ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

213 views
Skip to first unread message

Umanath Selvan

unread,
Nov 4, 2013, 3:01:05 AM11/4/13
to பண்புடன்

சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை!

நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆங்கிலக் கல்வியால் தாய்மொழிக் கல்வி கைவிடப்படுவதைக் கண்டு, இந்திய மாநில அரசுகள் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குகின்றன. விளைவாக, குழந்தைகள் இரண்டாவது மொழியாகத் தாய்மொழியை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் படிக்கின்றனர். ஆனால், அது இரண்டாவது மொழியாக இருப்பதாலேயே அதில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அம்மொழிகளைக் கற்கின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் தாய்மொழியைக் கற்கின்றன. அதாவது, தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு துறையில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலக் கல்வி தேவைப்படுகிறது. ஆகவே, கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்.

மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இதைக் கற்றுக் கொள்ளும். அதற்கேற்ப தொடர்ச்சியாகத் தமிழின் நூல்களை எல்லாம் அந்த எழுத்துருவுக்கு மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு எழுத்துருக்களுமே ஒருதலைமுறைக் காலம் புழக்கத்தில் இருக்கலாம். மேலும், இன்றைய தொழில் நுட்பத்தில் எந்த ஓர் எழுத்தையும் ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படு கின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது. மலாய் மொழி வாழவும் செய்கிறது. அதன் எழுத்துருக்களைத் தனியாக எவரும் பயில வேண்டியதில்லை. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் அதை வாசித்துவிடலாம். ஆங்கில எழுத்துருக்கள் மலாய் மொழியை வளப்படுத்தவே செய்கின்றன. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்.

- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan...@gmail.com

ப்ரியன்

unread,
Nov 4, 2013, 3:27:08 AM11/4/13
to panb...@googlegroups.com
பிள்ளைகள் இரு மொழிகளை கற்பதால் சிரமப்படுகிறார்கள் என எதை வைத்து சொல்கிறார்?!

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Nov 4, 2013, 3:32:33 AM11/4/13
to panb...@googlegroups.com

இதெல்லாம் படிக்கும்போதே அநியாயமா தோணலையா...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Nov 4, 2013, 4:03:35 AM11/4/13
to பண்புடன்

எழுத்துருக்கள்-எதிர்வினைகள்

 

[இந்த எதிர்வினைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இதை ஒருவாரம் முன்பு மூலக்கட்டுரையை எழுதி முடித்ததுமே எழுதிவிட்டேன். ஏனென்றால் என்னென்ன எதிர்வினைகள் வரும் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த தரத்துக்கு அப்பால் சென்று எவரேனும் மாற்றுக்கருத்துக்களைத் தெரிவித்திருந்தால் எனக்குத் தெரியப்படுத்தலாம்]

தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனை எழுதியிருந்தேன்.ஏனென்றால் இரண்டு லிபிக்களைக் கற்றுக்கொள்வது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மிகுந்தசுமையாகவே உள்ளது. அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதனால் வெறுமே தேர்வுக்காக மட்டும் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டு உடனே மறந்துவிடுகிறார்கள்.இதுதான் இன்றைய யதார்த்தம். என் எதிர்வினை இந்த யதார்த்ததை எப்படி எதிர்கொள்வது என்பதைப்பற்றி மட்டுமே.

இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும். வரலாற்றையோ இன்றைய சூழலையோ தொழில்நுட்ப உலகின் எதிர்காலம்நோக்கிய போக்கையோ சற்றும் கவனிக்காமல் ‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.

அவர்களைப்பொறுத்தவரை மொழிக்காக எதையுமே செய்யவேண்டியதில்லை. மொழி முறையாகக் கற்றுக்கொடுக்கப்படாவிட்டால் பிரச்சினை இல்லை. மொழியில் இலக்கியங்களோ சிந்தனைகளோ வராமல் போனாலும் பிரச்சினை இல்லை.மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளித்தாலே போதும்.

பெரும்பான்மையினராக உள்ள அவர்களை சீண்டும் என தெரிந்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அவர்களை நான் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழிக்கு உண்மையிலேயே பெரும்பங்களிப்பாற்றிய எழுத்தாளன் நான். என் இடத்தையும் பங்களிப்பையும் புரிந்துகொள்ளுமளவுக்கு இவர்களுக்குத் தமிழ்ப்பயிற்சி இல்லை என்பதுமட்டுமே உண்மை.

இரண்டாவதுதரப்பு, தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்து கொப்பளிக்கும் கூட்டம். கருத்து என்றாலே அது மிகையுணர்ச்சிக் கருத்தாகத்தான் இருக்கமுடியும் என்றும், விவாதம் என்றாலே வசையாக மட்டுமே இருக்கமுடியும் என்றும் நம்பக்கூடியவர்கள்.

இன்னொரு சாரார் தங்களுக்கு ஒவ்வாத எதையும் நக்கலும் கிண்டலுமாக வெளிப்படுத்துபவர்கள். அந்த நக்கலையும் கிண்டலையும் கவனித்தால் அதற்குள் உள்ளது ஆழமான தாழ்வுணர்ச்சி என்று தெரியும். எந்த தளத்திலும் தன்னை ஆழமாக நிரூபித்துக்கொள்ள முடியாதவர்கள் ‘இருந்தாலும் நான் ஒஸ்தி…’ என்ற பாவனையை மேற்கொண்டு இவற்றை வெளிப்படுத்துவார்கள். சொல்லும்படி ஒரு கட்டுரையை ஒரு குறிப்பை எழுதி அவர்களுக்கே அவர்கள்மேல் நம்பிக்கை வந்துவிட்டால் அவர்கள் தீவிரமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்கள் மீது ஆழமான அனுதாபம் மட்டுமே எனக்குள்ளது.

ஆக இதுவே தமிழகத்தின் பொதுமனநிலை. நேற்று வையாபுரிப்பிள்ளை அந்த மனநிலையாலேயே எதிர்கொள்ளப்பட்டார். ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி என அம்மனநிலையால் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டவர்களின் பட்டியல்தான் தமிழிலேயே சிறந்த அறிஞர்களின் பட்டியல். எனக்கு வசைபுதிது அல்ல.

எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு சூழலில் இருக்கவேண்டும். ‘ஏன் இப்படி யோசிக்கக் கூடாது?’ என்று கேட்பதற்கான உரிமையும் வாய்ப்பும் மறுக்கப்படக்கூடிய சூழலில் எந்தப் புதுச்சிந்தனையும் எழாது.ஒரு புதிய கருத்து விசித்திரமாக அல்லது தவறாக தெரிகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதன்மீது எரிச்சலும் கோபமும் கொண்டு அதைச் சொல்பவர் மீது பாயும் ஒரு சூழல் சிந்தனைத்தரம் கொண்டவர்களால் ஆனது அல்ல. வெறும் பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியது அது.

ஆச்சரியமென்னவென்றால் இந்த பழங்குடிக் கும்பலுணர்ச்சிக்கு எதிராகத் தமிழில் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் ஈ.வெ.ரா அவர்கள். இந்த உணர்ச்சியைச் சீண்டி, கண்டிப்பதற்காகவே அவர்கள் பல கருத்துக்களைச் சொல்லிவந்ததுண்டு. இந்தக் கருத்துக்கு நிகரான ஏராளமான கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.

நம் பழங்குடிக்கும்பல்மனநிலை அக்கருத்துக்களைச் சொல்லும் உரிமை அவருக்கு மட்டும் உண்டு, ஏனென்றால் அவர் ‘தந்தை’ என உருவகித்துக்கொண்டு அதேபோன்ற கருத்துக்களுக்கு எதிராக அதேவகை கோபங்களை இன்னும்கொஞ்சம் வளர்த்துக்கொண்டது. கொதித்துக்கொந்தளிப்பவகளைப்பாருங்கள் பெரும்பாலானவர்கள் பெரியாரியர் என தன்னைச் சொல்லிக்கொள்பவர்களாகவே இருப்பார்கள்.

இக்கருத்தை எதிர்கொள்பவர்கள் இதை முழுமையாகப் புறக்கணிக்கலாம், முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று நிராகரிக்கலாம், இக்கருத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்படிப்பட்ட கடும் எதிர்விமர்சனங்கள் வழியாகவே இத்தகைய கருத்துக்களைப் பரிசீலிக்கவேண்டும், ஆகவே கண்டிப்பாக எதிர்விமர்சனங்கள் வரவேண்டும் என்று நானே அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மாணவர்கள் தமிழ்ச்செய்தித்தாள்களைக்கூட வாசிப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். குமுதம் என்ற இதழை ஒரு கல்லூரி வகுப்பறையில் ஒருவர் கூட கேள்விப்பட்டதேயில்லை என்று அறிந்த அதிர்ச்சியை நான் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்களனைவருமே தமிழ்பேசக்கூடியவர்கள்

இதுதான் நம்மைச்சூழ்ந்துள்ள உண்மையான யதார்த்தம். இதை காணாமல் தவிர்ப்பதில் பொருளில்லை. இது ஒரு தேசியப்பொதுப்போக்கு. இந்தியா முழுக்க இதேநிலைதான் உள்ளது. இதற்கு எதிராகச் சட்டம்போடுவதோ பிள்ளைகளுக்கு வலுக்கட்டாயமாக ஆனா ஆவன்னா கற்றுத்தருவதோ பயனற்றது. அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பத்துவருடம்முன்னரே செயல்படுத்திப்பார்த்து தோற்றிருப்பார்கள். அதுவே இன்று தமிழகப் பெருநகர்களில் நடக்கிறது. நாளை தமிழகம் முழுக்க இதுவே நிலைமையாக இருக்கும்

ஐம்பதாண்டுக்காலம் கழித்து ஒருவேளை தமிழ் மிகச்சிறுபான்மையினர் மட்டுமே வாசித்து-எழுதும் ஒரு மொழியாக நீடிக்கும். பேச்சு மொழி என்றுமிருக்கும். அதில் இலக்கியங்களை வாசிக்க ஆளிருக்கமாட்டார்ள். இன்று பல செவ்வியல் மொழிகளுக்கு இருக்கக்கூடியதுபோன்ற ஆர்வம்கொண்ட மிகச்சிறிய வட்டத்தினர் மட்டுமே தமிழை தீவிரமாக வாசிப்பார்கள். இதுதான் நான் உண்மையிலேயே வருமென அஞ்சக்கூடிய சூழல்.

இதற்கு எதிராகச் செய்யக்கூடுவது என்று தோன்றக்கூடிய ஒரு வழி நான் சொல்வது.சாத்தியமான பல வழிகளில் ஒன்று. நாளைய தொழில்நுட்பம் எதைச் சாதிக்குமென எனக்குத் தெரியாது. ஆனால் உலகமெங்கும் பலமொழிகளுக்கு அடிப்படையான பொது எழுத்துரு ஆங்கிலமாக மாற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். அந்த எழுத்துருவை வேறெந்த எழுத்துருவிலும் மாற்றிவாசிக்க தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கும். தமிழை பிராமியிலோ வட்டெழுத்திலோகூட வாசிக்கமுடியும். ஆகவே எப்படியும் கற்றுக்கொண்டே ஆகபோகிற ஆங்கில எழுத்துருக்கள் வழியாகவே தமிழை வாசிக்க- எழுதக் கற்றுக்கொள்வது சுலபமான வழியாக இருக்கும்.

ஒருவேளை இது வெறும் ஊகமாக இருக்கலாம். மிகையான அச்சமாக இருக்கலாம். இந்த மாற்று வழி நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் ஏன் இப்படி யோசிக்கக் கூடாது என்பது மட்டுமே என் கேள்வி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அத்திசைநோக்கிச் செல்கிறோம்

வழக்கம்போல தொண்ணூறுசதவீதம்பேருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது. வரவிருக்கும் உடனடி எதிர்வினை என்பது ‘அப்டீன்னா நீ எதுக்கு தமிழிலே எழுதறே? அப்டியே இங்கிலீஷ் எழுத்துக்களிலே எழுதவேண்டியதுதானே? நீ எழுத ஆரம்பிச்சுப்பாரு…’.

நண்பர்களே, நான் இப்போது ஆங்கில எழுத்துருக்களில் எழுதுவதைப்பற்றிச் சொல்லவில்லை. இப்போதுள்ளவாசகர்கள் ஆங்கில எழுத்துரு வழியாக எளிதாக வாசிப்பார்கள் என்றும் சொல்லவில்லை. ஆங்கில எழுத்துருக்கள் வழியாக தமிழ் இளமையிலேயே பள்ளிகளில் பயிலப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் தமிழ் வாசிக்க எளிதாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.

இரண்டாவது எதிர்வினை, எனக்கு வாசகர்கள் இல்லாததனால் நிறைய வாசகர்களை பெறுவதற்காக இதைச் சொல்கிறேன் என்பது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக அதிகமாக வாசகர்களைப் பெற்ற மிகச்சில இலக்கியவாதிகளில் ஒருவன் நான் என்பதை அவர்களுக்கு கொஞ்சம் வாசிப்பு இருந்தால் தெரிந்துகொள்ளலாம். வாசிக்காதவர்களிடம் அதைச் சொல்லிப்புரியவைக்க கடினம்.

ஆனால் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட வணிகப்படைப்பாளிகள்கூட தமிழகத்தில் 5 சதவீதம்பேரால் மட்டுமே அறியப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்வாசிப்பு இப்போதே மிகமிகச்சிறுபான்மையினரால் மட்டுமே செய்யப்படுகிறது. நான் பேசுவது இதன் எதிர்காலம் பற்றி.

ஆங்கில எழுத்துரு அன்னிய மொழியாலானது என்பது இன்னொரு பேச்சு. நான் மொழியில் அல்லது இலக்கியத்தில் அப்படி அன்னியம் என ஒன்றிருப்பதாக ஏற்கவில்லை. இன்று நாம் தமிழில் எழுதும் எழுத்துக்களே ஐரோப்பிய மொழியை அடிப்படையாகக் கொண்டு பலமுறை சீர்திருத்தப்பட்டவை. நம் உரைநடை இலக்கணமே ஆங்கிலத்தை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இதோ இந்த உரைநடையின் அமைப்பே ஆங்கிலத்தைப்போன்றதுதான்

கடைசியாக, இப்படி எழுத்துருவை மாற்றுவது நடைமுறைச் சாத்தியமா என்பது. தெரியவில்லை. ஆனால் எல்லாமே சாத்தியமானதுதான் என்றுதான் தோன்றுகிறது.

*

ஒரு பண்பாட்டுச்சூழல் தன்னுடைய அடிப்படை மனநிலைகளை, நம்பிக்கைகளைப் பற்றி தொடர்ந்து புறவயமாக ஆராய்ந்துகொண்டே இருக்கவேண்டுமென்றே நான் நினைக்கிறேன். ஈவிரக்கமில்லாத சுயஅலசலாக அது அமையவேண்டும். இல்லாவிட்டால் அச்சூழல் தேங்கும்.

வேறு எவரைவிடவும் நான் மரபின் மீது ஆர்வம் கொண்டவன். மரபில் ஆழமான தொடர்ந்த பயிற்சியும் கொண்டவன். அதேசமயம் மரபுகளை எப்போதும் தர்க்கபூர்வமாக உடைத்து ஆராயவும் மறுபரிசீலனை செய்யவும் முயல்பவன். எல்லா மரபையும். எதையும் வெறுமே மூட நம்பிக்கையாக ,உணர்வுபூர்வமான ஏற்பாக மட்டும் வைத்துக்கொள்ளலாகாது என நினைப்பவன்.

இந்த விவாதமும் அதற்காகவே. இதில் ஈடுபடுபவர்களில் மிகமிகச்சிறுபான்மையினர் அதை உணரக்கூடும். இன்னும் சிலர் இவ்விவாதம் முடிந்தபின் ஒட்டுமொத்தமாக யோசிகையில் உணரக்கூடும். அவர்களுக்காகவே இது எழுதப்படுகிறது.

ஜெ

2013/11/4 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

இதெல்லாம் படிக்கும்போதே அநியாயமா தோணலையா...




--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

ப்ரியன்

unread,
Nov 4, 2013, 4:10:36 AM11/4/13
to panb...@googlegroups.com
இவர் ஏன் இந்த கட்டுரையை , இனி எழுத போகின்றவைகளை ஆங்கில எழுத்து கொண்டு எழுதக்கூடாது...ஒரு ஆரம்பமாக இருக்கும் அல்லவா?

விழியன்

unread,
Nov 4, 2013, 4:13:41 AM11/4/13
to panb...@googlegroups.com

ஜெயமோகனின் தங்கிலீஷ் தமாக்கா

தி இந்துவில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தீர்களா? இல்லையென்றால் ஐந்து நிமிடங்களை ஒதுக்கிஅதை வாசித்துவிடுங்கள். நேரமில்லையென்றால் விட்டுவிடுங்கள். கட்டுரையின் அடிப்படையான சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன். இனிமேல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்கிறார் ஜெமோ. அதாவது ‘Vanakkam, Nalla irukeengala?’ என்று எழுத வேண்டுமாம்.

தலைப்பை பார்த்தவுடன் காமெடிக் கட்டுரை போலிருக்கிறது எனத் தோன்றியது. ஆனால் ஜெமோ சீரியஸாகவேதான் எழுதியிருக்கிறார். அடுத்தவர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் ‘அசடு, அசடு’ என்று விளித்துக் கொண்டே இப்படியான கட்டுரைகளை எழுதுவதற்கு அசட்டுத் தைரியம் வேண்டும். இப்படியெல்லாம் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் தனது வலைத்தளத்தில் இதை பரிசோதித்து பார்த்திருக்கலாம். நிறைய வேண்டாம்- இரண்டு கட்டுரைகள் போதும். பெரும்பாலானவர்களின் ரியாக்‌ஷனைத் தெரிந்திருக்க முடியும். ஆனால் அவர் செய்ய மாட்டார். இந்த கான்செப்ட் எந்தக் காலத்திலும் வேலைக்கு ஆகாது என்பதை ஜெயமோகனுக்கும் தெரியும். ஆனால் அவருக்கு அவ்வப்போது இப்படியான அதிரடி ஆக்‌ஷன் தேவைப்படுகிறது. தம்மை நோக்கித் திரும்ப வைக்கும் வித்தை. இந்த வித்தைக்கு இப்பொழுது அவரிடம் தமிழ் சிக்கிக் கொண்டது, பாவம்.

தமிழில் மாறுதல்களைக் கொண்டு வருவதாக இருந்தால் உருப்படியாக நிறையச் செய்ய இயலும். உதாரணமாக ‘கோபி’ என்று தமிழில் எழுதினால் ஒரே உச்சரிப்புதான். ஆனால் ஆங்கிலத்தில் Go என்றும் வாசிக்கலாம் Ko என்றும் வாசிக்கலாம். இரண்டாவது எழுத்தை Bi என்றும் வாசிகக்லாம், Pi என்றும் வாசிக்கலாம். (Gobi, Kobi,Gopi, Kopi). இந்த உச்சரிப்புகள் ஏற்கனவே வழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் இந்த உச்சரிப்புகளை வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் தமிழில் இல்லை. வேறுபடுத்த இயலுமா என்பதை யோசிக்கலாம்.

அதேபோல தமிழின் இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துக்களும் நமக்குத் தேவைப்படுகின்றனவா என்றும் அந்த எண்ணிக்கையை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆராய்ச்சிகளையும்  ஆரம்பிக்கலாம். மிகச் சிக்கலான சில வரி வடிவங்களை எளிமைப்படுத்துவதற்கான அவசியங்களைப் பற்றி பேசலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் எழுத்துருவையே தீயில் இட்டுக் கொளுத்தலாம் என்பது என்னைப் பொறுத்தவரையிலும் மொழியையே புதைக்கலாம் என்பது மாதிரிதான்.

தமிழ் புத்தகங்கள் ஐந்நூறு பிரதிகள்தான் விற்கின்றன என்கிறர். அனைத்து புத்தககங்களுமா வெறும் ஐந்நூறு பிரதிகள் விற்கின்றன? வெறும் ஐநூறு பிரதிகள்தான் விற்கின்றன என்பது ஜெயமோகனுக்கும், சாருநிவேதிதாவுக்குமான பிரச்சினைகளே தவிர தமிழுக்கும், தமிழ் எழுத்துருவுக்குமான பிரச்சினைகள் இல்லை. 

இதே தமிழ் மொழியில், இதே தமிழ் எழுத்துருவில் எழுதப்பட்ட நீயா நானா கோபிநாத்தின் ‘ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க’ இலட்சக்கணக்கான பிரதிகள் விற்ற புத்தகம்தானே? சோம.வள்ளியப்பனின் ‘அள்ள அள்ளப் பணம்’ அநேகமாக லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற புத்தகம். இவையெல்லாம் மட்டும் ஏன் விற்கின்றன? இன்னமும் சுஜாதாவின் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில்தானே விற்கின்றன. புத்தகக்கண்காட்சிகளில் சுய முன்னேற்ற நூல்களை அள்ளியெடுத்துச் செல்கிறார்கள்தானே? எதை வைத்து தமிழ் புத்தகங்கள் ஐந்நூறு பிரதிகள்தான் விற்கின்றன என்று சொல்கிறார் என்று தெரியவில்லை.

தமிழில் எழுதுவதை யாருமே வாசிப்பதில்லை என்பது உண்மையாக இருந்தால் தினமலர்.காம் தளத்திற்கு மட்டும் எப்படி லட்சக்கணக்கான ஹிட்கள் வருகின்றன? தமிழ் ஒன்.இந்தியா இணையத்தளத்தை ஏன் கோடிக்கணக்கான பேர் வாசிக்கிறார்கள்? தமிழ்செக்ஸ் ஸ்டோரிஸ் என்ற இணையதளம் தமிழின் மிக அதிக பார்வையாளர்களைக் கொண்ட தளமாக இருக்கிறது. இவையெல்லாம் எந்தவிதத்திலும் சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச் மொழிகளைப் படிக்கும் குழந்தைகளினால் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

ஜெயமோகனின் இணையதளத்தை ஒரு நாளைக்கு மூன்றாயிரம் பேர்கள்தான் வாசிக்கிறார்கள் என்பதால் தமிழை வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற பொருள் இல்லை; நமது புத்தகத்தை ஐந்நூறு பேர்கள்தான் வாங்குகிறார்கள் என்பதால் தமிழ் எழுத்துருவினால்தான் இந்த எண்ணிக்கை குறைகிறது என்ற அர்த்தம் இல்லை. 

உண்மையில் சில வகையான புத்தகங்கள் குறைவாக விற்பதற்கு நிறைய அடிப்படைச் சிக்கல்கள் இருக்கின்றன. தமிழில் வாசிப்பவர்களில் பெரும்பாலானோரின் வாசிப்புத்தளம் என்பது சுயமுன்னேற்ற நூல்கள், பல்ப் நாவல்கள் என்று நின்றுவிடுகின்றன. அதைத் தாண்டி அவர்கள் வருவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் இந்தத் தளத்தில் இருக்கும் வாசகர்களை அடுத்த நிலைக்கு நகர்த்துவதைச் செய்ய வேண்டுமே தவிர, தங்கிலீஷில் எழுதினால் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதெல்லாம் வெறும் காமெடி.

இப்பொழுதெல்லாம் நமது கல்விக் கூடங்களிலும் சரி வீடுகளிலும் சரி, வாசிக்கும் பழக்கம் என்பதையே முழுமையாக தவிர்க்கச் செய்கிறார்கள். அதுதான் இங்கு பிரச்சினை. மதிப்பெண்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. பையனின் கவனம் சிதறிவிடும் என்பதற்காக ‘ஆனந்தவிகடன், குமுதம் கூட வாங்குவதில்லை’ என்று பெருமையாக பேசுவதன் சிக்கல்கள் இவை. இவற்றையெல்லாம் மீறி வாசிக்கும் பழக்கத்தை தமிழில் உருவாக்கிக் கொள்ளும் மிகக் குறைந்த சதவீதத்தினரால் மட்டும்தான் ‘இந்த அளவிலான’ வாசிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டு மொழியின் வெவ்வேறு வரிவடிவங்களை நினைவில் நிறுத்திக் கொள்வது என்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. உங்களுக்கும் எனக்கும் ஆங்கிலமும் தெரியும், தமிழும் தெரியும். என்ன பிரச்சினையை சந்திக்கிறோம்? மனோவியல் நிபுணர்களின் கூற்றுப்படி ஒவ்வொரு மனிதனும் நான்கைந்து வரிவடிவங்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும். ஒரு மொழிக்கான தனித்துவம் என்பது அதன் வரிவடிவத்திலும் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

உண்மையில், நமது கல்வி முறையில் உருவாக்க வேண்டிய மாறுதல்கள், அடுத்த தலைமுறையின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல்கள், ஏற்கனவே இருக்கும் வாசகர்களின் புரிதல்களை, வாசிப்பு முறையை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் போன்றவற்றைத்தான் ஜெயமோகன் போன்ற சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டுமே தவிர இப்படியெல்லாம் அபத்தமாக யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

தமிழின் வாசகர்கள், அவர்களின் ரசனை, புரிதல்கள் போன்றவற்றை ஜெயமோகன் அளவிற்கு அறிந்து வைத்திருப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என நம்பியிருந்தேன். ஆனால் அவர் இப்படியொரு கட்டுரையை எழுதுவதற்கான விதி எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஜெயமோகனை நான் விமர்சிப்பது டூ மச். அவருக்கும் எனக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஆனால் இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் இதை எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. 

ஃபேஸ்புக், ட்விட்டரில் தங்கிலீஷில்தான் நிறையப் பேர் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். உண்மையில், இப்படி எழுதுவதை வாசிப்பது போல வேறொரு கொடுமை இருக்கவே முடியாது. அதன் பெயர் தங்கிலீஷ் இல்லை ‘மனுஷனை தாளிக்கும் இங்கிலீஷ்’. நம்பிக்கை இல்லையென்றால் பொறுத்து இருங்கள். உங்களின் இந்தக் கட்டுரைக்கு குறைந்தபட்சம் நாற்பது அல்லது ஐம்பது கடிதங்களாவது வரும். அத்தனையும் தங்கிலிஷீல் வர வேண்டும் என மலையாள பகவதியை வேண்டிக் கொள்கிறேன். 

Ramesh Murugan

unread,
Nov 4, 2013, 4:22:34 AM11/4/13
to பண்புடன்
அதுக்கும் இந்த கட்டுரையிலேயே பதில் சொல்லிருகாரு.
வருங்கால சந்ததிகள் தமிழை ஆங்கில எழுத்துருவில் கற்றால் பின்னால் உதவும்னு.

2013/11/4 ப்ரியன் <mailt...@gmail.com>

இவர் ஏன் இந்த கட்டுரையை , இனி எழுத போகின்றவைகளை ஆங்கில எழுத்து கொண்டு எழுதக்கூடாது...ஒரு ஆரம்பமாக இருக்கும் அல்லவா?

//
/

ப்ரியன்

unread,
Nov 4, 2013, 4:55:13 AM11/4/13
to panb...@googlegroups.com
அட பின்னால் வரும் சந்ததியினருக்கு படிக்க புக் வேணும்ல அதுக்கு இவரு இப்பவே எழுத ஆரம்பிக்கலாம்ல..

Ramesh Murugan

unread,
Nov 4, 2013, 5:42:46 AM11/4/13
to பண்புடன்
:))

எதுவும் நடக்கலாம்.

2013/11/4 ப்ரியன் <mailt...@gmail.com>
அட பின்னால் வரும் சந்ததியினருக்கு படிக்க புக் வேணும்ல அதுக்கு இவரு இப்பவே எழுத ஆரம்பிக்கலாம்ல..

மஞ்சூர் ராசா

unread,
Nov 4, 2013, 6:02:30 AM11/4/13
to பண்புடன்
ஜெமோவின் இந்த கருத்து முற்றிலும் தவறான வழிக்கே கொண்டு செல்லும்.


2013/11/4 Ramesh Murugan <rames...@gmail.com>
--

ஸ் பெ

unread,
Nov 4, 2013, 9:12:14 AM11/4/13
to panbudan
ஜெமோ ரெண்டு நாளு ஊரை விட்டு ஒதுங்கி இருக்கிறது நல்லது..

PRASATH

unread,
Nov 4, 2013, 11:27:00 PM11/4/13
to Groups
I am expecting a detail article to agree/disagree this concept from anyone of our group...
 
If someone already did the same in any of other social network, can you please share here also.

PRASATH

unread,
Nov 5, 2013, 12:28:34 AM11/5/13
to Groups
முன்குறிப்பு: இந்த இழையில் வந்துள்ள கருத்துகளுக்கு பதில் சொல்வதற்காக எழுதப்பட்டது அல்ல இது.
 
நான் அதிகம் ஊர்/உலகம் சுற்றுபவன் கிடையாது என்றாலும் ஓரளவிற்கு பேருந்துகளிலும், இரயில்களிலும், விமானங்களிலும் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திலும் பெரும்பாலும் எனது பொழுதுபோக்கு மக்களின் பலதரப்பட்ட மனநிலையை வேடிக்கைப் பார்ப்பதாகவோ இல்லை உறக்கமாகவோ தான் இருக்கும். பயணம் செய்பவர்களில் மொத்தம் நான்கு பிரிவினர். தனியாக பயணம் செய்பவர்கள், ஜோடியாக பயணம் செய்பவர்கள், குடும்பமாக பயணம் செய்பவர்கள், குழுமமாக பயணம் செய்பவர்கள்.
 
குழுமமாக பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் அரட்டை, கேலி, கிண்டல், அரசியல், சினிமா, விளையாட்டு என பொழுது போக்கி கொண்டிருப்பர். குடும்பமாக பயணம் செய்பவர்கள்,குழந்தைகளுடன் விளையாடியும், அவர்களைக் கண்டித்தும், குடும்பப் பிரச்சனைகளை பயணத்திலும் தொடர்ந்தவாறு தங்களது பயணத்தைக் கழிப்பர். ஜோடியாக பயணம் செய்பவர்கள், உடலாலும் உள்ளத்தாலும் பேசிக் கொண்டே இருப்பர். அது அவர்களுக்கான அந்தரங்கமாகவே பெரும்பாலும் இருக்கும். தனியாக பயணம் செய்பவர்கள் பெரும்பாலும், புத்தகத்தை வாசித்துக் கொண்டோ, பாடலைக் கேட்டுக் கொண்டோ, திரைப்படங்களை பார்த்துக் கொண்டோ,  வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ இல்லை உறங்கிக் கொண்டோ வருவார்கள்.
 
அதிலும் இன்றைய நவநாகரீக இளைஞர்கள் மற்றும் நங்கைகள் ஏதேனும் பாடல் கேட்டுக் கொண்டே புத்தகத்தை வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். படிக்கும் புத்தகங்களைப் பார்த்தால் ஆங்கிலமாகவோ அல்லது அவரவர் தாய்மொழிப் புத்தகமாகவோ இருக்கும். எப்படி ஆங்கிலப் புத்தகங்கள் பிற புத்தகங்களை விட அதிகம் பயணம் செய்பவர்களை கவர்ந்திருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கையில் இதற்கான பதிலாக நான் கண்டறிந்தது ஆங்கில புத்தகங்களை வாசிக்கையில் புத்தகத்தின் Phrases and Idioms, Vocobulary, Sentence formation, Way of composing, முதலிய சமாச்சாரங்கள் தங்களது அலுவலக பணிகளை திறம்படச் செய்யவும் உதவுவதால், பொழுதுபோக்கோடு சேர்த்து தனது வாழ்க்கைத்தரத்தையும் ஒரு படி மேலுயர்த்துகிறது என நம்பப்படுவதால் ஆங்கில புத்தகங்கள் பிறமொழி புத்தகங்களை விட அதிகம் படிக்கப்படுகிறது.
 
இதனைப் பார்த்து விட்டு தமிழ் புத்தகங்களை ஆங்கில எழுத்துருவில் எழுதினால் தமிழும் பரவலாக வளர்ந்து விடும் என நினைப்பது எப்படி சரியாகும். ஆங்கில புத்தகங்கள் அதிகம் விற்கப்படுகின்றன என எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை பேர், விற்கும் ஆங்கிலப் புத்தகங்களின் ஆதியைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து அதிகம் விற்பனையாகும் ஆங்கிலப் புத்தகங்களில் பாதிக்குப் பாதி, பிறமொழியாளர்களால் ஆங்கிலத்தில் உலகம் முழுவதும் தங்கள் கருத்துகள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. தமிழை வளர்க்க விரும்பும் எழுத்தாளர்களும் தமிழ்மொழிக் கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதி தமிழ்மொழியின் பெருமையை பறை சாற்றலாமே.
 
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் அதிகரித்து வரும் இன்றைய நாளில், தமிழின் வரிவடிவத்தையும் ஆங்கிலமாக மாற்றுவது என்பது தமிழை இன்னும் படுகுழியில் ஆழ்த்துமே அன்றி தமிழை வளர்க்க உதவாது. வரி வடிவம் இல்லாத மொழிகளுள் ஒன்றாக தமிழும் வருங்காலத்தில் தள்ளப்படும். மொழியை அழிக்க வரிவடிவத்தை அழித்தலே முதல் நிலை என்பதை அறியாமலா இருக்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
 
உண்மையில் தமிழை வளர்க்க விரும்பினால், மேற்கத்திய மொழிகளில் உள்ள கருத்துகளை எல்லாம் தமிழில் கொண்டு வந்து தமிழர் அறிந்து கொள்ள வசதி செய்ய வேண்டும். தமிழில் இன்றைய நவீன யுகத்திற்கு தேவையான கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை 
 கட்டாயமாக்கி ஆங்கிலத்தை/பிற மொழிகளை இரண்டாம் மொழியாக கற்க வகை செய்ய வேண்டும்.
 
அதை விடுத்து தமிழுக்கு ஆங்கில எழுத்துருவை வரிவடிவமாக்குதல் தமிழை/ தமிழின் வளர்ச்சியை பாதாளத்திற்கு தள்ளி விடுமே அன்றி வளர்க்க ஒருபோதும் உதவாது.
 

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 12:51:40 AM11/5/13
to பண்புடன்
ஜெயமோகனின் எழுத்துரு கட்டுரையைப் பற்றியும் அதன் தேவையைப் பற்றியும் இன்னமும் முழுசா உள்வாங்க முடியல. அல்லது இன்னமும் எனக்கு அது புடிபடல.

ஆனா, எழுத்துரு மாற்றத்துக்கான தேவையின் காரணிகளை அவர் முன்வச்சதும், அந்த கட்டுரைக்கு எதிர்வினை எப்படி இருக்கும் என அவர் எழுதியது 100% உண்மையாகிப்போனது.

இந்த நொடிவரை அவர் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றியோ, அல்லது எழுத்துரு பிரச்சனைக்கு மாற்றாகவோ யாரும் எதையும் முன்வச்சி பேசல. வழக்கம்போல வசைகள் வசைகள்.

சமீபத்துல நீயா நானா நிகழ்ச்சி ஒன்னைப் பார்த்தேன். அதுல சில பிள்ளைகளுக்கு தமிழ் பேச வருமாம் ஆனா எழுத்தைப் படிக்கத் தெரியாதாம். அவங்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைஞ்ச குடும்பத்தில் பிறக்கல, பிறமொழி தேவைக்கான அவசியமும் அவங்களுக்கு இல்லை. நகரங்களில் வாழ்பவர்களும் அல்லர்.

இதுதான் யதார்த்தமா இருக்கு. ஜெயமோகன் புலம்பெயர்ந்த அல்லது வெளிநாட்டு வாழ் தமிழர்களை உதாரணமா வச்சி பேசினாரு. ஆனா உள்ளூர்லையே அந்த நிலமை மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரமிச்சிடிச்சி.

எழுத்துரு விசயத்தில் ஜெயமோகனுக்கு எதிரா பேசுறவங்க இந்த மாதிரியான மாற்றங்களை எப்படி எதிர்கொள்ளனும் அல்லது ஆரோக்கியமான மாற்றுவழி என்னான்னு பேசலாம். எழுத்துரு மாற்றம்தான் ஒரே தீர்வுன்னு ஜெயமோகன் சொல்லல. வேற மாற்றுவழி இல்லாத பட்சத்தில் இதை கையிலெடுக்கலாம்னு சொன்னாரு.

ஜெயமோகனுக்கு கொடிபிடிக்கிறியான்னு பேசாம, தமிழகத்தில் இந்த மாதிரியான (தமிழ் பேச தெரியும் ஆனா படிக்கத் தெரியாது என சொல்லும் குழந்தைகளுக்கு) மாற்றங்களை எப்படி சரிகட்டலாம்னு யாராவது பேசினா நல்லா இருக்கும்.

நான் சொன்ன உதாரணம் இப்போதைக்கு 2%மாவது இருக்கலாம். வருங்காலங்களில் இந்த அளவு அதிகரிக்கலாம்.

ஸ் பெ

unread,
Nov 5, 2013, 1:03:27 AM11/5/13
to panbudan
நம் மொழி சார்ந்த வரலாறும், போராட்டமும், அரசியலும் 'அகண்ட பாரதவாசி'களை எவளவு உறுத்துகிறது என்பதற்கு இந்த நாள் ஒரு உதாரணம்..

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 1:05:57 AM11/5/13
to பண்புடன்
அண்ணே,
அவர் எழுத்துரு கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரையை நீங்க மெய்ப்பிச்சிக்கிட்டே இருக்கிங்க.

இப்பவும் நீங்க ஜெயமோகனைத்தான் திட்டுறிங்களேத் தவிர, அவரின் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றி பேச தயாராக இல்லை. மேலும் மாற்று வழியையும் முன்வைக்கவில்லை.

2013/11/5 ஸ் பெ <stalinf...@gmail.com>

நம் மொழி சார்ந்த வரலாறும், போராட்டமும், அரசியலும் 'அகண்ட பாரதவாசி'களை எவளவு உறுத்துகிறது என்பதற்கு இந்த நாள் ஒரு உதாரணம்..

//
/

விழியன்

unread,
Nov 5, 2013, 1:15:34 AM11/5/13
to panb...@googlegroups.com
ரமேஷ்,

முதல் விஷயம் அது எழுத்துரு அல்ல. எழுத்துரு என்றால் Font. ஜெமோ ஆனால் சொல்ல வருவது ஸ்கிரிப்ட்.

இரண்டாவது விஷயம். குழந்தைகள் மொழியை கற்க சிரம்ப்படுகின்றார்கள் என்பது. சுத்த ஹம்பக். 5 வயதிற்கும் 5 மொழிகளை எளிதாக கற்கலாம். இளம் வயதில் தான் இவர்கள் இன்னும் எளிதாக கற்கலாம். அதற்காக சூழலை அமைத்து தந்தால் போது. புத்தகம், உரையாடல், சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள் வகையறா.

மூன்றாவது விஷயம்: தமிழ் பேச தெரியும் ஆனால் படிக்க தெரியாது என்பவர்கள் மொத்தம் எத்தனை சதவிகிதம் பேர் இருப்பார்கள் ? அப்படி அவர்கள் வாசித்தே தீர வேண்டுமெனில் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு மிக எளிதாக டிராண்ஸ்லிட்ரேட் செய்துவிடலாம். அது ரொம்ப எளிமையான செயல். 

ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லை. மொழி அழிந்துவிடும் என்பது தேவையற்ற பயம்.

ஸ் பெ

unread,
Nov 5, 2013, 1:24:03 AM11/5/13
to panbudan
Ramesh,

இது எழுத்துரு அல்ல வரிவடிவம் மாற்றல்.. கீழே இது தொடர்பாக புருனோவின் கருத்தை கேளே கொடுத்திருப்பேன்..

ஒரு விஷயத்தை பற்றி விவாதிப்பதற்கு முன்னால் அதை சொல்பவர் யார் என்பது முக்கியம்... ஜெமோ என்ன மொழியியல் அறிஞரா?

சாதி, இந்தியா,.... இன்னும் பல XXXXXXXXXXX களில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமரசப்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை எழுதிக்கொண்டிருப்பவர்.. இந்தியாவை உடச்சு நிர்வகித்தால் தான் இந்திய மக்களுக்கு நல்லது என ஒரு கட்டுரை எழுதினால் இவர் பொறுத்துக்கொள்வாரா? 'அதை எல்லாம் தான் இந்தியா இருக்கிறது' என சப்பை கட்டு கட்டுவாரில்லையா... அப்புறம் ஏன் தமிழ் மொழிக்கு மட்டும் இந்த யோசனை?

ஏன்னா, பை பேஸ் ஜெயமோகன் ஒரு மலையாளி.. இந்த இனம், மொழி சார்ந்த உணர்வுகள் எப்பவுமே அவருக்கு ஒரு கசப்பு மருந்து தான்... அதும் காமென்வெல்த்,இசைபிரியா என மக்களின் கவனம் இன்னொரு பக்கத்தில் இருக்கும் போது இப்படியோரு கட்டுரை..

ஒரு மனநோயாளி, தெருவில் அசிங்கம் பண்ணி வச்சா மன நோயாளியை தனிமைப்படுத்தி, குளிப்பாட்டி, மருந்து கொடுக்க செய்தால் தான் சமூகத்துக்கு நல்லது... இல்லாம அவனும் மனுஷன் தானே, அவனுக்கு சுதந்திரம் இல்லையான்னு கேட்டுட்டு இருந்தா இப்பிடி தான் அடிக்கிடி தெருவில் அசிங்கம் கிடக்கும்..


அப்புறம், இந்த விஷயத்தை எல்லாம் என்னை போன்ற காட்டுமிராண்டியிடம் எதிர்பார்க்காதீர்கள்.. எதிர் பக்கத்தில் இருந்து இப்பிடித்தான் செஞ்சிட்டு இருப்பாங்கன்னா நான் பாசிஸ்டாகவே இருந்துட்டு போறேன்..




//
Mariano Anto Bruno Mascarenhas
எழுத்துருக்கள் என்றால் FONTS
வரி வடிவம் என்றால் SCRIPT

இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் புனைவு எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்

அபுனைவு (non fiction) எழுதுவற்கு சிறிது அறிவும், அதிகம் உழைப்பும், அதை விட அதிகம் நேர்மையும் தேவை !!

இவரை சொல்லி குற்றமில்லை
இவரை ஆளுமை என்று நினைத்து ஒரு முட்டாப்பய கும்பல் இவரை சுற்றி வருகிறதே
அவர்களை சொல்ல வேண்டும் . . //

//Mariano Anto Bruno Mascarenhas ஆங்கில மொழி எழுதப்படுவது ஆங்கில வரிவடிவில் அல்ல, அது உரோமன் வரி வடிவில் என்ற விஷயம் ஜெமோ போன்ற புனைவு எழுத்தாளர்களுக்கு தெரியாதது ஏற்றுக்கொள்ளக்கூடியதே

ஆனால்


பிரச்சனை

1. இந்த அடிப்படை தெரியாதவர் அபுனைவு கட்டுரை எழுதுவது

2. இந்த அடிப்படை தெரியாதவர் இந்து இதழில் ஆசிரியராக இருந்து அந்த கட்டுரையை திருத்தாமல் அப்படியே பதிப்பிப்பது

இதழியல் மிக மோசமான நிலையில் உள்ளது//

2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>

அண்ணே,
அவர் எழுத்துரு கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரையை நீங்க மெய்ப்பிச்சிக்கிட்டே இருக்கிங்க.

இப்பவும் நீங்க ஜெயமோகனைத்தான் திட்டுறிங்களேத் தவிர, அவரின் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றி பேச தயாராக இல்லை. மேலும் மாற்று வழியையும் முன்வைக்கவில்லை.




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ப்ரியன்

unread,
Nov 5, 2013, 1:25:45 AM11/5/13
to panb...@googlegroups.com
முதலில் -எழுத்துரு- வரிவடிவத்தில் பிரச்சனை என்று எப்படி சொல்கிறீர்கள்?

பிரச்சனை ஒன்று இல்லாதபோது அதற்கு தீர்வு ஒன்று ஏன் ஒன்றை சொல்லணும்.?!


On Tuesday, 5 November 2013 11:21:40 UTC+5:30, Ramesh wrote:

இந்த நொடிவரை அவர் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றியோ, அல்லது எழுத்துரு பிரச்சனைக்கு மாற்றாகவோ யாரும் எதையும் முன்வச்சி பேசல. வழக்கம்போல வசைகள் வசைகள்.
 
சமீபத்துல நீயா நானா நிகழ்ச்சி ஒன்னைப் பார்த்தேன். அதுல சில பிள்ளைகளுக்கு தமிழ் பேச வருமாம் ஆனா எழுத்தைப் படிக்கத் தெரியாதாம். அவங்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைஞ்ச குடும்பத்தில் பிறக்கல, பிறமொழி தேவைக்கான அவசியமும் அவங்களுக்கு இல்லை. நகரங்களில் வாழ்பவர்களும் அல்லர்.

இதுதான் யதார்த்தமா இருக்கு. ஜெயமோகன் புலம்பெயர்ந்த அல்லது வெளிநாட்டு வாழ் தமிழர்களை உதாரணமா வச்சி பேசினாரு. ஆனா உள்ளூர்லையே அந்த நிலமை மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரமிச்சிடிச்சி.

எழுத்துரு விசயத்தில் ஜெயமோகனுக்கு எதிரா பேசுறவங்க இந்த மாதிரியான மாற்றங்களை எப்படி எதிர்கொள்ளனும் அல்லது ஆரோக்கியமான மாற்றுவழி என்னான்னு பேசலாம். எழுத்துரு மாற்றம்தான் ஒரே தீர்வுன்னு ஜெயமோகன் சொல்லல. வேற மாற்றுவழி இல்லாத பட்சத்தில் இதை கையிலெடுக்கலாம்னு சொன்னாரு.

ஜெயமோகனுக்கு கொடிபிடிக்கிறியான்னு பேசாம, தமிழகத்தில் இந்த மாதிரியான (தமிழ் பேச தெரியும் ஆனா படிக்கத் தெரியாது என சொல்லும் குழந்தைகளுக்கு) மாற்றங்களை எப்படி சரிகட்டலாம்னு யாராவது பேசினா நல்லா இருக்கும்.

நான் சொன்ன உதாரணம் இப்போதைக்கு 2%மாவது இருக்கலாம். வருங்காலங்களில் இந்த அளவு அதிகரிக்கலாம்.

சரி , அந்த 2% மக்களை தமிழ் வரிவடிவத்தை படிக்க வைக்க என்ன வழி என யோசிக்க வேண்டுமா? இல்லை 98% மக்களை அந்த 2% மக்களை மாதிரி மாற்ற வேண்டுமா?!!! 

PRASATH

unread,
Nov 5, 2013, 1:27:37 AM11/5/13
to Groups
ரமேஷ்...
 
ஒரு குதர்க்கவாதத்திற்கு கேட்கிறேன்... நாளைய தலைமுறைக்கு இரண்டு வரி வடிவங்கள் இருப்பது, அதன் மூலம் படிப்பது தான் பிரச்சினை என்றால் தமிழ் வழி கல்வியில், ஆங்கிலத்தை தமிழ் வரிவடிவத்தில் எழுதிப் பழக அறிவுரை கூறலாமா...
 
ஒரு மொழியின் உடலானது பேச்சாக இருக்குமானால், அதன் உயிர் வரி வடிவம். வரி வடிவம் இல்லாத பல மொழிகள் அழிந்து இருக்கிறது. சிதைந்து போய் இருக்கிறது. பிராமி எழுத்துருவை நாம் எப்படி படிக்க இயலாமல் இருக்கிறோமோ அதே போல ஆங்கில வரிவடிவத்தில் தமிழ் கற்கும் குழந்தைகள் தமிழின் பழம்பெரும் நூல்களையும், கருத்துகளையும் கற்க இயலாமல் போகும்.
 
இந்த தமிழ் மொழியை ஆங்கில வரி வடிவத்தில் எழுத தேவையான காரணங்கள் என்ன என பட்டியலிட முடியுமா...
 
ஒவ்வொரு மொழியையும் அதற்கே உண்டான வரிவடிவத்தில் படிப்பதே அம்மொழியை வளர்க்கும் விதமாக அமையுமே ஒழிய ஒற்றை வரிவடிவத்தில் அனைத்து மொழியையும் அடைப்பது என்பது மொழியை சிதைக்க மட்டுமே செய்யும்.
 
உதாரணத்திற்கு சில வரிகள்.
 
naan nalamaa irukken.
mein badiyaa hoon.
i am good.
nenu baga unnaanu.
valara savukyamaanu.
 
நான் நலமா இருக்கேன்...
மைன் படியா ஹூன்...
ஐ அம் குட்.
நேனு பாக உன்னானு 
வளர சவுக்யமானு.
 
மேலே உள்ளதில் ஒவ்வொரு வரியைப் படிக்கும் பொழுதும் உனக்கு உள்ளூர ஏற்படும் உணர்வு எத்தகையதாக இருக்கிறது என்பதைச் சொல். மேலே பேசலாம். எனது கருத்துகள் ஜெயமோகனைக் குறி வைத்தன்று. 
 


2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>
 

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 1:41:30 AM11/5/13
to பண்புடன்
கட்டுரை சம்மந்தமா பதில் சொல்றதுக்கு நன்றி அண்ணே.

2013/11/5 விழியன் <uman...@gmail.com>

ரமேஷ்,

முதல் விஷயம் அது எழுத்துரு அல்ல. எழுத்துரு என்றால் Font. ஜெமோ ஆனால் சொல்ல வருவது ஸ்கிரிப்ட்.

ஆமா, இதைப் பற்றி நேற்றே பலர் எழுதியிருந்தாங்க.
 

இரண்டாவது விஷயம். குழந்தைகள் மொழியை கற்க சிரம்ப்படுகின்றார்கள் என்பது. சுத்த ஹம்பக். 5 வயதிற்கும் 5 மொழிகளை எளிதாக கற்கலாம். இளம் வயதில் தான் இவர்கள் இன்னும் எளிதாக கற்கலாம். அதற்காக சூழலை அமைத்து தந்தால் போது. புத்தகம், உரையாடல், சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள் வகையறா.

அந்த சூழல் தற்பொழுது நடைமுறையில் இல்லை என அவர் சொல்ல வர்றார். நாம என்னென்ன நினைக்கிறோமோ அதை எல்லாமே நடைமுறைப்படுத்த சாத்தியம். ஆனா அதற்கான முயற்சி ஒவ்வொருவர்கிட்டேயும் இருக்கனும். அது நடைமுறையில் இல்லை என்பதும் உண்மை.

ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி நம்ம குடும்ப சூழ்நிலை வேற இப்ப வேற. 20 வருசத்துக்கு முன்னாடி தமிழ் குடும்பத்தில் ஒருவர் எனக்கு தமிழில் பேச வரும் ஆனா படிக்க வராதுன்னு சொல்ல வாய்ப்பில்லை. ஆனா இப்போ சிறுநகர குடும்பத்தில்கூட அது நடைமுறையாயிக்கிட்டு வருது. இந்த பழக்கம் பிள்ளைகளால் வந்ததல்ல பெற்றோர்களால் வந்தது.
 

மூன்றாவது விஷயம்: தமிழ் பேச தெரியும் ஆனால் படிக்க தெரியாது என்பவர்கள் மொத்தம் எத்தனை சதவிகிதம் பேர் இருப்பார்கள் ? அப்படி அவர்கள் வாசித்தே தீர வேண்டுமெனில் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு மிக எளிதாக டிராண்ஸ்லிட்ரேட் செய்துவிடலாம். அது ரொம்ப எளிமையான செயல். 

அதே அதே.
இப்பவே அந்த தொழில் நுட்பம் நடைமுறையில் இருக்கு.
ஜெயமோகனும் சொல்றது அதுதான். ஆனா, குழந்தைகளுக்கு இந்த நடைமுறையைக் கற்றுக் கொடுக்கனும்னு சொல்றாரு. அம்புட்டுதான்.
 

ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லை. மொழி அழிந்துவிடும் என்பது தேவையற்ற பயம்.

மொழி அழிஞ்சிடும் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனா, தமிழில் படிப்போர் எண்ணிக்கை இப்போ குறைய ஆரமிச்சிருக்கிறது. அதாவது இப்போத்தான் ஆரமிக்கிது.



On Tuesday, November 5, 2013 11:21:40 AM UTC+5:30, Ramesh wrote:
ஜெயமோகனின் எழுத்துரு கட்டுரையைப் பற்றியும் அதன் தேவையைப் பற்றியும் இன்னமும் முழுசா உள்வாங்க முடியல. அல்லது இன்னமும் எனக்கு அது புடிபடல.

ஆனா, எழுத்துரு மாற்றத்துக்கான தேவையின் காரணிகளை அவர் முன்வச்சதும், அந்த கட்டுரைக்கு எதிர்வினை எப்படி இருக்கும் என அவர் எழுதியது 100% உண்மையாகிப்போனது.

இந்த நொடிவரை அவர் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றியோ, அல்லது எழுத்துரு பிரச்சனைக்கு மாற்றாகவோ யாரும் எதையும் முன்வச்சி பேசல. வழக்கம்போல வசைகள் வசைகள்.

சமீபத்துல நீயா நானா நிகழ்ச்சி ஒன்னைப் பார்த்தேன். அதுல சில பிள்ளைகளுக்கு தமிழ் பேச வருமாம் ஆனா எழுத்தைப் படிக்கத் தெரியாதாம். அவங்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைஞ்ச குடும்பத்தில் பிறக்கல, பிறமொழி தேவைக்கான அவசியமும் அவங்களுக்கு இல்லை. நகரங்களில் வாழ்பவர்களும் அல்லர்.

இதுதான் யதார்த்தமா இருக்கு. ஜெயமோகன் புலம்பெயர்ந்த அல்லது வெளிநாட்டு வாழ் தமிழர்களை உதாரணமா வச்சி பேசினாரு. ஆனா உள்ளூர்லையே அந்த நிலமை மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரமிச்சிடிச்சி.

எழுத்துரு விசயத்தில் ஜெயமோகனுக்கு எதிரா பேசுறவங்க இந்த மாதிரியான மாற்றங்களை எப்படி எதிர்கொள்ளனும் அல்லது ஆரோக்கியமான மாற்றுவழி என்னான்னு பேசலாம். எழுத்துரு மாற்றம்தான் ஒரே தீர்வுன்னு ஜெயமோகன் சொல்லல. வேற மாற்றுவழி இல்லாத பட்சத்தில் இதை கையிலெடுக்கலாம்னு சொன்னாரு.

ஜெயமோகனுக்கு கொடிபிடிக்கிறியான்னு பேசாம, தமிழகத்தில் இந்த மாதிரியான (தமிழ் பேச தெரியும் ஆனா படிக்கத் தெரியாது என சொல்லும் குழந்தைகளுக்கு) மாற்றங்களை எப்படி சரிகட்டலாம்னு யாராவது பேசினா நல்லா இருக்கும்.

நான் சொன்ன உதாரணம் இப்போதைக்கு 2%மாவது இருக்கலாம். வருங்காலங்களில் இந்த அளவு அதிகரிக்கலாம்.

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Naresh Kumar

unread,
Nov 5, 2013, 1:46:37 AM11/5/13
to பண்புடன்
கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் பேச வேண்டுமெனில்,

ஆங்கிலத்தையே முதல் பாடமாக படிக்கும், தமிழை பேச மட்டுமே தெரிந்த மாணவர்களுக்கான உத்தியாக இதை முன்வைக்கிறார்! தமிழை இரண்டாம் பாடமாக அல்லது மூன்றாவது பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு இது பிரச்சினையாக மாறுகிறது என்கிறார்!

இந்த யோசனை, தமிழை வளர்க்கவா அல்லது இன்னும் பல தமிழ் புத்தகங்கள் விற்கக் கூடிய அல்லது வாசிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றா?

இரண்டாவது காரணம் என்றால் எப்படி என்பதை விளக்கியிருக்கலாம்? என்னைப் பொறுத்த வரை அதனை ஏற்க முடியவில்லை.

ஆங்கிலத்தில் படித்து, தமிழ் பேசத் தெரிந்தவர்கள், ஆங்கில எழுத்துக்களிலேயே தமிழை எழுதுவதற்கு சிறு வயதிலிருந்து பயிற்சி தேவையா என்ன?

+2 வரை கட்டாயத் தமிழ் படிப்பு...
மிக முக்கியமாக, கவுன்சிலிங்கில் ஒரே மார்க் எடுத்திருப்பவர்களுக்கு, தமிழை படித்தவர்கள், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள், அரசு உதவி பள்ளியில் படித்தவர்கள் என்ற அடுத்தடுத்த வடிகட்டும் முறை இது போன்ற யோசனைகளை இன்னும் அழுத்தமாக பேசாமல், மொத்தமாக புறந்தள்ளுவது போன்ற யோசனையை முன்வைக்கும் போது, அதுவும் தமிழின் முண்னனி எழுத்தாளரே வைக்கும் போது...................... 

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 1:47:38 AM11/5/13
to பண்புடன்
அண்ணே,
நீங்க ஜெயமோகனை எப்பவும் அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பிங்க. அதில் தவறில்லை.

ஆனா ஜெயமோகன் இந்த வரிவடிவ கட்டுரைக்கு முன்வைத்த காரண காரியங்கள் இப்போ நிகழ்காலத்தில் நடைமுறையில் இருக்கு.

பெரும்பாலான புலம்பெயர்ந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் குடும்ப பிள்ளைகளுக்கு தமிழை படிக்கவோ எழுதவோ தெரியாமலிருந்த முறை இப்ப தமிழகத்திலும் பரவ ஆரமிச்சிருக்கிறது. அதைப் பற்றிய உரையாடல் கண்டிப்பாக தேவை. அதை ஜெயமோகன் ஆரமிச்சி வச்சிருக்காருன்னு எனக்கு தோணுது.

அவர் முன்வைக்கிற ஐடியா தவறா இருக்கலாம் அல்லது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால், அதன் தேவை வருங்காலத்தில் கண்டிப்பக இருக்கும் என நம்புகிறேன். அவர் கருத்தை எதிர்ப்பவர்கள், மாற்று ஐடியாவை கொடுத்தால் ஒருவேளை இந்த சிக்கலை எளிதில் தீர்க்கலாம்.

இப்ப பேச வேண்டியது ஜெயமோகன் கருத்தை ஆதரிப்பது/எதிர்ப்பதை அல்ல. மாற்று வழி என்ன என்பதைத்தான். நான் அப்படித்தான் புரிஞ்சிக்கிட்டேன். ஒருவேளை என்னோட புரிதல் தவறா இருக்கலாம்.

2013/11/5 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஏன்னா, பை பேஸ் ஜெயமோகன் ஒரு மலையாளி.. இந்த இனம், மொழி சார்ந்த உணர்வுகள் எப்பவுமே அவருக்கு ஒரு கசப்பு மருந்து தான்... அதும் காமென்வெல்த்,இசைபிரியா என மக்களின் கவனம் இன்னொரு பக்கத்தில் இருக்கும் போது இப்படியோரு கட்டுரை..

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 1:50:02 AM11/5/13
to பண்புடன்
அண்ணே,
தற்போதைய சூழ்நிலையில் 2% மட்டுமே. இனி அது அதிகரிக்கலாம் என்பது என்னோட கணிப்பு. ஏன்னா நம் கல்விமுறை மாறி வருசம் பலவாகுது. தற்போதைய பொருளீட்டும் கல்விமுறையில் இது தவிர்க்க இயலாது.

மேலும் 100% குழந்தைகளுக்கும் இது கட்டாயமல்ல. அட்லீஸ்ட் தமிழ் எழுத/படிக்க தெரியாதவங்களுக்காவது இதை பழக்கலாம். அல்லது இதைவிட நல்ல மாற்று சிந்தனையை முன்வைக்கலாம்.

2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>

சரி , அந்த 2% மக்களை தமிழ் வரிவடிவத்தை படிக்க வைக்க என்ன வழி என யோசிக்க வேண்டுமா? இல்லை 98% மக்களை அந்த 2% மக்களை மாதிரி மாற்ற வேண்டுமா?!!! 

//
/

மோரு

unread,
Nov 5, 2013, 1:50:08 AM11/5/13
to பண்புடன்
​+1

2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>
சரி , அந்த 2% மக்களை தமிழ் வரிவடிவத்தை படிக்க வைக்க என்ன வழி என யோசிக்க வேண்டுமா? இல்லை 98% மக்களை அந்த 2% மக்களை மாதிரி மாற்ற வேண்டுமா?!!! 




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 1:55:21 AM11/5/13
to பண்புடன்

2013/11/5 PRASATH <pras...@gmail.com>

ரமேஷ்...
 
ஒரு குதர்க்கவாதத்திற்கு கேட்கிறேன்... நாளைய தலைமுறைக்கு இரண்டு வரி வடிவங்கள் இருப்பது, அதன் மூலம் படிப்பது தான் பிரச்சினை என்றால் தமிழ் வழி கல்வியில், ஆங்கிலத்தை தமிழ் வரிவடிவத்தில் எழுதிப் பழக அறிவுரை கூறலாமா...

ஏன் கூடாது?. எது எளிதோ அதை கடைபிடிக்கலாம்.
 
 
ஒரு மொழியின் உடலானது பேச்சாக இருக்குமானால், அதன் உயிர் வரி வடிவம். வரி வடிவம் இல்லாத பல மொழிகள் அழிந்து இருக்கிறது. சிதைந்து போய் இருக்கிறது. பிராமி எழுத்துருவை நாம் எப்படி படிக்க இயலாமல் இருக்கிறோமோ அதே போல ஆங்கில வரிவடிவத்தில் தமிழ் கற்கும் குழந்தைகள் தமிழின் பழம்பெரும் நூல்களையும், கருத்துகளையும் கற்க இயலாமல் போகும்.

இப்பவே அப்படிப்பட்ட குழந்தைகள் இருக்காங்க.
அவங்களுக்கு அல்லது அவர்களைப் பிந்தொடர்பவர்களுக்கு என்ன வழி என்பதுதான் பேசுபொருள்.

 
இந்த தமிழ் மொழியை ஆங்கில வரி வடிவத்தில் எழுத தேவையான காரணங்கள் என்ன என பட்டியலிட முடியுமா...

ஒன்னே ஒன்னுதான். தமிழ் பேச முடியும் ஆனா எழுதவோ படிக்கவோ தெரியலைனா என்ன பண்றது.

அடுத்ததா எழுத்துக்களின் எண்ணிக்கை. இது ஒரு பிரச்சனை இல்லை என்பது என் கருத்து.

 
ஒவ்வொரு மொழியையும் அதற்கே உண்டான வரிவடிவத்தில் படிப்பதே அம்மொழியை வளர்க்கும் விதமாக அமையுமே ஒழிய ஒற்றை வரிவடிவத்தில் அனைத்து மொழியையும் அடைப்பது என்பது மொழியை சிதைக்க மட்டுமே செய்யும்.
 
உதாரணத்திற்கு சில வரிகள்.
 
naan nalamaa irukken.
mein badiyaa hoon.
i am good.
nenu baga unnaanu.
valara savukyamaanu.
 
நான் நலமா இருக்கேன்...
மைன் படியா ஹூன்...
ஐ அம் குட்.
நேனு பாக உன்னானு 
வளர சவுக்யமானு.
 
மேலே உள்ளதில் ஒவ்வொரு வரியைப் படிக்கும் பொழுதும் உனக்கு உள்ளூர ஏற்படும் உணர்வு எத்தகையதாக இருக்கிறது என்பதைச் சொல். மேலே பேசலாம். எனது கருத்துகள் ஜெயமோகனைக் குறி வைத்தன்று. 

பிரசாத்,
மறுபடியும் சொல்றேன். இங்க பிரச்சனை தமிழ் சிறந்ததா ஆங்கிலம் சிறந்ததா அல்லது வேறு எந்தமொழி சிறந்ததா என்பதைப் பற்றியதல்ல.

ஒரு தலைமுறை தன்னோட மொழியை படிக்க/எழுத தெரியாமல் வளர்கிறது. அவர்கள்கிட்டேயும் தன்னோட மொழியைக் கொண்டு சேர்க்கனும். அது எளிய வழியாகவும் இருக்கனும். அதுக்கு என்ன செய்யலாம் என்பதே அவரின் கட்டுரையின் நோக்கம்.

அவருக்கு தெரிஞ்ச வழியை அவரு சொல்றாரு. உங்களுக்கு தெரிஞ்ச வழியை நீங்க சொல்லலாம்.

 


/
/

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 2:02:59 AM11/5/13
to பண்புடன்
ஆத்தாடி,
இவருதான் ஜெயமோகன் கட்டுரையை சரியா புரிஞ்சிருக்காரு.  மிக்க நன்றி.

2013/11/5 Naresh Kumar <meet...@gmail.com>

கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் பேச வேண்டுமெனில்,

ஆங்கிலத்தையே முதல் பாடமாக படிக்கும், தமிழை பேச மட்டுமே தெரிந்த மாணவர்களுக்கான உத்தியாக இதை முன்வைக்கிறார்! தமிழை இரண்டாம் பாடமாக அல்லது மூன்றாவது பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு இது பிரச்சினையாக மாறுகிறது என்கிறார்!

100% இதைத்தான் அவரு சொன்னாரு.
 

இந்த யோசனை, தமிழை வளர்க்கவா அல்லது இன்னும் பல தமிழ் புத்தகங்கள் விற்கக் கூடிய அல்லது வாசிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றா?

தமிழை இப்படியெல்லாம் வளர்க்க முடியாது, புத்தகமும் விற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

ஆனா, புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ள அல்லது தனது குழந்தைகளுக்கு தமிழ் புத்தகங்களையும் எளிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைக்கும் பெற்றோருக்கு இது உதவலாம்.


இரண்டாவது காரணம் என்றால் எப்படி என்பதை விளக்கியிருக்கலாம்? என்னைப் பொறுத்த வரை அதனை ஏற்க முடியவில்லை.

ஆங்கிலத்தில் படித்து, தமிழ் பேசத் தெரிந்தவர்கள், ஆங்கில எழுத்துக்களிலேயே தமிழை எழுதுவதற்கு சிறு வயதிலிருந்து பயிற்சி தேவையா என்ன?

+2 வரை கட்டாயத் தமிழ் படிப்பு...
மிக முக்கியமாக, கவுன்சிலிங்கில் ஒரே மார்க் எடுத்திருப்பவர்களுக்கு, தமிழை படித்தவர்கள், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள், அரசு உதவி பள்ளியில் படித்தவர்கள் என்ற அடுத்தடுத்த வடிகட்டும் முறை இது போன்ற யோசனைகளை இன்னும் அழுத்தமாக பேசாமல், மொத்தமாக புறந்தள்ளுவது போன்ற யோசனையை முன்வைக்கும் போது, அதுவும் தமிழின் முண்னனி எழுத்தாளரே வைக்கும் போது...................... 



அதே அதே. இந்த டவுட்டு எனக்கும் இருக்கு.
அதே நேரம், இப்போ இருக்கும் கல்விமுறையில் எனக்கு இந்த சந்தேகமும் உடைஞ்சிடுமோ என்கிற எண்ணம் இருக்கு.

காரணம் ஒன்னே ஒன்னுதான். தமிழ் தெரியாமல், குறைந்தபட்சம் தமிழ் பேச/எழுத தெரியாமல் குழந்தையை வளர்க்க தமிழக பெற்றோர்கள் அதிக பிரயத்தனம் படுகிறார்கள். நாளாக நாளாக இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

ஒருவேளை ஒரு 20 வருசத்துக்கப்புறம் நம்மால் அந்த வித்தியாசத்தை உணர முடியும்.

ப்ரியன்

unread,
Nov 5, 2013, 2:05:11 AM11/5/13
to panb...@googlegroups.com
எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?

தவிர, தமிழ் வரிவடிவத்தை படிக்க தெரியாதவர்களை எப்படி படிக்க வைப்பது என யோசிப்பது நல்ல செயலா? இல்லை , அதற்காக தமிழின் வரிவடிவத்தை மொத்தமாக தங்கிலீஷ் க்கு மாற்றுவது நல்ல செயலா?

அப்படி மாற்றி விட்டால் , எதிர்காலத்தில் பழைய புத்தகங்களை எப்படி படிப்பார்கள்? 

ஆங்கில வரிவடிவத்தை வரித்துக் கொண்டால் , அப்படியே ஆங்கில கலப்புக்கு எளிதாகி நாளை மொத்தமாக தமிழே இல்லாமல் போகாதா?

யாரோ முகம் தெரியாத ஒருவர் இந்த கருத்தை சொல்வது என்பது வேறு , இலக்கிய சூழலில் நன்கு அறியப்படவர் ஒருவர் இதை முன் வைப்பது என்பது வேறு..எத்தனை அபத்தமான ஒன்றை சொல்கிறோம் யோசித்துதான் சொன்னாரா?

ஸ் பெ அரசியல் காரணங்களை சொல்லி இருந்தார்...அது அவரது கருத்து...ஆனால் , தி ஹிந்து வுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பது உண்மை. அதே சமயம் இப்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி நன்றாக வேலை செய்கிறது என்பதால் வேண்டுமென்றே கூட இது எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்கவும் தோன்றுகிறது..

கடைசியாக , வினையூக்கியின் எதிர்வினை கட்டுரை பண்புடனில் இருக்கிறது. அதையும் இதுவரை படிக்கவில்லை என்றால் படித்துவிடு.

On Tuesday, 5 November 2013 12:20:02 UTC+5:30, Ramesh wrote:
\

PRASATH

unread,
Nov 5, 2013, 2:11:27 AM11/5/13
to Groups
தமிழகத்தில் தமிழ் பேசத் தெரியும், ஆனால் படிக்க எழுதத் தெரியாது இருக்கும் குழந்தைகள் அதிகமாகும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என கேட்கிறாய்...
 
நீ சொன்ன விதமாக குழந்தைகள் வளர காரணம் என்ன என முதலில் பட்டியலிடலாமா...
 
1. தமிழைத் தாய்மொழியாக கொண்டிராமல் தமிழகத்தில் பிழைக்க வந்தவர்கள், தமிழகத்தில் பிற மக்களுடன் பழகுவதற்குத் தமிழ் தேவை என்று பேச்சுத் தமிழை கற்றுக் கொண்டு, தனது பிள்ளைகளுக்கும் பேசக் கற்று கொடுத்து, அவர்களது படிப்பை ஆங்கில வழிக் கல்வியாகவும், இரண்டாவது மொழிப்பாடமாக பிற மொழிகளுள் ஏதேனும் ஒன்றைக் கற்க வைப்பதும் முதலாவதாக வந்து நிற்கிறது.
 
இவர்களை விட்டு விடலாம். இவர்களுக்குத் தாய் மொழி தமிழ் அல்ல. தமிழகத்தில் வாழ்வதற்கு மட்டுமே தமிழ் தேவை என விரும்புபவர்கள் இவர்கள். இவர்களுக்காக வரிவடிவம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்வதில் எந்த பிழையும் இல்லை என நான் நினைக்கிறேன். உனது கருத்து என்ன?
 
2. தமிழைத் தாய்மொழியாக கொண்டிருப்பவர்கள், தங்களது குழந்தைகளை அறிஞனாக்கவும், அதிக மதிப்பெண்கள் பெற்று நல்ல நிலைக்குச் செல்லவும் ஆங்கில வழிக் கல்வியும், எளிதில் மதிப்பெண்களை வாரி வழங்கும் பிற மொழிப்பாடம் ஏதேனும் ஒன்றை இரண்டாம் மொழியாகவும் கொண்டிருந்தால் சாத்தியம் என நினைக்கும் பெற்றோர்கள் தமிழை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துவது மற்றும் தங்கள் குழந்தைகளை தமிழைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்த வைப்பது.
 
இவர்கள் நாளுக்கு நாள் அதிகமாவது தான் பிரச்சினையின் ஆணி வேர்.
 
இதனைக் களையவே தமிழுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவம் எனச் சொன்னால், அது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதற்குச் சமானம்.
 
மேற்கத்திய மொழிகளில் இருக்கும் பலதரப்பட்ட விஷயங்களையும் தமிழில் கொண்டு வரல் அவசியம். தமிழின் மரபைப் போற்றிப் பாதுகாக்கும் அதே வேளையில் நவீன யுகத்திற்கு தேவையான கலைச்சொற்களை தமிழில் உருவாக்கி அதனை பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதை எல்லாம் விட முக்கியம்,
 
தமிழ் வழிக் கல்வி வாயிலாக படிக்கும் ஒருவனால், ஆங்கில வழிக் கல்வி வாயிலாக படிக்கும் ஒருவனுக்கு ஈடாக ஆற்றல் மிக்கவனாக வலம் வரச் செய்ய இயலும் என்கிற சூழ்நிலையை தமிழ் வழிக் கல்வி திட்டத்தில் உருவாக்க வேண்டும். அதற்கான முனைப்பை அரசும், பள்ளிகளும் கூட்டு முயற்சியால் கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பெற்றோர்களும் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.
 
இன்று என்னைப் போல பலர், தமிழை பனிரெண்டாம் வகுப்பு வரை முதல் மொழியாகக் கொண்டு படித்து முடித்து விட்டு பொறியியலிலும், மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும் நல்ல நிலைக்கு வரவில்லையா...
 
இன்னும் சொல்லப் போனால், தமிழ் மீது ஆர்வம் இன்றைய தலைமுறை பெற்றோருக்கு அதிகம் இருக்கிறது. தமிழை ஆங்கிலத்திற்கு ஈடாக முன்னேற்றும் முயற்சியில் அரசும் பள்ளிகளும் ஈடுபட்டால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழிக் கல்வி கற்க அனுப்புவதற்குத் தயாராகவே உள்ளனர்.
 
தமிழ் மொழியைத் தாய் மொழியாக உள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. அது தனது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைப் பேச கற்றுக் கொடுப்பதோடு எழுதவும் கற்றுக் கொடுப்பது.
 
இது பெற்றோர், அரசாங்கம், பள்ளிக்கூடம் என மூன்று தரப்பில் இருந்து முன்னெடுக்க வேண்டிய முயற்சி.
 
***************************************************************************************************
 
//ஒரு தலைமுறை தன்னோட மொழியை படிக்க/எழுத தெரியாமல் வளர்கிறது. அவர்கள்கிட்டேயும் தன்னோட மொழியைக் கொண்டு சேர்க்கனும். அது எளிய வழியாகவும் இருக்கனும். அதுக்கு என்ன செய்யலாம் என்பதே அவரின் கட்டுரையின் நோக்கம்.//
 
இதுதான் நோக்கமா...:))
 
தமிழ் மொழியை படிக்க எழுதத் தெரியலைன்னா அதைக் கற்றுக் கொடுக்க என்ன செய்யலாம்னு யோசிக்கச் சொன்னா ஏன் விவாதம் செய்யப் போறோம். அதைக் கத்துக் கொடுக்க ஆங்கில எழுத்துருவில் தமிழுக்கு வரிவடிவம் கொடுக்கலாம் எனச் சொல்வதால் தமிழ் மொழியை படிக்க/எழுதத் தெரிந்த தலைமுறையாகி விடுமா...
 
AMMA என படிக்க எழுதத் தெரிந்த தலைமுறை அம்மா என்பதைப் படிக்க எழுதத் தெரியாமல் போகும் என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள் . Mother, Mummy இதனைப் போன்று AMMA என்பதும் ஆகுமே அல்லாமல் இதனால் எப்படி தமிழைக் கற்றுக் கொண்டதாகும்.
 
கலை, களை இரண்டுக்கும் kalai எனத் தட்டச்ச தெரிந்தால் அவன் தமிழ் படிக்க எழுதத் தெரிந்தவனாகி விடுவானா...
 
எந்த இடத்தில் எந்த சொல் வர வேண்டும் என அறியாமல் இதுபோன்று தமிழுக்கு ஆங்கில வரிவடிவம் கொடுப்பது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்குமே ஒழிய தீர்வாகாது என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
 
- நேரம் கிடைக்கையில் தொடர்கிறேன்...
 


2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>
--

PRASATH

unread,
Nov 5, 2013, 2:13:38 AM11/5/13
to Groups
+1

2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>
எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?

Naresh Kumar

unread,
Nov 5, 2013, 2:16:10 AM11/5/13
to பண்புடன்
//ஆனா, புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ள அல்லது தனது குழந்தைகளுக்கு தமிழ் புத்தகங்களையும் எளிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைக்கும் பெற்றோருக்கு இது உதவலாம்.//

இதை என்னால் ஏற்க முடியவில்லை! பாதி ஆங்கிலம் தெரிந்தவர்களே பயணத்தில் ஆங்கில புத்தகங்களையே கொண்டு செல்கிறார்கள். காரணம் பிரசாத் சொன்ன காரணங்களோடு சேர்த்து ஸ்டைல், ஷோ வும் அடங்கும்! அப்புறம் தங்கிலீஸ் புத்தகக்ங்களை எப்படி தேடுவார்கள்?

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 2:17:13 AM11/5/13
to பண்புடன்
2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>
எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?

ஜெயமோகன் முன்வைக்கும் தீர்வை “தங்லீஸ்” என்றுதான் நானும் புரிஞ்சிக்கிட்டேன்.

அந்த தங்லீஸை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்ல வர்றதா அல்லது முறைப்படுத்தினா நல்லா இருக்கும் என நான் நம்புறேன்.

உதாரணத்திற்கு “இந்த” என்று எழுதுவதை "Intha, entha" என்றும் எழுதுவோர் பலர் உண்டு. அதை எது சரியென்று  முறைப்படுத்தலாம். முறைப்படுத்தப்பட்ட தங்லீஸை வேண்டும் என்போர் பயன்படுத்தலாம். கட்டாயமுறை அவசியமற்றது.


தவிர, தமிழ் வரிவடிவத்தை படிக்க தெரியாதவர்களை எப்படி படிக்க வைப்பது என யோசிப்பது நல்ல செயலா? இல்லை , அதற்காக தமிழின் வரிவடிவத்தை மொத்தமாக தங்கிலீஷ் க்கு மாற்றுவது நல்ல செயலா?

கண்டிப்பாக நல்ல செயல் இல்லை என்பது தற்போதைய கருத்து. அதற்கு மாற்றாக வேறு எதை முன்வைத்தாலும் யாரும் தடுக்கப்போவதில்லை.
 

அப்படி மாற்றி விட்டால் , எதிர்காலத்தில் பழைய புத்தகங்களை எப்படி படிப்பார்கள்? 

கண்டிப்பாக முடியாதுதான். ஆனா மொழிபெயர்புக்கு வாய்ப்புள்ளது.
 

ஆங்கில வரிவடிவத்தை வரித்துக் கொண்டால் , அப்படியே ஆங்கில கலப்புக்கு எளிதாகி நாளை மொத்தமாக தமிழே இல்லாமல் போகாதா?

தமிழில் படிப்போர் இருக்கும்வரை அழியாது.
 

யாரோ முகம் தெரியாத ஒருவர் இந்த கருத்தை சொல்வது என்பது வேறு , இலக்கிய சூழலில் நன்கு அறியப்படவர் ஒருவர் இதை முன் வைப்பது என்பது வேறு..எத்தனை அபத்தமான ஒன்றை சொல்கிறோம் யோசித்துதான் சொன்னாரா?

அவர் அவருக்கு தெரிஞ்ச தீர்வை முன்வச்சிருக்கார். இதைவிட சிறந்த தீர்வு வேரொருவர்கிட்ட இருந்தா அதை ஏத்துக்கப்போரார். ஜெயமோகனின் திர்வு சரியில்லை என்றாலும், இது இப்போ பேசப்படவேண்டிய ஒன்றே.
 

ஸ் பெ அரசியல் காரணங்களை சொல்லி இருந்தார்...அது அவரது கருத்து...ஆனால் , தி ஹிந்து வுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பது உண்மை. அதே சமயம் இப்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி நன்றாக வேலை செய்கிறது என்பதால் வேண்டுமென்றே கூட இது எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்கவும் தோன்றுகிறது..

இருக்கலாம்.
 
கடைசியாக , வினையூக்கியின் எதிர்வினை கட்டுரை பண்புடனில் இருக்கிறது. அதையும் இதுவரை படிக்கவில்லை என்றால் படித்துவிடு.

எல்லாத்தையும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா நான் எதிர்பார்ப்பது மாற்று தீர்வைத்தான். வசவுகளையோ, கிண்டல்களையோ அல்லது யதார்த்ததை மிஞ்சும் கற்பனையையோ அல்ல.
 

C.M உதயன்

unread,
Nov 5, 2013, 2:28:45 AM11/5/13
to பண்புடன்

தமிழை இரண்டாம் மொழியாக தேர்ந்து எடுத்து படிக்கும் நபர்களுக்கு தமிழ் வளர எந்த அளவு உபயோகமாக இருக்க போகிறார்கள். அவன் தமிழ் படிச்ச என்ன படிக்காவிட்டால் என்ன.  தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்படுறவன் எங்க இருந்தாலும் வந்து கற்றுக்கொண்டு படிக்கப்போறான்,

பொருளதார ரீதியாக தன்னிறைவு பெற ஆங்கில கல்வி அவசியம் இருக்கு இங்கு பணம் பிரதானமா இருக்கு அதனால்  ஆங்கிலம் படிக்கிறான், நமக்கு வேலைகளை தரும் அமெரிக்காவும் மற்ற நாடுகளுக்காகவும் அவன் அவன் மொழியை படிக்கிறான் அதாவது முதலாளிக்கு தெரிந்த மொழியை, இங்கு நாம் தான் முதலாளியை உருவாக்குவது இல்லையே.

மொழி வளர பொருளாதாரமும் அவசியம்.

அதற்க்கு தீர்வு காண சொல்லுங்கள் இரண்டாம் மொழியாக படித்தவன் கூட தாய் மொழிக்கு மாறுவான்.



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

ப்ரியன்

unread,
Nov 5, 2013, 2:30:37 AM11/5/13
to panb...@googlegroups.com


On Tuesday, 5 November 2013 12:47:13 UTC+5:30, Ramesh wrote:

2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>
எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?

ஜெயமோகன் முன்வைக்கும் தீர்வை “தங்லீஸ்” என்றுதான் நானும் புரிஞ்சிக்கிட்டேன்.

அந்த தங்லீஸை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்ல வர்றதா அல்லது முறைப்படுத்தினா நல்லா இருக்கும் என நான் நம்புறேன்.

உதாரணத்திற்கு “இந்த” என்று எழுதுவதை "Intha, entha" என்றும் எழுதுவோர் பலர் உண்டு. அதை எது சரியென்று  முறைப்படுத்தலாம். முறைப்படுத்தப்பட்ட தங்லீஸை வேண்டும் என்போர் பயன்படுத்தலாம். கட்டாயமுறை அவசியமற்றது.


அந்த கட்டுரையை மறுபடியும் படிச்சு பார் , தங்லீஷை முறைப்படுத்த வேண்டும் என்றா சொல்கிறார்?! அப்படி சொல்லித் தொலைத்திருந்தால் இந்த அளவுக்கு விவாதமே வந்திருக்காதே?!
 

தவிர, தமிழ் வரிவடிவத்தை படிக்க தெரியாதவர்களை எப்படி படிக்க வைப்பது என யோசிப்பது நல்ல செயலா? இல்லை , அதற்காக தமிழின் வரிவடிவத்தை மொத்தமாக தங்கிலீஷ் க்கு மாற்றுவது நல்ல செயலா?

கண்டிப்பாக நல்ல செயல் இல்லை என்பது தற்போதைய கருத்து. அதற்கு மாற்றாக வேறு எதை முன்வைத்தாலும் யாரும் தடுக்கப்போவதில்லை.
 

அப்படி மாற்றி விட்டால் , எதிர்காலத்தில் பழைய புத்தகங்களை எப்படி படிப்பார்கள்? 

கண்டிப்பாக முடியாதுதான். ஆனா மொழிபெயர்புக்கு வாய்ப்புள்ளது.

பழைய புத்தகங்களை படிக்க முடியாது என்கிற போது தமிழின் பழைய இலக்கியங்கள் அழிந்து போகாதா? அது தமிழின் அழிவில்லையா?

தங்லீஷ்க்கு மாறினால் மொழிபெயர்ப்பு அதிகரிக்குமா? எப்படி? 

 

ஆங்கில வரிவடிவத்தை வரித்துக் கொண்டால் , அப்படியே ஆங்கில கலப்புக்கு எளிதாகி நாளை மொத்தமாக தமிழே இல்லாமல் போகாதா?

தமிழில் படிப்போர் இருக்கும்வரை அழியாது.
 

தமிழையே ஆங்கிலத்தில் படிக்கும்போது , தமிழ் எப்படி அழியாமல் போகும்? 
 

யாரோ முகம் தெரியாத ஒருவர் இந்த கருத்தை சொல்வது என்பது வேறு , இலக்கிய சூழலில் நன்கு அறியப்படவர் ஒருவர் இதை முன் வைப்பது என்பது வேறு..எத்தனை அபத்தமான ஒன்றை சொல்கிறோம் யோசித்துதான் சொன்னாரா?

அவர் அவருக்கு தெரிஞ்ச தீர்வை முன்வச்சிருக்கார். இதைவிட சிறந்த தீர்வு வேரொருவர்கிட்ட இருந்தா அதை ஏத்துக்கப்போரார். ஜெயமோகனின் திர்வு சரியில்லை என்றாலும், இது இப்போ பேசப்படவேண்டிய ஒன்றே.
 

ஸ் பெ அரசியல் காரணங்களை சொல்லி இருந்தார்...அது அவரது கருத்து...ஆனால் , தி ஹிந்து வுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பது உண்மை. அதே சமயம் இப்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி நன்றாக வேலை செய்கிறது என்பதால் வேண்டுமென்றே கூட இது எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்கவும் தோன்றுகிறது..

இருக்கலாம்.
 

கடைசியாக , வினையூக்கியின் எதிர்வினை கட்டுரை பண்புடனில் இருக்கிறது. அதையும் இதுவரை படிக்கவில்லை என்றால் படித்துவிடு.

எல்லாத்தையும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா நான் எதிர்பார்ப்பது மாற்று தீர்வைத்தான். வசவுகளையோ, கிண்டல்களையோ அல்லது யதார்த்ததை மிஞ்சும் கற்பனையையோ அல்ல.
 

யதார்த்ததை மிஞ்சும் கற்பனையை செய்தது ஜெமோ வா? இல்லை அந்த கருத்தை எதிர்ப்பவர்களா? 


 

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 3:02:30 AM11/5/13
to பண்புடன்
ப்ரசாத்,
தாமதமான பதிலுக்கு மாப்பு. ஆஃபிஸ்ல இன்னைக்கு கொஞ்சம் ஆணி வந்துடிச்சி.

நீங்க சொன்ன 2 காரணமும் இந்த பிரச்சனைக்குள் அடங்காது. நான் சொல்ல வர்றது 3வது காரணத்தைப் பற்றி.

அதாவது,
1. தமிழ் நாட்டிலுள்ள பிற மாநிலத்தவருக்கான தமிழ்.
2. மதிப்பெண்ணுக்காக பிற மொழியை தேர்ந்தெடுப்பவருக்கான தமிழ்.
3. வேலை மற்றும் பொருளாதார காரணத்திற்காக ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்து தமிழை கைவிடுவது.

நான் பெரும்பாலும் பேசுவது மூன்றாவது நபருக்காக மட்டுமே.

ஒரு எளிய உதாரணம் மூலம் சொல்ல முயற்சிக்கிறேன்.

பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுல வேலை பார்க்குறவங்களூக்கு தன் பிறந்த இடம், மொழிமீது அதிக பற்றும் ஆர்வமும் இருக்கும். ஆனா அதை தங்கள் குழந்தைகள்கிட்ட கொண்டு சேர்க்கவே முடியாது. ஏன்னா பெற்றோர் மனநிலை மற்றும் குழந்தைகள் மனநிலை வேறு என்பதைவிட குழந்தைகள் வளரும் சூழ்நிலை முற்றிலும் வேறு.

ஆனா, பேச்சுத்தமிழை அவர்கள்கிட்ட மிக எளிதாக கொண்டு போயிடலாம் பெற்றோரின் முயற்சியால்.

இப்போ மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நம்ம தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. மெட்ரிக் பள்ளியில் தமிழ் பேசவோ/எழுதவோ கூடாது என்ற நடைமுறை வந்தபின் இது அதிவேகமாக பரவத்துவங்கியது (சமச்சீர் கல்விமுறையால் இது தடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்). நாள்பட இந்த எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.

தமிழில் எழுதத்தெரியாதவங்க தமிழ் மட்டும் தெரிஞ்சவங்கக்கிட்ட தங்லீஸ்லதான் உரையாடுறாங்க. தமிழ் எழுதத்தெரியாதவங்கக்கிட்ட தமிழை கொண்டு போக ஒரே ”எளிய” வழி தங்லீஸ்தான். வரும்காலங்களில் தங்லீஸின் எண்ணிக்கை அதிகரிக்குமென்பதால், அதை முறைப்படுத்தலாம்னு ஜெ.மோ தன்னோட கருத்தாக வைக்கிறார்னு நினைக்கிறேன்.

மேலும் இதே கல்விமுறை தொடரும்போது, தமிழ் எழுதும் பழக்கம் குறுகி, வேறொரு தீர்வு இல்லாத பட்சத்தில் தங்லீஸே ஒரே தீர்வாக இருக்கும். அல்லது தங்லீஸை தவிர்க்க வேற எதாவது தீர்வு இருந்தா சொல்லுங்கன்னு அவர் கேக்குறாரு. யாரும் சொல்லலாம்.

2013/11/5 PRASATH <pras...@gmail.com>

தமிழகத்தில் தமிழ் பேசத் தெரியும், ஆனால் படிக்க எழுதத் தெரியாது இருக்கும் குழந்தைகள் அதிகமாகும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என கேட்கிறாய்...

//
/

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 3:08:16 AM11/5/13
to பண்புடன்
ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கலாம். ஆனா தமிழுக்கு இல்லைனு சொல்ல முடியாது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பலர் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க முயற்சித்து தோற்றிருக்கிறார்கள். நம்ம குழுமத்திலே அதற்கு பல உதாரணங்கள் இருக்கலாம். காரணம் குழந்தைகள் வளரும் சூழ்நிலை வேறு. ஆனா அனைவரும் வீட்டுல பேசுறது தமிழ்தான்.

தமிழ்நாட்டிலும் இது நடைமுறைக்கு வந்ததுதான் நம்ப முடியாத ஆச்சரியம். ஆனா புற்றீசல்போல அந்த நடைமுறை ஆங்காங்கே பரவத்துவங்கிவிட்டது. குழந்தைகள் ஒருகட்டத்தில் வளர்ந்தபின் தமிழை திணிப்பது மிக மிக கடினம்.

ஒட்டுமொத்தமாக பெற்றோரின்மேல் குற்றத்தை சுமத்திடமுடியாது. நம்ம கல்விமுறைக்கும், தற்பொழுதைய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதரச் சூழலே அந்த முடிவுக்கு அவர்களைத் தள்ளுகிறது.


2013/11/5 Naresh Kumar <meet...@gmail.com>
இதை என்னால் ஏற்க முடியவில்லை! பாதி ஆங்கிலம் தெரிந்தவர்களே பயணத்தில் ஆங்கில புத்தகங்களையே கொண்டு செல்கிறார்கள். காரணம் பிரசாத் சொன்ன காரணங்களோடு சேர்த்து ஸ்டைல், ஷோ வும் அடங்கும்! அப்புறம் தங்கிலீஸ் புத்தகக்ங்களை எப்படி தேடுவார்கள்?

//
/

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 3:24:25 AM11/5/13
to பண்புடன்

2013/11/5 C.M உதயன் <udhay...@gmail.com>

தமிழை இரண்டாம் மொழியாக தேர்ந்து எடுத்து படிக்கும் நபர்களுக்கு தமிழ் வளர எந்த அளவு உபயோகமாக இருக்க போகிறார்கள். அவன் தமிழ் படிச்ச என்ன படிக்காவிட்டால் என்ன.  தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்படுறவன் எங்க இருந்தாலும் வந்து கற்றுக்கொண்டு படிக்கப்போறான்,

உதயன்,
குழந்தைகள் மொழியை தேர்வுசெய்வதில்லை. கல்வி, மொழி, இன்னபிற இத்தியாதிகளையும் பெற்றோர்தான் தீர்மானிக்கிறாங்க.

குழந்தைகள் சுயமாக முடிவெடுக்கும் சூழ்நிலையில், தமிழை கற்பது அவ்வளவு சுலோபமல்ல.

இந்தி பேச தெரிஞ்ச பலரை இந்தில படி/எழுதுன்னு சொன்னா எப்படி முழிப்பானோ அப்படிதான் முழிப்பாங்க.
 

பொருளதார ரீதியாக தன்னிறைவு பெற ஆங்கில கல்வி அவசியம் இருக்கு இங்கு பணம் பிரதானமா இருக்கு அதனால்  ஆங்கிலம் படிக்கிறான், நமக்கு வேலைகளை தரும் அமெரிக்காவும் மற்ற நாடுகளுக்காகவும் அவன் அவன் மொழியை படிக்கிறான் அதாவது முதலாளிக்கு தெரிந்த மொழியை, இங்கு நாம் தான் முதலாளியை உருவாக்குவது இல்லையே.

உதயன்,
இதை தவிர்க்க முடியாது.
இப்போ குழந்தைக்கு தமிழ் தெரியாமல் வளர்க்கும் பல பெற்றோர்கள் தங்களது தலைமுறையில் முதல் முதலாக கல்வியைப் பெற்றவர்கள். ஒரேடியாக அவர்களை குற்றம் சொல்றதிலோ அல்லது மட்டம் தட்டுறதிலோ அர்த்தமில்லை.

இங்கே பேசும் பலர்கூட தமிழ்வழி கல்வியை தேர்ந்தெடுக்கவில்லை தம் தமது குழந்தைகளுக்கு. இவர்களின் அடுத்த தலைமுறை எப்படி வளரும் என்றும் நம்மால் யூகிக்க முடியாது.

எது சோறு போடுமோ அதைநோக்கிதான் நாம் நகர்வோம். பொருளாதரத்தில் தன்னிறைவு அடைந்தவர்கள் வேணும்னா, குழந்தையை தமிழுக்காக தத்துகொடுப்பார்கள்.

மேலும், ஜெ.மோ சொல்ல வருவது, அப்படி தமிழிலிருந்து விடுபட்டுபோகும் தலைமுறையை தமிழுக்கு மீண்டும் எளிய முறையில் இழுப்பது எப்படி என்பதைப் பற்றிதான். ஜெ.மோ தீர்வு சரியில்லைனா, வேற என்ன தீர்வு இருக்கு என்பதைப் பற்றி பேசினா சரியா இருக்கும்.
 

மொழி வளர பொருளாதாரமும் அவசியம்.

அதற்க்கு தீர்வு காண சொல்லுங்கள் இரண்டாம் மொழியாக படித்தவன் கூட தாய் மொழிக்கு மாறுவான்.

அதே அதே.

C.M உதயன்

unread,
Nov 5, 2013, 4:26:14 AM11/5/13
to பண்புடன்
ரமேஷ்
குழந்தைகள் மொழியை தேர்வு செய்யவில்லை 100% சரி.

இதற்க்கு இது தான் தீர்வு என்று நாம் ஒரு கட்டுரையில் முடித்து விட முடியாது.

அழிந்து போன மொழிகளின் வரலாற்றை பார்க்க வேண்டும். பொருளதார ரீதியாக உயர்ந்து இருக்கும் நாடுகளின் மொழிகளையும் அதிகம் படிக்கின்றனர், மேலும் எளிதாக கற்று அதிக மதிப்பெண் வாங்குவதற்க்கும் படிக்கின்றனர். மதிப்பெண்க்காக மொழியை படித்தவன் அந்த மொழியே அவனுக்கு சரளமாக வருகிறது.

இப்ப நம்ம கிட்ட இருக்கும் சிஸ்டமே மதிப்பெண் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும்.

அதிகப்படியான முதலாளிகளை உருவாக்க வேண்டும், பொருளாதார ரீதியாக நாம் உயர்ந்து நம் முதலாளிகளிடம்  வேலை கேட்டு வரும் வரை நாள் வரை இந்த பிரச்சனை இருக்க தான் செய்யும்.

ஆங்கிலம் மொழி பாடத்திட்டம் எடுத்து படிக்கும் நபர்களுக்கு ஏன் நம் மொழி சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்த கூடாது, ஏதோ ஒரு நாட்டில் எங்கோ நடந்த ஊரில் ஒட்டை அடைப்பதை பற்றி நான் Essay எழுதினேன் பத்தாம் வகுப்பில் அதே நம் ஊரில் நடந்ததை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டி தானே ஆங்கில பாடத்திட்டத்தில்.

வெள்ளை தோலும் பகட்டுத்தனமான வாழ்க்கையும் நுனி நாக்கு ஆங்கிலமும் சிறந்தது என்று எண்ணுபவர்களுக்கு ஏன் எழுத்தின் வடிவத்தையே மாற்றுகிறிர்கள் அவன் தமிழ் பேசி என்ன ஆக போகுது. அவனால் தமிழ் இலக்கியம் வளர போகுதா? இவர்கள் நாளை தமிழகம் முழுக்க இருக்க போகிறார்கள் அவர்களுக்கு இது போல மாற்று ஏற்பாடாக ஆங்கில வடிவ எழுத்துகளை உருவாக்கி வைத்தால் புத்தகம் விற்க்கும் என்ற எண்ணமா?

ஆங்கிலமே முதன்மை பாடமாக படித்தாலும் என் ஊர் என் நாடு என் மொழி என் இலக்கியம் என்ற எண்ணத்தை உண்டு பண்ணாமல் மொழியின் வடிவத்தையே மாற்றினால் மட்டும் தீர்வு கிடைக்குமா?

மொழிக்கான அடையாளத்தை அழிக்கும் செயல் இது. இதை அவ்வளவு இலகுவாக சொல்லிட்டார்.








2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 4:29:14 AM11/5/13
to பண்புடன்
2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>
அந்த கட்டுரையை மறுபடியும் படிச்சு பார் , தங்லீஷை முறைப்படுத்த வேண்டும் என்றா சொல்கிறார்?! அப்படி சொல்லித் தொலைத்திருந்தால் இந்த அளவுக்கு விவாதமே வந்திருக்காதே?!

ரைட்டு.
அப்போ என்னோட புரிதல் தவறு. 

பழைய புத்தகங்களை படிக்க முடியாது என்கிற போது தமிழின் பழைய இலக்கியங்கள் அழிந்து போகாதா? அது தமிழின் அழிவில்லையா?

தங்லீஷ்க்கு மாறினால் மொழிபெயர்ப்பு அதிகரிக்குமா? எப்படி? 

ஓலைச்சுவடி எப்படி இப்ப நடைமுறைத் தமிழுக்கு வந்ததோ அந்த மாதிரின்னு வச்சிக்கொங்களேன்.

எனக்கு தெரிஞ்சவரை பல அரக்கட்டளைகள் ப்ராமி எழுத்துக்களையும் வட்டெழுத்துக்களையும் நடைமுறைத் தமிழுக்கு மாற்றியதாய் ஞாபகம். தேவையின் கருதி.

அதே மாதிரி எது தேவையோ அது மொழிபெயர்க்கப்படலாம்.

ஆனால், தமிழ் முற்றிலும் அழிந்துவிடும், எல்லாம் தங்லீஸா மாறிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

இன்னும் 50 ஆண்டுக்குள் ஒருவேளை நம் வாழ்கைமுறை மாறலாம், கல்வி & பொருளாதாரக் கொள்கைகளும் மாறலாம். அது மாறினாலே எல்லாமே யூடர்ன் போட வேண்டியிருக்கும். 

தமிழையே ஆங்கிலத்தில் படிக்கும்போது , தமிழ் எப்படி அழியாமல் போகும்? 

முதலிலே சொன்னேன். எதுவும் கட்டாய மொழியல்ல என்று.
அதனால எல்லாம் தலைகீழாக மாறும் என்று நம்பவில்லை.
அந்தந்த காலச் சூழலின் தேவைக்கேற்ப, மொழி மாறும். இப்ப தங்லீஸின் தேவை இருக்கலாம். அது முறைப்படுத்தப்படலாம். அல்லது இதற்கு மாற்றுத் தீர்வாக வேறொன்றை யாராவது முன்வைத்தால், அதை தொடர வாய்ப்பிருக்குது. செய்கிறது என்பதால் வேண்டுமென்றே கூட இது எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்கவும் தோன்றுகிறது..
 

யதார்த்ததை மிஞ்சும் கற்பனையை செய்தது ஜெமோ வா? இல்லை அந்த கருத்தை எதிர்ப்பவர்களா? 



தமிழ் அழிஞ்சி போயிடும் என்று சொல்பவர்கள் யதார்த்தத்தை மிஞ்சும் கற்பனைவாதிகள். அது ஜெ.மோக்கும் பொருந்தும்.

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 4:39:35 AM11/5/13
to பண்புடன்
உதயன்,
நீங்க சொல்லியிருக்கிறதெல்லாம் கல்வி மற்றும் பொருளாதார மாற்றம்.

இதை அவ்வளவு எளிதில் மாற்றிட முடியாது. அதற்கான தேவை வரணும்.

தற்போதைய தேவை பணம். அதுவும் கல்வி பயிலும் முதலாம் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறைக்கு பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனை. பெற்றோர்களின் முழுக் கவனமும் அதில்தான் இருக்கும். நம்ம பேசுற பல விசயங்கள் அவங்களுக்கு புரிஞ்சிருந்தாலும், அதிலிருந்து அவங்களால பின்வாங்க முடியாது.

பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைஞ்சவங்க மட்டும்தான் வாழ்கை கல்வி, மொழி வளர்ப்பு இன்னபிற இத்தியாதின்னு பேசுவாங்க. இந்த பேச்சு முடிவுக்கு வர்றதுக்குள்ள பல தலைமுறை தமிழிலிருந்து அந்நியப்பட்டு போயிருக்கும்.

அப்படி போயிடாம அவங்களை இணைக்கும் பாலமாக தங்கலீஸ் இருக்கலாம். அல்லது வேறொரு தீர்வு இருக்கலாம். ஆனால் வெறுமனே கல்வி/ பொருளாதார மாற்றத்தைப் பற்றி மட்டும் பேசுவோமேயானால், நாம இன்னும் யதார்த்ததை சரியா புரிஞ்சிக்கலைன்னு அர்த்தம்.

ஆங்கில கல்வித்திட்டம் வரும்போது இப்படித்தான் பலர் பேசினார்கள். இப்போ கிட்டதட்ட அனைத்து ஊர்களிலும் ஆங்கில கல்வி வந்துவிட்டது. இப்போ தமிழ் புறக்கணிப்பு தொடங்கியிருக்கு வேலைவாய்ப்பு/பொருளாதார காரணத்தை முன்வைத்து. இதுவும் விரிவடையலாம்.

அதனால, அதை சமன் செய்யும் பொருட்டு எதையாவது ஒரு தீர்வை முன்வைக்கனும். ஜெ.மோ அவருக்கு தெரிஞ்சத சொல்லிருக்காரு.

2013/11/5 C.M உதயன் <udhay...@gmail.com>

இதற்க்கு இது தான் தீர்வு என்று நாம் ஒரு கட்டுரையில் முடித்து விட முடியாது.

//

C.M உதயன்

unread,
Nov 5, 2013, 5:08:16 AM11/5/13
to பண்புடன்
The Hindu வை தமிழ்படுத்தி தி இந்து என்ற வார்த்தைக்கு சப்பைக்கட்டு கட்ட அந்த பத்திரைக்கை அவரை எழுத வச்சு இருக்கு என்று நினைக்கிறேன்.

கால மாற்றம் மற்றும் தேவையை பொருத்து பிராமியில் வட்டெழுத்து இப்ப இருக்கும் வடிவம் வரை மாறி வந்துருக்கு, இப்ப இருக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டு இதை நிலைக்க வைக்கலாம் பல காலத்துக்கு.

இங்கே நாம் பேசி வரும் ஆங்கில மோகமக்களை தமிழின் அவசியத்தை புரிய வைக்க வலிமையான அரசோ, பத்திரிக்கைகளோ, பள்ளி நிறுவனங்களோ, அமைப்போ இல்லை. இப்ப இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாற்று வழி சென்று மேலும் வலியை உருவாக்கும் செயல் இது.

இவ்வளவு ஏன் இதையே மலையாளத்துக்கு சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவர் வீட்டிலும் அந்த பத்திரிக்கை எதிர்த்தும் போராட்டம் பண்ணி இருப்பாங்க.



2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Thevan

unread,
Nov 5, 2013, 5:21:01 AM11/5/13
to panbudan
உங்கள் மொழியில் இந்து என்று விளம்பரம் செய்தார்கள். 

ப்ரியன்

unread,
Nov 5, 2013, 5:53:19 AM11/5/13
to panb...@googlegroups.com
தமிழ் அழிஞ்சி போயிடும் என்று சொல்பவர்கள் யதார்த்தத்தை மிஞ்சும் கற்பனைவாதிகள். அது ஜெ.மோக்கும் பொருந்தும்.

தனி வரிவடிவத்தை தொலைத்தால் தமிழ் நிச்சயமாக அழிந்துதான் போகும்.

PRASATH

unread,
Nov 5, 2013, 6:09:28 AM11/5/13
to Groups
இப்ப ரமேஷ் வந்து என்ன சொல்லுவான்னு நான் சொல்லட்டுமா...
 
தமிழின் வரிவடிவத்தை முழுவதுமாக நீக்க சொல்லவில்லை. தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்களுக்காக ஆங்கில வரிவடிவத்தை படிக்கவும் எழுதவும் ஒரு வாய்ப்பாகக் கொடுத்து அதனை முறைமைப்படுத்தலாம் என்று மட்டுமே ஜெமோ தனது கருத்தாகச் சொல்கிறார்.
 
உங்களிடம் தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு தமிழ் படிக்கவும், எழுதவும் ஏதேனும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர சொன்னால் உங்களது கருத்து அல்லது ஆலோசனை என்னவாக இருக்கும். இந்த தங்கிலீசைக் காட்டிலும் உங்களது ஆலோசனை மேலானதாக இருந்தால் அதனை பின்பற்றச் செய்யலாம்.
 
இது தமிழுக்கான ஒட்டு மொத்த மாற்றாக கருதாமல், எவருக்கு தமிழ் பேசத் தெரிந்து படிக்க/ எழுதத் தெரியவில்லையோ அவர்களுக்கான மாற்றாக மட்டுமே கருத வேண்டும்...:)))  


2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>

Naresh Kumar

unread,
Nov 5, 2013, 6:13:58 AM11/5/13
to பண்புடன்
ஹா ஹா ஹா


2013/11/5 PRASATH <pras...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

C.M உதயன்

unread,
Nov 5, 2013, 6:16:13 AM11/5/13
to பண்புடன்
எனக்கு ஒரு டவுட்
”மோர்”ரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது more ன்னா அப்பா ஆங்கிலத்தில் moreக்கு அதிகம்னு அர்த்தம் வருது.

Ore confusion a iruke pa.


2013/11/5 PRASATH <pras...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

ப்ரியன்

unread,
Nov 5, 2013, 6:23:29 AM11/5/13
to panb...@googlegroups.com
எல்லோருக்கும் ஒரு கவலைன்னா , உதயனுக்கு இப்படி கவலை...

சாப்பாட்டு விசயத்துல இப்படி குழப்பம் வந்தா உதயன் என்ன பண்ணுவான் பாவம்.. :)

PRASATH

unread,
Nov 5, 2013, 6:33:55 AM11/5/13
to Groups
சிரிச்சு அவனை டென்ஷனாக்க வேணாம் அண்ணே... அப்புறம் ரமேஷ் எனக்கு படம் எதுவும் டிராப் பாக்ஸ்ல அனுப்பாம போனா நான் என்ன செய்யுவேன்...:)))

2013/11/5 Naresh Kumar <meet...@gmail.com>
ஹா ஹா ஹா

 

C.M உதயன்

unread,
Nov 5, 2013, 7:05:13 AM11/5/13
to பண்புடன்

எல்லா "மோர்”ரையும் வெறுப்பவன் :)
உதாரணத்திற்காக மட்டுமே உபயோகித்தேன்.

more kulampu sapiten நல்ல இருக்கும் இப்படி பரிட்சை எழுதினா ஒரு வார்த்தைகே இவ்வளவு பிரச்சனை.
இதை நடைமுறைக்கு வந்தால் குழம்பு அதிகம் சாப்பிட்டேன்னு படிப்பாங்களா, இல்லை மோர் குழம்பு சாப்பிட்டேன்னு படிப்பாங்களா?

ஆங்கில கல்வியை முதன்மை பாடமாக எடுத்து படிக்கும் நபர்களின் அடிப்படை பிரச்சனை வடிவத்தில் அல்ல, இலக்கணம் செய்யுள்களை மனனம் செய்வது தான் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையே.






2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>
எல்லோருக்கும் ஒரு கவலைன்னா , உதயனுக்கு இப்படி கவலை...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 7:17:21 AM11/5/13
to பண்புடன்
ஜூப்பரு :))

2013/11/5 PRASATH <pras...@gmail.com>

இப்ப ரமேஷ் வந்து என்ன சொல்லுவான்னு நான் சொல்லட்டுமா...

//
/

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 7:19:11 AM11/5/13
to பண்புடன்
ப்ரசாத்,
நான் இதைத்தான் எழுதியிருப்பேன். ஏன்னா நான் அவரோட கடுரையை அப்படித்தான் புரிஞ்சிக்கிட்டேன்.

குழந்தைகள் தமிழ் படிக்க கஷ்ட்டப்படுகிறார்கள் என்கிற ஜல்லியில் உடன்பாடில்லை.

2013/11/5 PRASATH <pras...@gmail.com>

சிரிச்சு அவனை டென்ஷனாக்க வேணாம் அண்ணே... அப்புறம் ரமேஷ் எனக்கு படம் எதுவும் டிராப் பாக்ஸ்ல அனுப்பாம போனா நான் என்ன செய்யுவேன்...:)))

//
/

C.M உதயன்

unread,
Nov 5, 2013, 7:21:01 AM11/5/13
to பண்புடன்
Sunnyன்னு ஒரு வண்டி வந்தப்பா எப்படி அதை தமிழ்படுத்தி வாசிச்சோம்னு நியாபகம் இருக்க.

டென்சன்னா இருக்கு நானும் கட்டுரை எழுதிடுவேனேனு.

PRASATH

unread,
Nov 5, 2013, 7:21:29 AM11/5/13
to Groups
உன்னுடைய பாசிடிவ் அப்ரோச் சில சமயம் திக்கு முக்காட வைச்சுடுது ரமேஷ்...
 
எனிவே, ஆல் தி பேஸ்ட்...


2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>
ப்ரசாத்,

ஆசாத்

unread,
Nov 5, 2013, 7:22:10 AM11/5/13
to panb...@googlegroups.com
லேஷ் ஹாதா கிரிக்கிரி :-) ஹாதா கத்தபாத் யாஷேக் :-) தாமில் யாஷேக் :-) குல்லு கத்தபாத் இக்திபு இங்லீஸி கதீர் முஷ்கிலா :-) ஹாதா மாஃபி குவைஸ் :-)

சும்மா வெள்ளாட்டுக்குங்க :-) ஷாஜி, இப்னு ஆராச்சும் வந்து ட்ரான்ஸ்லேட் செய்வாங்க.

மோரு

unread,
Nov 5, 2013, 7:22:31 AM11/5/13
to பண்புடன்
​இப்ப காரும் வந்திருக்கு பக்கி அதே பேசுல நிஸான் கம்பெனில :-)​

2013/11/5 C.M உதயன் <udhay...@gmail.com>

Sunnyன்னு ஒரு வண்டி வந்தப்பா எப்படி அதை தமிழ்படுத்தி வாசிச்சோம்னு நியாபகம் இருக்க.

டென்சன்னா இருக்கு நானும் கட்டுரை எழுதிடுவேனேனு.




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ramesh Murugan

unread,
Nov 5, 2013, 7:24:14 AM11/5/13
to பண்புடன்
அப்படி கஷ்ட்டப்பட்டு தமிழ்படுத்த வேண்டியதில்லை.
இங்க நாங்க பேசும்போது சுன்னி முஸ்லீம்ங்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துறேன்.

நம்ம மக்களுக்காக சன்னி முஸ்லீம்னு சொல்றதுல என்ன இருக்கப்போகுது?

ஏற்கனவே பெயர்ச்சொல்லை மாற்றக் கூடாதுன்னு ஒரு பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்குது :))

2013/11/5 C.M உதயன் <udhay...@gmail.com>

Sunnyன்னு ஒரு வண்டி வந்தப்பா எப்படி அதை தமிழ்படுத்தி வாசிச்சோம்னு நியாபகம் இருக்க.

மோரு

unread,
Nov 5, 2013, 7:28:58 AM11/5/13
to பண்புடன்
​எப்படிடா தம்பி இப்படி திறந்த புத்தகமா இருக்க :-)

# வடிவேல் ஜிஃப் இருந்தா போடுங்க மீசை ஐயா​

2013/11/5 Ramesh Murugan <rames...@gmail.com>

அப்படி கஷ்ட்டப்பட்டு தமிழ்படுத்த வேண்டியதில்லை.
இங்க நாங்க பேசும்போது சுன்னி முஸ்லீம்ங்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துறேன்.

ஸ் பெ

unread,
Nov 5, 2013, 1:20:24 PM11/5/13
to panbudan
திராவிடம், தமிழ் தேசியம் இப்பிடி பிரிஞ்சு கிடந்தவங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்க வைத்த நாயருக்கு ஜெ :)

ஸ் பெ

unread,
Nov 5, 2013, 1:30:22 PM11/5/13
to panbudan
'தி ஹிந்துவுக்கு கிடைத்த வள்ளு பட்டி' என தலைப்பிட்டு நேற்றிரவு ஒரு கட்டுரை எழுதி இன்று காலையில் அழித்து விட்டேன்... :-)

Ahamed Zubair A

unread,
Nov 5, 2013, 1:56:00 PM11/5/13
to பண்புடன்
நல்லவேளை நான் இதை ட்ரான்ஸ்லேட் செய்ய மாட்டேன்னு அண்ணன் நினைச்சுட்டாரு ;))


2013/11/5 ஆசாத் <banu...@gmail.com>

ஆசாத்

unread,
Nov 5, 2013, 10:33:45 PM11/5/13
to panb...@googlegroups.com
> அகமது சுபைர் wrote:
நல்லவேளை நான் இதை ட்ரான்ஸ்லேட் செய்ய மாட்டேன்னு அண்ணன் நினைச்சுட்டாரு ;))

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. 

ஆசிப், சுபைர், சென்ஷி, சாபத்தா, கோகுல், இப்படி நெறைய்ய வளைகுடா ஆளுங்க இருக்காங்கன்னு தெரியாதா? 

Naresh Kumar

unread,
Nov 6, 2013, 12:08:54 AM11/6/13
to பண்புடன்
//உன்னுடைய பாசிடிவ் அப்ரோச் சில சமயம் திக்கு முக்காட வைச்சுடுது ரமேஷ்...//

ஹா ஹா ஹா

பிரசாத்தே இப்பிடி சொல்றாப்புடின்னா, கொஞ்சம் ஆபத்துதான்! :)

எனக்கு கூட, பாட்ஷா ரஜினி ஃபைட்டுக்கப்புறம் மெய்சிலிர்க்க வைக்கிறது சமயங்கள்ல ரமேஷோட எழுத்துக்கள்தான்!

மோரு

unread,
Nov 6, 2013, 12:19:19 AM11/6/13
to பண்புடன்
​இவரு வாழப்பழத்துல ஊசி ஏத்துறத விட வெண்ணைல ஊசி ஏத்துறதுல வல்லவரா இருக்காருய்யா :-)) 

#உள் குத்து ஸ்பெஷலிஸ்ட்​

2013/11/6 Naresh Kumar <meet...@gmail.com>

எனக்கு கூட, பாட்ஷா ரஜினி ஃபைட்டுக்கப்புறம் மெய்சிலிர்க்க வைக்கிறது சமயங்கள்ல ரமேஷோட எழுத்துக்கள்தான்!

இனியவன்

unread,
Nov 6, 2013, 12:19:26 AM11/6/13
to panb...@googlegroups.com
True.

குழுவில் செல்வன், ராஜசங்கர் இல்லாத குறையை தீர்ப்பது ரமேஸ் தான்.

:-)

2013/11/6 Naresh Kumar <meet...@gmail.com>

எனக்கு கூட, பாட்ஷா ரஜினி ஃபைட்டுக்கப்புறம் மெய்சிலிர்க்க வைக்கிறது சமயங்கள்ல ரமேஷோட எழுத்துக்கள்தான்!

-- 
ப்ரியங்களுடன்,
இனியவன்.
[தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. உன்னையே நீ அறி]

PRASATH

unread,
Nov 6, 2013, 12:34:34 AM11/6/13
to Groups
வொய் யா... வொய் மீ...
 
மீ த பாவம் யூ நோ...
2013/11/6 Naresh Kumar <meet...@gmail.com>

Ramesh Murugan

unread,
Nov 6, 2013, 12:37:40 AM11/6/13
to பண்புடன்
சௌதில பில்லி சூனியம், முட்டை ஓதிவைக்கிறதெல்லாம் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதனால எல்லாரும் பொழச்சி போங்க. :)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 6, 2013, 12:09:26 PM11/6/13
to panb...@googlegroups.com


On Tuesday, November 5, 2013 12:32:59 PM UTC+5:30, Ramesh wrote:
ஆத்தாடி,
இவருதான் ஜெயமோகன் கட்டுரையை சரியா புரிஞ்சிருக்காரு.  மிக்க நன்றி.

2013/11/5 Naresh Kumar <meet...@gmail.com>
கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் பேச வேண்டுமெனில்,

ஆங்கிலத்தையே முதல் பாடமாக படிக்கும், தமிழை பேச மட்டுமே தெரிந்த மாணவர்களுக்கான உத்தியாக இதை முன்வைக்கிறார்! தமிழை இரண்டாம் பாடமாக அல்லது மூன்றாவது பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு இது பிரச்சினையாக மாறுகிறது என்கிறார்!

100% இதைத்தான் அவரு சொன்னாரு.


ரமேஷு,

இதுக்கு ராபிடெக்ஸ், 30 நாளில் ஆங்கிலவழியில் தமிழ் கற்றல் போன்ற நூல்கள் ஏற்கனவே இருக்கு. போயி அதை வாங்கிப் படிச்சுக்க சொல்லுங்க.  தமிழ்மொழி என்பது வெறும் வாய்வழி வரலாறு கொண்டது மட்டுமே  இல்லை. பெருசா " பிராமி எழுத்துல இருந்து இன்னைக்கு இருக்கும் மாற்றம்  வரை " எல்லாம் சொல்லிருக்காருல்ல. ஒவ்வொரு மாற்றமும் எப்படி இருக்குதுன்னு வரலாறைப் பார்த்தா தெரியும். ( உதயனிடமோ இல்ல வேற யாரோ இந்த தொகுப்பு வெளியிட்டிருந்தாங்க பண்புடன்ல. ). மாற்றங்கள் அனைத்துமே ஒன்றின் அடிப்படையில் இருந்து மாற்றம் அடைந்து வந்திருக்கிறதே தவிர, சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் புதிதாக எதுவும் வந்துவிடவில்லை.  தற்சமயம் நானிருக்கும் மனநிலையில் இதற்கு மேல் எழுத விரும்பவில்லை.   மிகக் கடுமையான வார்த்தைகளையும், மன உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. 

Ramesh Murugan

unread,
Nov 7, 2013, 2:21:49 AM11/7/13
to பண்புடன்
அண்ணே,
நீங்க கடுமையான வார்த்தையை வெளிப்படுத்தினாலும் ஒன்னும் ஆவப்போவதில்லை.

ஏற்கனவே இணையதளங்களில் ஜெ.மோவை எவ்வளவு கீழ்த்தரமா திட்ட முடியுமோ அவ்வளவு கீழ்தரமா பலர் திட்டிட்டாங்க.

ஆனா, ஒரு மானஸ்தனால்கூட அவர் கட்டுரைக்கு மறுமொழி கொடுக்க முடியவில்லை. எழுத்து சீர்திருத்தம், தேவையில்லாத எழுத்தை குறைத்தல், பயன்படாத எழுத்தைப் பற்றிய விவாதம் அல்லது ஜெயமோகனின் தீர்வுக்கான மாற்றுத் தீர்வு என எதையும் முன்வைக்கல. வழக்கம்போல வசவு வசவு வசவு.

ஏற்கனவே ஃபொனெடிக் யூனிக்கோடு மூலமாக தங்கலீஸ் தமிழாக மாறுவதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் தங்கலீஸை முறைப்படுத்துதல்னு நானும் கூறியிருந்தேன்.

எனக்கு தெரிஞ்சவரை ஜெ.மோவின் தீர்வில் 1%கூட யாருக்கும் உடன்பாடில்லை. ஆனா அந்த தீர்வுக்கு காரணமாக அவர் முன்வைக்கும் பல காரணிகளில் எல்லாருக்கும் உடன்பாடிருக்கு.

கடைசியா என்னால என்ன புரிஞ்சிக்க முடியுதுன்னா, அவர் கட்டுரையில் குறிப்பிட்ட காரணங்கள் எல்லாமே சரிதான். யதார்த்தம்தான். ஆனா தீர்வு தவறு.

சரி, அதுவும் உண்மைதான். அதை அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். மாற்று தீர்வு என்ன??? அதைப் பற்றி யாரும் கட்டுரையோ, ஆய்வையோ, விவாதங்களையோ அல்லது ஜெ.மோவுக்கு மறுமொழியோ எழுதினதாய் தெரியல நீங்க உட்பட.

2013/11/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
தற்சமயம் நானிருக்கும் மனநிலையில் இதற்கு மேல் எழுத விரும்பவில்லை.   மிகக் கடுமையான வார்த்தைகளையும், மன உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. 

//
/

மஞ்சூர் ராசா

unread,
Nov 7, 2013, 2:27:10 AM11/7/13
to பண்புடன்
சரியான மாற்று தீர்வுதான் இன்று மிகவும் முக்கியம் . அதில் எந்த சந்தேகமும் இல்லை.  அதை யார் எந்த வழியில் செய்வார்கள் என்பது தான் கேள்வி!

Naresh Kumar

unread,
Nov 7, 2013, 2:31:06 AM11/7/13
to பண்புடன்
எல்லாத்துக்கும் ஜெமோவை வானளாவப் புகழுவதும், மிகக் கேவலமாகத் திட்டுவதும் எப்பவுமே நடப்பதுதான்! 

பிரச்சினையின் அடிநாதம் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறையும் நிலை, கல்வி நிலையங்களில் அதனை சரியாகக் கையாளாதது இப்படி சிலவைதான்!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை என்பது பற்றி எங்கேயுமே கட்டுரைகளோ, செய்ல்பாடுகளோ நடக்கவில்லையா என்ன? 

இது எதுவுமே அதிகார மட்டத்தில் நடைபெறவில்லை என்பதுதான் பிரச்சினையே!

Ramesh Murugan

unread,
Nov 7, 2013, 2:43:06 AM11/7/13
to பண்புடன்
தமிழ் மொழியின் முக்கியம் குறையும் நிலை மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரசின் பங்கைப் பற்றி மட்டும் அவர் பேசலைன்னு நினைக்கிறேன்.

முக்கியமா அவர் பேசினது எழுத்துக்களைப் பற்றி. ஆங்கிலத்தில் உயிர்மை எழுத்துகள் ஒலி மட்டும்தான் மாறுது உருமாறல. ஆனா தமிழ் எழுத்துகளில் உயிர்மை எழுத்துகள் உருமாறுறதால அதை குழந்தைகள் ஞாபகம் வச்சிக்கிறது கடினம். தொடர் பயிற்சி மூலமாதான் ஞாபகம் வச்சிக்கிறாங்க. அதனால நடைமுறையில் தமிழின் பயன்பாடு குரையுதுன்னாரு. அதனாலேயே அதுல சீர்திருத்தம் வேணும்னாரு.

எழுத்து குறைப்பு, உயிர்மை எழுத்தை எளிமைப்படுத்துதல்னு அவரு சொல்லிட்டு போயிருந்தாருன்னா, இந்தளவுக்கு பிரச்சனை பெருசாயிருக்காது அல்லது யுனிக்கோடை வளமைப்படுத்தி தங்கலீஸ் மூலம் ஆங்கிலத்தை தமிழ்படுத்தலாம்னு மட்டும் சொல்லியிருந்தாலும் பிரச்சனை இம்புட்டு பெருசா பேசப்பட்டிருக்குமான்னும் தெரியல.

எழுத்துகள் அதிகமாகுறதை தடுக்க ஒரே வழி ஆங்கில வரிவடிமைப்பை பயன்படுத்தனும்னு சொன்னதும் இங்க பலர் கொதிச்சி போயிட்டாங்க. கொதிச்சதில் நியாயம் இருக்குதான். ஆனா உயிர்மை எழுத்துக்கான மாற்று என்ன, உயிர்/மெய் எழுத்துகளை குறைக்க முடியுமா அல்லது எப்படி எழுத்து குறைப்பு நடவெடிக்கையில் இறங்கலாம்னு பேசுவாங்கன்னு பார்த்தா, அவன் மலையாளி, நாயர், தேவநாகரிக்கு வால்பிடிப்பவன்னு சம்மந்தமில்லாம வேற எதையோ பேசிக்கிட்டு இருக்காங்க.

பண்புடனில்கூட, ஜெயமோகனுக்கு சரியான எதிர்வினையாக எவரும் பேசியதாய் நினைவில்லை.

2013/11/7 Naresh Kumar <meet...@gmail.com>

பிரச்சினையின் அடிநாதம் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறையும் நிலை, கல்வி நிலையங்களில் அதனை சரியாகக் கையாளாதது இப்படி சிலவைதான்!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை என்பது பற்றி எங்கேயுமே கட்டுரைகளோ, செய்ல்பாடுகளோ நடக்கவில்லையா என்ன? 

மஞ்சூர் ராசா

unread,
Nov 7, 2013, 3:41:01 AM11/7/13
to பண்புடன்
Raja sankar
07:49
Reply
 
இவுரு சொன்னதை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திட்டுதான் இருக்காங்க. அது உலகளாவிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கூட 

http://en.wikipedia.org/wiki/List_of_ISO_transliterations 

http://homepage.ntlworld.com/stone-catend/trimain1.htm 



2013/11/7 Ramesh Murugan <rames...@gmail.com>
--

Iyappan Krishnan

unread,
Nov 7, 2013, 10:39:21 PM11/7/13
to பண்புடன்
November 4, 2013 at 6:22pm

இன்று காலை வா. மணிகண்டன் தங்கிலீஷில் இரண்டு வரிகள் எழுதியிருந்தார். பொதுவாகவே தங்கிலீஷ் படிக்க நேரும்போது எனக்கு பயங்கர கடுப்பாகி விடும். சிலருடைய செல்பேசிகளில் தமிழ் வசதி இருப்பதில்லை என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால், எப்போதும் இப்படிச் செய்யாத மணிகண்டன் இன்று இப்படி எழுதுகிறாரே என்று வியந்துபோய், இந்த விஷப்பரீட்சையில் இறங்காதீங்க என்று நான் கமென்ட் எழுதினேன். அப்போதுதான் அவர் தகவல் தெரிவித்தார், ஹிந்து தமிழ் இதழில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் எதிர்வினை அது என்று.


ஓஹோ... இன்றைய அஜெண்டாவை அவர்தான் முடிவுசெய்திருக்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.


சற்று நேரத்திற்குமுன் பார்த்தால், இந்தக் கட்டுரைக்கு என்ன எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தே தான் எழுதியதாக ஜெயமோகன் ஒரு பதிவும் எழுதியிருக்கிறார். அதாவது, பத்திரிகையில் எழுதியது விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. அதைப்பற்றி மிகவும் சிந்தித்தே எழுதியிருக்கிறார், அவருடைய கருத்து முடிந்த முடிபு, இனி எந்த மாற்றமும் தேவையில்லை என்பதே அந்தப் பதிவின் நோக்கமாக இருக்க முடியும். 


அவர் அப்படிச் சொல்லி விட்டார் என்பதற்காக விவாதிக்காமல் இருந்துவிட முடியுமா..


அவருடைய கருத்தின் சாரம் என்ன...

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழ் வாசிக்கும் பழக்கம் அற்றுப் போகாமல் இருக்க ஆங்கிலத்தில் தமிழை எழுதலாம் என்பதுதான்.


இது ஏதும் புதிய கருத்தல்ல, புதிய விஷயமும் அல்ல. நாடு விடுதலை அடைந்தபோது, தேசிய மொழியாக எதை ஏற்பது என்ற கேள்வி வந்த காலத்தில், இந்தி தெரியாதவர்கள் ஆங்கில எழுத்து வடிவில் இந்தி எழுதலாம் என்ற வாதம்கூட வந்தது. இந்துஸ்தானிதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. இப்போதும்கூடவடக்கே இந்தியிலும் இதுபோல அவ்வப்போது யாராவது கிளப்பி விடுவது உண்டு. சரி, அதை விடுத்து, விவரங்களைப் பார்ப்போம்.


இப்போதும்கூட இந்தியாவில் பல மொழிகள் ஆங்கில எழுத்து வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காசி, கரோ, மிசோ போன்றவை. வேறு சில மொழிகளுக்கு இரண்டு விதமான எழுத்துகளும்கூடப் பயன்படுகின்றன. கொங்கணியை இந்தியிலும் - அதாவது தேவநாகரியிலும் எழுதுவதுண்டு, கன்னடத்திலும் எழுதுவது உண்டு. மணிப்புரியை வங்காளி வரிவடிவிலும் ஆங்கில வரிவடிவிலும் எழுதுவது உண்டு. பஞ்சாபில் சிலர் உருதுவை ஆங்கிலத்தில் எழுதுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பீகாரில் உருதுப் பத்திரிகைகள், இந்தி எழுத்துகளால் வெளிவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் அவர் ஏன் குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்பது புரியவில்லை. இருக்கட்டும். 


மேலே குறிப்பிட்ட காசி, மிசோ போன்ற மொழிகள் ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணங்கள் வேறு. ஆங்கிலேய மிஷினரிகளின் தாக்கமும் அதில் இருந்தது. அது பேசப்படுவதும்கூட மிகக் குறைவான மக்களால்தான். அவ்வளவு ஏன், சிந்தி மொழி பெர்சியன் (அதாவது, அரபி), தேவநாகரி, ஆங்கிலம் ஆகிய மூன்று எழுத்து வடிவங்களிலும் எழுதப்படுகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிந்தி மொழி இன்று குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் பேசப்படுவதில்லை. அதனால் சிந்தி ஆங்கில வரிவடிவத்தைப் பெரிதும் பயன்படுத்துகிறது. அப்படியிருந்தும்கூட, சிந்திக்கு யுனிகோட் எழுத்துகள் உருவாக்கி விட்டார்கள்.


ஆக, எந்தெந்த மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன என்று பார்த்தால், உலகின் ஏராளமான மொழிகள் வரும். ஆனால் அவை பெரும்பாலும் குறைந்த மக்கள் பேசுகிற மொழிகளாக இருக்கும். அல்லது வரலாற்றில் புதிய மொழிகளாக இருக்கும். 


இந்தியாவின் பெரும்பாலான பழங்குடி மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன. காரணம், அவர்கள் மொழி பேச்சு மொழியாக மட்டுமே இருந்தது. எழுத்து மொழியாக வளரவில்லை. பிற்காலத்தில் நாகரிகத் திணிப்பின் அல்லது ஏற்பின் காரணமாக, அவர்களுக்கு புதிய வரிவடிவத்தை உருவாக்க முடியாதபோது, ஆங்கில வரிவடிவத்தை வரித்துக்கொள்வது எளிதாகி விட்டது. ஆனால், அவர்களால் முடியும் என்றால், நிச்சயமாக சொந்த வரிவடிவத்தை உருவாக்குவார்கள். 


மிகக் குறைவான மக்கள் பேசும் மொழியினர்கூட தமக்கென புதிய எழுத்துவடிவை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து புதிய எழுத்து வடிவங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, சந்தாலி மொழிக்கான ஒல் சிக்கி. தமிழர்களில் பலர் இப்படியொரு பெயரையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அப்படியொரு வரிவடிவம் இருக்கிறது. தேவைப்பட்டால் மாதிரியைக் காட்டுகிறேன். அல்லது கூகுளில் தேடியறியலாம்.


இப்படி, குறைவான மக்களால் பேசப்படும் சந்தாலி மொழிக்கே சொந்த எழுத்துருக்கள் உருவாகிக் கொண்டிருக்கும் காலத்தில், பல்லாயிரம் ஆண்டுகாலப் பழமை கொண்ட மொழிக்கு எதிர்காலத்தில் ஆபத்து வந்துவிடும் என்றும், ஆங்கில வரிவடிவைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுவது என்னவகையான மனநிலை என்று சத்தியமாகப் புரியவில்லை. 


சரி, அப்படியே தமிழை ஆங்கிலத்தில் எழுதி விட்டாலும் வாசிக்க முடியுமா... தமிழ் எழுத்துகளின் ஒலிகளுக்கு நிகரான ஒலி ஆங்கிலத்தில் இல்லை. ஏன், இந்திய மொழியில் ஒன்றான இந்தியிலும்கூட இல்லை. விளம்பரங்களிலோ, திரைப்படப் பெயர்களிலோ ஒரிரு சொற்கள் ஆங்கிலத்தில் படித்துவிடுவது என்பது வேறு. அது அந்தந்தப் பொருள் சார்ந்த விஷயம். எல்லா தமிழ்ச் சொற்களையூம் ஆங்கில ஒலிமயமாக்கி எழுதுதல் சாத்தியமில்லை. ஒருவேளை இதற்கும் அவர் ஒரு தீர்வு சொல்லக்கூடும். ஆங்கிலத்தில் டயகிரிடிகல் Diacritical எழுத்துகள் இருக்குமே, அதைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வாரோ என்னவோ...  


டயகிரிடிகல் என்பது ஒலிக்குறி வடிவம். ஆங்கிலத்தில் இல்லாத எழுத்துகளை குறிக்கப் பயன்படுகிறது. உதாரணமாக கஃபே என்பதற்கு cafe என்று எழுதுகிறோம். ஆனால் உண்மையில் அது café. ஆங்கில எழுத்துகளுக்கு மேலாகவோ கீழாகவோ சில குறிகளை இட்டு தமிழின்  ன்,  ள்,  ழ்  போன்ற எழுத்துகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவற்றை வாசிப்பது மொழியியல் வல்லுநர்களுக்கே திணறல்தான். இதைக் கற்றுக்கொள்வதைவிட ஒரு மொழியையே கற்றுக்கொள்ளலாம். இந்தப் பத்தியில் உள்ள வாதம் நிச்சயமாக விதண்டாவாதம்தான் என்று எனக்கே தெரியும். இருந்தாலும் இப்படிஎழுதியதன் காரணம், எதிர்வினை எப்படி வரும் என்று தெரிந்தவர் இதையும் ஊகித்தாரா என்று தெரிந்து கொள்வதுதான்.


சரி, இந்து இதழில் ஜெயமோகன் முன்வைத்த கருத்தின் சாரங்களைப் பார்ப்போம்.


1. //நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது.  ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. //

அபத்தமான கருத்து. இளைய தலைமுறை வாசிக்கவில்லை என்பதே உண்மை. இளையதலைமுறையினர் நிறையபடிக்கிறார்கள் என்பது உண்மை - ஆனால் அது பாடப்புத்தகப் படிப்பு. நூல் வாசிப்பு அல்ல. இதற்குக் காரணங்கள் பல - செல்பேசிகளின் ஊடுருவலும், அதில் இசைகேட்கும் வசதிகளும், அண்மைக்காலத்தின் செல்பேசிகளில் பரவலாகி வி்ட்ட சமூக ஊடக வசதிகளும் சேர்ந்து வாசிப்பை அருகச் செய்திருக்கின்றன என்பதே உண்மை. ஓர் இலக்கியவாதியாக இருந்துகொண்டு எப்படி இப்படியொரு கருத்தைமுன்வைக்கிறார் என்று தெரியவி்ல்லை. நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன என்பதை வைத்து வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருக்கிறது என்று கருதக்கூடாது. சொல்லப்போனால், மிகச்சிலர் மிக அதிக நூல்களை வாங்குகிறார்கள். மிகப் பலர் மிகச்சில நூல்களையே வாங்குகிறார்கள். இது குறித்து உலகப்புத்தகத் திருவிழா குறித்த என் வலைபதிவில் பார்க்கலாம்.


2. //இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்றுசொல்லலாம்.// 

பல்வேறு துறைகள் குறித்து ஆழமாக எழுதுகிறவராகக் கூறிக்கொள்பவர் எப்படி இப்படியொரு அபத்தமான கருத்தை முன்வைக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. குழந்தைகள் இரண்டு மொழிகளை அல்ல, நான்கு மொழிகளைக்கூட எளிதில் கற்கமுடியும் என்று ஆய்வுகள் பலவும் காட்டியிருக்கின்றன. கூகுளில் தேடினால் நிறையவே கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், இரண்டு மொழி பேசும் பெற்றோர் உள்ள குடும்பத்தின் குழந்தைகளுக்கு பலமொழித் திறன் எளிதாக வரும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. அவ்வளவு ஏன், இரண்டு மொழிகளைக் கற்றுக்கொண்டவர்களுக்கு அல்ஜெமிர் நோய் தாமதமாகவே வரும் என்றும்கூட ஆய்வுகள் காட்டுகின்றன. (மாதிரிக்கு, பதிவின் படத்தைப் பார்க்கவும்.)


3. மேற்கண்ட “சிரமம்” பற்றிய கருத்தைத் தொடர்ந்து வரும் பத்திகள் அனைத்தும் அதையொட்டிய கருத்தையே முன்வைத்துள்ளன என்பதால் ஒதுக்கி விட்டுகடைசிப் பத்திக்குச் செல்லலாம்.


4. // எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன.அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்தஎழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. .... வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றேபடுகிறது. //

அபத்தத்தின் உச்சம்தான் இது.  இங்கே அவர் சொன்ன மாற்றங்கள் யாவும் இயல்பாக மொழிக்கு ஏற்பட்டமாற்றங்கள். மொழியின் தகவமைப்பு அது.  மண்ணில் எழுதிய காலம், கல்லில் எழுதிய காலம், காகிதத்தில் எழுதிய காலம் என காலத்துக்கேற்ப வரிவடிவம் மாறியது. அதனையும், முற்றிலும் புதியவரிவடிவத்தை தனதாக்கிக் கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசுவதை என்னவென்று சொல்ல... இன்று காகித உலகிலும் கணினி உலகிலும் ஆங்கிலத்துக்கு என்ன வசதிகள் உண்டோ அத்தனையும் தமிழுக்கும் உண்டு.


கடைசியாக,

காலப்போக்கில் தமிழ் வாசிப்பு அருகிவிடும் என்பதற்காக இந்தக் கருத்தை முன்வைக்கிறார் என்றால், சில கேள்விகள் தவிர்க்க முடியாதவை.

தமிழ் நாட்டின் மக்கள் தொகை என்ன, அதில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழில் எழுதப் படிக்கக் கற்றவர்கள் /கல்லாதவர்கள், தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்ன, அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழ் கற்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள், அவ்வாறு கற்க முடியாத நிலைக்கு காரணம் என்ன, இதே நிலை தொடருமானால் இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு தமிழ் அருகிவிடும் ஆபத்து இருக்கிறது ....

இது போன்ற அறிவியல்ரீதியான கேள்விகளை எழுப்பி, அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்து வந்திருந்தால், நிச்சயம் அது விவாதத்துக்கு உரியதுதான். ஆனால் இவர் வைத்திருப்பதோ, ஏதோ அரைத்தூக்கத்தில் இருக்கும்போது மனதுக்குள் எழுந்த கேள்வியை கருத்தாக முன்வைத்ததுபோல இருக்கிறதே அன்றி எந்த அடிப்படையும் இல்லாததாய் இருக்கிறது. வெறும் சர்ச்சையைக் கிளப்பும் நோக்கத்தில் அமைந்த கட்டுரை என்றுதான் இதைக்கூற முடியும்.


வாசிப்புப் பழக்கம்குறைந்து வருகிறது என்பது தமிழுக்கு மட்டுமல்ல. எல்லாமொழிகளுக்கும் இது பிரச்சினைதான். அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்தான். ஆனால் மொழியின் எழுத்துருவை மாற்றுவதால் அப்படியொரு மாற்றம்வந்து விடும்என்றால்....


கவிஞர் மகுடேசுவரன் எழுதிய பதிவின்கடைசிப் பத்திதான் நினைவுக்கு வருகிறது. இதோ...

//புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரைப்பற்றி வாய்மொழிக் கதையுண்டு. எத்தனையோ நல்ல கருவிகளை உருவாக்கிய அவர்தம் இறுதிக்காலத்தில் ஓர் ஆராய்ச்சியைச் செய்தாராம். கொல்லைக்குச் சென்றுமலங்கழித்தபின் கழுவுவதற்குக் குளத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அதற்குஎளிதான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் இறங்கினாராம். மலங்கழிக்கும்போது முதலில்வரும் சிறுநீரை அடக்கி வைக்கவேண்டும். கழிப்பு முடிந்தபின்தான் சிறுநீரைக் கழிக்க வேண்டும். அவ்வாறு கழியும்சிறுநீரிலேயே கழுவிக்கொள்ள வேண்டும். இதுதான்அந்த விஞ்ஞானியின் தீர்வு.//



நன்றி - Shah Jahan 

தமிழ்ப் பயணி

unread,
Nov 8, 2013, 12:43:18 AM11/8/13
to பண்புடன்

திரு.ஹரன்பிரசன்னா அவர்கள் இ​ணைய தளத்திலிருந்து மீள்பதிவு.

ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக

லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன. 

நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.

சிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார். 

இன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.

தமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. 

இந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன? ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும். 

சில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.

அ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம்! ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார்! விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

மதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.

இன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.

தமிழறிஞ்சர்களின் எதிர்வினை இங்கே.

ஜெயமோகனின் கட்டுரை இங்கே.

ஜெயமோகனின் எதிர்வினை இங்கே.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.




--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Nov 8, 2013, 2:48:08 AM11/8/13
to panbudan

எழுத்துரு விவாதம் ஏன்?

 

தமிழ் எழுத்துரு பற்றிய விவாதங்களில் பெரும்பாலும் எல்லாக் குரல்களும் ஒலித்துவிட்டன என்று நினைக்கிறேன். இனி இந்த விவாதத்தை நான் ஏன் எழுப்பினேன், இதன் சாராம்சம் என்ன என்று எதை நினைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன்.

[ஏற்கனவே அக்கட்டுரை வெளியான அன்று பிரசுரிக்கப்பட்ட எதிர்வினைக்குறிப்பிலேயே இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் அடிமுட்டாளல்ல என்றாவது என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஊகிக்க முடியும்]


பகுத்தறிவும் கருத்துச் சுதந்திரமும்…

சிலமாதங்களுக்கு முன்பு லடாக் பயணத்தில் rationality என்ற சொல்லுக்கான இந்தியமொழிச் சொற்கள் என்னென்ன என்று பேசிக்கொண்டோம். நானறிந்து தமிழல்லாத எந்த மொழியிலும் அதற்கான மிகச்சரியான சொல் கிடையாது! ‘பகுத்தறிவு’ என்பது மிகமிகச் சரியான சொல்லாக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டில்தான் அச்சொல்லுக்கான இன்றைய வரையறை ஐரோப்பியமொழிகளில் உருவாகி வந்தது. ‘புறவயமான காரணகாரிய தர்க்கத்தை மட்டும் எல்லா சிந்தனைகளுக்கும் அடிப்படையாகப் பயன்படுத்துவது’ என்று அதை வரையறை செய்யலாம்.

அன்றைய ஐரோப்பா மத நிறுவனங்களின் பிடியில் இருந்தது. அவை காரணகாரியத் தர்க்கத்தை பெரும்பாவமாக முன்வைத்தன. உணர்ச்சிகரமான கண்மூடித்தனமான முழுமையான நம்பிக்கையே ஆன்மீகம் என விளக்கின. ஆகவே பகுத்தறிவு வாதம் அங்கே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. கிட்டத்தட்ட ஒருநூற்றாண்டு தேவைப்பட்டது, பகுத்தறிவு அங்கே பொதுமக்கள் மனத்தில் நிலைநாட்டப்படுவதற்கு.

பகுத்தறிவு என்பதை ஒற்றைச் சொல்லில் விளக்குகிறோம். ஆனால் அது ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல கருதுகோள்களில் ஒன்று. தனிமனிதன்- சுதந்திரசிந்தனை- ஜனநாயகம் போன்ற பல அடிப்படைகளுடன் பிரிக்கமுடியாதபடி கலந்தது அது.,

கண்மூடித்தனமான, உணர்ச்சிகரமான நம்பிக்கைகள் மக்கள் தங்களை பெருந்திரளாக உணரும்போது உருவாகக்கூடியவை.. அந்தப்பெருந்திரள் உணர்ச்சிகள் பற்பல நூற்றாண்டுகளாக இருந்து வரக்கூடிய பழங்குடி அடையாளங்கள் சார்ந்தவை. அந்த அடையாளங்களை நிலப்பிரபுத்துவகாலகட்ட அதிகார அமைப்புகள் மேலும் வலுவாக நிறுவியிருக்கும்.

பழங்குடிமனமும் சரி, நிலப்பிரபுத்துவ மனமும் சரி, தன்னை ஒரு பெருந்திரளின் சிறிய துளியாக மட்டுமே உணர்கின்றன. அந்த திரள் அடையாளத்தை உதறி மனிதன் தன்னை தனிமனிதனாக உணர ஆரம்பித்ததே நவீன காலகட்டத்தின் பிறப்புக்கு அடிகோலியது. ‘நான், என் சிந்தனை, என் தரப்பு’ என ஒருவன் சொல்ல ஆரம்பிக்கையில் அவன் தன்னைச்சூழ்ந்துள்ள பெருந்திரளின் உணர்ச்சிகளில் இருந்து வெளியே சென்றுவிடுகிறான். மனிதகுல வரலாற்றில் அது ஒரு பெரிய தொடக்கம்.

அவ்வாறு தனித்துச் சிந்திக்க ஆரம்பிக்கும் மனிதனை அவனுடைய சூழலில் உள்ள பெருந்திரள்மனப்பான்மை ஒடுக்குகிறது. அவனுடைய தனிச்சிந்தனையை அது அத்துமீறல் என்று முத்திரையிட்டு தண்டிக்கிறது. அவன் சூழலின் ஒட்டுமொத்த சிந்தனையை மீறி சுயமாக சிந்திப்பதற்காக போராடுகிறான். அதைத்தான் நாம் சிந்தனைச்சுதந்திரம் என்கிறோம். நெடிய போராட்டம் வழியாக அதை அடைந்தது ஐரோப்பா.

தனிமனிதன் உருவான பின்னரே ஜனநாயகம் பிறந்தது. ஆட்சியதிகாரத்தில் ஒவ்வொருவரும் பங்குகொள்வதையே நாம் ஜனநாயகம் என்கிறோம். மக்கள் கூட்டங்கள் தலைமைகளின் கீழ் திரண்டு பேரம்பேசி அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதற்குப்பெயரல்ல ஜனநாயகம். அது எல்லா காலத்திலும் இருந்ததுதான். மக்கள் ஒவ்வொரு தருணத்திலும் தனிமனிதர்களாகவே செயல்பட்டு அதிகாரத்தில் பங்கேற்கும்போதே ஜனநாயகம் பிறக்கிறது.

அந்த ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது பகுத்தறிவு. ஒரு மனிதன் தன்னுடைய சொந்த அறிதல்கள் மற்றும் அனுபவங்களைக்கொண்டு புறவயமாகச் சிந்தித்து நிதானமாக சரிதவறுகள் பற்றிய முடிவுகளை எடுப்பதையே பகுத்தறிவு என்கிறோம்,

ஆகவே பகுத்தறிவின் நேர் எதிர்தரப்பு என்பது ‘நம்பிக்கை’தான். காரணகாரியமற்ற நம்பிக்கை, உணர்ச்சிகரமான ஈடுபாடு இரண்டும் பெருந்திரள் மனநிலையால் உருவாக்கி அளிக்கப்படுபவை. அவற்றை எதிர்த்து உதறி முன்னால்செல்லக்கூடிய தனிமனிதனின் தர்க்கபூர்வ சிந்தனையே பகுத்தறிவு என்பது.

இந்தியாவில் நவீன ஜனநாயகப் பண்புகளை முன்வைத்த முன்னோடிச் சிந்தனையாளர்கள் அனைவருமே ’தனிமனிதன் – சுதந்திர சிந்தனை– ஜனநாயகம் – பகுத்தறிவு’ என்னும் அடிப்படைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். மதச்சீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயணகுருவும்கூட அதையே சொல்கிறர்

ஆனால் நான் பார்த்தவரையில் நேரடியாகவே பகுத்தறிவு என்ற அடிப்படையை தீவிரமாக முன்வைத்தவர் ஈவேரா அவர்கள். தன் வாழ்நாளெல்லாம் திரும்பத்திரும்ப அதை அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவாதத்துக்குப்பின் அவரது எழுத்துக்களை மீண்டும் வாசித்துப்பார்த்தபோது அத்தனை உரைகளையும் அவர் தனிமனித சிந்தனையை நோக்கியே முன்வைத்திருப்பதை கவனித்தேன். திரும்பத்திரும்ப ‘நான் சொல்கிறேன் என்று நம்பாதே. நீயே சுயபுத்தியைக்கொண்டு யோசித்துப்பார்’ என்றுதான் அவர் சொல்கிறார்.

பகுத்தறிவு என்ற சொல் இங்கே அவரால் நிலைநாட்டப்பட்டது. பின்னர் அது ஓர் அரசியலியக்கமாக மாறியது. இன்றும் தமிழகத்தில் மிக அதிகமாக புழங்கும் சொற்களில் ஒன்று அது.

ஆனால் நாம் பகுத்தறிவுள்ள சமூகம்தானா? இங்கே பகுத்தறிவு இருக்கிறது என்றால் பிற மூன்றும் இருக்கும். தனிமனிதஉணர்வு இங்கே ஓங்கியிருக்கும். சிந்தனைச் சுதந்திரம் இருக்கும். உண்மையான ஜனநாயகம் இருக்கும்.

இந்தியாவில் எங்கும் அவை இல்லை என்பதே என் மனப்பதிவு. கல்விஅறிவுள்ள மாநிலங்களும் கல்வியறிவற்ற மாநிலங்களும் எல்லாம் இதில் சரிசமம்தான்.

காரணம் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பெரும் அறிவியக்கம் என ஏதும் நிகழவில்லை. ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியக்கத்தின் உதிரி எதிர்வினைகள் நிகழ்ந்து ஆங்காங்கே தேங்கி மறைந்தன, அவ்வளவுதான். ஆகவே நம் மக்களின் சிந்தனையில் எந்த அடிப்படை மாற்றமும் நிகழவில்லை.

சுதந்திரப்போராட்ட காலத்தில்தான் நாம் நவீனயுகத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறோம். ஆரம்பத்தில் தேசிய இயக்கம் தனிமனித சிந்தனையையும் ஜனநாயகத்தையும் முன்வைப்பதாகவே இருந்தது. ஆனால் மிக விரைவிலேயே அது பெருந்திரள்மனப்பான்மையைக் கொண்டு இன்னும் வலுவான அமைப்பாக ஆகமுடியும் என்பதைக் கண்டுகொண்டது. ‘மகாத்மா காந்திகீ ஜே’ என எப்போது காங்கிரஸ் கோஷமிட ஆரம்பித்ததோ அப்போதே அங்கே நவீன ஜனநாயகப்பண்புகள் அழிந்தன. திரள்மனப்பான்மை மேலோங்கியது.

சுதந்திரத்துக்குப்பின் நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களை தனிமனிதர்களாகச் சிந்திக்கவைப்பதற்கு பதிலாக திரளாகக் கோஷமிட வைப்பதே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எளியவழி என்று கண்டுகொண்டன. மூன்று தலைமுறைகள் அந்த மனநிலையிலேயே பிறந்து வளர்ந்தன. ஆம், பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றம் இன்னும் இங்கே நிகழவில்லை.

இங்கே நுகர்வுத்தளத்தில் மட்டுமே நாம் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கிறோம். மற்ற மனநிலைகள் எல்லாமே நிலப்பிரபுத்துவம் சார்ந்தவை. நம்முடைய குடும்பம், நாம் வேலைபார்க்கும் அலுவலகச்சூழல், நம்முடைய மதநம்பிக்கை, நாம் கொண்டிருக்கும் அரசியல் எல்லாமே நிலப்பிரபுத்துவக்காலத்தையவை. எந்தவிதமான காரண காரிய தர்க்கத்துக்கும் அங்கே இடமில்லை. வெறும் நம்பிக்கை, உணர்ச்சிகரமான பற்று ஆகியவற்றால்தான் நாம் செயல்படுகிறோம். இது நான் எப்போதுமே சொல்லிவரக்கூடிய கருத்து.


பகுத்தறிவும் தமிழகமும்…

அப்படியென்றால் ஈவேராவின் பகுத்தறிவுப்பிரச்சாரம் இங்கே என்னவாயிற்று? நாராயணகுருவும் காந்தியும் என்னவானார்களோ அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவாக ஆனார். நாராயணகுருவுக்கு கோயில்கள் கட்டப்பட்டன.

ஈவேரா ‘தந்தை’ ‘பெரியார்’ என்று இரண்டு பட்டங்களால் அடையாளம் காணப்பட்டார். நாம் பல்லாயிரம் வருடங்களாக மூதாதை வழிபாடும் மூத்தார் வழிபாடும் கொண்டிருக்கும் சமூகம். ஒருவரை தந்தை என்றும் பெரியவர் என்றும் சொல்லி தெய்வத்தின் இடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால் அதன்பின் அவர் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ‘அவரெல்லாம் பெரியவர், நாம சின்னவங்க…நம்மால அதெல்லாம் முடியுமா?’ என்று சொல்லி நகர்ந்துவிடலாம்.

வாழ்நாளெல்லாம் ஈவேரா அவர்கள் சொல்லிவந்த பகுத்தறிவு பற்றிய அறிவுறுத்தல்கள் அப்படித்தான் ‘தெய்வத்தின்குரல்’ ஆக மாறி மறைந்தன. ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமாகக் கண்டார். ஆகவே எல்லா நம்பிக்கைகளையும் அவர் அடித்து நொறுக்க முயன்றார். எவையெல்லாம் புனிதமானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் விமர்சித்து கிண்டல்செய்து நிராகரிக்கிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள், ஆசாரங்கள் , பண்பாடு, பழம்பெருமைகள் எல்லாவற்றையும்.

தமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனைமேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும். அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை. நேர்மாறாக அவர்சொன்னவை எல்லாம் அவரது மகத்துவத்தின் இயல்புகளாக மட்டுமே கருதினர் நம் மக்கள்.

இந்தியாவில் இன்னும் பகுத்தறிவு- தனிமனிதசிந்தனை –ஜனநாயகத்துக்கான இயக்கம் தொடங்கப்படவேயில்லை என்று நான் சொன்னபோது மிகக்கடுமையாக எதிர்த்தனர் நண்பர்கள். மதம் அரசியல் தளங்களில் இங்கே பகுத்தறிவு சார்ந்த விமர்சனங்களுக்கு இடமிருக்கிறது என்றார்கள். குறிப்பாக ஈரோடுகிருஷ்ணன் இந்நிலைபாட்டை தீவிரமாக முன்வைத்தார்

தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் என்ற பேரில் நிகழ்வது மேல்மட்டத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திவந்த சில நம்பிக்கைகளை விமர்சிப்பது மட்டும்தான். அரசியல்தளத்தில் அந்த மேல்மட்ட ஆதிக்கம் இங்குள்ள பெரும்பான்மையினரால் இன்று தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதை விமர்சிப்பது எளிது. அதாவது தன் எதிரியின் நம்பிக்கைகளை விமர்சிப்பதைத்தான் இங்கே பகுத்தறிவு என்கிறார்கள். உண்மையான பகுத்தறிவு என்பது தன் சொந்த நம்பிக்கைகள் விமர்சிக்கப்படும்போது அதை ஒரு சமூகம் அனுமதிக்கிறதா என்பதில்தான் உள்ளது என்று நான் வாதிட்டேன்

இன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்தலைவரைப்பற்றியும் விமர்சனபூர்வமாக ஒரு நூலை எழுதிவிடமுடியாது. பகுத்தறிவுபேசிய ஈவேரா அவர்களைப்பற்றிக்கூட. அந்த விமர்சனத்துக்கு பதில் வராது, உணர்ச்சிக்கொந்தளிப்பான எதிர்வினைகளும், மிரட்டலும் மட்டுமே வரும். சாதியத்தலைவர்களைப்பற்றி பேசவே முடியாது, சாதியவாதிகள் தங்கள் சாதிக்கென உருவாக்கும் பொய்வரலாறுகளைப்பற்றி ஓர் வரலாற்றாசிரியன் கருத்து தெரிவிக்கமுடியாது. கற்பு பற்றி தன் சொந்தக்கருத்தை ஒரு நடிகை சொன்னபோது தமிழகம் எப்படி எதிர்வினையாற்றியது என நாம் கண்டோம். என்னுடைய அனுபவங்களெல்லாமே கசப்பானவை. ஓர் எளிய வரலாற்றுக்குறிப்பைச் சொன்னதற்காக நான் தெருத்தெருவாக வசைபாடப்பட்டேன்.

facebook_-924307089


எழுத்துரு விவாதம் ஏன்?

லடாக் பயணத்தில் அந்தவிவாதத்தின் முடிவில்தான் நான் சொன்னதைச் சோதித்துத்தான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் வந்தது. தமிழக அரசியலின் ‘புனிதபசுவாக’ போற்றப்படுவது மொழி. மொழிக்காக எவரும் எதுவும் செய்வதில்லை என்றாலும் மொழியை சென்ற ஐம்பதாண்டுக்காலமாக எந்த மதக்கொள்கையைவிடவும் தீவிரமான உணர்ச்சிகர நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளை வழிபடுவது பிற்போக்கு மொழியை வழிபடுவது முற்போக்கு என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.பகுத்தறிவை முன்வைத்த ஈவேரா அவர்களின் வழிவழ்ந்தவர்கள் உருவாக்கிய தீவிரநம்பிக்கை அது,

அது பற்றிய ஒரு கருத்தை முன்வைத்து எதிர்வினைகளை பார்ப்போம் என முடிவுசெய்தேன். இங்கே முற்போக்கினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், எத்தனைபேர் பகுத்தறிவுடன் பேசுகிறார்கள் என்று கணக்கிடுவோம் என்பதே நோக்கம். அவர்களின் உணர்ச்சிகர நம்பிக்கையைச் சீண்டக்கூடிய கருத்தாக இருக்கவேண்டும்.

அதேசமயம் அந்தக்கருத்து ஈவேரா அவர்கள் கூறியவற்றைப்போல ஒற்றைப்படையான ஒரு மறுப்போ நிராகரிப்போ ஆக இருக்கக்கூடாது. இருபக்கமும் பேச இடமிருக்கவேண்டும். பகுத்தறிவுநோக்கில் ஆராயும் ஒருவர் அந்தக்கருத்தின் வரலாற்றையும் அதன் எதிர்காலச் சாத்தியங்களையும் ஆராய வாய்ப்பிருக்கவேண்டும். ஆகவேதான் ஆங்கில எழுத்துரு விவகாரத்தை எடுத்துக்கொண்டேன்.

இந்தக்கருத்து புதியது அல்ல. ஏற்கனவே தொடர்ச்சியாக பல்வேறு அறிஞர்களால் அறிவுத்தளத்தில் முன்வைக்கப்படுவதுதான். உலகத்தமிழ்மாநாடுகளில் இது ஆய்வுக்கட்டுரைகளாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நிகழ்ந்துள்ளது. பலதளங்களில் இது சோதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகளாவிய பொதுமொழிக்கான தேடல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்து வருகிறது.

உண்மையில் இன்று மொழிக்கல்வி மிகச்சிக்கலான ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிகளைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியாது. அக்கட்டுரையில் நான் அதைப்பற்றிச் சொல்லியிருக்கும் விஷயங்கள் முழுக்கமுழுக்க உண்மை. தமிழில் மட்டுமல்ல , எழுத்தும் வாசிப்பும் பேரியக்கங்களாக இருந்த வங்காளம், உருது,மலையாளத்திலும்கூட அந்த நிலைதான். இளையதலைமுறை அம்மொழிகளில் வாசிப்பதில்லை. இந்தியமொழிகள் எல்லாமே சிறுபான்மையினரின் இலக்கியத்துக்கும், அன்றாடப்பேச்சுக்கும் மட்டுமே உரியவையாக ஆகிவருகின்றன, அவற்றில் அறிவியக்கம் நிகழாமலாகிவருகிறது.

அதற்கான தீர்வாக ஏற்கனவே அறிஞர்களால் பேசப்பட்டுவரும் பலவிஷயங்களில் ஒன்றை சுட்டிக்காட்டி அக்கட்டுரையை எழுதினேன். கட்டுரையில் அதுதான் ஒரே வழி என்று சொல்லவில்லை. அதைப்பற்றி யோசித்தாலென்ன, விவாதிக்கலாமே என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.சர்வதேசப்பொது எழுத்துருவில் தமிழ் என்ற விஷயம் வரும்காலத்தில் விவாதித்தேயாகவேண்டிய விஷயம். எவரும் அதற்கு எதிராக கண்களை மூடிக்கொள்ளமுடியாது. அந்த விவாதம் தொடங்கவேண்டுமென்றே நான் ஆசைப்பட்டேன். அது நிகழ்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

உண்மையில் இந்த விவாதத்தின் மையம் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கும்போது அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதுதான். எதிர்வினையாக வெளிவருவது வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பு.இந்த அளவுக்கு தமிழ்ப்பற்று உண்மையில் இங்கே இருந்தால் ஏன் இங்கே நூலகங்கள் ஈயடிக்கின்றன? ஏன் நூல்கள் தேங்கிக்கிடக்கின்றன? நம் மாணவர்களில் சொந்தமாக தமிழில் ஒரு பத்தி எழுதத்தெரிந்தவர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள் என்ற உண்மை ஏன் எவருக்குமே ஒரு பொருட்டாகத்தெரிவதில்லை?

இங்கே சொல்லப்படும் எதிர்வினைகளைப்பாருங்கள். மொழியின் எழுத்துருவை மாற்றக்கூடாது, மாற்றினால் தமிழ் அழியும், ஏனென்றால் அது முன்னோர் வகுத்தது, அதில்தான் திருவள்ளுவர் எழுதினார் [திருவள்ளுவர் பிராமி எழுத்துருவில் எழுதியிருப்பார்] மொழி என்பது தாய்போல– இதெல்லாம்தான் சொல்லப்பட்டன. இதைத்தான் எல்லா மதநம்பிக்கையாளர்களும் சொல்கிறார்கள்.

இதில் எங்கே இருக்கிறது பகுத்தறிவு?இந்த கொந்தளிப்பு, வசை நிறைந்த எதிர்வினைகளுக்கும் மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் வரும் எதிர்வினைகளுக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே வெறும் உணர்ச்சிகள் மட்டும்தானே? ஒரு கோயில்சடங்கை மாற்றியமைக்கையில் கொந்தளிக்கும் பக்தனும், சாதியாசாரம் மீறப்படுகையில் அரிவாள் தூக்கும் கிராமவாசியும் இதே மனநிலையில்தானே இருக்கிறார்கள்? இதற்கு எதிராகத்தானே ஈவேரா பகுத்தறிவை முன்வைத்தார்?

எழுத்துரு விவாதத்தின் சரியான தரப்புகள்..

என் கருத்துக்கு பகுத்தறிவு சார்ந்த எதிர்வினை இரண்டு தரப்பில் இருந்து மட்டுமே வரும் என்று நான் வாதிட்டேன். ஒன்று, உண்மையான மார்க்ஸிஸ்டுகளின் சிறிய அறிவுத்தளம். இன்னொன்று சிற்றிதழ்கள் சார்ந்த அதைவிடச்சிறிய அறிவுத்தளம். மொத்த எதிர்வினையில் பத்துசதவீதத்துக்குள் அவர்கள் அடங்குவார்கள். மற்றவர்கள் பெருந்திரள் எதிர்வினைகளை மட்டுமே செய்வார்கள் என்றேன்.

நான் எண்ணியதே நடந்தது. எதிர்வினைகளில் சிலரே தர்க்கபூர்வமாக எழுதினர். இந்தியமொழிகளுக்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதைப்பற்றிய பேச்சு 1920 கள் முதலே இருந்துவருவதைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அனைத்துமொழிகளுக்கும் தேவநாகரி எழுத்துருவைப் பயன்படுத்துவது பற்றியும் இங்கே பேசப்பட்டுள்ளது. அதற்கு எதிராகவும் ஆங்கில எழுத்துருவை பயன்படுத்துவதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.

வ.செ.குழந்தைசாமி உள்ளிட்ட பலமுன்னோடி அறிஞர்கள் இந்த ஆலோசனையை குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர் சிலர். ராணுவத்தில் இந்தியை ஆங்கில எழுத்துருவில் எழுதும் முயற்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அது இன்னும் ஓரளவு புழக்கத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இம்முயற்சி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றனர்.

இதைத்தவிர இந்தியமொழிகளுக்காக ஒரு பொது எழுத்துருவை உருவாக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரதி என்ற பொது எழுத்துரு இன்னும் சோதனைத்தளத்தில் உள்ளது என்று செந்தில்குமார் தேவன் ஐஐடியில் இருந்து எழுதினார்

மொழியியலாளர் நா.கணேசன் . ‘ஜெயமோகன் ஓர் இன்றியமையாத விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறார்’ என்று சொல்லி ‘ஏற்கெனவே, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளையும் ரோமன் எழுத்துமுறையில் எழுதும் ISO 15919 முறை இருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்துக்கு ரோமன் எழுத்துமுறையைக் கையாளலாம். ISO 15919 வினோத் ராஜனின் அக்ஷரமுகம் பயன்படுத்தி ஆண்டிராய்ட், ஐபோன் போன்றவற்றுக்கு அளிக்கவேண்டும். அப்போது தமிழ் லிபி வலைப்பக்கங்களை, மின்மடல்களை, குறுஞ்செய்திகளை ரோமன் லிபியில் படிக்கலாம். கணிமுனைவர்கள் இந்த Apps செய்து அளிப்பது மிக எளிது. ஆசிய மொழிகள் அனைத்துக்குமே Digraphia என்னும் பொதுமுறை வந்த்துவிட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியாவின் எல்லா மொழிகளும் தொடர்ந்து எழுத்துருக்களை மாற்றிக்கொண்டேதான் உள்ளன. மலையாள எழுத்துக்கள் அச்சுக்காக முப்பதுகளில் மாற்றப்பட்டன. கணிப்பொறிக்காக தொண்ணூறுகளில் மாற்றப்பட்டன. அம்மாற்றங்கள் மிக எளிதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஏன் தமிழகத்திலேயே உலகளாவிய அரபு எண்கள் நூறாண்டுகளுக்கு முன்புதான் அறிமுகம்செய்யப்பட்டன. தமிழ் எண்கள் இன்று பொதுப்புழக்கத்தில் இல்லை. இன்னும்கூட தங்கள் சொந்த மொழு எண்களை மராட்டியத்திலும் குஜராத்திலும் கிராமப்புறங்களில் அவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். உலகிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக அவர்கள் வாழ்வதுபோலத் தோன்றும். எழுத்துரு மாற்றம் மொழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. மொழியின் உள்ளடக்கமே மொழி.

இவ்வாறு மொழியின் எழுத்துருவம் மாறும்போது மொழிக்குரிய தனித்த உச்சரிப்புமுறை அழியக்கூடும். மொழியின் இலக்கியங்களில் பெரும்பகுதி அன்னியமாகக்கூடும். மேலும் அப்படி ஒரு உலகப்பொதுமை வரலாற்றில் நிகழ இடமளிக்கக்கூடாது. அது வல்லாதிக்கமாகவே இருக்கும்— இது சிலருடைய கருத்தாக இருந்தது.

— இவ்வாறு சாதகபாதகங்களைக் கணக்கில் கொண்டு பேசப்படும் ஒரு விரிவான விவாதத்தையே பகுத்தறிவுசார்ந்தது என்று சொல்லமுடியும். அவ்வகை எதிர்வினைகள் மிகமிகக்குறைவாகவே வந்தன. பெரும்பாலும் என்னுடைய வாசகர்வட்டத்துக்குள் அவை நிகழ்தது எனக்கு பெருமிதமளிக்கிறது


எழுத்துரு பற்றி என் கருத்து என்ன?

சரி, நான் என்ன நினைக்கிறேன்? என் கருத்துக்களை நான் முன்வைக்கும் முறையை அறிந்தவர்கள் ஒருபோதும் ஒற்றைப்படையாக நான் ஒன்றைச் சொல்வதில்லை என்பதை கவனித்திருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நேர்நிலை –எதிர்மறை கருத்துக்களை தொகுத்துச்சொல்லி அதன் சாரமாக என் தரப்பைச் சொல்வதே வழக்கம்.

ஆங்கில [ரோமன்] எழுத்துருக்களில் ஆசிய மொழிகளை எழுதுவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மக்கள் ஒரே எழுத்துருவைக் கற்றால்போதுமானது என்பது ஒன்று. ரோமன் எழுத்துரு இன்னும் அரைநூற்றாண்டில் உலகளாவிய எழுத்துருவாக இருக்கக்கூடும் என்ற வரலாற்றுச்சாத்தியத்தைப்பார்க்கையில் அது முக்கியமான ஒரு விஷயம். தமிழ்மக்கள் உலகளாவிய பொதுப்போக்கில் இணைவதுடன் தமிழையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைநோக்கித்தான் உலகம்செல்கிறதோ, அடுத்த நூறாண்டுகளில் அதுவே யதார்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் என்னிடம் உள்ளது. இன்று தகவல்தொடர்பு என்பதே உலகளாவிய உரையாடல் என்றாகிவருகிறது. நமக்குள்பேசிக்கொள்ளும் மொழி நம்முடைய அந்தரங்க வீட்டுமொழியாக மட்டுமே சுருங்கும்போது சர்வதேச மொழி அல்லது மொழிகள் நம் தொழிலிலும் கல்வியிலும் ஆதிக்கம்செலுத்துவதைத் தவிர்க்கவே முடியாதென்று தோன்றுகிறது.

ஆகவே பல தளங்களில் பொது எழுத்துருவுக்கான முயற்சிகள் இன்று நிகழ்கின்றன. அந்த இடத்தை ஆங்கிலத்தின் எழுத்துருவே அடைந்தும் வருகிறது. இன்று உண்மையிலேயே வணிகத்தளத்தில் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவது நடந்துவருகிறது.

அப்படி மாற்றம் நிகழும்போது நான் எழுதுவது உட்பட இன்று பல உலகமொழிகளில் இருக்கும் இலக்கியங்கள் முழுக்க வெறும் வரலாற்றுச்சேகரிப்பாக மாறி ஆராய்ச்சிப்பொருளாக மட்டும் எஞ்சக்கூடும் என்றும் மிகச்சில பக்கங்களே உலகளாவிய அறிவியக்கம் நிகழும் மொழிகளுக்குச் சென்று அடுத்தடுத்த தலைமுறையினரின் கவனத்தில் நீடிக்கும் என்றும் அஞ்சுகிறேன்.

காரணம், சென்ற ஐம்பதாண்டுகளில் உலகின்போக்கை கவனித்தால் சீராக உலகப்பொதுமை ஒன்று உருவாகிக்கொண்டிருப்பதையே காண்கிறோம். தனித்தன்மைகள் அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு ஆராய்ச்சித்தகவல்களாக மட்டும் சேமிக்கப்படுகின்றன ,அவ்வளவுதான்.

இச்சூழலில் எல்லா தனித்தன்மைகளும் வாழவேண்டும் என்றும், இல்லையேல் அறிவியக்கம் நீடிக்கும் – இலக்கியம் அழியும் என்றும்தான் ஐயப்படுகிறேன். இதன் எதிர்மறை விளைவுகளை கணக்கில் கொண்டு பார்க்கிறேன். வேகமாக தனித்தன்மைகள் கைவிடப்படுகின்றன. அவற்றை ‘பாதுகாக்கும்’ முயற்சிகள்தான் நிகழ்கின்றனவே ஒழிய ‘வாழ்வாக நீடிக்கச் செய்வது’ பற்றிய விவாதங்களே இல்லை

இது அதீதக் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சென்ற அரை நூற்றாண்டுக்குள் உலகமெங்கும் நாட்டார்கலைகள் அழிந்துவிட்டன என்பதை நாம் கவனிக்கவேண்டும். நம் தந்தையின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சமாக இருந்த நாட்டார்கலைகளில் பெரும்பகுதி இன்று இல்லை. அவை ‘ஆவண’ப்படுத்தப்படுகின்றன. சடங்குகளாக மட்டும் நடத்தப்படுகின்றன. இன்றைய கலைகள் எவையும் வட்டாரத்தன்மை கொண்டவை அல்ல. அவை உலகளாவியவை மட்டுமே.

எழுத்தாளனாக இந்தக் கவலையை தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை முன்வைத்திருக்கிறேன். பண்பாட்டின் நுண்ணிய வேற்றுமைகள் அழிந்தால் கலையிலக்கியம் பெரிய சரிவைச் சந்திக்கும். பொதுமைக்கு எதிராக தனித்தன்மை அதேயளவுக்கு வலிமையுடன் முன்வைக்கப்படவேண்டும்.

இவ்வாறு இரு தரப்பையும் பார்க்கையில் தமிழ் எழுத்துரு மட்டுமல்ல எல்லா எழுத்துருக்களும் நீடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான வழி என்பது மொழியையோ எழுத்துருவையோ கட்டாயப்படுத்துவது அல்ல. உணர்ச்சிகரமான வெற்றுக் கோஷங்களும் அல்ல. எந்த நவீனத்தொழில்நுட்பம் இந்தச் சிக்கலை உருவாக்குகிறதோ அதையே இதற்கு எதிராக துணைகொள்வதுதான். இதை இந்த தளத்திலேயே முன்னரும் எழுதியிருக்கிறேன். இதைப்பற்றிய பொதுவிவாதம் வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ஆங்கில எழுத்துருவில், அல்லது இனிவரப்போகும் பொதுஎழுத்துருவில் தமிழ் எழுதப்படுவது எப்படியும் நிகழ்ந்தே தீரும்.அதன் விளைவுகளை நாம் யோசிக்கவேண்டும். அதில் தமிழ் எழுதப்பட்டு பெருவாரியாக வாசிக்கப்படுமென்றால் தமிழ் நடைமுறைத்தளத்தில் வாழவே செய்யும்.கூடவே மொழியின் பல தனித்தன்மைகள் அழியும். ஆகவே அந்த எழுத்துரு ஒரு தனித்த போக்காக நிகழும்போது இன்றைய எழுத்துருவும் நீடிப்பதற்கு என்னசெய்யலாம் என்பதைப்பற்றி பேசியே ஆகவேண்டும். இதுவே இன்று என் எண்ணம்

இவ்விவாதம் இன்று உருவாகிவரும் சூழலை கவனிப்பதற்கும் அதை வெல்வதற்கான வழிகளை ஆராயவும் உதவினால் நல்லது. அதற்குத்தேவை சமநிலையான, பகுத்தறிவுசார்ந்த அணுகுமுறை.


சீண்டுவது பற்றி…

இத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள சீண்டும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது மீண்டும்.

உலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள் அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய் முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள் உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டு- லூகி பிரண்டல்லோ போல.

சமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில் அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.

ஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம் இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம் சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.

எழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில் எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள் சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.

சென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.

இன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம் ஒருவகையான ‘ஷோ பிஸினஸ்’ என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள் செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.

தமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய ‘விளம்பரத்தின்’ பலன் என ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில் வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச் சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும் தேவை.

அப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல் கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம் அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.

எனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின் தோல்வி.

இது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும் எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உல்க இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ‘ஸ்டண்ட்’ அடித்தவர்களே.

நான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை என்றே உணர்கிறேன்.

இலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின் பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள் நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள் காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும் எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.


நாமிருக்கும் இடம்…

எதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது

ஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில் மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.

நாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும் கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும் சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.

அதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.


முந்தைய கட்டுரைகள்


அரசியல் – விவாதங்கள்


ஏன் விவதிக்கிறேன்/

ஸ் பெ

unread,
Nov 8, 2013, 2:50:24 AM11/8/13
to panbudan

ஸ் பெ

unread,
Nov 8, 2013, 3:00:34 AM11/8/13
to panbudan

அது போன மாசம், இது இந்த மாசம்

பெரியாரைப் பற்றி ஜெயமோகன் இன்று

“ஆனால் நான் பார்த்தவரையில் நேரடியாகவே பகுத்தறிவு என்ற அடிப்படையை தீவிரமாக முன்வைத்தவர் ஈவேரா அவர்கள். தன் வாழ்நாளெல்லாம் திரும்பத்திரும்ப அதை அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவாதத்துக்குப்பின் அவரது எழுத்துக்களை மீண்டும் வாசித்துப்பார்த்தபோது அத்தனை உரைகளையும் அவர் தனிமனித சிந்தனையை நோக்கியே முன்வைத்திருப்பதை கவனித்தேன்.”

http://www.jeyamohan.in/?p=41612

பெரியாரைப் பற்றி ஜெயமோகன் அன்று

”ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது. அவசர முடிவுகளின் அடிப்படையில் அதி மூர்க்கமான செயல் பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது. அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளைப் பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்பு கொண்டது என்பதே என் விமரிசனம். அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று.”

http://www.jeyamohan.in/?p=368

ஸ் பெ

unread,
Nov 8, 2013, 6:30:56 AM11/8/13
to panbudan
'உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவையும் மக்கள் முட்டாள் என்று தான் சொன்னார்கள்.. அது போல தான் இதுவும்' என்று ஜெமோவுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய அவரது தலைமை சீடர்களை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது..
:)



2013/11/8 ஸ் பெ <stalinf...@gmail.com>

இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் அடிமுட்டாளல்ல என்றாவது என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஊகிக்க முடியும்]




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------


ப்ரியன்

unread,
Nov 8, 2013, 9:52:39 AM11/8/13
to panb...@googlegroups.com

எழுத்துரு விவாதம்

தமிழின் எழுத்துருவை ரோமன் வடிவில் எழுதலாம் என்று ஒரு நாளிதழில் யோசனை கூறியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். முதலில் ‘எழுத்துரு’ என்று ஜெயமோகன் பயன்படுத்துவதே தவறு. எழுத்துரு என்பது font. இதை பலர் சுட்டிக் காட்டிய பிறகும் இன்னமும் எழுத்துருவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன் ஒரு புது யோசனையை சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையாவென்று விவாதிப்போம் என்று அவரது அபிமானிகள் சொல்லி வருகிறார்கள். மிக ஜாக்கிரதையாக ‘டிஸ்கி’ போட்டு ‘ஜெயமோகனின் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால்’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அரங்கசாமி போன்ற விஷ்ணுபுர பக்தர்களை குறை சொல்ல எதுவுமில்லை. ‘வெள்ளை காக்கா பறக்கிறது’ என்று ஆசான் சொன்னால், ‘ஆமாம்’ போட்டுவிட்டு செல்கிறவர்கள்தான். 

ஜெயமோகனை போலவே நான் ஒரு யோசனை சொல்கிறேன். இதை விவாதிப்போமா நண்பர்களே? 

புவி சூடேறுதல் காரணமாக வருடாவருடம் வெயில் ஏறிக்கொண்டே போகிறது. கடுமையான வெக்கையில் உடைகள் உடலுக்கு பெரும் துன்பமாக படுகிறது. எனவே தமிழ் சமூகம் உடையணிய வேண்டுமா என்று தோன்றுகிறது. அந்தமானில் கூட பழங்குடி சமூகத்தினர் உடை அணிவதில்லை. 

‘உடைகள் வேண்டாம்’ என்று நான் கூறியிருப்பது புது யோசனை. பைத்தியக்காரத்தனமான யோசனைதான். கேட்டதுமே என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்றுகூட நான்கு பேருக்கு தோன்றும். ஆனாலும் அந்தமானில் உடை அணிவதில்லை, ஆப்பிரிக்காவில் மேலாடை கிடையாது என்று உதாரணங்கள் காட்டி என்னுடைய கேணைத்தனமான யோசனைக்கு தர்க்கரீதியாக சில பக்கங்களுக்கு என்னால் பலம் சேர்க்க முடியும். ஜெயமோகன் செய்துக் கொண்டிருப்பது இதைதான். இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. அவர் எந்த சிந்தனையை முன்வைத்தாலும் இப்படி அரைகுறையாகதான் இருக்கும். ஏனெனில் ஜெயமோகன் தன்னை சிந்தனையாளர் என்று கருதிக்கொள்ளும் சராசரி. எழுதத் தெரிந்தாலே சிந்தனையாளர் ஆகிவிடலாம் என்கிற அபத்தமான ஆபத்தான முடிவுக்கு நிறையபேர் வந்துவிட்டதுக்கு இவரொரு முக்கிய காரணம். புண்ணாக்கு விற்பவரெல்லாம் தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்கிற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிந்தனையாளர் என்றால் இந்தியாவில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள்தான். ஜெயமோகன்கள் இந்த லெவலா என்று உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 

தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் என்று ஜெயமோகன் அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். சமகால தமிழிலக்கியத்தில் அவர் தவிர்க்கமுடியாதவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஜெயமோகனின் நாவல்களும், சிறுகதைகளும் சிறப்பானவை. வேறெவரையும் விட அதிகமாக உழைத்து அசுரவேகத்தில் நிறைய பக்கங்களை எழுதிக் குவிக்கிறார். இன்னும் ஒரு இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சிறுபத்திரிகை வாசகர்கள் ஜெயமோகனை நினைவு வைத்திருப்பார்கள். ஆனால் இது மட்டும் தமிழுக்கு பெரும் பங்கு ஆற்றிவிட்டதற்கு போதுமானதல்ல. வெறும் எழுத்து மட்டுமே பங்களிப்பாகிவிடாது இல்லையா? எழுத்தை தாண்டி பாரதியார், உ.வே.சா போன்றவர்கள் பங்களித்தார்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது. எழுத்தின் மூலம் சில நிரந்தர வாசகர்களை ஜெயமோகன் பெற்றிருக்கிறார். சினிமாவில் எழுதி நிறைய பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தாண்டி ஜெயமோகனால் தமிழ் என்ன வளம் பெற்றிருக்கிறது. தெருத்தெருவாக சைக்கிள் ஓட்டி குழந்தைகளுக்கு தமிழ் கணிமை சொல்லிக் கொடுக்கும் புதுவை பேராசிரியர் இளங்கோவன் போன்றவர்கள்கூட இவ்வளவு கர்வமாக தமிழுக்கு பங்காற்றியதாக சொல்லிக்கொள்வதில்லையே? 

சில குறிப்பிடத்தக்க நாவல்களையும், சிறுகதைகளையும், அச்சுபிச்சுவென்று அரசியல் பேசும் கட்டுரைகளையும் எழுதியிருப்பதால் மட்டுமே தமிழுக்கென்றிருக்கும் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லும் தகுதி ஜெயமோகனுக்கு வந்துவிடவில்லை. தமிழ் மொழியை சீர்த்திருத்தவும், அடுத்தடுத்த தளங்களுக்கு எப்படி கொண்டுச் செல்லலாம் என்கிற கவலையையும் கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் ஏற்கனவே பல்லாண்டுகளாக பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக யோசித்து வருகிறார்கள். பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தும் வருகிறார்கள். முகுந்த், நாகராஜன் மாதிரி தமிழ் படித்த அடுத்த தலைமுறை இளைஞர்கள், தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி எதிர்கால எந்திரங்களில் எப்படியெல்லாம் தமிழை சாத்தியப்படுத்தலாம் என்றும் உழைத்தும் வருகிறார்கள். எனவே தமிழின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, ஜெயமோகன் முழு ஈடுபாட்டோடு மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதும் வேலையை பார்க்கலாம். 

பெரியார் தொடங்கி வா.செ.குழந்தைசாமி வரை இதே யோசனையை சில வேறுபாடுகளுடன் முன்பே சொல்லி விவாதிக்கப்பட்ட கருத்து என்று வடிகட்டிய புளுகுமூட்டையை வேண்டுமென்றே அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன். பெரியார் எங்குமே தமிழுக்கு பங்காற்றப் போவதாக சொல்லி எழுத்துச் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. அவர் பத்திரிகை நடத்தி வந்தவர். அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே ‘பெரியார் தமிழ்’ உருவானது. ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று பெரியாரா சொன்னார்? பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் யோசனை எழுத்து வடிவம் தொடர்பானது. கொம்பு, சுழி போன்றவற்றை நீக்கி எழுத்துகளை எளிமைப்படுத்தும் பட்சத்தில் கற்றல் எளிமையாக இருக்கும். கணினி தொடர்பான எந்திரங்களுக்கு தமிழை கொண்டுவருவதற்கு உதவியாகவும் இருக்குமென்பது பேராசிரியரின் யோசனை. அவர்களுக்கு இணையாக தன்னையும் தானே ஒப்பிட்டுப் பேசுவது அற்பத்தனமின்றி வேறில்லை. சீண்டுவதற்காக சொன்னேன் என்று சொல்லுபவரிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? 

அடுத்து இந்த யோசனையை சொல்லியதற்காக தமிழகமே பற்றியெரிவது போன்ற மாயையை ஜெயமோகனும், அவரது சிஷ்யக்கோடிகளும் திட்டமிட்டு இணையத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை எங்குமே ஜெயமோகனின் கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி நடத்தி ‘ஜெயமோகன் ஒழிக’ என்று யாரும் கோஷமிடவில்லை. இதெல்லாம் நடக்கும் என்பதுதான் ஜெயமோகனின் எதிர்ப்பார்ப்பு. ‘அவர் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டார், அவ்வளவு ஒர்த்தும் இல்லை’ என்று வெறும் கண்டனத்தோடு தமிழர்கள் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இந்துமுன்னணி ஜெயமோகனை அச்சுபிச்சுவென்று வெறேதோ விவகாரத்துக்காக திட்டி வைத்த ஒரு பேனரை தன் வலைத்தளத்தில் போட்டு, என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் பாருங்கள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். 

‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டின் அலுவலகத்துக்கு கூட்டமாகப் போய் கலாட்டா செய்தார்கள், வன்முறை செய்தார்கள் என்றெல்லாம் காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய தத்துவ மரபின் பிள்ளைகள். பதினைந்து பேர் என்பதை கூட்டமென்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியுமென்றே தெரியவில்லை. இவர்களது ‘சிகரெட் பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது’ சுவிசேஷக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து பழகிவிட்டவர்களுக்கு பதினைந்து பேர் என்பதும் பெரும் கூட்டமாக தெரிகிறது. தமிழுக்காக அணி திரளவேண்டுமென்றால் லட்சங்களில்தான் தமிழர்கள் அணிதிரள்வார்கள் என்பது வரலாறு. 

தங்களுக்கு மடத்தனமாக பட்ட ஒரு யோசனையை கண்டித்து சம்பந்தப்பட்ட கட்டுரையை வெளியிட்ட நாளேட்டின் ஆசிரியரிடம் கண்டனக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் சுபவீ தலைமையிலான தமிழார்வலர்கள். இது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைதான். இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று ஒரு கோஷ்டி ஊளையிடுகிறது. தி ஹிந்து நாளேட்டின் ஆசிரியருக்கு, அன்று கடிதம் கொடுக்க வந்த அனைவருமே பழக்கமானவர்கள்தான். அந்த பத்திரிகையே கூட பதினைந்து பேர் கொண்ட பெரும் கூட்டம் தங்களை அச்சுறுத்தியாக கூறவில்லை. கண்டனக் கடிதம் கொடுக்கவந்தவர்களை மதித்து ஆசிரியரே நேரில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இம்மாதிரி சர்ச்சைக்குரிய கட்டுரைகளோ, கருத்துகளோ வரும் சமயங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போனிலோ, நேரிலோ எதிர்வினையை யாராவது செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘நடிகையின் கதை’ தொடர் வந்தபோது, குமுதம் அலுவலகத்துக்கு சண்டை போடும் நோக்கில் வந்த நடிகர்-நடிகையரை அப்போதைய ஆசிரியர் மாலன் வரவேற்று, அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டறிந்தார். சமீபத்தில் புதிய தலைமுறை அலுவலகத்துக்கு கூட முன்னூறு பேர் கொண்ட கும்பல் மொத்தமாக லாரியில் வந்திறங்கியது. அவர்களை அழைத்து தன்மையாக பேசி, அவர்கள் தரப்பை கேட்டறிந்து அனுப்பினார்கள். இது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம்தான். ‘மாட்டுக்கறி’ மேட்டரில் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவமாக பதினைந்து பேர் கூடி கடிதம் கொடுத்ததை ஜெயமோகனின் கும்பல் ஒப்பிட்டுப் பேசுவது விளம்பரவெறியே தவிர வேறல்ல. 

திடீரென்று பெரியாரின் பகுத்தறிவு என்னானது என்று ஜெயமோகனுக்கு பெருங்கவலை ஏற்பட்டிருக்கிறது. அதை பெரியாரின் விசுவாசிகள் பட்டுக் கொள்வார்கள். ஏதாவது ‘தத்துபித்து’வென்று உளறிக்கொட்டி, அந்த அபத்தத்தை கண்டு ஊரெல்லாம் கைக்கொட்டி சிரிக்கும்போதெல்லாம் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி ‘நானும் ரவுடிதான்’ என்று ஜீப்பில் ஓடிப்போய் ஏறிக்கொள்வார் ஜெயமோகன். 

எதிர்வினை நாகரிகமாக இருக்கவேண்டுமென்று திரும்பத் திரும்ப ஜெயமோகனின் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், யாராவது அநாகரிகமாக திட்டுங்களேன் என்று கெஞ்சுவதைப் போல இருக்கிறது. ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. அந்த வரலாற்றை கொச்சைப்படுத்துவதைப் போன்ற கருத்தை வேண்டுமென்றே சீண்டலுக்காக சொல்லுவது என்பது, எப்படியோ தன் பெயரை நல்லபடியாகவோ, கெட்டபடியாகவோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அற்ப எதிர்ப்பார்ப்பே தவிர வேறில்லை. 

செத்த மொழியான சமஸ்கிருதத்தை இப்போது இந்திய ஞான மரபாளர்கள் ஆங்கில லிபியில் வாசித்து, மனப்பாடம் செய்கிறார்கள். அப்படியிருக்கையில் தமிழை மட்டும் தனி வரிவடிவத்திலேயே தமிழர்கள் இன்னும் வைத்திருக்கிறார்களே என்கிற பொச்செரிச்சல்தான் இந்த ‘எழுத்துரு’ யோசனைக்கு பின்னாலிருக்கும் நிஜமான சூட்சுமம் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது.
எழுதியவர் யுவகிருஷ்ணா

Ganesh Kumar

unread,
Nov 9, 2013, 2:57:17 AM11/9/13
to panb...@googlegroups.com


On Friday, November 8, 2013 5:00:56 PM UTC+5:30, காலப் பறவை wrote:
'உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவையும் மக்கள் முட்டாள் என்று தான் சொன்னார்கள்.. அது போல தான் இதுவும்' என்று ஜெமோவுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய அவரது தலைமை சீடர்களை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது..
:)




கலிலியோ உலகம் உருண்டை எனக் கூறிய பொழுது  உலகம் தட்டைதான் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களால் அதை நம்பமுடியவில்லை.

கலிலியோவை கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டார்கள். அப்பொழுது கலிலியோ உலகம் தட்டை தான் எனக் கூறி அவர்களிடமிருந்து தப்பித்தார்.

கலிலியோவின் சீடர்கள் , அவர்களுக்குப் பயந்து ஏன் அப்படிக் கூறினீர்கள் எனக் கேட்டதற்கு....

" உலகம் உருண்டை என்ற எனது கண்டுபிடிப்பு உண்மைதான், அதற்காக பிடிவாதக் காரார்களின் முட்டாள் தனத்திற்கு நான் பலியாக விரும்பவில்லை " எனக் கூறினாராம் கலிலியோ.

கலிலியோவைப் பற்றிய செய்தி என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன் :)

ப்ரியன்

unread,
Nov 9, 2013, 12:17:53 PM11/9/13
to panb...@googlegroups.com

நேச மித்ரன்

Shared publicly  -  14:42
 

//தமிழ் எழுத்துரு சிரமமானது, சிக்கலானது என்று எவருமே கூறியதில்லை. கால்டுவெல், வீரமாமுனிவர், கமீல் சுவலபெல், செம்பியன் எனப் பல்வேறு மொழியினர் தமிழைக் கற்று ஒப்பிலக்கணம், காவியம் போன்றவற்றை எழுதிய நிலையில் தமிழ் எழுத்துரு குறித்து ‘சிரமமானது’ எனக் கூறியதில்லை. ‘UNION' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக ‘ஒன்றியம்’ என்பதைத் தந்தவர் ரூடின் என்ற செம்பியன் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.// 

(‘தி இந்து” இதழில் கடந்த 4.11.2013ஆம் தேதி, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரைக்கு பதிலீடாக அன்றைய தினமே எனது தந்தை எழுதி அனுப்பிய கடிதம் இது. தி ஹிந்துவில் பிரசுரிக்கப்படாததால் இங்கே அக்கடிதம்.) 

பதில்கள் நிறையவே உள்ளன! 
----------------------------------------------------- - தெ.சுந்தரதமாலிங்கம், வத்திராயிருப்பு 

“ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என்று ‘தி இந்து” இதழில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பே பலருக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் கிளப்பிவிடும். 

சற்றே சிந்தித்துப் பார்த்தால் அவர் இவ்வாறு கூறியதற்குப் பிறகாவது நம் பொதுப் புத்தியில் பதிந்துள்ள விஷயங்களின் அடிப்படையிலேயே அவர் தம் கருத்தைப் பதிவு செய்கிறார் என்பது புரியும். 

“உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது” என்று கூறுவது அவருக்கு அண்மைக் காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்கள் ஜெர்மானிய, கொரிய, ஜப்பானிய ரஷ்ய மொழிகளைக் கற்று வருவது தெரியாதென்பதைக் காட்டுகிறது. ரஷ்ய, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆங்கிலத்தை உயர்வாக எண்ணாமல் தத்தம் தாய்மொழி வழியாகவே உயர்கல்வியைக் கற்பிக்கின்றன என்னும் உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது. 

“பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள்” போன்றே தமிழர்தம் குழந்தைகளும் பயில்வதாகக் கூறுகிறார். தமிழை இரண்டாம் மொழியாகப் படிக்கும் தமிழ்நாட்டுக் குழந்தைகள் “தட்டு தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர்” என்று தமிழ் மொழியின் நிலையைக் கூறுகிறார். குறைந்தது 10-ஆம் வகுப்பு முடியத் தமிழைக் கட்டாயப்பாடமாக்காத கல்வியாளர்களல்லாத வெற்று அரசியல்வாதிகளே இதற்கு முழுப் பொறுப்பு. 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த வேளையில் “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும்” என்று முன்பு நேரு தந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் ஒற்றைக் குறிக்கோளுடன் வெற்றி பெற்றனர். சொந்த மாநிலத்தில் தாய் மொழிக்கு ஏற்ற இடம் தரவேண்டும் என்பதை மறந்து ஆங்கிலத்தின் அடிமையாக மாறத் தொடங்கினர் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள்.  

காங்கிரஸ்காரரான சி.சுப்பிரமணியம் கல்லூரி அளவில் தமிழைப் பயிற்று மொழியாக்க முனைந்து பாடப் புத்தகங்களை வெளியிட்டதை மறக்கக் கூடாது. கல்விப் புலத்தில் தமிழைக் கீழிறக்கி ஆங்கிலத்தை அரியணையில் ஏற்றிவிட்ட கருணாநிதியின் செயல்பாடு இன்றளவும் தொடர்கிறது. 

குழந்தைகள் இளம் வயதில் சந்திக்கும் சிக்கல் “இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக் கொள்வதில் இருக்கும் சிரமம்தான்” என்பவருக்கு நாம் கூறக்கூடிய பதில் தாய்மொழியைத் தவிர வேறு மொழிகளைக் குழந்தைகளுக்கு ஏன் கற்று தர வேண்டும் என்பதுதான். 

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகமானது, இந்தியும் அவ்வாறே. 11-ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு முடியத் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் 1960க்கு முன் கல்லூரியில் இண்டர்மீடியட் என்னும் ஈராண்டுப் படிப்பையும் 1960-லிருந்து புகுமுக வகுப்பு என்னும் ஓராண்டுப் படிப்பையும் ஆங்கில வழியில் கற்றனர். அதன்பிறகு மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிற் கல்வியையும் கலைக் கல்லூரிகளில் அறிவியல் பிரிவுகள், கணக்கு, வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் போன்ற அனைத்தையும் ஆங்கில வழியில்தான் கற்றனர். 

உயர்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு முடியத் தமிழ் வழியிற் கற்றவர்களுக்கு இருக்கும் ஆங்கில அறிவு இன்று ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றவர்களுக்கு இல்லையென்பதை எவ்விதத் தயக்கமுமின்றிக் கூறலாம். 

குழந்தைகள் சிரமப்படுவதாகக் கூறுவது ஏற்கத் தக்கதல்ல. ஏனெனில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவி சிறு பிழைகூட இல்லாமல் வரிவடிவம் குறித்த அச்சமின்றித் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பாடங்களை எழுதுவதை அன்றாடம் பார்க்கிறேன். 

கல்விப் பணியில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலமாக ஈடுபட்டு வரும் என்னிடம் எந்த மாணவனும் தமிழ் எழுத்துரு எழுதக் கடினமாக இருக்கிறது என்று கூறியதில்லை. ஆங்கில எழுத்துருவோடு எவரும் ஒப்பிட்டுக் கூறியதும் கிடையாது.  

தமிழ் பயிற்றுவிக்கும் முறையில் “டங்கா டப்பா டமாரம்” என்பது பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் குழந்தைகள் நேர் கோடுகளாலான ‘ட’ எழுதச் சிரமப்பட்டனர். பிறகு மீண்டும் “அ, ஆ, இ” முறை நடைமுறைக்கு வந்தது. காரணம் என்னவெனில் சிறு குழந்தையிடம் எழுதுகோலைத் தந்தால் உடனே அது வட்டமாகக் கிறுக்குமே தவிர நேர்கோடு போடுவது மிகக் குறைவானது. 

தமிழ் எழுத்துரு சிரமமானது, சிக்கலானது என்று எவருமே கூறியதில்லை. கால்டுவெல், வீரமாமுனிவர், கமீல் சுவலபெல், செம்பியன் எனப் பல்வேறு மொழியினர் தமிழைக் கற்று ஒப்பிலக்கணம், காவியம் போன்றவற்றை எழுதிய நிலையில் தமிழ் எழுத்துரு குறித்து ‘சிரமமானது’ எனக் கூறியதில்லை. ‘UNION' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக ‘ஒன்றியம்’ என்பதைத் தந்தவர் ரூடின் என்ற செம்பியன் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். 

மொழிக்கு அடையாளமே எழுத்துருதான். மதுரையில் பெருவணிகர்களாகவும் நெசவுத் தொழில் வல்லுநர்களாகவும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களாகவும் விளங்குகின்ற சௌராஷ்டிரர்கள் என்போர் பேசி வரும் சௌராஷ்டிர மொழிக்கு எழுத்துரு இல்லாதிருந்நது. மொழியைக் காப்பாற்றப் பெரும்பொருள் செலவு செய்து வல்லுநர் குழு அமைத்து சௌராஷ்டிர மொழிக்கு எழுத்துரு உருவாக்கச் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது. துமிழ் நாட்டில் அவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

“இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொண்ட தமிழ் அவர்கள் (குழந்தைகள்) கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது” என்று ஜெயமோகன் கூறுவது ஏற்கதக்கதல்ல. மூன்றாம் மொழியாகக் கற்றுக் கொண்ட இந்தி குழந்தைகளின் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமுள்ளதாக ஆகிவிடுவது உண்மையா? இல்லையா? தமிழ் மட்டும் ஆகாதென்பது எதனால்? 

தமிழ் எழுத்துருவில் ஆங்கில ‘F’ சேர்க்கப்பட வேண்டுமென்றால் ஒரு கோரிக்கை ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒலித்தது. அரசும் அதைப் பரிசீலனை செய்யுமளவு நிலைமை முற்றியது. அறிஞர்களும் ஆர்வலர்களும் அணி திரண்டு எதிர்த்ததால் அத்தகைய மாற்றம் கைவிடப்பட்டது. தமிழ் எழுத்துருக்களில் ஒற்றை ஆங்கில எழுத்தை நுழைப்பதற்கே எதிர்ப்புக் கிளம்பிய தமிழ் நாட்டில் தமிழ் எழுத்துக்களைக் குப்பையில் வீசிவிட்டு அவ்விடத்தில் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு வர எண்ணுவது எத்தகைய பேதைமை! 

தமிழ் எழுத்துருக்கள் காலப்போக்கில் வடிவ அமைப்பில் மாறுதல்களைப் பெற்று வந்தது உண்மையே. ஆனால் எத்தருணத்திலும் அவை தம் தனித் தன்மையை இழந்துவிடவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. 

ஜெயமோகன் கூறும் ஆங்கில எழுத்துருப் பயன்பாட்டுமுறை போன்று ஆங்கிலவழி தமிழைச் சிதைக்கும் முறையை முனைவர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் கட்டுரை வடியில் தந்தார். சான்றாகக் ‘கோபால்’ என்ற சொல்லை ‘க்ஓக்ப்ஆல்’ என எழுத வேண்டுமென்றார்.  

குழந்தைசாமி, ஐராவதம் மகாதேவன் போன்றோர் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து எழுதியுள்ளனர். பெரியார் தாம் கொணர்ந்த எழுத்துச் சீர்திருத்த்தைத் தம் நூல்களில் பயன்படுத்தினார். நாளடைவில் அரசு அதை ஏற்றுக்கொண்டது. 

சி. சு. செல்லப்பா வெளியிட்டு வந்த ‘எழுத்து’ இதழில் 1964-ல் “தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்” என்ற என்னுடைய கட்டுரை வெளியானது. அதன்பின் பல அறிஞர்கள் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி எழுதிய வேளைகளில் என் கட்டுரையிலுள்ள விஷயங்களை எழுதி அனுப்பினாலும் பிரசுரிக்க எவரும் மனமில்லை, ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பது என் விஷயத்தில் உண்மையே. 

தமிழ் எழுத்துருக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தும் பொது ஏற்படும் எண்ணற்ற சிக்கல்களையும் குளறுபடிகளையும் விவரிக்க இங்கே இடம் போதாது, இக்கட்டுரையின் நோக்கமும் அஃதன்று. அவற்றைத் தனிக் கட்டுரை ஒன்றின் மூலம் என்னால் சுட்டிக் காட்ட முடியும். 

அடையாளமாக உலகம் முழுவதுமுள்ள மொழிகள் யாவற்றுக்கும் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்துவதுபற்றி ஜெயமோகன் சிந்திக்கலாம். 

மொழி என்பது வெறும் கருவியன்று. உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களின் நிலவியல், மண், நீர், தாவரம், விலங்கு, பறவை, உணவு, உடை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கை, சடங்கு ஆகியவற்றோடு தொடர்புகொண்டே சொல் பிறக்கும் ஒலியும் ஒலிக்கேற்ற வரிவடிவமும் உருவாகியுள்ளன. 

தமிழிலுள்ள ‘ஓ’ என்னும் எழுத்துக்குமட்டும் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளதை ஜெயமோகன் அறிவார். 

‘அ’ முதல் ‘ஒள’ முடிய உயிரெழுத்துக்களில் ‘ஈ’ தவிர ஏனைய எழுத்துக்கள் யாவும் வட்டம் போட்டுத்தான் எழுதப்படுகின்றன. ‘ஈ’ க்குப் பதிலாக ‘இ’* (* இணைப்பினைப் பார்க்கவும்) என்றெழுதும் முறையும் இருந்திருக்கிறது. 1935- ஆம் ஆண்டு தமிழ்ப் பாடப் புத்தகத்தில்(எஸ்.எஸ்.எல்.ஸி) இரண்டுவிதமான எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

“ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழி” என்பதைக் கேட்டிருக்கிறோம். “ஒரு மொழியை அழிக்க வேண்டுமானால் அதன் எழுத்துருவை அழி” என்பது ஜெயமோகனின் வழியாகும்” 


- கரிசல் குளத்தான் 

ராம் காமேஸ்வரன்

unread,
Nov 9, 2013, 7:09:07 PM11/9/13
to panb...@googlegroups.com
இந்த விவகாரத்தில் ஞாநியின் கருத்து.
ஞாநி சங்கரன்
தமிழை சீரழிக்கவும் கல்வி வியாபாரிகளைக் காப்பாற்றவும் சொல்லப்படும் யோசனை பற்றிய மாற்றுக் கருத்துகளை வெளியிடப் போகிறோம். உங்கள் கருத்தையும் கொடுங்கள் என்று இந்து தமிழ் ஏட்டிலிருந்து கேட்டார்கள். கொடுத்தேன். கீழே முதலில் வருவது நான் அனுப்பியது . அடுத்து வருவது அவர்கள் 'எடிட்'செய்து வெளியிட்டது.

நான் எழுதியது: 
1.சமூகத்தின் மீதும் மொழியின் மீதும் அக்கறையுள்ள படைப்பாளி ஒருவன் தான் கதைகள் எழுதினால் மட்டும் போதாது,பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி கருத்தும் சொல்லவேண்டும், அவற்றைக் கட்டுரைகளாக எழுதவேண்டும் என்று விரும்புவது வரவேற்கத்தக்கது. இதுதான் கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மரபு. அதனால் இடம் கிடைத்தால் கருத்து என்ற பெயரில் சொல்வாந்தி எடுக்கும் கதாசிரியர்கள் வசனகர்த்தாக்கள் எல்லாருமே சமூக அக்கறை உடையவர்கள் என்று அர்த்தமாகிவிடாது.

சமூக அக்கறையுள்ள படைப்பாளி கருத்து சொல்லும்போது இரு அம்சங்களை அவசியம் கவனிப்பான். ஒன்று தான் முன்வைக்கும் பிரச்சினையின் வேர் என்ன என்பதை வாசகருக்கு தெரிவித்தல். இரண்டாவது அந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்று தனக்குப் படுவதை அதற்கான் நியாயங்களுடன் பகிர்தல்.

"ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ?" என்ற கட்டுரையை எழுதிய மூளை இவை இரண்டையும் எப்படி செய்திருக்கிறது என்று பார்ப்போம். தமிழ்க் குழந்தைகள் தமிழை எழுதப் படிக்கக் கற்பது குறைந்துபோய்க் கொண்டே இருப்பதால், தமிழைப் பேச மட்டும் அவர்களுக்கு சாத்தியமானாலும், எழுதவோ படிக்கவோ முடியாத நிலை மொழிக்கும் இலக்கியத்துக்கும் ஆபத்தாகும். இது எவ்வளவு தூரம் உண்மை , இதில் சொல்லப்படும் தமிழ்க் குழந்தைகள் யார், மெட்ரிக், சி.பி.எஸ் ஈ குழந்தைகளா, தனியார் பள்ளிக் குழந்தைகளா, அரசுப் பள்ளிக் குழந்தைகளா என்றெல்லாம் எந்த ஆய்வையும் இந்த மூளை நம் முன்வைக்காததால், நாமும் சொல்லப்பட்ட அளவில் இந்த ஆபத்து உண்மையானது என்றே ஒப்புக் கொள்வோம். இந்தப் பிரச்சினையை முதலில் சொல்வது ஒன்றும் இந்த படைப்பு மூளை அல்ல. பல பத்து வருடங்களாக, கல்வியாளர்கள், அறிஞர்க்ள், இலக்கியவாதிகள், இந்தப் பிரச்சினையை சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதும் ஆங்காங்கே பல களப்பணியாளர்கள், தம்மால் இயன்ற சிறு தீர்வுகளை முயற்சித்துக் கொண்டிருப்பதும் யதார்த்தம்.

பிரச்சினையின் வேர் என்ன என்பதைப் பற்றி இந்தப் படைப்பு மூளை ஒன்றுமே சொல்லவில்லை. நேரே தீர்வுக்குப் போய்விட்டது. பிரச்சினையின் வேர் பற்ற் விவாதித்தால்தான் சரியான தீர்வு உருவாக்கப்படமுடியும். பிரச்சினையின் வேர் மிக எளிமையானது. கர்நாடகத்தில் பள்ளி முதல் உயர்கல்வி வரை கன்னட மொழியை ஒரு மொழிப்பாடமாகப் படிக்காமல் யாரும் கல்வி முடிக்க முடியாது. தமிழ்நாட்டிலோ ப்ரீகேஜி முதல் பி.எச்.டி வரை தமிழை மொழிப்பாடமாக எந்தக் கட்டத்திலும் எடுக்காமல் கல்வியை முடித்துவிடலாம். இதற்குக் காரணம் தமிழக அரசியல்வாதிகளும் கல்வி வியாபாரிகளும் கூட்டாகச் செய்துவந்திருக்கும் வணிக சதிதான். இதுதான் பிரச்சினையின் வேர் என்று தெரிந்தபிறகு , அதை சரி செய்யத்தானே தீர்வு சொல்லவேண்டியிருக்கும். அதற்கு இந்தப் படைப்பு மூளை தயாராக இல்லை. எனவே வேரையே சொல்லாமல், விபரீதமான தீர்வு சொல்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்தால், அதற்கான தீர்வுகளை எப்படி யோசிக்கவேண்டும் ? இனி அவை நடக்காமல் இருக்க வழிகள் என்ன என்றே அறிந்து செயல்படுத்த வேண்டும். அதற்கு பதில், எங்களால் 'ரேப்'களைத்தடுக்க முடியாது. எனவே ரேப் செய்யப்படும் பெண்கள் ரேப்பை சுகமான அனுபவமாக கருதி ஏற்றுக் கொண்டு விடவேண்டும் என்று சொன்னால் அது தீர்வா? அது மாற்று சிந்தனையா ? எப்படிப்பட்ட சமூகவிரோத சிந்தனை ! அதைப் போலத்தான் எங்கள் தமிழ்க் குழந்தைகள் தமிழ் எழுத்துகளைப் படிக்காமல் ஆங்கிலமே படித்து வருவதால், இனி எங்களால் அவர்களைத் தமிழ் படிக்க வைக்க முடியாது. எனவே தமிழையும் அவர்கள் ஆங்கில வரிவடிவத்திலேயே படிக்கட்டும் என்ற விபரீத யோசனை. விநாச காலே விபரீத புத்தி என்பது மூதறிஞர் ராஜாஜிக்குப் பிடித்த பழமொழி. அழுகின மூளைகளை ஆளுமைகளாக தமிழ் சமூகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வரைக்கும் இப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். அதை அடையாளம் காட்டும் பணியில் நாங்களும் 'ஓயுதல் செய்யோம். தலை சாயுதல் செய்யோம்'. - ஞாநி 

இந்து வெளியிட்டது : 
2. சமூக விரோதச் சிந்தனை !

பிரச்சினையின் வேர் என்ன என்பதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் நேரே தீர்வைப் பற்றிப் பேசுபவர்களை என்னவென்று சொல்வது? பிரச்சினையின் வேர்பற்றி விவாதித்தால்தான் சரியான தீர்வு உருவாக்கப்பட முடியும்.

பிரச்சினையின் வேர் மிக எளிமையானது. கர்நாட கத்தில் பள்ளி முதல் உயர்கல்வி வரை கன்னட மொழியை ஒரு மொழிப்பாடமாகப் படிக்காமல் யாரும் கல்வி முடிக்க முடியாது. தமிழகத்திலோ ‘ப்ரீகேஜி’ முதல் ‘பி.ஹெச்.டி.’ வரை தமிழை மொழிப்பாடமாக எந்தக் கட்டத்திலும் எடுக்காமல் கல்வியை முடித்துவிடலாம். இதற்குக் காரணம், தமிழக அரசியல்வாதிகளும் கல்வி வியாபாரிகளும் கூட்டாகச் செய்துவந்திருக்கும் வணிகச் சதிதான். இதுதான் பிரச்சினையின் வேர் என்று தெரிந்த பிறகு, அதைச் சரி செய்யத்தானே தீர்வு சொல்ல வேண்டி யிருக்கும். அதற்குக் கட்டுரையாளர் தயாராக இல்லை. எனவே, வேரையே சொல்லாமல், விபரீதமான தீர்வு சொல்கிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்தால், அதற்கான தீர்வுகளை எப்படி யோசிக்க வேண்டும்? இனி, அவை நடக்காமல் இருக்க வழிகள் என்ன என்று அறிந்து செயல்படுத்த வேண்டும். அதற்குப் பதில், ‘எங்களால் பாலியல் வன்முறைகளைத் தடுக்க முடியாது. எனவே, பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள், அதைச் சுகமான அனுபவமாகக் கருதி ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்’ என்று சொன்னால், அது தீர்வா? அது மாற்று சிந்தனையா? எப்படிப்பட்ட சமூக விரோதச் சிந்தனை!

- ஞாநி, மூத்த பத்திரிகையாளர்

ஸ் பெ

unread,
Nov 10, 2013, 2:18:51 PM11/10/13
to panbudan

Iyappan Krishnan

unread,
Nov 10, 2013, 11:00:05 PM11/10/13
to panb...@googlegroups.com
மிக மிக அருமையான பேச்சு. நன்றி ஸ்பெ

On Monday, November 11, 2013, ஸ் பெ wrote:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com


--

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Asif Meeran AJ

unread,
Nov 12, 2013, 5:36:53 AM11/12/13
to பண்புடன்
நம்ம குழுமத்தில் ரம்மு ஜெமோ மாதிரியே பேசுறான்
ஒட்டுமொத்தமா எல்லாரும் எதிர்த்தா அதை ஆதரிச்சு கருத்து சொல்றது
அப்படியே அதை மெயிண்டய்ன் பண்ரதுன்னு ஒரு வருங்கால ஜெமோவுக்கான
கூறுகள் தெரியுது கூறுகெட்ட பயகிட்ட :-)


ப்ரியன்

unread,
Nov 12, 2013, 5:43:45 AM11/12/13
to panb...@googlegroups.com
:)

Ramesh Murugan

unread,
Nov 12, 2013, 5:43:53 AM11/12/13
to பண்புடன்
அப்படியில்லை அண்ணாச்சி.

திராவிடம், தமிழ், செக்யூலிரிசம், தமிழ்தேசியம், இன்னபிற  போன்றவற்றில் கடந்த 40-50 வருசமா நமக்கு ஒரு அரசியல் கற்பிதம் இருக்கு. அதை மறுத்து பேசினாலோ எதிர்த்து கேள்வி கேட்டாலோ அதன் புனிதம் கெட்டுப்போயிடும்னும், அதை எதிர்த்து கேள்வி கேட்டாலே அவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர்னும் இங்க ஒரு நடைமுறை இருக்கு. பலருக்கு அதில் உடன்பாடில்லைனாலும், எதிர்த்து பேச நாட்டமில்லை. நான் வெட்டியா இருக்குறதால எதிர்த்து பேசிக்கிட்டு இருக்கேன். அம்புட்டுதான்.

2013/11/12 Asif Meeran AJ <asifm...@gmail.com>

PRASATH

unread,
Nov 12, 2013, 5:48:39 AM11/12/13
to Groups
தமிழ்தேசியம் பத்தி 40-50 வருஷமா பேசிட்டு இருக்காங்களா... டவுட்டு...


2013/11/12 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Nov 12, 2013, 5:51:51 AM11/12/13
to பண்புடன்
அதுக்கும் முன்னையே.

2013/11/12 PRASATH <pras...@gmail.com>

தமிழ்தேசியம் பத்தி 40-50 வருஷமா பேசிட்டு இருக்காங்களா... டவுட்டு...

PRASATH

unread,
Nov 12, 2013, 5:56:24 AM11/12/13
to Groups
ok... ok...

2013/11/12 Ramesh Murugan <rames...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Nov 12, 2013, 6:05:15 AM11/12/13
to பண்புடன்
அப்படியில்லடா தம்பி

சில விசயங்களில் மாற்றுக் கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்காகவேனும் முரண்டு பிடித்து
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். ஒன்றுமில்லாவிட்டாலும் கொஞ்சம் விசயம் அதிகமாகப்
பெற்றுக் கொள்ளலாம். எதிர்வாதங்களைப் பற்றிய புரிதல்களை வளர்த்துக்கொள்ளலாம்

ஆனால்.. ஜெமொ பலமாகச் சறுக்கிய பதிவுகளில் இடுவும் ஒன்று.
ரோமன் எழுத்துருவில் எழுதி தமிழை வளர்ப்பது பக்கத்து வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை 
பெற்றுக்கொள்வது மாத்ரின்னு நம்ம குழுமத்து பக்கிப்பய ஒண்ணு ஏற்கெனவே தெளிவா சொல்லிடுச்சு

அந்தளவுக்குப் போகாவிட்ட்டாலும் ஜெமொ எழுதியது மிகப்பெரும் அபத்தம்
அதை ஒப்புக் கொள்ள வழியில்லாமல் அவர்தான் சொதப்பிட்டிருக்காருன்னா நீயும் அதையே செய்யும்போது..
ஹிஹி நல்லா இருடே!

PRASATH

unread,
Nov 12, 2013, 6:06:52 AM11/12/13
to Groups
:)))


2013/11/12 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அப்படியில்லடா தம்பி

ஆனால்.. ஜெமொ பலமாகச் சறுக்கிய பதிவுகளில் இடுவும் ஒன்று.

Asif Meeran AJ

unread,
Nov 12, 2013, 6:10:24 AM11/12/13
to பண்புடன்
எலே மொத ஆளா வந்து சிரிக்கிய?
அப்ப அதச் சொன்னது நீதானாலே??


:)))

Ramesh Murugan

unread,
Nov 12, 2013, 6:11:00 AM11/12/13
to பண்புடன்
அண்ணாச்சி,
ஜெ.மோ சொன்ன தீர்வு சரின்னு அவரோட வாசகர்கள் உட்பட இங்க யாரும் சரின்னு சொல்லல.

ஆனா, இங்கே கட்டுரையின் மீதான விவாதமாக இல்லாமல் ஜெ.மோ மீதான விமர்சனமாகப் போனது. அது சரியில்லன்னுதான் நான் சொன்னேன். மேலும் ஜெ.மோ எழுத்துரு சம்மந்தமா பட்டியலிட்ட காரணிகளையும் கவனெத்துலெடுக்கனும்னு சொன்னேன். மாற்று தீர்வை யாராவது முன்வைங்கன்னும் சொன்னேன். யாரும் இன்னும் அதைப் பற்றி பேசவேயில்ல.

இழை மெல்ல நகர்ந்து தமிழ் வழிக் கல்வியா ஆங்கில வழிக் கல்வியான்னு இழுத்துக்கிட்டு போயிடிச்சி.

தங்கலீஸின் சாத்தியமா அல்லது அதுதான் தீர்வாங்கிறதுல சப்ஜெக்ட் எனக்கு சரியா விளங்கவேயில்ல. அதனால நானும் சப்ஜெக்ட் சம்மந்தமா பேசல. மாறாக தனிமனித விமர்சனம் எதுக்குன்னுதான் இங்க பேசினதாய் ஞாபகம்.

2013/11/12 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அந்தளவுக்குப் போகாவிட்ட்டாலும் ஜெமொ எழுதியது மிகப்பெரும் அபத்தம்
அதை ஒப்புக் கொள்ள வழியில்லாமல் அவர்தான் சொதப்பிட்டிருக்காருன்னா நீயும் அதையே செய்யும்போது..
ஹிஹி நல்லா இருடே!

Naresh Kumar

unread,
Nov 12, 2013, 6:36:59 AM11/12/13
to பண்புடன்
எனக்குத் தெரிந்து ஞாநி, நேசமித்ரன் முதற்கொண்டு பகிரப்பட்ட கட்டுரைகள் எல்லாமே மறு மொழியாகத்தான் எனக்கு பட்டன! ஜெயமோகனின் மேல் தனி மனித வசைபாடல் மட்டும் உமக்கு கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. 

ஒண்ணும் பண்ணாட்டியே ஜொமேவை திட்ட ஆட்கள் பலர் காத்திருக்க, இந்த மாதிரி கருத்து சொன்னா அவிங்க சலங்கை கட்டி ஆடுவார்கள் என்பதனைத் தெரிந்து அவரும், சத்தம் வரும் பாருன்னு சொன்னதை புடிச்சிகிட்டு, அவரு சொன்ன மாதிரியேசத்தம் வருதுன்னு நீரும் பேசிட்டிருக்கீரு!

பிரசாத் சொன்னதுதான்........... 

Ramesh Murugan

unread,
Nov 12, 2013, 6:49:10 AM11/12/13
to பண்புடன்
நான் நேரமித்திரன் மறுமொழியைப் படிக்கல. ஆனா ஞாநியோட மறுமொழியைப் படிச்சேன். அவரு நிறைய மறுமொழி சொல்லிருக்காரு. நான் படிச்சதைத்தான் நீங்க சொல்றிங்களான்னு தெரியல.

ஆனா அவரும் ஜெ.மோ குறிப்பிட்ட காரணிகளையும், மாற்று தீர்வையும் முன் வச்சி பேசினதான் நினைவில்லை. மாறாக ஜெயமோகன் அவதானிப்பு தவறென்னும், பிதற்றுகிறார் என்றும், கவன ஈர்ப்புக்கு முயற்சிக்கிறார் என்றும் சொன்னதாய் நினைவு.

ஒருவேளை தனி கட்டுரையில் இதைப் பற்றி அவர் பேசியிருந்தால், அதை இங்கே பகிருங்க. ஒருவேளை அந்த கட்டுரையை நான் படிக்கலையோ என்னவோ.

2013/11/12 Naresh Kumar <meet...@gmail.com>

எனக்குத் தெரிந்து ஞாநி, நேசமித்ரன் முதற்கொண்டு பகிரப்பட்ட கட்டுரைகள் எல்லாமே மறு மொழியாகத்தான் எனக்கு பட்டன! ஜெயமோகனின் மேல் தனி மனித வசைபாடல் மட்டும் உமக்கு கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. 

விழியன்

unread,
Nov 12, 2013, 6:49:37 AM11/12/13
to panb...@googlegroups.com


On Tuesday, November 12, 2013 4:13:53 PM UTC+5:30, Ramesh wrote:
அப்படியில்லை அண்ணாச்சி.

திராவிடம், தமிழ், செக்யூலிரிசம், தமிழ்தேசியம், இன்னபிற  போன்றவற்றில் கடந்த 40-50 வருசமா நமக்கு ஒரு அரசியல் கற்பிதம் இருக்கு. அதை மறுத்து பேசினாலோ எதிர்த்து கேள்வி கேட்டாலோ அதன் புனிதம் கெட்டுப்போயிடும்னும், அதை எதிர்த்து கேள்வி கேட்டாலே அவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர்னும் இங்க ஒரு நடைமுறை இருக்கு. பலருக்கு அதில் உடன்பாடில்லைனாலும், எதிர்த்து பேச நாட்டமில்லை. நான் வெட்டியா இருக்குறதால எதிர்த்து பேசிக்கிட்டு இருக்கேன். அம்புட்டுதான்.

யூ மீன் டு சே அவரும் வெட்டியா இருக்கார்?   

Ramesh Murugan

unread,
Nov 12, 2013, 6:53:22 AM11/12/13
to பண்புடன்
:))

இதுக்கு அண்ணாச்சியே பதில் சொல்லட்டும். ஏன்னா அவருதான் ஜெ.மோவோட உண்மையான கூட்டுக்காரன் :))

2013/11/12 விழியன் <uman...@gmail.com>

யூ மீன் டு சே அவரும் வெட்டியா இருக்கார்?  

ஸ் பெ

unread,
Nov 12, 2013, 6:55:33 AM11/12/13
to panbudan
ஜெமோவே, அது மாற்று தீர்வு இல்லை சும்மா உசுப்பு ஏத்திறதுக்கு தான் சொன்னேன்னு சொல்லியாச்சு தம்பி.. 

2013/11/12 Ramesh Murugan <rames...@gmail.com>

ஆனா அவரும் ஜெ.மோ குறிப்பிட்ட காரணிகளையும், மாற்று தீர்வையும் முன் வச்சி பேசினதான் நினைவில்லை. மாறாக ஜெயமோகன் அவதானிப்பு தவறென்னும், பிதற்றுகிறார் என்றும், கவன ஈர்ப்புக்கு முயற்சிக்கிறார் என்றும் சொன்னதாய் நினைவு.

Ramesh Murugan

unread,
Nov 12, 2013, 6:58:21 AM11/12/13
to பண்புடன்
அந்த மொத்த கட்டுரையில் அந்த ஒத்த வரியை மட்டும் படிச்சிங்களாக்கும் :))

அந்த கட்டுரையில் அந்த அர்த்தத்தில் மட்டும் சொன்ன மாதிரி தெரியல எனக்கு.

2013/11/12 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஜெமோவே, அது மாற்று தீர்வு இல்லை சும்மா உசுப்பு ஏத்திறதுக்கு தான் சொன்னேன்னு சொல்லியாச்சு தம்பி.. 
It is loading more messages.
0 new messages