோற்ற சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றனர். இந்த வரலாறு மக்களுக்கு சொல்லப்படாமல் வஞ்சகமாக மறைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . முன்பு இந்த இடம் ஒரே சாம்பல் திட்டுகளாக குன்று போல் காட்சியளிக்குமாம். தற்போது ஓரளவு சமப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்து கட்டுரையாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மதுரை சரவணன் மேலும் சொல்கிறார்.....

எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது. மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம் என வரலாற்றை தமக்கு தெரிந்த மாட்டில் சொன்னார்.

மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் “சாம்பல் நத்தம்” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.

பெரிய புராணம் இந்த சமண கழுவேற்றம் பற்றி நிறைய பேசுகிறது. அது பற்றி தனி பதிவாக படங்களோடு ஆதாரங்களோடு பதிகிறேன்.

தகவல் உதவிக்கு நன்றி

மதுரை சரவணன்

--

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:37:46 AM9/7/15
to panb...@googlegroups.com

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.

-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,

Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'

-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.

-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,

Chennai, Page 27-29

-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.

-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.

-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.

-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை

-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.

-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'

-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'

-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை

1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'

ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,

1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'

க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'

-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,

1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'

'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'

-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,

1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,

1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.

இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.

-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'

-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.

-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.

-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.

-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது

(தகவல்கள் தொடரும்)

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 2:38:39 AM9/7/15
to பண்புடன்
​இதில் ஏதும் ஆதாரம் இல்லையே ஏசு ராஜா ? சம்பந்தரின் சமகாலத்து இலக்கியங்கள் எதிலுமே இத்தகைய நிகழ்வு குறித்த குறிப்புகள் கிடையாது. 

இராமர் கால் வைத்த இடம், அனுமன் கால் வைத்த இடம் என்று ஊரில் இருக்கும் மலைகளில் எல்லாம் அங்கிருக்கும் மக்கள் சொல்வார்கள். அது  ஆதாரமாகிவிடாது. பெரிய புராணத்தின் காலம் என்ன? சம்பந்தரின் காலம் என்ன ? இடைப்பட்ட காலத்தில் இந்த கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ? இவற்றை தகுந்த இலக்கிய கல்வெட்டு ஆதாரங்களுடன் தர இயலுமா ?

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:39:05 AM9/7/15
to panb...@googlegroups.com
அடுத்த மடலை பாருங்கள் சார்

2015-09-07 12:08 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​இதில் ஏதும் ஆதாரம் இல்லையே ஏசு ராஜா ? சம்பந்தரின் சமகாலத்து இலக்கியங்கள் எதிலுமே இத்தகைய நிகழ்வு குறித்த குறிப்புகள் கிடையாது. 

இராமர் கால் வைத்த இடம், அனுமன் கால் வைத்த இடம் என்று ஊரில் இருக்கும் மலைகளில் எல்லாம் அங்கிருக்கும் மக்கள் சொல்வார்கள். அது  ஆதாரமாகிவிடாது. பெரிய புராணத்தின் காலம் என்ன? சம்பந்தரின் காலம் என்ன ? இடைப்பட்ட காலத்தில் இந்த கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ? இவற்றை தகுந்த இலக்கிய கல்வெட்டு ஆதாரங்களுடன் தர இயலுமா ?

--

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 2:40:06 AM9/7/15
to பண்புடன்
​அடுத்த மடலைப் பாருங்கள் சார் ​

2015-09-07 12:09 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
அடுத்த மடலை பாருங்கள் சார்



Jaisankar Jaganathan

unread,
Sep 7, 2015, 2:40:14 AM9/7/15
to panb...@googlegroups.com
இயேசு ராஜன் சார்,

கிறிஸ்ஹுவ மதம் மேல கொலைப்பழி இருக்குன்னு சொன்னா இந்து மதம கொலை செய்யலையான்னு கேக்குறீங்க. அப்படின்னா இந்து மதம் கொலை செய்தால் மற்ற மதமும் செய்யலாமுன்னு அர்த்தமா? இந்து மதத்தை பாலோ பண்ணுறீஙக்ளா
--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:42:01 AM9/7/15
to panb...@googlegroups.com
/

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,

1937, Page 1195.//


இதோ இந்த புத்தகம் சொல்வது பொய்யின்னு சொல்றீங்களா


நல்லா இருக்கு சார்


கிறித்தவர்கள் கொன்றார்கள் என்றால் அது தவறுதான் அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்கள் ஆனால் சைவர்கள்

சமணர்களை கொன்றார்களே அது தவறு என சொல்லலாம் அல்லது தார்மீக பொறுப்பேற்று மன்னிக்க சொல்லலாம் அதெல்லாம் சொல்லாமே


நடக்கவே இல்லை என்றால் என்ன செய்வது

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 2:42:09 AM9/7/15
to பண்புடன்
​ஜெ, 

இந்து மதம் கொலை செய்கிறது என்று சொன்னால் ஆதாரத்தோடு சொல்லுங்கள் ஏற்கலாம் என்று சொல்வதே சரி.


கிறித்துவர்கள் ஐரோப்பியாவில்,  "  சூனியக் காரர்களை " வேட்டையாடி அழித்தது ( இன்னும் தொடர்கிறதா என்ற கேள்வி பல இடத்தில் எழாமல் இல்லை ) ​  இலட்சக் கணக்கில்.  :)


2015-09-07 12:10 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
இயேசு ராஜன் சார்,

கிறிஸ்ஹுவ மதம் மேல கொலைப்பழி இருக்குன்னு சொன்னா இந்து மதம கொலை செய்யலையான்னு கேக்குறீங்க. அப்படின்னா இந்து மதம் கொலை செய்தால் மற்ற மதமும் செய்யலாமுன்னு அர்த்தமா? இந்து மதத்தை பாலோ பண்ணுறீஙக்ளா



Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 2:42:59 AM9/7/15
to பண்புடன்
யேசு ராஜா :) என்னுடைய  மடலை திரும்ப படியுங்கள்..  கேள்வி மிகத் தெளிவாக இருக்கிறது!

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 2:44:32 AM9/7/15
to பண்புடன்
http://www.jeyamohan.in/4574#.Ve0yFtKeDGc  உங்களுக்காக :)

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:45:09 AM9/7/15
to panb...@googlegroups.com
//சமணர்கள் கழுவேற்றம் குறித்த செய்திகள், ஆதாரங்கள் தற்போது ஆராயப் பட்டு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று  " சமணர்களே " சொல்கிறார்கள்.  


கழுவேற்றம் நடந்தததாகச் சொல்லப் படும் காலக் கட்டத்தில் இருக்கும் இலக்கியங்களில் அது குறித்தக் குறிப்புகள் ஏதும் இல்லை. ( ஞானசம்பந்தர் பாடல்களிலும் இல்லை. இருந்தால் எடுத்துக் காட்டலாம் ).  இது பற்றிய குறிப்பு சில நூற்றாண்டுகள் கழித்து தான் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டதாக அறிகிறேன். ( பெரிய  புராணம் குறித்த என் கருத்து இங்கே தேவையற்றது ).


திரு பானுகுமார் ( தீவிர சமணர் ) இது குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை  வேறு குழுமங்களில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும்ம்ம்ம்ம்

சைவர்களுக்கு என்று தனித் திருச்சபை என்றெல்லாம் இல்லை.  சிவனைப் பற்றுபவர் அனைவரும் சைவரே. இதில் எத்தனை பேருக்கு பெரிய புராணம் தெரிந்திருக்கும் ? 

ஆகவே.... கனம்  கோர்ட்டார் அவர்களே.... //

நான் போட்ட ஆதாரங்களை மறுக்கும் ஆதாரங்களை போடுங்கள் இதான் நீங்கள் போட்ட மடல்

இதில் வழுக்கி வழுக்கி எங்கேயும் நிக்காமல் போகுது



2015-09-07 12:12 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
யேசு ராஜா :) என்னுடைய  மடலை திரும்ப படியுங்கள்..  கேள்வி மிகத் தெளிவாக இருக்கிறது!

--

மஞ்சூர் ராசா

unread,
Sep 7, 2015, 2:46:43 AM9/7/15
to பண்புடன்
இப்படியாக அடிச்சுக்குங்க வெளங்கும்.   

இதை இதைத்தானே எதிர்ப்பார்த்தாய்... நடக்கட்டும்.  

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:46:53 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பரே,

இந்த ஜெயமோகன் மேல நிறைய கேள்விகள் இருக்கு அதற்கு ஜெயமோகனும்

இந்து மதமும்னு தனியா ஒரு இழை தொடங்கி விவாதிக்கனும் :

இவரு  ராஜாஜி குலகல்வி வேண்டும்னு எங்கயும் சொல்லவே இல்லை அப்படின்னு விவாதிக்கும் நல்லவர்



2015-09-07 12:14 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
http://www.jeyamohan.in/4574#.Ve0yFtKeDGc  உங்களுக்காக :)

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:48:37 AM9/7/15
to panb...@googlegroups.com
சரி அன்பரே இந்த விசயத்தை ஊத்தி மூடிவிடலாம்

கொலை யார் செய்தாலும் கொலையே

அதுக்கு கிறித்தவ கொலை

இந்து கொலை

சைவ கொலை என விஸ்தாரணமும் விளக்கமும் தேவை இல்லை

அனைவருக்கும் மன்னிப்பும் அருளும் கிடைக்க பிராத்திப்போம்

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 2:52:48 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 12:16 GMT+05:30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:
இப்படியாக அடிச்சுக்குங்க வெளங்கும்.   
​ஹா ஹா ஹா ...ராசாவே ...ராசாவே :)))​

​ 



--

yesu rajan

unread,
Sep 7, 2015, 2:55:49 AM9/7/15
to panb...@googlegroups.com
துரை அன்பரே

என்மீது தவறு ஏதும் இல்லை என அறுதி இடுகிறேன்

கிறித்தவர்கள் கொலை செய்தார்களே என்றார்கள்

ஆம் அவர்கள் மன்னிப்பும் கேட்டார்களே என்றேன்

ஆனால் சைவர்கள் சமணர்களை கழுவிலேற்றி
கொன்றதற்கு மன்னிப்பு கேட்டார்களா என்றேன்

பதில் வந்தது பேசிகொண்டு இருக்கிறோம்

அதற்கு மாமா அவர்கள் என்ன அங்க சத்தம் என்ன சத்தம் என்கிறார்

பேசிட்டிருக்கோம் மாமா என்றேன் :)

Jaisankar Jaganathan

unread,
Sep 7, 2015, 2:58:07 AM9/7/15
to panb...@googlegroups.com
இயேசு ராஜன் அவர்களே 

ஒரு வேண்டுகோள்
இனிமேல் உங்கள் மத கொள்கை மட்டுமே பேசுங்கள். நானும் அப்படியே செய்கிறேன்.
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:01:31 AM9/7/15
to panb...@googlegroups.com
//இயேசு ராஜன் அவர்களே 

ஒரு வேண்டுகோள்
இனிமேல் உங்கள் மத கொள்கை மட்டுமே பேசுங்கள். நானும் அப்படியே செய்கிறேன்.//

அன்பரே சூப்பர்

நானும் உடன்படுகிறேன் ,

வரலாற்றின் பக்கங்களின் எல்லா மதக்காரனின் ரத்தமும் தோய்ந்து இருக்கிறது

நானும் நான் சார்ந்துள்ள மதக்காரனும் குற்றமே செய்யாதா யோக்கியன் என்று சொன்னால் அது அயோக்கியத்தனம்

ஆகவே நிறுத்திக்கலாம் யாருக்காவது தொடரனும் என்றாலும் தொடரலாம்


துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 3:03:51 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 12:31 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//இயேசு ராஜன் அவர்களே 

ஒரு வேண்டுகோள்
இனிமேல் உங்கள் மத கொள்கை மட்டுமே பேசுங்கள். நானும் அப்படியே செய்கிறேன்.//

அன்பரே சூப்பர்

நானும் உடன்படுகிறேன் ,

////
ஆகவே எனக்கு எல்லா தெய்வமும் ஒன்றுதான்
​/////

:)))))))))))))​
 

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 3:03:56 AM9/7/15
to பண்புடன்
​குற்றமும் சாட்டி , அந்தக் குற்றத்தை மறுக்கும் ஆதாரத்தையும் நீயே தா என்பது எவ்வகை நியாயம் ?

என் கேள்வி, உங்களுக்குப் புரியவில்லை என்றால் மீண்டும் தருகிறேன்.

1 - சமணர்கள் கழுவேற்றம்  நடந்ததாகச் சொல்லப் படும் சம்பந்தரின் காலக் கட்டம் எது ?
2 - அப்போதைய சமகால இலக்கியங்கள் யாவை, ​அவற்றில் கழுவேற்றம் குறித்துப் பாடப்படும் பாடல்கள், கல்வெட்டுகள் யாவை ?
3 -  சமய நிகழ்வுகளை புள்ளிவிவரம் தவிர்க்காமல் ஆவணப் படுத்துவது சமணர்களின்  ஆகச் சிறந்த செயல்பாடு. இப்படியான நிகழ்வை, தம் சமயத்திற்கு எதிராக  அழிக்க முனைந்த கோட்பாடை சமண இலக்கியங்கள் ஏதும் சுட்டுகின்றனவா ?
4 - திருவிக போன்ற அறிஞர்கள் " அகச்சான்றோ  புறச்சான்றோ இது குறித்து கிடையாது, இது புனைவு மிகைவாதம் " என்பது போன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.


​உங்களுக்காக  திரு பானுகுமார் எனும் தோய்ந்த சமணர், மற்றும் ஆய்வாளரின் கருத்து கீழே

//சம்பந்த பெருமான் காலத்திற்கும் நம்பியாண்டர் நம்பி காலத்திற்கும் சுமார் 450 ஆண்டுகள் இடைவெளியிருக்கின்றன. இது சொற்ப காலமன்று.
நீண்ட காலம். சம்பந்த தேவாரத்தில் சொல்லப்படாதது அல்லது அவர் தன் வாயால் சொல்லப்படாதது, சுமார் 400 ஆண்டுகள் கழித்து மற்றொருவர்
தன் நூலில் கழுவேற்றம் நடந்ததாக எழுதுகிறார். எப்படி ஏற்றுக் கொள்வது? கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.10ஆம் நூற்றாண்டு வரை
கிடைக்கும் கல்வெட்டுக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சொல்லி உள்ள விடயங்களை தொகுத்துப் பார்த்தால், சிவனார், நாட்டின் மன்னன், சம்பந்த பெருமான், மற்றும் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறுதல் நிகழ்ச்சி என்பது எவ்வளவு பெரிய நிகழ்வு. இதை ஏன் இந்த இடைப்பட்ட
காலங்களில் பதிக்கப்படவில்லை. குறைந்தது சம கால இலக்கியக் குறிப்புகள்?

ஒரு சாரார் ஏன் சமணர் கழுவேற்றம் நடந்தது அல்லது நடந்தே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் நம்பியாண்டர் நம்பி எழுதியது
அனைத்தும் புனைவுகள் என்று கொள்ள நேரிடுமே என்பதால்தான். வரும் காலத்தில் நமது தலைமுறைகள் கேட்கும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் கூறமுடியாது போகும் என்பதுவும் காரணமாகயிருக்கலாம். இதுவே என் புரிதல்.//

//தமிழ்ச் சமண வரலாற்றின் படி, கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரைத் தொடர்ந்த கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு. சைவ மீண்டெழுந்ததும்
அக்காலமே. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் கழுவேற்றம் நடந்திருந்தால், சமண செல்வாக்குள்ள கல்வெட்டுக்கள்
 அக்காலக்கட்டத்தில் நிறைய கிடைக்குமா? அதுவும் மதுரையில்?! சீவக சிந்தாமணி, சூளாமணி போன்ற பெருநூல்கள்
எழுந்திருக்க முடியுமா?

சம்பந்தர் பெருமான் - மன்னன் மற்றும் சிவபெருமானின் ஆசியுடன் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மீண்டும் சமணம்
புகுவார்களா? யோசித்துப் பாருங்கள்!

அப்படி மீண்டும் சமணம் செல்வாக்கு பெற்றது என்று ஒப்புக் கொண்டால் சம்பந்த பெருமானின் வாக்கும், சிவபெருமானின்
ஆசியையும் மக்கள் நிராகரித்தனர் என்பது உண்மையாகும் இல்லையா?
​//

கடைசியாக :

ஒரு குற்றம் சாட்டினால், குற்றத்திற்கு உண்டான ஆதாரத்தை வழங்க வேண்டியது தங்களின் கடமை. குற்றம் சாட்டப் பட்டவரை, நீ இந்த குற்றம் சாட்டினதற்கு முடிந்தால் மறுப்புத் தெரிவித்து நீ நிரபராதி என்று நிரூபித்துக் கொள் என்று சொல்வது கயமைத் தனம் :)



2015-09-07 12:15 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
நான் போட்ட ஆதாரங்களை மறுக்கும் ஆதாரங்களை போடுங்கள் இதான் நீங்கள் போட்ட மடல்



மஞ்சூர் ராசா

unread,
Sep 7, 2015, 3:09:53 AM9/7/15
to பண்புடன்
யானைக்குத்தான் மதம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன்.  ஆனால் அது விரைவில் சரியாகிவிடுகிறது.  ஆனால் இந்த மனுசனுங்களுக்கு பிடிக்கும் மதம்(வெறி) மட்டும் ஏன் இவர்களை பைத்தியாமாக்கிவிடுகிறது என புரியவில்லை.  போதை மருந்தைவிட கொடிய நோய் மதவெறி.

--

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 3:14:27 AM9/7/15
to பண்புடன்
​மஞ்சூர் அண்ணல்,

இதை ஒரு வரலாற்று நிகழ்வாகத்தான் ஆதாரத்துடன் பார்க்க நினைக்கிறேன். இதன் பின்னுள்ள சமய அரசியல்,  ஊதிப் பெருக்கிற திராவிட அரசியல் என பலவும் அறியவேண்டிய ஒன்று.  இதுவும் மற்றொரு குற்றச் சாட்டு என்று கடந்து விட இயலாது.  ஒரு இனத்தின் மீது வைக்கப் படும் அதி முக்கிய, மிகக் கேவலமான குற்றச் சாட்டு.   இதே கேள்வி,  வேற்று மானிலத்தவன் கேட்டால், அவனுக்கு என்ன பதில் சொல்வோம் ? ஆம் எங்கள் தமிழினத்தில் இப்படித்தான் இருந்தோம் என்றா ? அல்லது  இது தான் உண்மை என்று எடுத்துச் சொல்லப் போகிறோமா ?

தவறெனில் தொடர்ந்ததற்கு மன்னிக்கவும்




2015-09-07 12:39 GMT+05:30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:
யானைக்குத்தான் மதம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன்.  ஆனால் அது விரைவில் சரியாகிவிடுகிறது.  ஆனால் இந்த மனுசனுங்களுக்கு பிடிக்கும் மதம்(வெறி) மட்டும் ஏன் இவர்களை பைத்தியாமாக்கிவிடுகிறது என புரியவில்லை.  போதை மருந்தைவிட கொடிய நோய் மதவெறி.



yesu rajan

unread,
Sep 7, 2015, 3:14:41 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பரே மிஸ்டர் அய்யப்பன்

இங்கிருப்பவர்கள் அனைவரும் வேண்டாத விவாவதம் வேண்டாம் என சொல்லி விட்டார்கள் நானும் விட்டு விட்டேன் ஆனால் நீங்கள் ஜாங்கிரி கேட்டு சாப்பிட்டு விட்டுதான் போவேன் என சொல்கிறீர்கள் என்ன செய்வது



//

1 - சமணர்கள் கழுவேற்றம்  நடந்ததாகச் சொல்லப் படும் சம்பந்தரின் காலக் கட்டம் எது ?
2 - அப்போதைய சமகால இலக்கியங்கள் யாவை, ​அவற்றில் கழுவேற்றம் குறித்துப் பாடப்படும் பாடல்கள், கல்வெட்டுகள் யாவை ?
3 -  சமய நிகழ்வுகளை புள்ளிவிவரம் தவிர்க்காமல் ஆவணப் படுத்துவது சமணர்களின்  ஆகச் சிறந்த செயல்பாடு. இப்படியான நிகழ்வை, தம் சமயத்திற்கு எதிராக  அழிக்க முனைந்த கோட்பாடை சமண இலக்கியங்கள் ஏதும் சுட்டுகின்றனவா ?
4 - திருவிக போன்ற அறிஞர்கள் " அகச்சான்றோ  புறச்சான்றோ இது குறித்து கிடையாது, இது புனைவு மிகைவாதம் " என்பது போன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.//

நான் போட்ட மடலை படித்தீர்களா இல்லையா

அதில் உவேசா பதிப்பில் ஒரு நூல் வந்து இருக்கு இல்லையா அந்த நூலின் பக்க எண்ண எடுத்து புரட்டி பாருங்கள்



2015-09-07 12:39 GMT+05:30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:15:41 AM9/7/15
to panb...@googlegroups.com
//  இதே கேள்வி,  வேற்று மானிலத்தவன் கேட்டால், அவனுக்கு என்ன பதில் சொல்வோம் ? ஆம் எங்கள் தமிழினத்தில் இப்படித்தான் இருந்தோம் என்றா ? அல்லது  இது தான் உண்மை என்று எடுத்துச் சொல்லப் போகிறோமா ?//

ஆகா  மீண்டும் வேற்றுமை

மாமா நான் சத்தம் போடாமல் தான் இருக்கேன் கண்டிச்சி வையுங்கள்

--

Jaisankar Jaganathan

unread,
Sep 7, 2015, 3:15:45 AM9/7/15
to panb...@googlegroups.com
நண்பரே

இயேசுராஜன். அந்த நூலில் குறிப்பிட்ட காலகட்டம் வேறு. நடந்ததாக சொல்லப்பட்ட காலகட்டம் வேறூ. இதைத்தான் ஐயப்பன் அண்ணன் குரிப்பிடுகிறார்
regards,
jaisankar jaganathan

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 3:18:03 AM9/7/15
to பண்புடன்
​சாருக்குத் தமிழ் வருமா ?

1 - சமணர்கள் கழுவேற்றம்  நடந்ததாகச் சொல்லப் படும் சம்பந்தரின் காலக் கட்டம் எது ?
2 - அப்போதைய சமகால இலக்கியங்கள் யாவை, ​அவற்றில் கழுவேற்றம் குறித்துப் பாடப்படும் பாடல்கள், கல்வெட்டுகள் யாவை ?
3 -  சமய நிகழ்வுகளை புள்ளிவிவரம் தவிர்க்காமல் ஆவணப் படுத்துவது சமணர்களின்  ஆகச் சிறந்த செயல்பாடு. இப்படியான நிகழ்வை, தம் சமயத்திற்கு எதிராக  அழிக்க முனைந்த கோட்பாடை சமண இலக்கியங்கள் ஏதும் சுட்டுகின்றனவா ?


//கழுவேற்றம் நடந்தததாகச் சொல்லப் படும் காலக் கட்டத்தில் இருக்கும் இலக்கியங்களில் அது குறித்தக் குறிப்புகள் ஏதும் இல்லை. ( ஞானசம்பந்தர் பாடல்களிலும் இல்லை. இருந்தால் எடுத்துக் காட்டலாம் ).  இது பற்றிய குறிப்பு சில நூற்றாண்டுகள் கழித்து தான் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டதாக அறிகிறேன். ( பெரிய  புராணம் குறித்த என் கருத்து இங்கே தேவையற்றது ).// சொல்லி  இருக்கேனே சார்வாள் ?


திருவிளையாடற் புராணத்தின் காலக் கட்டம் எது ? தமிழ் தெரிஞ்சிருந்தா நீங்க இப்படி திண்டாட வேண்டியதில்லையே யேசுராஜாஜி :) 



//

மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,

1937, Page 1195.//


2015-09-07 12:44 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
அதில் உவேசா பதிப்பில் ஒரு நூல் வந்து இருக்கு இல்லையா அந்த நூலின் பக்க எண்ண எடுத்து புரட்டி பாருங்கள்



yesu rajan

unread,
Sep 7, 2015, 3:19:41 AM9/7/15
to panb...@googlegroups.com
//
இயேசுராஜன். அந்த நூலில் குறிப்பிட்ட காலகட்டம் வேறு. நடந்ததாக சொல்லப்பட்ட காலகட்டம் வேறூ. இதைத்தான் ஐயப்பன் அண்ணன் குரிப்பிடுகிறார்//

அன்பரே

போன நூற்றாண்டில் நடந்த விசயங்களையே நம்மால் சரிவர சொல்ல இயலவில்லை

ஆனால் நடந்தது உண்மை ஆனால் நூற்றாண்டை தப்பா சொல்லிட்டாங்கனு சொல்ல சொல்லுங்க ஏத்துக்குவோம்

நடக்கவே இல்லைன்னா? நான் போட்டிருக்கும் புத்தகங்களை எழுதியவர்களை நேரில் சென்று சந்திக்க அவரை அழைகிறேன்

ஏய்யா பொய்யா எழுதினீர்கள்னு

நான் தெளிவாக இருக்கிறேன் குற்றம் நடந்திருக்குன்னு நடக்கவில்லை என்றவர்கள் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்

வழக்கு தொடுக்கலாமே புத்தகம் எழுதிய நபர் மீது

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:20:35 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பரே ,

ஒரு வேளை டைம் மிசின் வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன் அதெப்படி அந்தந்த நூற்றாண்டுக்கு போய் அங்கே நடப்பதை பார்த்து வந்துடுறீங்க

--

Jaisankar Jaganathan

unread,
Sep 7, 2015, 3:21:18 AM9/7/15
to panb...@googlegroups.com
நீங்க எதிர்காலத்துக்கு போயி சொல்லுறமாதிரி தான் இயேசு ராஜன் சார்
--
regards,
jaisankar jaganathan

மஞ்சூர் ராசா

unread,
Sep 7, 2015, 3:22:28 AM9/7/15
to பண்புடன்
இப்படியெல்லாம் சொல்லும் யேசுராஜன் அவர்களே, நீங்க மட்டும் பழங்கதைகளை சொல்லி தேவன் ரட்சிப்பார் என சொல்றீங்களே உங்களிடம் ஏதேனும் புதுசா வந்த டைம் மெஷின் இருக்கா?

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:23:08 AM9/7/15
to panb...@googlegroups.com
//நீங்க எதிர்காலத்துக்கு போயி சொல்லுறமாதிரி தான் இயேசு ராஜன் சார்//

ஆகா அருமை தேவன் எத்தனை சக்திவாய்ந்தவர் அவரது படைப்புகள் எப்படி பேசிகின்றன பார்த்தாயா இறைவா

உனக்கு மகிமை உண்டாகட்டும்

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 3:24:32 AM9/7/15
to பண்புடன்
Sure. Please Rent the machine which you are using to travel here and there​ and accuse some thing saying as if you have seen on your eyes :))
 
Boss, we wanted to conclude yes or no based on the proof .. MERE TRUTH based on the MERE EVIDENCE not based on assumption.
 
Please !!
Iyappan K

2015-09-07 12:50 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:

ஒரு வேளை டைம் மிசின் வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன் அதெப்படி அந்தந்த நூற்றாண்டுக்கு போய் அங்கே நடப்பதை பார்த்து வந்துடுறீங்க



yesu rajan

unread,
Sep 7, 2015, 3:24:34 AM9/7/15
to panb...@googlegroups.com
//இப்படியெல்லாம் சொல்லும் யேசுராஜன் அவர்களே, நீங்க மட்டும் பழங்கதைகளை சொல்லி தேவன் ரட்சிப்பார் என சொல்றீங்களே உங்களிடம் ஏதேனும் புதுசா வந்த டைம் மெஷின் இருக்கா?//

அன்பரே ,

இன்றுதான் தங்களுக்கு பதிலளிக்கும் பாக்கியம் பெற்றேன்

(அங்கென்ன சத்தம் என்று அதட்டாமல் கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் )

பழசில் இருந்துதான் புதுசி பிறக்கும்

தாயிலிருந்து மகன்

மகனிலிருந்து தாய்


yesu rajan

unread,
Sep 7, 2015, 3:25:24 AM9/7/15
to panb...@googlegroups.com
அய்யோ ,

இந்த பிள்ளை இங்கிலீசெல்லாம் பேசுதே (துரை இங்கிலீஸ் பேசுதே):)

--

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:30:00 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பரே,

கால இயந்திரம் இருந்தாலும் அது பயன்படாது ஏனெனில் கற்கால மனிதனிடம் நீங்கள் கேட்டதை
தற்கால மனிதன் ஏற்று கொள்வதில்லை

ஆகவே நிறைய இடை தடங்கல் இருக்கும்

Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 3:30:00 AM9/7/15
to பண்புடன்
:) பரமண்டலத்தில் இருக்கும் எமது பரமசிவனே, இந்த யேசு ராஜா தான் செய்வது இன்னதென்று தெரியாமல்  செய்து கொண்டிருப்பதாக மற்றவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்து தான் செய்வதின்னது என்று  தெரிந்தே செய்கிறார்.  


இவரையும் இரட்சியுங்கள் 
ஓமென்!

2015-09-07 12:55 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
அய்யோ ,

இந்த பிள்ளை இங்கிலீசெல்லாம் பேசுதே (துரை இங்கிலீஸ் பேசுதே):)



yesu rajan

unread,
Sep 7, 2015, 3:33:34 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பரே

அதென்ன ஆமென் என்று போடாமல் ஓமன் என்று போடுகிறீர்கள்


--

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 3:40:28 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 12:53 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//நீங்க எதிர்காலத்துக்கு போயி சொல்லுறமாதிரி தான் இயேசு ராஜன் சார்//

ஆகா அருமை தேவன் எத்தனை சக்திவாய்ந்தவர் அவரது படைப்புகள்

​ஹா ஹா ஹா ...ஜேஜே ... நீர் யாருங்குற உண்மை எப்படி வெளியாயிருச்சு பாரும் :)))

 
எப்படி பேசிகின்றன பார்த்தாயா இறைவா

உனக்கு மகிமை உண்டாகட்டும்

​உனக்குன்னா ??? தேவனுக்கே வரம் தருகிறீர்களா ஐயா 
 

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:41:22 AM9/7/15
to panb...@googlegroups.com
//ஜேஜே ... நீர் யாருங்குற உண்மை எப்படி வெளியாயிருச்சு பாரும் :))/

அன்பரே யாரு இந்த ஜே ஜே

--

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 3:44:46 AM9/7/15
to பண்புடன்
2015-09-07 13:11 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//ஜேஜே ... நீர் யாருங்குற உண்மை எப்படி வெளியாயிருச்சு பாரும் :))/

அன்பரே யாரு இந்த ஜே ஜே
​உங்களுக்குத் தெரியாததும் உண்டா அன்பரே :)
 

2015-09-07 13:10 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2015-09-07 12:53 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//நீங்க எதிர்காலத்துக்கு போயி சொல்லுறமாதிரி தான் இயேசு ராஜன் சார்//

ஆகா அருமை தேவன் எத்தனை சக்திவாய்ந்தவர் அவரது படைப்புகள்

​ஹா ஹா ஹா ...ஜேஜே ... நீர் யாருங்குற உண்மை எப்படி வெளியாயிருச்சு பாரும் :)))

 
எப்படி பேசிகின்றன பார்த்தாயா இறைவா

உனக்கு மகிமை உண்டாகட்டும்

​உனக்குன்னா ??? தேவனுக்கே வரம் தருகிறீர்களா ஐயா 
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

yesu rajan

unread,
Sep 7, 2015, 3:48:32 AM9/7/15
to panb...@googlegroups.com
அன்பர்களே ,

மன்னிக்கவும் எனது விவாதங்கள் எதோ தவறாக எடுத்து கொள்ளப்படுவதாக

கருதுகிறேன் எனவே இத்துடன் எனது பணி நிமித்தமாக வெளியூர் செல்ல இருப்பதால்

கொஞ்ச நாட்களுக்கு உங்களிடம் இருந்து பிரிகிறேன்

மன்னிக்கவும்

தேவனின் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைப்பதாக


It is loading more messages.
0 new messages