உலகம் அதி வேகமாக முன்னேறி கொண்டிருப்பது நாம் அறிந்ததே. அதிலும் கணினி வந்தப் பின்னர் உள்ள உலக அறிவியல் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. உலகம் அறிவியலில் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ச்சியடைகின்றதோ அதே வேகத்தில் இல்லை எனினும் மற்றெல்லா துறைகளும் ஓரளவு நல்ல வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்கின்றன.
உலகின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையாக மனிதர்களின் நடவடிக்கைகளில் ஒன்றும் மிகக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி நிலை எட்டியுள்ளது எனலாம். அதில் குறிப்பாகக் கூறினால் மனிதர்களில் காணப்படும் முறையற்ற தொடர்பினைக் கூறலாம்.
திருமணம் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் தனது இயற்கையான உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளக் கொண்ட உறவு முறை இன்று வளர்ந்துப் போய், ஆணும் ஆணும் மனிதனும் மிருகமும் என்ற நிலைக்கு எட்டியுள்ளது.
இத்தகைய முறைகேடான உறவுகளையும் தனி மனித/மிருகச் சுதந்திரம் எனக் கூறுபவர்களும் உளர். மேலைத்தேய நாடுகளில் இத்தகையக் கலாச்சாரம் மிக வேகமாகப் பரவி வருகின்றது.
இதனைக் குற்றம் அல்லது மோசமான செயல் எனக் கருதுபவர்களுக்கோ இருக்கவே இருக்கிறது, பாவமன்னிபு வழங்கும் பள்ளிகள்.
செய்ய வேன்டியதைச் செய்து விட்டு ஏதாவது ஒரு பள்ளியில் சென்று குற்றங்கள் அனைத்தையும் ஒப்புவித்து பாவமன்னிப்புத் தேடினால் அவரின் இத்தகைய அநாகரீகக், கீழ்தர நடவடிக்கைகள் கூட மன்னிக்கப்பட்டு விடுமாம். என்னே மனித உரிமை பேணும் மதம்!
நாகரீகம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் இத்தகைய அநாகரீகத் தொடர்புகள் நாகரீகமாகி விட்டச் சூழலில், நாகரீகம் வலர்ச்சியடையாத மீட்பர் இயேசுவுக்கு முந்தையக் காலத்தில் இத்தகைய அநாகரீகத் தொடர்புகளைச் செய்பவர்களைக் குறித்துச் சமூகத்தில் என்ன கண்ணோட்டம் இருந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளதா? வாருங்கள் புனித வேதாகமத்தின் பழைய ஏற்பாடு, லேவியராகமத்திற்கு...
9 தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும்.
10 அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.
11 தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே இருவரும் கொலை செய்யப்படுவர். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.
12 ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.
13 பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும்.
14 ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
15 விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும்.
16 ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும்.
எப்பா, ஒரே இரத்த வாடை. ஆமாம், மீட்பர் இயேசுவின் காலத்திற்குப் பிந்தைய இந்த நாகரீகக் காலத்தில் இத்தகைய அநாகரீகத் தொடர்புகளைச் செய்பவர்கள் பாவமன்னிப்புத் தேடினால் தீர்ந்ததுப் பிரச்சனை எனக் கூறியக் கர்த்தர் நாகரீகம் வளர்ச்சியடையாத மீட்பர் இயேசுவுக்கு முந்தையக் காலகட்டத்தில் இதே அநாகரீயத் தொடர்புகளில் ஈடுபட்டவர்களைச் சுட்டி எரிப்பது வரைத் தண்டனைக் கொடுத்துள்ளாரே, அவர் நல்லவரா? கெட்டவரா?
செய்ய வேன்டியதைச் செய்து விட்டு ஏதாவது ஒரு பள்ளியில் சென்று குற்றங்கள் அனைத்தையும் ஒப்புவித்து பாவமன்னிப்புத் தேடினால் அவரின் இத்தகைய அநாகரீகக், கீழ்தர நடவடிக்கைகள் கூட மன்னிக்கப்பட்டு விடுமாம். என்னே மனித உரிமை பேணும் மதம்!
| Matthew 10:32,33 | [Jesus said] Therefore whoever confesses Me before men, him I will also confess before My Father who is in heaven. But whoever denies Me before men, him I will also deny before My Father who is in heaven |
நிச்சயமாகச் செய்கிறேன் நண்பர் பிரேம் அவர்களே. நல்ல ஆலோசனை தந்தமைக்கு நன்றி.
தற்பொழுது கீழ்கண்ட வலைபதிவில் பதித்து வருகிறேன். இங்கு குழுமத்திலும் விரைவில் செய்கிறேன்.
நன்றி
அன்பரே டாக் குட்டி...
கர்த்தருக்கு முன்பாகவே பல காலம் முன்பு எழுதப்பட்டதே பழைய ஏற்பாடு...
அதைப் படித்துவிட்டுக் கர்த்தர் நல்லவரா? கெட்டவரா? என்று கேள்வி
எழுப்பும் தங்களுக்கு அற்ப விளம்பரத்தைத் தவிர வேரெதுவும் தெரியாதோ....
இதைத் தான் முன்னோர்கள் அழகாக சொல்லி வைத்தனர்... குறைகுடம்
கூத்தாடும்...
மத்தேயு 7:6 நன்றி, அன்புடன்..சூர்யா.
|
மத்தேயு 7:6
தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
மத்தேயு 28 ம் அதிகாரம். யேசுவின் இறுதி வசனங்கள்
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். 17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். 18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. 19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.
யேசு எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறார். |
இதில்தான் பிரச்சனையே! திணிப்பு என்பதில் நாட்டமில்லாதவன் நான்.
அது வரை வேறு சமயத்தை பின்பற்றும் பலரையும் இந்த சமயத்தை பின்பற்றச் சொல்வது ஞாயமல்ல. எல்லோரும் அவர்களுக்குப் பிடித்த கடவுளரை வணங்குகிறார்கள் இதில் எதற்காக மற்றொருவரை இவர்களது சீடராக்க வேண்டும், எதற்காக திருமுழுக்கு செய்ய வேண்டும்?
நான் கற்றுக் கொடுத்த அன்பு ஒன்றை பரப்புங்கள் என்று சொல்வது தவறல்ல, நான் வணங்குபவனை வணங்கச் செய் என்பதில் ஞாயம் இருப்பதாக்த் தெரியவில்லை.
2008/4/3 சூர்யா <da.ris...@gmail.com>:
--
அன்புடன்,
இயற்கை இரசிகன்.
Cheers,
Baskar.A
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார். //
அவர் ஒரு முறைகூட மரணிக்கவில்லை என்பதில் நான் நூறு சதவீத நம்பிக்கை கொள்கிறேன். அவர் உயிரோடு பிறந்தார், இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
(கடவுளை சாகடிக்கும் உரிமை யாருக்கும் வழங்கபட வில்லை, கடவுள் பிறந்தார், இறந்தார் என்று சொல்வதையே என்னுடைய மனித அறிவுக்கு ஏற்ற ஒரு கருத்தாக தெரியவில்லை)
இதை ஒரு சின்ன எடுத்துக்காட்டினால் விளக்கலாமா... ஒருவன் பைபிளில் என்ன
சொல்லியிருக்கிறதோ அதுபோல் நடக்கலாம் என்று ஒரு பக்கத்தை எடுத்து முதல்
வரியைப் படித்தானாம் அதுல் "அவன் நாண்டு கொண்டு செத்தான்' என்று
எழுதியிருந்தது.. இந்த வசனம் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசின்
முடிவைப் பற்றியது.. அதை முழுதும் படிக்காமல் .. இந்த வசனத்தின்
பொருளைமட்டும் எடுத்துக்கொள்வானாயின் .... அது எப்படியானதொரு
அர்த்தத்தைத் தரும்...
நீங்கள் பைபிளில் இருக்கும் அத்தனை கருத்துக்களையும் எழுதியிருந்தால்
நான் இதை அற்ப விளம்பரம் என்று கூறியே இருக்கமாட்டேன்..
தாங்கள் உண்மையானவராக இருந்தால் சொல்லுங்கள்,
இதுவரை எத்தனை இழைகள் பைபிளில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து
எழுதியிருக்கிறீர்கள்..
பைபிளில் நல்ல விஷயங்களே இல்லை என்கிறீர்களா???
தங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.. இல்லை என்று சொல்லவில்லை..
ஆனால், அந்த கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு முன்னரேயே.. தாங்கள்
முடிவையும் கூறிவிடக்கூடாது... முடிவைக்கூறாமல் தங்கள் கேள்விகளை
இடுங்களே... அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம்...
முடிவைக்கூறாமல் தங்கள் கேள்விகளை
இடுங்களே... அனைவரும் விவாதித்து முடிவுக்கு வருவோம்...
கர்த்தர் என்று நான் சொன்னது இயேசுவை... எனக்குச் சொல்லுக்
கொடுக்கப்பட்டதும் அப்படித்தான்..
நீங்கள் தந்தைக் கடவுள் நல்லவரா கெட்டவரா எனக் கேட்டால்,
தன் மகனையே உலகிற்கு அனுப்பி உலக மக்களின் பாவங்களுக்காக பலியாக்கினாரே..