முற்றம்
__________________________________________ருத்ரா
(அணிலாடு முன்றில்)
அந்த கிரில்
நீல வானத்தை தைத்து
பூங்கொடி ஒன்றை
சூரிய ஒளியில்
வழிய விட்டிருந்தது.
தரையில் தெரிந்த
நிழற் பழங்களை
கொறிக்கத் துடித்தது
ஒரு அணில்.
அதன் வால் தூரிகையிலிருந்து
எத்தனை பிக்காசோக்கள்
அல்லது
ரவி வர்மாக்கள்
அங்கே இழைந்து கிடந்தார்களோ?
அங்கே விழுந்து கிடந்த
கடிதம்
அதன் கூரிய பற்களில்
சுக்கல் சுக்கல் ஆகி
காற்றில் பரவிச்சிதறி
ஒடிவிட்டது.
அது அவளுக்கு
நான் எழுதிய கடிதம்.
எத்தனையாவது கடிதம்?
எனக்கே தெரியாது.
அவள் ஒன்றும் பதில் எழுதி
கிழித்துவிடப்போவதில்லை.
கிழித்து போட்டிருப்பவைகளுக்கும்
கண்க்கே இல்லை.
போகட்டும்.
அந்த மிளகுக்கண்களில்
உற்று உற்றுப்பார்த்து
வெடுக் வெடுக் என்று கடித்த...
அல்ல அல்ல
முத்தம் கொடுத்த அந்த
அணிலுக்கு
என் ஆயிரம் நன்றிகள்.
______________________________________