இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

797 views
Skip to first unread message

VJagadeesh

unread,
May 21, 2012, 12:13:07 PM5/21/12
to பண்புடன்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?"
ராஜ் சிவா

செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் நடுவே நீங்கள் நிற்கும்போது,எங்கும் பசுமையாகப் பரவியிருக்கும் பயிர்களையே காண்பீர்கள்இடுப்பளவு பயிர் வளர்ந்திருக்கையில் சிலமீட்டர் தூரத்திற்கு அப்பால்தரையில் இருக்கும் எதுவுமே உங்கள் கண்ணுக்குப் படமுடியாதவாறு எங்கும் வளர்ந்திருக்கும் பயிர்அந்த வயலில்ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு மிகப்பெரிய வட்ட வடிவச் சித்திரம் வரையப்பட்டிருப்பதாக நினைத்துப் பாருங்கள்உங்கள் கண்ணுக்கு அந்தச் சித்திரத்தின் முழுமை தெரிய வாய்ப்பே இல்லை என்பது புரியும்அப்படி அந்தச் சித்திரத்தின் முழுமையைப் பார்க்க வேண்டுமென்றால்குறைந்தபட்சம் நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்நூறு மீட்டர் மேலே பறந்து சென்று பார்த்தால் தெரியக் கூடிய நிலையில்கண்களின் மதிப்பீடுகளை மட்டும் வைத்துபிரமாண்டமான சித்திரங்கள் வயல்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இதன் சாத்தியக்கூறுகளை யோசித்துப் பாருங்கள். பார்க்கவே முடியாத ஒன்றைத் தெளிவாக வரைவது என்பது சாத்தியம்தானா?ஆனால்உலகம் முழுவதும் 'க்ராப் சர்க்கிள்' (Crop Circle) என்ற பெயருடன்பயிர்களால் இப்படிப்பட்ட சித்திரங்கள் உருவாக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. வார்த்தைகளால் இதை நான் சொல்லும் போது,உங்களுக்குப் புரிவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறதல்லவாஒரு பயிர் வட்டத்தை நிலத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்திலும்பத்து மீட்டர் உயரத்திலும் இருந்து பார்த்தால் நமக்கு அந்தச் சித்திரங்கள் எப்படித் தெரிகிறது என்று பாருங்கள்இதையே நிலத்தின் மட்டத்தில் இருந்து பார்த்தால் எந்த அளவுக்குத் தெரியும் என்பதையும் யோசியுங்கள்அப்படிப்பட்ட பெரிய சித்திரங்களை எப்படி நிலத்தில் இருந்தபடி உருவாக்கியிருக்க முடியும்?

உருவாக்கப்பட்ட சித்திரங்கள் மிகச் சாதாரணமான சித்திரங்கள் என்றால் கூடக் கவலைப்படத் தேவையில்லைஆனால்அவை அனைத்தும் கணித மேதைகளால் வரையப்படும் மிகச் சிக்கலான கேத்திர கணித வரைவுகளுக்கு ஒப்பான சித்திரங்கள்ஒரு காகிதத்தில் அப்படி ஒரு சித்திரத்தை நாம் வரையவேண்டுமென்றால்பல கணிப்பீடுகள் செய்து மட்டுமே வரைய முடியும்ஆனால் இவையெல்லாம் வயல் வெளிகளில்எந்த வித கணிப்புகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றனவாய் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாத கணித வரைவுகள் அவைஇதைச் சுலபமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தச் சித்திரங்களைப் பாருங்கள்.

ஒரு வட்டத்தின் நடுவே சிலந்திக் கூடு போன்ற அமைப்பில் பயிர்களால் வரையப்பட்ட ஒரு சித்திரம் இது.இந்தப் பயிர் வட்டத்தை வரைந்த விதமும்அதற்கான கணித விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறதுஇரண்டு ஐந்து கோணங்களையுடைய நட்சத்திரங்கள் வரைந்துஅவற்றிற்கிடையே வட்டங்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய சித்திரம் இதுஆனால் அப்படி நட்சத்திரங்களோவட்டங்களோ வரையப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றதுஇந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டு.

சாதாரணமாகக் காகிதத்தில் வரைவதற்கே பல மணி நேரங்கள் எடுக்கக் கூடிய இந்தச் சித்திரம்வயல் வெளிகளில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமாபயிர்களை நிலத்தோடு மடித்தும்அழுத்தியும் எந்த ஒரு பயிரும் சேதப்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்டிருகின்றது. கணித அடிப்படையில் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகஇது போலப் பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாகஇன்னுமொரு சித்திரத்தை விளக்கிவிட்டுநான் மேலே சென்றால்தான்இந்த பயிர் வட்டங்களின் உண்மையான பரிமாணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். 

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள வைல்ட்ஷையரில்வூட்பெர்க் ஹில் என்னுமிடத்தில் (Woodberg Hill-Wildshire) 2000 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயிர்வட்டம் ஒன்றின் பெயர் சூரியகாந்தி (Sunflower). இந்தச்சூரியகாந்திப் பயிர் வட்டத்தில் 308 முக்கோணங்கள் உள்ளனஇவை 44 வளைவுக் கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறதுமிகவும் சிக்கலான அமைப்பையுடைய இந்தச் சித்திரத்தைக் கணித முறையில் எப்படி வரைவது என்பதைப் பாருங்கள்அதுவே பயிர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும் பாருங்கள்நம்பவே முடியாத ஆச்சரியமாகநிஜத்தில் எம் கண்முன்னே பரந்து விரிந்து காணப்படுகிறது.இப்படிப்பட்ட சித்திரங்களைப் பயிர்களினால் எப்படி வரைய முடியும்எத்தனை நபர்கள் இதை உருவாக்கத் தேவைப்பட்டிருக்க வேண்டும்எத்தனை நாட்கள் இவற்றிற்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும்அனைத்துக்கேள்விகளையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாய் வயல்வெளியில் படுத்திருக்கிறது இது. 

ஒரு அளவுக்குப் பயிர் வட்டங்களின் பிரமாண்டங்களையும்பரிமாணங்களையும் நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவேபயிர் வட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன்பயிர் வட்டங்களின் வரலாறு முதன் முதலாக 1678 ம் ஆண்டுதென்கிழக்கு இங்கிலாந்தில் அமைந்த ஹார்ட்ஃபோட்ஷையர் (Hartfordshire) என்னுமிடத்தில் பிசாசு ஒன்றினால்ஒரு விவசாயிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது என்ற புராதனக் கதையுடன் ஆரம்பமாகிறது.

இந்தப் பிசாசுக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருந்தது அல்லது இல்லை என்ற நிலையில், 1920ம் ஆண்டளவில் மீண்டும் பயிர் வட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் 1980 களிலும் 90 களிலும்தான் சிக்கலான வடிவங்களுடன் இவை அதிகமாக காணப்படத் தொடங்கின. இந்தக் கால கட்டங்களிலிருந்து தொடர்ச்சியாய் ஒவ்வொருவருடமும் 300 பயிர் வட்டங்கள் உலகம் முழுவதும் தோன்ற ஆரம்பித்தன.அமெரிக்காகனடாஇங்கிலாந்துநெதர்லாந்துஜெர்மன்போலந்துபெல்ஜியம்இத்தாலிசுவீடன்நார்வே,ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இந்தப் பயிர் வட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால்குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை உலகம் முழுவதுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உருவாவதில் ஒரு ஆச்சரியமான விசயம் ஒன்று உண்டு. எவ்வளவு சிக்கலான பயிர் வட்டங்களாக இருந்தாலும் கூடநான்கு மணி நேரங்களுக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன.சில நிமிடங்களில் உருவாக்கப்பட்ட வட்டங்களும் உண்டு. 80 வீதத்திற்கு அதிகமானவை இரவிலேயே உருவாக்கப்படுகின்றன என்றாலும்பகலிலும் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுவதை நாம் தடுக்க முடியாது. "உண்மையில் இந்தப் பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?" என்பதே அந்தக் கேள்வி. அதாவதுஇவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவாஇல்லை, மனிதன் தாண்டிய வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றதா?என்ற சந்தேகமே இந்தக் கேள்வியில் உள்ளடங்கியிருக்கிறது. மனிதனால்தான் மட்டும் இவை உருவாக்கப்படுகின்றன என்று இருக்கும் பட்சத்தில் நான் இந்தத் தொடரை எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்கப் போவதில்லை. மனிதன் தாண்டி வேறு ஒரு சக்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்னும் சந்தேகம்தான்இவை இவ்வளவு பரவலாகஉலகப் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.இந்தப் பயிர் வட்டங்களை ஆரய்வதற்கென்றே உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர்.அவர்களைப் பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்கள் (Crop Circle Researchers) என்று அழைக்கிறார்கள். அவர்களிடம்"இந்த வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேளிவியைக் கேட்டால், "ஆம்" என்றே பதிலளிக்கின்றார்கள். நமது அடுத்த கேள்வியாக, "இவை மனிதர்களால் மட்டும் உருவாக்கப்படுகின்றனவா?"என்று கேட்டால், "இல்லை" என்று பதிலளிக்கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதாநிபுணர்கள் சொல்வதுஎன்னவென்றால், "இந்த வட்டங்களில் பலவற்றை மனிதர்கள் செய்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் இவற்றில் பல, மனிதர்களால் செய்யப்படாதவை" என்பதே. 

மனிதர்களால் உருவாக்கப்படாத பட்சத்தில்இவற்றை யார் செய்திருக்க முடியும்என்ற கேள்விக்கு யாரும் இதுவரை தெளிவான பதிலைச் சொல்லி விடவில்லை. ஆனால்யார் செய்திருக்கக் கூடும் என்பதை நம்மால் இலகுவாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில்ஆதாரங்களை அள்ளித் தருகிறார்கள் அவர்கள்.நேரடியாகப் பதிலைத் தருவதால்  உருவாக்கியவர்களைக் காட்டியே தீர வேண்டிய நிலை அறிவியலில் இருப்பதால். யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். இந்த நிலையில்தான் துணிச்சலாக,இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்றை எடுத்து ஒருவர் வெளியிட்டார். அவர் படம் வெளியிட்டது என்பது பெரிய விசயமாக இருந்தாலும்அவரை இங்கு நான் குறிப்பிட விரும்புவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. அந்தக் காரணம் என்ன தெரியுமாஅந்தப் படத்தை எடுத்தவர் ஒரு தென்னிந்தியர். படத்தை எடுத்தது மட்டுமில்லாமல்அதை இயக்கி நடித்தும் இருக்கிறார். அவர் பெயர்'நைட் சியாமளன்' (M. Knight Shyamalan). ஆனால் மனோஜ் சியாமளன் என்றே பலரால் அழைக்கப்படுகிறார்.அருமை நண்பர் மனோஜை ஞாபகப்படுத்துவதால்  நானும் அவரை மனோஜ் சியாமளன் என்றே அழைக்கவிரும்புகிறேன். மனோஜ் சியாமளனின் அப்பா ஒரு மலையாளிஅம்மா பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெண். 

'சிக்ஸ்த் சென்ஸ்' (Sixth Sence), ‘அன்பிரேகபிள்' ( Unbreakable) என்று உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்த இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் மனோஜ் சியாமளன்இந்த இரண்டு படங்களுமே அமானுஷ்ய சக்திகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டனசொல்லப் போனால் அவரின் அனைத்துப் படங்களும் அமானுஷ்ய சக்திகளையும்மிஸ்டரிகளையும் மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்குப் பின்னர் 2002 ம் ஆண்டு மனோஜ் சியாமளன் எடுத்த படம்தான் 'சைன்ஸ்' (Signs).இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில்சோளப் பயிர்கள் வளர்ந்த பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்ததுஅந்தப் படத்தில்இந்தப் பயிர் வட்டங்களை யார் உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கான விடையையும் சியாமளன் அளித்துள்ளார்.அவர்கள் யார் தெரியுமாஏலியன்கள்விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த வேற்றுக் கிரகவாசிகளே இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்குகிறார்கள் என்று கதை அமைத்திருந்தார் மனோஜ் சியாமளன். 

உண்மையில் பயிர் வட்டங்கள் உருவாவதில் என்னதான் நடக்கிறதுஅதுவும் குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டும் ஏன் 80 விதமான பயிர் வட்டங்கள் உருவாகின்றனஇவை மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றனவாஇல்லை ஏலியன்கள் அல்லது மனிதனல்லாத வேறு ஏதும் ஒரு சக்திதான் இதைஉருவாக்குகின்றதாஇவையெல்லாம் நம்முன் எழும் கேள்விகளாக இப்போது இருக்கின்றன. இந்த உண்மைகளை ஒரு அரசு நினைத்தால்அடுத்த நிமிடம் கண்டு பிடித்து மக்களுக்கு அதன் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த உண்மைகள் மக்களுக்குச் சொல்லப்படாமல் ஒரு பதட்டத்திலேயே மக்கள் ஏன் வைக்கப்பட்டிருக்கின்றனர்சொல்லப் போனால்இந்த உண்மைகள் ஏன்மறைக்கப்படுகின்றனஇவை பற்றி விளக்கமாக இனி வரும் பகுதிகளில் நாம் தெளிவாகப் பார்க்கலாம். பிற்குறிப்பு: "கடவுளையே நம்ப வேண்டுமானால் ஆதாரங்கள் காட்டு. இல்லையென்றால் விலகிப் போ!நமக்கு வேலை நிறைய இருக்கிறது" என்று சொல்லக் கூடியவிஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த வேளையில்ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை எப்படி ஏற்பதுஇது எல்லாம் கொஞ்சம் ஓவர்" என்றே நீங்கள் நினைக்கலாம். நானும் இங்கு ஏலியன்கள்தான் இவற்றை உருவாக்கின என்று சொல்லி உங்களை மர்மமான ஒரு நிலையில் வைத்திருக்க விரும்பவில்லை. இந்த Crop Circle பற்றி நீங்கள் இணையத்தில் பார்த்தால்இவை மனிதனாலேயே செய்யப்பட்டது என்று ஒரு பகுதியும்இல்லை இது மனிதனால் செய்யப்படவில்லை என்று மற்றொரு பகுதியும் பிரிந்து விளக்கங்களைத் தமக்கு ஏற்றவாறு அளித்துக் கொண்டிருப்பார்கள். இதில் நீங்கள் எதை வாசிக்கிறீர்களோஅதுவே உண்மை என்றநிலைப்பாட்டையும் நீங்கள் எடுக்கும் சூழ்நிலை வரலாம். ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கலாம்.ஆகவே நிதானமாக இந்தப் பயிர் வட்டங்கள் பற்றிய அனைத்து உண்மைகளையும் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். இறுதியில் நாம் அனைவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கும் வந்துவிடலாம். 

rajsiv...@googlemail.com

தமிழ்ப் பயணி

unread,
May 21, 2012, 12:19:17 PM5/21/12
to panb...@googlegroups.com
அப்பாடா அந்த கால பாக்யா வார இதழின் இ​ணையத்திற்க்கான வ​கையில் பதிப்புகள் வர ஆரம்பித்து விட்டன​வே... :) :)

2012/5/21 VJagadeesh <vom...@gmail.com>

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?"
ராஜ் சிவா

செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

The Gods Must Be Crazy – 1,2

ஸ் பெ

unread,
May 21, 2012, 12:26:35 PM5/21/12
to panb...@googlegroups.com
ஹி ஹி ஹி....... நான் கூட படிச்சிருக்கேன்.. 'ஹிட்லர் உசிரோட தான் இருக்காரு' அப்படிங்கிற ரேஞ்சுல கட்டுரைகள் வரும்.. :)


2012/5/21 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

அப்பாடா அந்த கால பாக்யா வார இதழின் இ​ணையத்திற்க்கான வ​கையில் பதிப்புகள் வர ஆரம்பித்து விட்டன​வே... :) :)

2



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கவுரவம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Meeran Anwar

unread,
May 21, 2012, 12:47:07 PM5/21/12
to panb...@googlegroups.com
ஆனா படங்கல்லாம் சூப்பரா இருந்துச்சி உண்மையிலேயே அருமையா வரைஞ்சிருக்காங்க எலியானா இருந்தாலும் சரி இலியானாவா இருந்தாலும் சரி :)

sadayan sabu

unread,
May 22, 2012, 3:16:20 AM5/22/12
to panb...@googlegroups.com


2012/5/21 Meeran Anwar <meeran...@gmail.com>

ஆனா படங்கல்லாம் சூப்பரா இருந்துச்சி உண்மையிலேயே அருமையா வரைஞ்சிருக்காங்க எலியானா இருந்தாலும் சரி இலியானாவா இருந்தாலும் சரி :)

மீரான் பாய்

காலையிலே அண்ணாச்சியிடம் தொலைபேசினீர்களோ :-)))

Meeran Anwar

unread,
May 22, 2012, 4:45:11 AM5/22/12
to panb...@googlegroups.com


2012/5/22 sadayan sabu <sadaya...@gmail.com>



காலையிலே அண்ணாச்சியிடம் தொலைபேசினீர்களோ :-)))


சாபத்தோவ் சத்தியமா தமன்னாவை  பத்திதான் பேசினோம் இலியானவையோ எலியனையோ பத்தி இல்லை :)

Asif Meeran AJ

unread,
May 22, 2012, 9:57:55 AM5/22/12
to panb...@googlegroups.com

சாபத்தோவ் சத்தியமா தமன்னாவை  பத்திதான் பேசினோம் இலியானவையோ எலியனையோ பத்தி இல்லை


பேச ஆளே கிடைக்கலைன்னு அந்த மொக்கையைப்பத்தி பேசுறாங்களாக்கும்?
மீரான்னு ஒரு சத்தியவாதியோட பேரை வச்சுகிட்டு இப்படி பொய் பேசுறியே தம்பி? 
 

VJagadeesh

unread,
May 22, 2012, 9:59:45 AM5/22/12
to panb...@googlegroups.com
யாரு அவரா???

2012/5/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Meeran Anwar

unread,
May 22, 2012, 10:06:04 AM5/22/12
to panb...@googlegroups.com
2012/5/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>
மீரான்னு ஒரு சத்தியவாதியோட

என்னவோ என்ன மாயமோ தெர்ல மீரான்னாலே தெறிச்சு ஓடுறாங்க

அப்பப்போ நீங்க அவரா அவர் நீங்களான்னு வேற கேட்டுக்குறாங்க

பேசாம சம்பன்குளத்தான்னு பழைய பே(ஊ)ருக்கே பேய்ரலாம்னு பாக்குறேன்.

Srimoorthy.S

unread,
May 22, 2012, 12:00:56 PM5/22/12
to panb...@googlegroups.com

:)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

மோரு

unread,
May 23, 2012, 6:53:21 AM5/23/12
to panb...@googlegroups.com
யாரு தஞ்சை மீரானா?  அகில உலக இனைய புகழ் மீரான் சத்தியவானா :)))

2012/5/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>
மீரான்னு ஒரு சத்தியவாதியோட பேரை வச்சுகிட்டு இப்படி பொய் பேசுறியே தம்பி? 



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

VJagadeesh

unread,
Jun 5, 2012, 7:25:10 AM6/5/12
to பண்புடன்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" (1)
ராஜ்சிவா 

இந்தப் படத்தைப் பாருங்கள்நன்றாக உற்றுப் பாருங்கள்தரையில் விரிக்கப்படும் ஒரு கம்பளம் (Carpet)என்று இதை நீங்கள் நினைத்தால்,இனி நான் எழுதப் போவதை நிச்சயம் படிக்க வேண்டிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்கம்பளம் போலஅச்சு அசலாக இருக்கும் இது கம்பளமே அல்ல'சரிகம்பளம் இல்லை.அப்படியென்றால் காகிதம் ஒன்றில் வரையப்பட்ட ஒரு சித்திரம்என்று மறுபடி நீங்கள் நினைக்கலாம்அப்படி நினைத்தாலும்நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்.

கம்பளமும் இல்லைகாகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் இல்லை.அப்படியென்றால் இது என்னஇந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய ஆய்வுடன்தான்நம் பயணம் இந்தத் தொடரில் ஆரம்பமாகப் போகின்றதுஇந்தத் தொடர்நான் இதற்கு முன்னர் எழுதிய 'மாயா மக்கள்பற்றிய தொடரைப் போல,மர்மங்களை (Mystery) உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கும்அதனால் மீண்டும் மிஸ்டரி என்பது பற்றி ஒரு சிறிய விளக்கத்தை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். 

'மிஸ்டரிஎன்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம் போன்றது.அதன் ஒரு பக்கம்அறிவியலால் விளக்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டதுஅடுத்த பக்கம், 'சேஇதெல்லாம் ஏமாற்று வேலைஇப்படி எதுவும் இல்லைஎன்ற மறுதலிப்பைக் கொண்டதுஎப்போதும் இந்த இரு பக்கங்களும் இல்லாமல்சரி சமமாக நிற்கும் நிலைக்குத்து நிலையில் இந்த நாணயம் நிற்பதே இல்லைகடவுளை நம்புபவர்கள் எப்படி அதில் நம்பிக்கையுடன் இருப்பார்களோ,அப்படி ஒரு பக்கத்தினரும்கடவுளை மறுப்பவர்கள் எப்படி வன்மையாக மறுப்பார்களோஅப்படி அடுத்தவர்களும் இருப்பார்கள்இப்படியான தன்மையுடைய மிஸ்டரி சம்பவங்களையே நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும்ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும்இவற்றை நீங்கள் நம்ப வேண்டும்,நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டிஇப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறதுஇனி தொடருக்குப் போகலாமா....?

மேலே இருக்கும் படத்தில் காணப்படும் சித்திரம் நிச்சயமாகக் கம்பளம் கிடையாதுஅது காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் கிடையாதுஆனால் அது ஒரு வரையப்பட்ட சித்திரமேதான்எங்கேஎப்படியாரால்அது வரையப்பட்டது என்பதுதான் இங்கு நம் விழிகளை விரியச் செய்யப் போகும் ஆச்சரியமாக இருக்கப் போகிறதுஅது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர்தென்மேற்கு இங்கிலாந்தில் (South West England) அமைந்துள்ள 'வைல்ட்ஷையர்' (Wiltshire)என்னுமிடத்தில் வசிக்கும் 'டோனி ஹ்யூஜெஸ்' (Tony Huges) என்னும் விமானிக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது 

டோனி ஹ்யூஜெஸ் என்பவர் 'மிக இலகு விமானம்' (Microlight flight)ஒன்றின் மூலம்வைல்ட்ஷயரில் உள்ள வயல் நிலங்களுக்கு மேலாக விமானத்தில்ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குப் பறந்து சென்றார்.இப்படி வயல் வெளிகளின் மேலாகத் தினமும் பறந்து செல்வது அவரின் வழக்கங்களில் ஒன்றுமறு கோடிக்குப் பறந்து சென்ற டோனிவிமானத்தைத் திருப்பிவந்த இடத்துக்கே செலுத்திக் கொண்டிருந்த போதுஅவர் வயல்வெளியில் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்ததுபத்து நிமிடங்களுக்கு முன்னர் அவர் அதே வயல்வெளியின் மேலாகப் பறந்து சென்றார்ஆனால் அதே இடத்துக்குத் திரும்பி வரும்போது அது காணப்பட்டது. "இது எப்படி சாத்தியம்?" என்று தன் வயர்லெஸ் சாதனத்தில் அலறினார்அவர் அந்த வயல்வெளியில் கண்டது என்ன தெரியுமாமிகப் பிரமாண்டமான ஒரு சித்திரத்தைஅந்தச் சித்திரம் வயல்வெளியில் வட்டவடிவமாக வரையப்பட்டிருந்ததுஎதனால் வரையப்பட்டிருந்தது என்று நினைக்கிறீர்கள்அதுதான் இங்கு சொல்லப்படப் போகும் மர்மத்தின் ஆணிவேரே!

அந்தச் சித்திரம் வயல்வெளியில் செழித்து வளர்ந்த பயிர்களைச் சிதைக்காமல்,நிலத்தில் அழுத்தி வரையப்பட்டிருந்ததுநிலத்தில் இருந்து பார்க்கும்போது என்னவென்றே தெரியாமல்வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக் கூடிய வகையில் வரையப்பட்ட மிகப் பிரமாண்டமான சித்திரம் அதுடோனி ஹ்யூஜெஸினால் நம்பவே முடியவில்லைபத்து நிமிடங்களில்அதுவும் பட்டப் பகலில் அதை யார் அப்படி வரைந்திருக்க முடியும்சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வாகனமோமனித நடமாட்டமோ காணப்படவில்லைஎங்கு பார்த்தாலும் பரந்து விரிந்த வயல்வெளிப் பிரதேசம்கோதுமைப் பயிர் எங்கும் பயிரிடப்பட்டுசெழித்து வளர்ந்த அறுவடைக்கான நேரம் அது. 

யார் வரைந்திருக்க முடியும்இப்படி ஒரு பிரமாண்டமான சித்திரத்தை, 'வரைவது'என்று சொல்வதே தப்புயார் இப்படியான ஒன்றை உருவாக்கியிருக்க முடியும்?சரிஅப்படி உருவாக்கியிருந்தாலும் உருவாக்கியவர்கள் எங்கேஎப்படி மாயமாக மறைந்தார்கள்விமானத்தில் பறந்தபடி எங்கு தேடியும் எவரையும் காணவில்லை.பத்து நிமிடங்களில் யாரும் அப்படி மறைந்து விட முடியாதுடோனிதான் கண்டதை வயர்லெஸ் கருவி மூலமாக கன்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொண்டு கூறியதும்அலறியடித்து அனைவரும் ஓடி வந்தார்கள்வந்தவர்கள் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்திமௌனமாக வயல்வெளியில் படுத்து இருந்தது அந்த வயல் சித்திரம்'பயிர் வட்டம்' (Crop Circle) என்னும் பெயருடன் உலகையே இப்போது மிகப் பலமாக மிரட்டி வரும் மிஸ்டரியாக இந்தப் பயிர்ச் சித்திரங்கள் இருக்கின்றனஇந்தச் சித்திரங்களின் பிரமாண்டத்தை நீங்கள் அறிய வேண்டுமா....?அவை எவ்வளவு பெரியவை என்பது தெரிய வேண்டுமாசரி கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்இதுவும் அதே வைல்ட்ஷையரில் உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டம்தான். 

என்ன பார்த்தீர்களாஎவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்ஒரு காகிதத்தில் கூட இப்படி வரைவது மிகக் கஷ்டமாக இருக்கும் வேளையில்,மிகத் துல்லியமாகப் பயிர்களால் இப்படி உருவாக்க முடியுமாசரி,இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரிகிறதாபுரியவில்லையா?அப்படியென்றால் அந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்.மையத்துக்குச் சற்றுக் கீழே உள்ள வெள்ளைப் பகுதியில்இரண்டு சிறிய கருப்புப் புள்ளிகள் போலத் தெரிகிறதாஅந்தப் புள்ளிகள் என்ன தெரியுமாஅவை இரண்டும் மனிதர்கள்மனிதர்கள் இவ்வளவு சிறிய புள்ளிகளாகத் தெரிய வேண்டும் என்றால்அந்தச் சித்திரத்தின் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்அத்துடன் மேலே கால் பகுதியாக தந்த கம்பளம் போன்ற அமைப்புள்ள சித்திரத்தின் முழுமையான வடிவத்தையும் கீழே தருகிறேன்அதையும் பாருங்கள்.அதன் பிரமாண்டமும் தெரிய வேண்டும் அல்லவாஅப்படியே மையத்துக்கு நேராகக் கீழே இருக்கும் நான்கு இதழ்கள் கொண்ட பூ வடிவத்தைப் பாருங்கள்.அதிலும் ஒரு கருப்புப் புள்ளி தெரியும்அதுவும் மனிதன் என்பது புரியும். 

"இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திரம்இதை ஏதோ மர்மம் என்று சொல்லி எங்களை இவர் ஏமாற்றப் பார்க்கிறார்என்று இப்போது நீங்கள் நினைக்கும் சாத்தியம் உண்டுநீங்கள் அப்படி நினைக்கவும் வேண்டும்.சந்தேகப்படுதல் என்பதுதான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இதுவரை இருந்திருக்கிறதுஆனால் நாம் இதை அறிவியல் சிந்தனையுடன் அணுகும்போது,அதன் மர்மங்கள் தொடர்ச்சியாக நீண்டு கொண்டு போகின்றதுஅத்தோடுநம்மை அது தாக்கவும் தொடங்குகின்றதுஅந்தத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு கணத்தில் சோர்ந்து போய்நாம் அதை நம்ப வேண்டிய சூழலுக்குள்ளாவதுடன் அதன் சுழலுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்வோம். 

அப்படி நம்மைத் தாக்கப் போகும் அந்த மர்மங்கள்தான் என்னஅவை உங்களுக்குத் தெரிய வேண்டுமல்லவாதெரிந்தால் நீங்கள் எப்படியான உணர்வுக்கு உள்ளாவீர்கள் என்று என்னால் சொல்ல முடியாதுஅப்படியான அதிர்ச்சிகள் அவை  

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போமா...? 


2012/5/21 VJagadeesh <vom...@gmail.com>
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" 2

VJagadeesh

unread,
Jun 5, 2012, 7:26:19 AM6/5/12
to பண்புடன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 3
ராஜ்சிவா 

நம் ஊர்களிலுள்ள சில பிரபலமான கோவில்களில் மட்டும் மக்கள் கூட்டம் குவிந்தபடி இருக்கபல கோவில்கள் ஆள் அரவமற்று அமைதியுடன் இருக்கின்றன.ஆனால் ஏதோ ஒரு தருணத்தில்எங்கோ ஒரு கோவிலில் திடீரென, 'சாமி சிலை கண்களைத் திறந்ததுஎன்றோ, 'கண்ணீர் வடித்ததுஎன்றோ தகவல் வரும். அப்புறம் யாரும் கிட்ட நெருங்க முடியாதபடி அந்தக் கோவிலில் கூட்டம் அலையடிக்கும்.படிப்படியாக அந்தக் கோவிலுள்ள கிராமத்தை நோக்கிப் பத்துநூறுபத்தாயிரம்,இலட்சம் என மக்களும்வியாபாரிகளும்மீடியாக்களும் குவிய ஆரம்பிக்கும்.இதைச் சரியாக நாம் உற்று நோக்கினால்அங்கு நடந்தது ஒரு அதிசயம் என்பதை விடஅந்த அதிசயத்தால் ஏற்படுத்தப்பட்ட கவனயீர்ப்பே முக்கிய பங்களிப்பது தெரிய வரும்அங்கே நடந்ததில் உள்ள உண்மைத்தன்மையை விடஅதில் உள்ள அசாதாரண நிகழ்வே நம்மைக் கவர்ந்திழுப்பது புரியும்அன்றாட வாழ்க்கையில் அலுத்துப் போய் இருக்கும் நமக்கு, 'மாற்றமாக ஏதும் நடை பெறாதா?' என்று உள்மனம் என்றும் ஏங்கிக் கொண்டே இருக்கிறதுசாதாரணமற்ற அபூர்வமான சம்பவங்களை அது எப்போதும் விரும்புகிறதுஅதிகம் ஏன்சமீபத்தில்தமிழ்நாட்டுக்கு வர இருந்த சுனாமியினால் ஏற்பட்டிருக்கக் கூடிய அழிவுகளைத் தாண்டிஅது வரவில்லையே என்ற குரூர ஏமாற்றம் நமக்கு இருந்ததைநாம் மறுக்க முடியாதுஇதற்கெல்லாம் காரணம்நம் மனம் எப்போதும் அசாதாரணமாற்றங்களை விரும்புவதுதான்அதிசயங்களும்மர்மங்களும் அதற்கு மிகவும்விருப்பமான ஒன்றாகிவிடுகிறது. இப்படியானதொரு அதிசயமாகவே பயிர் வட்டங்களும் உலகத்தில் வலம் வர ஆரம்பித்தனவழமை போலஅவற்றை ஒரு மர்மமாகப் பார்ப்பதற்கே மக்கள்விரும்பினார்கள்ஆரம்பத்தில் இந்தப் பயிர் வட்டங்கள்அவை தோன்றியஊர்களில் மட்டும் அதிசயமாகப் பார்க்கப்பட்டனகொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் அவை பிரபலமாகியபோதுமேலே நான் சொல்லிய நம் ஊர்க் கோவில்கள் போலஉல்லாசப் பிரயாணிகளும்பார்வையாளர்களும்,ஆராய்ச்சியாளர்களும்மீடியாக்களும் அவற்றை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்ஒரு கட்டத்தின் பின்னர் ஒவ்வொரு வருடங்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவழைக்கும் காட்சிப் பொருளாக அவை ஆகிப் போயினஆனாலும் அனைவரிடமும் இறுதியாக எஞ்சி நின்றவை இரண்டே இரண்டு கேள்விகள்தான். "பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?", "எதற்காக உருவாக்கப்படுகின்றன?" என்பவையே அந்த இரண்டு கேள்விகள்.இதற்குப் பதில் சொல்லும் வகையில் ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார் நம்மூர்க்காரரான மனோஜ் சியாமளன். மனோஜ் சியாமளன்ஏலியன்கள்தான் இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்கினர் என்று படம் எடுத்ததற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லைசம்பந்தாசம்பந்தமில்லாமல்எழுந்தமானத்துக்கு ஏலியனை அவர் இந்த விசயத்துக்குள்புகுத்திவிடவில்லைஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக் கிரகவாசிகள்உண்டா இல்லையா என்ற கேள்விக்கே துல்லியமான விடைகள் கிடைக்காத சூழ்நிலையில்பயிர் வட்டங்களுடன் துணிச்சலாக ஏலியன்களை அவர் இணைத்தார் என்றால்அதற்கு மிகப் பெரியதொரு காரணம் இருக்கத்தான் செய்தது.

1970 களில் இலகுவான ஒரே ஒரு வட்ட அமைப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பயிர் வட்டங்கள்படிப்படியாக பல வட்டங்களாக மாறிபின்னர் சித்திரங்கள் போன்ற அழகான அமைப்புகளாக மாறிபின்னர் சிக்கலான சித்திரங்களாக மாறிபின்னர் உயர் கணித வரைவுகளாக மாறின.

இலகுவான வட்ட அமைப்புப் பயிர் வட்டம்

பலவட்ட அமைப்புப் பயிர் வட்டம்

சித்திர வகைப் பயிர் வட்டம்

உயர் கணித வரைவுப் பயிர் வட்டம்

பயிர் வட்டங்கள் வடிவ அமைப்புகளில் மாற்றங்களுடனும்அவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பையும் அடைந்து கொண்டிருக்கும்போதுஉலகம்முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்களை அவை கவரத் தொடங்கின அவற்றை நோக்கி அவர்கள் ஓடிவரத் தொடங்கினர்ஒவ்வொன்றாக அந்தப் பயிர் வட்டங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்கள் ஆராயத் தொடங்கினர்அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில தகவல்கள், "என்ன முடிவுக்கு வருவது?" என்ற குழப்பத்தையே  ஏற்படுத்தினஎண்பதுக்கும் அதிகமான,வெவ்வேறு இடங்களில் வசிக்கும்மிகவும் கண்ணியமான நபர்கள் மூலமாகக் கிடைத்த ஒரு தகவல் அவர்களைத் தடுமாற வைத்ததுசொல்லி வைத்தது போல அந்த எண்பது சாட்சிகளும் கூறியது என்ன தெரியுமாதங்கள் கண்களின் முன்னாலேயேஒரு உதைபந்து அளவுள்ள வெளிச்சப் பந்துகள் (Balls of Light) பயிர் வட்டங்களின் மேலே பறந்து திரிவதைக் கண்டிருக்கிறார்கள்சிலர் தங்கள் முன்னாலேயே அவை பயிர் வட்டங்களை உருவாக்கியதைக் கண்ணால் கண்டதாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள்அவற்றை வீடியோக் காமெரா மூலமாகப் படம் பிடித்தும் வைத்த்திருக்கின்றனர். 

இதை வாசித்ததும்நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பது எனக்குப் புரிகிறது. "இது போன்ற எத்தனையோ 'கிராஃபிக்ஸ்வேலைகளை நாம் கண்டு விட்டோம்என்று நீங்கள் நினைப்பதும் புரிகிறதுசமீபத்தில் வெளியான ஒரு துறவியின் வீடியோவில்,அப்பட்டமாக யாரென்று கண்டு பிடிக்கக் கூடிய வகையில் தெளிவாகப் படங்கள் இருந்தபோதும், 'அவை கிராஃபிக்ஸ் வேலைஎன்று அந்தத் துறவி அடித்துச் சொல்லும் அளவிற்குகிராஃபிக்ஸ் பற்றிய அறிவு நமக்கு வளர்ந்திருக்கிறது.மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனே கணினியில் உருவாக்கக் கூடிய ஒளிப் புள்ளிகளைக் காட்டிஏலியன் என்று நான் சொல்லும் போதுநீங்கள் சிரிப்பதில் ஒன்றும் தப்பே கிடையாதுபயிர் வட்ட ஆராய்ச்சியாளர்களும் அப்படித்தான் முதலில் நினைத்தார்கள்ஆனால் அந்த விசயத்தில் அவர்களுக்கு நெருடியது ஒன்றுதான். "அது எப்படிவெவ்வேறு இடங்களில்ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்காத வேறு வேறு மனிதர்கள்வேறு வேறு வயதையுடையவர்கள் ஒரேமாதிரியான பொய்யை இட்டுக்கட்டிக் கூற முடியும்அதுவும் வீடியோக்களாகக் கூட எடுத்திருக்கின்றனர்அனைவரும் கிராஃபிக்ஸ் செய்தார்களா". அனைத்துவீடியோக்களையும் ஆராய்ந்த போதுஅவற்றில் குறிப்பிட்ட சில வீடியோக்கள்தவிர்ந்துவேறு எவையுமே எந்த கிராஃபிக்ஸும் செய்யப்படாதவையாகவே இருந்தன. 

இந்த வெளிச்சப் பந்துகள் விசயத்தில் ஊரே கூடி நின்று பொய் சொல்கின்றதோ எனச் சந்தேகப்பட்ட மீடியாவினர் சிலர்அவை தோன்றுவது உண்மைதானா என்று ஆராயத் தங்கள் வீடியோக் கேமராக்களை ஆயத்தம் செய்து இரவினில்காத்திருந்தார்கள்என்ன ஆச்சரியம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,வெளிச்சப் பந்துகள் தோன்றி அலையத் தொடங்கினஇதில் ஆச்சரியம்என்னவென்றால்அந்த வெளிச்சப் பந்துகள் இரவுபகல் இரண்டு நேரங்களிலும்தோன்றுவதுதான்அதன் உச்ச கட்டமாகஅந்த வெளிச்சப் பந்துகள் தோன்றியதைஅறிந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் அவற்றை நோக்கிப் பறந்து சென்று அணுகியபோதுஅவை மறைந்து போனதும் நடந்ததுஇந்த ஹெலிகாப்டர் சம்பவம் ஒரு முறையல்லபல முறைகள் நடந்தனஇவற்றையும் கூட வீடியோவாக மீடியாவினர் படமெடுத்திருக்கின்றனர். 

"சேச்சேஎல்லாமே பொய்இந்த பயிர் வட்டங்களே மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றனவெளிச்சப் பந்துகள் உருவாவது உண்மைதான்ஆனால் அவை காற்றில் பறக்கும் பூக்கள் அல்லது வேறு பொருட்கள்" என்று அதை மறுப்பவர்களின் குரல்களும் இடையே ஒலிக்கத்தான் செய்கின்றன. மறுப்பவர்களும் தங்கள் சார்பாகபலமான சாட்சியங்களை முன் வைத்து அவற்றைப் பொய் என்று மறுக்கத்தான் செய்கிறார்கள்ஆனால் நடந்து கொண்டிருப்பவற்றையெல்லாம் என்ன வகையில் எடுத்துக் கொள்வது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்த போதுதான்உலகமே பயிர் வட்டங்கள் சார்பாக அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியதுஅதுவரை பயிர் வட்டங்களை ஒரு பேச்சுக்குக் கூடக் கவனத்தில் எடுக்காத மீடியாக்கள் உட்படஉலகில் உள்ள அனைத்து மீடியாக்களும் அலறியடித்து அந்த இடம் நோக்கி ஓடி வந்தனஅந்த இடம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடமாக இருந்தது. 

தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஷில்போல்டன் (Chilbolton) என்னும் இடத்தில்,இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமான 'ரேடியோ டெலஸ்கோப்' (Radio Telescope)அமைக்கப்பட்டிருக்கிறதுரேடியோ டெலஸ்கோப் அமைந்த இடத்துக்கு மிக அருகில் 13.08.2000 அன்று ஒரு பயிர் வட்டச் சித்திரம் உருவாக்கப்பட்டதுசரியாக ஒரு வருடத்தின் பின்னர் 13.08.2001 அன்று மீண்டும் ஒரு சித்திரம் அதே இடத்தில் தோன்றியதுஅவையிரண்டும் வழமை போல இல்லாமல் வித்தியாசமான ஒரு பயிர் வட்டமாக இருந்தது ஆச்சரியப்படுத்தியதுஆனாலும்அவை என்ன அர்த்தங்களைச் குறிக்கின்றன என்று யாருக்கும் புரியவில்லைஆனால் சரியாக ஐந்து நாட்களின் பின்னர் (18.08.2001) அந்தச் சித்திரத்தின் அருகே இன்னுமொரு சித்திரம் உருவாக்கப்பட்டதுஅந்தப் பிரமாண்டமான பயிர் வட்டச் சித்திரத்தைப்பார்த்துத்தான் உலகமே பதட்டப்பட்டதுஅது பயிர் வட்டம் என்று சொல்லப்படும்வட்ட வகையைச் சாராமல்வேறு ஒரு வடிவத்தில் இருந்ததுஅந்த வடிவம் என்ன தெரியுமாஒரு மனிதனின் முகம்காகிதத்தில் கணினி மூலமாக வரையப்படும் ஒரு மனிதனின் முகம் எப்படி இருக்குமோஅப்படிப் பயிர்களால் அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது.

பயிர் வட்டங்கள் எல்லாம் ஏதோ வெறுமனே வரையப்படுகின்றன எனநம்பியிருந்தவர்களுக்கு, "இல்லைஅவை ஏதோ செய்திகளை நமக்குச் சொல்கின்றனஎன்ற எண்ணம் தோன்றத் தொடங்கியதுஇப்படியெல்லாம் கூட பயிர்களால் வரைய முடியுமாஎன்ற ஆச்சரியம் பிடித்து நம்மை உலுக்கியது.அதன் சாத்தியம் இனம் புரியாத ஒரு பயத்தை உலகிற்கு உருவாக்கத் தொடங்கியது.

பயிர் வட்டங்களை மறுப்பவர்கள் சொல்வது போல அவையும் மனிதர்களின் விளையாட்டுகளில் ஒன்றுதானா அல்லது உண்மையில் அவை ஏலியன்களால்உருவாக்கப்பட்டவையாஅவை நமக்கு எதையாவது சொல்கின்றனவாஇவற்றை விபரமாக அடுத்த தொடரில் நாம் பார்க்கலாம்.

VJagadeesh

unread,
Jun 5, 2012, 7:29:59 AM6/5/12
to பண்புடன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 4
ராஜ்சிவா

ஷில்போல்டனில் மனித முகத்துடன் பயிர் வட்டம் உருவாகியது பற்றிச் சொல்வதற்கு முன்னர்நான் சில விசயங்களை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி விடவேண்டும்இனி நீங்கள் தெரிந்துகொள்ளப் போகும் ஒவ்வொன்றிலும், "இதையெல்லாம் நாம் எப்படி நம்புவது?" என்ற அவநம்பிக்கையான கேள்வியே உங்களிடம் தோன்றிக் கொண்டிருக்கும்உங்களுக்கும்உலகில் உள்ள பலருக்கும்அதிகம் ஏன்எனக்கும் கூட இவை நம்ப முடியாதவைதான்நம்ப வேண்டிய அளவுக்கு ஆதாரங்களையும்சாட்சிகளையும் முன் வைத்தாலும்,மனம் ஏனோ நம்ப மறுக்கிறதுகாரணம்இவற்றை நம்பினால் நாம் எடுக்கும் முடிவு ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும்அந்த முடிவு, 'ஏலியன்கள் பூமிக்கு வந்து போகின்றனஎன்பதுதான்.ஏலியன் பற்றிய சந்தேகம் நம்மில் அனைவருக்கும் இருந்தாலும்முழுமையாக அதை நம்மால் நம்ப முடிவதில்லைநான் எழுதுவதை நீங்கள் வாசித்து விட்டுஏலியன்கள் இருப்பதாக நான் சொல்ல முயற்சிக்கிறேன் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம்அது என் நோக்கமும் இல்லைஆனால் ஏலியன்கள் பற்றிய சாத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்அத்துடன்பயிர் வட்டங்களை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும்இல்லை அது வேறு ஒரு சக்தியினால்தான் உருவாக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களையும் ஒன்றுவிடாமல் சொல்வேன்.இறுதியில் நம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிவுக்கு நிச்சயம் நாம் வரமுடியும். 

ஷில்போல்டன் ரேடியோ டெலஸ்கோப் அமைக்கப்பட்ட இடத்துக்கு மிக அருகில், 2000 ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி ஒரு பயிர் வட்டம் உருவாக்கப்பட்டதுஅது 'ஃப்ராக்டல்' (Fractal) என்று சொல்லப்படும் ஒருவித வடிவமைப்பைக் கொண்டதுகணிதத்தில் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்ட ஒரு வடிவம் இதுஒரு குறிப்பிட்ட வடிவம் பல அடுக்குகளாகப் பெருகி உருவாகும் சித்திரத்தை 'ஃப்ராக்டல் வரைவு' (Fractal art) என்று சொல்வார்கள்இதில் 'ஜூலியா செட்' (Julia Set Fractal), மாண்டல்புரோட் செட்' (Mandelbrot Set Fractal) என வகைகள் இருக்கின்றனஇவை பற்றி நான் ஏன் இங்கு இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால்பயிர் வட்டங்களில் பலஇந்த ஃப்ராக்டல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பதுதான்கணனிகளினால் உருவாக்கக் கூடிய இந்த ஃப்ராக்டல் வடிவங்களைபயிர்களினால் உருவாக்குவதென்பது மிகவும் ஆச்சரியமானசாத்தியமற்ற ஒரு விசயம்அப்படி உருவாக்க முடியுமென்றாலும் அதற்குப் பல பேர் சேர்ந்துபல நாட்கள் உழைக்க வேண்டும்ஆனால் ஒரே இரவில்நான்கு மணித்தியால நேரங்களுக்குள் இவை உருவாக்கப்படுகின்றனஇது போன்ற ஒரு ஃப்ராக்டல் வடிவப் பயிர் வட்டம்தான் ஷில்போல்டனில் உருவானது. 

இந்த ஃப்ராக்டல் பயிர் வட்டம் உருவானபோதுவழமை போல உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டமாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்ஆனால்அப்படி ஒரு வடிவத்தில்பயிர் வட்டம் அங்கு ஏன் அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடைசரியாக ஒரு வருடத்தில் கிடைத்தது2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி இரவு மனித முகத்துடனும்அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் இன்னுமொரு சிக்கலான வடிவத்துடனும் இரண்டு பயிர் வட்டங்கள்அதே இடத்தில் உருவாக்கப்பட்டன 

வழமையான பயிர் வட்டங்கள் போல இவை காணப்படவில்லைஇரண்டுமே செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்தனஒரு மனிதனின் முகம் கணனியில், ஃபோட்டோவாக வரையப்படும் போதுஎப்படிக் கறுப்புவெள்ளை ஒளி மாற்றங்கள் (Shading) இருக்குமோ அப்படி அந்த மனித முகம் அமைக்கப்பட்டிருந்தது.அது மட்டுமல்லாமல்முப்பரிமான அமைப்புடன் (3D) அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்ததுமுப்பரிமாணத் தோற்றம் உருவாவதற்காகபயிர்கள் சிறியதும்பெரியதுமாகவும்அடர்த்தி கூடியதும்அடர்த்தி குறைந்ததுமாகவும் வட்டவடிவப் புள்ளிகள் போல (Pixel)  மிக நேர்த்தியுடன் அழுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தனஒரே இரவுக்குள் அது உருவாக்கப்பட்டது என்று யார் சொன்னாலும் நம்ப முடியாத சித்திரம் அது. 

என்று சிந்தித்த வேளையில்இதே போன்ற முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைப்பு பலருக்குத் தோன்றத் தொடங்கியதுசெவ்வாய் கிரகத்துக்கு 1976 இல் சென்ற வைகிங் (Viking) விண்கலம் பல படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பியதுஅந்தப் படங்களில் மனித முகம் ஒன்று செவ்வாயின் நிலப் பகுதியில் பதிந்திருப்பது போன்ற ஒரு படமும் காணப்பட்டதுஅந்த நேரங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது அதுஅந்த முக அமைப்பை இந்த நேரத்தில் பலர் ஞாபகத்தில் கொண்டு வரத் தொடங்கினர்.உண்மையில் அதற்கும்இதற்கும் சம்மந்தம் உண்டோஇல்லையோ என்று தெரியாவிட்டாலும்,  பலருக்கு ஷில்போல்டன் படத்துக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் உண்டு என்ற நினைப்பு வர ஆரம்பித்தது.  இந்த நினைப்பை உறுதிப்படுத்தியது இரண்டாவதாக உருவாகிய பயிர் வட்டம்.

காணப்படுமோஅப்படிக் காணப்பட்டது அதுஅதைப் படமெடுத்து கணினியில் கொடுத்து படிப்படியாக ஆராய்ந்த போதுதான்பல மர்மங்களுக்கான விடைகள் வெளிவரத் தொடங்கியதுஅந்த மர்மங்கள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியதுஅந்த மர்மம் என்னவென்று விளக்கமாக நமக்குப் புரிய வேண்டுமென்றால், 'கார்ல் சேகன்' (Carl Sagan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

கார்ல் சேகன் என்னும் அமெரிக்கர் வானியல் துறையில் மிகப் பிரபலம் வாய்ந்த ஒரு விஞ்ஞானிஇவர் ஆஸ்ட்ரானாமர்ஆஸ்ட்ரா ஃபிஸிஸிஸ்ட்காஸ்மாலாஜிஸ்ட்விஞ்ஞான எழுத்தாளர் எனப் பல பரிமானமுள்ளவர்இருபதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றுதான் காண்டாக்ட் (Contact). இந்தப் புத்தகம் எந்த மாற்றமுமில்லாமல்காண்டாக்ட் என்ற பெயருடனே, 1997 இல் 'ஜோடி ஃபோஸ்டர்' (Jodie Foster) நடித்துத் திரைப்படமாக வெளிவந்ததுஉலக ரீதியாக வசூலை அள்ளிக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று.

மனிதர்கள் வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் கதையை மையமாக வைத்துஇந்தப் படம்  மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தது (முடிந்தால் கட்டாயம் பாருங்கள்). இந்தக் கதையை எழுதிய கார்ல் சேகன்பிரபஞ்சத்தில் பல இடங்களில் உயிரினங்கள் உண்டு என்பதைத் தீர்க்கமாக நம்பினார்.இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி விண்வெளிக்கு ஒரு செய்தியை அனுப்பினார்பூமியில் நாம் வசிக்கிறோம் என்ற செய்தியுடன்நம்மைப் பற்றிய விபரங்களை வரைபடமாக்கிப் பின்னர் அதை 0, 1 என்னும் பைனரி வடிவத்தில் ரேடியோ அலைகளாக விண்வெளிக்கு அனுப்பினார்குறிப்பாகபூமிக்கு மிக அருகில், 25 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் Messier 13 என்று சொல்லப்படும் M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி அனுப்பி வைத்தார்M13 இல் மூன்று இலட்சத்துக்கு அதிகமான நட்சத்திரங்களும்கோடிக்கணக்கான கோள்களும் இருக்கின்றனஅங்கு ஏதாவது ஒரு கோளில் உயிரினம் இருந்து இந்தச் செய்தியைக் கண்டறிந்து பூமியுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதே கார்ல் சேகனின் எண்ணம். 

வேற்றுக் கிரகங்களில் உயிரினம் உண்டு என்பதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவில்லைஅப்படி உயிரினம் இருக்கும் பட்சத்தில் அவை அதிபுத்திசாலிகளாக இருக்கவே சாத்தியம் அதிகம் என்பதும் இவர்கள் கணிப்புஇந்தக் கணிப்பை அடிப்படையாக வைத்தே கார்ல் சேகன் செய்திகளை அனுப்பி வைத்தார்போர்ட்டா ரிக்கோ நாட்டில் உள்ள ஆரசிபோவில் (Arecibo-Puerto Rico) அமைந்துள்ள பாரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தே அந்தச் செய்திகள் அனுப்பப்பட்டனஅவர் அனுப்பிய செய்தி என்ன தெரியுமா...அதன் வரைபடத்தை நீங்கள் பார்த்தால்தான்இதுவரை நான் ஏன் கார்ல் சேகன் பற்றி இவ்வளவு விபரங்கள் சொன்னேன் என்பது புரியும்அவர் அனுப்பிய செய்தியின் வரைபடம் இதுதான்.

என்ன புரிகிறதாஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் அமைப்புக்கும்கார்ல் சேகனின் செய்திக்கும்  சில மாற்றங்கள் தவிர்ந்துவடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தெரிகிறதா?புரியவில்லையெனின்அந்த இரண்டு சித்திரங்களையும் ஒன்றாகப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம்.

இந்தப் படத்தில் வலது பக்கம் இருப்பது கார்ல் சேகன் அனுப்பிய செய்திஇடது புறம் இருப்பது ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் படம்இரண்டு படங்களையும் பார்க்கும்போது ஒன்று போலவே தோன்றினாலும்நன்கு கவனித்தால்பல வித்தியாசங்கள் தெரியும்அந்த வித்தியாசங்கள் என்ன என்று ஆராய்ந்தபோது கிடைத்த பதில் எல்லாமே அதிர்ச்சிகரமானவைகார்ல் சேகன் 1974ம் ஆண்டு அனுப்பிய செய்திக்கு, 27 ஆண்டுகளுக்கு அப்புறம் ஏலியன்கள் கொடுத்த பதில்தான் அந்த ஷில்போல்டன் பயிர் வட்டம் என்கிறார்கள் அதை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தவர்கள். 

கார்ல் சேகன் M13 நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அப்படி என்ன செய்திகளை அனுப்பினார்அதற்கு நமக்குப் பயிர் வட்டங்கள் மூலமாகக் கிடைத்த பதில்கள்தான் என்ன? 

அவற்றை அடுத்த தொடரில் பார்ப்போமா?

Namakkal Shibi

unread,
Jun 5, 2012, 7:47:49 AM6/5/12
to panb...@googlegroups.com
பிரமிப்பாக இருக்கிறது. தொடருங்கள்!

VJagadeesh

unread,
Jun 5, 2012, 7:52:08 AM6/5/12
to panb...@googlegroups.com
தொடர் எழுதின ராஜ் சிவா தொடர்ந்தா நான் ஏன் தொடராம இருக்க போறேன்...

இப்போதிக்கு நாலு பார்ட்தான் வந்திருக்கு உயிரோசைல

2012/6/5 Namakkal Shibi <nrs...@gmail.com>
பிரமிப்பாக இருக்கிறது. தொடருங்கள்!

--

Namakkal Shibi

unread,
Jun 5, 2012, 7:54:37 AM6/5/12
to panb...@googlegroups.com
அதுவும் சரிதான்! எனிவே பகிர்விற்கு நன்றி!

2012/6/5 VJagadeesh <vom...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Jun 5, 2012, 8:21:52 AM6/5/12
to panb...@googlegroups.com
தொடர் எழுதின ராஜ் சிவா தொடர்ந்தா நான் ஏன் தொடராம இருக்க போறேன்...//
:)))

2012/6/5 Namakkal Shibi <nrs...@gmail.com>



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Raja sankar

unread,
Jun 5, 2012, 9:26:34 AM6/5/12
to panb...@googlegroups.com
கார்ல் சேகன் அனுப்பிய செய்தி அந்த நட்சத்திர கூட்டத்தை போய் சேரவே 25,000 ஆண்டுகள், ஆமாங்க இருபத்தி ஐந்தாயிரம் ஆண்டுகள் பிடிக்கும். திரும்ப பதில் வர இன்னும் ஓர் இருபத்தி ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகும். மொத்தம் ஐம்பதினாயிரம் ஆண்டுகள்.

கூடவே அந்த செய்தி போய்ச்சேரும் போது அந்த நட்சத்திரக்கூட்டம் அந்த இடத்தில் இருக்காது, பால்வெளிக்நட்சத்திரக்கூட்டம் இப்போது இருக்கும் இடத்தில் இருக்காது.

இதுல எங்கேயிருந்து உடனே பதில் வர்றது?


ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/5 VJagadeesh <vom...@gmail.com>

Poornima MM

unread,
Jun 8, 2012, 5:46:39 AM6/8/12
to panb...@googlegroups.com
This author wrote Mayan' calender related mysteries as well and its very interesting.

can you provide the link?

2012/6/5 Raja sankar <errajasa...@gmail.com>

VJagadeesh

unread,
Jun 9, 2012, 2:24:38 AM6/9/12
to panb...@googlegroups.com

VJagadeesh

unread,
Jun 11, 2012, 11:45:11 AM6/11/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 5
ராஜ்சிவா

Arecibo வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கார்ல் சேகன், 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி ஒரு செய்தியை அனுப்பினார்அந்த செய்தியில் அவர் பூமி, சூரியக் குடும்பம் மற்றும் மனிதர்கள் சம்பந்தமான பல விவரங்களை இணைத்திருந்தார்நாம் பயன்படுத்தும் தசம இலக்கங்கள், மனிதர்களிலுள்ள அடிப்படை இரசாயன மூலகங்கள் (கார்பன், ஒட்சிசன், நைதரசன், ஐதரசன், பொஸ்பரஸ்பற்றிய குறிப்புகள், DNA பற்றிய குறிப்புகள், DNA யின் வடிவம், மனிதனின் வடிவம், மனிதனின் சராசரி உயரம், பூமியின் சனத்தொகை, சூரியக் குடும்பமும் அதில் பூமியின் அமைவு, இந்தச் செய்திகள் அனுப்ப உதவிய ஆரசிபோ டெலஸ்கோப்பின் வடிவம் மற்றும் அதன் பருமன் ஆகிய அனைத்து விபரங்களுடன், அந்தச் செய்தி அனுப்பப்பட்டிருந்ததுஅனுப்பப்பட்ட இடம் நமக்கு மிக அண்மையிலுள்ள M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிM13, நமக்கு மிக அண்மையில் உள்ளது என்று நான் சொன்னாலும், உண்மையில் அது இருபத்திதைந்து ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறதுநாம் ஒளியின் வேகத்தில் (300000 கிமீ/செக்கன்சென்றால், அந்த நட்சத்திரக் கூட்டத்தை அடைய 25 வருடங்கள் நமக்குத் தேவைஅவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவுஅதாவது நாம் அனுப்பிய செய்தி அங்கு சென்றடையக் குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை. 

இந்தச் செய்தி அனுப்பும் போதேஇதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் 25வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை என்று கார்ல் சேகன் கணித்தே வைத்திருந்தார்அவர் கணித்தது போலவே 27 வருடங்களுக்குப் பின்னர்ஷில்போல்டனில் அந்தப் பயிர் வட்டங்கள் உருவாயினபயிர் வட்டங்களில் இருந்த செய்தியை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாக இருந்தது. எப்படிக் கார்ல் சேகன் தன் செய்திகளை வரைபடமாக்கி அனுப்பியிருந்தாரோஅதே வடிவத்தில் பதிலும் இருந்தது.ஆனால் வந்த பதிலில்அவர்களின் உயிர்கார்பன்ஒட்சிசன் போன்றவற்றுடன் மட்டுமல்லாமல்மேலதிகமாக சிலிக்கோனினாலும் ஆக்கப்பட்டிருப்பதாகவும், DNA இன் அமைப்பிலும் உருவத்திலும் பெரும்பாலான மாற்றங்களுடனும்,அவர்களின் சராசரி உயரம் அடி அங்குலம் எனவும்சனத்தொகை நம்மை விட மிக  அதிகமெனவும் (12742213502 ஏலியன்கள்)அவர்களின் கோள் அமைந்துள்ள இடம்தாங்கள் தகவல் அனுப்பப் பயன்படுத்தும் டெலஸ்கோப்பின் உருவம்டெலஸ்கோப்பின் பருமன் ஆகியவை இருந்தன. 

இங்குதான் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்ததுஏலியன்கள் வரைந்ததாக கருதப்பட்ட அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் கீழ்ப் பகுதியில்வரையப்பட்டிருந்த ஏலியன்களின் டெலஸ்கோப்பினது வடிவமும்ஒரு வருடத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 'ஃப்ராக்டல்வடிவப் பயிர்வட்டச் சித்திரமும் ஒரே வடிவத்தில் இருந்தனஅப்படி ஒரு சித்திரம் ஒரு வருடத்துக்கு முன்னர் ஷில்போல்டனில் ஏன் உருவாக்கப்பட்டது என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது. 

ஒரு பயிர்ச் சித்திரத்தை ஏற்கனவே உருவாக்கிபின்னர் அதே பயிர்ச் சித்திரத்தை உள்ளடக்கி வேறு ஒரு குறியீட்டு வகைப் பயிர்ச் சித்திரத்தை உருவாக்குவதென்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.அத்துடன் இவையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டுமென்றால்,அதற்குத் தேவையான உழைப்பு என்பது மிக மிக அதிகமானது. அதற்குக் காலமும் அதிகம் தேவைப்படும்ஆனால் ஒரே இரவில்நான்கு மணிநேரங்களில் உருவாக்கப்பட முடியாதுஇவற்றை ஏலியன்கள்தான் உருவாக்கின என்பதற்கு இது ஒன்றே சாட்சியமாகவும் இருக்க முடியுமா என்று பார்த்தால்முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்ஆனால் அந்தக் குறையையும் தீர்ப்பதற்கென்றே உருவானது இன்னுமொரு பயிர் வட்டம்.இதைப் பார்த்ததும் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட அதிர்ந்துதான் போனார்கள்ஒன்று இவையெல்லாம் ஏலியன்கள் மக்களுடன் தொடர்புகொள்ளும் மாபெரும் முயற்சி. இல்லையெனில் உலக மக்களையே மடையர்களாக்கும் முட்டாள்தனமான மனிதர்களின் மோசமான வேலையாக இருக்க வேண்டும்அந்தச் சித்திரமும் ஷில்போல்டனில் அமைந்தது போலவே இருந்தாலும்பயங்கரமானதும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்ததுஅதன் படத்தைப் பார்த்ததும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கே புரிந்து போகும்.

2001ம் ஆண்டு ஷில்போல்டனில் உருவான முக அமைப்புடைய பயிர் வட்டம் தோன்றியதற்கு சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி, இங்கிலாந்து க்ராப்வூட் (Grabwood) நகரத்தில் இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்டிருந்ததுஇதுவரை ஏலியன்களின் முகங்கள் எப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தோமோ, அதே முகச் சாயலுடன் கூடிய பயிர் வட்டச் சித்திரமாக அது உருவாக்கப்பட்டு இருந்ததுஅத்துடன் வட்டவடிவமான ஒருவித வினோத வடிவமும் அந்த உருவத்துடன் இணைந்து காணப்பட்டது. வட்டத்திற்குள் பல வட்டங்களாக அது அமைந்திருந்ததுஅந்த வட்டங்கள் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது நாம் தற்சமயம் பாவிக்கும் சிடி(Compact Disc) போல இருக்கலாமோ எனச் சிந்திக்கத் தோன்றியதுசிடியில் எப்படி தகவல்கள் பதியப்பட்டிருக்கலாமோ, அது போல அந்த வட்டத்திலும் தகவலாக செய்திகள் இருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதை ஆராய்ந்தபோது உண்மையிலேயே அதில் அப்படியே செய்திகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த வட்டவடிவமாக இருந்த பயிர் வட்டத்தில் இருந்த செய்தி என்னதெரியுமாஅது இதுதான்........!

"Beware the bearers of FALSE gifts & their BROKEN PROMISES.Much PAIN but still time.BELIEVE.There is GOOD out there.We oPpose DECEPTION.COnduit CLOSING\"

"ஏலியன்களில் இரண்டு வகையினர் இருப்பதாகவும், அதில் ஒரு வகையினர் நல்லவர்கள் என்பதாகவும், கெட்டவர்களின் வார்த்தைகளை நம்பி நாம் ஏமாறக் கூடாதுஎன்ற எச்சரிக்கையாக அந்தச் செய்தி இருந்ததுஇதைப் பர்த்ததும் நிச்சயமாக உங்களுக்கு சிரிப்பதா? நம்புவதா? என்பதே பெரிய கேள்வியாக இருக்கும்பலருக்கும் அப்படித்தான் இருக்கின்றதுஆனால் அது உருவாக்கப்பட்ட விதத்தில் நம்ப வேண்டிய சூழ்நிலைகளே அதிகம் இருக்கின்றன. இந்தச் செய்தியில் உள்ளது போல, நாம் யாரிடம் கவனமாக இருக்க வேண்டும்? இந்தச் சித்திரத்தில் இருக்கும் உருவ அமைப்புள்ளவர்களிடமா அல்லது அதில் சொல்லப்பட்ட நல்லவர்கள்தான் இந்தச் சித்திரத்தில் இருப்பவர்களா? எந்த விபரமும் அங்கு இல்லை.இருந்தவை எல்லாமே ஆச்சரியமும், மர்மமும் மட்டுமே! ஒரு பேச்சுக்கு இதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்று நாம் எடுத்தோமானால், உருவாக்கிய அந்த மனிதர்களின் மோசமான நகைச்சுவையுணர்வை என்ன என்று சொல்வது? ஆனால் பலர் இதை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம்அதில் உள்ள சாத்தியக்கூறுகள் மனிதனால் உருவாக்கக் கூடியதாக இருக்கவில்லை என்பதுதான்இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த சித்திரமும் ஒரு தொலைக்காட்சிக் கோபுரம் அமைந்த இடத்துக்கு அருகில்தான் உருவாக்கப்பட்டிருந்தது. 

இங்கு நாம் ஒன்றைச் சரியாகக் கூர்ந்து பார்த்தோமானால்பயிர் வட்டங்களில் மிக முக்கியமானவை அனைத்துமே இங்கிலாந்தில்குறிப்பாக தெற்குஇங்கிலாந்திலேயே காணப்படுவது தெரியவரும்இதுவரை உலகம் முழுவதும் பத்தாயிரத்துக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகியிருந்தாலும்தெற்கு இங்கிலாந்தில்தான் எண்பது சதவீதமான பயிர் வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அது ஏன்அப்படி என்னதான் இந்த இடத்தில் விசேசம் என்று பார்த்தபோது அங்கும் நமக்கு ஆச்சரியமான ஒரு தகவல் கிடைத்தது.

ஆம்நம்பவே முடியாத ஆச்சரியம் ஒன்று அந்த இடத்தில் இருக்கத்தான் செய்ததுநான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு வட்டம்தான் அந்த ஆச்சரியம்ஆனால் நீங்கள் நினைப்பது போல அது ஒன்றும்பயிர்களால் உருவாக்கப்பட்ட வட்டம் கிடையாதுகற்களால் உருவான வட்டம். கற்கள் என்றால் சின்னக் கற்கள் கிடையாதுஒவ்வொன்றும் நூறு தொன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்கள்உலகில் புராதன அதிசயமாகப் பார்க்கப்படும் முக்கிய அடையாளம் அதுஅதன் பெயர் 'ஸ்டோன்ஹெஞ்ச்' (Stonehenge). 

ஸ்டோன்ஹெஞ்ச் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறையவே உண்டுஅது எப்படி உருவானதுயாரால் உருவானதுஎன்ற கேள்விகளுக்கும்,பயிர் வட்டங்களுக்கும் ஸ்டோன்ஹெஞ்ச்சுக்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்விகளும் இப்போது நம்மிடையே தோன்றியுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கு உரிய பதிலுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்


2012/6/5 Raja sankar <errajasa...@gmail.com>

VJagadeesh

unread,
Jun 18, 2012, 1:55:48 PM6/18/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 6
ராஜ்சிவா

ஸ்டோன்ஹெஞ்ச் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர்இந்த வாரம் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். குறிப்பாகச் சிலர் ஒரே மாதிரியான சந்தேகத்தை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர்அந்தச் சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம். "கார்ல் சேகன் ஏலியன்களுகாக அனுப்பிய செய்தி, M13 நட்சத்திரக் கூட்டத்தைச் சென்றடைய 25 வருடங்கள் எடுக்கும் என்று சொன்னீர்கள்ஆனால் அவர்களிடமிருந்து பதில் எப்படி ஒரு வருடத்திலேயேபயிர் வட்டமாக கிடைத்திருக்க முடியும்அந்தச் செய்தி பூமியை நோக்கி வருவதற்கும் 25 வருடங்கள் தேவையல்லவா." இதுதான்அவர்களின் சந்தேகம்உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி இது. தொடரில் சொல்லப்பட்ட ஷில்போல்டன் பயிர் வட்டம், M13 நட்டசத்திரக் கூட்டத்தை நோக்கி கார்ல் சேகன் அனுப்பிய செய்திக்கான பதிலாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன்அத்துடன் அந்த நட்சத்திரக் கூட்டம்25 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன்.கார்ல் சேகன் அனுப்பிய செய்தி அங்கு சென்றடைய குறைந்தபட்சம் 25வருடங்கள் தேவைஅதே போல அங்கிருந்து பூமிக்கு செய்தி வருவதற்கும் 25வருடங்கள் தேவை அல்லவா. மொத்தமாக 50 வருடங்கள் தேவையாகும்போது, 26 வருடங்களிலேயே பதில் எப்படி வந்திருக்க முடியும் என்ற கேள்வி நியாயமானதுதான்இது ஒன்றே ஷில்போல்டன் பயிர் வட்டம் ஏலியன்களால் செய்யப்படவில்லைமனிதர்களால்தான் செய்யப்பட்டதுஎன்பதற்கு சான்றாகவும் அமைந்துவிடும்.

இந்த நியாயமான சந்தேகத்துக்குப் பதிலை நான் இப்பொழுது சொல்லியே ஆகவேண்டும்கடந்த பதிவுகளில் கார்ல் சேகன் எழுதிய காண்டாக்ட் என்னும் புத்தகம்எந்த மாற்றமும் இல்லாமல், ‘காண்டாக்ட் (Contact) என்றபெயரிலேயே படமாக எடுக்கப்பட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன்அந்தப் படத்தை முடிந்தால் பாருங்கள் என்றும் சொல்லியிருந்தேன்நிச்சயம் அந்தப் படத்தை உங்களில் பலர் பார்த்திருக்க மாட்டீர்கள்அந்தப் படத்தில் கார்ல் சேகன்மேலே சொல்லப்பட்ட சந்தேகத்துக்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்.விளக்கமாக அந்தப் பதில் சொல்லப்படா விட்டாலும்அறிவியலில் சிறிது ஆர்வம் இருந்தால் அது புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறதுஅதை உங்களுக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்வதற்கு நான் முயற்சிக்கிறேன். 

‘ காண்டாக்ட்’ படத்தின் கதையை மிகவும் சுருக்கமாக முதலில் நாம் பார்க்கலாம்படத்தில் நாயகியான ஜோடி ஃபோஸ்டர், சிறிய வயதிலிருந்தே வானியல் ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவள்சிறிய வயதில் தந்தை இறக்க, வானியல் ஆராய்ச்சியாளராகவே தன் படிப்பை முடித்து, போட்டோரிகாவில் உள்ள 'ஆரசிபோ' வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறாள்(நிஜத்திலும் இந்த ஆரசிபோ டெலஸ்கோப் மூலமாகத்தான் கார்ல் சேகன் ஏலியன்களுக்கு செய்தி அனுப்பினார் என்பதை முன்னர் சொல்லியிருக்கிறேன்). அங்கு அவள் பிரபஞ்சத்தில் அதியுயர் அறிவைக் கொண்ட உயிரினங்கள் எங்கேயாவது வாழ்கின்றனவா என்று ஆராய்ந்து வருகிறாள்திடீரென வேகா(Vega) என்னும் 26 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து பூமியை நோக்கிச் செய்திகள் வருவதை அவதானிக்கிறாள்வந்த செய்திகள் முப்பரிமாணப் படங்களாக வருகிறது.செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில், வேகாவில் இருப்பவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்ற குறிப்புகளும் இருக்கின்றனமிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று வளையங்களின் நடுவே, ஒரு மனிதன் இருக்கக் கூடிய, பந்து போன்ற அமைப்பு உள்ள ஒரு கருவியின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறதுஅந்த செய்திகளில் இருந்தபடி, பாரிய கருவி ஒன்றை உருவாக்குகின்றனர். 

அந்தக் கருவியின் நடுவே உள்ள பந்து போன்ற அமைப்பினுள்ளேபலவித வீடியோக் கருவிகளைத் தன் உடம்பில் பொருத்தியபடிவேகாநட்சத்திரத்துக்கான பயணத்துக்கு ஜோடி ஃபோஸ்டர் ஆயத்தமாகிறாள்.பிரயாணம் ஆரம்பமாகப் போகும் கடைசித் தருணங்களான கவுண்ட் டவுன்(Countdown) ஆரம்பமாகிறது10, 9, 8...... என்று வரும்போதே ஜோடி ஃபோஸ்டர் பலவிதமான வெளிச்சங்களைக் காண்கிறாள்அத்துடன் அவளுக்கும் பூமிக்கும் உண்டான தொடர்பில் தெளிவில்லாமலும் போகிறதுகவுண்ட் டவுனின் பூச்சியத்தில் பிரயாணம் ஆரம்பமாகிறதுஇந்த நேரத்தில் படத்தில் இரண்டு விதமாகக் காட்சிகள் அமைகின்றனஅந்தப் பந்தினுள் அமர்ந்திருக்கும் ஜோடி ஃபோஸ்டருக்கு என்ன நடக்கிறது என்ற அவளது பார்வையிலானதுமற்றதுவெளியே இருந்து அந்தப் பயணத்தைஅவதானிக்கும் அமெரிக்க அரசு சார்ந்தவர்கள் பார்வையிலானது.

கவுண்ட் டவுன் ஆரம்பமாகியதும் ஜோடி ஃபோஸ்டர்தான் அமர்ந்திருக்கும் பந்தினுள்ளேமுழுவதும் வித்தியாசமான ஒளிகளைக் காண்கிறாள்அப்புறம் பிரயாணம் ஆரம்பமாகியதும்குழாய் போன்ற அமைப்புகளுக்கூடாகச் செல்கிறாள்ஒன்று மாறி ஒன்றாகப் பல குழாய்கள் போன்றவை தோன்ற,அவை வழியாகச் செல்கிறாள்இறுதியில்வேகாவை அடைகிறாள்அங்கு என்ன செய்கிறாள்யாருடன் பேசுகிறாள் என்பது பற்றியெல்லாம் இங்கு நான் சொல்லப் போனால் கதை விரிவடைந்துவிடும்வேகாவுக்குச் சென்றவள் பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறாள்அவளைப் பொறுத்தவரை பயணத்தின் மொத்த நேரம் 18 மணித்தியாலங்கள்ஆனால் பூமியில் அவளின் பயணத்தை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் காண்பதோ வேறு காட்சிகள்.அவர்களின் பார்வையில்கவுண்ட் டவுன் ஆரம்பமாகி ஸ்டார்ட் பட்டன் அழுத்தப்பட்ட அடுத்த கணம் வேகமாக சுற்றும் கருவியில்தப்புகள் நடந்து பலத்த வெடி விபத்து ஏற்படுகிறதுஜோடி ஃபோஸ்டர் அமர்ந்திருந்த பந்து அப்படியே கடலினுள் தூக்கியெறியப் படுகிறது. அதாவது பிரயாணம் என்ற ஒன்று நடக்காமலே சில செக்கன்களிலேயே எல்லாம் வெடித்துச் சிதறுகின்றனஉடனே ஜோடி ஃபோஸ்டர் அந்தப் பந்திலிருந்துகாப்பாற்றப்படுகிறாள்.

பூமியில் இருந்தவர்களைப் பொறுத்தவரை சில செக்கன்களில்தோல்வியில் முடிந்த அந்தப் பிரயாணம்ஜோடி ஃபோஸ்டரைப் பொறுத்த வரை 18 மணிநேரப் பயணமாகவும்வெற்றிகரமான ஒரு பயணமாகவும் அமைகிறது.அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டியின் விசாரணையின் போதுதான் கண்ட காட்சிகளை ஜோடி ஃபோஸ்டர் சொன்னாலும்அதை யாரும் நம்பவில்லை.அவளுடன் இணைக்கப்பட்ட வீடியோ சாதனங்களும்எந்தக் காட்சிகளும் பதிவு செய்யப்படாமல் வெறுமையாகவே இருக்கின்றனசில செக்கன்களில் நடந்த ஒரு தோல்விப் பயணத்தை, 18 மணி நேரங்கள் நடந்த ஒரு வெற்றிப் பயணமாகச் சென்று வந்தது என்று அவள் சொல்வதற்கான ஒரு சாட்சியத்தையாவது கொடுக்கும்படி கமிட்டி கேட்கிறது. அத்துடன் 25 ஒளி வருடங்கள் தூரத்துக்கு, 18 மணி நேரத்தில் எப்படிப் போய் வரலாம் என்பதையும் விளக்கும்படி கேட்கிறதுஅப்போது ஜோடி ஃபோஸ்டர் சொல்லும் விளக்கம்தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில்சிலர் மின்னஞ்சலில் கேட்ட சந்தேகத்துக்கான பதில்களாக இருக்கப் போகிறதுசொல்லப் போனால்காண்டாக்ட்’ படத்தின் மொத்தக் கருவுமே கடைசியில் கொடுக்கப்படும் இந்த விளக்கத்தில்தான் தங்கியிருக்கிறது.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்மிகவும் கடினமாகப் புரிந்து கொள்ளக் கூடியதும்புரிய வைக்கக் கூடியதுமான ஒரு விசயத்தை உங்களுடன் பரிமாறிக்கொண்டிருக்கிறேன்நான் சொல்பவை உங்களுக்குப் புரியுமானால்அது நிச்சயம் எனக்கு ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும்இனி விசயத்துக்கு வருவோம்.

ஜோடி ஃபோஸ்டர் காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லும் விளக்கம் இதுதான். "பூமியில் மனிதர்கள் உணர்ந்த நேரம்தான் அந்த சில செக்கன்கள். ஆனால் ஸ்பேஸ் (Space) என்னும் பிரபஞ்ச வெளியில் பிரயாணம் செய்யும் நேரம்என்பது வேறுஐன்ஸ்டைனும்ரோசன்பேர்க்கும் சொன்ன 'பாலம்' (Bridge)கோட்பாட்டின்படிஒரு வோர்ம் ஹோல் (Wormhole) உருவாகிஅதன் மூலம் நான் மிகக் குறைந்த நேரத்தில் வேகாவுக்கு சென்று வந்திருக்கலாம்என்று யூடி ஃபோஸ்டர் சொல்கிறாள்'அது கோட்பாடுதானேயொழிய இன்னும் நிரூபிக்கப்படாதவைஎன்று சொல்லி அதை ஏற்க மறுக்கின்றார்கள் கமிட்டியினர்இந்த இடத்தில் நாம் படத்தில் இருந்து விலகி, 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' (Enstein-Resenberg Bridge) என்னும் கோட்பாடு பற்றிப் பார்க்கலாம்.

ஐன்ஸ்டைனை யாரென்று உங்களுக்கு நான் புரிய வைக்கத் தேவையில்லை.இன்றுவரை உலகத்தில் முதலாவது விஞ்ஞானியாக கருதப்படுபவர்.பிரபஞ்சம் பற்றிய பல கோட்பாடுகளை உருவாக்கியவர்ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தில் மூன்று துளைகள் (Holes) இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்ப்ளாக் ஹோல் (Black hole), வைட் ஹோல் (White hole),வோர்ம் ஹோல் (Wormhole) என்பவைதான் அந்த மூன்றும்ப்ளாக் ஹோல் பற்றி அனேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும்வைட் ஹோல்வோர்ம் ஹோல் என்பவை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்இந்த மூன்று துளைகளும் பிரபஞ்சம் எங்கும் இருப்பதாக ஐன்ஸ்டைன் சொன்னாலும்,அவற்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மனித விஞ்ஞானம் இன்னும் வளரவில்லைஇவை இருக்கின்றன என்று ஐன்ஸ்டைன் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலோஎழுந்தமானத்திலோ கூறிவிடவில்லைமிகவும்சிக்கலானநுணுக்கமான வானவியல் கணிதச் சமன்பாட்டின் மூலம் அவற்றை நிறுவியிருக்கிறார்இதுவரை இவை இல்லையென்று எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லைஅதுதவிரஇவற்றைக் கண்டு பிடிப்பதே தற்கால விஞ்ஞானிகளின் நோக்கமாகவும் இருக்கிறது. 

இப்போது நாம் பார்க்கப் போவது வோர்ம் ஹோலைப் பற்றித்தான். ஒரு புழுவைப் போல அமைப்பில் விண்வெளியில் உருவாகும் ஒரு குழாய் போன்ற வடிவத்தைத்தான் வேர்ம் ஹோல் என்பார்கள்விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குப் பிரயாணம் செய்வதற்குநேராக அந்த இடத்தை நோக்கி விண்கலத்தில் செல்வதை விடவோர்ம் ஹோல் மூலமாகப் செல்வது இலகுவானதும்காலத்தை மிச்சம் பிடிப்பதுமாகும் என்கிறார் ஐன்ஸ்டைன்நமது பிரபஞ்சம் (Universum) தட்டையானது என்றே முன்னர் விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர்ஆனால் அது வளைந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை பின்னர்தான் தெரிய வந்தது. இந்த நிலையில் ஐன்ஸ்டைனும்அவரது நண்பருமான ரோசன்பேர்க் என்பவரும்சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சிகரமான வானியல் விஞ்ஞானக் கோட்பாட்டைவெளியிட்டனர்அதுவே 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்எனப்படுகிறது.முதலில் இந்தப் படத்தைப் பாருங்கள்இது வோர்ம் ஹோலினால் உருவாகும் பாலம் கோட்பாட்டுக்கு மிக நல்ல உதாரணமாக இருக்கும். 

படத்தில் நமது பூமிக்கும் 'சிர்ரியஸ்என்னும் நட்சத்திரத்துக்கும் உள்ள இடைவெளி 90 ட்ரில்லியன் கிலோமீட்டர் என்று காட்டப்பட்டிருக்கிறது.பிரபஞ்சம் வளைந்த நிலையில் உள்ளதால்வோர்ம் ஹோல் மூலமாக சிர்ரியஸ் நட்சத்திரத்துக்குச் செல்லலாம் என்றும் காட்டப்பட்டிருக்கிறது.வோர்ம் ஹோலினூடாக பிரயாணம் செல்லும்போதுகாலம் மிகவும் சுருங்கிவிடும் என்பதால்அந்தப் பிரயாணமும் மிகக் குறுகிய நேரத்திலேயே நடக்கிறது. 

இப்படியான ஒரு வோர்ம் ஹோல் மூலமாகத்தான் காண்டாக்ட் படத்தின்நாயகி ஜோடி ஃபோஸ்ட்டரும் வேகா நட்சத்திரத்தை அடைகிறாள்ஆனால் அவள் சொல்வதை அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டி நம்பவில்லைஆனால் படத்தின் இறுதியில் ஒரு முக்கிய சம்பவத்துடன் படம் முடிவடைகிறதுசில செக்கன்களில் நடந்ததை 18 மணி நேரம் நடந்த பிரயாணம் என்று ஜோடி ஃபோஸ்டர் சொன்னதற்குக் காரணம் கேட்கிறது கமிட்டிஅவள் உடம்பில் பொருத்தப்பட்ட வீடியோவில் கூடக் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.ஆனால் அந்த வீடியோவை இரகசியமாக ஆராய்ந்த போதுஅதில் எந்தக் காட்சியும் இல்லாவிட்டாலும்ரெக்கார்ட் செய்யப்பட்ட நேரம் மொத்தமாக 18மணி நேரம் ஆகியிருக்கிறது18 மணி நேரம் பதிவுசெய்யப்பட்டிருக்குமானால்அவள் பிரயாணம் செய்ததும் 18 மணி நேரமாகத்தான் இருக்கும் என்பது  நிரூபனமாகிறதல்லவாஆனால் அந்த வீடியோ ஆதாரத்தை அப்படியே யாருகும் தெரியாமல் மறைக்கிறது அமெரிக்க அரசு. ‘ஜோடி ஃபோஸ்டருக்குக் கூட அது சொல்லப்படுவதில்லை. "அந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்றுசொல்லப்படுவதில்லை 

நமது பூமிக்கு வரும் ஏலியன்கள் கூட இதே போன்று வோர்ம் ஹோலைஉபயோகித்து வந்திருக்கலாம் என்றே பலர் நம்புகின்றனர்.ஷில்போல்டனுக்குரிய செய்தி கூட இந்த வகையிலேயே வந்திருக்கலாம் எனவும் சொல்கிறார்கள்பயிர் வட்டங்கள் உருவாவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒளிப் பந்துகள் கூடவோர்ம் ஹோல்கள்தானோ என்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. "என்னடா இந்த ஆள் ஏலியன் இருக்கு என்றே சொல்லிவிடுவார் போல இருக்கே!" என்று நீங்கள் நினைக்கலாம். நான் சொல்வது ஒருபுறம் இருக்ககாண்டாக்ட் படத்தில் ஜோடி ஃபோஸ்டருக்குசெய்தி கிடைத்தது போலநிஜமாகவே பூமிக்கு விண்வெளியில் இருந்து ஒரு சிக்னல் கிடைத்ததுஅதுவும் வெகு தொலைவில் இருந்த நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து ரேடியோ சிக்னலாக வந்ததுநம்பவே முடியாத அதிசயம் அது. 

1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஜெர்ரி ஏமான் (Jerry Ehman) என்னும் வானியல் விஞ்ஞானி, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதை அவதானித்தார்அதைப் பதிவும் செய்தார்ஆனால் 72 செக்கன்களின் பின்னர் அது நின்று விட்டது.அப்புறம் வரவேயில்லைஇதை 'வாவ்சிக்னல்' (Wow! signal) என்கிறார்கள்.பெயருக்கு ஏற்றால் போல பூமியில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் 'வாவ்!' என்று வாயைப் பிளக்க வைத்தது அந்த சிக்னல். 

வாவ் சிக்னல் பற்றி விரிவாகவும்இந்தப் பகுதியில் சொல்லாமல் விடுபட்டுப் போன ஸ்டோன் ஹெஞ்ச் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போமா..!

VJagadeesh

unread,
Jun 25, 2012, 12:05:40 PM6/25/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 7
ராஜ்சிவா

Wow! சிக்னல் பூமியை வந்தடைந்தது பற்றிப் பார்ப்பதற்கு முன்னர்சிறிது பௌதிகம் (Phisics) படிக்கலாமா? "பௌதிகம் என்றால் பல்கலைக் கழகத்திலேயே சிதறி ஓடுவோம்அது இங்கேயுமாஇப்போ எதுக்குப் பௌதிகம்என்கிறீர்களாபல்லைக் கடித்துக் கொண்டு படியுங்கள்பௌதிகம் ஏனென்று புரியும்.

பிரபஞ்சம் என்பது மிகவும் அமைதியானதுஅமைதி என்றால்அவ்வளவு அமைதிநமது பூமியைப் பாருங்கள்அமைதியே இல்லாமல்,இயற்கையானாலும்செயற்கையானாலும் எப்போதும் சத்தத்துடனேயே சுற்றிக் கொண்டு இருக்கிறதுபூமியுடன் ஒப்பிடும் போதுபிரபஞ்சம் ரொம்பச் சாதுவான பிள்ளைவானத்தில் இடி இடிக்கும் போதுபூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறதுபிரபஞ்சத்திலும் எத்தனையோ வெடிப்புகள் கணத்துக்குக் கணம் ஏற்படுகின்றனசமயங்களில் நட்சத்திரங்களே வெடித்துச்சிதறுகின்றனதினமும் ஒன்றுடன் ஒன்று நட்சத்திரங்களோ,கோள்களோ மோதித் தூளாகின்றனஅதனால் ஏற்படும் சத்தங்கள் நமக்கு கேட்கும் பட்சத்தில் நாம் இறந்தே விடுவோம்அவ்வளவு பாரிய சத்தம் உருவாகும்ஆனால் நமக்கு எதுவும் கேட்பதே இல்லைஅதிகம் ஏன்நமது சூரியனில் கூடகோடான கோடி ஐதரசன் குண்டுகள் வெடிப்பது போல,தினமும் வெடிப்புகள் ஏற்படுகின்றனஆனால் எங்கும் அமைதியே காணப்படுகிறது. "இவையெல்லாம் ரொம்பத் தூரத்தில் நடக்கின்றன,அதனால்தான் அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதில்லைஎன்று நீங்கள் நினைக்கலாம்ஆனால் அது அல்லக் காரணம்அங்கு ஏற்படும் வெடிப்பின் அளவுக்கு அந்தத் தூரங்கள் ஒன்றுமே இல்லைநிச்சயம் கேட்டே தீரும்.ஆனால் கேட்பதில்லைசொல்லப் போனால்அவற்றுக்கு அருகில் நின்றாலும்அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதற்கு சாத்தியம் இல்லைஏன் தெரியுமாஇது பற்றி எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா?  

ஒலி (சத்தம்என்பது வேறுஒலியைக் கேட்பது என்பது வேறுஒலி எங்கும் உண்டுஅதைக் கேட்பது என்பதில்தான் நமக்குப் பிரச்சனைஒலியை நாம் எப்படிக் கேட்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்ஒரு இடத்தில் உருவாகும் ஒலிநமது காதை வந்தடைவதற்கு ஊடகம் ஒன்று தேவை.பூமியில் அந்த ஊடகமாக இருப்பது காற்றுஅதாவது அட்மாஸ்பியர்காற்று,சத்தத்தைக் கடத்திக் கொண்டு எமது காதை வந்தடைகிறதுபூமியில் மட்டுமல்லபிரபஞ்சம் எங்கும் ஒலி உண்டுஆனால் நமக்குக் கேட்பதில்லை.காரணம் பூமியைத் தாண்டி எங்குமே காற்று இல்லைபிரபஞ்சம் எங்கும் காற்றில்லா வெறுமைதான் உண்டுசூரியனில் இருந்தோ,நட்சத்திரங்களிலிருந்தோ சத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காற்றுப் போன்ற ஊடகம் நிச்சயம் தேவைநமது விஞ்ஞானம் அறிந்தவரை பூமியைப் போன்ற இவ்வளவு நேர்த்தியான அட்மாஸ்பியர் உள்ள கோள் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லைஅப்படி ஏதாவது கிரகங்களுக்குப் பூமி போன்ற அட்மாஸ்பியர் இருந்தாலும்அது அங்குள்ள சத்தத்தை உள் வாங்குமேயொழிய வெளிவிடாதுமொத்தத்தில் பிரபஞ்சத்தின் பாரிய வெடிப்புகளின் சத்தங்களை நாம் கேட்காமல் இருப்பதற்குக் காரணம்,பிரபஞ்சம் காற்றில்லாப் பெருவெளியென்பதுதான். 

 

ஒலியும்ஒளியும் அலைகளாகத்தான் இருக்கின்றனஅலைகளாகச் செல்லும் அனைத்துக்கும் அலை நீளம் என்ற ஒன்று உண்டுஅலை நீளத்தை அளப்பதற்கு 'ஹேர்ட்ஸ்' (Hertz - Hz) என்னும் அலகை நாம் பயன்படுத்துகிறோம்மனிதனது காதுக்கும்கண்ணுக்கும் ஒரு குறித்த அலை நீளங்களை மட்டுமே கிரகித்துக் கொள்ளும் சக்தி உண்டுசூரியனில் இருந்து வரும் ஒளியில் மிகமிகச் சிறிய பகுதியானஏழு நிறங்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறதுஅந்த ஏழு நிறங்கள் தாண்டியபுற ஊதாக் கதிர்களும்இன்ஃப்ரா சிவப்புக் கதிர்களும் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லைஇதே போலத்தான் ஒலியும்20 Hz இலிருந்து 20 KHz வரை உள்ள ஒலி மட்டும்தான் மனிதனால் கேட்க முடியும்அவை தாண்டிய ஒலிகள்'கேளா ஒலிகள்எனப்படும்கேளா ஒலிகளில் முக்கியமானவை ரேடியோ அலைவரிசைகள் Radio Frequency-RF). 3 KHz இலிருந்து 300 GHz வரைக்கும் உள்ள அலை வரிசைகளைத்தான் ரேடியோ அலை வரிசைகள் என்பார்கள்.அவற்றைக் கீழே ஒரு அட்டவணையில் தந்திருக்கிறேன்.

ரேடியே சிக்னல்கள் தானாக உருவாவதில்லைஅவை உருவாக்கப்படுபவை.மனிதனாலோ அல்லது வேறு உயிரினங்களினாலோ உருவாக்கப்படுபவைதான் இந்த ரேடியோ சிக்னல்கள்ரேடியோ சிக்னல்களை உருவாக்குவதற்கும்உருவாக்கியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் கருவிகள் தேவைஇப்படியான கருவிகளில் ஒன்றுதான் 'ரேடியோ டெலெஸ்கோப்என்று சொல்லப்படும்வானியலை ஆராயப் பயன்படுத்தும் டெலெஸ்கோப்புகள்இவற்றுள் மிகப்பெரிய அளவுள்ள டெலெஸ்கோப்புகளை 'வெரி லார்ஜ் அர்ரே' (Very Large Array-VLA) என்பார்கள்25மீட்டர்களிலிருந்து 300 மீட்டர்கள் வரை குறுக்களவுள்ளவைகள் அவை.

ரேடியோ டெலெஸ்கோப் உள்ள ஒரு வானிலை ஆராய்ச்சி மையமான,பேர்கின்ஸில் (Perkins- Delaware Ohio) 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நள்ளிரவுஜெர்ரி ஏமான் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது,திடீரென கணணித் திரையில் ஒரு அதிசயத்தைக் கண்டார்220 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் சஜிட்டாரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் இருந்துமிகச் செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதைக் கண்டார்நன்றாகக் கவனியுங்கள் ரேடியோ சிக்னல் என்பது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதாலோஇரண்டு நட்சத்திரங்கள் மோதுவதாலோ ஏற்படுவதல்லஅதை யாராவது உருவாக்க வேண்டும்.சஜிட்டாரியஸ் நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள X1 சஜிட்டாரி, X2சஜிட்டாரி Sagittarii X1,X2 ) ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்குமிடையில் இருந்து அந்த சிக்னல் வந்ததுஅதாவது அங்குள்ள ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு ரேடியோக் கருவிகள் மூலம்நடந்த ஒரு சம்பாசனையாகத்தான் அது இருக்க முடியும்ஆனால் அந்த நேரத்தில் இருந்த கருவிகளின் திறண் போதாமையால்அதைத் தொடர்ந்து அவதானிக்க முடியவில்லை.  சரியாக 72 செக்கன்கள் வந்த அந்தச் சிக்னல் படிப்படியாகக் குறைந்து அப்படியே இல்லாமல் போயிற்று72 செக்கன்கள் என்பது நமக்குச் சிறிய நேரமாக இருந்தாலும்ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அளவு நேரம்தான்இந்த சிக்னலைப் பார்த்ததும் தன்னையறியாமல், Wow! என்று ஆச்சரியத்துடன்ஜெர்ரி அதே காகிதத்தில் எழுதினார்அதனால் அதை Wow!சிக்னல் என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

ரேடியோ சிக்னலாக வாவ் சிக்னல் இருந்ததால்அதை நிச்சயம் யாரோ அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தார்கள்.அந்த 'யாரோஎன்பவர்கள் நிச்சயமாக ஏலியன்களாகத்தான் இருக்க முடியும்.ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லும் அஸ்ட்ராநாட்ஸ் எல்லாருமே பூமியுடன் இப்படிப்பட்ட ரேடியோ அலை வரிசை மூலமாகத்தான் உரையாடுவார்கள்அது போல அங்கும் யாரோயாருடனோ உரையாடியிருக்க வேண்டும்.

எப்போதோ ஒரேயொரு தடவை நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு,ஏலியன்கள்தான் சிக்னலை அனுப்பினார்கள் என்று எப்படி அடித்துச் சொல்ல முடியும்ஒருதரம் என்பது எப்போதும் தற்செயலாக இருப்பதற்குத்தான் சாத்தியம் உண்டுஆனால் இந்தச் சாத்தியத்தை உடைத்தெறிந்தது இன்னுமொரு சம்பவம்.

மேற்கு வேர்ஜீனியாவில் இருக்கும் கிரீன்பாங்க் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த டான் மெரிக் (Dr.Don Merick) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு, 23 யூலை 1997ம் ஆண்டு அதிகாலை மணிக்குஒரு ரேடியோ சிக்னல் கிடைத்ததுஅந்த சிக்னலைக் கண்டதும் அவர் போர்ட்டா ரிகாவில் இருக்கும் ஆரஷீபோ ஆராய்ச்சி நிலையத்துக்கும்மசாசூசெட்ஸ் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஃபோன் மூலமாக இந்தச் செய்தியையும்அந்த சிக்னல் வந்த இடத்தையும் அறிவித்தார்அவர்களும் அதே இடத்துக்குத் தங்கள் ரேடியோ டெலஸ்கோப்பைத் திருப்பஅவர்களுக்கும் அதே சிக்னல் கிடைத்ததுஇந்தச் சம்பவமும் விஞ்ஞானிகளைத் தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அமைந்ததுஆனால் இதில் அமெரிக்க அரசு ஏனோ ஒரு தயக்கதைக் காட்டியதுபத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த அரசு அதிகாரி, "அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான்ஆனால் அது பற்றி எந்த அபிப்பிராயமும் சொல்லப் போவதில்லைஎந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லைஎன்று சொல்லிவிட்டுஉடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்அமெரிக்கா அங்கு எதை மறைக்க வெளிக்கிட்டது என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றதுஆனால் அதைவிட ஒரு ஆச்சரியமான வேலையை அமெரிக்க அரசு அடுத்துச் செய்தது'ஏலியன்களுக்கான ஆராய்ச்சிக்காக, 20பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடத்துக்கும் ஒதுக்குவதாகவும்இது அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடரும்என்றும் அறிவித்ததுஇல்லாத ஏலியன்களை இருக்கிறது என்று ஆராய இவ்வளவு அதிகப்படியான பணத்தை அமெரிக்கா ஏன் ஒதுக்க வேண்டும்உலகிலேயே அமெரிக்கா மட்டும் அல்ல,அனைத்து அரசுகளும் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில்தான்அதுவும் குறிப்பாக ஏலியன் வேட்டையில்தான்வெளிக்கிரக உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே  SETI (Search for ExtraTerrestrial Intelligence) என்ற ஒரு உலகளாவிய அரச அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றால் பார்துக் கொள்ளுங்கள். 

SETI என்று ஒரு அமைப்புஅதற்கென்று கோடி கோடியான பணம்அதில் ஈடுபடுவதற்கு ஆயிரக்கணக்கான உலக மகா விஞ்ஞானிகள் என,அனைத்தையும் அரசுகள் உருவாக்கி ஏலியன்களை ஆராய்ந்து கொண்டிருந்தாலும்சாதாரண மக்களான நாம் ஏலியன்கள் பற்றிப் பேசினாலே அது பொய்யென்று அரசுகள் குதித்து கூத்தாடுகின்றனஅவர்களாகக் கண்டுபிடிக்கும் உண்மைகளையும் மறைக்கின்றனநமது கண் முன்னாலே இருக்கும் பல ஆச்சரியங்களையோஅதிசயங்களையோ கூட முறைப்படி ஆராய மறுக்கின்றனகோடிக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களுக்கெல்லாம் ராக்கெட்டை அனுப்பிஅங்கு என்ன இருக்கிறது என்று ஆராய்கிறார்கள்ஆனால் பூமியிலேயே இருக்கும் அதிசயங்களை ஆராய மறுக்கிறார்கள்எத்தனை ஆச்சரியங்கள் இன்றும் விடை சொல்லப்படாமல் மிஸ்டரிகளாகவே நம் முன்னால் நிற்கின்றன. 

அப்படி நம் கண்முன்னே நிற்கும் ஒரு அதிசயம்தான் ஸ்டோன் ஹெஞ்ச்5000வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது.கற்கால நாகரீகத்தின் கடைசிக் காலகட்டம் அதுஇங்கிலாந்தின் வரலாற்றில் எந்தப் பதிவுகளும் இல்லாத காட்டுவாசி மக்கள் மட்டும் வாழ்ந்த காலம்.அந்தக் காலத்தில் 100 டன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்களைபல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து வைல்ட் ஷையர் (Wiltshire)என்னுமிடத்துக்கு நகர்த்திஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறதுஅதுவும் இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக இருக்கும் பயிர் வட்டங்களின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றதுஇந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் நிறைய ஆச்சரியங்களும் மர்மங்களும் உண்டுஅந்த மர்மங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் நம்மை வியப்பிலாழ்த்தியபடி இருக்கின்றன. "பயிர் வட்டங்கள் பல விதமாக பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறதே,ஏன் ஸ்டோன் ஹெஞ்ச் மட்டும் ஒன்றுதான் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்டால்மேலும் ஆசாரியமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றனவட்ட வடிவமாக பலவித ஹெஞ்சுகள் இங்கிலாந்து எங்கும் காணப்படுகின்றன?

இந்த ஸ்டோன் ஹெஞ்ச் எப்படிக் கட்டப்பட்டதுஎதற்காகக் கட்டப்பட்டது?அது கட்டப்பட்டதில் உள்ள ஆச்சரியங்கள் என்னஇது தவிர்ந்து மேலும் உள்ள மற்ற ஹெஞ்கள் எவைஎன அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களுடன்அடுத்த தொடரில் சந்திப்போம்.

VJagadeesh

unread,
Jul 10, 2012, 2:06:35 PM7/10/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 9
ராஜ்சிவா

இங்கிலாந்தின் 'சில்பரிஎன்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளதுமலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும்இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள்.ஆனால்ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்ததுகீழே வட்டவடிவமான அடித்தளமும்கூம்பு போன்ற அமைப்பும், 'இது இயற்கையாய் அமைந்தது இல்லைஎன்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்ததுஅப்புறம் அதை ஆராய்ந்தபோதுஇது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது.இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரேமனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான்எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாகநமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறதுஆனால் இந்த 'சில்பரி பிரமிட்கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லைஆனால்இதைக் கட்டிய விதமும்,கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போதுஅதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறதுஅவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை. 

முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட்.இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள்ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும்.ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது.இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட்கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது.மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள்ஆனாலும் நமது பிரச்சினையேஇந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான்யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லைஅதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறதுஅதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள்இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லைசிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோதுஅது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால்அதையும் நிறுத்தி விட்டார்கள்இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட்.இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவைஅவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லைஇந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில்இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறதுவைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள,நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளேஇரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது.இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது.இதையும் யார் அமைத்தார்கள்ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.   

"தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போலசில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறதுஇதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது?" என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும்எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது.ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும்சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான்விளக்கங்களும்,விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டுஅதற்காக கணவன்,மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டுவிளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம்வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்லஆனால்அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான்மேலே உங்களது கேள்விக்குப் பதிலாகநான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்...........

இங்கிலாந்தில் 'யோர்க் ஷையர்' (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர்ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறதுஅதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும்இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும்அவ்வளவு பெரியது அதுமொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளதுஇதுவரை சொன்னது போல பயிர்களாலோகற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை.வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறதுஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்புநேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றனஇதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான்வழமை போல ஏன்எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லைஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும்ஆச்சரியமானதுமான தகவல் கிடைக்கிறதுஅந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும்,தோர்ன்ப்ரோ வட்டங்களையும்வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.

எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனஇவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவைகூஃபு பிரமிட்காஃப்ரே பிரமிட்மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும்இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும்ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும்ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன்(Orion) நட்சத்திரங்களும் ஒன்றுஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும்ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும்அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல,மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன.இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதே திசைஅதே வரிசை. 

எகிப்தில் பிரமிட்டுகள்இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள்வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின?தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில்இவை எப்படிச் சாத்தியமாகினமனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள்அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில்,மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம்அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர்இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான்ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல.இவை ஊகங்களாக இருந்தாலும்அவை சுட்டிக் காட்டும் திசைநாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை   

ஊகங்களுக்கும்கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லைஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில்அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றனஇல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையாஇவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும்திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா? இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும்எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும்எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம். 

அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்களா?

VJagadeesh

unread,
Jul 10, 2012, 2:26:54 PM7/10/12
to panb...@googlegroups.com
ரிப்பீட்டேய்

2012/7/10 VJagadeesh <vom...@gmail.com>
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 8
ராஜ்சிவா

பல மில்லியன்கள் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்வரைஐரோப்பாவெங்கும் ஐஸ் (Ice)பரவியிருந்ததுகண்ணுயர்த்திப் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப் போர்வையாக ஐஸ்மனித நாகரீகக் காலப் பிரிவுகளில்இந்தக் காலங்களை 'ஐஸ் காலம்' (Ice Age) என்று அழைப்பார்கள்மிகச் சமீபத்தில்அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில்தான்இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்துதுருவம் வரை சென்றுஅங்கே சங்கமமாகியதுஇந்த ஐஸ் காலத்தில், 'மம்மோத்' (Mammoth) என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள்உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தனஇப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும்,ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றனஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான 'மம்மோத்'உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தனஇந்த மம்மோத்தற்கால யானைகளை விட மிகப் பெரியவை.உடலெங்கும் நீண்ட முடிகளுடனும்நீண்ட தந்தங்களுடனும் அவை காணப்பட்டனமம்மோத்ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக் கூடியவைஇங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றனமம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும்ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும்,மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயினஇங்கிலாந்தில் 10,000 வருசங்களுக்கு முன்வரை இவை வாழ்ந்திருக்கின்றனஇவை அழிந்த காலத்திலிருந்துமெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதேசங்களாக மாறினஆனாலும் வேட்டையாடியே மனித இனம் வாழ்ந்து வந்தது.இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலானகால கட்டத்தைக் கடைசிக் கற்காலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்கடைசிக் கற்காலத்தில் இங்கிலாந்துவைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது (இதே வைல்ட் ஷையரிலிருந்துதான் இந்தத் தொடரின் முதல் பகுதி ஆரம்பமாகியது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்). சிறியபெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு கட்டப்பட்டிருந்ததுமிகப்பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் (Sarsen Stones) , நீலக்கற்களும் (Blue Stones) கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.அதையே 'ஸ்டோன் ஹெஞ்ச்' (Stonehenge) என்று அழைக்கிறார்கள்மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள்இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்லஅது எப்படிக் கட்டப்பட்டதுஏன் கட்டப்பட்டது என்பதுதான்ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும்ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள்அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில்நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களைமுன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்துஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறதுஒன்றிரண்டு கற்களை அல்ல.மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள்இது ஆசியா போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும்யானைகளைக் கொண்டுஒவ்வொன்றாக இழுத்து வந்திருப்பார்கள்என்று நினத்திருக்கலாம்.இல்லை ஐஸ் காலம் என்றாலாவது மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம்ஆனால் இரண்டும் இல்லைநான் ஏன் மேலே மம்மோத் என்னும் யானையைப் பற்றிச் சொன்னேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட,வசதியற்ற சூழ்நிலையில்மலைப் பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமேஅப்படிக் கொண்டு வந்திருந்தாலும்கிடையாக இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி வைத்திருக்க முடியும்?

அக்கால மக்கள் எப்படி அந்தக் கற்களை இழுத்து வந்தார்கள்எப்படி அவற்றை நிமிர்த்தினார்கள்நிமிர்த்திய இரு கற்களுக்கு மேல்கிடையாக மற்ற கற்களை எப்படி அடுக்கினார்கள் என்று பல விதத்தில்இப்போது விளக்கம் சொல்லப்படுகிறதுமேலே படங்களில் அவை காட்டப்பட்டுள்ளதுஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போலவே கற்கள் கொண்டு வரப்பட்டுக் கட்டப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும்இவ்வளவு நுணுக்கமான அறிவை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்மனிதன் தோன்றிய பல இலட்சம் ஆண்டுகளிலிருந்து கடைசிக் கற்காலம் வரைமனித இனம் எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாமல்ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்திருக்கிறது.அதிகபட்சம் ஒரு வில்லுஒரு அம்புடனோகல்லினால் செய்த கோடரியுடனோதான்எந்தவித மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறதுமிருகங்களை வேட்டையாடுவதே உணவிற்கான முக்கிய தொழிலாகவும் அவர்களுக்கு இருந்ததுஆனால் திடீரென அந்த மனிதர்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியதுஅதுவரை அறிவேயில்லாதமிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்த மனிதர்களில்மின்னல் அடித்த கணத்தில் ஏற்பட்டது போலஒரு மாற்றம் ஏற்பட்டதுஇலட்சம் ஆண்டுகள் ஏற்படாத மாற்றம் சடுதியாகத் திடீரெனத் தோன்றியதுஅந்த மாற்றத்தினால்இப்போது இருக்கும் மனிதர்களால் கூடச் செய்ய முடியாத சில செயல்களைஅனாயாசமாக அவர்கள் செய்திருக்கிறார்கள்அதற்குரிய அறிவும்ஆற்றலும் திடீரென அவர்களுக்குத் தோன்றியிருக்கிறதுஅது எப்படித் தோன்றியது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்விஅதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்க முடியுமா?

ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தைக் கவனித்தீர்களேயானால்ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.நிலையாக நிறுத்தப்பட்ட கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கிஅதற்கு மேலே வைக்கும் கல்லில் அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கிகற்கள் விலகாமல் இருக்கபக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கிகனகச்சிதமாக வட்டவடிவமாகப் பொருந்தும்படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள்இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால்அவை வெறும் கற்கள்தான்கற்களால் அடித்துத் தேய்த்துஇந்தவித உருவங்களுக்கு மாற்றியுள்ளார்கள்இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறதுஇதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல,மனிதர்கள் செய்யவில்லைஏலியன்கள்தான் செய்தார்கள் என்று வேறொரு பிரிவினர்கள் சொல்ல,மனிதர்கள்தான் செய்தார்கள்ஆனால் ஏலியன்கள் அவர்களுக்கு உதவினார்கள் என்று மற்றுமொரு பிரிவினரும் சொல்லஇதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுடன் அமைதியாக இருக்கிறது ஸ்டோன் ஹெஞ்ச்.

ஸ்டோன் ஹெஞ்சை மனிதர்கள் தனியே செய்யவில்லைஏலியன்களின் உதவியுடன்தான் அவர்கள் செய்தார்கள் என்று பலர் உதவிக்கு அழைப்பது வேறு ஒன்றைஇந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் எகிப்தில் முதல் பிரமிட்டாக 'கீஸாபிரமிட் (Geza) கட்டப்பட்டுக் கொண்டிருந்ததுகீஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும் போதுஅதைப் பலர் நம்புவதில்லைஅந்த அளவுக்குமர்மங்களையும் ஆச்சரியங்களையும் தனக்குள் உள்ளடக்கிய பிரமிட் அது.146 மீட்டர் உயரமான அந்தப் பிரமிட், 4500 வருடங்கள் பழமையானதுமிகப் பிரமாண்டமான ஒரு கட்டடமாக கீஸா பிரமிட்டைப் பார்க்கும் நாம்அது கட்டப்பட்டபோது நடந்த முக்கிய விசயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்இந்தப் பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறதுஅந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் வரை எடையுள்ளவைஅனைத்தையும் சேர்த்து மொத்தமாக எத்தனை டன்கள் கற்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்ன தெரியுமாஸ்டோன் ஹெஞ்ச் போலவே,அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளனஇத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கேஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100 வருடங்களுக்கு மேல் தேவைசதுரமாகச் செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வர, 5000பேர் சேர்ந்து உழைத்தாலும் 500 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பிரமிட் குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறதுஇங்கு நான் குறுகிய காலம் என்று குறிப்பிட்டதுமனிதனால் கட்டப்படக் கூடிய கால அளவை விடக் குறுகிய காலம் என்பதை.அப்படியென்றால்கீஸா பிரமிட்டை யார் கட்டினார்கள்யாருடைய உதவியுடன் கட்டினார்கள்நம்பவே முடியாத ஒரு காலத்தில் இப்படி ஒரு அறிவு பூர்வமான கட்டடத்தை கட்டுவதற்கு எப்படிச் சாத்தியம் ஆகியதுஇவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லைபல விதங்களில் பல பதில்கள் சொல்லப்பட்டாலும்அவற்றை முழுமையாக ஏற்கக் கஷ்டமாகவே இருக்கிறது.

பிரமிட்டுகளின் மர்மங்களையும்அவற்றுடன் ஏலியன்கள் சம்பந்தப்பட்டது என்று நம்பப்படுவதையும் இப்போது நான் சொல்ல ஆரம்பித்தால்அந்தச் சுழலில் இருந்து சீக்கிரம் நம்மால் விலக முடியாதுஎனவே எகிப்தின் பிரமிட்டை இத்துடன் இங்கு விட்டுவிட்டுஇங்கிலாந்துக்குச் செல்லலாம்.

"ஸ்டோன் ஹெஞ்ச்தெற்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கும்எகிப்தில் பிரமிட் உருவாக்கப் பட்டிருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்இது வேறுஅது வேறுஇது கற்களால் அமைக்கப்பட்ட வட்டவடிவ அமைப்புஅதுவோ பிரமிட் வடிவ அமைப்புஏலியன்கள்தான் இவை இரண்டையும் அமைக்க உதவி செய்தன என்று நீங்கள் சொன்னால்குறைந்தபட்ச ஒற்றுமை ஒன்றையாவது உங்களால் காட்ட முடியுமா?" என்று என்னிடம் நீங்கள் இப்போது கேட்கலாம்அந்தக் கேள்வியும் நியாயமானதேஎழுத வேண்டும் என்பதற்காக எதையும் முடிச்சுப் போடுவதென்பதற்கும்அளவு நிச்சயம் வேண்டும்தான்ஆனால் நாம்தான் இப்போது ஒரு மர்மமான சுழலில் சிக்கியிருக்கிறோமேஎனவேஇதற்கெனப் பதிலும் நிச்சயம் இருக்கும் அல்லவாஅது என்ன மர்மம் என்று நீங்களே பாருங்கள்.

ஸ்டோன் ஹெஞ்சிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது 'சில்பரி ஹில்' (Silbury Hill) என்னும் இடம்அங்கு நாம் யாருமே நினைக்க முடியாத அதிசயம் ஒன்று உள்ளது4500 ஆண்டுகளுக்கு முன்எகிப்தின் பிரமிட் உருவாக்கப்பட்ட காலம்ஸ்டோன் ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலங்களில் சில்பரி ஹில்லிலும் ஒரு பிரமிட் உருவாக்கப்பட்டிருக்கிறது. "பிரமிட்டாஅதுவும் இங்கிலாந்திலா?" என்று ஆச்சரியப்படுகிறீர்களா? "ஆம்!பிரமிட்டேதான்". எகிப்தின் பிரமிட்ஸ்டோன் ஹெஞ்சின் வட்ட வடிவம் என இரண்டையும் இணைத்த மர்மமாக,வரலாற்றிலேயே வட்டவடிவத்தில் அந்தப் பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறதுகூம்பு வடிவ அமைப்பையே பிரமிட் என்பார்கள்கீழே சதுரமான அடியைக் கொண்டிருப்பது எகிப்திய பிரமிட்கீழே வட்டமான அடியைக் கொண்டு அமைக்கப்பட்டது சில்பரி பிரமிட்படத்தில் பார்க்கும்போது ஏதோ சிறிய மலை போலக் காணப்படும் இதுகற்களால் எவராலோ கட்டப்பட்டிருக்கிறதுமேலே புற்கள் முளைத்திருக்கும் அந்தப் பிரமிட்டின் உள்ளே இருப்பது எல்லாமே கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள்.

மேலதிகமாக சில்பரி பிரமிட் பற்றிய ஆச்சரியம் தரும் விபரங்களைஅடுத்த தொடரில் பார்ப்போமா..


Asif Meeran AJ

unread,
Jul 11, 2012, 2:53:01 AM7/11/12
to panb...@googlegroups.com
உன் கடமையுணர்ச்சியை வேற யாரும் பாராட்டலைன்னாலும் நான் பாராட்டுறேன்

VJagadeesh

unread,
Jul 11, 2012, 3:03:12 AM7/11/12
to panb...@googlegroups.com
கர்மண்யேவாஸ்திகாரஸ்தே மாபலேஷு கதாசன
மாகர்மபல ஹேதுர்பூ: மாதே ஸங்கோஸ்ஸ்த்வ கர்மணி

கர்மா செய்வது மட்டும் தான் உன் அதிகாரம் (கடமை) அல்லாது கர்மபலதிலல்ல. கர்மபலத்தில் உனது நாட்டத்தைச் செலுத்தாதே, அதே போல கர்மா செய்யாமலிருப்பதிலும் நாட்டம் கொள்ளாதே.

2012/7/11 Asif Meeran AJ <asifm...@gmail.com>
உன் கடமையுணர்ச்சியை வேற யாரும் பாராட்டலைன்னாலும் நான் பாராட்டுறேன்

--

Ramesh Murugan

unread,
Jul 16, 2012, 3:09:51 PM7/16/12
to panb...@googlegroups.com
வில்லன்,
அடுத்த தொடரை எடுத்து போடுங்க... வெயிட்டிங்..

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

VJagadeesh

unread,
Jul 17, 2012, 12:05:18 AM7/17/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (10)
ராஜ்சிவா

இந்த வாரத்துடன், இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கே ஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், "ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை" என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல. மூடநம்பிக்கையின் எந்த மூலையிலும் உங்களை நான் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டேன். அறிவியலினதும், ஆராய்ச்சியினதும் கைகள் எந்தெந்த இடங்களில் நீண்டு கொண்டிருக்கிறதோ அங்கே மட்டும்தான் நான் உங்களை அழைத்துச் செல்வேன்.

ஏலியன்களும், பறக்கும் தட்டுகளும் இருக்கின்றன என்பதை முற்றாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களை முட்டாள்கள் போலப் பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன். ஏலியனையோ, பறக்கும் தட்டையோ கண்ணால் காணும்வரை அவை இருக்கின்றன என்று கூற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து நாடுகளும் சேர்ந்து SETI (Search for ExtraTerrestrial Inteligence) என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே ஏலியன்கள், அயல்கிரகங்களில் இருக்கின்றனவா என்று தேடுவதுதான். உலகின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதியுயர் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். 'ஹார்வார்ட்' உட்பட பல்கலைக்கழகம் அடக்கமாக பிரபலமான அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதில் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஆண்டொன்றுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இதற்கெனச் செலவு செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் 'ஆப்ஸர்வேட்டரி' (Observatory) என்னும் பாரிய தொலைநோக்கிக் கருவிகளை அமைத்து, விண்வெளியை அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு செக்கனும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தேடுபவர்கள் யார்? அனைவரும் படிப்பில் மாமேதைகள். ஒன்றுமே இல்லாத ஒரு பைத்தியக்காரத்தனத்துக்கு இப்படி நேரத்தையும் பணத்தையும் இவர்கள் செலவழிப்பார்களா? அப்படி இவர்கள் செலவளிப்பதை அரசுகள் பார்த்துக் கொண்டு பண உதவி அளிக்குமா? ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தானே இப்படிச் செய்கிறார்கள். அந்த உலக மகாவிஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் முட்டாள்களாக இருக்கும் பட்சத்தில், நாமும் முட்டாளாக இருப்பதில் தவறில்லைதானே!   

பல நாட்களுக்குப் பின்னர் நாம் மீண்டும் பயிர் வட்டங்களின் இடத்திற்கு வந்திருக்கிறோம். எனவே இன்று கொஞ்சம் விசேசமாக பயிர்வட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். மனிதர்களே உருவாக்கவில்லை என்று அடித்துச் சொல்லும் பயிர்வட்டச் சம்பவங்களிலிலிருந்து இன்று ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ஆச்சரியங்களின் ஊற்றாக இருக்கும் ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகே சென்று, அந்த இடத்தில் பயிர்களுக்கு ஏதாவது நடந்ததா எனப் பார்க்கலாம் வாருங்கள். 

1996ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, மாலை 6 மணியளவில் லூஸி பிரிங்கெல் (Lucy Pringle) என்னும் பெண்மணி, தன்னுடைய மகனைப் பார்ப்பதற்கு டாக்ஸி ஒன்றில், ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் A303 நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். இருபக்கமும் பச்சையாய்ப் பரவியிருக்கும் வயல்வெளிகள். ஸ்டோன் ஹெஞ்சை டாக்ஸி அண்மித்ததும், சாலையில் மறுபுறமாக இருந்த வயல்வெளியில் காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட புழுதிபோன்று, ஏதோ ஒன்று உருவாவதை அவதானித்தார். ஏனோ அவருக்கு அது வினோதமான காட்சியாகத் தெரிந்தது. டாக்ஸி ஓட்டுனரிடம் டாக்ஸியைச் சாலையில் நிறுத்தும்படி கூறிவிட்டு நடப்பதை அவதானித்தார். வயலில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மிகப்பெரிய வட்டவடிவத்தில், புகை போன்று காற்றுச சுழன்றபடி அந்த வயல்வெளிப் பிரதேசத்தில் அங்கும் இங்கும் அலைவதை அவதானித்தார். அவதானித்தது அவர் மட்டுமல்ல, அவருடனிருந்த டாக்ஸி ஓட்டுனரும்தான். யூலை மாதங்களில் ஐரோப்பாவெங்கும் இருட்டாவதற்கு மாலை 9 மணிக்கு மேலாகும். இங்கிலாந்திலும்  நல்ல வெளிச்சமான பகல் நேரம் அது. திடீரென அந்த வட்டச் சுழற்சி நின்று மறைந்து போனது. அங்கே லூஸி கண்ட காட்சி யாருமே நம்பமுடியாதது. 115 மீட்டர் அகலமான மிகப்பெரிய பயிர்வட்டம் அங்கே காட்சியளித்தது. 151 வட்டங்களைக் கொண்டு அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் ஒருமுறை நான் சொன்னது போன்று 'ஜூலியா செட்' (Julia Set) என்னும் வடிவுடைய ஃப்ராக்டல் (Fractal) சித்திரமாக அது இருந்தது. ஃப்ராக்டல் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த கணித வரைவு ஆகும்.  

பட்டப்பகலில் பலர் சாட்சியாக இருக்கும்போது உருவானது 'ஜுலியா செட்' பயிர்வட்டம். லூஸியின் சாட்சியத்தின்படி மொத்தமாக 20 நிமிசங்களில் அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லூஸியினதும், டாக்ஸி ஓட்டுனரதும் சாட்சியை நாம் பொய்யென்று வைத்தாலும், ஸ்டோன் ஹெஞ்சை வானத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆயத்தமான சிறு விமானம் ஒன்றின் விமானியும் அதில் அமர்ந்தவர்களும் மாலை 5.30 மணியளவில் அதற்கு மேலாகப் பறந்து சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் எதுவும் காணப்படவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6.15 மணி போலத் திரும்பி வந்தபோது, இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்திருக்கிறது.அதாவது 45 நிமிடங்களில் அது உருவாக்கப்பட்டிருகிறது என்று விமானி சொல்லியிருக்கிறார். அதோடு ஸ்டோன் ஹெஞ்சின் பாதுகாவலர்களாகக் கடமையாற்றியவர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட, 'A303 நெடுஞ்சாலை' மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை. எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காட்சியளிக்கும் ஒரு நெடுஞ்சாலை அது. அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மனிதர்கள் பட்டப்பகலில் அந்தப் பயிர் வட்டத்தை உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி உருவாக்கினோம் என்று யாராவது கூறினாலும் நம்பவே முடியாததாகவே இருக்கும்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இரண்டுமே நம்ப முடியாத சம்பவமாகவே இருக்கிறது. மனிதர்கள் உருவாக்காமல் வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் நம்ப முடியவில்லை. மனிதர்கள் பட்டப்பகலில் உருவாக்கினார்கள் என்பதையும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்த பயிர்வட்டம் உருவாகியதை மட்டும் நம்பித்தான் ஆக வேண்டும். 

மீடியாக்கள், மக்கள் என அனைவரிடமும் இந்தச் சம்பவம் மிகப்பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது. மக்கள் அங்கு கூட்டமாகக் கூடத் தொடங்கினர். அப்போது, அந்தப் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று இரண்டு இளைஞர்கள் பேட்டி கொடுத்தனர். அந்த இளைஞர்கள் சில பயிர்வட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு மீடியாவில் விளம்பரம் கிடைத்த ஒன்றில் அதுவும் பட்டப்பகலில், பலரின் கண்முன்னே உருவான ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. விளம்பரத்துக்காக பல வித்தியாசமான பயிர்வட்டங்களை நாம்தான் உருவாக்கினோம் என்று மூலைக்கு மூலை புறப்பட்டு வரும் சம்பவங்கள் அந்த நேரங்களில் அதிகமாகவே நடக்கத் தொடங்கியிருந்தன. இந்த ஜூலியா செட் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொன்ன இளைஞர்களின் பேட்டியில் பல தடுமாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எது எப்படியாயினும் இந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்று நம்புவது மிகவும் கடினமாகவே இருந்தது. மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. 

மேலே சொல்லப்பட்ட ஜூலியா செட் பயிர்வட்டம் உருவாகி, சரியாக 11 வருடங்களின் பின்னர் அதே நாளில் நடந்தது இன்னுமொரு ஆச்சரியமான சம்பவம். 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன் கீச்சும் (Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள் சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007 அன்று, 'ஈஸ்ட்ஃபீல்ட்' (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென 'ஃப்ளாஷ்' வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள் ஆச்சரியத்துடனும், சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன் 'நைட்விஷன்' பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோ காணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள்.  3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை. வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்று பார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது. 

நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன. உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், 'மைக்ரோவேவ்' (Microvave) என்று சொல்லப்படும்  வெப்பக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.

இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை. ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால் செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?

அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்.......!

ஆம்! சாட்சாத் இந்துக்களின் 'ஓம்' என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.  இந்த அளவுக்கு மேல் இன்று யோசித்தால் தலையே வெடித்துவிடும். எனவே இந்த வாரம் இவை பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த வாரம் மீண்டும் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம். 

rajsiv...@googlemail.com

VJagadeesh

unread,
Jul 24, 2012, 3:02:56 PM7/24/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 11
ராஜ்சிவா

இந்துக்களின் 'ஓம்என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்லஉலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான்அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாகமனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, 'ஓம்வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள்உண்மையில் அந்த வடிவம் 'ஓம்தானா அல்லது வேறு ஒன்றைக் குறிப்பதாஎன்பது இன்றுவரை புரியவில்லை'ஓம்என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிஅது 'ஓம்'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர்ஒரு பேச்சுக்கு அதை 'ஓம்என்று நாம் எடுத்துக் கொண்டால்ஏலியன்களுக்கும்  'ஓம்வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும்அப்படிப் பார்க்கும்போது,புராதன ஏலியன்களின்  (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும்கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது'புராதன ஏலியன்களும்இந்து மதமும்என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன.முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன்.

மேலே சொல்லப்பட்ட 'ஓம்வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டுஅது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறதுநிச்சயம் இது இந்துக்களின் 'ஓம்'தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்குசாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள்இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்லமணல்ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்ததுஅந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. "ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறதுமனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே"என்று நீங்கள் நினைக்கலாம்ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்லமிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அதுஅந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21 கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு கோடும் 10 அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அதுஅந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமேஅந்த வடிவம் என்ன தெரியுமாஇந்துக்களின்'இயந்திரம்' (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது. 

ஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாதுஅதுமட்டுமல்லாமல்அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம்ஈரமான சேற்று மண்ணில்அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால்,  அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும்அந்தச் சித்திரம் அமைந்த இடம் மட்டுமில்லாமல்அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லைமனிதர்கள் செய்திருந்தால்செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவாசேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும்சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லைஎப்படி இது சாத்தியம்அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோதுஇருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள்அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியதுஅவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில்அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால்,தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும்போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது.

உலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றனஅப்படி நடக்கும் மர்மங்களில் பலமனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றனஇங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள்அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் 'ப்ரீ இயந்திரம்'  என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்ததுப்ரீ இயந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, 'ஓம்என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர்இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'ஓம்'பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும்இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.

பயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன அல்லது வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைவிடஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் எந்தப் பதிலும் கிடைப்பதில்லைஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பயிர்வட்டத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாகவேஅவற்றை ஆராய்பவர்கள் நினைக்கிறார்கள்.  இதுவரை உருவாக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான பயிர்வட்டங்களுக்குஅவை என்னென்ன அர்த்தங்களைக் கொடுக்கின்றனவோஅதைப் பொறுத்துத் தனித்தனிப் பெயர்களை அதை ஆராய்பவர்கள் சூட்டியிருக்கின்றனர்பல சிக்கலான கணித வரைவுகளையுடைய பயிர்வட்டங்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றனபயிர்வட்டங்களுக்கும் 'கேத்திரகணித'வரைவுகளுக்கும் (Geometry) நிறையவே சம்பந்தங்கள் இருப்பதுஅவற்றின் அமைப்பின் மூலம் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.ஒரு பேச்சுக்கு இந்தப் பயிர்வட்டங்களை ஏலியன்கள்தான் உருவாக்குகின்றன என்று வைத்துக் கொண்டால், 'ஏலியன்களுக்கும்,ஜியாமட்ரிக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கும்?' என்ற கேள்வி நம்மை எப்போதும் ஆச்சரியப்பட வைக்கும் 

இந்த வகையில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதிஇங்கிலாந்தில் உள்ள'பார்பர்ரி காஸில்' (Barbury Castle) என்னுமிடத்தில் ஒரு பயிர்வட்டம் தோன்றியதுபல பரிசோதனைகளின் பின்னர் அது மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அதை ஆராய்ந்தவர்கள் வந்திருந்தனர்ஆனால் அந்தப் பயிர்வட்டத்தின் அமைப்பு அனைவரையும் குழப்பத்திலாழ்த்தியதுவட்டவடிவமாகக் காட்சிதரும் அந்தச் சித்திரத்தில்,ஒரு கோடு மையத்திலிருந்து ஆரம்பித்துவட்டத்தின் விளிம்புவரை வளைந்தும் திரும்பியும் செல்வது போல  அமைக்கப்பட்டிருக்கிறதுமைய வட்டத்தில் ஆரம்பிக்கும் கோட்டின் ஆரம்பத்திலேயே ஒரு சிறு புள்ளி போன்ற வட்டமும்முடிவில் மூன்று வட்டங்களும் காணப்படுகின்றனஇது அந்தப் பயிர்வட்டத்தில் ஒரு வித்தியாசமான தோற்றதைக் கொடுத்தது.அந்தச் சித்திரத்தின் படம் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.அந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர்அந்தப் பயிர்வட்ட அமைப்புக்கு என்ன அர்த்தம் என்பதை அறிவதற்கு மிகவும் ஆவலுடன் முயன்றனர் ஆராய்ச்சியாளர்கள்.ஆனால்என்ன முயன்றும் சுலபமாக அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை150 அடிகள் அகலமான அந்தப் பயிர்வட்டம்பார்லி (Barley)பயிரினால் உருவாக்கப்பட்டிருந்ததுஇதுவரை உருவாக்கப்பட்ட சிக்கலான பயிர்வட்டங்களில்முதன்மையான பயிர்வட்டமாக அது கருதப்படுகிறது.யாருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லைஅதன் அர்த்தம் புரியாததனால், 'நாங்கள்தான் உருவாக்கினோம்என்று சொல்லி அதைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவுமில்லைசில காலங்களின் பின்னர் நார்த் கரோலினாவைச் (North Carolina) சேர்ந்த ஆஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான 'மைக் ரீட்' (Dr.Mike Reed) என்பவர் அதற்கான அர்த்தத்தைக் கண்டுபிடித்தார்அவர் கண்டுபிடித்த அர்த்தம் அனைவரையும் மலைக்க வைத்தது. "அடக்கடவுளே!இது எப்படிச் சாத்தியம்?" என்று பலரையும் திகைக்க வைத்தது. "மனிதனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது எப்படி ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க முடியும்?"என்று நினைக்க வைத்தது? "இது மனிதன் உருவாக்கியதுதானோ?" என்றும் சந்தேகப்பட வைத்ததுஆனால், 'மனிதனால் இப்படிச் சிந்தித்து சிக்கலாக இதுபோல ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கவே முடியாதுஎன்றே பின்னர் முடிவுக்கு வந்தனர்இவ்வளவு சிந்திக்க வைத்த அந்தப் பயிர்வட்டத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

நாம் கணிதத்தில்வட்டங்களின் சமன்பாடுகளில் (Equations) பயன்படுத்தும்'பைஅதாவது 'π' என்பதுதான் அதுகணிதம் படித்தவர்களுக்கு 'பை' (Pi)என்றால், 22/7 அல்லது 3.141592654... என்பது தெரியும்கணிதத்தில் 'பை'என்பதை நாம் பல இடங்களில் பயன்படுத்தி வந்திருக்கின்றோம்அதே 'பை'யைஅந்தப் பயிர்வட்டத்தில்அதன் கணிதப் பெறுமானத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்ஒரு வட்டத்தைஅதன் மையத்திலிருந்து பத்துச் சமபங்குகளாகப் பிரித்துஒவ்வொன்றுக்கும் ஒன்று என்னும் எண்ணிக்கையைக் கொடுத்து 3.141592654... என்னும் பெறுமானத்தை உருவாக்கியிருக்கிறார்கள்இதை வாசிக்கும்போதுநான் மேலே கொடுத்திருக்கும் வர்ணப் படத்தைச் சற்று நிதானமாக அவதானித்துப் பாருங்கள்நான் சொல்ல வருவது முழுமையாகப் புரியும். 

'பை'யினது பெறுமதியைப் பத்து இலக்கங்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல்அதன் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளையும் கொடுத்திருக்கிறார்கள்எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னவென்றால்மூன்றுக்குப் பக்கத்தில் வரும் தசம புள்ளியைக் குறிப்பதற்குபயிர்வட்டத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற வட்டத்தை,மையத்தின் ஆரம்பத்திலேயே அமைத்திருக்கிறார்கள்இந்தப் பயிர்வட்டத்தை மனிதன் அமைத்தானோஏலியன் அமைத்ததோ என்று சிந்திப்பதை விடஅது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புத்தான் பலராலும் பேசப்படுகிறதுபயிர்வட்டங்களிலேயே ஒரு மைல்கல்லாக அமைந்த சித்திரமாக அது கணிக்கப்படுகிறதுஅதை மனிதன் செய்யவே இல்லையென்ற முடிவுதான் ஆராய்ந்தவர்களின் முடிவாக உள்ளது.ஒருவேளை மனிதன் இதைச் செய்திருந்தால்அந்த மனிதன் பயிர்வட்டத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒருவனாக இருக்கவே தேவையில்லைஅவன் உலகில் மாபெரும் கணிதவியலாளனாக எல்லாராலும் மதிக்கப்பட்டிருப்பான்இப்படி ஒளிந்திருந்து பயிர்வட்டங்களை அவன் அமைக்கவே தேவையில்லை.  ஆனால் கிடைத்த அனைத்துத் தகவல்களும் அந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறதுஅந்த வகையில் அதை ஏலியன்கள் உருவாக்கினார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறதுஅப்படி இருக்கும்பட்சத்தில்ஏலியன்கள் 'பைஎன்பதை எப்படித் தெரிந்துகொண்டார்கள்கணிதம் என்பது உலக ரீதியாக இல்லாமல்,பிரபஞ்ச ரீதியாக ஒரே மாதிரியானதுதானா அல்லது ஏலியன்கள் 'பை'மூலமாக நமக்கு ஏதாவது செய்திகளைக் கூற விரும்புகின்றனரா?  

இவையெல்லாம் நம்மைத் துளைத்தெடுக்கும் கேள்விகளாகவே இருக்கின்றனஇவற்றிற்கான பதில்களை நாம் எப்போதுதான் பெற்றுக் கொள்ளப் போகிறோம்விடை தெரியாத மர்மச்சுழல்கள் நம்மை மேலும் மேலும் அழுத்தியபடியே இருக்கின்றனஇந்தச் சூழ்நிலையில்மனிதனால் செய்யப்பட்ட பயிர்வட்டங்கள் எவைமனிதனால் செய்யப்படாதவை எவைஎன்று ஆராய்ச்சியாளர்கள் எப்படி உறுதி செய்கின்றனர் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

எப்படி அவற்றைப் பிரித்துக் கண்டுபிடிக்கிறார்கள்அதை அடுத்த வாரம் பார்க்கலாமா..? 

Ramesh Murugan

unread,
Jul 24, 2012, 3:56:11 PM7/24/12
to panb...@googlegroups.com
வில்லன்,
இந்த மாதிரி பயிர் வட்டத்தால் ஏற்படும் இழப்புக்கு நஷ்ட்ட ஈடு கொடுப்பாங்களா??
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser


VJagadeesh

unread,
Jul 24, 2012, 4:02:57 PM7/24/12
to panb...@googlegroups.com
என்னோட எண்ணம் என்னன்னா இதெல்லாம் ஏன் இந்தியாவில குறிப்பா தஞ்சை டெல்டா பகுதியிலே பயிர்வட்டம் வரதில்லை என்பதுதான்...

ஏலியன்ஸ்க்கு(!?) அப்ப முன்னமே தெரிஞ்சியிருக்கு... 

2012/7/25 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

Prakash Sugumaran

unread,
Jul 24, 2012, 4:09:08 PM7/24/12
to panb...@googlegroups.com
நல்லா கிளப்புராய்ய்ங்கப்பா.. பீதிய 

2012/7/25 VJagadeesh <vom...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jul 24, 2012, 4:17:24 PM7/24/12
to panb...@googlegroups.com
என்னா தெரிஞ்சிருக்கு??

2012/7/24 VJagadeesh <vom...@gmail.com>

என்னோட எண்ணம் என்னன்னா இதெல்லாம் ஏன் இந்தியாவில குறிப்பா தஞ்சை டெல்டா பகுதியிலே பயிர்வட்டம் வரதில்லை என்பதுதான்...

ஏலியன்ஸ்க்கு(!?) அப்ப முன்னமே தெரிஞ்சியிருக்கு... 


Prakash Sugumaran

unread,
Jul 24, 2012, 4:20:36 PM7/24/12
to panb...@googlegroups.com
மம்மோத் யானை என தொடங்கியதும் ஏதோ இந்திரனின் ஐராவதம் பத்தி யாரோ தொடங்கின கதையோன்னு நினைச்சிட்டேன். எப்படியோ ஓம், யந்திரம்னு கிட்ட நெருங்கி வந்து இருக்காங்க. அப்புறம் தலைப்பில ஒரு சிறு கரெக் ஷன். சாமி சத்தியமா இந்த உண்மைகள் மறைக்கப் படல சாமி.. ஊருக்கே டார்ச் காட்டி வெளிப்படுத்தப்பட்டிருக்கு.

2012/7/25 Prakash Sugumaran <praka...@gmail.com>

காமேஷ்

unread,
Jul 24, 2012, 9:02:06 PM7/24/12
to panb...@googlegroups.com
இந்தியாவிலும் இருக்கு..
சின்ன வயசில மைதானத்துக்கு போறப்ப பார்த்திருக்கோம். !
யாரும் சொல்வதில்லை அ இவ்ளோ பெரிய வட்டம் போடும் அளவுக்கு
நம்மகிட்ட வயல் இல்லை.. அங்கங்க துண்டு துண்டா இருந்தா எப்டி போடுறது இவ்ளோ பெரிய வட்டம் ?





2012/7/25 VJagadeesh <vom...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Jul 25, 2012, 1:36:33 AM7/25/12
to panb...@googlegroups.com
ஸ்ரீசக்கரத்தை வரைவது கடினம், அச்சுப்பிசகாமல் கோணம் சிதறாமல் வரைவது மிகமிகக் கடினம், யோசிக்க  வேண்டி இருக்கு வடிவகணித 

வடிவங்களை வரைய பூமி சிலேட்டா எனக் கேட்கவும் தோன்ருகிறது, எப்படியோ இங்குள்ள மதங்கள் ஓழிய ஏலியன் சாமி வந்தா நல்லது தான்...

2012/7/25 காமேஷ் <kame...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
http://www.subadhinam.com
http://www.ootytours.in/

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

ஸ் பெ

unread,
Jul 25, 2012, 1:43:24 AM7/25/12
to panb...@googlegroups.com
+1

2012/7/25 eswar sivakrishnan <easw...@gmail.com>

, எப்படியோ இங்குள்ள மதங்கள் ஓழிய ஏலியன் சாமி வந்தா நல்லது தான்...



தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Srimoorthy.S

unread,
Jul 25, 2012, 1:55:53 AM7/25/12
to panb...@googlegroups.com

நீங்களே பாத்திருக்கீங்களா? என்ன வடிவத்தில இருந்தது? உங்க ஓவியத்திரமைல வரைஞ்சி காட்டுங்களேன்.

--

VJagadeesh

unread,
Jul 30, 2012, 10:58:54 AM7/30/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 12
- ராஜ்சிவா

 

இதுவரை நாம் பயிர்வட்டங்களைப் பற்றி நிறையப் பார்த்திருக்கின்றோம்.ஆனால் அவை யாரால் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் தெளிவான பதில்கள் நமக்குத் தெரியவில்லைமனிதனால் உருவாக்கப்பட்டவைமனிதனால் உருவாக்கப்படாதவை என்ற மேலோட்டமான இரு நிலைகளில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்திருக்கிறோம்பயிர்வட்டங்களை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்றால், 'ஏன் உருவாக்கினார்கள்?', 'எப்படி உருவாக்கினார்கள்?', 'மனிதர்கள் உருவாக்கியதை நாம் எப்படிக் கண்டுகொள்கிறோம்?' என்னும் கேள்விகள் நம் முன்னே வந்து நிற்கும்மனிதர்களால் அவை உருவாக்கப்படவில்லை என்றால், 'அவை யாரால் உருவாக்கப்படுகின்றன?', 'தாமாகவே இயற்கையாக உருவாகின்றனவா?', 'தெய்வசக்தி போலஏதாவது ஒரு சக்தி இவற்றை உருவாக்குகின்றதா?' என்ற கேள்விகளும் அடுத்து எழுகின்றனஇந்த நிலையில்பயிர்வட்டங்களைப் பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர்நாம் மேலே உள்ள கேள்விகளுக்கு முழுமையான பதில்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறதுபயிர்வட்டங்கள் பற்றி நாம் இதுவரை பார்த்த தகவல்கள் அனைத்தும்அவை பற்றிய புரிதல்களுக்காக அங்கொன்றும்,இங்கொன்றுமாகத் தொட்டுச் செல்வதாகவே அமைந்திருந்ததுஅதனால்,பயிர்வட்டங்களின் மேல் ஒரு முழுமையான பார்வையைச் செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். 

புராதன காலத்திலேயே பயிர்வட்டங்கள் உருவாக்கியதற்கான சான்றுகள் நம்மிடையே இருக்கின்றனதென்னாபிரிக்காசீனாமேற்கிந்தியா ஆகிய நாட்டவர்களின் புராதனக் கதைகளில் இவை பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், 1590ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதிஇங்கிலாந்தில் பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது என்ற குறிப்பு முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதுதொடர்ந்து, 1633 இல் இங்கிலாந்திலுள்ள ஒரு பாடசாலை ஆசிரியை பயிர்வட்டத்தைக் கண்டதாகவும்அதற்கு அப்புறம் 1678இல் பிசாசு ஒன்றுவிவசாயிக்கு பயிர்வட்டத்தை உருவாக்கியதாகவும் குறிப்புகள் உள்ளனஅதற்குப் பின்னர் அப்படியே ஓய்ந்துவிட்ட இந்தப் பயிர்வட்டச் சரித்திரம்மீண்டும் 1970 தொடக்கம் 1990 வரையுள்ள காலங்களில் அதிகளவில் சூடுபிடிக்கத் தொடங்கியதுஅதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் பயிர்வட்டங்கள் தோன்றத் தொடங்கினஉலகளாவிய ரீதியில் இதுவரை 10000 க்கும் அதிகமான பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற கணக்கு இருந்தாலும், 6000 பயிர்வட்டங்கள் முழுமையாக ஆராயப்பட்டுஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றனபயிர்வட்டங்களின் வடிவம்தன்மைஅர்த்தம்,நம்பகத்தன்மை போன்றவை அனைத்தும் முழுமையாகப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.இவற்றை ஆராய்வதற்கென்றே, 'பயிர்வட்ட ஆய்வாளர்கள்என்னும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.பயிர்வட்டங்கள் உருவாகும் போதுதாங்கள் நேரிலேயே கண்டதாகப் பலர் சொல்லியிருந்தாலும்மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த 80 பேர் சொன்ன சாட்சியங்கள் மட்டும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றனஅப்படிச் சாட்சி சொன்னார்கள்அனைவருமே மதிப்பும்மரியாதையும் வாய்ந்த பிரஜைகளாக இருப்பது மேலதிக தகவலாகவும் இருக்கிறது.

1970 முதல் 1990 வரையுள்ள காலப்பகுதியில் பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டபோதுஉலகம் முழுவதும் அந்தச் செய்தி பரவி,மிகப்பிரபலமாகப் பேசப்படத் தொடங்கியதுபயிர்வட்டங்கள் உருவாகிய ஆரம்ப காலங்களில்அவை ஆச்சரியமானஅதிசயமான,மர்மமானவையாகவும் பார்க்கப்படத் தொடங்கினஇந்த அதிசயத்தினால் கவரப்பட்டுஉலகில் பல மூலைகளிலுமிருந்தும் பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர்படிப்படியாக அவற்றின் செல்வாக்குகளும் அதிகரிக்க ஆரம்பித்தனவந்தவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருந்தது. "இந்தப் பயிர்வட்டங்களை உருவாக்குவது யார்?" என்பதே அந்தக் கேள்விதொடர்ந்து உருவான பயிர்வட்டங்களின் வடிவங்களில் படிப்படியாகச் சிக்கலான கணித அமைப்புகளும் தோன்ற ஆரம்பித்தன.இதனால்பயிர்வட்டங்களை உருவாக்குபவர்கள் மிகுந்த அறிவாளிகள்சக்தி வாய்ந்தவர்கள் என்ற பேச்சும் வளர ஆரம்பித்ததுஇந்தப் பேச்செல்லாம்,அயல் கிரகவாசிகள் (ஏலியன்கள்அவற்றை உருவாக்குகிறார்கள் என்னும் நம்பிக்கையிலேயே பேசப்பட்டன. 

இந்தக் காலகட்டத்தில்தான்அதாவது 1991ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதியன்று இங்கிலாந்தில், 'டக் போவெர்' (Doug Bower), டேவிட் ஷோர்லி (David Chorley) என்னும் இரண்டு 67, 62 வயதுடையவர்கள் தாங்கள்தான் அனைத்துப் பயிர்வட்டங்களையும் உருவாக்கியவர்கள் என்று பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்தனர்உலகமே நம்பலாமாவேண்டாமாஎன்று பிரமித்தபடி தவித்துக் கொண்டிருந்த ஒரு மாபெரும் சிக்கலுக்கு விடையளிப்பது போல இருந்தது அவர்கள் பேட்டிஇவர்கள் மூலம் கிடைத்த பதிலால் நிம்மதியடைந்தனர் பலர். "நாம் பயந்தது போலஇவற்றை ஏலியன்கள் செய்யவில்லைஎன்ற திருப்தி பலரிடமிருந்து வெளிப்படலாயிற்றுடக்,டேவிட் இருவரும் கொடுத்த பேட்டியில், "தாங்கள் இருவரும் 1978ம் ஆண்டிலிருந்தே பயிர்வட்டங்களை உருவாக்க ஆரம்பித்ததாகவும்ஒருநாள் ஒரு ரெஸ்ட்டாரென்டில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்த போதுஇந்த ஐடியா தோன்றியதுஎன்றும் சொன்னார்கள்அத்துடன்அவர்கள் கையுடன் கொண்டுவந்திருந்தகயிற்றால் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் ஒன்றரை மீட்டர் நீளமான பலகையைக் காட்டிஅந்தப் பலகையை ஒருகாலில் வைத்துக்கொண்டு பயிர்களை அழுத்துவதன் மூலம்பயிர்வட்டங்களை உருவாக்கியதாகவும் சொன்னார்கள். ஒருவழியாக எல்லாமே சுமுகமான முடிவுக்கு வந்தது என்றுதான் எல்லாரும் நினைத்திருந்தார்கள்ஆனால் அவர்கள் இருவரும் கொடுத்த தொடர்ச்சியான பேட்டிகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் பலரை மீண்டும் சிந்திக்க வைத்தன.1978ம் ஆண்டிலிருந்து அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் எடுத்தாலும்ஆயிரக் கணக்கான பயிர்வட்டங்கள் எண்ணிக்கையில் வராமல் எஞ்சினஅவற்றை யார் செய்தார்கள் என்ற கேள்வி மீண்டும் எழுந்ததுஇவர்கள் உருவாக்கியதாகச் சொல்லும் எண்ணிக்கையும் நம்பமுடியாததாக இருந்ததுகாரணம்,இங்கிலாந்தின் பல இடங்களில்பரவலாகப் பயிர்வட்டங்களைத் தாங்கள் உருவாக்கியதாக அவர்கள் சொல்லியிருந்தனர்இந்த இரண்டு பேரால் அவ்வளவு தூர இடங்களுக்குப் பிரயாணம் செய்துஇரவுகளில் உள்ள சில மணி நேரங்களில்அனைத்தையும் உருவாக்கியிருக்க முடியாது என்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.  இதில் அவர்கள் சொன்ன இன்னுமொரு விசயமும் சந்தேகத்தைத் தந்ததுஅவர்கள் இருவரின் மனைவிகளுக்குத் தெரியாமலேஇரவிரவாகப் பயிர்வட்டங்களை உருவாக்கிவிட்டுவீட்டுக்கு வந்து நித்திரைக்குப் போய்விடுவதாகவும் சொன்னார்கள்எதுவுமே நம்பக் கூடியதாக இருக்கவில்லைஅவர்கள் இருவரையும் அழைத்துமிகவும் எளிமையானதொரு வடிவத்தை வரையுமாறு கூறியபோதுஅவர்கள் உருவாக்கிய பயிர்வட்டம் அவர்களின் போலித்தனத்தை வெளிக்கொண்டு வந்ததுஇந்தச் சித்திரத்தை அவர்களால் ஒரு காகிதத்திலேயே வரையமுடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டம் இதுதான்.

டக்டேவிட் இருவரும் கொடுத்தது பொய்யான வாக்குமூலம் என்று தெரிந்ததும்பழையபடி பதட்டம் இங்கிலாந்து மக்களைத் தொற்றிக் கொண்டதுஆனால் டக்டேவ் இருவரும் போலியானவர்கள் என்று தெரிந்தாலும்அவர்களால் ஒரு மாபெரும் சிக்கலுக்கும் வித்திடப்பட்டது.பயிர்வட்டங்களை உருவாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லியஅந்த நீளமான பலகையும்கயிறும் சில இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டது. "அடஇது நல்ல உத்தியாக இருக்கிறதே!"என்று இளைஞர்கள் ஆங்காங்கே சிந்திக்க ஆரம்பித்தனர்டக்டேவிட் கூறியது போலநாமும் செய்து பார்த்தால் என்ன என்று முடிவெடுத்தார்கள்.அவர்களது கணித அறிவுக்கும்புத்திசாலித்தனங்களுக்கும் அது ஒரு சவாலாகவும் இருந்ததுபல இடங்களில்சில இளைஞர்கள் சேர்ந்துபல பயிர்வட்டங்களை உருவாக்கத் தொடங்கினார்கள்இளைஞர்கள் என்று சொன்னால்அது எந்த நாட்டு இளைஞர்களாக இருந்தாலும்அவர்களிடம் இருப்பது குறும்புதானேஅதனால் பயிர்வட்டங்கள் பல இடங்களிலும் சரமாரியாகத் தோன்றத் தொடங்கினஇந்த நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப ஆரம்பித்தார்கள்எது மனிதன் உருவாக்கியதுஎது மனிதன் உருவாக்கியதல்ல என்று புரியாமல் திகைத்தனர்.அது போதாதென்று, 'பயிர்வட்டம் உருவாக்குபவர்கள்என்று ஒரு அமைப்பையே அந்த இளைஞர்கள் ஆரம்பித்தனர்இப்படி அவர்கள் வெளிப்படையாக அமைப்புகளை உருவாக்க வேறு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. 

பயிர்வட்டங்களின் அதிசயத்தினால்மக்கள் கூட்டம் கூட்டமாக,உலகெங்குமிருந்து பார்வையாளர்களாகஇங்கிலாந்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்கள் அல்லவாஇதுவே விளம்பரக் கம்பெனிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததுஎதையும் விளம்பரப்படுத்திவிற்பனை செய்யும் தந்திரம்தான் அவர்களுக்கு கைவந்த கலையாயிற்றேஅவர்கள் பயிர்வட்டங்களை உருவாக்கும் இந்தக் குறும்புக்கார இளைஞர்களைக் குறி வைத்தனர்இலட்சக்கணக்கில் பணம் கைமாறியதுகம்பெனிகளின் விளம்பரங்கள்பயிர்வட்டங்களாக உருவாக ஆரம்பித்தனஃபயர்பாக்ஸ்ஸ்விஸ் எயார்பியர் கம்பெனிகள்கார் கம்பெனிகள் என அனைத்துக் கம்பெனிகளும் பயிர்வட்டப் பிரதேசங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கினமொத்தத்தில் விடையே கண்டுபிடிக்க முடியாமல் இருந்த அதிசயச் சம்பவம் ஒன்றுகேலிக்குரிய நகைச்சுவயாக மாறத் தொடங்கியதுகடைசியில் எது உண்மைஎது பொய்யெனத் தெரியமுடியாத அளவுக்கு பயிர்வட்டங்கள் பெருகத் தொடங்கினஇதனால் மக்களுக்கு அதில் உள்ள ஆர்வமும் படிப்படியாகக் குறையவும் தொடங்கியது.

பயிவட்டங்களை உருவாக்கும் இளைஞர்களிடம், 'ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்?' என்று கேட்ட போதுதங்கள் குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக, 'ஒட்டுமொத்தப் பயிர்வட்டங்களையும் மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள்அவற்றை ஏலியன்கள் உருவாக்குகின்றன என்று சொல்வது பச்சைப் பொய்என்று சொல்ல ஆரம்பித்தார்கள்ஆனால் படிப்படியாக அவர்கள் அனவரையும் கிலியில் ஆழ்த்திய சம்பவங்கள் நடக்கத் தொடங்கினபணத்துக்காகவும்குறும்புக்காகவும் இரவில் பயிர்வட்டங்களை இளைஞர்கள் உருவாக்கிக்கொண்டிருந்தபோதுஅவர்களைச் சுற்றி பந்து போன்ற ஒளிவட்டங்கள் தோன்றத் தொடங்கினஒன்றுஇரண்டுமூன்று,பலவென ஒளிப்பந்துகள் அவர்கள் நிற்கும் வயல்வெளிகளில் அலையத் தொடங்கினஆனால் அந்த ஒளிவட்டங்களால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படவில்லைஇரவினில் பயிர்வட்டங்களை உருவாக்கிய அனைத்து இளைஞர்களும் வேறு வேறு இடங்களில் இந்த ஒளிவட்டங்களைக் கண்டிருக்கிறார்கள்யார் வாயால் பயிர்வட்டங்களை ஏலியன்கள் உருவாக்கவில்லை என்று சொல்லப்பட்டதோஅவர்கள் அனைவரும் ஒளிப்பந்துகளைக் கண்டதாக ஒத்துக் கொண்டனர்இது விடை சொல்ல முடியாத ஆச்சரியமாக அமைந்தது.

இப்படிப்பட்ட இளைஞர்களின் குரூரமான நகைச்சுவைகளால் பல உண்மைகளை நாம் அறிந்துவிடாமல் தவறவிட வேண்டிய சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகிறோம்இப்படித்தான், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி ஹாலந்து நாட்டில் ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் உருவாகியதுஇதுவரை உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களிலேயே மிகவும் பெரியது அதுஅரைக் கிலோமீட்டருக்கும் (530 X 450 மீட்டர்அதிகமான அளவுடையதாக இருந்ததுஅத்துடன் மிகவும் அழகானதும்சிந்திக்க வைக்கும் உருவத்துடனும் அது காணப்பட்டதுடாவின்சியின் 'Vitruvian Man'என்னும் அடையாளம் போலஇரண்டு கைகளையும் ஒரு மனிதன் விரித்தபடி நிற்கவண்ணத்துப்பூச்சியாக மாறுவது போன்ற பயிர்வட்டம் அதுஐரோப்பா,அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளையும் அதிர வைத்தது அந்தச் சித்திரம்.மனிதனால் உருவாக்கியிருக்கவே முடியாது என்று எண்ணும்படிமிகவும் ஆச்சரியத்தைத் தந்த அந்தப் பயிர்வட்டத்தையும் தாங்கள்தான் செய்தோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளைஞர்கள் கூட்டம் வந்ததுஅதைச் செய்வதற்கு தாங்கள் ஆயத்தப்படுத்தியதாக ஒரு சிறிய காணொளியையும்,அவர்கள் போட்டுக் காட்டினார்கள்ஆனால் அந்தக் காணொளியில் அதை உருவாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லைஇவர்கள் செய்த இந்தக் குழப்பத்தால்அதைச் சரியாக ஆராயவே முடியாமல் போயிற்றுஅதனால்,இன்றும் அதை மனிதன் செய்தானாஇல்லைவேறு யாரும் செய்தார்களா என்ற கேள்விக்கு விடை இல்லாமலே இருக்கிறதுஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படிமனிதர்களால் அது செய்யப்பட்டிருக்க முடியாது என்றுதான் சொல்லப்படுகிறதுஅரைக் கிலோமீட்டர் நீளமான இந்தச் சித்திரத்தை இவ்வளவு நேர்த்தியாக ஒரே இரவில் உருவாக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்கே வேலை செய்திருக்க வேண்டும்  என்கிறார்கள்.ஒருவேளை இந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படாததாக இருந்தால்,மனிதன் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கும்டாவின்சியின் இந்த மனித அடையாளத்தை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்அத்துடன் உயிரினங்களின் பரினாம வளர்ச்சி பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இவற்றின் மூலம் மனிதர்களுக்கு அவர்கள் ஏதோ செய்திகளைச் சொல்ல முயற்சிக்கவும் வேண்டும்.மனிதர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களைஅவற்றை உருவாக்கிய மனிதர்கள்தாங்கள் உருவாக்கியதாகச் சொல்வதன் மூலமும்வேறு சில ஆராய்ச்சிகளின் மூலமும் சுலபமாகக்  கண்டுபிடித்துவிடலாம்ஆனால்,மனிதர்கள் உருவாக்காத பயிர்வட்டங்களை எப்படி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர்பயிர்வட்டங்கள் உருவாகும் போதுநேரடியாகக் கண்டதாகச் சொல்லும் மனிதர்களை மட்டும் நம்பிஅவை ஏலியன்களால் உருவாக்கப்படுகின்றன என்று சொல்லிவிடலாமாஅப்படிப்பார்த்தால்,கடவுளைக் கண்டதாகவும்இறந்தவர்களைக் கண்டதாகவும்பேய்களைக் கண்டதாகவும் உலகில் பலர் மிகவும் நம்பகத் தன்மையுடன் சொல்கிறார்களே!அதனால் கடவுள் உண்டு என்னும் முடிவுக்கு நாம் உடன் வந்துவிடலாம் அல்லவாஅப்படி ஒரு முடிவுக்கு வந்தால்இந்த உலகத்தில் ஆத்திகன்,நாத்திகன் என்னும் பிரச்சினையே உருவாக முடியாதேஎனவே தனிமனித சாட்சியங்கள் மட்டும் வைத்துஎதையும் நூறு சதவீதம் உறுதிப்படுத்த முடியாதுஇந்தப் பயிர்வட்டங்களிலும்நேரில் கண்ட சாட்சிகள் இருந்தபோதிலும்அவற்றை மட்டும் நம்பாமல்மேலதிகமான பல ஆராய்ச்சிகள் செயப்படுகின்றனஅந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பொறுத்தே திட்டவட்டமாக அவற்றை மனிதன் செய்யவில்லை என்னும் முடிவுக்கு ஆராய்பவர்கள் வருகிறார்கள். பயிர்வட்டங்களை மனிதன் உருவாக்கவில்லை என்றால்ஏலியன்களே உருவாக்குகின்றன என்ற முடிவைத்தான் ஆராய்ச்சியாளர்கள் எடுக்க வேண்டியிருக்கிறதுஇதை வாயினால் சொல்லாவிட்டாலும் பல வடிவங்களில் நமக்கு அதை அவர்கள் புரிய வைக்கிறார்கள்அந்த அளவுக்குத் திடமாகஏலியன்கள்தான் உருவாக்கின என்ற ஒரு முடிவைஎன்ன விதமான ஆராய்ச்சிகளைச் செய்து ஆராய்ச்சியாளர்கள் எடுக்கிறார்கள்திடமாக அந்த முடிவை அவர்கள் எடுப்பதன் காரணம் என்னஉண்மையிலேயே ஏலியன்கள் இருக்கின்றனவா?இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் உங்களுக்குத் தேவைப்படும்அந்தப் பதில்களைப் பார்ப்பதற்கு அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்....

Ramesh Murugan

unread,
Jul 30, 2012, 2:26:21 PM7/30/12
to panb...@googlegroups.com
வில்லன்,
இந்த பதிவு இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்துது... 1590 லிருந்தே இங்குலாந்தில்தான் தொடர்ந்து பயிர்வட்டம் வரையப்படுது. ஏன் மற்ற நாட்டில் வரையப்படல. முக்கியமா இங்கிலாந்து நாட்டுக்கு சம்மந்தமில்லாத பயிர்வட்டங்கள் ஏன் அங்கேயே தொடர்ந்து வரையப்படுது??

2012/7/30 VJagadeesh <vom...@gmail.com>

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 12
- ராஜ்சிவா


VJagadeesh

unread,
Jul 30, 2012, 2:33:06 PM7/30/12
to panb...@googlegroups.com
ராஜ்சிவாட்ட சொல்லிட்டேன்,,,

அடுத்தவாரம் விளக்கம் தருவார்னு நினைக்கிறேன்

2012/7/30 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jul 30, 2012, 2:41:27 PM7/30/12
to panb...@googlegroups.com
வெரிகுட்.

2012/7/30 VJagadeesh <vom...@gmail.com>

ராஜ்சிவாட்ட சொல்லிட்டேன்,,,

அடுத்தவாரம் விளக்கம் தருவார்னு நினைக்கிறேன்

VJagadeesh

unread,
Jul 30, 2012, 2:43:55 PM7/30/12
to panb...@googlegroups.com

  • Raj Siva வில்லன், அதுமட்டுமல்ல பேர்முடா முக்கோணம் போல, இங்கிலாந்திலும் ஒரு குறிப்பிட்ட முக்கோண இடத்திலேயே இந்த பயிர்வட்டந்க்களை அதிகமாய் உருவாகின்றன. ஆனால் வேறு நாடுகளிலும் உருவாகியுள்ளன. அது ஏன் என்பதையும் தொடரின் இறுதியில் சொல்வேன்.

2012/7/31 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jul 30, 2012, 2:46:20 PM7/30/12
to panb...@googlegroups.com
ஓகே... காத்திருக்கலாம்.

2012/7/30 VJagadeesh <vom...@gmail.com>


  • Raj Siva வில்லன், அதுமட்டுமல்ல பேர்முடா முக்கோணம் போல, இங்கிலாந்திலும் ஒரு குறிப்பிட்ட முக்கோண இடத்திலேயே இந்த பயிர்வட்டந்க்களை அதிகமாய் உருவாகின்றன. ஆனால் வேறு நாடுகளிலும் உருவாகியுள்ளன. அது ஏன் என்பதையும் தொடரின் இறுதியில் சொல்வேன்.


Srimoorthy.S

unread,
Jul 30, 2012, 2:53:18 PM7/30/12
to panb...@googlegroups.com

வாட் எ கொலாட்ரல் டேமேஜ்.

சோனி பிக்ஸ்ல பெர்முடா ட்ரையாங்கிள்  ஜஸ்ட் போட்டிருக்கான்.

செல்வன்

unread,
Jul 30, 2012, 3:07:56 PM7/30/12
to panb...@googlegroups.com


2012/7/30 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன்,
இந்த பதிவு இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்துது... 1590 லிருந்தே இங்குலாந்தில்தான் தொடர்ந்து பயிர்வட்டம் வரையப்படுது. ஏன் மற்ற நாட்டில் வரையப்படல. முக்கியமா இங்கிலாந்து நாட்டுக்கு சம்மந்தமில்லாத பயிர்வட்டங்கள் ஏன் அங்கேயே தொடர்ந்து வரையப்படுது??


இதை வரைந்தவர்கள் பவுலர் மற்றும் ஹார்லி என்ற இரு குறும்பர்கள். இவர்கள் செய்தது பத்திரிக்கைகளில் வந்தது எல்லாரும் பரபரப்பா இதை பற்றி பேசியதும் ரொம்ப உற்சாகமாகி இங்கிலாந்தின் மூலை முடுக்கெங்கும் போய் பயிர்களில் இப்படி வரைய ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம் மற்ர நாடுகளிலும் இப்படி குறும்பர்கள் கூட்டம் கிளம்பி வரைய ஆரம்பித்துவிட்டது. அப்புறம் இது டுபாக்கூர் என எல்லாருக்கும் தெரிந்துவிட்டாலும் கான்ஸ்பிரசி தியரிகள் மட்டும் இன்னும் ஓயவில்லை

--
செல்வன்


ஸ் பெ

unread,
Jul 30, 2012, 3:13:09 PM7/30/12
to panb...@googlegroups.com
ஜோலி முடிஞ்சுதா...... அப்போ இந்த இழையை சாத்திடலாமா?
:))


2012/7/30 செல்வன் <hol...@gmail.com>


இதை வரைந்தவர்கள் பவுலர் மற்றும் ஹார்லி என்ற இரு குறும்பர்கள். இவர்கள் செய்தது பத்திரிக்கைகளில் வந்தது எல்லாரும் பரபரப்பா இதை பற்றி பேசியதும் ரொம்ப உற்சாகமாகி இங்கிலாந்தின் மூலை முடுக்கெங்கும் போய் பயிர்களில் இப்படி வரைய ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம் மற்ர நாடுகளிலும் இப்படி குறும்பர்கள் கூட்டம் கிளம்பி வரைய ஆரம்பித்துவிட்டது. அப்புறம் இது டுபாக்கூர் என எல்லாருக்கும் தெரிந்துவிட்டாலும் கான்ஸ்பிரசி தியரிகள் மட்டும் இன்னும் ஓயவில்லை

--
செல்வன்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

VJagadeesh

unread,
Jul 30, 2012, 3:17:19 PM7/30/12
to panb...@googlegroups.com
இந்த வார தொடர்லயெ இந்த ரெண்டு பேரையும் பத்தி சொல்லியிருக்கே

அப்புறம் என்ன?



2012/7/31 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jul 30, 2012, 5:17:36 PM7/30/12
to panb...@googlegroups.com
:))

2012/7/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஜோலி முடிஞ்சுதா...... அப்போ இந்த இழையை சாத்திடலாமா?
:))

VJagadeesh

unread,
Aug 6, 2012, 10:40:54 AM8/6/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (13)
ராஜ்சிவா

நம்ப முடியாத ஆச்சரியங்களையும்,  மர்மங்களையும் தகுந்த ஆதாரமில்லாமல்நம்ப வைப்பது போல எழுதுவது கூட,மூடநம்பிக்கைகளை விதைப்பதற்குச் சமமான ஒன்றுதான். பயிர்வட்டங்களிலும் நம்ப முடியாத ஆச்சரியங்கள்தான் நிறைந்திருக்கின்றன. இனி நான் எழுதப் போகும் அனைத்தும்,பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படாமல்வேறு ஒரு அமானுஷ்யமான சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைச் சாதிக்கும் விதமாகவே அமையும். இப்படி நான் எழுதுவதை மட்டும் வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. வரவும் கூடாது. இப்படியெல்லாம் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளாகஇவை என்னால் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றிஇவையே முடிந்த முடிவுகளல்ல. முடிந்தவரை நான் இரண்டு பக்கச் சாத்தியக்கூறுகளையும் எழுதவே முயற்சிக்கிறேன். சாத்தியக் கூறுகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் எப்போதும் கிடையாது. உதாரணமாக, 'வானம் நீல நிறம்என்பவர்கள் இருக்கிறார்கள். அதுபோல, 'வானம் நீல நிறம் இல்லைஎன்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவையிரண்டும் தவிர்த்து, 'வானம் என்ற ஒன்றே கிடையாதுஎன்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று கூற்றுகளில் மூன்றுமே அவரவர் பார்வையில் சரியானவைதான். மூன்றும் 'வானம்பற்றிய உண்மைக்குரிய சாத்தியங்களைக் கொண்டவை. ஆனால்இதில் முன்று சாத்தியங்களுமே உண்மையாக இருக்க முடியாது. மூன்றில் ஒன்று மட்டும் உண்மையாக இருக்கவோஅல்லது மூன்றுமே பொய்யாக இருக்கவோதான் சாத்தியம் உண்டு. வானம் சம்பந்தமாக இவற்றில் எது சரியென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். 

பயிர்வட்டங்கள் மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றன என்பதற்குச் சான்றாக முன்வைக்கப்படும் முக்கிய காரணங்கள் இரண்டு. 1.பயிர்வட்டங்களை நாங்கள்தான் உருவாக்கினோம் என்றுஅதை உருவாக்கியவர்களே முன்வந்து சொல்வது. 2. உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களில்மனிதன் செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுவது. தங்களது பெயர் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகபோலியாக வந்து பயிர்வட்டங்களைத் தாமே உருவாக்கியதாக இதுவரை பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும்சிலர் பயிர்வட்டங்களை உருவாக்கியுமிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மனிதர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களைமனிதர்கள் செய்ததற்கான அடையாளங்கள் மூலம் இலகுவில் கண்டுகொள்ளலாம். குறிப்பாகமனிதர்கள் பலகையையும்கயிற்றையும் பயன்படுத்திப் பயிர்களை அழுத்துவதன் மூலம் பயிர்வட்டங்களை உருவாக்குகிறார்கள். அப்படி அழுத்தும்போது,பயிர்களில் பலகைகளின் விளிம்புகள் ஏற்படுத்தும் அடையாளங்கள் இலகுவாகப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. அத்துடன் மனிதன் உருவாக்கும்போதுபயிர்கள் ஒழுங்கற்ற வகையில் அழுத்தப்படுகின்றன. அப்படி அழுத்தப்படும் பயிர்களின் தண்டுகள் இடையே முறிந்து நாசமாகின்றன. ஆனால் மனிதனால் செய்யப்படாதவை அப்படிப்பட்டவை அல்ல.

மனிதனால் உருவாக்கப்படாத பயிர்வட்டங்களைஅதற்கென இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோதுகற்பனையே பண்ணமுடியாத அளவுக்கு ஆச்சரியமான விடைகள் அவர்களுக்குக் கிடைத்தன. மிகவும் ஆற்றலுள்ள ஒரு சக்தியே பயிர்வட்டங்களை உருவாக்குகின்றது என்று அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். மனிதனால் உருவாக்கப்படாத பயிர்வட்டங்களில்பயிர்கள் நீராவி போன்ற அதிக வெப்பமுள்ள ஏதோ ஒன்றினால் வெப்பமாக்கப்பட்டு அழுத்தப்படுகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். அப்படி அழுத்தப்படும் பயிர்கள் 90 பாகைகளிலும்135 பாகைகளிலும் வளைக்கப்படுகின்றன.அப்படி வளைக்கப்படும்போது,பயிர்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படுவதே இல்லை என்பது இன்னுமொரு ஆச்சரியம். அந்தப் பயிர்கள் தொடர்ந்து வளரக் கூடிய வகையிலேயே வளைக்கப்படுகின்றன. பயிர்கள் வளைக்கப்படும் இடங்களில் அதியுயர் வெப்பநிலையால்சிறு முடிச்சுப் போன்ற ஒன்று பயிரின் தண்டில் தோன்றுகிறது. அனைத்துப் பயிர்களும் ஒரே சீராகஒரே அளவுகளிலும்கோணங்களிலும் வளைக்கப்படுகின்றன. ஒரு பயிராவது முறிந்து போவதில்லை. இந்த வகையில் மனிதனால் செய்ய முடியுமா?ஒவ்வொரு பயிரையும் தனித்தனியே நீராவியாலோ அல்லது வேறு ஒன்றின் மூலமாகவோ வெப்பமாக்கிவளைத்தெடுக்க மனிதனால் முடியவே முடியாது. அதற்குச் சாத்தியமே இல்லை. நான் கொடுக்கும் படங்களைப் பார்க்கும் வரைநான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரிவதுகூடக் கடினமாகவே இருக்கும். அதனால்அதற்குரிய படங்களைப் பாருங்கள்.

இதைவிட ஆச்சரியம் ஒன்றும் உண்டு. வயல்வெளிகளில் கதிர்கள் முற்றியதும்எடை தாங்காமல் தலை குனிந்தது போலவளைந்தபடியே எப்போதும் இருக்கும். ஆனால் அந்த மர்மமான சக்தியினால் உருவாக்கப்படும் பயிர்வட்டங்களை ஆராய்ந்தபோதுபயிர்களில் உள்ள கதிர்கள்எடையினால் வளைந்தபடி இல்லாமல்இஸ்திரிப்பெட்டியினால் (Ironbox) அழுத்தியது போலநேராக நிமிர்ந்து காணப்படுகின்றன. அதிகளவு வெப்பநிலையுள்ள நீராவி போன்ற ஏதோ ஒன்றின் மூலமாகவே அப்படிச் செய்ய முடியும் எனச் சந்தேகிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நான் கீழே தந்திருக்கும் இரண்டு படங்களையும் சரியாகப் பாருங்கள். முதலாவதாக உள்ள படத்தில்உள்ளே பயிர்வட்டமாக அழுத்தப்பட்டிருக்கும் பயிர்களுக்கும்அழுத்தப்படாமல் வெளியே நிற்கும் பயிர்களுக்கும் உள்ள வித்தியாசம் துல்லியமாகத் தெரியும். வட்டத்துக்கு வெளியே இருக்கும் பயிர்களின் கதிர்கள் எல்லாம் எடையினால் வளைந்து காணப்படுவதாகவும்வட்டத்துக்கு உள்ளே அழுத்தப்பட்டிருக்கும் கதிர்கள் நேராகக் காணப்படுவதாகவும் இருக்கும். இரண்டாவதாக இருக்கும் படத்தில் உள்ள பயிர்வட்டம் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள பயிர்கள்வட்டத்தின் உள்ளேயும்வெளியேயும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி இருப்பது தெரியும். 

பயிர்களை அமானுஷ்யமான சக்தி கொண்டு வளைக்கும்போதுஅந்தப் பயிர்களின் தண்டுகளின் தோல் பகுதி மட்டுமே பழுதடைகின்றன. உள்ளே தண்டுகள் பழுதடையாமல்பயிர்கள் தொடர்ந்து வளர்வதற்குரியது போலக் காணப்படுகின்றன. இப்படியெல்லாம் பலகை கொண்டு அழுத்தும் போது,மனிதனால் செய்யமுடியுமா?பயிர்வட்டங்களை மனிதன் உருவாக்குவதன் மூலம்ஒரு விவசாயியின் பயிர்களை நாசம் செய்கிறான். ஆனால் அந்த அமானுஷ்ய சக்தியோவிவசாயிக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பயிர்வட்டங்களை உருவாக்குகிறது. இவையெல்லாமேபயிர்வட்டங்களை ஆராய்ச்சி செய்தவர்களினால் நுணுக்கமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

உலகில் எந்த இடத்திலும்மனிதன் அல்லாமல் உருவான பயிர்வட்டங்களை ஆராய்ந்தபோதும்அந்த மண்ணில் மிகவும் சிறிய உருண்டை வடிவ இரும்புத் துகள்கள் போலஏதோ ஒன்று மண்ணுடன் கலந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்தத் துகள்கள் பயிர்வட்டத்தினுள்ளேதான் இருந்தனவேயொழியபயிர்வட்டத்திற்கு வெளியே எங்கும் காணப்படவில்லை. இது ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளை மேலும் உறுதியாக்கியது. இவை 10 இலிருந்து 40வரையிலான மைக்ரோன் விட்டங்களைக் கொண்ட காந்த துகள்களாகக் காணப்பட்டன. இந்த மண் வகைகள்அமெரிக்காவில் இருக்கும் மண்ணை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களிடம் அனுப்பப்பட்டது. அவர்களும் இதை ஆராய்ச்சியின் முடிவில் உறுதிப்படுத்தினர்.

 

 

அதுமட்டுமல்லபயிர்வட்டங்களின் மத்தியில் ஒருவிதமான கதிர்வீச்சுகளும் உணரப்பட்டன. இதைப் பல ஆராய்ச்சியாளர்கள் கருவிகள் மூலம் அளந்து பார்த்துகதிர்வீச்சு இருப்பதாக ஒத்துக் கொண்டனர்.'கதிர்கள் எங்கும் கதிர்வீச்சுகள் காணப்பட்டனஎன்று தமிழில் விளையாடும் அளவுக்குக் கதிர்வீச்சுகள் காணப்பட்டன. பலரின் காமெராக்கள்,கைக்கடிகாரங்கள்மின்னியல் சாதனங்கள் எல்லாம் பயிர்வட்டங்களின் நடுவே நிற்கும்போதுசெயல்படாமல் போனது ஆச்சரியத்தை அளித்தது. இதுவும் மனிதனால் பயிர்வட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக இருந்தது. இவற்றுடன்கண்களால் பார்த்த பலரின் சாட்சியங்களும்பயிர்வட்டங்களின் நேர்த்திகளும்அவற்றின் பாரிய அளவுகளும்அவை உருவாக்கப்பட்டு வந்த குறைந்த அளவு நேரங்களும்,பயிர்வட்டங்களில் சில மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று ஆணித்தரமாக முடிவெடுக்க உதவியது. பத்தாயிரம் பயிர்வட்டங்களில் சில நூறு பயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டது. மனிதனால் செய்யப்படவில்லை என்று அவர்களால் சொல்லப்படுவதன் காரணமேஅவை ஏலியன்களால்தான் செய்யப்படுகின்றன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதுதான். பயிர்வட்டங்களை உருவாக்குவது ஏலியன்கள்தான் என்பதற்கு அவர்களிடம் மாற்றுக் கருத்துகளே கிடையாது. ஆனால் அதை அவர்களால் நேரடியான வாக்குமூலங்களாகத் தரமுடிவதில்லை. 

ஏலியன்கள் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு நாம் வருவதென்றால்ஏலியன்கள் இருக்கிறது என்னும் முடிவுக்கு முதலில் வரவேண்டும். அதற்கு ஏலியன்கள் இருக்கின்றனவா என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஏலியன்கள் உண்மையில் இருக்கின்றனவாஅவை இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்,பயிர்வட்டங்கள் உருவாவது சம்பந்தமான அநேகமான மர்மங்கள் விலகிவிடும்.

அந்த மர்மங்கள் விலகுமாஅவற்றை அடுத்த வாரத்தில் பார்க்கலாமா...?

Ramesh Murugan

unread,
Aug 7, 2012, 5:01:10 PM8/7/12
to panb...@googlegroups.com
ஆக, அடுத்த வாரமே மர்மம் விலகுதா??

2012/8/6 VJagadeesh <vom...@gmail.com>




Ramesh Murugan

unread,
Aug 13, 2012, 4:36:58 PM8/13/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (14)
ராஜ்சிவா

'Crop Circles' என்று சொல்லப்படும் பயிர்வட்டங்களில், மனிதர்களால் செய்யப்பட்டவை போக மிகுதியாக எஞ்சி இருப்பவற்றை, மனிதனால் செய்யப்படாதவை என்று சொல்வதுதான் நிதர்சனமானது. இயற்கை தவிர்ந்து, உலகத்தில் உள்ள எதுவானாலும், மனிதனால் உருவாக்கப்படாமல், வேறு ஒரு மாற்று சக்தியினால் உருவாக்கப்பட்டன என்று சொன்னால், அது மிகச் சாதாரணமான ஒரு விசயமல்ல. அந்த மாற்றுச் சக்தி, அமானுஷ்யமானதாக இருப்பதால், நிச்சயம் அது வியப்பானதும், விந்தையானதும், நம்பவே முடியாததுமான ஒன்றாகத்தான் இருக்கும். பயிர்வட்டங்களிலும், நூற்றுக்கணக்கானவை அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக முடிவெடுத்துள்ளார்கள். அதிகம் ஏன், பத்தாயிரம் பயிர்வட்டங்களில் ஒரேயொரு பயிர்வட்டமாவது மனிதனால் செய்யப்படாமல், அமானுஷ்ய சக்தியால் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டாலே, அப்படியொரு சக்தி உலகத்தில் உண்டு என்பது உறுதியாகிவிடும். இதற்குக் காரணமாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியை வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுவே நமது நாடுகளில் நடந்திருந்தால், இவற்றிற்கெல்லாம் காரணமாக கடவுள் என்னும் விதையை ஊன்றி, அந்த இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டு, திருவிழா வரைக்கும் சென்றிருக்கும். அதன் பின்னர் ஆராய்ச்சியென்ற ஒன்றே நடக்க முடியாதபடியுமாகியிருக்கும். இதனால்தானோ என்னவோ, புராதன காலங்களில் ஏலியன்கள் வந்ததாக மிகவும் பலமாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் இந்தியாவுக்கு, அப்புறம் ஏலியன்கள் வராமல் போய்விட்டார்களோ தெரியவில்லை.

ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொன்னால், ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்வதை ஒப்புக் கொள்வதாகிவிடும். உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்னும் கேள்விக்கு ஆமாம் என்னும் பதிலைத் திடமாக யாராலும் சொல்லிவிட முடியாது. காரணம், அறிவியல் எப்போதும் கண்ணால் கண்டாலோ அல்லது இயற்பியல் விதிகளுக்குட்பட்டு அதை நிரூபிக்க முடிந்தாலோ மட்டும்தான், அப்படி ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளும். ஆனால் ஏலியன்கள் இருக்கின்றன என்பதை அறிவியல், நூறு வீதம் அல்ல ஆயிரம் வீதம் நம்புகிறது. என்ன குழப்புகிறேனா? நம்பிக்கை என்பது வேறு, இருக்கிறது என்னும் முடிவுக்கு வருவது வேறு. 'கடவுள் இருக்கிறார்' என்னும் கருத்தும் கூட, இந்த இரண்டு தளங்களில் இருந்துதான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நூறு வீதம் நம்புகிறார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார் என்று அவர்களால் இயற்பியல் விதிகளுக்குட்பட்டு நிரூபிக்க முடிவதில்லை. கடவுள் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியிலும் யாரும் ஈடுபடுவதில்லை. ஆனால், ஏலியன்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கென, உலக நாடுகள் அத்தனையும் கோடிக்கனக்கான பணத்தைக் கொட்டிச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், அதியுயர் நவீன தொலைநோக்கிக் கருவிகள், விண்வெளியை ஆராயும் சாட்டிலைட் டெலஸ்கோப்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என உலகம் பூராவும் பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், கோடிகளைக் கொட்டி, தங்கள் நேரங்களையும், படிப்புகளையும் அதற்கென்றே செலவழித்து ஏலியனைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். அதிகம் ஏன், கடந்த வாரம் செவ்வாயில் இறங்கிய 'க்யூரியாசிட்டி' (Curiosity) என்னும் ஆளில்லா விண்கலத்தின் மிக முக்கிய பணிகூட, செவ்வாயில் உயிரினம் இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான சாத்தியங்கள் உண்டா என ஆராய்வதுதான். இந்த இடத்தில் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். ஏலியன்கள் உண்டா? பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, மனிதனால் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டு ஒன்று பூமியின் அயல்கிரகத்தில் இறங்கியிருக்கிறது. இதற்கு நாஸாவைப் பாராட்டியே தீர வேண்டும்.

ஏலியன்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏன் இவ்வளவு திடமாக நம்புகிறார்கள் தெரியுமா? சொல்கிறேன்! நமது பூமியின் அபூர்வமான அமைவினால், அதில் உயிரினங்கள் உருவாகிப் பெருகி வாழ்கின்றன. அபூர்வமான அமைப்பென்றால், அப்படி ஒரு அபூர்வம். ஆச்சரியகரமான பல நிலைகள் பூமிக்கு அமைந்ததால், அந்த அபூர்வமான, உயிர்கள் தோன்றக்கூடிய தன்மை பூமிக்கு எற்பட்டது. சூரியனில் இருந்து தூரவும் இல்லாமல் கிட்டவும் இல்லாமல் மிகச் சரியான தூரத்தில் இருப்பது, 23½ பாகை கோணத்தில் சாய்ந்திருப்பது, சரியான தூரத்தில் சந்திரன் இருப்பது, 'அட்மாஸ்பியர்' எனப்படும் வளிமண்டலம் இருப்பது, நீர், ஆக்சிஜன், காபனீரொக்ஸைட், நைதரசன் போன்றவை சரியான விகிதத்தில் கலந்து இருப்பது, கடல் இருப்பது போன்ற பல காரணிகள் ஒன்றாகப் பூமிக்கு அமைந்ததால், பூமியில் உயிரினம் தோன்ற ஏதுவாக இருந்தது. இவற்றில் ஒன்று கூட இல்லாவிட்டாலும், பூமியில் உயிரினமோ, மனித இனமோ வாழ முடியாது என்னும் அளவுக்கு இவை முக்கியமானவை. இப்படிப் பூமிக்கு அனைத்து காரணிகளும் ஒன்றாகச் சரியான அளவில் அமைந்தது போல, பிரபஞ்சத்தில் வேறு எங்காவது ஒரு 'கோள்' (Planet) இருக்கும் பட்சத்தில், அங்கும் உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உண்டு. அப்படிப்பட்ட கோள்களைக் கடந்த ஐம்பது வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆச்சரியகரமாக சில கோள்கள் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை மனித சாத்தியங்களுக்கு எட்டாத அளவு மிகவும் தூரத்தில் இருப்பதால், அவைபற்றி மேலதிகமாக ஆராய முடியாமல், அங்கு உயிரினங்கள் உண்டா, இல்லையா என்ற முடிவுக்கு வரமுடியாமல் இருக்கின்றனர்.

கணிதத்தில் 'நிகழ்தகவு' (Probability) என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதாவது, ஒரு நிகழ்வு எந்த அளவுக்கு நடைபெறக்கூடும் என்னும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதை 'நிகழ்தகவு' என்பார்கள். உதாரணமாக, ஒன்றிலிருந்து ஆறு புள்ளிகள் உள்ள தாயக்கட்டையை உருட்டும் போது, எத்தனை தரம் உருட்டினால் '5' விழலாம் என்பதை நிகழ்தகவு மூலம் சொல்லலாம். அதாவது, நிகழ்தகவின்படி, ஆறில் ஒரு பங்கு (⅙) சாத்தியம் உண்டு என்று கணிதம் சொல்கிறது. அது போல, அதே '5' மீண்டும் இரண்டாம் தடவை விழுவதற்கு, 36 இல் ஒரு பங்கு சாத்தியம் உண்டு. இது போல இன்னுமொரு உதாரணத்தையும் சொல்கிறேன். ஜெர்மனியில் ஒரு லாட்டரிச் சீட்டு இருக்கின்றது. 1 இலிருந்து 49 வரையிலான இலக்கங்களில், நீங்கள் விரும்பிய ஏதாவது ஆறு இலக்கங்களைத் தெரிவு செய்து, அந்த லாட்டரிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், லாட்டரி சீட்டுக் குலுக்கும் தேதியில், ஆறு இலக்கங்களை, அவர்கள் தெரிவு செய்வார்கள். அந்த ஆறு இலக்கங்களும், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்களும் சரியாக இருந்தால், முதல் பரிசு உங்களுக்குத்தான். கோடிக்கணக்கான ரூபாயை அள்ளிக் கொண்டுவரலாம். ஆனால் இந்த லாட்டரிச் சீட்டில், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்கள் வருவதற்கு பதினான்கு மில்லியன்களில் ஒன்று என்னும் சாத்தியமே உண்டு. அப்படிப் பதினான்கு மில்லியனில் ஒருவராக நீங்கள் அமைந்துவிட்டால், பரிசு உங்களுக்கே! இது போல, பூமி போன்று, அதே அமைவுகளுடன் பிரபஞ்சத்தில் இன்னுமொரு கோள் இருப்பதற்கான நிகழ்தகவுச சாத்தியங்கள் நிச்சயம் இருக்கிறது. உதாரணத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம், பூமி போன்ற இன்னுமொரு கோள் பிரபஞ்சத்தில் இருப்பதற்கு, ஆயிரம் கோடியில் ஒரு கோளுக்குத்தான் சாத்தியம் உண்டு என நாம் வைத்துக் கொண்டால், பிரபஞ்சத்தில் அதைவிட அதிகமான கோள்கள் உள்ளன. சொல்லப் போனால், கோடான கோடி மடங்குகளுக்கு, ஆயிரம் கோடி கோள்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் அந்த அளவுக்கு நட்சத்திரங்களும், கோள்களும், உபகோள்களும் நிரம்பி வழிகின்றன. பூமியில் உள்ள கடற்கரைகளில் இருக்கும் மணல் துணிக்கைகள் எவ்வளவு உண்டோ, அதைவிட அதிகமான கோள்களும், உபகோள்களும், நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உண்டு. அதனால், நிகழ்தகவின்படி பார்த்தாலும், பூமி போன்ற கோள்களும், அதில் உயிரினங்களும் இருப்பதற்குக் கோடிக்கணக்கான மடங்குகள் சாத்தியங்கள் உண்டு.

நமது சூரியக் குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், கோள்கள், துணைக்கோள்கள் என நூற்றுக்கும் அதிகமானவை உண்டு. அவற்றில் சந்திரனைப் பற்றியும், தற்போது செவ்வாயைப் பற்றியும் மட்டுமே நமக்கு முழுமையாகத் தெரியும். மற்றவையெல்லாம் ஒரு மேலோட்டமான கணிப்புகள்தான். இந்தக் கோள்களிலும், துணைக்கோள்களிலும் கூட உயிரினங்கள் உண்டா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமது சூரியனைப் போல, 200 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது சூரியன் இருக்கும் காலக்ஸியான பால்வெளி மண்டலத்தில் (Milkyway) உண்டு. பால்வெளி மண்டலத்தைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறோம். 3க்கு அருகில் 23 பூச்சியங்களை இட்டால் என்ன இலக்கம் வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்கள் நமது பிரபஞ்சத்தில் உண்டு. சூரியனுக்கு எப்படி நூறுக்கும் அதிகமான கோள்களும், துணைக் கோள்களும் இருக்கிறதோ, அதுபோலப் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்துக்கும் இருக்கும் அல்லவா? அப்படியெனில், அவை எந்த அளவுக்கு இருக்கலாம் என்று நீங்களே கணித்துப் பாருங்கள். இந்த எண்ணிக்கைகள் கூட நாம் இதுவரை கண்டுபிடித்தவைகளை மட்டும் வைத்துத்தான் சொல்கிறோம். ஆனால், கண்டுபிடிக்காதவை இன்னும் எவ்வளவோ உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரபஞ்சம் போன்றே பல பிரபஞ்சங்கள் உண்டு எனவும், நமது பிரபஞ்சத்துக்குச் சமாந்தரமாக இன்னுமொரு பிரபஞ்சம் (Parallel universe) உண்டு என்றுகூடச் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொன்னவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. சும்மா பொழுதுபோக்கிற்காகவும் அவர்கள் சொல்லிவிட்டுப் போகவில்லை. ஐண்ஸ்டைன் போன்ற மாமேதைகள் பல ஆராய்ச்சிகளின் முடிவில் சொன்னது இது.

இவ்வளவு எண்ணிக்கையில் பிரபஞ்சத்தில் சாத்தியங்கள் இருக்கும்போது, உயிரினங்கள் அங்கே எங்காவது வாழாது என்று சொல்ல விஞ்ஞானிகளால் முடியவில்லை. அதை அவர்கள் மிகவும் திடமாக நம்புகின்றனர். ஆனால் நம்பிக்கை மட்டும் போதாது. அதை நிரூபித்தால் மட்டுமே அறிவியல் அடித்துச் சொல்லும். அதுவரை அடக்கியே வாசித்துக் கொண்டிருக்கும். சமீபத்தில் கூட, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட 'கடவுள் துகள்' என்று அழைக்கப்படும் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs boson) கூட இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்பினார்களே ஒழிய, இருக்கிறது என்று அடித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் இறுதியில் அதைக் கண்டுபிடித்தே விட்டார்கள். இந்த நிலை ஏலியன்களுக்கும் நிச்சயம் வரும். ஏலியன்கள் உண்டு என்று நம்பும் நம்பிக்கையை ஒருநாள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆனால் நம்முன்னே தற்போது இருக்கும் பிரச்சினை அதுவல்ல.

ஏலியன்கள் இருக்கின்றன என்பதல்ல இப்போது பிரச்சினை. பூமியில் ஏலியன்கள் உள்ளனவா? அல்லது பூமிக்கு ஏலியன்கள் வந்தனவா அல்லது இப்போதும் வந்துகொண்டிருக்கின்றனவா? அப்படி ஏலியன்கள் பூமிக்கு வந்தால், பலர் சொல்வது போல 'பறக்கும் தட்டு' (UFO) என்பதன் மூலமாகத்தான் வருகிறதா அல்லது வேறு வழிகளில் வருகிறதா? இவைதான் தற்போது நம்முன்னே இருக்கும் பிரச்சினை. இதற்கான பதில்தான், பயிர்வட்டங்களின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க முடியும். ஆகையால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிகச் சாதாரணமாக, 'ஆம்', 'இல்லை' என்பது போலப் பதில்களைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நாம் விபரமாகவே பார்க்க வேண்டும்.

எனவே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வரும் வாரத்தில் பார்ப்போமா...!



2012/8/8 Ramesh Murugan <rames...@gmail.com>
ஆக, அடுத்த வாரமே மர்மம் விலகுதா??
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்





--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Prakash Sugumaran

unread,
Aug 13, 2012, 5:56:17 PM8/13/12
to panb...@googlegroups.com
மக்களை முட்டாள்களாக்க மிகப் பெரிய திட்டமிடல் இருக்கும் போல. சாமி, பூதம், தேவதை, சாத்தான், தேவன், தூதன் போன்ற கட்டுக்கதைகளை கொண்டு இன்னும் ரொம்ப நாளைக்கு மக்களை ஏமாற்றித் திரிய முடியாது என்பது புரிந்துவிட்டதால்... அறிவியலின் பெயரில் இப்போதே புதுவித புனைவுகள் தொடங்கிவிட்டது. பாவம் எதிர்கால சந்ததி. 

2012/8/14 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 3:13:42 AM8/14/12
to panb...@googlegroups.com
பாஸ்,
கட்டுரையில் எந்த இடம் தப்பா இருக்குதுன்னு சுட்டிக் காட்டுங்க.
நாம நம்ம கிரகத்திலிருந்து வேறொரு கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்ப முடியும்னா, வேறொரு கிரகத்திலிருந்து நம்ம கிரகத்துக்கு வின்கலம் வர்றதும் சாத்தியமே. கிரகங்கள், சூரிய குடும்பங்கள், பால்வெளிகள், லெபுடலங்கள் என எதையுமே இன்றுவரை நம் விஞ்ஞானிகளால் தீர்க்கமாக வரையறுக்கப்படவில்லை.

2012/8/14 Prakash Sugumaran <praka...@gmail.com>

மக்களை முட்டாள்களாக்க மிகப் பெரிய திட்டமிடல் இருக்கும் போல. சாமி, பூதம், தேவதை, சாத்தான், தேவன், தூதன் போன்ற கட்டுக்கதைகளை கொண்டு இன்னும் ரொம்ப நாளைக்கு மக்களை ஏமாற்றித் திரிய முடியாது என்பது புரிந்துவிட்டதால்... அறிவியலின் பெயரில் இப்போதே புதுவித புனைவுகள் தொடங்கிவிட்டது. பாவம் எதிர்கால சந்ததி. 


Srimoorthy.S

unread,
Aug 14, 2012, 3:53:48 AM8/14/12
to panb...@googlegroups.com

எல்லாவற்றையும் நம்புவது மட்டும் மூட நம்பிக்கையல்ல. எதையுமே நம்பாமல் இருப்பதும் மூட நம்பிக்கையே. அப்படீன்னு ஒரு மகான் சொல்லி இருக்கார்.

நான்தான் இப்போ சொன்னேன். யாருன்னு மண்டைய பிச்சிக்கவே&#2979

துரை.ந.உ

unread,
Aug 14, 2012, 4:28:10 AM8/14/12
to panb...@googlegroups.com
Inline image 1 ஐ லவ் வி ஜே


2012/8/6 VJagadeesh <vom...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

alien4.gif

Prakash Sugumaran

unread,
Aug 28, 2012, 3:05:27 PM8/28/12
to panb...@googlegroups.com
//பாஸ், கட்டுரையில் எந்த இடம் தப்பா இருக்குதுன்னு சுட்டிக் காட்டுங்க. நாம நம்ம கிரகத்திலிருந்து வேறொரு கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்ப முடியும்னா, வேறொரு கிரகத்திலிருந்து நம்ம கிரகத்துக்கு வின்கலம் வர்றதும் சாத்தியமே. கிரகங்கள், சூரிய குடும்பங்கள், பால்வெளிகள், லெபுடலங்கள் என எதையுமே இன்றுவரை நம் விஞ்ஞானிகளால் தீர்க்கமாக வரையறுக்கப்படவில்லை//
 
பழங்கால தந்திர வகைன்னு ஒன்னு இருக்கே அதை கொஞ்சம் ஆழமா படிச்சு பாருங்க. இதவிட பெரிய பெரிய தில்லாலங்கடி வேலை எல்லாம் ஈசியா செய்யறது எப்படின்னு புரியும். பரிணாம வளர்ச்சியோட முழுமைய புரிஞ்சிகிட்டா இந்த செயற்கைக்கோள், வேற்று கிரகம், விண்வெளி, சூரிய குடும்பம், பால்வெளி இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இதை எல்லாம் ஏற்கனவே இந்து உள்ளிட்ட பல மத அமைப்புகள் முழுசா புரிஞ்சிக்கிடுச்சு. புரியாததை ப்ராக்டிகலா முயற்சி செய்து புரிஞ்சதா பந்தா காட்டும் அறிவியல் பிக்ஸன் முயற்சியே மேற்கத்தியர்கள் செய்வது.
 


 
2012/8/14 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
alien4.gif

Prakash Sugumaran

unread,
Aug 28, 2012, 3:16:29 PM8/28/12
to panb...@googlegroups.com
//எல்லாவற்றையும் நம்புவது மட்டும் மூட நம்பிக்கையல்ல. எதையுமே நம்பாமல் இருப்பதும் மூட நம்பிக்கையே. அப்படீன்னு ஒரு மகான் சொல்லி இருக்கார்//
எதுவா இருந்தாலும் சொந்த புத்திய இது சாத்தியமா, சாத்தியமில்லையா ? சாத்தியம்னா எப்படி சாத்தியம், சாத்தியமில்லைன்னா எப்படி சாத்தியமில்லைன்னு ஒருமுறைக்கு பலமுறை தனக்கு தானே கேட்டு தெளிவு பெறாதது மட்டுமே மூடர்களுக்கு உரித்தான மூட நம்பிக்கை எனப்படும். ஒரே ஒரு இரவுக்கு இந்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ள ஏதோ ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால் ( எந்த அமைப்பாவது முன்வந்து செலவை ஏற்றுக் கொண்டால் ) இதைப்போல மட்டுமல்ல நடராஜ தாண்டவத்தையும், மத அமைப்பு சின்னங்களின் அர்த்தங்களையும் கூட போட்டுக் காண்பிக்க முடியும். ( வயலில் பயிர் இருந்தால் நலம்.. இல்லாவிடில் கூடுதல் செலவாகும் ) இதே வெளி நாடு எனில் கூடுதல் விசேஷம்.. அந்த நாட்டின் மத அமைப்புகளுக்கு அனுமதி எளிதில் கிடைக்கும்.

2012/8/29 Prakash Sugumaran <praka...@gmail.com>
alien4.gif

காமேஷ்

unread,
Aug 28, 2012, 9:22:41 PM8/28/12
to panb...@googlegroups.com, முத்தமிழ், தமிழ் சிறகுகள்
Inline image 1

 


VJagadeesh

unread,
Sep 7, 2012, 1:47:35 AM9/7/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (15)
ராஜ்சிவா

பயிர்வட்டங்கள் உருவாவதன் மூலகாரணம் என்ன என்பதை அறியும் கட்டத்தில், ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்னும் பெரும் கேள்வி நம்மைப் பல இடங்களிலிருந்து தாக்குகின்றது. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில், 'நம்புவதா? நம்பாமலிருப்பதா?' என்று நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போலப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. 'வாயால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதோ இந்தக் காணொளிகளைப் பாருங்கள்' என்று கூறியபடி, ஆயிரக்கணக்கான காணொளிகள் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. ஆரம்பத்தில் இந்தக் காணொளிகள் எல்லாம் புகைப்படத் தொழில் நுட்பங்களினால், போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்லி வந்த அரசுகள், அவற்றின் வீரியம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி வாசிக்கத் தொடங்கின. காணொளிகள் போலியானவை என்று அரசுகள் சொல்லியதில் அர்த்தமும் இல்லாமலில்லை. புகைப்படத் தொழில்நுட்பத்தினாலும், கணினித் தொழில்நுட்பத்தினாலும் பலர் இப்படியான காணொளிகளையும், புகைப்படங்களையும் பெரும்படியாக உருவாக்கியது நடந்துதான் இருக்கின்றன. இவர்கள் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் இந்தச் செயல்கள், பல உண்மைகள் மறைக்கப்படவும், அலட்சியப்படுத்தப் படவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த விசயத்தில் பொதிந்திருக்கும் உண்மை எதுவெனப் புரிந்துகொள்ள முடியாமல், ஒரு குழப்ப நிலையிலேயே மக்களை வைத்திருக்க இவை ஏதுவாகின.

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா? என்பதை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, சில அறிஞர்கள் சொல்லும் இன்னுமொரு கோட்பாடு அதைவிட அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? "ஏலியன்கள் பூமிக்கு வந்து போனது மட்டுமல்ல, அவை பூமியில் தற்போது வாழ்ந்தும் கொண்டிருக்கின்றன" என்கிறார்கள். இதை வாசிக்கும்போது, உங்களையறியாமலே ஒரு புன்னகை உங்கள் மனதில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. 'ஏலியன்கள் பற்றி ஏதோ சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதற்காக, நம் காதில் பூவுக்குப் பதிலாகப் பூச்சாடியையே இவர் வைக்கப் பார்க்கிறாரே' என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், இதை யாருமே நம்ப முடியாதுதான். நானே நம்புகிறேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இதைச் சொல்பவர்கள் ஏதோ நகைச்சுவைக்காக நமக்கு இதைச் சொல்கிறார்கள் என்று நாம் நினைப்பதும் ரொம்பத் தப்பு. காரணம், அவர்கள் எடுத்து வைக்கும் ஆழமான, ஆணித்தரமான ஆதாரங்களும், அவற்றை ஒட்டிய விவாதங்களும்தான். அதிகம் ஏன், இந்தப் பயிர்வட்டம் சம்பந்தமாகவே அசைக்க முடியாத ஆணித்தரமான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. அதை மறுத்துப் பேச எந்த அரசும் முன்வரவில்லை. வரவும் முடியாது என்றுதான் சொல்கிறார்கள். காரணம், அந்த ஆதாரம் அவ்வளவு திடமான ஆதாரமாக இருந்தது. அது என்ன ஆதாரம் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.......! 

இதுவரை பயிர்வட்டங்கள் இங்கிலாந்தில்தான் அதிகளவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். அங்கு தோன்றுவதாலேயே சிலர் அதை நம்பவும் மறுக்க ஆரம்பித்தனர். காரணம், அங்கிருக்கும் யாரோதான் இவற்றுக்குக் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். என்னதான் மனிதன் செய்யமுடியாது என்று ஆதாரங்களை முன்வைத்தாலும், அவநம்பிக்கை நீடித்துக் கொண்டேதான் வந்தது. ஆனால், ஆச்சரியமாக, ஜேர்மனியில் ஒரு பயிர்வட்டம் உருவாகியது. இந்தப் பயிர்வட்டம் ஜெர்மனியில் தோன்றியது மட்டும் ஆச்சரியமில்லை. அதன் தாக்கம் தந்த ஆச்சரியம், பயிர்வட்ட மர்மங்களுக்கே உச்சமாக அமைந்தது. இது பற்றி விளக்கமாகவே நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.

ஜெர்மனியில் கிராஸ்டோர்ஃப் (Grasdorf) என்னுமிடத்தில், வேர்னர் ஹாரென்பேர்க் (Werner Harenberg) என்னும் விவசாயிக்குச் சொந்தமான விளைநிலத்தில் கோதுமைப் பயிர் விளைவிக்கப்பட்டிருந்தது. 23ம் திகதி ஜூன் மாதம் 1991இல் மிகப்பெரிய பயிர்வட்டமாக அது உருவாக்கப்பட்டிருந்தது. 6000 சதுரமீட்டர் பரப்பளவில் அந்தப் பயிர்வட்டம் உருவாகியிருந்தது. மனிதனால் செய்யப்படாமல் இருக்கும் பயிர்வட்டங்களின் அனைத்துத் தன்மைகளும் அந்தப் பயிர்வட்டத்துக்கும் இருந்தது. மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பயிர்வட்டத்தின் சித்திரம், சூரியக் குடும்பத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. 'வழமையான பயிர்வட்டங்கள் போலத்தானே இருக்கின்றன, இதில் எங்கே ஏலியன் வந்தது?' என்றுதானே நினைக்கிறீர்கள்.

இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் கதிர்வீச்சு போன்ற ஒன்று இருக்கலாம் என்ற உணர்வு தோன்றியதால், உலோகங்கள் கண்டுபிடிக்கும் கருவி கொண்டு (Metal detector) அதை ஆராய்ந்தார்கள். அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் மூன்று இடங்களில் கருவி அலறியது. குறிப்பாக அந்தப் பயிர்வட்டத்தில் எங்கே அரைவட்டங்கள் காணப்பட்டனவோ, அந்த மூன்று அரைவட்டங்களின் மத்தியில் உலோகம் இருப்பதாகக் காட்டியது கருவி. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அரை மீட்டர் நிலத்தின் கீழே மூன்று உலோகத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு அடிக்கும் அதிகமான விட்டமுடைய வட்டவடிவ உலோகத் தகடுகளாக அவை காணப்பட்டன. அதில் ஒன்று தங்கத்தினாலும், இன்னுமொன்று வெள்ளியினாலும், மூன்றாவது பித்தளை போன்ற ஒரு கலப்பு உலோகத்தினாலும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தகடுகளில் உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் அச்சுப் போல அமைக்கப்பட்டிருந்ததுதான். 

பித்தளை போன்ற கலப்புலோகத்தால் செய்யப்பட்டிருந்த தகடு மூன்று கிலோக்கள் எடையும், வெள்ளியால் செய்யப்பட்டிருந்த தகடு ஐந்து கிலோக்களும், தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த தகடு ஏழரைக் கிலோக்களும் இருந்தன. ஜெர்மனியில் உள்ள உலோக ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பினால் ஆராய்ந்தபோது, தங்கமும், வெள்ளியும் தரத்தில் மிகவும் கூடியதாகவும், தூய்மையானதாகவும் காணப்பட்டன. அவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ பூமியில் இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை. பலர் இவற்றை அந்த விவசாயிடமிருந்து வாங்குவதற்கு முயன்றதனால், அதிக விலைக்கு அவற்றை அவர் விற்கக் கூடியதாக அமைந்தது. இந்த உலோகத் தகடுகளை ஆராய்ந்தவர்கள் குறைந்தபட்சம் இவை 300 ஆண்டுகளிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இங்கு இருக்கும் முக்கிய செய்தி என்ன தெரியுமா? மனிதன் இந்தப் பயிர்வட்டத்தை உருவாக்கியிருந்தால், தனது லட்சக்கணக்கான பணத்தை வீணாக்கி இப்படி ஒன்றை உருவாக்குவானா? ஏழரைக் கிலோ தங்கத்தை யாருக்காகவும் தாரைவார்த்துக் கொடுப்பானா? இவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதே பெரும் கேள்வியாக அமைந்துவிடும் அல்லவா? அல்லது ஆராய்ச்சியாளர்கள் சொன்னது போல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இவை புதைக்கப்பட்டிருந்தால், அந்த உலோகங்களில் இந்தப் பயிர்வட்டச் சித்திரம் எப்படி வந்தது? இப்படிப் பதில் தெரியாக் கேள்விகளையே, மிகவும் அசைக்க முடியாத ஆதாரங்களாக, ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொல்வதற்குச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் நமது பிரச்சினை தற்போது பயிர்வட்டங்கள் அல்ல. ஏலியன்கள் பூமியில் இருக்கின்றனவா என்பதுதான்.

இந்தப் பயிர்வட்டங்களைத் தாண்டி, விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில், ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றன என்பதற்குச் சான்றாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அது ஒரு மிகச் சிறிய உயிரினம். 'நீர்க்கரடி' (Water Bear) என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படும் அந்த உயிரினத்தின் உயிரியல் பெயர் Tardigrade. பெயர்தான் கரடியேயொழிய, 1.5 மி.மீ. நீளம்தான் இருக்கும். உப்புநீர், நன்னீர், சேற்றுநிலம், பனி என அனைத்து இடங்களிலும் வாழக் கூடியது. உலகின் எல்லாக் கண்டங்களிலும், துருவம் உட்பட இவை காணப்படுகின்றன. எட்டுக் கால்களும், அந்தக் கால்களில் 4 லிருந்து 8 விரல்களையும் கொண்டவை இவை. இமயமலையில் 6000 மீட்டரில் கூட வாழும் இந்த உயிரினம், விஞ்ஞானிகளைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து ஆராய்ந்ததில் வியப்பான முடிவுகள் பல வெளிவந்தன. அதாவது, -272 சதமபாகைக் குளிரிலும் இவை உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஆறு மாதங்கள் தொடர்ந்து எதையும் உள்ளெடுக்காமல் உயிர்வாழ்ந்தன. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் கூர்ப்பின் (Evolution) கொள்கைப்படி பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப வாழும்படியே தம்மை அமைத்துக் கொள்கின்றன. பூமியில் எந்த எந்த இடங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ, வாழ்ந்தனவோ அதையொட்டி தம்மை அவை வடிவமைத்துக் கொள்கின்றன. இதுவரை எந்த உயிரினமும் இதுதாண்டி உயிர்வாழ்வதாக விஞ்ஞானிகள் அறியவில்லை. ஆனால் ஒரு உயிரினம் பூச்சியத்துக்குக் கீழே -272 பாகைகள் குளிரில் பூமியில் வாழவேண்டிய  அவசியம் ஏன் வந்தது? அதற்கு அவசியமே இல்லை. அப்படி ஒரு இடமும் பூமியில் இல்லவேயில்லை. பூமியில் அப்படி ஒரு இடம் இல்லாத பட்சத்தில், இந்த நீர்க்கரடி மட்டும் தன்னை அந்த அளவுக்குக் குளிரில் வாழும்படி ஏன் வடிவமைத்துக் கொண்டது? இந்தக் கேள்வி இதை வாசிக்கும் சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு மாபெரும் அதிசயம். இந்த அதிசயம் மேலும் அவர்களின் சிந்தனையைத் தூண்ட, ஜெர்மனியின் விஞ்ஞானிகள், ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பரிசோதனையைச் செய்து பார்க்க முயன்றனர் 

'ESA' (European Space Agency) என்னும் விண்வெளி அமைப்பில் ரஷ்யாவின் உதவியுடன், ஸ்வீடன் நாட்டுடன் இணைந்த ஜெர்மன் நாடு, இந்த நீர்க்கரடிகளை, 'Tardis' (Tardigrades in Space) என்னும் திட்டத்தின் கீழ், ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த நீர்க்கரடிகள், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் அப்படியே திறந்த நிலையில் விண்வெளியில் வெளியே வைக்கப்பட்டன. அதாவது காற்றின்மை, அதிகக் குளிர் என்பன மட்டுமில்லாமல், எந்த உயிரினமுமே உயிருடன் தப்பிவிடமுடியாத நேரடிக் கதிர்வீச்சுகள் படும்படியாகப் பதினொரு நாட்கள் விடப்பட்டன. இந்த நீர்க்கரடிகளைச் சுமந்த வண்ணம் சென்ற விண்வெளிக்கப்பல், பூமியை 189 தடவை சுற்றியபடி, 11.8 நாட்கள் பிரயாணம் செய்தபின்னர் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது. 

பூமிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட நீர்க்கரடிகளைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் துள்ளிக் குதித்தனர். 'கிரிப்டோபையோசிஸ்' (Cryptobiosys) என்னும் ஒருவித, 'இறந்தது போல தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளும்' முறையால் உறைந்திருந்த நீர்க்கரடிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து நடக்கத் தொடங்கின. தங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் அவை நடமாடின. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுக்கு பூமியில் வாழும் எந்த உயிரினமும் தப்பவே முடியாது. கதிர்வீச்சு என்பது அவ்வளவு மோசமான விளைவுகளை உயிரினங்களுக்கு ஏற்படுத்தவல்லது. அத்துடன் காற்றில்லா வெளியில் வாழ்வதும் எந்த உயிரினத்துக்கும் சாத்தியமில்லாதது. சரி, அப்படிக் கதிர்வீச்சில் தப்பினாலும், நீர்க்கரடிகள் அடுத்ததாகச் செய்த காரியம்தான் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதாவது, உறக்கத்திலிருந்து எழுந்த நீர்க்கரடிகள், தங்களை இனப்பெருக்கத்துக்குத் தயார்ப்படுத்த ஆரம்பித்தன. விண்வெளிக்குச் சென்ற ஆண், பெண் நீர்க்கரடிகள் இரண்டும் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லாமல், குட்டிகளையும் பெற்றுக் கொண்டன. இது சாத்தியமே இல்லாத ஒன்று. பூமியில் வாழும், வாழ்ந்த எந்த உயிரினத்துக்கும் இந்தச் சாத்தியம் இல்லவே இல்லை. இந்தக் காரணத்தினால்தான் அந்தச் சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது. 'அட! இவை வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமோ?' என்னும் சந்தேகம் வலுவாக அவர்களுக்கு முளைத்தது.

நீர்க்கரடிகள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கு வேறு காரணமும் இருக்கலாமா? இவை போல, வேறு பல உயிரினங்களும் வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமா? என்னும் கேள்விகள் இப்போது தலையைக் குடைய ஆரம்பிக்கின்றன. அப்படி வேற்றுக் கிரகங்களிலிருந்து உயிரினங்கள் வந்திருந்தாலும் அவை எங்கே வாழலாம் என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.....! 

VJagadeesh

unread,
Sep 7, 2012, 1:48:53 AM9/7/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (16)
ராஜ்சிவா

'பூமியில் வேற்றுக்கிரக உயிரினங்கள் இருக்கின்றனவா?' என்னும் கேள்விக்குப் பதிலளிக்கும் வண்ணமாக, நீர்க்கரடி (Tardigrade) பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த நீர்க்கரடி பற்றி மேலும் சில விசயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த வாரம் மிக முக்கியமான வேறு ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதைச் சூழ்நிலை என்று சொல்வதைவிட, உலகையே உலுக்கிவிடப் போகும் நிகழ்வு என்றே சொல்லலாம். இந்தச் செய்தி மட்டும் உண்மையாக இருந்தால், அவிழ்க்க முடியாமல் இருக்கும் பல மர்மங்கள் சுலபமாக அவிழ்ந்து போகக் கூடியவாறு அமைந்துவிடும். அல்லது வழமை போல இதுவும் எதுவுமே இல்லாமல் அமிழ்ந்து போகும் ஒன்றாகலாம். தொடர்ந்து இதுபற்றி மேலே எழுதுவதற்கு முன்னர், மீண்டும் ஒருமுறை நான் ஒரு தன்னிலை விளக்கத்தை உங்களுக்குத் தரவிரும்புகிறேன். என்னிடம் பலர் கேட்கும் கேள்விகள், "ஏலியன்கள் பூமிக்கு வந்து போயிருக்கின்றனவா? நீங்கள் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறீர்களா?" என்பவைதான். இதற்கான எனது பதிலை, நான் இப்பொழுதே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

பிரபஞ்சத்தில் உள்ள வேற்றுக் கிரகங்களில் நம்மை விட அறிவுள்ள ஜீவராசிகள் வாழ்வதற்கான சாத்தியம் உண்டு என்பதை நான் சந்தேகமின்றி நம்புகின்றேன். ஆனால், அவை பூமிக்கு வந்தனவா என்பதை நான் இன்னும் நம்பவில்லை. ஆனாலும் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. ஏலியன் விசயத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், 'ஏலியன்கள் பூமிக்கு வந்தார்கள்' என்று சொல்பவர்கள், 'இல்லை அப்படி யாரும் வரவில்லை' என்று சொல்பவர்கள் இருவருமே அறிவியல் அறிஞர்கள்தான். இதற்குள் மதங்களோ அல்லது மாற்று சக்திகளோ வந்து கலக்கவில்லை. இரண்டு விதமான கருத்துகளையும் இவர்கள்தான் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும் அறிஞர்கள், உலகில் நடந்த மர்மங்களையும், அதிசயச் சம்பவங்களையும் தமக்குச் சாட்சியங்களாக முன் வைக்கிறார்கள். ஆனால் இல்லை என்று சொல்பவர்கள் எப்போதும், இருக்கிறது என்று சொல்பவர்களின் சாத்தியங்களை முறியடிக்கும் வாதங்களை மட்டுமே முன்வைக்கிறார்கள். நடந்த சம்பவங்களுக்குரிய வலிமையான காரணங்களைச் சொல்வதுமில்லை. அவை பற்றி மேலும் ஆராய்வதுமில்லை. ஏலியன்கள் இல்லை என்று எதிர்ப்பவர்கள் எப்போதும் அரசுகள் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு உதாரணமாக நாஸாவைச் சொல்லலாம். ஆனால் இதே நாஸாதான் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி ஏலியன்களைத் தேடவும் செய்கிறது. ஏலியன்கள் இருக்கின்றன என்று மக்களுக்குத் தெரிந்தால், அது மிகப்பெரிய குழப்பத்தை விளைவிக்கும் என்பதாலும், அமெரிக்கா போன்ற அதியுயர் சக்திவாய்ந்த அரசுகளை விடவும் சக்தியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் அறிந்தால், அரசுகளின் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதாலுமே, இவர்கள் இந்த ஏலியன் சமாச்சாரத்தை வன்மையாக எதிர்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அறிவியல் அறிஞர்களான இவர்கள் இருவருமே இரண்டாகப் பிரிந்து, நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இரண்டு வகையான செய்திகளைச் சொல்லும்போது, நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல், அவற்றை மிஸ்டரிகளாகவும், அதிசயங்களாகவும் பார்க்கிறோம். இதனாலேயே நாம் எப்போதும் குழப்பத்தில் இவர்கள் இருவரினாலும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இருவரது நோக்கமும் கூட அதுவாகத்தான் இருக்குமோ தெரியவில்லை. அதனால்தான் பல உண்மைகள் நமக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் இருக்கலாம். சொல்லப் போனால் இந்தத் தொடரின் கேள்வியே, "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்பதுதானே! அதனால், நான் ஏலியன்கள் பற்றித் தெரிந்துகொண்ட அனைத்து சம்பவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். நானும், நீங்களும் சேர்ந்து இது பற்றிய உண்மைக்கு அருகில் சென்று பார்த்து வரலாம். நிச்சயம் உண்மையென்பது இந்த இரண்டில் ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே இரண்டுவிதமான சாத்தியங்களையும் நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த அளவுக்கு விளக்கத்தை இப்போது நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கும் காரணம் ஒன்று உண்டு. இனி நான் சொல்லப் போகும் பல சம்பவங்கள் அமெரிக்க 'ஹாலிவுட்' திரைப்படங்களின் கதைகள் போல இருக்கும். நம்பவே முடியாததாக இருக்கும். படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவும் உங்களுக்கு இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஆதாரங்களுடன் இருந்தாலும், அவற்றில் ஒரு நம்பகத்தண்மை இருந்தாலும் மட்டுமே, அவற்றை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன். நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்தையும் நீங்கள் இணையத்தளங்களிலோ, நூல்களிலோ தேடும்போது, அவற்றின் பதிவுகள் உங்களுக்குக் கிடைக்கும் வகையிலேயே இருக்கும். சரி, இனி விசயத்துக்கு வரலாம்.

2012 ஆகஸ்ட் 6ம் திகதி, செவ்வாயில் நாஸா அனுப்பிய விண்கலமான 'க்யூரியாசிட்டி' (Curiosity) தரையிறங்கியது. மனித வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு சம்பவமாக அது தன்னை அமைத்துக் கொண்டது. அந்தக் க்யூரியாசிட்டி தற்போது செவ்வாய்க் கிரகத்தின் படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அது அனுப்பிய படம் ஒன்றுதான் இப்போது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. நான் மேலே கொடுத்திருக்கும் இரண்டு படங்களையும் உற்றுப் பாருங்கள். செவ்வாயின் நிலப்பகுதியும், செவ்வாயின் வான்வெளியும் அந்தப் படத்தில் தெரிகிறது. முதலில் உள்ள படத்தை க்யூரியாசிட்டி அனுப்பியபோது, நாஸா அதில் பெரிதாக ஒன்றையும் கவனிக்கவில்லை. ஆனால் அதைப் பார்த்த வேறு சிலர், அதில் ஏதோ வித்தியாசமாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டனர். கணனி மூலம், அந்தப் படத்தை ஒளி, வர்ண மாற்றங்கள் செய்து பார்த்தபோது, சில புள்ளிகள் போன்ற வடிவங்கள் செவ்வாயின் வானில் காணப்பட்டதை அவதானித்தனர். அவற்றைப் பெரிதாக்கிப் பார்த்தபோது, ஒளியுடன் அவை மின்னிக் கொண்டிருந்தன. மனிதன் அனுப்பிய க்யூரியாசிட்டியை வானில் இருந்து யாரோ அவதானித்துக் கொண்டிருப்பது போல அவை காணப்பட்டன. அந்தப் புள்ளிகள் அயல் கிரகவாசிகளின் பறக்கும்தட்டு என்று அவர்கள் நிச்சயமாகச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதில் ஒருவித நியாயம் இருப்பதை நாமும் மறுக்க முடியாததாகவே இருக்கிறது.

"இவர்களுக்கு வேற வேலையே இல்லையா? எதையெடுத்தாலும் அதில் ஒரு மிஸ்டரியைப் புகுத்துவதே இவர்கள் வேலையாகப் போய்விட்டது" என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் சந்தேகப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் காரணங்கள் எவையென்று நாம் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் படத்திலிருப்பவை பறக்கும் தட்டுகள்தானா என்று கேட்பதற்கு, இவற்றை மறுப்பவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், வழமை போல 'க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பிய படங்களில் பிக்ஸல் (Pixel) தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன' என்று சொல்லிச் சமாளிக்கிறார்கள். அந்தப் படத்தில் தெரியும் புள்ளிகள் ஒன்று போல மற்ற ஒன்று காணப்படவில்லை. வடிவத்திலேயோ, பருமனிலேயோ அவை வேறாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல், க்யூரியாசிட்டியில் அமைக்கப்பட்ட காமெரா மிகவும் துல்லியம் வாய்ந்த உயர் தொழில்நுட்பம் கொண்டது. 'MARDI' (Mars Descent Imager) என்று சொல்லப்படும், இதற்கென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட காமெரா அது. அதில் பிக்ஸல் தப்புகள் நடந்தன என்று சொல்வதுதான் பலரால் நம்ப முடியாமல் இருக்கின்றது. இப்படியான தவறுகள் காமெராக்களில் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், எப்போதும் இது போன்ற சம்பவங்களில் இதையே காரணம் காட்டி நழுவியும் விடுகிறார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நாஸா இதுபற்றி இதுவரை வாயே திறக்கவில்லை.

செவ்வாயில் பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்று சந்தேகப்படுவதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அவை கொஞ்சம் சுவாரஸ்யமானவைதான். 1996ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆராய்ச்சியாளர்களால் ஒரு எரிகல் (Meteor) கண்டெடுக்கப்பட்டது. விண்வெளியில் சுற்றிவரும் சிறிய விண்கல் (Meteoroid) பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால் அது எரிந்து மிஞ்சும் பகுதிகள், எரிகற்களாக பூமியில் சிதறி விழும். 'Meteoroid' என்று அழைக்கப்படும் பெரிய கல்லொன்று, பூமியில் நுழைந்து எரிந்து, சிதறி விழுந்த பின் அது 'Meteor' என்று அழைக்கப்படும். 1996ம் ஆண்டு அண்டார்ட்டிகாவில் கண்டெடுக்கப்பட்ட எரிகல்லை ஆராய்ந்தபோது, அதில் ஒரு ஆச்சரியமான செய்தி ஒன்று காத்திருந்தது. 13,000 வருசங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வெடித்து வந்த அந்தக் கல்லில் பாக்டீரியா போன்ற ஒரு உயிரினம், படிமமாகப் (Fossil) பதிந்திருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லுடன் கல்லாக, படிமமாக மாறிவிட்ட அந்த பாக்டீரியா போன்ற உயிரினம், சிக்கலான சேதனத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ALH84001 என்று பெயரிட்டிருக்கிறார்கள். அந்த உயிரினத்துக்கு கலம் (Cell) இருந்ததோடு, அது இரண்டு கலங்களாகப் பிரிந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் பூமியின் உயிரினங்களுக்கு மிகவும் அண்மையில் உள்ளவாறு இருந்தன. இந்த ALH84001 என்ற ஒன்றே, உயிரினம் பூமி தாண்டி, அயல் கிரகங்களிலும் இருக்கின்றன என்பதற்கு சான்றாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக செவ்வாயில் உயிரினம் இருக்கின்றது என்பதை இந்தச் சம்பவம் நம்பவும் வைக்கிறது.

"இது பாக்டீரியா போன்ற சிறிய நுண்ணுயிர். இதை வைத்துக் கொண்டு எப்படிச் செவ்வாயில் பறக்கும் தட்டும், புத்திசாலியான ஏலியன்களும் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்?" என்னும் கேள்வி இப்போது உங்களுக்கு நிச்சயம் தோன்றியிருக்கும். அதற்கும் கைவசம் பதில்கள் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது 25.08.2012 சனிக்கிழமை இரவு, உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை மனிதர் மரணமடைந்தார். அவரை அறியாதவர்கள் எவருமில்லை என்னும் அளவுக்குப் பிரசித்தி பெற்றவர். அவர் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong). நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்று பெயர் பெற்றவர். மொத்தமாக பன்னிரண்டு பேர் நிலவில் கால் பதித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இல்லாத பெயர் இவருக்கு உண்டு. 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி, 'அப்போலோ 11' (Apollo 11) என்னும் விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), எட்வின் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய மூவரும் நிலவுக்கு முதல் மனிதர்களாகப் பயணம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். சந்திரனில் மனிதன் கால் பதித்தது என்று சொல்வது, ஒரு மாபெரும் ஏமாற்று வேலை என்ற பலமான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தாலும், கால் பதித்ததை அனைவரும் நம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் நான் இப்போது சொல்ல வந்தது, ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதலில் கால் பதித்தது பற்றியோ, அப்போலோ 11 பற்றியோ, நிலாவில் மனிதன் கால் வைக்கவில்லை என்பது பற்றியோ இல்லை. நான் சொல்ல வந்த விசயமே வேறு.

ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் நடந்தபோது, தங்களுக்கு மேலே சில ஒளி வட்டங்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமமல்லாமல் அவற்றைப் படங்களும் எடுத்திருக்கிறார்கள். நிலவில் இருந்துகொண்டு பூமியுடன் அவர்கள் பேசியபோது, தங்களை யாரோ அவதானிக்கிறார்கள் என்று சொல்லியும் இருக்கிறார்கள். ஏலியன்களின் விண்கலங்களையும், அவர்கள் நிலவில் அமைத்திருந்த அமைப்புகளையும் கூட, ஆம்ஸ்ட்ராங் படங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் ஒரு வதந்தி என்னும் நிலையில் உலகம் நம்பாமல் இருந்தபோது, துணிச்சலாக ஆல்ட்ரின் இதைத் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிககைகளுக்கும் வெளிப்படையாகச் சொன்னார். ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் பலரை அதிர வைத்தது. இது பற்றிய விபரங்கள் காணொளிகளாகவும், செய்திகளாகவும் இணையம் எங்கும் பரவியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். உலகின் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் நாஸாவில் அதற்கு அப்புறம் ஒரு சம்பவம் நடந்தது. அப்போலோ 11 இல் சென்றவர்கள், நாஸாவுடன் உரையாடிய ஒலி, ஒளிநாடா திடீரெனக காணாமல் போனது. குறிப்பிட்ட நிமிடங்கள் உள்ள அனைத்துப் பதிவுகளும் அவற்றிலிருந்து அழிக்கப்பட்டன. இவை ஏன் நடந்தது என்பது இதுவரை தெரியாத மர்மமாகவே இருக்கிறது. ஆல்ட்ரின், ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவுக்குச் சென்ற சாதாரண மனிதர்களல்ல. இருவருமே அறிவியலில் மிகையறிவு படைத்தவர்கள். ஆஸ்ட்ராநாட்ஸ் என்னும் பதவி யாருக்கும் சுலபமாகக் கிடைத்துவிடும் பதவியல்ல. கல்வியிலும், தகுதியிலும் சிறந்தவர்கள் மட்டும்தான் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட இருவருமே ஏலியன்கள் உண்டு என்று சொல்லும் போது, மற்றவர்கள் எம்மாத்திரம்?

ஆச்சரியம் இத்துடன் முடிந்து போய்விடவில்லை. நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும், அப்போலோ 14 விண்கலத்தின் மூலம் சந்திரனுக்குச் சென்றவருமான 'எட்கார் மிட்ஜெல்' (Dr.Edgar Mitchell) என்பவர் ஏலியன் இருப்பதாகச் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறார். தங்களுக்கு நடந்த சம்பவங்களையும், நாஸாவில் தான் பணிபுரிந்தபோது அறிந்து கொண்டவைகளையும் வைத்து, பூமிக்கு ஏலியன்கள் பல தடவை வந்து போனது நாஸாவுக்குத் தெரியும் என்றும், அதை 60 வருட காலங்களாக நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றும் பேட்டியில் அவர் சொல்லியுள்ளார். இவர் கூறியுள்ள தகவல்கள் ஏலியன் விசயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஏலியன்கள் மனிதர்களின் உருவத்தைப் போலவே இருந்தாலும், சிறிய உருவமாக இருந்ததாகவும், அவற்றின் கண்கள் பெரிதாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

இப்படிப் பல நிகழ்வுகள் நடந்த நிலையில்தான், செவ்வாய்க் கிரகத்தின் வான்வெளியில் ஒளிப்பந்துகள் காணப்படுகின்றன. அவற்றைப் பறக்கும் தட்டு என்றும், மனிதர்களின் செயல்பாட்டை ஏலியன்கள் கண்காணிக்கின்றன என்றும் சொல்கின்றனர். எது உண்மை, எது பொய் என்று தெரியாத நிலையில் நாம் தவிக்க விடப்படுகிறோம். நாஸாவில் பணிபுரிந்தவர்களில் பலர், நாஸா உண்மைகளை மறைக்கின்றது என்று அடிக்கடி சொல்வதை வதந்திகள் என்று நம்மால் ஒதுக்கிவிடவும் முடியவில்லை. அதனால் ஏலியன்கள் பூமியில் இருப்பதற்கான சாத்தியங்களைத் தொடர்ந்து நாம் பார்த்தால்தான் நமக்கென ஒரு விளக்கம் கிடைக்கும். எனவே அந்த விளக்கங்களை அடுத்த வாரத்தில் பார்ப்போமா?

VJagadeesh

unread,
Sep 7, 2012, 1:49:39 AM9/7/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (17)
ராஜ்சிவா

கடந்தவாரம் விடுபட்டுப் போன நீர்க்கரடி (Tardigrade) பற்றி மீண்டும் சில வார்த்தைகளுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம். நீர்க்கரடி, வேற்றுக்கிரக உயிரினமா, இல்லையா என்று கேட்டால், அதற்குப் பதில் தெரியவில்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால், அந்த உயிரினத்தின் வாழ்வாதார நிலைமைகளில் சில, பூமியில் உள்ள ஒரு உயிரினங்களின் வாழும் முறைக்கு ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது. பூமியில் பலவிதமான சூழல்களில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல்நீர், நன்னீர், நிலம், சேற்றுப்பகுதி, காடு, மலை, பனிப்பிரதேசம், பாலைவனம், வெப்பவலயம் எனப் பலவிதமான சூழல்கள் பூமியில் உண்டு. பூமியில் உயிரினம் தோன்றியதிலிருந்து, பூமியில் உள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப படிப்படியாக அவை பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதன் என்னும் அறிவியல் உயிரினம் வரை வந்திருக்கின்றன. பரிணாம வளர்ச்சி (இலங்கையில் பரிணாம வளர்ச்சியைக் கூர்ப்பு என்று சொல்வார்கள் அதாவது ஆங்கிலத்தில் Evolution) என்பது பற்றி ஒரு தெளிவான கோட்பாடு அறிவியலில் உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் தந்தையாக சார்லஸ் டார்வின் (Charles Darwin) என்பவர் வர்ணிக்கப்படுகிறார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர், 20 வருட ஆராய்ச்சியின் மூலம் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Evolution Theory) வெளியிட்டார். டார்வின் பல கோட்பாடுகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றைத் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பரிணாம வளர்ச்சிக் கொள்கை முழுமையாக அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைதான் மத நம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கும் நேரடியான ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். கி.பி.1600 களில் வாழ்ந்த இத்தாலிய அறிஞரான கலிலியோ கலிலி (Galileo Galilei) என்பவரால், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற அறிவியல் உண்மை சொல்லப்பட்டபோது, மத பீடங்களால் வன்மையாக அவர் கண்டிக்கப்பட்டார். அதுவரை பூமியை மையமாக வைத்துத்தான் சூரியனும், சந்திரனும், பிறகோள்களும் சுற்றிவருகின்றன என்று மதநூல்களில் சொல்லப்பட்டதாக உயர்மட்ட மத அமைப்புகள் எடுத்துக் கொண்டு, கலிலியோ சொன்னதை மறுத்தது. அவர் சொன்னது தவறென்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவேண்டும் என அவரை வற்புறுத்தியது. அதன்படியே அவரும் ஒத்துக்கொள்ள வேண்டியும் வந்தது. அதன்பின், நாகரீகம் வளர்ந்த பிற்காலமான 1800 களில் மீண்டும் டார்வினால் மத நம்பிக்கைகளுக்கு எதிரான பரிணாம வளர்ச்சிக் கொள்கை வெளியிடப்பட்டது. மனிதனைக் கடவுள் ஆணாகவும், பெண்ணாகவும் நேரடியாகப் படைத்தார் என்று மத நூல்கள் சொல்லியபோது, "இல்லை, ஒவ்வொரு உயிரினமும் இன்னுமொரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியினால் உருவாகியது. அதுமட்டுமில்லாமல், இந்த வரிசையில் குரங்கிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான்" என்று டார்வின் கூறினார். இந்தக் கோட்பாடு அந்த நேரத்து மநநம்பிக்கையை அப்படியே புரட்டிப் போடும்படி இருந்தது. பல ஆண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையை வைத்து அவர் சமர்ப்பித்த கோட்பாடு அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன்றுவரை இந்தக் கொள்கையை ஏற்க முடியாது என்று பல மத நம்பிக்கையாளர்கள் சொல்லியபடியேதான் இருக்கிறார்கள். இதற்கு மத நம்பிக்கையாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் ஒன்றும் உள்ளது. 'குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருந்தால், இப்பொழுது குரங்குகள் எப்படி இருக்க முடியும்? அவைதான் மனிதனாக மாறிவிட்டனவே!' என்பதுதான் அந்த வாதம். கேட்கும்போது சரியானதாகத் தோன்றினாலும், இதற்கும் டார்வின் தனது கோட்பாட்டின் மூலம் பதில் சொல்லியே இருந்தார்.

டார்வின் சொன்ன அந்தப் பதில் நீர்க்கரடியின் தன்மைக்கும் பொருந்தும் என்பதால்தான், டார்வின் பற்றிக்கூட நான் இங்கு இவ்வளவு விவரமாகக் கூறவேண்டியிருந்தது. அதாவது, குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால், குரங்கு எப்படி இருக்க முடியும் என்பதற்கு டார்வின் சொன்ன விளக்கம் இதுதான். 'ஒரு காட்டில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை அனைத்தும் வாழ்வதற்கும், உண்பதற்கும் தேவையான அளவு பழங்கள் அந்தக் காட்டில் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அந்தக் குரங்குகள் நன்றாக இனத்தைப் பெருக்குகின்றன. இப்போது காட்டில் உள்ள பழங்கள் அனைத்துக் குரங்குகளுக்கும் போதாத அளவுக்கு குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நேரத்தில் பலசாலியான குரங்குகள், பலமில்லாத குரங்குகளை உணவைப் பெற முடியாமல் அடித்துத் துரத்துகின்றன. இதனால் பலமில்லாத குரங்குகளுக்கு உணவு கிடைப்பது சிரமமாகின்றது. எனவே அந்தக் குரங்குகள் அந்தக் காட்டை விட்டு வெளியேறி வேறு இடத்துக்குச் செல்கின்றன. வேறு இடங்களுக்குச் சென்ற குரங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கு பழங்கள் மரத்தில் ஏறிப் பறிக்கவே தேவையில்லாமல், நிலத்திலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி இருக்கின்றன. அதனால் அந்தக் குரங்குகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறத் தொடங்குகின்றன. நிலத்தில் நின்றபடியே பழத்தைப் பறித்து உண்டதால், அவற்றுக்கு வால் என்பது பாவனைக்குத் தேவையில்லாமல் போகத் தொடங்கியது. இதனால் வால் படிப்படியாகச் சுருங்கத் தொடங்குகிறது. வாலில்லாத புது இனக் குரங்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் பழைய காட்டில் பழைய குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பிரச்சினை மீண்டும் இந்தப் புதுக் காட்டிலும் தோன்றுகிறது. அங்கும் முன்னர் நடந்தது போல பலமில்லாத குரங்குகள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தோன்றுகிறது. இப்படிப் படிப்படியாகக் குரங்குகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றடைந்ததால் இறுதியாக மனித இனம் தோன்றுகிறது. அதேநேரம் பல்வேறு வகையான குரங்கினங்களும் காணப்படுகின்றன. மனித இனத்தைச் சரியாகக் கவனித்தால், ஆரம்பக் குரங்கினங்களை விடப் பலவீனமான ஒரு இனமாகக் காணப்படுவது தெரிய வரும். மனித இனம், குரங்கின் ஒரு கிளை மூலம் உருவாக, குரங்குகளிலும் பல இனங்கள் உருவாகியிருப்பது தெரியவரும்.

இது போலத்தான் உலகில் உருவாகும், உருமாறும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பூமியில் அது எங்கு வாழ்ந்து வந்ததோ, அந்த அடிப்படையிலேயே குணங்களும், உருவங்களும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும். இதையே டார்வினின் கோட்பாடு சொல்கிறது. ஆனால், நான் கூறிய நீர்க்கரடியின் சில குணங்களும், வாழும் தன்மைகளும் பூமியில் எந்த இடத்திலும் இல்லாத ஒரு சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகியிருக்கிறது. பூச்சியத்துக்கு கீழே -272 பாகை சதம பாகை குளிர் என்பது, பூமியில் எந்த இடத்திலும் இல்லாதது. அதிக வெப்ப நிலையைப் பொறுத்தவரை, பூமியில் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்குக் குளிரான சூழ்நிலை உள்ள இடங்கள் பூமியில் எங்கும் இல்லை. அத்துடன், விண்வெளியின் மிகை அமுக்கத்திலும், கதிர்வீச்சுகளிலும் வாழும் உயிரினமாக நீர்க்கரடி இருப்பதும், பரிணாமக் கொள்கைப்படி சாத்தியமில்லாத ஒன்று. நீர்க்கரடிக்கு இந்தத் தன்மை ஏன், எப்படி உருவாகியது? இது ஒரு அசாதாரணமான ஒரு நிலை. இந்த நிலையை, இந்த உயிரினம் எப்படி அடைந்தது? இப்படிச் சிந்திக்கும் போதுதான், இந்த நீர்க்கரடி ஏன் ஒரு ஏலியன் சார்ந்த உயிரினமாக இருக்கக் கூடாது என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். விஞ்ஞானிகள் இப்படிச் சந்தேகிப்பதற்கு, எழுந்தமானமாக காரணம் இருக்கவில்லை. அதற்கென அவர்களுக்கு ஒரு திடமான காரணம் இருந்தது. அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர் வேறு ஒரு சம்பவத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

கடந்த வாரம் செவ்வாயில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படும் எரிகல்லில், உயிரினப் படிவம் இருந்ததாகச் சொல்லியிருந்தேன். அது போன்று வேறு சம்பவமும் நடந்துதான் இருக்கிறது. நாஸா விஞ்ஞானியான ரிச்சார்ட் ஹூவர் (Dr.Richard Hoover) என்பவர், அலஸ்கா பகுதிகளில் ஆராய்ச்சி செய்தபோது, விண்ணிலிருந்து வந்து விழுந்த எரிகல் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தக் கல்லிலும் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. புழுவினது வடிவத்தில், பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் போன்ற உயிரினத்தின் படிமத்தை அந்தக் கல்லில் அவர் கண்டுபிடித்தார். இது Cyanobacteria என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, 'உயிரினம் பூமி தாண்டி வேறு இடங்களிலும் இருக்கிறது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது' என்று பலர் கருதத் தொடங்கினார்கள். இதன்படி, பூமியில் இப்போது உள்ள உயிரினங்களின் ஆதாரமே வேற்றுக் கிரகங்களிலிருந்துதான் வந்திருக்கும் என்ற புதிய கோட்பாடும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட புத்தகங்கள் பல உண்டு. முடிந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்.

உயிரினங்கள் ஏலியன்கள் சார்ந்தவை என்று விஞ்ஞானிகள் சந்தேகப்படுவதற்கு இன்னுமொரு திடமான காரணமும் உண்டு. இப்போது நான் சொல்லப் போகும் காரணம் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த ஒன்றாக இருக்கும். வழமை போல, இதை மறுத்தும் ஆதரித்தும் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், மறுத்துச் சொல்பவர்களின் குரல்கள் மிகுந்த பலகீனமாகத்தான் ஒலிக்கின்றது. இந்தச் சம்பவம் பற்றி விக்கிப்பீடியா கூடத் தவறான தகவலைத் தந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. நான் முன்னர் சொன்னது போல, இது ஒரு ஹாலிவுட் படத்தின் கதையைப் போலவும் உங்களுக்குத் தோன்றலாம். உண்மை, பொய் என்பதை வாசிக்கும் உங்கள் கைகளிலேயே நான் விட்டுவிடுகிறேன். ஆனால் இந்தத் தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் மட்டும் எனக்கு உண்டு. இவ்வளவு தூரத்துக்கு நான் ஏன் பீடிகை போட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். விசயம் தெரிந்ததும் அதற்கான காரணம் உங்களுக்கே புரியும்.

1930 ம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்த மெக்ஸிகோ இனச் சிறுமி, தனது சொந்த இடமான ஷிகுவாகுவாவுக்குச் (Chihuahua) சென்றாள். அங்கு அவள் ஒரு மலைக் குகைக்கு அருகில் வித்தியாசமானதொரு மண்டையோட்டைக் கண்டெடுத்தாள். அந்த மண்டையோடு வழமையான ஒரு மனித மண்டையோடு போல இல்லாமல், மிகவும் வித்தியாசமான வடிவத்தில் இருந்ததை அவதானித்தாள். அந்த மண்டையோடுதான் இப்பொது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் 'ஸ்டார் சைல்ட்' (Starchild) என்று சொல்லப்படும் மண்டையோடாகும். மேலே படத்தில் காணப்படும் மண்டையோடுதான் அந்தப் பெண் கண்டெடுத்த மண்டையோடு. அந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் மிகவும் குறைந்த வயதுடையவர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வந்தது. சாதாரணமான ஒரு மனிதக் குழந்தையின் மண்டையோட்டையும், நட்சத்திரக் குழந்தையின் (Starchild) மண்டையோட்டையும் மீண்டும் ஒரு முறை ஒப்பீட்டுக்காகத் தருகிறேன் பாருங்கள்.

இந்த மண்டையோட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில், பல விசயங்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தது. குறிப்பாக, கண்கள் இரண்டும் இருக்கும் குழிகள் மனிதனில் உள்ளவை போலில்லாமல் ஆழமற்றுக் காணப்பட்டன. அப்படி ஆழமில்லாத ஒரு மண்டையோட்டில் மனிதர்களின் கண்கள் அமைந்திருக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல், மூக்கின் பகுதிக்கும், வாய்ப்பகுதிக்கும் இடையே கூட மிகவும் வித்தியாசமான தோற்றம் காணப்பட்டது. அந்த மண்டையோட்டின் ஒட்டுமொத்த வடிவமே, மனிதனின் மண்டை யோட்டைப் போல இல்லாமல் வேறாக இருந்தது. அப்படியாயின் இது யாருடைய மண்டை யோடாக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதில் தேடி மேலும் ஆராய்ச்சிகள் நடந்தன. ஆராய்ச்சியின் இறுதியில் இது சாதாரன மனிதனின் மண்டையோடே அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்பொழுது உங்களுக்கு வரும் சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கும் வந்தது. அதாவது, 'சில குறைபாடுள்ள குழந்தைகளின் தலைகள் வித்தியாசமான வடிவங்களில் இருப்பவைதானே! அப்படி ஒரு குறைபாட்டுடன் கூடிய குழந்தையின் மண்டையோடாக ஏன் இந்த மண்டையோடும் இருக்கக் கூடாது?' என்று நீங்கள் நினைப்பது போல, அவர்களிடையேயும் கேள்வி எழுந்தது. அதனால் அவை பற்றியும் தெளிவாக ஆராயப்பட்டது. முடிவு அந்த மண்டையோட்டின் சொந்தக்காரக் குழந்தைக்கு அப்படி ஒரு நோய் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று நிரூபணமாகியது. அப்படியென்றால், இந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் யார்? அவர் ஏன் இப்படிப்பட்ட வடிவத்தில் இருக்கிறார்? என்று யோசித்தபோது தான், ஏலியன்கள் பற்றிய சந்தேகம் எழத் தொடங்கியது.

'இந்த மண்டையோடு ஒரு ஏலியனுக்குச் சொந்தமாக இருக்குமோ?' என்ற சந்தேகத்துடன் ஆராய்ச்சிகள் நடந்தன. மண்டையோட்டின் வடிவங்கள் பலவிதங்களில் ஆராயப்பட்டன. எதுவுமே மனித மண்டையோட்டுடன் ஒத்துவரவில்லை. ஆனாலும் அது ஏலியனின் மண்டையோடுதான் என்பதற்கு அந்த ஆதாரங்கள் மட்டும் போதுமானவை இல்லையல்லவா? அதனால், நவீன விஞ்ஞான ஆராய்ச்சியான டிஎன்ஏ (DNA) பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் மூலம் கிடைத்த முடிவுதான் கொஞ்சம் தலையைச் சுற்றும் விதமாக இருக்கின்றது. நான் மேலே ஏன் அவ்வளவு பீடிகை போட்டேன் என்பதற்குக் காரணமும், அந்த முடிவை ஒட்டியதுதான். "அப்படி என்ன முடிவுதான் கிடைத்தது?" என்றுதானே கேட்கிறீர்கள்! சொல்கிறேன். அந்த மண்டையோட்டின் டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், அந்த மண்டையோட்டுக் குழந்தையின் அம்மா சாட்சாத் பூமியில் வாழ்ந்த ஒரு பெண்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அப்பா.......?

அப்பா யாரென்று நிச்சயம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆனாலும், அதுபற்றியும், ஸ்டார் சைல்ட் பற்றியும் விபரமாக அடுத்த வாரம் பார்க்கலாம்.......!

Ramesh Murugan

unread,
Oct 21, 2012, 7:37:14 AM10/21/12
to panb...@googlegroups.com
இதுல சின்னங்கள் மட்டும் முக்கியமல்ல... நேரமும்.

2012/8/28 Prakash Sugumaran <praka...@gmail.com>
/
எதுவா இருந்தாலும் சொந்த புத்திய இது சாத்தியமா, சாத்தியமில்லையா ? சாத்தியம்னா எப்படி சாத்தியம், சாத்தியமில்லைன்னா எப்படி சாத்தியமில்லைன்னு ஒருமுறைக்கு பலமுறை தனக்கு தானே கேட்டு தெளிவு பெறாதது மட்டுமே மூடர்களுக்கு உரித்தான மூட நம்பிக்கை எனப்படும். ஒரே ஒரு இரவுக்கு இந்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ள ஏதோ ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால் ( எந்த அமைப்பாவது முன்வந்து செலவை ஏற்றுக் கொண்டால் ) இதைப்போல மட்டுமல்ல நடராஜ தாண்டவத்தையும், மத அமைப்பு சின்னங்களின் அர்த்தங்களையும் கூட போட்டுக் காண்பிக்க முடியும். ( வயலில் பயிர் இருந்தால் நலம்.. இல்லாவிடில் கூடுதல் செலவாகும் ) இதே வெளி நாடு எனில் கூடுதல் விசேஷம்.. அந்த நாட்டின் மத அமைப்புகளுக்கு அனுமதி எளிதில் கிடைக்கும்.//


Ramesh

unread,
Dec 3, 2012, 2:45:32 PM12/3/12
to panb...@googlegroups.com

Test.

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:47:31 PM12/3/12
to panb...@googlegroups.com

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (18)
ராஜ்சிவா

வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுடன் (UFO) பூமிக்கு வந்து சென்றது பற்றியும், பலர் அவற்றை நேரில் கண்டது பற்றியுமான கதைகள் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கில் இருக்கின்றன். ஏலியன்களைக் கண்டது மட்டுமல்லாமல் ஏலியன்கள், அவர்களது பறக்கும் தட்டுக்கு தங்களை அழைத்துச் சென்று பல பரிசோதனைகள் செய்ததாகவும், தங்கள் உடம்பில் எதையோ செலுத்திவிட்டு அனுப்பியதாகவும் பலர் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றுகெல்லாம் ஆதாரங்களாகப் புகைப்படங்களும், காணொளிகளும் நிறைந்து போய் இருக்கின்றன. இணையத்தளத்தில் இது பற்றி நீங்கள் தேடினீர்களேயானால் தகவல்கள் நீர்வீழ்ச்சி போலக் கொட்டும். ஆனால் இவையனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் போலி என்றே நாஸா போன்றவை மறுத்து வந்தன. படங்களும், காணொளிகளும் கணினிகளாலும், புகைப்பட உத்திகளாலும் உருமாற்றப்பட்டு நம்மை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்படுகின்றன என்றே அவர்கள் சொல்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சொன்னது போல போலியான படங்களும், காணொளிகளும் இருப்பது என்னவோ உண்மைதான். போலிகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து, அவற்றைப் போலிகள் என்று வரிசையாக நிரூபித்து வந்தபோது, உண்மையாகவும் இருக்கலாம் என்று சொல்லக் கூடியவையும் அந்த அமளியினுள் அமுங்கிப் போய்விடுகின்றன. மொத்தத்தில், 'ஆவிகளுடன் பேசுகிறோம்' என்று சொல்பவர்களை, அதை நம்பாதவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ, அந்த நிலையில் இந்த ஏலியன், பறக்கும் தட்டு விசயங்களும் பார்க்கப்படுகின்றன. ஏலியன்கள் பற்றியோ, பறக்கும் தட்டுகள் பற்றியோ பேச ஆரம்பித்தாலே, "இதோ கதை விடுகிறான் பாருங்கள்" என்னும் ஏளனப் பார்வை வந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாவற்றையும் அப்படித் தட்டிக் கழித்துவிட்டுப் போக முடியாது. நம்பியே தீர வேண்டிய சம்பவங்களுடனும், அவற்றுக்கான ஆதாரங்களுடனும் ஏலியன்கள் வந்தது உண்மைதான் என அடித்துச் சொல்லும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இவற்றை விளக்கிப் பல புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் இங்கு நான் சொல்ல ஆரம்பித்தால், இந்தத் தொடர் நீண்டுகொண்டே போய்விடும். அத்துடன் இந்த விசயத்தில் பொறுப்புணர்வுடன் தகவல்களை நான் உங்களுக்குத் தரவேண்டும்.

இந்த ஒரேயொரு காரணத்தினாலேயே மிகுந்த கவனத்துடன் நான் ஆதாரங்களைத் தேடி உங்களுக்குத் தரவிரும்புகிறேன். மிகவும் நம்பிக்கையான, திட்டவட்டமான அறிவியல் காரணங்கள் இருந்தால் மட்டுமே அவற்றை உங்களுக்கு தரவிரும்புகிறேன். நான் தரும் தகவல்களில் கூட தரவுகள் முழுமையாக இருந்தாலும், அவற்றையும் எதிர்க்கும் எதிர்ப்புக் குரல்கள் இல்லாமலும் இல்லை. அதனால் நான் தரும் சம்பவங்களையும், தகவல்களையும் கூட நீங்கள் முழுமையாக நம்பிவிடாமல், சந்தேகப் பட்டியலில் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

ஏலியன்கள் என்று சொல்லும்போது, அவை இரண்டு வகையினுள் அடங்கும். ஒன்று பூமி தாண்டி விண்வெளியில் வசிக்கும் உயிரினம். மற்றது பறக்கும் தட்டுகள் மூலமாக பூமியை வந்தடையக் கூடிய அதிபுத்திசாலிகளான உயிரினம். ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டும் உண்டு என்பதைத் திட்டவட்டமாக நம்புகிறார்கள். அயல் கிரகங்களில் சிறிய பாக்டீரியா போன்ற உயிரினங்கள் இருந்திருக்கின்றன என்பதை எரிகற்களின் படிமங்கள் மூலமாக நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. அந்த பாக்டீரியாக்கள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் இருந்திருந்தால், அவையும் பூமியில் உள்ள ஜீவராசிகள் போல பரிணாம வளர்ச்சியடைந்து புத்திஜீவிகளாக மாறியிருப்பதற்கு சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளது.

கடந்த பகுதிகளில் மெட்ராய்ட்டுகள் மூலமாக உயிரினப் படிமம் பூமிக்கு வந்தடைந்ததைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதே போலப் பூமியை வந்தடைந்த இன்னுமொரு மெட்ராய்ட்டின் உயிரினப் படிமத்தைத்தான் மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த மெட்ராய்ட் 1864ம் ஆண்டு மே மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள Orgueil என்னும் இடத்தில் விழுந்தது. விண்வெளியில் இருந்து பூமியின் காற்றுவெளி மண்டலத்தில் இந்த மெட்ராய்ட் நுழைந்தபோது 20 பகுதிகளாக வெடித்துப் பிளந்து பூமியில் விழுந்தது. Orgueil Meteorite என்று அழைக்கப்படும் இந்த எரிகல், 1961ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட போதுதான், அதனுடன் ஒட்டி வந்த உயிரினப் படிவங்களின் அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மெட்ராய்ட்டில் ஒட்டி வந்திருக்கும் பாக்டீரியாக்களை, சியானோ பாக்டீயா வகைகளில் (Cyanobacteria) ஒரு வகை என்று சொல்கிறார்கள். மெட்ராய்ட்டுகள் மூலம் பூமிக்கு வந்து கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் இவை மட்டுமல்ல, இன்னும் அதிகம் உண்டு. அவற்றிற்கு உதாரணங்களாக மேலும் சிலவற்றின் விபரங்களையும், படங்களையும் கீழே தருகிறேன்.

முதலாவது படத்தில் உள்ளது ஆஸ்ரேலியாவின் Murchison என்னுமிடத்தில் 28 செப்டம்பர் 1969 இல் வீழ்ந்த எரிகல்லான Murchison Meteorite. இரண்டாவதாக இருப்பது, முன்னால் சோவியத் யூனியனின் மாநிலங்களில் ஒன்றாக இருந்த கஜகஸ்தான் என்னுமிடத்தில், 1962இல் விழுந்த Efremovka Meteorite. இந்த எரிகற்களில் உயிரினங்களின் படிமம் படிந்திருக்கின்றன. இவையெல்லாம் விண்வெளியில் உயிரினங்கள் வாழ்ந்தன, வாழ்கின்றன என்பதற்கு மாற்றுக் கருத்துகளே சொல்ல முடியாத ஆணித்தரமான சான்றுகள். பூமியில் தற்செயலாக வந்து விழுந்த சில எரிகற்களிலேயே இந்த அளவுக்கு உயிரினங்கள் இருந்தால், பூமிக்கு வராத எத்தனையோ எரிகற்கள் உண்டு. அவற்றில் எவ்வளவு அதிகமான உயிரினங்கள் இருக்க முடியும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அத்தோடு அந்த எரிகற்கள் உருவாகிய கோள்களில் எவ்வளவு இருக்க முடியும்? இந்த அடிப்படையில் சிந்தித்தால், பூமி தாண்டி உயிரினங்கள் வாழ்வது மட்டுமில்லாமல், அவை புத்திஜீவிகளான உயிரினங்களாகவும் இருப்பதற்கும் சாத்தியம் உண்டு என்று நாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? அப்படிப்பட்ட புத்தியுள்ள ஜீவராசிகளான உயிரினங்கள் பூமிக்கும் வந்தனவா என்று சந்தேகங்கள் ஏற்படுவதும் தப்பில்லையல்லவா? இப்படிச் சிந்திக்கும் நிலையில்தான், கடந்த வாரம் சொன்ன நட்சத்திரக் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட நட்சத்திரக் குழந்தையின் (Starchild) மண்டையோட்டின் வடிவம் மிகவும் வித்தியாசமானதாகக் காணப்பட்டது. அதன் தோற்றம், ஏலியனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. ஆனால் எடுத்தவுடன் அப்படி ஒரு முடிவுக்கு வருவது முட்டாள்தனம் என்பதால், அந்த மண்டையோடு ஏன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது என ஆராய்ந்தார்கள். அப்போதுதான், ஹைட்ரோசெஃபலி (Hydrocephaly) என்னும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் தலை இதே வடிவத்தில்தான் இருக்கும் என்ற சந்தேகமும் வந்தது. எனவே முதலில் அதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மனிதனின் தலையில் இருக்கும் மூளையின் கார்டெக்ஸ் (Cortex) பகுதியை பாதுகாப்பதற்காக, மூளையைச் சுற்றிலும் செரிப்ரஸ்பைனல் திரவம் (Cerebrospinal Fluid) என்ற ஒன்று இருக்கிறது. இந்தத் திரவம் சில அசாதாரணமான நிலையில், அதன் அழுத்த அதிகரிப்பினால் மண்டையோட்டினூடாகக் கசிந்து குழந்தைகளின் தலையின் வடிவத்தில் மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது. அப்படி தலையில் மாற்றங்கள் ஏற்படும் குழந்தைகளை ஹைட்ரோசெஃபலி என்று சொல்வார்கள். குழந்தைகளின் மண்டையோட்டின் மென்மையான பகுதிகளில் ஏற்படும் இடைவெளிகளில், அழுத்தம் காரணமாக செரிப்ரஸ்பைனல் திரவம் வெளிவந்து தலையில் இந்த வகையான மாற்றத்தைச் செய்யும். அதனால் இந்த நோயுள்ள குழந்தைகளின் தலையின் வடிவம் ஒரு சீரான அமைப்பில் இல்லாமல் சமச்சீரற்றுக் காணப்படும். ஹைட்ரோசெஃபலி நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உருவம் இப்படித்தான் இருக்கும்.

ஆனால், ஸ்டார் சைல்ட்டின் மண்டையோட்டை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த மண்டையோட்டுக்குரிய குழந்தைக்கு நூறுசதவீதம் ஹைட்ரோசெஃபலி நோய் இருக்கவில்லை என்பது தெளிவாகியது. காரணம் ஸ்டார் சைல்டின் மண்டையோடு இருபக்கமும் சமச்சீரான அகலங்களுடன் பெருத்திருந்தது. எந்தப் பகுதி பெருத்திருந்ததோ, அந்தப் பகுதியில் உள்ள மண்டையோடு இறுகிய பகுதியாகவும் காணப்பட்டது. இறுகிய மண்டையோட்டுப் பகுதி மூலமாக ஹைட்ரோசெஃபலி வடிவம் உருவாகியிருக்க முடியாது. ஸ்டார் சைல்ட்டுக்கான அனைத்துச் சோதனைகளும் உலகின் மிகவும் பிரசித்திபெற்ற வைத்தியர்கள் மூலமாகவே செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பலவிதமான சோதனைகள், எக்ஸ்ரேக்கள் என்பன எடுக்கப்பட்டு அந்தக் குழந்தைக்கு ப்ரோகெரியா (Progeria) என்ற தலையின் வடிவம் மாறும் வேறு ஒரு வகை நோயும் இருந்திருக்கவில்லை என்ற முடிவுக்கும் வந்தனர். ஸ்டார்சைல்ட்டின் மண்டையோடு, சாதாரணமான மனித மண்டையோட்டுடனும் பல கோணங்களில் ஒப்பிடப்பட்டது. ஆனால், எந்தவித முடிவுகளிலும் ஸ்டார்சைல்ட் மண்டையோடு, மனித மண்டையோட்டின் வடிவத்துடன் பொருந்தி வரவேயில்லை. இதுவே முடிவானது என்று அத்தோடு நின்றுவிடாமல் இறுதிப் பரிசோதனையாக டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

ஸ்டார் சைல்ட் மண்டையோட்டை 1999, 2003, 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில், பல தடவை டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர். மனிதனில் Mitochontrial DNA (mtDNA), Nuclear DNA (nuDNA) என்று இரண்டு வகையான டிஎன்ஏக்கள் உண்டு. இதில் nuDNA என்பது தாயிடமிருந்து செல்வது என்றும் Blast தாய், தகப்பன் இரண்டு பேரிடமிருந்தும் செல்வது என்றும் நம்பப்படுகிறது. இந்த இடத்தில் டிஎன்ஏ பரிசோதனைகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது பற்றி சிறிய விளக்கம். ஙிறீணீst என்று அழைக்கப்படும் ஒரு கணினி சாஃப்ட்வேர் மூலம் அதற்குரிய தகவல் மையத்தில் (NIH Database) பதிவுசெய்யப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான பரம்பரை அலகுத் தகவல்களை, ஒன்றுடன் ஒன்று வரிசையாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு அவை ஒத்துப் போகின்றன என்பதைப் பொறுத்து டிஎன்ஏ பரிசோதனைகளின் முடிவுகள் தெரியவரும். உதாரணமாக இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு நமக்குக் கிடைத்தால், அப்படிக் கிடைத்தது மனித எலும்புக்கூடுதானா என்பதைத் தற்கால மனிதனின் டிஎன்ஏ தகவலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது, ஒத்துப் போகும் தரவுகளின் விகிதங்களைக் கொண்டு, கிடைத்தது மனிதனின் எலும்புக்கூடுதானா அல்லது குரங்கினத்தின் எலும்புக்கூடா என்று கண்டுபிடிக்கலாம். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சாதாரண மனிதனின் டிஎன்ஏயில் சிம்பான்சி, கொரில்லா, எலி என்பனவற்றின் பரம்பரை தடயங்களும் செய்திகளாகப் பதிந்திருக்கின்றன. இவை என்ன என்ன விகிதத்தில் பதிந்திருக்கின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்த்து மனிதன்தானா என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

இந்த அடிப்படையில் ஸ்டார்சைல்ட்டையும் நியூக்ளியர் டிஎன்ஏ (nuDNA) பரிசோதனைக்கு உட்படுத்தி, Blast இன் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த முடிவுகள் மிகவும் வியப்பையளித்தது. மில்லியன் கணக்கான தகவல்களில், எந்த ஒரு தகவலும் அதனுடன் ஒத்துப் போகவில்லை(No significant similarity Fond) என்ற பதில் கிடைத்தது. இதன் மூலம் நாம், ஸ்டார் சைல்ட் என்பதே பூமிக்குச் சொந்தமானதல்ல என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது. இதுவே முடிந்த முடிவாக நாம் எடுக்க வேண்டும் என்பதில்லை என்றாலும், இந்த முடிவு என்னவோ அறிவியலாளர்களை அசைத்திருப்பது உண்மைதான். அத்துடன், ஸ்டார் சைல்ட் கிடைத்த சில ஆண்டுகளின் பின்னர் ப்ரேசில் நாட்டில் உள்ள உபராபா (Uberaba) என்னுமிடத்தில் ஸ்டார் சைல்ட் போன்றே இன்னுமொரு எலும்புக் கூடும் கிடைத்தது. அது மேலும் அறிவியலாளர்களை அதிர வைத்தது. இப்போது கூட பிரேசில் நாட்டின் மியூசியத்தில் இந்த எலும்புக் கூடு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகளாக இருந்தாலும், நம்பமுடியாத ஒரு மனநிலையே நம்மிடையே இன்னும் இருக்கிறது. நம் கண்முன்னால் அவை வந்தாலேயொழிய அவற்றை நம்ப மனம் மறுக்கிறது. ஆனால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை விண்வெளியில் இருந்து யாரோ வந்ததற்கான செய்திகள் நம்மை அசைத்தபடியே இருக்கின்றன. அதிகம் ஏன், சமீபத்தில் செவ்வாயில் இறங்கிய க்யூரியாசிட்டி, செவ்வாயில் மண்டையோடு ஒன்றைப் படம் பிடித்திருக்கிறது என்றும், அதை நாஸா மறைத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். சிலர் அதற்கான ஆதாரத்துடன் படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி வெளியிட்டவர்களின் நம்பகத்தன்மை பற்றிச் சந்தேகங்கள் இருந்தபோது, ணிஷிகி ESA (European Space Agency) என்னும் ஐரோப்பிய வானியல் கழகம் வெளியிட்டிருக்கும் வேறு ஒரு படத்தில் செவ்வாயில் அடுக்கடுக்காய்க் கட்டடங்கள் தெரிவதாகச் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் உண்மைதானா? இல்லைக் கட்டுக் கதைகளா? இதற்கான பதிலுடன் அடுத்த வாரம் பார்ப்போமா?

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:48:52 PM12/3/12
to panb...@googlegroups.com

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 19
ராஜ்சிவா

செவ்வாய்க் கிரகத்துக்கு 'க்யூரியாசிட்டி' போய்ச் சேர்ந்தாலும் சேர்ந்தது, அப்போதிருந்து ஏலியன்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருப்பதற்கான சாத்தியச் செய்திகள், ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. க்யூரியாசிட்டி அனுப்பிய படங்களில் 'அது இருந்தது, இது இருந்தது' என்று பல செய்திகள் தினமும் வருகின்றன. இவைகளில், சிலவற்றில் அர்த்தங்கள் இருந்தாலும், பலவற்றில் அனுமானங்களே அதிகமாக இருக்கின்றன. 'க்யூரியாசிட்டி, செவ்வாயில் மண்டையோடு ஒன்றைப் படம் பிடித்திருக்கிறது' என்றும், அதை 'நாஸா மறைத்து விட்டது' என்றும் சொல்லி, மண்டையோடு போன்ற படம் ஒன்றையும் சிலர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தில் இருப்பது மண்டையோடா? இல்லையா என்பதற்கே தனியாகப் பட்டிமன்றமும் நடத்துகிறார்கள். இது போல, 'ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்' (ESA - European Space Agency) வெளியிட்டிருக்கும் ஒரு படத்தில், அடுக்கு மாடிக் கட்டடங்கள் தெரிகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இவற்றின் நம்பகத் தன்மைகள் எந்த அளவுக்கு என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் ESA வெளியிட்டிருக்கும் படத்தைப் பார்க்கும்போது, சிÌறிய ஆச்சரியம் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதும் உண்மைதான். நான் சொல்வது போல, உங்கள் கணினியில் நீங்களே முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம். ஆச்சரியப்பட்டுப் போய்விடுவீர்கள்.  

www.esa.int என்னும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இணையத் தளத்துக்குச் செல்லுங்கள். அங்கு 'Crater Hale in perspective, looking west' என்பதை சர்ச் (search) செய்யும் இடத்தில் அடித்துத் தேடுங்கள். அதனால் கிடைக்கும் படத்தை Hi-res ஆக உங்கள் கணினியில் பதிவு செய்யுங்கள். அந்தப் படம் மிகவும் ஒளிச்செறிவு அதிகமுள்ள படமாகக் காணப்படும். அதனால் அந்தப் படத்தின் காண்ட்ராஸ்ட்டை மிகவும் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது படத்தின் கீழே, இடது பக்கங்களில், நீங்கள் பல வடிவங்களைக் காண்பீர்கள். அந்த வடிவங்கள் அனைத்தும் கட்டடங்கள் போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. விதவிதமான அடுக்கு மாடிக் கட்டட அமைப்புகள் போலவும் அவற்றில் சில காணப்படுகின்றன. ESA யின் அந்தப் படத்தையும், அதன் ஒளியமைப்புக் குறைக்கப்பட்ட ஒரு படத்தையும் உங்களுக்காகத் தந்திருக்கிறேன். நன்றாக நிதானமாகப் பாருங்கள். ஏதாவது தெரிகின்றதா? ஆனாலும் நீங்களே படத்தை உங்கள் கணினியில் பதிவுசெய்து, முயற்சிசெய்து பார்த்தால்தான் அதன் நிஜ ஆச்சரியம் புரியும். 

இதிலிருந்து ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம். செவ்வாயில் எது நடந்தாலும் நாம் அதை ஏலியன்களுடன் சம்பந்தப்படுத்தியே பார்க்க விரும்புகிறோம் என்பதுதான் அந்த உண்மை. அதாவது, செவ்வாயில் நம்மை மிஞ்சிய புத்திசாலியான உயிரினம் இருக்க வேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்புக்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. பூமிக்கு ஏலியன்கள் வந்ததைப் பார்த்ததாகப் பலர் சொல்லியிருந்தாலும், அவையெல்லாம் தனிப்பட்ட மனிதர்கள் தாங்கள் ஏலியன்களைக் கண்டதாகச் சொல்லும் சம்பவங்கள்தான். அத்துடன் அந்தத் தனிப்பட்ட மக்கள் அனைவரும் கொடுத்த சாட்சியங்களும், படங்களும் போலியானவை என்று வன்மையாக மறுக்கப்பட்டும் வந்தன. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஏலியன்கள் பற்றிய வேறு பல உண்மைச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்பதை யாருமே மறுக்க முடியாத வகையிலும் பல சம்பவங்கள் நடந்துதான் இருக்கின்றன. ஆனால் அந்த வகை உண்மைச் சம்பவங்கள் அனைத்துமே அரசுகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன. 

எந்த அரசுகள் ஏலியன்கள் இல்லை என்று கூறிப் பல இரகசியங்களை மறைத்தனவோ, அதே அரசுகளின் போலீஸ், இராணுவம், விமானப்படை, கடற்படை போன்ற  படைப்பிரிவுகளில் பணியாற்றிய உத்தியோகஸ்தர்களே ஏலியன்கள் பூமிக்கு வந்ததைக் கண்டதற்குச் சாட்சிகளாகவும் இருக்கின்றனர். இவர்கள் சொல்லும் சாட்சியங்களும், ஆதாரங்களும் அரச ஆவணங்களில் உத்தியோக பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை. ஆனால், அரசப் படைகளில் இவர்கள் பணியாற்றுவதால், 'அரசாங்க இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்' என்னும் கட்டளைகளுக்கு உள்ளாகி, பேசமுடியாமல் தடுக்கப்படுகிறார்கள். ஆனால், என்னதான் அவர்கள் தடுக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட படையினர்கள் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இரகசியங்கள் கசிவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்படிக் கசிந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. அசைக்க முடியாத சாட்சிகளுடன் வெளிவந்த அந்தத் தகவல்கள், ஏலியன்கள் இருக்கின்றன, அவை பூமிக்கு வந்தன என்பதை மிகத்திடமாக ஊர்ஜிதம் செய்தன. இப்படிப்பட்ட தகவல்கள் தரும் நம்பிக்கைதான், நம்மை செவ்வாயில் ஏலியன்கள் இருப்பதாக ஆதாரங்களைத் தேட வைக்கிறது. 

இதுவரை வெளிவந்த ஏலியன்கள் சம்பவங்களில் இருபது சம்பவங்கள் மிகவும் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. சொல்லப் போனால் இருபது சம்பவங்கள் கூடத் தேவையில்லை. ஒரேயொரு சம்பவம் மட்டுமே ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துவிட்டால், ஏலியன்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இதுவரை ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்று சொல்வதில் ஒருவித நழுவல் தன்மையைக் கடைப்பிடித்து வந்த நானே, ஏலியன்கள் இருக்கின்றன என்பது போல இப்போது எழுதுகிறேன் என்றால் அந்தச் சம்பவங்களைப் பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட சம்பவங்களில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன். ஆனால் அவை வழமையான பறக்கும் தட்டுகளின் கதைகளாக இருக்கப் போவதில்லை. இவை அனைத்துக்கும் திடமான ஒரு பின்புலமும், நம்பகத்தன்மையும், சிறப்பம்சமும் இருப்பதால் மட்டுமே அவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

அமெரிக்க நாஸா நிறுவனத்தால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்றின் பெயர்தான் 'ஸ்கைலாப் 3' (Skylab 3). 'அலன் பீன்' (Alan bean), 'ஜாக் லௌஸ்மா' (Jack Lousma), 'ஓவென் காரியட்' (Dr.Owen Garriott) ஆகிய மூவரும் பல நாட்கள் 'ஸ்கைலாப் 3' இல் தங்கியிருந்து விண்வெளியை ஆராய்ச்சி செய்து வந்தனர். 1973ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இவர்கள் மூவரும் விண்வெளியில் ஒரு அதிசயத்தைக் கண்டனர். சிவப்பு நிறத்தில், ஒளிர்ந்தபடி பூமிக்கு அருகே பறந்த மிகப்பெரிய பறக்கும்தட்டு ஒன்றை அவர்கள் மூவரும் ஒன்றுசேரக் கண்டிருக்கிறார்கள். விண்வெளியில் இருந்து கொண்டு பூமியையும், வானையும் ஆராய்ந்து கொண்டிருந்தவர்கள், தமக்கு மிக அருகிலேயே இன்னுமொரு விண்கலம் வந்த போது, அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் காலங்களில் ஸ்கைலாப்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய விண்கலமாக இருந்தது. 'ஸ்கைலாப் 3' இன் நீளம் சுமார் 150 அடியாகும். ஆனால் இவர்களுக்கு 35 மைல்கள் தொலைவில் கிட்டத்தட்ட 1000 அடிகள் நீளத்தில் மிகப்பெரிய விண்கலமாய் அந்தப் பறக்கும்தட்டு காணப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பார்வையில் இருந்த அந்தப் பறக்கும்தட்டு நகர்ந்து மறைந்தது.

தங்கள் முன்னால் காட்சிதரும் பறக்கும்தட்டுப் பற்றி உடனடியாக ஹ்யூஸ்டனுடன் தொடர்பு கொண்டு மூவரும் தகவல்களைத் தெரிவித்தனர். காரியட் அந்தப் பறக்கும்தட்டைப் பல தடவை புகைப்படங்களும் எடுத்தார். தகவல்கள் அனைத்துமே ஒலி, ஒளி, புகைப்பட வடிவங்களில் ஆவணமாக நாஸாவில் பதியப்பட்டது. ஆனால், இந்தச் சம்பவத்தை நாஸா 'டாப் சீக்ரெட்' என்னும் வகையில் அடக்கி, இரகசியமாகப் பூட்டிக் கொண்டது. எந்த நாஸா பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசியங்களை மறைக்கின்றது என்று நாம் சந்தேகப்படுகின்றோமோ, அதே நாஸாவின் அஸ்ட்ராநாட்டுகள் மூலமாகவே பறக்கும்தட்டு பற்றிய இந்தச் சம்பவம், ஃபோட்டோ ஆதாரத்துடன் பின்னர் வெளிவந்தது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் ஆதாரங்களுடன் இந்த இரகசியங்களை வெளியிட்டனர். இவற்றை நாஸா மறுக்க முடியாமல் தற்போது அமைதியாக நிற்கின்றது. பூமியில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தாலாவது ஏதாவது வெளிச்சம் என்று சாட்டுகளைச் சொல்லி மறுத்துவிடலாம். ஆனால் இது நடந்தது யாருமே இல்லாத விண்வெளிப் பிரதேசத்தில். இப்போது அங்கு வந்தது யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்னும் கேள்விகளே எஞ்சி நிற்கின்றன. பதில் தெரியாத இந்தக் கேள்விகளில், அவர்கள் வந்தது மட்டும் மறுக்கவே முடியாத உண்மையாகும். இந்தப் பறக்கும் தட்டின் ஆச்சரியம் நம்மை மிரட்ட, அடுத்ததாக வந்த தகவல் அதைவிட மிரட்டலானது. 

1976ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்த விமானப்படைத் தளமான Imperial Iranian Airforce க்கு நூற்றுக் கணக்கானவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அனைத்து அழைப்புகளும் தாங்கள் மிகப்பெரிய சிகப்பு ஒளியை வானத்தில் கண்டதாகத் தெரிவித்தன. நேரம் நடுநிசி பன்னிரண்டரை மணி. ராடர் திரைகளின் மூலம் அந்த ஒளியை தேடியபோது, வானத்தில் அப்படி ஒன்று பறந்து கொண்டிருப்பது ஊர்ஜிதமாகியது. உடனே விமானப்படைக் கமாண்டர் அதை நோட்டமிடும்படி, F4 விமானம் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த ஒளியைத் நெருங்கிய போதுதான், அது ஒரு பறக்கும்தட்டு என்பதை விமானி உணர்கிறார். ஆனால் அதன் பிரகாசமான ஒளியில் பறக்கும் தட்டின் வடிவங்கள் தெரியவில்லை. இதில் இன்னுமொரு ஆச்சரியமும் காத்திருந்தது. மிகவும் தாழ்வாகப் பறந்த அந்தப் பறக்கும்தட்டிலிருந்து பறப்பதற்கான எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. மிக அமைதியாகச் சென்றது அது. தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைப்படி விமானத்தைப் பறக்கும்தட்டுக்கு மிகவும் அருகில் கொண்டு சென்றார் விமானி. கிட்டத்தட்ட 25 நாட்டிகல் மைல்கள் தூரத்துக்கு வந்ததும் ஆச்சரியமாக விமானத்தில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் பழுதடைந்தன போல செயலிழக்கின்றன. பயந்துபோன விமானி, விமானத்தை, விமானத்தளத்தை நோக்கித் திருப்புகிறார். திரும்பிய சில நிமிடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் மீண்டும் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. உடனடியாக விமானப்படைக் கமாண்டர், இரண்டாவது F4 விமானத்தை அந்தப் பறக்கும் தட்டு நோக்கி அனுப்புகிறார். இரண்டாவது விமானம் அந்தப் பறக்கும்தட்டை நெருங்கிய போது, எந்த விதப் பதட்டமுமில்லாமல் மிகச் சரியாக 25 நாட்டிகல் மைல்கள் இடைவெளி இருக்கும்படி, அந்தப் பறக்கும் தட்டு முன்னே நிதானமாக நகர்கிறது. சிறிது தூரம் சென்ற பறக்கும்தட்டை விமானி நெருங்க முயல்கையில், திடீரென அந்தப் பறக்கும் தட்டின் பெரிய ஒளியில் இருந்து ஒரு சிறிய ஒளி பிரிந்து விமானம் நோக்கி வர ஆரம்பிக்கிறது. விமானி, தனைத் தாக்குவதற்கான ஆயுதம் என்று அஞ்சி விமானத்தைத் திருப்புகிறார். ஆனால் அந்த சிறிய ஒளி விமானத்துக்கு அருகில் வந்ததும் முன்னைய விமானம் போல, இந்த விமானத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் செயலிழக்கின்றன. பயந்தபடி மிக விரைவாக விமானி விமானத்தைச் செலுத்த, மீண்டும் கட்டுப்பாடுகள் கிடைக்கின்றன. அந்தச் சிறிய ஒளி, பெரிய ஒளியுடன் இணைகிறது. 

ஹாலிவூட் திரைப்படமொன்றின் கற்பனை செய்யப்பட்ட கதை போலக் காட்சி தரும் இந்தச் சம்பவம் ராடர்கள், படங்கள், சாட்சிகள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு சம்பவமாகப் பதியப்பட்டுள்ளது. இதை ஆயிரக்கணக்கான மக்களும் கண்டிருக்கிறார்கள். ஈரான் விமானப்படையின் பல அதிகாரிகள் இந்தச் சம்பவத்துக்குச் சாட்சிகளாகவும் இருக்கின்றனர். அமெரிக்க Defence Inteligence Agency யினால் நான்கு பக்க அறிக்கையாக இது இன்றும் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இருந்த ஈரான் அமெரிக்க சார்பான ஈரானாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால், யாருமே மறுக்கவும், மறைக்கவும் முடியாத பறக்கும்தட்டு பற்றிய ஒரு உண்மையாக இந்த சம்பவம் அமைந்து போனது. 

ஏலியன்கள் பற்றி அடுத்து நான் சொல்லப் போகும் சம்பவம் "இந்த உண்மைகள் எப்படித் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன?" என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். மிகவும் ஆச்சரியமான அந்தச் சம்பவம் ஒரு சதி போல அமெரிக்க அரசினால் மறைக்கப்பட்டது. இன்று கூட பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவம் அது. அது என்ன சம்பவம்? எப்படி அது மறைக்கப்பட்டது என்று அடுத்த வாரம் பார்க்கலாமா? 

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:50:34 PM12/3/12
to panb...@googlegroups.com

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (20)
ராஜ்சிவா

'பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தனவா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?' என்று ஆராயப் புறப்பட்டாலே, அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சுட்டிக்காட்டும் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்தது. நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், இது பற்றி ஆராய்பவர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒரு முடிவுக்கு வராமல் செய்தது அந்தச் சம்பவம். அந்தச் சம்பவம், என்ன சம்பவம் என்பதைச் சொல்வதற்கு முன்னர், கடந்த பதிவுகள் சம்பந்தமாகச் சில சந்தேகங்களைக் கேட்டு அனுப்பியுள்ள வாசகர்கள் மணி தனுஷ்கோடிக்கும், துபாயில் வசிக்கும் ஆனந்துக்கும் சிறிய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பல கேள்விகளை ஆனந்த் கேட்டிருந்தாலும், முக்கியமான சில கேள்விகளுக்கு மட்டும் பதிலைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

1.             நீங்கள் குறிப்பிட்ட நீர்க்கரடியின் அரிய தன்மையை பூமியில் வாழும் உயிரினத்தின் மேல் செலுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்திருப்பின் அதில் எந்தளவு மனிதன் வெற்றி பெற்று இருக்கிறான். 

 

 

2.             மேற்சொன்ன ஆராய்ச்சி வெற்றியடைந்தால் மனிதன் இந்த அண்டசராசரத்தில் இன்னும் என்னென்ன விந்தைகள் செய்வானோ?

 

 

3.             வேற்றுக் கிரகவாசிகளுடன் மனிதன் திரும்பவும் தொடர்பு கொள்ளவில்லையா? இல்லை அதுவும் மறைக்கப்பட்டுவிட்டனவா?

 

 

4.             நாம் அனுப்பிய தகவல்கள் வேற்றுக் கிரகம் சென்றடைந்த கால அளவை விட அவர்கள் தொடர்பு கொண்ட கால அளவு மிகக்குறைவு என்ற போது, (அது எப்படி என்று தங்கள் விளக்கங்களைத் தாண்டி) ஏன் மனிதன் அதே முறையில் தொடர்பு கொண்டு இன்னும் பல தகவல்கள் பெற முனையவில்லை? இதற்குப் பின்னால் ஏதோ பெரிதாகப் புதைந்துள்ளதாக எனக்குப் படுகிறது. தங்களுக்குத் தெரிந்ததைப் பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

 

'நீர்க்கரடி' (Tardigrade) பற்றிய முதல் இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். நவீனமான இந்த உலகில் அனைத்துமே வியாபாரமாக ஆகிவிட்டன. எந்தத் துறையிலும் எப்படிப் பணம் பண்னலாம் என்னும் ஒரு நோக்கம் மறைமுகமாக வந்துவிடுகிறது. இதில் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் கூட, விதிவிலக்கில்லை என்று காட்டிக் கொண்டு வருகின்றனர். முன்னர் எல்லாம் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததும் மக்களின் பாவனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் கண்டுபிடிப்பாளர் அதை வெளிவிடுவது சகஜமானதாக இருந்தது. மக்கள் அதனால் மிகுந்த பயனையும் அடைந்தனர். ஆனால் இப்போதுள்ள வியாபார உலகில், ஒருவர் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுடித்தாலோ அல்லது அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தாலோ, முதலில் செய்வது அதன் காப்புரிமையைப் (Patant) பெற்றுக் கொள்வதுதான். இது ஒரு விதத்தில் தேவையானதும் கூட என்பதையும் இங்கு ஒத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே அதிகப் பணம் புரளும் இடங்கள் எதுவென்று பார்த்தால், அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மையங்கள்தான். அங்கு அரசுகளும், தனியார் நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி ஆராய்ச்சிகளை வழிநடத்துகின்றன. கிருமியிலிருந்து, ராக்கெட் வரை செய்யப்படும் அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் பணம் கொட்டிக் கொட்டிச் செலவழிக்கப்படுகிறது. அதனால் செய்யப்படும் அல்லது ஆரம்பிக்கப்படும் ஆராய்ச்சிகளை அவர்கள் காப்புரிமை செய்து விடுவதால், அந்த ஆராய்ச்சி முழுமையடையும் வரை, அவை பற்றிய முக்கிய செய்திகள் எவையும் வெளியே வந்துவிடாது. அனைத்தும் இரகசியமாகக் காக்கப்படும். ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் அது வெற்றியடைந்ததாகச் சொல்லப்படும். தோல்வியடைந்தால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கு அவை அமுக்கப்பட்டுவிடும். இந்த நடைமுறை நீர்க்கரடியின் ஆராய்ச்சிக்கும் சாத்தியமாகலாம். அவை பற்றிய ஆராய்ச்சிகள் ஏதோ ஒரு இடத்தில் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் உண்மையான நிலவரம் வெற்றியின் பின்னரே வெளியிடப்படும். அதற்கு அப்புறம்தான் மனிதன் செய்யப் போகும் விந்தைகளை நாம் அறிய முடியும். ஆனந்தின் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கான பதில்களை இந்தத் தொடரின் இறுதிப் பகுதிகளில் தெளிவாகச் சொல்ல இருக்கிறேன். சொல்லப் போனால் இந்தத் தொடரின் நோக்கமே அவை பற்றிய விளக்கத்தை அளிப்பதுதான்.

 

 

அடுத்து மணி தனுஷ்கோடியின் சந்தேகம் இது. அவர் 'டிஎன்ஏ' (DNA) பரிசோதனை பற்றிய ஒரு எளிமையான கேள்வியைக் கேட்டிருந்தார். "டிஎன்ஏ டெஸ்ட்டுகளில் 100 சதவீத ஒற்றுமை கிடைக்க வாய்ப்பில்லையா?" என்பதுதான் அவர் கேள்வி. கேள்வி மிகச் சாதாரணமாக இருந்தாலும், மிகவும் அர்த்தமுள்ளது. அதனால், அதற்குரிய விளக்கமான பதிலை நான் இங்கு கொடுக்க வேண்டும். 

 

 

ஒரு 'டிஎன்ஏ' பரிசோதனை என்பதைப் பரிசோதனை என்று சொல்வதை விட, ஒப்பிடுதல் என்றே சொல்ல வேண்டும். ஒரு குற்றம் நடந்தபோது, அந்த இடத்தில் இருக்கும் கைரேகைகளை எடுத்து, கணினியில் பதிந்து வைத்திருக்கும் அனைத்துக் குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்களல்லவா? அது போன்ற ஒரு முறைதான் இதுவும். அதனாலேயே இந்த DNA ஒப்பீட்டுப் பரிசோதனையையும் 'DNA fingerprint Analysis' என்பார்கள். ஆதிகால மனிதன் என்று நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் சுவடுகளில் உள்ள பரம்பரை அலகுகள் முதல், சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உலகின் அனைத்து உயிரினங்களினதும் பரம்பரை அலகுகள், தகவல் நிரல்களாகக் கணினியில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக புராதன எலும்புக் கூடொன்று நமக்குக் கிடைத்தால் அது மனிதனுடையதா, குரங்கினுடையதா, ஹோமோ சாபியனுடையதா, ஹோமோ எரக்டஸினுடையதா என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க அந்தத் தகவல் நிரலின் ஒப்பீடு நமக்கு உதவும். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, மில்லியன் கணக்கான செய்திகளைக் கொண்ட டேட்டாபேஸை கணினி மூலம் அமைத்திருக்கிறார்கள். அதை இயக்க 'Blast' போன்ற மென்பொருட்களும் உண்டு. ஒரு கற்கால எலும்புக் கூட்டின் தடயம் நமக்குக் கிடைக்கும் போது, அதன் பரம்பரை அலகை எடுத்து, கணினியில் உள்ள அனைத்து தகவல்களுடன் ஒப்பிடும் போது, அந்த எலும்புக் கூடு, யாருடையதுடன் அதிகம் ஒத்துவருகின்றது என்ற முடிவுக்கு நாம் வரலாம். இந்த முடிவுகளில் எப்போதும் நூறு வீதமான ஒற்றுமை இருக்க சாத்தியங்கள் இல்லவே இல்லை. ஒரேயொரு சமயத்தில் மட்டுமே இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவு நூறுவீதம் ஒத்துப் போகும். 

 

 

 

தற்கால மனிதர்களின் செல்லில் மரபணுப பரிசோதனைகளைச் செய்யும்போது, ஆயிரக் கணக்காகப் பதியப்பட்டிருக்கும் அந்தச் செய்திகளில், 90 வீதமானவை தேவையற்ற தகவல்களாகவே இருக்கின்றன.10 வீதமான தகவல்கள் மட்டும் தேவையானவையாகக் காணப்படுகின்றன. ஒரு மனிதனின் DNA வில், அந்த மனிதன் உருவான பரிணாம வளர்ச்சியின் கிளையில் உள்ள விலங்குகள் அனைத்தின் மரபு அடையாளங்களும் செய்திகளாகப் பதிந்திருக்கும். இவற்றில் நூறு வீத தகவல்கள் ஒத்துப் போவது எப்போது என்றால், ஒரு மனிதன் விபத்தினாலேயோ, கொலையுண்டோ இறந்துவிட்டால், அந்த மனிதனின் முகம் சிதைந்து போய், அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலையில், முன்னர் எடுத்த அந்த மனிதனின் டிஎன்ஏ பதிவுகள் கிடைத்தால் மட்டும், இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நூறு வீதம் சமமாக இருக்கும். தாயின் கருவில் ஒரே முட்டையில் உருவான இரட்டையர்களுக்கும் இந்த டிஎன்ஏ, 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பொருந்தி வரச் சாத்தியங்கள் உண்டு. பிள்ளைகள, பெற்றோர்கள், சகோதரர்கள் போன்ற உறவுகளில் ஒற்றுமை குறைந்த வீதத்தில், அடுத்த வரிசையில் வரும். கீழே இருக்கும் படத்தில் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது மகளையும் (D2), கடைசிப் பையனையும் (S2) யாரென்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். 

 

 

 

இனி மீண்டும் நாம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு வரலாம். அமெரிக்காவின் 'நியூ மெக்ஸிகோ' (New Mexico) மாநிலத்தில் ரோஸ்வெல் (Roswell) என்னும் கிராமத்தில் 2ம் தேதி ஜூலை மாதம் 1947ம் ஆண்டு நடந்த சம்பவத்தைத்தான் பறக்கும் தட்டு வரலாற்றிலேயே யாருமே நம்ப முடியாத சம்பவமாகக் கருதுகிறார்கள். ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மத்தை மூன்று சம்பவங்களாகப் பிரித்துப் பார்க்கும் வகையில், அங்கு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த மூன்று சம்பவங்களையும் உங்கள் வாசிப்புக்காகத் நான் இங்கு தருகிறேன். படித்ததும் நம்பமுடியாத அவற்றை நீங்கள் நடந்ததாக ஏற்றுக் கொள்ளவே போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகப் படியுங்கள். அந்தச் சம்பவங்கள் நடந்தவை என்ற முடிவுக்குத்தான் அங்கு வெளியான அனைத்துச் செய்திகளும் நம்மை இட்டுச் செல்கின்றன. சம்பவங்கள் மூன்றாக இருந்தாலும், அவை ஒன்றுடன் ஒன்று இணைந்த, ஒரே சம்பவமாகத்தான் கருதுகிறார்கள். இனி அவை பற்றிய  முடிவுகளை எடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிட்டு சம்பவங்களுக்குச் செல்கிறேன்.

 

 

 

சம்பவம் 1: 

 

 

மாக் பார்ஸெல் (Mac Barzel) என்னும் 'கௌபாய்' (Cowboy) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரோஸ்வெல் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்தபோது, இடி போன்ற பேரிரைச்சல் ஒன்றையும் பெரிய வெளிச்சத்தையும் அவதானித்தார். மழை பெய்வதற்காக இடியுடன் மின்னலடிக்கிறது என்ற நினைப்புடன் அவர் இருந்துவிட்டார். ஆனால் அடுத்த நாள் ஏதோ ஒரு விபரீதத்தைத் தான் காணப்போகிறோம் என்று அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த நாள் அவர் குதிரையில் ஆளரவமற்ற பரந்திருந்த வெளியினூடாகச் சென்றபோது, அந்த இடமெங்கும் சூரிய ஒளியில் மின்னியபடி, சிறு சிறு துண்டுகளாகச் சிதறிய நிலையில் பல உலோகத் தகடுகளும், உலோகத் துண்டுகளும் கிடப்பதை அவதானித்தார். 400 அடி அகலத்துக்கும், ¾ மைல் நீளத்துக்கும் இடைப்பட்ட சமவெளியெங்கும், மிக மிக மெல்லிய பாலித்தீன் போன்ற வடிவில், வெள்ளி நிறத்தில் அந்தத் தகடுகள் காணப்பட்டன. அவை ஆயிரக் கணக்கில் எங்கும் சிதறிக் கிடந்தன. தகடுகளுடன், என்னவென்று சொல்ல முடியாத உலோகத் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. குதிரையில் இருந்து இறங்கிய மாக், அந்த உலோகத் துண்டுகளையும், பாலித்தீன் போன்ற உலோகத் தகடுகளையும் எடுத்துப் பார்த்தார். சுற்றிவர எங்கும் நிலத்துடன் எதுவும் மோதியது போல அடையாளம் இருக்கவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. பாலித்தீன் போன்ற அந்த பொருளைக் கையில் எடுத்துப் பார்த்தார். அப்படி ஒரு மென்மையான பாரமற்ற, இலகுவான ஒன்றை அவர் தன் வாழ்நாளில் அதுவரை கண்டதே இல்லை. எடுத்ததைக் கைகளுக்குள் வைத்துக் கசக்கிப் பார்த்த போது, ஒரு அதிசயம் அவரின் கண் முன்னே நடந்தது. அந்தப் பொருள் கசங்கிய பின்னர் தானாகவே மீண்டும் நேராகி பழைய நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட ஒரு மெட்டல் தகடு போன்று காணப்பட்ட அந்த பாலித்தீன் பொருள், மிகவும் கடினமான ஒன்றாகக் காணப்பட்டது. அதை அவரால் கிழிக்கவோ, வளைக்கவோ, அதிகம் ஏன் எரிக்கவோ கூட இயலாமல் போயிற்று. அப்போதுதான் அவருக்கு மனதில் அந்த விபரீதப் பயம் தோன்றியது. இது நிச்சயம் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல என்னும் பயம் அவரைத் தொற்றிக் கொண்டது. பார் பிரேட்ஸெல் உடனடியாக அந்தத் துண்டுகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்து செரீஃபின் உதவியுடன் ரோஸ்வெல் நகரத்து இராணுவத்தின் விமானத் தளத்துக்கு (Roswell Army Airbase) தகவலை அறிவித்தார். 

 

 

தகவல் அறிவிக்கப்பட்டதும், விமானங்கள் பற்றிய நுண்ணிய அறிவுடைய மேஜர் ஜெஸ்ஸி மார்செல் (Major Jesse Marcel) என்னும் இளைஞர் தனது லெப்டின்ட்டுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். ஜெஸ்ஸி விமானங்களின் விபத்துகள் பற்றிச் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த ஜெஸ்ஸி அங்கிருந்த உலோகத் துண்டுகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். பல விமானங்களைப் பார்த்த அவருக்கு, அந்தத் துண்டுகள் எந்த விமானத்தின் துண்டுகளோ, அல்லது பூமியில் இருக்கும் வேறு எதனுடையதோ இல்லையென்று உடனே புரிந்து போனது. அவர் உடனடியாக ஒன்றைச் செய்து பார்த்தார். மிக மெல்லியதாக இருந்த அந்தத் தகடுகளில் ஒன்றை எடுத்து, ஒரு சுத்தியலால் அடித்துப் பார்த்தார். அந்தத் தகடு அசைந்துகூடக் கொடுக்கவில்லை. அதில் ஒரு சிறிய கீறல் கூட ஏற்படவில்லை. இத்தனைக்கும் அவர் பாவித்த சுத்தியல் 16 இறாத்தல் எடையுள்ளது. இப்படி ஒரு அதிசயத்தை அவர் கண்டதே இல்லை. இந்தச் சம்பவத்துக்கு மாக்கும், அவருடன் கூட வந்த லெப்டின்டும் சாட்சிகளாக இருந்தார்கள். அங்கிருந்து எடுத்த உலோகத் துண்டுகளில், தகடுகள் மட்டுமல்லாமல், உலோகத் தண்டுகளும் பல காணப்பட்டன. அவற்றில் தன்னால் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு இராணுவத் தளத்துக்குச் சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியில் தனது வீட்டிற்குச் சென்று அந்தப் பொருட்களை தனது மனைவிக்கும், மகனுக்கும் காட்டிவிட்டுச் சென்றார். ஜெஸ்ஸி தன்னுடய மகனிடமும், மனைவியிடமும், "உலகத்தில் இல்லாத ஒரு பொருளை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். மீண்டும் இதைப் பார்க்கப் போவதில்லை" என்று சொல்லியுமிருக்கிறார். அப்போதுதான் அவரது மகன் அந்த உலோகத் தண்டுகளில் இருந்த விசித்திர எழுத்துகளை ஜெஸ்ஸிக்குக் காட்டியிருக்கிறார். அந்த உலோகத் தண்டுகளில், புள்ளிகள் கோடுகளாலான சித்திர எழுத்துகள் போன்றவை காணப்பட்டன. இது அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

 

மறுநாள் ஜெஸ்ஸி கொடுத்த ஆதாரங்கள், தகவல்கள் அடிப்படையில் இராணுவத் தளத்தின் தளபதியான வில்லியம் பிராண்டி (William Brandy) பத்திரிக்கைகளுக்கு பறக்கும் தட்டு ஒன்று ரோஸ்வெல்லில் வீழ்ந்து வெடித்துச் சிதறியிருப்பதாகப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி அமெரிக்காவையே அதிரவைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள்தான் அமெரிக்க அரசின் மூடி மறைக்கும் தந்திரத்துக்கு ஒரு உதாரணமாக அமைந்தது. இன்றுவரை நாஸாவை உலகமே நம்பாமல் இருப்பதற்குக் காரணமாகவும் அது அமைந்தது. இந்தத் தொடரின் "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்னும் தலைப்புக் கூட இதிலிருந்துதான் புறப்பட்டது என்று கூடச் சொல்லலாம். 

 

 

 

வில்லியம் பிராண்டியின் பத்திரிகைப் பேட்டிக்கு அடுத்த தினமான 8ம் தேதி யூலை மாதம் 1947ம் ஆண்டு, ரோஸ்வெல் நகரமே அமெரிக்க இராணுவத்தால் முற்றுகையிட்டது போலச் சூழப்பட்டது. எங்கும் மிலிட்டரி போலீஸ் என்று சொல்லப்படும் இராணுவத்துக்கே காவலதிகாரிகளாக கடமையாற்றும் இராணுவக் காவல் படையால் சூழப்பட்டது. அதிரடியாக பிரிகேடியர் ஜெனரலான ரோஜர் ரமி (Brig. Gen. Roger Ramey) பத்திரிகைகளை அழைத்து, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், "ரோஸ்வெல் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலையை அறிய ஏவவிடப்பட்ட பலூன் (Weather Baloon) ஒன்று வெடித்துச் சிதறியது. அதைத் தவறுதலாகப் பறக்கும் தட்டு என்று அவசரப்பட்டு அறிவித்து விட்டோம். தவறுக்கு மன்னிக்கவும். அது பறக்கும் தட்டே இல்லை. சாதாரண பலூன்தான்" என்றிருந்தது. சில மணி நேரங்களிலேயே அனைத்தும் மாறின. எல்லாமே வேறு தடத்துக்குத் திரும்பின.

 

 

இங்கு முக்கியமாகச் சொல்ல வேண்டிய விசயம் ஒன்று உண்டு. மேலே கூறிய ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். வாழ்க்கையிலும், பதவியிலும் நல்லதொரு இடத்தில் இருந்தவர்கள். பறக்கும் தட்டு சம்பந்தமாக அவர்களில் ஒருவர் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒருவரோடு ஒருவர் சம்பந்தமே இல்லாத பல நபர்கள் கூட்டுச் சேர்ந்து அப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்க முடியுமா? கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. காற்று நிறைந்த பையை ஒரு பக்கம் அழுத்தும்போது, அது மறு பக்கத்தில் பீறிட்டு வெளியே வரத் துடிக்குமே அது போல, ரோஸ்வெல் சம்பவம் வேறு ஒரு வடிவத்தை எடுத்தது. அந்த வடிவம் இன்னும் மோசமான வடிவமாக இருந்தது. இதுவரை நாம் அறிந்ததே மலைப்பாக இருக்க, இது அதைவிடப் பெரிய மலைப்பைத் தந்தது. ரோஸ்வெல் பறக்கும் தட்டின் இரண்டாவது சம்பவம் அது. 

 

 

 

மாக் பார்ஸெல் வெடித்துச் சிதறிய துண்டுகளைக் கண்ட அதே தினங்களில், பார்னி பார்னெட் (Barney Barnett) என்னும் எஞ்சினியர், நியூ மெக்ஸிகோவின் இன்னுமொரு இடத்தில் கீழே விழுந்த ஒரு ஒரு மிகப்பெரிய பொருளைக் கண்டார். அவர் கண்டது என்ன தெரியுமா? பறக்கும் தட்டேதான். முழுமையான பறக்கும் தட்டு ஒன்று பூமியில் விழுந்து கிடந்ததை பார்னி கண்டார். அது மட்டுமில்லை அந்தப் பறக்கும் தட்டுக்கு அருகே, கீழே இறந்து விழுந்த நிலையில் அவர் எதைக் கண்டார் தெரியுமா? 'ஏலியன்' என்று சொல்லப்படும் வேற்றுக் கிரக மனிதனின் முழு உடலை. "பூவைத்தான் காதில் வைப்பார்கள். நான் பூச்சாடியையே உங்கள் காதில் வைக்கப் பார்க்கிறேன்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? ஆனால் இவையெல்லாமே உண்மையென்றுதான் சம்பவங்கள் அனைத்தும் சொல்கின்றன. 

இரண்டாவது சம்பவத்தில் கண்ட ஏலியனுக்கும், முதல் சம்பவத்துக்கும் சம்பந்தம் உண்டா? முதல் சம்பவத்தில் அதன் பின்னர் என்ன நடந்தது? உண்மையில் இரண்டாவது சம்பவத்தில் ஏலியனை பார்னி கண்டாரா? அந்த ஏலியனுக்கு அப்புறம் என்ன நடந்தது? அந்த மூன்றாவது சம்பவம் என்ன? என்னும் கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த வாரம் சந்திப்போம். 

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:52:03 PM12/3/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா

இல்லாத ஏலியன்களையும், பறக்கும் தட்டுகளையும் இருப்பது போல, நான் கதை சொல்வதாகப் பலர் நினைக்கலாம். ஹாலிவுட்டில் படமெடுப்பவர்கள் கதையளப்பது போல, நானும் உங்களிடையே கதையளக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான். நானும் உங்களைப் போல, அறிவியலை முழுமையாக நம்பும் ஒருவன்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுப்பவனல்ல. ஆனால் இப்போது ஏலியன்கள் இருக்கின்றன என்று நான் எழுதுவது, மூட நம்பிக்கையாக, முரண்பாடாய் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்று அறிவியலில் மிக உச்சத்தில் இருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) முதல், அனைத்து விஞ்ஞானிகளும் ஏலியன்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருப்பதை எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில்தான் இப்போது பிரச்சினைகள். ஆனால் நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும், பூமியில் ஏலியன்கள் வந்ததற்குச் சாட்சிகளாக நடந்தவை. அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாட்சிகள் என்று நான் சொல்வது தனிமனித சாட்சிகளையல்ல. பலர் சேர்ந்த கூட்டமான சாட்சிகள். அத்துடன் அந்தச் சாட்சிகள், அரசின் மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். மதிக்கப்படும் பிரஜைகள்.

இந்த வகையில் பறக்கும் தட்டு விவகாரத்தில் உலகையே அதிர வைத்த சம்பவம்தான் ரோஸ்வெல் (Roswell) பறக்கும் தட்டு மர்மம். ஐநூறுக்கும் அதிகமான, ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாதவர்களைச் சாட்சிகளாகக் கொண்ட சம்பவம் அது. ஒருவர் பொய் சொல்லலாம், இருவர், மூவராவது ஒன்று சேர்ந்து பொய் சொல்லலாம். ஐநூறு பேர் பொய் சொல்வார்களா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் இன்று வரை தெளிவில்லாமல், ஒரு முடிவுக்கு வரமுடியாமல் மர்மத்திலும், குழப்பத்திலும் வைத்திருக்கும் ரோஸ்வெல்லைப் பற்றி நம்மவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் மிகுந்த வேதனையானது. இது பற்றி ஆயிரக் கணக்கான புத்தகங்களும், பல திரைப்படங்களும் கூட வந்துவிட்டன. ரோஸ்வெல் பறக்கும் தட்டுச் சம்பவம் பற்றிய டாக்குமெண்டரி வராத அமெரிக்க, ஐரோப்பியத் தொலைக்காட்சி நிறுவனங்களே இல்லை என்று சொல்லலாம். உலகப் பிரசித்திபெற்ற 'டைம்' (Time) இதழ் போன்ற பிரபலமான அனைத்து இதழ்களிலும், பத்திரிகைகளிலும் ரோஸ்வெல் பற்றித் தெளிவான கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதிகம் ஏன், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லாரி கிங்' (Larry King) டாக் ஷோவில் கூட இது பற்றிப் பேசிச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் சார்ளி ஷீனின் (Charly Sheen) அப்பாவான மார்ட்டின் ஷீன் (Martin Sheen) நடித்து வெளியான 'Roswell, the UFO Cover-up' என்னும் படம் அதில் பிரபலமானது. அதுமட்டுமல்ல, 'Roswell' என்ற பெயரில் 1999ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை, தொலைக் காட்சித் தொடர் ஒன்று வெளியாகிச் சக்கை போடு போட்டது என்றால் பாருங்கள். இவை இப்படியிருக்க, நமது நாட்டில் இந்தத் தகவல்கள் எதுவும் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிந்திருக்கவேயில்லை. இப்போது அது பற்றி நான் சொல்லும்போது, புதிதாகக் கதை விடுவது போல நினைக்கிறார்கள். இன்னுமொன்றையும் நான் சொல்லிவிட வேண்டும். இதுவரை நான் விட்ட கதையாவது பரவாயில்லை. இனிமேல் நான் விடப் போகும் கதைதான் மிகப் பயங்கரமானது. அதற்கு உங்களைத் தயார் படுத்துவதற்காகவே இவ்வளவு எழுத வேண்டியிருக்கிறது. இனி நாம் ரோஸ்வெல்லுக்குச் செல்லலாம்.

கடந்த வாரம் ரோஸ்வெல்லில் நடந்ததாகச் சொல்லிய 'சம்பவம் 1' இல், பிரிகேடியர் ஜெனரலான ரோஜர் ரமி (Birg.Gen.Roger Ramey), விழுந்து வெடித்தது பறக்கும் தட்டு அல்ல, வானிலை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தும் பலூன்தான் என்று சொன்னாரல்லவா? அப்படிச் சொல்வதற்குச் சற்று முன்னர் அமெரிக்க அரசினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தைப் பார்ப்போமா....?

வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பலூன், ரோஸ்வெல்லில் வெடித்துச் சிதறியது என்ற கதை பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ரமியால்  வெளியிடப்பட்டது. ஆனால் இந்தக் கதையை யாருமே நம்பவில்லை. இரண்டாம் உலக யுத்தங்கள் நடந்து ஓய்திருந்த வேளையென்பதால், மக்கள் இதைத் தட்டிக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, அமெரிக்காவில் நிலைமைகள் சீரடைந்து கொண்டு வந்த நேரங்களில் ரோஸ்வெல் பற்றிய உண்மையை வெளியிட வெண்டும் என மக்கள் கேட்கத் தொடங்கினர். வெள்ளை மாளிகைக்கு முன்னால், ஆர்ப்பாட்ட முறையில் மக்கள் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஊடகங்களும் தொடர்ச்சியாக இது பற்றிப் பேச ஆரம்பித்தன. இதனால், 47 வருடங்களுக்குப் பின்னர், 1994ம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்துக்குப் புதிதாகக் கதையொன்று தயார்படுத்தப்பட்டது. சாதாரண வானிலை பலூன் என்பது எடுபடவில்லையென்பதால், சோவியத் ரஷ்யாவின் அணுகுண்டு ஆராய்ச்சிகளை உளவு பார்ப்பதற்கென மிகவும் விசேசமாக வடிவமைக்கப்பட்ட பலூன், 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், ராடார் சாதனங்களில் அகப்பட முடியாதபடி அது இருந்தது என்றும் சொன்னார்கள். அப்படி ரஷ்யாவை பலூன் மூலம் உளவு பார்ப்பதை 'ஆபரேசன் மொகுல்' (Operation Mogul) என்ற பெயரில் அழைத்ததாகவும் அந்தப் புதுக்கதையில் சொன்னார்கள். அப்படிப்பட்ட பலூனைப் பறக்கவிட்டுப் பரீட்சிக்கும் போதுதான் அது சாதனங்களுடன் வெடித்துச் சிதறியது என்றார்கள். 

மேஜர்.ஜெஸி மார்செல் (Jesse Marcel) வெடித்துச் சிதறியிருந்த துண்டுகளில் தன்னால் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு இராணுவத் தளத்துக்குச் சென்றார். போகும் வழியில் தனது மனைவிக்கும், மகனுக்கும் (ஜூனியர் ஜெஸி மார்செல்) அவற்றைக் காட்டிவிட்டுச் சென்றார். பின்னர் அவற்றை முறைப்படியாக இராணுவத் தளத்தில் ஒப்படைத்தார். அதன் பின்னர்தான் வில்லியம் பிளாஞ்சார்ட் (William Blanchard) என்னும் இராணுவத் தள அதிகாரி பத்திரிகைகளுக்குப் பறக்கும் தட்டுப் பற்றிப் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டியினால் அமெரிக்க அரசு அதிர்ந்து போனது. உடனடியாக, பெரும்படை மிலிட்டரிப் போலீஸ் ரோஸ்வெல்லுக்கு அனுப்பப்பட்டது. பிளாஞ்சார்ட்டால் கொடுக்கப்பட்ட பேட்டியை எப்படி மறுக்கலாம் எனத் திட்டங்கள் தீட்டப்பட்டன. முதலில், சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறிய துண்டுகள் அனைத்தும் இராணுவப் போலீஸாரினால் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் அகற்றப்பட்டன. அதற்கு மட்டும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டனர். யாரும் எதையும் எடுத்துப் பாக்கெட்டில் வைக்க முடியாதவாறு அவர்களும் கண்காணிக்கப்பட்டனர். 

பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ரமியால், ஜெஸி மார்செல் உடனடியாக ராணுவத் தளத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் சேகரித்த துண்டுகளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, இராணுவத் தளத்தில் முதல் நாள்தான் ஒப்படைத்திருந்தார். அந்தப் பெட்டியை அவரையே திறக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டார். பெட்டியைத் திறந்த ஜெஸி அதிர்ந்தேவிட்டார். அந்தப் பெட்டிக்குள் இருந்தவை எதுவுமே அவர் முதல் நாள் கொடுத்தவை அல்ல. உண்மையான ஒரு வானிலை ஆராய்ச்சி பலூனின் துண்டுகள் அங்கே காணப்பட்டன. அவரது முகம் மாறுவதை அவதானித்த உயரதிகாரி, 'இவைதான் அவர் கண்டெடுத்த பொருட்கள் எனவும். அதையே அவர் இனிச் சொல்ல வேண்டும்' எனவும் ஜெஸிக்குக் கட்டளையிட்டார். இவையெல்லாம் இனி அமெரிக்க அரசின் இராணுவ இரகசியமான 'டாப் சீக்ரெட்' வகையில் அடங்கும் எனவும் இது பற்றி அவர் இனி வாயே திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டார். கட்டளைகளின் கடுமை அதிக தாக்கங்களைக் கொடுக்கக் கூடிய நேரம் அது. தான் ஏதோ ஒரு பெரிய சதி வலைக்குள் அகப்படுகிறோம் என்று ஜெஸிக்குத் தெரிந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாத மௌன சாட்சியாக அடங்கிப் போனார். 

இராணுவத்தில் இருக்கும் வரை ஜெஸி மார்செல்லால் எதுவும் சொல்ல முடியவில்லை. அமெரிக்க அரசின் கட்டுக் கதைகளைப் பல காரணங்களினால் (அவை என்ன காரணங்கள் என்பது சம்பவம் 2, 3 ஆகியவற்றில் தெரிய வரும்) மக்கள் யாருமே நம்பத் தயாராக இருக்கவில்லை. இவையெல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளியாகத் தன் வாயைத் திறந்தார் ஜெஸி மார்செல். அவர் வாயைத் திறந்தது 32 வருடங்களுக்குப் பின்னர் 1979ம் ஆண்டு. அதாவது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர். தொலைக் காட்சிக்கும் பத்திரிகைகளுக்கும் நடந்த உண்மையை அப்படியே வெளியிட்டார் அவர். நடந்த உண்மைகளை ஜெஸி மாத்திரம் சொல்லவில்லை. ரோஸ்வெல் சம்பவத்தை முதன் முதலாகப் பார்த்த மாக் பிரேட்ஷெலும் (Mac Brazel) பத்திரிகைகளுக்குப் பேட்டிகளைக் கொடுத்தார். ரோஸ்வெல்லில் இந்தப் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்த போது, ரோஸ்வெல்லுக்கு அருகே, நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் சான் அகஸ்டின் (San Agustin) என்னுமிடத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது.

சம்பவம் 2:

பார்னி பார்னெட் (Barney Barnett) என்னும் பொறியியலாளர் ஒருவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, தூரத்தே ஒரு வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டார். அந்தப் பொருளின் வடிவம் அவருக்கு ஒரு ஈர்ப்பைக் கொடுக்க, வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தப் பொருளை நோக்கி நடக்கத் தொடங்கினார். கிட்ட நெருங்கிய போதுதான் அந்தப் பொருளின் பிரமாண்டம் அவருக்குத் தெரிந்தது. அவர் கண் முன்னே, மிகப்பெரிய பறக்கும் தட்டு ஒன்று நிலத்தில் விழுந்து மோதியது போலக் கிடந்தது. வட்ட வடிவமாக்க் காணப்பட்ட அந்தப் பறக்கும் தட்டு அவருக்குள் பதட்டத்தைத் தோற்றுவித்தது. பார்வையை சற்று நகர்த்திப் பார்த்த போது, நிலத்தில் விழுந்து கிடந்த உருவம் பயத்தின் உச்சிக்கே அவரைக் கொண்டு சென்றது. பெரிய தலை, அது போலவே நீண்ட பெரிய கண்கள், சிறிய மெல்லிய உடல், நீண்ட கைகளில் நான்கே நான்கு விரல்கள். ஒட்டு மொத்தத்தில் மனிதனைப் போன்ற உருவமாக இருந்தாலும், நாம் ஏலியன் என்று தற்போது கற்பனை செய்யும் வடிவத்தில் காணப்பட்டது அந்த உருவம். ஆனால் உயிரற்ற நிலையில் காணப்பட்டது. மொத்தமாக நான்கு ஏலியன்கள் அங்கு காணப்பட்டன. பயத்தால் என்ன செய்வதென்றே தெரியாமல் திரும்ப நினைக்கும் போது, அந்த வழியில் இளைஞர்கள் சிலர் நடந்து வந்தது அவருக்கு ஆறுதலளித்தது. அவர்களும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அருகே வந்தனர். விசாரித்ததில், அவர்கள் தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள் என்று தெரிய வந்தது. அனைவரும் பறக்கும் தட்டையும், ஏலியன்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு இராணுவ வாகனங்களில் இராணுவப் போலீஸார் வந்து இறங்கினர். பார்னி உட்பட அனைவரும் குற்றவாளிகள் போல அவர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். அனைவரும் கமாண்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். கமாண்டர் அவர்களிடம், "நீங்கள் இப்போது எதையும் காணவில்லை. நீங்கள் கண்டதாக எந்தச் சம்பவமும் இங்கு நடைபெறவில்லை. இது அமெரிக்க அரசாங்கத்தினால் இடப்படும் கட்டளை. இதை மீறுவது அரச குற்றம் புரிந்தவர்களாவார்கள்" என்று மிகக் கடுமையான, மிரட்டும் குரலில் சொன்னார். மிரட்டப்பட்ட விதம், மிரட்டப்பட்ட தொனி ஆகியவை அவர்கள் அனைவருக்கும் உயிர்பயத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஏலியன்களைக் கண்ட மிரட்சி அவர்களிடமிருந்து விடைபெறு முன்னர் வந்த அடுத்த பயமுறுத்தல் அவர்களை அப்படியே ஒடுங்கப்பண்ணியது. யாரும், எதையும் அதற்கு அப்புறம் வெளியே சொல்லவில்லை. பார்னி மட்டும் தனது நெருங்கிய நண்பனிடம் இரகசியமாக இது பற்றிச் சொல்லி வைத்தார்.

பார்னி 1969ம் ஆண்டு இறந்தார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னர், தான் பார்த்ததை அப்படியே பத்திரிகைகளுக்குப் பேட்டியாகக் கொடுத்தார். 'சம்பவம் 1' ஐ நம்பும் பலர், பார்னி கண்டதாகச் சொல்வதை ஒருபோதும் நம்பத் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் அந்தச் சந்தேகத்தை 'சம்பவம் 3' முறியடித்தது. 'சம்பவம் 3' பற்றிச் சொல்வதற்கு முன்னர், நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். 1, 2, 3 சம்பவங்களில் வரும் நபர்கள் எவரும், ஒருவருடன் ஒருவர் சம்பந்தப்பட்டவர்கள் கிடையாது. அதற்குப் பின்னரும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ரோஸ்வெல்லைச் சுற்றி அதே தினங்களில் நடந்த சம்பவங்கள் இவை. 'சம்பவம்1', 'சம்பவம் 2' ஆகியவற்றை நீங்கள் சரியாகப் பார்த்தீர்களானால், பூமியில் விழுந்த பறக்கும் தட்டு, ஒன்று அல்ல இரண்டு என்பது தெரிய வரும். ஒரு பறக்கும் தட்டு முழுமையாகச் சுக்கு நூறாக ரோஸ்வெல்லில் வெடித்துச் சிதற, மற்றது சான் அகஸ்டினில் முழுமையாகக் கிடைத்ததாகவும் தெரிய வருகிறது. இனி நாம் 'சம்பவம் 3 ' க்குப் போகலாம்.  

 

ரோஸ்வெல்லில் இறந்தவர்களின் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் இல்லமான Ballard இல் பணிபுரிந்த க்ளென் டெனிஸ் (Glenn Dennis) என்பவருக்கு, அவரசரமாக ரோஸ்வெல் இராணுவ வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு வருகிறது. அழைப்பை ஏற்று, உடனே அங்கு செல்கிறார். அங்கு சென்றபோது வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்த பொருட்கள் ஒருவித நெருடலை அவருக்கு ஏற்படுத்தின. தற்செயலாக அதைப் பார்த்த போது, மிக மிக வித்தியாசமான உடலமைப்புடன், ஒரு இறந்து போன உருவத்தை என்றுமே பார்த்திராத வெள்ளி நிறத் துணியினால் சுற்றி வைத்திருந்தது தெரிந்தது. எல்லாம் சில செக்கன்ட்களுக்குள் நடந்தது. அவர் அழைக்கப்பட்டதோ வேறு ஒருவரால் வேறு ஒரு காரியத்துக்காக. ஆனால் அவர் அங்கு சென்ற போது, வைத்தியசாலை எங்கும் இராணுவப்' போலீஸார் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த வைத்தியசாலைக்குப் பலமுறை அவர் வந்திருந்தபடியால், நேராக உள்ளே சென்றார். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றதும் அவரை இராணுவப் போலீஸார் வழிமறித்தனர். இங்கு எதற்காக வந்தார்' என்று விசாரித்தனர். அதற்கு அவர், தான் வந்த காரணத்தைச் சொன்ன போது, 'இப்போது அவற்றுக்கு அவசியமில்லை. உடனே இங்கிருந்து சென்றுவிடவும்' என்று அவருக்குக் கட்டளையிட்டனர். வெளியே இறந்த ஒரு உடலைக் கண்டதால், ஏதோ ஒரு ஆர்வத்தில், "வெளியே இருக்கும் இறந்த உடல் சம்மந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் உதவத் தயாராக இருக்கின்றேன்" என்று அவர்களிடம் கூறினார். மிகவும் கோபம் கொண்ட அவர்கள், 'அவரது உதவி எதுவும் தேவையில்லையெனச் சொல்லி, அவரை வெளியே தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்த இராணுவ உயரதிகாரி, மீண்டும் அவரை அழைத்துவரும்படி கூறினார். க்ளென் டெனிஸ் வந்ததும், "இங்கு நீ எதையும் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்ததாக வெளியே சொல்லக் கூடாது. இது அரச கட்டளை" என்று கடுமையான குரலில் சொன்னார். அதற்கு க்ளென் டெனிஸ், "நான் ஒரு அமெரிக்கப் பிரஜை. என்னை நீங்கள் இப்படிப் பயமுறுத்த முடியாது" என்றார். உயரதிகாரி மிகவும் மூர்க்கமாக, அவரை தாக்குவது போலச் சென்று, "உயிருடன் இருக்க விருப்பமிருந்தால் வாயை மூடிக்கொண்டு நீ இருக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று கடும் குரலில் எச்சரித்தார். அவரை வெளியே தள்ளி விடும்படி உத்தரவும் கொடுக்கப்பட்டது. அதன்படி வெளியே கொண்டுவந்து விடப்பட்டார் டெனிஸ். இதையெல்லாம் சில நர்ஸ்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு நர்ஸ் அவரின் அருகே வந்து, " இங்கே நீங்கள் நிற்க வேண்டாம். இங்கு நிற்பது உங்கள் உயிருக்கே ஆபத்தானது. முடிந்தால் நாளை மாலை ரெஸ்ட்டாரெண்டில் என்னைச் சந்தியுங்கள்" என்று குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டின் பெயரையும் சொன்னாள்.  

குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டில் அந்த நர்ஸை டெனிஸ் சந்தித்தார். அவள் மிகவும் பதட்டத்துடனும், பயத்துடனும் காணப்பட்டாள். அவள் அந்த இராணுவ ஹாஸ்பிடலில் நர்ஸாக இருப்பதாகவும், தன்னுடன் மேலும் ஐந்து நர்ஸுகள் பணிபுரிவதாகவும் கூறினாள். ஏனோ டெனிஸைக் கண்டதும் பேசவேண்டும் போல இருந்ததாகவும் சொன்னாள். அவள் பேச விரும்பியதுதான் பயங்கரமான விசயமாக இருந்தது. இராணுவ வைத்தியசாலைக்குத் திடீரென இராணுவப் போலீஸார் வந்ததாகவும், அவர்கள் விசித்திரமான உடலமைப்புடைய நான்கு உடல்களைக் கொண்டு வந்ததாகவும், அதில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவருக்கு உயிர் இருக்கலாம் என்றும் சொன்னாள். அத்துடன் அந்த மூன்று இறந்த உடல்களையும், பிரேதங்களை வெட்டிப் பரிசோதனை செய்வது போலப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தானும் சில நிமிடங்கள் அங்கே நின்றதாகவும் சொன்னாள். அந்தக் காட்சியே மிகவும் அருவெறுப்பாகவும், பயங்கரமாகவும் இருந்ததாகச் சொன்னாள். அத்துடன் அங்கிருந்த காகிதம் ஒன்றை எடுத்து, அந்த உருவங்கள் எப்படி இருந்தன என்று வரைந்தும் காட்டினாள். 'சம்பவம் 2' இல் பார்னி கூறியது போன்ற வடிவிலேயே அந்த உருவங்களும் காணப்பட்டன. அத்துடன் நான்கு விரல்கள் இருந்ததாகவும் வரைந்த காகிதத்தில் காணப்பட்டது. காகிதத்தை டெனிஸிடம் கொடுத்துவிட்டு, மிகவும் பயத்துடன் விடைபெற்றாள் அந்த நர்ஸ். 

அந்த நர்ஸை அதற்குப் பின்னர் டெனிஸ் காணவே இல்லை. விசாரித்ததில் மிகுதி ஐந்து நர்ஸ்கள் மட்டுமே இருந்தார்கள். ஆறாவதாக இருந்த அந்த நர்ஸ் காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன நடந்தது? உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எந்தச் செய்தியும் தெரியவில்லை. நிலைமையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக டெனிசுக்குப் புரியத் தொடங்கியது. பயத்தினால் 1989ம் ஆண்டுவரை வாயே திறக்காத டெனிஸ் அதன் பின்னர் நடந்தவற்றை வெளியே சொல்லத் தொடங்கினார். அவர் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி முதல் நர்ஸுகள் வரை அங்கு இருந்ததைப் பின்னர் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றே உறுதி செய்தது. டெனிஸ் சொன்ன சம்பவம் உண்மைதான் என அதுவே நம்ப வைத்தது.  

இவ்வளவு விசயங்களும் ரோஸ்வெல்லில் நடந்தபோது, யார்தான் பறக்கும் தட்டுகள் இருக்கிறது என்று நம்ப மறுப்பார்கள்? ஆனாலும் இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் மறுப்பாக பதில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில், முதல் சம்பவத்தில் வெடித்துச் சிதறியது பலூன் எனவும், இரண்டாவது சம்பவத்தில் பார்னி பார்த்தது, இராணுவத்தளத்தில் விபத்துக்களின் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தும் டம்மி பொம்மைகள் என்றும், மூன்றாவது சம்பவத்தில், இராணுவ அதிகாரி வேறொரு விமான விபத்தில் சிக்கிய இராணுவத்தினரைக் கொண்டு வந்ததாகவும், அந்தச் சம்பவ நேரத்தில்தான் டெனிஸ் அங்கு வந்ததாகவும் சொல்லியிருந்தது. மொத்தத்தில் மூன்று சம்பவங்களையும் இல்லை என்று அமெரிக்க அரசு மறுக்கவில்லை. அவற்றுக்கு எப்படிச் சரியான பதில் சொல்லலாம் என்று அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க அரசைப் பெரும்பான்மையாக மக்கள் நம்பவில்லை.

மேலே சொல்லப்பட்ட சம்பவங்களெல்லாம், விக்கிரமாதித்தன் கதைகளில் வருபவை போலவே உங்களுக்குத் தோன்றும். எந்த வகையிலும் நம்ப முடியாத வகையில் அவை அமைந்திருப்பது இன்னும் சந்தேகச் சூழலிலேயே உங்களை வைத்திருக்கும். ஆனால் இத்துடன் சம்பவங்கள் முடிந்து விடவில்லை. இதைத் தொடர்ந்து நடந்த நான்காவதும், ஐந்தாவதும் சம்பவங்கள் இன்னும் ஆச்சரியமானவை. அவை நிச்சயம் உங்களை நம்பிக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும். அந்த சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்டவர் வேறு யாருமல்ல, அமெரிக்க ஜனாதிபதியே சம்பந்தப்பட்டிருக்கிறார்.  

அவை என்ன சம்பவங்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:53:31 PM12/3/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 22
ராஜ்சிவா

ஏலியன்கள் என்று சொல்லும்போது அனைவருக்கும் முன்னால் வந்து நிற்கும் ஒரே பெயர் 'ரோஸ்வெல்'. இன்று கூட ரோஸ்வெல் நகரத்துக்கு நீங்கள் சென்றால், அந்த நகரம் எங்கும் பறக்கும் தட்டுகளையும், ஏலியன்களையும் காணலாம். பொம்மைகளாகவும், விளம்பரங்களாகவும் ஒவ்வொரு கடைகளிலும், வீடுகளிலும், பெரும் சந்தைகளிலும் அங்குள்ள மக்கள் வைத்திருப்பார்கள். அந்த நகரமே தன்னை ஒரு ஏலியன் நகரமாக மாற்றிக் கொண்டுள்ளது. ஏலியன்களுக்கென காட்சிச்சாலைகளும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ஏலியன்கள் பூமிக்கு, குறிப்பாக ரோஸ்வெல்லுக்கு வந்ததை அந்த நகர மக்கள் நம்புகிறார்கள்.

ரோஸ்வெல் சம்பவங்களை நாம் எடுத்துக் கொண்டால், ஒரு இடத்தில் முக்கால் மைல் பரப்பளவுக்கு இனந்தெரியாத ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியிருந்தது. இன்னுமொரு இடத்தில் வெடிக்காத முழுமையான பறக்கும் தட்டு ஒன்றும், நான்கு ஏலியன்களும் இருந்தன. அவற்றில் மூன்று இறந்து போயிருந்தன. நான்காவது மிகவும் அடிபட்டிருந்தும், உயிர் இருந்ததாகத் தெரிந்தது. மூன்றாவது இடத்தில் ஏலியன்கள் கொண்டு வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த மூன்று சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர்கள் வேறு வேறு நபர்கள். ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள். இவர்கள் அனைவரும் எப்படி ஒரே விதமான பொய்யைச் சொல்ல முடியும்? மூன்று சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இராணுவப் போலீசாரினால் ஒரே மாதிரி மிரட்டப்பட்டுமிருக்கின்றனர். அரசு சொல்வது போல முதல் சம்பவத்தில் வெடித்தது வானிலையை ஆராயும் பலூன்தான் என்றால், அதன் பகுதிகளை அகற்ற அரசு ஏன் அவ்வளவு தீவிரம் காட்ட வேண்டும்? சாதாரண பலூன்தானே! வெடித்த பலூனின் சிறிய துண்டுகள் கூட அந்த இடத்தில் இருக்காமல் ஏன் அகற்றப்பட வேண்டும்? இரண்டாவது சம்பவத்தில் அந்த இன்ஜினியர் கண்டது ஏலியன்கள் இல்லை, டம்மிப் பொம்மைகள்தான் என்றால், ஒரு பொம்மையைக் கூட சரியாகக் கணிப்பிட முடியாத அளவுக்கு ஒரு பொறியியலாளர் இருக்க முடியுமா? 1947ம் ஆண்டு அவ்வளவு தத்ரூபமாக பொம்மைகள் தயாரிக்கப்பட்டனவா என்ற கேள்விகள் மேலும் மேலும் சந்தேகங்களையே வலுக்கப்பண்ணுகின்றன.  

அரசு சொல்லும் சாட்டுகளை மக்கள் யாரும் நம்பவில்லை. ஆனால், இவற்றை ஆராய்ந்தவர்கள் ஏலியன்கள் வந்ததாகவும், பறக்கும் தட்டுகள் விழுந்து வெடித்ததாகவும் முழுமையாக நம்புகின்றனர். அத்துடன் ரோஸ்வெல் சம்பவத்தில் இரண்டு பறக்கும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் நம்புகிறார்கள். அந்த இரண்டு பறக்கும் தட்டுகளும், எதிரிகளாகவோ அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகவோ இருக்கலாம். எதிரிகளாக இருந்து, இரண்டும் சண்டையிட்ட போது, வெடித்தும், கீழே விழுந்தும் விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏலியன்களை அமெரிக்க அரசு பாதுகாப்பாக இன்றும் 'ஏரியா 51' (Aria 51) என்னுமிடத்தில் வைத்திருக்கிறது என்றும், அதில் உயிருடன் ஒரு ஏலியன் இப்போதும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட பறக்கும்தட்டையும் 'ஏரியா 51' க்குக் கொண்டு சென்று, அதைப் பல விதங்களில் பரிசோதனைகளும் செய்திருக்கிறார்கள் என்றும், பல புதிய நவீன தொழில்நுட்பங்களை அதன் மூலம்தான் அமெரிக்கா பெற்றது என்றும் சொல்கிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அறிவைப் பெற்றதும், அணுசக்தி பற்றிய அறிவைப் பெற்றதும் இதன் மூலம்தான் என்கிறார்கள். இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்று நாம் குழம்பிப் போகிறோம். இந்த நிலையில் நமக்குக் கிடைக்கும் வேறு ஒரு தகவல் நம்மை ஒட்டுமொத்தமாகப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்ததாக அந்தத் தகவல் இருப்பதால் மேலதிக உறுத்தலும் அதில் ஏற்படுகிறது.

1953ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஐசன்ஹோவர் (Dwight Eisenhower). இவர் இரண்டாம் உலகப் போரின்போது, உயர் இராணுவத் தளபதியாக விளங்கியவர். ஐந்து நட்சத்திரங்கள் பெற்ற ஜெனரல் பட்டம் பெற்றவரும் கூட. இந்தத் தகுதிகளால் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை அடைந்தவர் இவர். இவர் ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்லப்படுவதுதான் இன்று மாபெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது. ஆமாம்! அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் மூன்று முறை ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது, அமெரிக்க அரச அதிகாரிகள் மூலமாகவே வெளிவந்திருக்கிறது. இதை நம்புவதா விடுவதா என்பதை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். ஆனால் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூடான செய்திகளில் இதுவும் ஒன்றாக இருப்பது என்னவோ நிஜம். நமக்குத்தான் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனவே. அதில் இவை பற்றி அறிய ஏது நேரம்? இங்கு இவற்றை நான் சொல்வது, இவையெல்லாம் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இப்படியும் உலகத்தில் செய்திகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான். 

அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் ஏலியன்களுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியபோது, தானும் அங்கு இருந்ததாகச் சொல்கிறார் கேர்க்ளின் மானுவேல் (Kirklin Manuel). ஐசன்ஹோவர் 1955ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் தேதி, நியூ மெக்ஸிகோவில் இருக்கும் ஹொலோமான் விமானப் படைத்தளத்தில் (AFB Holloman) ஏலியன்களைச் சந்தித்தார் என்கிறார் கேர்க்ளின். அதே விமானப் படைத்தளத்தில் உயர் பதவியில் இருந்தவர்தான் இந்த கேர்க்ளின். அது மட்டுமில்லாமல், அப்போலோ மிசனின் பயிற்சியாளராகவும் இருந்தவர் இவர். இவ்வளவு உயர் பதவியில் இருப்பவர் இப்படிப்பட்ட பொய்யைச் சொல்வாரா என்று நாம் சிந்திக்க வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதே நியூ மெக்ஸிகோவில்தான் பறக்கும் தட்டு விழுந்த சம்பவங்கள் நடந்த இடங்களும் இருக்கின்றன. அடிப்படையில் ஐசன்ஹோவர் மிகவும் துணிச்சலானவர். அவர் ஜனாதிபதியாக இருந்தும் ஏலியன்களைச் சந்திக்க அவரது துணிச்சலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏலியன்கள் ஐசன்ஹோவருடன் 'டெலிபதி' (Telepathy) முறையில் பேசியதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

 

யாருமே நம்ப முடியாத கதைதான் இது. ஆனால் அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களும், அந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வந்த நபர்களும் இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நான்கூட, இந்த ஐசன்ஹோவர் சம்பவம் கொஞ்சம் ஓவராக இருக்குமோ என்றே சந்தேகப்பட்டேன். பறக்கும் தட்டு விழுந்ததைக் கூட நம்பலாம். ஆனால் ஏலியன்களை உயிருடன் சந்தித்துப் பேசியதை எப்படி நம்ப முடியும் என்றே எண்ணினேன். ஆனால் அதையும் இன்னுமொரு சம்பவம் உடைத்தெறிந்தது. ஒன்றைப் பொய் என்று சொல்லலாம். இரண்டைப் பொய்யென்று சொல்லலாம், மூன்றைப் பொய்யென்று சொல்லலாம். கேள்விப்படும் அனைத்தையும் எப்படிப் பொய்யென்று சொல்ல முடியும்? அடுத்த சம்பவம் இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் நேரடியாகக் கொடுத்த பேட்டிகளுடன், சாட்சியத்துடன் அது வெளிவந்திருக்கிறது. எந்த இடத்தில் ஏலியன்களையும், பறக்கும் தட்டையும் வைத்து, அமெரிக்க அரசு இரகசியமாக ஆராய்ச்சி செய்கிறது என்று உலகம் முழுவதும் சந்தேகப்படுகிறதோ, அந்த இடத்திலிருந்தே இந்தச் சாட்சி வெளிவந்திருக்கிறது. இந்தச் சாட்சி சொல்வதை நீங்கள் நம்பினால், நான் ஏலியன்கள் பற்றிச் சொன்ன அனைத்தையும் நீங்கள் நம்புவீர்கள். இல்லை இதுவும் பொய்தான் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், இனி நான் எது சொன்னாலும் உங்களால் நம்ப முடியாது.  

டேவிட் அடேர் (David Adair) சர்வதேச ரீதியாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதல்தர விற்பன்னர். உலகில் வாழும் புத்திஜீவி எனப்படும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். தனது பதினோராவது வயதில் முதல் ராக்கெட்டை இவர் தயாரித்தார். 17வது வயதில் ராக்கெட் தயாரிப்பில் அமெரிக்க விமானப்படையின் பரிசுகளை வென்றார். அவர் மிகவும் நூதனமான, புதுமையான ஒரு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பரிசோதனைக்குக் கொண்டுவந்தார். Electro Magnetig Fusion மூலமாகத் தொழிற்படும் ராக்கெட் எஞ்சினைத் தயாரித்தார். அவர் தயாரித்த ராக்கெட்டுக்கு நிதியுதவி அளித்தவர் அமெரிக்க காங்கிரஸில் இருக்கும் ஒரு பிரபலமானவர். அந்தப் பிரபலத்தின் மூலம் இந்த ராக்கெட்டைப் பரீட்சித்துப் பார்க்க, 'ஏரியா 51' இல் அனுமதி வாங்கிக் கொண்டார். அவர் தயாரித்த ராக்கெட் சில செக்கன்களுக்குள் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் எடுக்கக் கூடியது. இவரின் இந்தத் திறமையைப் பார்த்து வியந்த 'ஏரியா 51' இன் அதிகாரிகள் சிலர், சில முடிவுகளை எடுத்தனர். 

'ஏரியா 51' இன் அதிகாரிகள் எடுத்த முடிவின்படி, 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ஜெனரல் கர்டிஸ் லெமே (Gen. Curtis Lemay) என்பவரால் 'ஏரியா 51' க்கு அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த இடத்தில் 'ஏரியா 51' பற்றி நான் சிறிது சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நிவாடா (Nevada) பகுதியில் அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட இரகசியத் தளம் ஒன்றுதான் 'ஏரியா 51' (Aria 51). தன்னுள்ளே ஒரு பாலைவனம் போல ஒரு பகுதியையும், மிகப்பெரிய ஏரியையும் கொண்டது 'ஏரியா 51'. இது எவ்வளவு கிலோமீட்டர் பரப்பளவுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு மிகப் பெரியது. இந்த 'ஏரியா 51' இல்தான் அமெரிக்காவின் இராணுவ, விமான, விண்வெளிப் பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. 'ஏரியா 51' இன் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற மிகக் கடுமையான வாக்கியங்களுடன் எல்லைப் பகுதி வேலிகள் காணப்படுகின்றன. அங்கே என்ன நடக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியம். அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன் வழி நடத்தப்படுகிறார்கள். இங்கு ஏலியன்கள் உயிருடன், காவலில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்றும் பரவலான வதந்திகள் இருக்கின்றன.

'ஏரியா 51' க்கு ஜெனரல் கர்ட்டிஸ் லெமே என்பவரால் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்றதும் அந்தக் கட்டடத்தின் பிரமாண்டத்தைக் கண்டு பிரமித்துப் போனார் அடேர். பல விமானங்களை ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கும் அளவுக்கு அது பிரமாண்டமாக இருந்தது. அந்தக் கட்டடத்தின் நிலத்தடிச் சுரங்கத்தினுள் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். பல நூறு மீட்டர் கீழே சென்றதும் அங்கும் பிரமாண்டமான கட்டட அமைப்புக் காணப்பட்டது. நிலத்துக்குக் கீழே இவ்வளவு பெரிய கட்டடம் இருக்கும் என்பதை அவரால் கற்பனை பண்னவே முடியவில்லை. இவர்களை அழைத்துச் சென்றவர் கட்டடத்தின் பூட்டப்பட்ட வாசலில் இருந்த ஏதோ ஒன்றில் கையை வைத்தார். அது உடனே தற்சமயம் இருக்கும் ஸ்கானர் போல அவரது கைகளை ஒளியினால் வருடியது. கண்ணிலும் காமெரா வெளிச்சம் போல மின்னியது. உடன் கதவு திறந்து கொண்டது. அதாவது கைகளில் உள்ள கைரேகைகளை ஸ்கான் செய்து, பின்னர் கண்களைப் படம்பிடித்து, அந்த நபரைக் கண்டுகொள்ளும் தொழில்நுட்பத்தால், கதவுகள் திறந்தன. நன்றாகக் கவனியுங்கள், இது நடக்கும் காலம் 1971ம் ஆண்டு. அந்தக் காலத்தில் லாப்டாப்புகள் இல்லை. மோடம்கள் இல்லை, ஃபாக்ஸ் இயந்திரம் இல்லை, செல்ஃபோன்கள் இல்லை. வீடியோ காசட் ரிக்கார்டர்கள் இல்லை, ஸ்கானர்கள் இல்லை, அதிகம் ஏன் கையடக்கமான கால்குலேட்டர்களே இல்லை. இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு அப்பால்தான் வெளிவந்தன. அப்படி இருக்கையில் கைகளை ஆராயும் ஸ்கானரும், கண்களின் ரெட்டினாவைக் கண்டறியும் ஸ்கானருமான தொழில்நுட்பம் 1971ம் ஆண்டு எப்படி 'ஏரியா 51' இல் சாத்தியமாயிற்று? இதை யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? வாசிப்பதை நிறுத்திவிட்டு சற்றுக் காலத்தால் பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பாருங்கள். இன்று சொல்லும்போது சாத்தியம் போல இருக்கும் இவை, நாற்பது வருடங்களுக்கு முன்னர் எப்படிச் சாத்தியம்? 

கதவுகளைத் திறந்து உள்ளே சென்ற அடேர், அங்கே இருந்த வித்தியாசமான சூழ்நிலையை அவதானித்தார். மிகப்பெரிய ஹாலின் நடுவே மேடை போன்ற ஒன்றில், ஒரு பாடசாலை பஸ் அளவுக்குப் பெரிய, பச்சை நிறமான ஏதோ ஒன்று இருக்கக் கண்டார். அது என்ன என்றே முதலில் அடேர் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் சமாளித்துக் கொண்ட அவர், அது 'ஏரியா 51' இல் பணிபுரிபவர்களால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் சம்பந்தமான ஒன்று என்ற முடிவுக்கு வந்தார். 'அதன் அருகே செல்லலாமா?' என்று அவர் கேட்டதற்கு, 'போகலாம்' என அவர்கள் அனுமதியளித்தனர். அதன் அருகே சென்று அதைப் பார்த்ததும் மிகவும் வித்தியாசமான மனநிலை தோன்றுவது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றியது. 'அதைத் தொட்டுப் பார்க்கலாமா?' என்று மீண்டும் அவர்களிடம் கேட்டார். அதற்கும் அவர்கள் அவருக்கு அனுமதி அளித்தனர். சொல்லப் போனால், இவரை அவர்கள் அழைத்தது கூட அதற்குத்தான்.

அடேர் மெதுவாக அதன் மேல் தனது கையை வைத்தார். அப்போதுதான் அந்த அதிசயத்தை அடேர் கண்டார். அந்தப் பிரமாண்டமான பொருளில், இவர் கைவைத்த இடத்தில் நீலமும் வெள்ளையுமாக வெளிச்சங்கள் வளையங்களாக, அவர் கைகளில் இருந்து அலை அலையாகத் தோன்றியது. ஆடிப் போனார் அடேர். அத்துடன் அந்தப் பொருள் இதுவரை தான் எங்கும் தொட்டறியாத ஒரு உலோகத்தால் உருவானது என்றும் புரிந்து கொண்டார். ஏற்கனவே ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால், பல உலோகங்களின் பரிச்சயம் அவருக்கு இருந்தது. ஆனால் இது மிகவும் கடினமானதும், அதே நேரம் மிகவும் மிருதுவானதுமாகத் தோன்றியது. உடனடியாகக் கையை எடுத்த அடேர், அந்தப் பொருளின் உள்ளே எட்டிப் பார்க்க விரும்பினார். அந்தப் பொருளின் ஒரு பக்கத்தில், மோதி வெடித்தது போலப் பெரிய ஓட்டையொன்று காணப்பட்டது. அதன் மூலம் தனது கையை வைத்து எட்டிப் பார்த்தார். அதனுள்ளே, வண்ண வண்ணமான திரவங்கள் நிரம்பிய ஃபைபர் குழாய்கள் போன்ற மிக நுண்ணிய குழாய்கள் ஒளிர்ந்தபடி லட்சக்கணக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து, நடுப்பகுதியைப் போய் அடைந்தன. கிட்டத்தட்ட ஒரு மனிதனின் மூளையில் நரம்புகள் மின்னைக் கடத்துவது போல அவை தொழில்பட்டன. அடேர் உடனே கையை எடுத்துவிட்டார். உடனடியாக அவருக்கு அது என்னவென்று புரிந்து போயிற்று. அவர் அங்கிருந்தவர்களிடம், "இது நிச்சயமாகப் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல. இது வேற்றுக் கிரகவாசிகளின் ராக்கெட்டின் எஞ்சினாக இருக்க வேண்டும். இது பூமியின் தொழில்நுட்பமே இல்லை" என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் முகம் கறுக்கத் தொடங்கியது. அதனால் சில வாக்குவாதங்கள் அடேருக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஏற்பட்ட நேரத்தில் அந்தப் பொருளின் மீது தற்செயலாகக் கையை வைத்தார் அடேர். ஆனால் இப்போது சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்கள் கைகள் பட்ட இடத்தில் தோன்றின. ஆனால், இதற்கு முன்னர் இதே இடத்தில் நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் இருந்தன. அந்த விவாதங்களில் தன்னை விடுவித்துக் கொண்டு சிறிது நேரத்தில் மீண்டும் கை வைத்தபோது, பழையபடி நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் தோன்றின. அதாவது தான் அமைதியாக இருக்கும் மனநிலையில் அது நீலமும் வெள்ளையும் கலந்த ஒளி வளையங்களாகவும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்களாகவும் தன்னை மாற்றுகின்றது என அடேர் கண்டுகொண்டார். மனிதனின் மனநிலையை அறியும் தொழில்நுட்பம் அதில் உள்ளதைப் புரிந்துகொண்டார்.   

அந்தப் பிரமாண்டமான பொருள் ஒரு பறக்கும் தட்டின் எஞ்சின் என்றும் அந்த எஞ்சின் அதை ஓட்டுபவரின் எண்ணங்களின் முடிவுகளுக்கும், வேகத்துக்கும் ஏற்ப இயங்கும் எனவும், அந்தப் பறக்கும் தட்டு பூமியில் மோதியதால் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றும் அடேர் புரிந்து கொண்டார். மனதின் கட்டுப்பாட்டால் இயங்கும் எஞ்சினை 'சிம்பையாட்டிக்' (Symbiotic) எஞ்சின் என்று சொல்வார்கள். இது பற்றிய ஆராய்ச்சிகள் மனிதர்களிடையே இப்போது இருக்கிறது. பறக்கும் தட்டில் அமர்ந்து செல்பவர்களின் எண்ணங்களுடன் இந்த சிம்பையாட்டிக் எஞ்சின் தொடர்புபட்டு, அவர்கள் நினைப்பது போலப் பறக்க ஆரம்பிக்கும். இதற்கு எந்த ஒலியும் இருக்காது. தனக்கு நடந்தவற்றையெல்லாம், தனது கடமைக் காலம் முடிவடைந்ததும் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்தார் அடேர். பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளாகச் சொன்னார். இவர் சொன்னதை இதுவரை அரசு ரீதியாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். 

 

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், இவற்றை நம்புவதா? விடுவதா என்பதே பெரும் சர்ச்சையாக மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இவையெல்லாம் உண்மையாக இருக்க முடியாது, பொய்தான் என்று சொல்வதற்கும் நம்மிடம் ஒரு காரணம் உண்டு. இந்த ஏலியன்கள் ஏன் அமெரிக்காவில் மட்டும் வரவேண்டும்? ஏன் அவை மற்ற நாடுகளுக்கு வரவில்லை? அமெரிக்கர்கள் எப்போதும் விளம்பரப் பிரியர்கள். அந்த விளம்பரங்களினால் ஏற்படும் பிரபலத்துக்காகப் பொய் சொல்பவர்கள். அதனால்தான் இவர்கள் எல்லாரும் இந்த ஏலியன், பறக்கும் தட்டுகள் விசயத்தில் பொய் சொல்கிறார்கள் என்ற காரணம், அர்த்தம் உள்ளதாகவே இருக்கிறது. ஏலியன்கள் ஏன் அமெரிக்காவைச் சுற்றியே வருகின்றன? மற்ற நாடுகளுக்கு அவை ஏன் வரவில்லை என்பது ஒரு சரியான கேள்வியாகவே படுகிறது. ஆனால் உண்மையாகவே ஏலியன்கள் அமெரிக்காவுக்கு மட்டும்தான் வந்து போனவையா என்று நாம் ஆராய்ந்தபோது, நாம் நினைத்தே பார்க்க முடியாத சம்பவங்கள் அமெரிக்கா தவிர்ந்த மற்ற நாடுகளிலும் நடந்துதான் இருக்கின்றன. இந்தச் செய்திகள் நாம் மேலே சொன்ன காரணத்தை அடித்து நொறுக்குகின்றன.

சொல்லப் போனால், ரோஸ்வெல்லை விட அதிக நம்பிக்கையும், உண்மைத் தன்மையும் வாய்ந்த பறக்கும் தட்டுச் சம்பவம் ஐரோப்பாவில் நடந்திருக்கிறது. அந்தச் சம்பவம் நடந்தபோது, அதை அறிந்த உயிருள்ள சாட்சியாக நானே உங்கள் முன் இருக்கிறேன். அந்தச் சம்பவம் நடந்தபோது, வெளிவந்த செய்திகளை அறிந்து அதிர்ந்து போன நபர்களில் நானும் ஒருவன். அந்தச் சம்பவத்தை நான் நேரில் பார்க்காவிட்டாலும், அது நடந்த போது, பத்திரிகைச் செய்திகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் பரபரப்பாக வெளிவந்த போது, நம்பட்டுமா? வேண்டாமா? என்று தவித்த சாட்சி நான். ஆம்! அந்தச் சம்பவம் நான் வாழும் ஜெர்மன் நாட்டையும், பெல்ஜியம் நாட்டையும் பிரிக்கும் எல்லையில் உள்ள, பெல்ஜியம் நாட்டுக்குச் சொந்தமான ஒரு ஊரில் நடந்தது. அந்தச் சம்பவம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்? அதை அடுத்த வாரம் சொல்கிறேன். 

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:54:40 PM12/3/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 23
ராஜ்சிவா

ரோஸ்வெல்லில் நடந்தவை, பறக்கும் தட்டு சம்பவங்களில் ஒரு மைல்கல் என்றால், நான் இப்போது சொல்லப் போவது பறக்கும் தட்டு சம்பவங்களின் உச்சம் என்று சொல்லலாம். அமெரிக்காவில் பறக்கும் தட்டுகள் வந்து போனதாகப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பல கட்டுக் கதைகள் ரகம்தான். ஆனால்  உண்மைக்கு மிக அருகிலும் சில சம்பவங்கள் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. மிக நம்பிக்கையானவர்களின் வாக்குமூலத்தைச் சாட்சியாக வைத்து அவற்றைக் கூட நாம் நம்பினாலும், அவையெல்லாம் மனிதர்கள் தங்கள் வாயால் சொன்ன சாட்சியங்கள்தான். அதனால் எவ்வளவு நம்பிக்கையான சாட்சிகளாக இருந்தாலும் அவர்கள் ஏன் பொய் சொல்லியிருக்கக் கூடாது என்ற கேள்வி இறுதியில் அங்கு எழும். அதற்குப் பதில் சொல்ல யாராலும் முடியாது. ஆனால் பெல்ஜியத்தில் நடந்த பறக்கும் தட்டு சம்பவம் அந்த வகை அல்ல. எந்தக் கேள்விக்கும் இடம் வைக்காமல் முழுமையான சம்பவமாக அது இருந்தது. ரோஸ்வெல்லைச் சந்தேகமாகப் பார்த்து அதை மறுத்தவர்களால் கூட, பெல்ஜியம் சம்பவத்தை மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு 99 சதவீதம் உண்மைத் தன்மையைக் கொண்டது அது. இவையெல்லாம் தாண்டி இந்தச் சம்பவத்துக்கு இன்னுமொரு அடையாளமும் உண்டு. நான் இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில், சம்பவம் நடந்த காலங்களில் வாழ்ந்து வந்தேன். பலரால் பரபரப்பாகப் பேசப்பட்டு, ஐரோப்பாவையே அதிர வைத்த சம்பவத்துக்குச் சாட்சியாக நானே உங்கள் முன் நிற்கிறேன். இப்போது அந்தச் சம்பவம் பற்றி உங்களுக்கும் சொல்கிறேன். 

ஐரோப்பிய கூட்டமைப்பில் பெல்ஜியம் என்பது மிகச் சிறிய நாடு. ஜெர்மனி, நெதர்லாந்து, லக்ஸம்பேர்க், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளை நான்கு பக்கத்திலும், ஐந்தாவது பக்கத்தில் வட கடலையும் எல்லையாகக் கொண்ட நாடு இது. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் மூன்றும் தமக்குள் 'பெனலக்ஸ்' (Benelux) என்னும் கூட்டமைப்பையும் கொண்டவை. பெல்ஜியத்துக்கும், ஜெர்மனிக்கும் எல்லை ஊராக அமைந்ததுதான் ஒய்ப்பன் (Eupen). ஜேர்மனியில் இருந்து வெறும் 7 மைல்கள் தூரத்தில் இருந்த இந்த ஒய்ப்பனில், 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி இரவு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரவு நகரை சுற்றிக் காவலுக்குச் சென்ற இரண்டு போலீஸ்காரர்கள் திடீரென வானத்தில் பிரகாசமான ஒளியைக் கண்டனர். வானம் என்று சொன்னால் வானத்தில் எங்கோ தூரத்தில் அல்ல. பூமியில் இருந்து சில நூறுமீட்டர் உயரத்தில் அந்த ஒளி தெரிந்தது. ஆம்! மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த பறக்கும் தட்டு அது. பறந்து கொண்டிருந்தது என்று சொல்வது கூடத் தப்பு. மிக மெதுவாக மிதந்தபடி இருந்தது அது. ஹைன்ரிக் நிக்கோல் (Heinrich Nicoll), 'ஹூபேர்ட் மொன்டினி' (Hubert Montigny) ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள்தான் அந்தப் பறக்கும் தட்டை முதலில் பார்த்தவர்கள். இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். நான் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஒவ்வொரு சம்பவத்தின்போதும், சம்பவம் நடந்த இடம், அதில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர் அனைத்தையும் தமிழில் தருவது மட்டுமில்லாமல், ஆங்கிலத்திலும் தந்து கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இவற்றை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும் என்பதுதான். நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடவோ, மறுக்கவோ வேண்டாம். நீங்களும் இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும். நான் சொல்பவை ஒரு வீதமாகத்தான் இருக்கும். நீங்கள் இவற்றை இணையத்தில் தேடிப் பார்க்கும் போது, நான் சொல்லாத பல தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். 

ஹைன்ரிக் நிக்கோலும், ஹூபேர்ட் மொண்டினியும் தங்களது வாகனத்தைப் பறக்கும் தட்டு நின்ற இடத்துக்கு மிக அருகில் நிறுத்திவிட்டு அதை அவதானித்தனர். முக்கோண வடிவில், ஒரு உதைபந்தாட்ட மைதான அளவுக்குப் பிரமாண்டமானதாக அது இருந்தது. முக்கோணத்தின் மூன்று மூலைகளிலும் வெள்ளை நிறமான ஒளி வந்து கொண்டிருந்தது. அதன் நடுவே வட்ட வடிவமான ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான ஒளி, விட்டு விட்டு எரிந்தபடி இருந்தது. அந்தப் பறக்கும் தட்டு மிக மிக மெதுவாக நகர்ந்தது. ஆனால் அதிலிருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. நகரும் போதோ, நிற்கும் போதோ கூட அமைதியாகவே இருந்தது. காற்றில் உராயும் சத்தம் கூட வரவில்லை. ஒய்ப்பன் என்னும் இடம் விவசாயிகள் வசிக்கும் இடம். அங்கு இருப்பவை எல்லாம் விவசாயப் பண்ணைகளே! ஒவ்வொரு விவசாய நிலத்திலும் எதையோ தேடுவது போலவும், அவற்றை அளப்பது போலவும் அந்தப் பறக்கும் தட்டின் செயல் இருந்தது. உடனே போலீஸ் நிலையத்தில் இருந்த அதிகாரியுடன் இருவரும் தொடர்பு கொண்டார்கள். தொடர்பு கொண்ட அதிகாரியின் பெயர் அல்பேர்ட் குரொய்ட்ஸ் (Albert Creutz). இவர்கள் இருவரும் வயர்லெஸ் கருவி மூலம் அறிவித்ததைக் கேட்டு முதலில் அல்பேர்ட் குரொய்ட்ஸ் சிரித்தார். அது கிருஸ்துமஸ் நெருங்கும் காலமாதலால், 'சாண்டா கிளாஸ் வந்திருப்பார் பாருங்கள்' என்று வேடிக்கையாக அவர்களுக்குப் பதில் சொன்னார் அல்பேர்ட். ஆனால் பின்னர் அவர்கள் இருவரிடமிருந்த பதட்டத்தை அவதானித்த அவர், அவர்கள் நின்றதாகச் சொன்ன திசையில் ஜன்னலினூடாக வானத்தைப் பார்த்தார். பார்த்தவர் நடுங்கிப் போய்விட்டார். அங்கே மூன்று வெளிச்சங்களுடன் ஏதோ வானத்தில் மிதப்பது தெரிந்தது.

ஹைன்ரிக்கும், ஹூபேர்ட்டும் நின்ற இடத்தில் 20 நிமிடங்கள் நின்று ஆராய்ந்த பறக்கும் தட்டு, மெல்ல நகரத் தொடங்கியது. உடன் அவர்களும் அதைத் தொடர்ந்து செல்லலானார்கள். ஏனோ அவர்களுக்கு அதன் மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. இவர்கள் காரில் பறக்கும் தட்டைத் தொடர்கிறார்கள் என்று பறக்கும் தட்டில் இருப்பவர்களுக்குத் தெரிந்ததோ இல்லையோ, பறக்கும் தட்டும் காரின் வேகத்தில் மிக மெதுவாக நகரத் தொடங்கியது. பறக்கும் தட்டிலிருந்து யாரோ தம்மைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு இருவருக்கும் தோன்றியது. இதே நேரத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து இவற்றை அல்பேர்ட் அவதானித்துக் கொண்டே இருந்தார். அங்கிருந்து கிளம்பிய பறக்கும் தட்டு, மீண்டும் ஒரு பெரிய விவசாய நிலத்தின் மேல் வந்ததும் அப்படியே அந்தரத்தில் நின்றது. இவர்களும் தங்கள் காரை நிறுத்திவிட்டு, இறங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கு அப்புறம் பறக்கும் தட்டில் என்ன நடந்தது என்று நான் சொன்னால், நீங்கள் யாரும் நம்பப் போவதில்லை. அது எங்கு போய் தொடர்பு ஆகின்றது என்பதைப் பார்த்ததும் உங்களுக்கே சிரிப்போ, ஆச்சரியமோ வரும். இப்போது கூடச் சொல்கிறேன். நான் சொல்லும் எதையும் நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. சரி, அங்கு என்ன நடந்தது தெரியுமா..?

சிறிய பந்து போன்ற வடிவில், வெள்ளை நிற ஒளிப்பந்து ஒன்று அந்தப் பறக்கும் தட்டிலிருந்து கீழே இறங்கியது. அது கீழே இறங்கி, வயல் வெளிக்குச் சற்று மேலே அதை அளப்பது போல, அங்கும் இங்கும் அலைந்தது. சிறிது நேரத்தின் பின்னர் மெலே போய் பறக்கும் தட்டுடன் சேர்ந்து கொண்டது. இந்த ஒளிப்பந்து கீழே இறங்கி அலையும் போது, பறக்கும் தட்டிலிருந்தும் லேசர் போன்ற சிவப்பு நிறக் கதிர்கள் அந்த ஒளி வட்டம் அலையும் இடத்தை எல்லையாக காத்துக் கொண்டிருந்தன. இந்த மாதிரி ஒளிப்பந்துகளை முன்னரும் நாம் பார்த்திருக்கிறோம். சுலபத்தில் அவற்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இங்கிலாந்தின், வைல்ட் ஷையரில் பயிர் வட்டங்கள் உருவாக்கப்படும் போது, இப்படிப்பட்ட ஒளிப்பந்துகளைக் கண்டதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த ஒளிப்பந்துகளும் அவை போலவே காணப்பட்டன. ஆனால் ஒய்ப்பனில் பயிர் வட்டம் எதுவும் உருவாகவில்லை. அந்தப் பறக்கும் தட்டு மெது மெதுவாக ஒவ்வொரு வயல் வெளியாக ஆராய்ந்தது மட்டும்தான் நடந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஒளிப்பந்துகளும், லேசர் வெளிச்சமும் தெரிந்ததும் இரண்டு போலீஸ்காரர்களும் பயந்து விட்டனர். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, தங்களைத் தாக்கத்தான் அந்த ஒளிவட்டங்களைப் பறக்கும் தட்டு அனுப்புகிறதோ என்று முதலில் நினைத்தவர்கள். அப்படி நடக்காவிட்டாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தில் காரில் ஏறி அமர்ந்துவிட்டார்கள். ஆனால் ஒளிப்பந்து பறக்கும் தட்டை மீண்டும் வந்து அடைந்ததும், திடீரெனப் பறக்கும் தட்டு வேகமெடுத்து விண்வெளியில் மறைந்தது. அவ்வளவு வேகத்தை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. நினைக்க முடியாத வேகம். ஆனால், அந்த வேகத்திலும் எந்தச் சந்தமும் அவர்களுக்குக் கேட்கவில்லை.  

பெல்ஜியத்தில் முதன் முதலாக நடந்த பறக்கும் தட்டுச் சம்பவம் இது. இதை வெளியில் சொன்னவர்கள் மூவரும் பெல்ஜியம் போலீஸில் பணிபுரிபவர்கள். இவர்கள் மூவரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்றாலும், இப்படி ஒரு சம்பவத்தை எப்படி நம்புவது என்றே பலர் நினைத்தார்கள். ஆனால் அமெரிக்கா போல, இதை மறைக்க முயற்சி செய்யாமல் வெளிப்படையாகப் பத்திரிகைகளுக்கு போலீஸ் அறிக்கை கொடுத்தது. பலர் இதை நம்பவில்லை. பணிபுரியும் நேரத்தில் போலீஸார் மூவரும் ஆல்கஹால் பாவித்து விட்டு உளறுகிறார்களோ என்று மக்கள் நினைத்தார்கள். முதலில் இந்தச் செய்தி பெல்ஜியத்தில்தான் பரவியது. பெல்ஜியம் மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இதே பறக்கும் தட்டைப் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸெல்ஸில் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கப் போகிறார்கள் என்று அவர்களுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. 

ஆம்! அதே முக்கோண வடிவப் பறக்கும் தட்டை பெல்ஜியத்தில் இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்திருக்கிறார்கள். உண்மையாக லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருந்தாலும், உத்தியோகபூர்வமாக அதைப் பார்த்தவர்கள் என்று கூறியவர்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள். அது மட்டுமில்லை, 1989ம் ஆண்டு கடைசிப் பகுதியில் பெல்ஜியத்தில் தெரிய ஆரம்பித்த பறக்கும் தட்டு, தொடர்ச்சியாக 1992ம் ஆண்டு நடுப்பகுதி வரை பெல்ஜியத்தையே கலக்கத்தில் வைத்திருந்தது. இப்போது நீங்கள் நினைக்கலாம், 'அட! இதைக் கூட முன்று போலீஸ்காரர்கள்தானே கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் பொய் சொல்லலாம்தானே! அத்துடன் மக்களும் எதையோ கண்டுவிட்டு, பறக்கும் தட்டு என்று நினைத்திருக்கலாம்' என்று. அனால் விசயம் இத்துடன் நின்று விடவில்லை. நம்மை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே, பல சம்பவங்கள் பெல்ஜியத்தில் நடந்தன. பறக்கும் தட்டுகளுக்கான அசைக்க முடியாத அத்தாட்சிகளாக அவை அமைந்தன. அரசே முன்னின்று அவற்றைச் சமர்ப்பித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அவை என்ன ஆதாரங்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? அதையும், பெல்ஜியத்தில் தொடர்ச்சியாக என்ன நடந்தது என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்........!

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:56:10 PM12/3/12
to panb...@googlegroups.com

&lt;ilayer src="http://www.s2d6.com/x/?x=i&amp;amp;z=i&amp;amp;v=1665788&amp;amp;r=[RANDOM]&amp;amp;k=UYIROSAICONTENTTOP" z-index="0" width="468" height="60"&gt; &lt;a href="http://www.s2d6.com/x/?x=c&amp;amp;z=s&amp;amp;v=1665788&amp;amp;r=[RANDOM]&amp;amp;k=UYIROSAICONTENTTOP" target="_blank"&gt; &lt;img src="http://www.s2d6.com/x/?x=i&amp;amp;z=s&amp;amp;v=1665788&amp;amp;r=[RANDOM]&amp;amp;k=UYIROSAICONTENTTOP" border="0" alt="click here" /&gt; &lt;/a&gt; &lt;/ilayer&gt;
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 24
ராஜ்சிவா

ஜெர்மனியில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவங்களில் முதலாவது தொலைக்காட்சி நிறுவமாக இருப்பது ARD என்னும் தொலைக்காட்சிதான். இந்த ARD, அரசினால் நடத்தப்படும் ஒன்று. அரசினால் நடத்தப்படுவது என்றவுடன், நமது நாட்டு அரசுத் தொலைக்காட்சிகளைப் போல நினைத்துவிடக் கூடாது. அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சிதானேயொழிய, அரசை நடத்தும் கட்சிக்கோ, அரசுக்கோ ஆதரவாக ஜால்ரா அடிக்கும் நிகழ்ச்சிகள் அதில் அறவே இருக்காது. மாணவர்களுக்கும், கல்விக்கும் உதவும் நிகழ்ச்சிகளுக்கும், உண்மைத்தன்மை நிறைந்த நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே அதில் இடமிருக்கும். விளம்பரங்கள் இருக்காது. இந்தத் தொலைக்காட்சி நடத்துவதற்கென, ஜெர்மனியில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட பணத்தை மாதாமாதம் செலுத்த வேண்டும். அந்த அளவுக்கு முக்கியமானது இந்தத் தொலைக்காட்சி. மக்களின் நன்மைக்காக, மக்களின் பணத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சி இது. இந்தத் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக வேண்டுமென்றால், அதற்கு எனக் கட்டுப்பாடுகள் மிக அதிகமாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சி முதல் முறையாக ஒரு பறக்கும் தட்டு சம்பவத்தை டாக்குமெண்டரியாக ஒளிபரப்பியதென்றால் அது பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்தைத்தான். இந்த ARD ஒளிபரப்பியதாலேயே பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவம் அதிக முக்கியத்துவத்தை எடுத்துக் கொண்டது இந்தச் சம்பவம். ARD யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, அதை அவதானித்து வந்தவர்களில் நானும் ஒருவன். அப்படி இந்தச் சம்பவத்துக்கு ARD முக்கியத்துவம் கொடுத்ததற்குக் காரணம், இதில் இருந்த உண்மைத்தன்மைதான். ஆனாலும், பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்தில் முக்கோ வடிவத்தில் பறக்கும் தட்டைப் பலர் பார்த்ததாகச் சொல்வதில், இவர்கள் பார்த்தது பறக்கும் தட்டையல்ல, ஒரு ஹெலிகாப்டரைத்தான் என்று விவாதம் செய்யும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த ஹெலிகாப்டர் கதையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு ஹெலிகாப்டர் பறக்கும்போது, எவ்வளவு தூரத்துக்கு அதன் விசிறியின் சத்தம் கேட்கும் என்பது குழந்தைப் பிள்ளைக்கே தெரியும்போது, சத்தமேயில்லாமல் நகர்ந்த பறக்கும் தட்டை, ஹெலிகாப்டர் என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இனி இந்தச் சம்பவத்துக்கு இவ்வளவு நம்பகத்தன்மை எப்படி வந்தது என்பதை விளக்கமாக நாம் பார்க்கலாம்.

பெல்ஜியம் போலீஸ் காவலர்களான, ஹைன்ரிக் நிக்கோலும், ஹூபேர்ட் மொண்டினியும் பறக்கும் தட்டைக் கண்ட பல நிமிடங்களின் பின்னர், அது அவர்களை விட்டு 'லா கலமின்' (La Calamine) என்னும் கிராமத்தின் திசையை நோக்கி விரைந்து மறைந்தது. இவர்களை விட்டுப் பறக்கும் தட்டு மறைந்த ஆறாவது நிமிடத்தில் லா கலமின் கிராமத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் காவலர்கள் இருவர் அந்தப் பறக்கும் தட்டைக் கண்டனர். சற்று முன்னர்தான் பறக்கும் தட்டு ஒன்றைக் கண்டதாக, அவர்களுடன் பணிபுரிபவர்கள் ஊடாக வயர்லெஸ் மூலமாக வந்த செய்தியைக் கேட்டுவிட்டுப் பழித்துச் சிரித்தவர்கள் இவர்கள். எதை நினைத்துச் சிரித்தார்களோ, அது அவர்கள் கண் முன்னால் மிகவும் தாழ்வாக நின்று கொண்டிருந்தது. திகைத்துப் போனார்கள். பிரமாண்டமாக, முக்கோண வடிவில் கத்தோலிக்கச் சர்ச்சுக்கு மேலாக அது காணப்பட்டது. அந்தப் பறக்கும் தட்டை மொத்தமாக இருபது போலீஸ்காரர்கள் அன்று கண்டிருக்கிறார்கள். அத்துடன் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களும் கண்டிருக்கிறார்கள். ஆனால் இது நடந்தது பெல்ஜியத்தின் ஒரு மூலையில் இருந்த கிராமப்புறத்தில் என்பதால், பலர் இதை நம்பவுமில்லை, பெரிதுபடுத்தவுமில்லை. வானில் எதையோ கண்டுவிட்டு பறக்கும் தட்டு என்று கதை விடுகிறார்கள் என்றுதான் நினைத்தார்கள் பெல்ஜியம் மக்கள். அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனது இந்தப் பறக்கும் தட்டு பற்றிய பேச்சு. ஆனால் அவையெல்லாம் சிறிது நாட்களுக்குத்தான். மார்ச் மாதம் 1990ம் ஆண்டு வந்தது ஒரு புதிய செய்தி.

காப்டன் ஜாக் பின்சன் (Capt. Jacques Pinson) என்பவர் பிரசெல்ஸ் நகருக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் இடமொன்றில் தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரவு விருந்து ஒன்றைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, வானில் வித்தியாசமான ஒளி விளக்குகள் மிதப்பதைக் கண்டார். அந்த ஒளி விளக்குகள் மிகவும் விந்தையான வகையில் இருப்பதையும் அவதானித்தார். முக்கோண வடிவத்தில் மூன்று வெள்ளை ஒளி விளக்குகளும் நடுவே ஆரஞ்சு விளக்கும் இருப்பதாக அவை காணப்பட்டன. இது ஒய்ப்பன் கிராமத்தில் போலீஸ்காரர்கள் எப்படிப்பட்ட வடிவத்தில் பறக்கும் தட்டை வானில் கண்டார்களோ, அது போலவே இருந்தது. ஆனால் இப்போது ஒரு முக்கோண வடிவப் பறக்கும் தட்டு மட்டும் தெரியவில்லை. முக்கோண வடிவ வெளிச்சங்களுடன் பல பறக்கும் தட்டுகள் தெரிந்தன. அதாவது ஐந்துக்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளை அவரும், அவரது விருந்தினர்களும் கண்டார்கள். அந்தப் பறக்கும் தட்டுகள் மிகவும் மெதுவாக அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தன. இதை உடனடியாக அவர் இராணுவத்தளத்துக்கு அறிவித்தார். இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்த வேளையில் முப்பது மைல்கள் தூரத்துக்கு அப்பால் இருக்கும் நேட்டோவின் ராடார் நிலையத்தில் (NATO Tracking Station) உள்ள ராடார்களில் இந்தப் பறக்கும் தட்டுகளை அவதானித்தார்கள். எங்கு விருந்து நடந்து கொண்டிருந்ததோ, அந்தத் திசையில் அவை காணப்பட்டன. லெப்டினண்ட் கர்னல் பியர்ரே பில்லென் (Lieutenent Colonel Pierre Billen) என்பவர் இதைப் பின்னர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். இவர் நேட்டோவுக்காகப் பணிபுரிபவர். நேட்டோவின் ராடார்களில் பறக்கும் தட்டுகள் தெரிந்தவுடன் பெல்ஜியம் விமானப்படைத்தளத்துக்கு, உத்தியோகபூர்வமற்ற வானூர்திகள் பெல்ஜியம் வானில் நின்று கொண்டிருப்பதாக அறிவித்தல் கொடுக்கப்பட்டது.

இந்த வேளையில் பெல்ஜியம் அரசு ஒரு புத்திசாலித்தனமான காரியம் ஒன்றைச் செய்தது. அது உடனடியாக அமெரிக்கத் தூதுவராலயத்தைத் தொடர்பு கொண்டு, அமெரிக்காவின் பரீட்ச்சார்த்தமான விண்வெளி ஆராய்ச்சிகளோ, விமானங்களின் பறப்போ  பெல்ஜியத்தின் வான் வெளியில் நடக்கிறதா என உத்தியோகபூர்வமாகக் கேட்டுக் கொண்டது. அதற்கு உடனடியாக அப்படி ஒன்றும் நடக்கவில்லையென்ற பதில் அமெரிக்காவிலிருந்து உறுதிபட வந்தது. அதையடுத்துப் பெல்ஜியம் விமானப் படையிலிருந்து இரண்டு F16 விமானங்கள் அந்த முக்கோன வடிவங்களை நோக்கி அனுப்பப்பட்டன. பறக்கும் தட்டுகள் வானில் பறந்தாலும், அதை மக்கள் தெரிந்து கொண்டால் பதட்டமடைவார்கள் என்ற காரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ, அமெரிக்கா இந்த மர்மங்களை மக்களுக்குத் தெரியாமல் மறைத்தது. ஆனால் பெல்ஜியம் அரசு, வானில் பறப்பவை பறக்கும் தட்டுகளாகத்தான் இருக்க வேண்டும் எனத் தெரிந்ததும், அது பற்றிய உண்மைகளை மக்களுக்கு கொண்டுவரப் பாடுபட்டது. அதற்காக, அந்த வடிவங்களைப் பற்றி எப்படியும் அறிந்து கொள்வது என்னும் முடிவுடன் இரண்டு அதிவேக போர் விமானங்களைப் பறக்கும் தட்டுகளை நோக்கி அனுப்பியது. விமானங்கள் இரண்டின் விமானிகளும், தங்கள் விமானங்களில் இருந்த ராடார் சாதனங்களில் பறக்கும் தட்டுகள் தெரியும் வண்ணம் அண்மித்தனர். அதேபோல, ராடார்களிலும் பறக்கும் தட்டுகள் தெரியத் தொடங்கின. அப்புறம் நடந்தவை அனைத்துமே வேடிக்கையான சம்பவங்கள். 

சரியாக ஒரு மணி நேரம் அந்தப் பறக்கும் தட்டுகளை அண்மிப்பதற்கு விமானங்கள் முயன்றன. ஆனால் விமானங்கள் அவற்றை அண்மித்ததும், அவை திடீரென வேகமெடுத்துச் சடேரென கீழே சரிந்து நகர்ந்தன. நம்ப முடியாத வேகம் அது. விமானிகள் சற்று நிதானித்ததும், மீண்டும் கீழ் நோக்கி அவற்றை அண்மிக்க முயல்கையில், சில செக்கன்களில் பல ஆயிரம் மீட்டர் உயர மேலே எழும்பின. விமானத்தில் உள்ள ராடார் கருவிகள் அந்தப் பறக்கும் தட்டு நகரும் விதம் அனைத்தையும் திரையில் காட்டிக் கொண்டேயிருந்தது. விமானிகள் திகைத்தனர். ஒரு எலியுடன் பூனை எப்படி விளையாடுமோ, அப்படி இருந்தது அந்தச் செயல். அந்தப் பறக்கும் தட்டு நகரும்போது, கிட்டத்தட்ட 1000 நாட்டுகள் (Knots) வேகத்தில் நகர்ந்தன. 1000 நாட்டுகள் என்பது கற்பனை பண் முடியாத வேகம். அதாவது ஒலியின் வேகத்துக்கு அதிகமானதாக அந்தப் பறக்கும் தட்டுகளின்  வேகம் இருந்தது. சாதாரணமாக ஒரு விமானம், வான்வெளியில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தை எடுக்கும்போது, ஒலி ஏற்றம் (Sonic Boom) என்னும் விளைவு ஒன்று உருவாகும். அது உருவாகும்போது, மிகையொலியின் காரணமாக பாரிய சத்தம் ஒன்று ஏற்படும். ஆனால் அப்படி எந்தச் சத்தமும் அப்போது கேட்கவேயில்லை. இது விமானிகளையும், தரையில் இருந்து அவதானித்தவர்களையும் ஆச்சரியப்படுத்தியது. விமானிகளுக்கு ஒரு நேரத்தின் பின்னர் இப்படிப்பட்ட பின்தொடரலால் எந்தப் பயனும் இல்லை என்பது புரிந்தது. அத்துடன் அது சாதாரணமான ஒரு விண்கலமும் இல்லையென்பதும் புரிந்தது. அந்தப் பறக்கும் தட்டில் இருந்தவர்களின் நோக்கம், இவர்களைக் களைக்கப் பண்ணுவதாகத்தான் இருந்தது. இவர்களைத் தாக்கும் நோக்கமோ, எதிர்க்கும் நோக்கமோ அவர்களுக்கு இருக்கவில்லை. அதை விமானிகளும் புரிந்துகொண்டார்கள். அதனால் கீழே இறங்கினார்கள். 

இந்த நேரத்தில் பெல்ஜியம் விமானப்படை செய்த மிக முக்கியமான செயல் ஒன்றுதான், இப்போது இந்தச் சம்பவத்தை நம்பிக்கைக்குரிய சம்பவமாக உலகிற்கே எடுத்துக்காட்டியிருக்கிறது. அதாவது வானில் நடந்த அனைத்துச் சம்பவங்களும், விமானிகளால் ராடார் கருவி மூலம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது. பறக்கும் தட்டின் ஒவ்வொரு நகர்வும், வேக மாற்றங்களும், அதில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது. இதுவே பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு அசைக்க முடியாத சாட்சியாக அமைந்தது. இந்தக் காணொளி பின்னர் ஊடகங்களுக்கு, விமானப்படையினரால் போட்டுக் காட்டப்பட்டது. அதற்கு முன்னர், இந்தக் காணொளி உண்மையானவை என்று நிரூபம் செய்வதற்காக, பெல்ஜியத்தில் உள்ள 'போர்களை ஆராயும் விற்பன்னர்கள்' பார்வைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பலவிதமான பரிசோதனைகளுக்கு அவை உட்படுத்தப்பட்டு, உண்மையான காணொளிகள் என்றும், அவற்றில் காணப்பட்ட வடிவம் பூமியில் உள்ள எந்த ஒரு விமானத்தின் நடவடிக்கை போல இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்கள். அதாவது 979 நாட்டுகள் (Knots) வேகத்தில் அந்தப் பறக்கும் தட்டு பறந்ததையும், சில செக்கன்களில், பல ஆயிரம் மீட்டரைக் கடந்திருப்பதையும் உறுதிப்படுத்தினார்கள். இந்த ஆராய்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் புரொபசர் எமில் ஸ்வைகர் (Prof. Emile Schweicher) என்னும் இயற்பியல் விஞ்ஞானி. அவர், "இப்படியான வேக மாற்றத்தை எந்த விமானங்களின் மூலமாகவும் செய்யமுடியாது" என்று அடித்துச் சொன்னார். "ராடார்கள் ஏன் தப்பு செய்திருக்கக் கூடாது?" என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, "ஒரு ராடார் தப்பு செய்திருக்க முடியும். ஆனால், இந்தச் சம்பவத்தைக் கீழே இருந்தும் பல ராடார்கள் அவதானித்துக் கொண்டிருந்தன. அனைத்து ராடார்களும் ஒரே விதத்தில் பழுதடைய சாத்தியமே இல்லை" என்று அவர் பதிலளித்தார். அத்துடன் அவர் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்தான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. "நான் இப்போது சொல்வதை வைத்து என்னைப் பணியில் இருந்து கூட நீக்கலாம். ஆனாலும் சொல்கிறேன். இந்த ராடாரில் காணப்படுவது நிச்சயமாகப் பறக்கும் தட்டேதான்" என்றார்.

வானில் நடந்த இந்தச் சம்பவத்தையும், பறக்கும் தட்டையும் 13500 பொதுமக்கள் தங்கள் கண்களால் கண்டிருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்யாதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பெல்ஜியத்தில் உயர் பதவியில் இருந்த ஜெனரல். வில்ஃபிரிட் ப்ரௌவெர் (General Wilfried Brouwer) என்பவர் இந்தச் சம்பவத்தைத் தெளிவான பேட்டியாக அனைத்துச் சாட்சியங்களுடனும் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அத்துடன் அயல் நாடுகளான, ஜெர்மனி, ஃபிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கும் அறிக்கையாகச் சமர்ப்பித்தார். இவையெல்லாம் பெல்ஜியம் நாடாளுமன்றத்திலும் கூட விவாதத்துக்கு எடுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை என்று பதிவு செய்யப்பட்டன. பெல்ஜியம் அரசு எந்த விதத்திலும் மக்களுக்கும், வேறு நாட்டவர்களுக்கும் நடந்தவற்றை மறைக்கவில்லை. அத்துடன் இந்த பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னுமொரு சாட்சியும் கிடைத்தது. 

பறக்கும் தட்டு தங்களுக்கு மேலாக மிதந்தபோது, பயந்து ஒளிந்து கொண்ட மக்களின் மத்தியில், பட்ரிக் என்னும் இளைஞன் பறக்கும் தட்டு தனக்கு மேலாக மிதந்தபோது, பயப்படாமல் படம் ஒன்றை எடுத்தான். இது ஏப்ரல் மாதம் 1990 இல் நடந்தது. அதிகப் பிரகாசமான ஒளியில் எடுத்த அந்தப் படம் தெளிவாக இல்லாவிட்டாலும் கூட, உலகிலேயே பறக்கும் தட்டை நிஜமாகவே எடுத்ததாகக் கருதப்படுகிறது. பல படங்களை, பலரும் எடுத்ததாகச் சொன்னாலும், இது ஒன்றே அசலானதாகக் கருதப்படும் பறக்கும் தட்டு படமாகும். இந்தப் படத்தையும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பார்த்தபோது, அது அசலான படம் என்று நாஸா கூட ஒத்துக் கொண்டது. படத்தைக் கணினியின் மூலம் பல படிமங்களில் ஆராய்ந்தபோது, பறக்கும் தட்டின் உண்மையான வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இந்தப் படத்தைக் கூட பொய்யான படம் என்று சிலர் சொல்கிறார்கள். படம் எடுத்த ட்ரிக்கே அதை ஒத்துக் கொண்டதாகவும் இணையத்தில் சில செய்திகளும் உலவுகின்றன. ஆனால் அவற்றில் உண்மை எதுவும் இல்லை என்றே தெரிய வருகிறது.

பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில், பலவிதமான மக்களால், பல சாட்சியங்களுடன் பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான அரசப் படை வீரர்கள். நேட்டோ அதிகாரிகள், லட்சக்கணக்கான மக்கள், ராடாரின் காணொளிப் பதிவுகள், நிஜமாகவே எடுக்கப்பட்ட படம் என்று பெல்ஜியத்தின் பறக்கும் தட்டு சம்பவம், நம்பிக்கைத் ன்மையை அதிகம் கொண்டதாக இருக்கிறது. இதனாலேயே பறக்கும் தட்டு என்று சொன்னாலே முதலில் பெல்ஜியத்தையும், இரண்டாவதாக ரோஸ்வெல்லையும் சொல்கிறார்கள். ரோஸ்வெல்லில் அமெரிக்க அரசு, சம்பவங்களை மறைக்கப் பார்க்கிறது என்று குற்றச்சாட்டு உள்ள வேளையில், பெல்ஜிய சம்பவத்தில், அரசே முன்னின்று இந்தச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதை விட நம்பிக்கையான எந்தச் சம்பவமும் இருக்க முடியாது. இதையும் நாம் நம்பாவிட்டால், நம்மால் எதையும் நம்ப முடியாமல் போய்விடும். ஆனால் இன்னும் நம்மால் நம்பிக்கை என்னும் தளத்தில் பிரயாணிக்க முடியவில்லை. அதற்கும் முக்கியமான காரணம் உண்டு. அந்தக் காரணத்தினால்தான் நாம் பறக்கும் தட்டுகளையும், ஏலியன்களையும் இன்றும் நம்ப மறுக்கிறோம். அந்தக் காரணங்களுக்கு விடைகள் கிடைத்தால், ஒரு வேளை நாம் இவற்றை நம்பினாலும் நம்பலாம். 

அந்தக் காரணங்கள் என்ன? அந்தக் காரணங்களுக்குச் சரியான விடைகள் எங்கிருந்தாவது கிடைக்குமா என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:58:13 PM12/3/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (25)
ராஜ்சிவா

ஏலியன்கள் இருக்கின்றன என்பதை உலகில் எந்த ஒரு விஞ்ஞானியும் மறுத்ததில்லை. ஏலியன்கள் பூமிக்கு வரவில்லை என்று உறுதியாக வாதிடுபவர்கள் கூட, ஏலியன்கள் இல்லையென்று சொல்வதில்லை. ஏலியன்கள் உண்டு ஆனால் அவை பூமிக்கு வந்ததில்லை என்றுதான் சொல்கிறார்கள். பூமி தாண்டி, சூரியக் குடும்பம் தாண்டி, எங்கோ தொலை தூரத்தில், நம்மிடம் வந்து சேர முடியாத தொலைதூரத்தில் ஏலியன்கள் இருக்கின்றன என்றுதான் சொல்கிறார்கள். ஏலியன்கள் பூமிக்கு வரவில்லை என்று சொல்பவர்களிடம் ஒரு நியாயமான வாதம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் சொல்வது இதுதான். "ஏலியன்கள் என்பவை வேற்றுக்கிரகங்களில் இருக்கும் உயிரினங்கள். அப்படி உயிரினங்கள் இருப்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. ஆனால், அந்த உயிரினங்கள் நம் பூமியில் இருக்கும் புழுக்கள் போலவோ, பூச்சிகள் போலவோ, அல்லது ஏதோ வினோத வடிவத்திலோ இருக்கலாம். மனிதன் போல அவை இருக்கின்றன என்பதை நம்ப முடியவில்லை. ஒரு பேச்சுக்கு அவை மனிதன் வடிவில் இருந்தாலும், அதி புத்திசாலியான ஏலியனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படிப் புத்திசாலிகளாக இருந்தாலும், ஒளியின் வேகத்தை விட, வேகமாகச் செல்லக்கூடிய பறக்கும் தட்டுக்களை உருவாக்கி, அவற்றில் பிரயாணம்  செய்யும் அளவுக்குப் புத்திசாலிகளாக இருக்க முடியாது. அப்படிப் பிரயாணம் செய்யக்கூடியவையாக இருந்தாலும், இவ்வளவு கோடான கோடி நட்சத்திரங்கள், கோள்கள் உள்ள பிரபஞ்சத்தில், கண்ணுக்கே தெரியாத புள்ளியாக இருக்கும் பூமியைத் தேடி வரவே முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும், கோள்களையும் கணக்கிட்டால், நம் பூமியில் இருக்கும் கடற்கரைகளில் எவ்வளவு மண் துகள்கள் உள்ளதோ, அந்த மண் துகள்களை விட நட்சத்திரங்களும், கோள்களும் அதிகம். மெரினாக் கடற்கரையில், எங்கோ இருக்கும் கடற்கரை மணல் துகள் ஒன்றுக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு மணல் துகளைத் தெரிய எந்த அளவுக்குச் சாத்தியம் இல்லையோ, அவ்வளவு சாத்தியம் பூமியை ஏலியன்கள் கண்டு பிடிப்பதில் உண்டு " என்கிறார்கள். இந்த அனைத்துச் சாத்தியங்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்று சொல்வதை, இவர்கள் சந்தேகிப்பது நியாயமானது அல்லவா? ஆனால், ஏலியன்கள், பறக்கும் தட்டில் பூமிக்கு வந்தார்கள் என்ற விதத்தில் இதுவரை நாம் பார்த்த பலவிதமான சாட்சிகள், நம்மை நம்பவும் வைக்கிறது. மனிதர்கள் கண்டதாக, நம்பிக்கையான, மறுக்க முடியாத சாட்சிகள் கிடைத்திருந்தாலும், சில முக்கியமான கேள்விகளுக்கான பதிலை அறிவியல் இந்த விசயத்தில் மேலும் எதிர்பார்க்கிறது. அந்தப் பதில்கள் கிடைக்கும் பட்சத்தில், பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தன என்று முழுமையாக நாம் நம்பலாம்.  

இப்போது, நமக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய கேள்வியே, ஏலியன்கள் எங்கிருந்து பூமிக்கு வருகின்றன என்பதுதான். சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கிரகத்திலிருந்தா? அல்லது நமக்கு மிக அருகில், நான்கு ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களான அல்ஃபா சென்டௌரிக்குச் (Alpha Centauri) சொந்தமான ஏதாவது ஒரு கோளில் இருந்தா? அல்லது நமது காலக்ஸியான பால்வெளி மண்டலத்தின் ஏதாவது நட்சத்திரத்துக்குச் சொந்தமான ஒரு கோளிலிருந்தா? அல்லது பால்வெளி மண்டலம் தாண்டி, வேறு ஒரு காலக்ஸியிலிருந்தா? எங்கிருந்து இவை வரலாம்? சூரியக் குடும்பத்தின் ஏதாவது கோளில் இருந்து இந்த ஏலியன்கள் வந்தன என்றால், அதை நாம் நம்பலாம். காரணம் அவை இருக்கும் தூரம் மிகவும் குறைவானவை. ஆனால் அதற்கு அப்பால் இருப்பவை எல்லாம் 'ஒளி வருடங்கள்' என்னும் அலகில் அளக்கும் தூரத்தில் இருக்கின்றன. இதுவரை உள்ள அறிவியல் அறிவின்படி, ஒளியை விட வேகமாகப் பிரயாணம் செய்யும் எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லை என்றுதான் நம்பப்படுகிறது, அல்ஃபா சென்டௌரி நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அதாவது ஒளியின் வேகத்தில், அங்கிருந்து யாராவது பறக்கும் தட்டில் வந்தால் கூட, அதற்கு நான்கு வருட காலம் எடுக்கும். ஒளியின் வேகத்திலேயே யாரும் பயணம் செய்ய முடியாது என்றிருக்கும் போது, சரி அப்படிப் பிரயாணம் செய்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், நான்கு வருடங்கள் செலவளித்துப் பூமிக்கு வரவேண்டும். இதற்கே இப்படியென்றால், இதற்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாமே, இருபது, ஐம்பது, நூறு, ஆயிரம் ஒளியாண்டுகள் என்னும் தூரங்களில் இருக்கின்றன. அப்படி இவற்றிலிருந்து வர வேண்டுமெனின், இருபது, ஐம்பது, நூறு, ஆயிரம் என ஆண்டுகள் தேவை. நாம் இருக்கும் காலக்ஸியான பால்வெளி மண்டலம் ஒரு லட்சம் ஒளியாண்டு அகலமானது. நம் காலக்ஸியைத் தாண்டி வேறொரு காலக்ஸியில் இருந்து வர வேண்டுமென்றால், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு அதிகமாகத் தேவை. இப்படி அதிகக் காலங்கள் பிரயாணம் செய்து, பறக்கும் தட்டுகள் பூமியை நோக்கி வருவது சாத்தியம்தானா? என்று கேட்பதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

சூரியக் குடும்பத்தில் உள்ள சில கோள்களிலும், அந்தக் கோள்களின் உப கோள்களிலும் உயிரினங்கள் வாழச் சாத்தியம் உண்டு என்றே விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவற்றுக்கான முழுமையான ஆராய்ச்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆனாலும், பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து போகும் அளவுக்கு அங்கு உயிரினங்கள் இருப்பதாக நம்பவில்லை. ஒரு வேளை பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்திருந்தால், அவை சூரியக் குடும்பம் தாண்டிய வேறு ஒரு இடத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்றுதான் நம்புகிறார்கள். அதிகப்படியான தூரத்தில் இருந்து ஒளியின் வேகத்திலோ அல்லது அதற்கு அதிகமான வேகத்திலோ பூமியை நோக்கிப் பறக்கும் தட்டுகள் வந்திருக்கலாமா? என்பதுதான் இப்போது நம் முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி. இதில் சவாலாக இருப்பது ஒளியின் வேகம்தான். பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் அல்லது யாரும் ஒளியின் வேகத்தில் பயனிக்கவே முடியாது என்கிறது அறிவியல். ஒளியின் வேகத்தில் ஏன் பிரயாணம் செய்ய முடியாது என்னும் கேள்வி இங்கு முக்கியமானது. இதற்கு நாம் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டும். 

ஐன்ஸ்டைன் என்னும் விஞ்ஞானி 1905ம் ஆண்டு, ஒரு புரட்சிகரமான கணித, இயற்பியல் சமன்பாடு ஒன்றைச் சமர்ப்பித்தார். இது சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special Relativity Theory) என்று சொல்லப்படுகிறது. இந்தச் சமன்பாட்டை E = mc2 என்னும் கணிதச் சமன்பாட்டால் குறிப்பிடுவார்கள். இங்கு E என்பது சக்தியையும், m என்பது நிறையையும், c என்பது ஒளியின் வேகத்தையும் குறிக்கும். அதாவது ஒரு குறித்த நிறையுள்ள பொருளுக்கான சக்தி ஒளியின் வேகத்துடன் இணைந்த ஒரு கணிதச் சமன்பாட்டுக்குள் அடங்குகிறது. இந்தச் சமன்பாட்டின்படி ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்தால், அந்தப் பொருள் எடையில் நினக்கவே முடியாத அளவு அதிகமாவது மட்டுமில்லாமல், அப்பொருள் ஒரு புள்ளி போலச் சுருங்கியும்விடும் சாத்தியம் உண்டு. மொத்தத்தில் இந்தக் கோட்பாட்டின்படி பிரபஞ்சத்தில் உள்ள எதுவுமே ஒளியின் வேகத்தை அடைய முடியாது. அப்படி ஒளியின் வேகத்தை அடையக் கூடிய ஒன்று பிரபஞ்சத்தில் உண்டு என்றால், அது ஃபோட்டான்கள் (Photon) என்று சொல்லப்படுப் ஒளித்துகள்கள்தான். சுருக்கமாகச் சொன்னால், ஒளி மட்டுமே ஒளியின் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. சமீபத்தில் கூட நியூட்ரினோஸ் என்பவை ஒளியை விட வேகமாக பயணிக்கின்றன என்று ஒரு ஆராய்ச்சியில் அறிவித்து, அப்புறம் அது அப்படி அல்ல என்று பின்வாங்கினார்கள். 

இந்த அடிப்படையில், பிரபஞ்சம் முழுவதும் உள்ள எவையாயினும், அவை அதிபுத்திசாலியான ஏலியன்களாக இருந்தாலும், ஒளியை விட வேகத்தில் ஒரு பறக்கும் தட்டை உருவாக்கிப் பறக்க வைக்க முடியாது என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி உள்ளது. எனவே ஒளியின் வேகத்தை விடக் குறைவான வேகத்தில் பூமியை அடைவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிடும். இவ்வளவு காலங்களைச் செலவளித்துப் பூமிக்கு ஏலியன்கள் வந்து போகின்றன என்பதை நம்ப முடியாது அல்லவா? 'அப்படியென்றால், பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தன என்பது பொய்தானா? ரோஸ்வெல், பெல்ஜியம் போன்ற இடங்களில் நம்பகத்தன்மையுடன் சொல்லபட்ட அனைத்தும் பொய்க் கதைகள்தானா?' என்று நீங்கள் இப்போது சோர்ந்து போய்விடலாம். ஆனால் நவீன விஞ்ஞானம் உங்களைச் சோர்ந்து போக விடுவதாயில்லை. இவையெல்லாவற்றையும் தாண்டி, பூமிக்குப் பறக்கும் தட்டுகள் வந்ததற்கான சில சாத்தியக் கூறுகளை நவீன விஞ்ஞானம் முன்வைக்கிறது. அந்தச் சாத்தியக் கூறுகளை நீங்கள் அறிந்து கொண்டால், நவீன விஞ்ஞானத்தை மட்டுமல்ல, அதை உங்களுக்குச் சொல்லும் என்னையும் பைத்தியம் என்று சொல்லி விடுவீர்கள். நவீன விஞ்ஞானம் எடுத்து வைக்கும் அந்தச் சாத்தியக் கூறுகள் உண்மையில் பறக்கும் தட்டுகளுக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. பிரபஞ்சத் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் தந்த தீர்ப்புகள் அவை. கண்டுபிடிக்கவே முடியாது என்று பல விஞ்ஞானிகள் தவித்துக் கொண்டிருந்த ஒரு சமன்பாட்டுச் சிக்கலைத் தீர்க்கப் போன நிலையில், இந்த நவீனக் கோட்பாடு பிறந்திருக்கிறது. இப்படிப் பிறந்த கோட்பாடுதான் பறக்கும் தட்டுகளும் பூகிக்கு வந்திருக்கலாம் என்று சொல்வதற்குரிய வழியையும் நமக்குத் திறந்து வைத்திருக்கிறது. ஆச்சரியகரமாக உலகில் உள்ள அனைத்து இயற்பியலாளர்களும், கணித மேதைகளும் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா என்பது சந்தேகமே!

அப்படி என்னதான் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர் என்று நீங்கள் யோசிக்கும் வேளையில், அதை உங்களுக்குப் புரிய வைக்க, ஒரு தெளிவான விளக்கத்தை நான் கொடுக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கோட்பாட்டைப் புரிய வைப்பதற்கு நமக்கு நிறைய நேரமும், அவகாசமும் தேவை. அவசர அவசரமாக அதைச் சொல்லும் போது, அதைச் சரியாகப் புரிய வைக்க முடியாமல் போய்விடலாம். எனவே, அடுத்த வாரம் அந்தக் கோட்பாடு பற்றிய தெளிவான விளக்கத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். ஆனாலும், பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றன என்று சொல்லப்படும் வேறு வகையான சில கோட்பாடுகளும் இருப்பதால், அவை பற்றித் தொடர்ந்து பார்க்கலாம்.

நாம், ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து போகின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அதெல்லாம் கிடையாது. ஏலியன்கள் நம்முடனே பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று சொல்பவர்களும் உண்டு. மிகப் பிரபலமான ஹாலிவூட் திரைப்படமான 'Men in Black' இல் வருவது போல, ஏலியன்கள் பூமியில் நம்முடனே வாழ்கின்றன என்று சொல்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே போய், ஹிட்லர், இடி அமீன் போன்றவர்கள் ஏலியன்கள்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ அமைப்பில் ஏலியன்கள்தான் இப்போதும் உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கின்றன என்று சொல்பவர்களும் உண்டு.

 

 

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். உலகில் எத்தனை விதமான உயிரினங்கள் உண்டு என யோசியுங்கள். மனிதன், மிருகங்கள், ஊர்வன, பறப்பன, பூச்சிகள், புழுக்கள், கடல்வாழ் விலங்குகள் என விதவிதமாக, நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உயிரினங்கள் பூமியில் உண்டு. காடுகளில் உள்ள பூச்சிகள் ஒவ்வொன்றினதும் தோற்றங்களை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு வினோதமான வடிவங்களில் அவை உண்டு. மனிதனுக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத உயிரினங்கள் அவை. கோடிக்கணக்கான விதங்களில், வடிவங்களில் உயிரினங்கள் பூமியில் உண்டு. இவற்றில் எவையாவது ஏலியன்களாக ஏன் இருக்கக் கூடாது? பல பூச்சி வகைகள் அச்சு அசல் ஏலியன்கள் போலவும் இருக்கின்றன. பூச்சிகளோடு பூச்சிகளாக, உயிரினங்களோடு உயிரினங்களாக ஏலியன்கள் நம்மோடு ஏன் கலந்திருக்கக் கூடாது? ஏலியன் என்பது மனிதன் அளவுக்குப் பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? சின்னதாக இருந்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடாதா? தற்கால விஞ்ஞானமே குவாண்டம் விஞ்ஞானம் (Quantum) என்று ஆகிவிட்ட நிலையில், ஏலியன்கள் ஏன் சின்னதாக இருக்கக் கூடாது? நாளைக் காலை, "மர்மக் காய்ச்சலைத்" தரப்போகும் நுளம்பு ஒன்றைக் கண்டால், அந்த நுளம்பை அடித்துக் கொன்று விடாமல், அது ஒரு ஏலியனாக ஏன் இருக்கக் கூடாது என்று சிந்தித்துப் பாருங்கள். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், அடுத்த உயிரினத்தைத் தாக்குகின்றனவென்றால், ஒன்று உணவுக்காக அல்லது பாதுகாப்புகாக மட்டும்தான். ஆனால் ஒன்றுமேயறியாத மனிதனிடம் உணவைப் பெற்றுவிட்டு, அவனுக்கு உயிர் கொல்லும் நோயை ஏன் நுளம்புகள் கொடுக்க வேண்டும்? இது ஒன்றே அவை ஏலியனாக இருப்பதற்குச் சாட்சியல்லவா? என்ன பயந்து விட்டீர்களா? நான் சற்று நகைச்சுவைக்காக நுளம்பு பற்றி சொன்னேன். ஆனால், இந்த அடிப்படையில் பலர் யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஏலியன்கள் வேறு உயிரினங்களின் வடிவில் நமது பூமியில் வாழ்கின்றன என்று நம்பும் பலமான கோட்பாடு இருக்கிறது. இதைப் பலவிதத்தில் ஹாலிவூட் படங்களாக எடுத்து  வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலே சொன்னவற்றை விட்டுவிடலாம். பூமியில் பெரும்பகுதியாக உள்ள கடலைச் சற்றுப் பார்ப்போம். கடல் நீரில் நூறு மீட்டர்களுக்குள் இருக்கும் உயிரினங்கள் மட்டுமே மனிதனுக்குத் தெரிந்தவை. ஆனால் நூறு மீட்டர்களுக்கு கீழே பத்துக் கிலோமீட்டர்கள் வரை என்ன என்ன விதமான மீன் வகைகள், உயிரினங்கள் கடலில் உண்டு என்றே நமக்குத் தெரியாது. கடலில் அமுக்கத்தினால், சில நூறு மீட்டர்களுக்கு மேல் கடலினுள் மனிதனால் செல்லவே முடியவில்லை. அதை ஆராயவும் முடியவில்லை. விண்வெளியில் எத்தனையோ லட்சம் கிலோ மீட்டர்கள் பிரயாணம் செய்யத் தெரிந்த மனிதனுக்கு, கடலுக்குள், பத்துக் கிலோ மீட்டர்கள் ஆழத்துக்குச் செல்ல முடியவில்லை. கடலின் ஆழத்தில் ஏலியன்கள் குடியிருக்கின்றன என்று பலர் நம்புகிறார்கள். இதற்கு ஆதாரமாக பறக்கும் தட்டுகள் கடலில் அமிழ்ந்து மறைந்ததைக் கண்டதாகப் பலர் சாட்சியம் சொல்லியிருக்கிறார்கள். அதிகம் ஏன், உலகப் புகழ் பெற்ற 'டைட்டானிக்' (Titanic), 'அவதார்' (Avatar) ஆகிய படங்களை இயக்கிய முதல் தர இயக்குனரான 'ஜேம்ஸ் கமெரோன்' (James Cameron), 1989ம் ஆண்டு 'அபிஸ்' (Abyss) என்னும் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். அந்த நேரங்களில் சக்கை போடு போட்ட அந்தப் படத்தின் கதையே கடலின் அடியில் ஏலியன்கள். பறக்கும் தட்டுகள் சகிதம் வாழ்கின்றன என்பதைச் சொல்வதுதான். ஹாலிவூட் படங்களில், காதில் பூக்களை வைப்பதற்குப் பதில் பூச்சாடியையே வைக்கும் பழக்கம் உண்டு என்றாலும், அவர்களின் திரைக் கதைகளுக்கு அடிப்படையான, ஒரு வலுவான காரணங்கள் பல சமயங்களில் இருக்கும். 

மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே, பூமிக்கு வந்த ஏலியன்கள் கடல்களின் அடி ஆழத்தில் வாழ்ந்து கொண்டு, அப்பப்போ பூமிக்கு மேலே வந்து, நமக்கு ஏன் காட்சியளிக்கக் கூடாது என்று கேட்பவர்களை தர்க்க ரீதியாக மறுக்க நம்மால் முடியாமல்தான் இருக்கிறது. மனிதன் கடலின் அடிஆழத்துக்கு வரவே மாட்டான் என்று தெரிந்த நிலையில், தாங்கள் வாழ மிகச் சரியான இடமாகக் கடலாழத்தை ஏலியன்கள் தெரிவு செய்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். கடலின் அடியாழத்தில் இருக்கும் சில மீன் வகைகளின் உருவத்தைப் பார்த்தால் ஏலியன்களே தேவலை என்று நாம் நினைக்கும் படியாக இருப்பதென்னவோ உண்மைதான். ஏலியன்கள் பூமியில் நம்முடன் வாழ்கின்றன, கடலில் வாழ்கின்றன என்பவை எல்லாம் கோட்பாடுகள் என்ற நிலையில்தான் பார்க்கப்படுகின்றன. அதனால் அவற்றை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்த வேளையில், தம்பிகள் Y.B.யாசிரும், முரளி கிருஷ்ணனும் ஒரே சமயத்தில் அனுப்பிய ஒரு படம் என்னை மிரள வைத்தது. என்னை மட்டுமல்ல உலகில் பலரையும் அது மிரள வைத்தது. பயிர்களில் வட்ட வடிவச் சித்திரங்கள் வரையப்படுகின்றன என்று நாம் நம்பி இருந்த வேளையில், கடலின் அடியில் உள்ள மணலில் வரையப்பட்டிருந்த ஒரு சித்திரத்தைத்தான் அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்தச் சித்திரத்தை நீங்களே பாருங்கள்.

ஜப்பானைச் சேர்ந்த 'ஜோயி ஊக்காட்ட' (Yoji Ookata) என்பவரால் கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சித்திரம் இது. பயிர்வட்டங்கள் போலவே இவது இருக்கின்றது. இது யாரால், எப்படி வரையப்பட்டிருக்கலாம் என்று சிலர் சிந்திக்க, இல்லையில்லை இது பறக்கும் தட்டு ஒன்று கடலடியில் நின்ற போது, கடல் மணலில் அதன் தடம் பதிந்து இப்படி ஆகியிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. 'பஃபர் மீன்' (Puffer Fish) என்னும் மிகச் சிறிய மீன்வகையே இதை உருவாக்கியது என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். இயற்கையே இப்படிப்பட்ட வடிவங்களை உருவாக்குவதும் நடப்பதுதான் என்றாலும், முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றன என்பதற்கு மேலே சொல்லப்பட்ட காரணங்கள் அறிவியல் ரீதியாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருந்தாலும், கோட்பாட்டு ரீதியாக அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைதான். ஆதாரமில்லாமல் எதையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத போது, ஆதாரமில்லாமல் எதையும் மறுக்க முடியாமலும் போகிறது. ஆனால் அறிவியலாக, நவீன விஞ்ஞானத்தின் ஆதார விதிகளுடன் பறக்கும் தட்டுகள், ஒளியின் வேகதையும் தாண்டிப் பூமிக்கு வரலாம் என்னும் சாத்தியம் ஒன்று உண்டு என்று மேலே சொன்னேன் அல்லவா? அந்தச் சாத்தியம் என்னவென்று முழுமையாக, அறிவியலாக, தெளிவாக நாம் பார்க்கலாம்.

அதற்கு அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

Ramesh Murugan

unread,
Dec 3, 2012, 2:59:17 PM12/3/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 26
ராஜ்சிவா

ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்று சொல்வதை மறுப்பதற்கான காரணங்களைக் கடந்த பதிவில் நாம் பார்த்திருந்தோம். நாம் வாழும் பூமி, பூமியின் இருப்பைக் கொண்டிருக்கும் சூரியக் குடும்பம், சூரியக் குடும்பத்தை தன் வசம் வைத்திருக்கும் 'மில்க்கி வே' காலக்ஸி, 'மில்க்கி வே' காலக்ஸி போன்று பில்லியன் எண்ணிக்கையில் காலக்ஸிகள் என்று விரிந்திருக்கிறது அண்டம் (Universe). அதை அண்டம் என்று சொன்னால் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியாது. அதனால், பேரண்டம் என்று சொல்வதே பொருந்தும். அண்டத்தில் ட்ரில்லியன் ட்ரில்லியன் எண்ணிக்கையில் நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கின்றன. பூமியில் உள்ள சகல  கடற்கரைகளிலும் இருக்கும் மணலின், சின்னஞ்சிறிய மணல் துகள்களை நாம் எண்ணினால் எவ்வளவு எண்ணிக்கை வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்களும், கோள்களும் அண்டத்தில் இருக்கின்றன. இதை உங்களால் நம்பவே முடியாமல் போகலாம். காரணம், அந்த அளவுக்குக் கணக்கிடவே முடியாத மிகப் பெரிய எண்ணிக்கை இது. அத்துடன் இதில் இன்னுமொரு வேடிக்கையும் உண்டு. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நட்சத்திரங்களும், கோள்களும் அண்டத்தில் இருந்தாலும், அவை அண்டத்தின் அளவில் வெறும் 4% மட்டும்தான் உள்ளன. இதில் மேலும் ஒரு ஆச்சரியமும் உண்டு. இந்த 4 வீதத்திலும் 0.4% மட்டுமே நட்சத்திரங்களும், கோள்களுமாக உள்ளன. எஞ்சிய 3.6 வீதமும் வாயுக்களாகவும், தூசிகளாகவுமாகவே (Intergalactic Gas) இருக்கின்றது. 

நான்கு வீதங்கள் போக, அண்டத்தின் எஞ்சிய 96 வீதமும் வெறுமையாக இருக்கின்றன என்றுதான் முன்னர் நினைத்திருந்தார்கள். ஆனால் அவை வெறுமையில்லை. கரும் சக்தி (Dark Energy), கரும் பொருள் (Dark Matter) என்னும் இரண்டினால் நிரம்பியிருக்கிறது. கரும் சக்தி, கரும் பொருள் ஆகியவை பற்றி விளக்கமாகப் பார்க்கப் போனால் அதற்குள்ளேயே நாம் தொலைந்து விடுவோம். எனவே கரும் சக்தி பற்றி மட்டும் ஒரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன். டார்க் எனர்ஜி என்று சொல்லப்படும் கருமையான மிகை வலுச் சக்தியொன்று, நமது அண்டம் பூராவும் பரந்திருக்கிறது. அண்டத்தின் 73% இந்தச் சக்தியினால்தான் நிரப்பப்பட்டு இருக்கின்றது. பூமியில் வாழும் நாம் எத்தனையோ விதங்களில் சக்திகளைக் கண்டிருக்கிறோம். அவற்றுள் அணுசக்தியையே மிகவும் வலுவானது என்றும் உணர்ந்திருக்கின்றோம். உலகில் உள்ள நாடுகள் எல்லாமே, அணுசக்தியின் மூலமாக, மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அணுசக்தியின் பின் விளைவுகள் மிகப் பயங்கரமானவை என்று தெரிந்தாலும், வேறு வழியின்றிப் பல நாடுகள் அதைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற்றுவருகின்றன. ஆனால், அண்டத்தில் உள்ள டார்க் எனர்ஜியுடன் அணுசக்தியை ஒப்பிட்டால், அணுசக்தி ஒன்றுமே இல்லை என்னும் ரகம்தான். டார்க் எனர்ஜியை ஒரு தேனீர் கலக்கும் கரண்டி (Teaspoon) அளவு சேகரித்து எடுத்தோமானால், அதை வைத்துக் கொண்டு, பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், நூறு வருடங்களுக்கு இருபத்திநான்கு மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கலாம். என்ன உங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை அல்லவா? உண்மைதான், அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்தக் கரும் சக்தி. அதை எப்படிச் சேமிப்பது என்பதில்தான் பல விஞ்ஞானிகள் மூளையைப் போட்டுப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

ட்ரில்லியன் ட்ரில்லியன் நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கும் அண்டத்தில் 73% நிறைந்திருக்கும் இந்தக் கரும் சக்தியை, எப்போது மனிதன் தன் கைவசப் படுத்துகிறானோ, அப்போது அண்டத்தின் வலுமிக்க முக்கிய அங்கமாக மாறிவிடுவான். இன்று அது சாத்தியமாகாமல் போனாலும், இன்னும் நூறு ஆண்டுகளில் அல்லது ஆயிரம் ஆண்டுகளில் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளிலாவது இது மனிதனுக்குச் சாத்தியப்படலாம். அப்போது மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்றாகிவிடும். இப்போது இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். நம்மால்தானே இந்தக் கரும் சக்தியைத் தற்போது பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் இந்த அண்டத்தில் ஏதோ ஒரு கிரகத்தில் இருக்கும், ஏதோ ஒரு இனம், கரும் சக்தியைப் பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருக்கலாம் அல்லவா? கரும் சக்தியை அவர்களால் பெறக் கூடியதாக இருந்தால், அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை என்றாகிவிடும். 

'அது எப்படி நம்மை விட அதிக அறிவை ஏலியன்கள் பெற்றிருக்க முடியும்?' என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அண்டத்தில் உள்ள பல நட்சத்திரங்களையும், கோள்களையும் எடுத்துக் கொண்டால், பூமி என்பது மிகவும் இளமையானது. அண்டம் என்பது ஒரே செக்கனில் தோன்றியது என்றாலும், நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் படிப்படியாகத்தான் உருவாகின. இன்றும் கூட நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டும், உருவாகிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியபடியும்தான் இருக்கின்றன. பூமியை விட இள வயதுள்ள நட்சத்திரங்கள் அண்டத்தில் கோடிக்கணக்கில் உண்டு. நமது பூமி கிட்டத்தட்ட  4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது. பூமியில் 'ஹோமோ எரக்டஸ்' (Homo Erectus) என்று சொல்லப்படும் தற்கால மனிதனின் மூதாதையர்கள் தோன்றியது கிட்டதட்ட 1.8 மில்லியன் வருடங்களின் முன்னராக இருக்கலாம். அதிலும் தற்கால மனிதனின் மூதாதையரான 'நியாந்தர்தாலர்' (Neanderthal) மனிதன் தோன்றியது, வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஆனால் அண்டம் உருவாகியதோ 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர். நமது சூரியன் அண்டத்தின் முன்றாவது பரம்பரை நட்சத்திரம் (Generation Star). 

மூன்றாவது பரம்பரையாகத் தோன்றிய நட்சத்திரமான சூரியனின் குடும்பத்திலேயே, மனிதன் போன்ற புத்திசாலி உயிரினம் தோன்றியிருக்க முடியுமென்றால், முதலாம் பரம்பரை, இரண்டாம் பரம்பரை நட்சத்திரங்களில் எவ்வளவு புத்திசாலி இனங்கள் தோன்றியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடந்த நான்காயிரம் ஆண்டுகளில், பூமியில் உள்ள மனிதர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அறிவியலில் சாதனைகள் புரிந்தும், பல வியப்பான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள். இனிவரும் பத்தாயிரம் ஆண்டுகளில், இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும் போகிறார்கள். பூமியில் தோன்றிய மனிதன் இலட்சம் ஆண்டுகளிலேயே, இவ்வளவு பிரமிக்கும்படி அறிவில் வளர்ந்திருந்தால், கோடிக்கணக்கான வருசங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கக் கூடிய, வேற்றுக் கிரக உயிரினம் எவ்வளவு புத்திசாலிகளாக வளர்ந்திருக்கும் சொல்லுங்கள். அண்டத்தில் உள்ள பல கோள்களில், ஐந்து பில்லியன் வருடங்களுக்கு முன்னரே உயிரினங்கள் தோன்றியிருக்கச் சாத்தியங்கள் உண்டு. அந்த உயிரினம், மனிதன் போல முழுமையான, புத்திசாலி இனமாகப் பரிணாமமடைந்து, இரண்டு பில்லியன் வருடங்களாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம். இரண்டு பில்லியன் வருடங்கள் வாழும் ஒரு புத்திசாலி இனத்தால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை, மனிதனின் வளர்ச்சியை வைத்தே கணித்துப் பாருங்கள்.  

பூமிக்குப் பறக்கும் தட்டுகள் வந்திருக்க முடியாது என்பதற்கான காரணங்களில் முக்கியமானது, ஒளியின் வேகத்தை அடைவதில் ஏலியன்களுக்கு உள்ள பிரச்சினைதான். ஆனால் அண்டத்தில் உள்ள டார்க் எனர்ஜியைக் கையாளக் கூடிய அறிவியல் வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமானால், ஒளியின் வேகத்தை அடைவதில் பிரச்சினை எதுவும் இருக்க முடியாது. மனிதன்கூடப் படிப்படியாக முன்னேறி, ஒளியின் வேகத்தை அடைவதற்கே தன் அறிவியல் பயணத்தை முடுக்கிக் கொண்டிருக்கிறான். இன்றில்லாவிட்டாலும், பத்தாயிரம் அல்லது இருபதினாயிரம் வருடங்களிலாவது மனிதனால் அது சாத்தியமாகலாம். அந்த நம்பிக்கை மனிதனிடம் நிறையவே உண்டு.

இப்போது நான் சொல்லும் சாத்தியத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இருபதாயிரம் வருடங்களுக்குப் பின்னர், ஒரு பாரிய ராக்கெட்டை, அதாவது ஒரு ஃபுட்பால் மைதானத்தை விடப் பெரிய ராக்கெட்டை மனிதன் உருவாக்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனுள்ளே வேண்டிய அளவு டார்க் எனர்ஜியை நிரப்பிக் கொள்கிறான். ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஜனங்கள் அளவுக்கு, விதவிதமான மனிதர்களைக் குடும்பம் குடும்பமாக அதில் ஏற்றுகிறான். டாக்டர்கள், இன்ஜினீயர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தொழில் செய்பவர்களும், தங்கள் முழுக் குடும்பத்துடன் அந்த ராக்கெட்டினுள் பயணமாகத் தயாராகிறார்கள். ராக்கெட் ஒளியின் வேகத்தைத் தொடாவிட்டாலும், ஒளியின் வேகத்தில் அரைவாசியிலாவது பயணிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அந்த ராக்கெட்டில் உள்ளவர்களுக்கு இறப்பு, பிறப்பு, திருமணம், உறவு எல்லாமே அந்த ராக்கெட்டில்தான். கிட்டத்தட்ட அவர்கள் வாழும் நாடு போல அது. அந்த ராக்கெட் நான்கு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, அல்ஃபா செண்டௌரி நட்சத்திரத்தை அடைய எட்டு வருடங்கள் எடுக்கும். இப்படி வேண்டிய தூரத்துக்கு, விரும்பிய நட்சத்திரத்துக்கு அந்த ராக்கெட்டில் அவர்கள் பயணப்பட்டபடியே இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான எரிபொருள் சக்திதான் டார்க் எனர்ஜியாய் வேண்டிய அளவு இருக்கிறதே! ஐநூறு வருடங்களின் பின்னரோ, ஆயிரம் வருடங்களின் பின்னரோ பூமிக்கு மீண்டும் அவர்கள் வர விரும்பினால், திரும்ப வரலாம். ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கும். தகப்பன் புறப்பட்ட ராக்கெட்டில் திரும்பி வருவது, பத்தாவது தலைமுறையாக இருக்கும். இது போல, ஏலியன்களும் தலைமுறை கட்டுமானமுள்ள பறக்கும் தட்டில் நமது பூமியை வந்தடைந்திருக்கவும் சாத்தியம் உண்டல்லவா? அப்படி வந்தவர்களுக்குப் பூமியை ஏதோ ஒரு காரணத்தினால் பிடித்துப் போக, சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்திலோ, டைட்டான் போன்ற உபகிரகத்திலோ தங்கித் தொடர்ச்சியாய்ப் பூமிக்கு வந்து போயிருக்கலாமல்லவா? ஏன் இருக்க முடியாது? இந்தக் கருத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் வேண்டிய அளவு திரைப்படங்கள் வந்துவிட்டன. 

பூமிக்குப் பறக்கும் தட்டுகள் வந்ததற்கான ஆதாரத்தை நவீன விஞ்ஞானத்தின் புத்தம் புதிய கோட்பாடு மூலம் நிறுவலாம் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன். மேலே நான் சொன்னவைதான், அந்தப் புதிய கோட்பாடுகள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இல்லை, நான் சொல்ல வந்தது இதையல்ல. அது வேறு. அது முழுமையான அறிவியல் சார்ந்தது. மிகவும் சிக்கலானது. புரிய வைப்பதில் மிகவும் கவனம் தேவையானது. 

நீங்கள், உங்களுக்குப் பிடித்த ஒரு நடிகரின் படம் ஒன்றைச் சினிமாத் தியேட்டரில் பார்க்கச் செல்கிறீர்கள். அந்தப் படம் திரையில் காட்டப்படும்போது நீளம், அகலம் என்னும் இரண்டு பரிமாணங்களிலேயே (Dimention) திரையில் தெரியும். அதே தியேட்டரில், மூன்று பரிமாங்கள் (3D) உள்ள படங்களைப் பார்க்கும்போது, நீளம் அகலம் தாண்டி, மூன்றாவது பரிமாணமும் உங்கள் கண்களுக்குத் தெரியும். நாம் வாழும் பூமியில், நமக்குத் தெரியும் அனைத்துக் காட்சிகளும் முப்பரிமாணங்கள் உடையவைதான். கணிதத்தில் X,Y,Z ஆகிய மூன்று அச்சுக்களும் இந்த மூன்று பரிமாணங்களையும் குறிக்கும். மனிதனால் இந்த மூன்று பரிமாணங்களினூடாகவும் பயணம் செய்ய முடியும். அதாவது முன் பின்னாகவும், இடம் வலமாகவும், மேல் கீழாகவும் மனிதனால் பயணிக்க முடியும். ஆனால் இதுவரை மூன்று பரிமாணங்கள் மட்டும்தான் உண்டு என்று நாம் நம்பியிருந்த வேளையில், நான்காவது பரிமாணம் ஒன்றும் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். அந்த நான்காவது பரிமாணம்தான் நேரம் (Time). இதை வெளி நேரம் (Spacetime) என்பார்கள்.  

முப்பரிமாணமுள்ள வெளியுடன் (Space) நேரமும் (Time) சேரும் போது நான்கு பரிமாணங்களாகின்றன. மனிதனால் மூன்று பரிமாணங்களில் எதுவித சிக்கலும் இல்லாமல் பிரயாணம் செய்யக் கூடியதாக இருக்கையில்,  நான்காவது பரிமாணமான நேரத்திலும் ஏன் பிரயாணம் செய்ய முடியாது என்று கேள்விகள் அறிவியல் உலகில் எழும்ப ஆரம்பித்துவிட்டன. பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங், மனிதன் நேரத்தினூடாகப் பிரயாணம் செய்யும் காலம் தூரத்தில் இல்லை என்று அடித்துச் சொல்கிறார். இன்று இல்லாவிட்டாலும், இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றுக்கு மனிதன் பிரயாணம் செய்யும் அறிவியல் வளர்ச்சியை அடைந்து விடுவான் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். 'அட! இது என்ன சுத்தப் பேத்தல். அவனவன் கற்பனையில் கதை சொல்கிறான் என்றால், அதையே உண்மையாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே காலத்தினூடாகப் பிரயாணம் செய்வது சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான். இந்தக் கணத்தில் கூட, நாம் இறந்த காலத்துடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், இறந்தகாலத்துக்குப் பிரயாணம் செய்வது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். 

 நாம் சூரியனைத் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கணத்தில் கூடச் சூரியனை நாம் கண்களால் பார்க்கலாம். ஆனால் உண்மையில் அந்தச் சூரியன் இந்தக் கணத்தின் சூரியன் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கணத்தில் நீங்கள் பார்க்கும் சூரியன், 8.3 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சூரியன். அதாவது இறந்தகாலச் சூரியன். இது போல, நீங்கள் தலையை உயர்த்தி இரவு வானத்தைப் பார்க்கும்போது தெரியும் எல்லா நட்சத்திரங்களும் நூறு, ஆயிரம், லட்சம், கோடி ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆனாலும் அவற்றை இந்தக் கணத்திலும் நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம், ஒளி நம்மை வந்தடையும் வேகமும், அவை இருக்கும் தூரமும்தான். இதனடிப்படையில், ஒளியின் வேகத்தில் நாம் பிரயாணம் செய்யக்கூடியதாக இருந்தால், இறந்தகாலத்தை நோக்கி நம்மால் பிரயாணம் செய்யமுடியும் என்று அறிவியல் சொல்கிறது. 

காலத்தால் பயணம் செய்யலாம் என்றால், பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து போகின்றவர்கள் பூமியிலேயே வாழும் நம் எதிர்காலச் சந்ததியினராக ஏன் இருக்கக் கூடாது? இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால், மனிதன் காலத்தினூடாகப் பிரயாணம் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் காலத்தினூடாகப் பிரயாணம் செய்து இன்றுள்ள காலத்துக்கு வருகிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வருபவர்களை நாம் எப்படி நினைப்போம்? வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த ஏலியன் என்றுதானே நினைப்போம். இருபதாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதனின் உருவம் தற்கால மனிதனைப் போல இருப்பதற்குச் சாத்தியம் ரொம்பவும் குறைவு. அத்துடன் நம் மொழியையும் அவர்கள் பேசுவது என்பதும் இருக்க முடியாது. இதுதான் இயற்கையின் விதியும் கூட. ஆனால் வந்தவர்களுக்கு நம்மைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தெரிந்திருக்கும். இப்போது பறக்கும் தட்டையும், ஏலியன்களையும் பற்றி நாம் அதிசயிக்கும் எல்லா சம்பவங்களும், இதனுடன் சரியாக ஒத்துப் போகிறதல்லவா? ஏலியன் என்று நம்புபவர்கள் நம்முடைய சந்ததியினராக இருக்கலாமல்லவா?

"அப்படியென்றால், ஏலியன்கள் என்று நாம் நம்புபவர்கள், அண்டத்தின் வேறு எந்த ஒரு கோளிலிருந்தும் வரவில்லை. அவர்கள் பூமியைச் சேர்ந்த நம் எதிர்காலச் சந்ததியினர்தானா?" என்று நீங்கள் என்னிடம் கேட்டால், அதற்கு எனது பதில் 'இருக்கலாம்' என்றுதான் இருக்கும். ஆனால் அதுதான் நிச்சயமான உண்மையாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், ஏலியன்கள் இருப்பதற்கான சாட்சியாக நான் கடந்த பதிவில் சொல்ல இருந்த நவீன அறிவியல் கோட்பாடும் இதுவல்ல.

அந்தக் கோட்பாடு என்னவென்று தெரியவேண்டுமா? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

காமேஷ்

unread,
Dec 4, 2012, 9:29:43 AM12/4/12
to panb...@googlegroups.com
படிக்க படிக்க பரவசம் தரும் தொடர்..

ஒவ்வொரு வாரம் படிக்கும் போதும் 1/2 அடித்த போதை வருதே ஏன் ?

.........................




2012/12/4 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Dec 11, 2012, 1:11:10 PM12/11/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 27
ராஜ்சிவா

ஏலியன்களாகப் பூமிக்கு வந்து போவது நமது எதிர்காலச் சந்ததியினராக இருக்கலாம் என்று கடந்த பதிவில் பார்த்தோம். "ஏலியன்களின் தலை பெரிதாகவும், கைகால்கள் சிறியதாகவும் இருக்கின்றனவே, அந்த வடிவத்திலா நம் எதிர்காலச் சந்ததி மனிதன் இருப்பான்? அப்படி இருக்க முடியாதே!" என்று சிலர் சந்தேகங்கள் கேட்டிருந்தனர். இதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலைச் சொல்லும் பட்சத்தில்தான், கடந்த பதிவில் சொல்லப்பட்டதில் ஒரு வீதமாவது உண்மை இருக்கலாம் என்று நம்ப முடியும். இன்றுள்ள நவீன அறிவியல் வசதிகளால், உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. மனிதன் இருந்த இடத்தை விட்டு அகலாமல், அனைத்தையும் அடையலாம் என்னும் நிலையை இப்பொழுதே எட்டிவிட்டான். ஆன்லைன் மூலமாக, பெற்ற தாயைத் தவிர மற்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை கூட இன்னும் சில காலங்களில் வந்துவிடும். வீட்டிலிருந்து கொண்டே கல்வி கற்றல் , தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்குவது என்று அனனத்தும் வரப்போகிறது. மனிதனுக்குப் பதில் ரோபோக்கள் வேலை செய்யப் போகின்றன. மனிதன் ஓடியாடித் திரியாமலே கைச் சொடுக்கில் சாகசம் செய்யப் போகிறான். இந்த நிலையில், பரிணாமக் கொள்கையை உலகிற்குச் சொன்ன சார்லஸ் டார்வினின் கருத்து ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். 'ஒரு உயிரினம், தனது எந்த உடல் உறுப்பை அதிகம் பயன்படுத்தாது போகின்றதோ, அந்த உடல் உறுப்பு, படிப்படியாகக் குறுகி இல்லாமலே போகலாம்' என்றார் டார்வின். அதற்கு உதாரணமாக, 'மனிதனுக்கு வால் இல்லாமல் அகன்றது அதனால்தான்' என்கிறார். அதே போல, 'ஒரு உயிரினம், எந்த உறுப்பை அதிகம் பயன்படுத்துகிறதோ, அந்த உறுப்பு வளர்ந்து பெரிதாக மாறலாம்' என்றும் சொன்னார். அதற்கு உதாரணமாக, ஒட்டகச் சிவிங்கியின் தலை நீண்டதைச் சொல்கிறார். இதுபோல பல ஆயிரம் வருடங்களுக்குப் பின், நமது எதிர்காலச் சந்ததியினரும் கைகால்களை அதிகம் பயன்படுத்தாததால் அவை சிறுத்தும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதால், தலை பெரியதாக வளர்ந்தும், இன்று நாம் ஏலியன்கள் என்று நம்பும் ஒரு உருவத்துக்கு மாறலாம் அல்லவா? இப்படி நான் சொல்வதால், அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு உடனே நீங்கள் வந்துவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். காரணம், நான் சொல்பவை எல்லாமே சாத்தியக்கூறுகள் மட்டும்தான். அவையே முடிவான முடிவுகளல்ல. 

ஏலியன்கள் பூமிக்கு வந்து போவதானால் அதற்கு இரண்டு அடிப்படைச் சாத்தியங்கள்தான் உண்டு. ஒன்று பூமி தாண்டிப் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கோளில் இருந்து ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டும். இல்லையெனின், பூமியின் எதிர்காலச் சந்ததியினர், கால இயந்திரத்தின் உதவியினால் தற்சமயம் நாம் வாழும் இந்தக் காலத்துக்கு வரவேண்டும். இது தவிர்ந்து ஏலியன்கள் பூமிக்கு வரச் சாத்தியமே இல்லை. கால இயந்திரம் மூலமாக பூமிக்கு வருவது பற்றிக் கடந்த பதிவில் விரிவாகப் பார்த்தோம். அது போல, ஏலியன்கள் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பூமிக்கு வருவதாயின், ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்தாலும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும், புள்ளியை விடச் சிறிய பூமியை இந்தப் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் கண்டுபிடிப்பது என்பதே மிகச்சிரமம் என்றும் பார்த்தோம். இதனால் ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்க முடியாதோ என்ற சந்தேகமும் நமக்கு வந்தது. ஆனால் நவீன அறிவியலின் கோட்பாடு ஒன்று இந்தச் சந்தேகத்தை உடைத்தெறிந்தது. அது என்ன கோட்பாடு என்பதை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில வார்த்தைகள். இப்போது நான் சொல்லப் போவது மிகவும் சிக்கலான அறிவியல் கோட்பாடு. சிலசமயங்களில் நான் சொல்வது உங்களுக்குப் புரியாமல் போகலாம். அப்படிப் புரியாமல் போனால் அது உங்கள் தவறல்ல. அதைச் சரியாகப் புரிய வைக்க முடியாமல் போன என் தவறாகத்தான் அது இருக்க முடியும். அப்படிப் புரிந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் உங்களுக்கு எழலாம். அதிகம் ஏன், நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் சிரிக்கவும் கூடும். ஆனால், இந்தக் கோட்பாடு நிச்சயம் சிரிப்பதற்கான ஒன்றல்ல. இதுவரை இந்தக் கோட்பாட்டை விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் மறுக்கவில்லை. அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்கள் ஏற்றுக் கொண்ட ஒன்றே இந்தக் கோட்பாடு உண்மையானதாக இருக்க அதிக சாத்தியத்தைக் கொண்டது என்றாகின்றது. இருந்தாலும் இதுவரை அது கோட்பாடு என்னும் நிலையிலேயே உள்ளது. இனி நாம் அந்தக் கோட்பாடு பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

அணுமுதல் அண்டம் வரை உள்ள அனைத்தையும் நான்கு அடிப்படையான விசைகளே கட்டுப்படுத்துகின்றன என்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. மின்காந்த விசை (Electromagnetic Force), திடமான அணுக்கரு விசை (Strong Nuclear Force), திடமற்ற அணுக்கரு விசை (Weak Nuclear Force), ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பவையே அந்த நான்கு விசைகளும் ஆகும். இந்த அண்டம் தோன்றியதாகக் கருதப்படும் பெருவெடிப்பின் (Big Bang) போதுதான் இந்த நான்கு விசைகளும் தோன்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  அதாவது ஒரு சிறிய பொருள் ஒன்று, எந்த ஒரு விளைவும் இல்லாமல் பல காலம் அமைதியாக இருந்து, ஏதோ ஒரு கணத்தில் பெரிதாக வெடித்ததால்தான் அண்டம் தோன்றியது. அப்படிப் பார்த்தால், பெருவெடிப்பினால் தோன்றிய இந்த நான்கு விசைகளும், பெருவெடிப்பிற்கு முன்னால் ஒன்று சேர்ந்து, ஒரே விசையாகச் சமநிலைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதனால், இயற்பியலின்படி இந்த நான்கு விசைகளும் ஒரே கணிதச் சமன்பாட்டில் வரக்கூடிய வகையில் நிச்சயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். அந்தச் சமன்பாடு எதுவென்று கண்டுபிடிப்பதற்கு, ஐன்ஸ்டைன் முதல் இன்றுள்ள எல்லா விஞ்ஞானிகளும் முயற்சிக்கின்றனர். இதுவரை அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இந்த நான்கு விசைகளையும் ஒன்று சேர்க்கும் கோட்பாட்டை 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' (Theory of everything) என்று அழைக்கிறார்கள். ஐன்ஸ்டைன் தனது இறுதிக் காலங்கள் அனைத்தையும் இந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியாமலே மரணத்தைத் தழுவினார்.  

இப்படி ஒரு சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு சிரமங்கள் உள்ளன என்று படிப்படியாகப் பார்த்த போதுதான், எங்கோ தவறு செய்கிறோம் என்னும் யோசனை விஞ்ஞானிகளுக்கு வந்தது. அணுக்களைப் பிரித்துப் பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாத பல உப அணுத்துகள்கள் (Subatomic Particles) அணுவுக்குள் இருக்கின்றன என்னும் உண்மைகள் மெல்லப் புரியலாயிற்று. பல விதமான, பல தன்மையுள்ள உப அணுத்துகள்கள் அணுவுக்குள் இருக்கின்றன என்பதை முதலில் கோட்பாட்டு ரீதியாக முடிவு செய்தார்கள். அணுக்கருக்களை ஒன்றுடன் ஒன்று மிக வேகமாக மோதவிட்டு, அதன் மூலம் உப அணுத்துகள்களை  ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தார்கள். இப்படித்தான் சமீபத்தில் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs Boson) என்னும் 'கடவுள் துகள்' என்று சொல்லப்பட்ட உப அணுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கிப் பார்த்தபோது, நான்கு விசைகளையும் சமப்படுத்தக் கூடிய சமன்பாடு ஒன்றை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குவதன் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்பதற்கான சமன்பாட்டை உருவாக்கக் கூடியதாக இருந்தது. நான்கு விசைகளையும் ஒன்றாகக் கொண்ட சமன்பாட்டை வடிவமைக்க உருவாக்கப்பட்ட புதிய கோட்பாடுதான் 'அதிர்விழைக் கோட்பாடு' என்று சொல்லப்படும் 'ஸ்ட்ரிங்க் தியரி' (String Theory) ஆகும். ஸ்ட்ரிங்க் தியரி என்றால் என்ன என்பதை நான் இப்போது, இங்கு புரிய வைக்க முடியாது. அதற்கான தளமும் இதுவல்ல. அதை வேறு ஒரு தளத்தில், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே புரிய வைக்க முடியும். காரணம், அது மிகவும் நீண்டதொரு விளக்கத்தைக் கொண்டது. அதனால் அதைப் பற்றி விளக்குவதைத் தவிர்த்து மேலே செல்லலாம். 

ஸ்ட்ரிங்க் தியரி உருவாகியதைத் தொடர்ந்து 'எம் தியரி' (M theory) என்னும் பெயரில் இன்னுமொரு கோட்பாடும் தோன்றியது. இந்த இரண்டு கோட்பாடுகளும் தோன்றியதால் அண்டம் எப்படி உருவாகியது, எந்த நிலையில் அண்டம் இருக்கிறது, நாம் அண்டத்தில் எப்படி வசிக்கிறோம் என்ற பல உண்மைகள் (அவை உண்மைகளா என்று தெரியாவிட்டாலும்) கோட்பாடுகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி வெளிவந்த உண்மைகளின் அடிபடையில்தான் ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்பதை உங்களுக்குப் புரியவைக்கலாம் என்று இருக்கிறேன். ஸ்ட்ரிங்க் தியரியும், எம் தியரியும் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், நமது அண்டம் நாம் நினைப்பது போல இருக்காது. நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வடிவத்தில்தான் அண்டம் இருக்க முடியும்.

பூமியில் வசிக்கும் நாம் முப்பரிமாணமாகத்தான் ( 3 Dimention) உலகைப் பார்க்கிறோம். இடம் வலம், முன்னே பின்னே, மேலே கீழே என்ற மூன்று பரிமாணங்கள் நமக்கு உண்டு. இதுவரை மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன என்றுதான் நம்பியுமிருந்தோம். ஆனால் ஸ்ட்ரிங்க் தியரி, எம் தியரி ஆகிய இரண்டு கோட்பாடுகளின்படி நமது பூமியும், அண்டமும் பதினொரு பரிமாணங்களைக் கொண்டன என்று கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனால் மூன்று பரிமாணங்களுக்கு மேல் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனையே பண்ணிப் பார்க்க முடியாது. உதாரணமாக, நிலத்தில் மட்டும் ஊர்ந்து செல்லும் ஒரு புழுவை எடுத்துக் கொள்வோம். நிலத்தில் இடம் வலம், முன் பின்னாக இரண்டு பரிமாணங்களில் மட்டுமே அதனால் ஊர்ந்து செல்ல முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புழுவிடம் மேல் நோக்கிப் பறக்கலாம் என்ற ஒரு பரிமாணம் உள்ளது என்று நாம் சொன்னால், அதைக் கற்பனை பண்ணிப் பார்க்க அந்தப் புழுவால் முடியாமல் போகும். அது போல, நமக்கும் மூன்று பரிமாணங்களுக்கு மேலே கற்பனை பண்ணிப் பார்க்க முடிவதில்லை. ஆனால் பல பரிமாணங்கள் இருப்பது என்னவோ உண்மைதான். 

இரண்டு பரிமாணத்தில் இயங்கும் புழுவினால் மூன்றாவது பரிமாணமான மேலே, வானத்தில் உள்ள எதையும் பார்க்க முடியாதது போல, முன்று பரிமாணத்தில் உள்ள மனிதனால் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது........., பதினோராவது என்னும் பரிமாணங்களில் இயங்குபவர்களையும், அந்தப் பரிமாணங்களில் இருக்கும் எதையும் காணமுடியாது. ஆனால் மூன்று பரிமாணங்களில் இயங்கக் கூடிய மனிதனால், இரண்டு பரிமாணங்களில் இயங்கும் புழுவைப் பார்க்க முடிகிறது அல்லவா? அது போல, மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களில் இயங்குபவர்களால், முப்பரிமாணத்தில் இயங்கும் மனிதனைக் காணக் கூடியதாக இருக்கும். இப்போது நான் சொல்லும் விசயம் மட்டும் உங்களுக்குப் புரிந்தால், இனி நான் சொல்லப் போகும் அனைத்தையும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது நாம் ஏலியன்கள் விசயத்துக்கு வரலாம். அதாவது ஏலியன்கள் மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களான, நான்காவது , ஐந்தாவது ஆறாவது பரிமாணங்களில் இயங்கக் கூடியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படியெனின், அவர்களை நம்மால் காணமுடியாது. அதே நேரத்தில் அவர்களால் நம்மைக் காண முடியும். ஏதோ ஒரு தேவைக்கான கணத்தில் அவர்கள் மூன்றாவது பரிமாணத்தில் நுழையும்போது நமக்குக் காட்சி தருகிறார்கள். மனிதனாலும் இரண்டு பரிமாணங்களில் இயங்க முடியாது. ஏதோ ஒரு கணத்தில் நிலத்தோடு நிலமாகப் புழுவை இரண்டு பரிமாணத்தில் நாம் சந்தித்தால் மட்டுமே புழுவால் நம்மைப் பார்க்க முடியும். என்ன உங்களால் நம்ப முடிகிறதா? இல்லை, நான் சொல்வதைக் கேட்கும்போது சிரிப்பு வருகிறதா? இல்லை, இது சிரிக்கும் விசயம் இல்லை. நான் சொன்னதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்

இப்போது இன்னுமொரு புரியாத விசயமொன்றையும் நான் சொல்ல வேண்டும். இடம் வலம், முன் பின் என்றிருக்கும் இரண்டு பரிமாணமான நிலத்தையும், மூன்றாவது பரிமாணமான மேல்வெளியையும் பிரிப்பது மிகச் சிறிய ஒரு பகுதிதான். அதாவது நிலத்திலிருந்து உயர அளவில் ஒரு செண்டி மீட்டர் மேலே வந்தாலும் அது மூன்றாவது பரிமாணமாகிவிடும். ஒரு செண்டிமீட்டர் கூட இல்லை, ஒரு மில்லிமீட்டர் மேலே வந்தாலும் அது மூன்றாவது பரிமாணம்தான். அதாவது இரண்டு பரிமாணத்தையும், மூன்றாவது பரிமாணத்தையும் ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள மிக மெல்லிய ஒரு படைதான் பிரிக்கிறது. அது போல, மனிதனுக்குத் தெரிந்த முன்றாவது பரிமாணத்தையும் அதற்கு மேலுள்ள பரிமாணங்களையும் மிக மெல்லிய ஒரு நூலிழை போன்ற படைதான் பிரிக்கின்றது என்கிறார்கள் இயற்பியலாளர்கள். நான்காவது பரிமாணமோ அல்லது அதற்கு மேலுள்ள பரிமாணங்களோ நமக்கு மிக அருகாமையில்தான் இருக்கின்றன. அப்படி நம்மையும் அடுத்த பரிமாணத்தையும் பிரிக்கும் மெல்லிய பகுதியை 'மெம்பிரான்' (Membrane) என்று அழைக்கிறார்கள். 

இதுவரை நாம் பார்த்தவற்றைச் சுருக்கமாக மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். ஏலியன்கள் என்னும் அதிபுத்திசாலிகளான உயிரினங்கள், நாம் வாழும் பூமிக்கு மிக அருகிலேயே வாழ்கிறார்கள். அவர்களையும் நம்மையும் 'மெம்பிரான்' என்று சொல்லப்படும் ஒரு மிக மெல்லிய சவ்வு ஒன்று பிரிக்கிறது. ஏலியன்களை நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் நம்மைப் போல மூன்று பரிமாணங்களில் மட்டும் இயங்குபவர்கள் அல்ல. அதற்கும் மேற்பட்ட பரிமாணங்களில் இயங்குபவர்கள். குறைந்த பரிமாணங்களில் இயங்குபவர்களால், கூடிய பரிமாணங்களில் இயங்குபவர்களைக் காண முடியாது. எப்போதாவது தேவைகள் ஏற்படும்போது, நான்காவது, ஐந்தாவது என்று அதிகப் பரிமாணங்களில் இயங்குபவர்களான ஏலியன்கள், நாம் வாழும் மூன்று பரிமாணப் பூமிக்கு வந்து போகின்றனர். இப்போது ஏலியன்கள் பற்றி நாம் கொண்டிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் இதில் பொருத்திப் பாருங்கள். எல்லாமே அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம். ஆனாலும் நம்மிடம் மிகப் பெரிய கேள்வி ஒன்று இப்போதும் எஞ்சியிருக்கும். அந்தக் கேள்வி இதை வாசிக்கும் பலருக்குத் தோன்றியிருக்கலாம், சிலருக்குத் தோன்றியிருக்காது. அதனால் அந்தக் கேள்வி என்னவென்பதை நானே சொல்கிறேன்.

"மற்ற பரிமாணங்களில் இயங்கும் ஏலியன்கள் எங்கே வசிக்கிறார்கள்?" என்பதே அந்தக் கேள்வி. நமது கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்துமே முப்பரிமாணத்தில் அடங்குபவைதான். அவை நம் கண்ணுக்குத் தெரிவது ஒன்றே அதற்கு சாட்சியாகின்றது. மேலே சொல்லப்பட்ட கோட்பாட்டின்படி,  ஏலியன்கள் நம் கண்களுக்குத் தெரியக்கூடிய நட்சத்திரங்களில் வசிக்க முடியாது. மூன்று பரிமாணங்களுக்கு மேற்பட்ட வேறு எங்கோதான் அவர்கள் வசிக்க வேண்டும். அப்படியாயின் அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்னும் கேள்வி எழுவது இயல்பானதே!

இந்தக் கேள்விக்கும் அறிவியல் ஒரு பதிலைத் தருகிறது. அது என்ன பதில் என்பதை நாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.

பிற்குறிப்பு: இந்த வாரம் நான் சொல்லிய விசயங்கள் சிலருக்குப் புரியாமல் போகலாம். அதைப் பற்றி அவர்கள் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. கடைசியாகச் சொல்லப்பட்ட சில விசயங்கள் மட்டும் புரிந்தால் போதுமானது. ஆனால் வாசித்த அனைவருக்கு புரிந்திருக்கும் பட்சத்தில், மிகவும் மகிழ்ச்சியடையும் நபராக நான் இருப்பேன்.

மேலுமொரு பிற்குறிப்பு: இந்தத் தொடரை எழுதுவதற்காக நான் மிகவும் உழைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக நான் செலவிடும் நேரம் மிக அதிகம். இந்த உழைப்பைச் சிலர் கவனத்தில் கொள்ளாமல், எனது ஆக்கத்தை அப்படியே தழுவி, தங்களுக்கான இடங்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிக்கொண்டு வருவதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தத் தொடரிலிருந்து தகவல்கள் பெறுமிடத்தில் எங்கிருந்து பெற்றோம் என்ற விளக்கத்தையாவது அவர்கள் கொடுக்கலாம். இதை நிச்சயம் அவர்கள் புரிந்துகொள்வார்களென்று நம்புகிறேன்.

Ramesh Murugan

unread,
Dec 11, 2012, 1:12:25 PM12/11/12
to panb...@googlegroups.com

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? -28
ராஜ்சிவா

பேரண்டம் (Universe) உருவாகிய 'பிக்பாங்' கணத்தை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாக நிரூபிப்பதற்கு இயற்பியலாளர்கள் முயல்கின்றனர். பிக்பாங் வெடிப்பின் கணத்தைக் 'கடவுளின் கணம்' என்று சொல்வார்கள். அண்டத்தைப் படைத்தது கடவுள் என்றால், அவர் அதை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாகத்தான் படைத்திருக்க வேண்டும். 'The whole Universe is nothing but mathematical equations'. கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்திருந்த அந்தக் கணிதச் சமன்பாடு, 'ஸ்ட்ரிங் தியரி' என்னும் ஒரு கோட்பாட்டின் மூலம் கண்டுபிடிக்கப்படும் நிலைக்கு வந்தது. அணுமுதல், அண்டம் வரை இசைக்கருவிகளில் இருக்கும் இழைகள் (Strings) போல அதிர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஸ்ட்ரிங்க் தியரி சொல்கிறது. நவீன இயற்பியலில் இந்தப் பேரண்டம் முழுவதுமே ஒரு சிம்ஃபனி (Symphony) போல இசை வடிவம் பெற்றிருக்கிறது. இதை விளக்குவதுதான் ஸ்ட்ரிங் தியரியாகும். ஸ்ட்ரிங் தியரி மூலம் மொத்தமாக ஐந்து வெவ்வேறு கணிதச் சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உண்மையில் இருக்க வேண்டியது ஒரே ஒரு கணிதச் சமன்பாடு மட்டுமே. எப்போதும் உண்மை என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஒரு சிக்கலுக்குத் தீர்வாக ஐந்து உண்மைகள் இருக்க முடியாது. எதற்காக ஐந்து கணிதச் சமன்பாடுகள் உருவாகின என்பதை ஆராய்ந்தனர். அப்போது 'எம் தியரி' என்னும் புதுக் கோட்பாடு பிறந்தது.

எம் தியரியின் மூலம் நமது அண்டம், நாம் இதுவரை நினைத்தது போல மூன்று பரிமாணங்களைக் கொண்டதல்ல, அதைவிட அதிக பரிமாணங்களை உடையது என்ற சந்தேகம் தோன்றியது. ஸ்ட்ரிங் தியரியால் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து சமன்பாடுகளும் ஐந்து வெவ்வேறான பரிமாணங்களுக்குச் சொந்தமானவை என்ற முடிவுக்கு இந்தச் சந்தேகம் இட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து ஆராய்ந்ததில், ஏற்கனவே அண்டவெளிக்குச் (Space) சொந்தமான மூன்று பரிமாணங்களுடன், காலம் (Time) ஒரு பரிமாணமாக எடுக்கப்பட்டு நான்கு பரிமாணமாகியது. அவற்றுடன் ஸ்ட்ரிங் தியரியின் ஐந்து பரிமாணங்களும் சேர்ந்து ஒன்பது பரிமாணங்களாகின. பின்னர் மேலதிக இரண்டு பரிமாணங்கள் சேர்க்கப்பட்டு பதினொரு பரிமாணங்கள் அண்டத்துக்கு உண்டு என்ற முடிவுக்கு இயற்பியலாளர்கள் வந்தார்கள். இதில் 'சிறப்பு ஈர்ப்புவிசை' (Super Gravitational force) பதினோராவது பரிமாணமாகும். 

மனிதனால் மூன்று பரிமாணங்களில் மட்டும்தான் பிரயாணம் செய்ய முடியும். அதற்கு மேலே உள்ள பரிமாணங்களைக் கற்பனை கூடச் செய்ய முடியாது. உதாரணமாக 'க்யூப்' (Cube) என்று சொல்லப்படும் முப்பரிமானச் சதுரப் பெட்டியை நீங்கள் கண்டிருப்பீர்கள். அது போல, நான்கு பரிமாணமுள்ள 'ஹைப்பர் க்யூப்' (Hypercube) என்பதையும் வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் ஹைப்பர் க்யூபின் வடிவம் இதுதான் என்று உங்களால் முடிவுக்கு வரமுடியாதபடி அதன் வடிவம் அமைந்திருக்கும். 'க்யூப்' (Cube) என்னும் பெயரில் ஹாலிவூட்டின் ஒரு ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படம் வெற்றிபெற அதன் இரண்டாம் பகுதியை 'ஹைபர் க்யூப்' (Hypercube) என்னும் பெயரில் எடுத்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்க்கும் போது ஹைபர் க்யூப் என்பது பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு உருவாகலாம். 

நாம் இருக்கும் அண்டம் பதினொரு பரிமாணங்களைக் கொண்டது என்று சொல்லப்படுவது ஒரு கோட்பாடாகத்தான் எடுக்கப்படுகிறது. நிரூபிக்கப்படாமல் இருக்கும் உண்மைக்குச் சமீபமான முடிவுகள் கோட்பாடுகள் (Theory) எனப்படும். ஆனால் நிரூபிக்கபட்ட உண்மைகள் விதிகள் (Law) எனப்படும். விதிகள் அனைத்தும் (தலைவிதியல்ல) கணிதச் சமன்பாடுகளால் நிரூபிக்கப்பட்டவை. கணிதச் சமன்பாடுகள் என்றுமே உண்மையானவை. மாறாத தண்மை கொண்டவை. இயற்பியலும், கணிதவியலும் இணைந்து பல விதிகளை உருவாக்கியிருக்கின்றன. நியூட்டனால் சொல்லப்பட்டவை விதிகளாக, கணிதச் சமன்பாடுகளாக இன்றுவரை மாறாமல் இருக்கின்றன. அதுபோல, பதினொரு பரிமாணங்கள் அண்டத்தில் உள்ளன என்பதும் கோட்பாடாக இருந்தாலும், அது ஒரு கணிதச் சமன்பாட்டில் பொருந்தி விதியாக மாறும் சாத்தியம் உண்டு. அதை நோக்கித்தான் இயற்பியலாளர்களின் இன்றைய பயணமும் அமைந்திருக்கின்றது. அந்த ஆராய்ச்சிகளைப் பூர்த்தியாக்குவதற்காகத்தான் சுவிஸ் நாட்டில் உள்ள சேர்ன் (Cern) நகரில் மிகப்பெரிய அணுத்துகள் மோதி (Large Hadron Collider-LHC) ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 

பரிமாணங்கள் என்னும் போது, எல்லாப் பரிமாணங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே இருக்கின்றன. இதை வார்த்தைகளால் சொல்லும் போது, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. ஆனால் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு புள்ளியை ஊடறுத்துச் செல்லும் மேல் கீழ் நேர்கோட்டை ஒரு பரிமாணம் என்று சொல்லலாம். அப்படி ஒரு நேர்கோட்டை உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும் அல்லவா? அந்த நேர்கோட்டில் மேலும் கீழுமாக மட்டும் பயணம் செய்யும் ஒற்றைப் புள்ளி போன்ற ஒரு உயிரினம் இயங்கினால், அது ஒரு பரிமாணத்தில் இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த நேர்கோட்டிற்கு வலமாகவோ, இடமாகவோ ஒரு மில்லிமீட்டர் இடைவெளியில், இடம் வலமாக இன்னுமொரு கோடு உருவாக்கப்பட்டால் அது இரண்டாம் பரிமாணம் ஆகிவிடும். அதாவது முதலாவது பரிமாணத்தின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ ஒரு மில்லிமீட்டருக்கு குறைவான இடத்திலேயே இரண்டாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. அதே போல, இந்த இரண்டு பரிமாணங்களுக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவான உயரத்தில் மூன்றாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் மிகச் சிறிய இடைவெளியுடன் அருகருகே இருப்பது போல, நான்காவது பரிமாணமும், ஐந்தாவது பரிமாணமும் அப்படியே பதினோராவது பரிமாணமும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன. எல்லாமே நானோ மீட்டர் அளவு இடைவெளிகளில் காணப்படுகின்றன. இந்த இடைவெளிகளுக்குள்ளேயே ஒவ்வொரு பரிமாணத்திலும் வாழ்பவர்கள் மற்ரவர்களைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு பேச்சுக்கு ஏலியன்களில் ஒரு வகையினர் நான்காவது பரிமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்கள் நமக்கு மிக அருகில், நம் கைகளில் படும் தூரத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நம்மால் அவர்களைக் காணவே முடியாது. இப்படி ஒவ்வொரு பரிமாணங்களிலும் வாழக்கூடிய ஒவ்வொரு வகையில் ஏலியன்கள் இருக்கலாம். பதினோராவது பரிமாணத்தில் நாம் கடவுள் என்று சொல்லும் சக்தி கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது? இயற்பியலாளர்கள் கூடப் பதினோராவது பரிமாணத்தை சுப்பர் கிராவிடிக்கு உரிய பரிமாணம் என்று சொல்கிறார்கள். இந்த ஈர்ப்புவிசைதான் அதிர்வுகளாக அண்டம் முழுவதும் இசை போலப் பரவியிருக்கிறது என்று சொல்கிறார்கள். 

நவீன இயற்பியல் அண்டத்தின் பல பரிமாணங்களை மட்டும் சொல்லிவிட்டு விலகவில்லை. எம் தியரியுடன் சார்ந்து வேறு சில முடிவுகளையும் அது சொல்கிறது. யாரும் நினைத்துப் பார்க்காத முடிவுகளாக அவை இருக்கின்றன. நாம் இதுவரை பேசிக் கொண்டிருப்பது அண்டத்தைப் பற்றியல்லவா? அண்டம் என்பதற்கு ஆங்கிலத்தில் யூனிவேர்ஸ் (Universe) என்பார்கள். அதற்கு ஒருமை என்றே அர்த்தம் உண்டாகிறது. ஆனால் அண்டம் என்பது ஒன்றல்ல, பல அண்டங்கள் (Multiverse) இருக்கின்றன என்று நவீன இயற்பியல் சொல்கின்றது. அத்துடன், எண்ணிக்கையில் முடிவிலியாக அவை அமைந்திருக்கின்றன. கடலில் எத்தனை நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ அத்தனை அண்டங்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். இதைக் கேட்கும் போது நமக்குத் தலையே சுற்றும். ஒரு அண்டம் என்பதே கண்டடைய முடியாதபடி பிரமாண்டமாய் விரிந்திருக்க, முடிவிலித் தொகையில் அண்டங்கள் இருக்கின்றன என்று சொல்வதைக் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது. இந்த ஒவ்வொரு அண்டமும் மற்ற அண்டத்துக்கும் மிக அருகில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போதும் கூட பிக்பாங்க் போன்ற வெடிப்புகளால் அண்டங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். "அட! இதெல்லாம் கொஞ்சம் நவீன அம்புலிமாமா கதைகள் போல இருக்கின்றன" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவை அறிவியல் ரீதியாக நிறுவப்படும் கோட்பாடுகள். விளையாட்டுத்தனமாகச் சொல்லப்படுபவை அல்ல. இத்துடன் முடிந்துவிடவில்லை ஆச்சரியங்கள்.

நவீன இயற்பியல் இன்னுமொரு ஆச்சரியத்தையும் சொல்கிறது. உலகில் எதை எடுத்தாலும், அதற்குச் சமனானதும் நேரெதிரானதுமான இன்னுமொன்றும் இருந்தே தீரும். பூமி சம நிலையில் இருக்க வேண்டுமென்றால் இந்த இரட்டைத் தண்மை மிகவும் முக்கியமானது. மனிதனை எடுத்துக் கொண்டாலே வலது இடது என இரண்டு சமபகுதிகளாகவும் நேரெதிராகவும் பிரிக்ககப்பட்டே இருப்பான். நேர் (Plus) என்ற ஒன்றிருந்தால், எதிர் (Minus) என்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். ஜின் ஜாங், இரவு பகல், புரோட்டான் எலக்ட்ரான், ஆண் பெண், கடவுள் சாத்தான், கிருஸ்து ஆண்டிகிருஸ்து, சொர்க்கம் நரகம், குளிர் வெப்பம் என்று எல்லாமே இரட்டையாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். இது போலத்தான் மாட்டர் (Matter) அண்டத்தில் நிறைந்திருப்பது போல. ஆண்டிமாட்டர்களும் (Antimatter) நிறைந்திருக்கின்றன என்கிறார்கள். அணுக்களானாலென்ன, அண்டமானாலென்ன சமச்சீராகத்தான் (Symmetry) எல்லாமே இருக்கின்றன. இதனால்தான் உப அணுத்துகள்களை ஒவ்வொன்றாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் போது, அதற்குச் சமச்சீரான இன்னுமொரு துகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதே வகையில் சமச்சீராக இருக்கிறது என்று அறிவியல் வல்லுணர்கள் அடித்துச் சொல்லும் ஒன்றுதான் சமாந்தர அண்டம் (Parallel Universe) என்பதாகும்.

நமது அண்டத்துக்கு மிக அருகில், நமது அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போல இன்னுமொரு அண்டம் சமாந்தரமாக இருக்கிறது என்கிறது நவீன இயற்பியல். நான், நீங்கள், உங்கள் பக்கத்து வீட்டு நாய்க்குட்டி எல்லாமே இங்கிருப்பது போல அங்குமிருக்கும். ஆனால் எல்லாமே எதிரெதிராக. இங்கு நீங்கள் இறந்து போனாலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இங்கு கெட்டவனாக இருக்கும் நீங்கள் அங்கு நல்லவனாக இருப்பீர்கள். இதைத்தான் நம்மவர்கள் சொர்க்கம் என்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அதற்குரிய சாத்தியங்கள் இந்தக் கோட்பாட்டில் உண்டு. இறப்பவர்கள் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்னும் ஆன்மீக நம்பிக்கை இதனடிப்படையில் கூட உருவாகியிருக்கலாம். கடவுள், சொர்க்கம் என்று இங்கு நான் சொல்லும் போது, ஆன்மீகத்தை வலியுறுத்துவது போல உங்களுக்குத் தெரியலாம். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல. அறிவியல் எதை 'அறிவியல்' (பகுத்தறிவு) என்று சொல்கிறதோ, அதை ஆன்மீகம் 'கடவுள்' என்று சொல்லலாம் என்றுதான் நான் இங்கு சொல்ல வருகிறேன். நாம் எதை எப்படிப் பார்க்கிறோம் என்ற நிலைப்பாட்டில் நமது புரிதலுக்கான விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

மேலே நான் சொல்லிய ஏதாவது ஒன்றில் 'ஏலியன்' என்று சொல்லப்படும் புத்திசாலி உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த ஏலியன் நம்மை அடைய அவர்களுக்கான மிகச் சாதாரண ஒரு வாகனத்தில் வந்தும் போகலாம். ஆனால், அதுவே நமக்கு பறக்கும் தட்டுகளாகத் தெரியலாம். பல சமயங்களில் பறக்கும் தட்டுகளைப் பார்ததாகச் சொல்பவர்கள் கூறுவது இதுதான், "பறக்கும் தட்டு சிறிது சிறிதாக வேகமெடுத்து திடீரென மறைந்துவிட்டது" என்பார்கள்.  அப்படித் திடீரென மறையும் இடமாக ஏன் இந்த பரிமாண இடைவெளி இருக்கக் கூடாது? ஏன் அது பரலல் யூனிவேர்ஸாகவும் இருக்கக் கூடாது? தர்க்க ரீதியாகச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இதுவே ஆன்மீக ரீதியில் கூடப் பொருந்தி வருவதால் எதிர்க்கும் மனப்பான்மை கூட குறைந்திருக்கும். 

இதுவரை நான் மிகவும் சிக்கலான இயற்பியலை ஏலியன்களுடன் தொடர்புபடுத்தி உங்களுக்கு விளக்க முயன்றிருக்கிறேன். நிச்சயம் அது உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த வகைகளில் ஏலியன்கள் ஏன் பூமியை நோக்கி வந்திருக்கக் கூடாது என்பதை நீங்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள் என்றே நினைக்கிறேன். 'க்ராப் சர்க்கிள்' என்று சொல்லப்படும் 'பயிர் வட்டங்கள்' உருவாக்கப்படுவதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் இவற்றையெல்லாம் நாம் விரிவாகப் பார்த்து வந்தோம். ஆனால் நாம் எங்கு ஆரம்பித்தோமோ அங்குதான் நமது முடிவுப் பகுதியையும் அடைய முடியும். ஆகவே மீண்டும் பயிர்வட்டங்களை நோக்கி நாம் செல்லலாம்.

இன்று வரை புதிய பயிர் வட்டங்கள் உலகெங்கும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் மர்மங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. என்ன விதமான புதிய வகைப் பயிர்வட்ட மர்மங்கள் உருவாகின என்று நாம் அடுத்த வாரம் பார்க்கலாம். 

Ramesh Murugan

unread,
Dec 11, 2012, 1:13:35 PM12/11/12
to panb...@googlegroups.com
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 29
ராஜ்சிவா

வட்டம் என்பது எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறதோ, அந்தப் புள்ளியிலேயே எப்போதும் முடிவடையும். அதுபோல பயிர்வட்டம் பற்றிய இந்தத் தொடரும் எங்கு ஆரம்பித்ததோ அங்குதான் முடிவடைய வேண்டும். உலகம் முழுவதும் பயிர் வட்டங்கள் ஒவ்வொரு வருடமும் உருவாகியபடியே இருக்கின்றன. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் கூட, உலகில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு பயிர்வட்டம் உருவாகிக் கொண்டிருக்கலாம். பயிர்வட்டங்கள் உண்மையானவையோ, போலியானவையோ, இன்றுவரை அவை மனிதர்களை அதிசயிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. வேற்றுக் கிரகவாசிகளால்தான் (ஏலியன்கள்) பயிர்வட்டங்கள் உருவாகின்றன என்று பலர் திட்டவட்டமாக நம்புகிறார்கள். ஆனால் பயிர்வட்டங்கள் மனிதர்களினால்தான் உருவாக்கப்படுகின்றன என்றும் சிலரால் சொல்லப்படுகிறது.  இவை தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்ல அரசுகள் ஏன் தயக்கம் காட்டுகின்றன என்பது மட்டும் புரியாத மர்மமாக இருக்கிறது. 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?' என்று சாதாரண மக்களே வியக்கும் அளவுக்கு அரசுகள் நடந்து கொள்கின்றன. இந்த உண்மைகளை மக்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதில்தான் அரசுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் பயிர்வட்டச் சம்பவங்களுக்கு இதுவரை சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. 

பயிர்வட்டங்கள் மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன என்று சொல்வதோடு, இதுவரை உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் போலவே நாங்களும் உருவாக்கிக் காட்டுவோம் என்று சொல்லும் சிலர் கூட, எல்லாப் பயிர்வட்டங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதைத் தயக்கமில்லாமல் ஒத்துக் கொள்கிறார்கள். சில பயிர்வட்டங்கள் எப்படி உருவாகின்றன என்று தங்களால் சொல்ல முடியவில்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் சுயமாக எத்தனை பயிர்வட்டங்களை உருவாக்கினாலும், ஒரே ஒரு பயிர்வட்டமாவது மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டாலே போதுமானது. அந்தப் பயிர்வட்டத்தை உருவாக்கியது எந்தச் சக்தி என்ற கேள்வி அங்கு வந்துவிடுகிறது. அந்தச் சக்தி அமானுஷ்யமாக இருப்பதால், அவை ஏலியனாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். 

1980களில் ஆரம்பித்து இன்று வரை தொடரும் பயிர்வட்டச் சரித்திரத்தில் பத்தாயிரத்துக்கு மேலாகப் பயிர்வட்டங்கள் உருவாகியிருந்தாலும்,  2012ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 125 பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 69 பயிர்வட்டங்கள் இங்கிலாந்தில் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட 69 பயிர்வட்டங்களில் நான்கே நான்கு பயிர்வட்டங்கள்தான் போலியானவை என்று கணித்திருக்கிறார்கள். இங்கிலாந்து தாண்டி உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட மிகுதி 56 பயிர்வட்டங்களில், ஐந்து பயிர்வட்டங்களே போலியானவை என்கிறார்கள். 2012 இல் உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களில் பெரும்பான்மையானவை சிக்கலான வடிவங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித டிஎன்ஏ (DNA) முதல் வானியல் அமைவுகள் வரை பல வடிவங்களில் பயிர்வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த நேரத்தில் ஒரு கேள்வி அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. இவ்வளவு சிக்கலான, புத்திசாலித்தனமான, வியக்கும்படியான, பிரமாண்டமான சித்திரத்தை ஒருவேளை மனிதர்கள்தான் உருவாக்கியிருந்தால், அதற்குரிய பாராட்டை எடுத்துக் கொள்ளாமல் ஏன் மறைந்து கொள்ள வேண்டும்? ஒன்று இரண்டு என்றால் சரி. ஆயிரக் கணக்கான பயிர்வட்டங்களை இரவிரவாக உருவாக்கிவிட்டு அவர்கள் ஏன் ஒளித்துக் கொள்ள வேண்டும்? உருவாக்கும் நேரம், அதற்கான செலவுகள் என அனைத்தையும் கவனத்தில் கொள்ளாமல் 30 ஆண்டுகாலமாக மறைவு வாழ்க்கையைப் பயிர்வட்ட உற்பத்தியாளர்கள் ஏன் மேற்கொள்ள வேண்டும்? இதனால் அவர்கள் அடையும் நன்மை என்ன? எதுவும் இல்லையே! 

இங்கிலாந்தில் ஏன் அதிகப்படியான பயிர்வட்டங்கள் உருவாகின்றன? அப்படி அங்கு என்ன விசேசம் இருக்கிறது என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஆனால் ஆதிகாலம் முதல் இன்று வரை இங்கிலாந்துக்கும், வட்டவடிவமான அமைப்புகளுக்கும் நிறையவே சம்பந்தம் இருந்து வந்திருந்திருக்கிறது. குறிப்பாகச் சில்பரி ஹில் (Silbury hill), வைல்ட் ஷையர் (Wiltshire), ஹம்ப்ஷையர் (Hampshire), ஆவ்பரி (Avebury) ஆகிய பிரதேசங்களில்தான் அதிகப்படியான பயிர்வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த இடங்களைச் சுற்றி வேறு சில ஆச்சரியங்களும் உருவாகியிருக்கின்றன. அந்த ஆச்சரியங்கள் பற்றி நான் இதுவரை உங்களுக்குச் சொல்லலவில்லை. நான்காயிரம் வருசத்துக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஆச்சரியங்கள் அவை. இந்த ஆச்சரியங்கள் ஏன், எதற்காக, யாரால் உருவாக்கப்பட்டன என்று இதுவரை தெரியவே இல்லை. அவை வேறு ஒன்றுமில்லை. பயிர்வட்டங்கள் உருவாகிய அதே பிரதேசங்களில் பிரமாண்டமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட குதிரைகளின் சித்திரங்கள்தான் அவை. நான்காயிரம் வருடங்களின் பின்னரும் அழியாமல் அப்படியே காட்சிதரும் குதிரைகள் அவை. விதவிதமான வடிவங்களில் வரையப்பட்ட குதிரைகள். 

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தமாகப் பத்துக் குதிரை வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நான்காயிரம், இல்லை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்று சொல்பவர்களும் உண்டு. அந்த அளவுக்குப் புராதனமான குதிரை வடிவங்கள் ஏன் வரையப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. அந்த வடிவங்கள் அனைத்தும் பயிர்வட்டப் பிரதேசங்களிலேயே வரையப்பட்டுள்ளதால் அவற்றுக்கென சிறப்புத் தன்மையும் உண்டாகிறது. பயிர்வட்டப் பிரதேசங்களான இந்த இடங்களில், வெண்கட்டி (Shalk) மண் வகையே காணப்படுகின்றன. இந்த வெண்கட்டித் தரையிலேயே குதிரை உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டிருந்த பத்துக் குதிரைகளில், மூன்று குதிரைகள் 19ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவை ஏழு குதிரைகள் மட்டும்தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மாடர்ன் ஆர்ட் வகையில் குதிரைகள் எப்படி வரைவார்களோ, அப்படிச் சில குதிரைகள் வரையப்பட்டிருக்கின்றன. குதிரைகளை வரைவதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. ஆனால் நூறு மீட்டருக்கும் அதிக அளவுள்ள பிரமாண்டத்தில் அக்குதிரை வடிவங்கள் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரியம். 

இத்தனை ஆச்சரியங்களையும் ஒன்றாக அடக்கிய இங்கிலாந்தின் இந்தப் பிரதேசங்களை ஒன்று சேர்த்து ஆராய்ந்தபோது, அவை எல்லாவற்றுக்கும் இருக்கும் ஒரேயொரு பொதுப் பண்பு இந்த வெண்கட்டி மண்வகை மட்டும்தான். குதிரைகளின் சித்திரங்களும் வெண்கட்டிகளிலேயே அமைக்கப்பட்டிருப்பதால், இந்த வகை மண்ணுக்காகத்தான் ஏலியன்கள் இந்தப் பிரதேசங்களை நோக்கி வருகின்றனவோ என்றும் சிலர் சந்தேகப்படுகிறார்கள். இந்த வெண்கட்டி மண் இருப்பதால் அதற்குக் கீழே இருக்கும் நீர்கூட விசேசத் தன்மையுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள். இதுவும் ஏலியன்களைக் கவரக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த மண்வகையில் உள்ள இரசாயனம் ஏதோ ஒருவகையில் அவர்களுக்குப் பயன்படுகிறதோ என்றும் சிந்திக்கின்றனர். இது கூட உண்மையாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு. யார் கண்டது?  

'மிஸ்டரி' என்று சொல்லப்படும் மர்மங்களுக்கு அறிவியல் சரியான விடையைக் கொடுக்காதவரை அது நம்மை ஒரு அமானுஷ்ய சக்தியின்பாலே இழுத்துச் செல்லும். பல மர்மங்கள் விடையளிக்கப்படாமல் உலகம் எங்கும் பரவியிருக்கின்றன. அவற்றுக்கான உண்மையான விளக்கம் நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் இருந்தே தீரும். அந்த விளக்கம் என்னவென்றுதான் நமக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அந்த மர்மங்களுக்கான விளக்கங்களைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நமது அறிவியல் வளராமல் கூட இருக்கலாம். இதுவரை அப்படிப்பட்ட தன்மையுள்ள ஒரு சில மர்மங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவற்றை வாசித்த உங்களுக்கு அவற்றில் சிலவற்றுடன் உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகம் எங்கும் அறியப்படாமல் இருக்கும் தகவல்களை உங்களுக்குக் கொண்டு சேர்ப்பது என்பதுதான் என் கடமையாகிறது. இறுதி முடிவு எப்பொழுதும் உங்கள் கையில்தான். இருபத்தியொன்பது வாரங்களாக நான் எழுதியதை சலிக்காமல் வாசித்து வந்த உங்களுக்கு என் நன்றிகள். இந்தத் தொடர் எழுதுவதற்கான முழுச் சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அத்தோடு, பல அறிவியல் தகவல்களை உடனிருந்து எனக்குப் பெற்றுத் தந்த என் மகள் யாழினிக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். திரு.மனுஷ்ய புத்திரன் அவர்கள் விரும்பினால், இன்னொரு வித்தியாசமான தொடர் மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். நன்றி.

Srimoorthy.S

unread,
Dec 11, 2012, 2:03:31 PM12/11/12
to பண்புடன்

பரிமாணத்தை விளக்க முற்படுவது கொஞ்சம் சிரமமான காரியம்தான்.

மூன்று பரிமாணம் வரை எனக்கு பரிச்சயம். அதற்கடுத்து ஒரு பரிணாமத்தை கூட என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
சிஎன்சி மெசினில் ஆறு பரிமாணம் வரை இருப்பதாக குறிப்பிடுவார்கள். ஆனால் அதுவும் முப்பரிமாணத்துக்குள்ளேயே அடங்குவதாக உணர்கிறேன்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 

Jaisankar Jaganathan

unread,
Dec 12, 2012, 6:51:33 AM12/12/12
to panb...@googlegroups.com
இந்த பிரபஞ்சத்துல 6 அறிவு உள்ள ஒரே இனம் மனிதன் மட்டுமே

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 12, 2012, 11:26:29 AM12/12/12
to பண்புடன்
ஓ நிஜமாவா  ஜெய்சங்கர் ?  ஒண்ணு ரெண்டு குறைஞ்சதுங்களும் இருக்கே தெரியாதா ? அதெல்லாம் சேர்ந்து தான் குடிசைகளுக்குத் தீவைக்கிறது, கொலை செய்யறதுன்னு இருக்கே அதுகளுக்கும் 6 இருக்கா என்ன ?


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/12 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
இந்த பிரபஞ்சத்துல 6 அறிவு உள்ள ஒரே இனம் மனிதன் மட்டுமே

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 

Omprakash

unread,
Dec 12, 2012, 12:11:39 PM12/12/12
to panb...@googlegroups.com
அதாவது இப்படி சொல்லலாம், இந்த பிரபஞ்சத்தில் ஆறறிவு இருந்தும், ஐந்து அல்லது அதற்கு குறைவான அறிவுடன் நடப்பவன் மனிதன் மட்டுமே...

வில்லன்

unread,
Dec 12, 2012, 12:20:45 PM12/12/12
to panb...@googlegroups.com
விருமாண்டியிலே கடவுள் சொல்லுவாரு கண்ணு இடுங்கினவனெல்லாம் ப்ரூஸ்லியில்லைன்னு...



2012/12/12 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
இந்த பிரபஞ்சத்துல 6 அறிவு உள்ள ஒரே இனம் மனிதன் மட்டுமே

--

--

//பொறுப்புத் துறப்பு: எனது கமெண்டில் வரும் பெயர்கள் மட்டுமல்ல கருத்தும்
கற்பனையே //

Ramesh Murugan

unread,
Jan 1, 2013, 3:54:24 AM1/1/13
to panb...@googlegroups.com
வில்ஸ்,
கடந்த 2 வாரமா இந்த தொடர் வெளிவரல... மனுஷ்யபுத்ரன்கிட்ட என்ன மேட்டர்னு கேட்டுச் சொல்லுங்களேன்..

Srimoorthy.S

unread,
Jan 1, 2013, 3:58:51 AM1/1/13
to பண்புடன்

எழுதுறது ராஜ்சிவா இல்ல?

--

வில்லன்

unread,
Jan 1, 2013, 3:59:32 AM1/1/13
to panb...@googlegroups.com
உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையாய்யா?
இந்த தொடர் போன மாசமே முடிஞ்சிப்போச்சே?

> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>


--

//பொறுப்புத் துறப்பு<http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&action=edit&redlink=1>:

Ramesh Murugan

unread,
Jan 1, 2013, 4:04:11 AM1/1/13
to panb...@googlegroups.com
மனுஷ்யபுத்திரன் அனுமதிச்சால்....னு எனுதினதால 30வது பாகம் வரும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் :((

2013/1/1 வில்லன் <vom...@gmail.com>

உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையாய்யா?
இந்த தொடர் போன மாசமே முடிஞ்சிப்போச்சே?

Srimoorthy.S

unread,
Jan 1, 2013, 4:06:54 AM1/1/13
to பண்புடன்

ஒரு வேளை நாம் வாழும் புது உலகத்துக்கு அவர்கள் யாரும் வராமல் பூமியுடனே இருந்துவிட்டார்களோ

Reply all
Reply to author
Forward
0 new messages