தெய்வீக ராகம்

3,041 views
Skip to first unread message

தமிழன் வேணு

unread,
Aug 30, 2009, 2:14:12 AM8/30/09
to thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com
ராகங்களைப் பற்றி எழுத கர்நாடக சங்கீதம் முறையாகப் படித்திருக்க வேண்டுமோ என்ற ஐயப்பாடு காரணமாக, இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து, தற்காலிகமாக குளிர்பதனப்பெட்டியில் வைத்து விட்டிருந்தேன். ஆயினும், கர்நாடக சங்கீதம் குறித்து இன்னும் அறிந்து கொள்ளுகிற ஆவல் உள்ளபடியால், இதில் இருக்கிற குறைகளை எவரேனும் சுட்டிக்காட்டினால், இசை குறித்த எனது அறிவு இன்னும் சற்று விசாலப்படலாமே என்ற சுயநலமும், இசை குறித்து இதுவரை எழுதாமல் விட்டு வைத்திருக்கிறோமே என்ற அரிப்புமாகச் சேர்ந்து இதை ஆரம்பிக்க வைத்திருக்கிறது.
 
(இதையாவது பாதியிலே விட்டு விடாமல் தொடர்வாயா என்று ஒரு அசரீரியும் கேட்காமல் இல்லை!)

இசைஞானி இளையராஜாவின் பரம விசிறி நான். என்னைப் பொறுத்தவரையில் இளையராஜாவின் இசையை "காதல் ஓவியம்" திரைப்படத்திற்கு முன், அப்படம் திரைக்கு வந்தபின் என்று இரண்டு காலகட்டமாகப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். காரணம், "காதல் ஓவியம்" திரைப்படம் நடனம் மற்றும் கர்நாடக இசை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு விதத்தில் "சங்கராபரணம்," படத்தினால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ! "இதயம் பேசுகிறது" பத்திரிகையில் அப்படத்தை விமர்சித்தபோது "சாயம்போன பாரதிராஜாவின் சங்கராபரண சபலம்," என்று ஈவு இரக்கமின்றி விமர்சித்திருந்தார்கள். பாரதிராஜா, இளையராஜா இவர்களை சில வாரப்பத்திரிகைகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்த காலகட்டம் அது. "குயிலே குயிலே" என்ற பஞ்சு அருணாச்சலத்தின் ஒரு பாட்டைத் தவிர, மீதமுள்ள அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்க, கிராமீய இசையில் துவங்கி, மேற்கத்திய இசையைத் தொட்டுக்கொண்டிருந்த இசைஞானி, கர்நாடக இசையில் தனக்கிருந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்த படம். ஏற்கனவே "கோவில் புறா" என்ற படத்தில் கே.ஜே.யேசுதாசின் குரலில் இடம்பெற்ற "வேதம் நீ இனிய நாதம் நீ" என்ற பாடல் அவரால் சாஸ்த்ரீய இசை என்று வியந்து, பயந்து விலகி ஓடத் தூண்டிய பிரதேசத்திலும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற துணிவைக் காட்டியிருந்தது. அதே படத்தில் இடம்பெற்ற "அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!" என்ற பாடலின் வரிகளும், அதனோடு இழைந்து வரும் நாகஸ்வர ஒலியும் இன்னும் மறக்க இயலவில்லை. அனேகமாக, அந்தப் படத்தை "கொஞ்சும் சலங்கை," "தில்லானா மோகனாம்பாள்" படங்களோடு ஒப்பிட்டு விமர்சகர்கள் கொன்று விட்டார்களோ என்று தோன்றுகிறது.

ஒரு விதத்தில் கே.பாலசந்தர்-எம்.எஸ்.விஸ்வநாதன் வெற்றிக்கூட்டணி முறிந்து, விஜயபாஸ்கர், வி.எஸ்.நரசிம்மன் என்று சுற்றி வளைத்து இயக்குனர் சிகரமும் இளையராஜாவோடு "புன்னகை மன்னன்" படத்தோடு இணைந்த அந்த சில வருடங்களில் இசைஞானி மேற்கத்திய இசையின் தாக்கங்களை ஏற்கனவே தமிழ்த்திரைப்படப் பாடல்களில் வெற்றிகரமாகக் கையாண்டிருந்தார். இது "ராஜபார்வை"யில் வரும் வயலின்-மெல்லிசை ஃபியூஷனிலேயே துவங்கியிருந்தது என்று ஞாபகம். "சிவப்பு ரோஜாக்கள்" படத்தின் பின்னணி இசையில் மிரட்டியிருந்ததையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அப்போதைய ஜனரஞ்சகப்பத்திரிகைகள் இதையெல்லாம் நக்கலடித்துக் கொண்டிருந்தனர். பல தேசிய விருதுகளை இளையராஜா வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தும் கூட! ஆனால், கே.பாலசந்தர்-இளையராஜா கூட்டணி துவங்கியதும் பல பத்திரிகைகள் திடீரென்று எம்.எஸ்.வியைக் கிடப்பில் போட்டு விட்டு, இளையராஜாவை வானளாவப் புகழத் தொடங்கியதும் வேடிக்கையாக இருந்தது.

ஆனால், இந்திய, மேற்கத்திய இசைகுறித்து எதுவுமே தெரிந்திராத என் போன்றவர்களுக்கு, இளையராஜாவின் இசையில் இருந்த வெவ்வேறு பரிமாணங்கள் வியப்பை ஏற்படுத்தியது மட்டும் உண்மை. கர்நாடக சங்கீதம் பற்றி ஓரளவு தெரிந்திருந்த சிலரிடம் ராகங்கள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுவேன். குறிப்பாக, இளையராஜாவின் பாடல்கள் பற்றி!

"ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே அழுகின தக்காளியே"

"தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் மலேசியா வாசுதேவன் பாடுகிற இந்தப் பாடல் என்ன ராகம்?

ஆரபி ராகம்!

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி" ஆரபி ராகத்தில் அமைக்கப்பட்ட ஒரு சோகப்பாடலுக்கு உதாரணம்!

"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!" என்ற "முதலாளி" படத்தில் டி.எம்.எஸ்ஸின் பாடலும் ஆரபி தான்!

இந்த மூன்று பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இதற்குள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கே எனது இசையறிவு இருக்கிறது. ஆயினும் இவையனைத்தும் ஒரே ராகத்தின் அடிப்படையில் இருக்கின்றன என்கிற ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை! அந்த ஆச்சரியம் தந்த தூண்டுதல் காரணமாகவே, இன்னும் இது போல ராகங்கள் குறித்து விசாரித்து எழுதலாமே என்ற நப்பாசையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடருவேன்!

தமிழன் வேணு

Ahamed Zubair A

unread,
Aug 30, 2009, 2:48:03 AM8/30/09
to panb...@googlegroups.com


2009/8/30 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

"ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே அழுகின தக்காளியே"

"தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் மலேசியா வாசுதேவன் பாடுகிற இந்தப் பாடல் என்ன ராகம்?

ஆரபி ராகம்!

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி" ஆரபி ராகத்தில் அமைக்கப்பட்ட ஒரு சோகப்பாடலுக்கு உதாரணம்!

"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!" என்ற "முதலாளி" படத்தில் டி.எம்.எஸ்ஸின் பாடலும் ஆரபி தான்!

இந்த மூன்று பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இதற்குள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கே எனது இசையறிவு இருக்கிறது.

 
அதேதான் இங்கேயும் :-)
 

ஆயினும் இவையனைத்தும் ஒரே ராகத்தின் அடிப்படையில் இருக்கின்றன என்கிற ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை! அந்த ஆச்சரியம் தந்த தூண்டுதல் காரணமாகவே, இன்னும் இது போல ராகங்கள் குறித்து விசாரித்து எழுதலாமே என்ற நப்பாசையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடருவேன்!

 
தொடருங்கள் காத்திருக்கிறோம்..

Asif Meeran AJ

unread,
Aug 30, 2009, 4:49:24 AM8/30/09
to panb...@googlegroups.com
 தொடருவேன்!

தொடரணும் :-)
ஆவலாய் நானும் காத்திருக்கிறேன்

இளையராஜாவை ஆரம்பத்தில் நக்கலடித்ததற்கும்
அதன் பின்னர் துக்கி எழுதியதற்கும் பின்னர் ரஹ்மான் வந்ததும் மீண்டும்
அவரை தூக்கி எறிந்ததற்கும் தமிழ்ப்பத்திரிகைக்காரர்களின் அடிப்ப்டை நோக்கங்களே
காரணம் அது என்னவென்று எழுத அவசியமில்லையென்றே கருதுகிறேன்

தமிழன் வேணு

unread,
Sep 5, 2009, 12:24:52 PM9/5/09
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
இந்தப் பதிவை என்னை விட இன்னும் கொஞ்சம் சங்கீதம் தெரிந்த நண்பருக்குக் காட்டியதும், சில பல ஆட்சேபங்களைத் தெரிவித்தார். அதாவது, ஆரபி போன்ற ராகத்தில் "ஆசைக்கிளியே அரைக்கிலோப்புளியே," பாடுவதும், கானடா ராகத்தில் "மாறுகோ மாறுகோ மாறுகயீ(சதி லீலாவதி)" பாடுவதும் அவருக்கு ஏற்புடையதல்ல என்று; காரணம், இரண்டுமே நகைச்சுவைப்பாடல்கள் என்பதால் ராகங்களைக் கேலி செய்வது போலிருக்கிறது என்பது அவரது வாதம்.
 
இருப்பினும், கொஞ்சம் உபயோகமான தகவல்களையும் கொடுத்திருந்தார். அதாவது, ஆரபி ராகம் எனப்படுவது ஒரு விதத்தில் (சஞ்சாரம்) தேவகாந்தாரி என்ற ராகத்தை ஒத்திருக்கும் என்பதும், தேவகாந்தாரி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட திரைப்படப்பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
 
நான் தேவகாந்தாரிக்கு எப்போது வந்து சேர்வேன் என்று தெரியவில்லை. :-((

அடுத்து இசைஞானியின் இன்னும் சில பாடல்களைப் பார்க்கலாம்.

இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். மிகக்குறைவான பாடல்களே பாடியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே! ரஜினிக்காக "நண்டூறுது நரியூறுது," என்ற பாடலை "பைரவி"யிலும், "அம்மா நீ சுமந்த பிள்ளை," என்று "அன்னை ஓர் ஆலயம்," படத்திலும் பாட வைத்தவர், பிற பாடல்களை சிவாஜிக்கு மாத்திரமே பாட வைத்திருப்பதைக் கவனித்தால், ஒரு வேளை சில வற்புறுத்தல்களின் காரணமாகவே பாட வைத்திருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

"சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம்." சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடி கடைசியாக இணைந்த "நல்லதோர் குடும்பம்" படத்தில் டி.எம்.எஸ்-பீ.சுசீலா பாடிய பாடலுக்கு எம்.எஸ்.வி தான் இசையமைத்திருக்கக் கூடும் என்று என் நண்பர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டதுண்டு. டி.எம்.எஸ் வழக்கத்துக்கு மாறாக மிகவும் கீழ்ஸ்தாயியில் பாடிய மிகக்குறைவான பாடல்களில் ஒன்று அது!

பிரபு-சில்க் ஸ்மிதா நடித்த "சூரக்கோட்டை சிங்கக்குட்டி" படத்தில் வருகிற, ஜேசுதாஸ்-சுசீலா பாடுகிற "காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ!" என்ற பாடல், அப்படத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின் "மனோகரா"வைப் பாடாய்ப்படுத்தியிருந்த இராம.நாராயணனின் பாவமன்னிப்புக் கோரிக்கை என்று கூடச் சொல்லலாம். இந்தப் படத்தைப் பாராதவர்கள் இந்தப் பாடலை வானொலியிலோ அல்லது ஒலித்தகட்டிலோ கேட்கிறபோது உண்மையில் மெய்மறந்து போவார்கள் என்று எண்ணுகிறேன்.

மேற்கூறிய இரண்டு பாடல்களும் அபேரி என்ற ராகத்தின் அடிப்படியில் அமைக்கப்பட்ட பாடல்கள். இளையராஜாவுக்கு அபேரி ராகத்தின் மீது சற்று ஈடுபாடு அதிகம் போலத் தோன்றுகிறது. இந்த ராகத்தில் அவர் இன்னும் பல பிரபலமான பாடல்களை இசையமைத்திருக்கிறார். உதாரணமாக....

 "குருவாயூரப்பா குருவாயூரப்பா." எஸ்.பி.பி-சித்ரா (புதுப்புது அர்த்தங்கள்)

"குயிலே கவிக்குயிலே!" எஸ்.ஜானகி (கவிக்குயில்)

"மேகம் கருக்குது மழை வரப்பாக்குது," ஜேசுதாஸ்-ஜானகி (ஆனந்த ராகம்)

"பூவே பூச்சூடவா" ஜேசுதாஸ்/சித்ரா (பூவே பூச்சூடவா)

"

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி," ஜேசுதாஸ்-ஷைலஜா (மீண்டும் கோகிலா)..

(இன்னும் நிறைய இருக்க வேண்டும்! யாராவது நினைவூட்டினால் பட்டியலைத் திருத்திக்கொள்ள விருப்பம்)

"சின்னஞ்சிறு வயதில்..." பாடல் ஒரு கர்னாடக சங்கீதப் பாடலைக் கேட்பது போலவே, மிருதங்கம் மற்றும் வீணையின் ஆளுமை நிரம்பியிருக்கும் என்பதை நாமறிவோம். இதே போல மேற்கத்திய சாயல் இன்றி பல ராகங்களில் இளையராஜா பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உதாரணமாக...

"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!" ஜெயச்சந்திரன்-வாணி ஜெயராம் (வைதேகி காத்திருந்தாள்)

"காலை நேரப்பூங்குயில்.." எஸ்.பி.பி-ஜானகி (அம்மன் கோயில் கிழக்காலே)

இவ்விரண்டு பாடல்களும் அபோகி என்ற ராகத்தின் அடிப்படையில் இசையமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து அனேகமாக "அம்ரிதவர்ஷிணி" என்ற, மழை பெய்விக்கக் கூடிய ராகத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம். பார்க்கலாம்!

(தொடருவேன்)

தமிழன் வேணு

துரை.ந.உ

unread,
Sep 5, 2009, 12:43:08 PM9/5/09
to thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com
வேணு அய்யாவின் இன்னுமொரு முகம் !
--

என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

sk natarajan

unread,
Sep 5, 2009, 12:53:06 PM9/5/09
to panb...@googlegroups.com
அது  இசைமுகம்
வேணு  --  பாடல்   பாட ஆரம்பித்து விட்டார்
நனைவோம் நாம் இன்னிசை  மழையிலே

2009/9/5 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

vishalam raman

unread,
Sep 5, 2009, 1:08:49 PM9/5/09
to panb...@googlegroups.com
ஆஹா எனக்குப்பிடித்த அம்சம் வாழ்த்துகள்

சென்ஷி

unread,
Sep 5, 2009, 1:29:29 PM9/5/09
to panb...@googlegroups.com
சில விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அய்யா!

2009/9/5 vishalam raman <rvis...@gmail.com>



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

தமிழன் வேணு

unread,
Sep 7, 2009, 11:47:16 AM9/7/09
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
அம்ரிதவர்ஷிணி ராகத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கூறுகிறார்கள். "அம்ரித்" என்பது "அமுதம்" எனவும் "வர்ஷம்" என்பது "மழை" (திரிஷா நடித்த தெலுங்குப்படம்!)எனவும் பொருள்படுவதால், அம்ரிதவர்ஷிணி என்பது "அமுதமழை" என்று பொருள்படுகிறது. (அட, இந்தப் பெயரில் இதுவரைக்கும் தமிழில் ஏன் யாரும் படம் எடுக்கவில்லை?இல்லை, எடுத்தும் மழை தூறலோடு நின்று விட்டதா?)

கர்னாடக சங்கீதத்தின் அம்ரிதவர்ஷிணி ஹிந்துஸ்தானி இசையின் மல்ஹார் ராகத்தோடு மிகவும் ஒட்டியிருக்குமாம். எனக்குக் கர்னாடக சங்கீதமே தகராறு. இதில் ஹிந்துஸ்தானிக்கு எங்கு போக...?

இராமாயணத்தில் அனுமனின் வாலில் தீ வைத்ததும், அவர் இலங்கைநகருக்குத் தீ மூட்டத் தொடங்கியதும், இராவணன் அம்ரிதவர்ஷிணி ராகத்தில் வீணையை மீட்டியதும் மழை பொழிந்ததாகக் கருதப்படுகிறது.

கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிற முத்துசாமி தீட்சிதர், வறண்டதோர் பிரதேசத்தில் அம்ரிதவர்ஷிணி ராகத்தில் பாடி பெருமழையை வருவித்ததாகக் கருதப்படுகிற "ஆனந்தாமிர்த வர்ஷிணி" என்ற பாடல் சங்கீதப்பிரியர்களுக்கு கல்கண்டு சாப்பிடுவது போல. மகாகவி சுப்ரமணிய பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு தீட்சிதர் சென்றிருந்தபோது அவர் அம்ரிதவர்ஷிணியில் பாடிக்கொண்டிருக்கையில்,"வர்ஷாய வர்ஷாய வர்ஷாய," என்ற வரிகளை உச்சரித்ததுமே வானம் பொத்துக்கொண்டு மழை பெய்ததாகக் கூறப்படுவதுண்டு. அதை நிறுத்துவதற்காக அவர் "ஸ்தம்பாய ஸ்தம்பாய," என்று பாட வேண்டி வந்ததாம்.

பக்த மீரா மல்ஹார் ராகத்தில் பாடி மழையைத் தருவிக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது.

சரி, அம்ரிதவர்ஷிணியைப் பற்றி நான் கேட்டறிந்த தகவல்களைச் சொல்லியாகி விட்டது. இனி...!

"ஒருவர் வாழும் ஆலயம்" என்ற படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜானகி இசைஞானியின் இசையமைப்பில் பாடிய பாடல் இது. இந்தப் பாடலின் பொருளும் மழையை வருக வருகவென்று வரவேற்பது போல உள்ளபடியால் முழுமையாகத் தந்துள்ளேன்.


வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக
இன்பத் தேனாக நீ வந்து நெஞ்சங்கள் குளிர்ந்திடகுளிர்ந்திட

மேக ஊர்வசி தாளம் போடவே மின்னலோடு முழங்கு
வாடும் வாழ்விலே காதல் கூடவே கங்கையாக இறங்கு
மாமழைத் தாயே பூமழைத் தூவி
காவிரியாக பூமியில் ஓடு
நீரின் தேரில் வா நீ நேரில்

வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக
இன்பத் தேனாக நீ வந்து நெஞ்சங்கள் குளிர்ந்திடகுளிர்ந்திட

பாசம்தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
பாசம்தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா

வாசம்தனை சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூம்பாவையோ
தாயே உனைக்காணாமல் மனம் துடிக்கிதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே
இடியுடன் வா........ இசையென வா
துயர் பொடிபடவே......... கடலென வா
அமுதென வா............ அலையென வா
பழந்தமிழ் எனவே.......... தழைத்திட வா
ஆனந்த துளி தேன் சிந்தும்
மழை மணம் வந்து நிலந்தனைக் கொஞ்சும்
விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ
உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ
அமுதே வருவாய் கருணை புரிவாய்
அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி


மிகப்பொருத்தமாக இந்தப்பாடலுக்கு இளையராஜா அம்ரிதவர்ஷிணி ராகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதைக் கவனியுங்கள்!

இது தவிர இளையராஜா அம்ரிதவர்ஷிணி ராகத்தில் இசையமைத்துள்ளதாக நான் கேட்டறிந்து கொண்ட பாடல்கள் இவை:

"இப்போதென்ன தேவை?" ஐஸ்வர்யா (ராய் அல்ல;லட்சுமியின் மகள்!) ராதாரவியைப் பாடி ஆடி மயக்குவது போல "மக்கள் ஆட்சி"யில் இடம் பெற்ற பாடல்!

"ஸ்ரீ ராகவேந்திரர்" படத்தில் வருகிற "மழைகொடு தேவனே," என்ற பாடல் மற்றும்

"தூங்காத விழிகள் ரெண்டு," என்ற ஜேசுதாஸ்-ஜானகி "அக்னி நட்சத்திரம்" படத்தில் பாடிய பாடல்!

பி.கு: ஆபேரி ராகத்தைப் பற்றி எழுதிய நான் "எங்கள் தலைவர் அட்டகாசமாக ஆடி நடித்த "ராக்கம்மா கையைத்தட்டு" பாட்டை எப்படி மறக்கப்போகலாம்," என்று ஒரு தீவிர ரசிகர் கையில் கற்பூரத்தோடு கண்டனம் தெரிவித்துள்ளபடியால், பத்து தோப்புக்கரணங்களோடு விடுபட்ட பாடலை நினைவூட்டுகிறேன்.

vishalam raman

unread,
Sep 7, 2009, 12:11:13 PM9/7/09
to panb...@googlegroups.com
அன்பு வேணு மிக அருமையான் ராகம் அம்ருதவர்ஷிணி ,
அமர்க்களமாக இருக்கு ராகத்தின் தகவல்கள் சிவரஞ்சனி எப்போது
இடம் பெறும் ?

சென்ஷி

unread,
Sep 7, 2009, 12:24:50 PM9/7/09
to panb...@googlegroups.com
:)

வழக்கம்போல எனக்கு பல புதிய தகவல்கள்1... ராகங்களின் வரலாற்றைப்பற்றிய குறிப்புகளையும் இணைக்கலாமே அய்யா!

2009/9/7 vishalam raman <rvis...@gmail.com>

தமிழன் வேணு

unread,
Sep 7, 2009, 1:00:39 PM9/7/09
to panb...@googlegroups.com
அன்பு வேணு மிக அருமையான் ராகம்  அம்ருதவர்ஷிணி ,
அமர்க்களமாக இருக்கு ராகத்தின் தகவல்கள்   சிவரஞ்சனி எப்போது
இடம் பெறும் ?


மிக்க நன்றி அம்மா! இப்போது அகரவரிசையில் ஒவ்வொன்றாகக் கேட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். சிவரஞ்சனி வர கொஞ்சம் நேரமாகும் என்று நினைக்கிறேன். உங்களது ஆலோசனைகளும் வேண்டும் இந்த இழை வெற்றி பெற.

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Sep 7, 2009, 1:01:47 PM9/7/09
to panb...@googlegroups.com
:)

வழக்கம்போல எனக்கு பல புதிய தகவல்கள்1... ராகங்களின் வரலாற்றைப்பற்றிய குறிப்புகளையும் இணைக்கலாமே அய்யா!


அன்பின் சென்ஷி, சங்கீதத்தில் எனக்குக் கேள்விஞானம் மட்டுமே! தெரிந்த நண்பர்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு எழுதி வருகிறேன். முயற்சி செய்கிறேன்.

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Sep 9, 2009, 9:36:42 AM9/9/09
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா!
" என்ற டி.எம்.சௌந்தரராஜனின் பாடலை அனேகமாக அனைவரும் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை, அந்தப் பாட்டைக் கேட்காதவர்கள் யாரேனும் இருந்தாலும், டி.எம்.எஸ் பாடிய இன்னொரு பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "காவல்காரன்" படத்தில் இடம்பெற்ற "காதுகொடுத்துக்கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்" என்ற பாடலையாவது நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இவையிரண்டும் ஒரே ராகம் தான்!

ஆனந்த பைரவி!

பைரவி என்று இன்னொரு ராகம் இருந்தாலும், ஆனந்த பைரவி என்பது பெயருக்கேற்ற மாதிரியே மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற ராகம் என்று கருதுகிறார்கள். கவியரசு கண்ணதாசன் முன்பு பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தக்க ராகங்களில் பாடல் இயற்றிக் கொடுத்தது பற்றி ஒரு வாரப்பத்திரிகையில் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

அதே போல சம்பூர்ண ராமாயணம் படத்தில் இடம்பெற்ற "வீணைக்கொடியுடைய வேந்தனே!" என்ற சி.எஸ்.ஜெயராமனின் குரலில் ஒலித்த பாடலில் ஒவ்வொரு காலத்திற்கும், ஒவ்வொரு குணத்திற்கும் ஏற்ற ராகங்களைப் பாடிக் காட்டியிருப்பார். (அந்தப் பாடலைத் தேடிக்கண்டு பிடித்து இனிவருகிற பதிவுகளில் நுழைத்து விட மாட்டேனா என்ன?)

"கொஞ்ச நாள் பொறு தலைவா! ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா" என்று ஹரிஹரன் "ஆசை" படத்தில் தேவாவின் இசையில் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. இதுவும் ஆனந்த பைரவியே!

சரி, இந்த ஆனந்த பைரவி ராகத்தில் இசைஞானி அமைத்த பாடல்கள் என்னென்ன?

"கறவை மாடு மூணு காளை மாடு ஒண்ணு," என்று மகளிர் மட்டும் படத்தில் நாசர் ரேவதி,ரோஹிணி,ஊர்வசியோடு கலக்கலாய் ஆடுகிற பாட்டை மறந்திருக்க முடியாது.

"பார்த்தாலே தெரியாதோ?" என்று ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் மனோரமா லட்சுமியைப் பார்த்துப் பாடுகிற பாடலும் இதே ராகம் தான்.

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் கமலஹாசன்-ஊர்வசி நடித்து வெளிவந்த (வந்த வேகத்திலேயே சுருண்ட) "அந்த ஒரு நிமிடம்" படத்தில் வரும் "தேவை இந்தப் பாவை," என்ற பாடலும் ஆனந்த பைரவி ராகமே!

இத்தோடு இளையராஜாவின் "ரமணகீதம்" என்ற இசைத்தொகுப்பில் வருகிற "பராபரமே!" என்ற கீதமும் இதே ராகம் தான்.

ராகங்கள் நிறைய இருப்பதால், அகர வரிசையில் சற்றே ஆக்ஸிலேட்டரை மிதிக்கிறேன்.

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்," என்ற "முள்ளும் மலரும்," படத்தில் வரும் பாடல் அந்தோளிகா என்ற ராகத்தில் அமைக்கப்பட்டது.

Ganesh kumar

unread,
Sep 9, 2009, 12:17:46 PM9/9/09
to panb...@googlegroups.com


மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் கமலஹாசன்-ஊர்வசி நடித்து வெளிவந்த (வந்த வேகத்திலேயே சுருண்ட) "அந்த ஒரு நிமிடம்" படத்தில் வரும் "தேவை இந்தப் பாவை," என்ற பாடலும் ஆனந்த பைரவி ராகமே!
 
 
மேஜரின் முதல் இரண்டு படங்கள் (கல்தூண் , இன்று நீ நாளை நான்) நன்றாக ஓடின .மூன்றாவது படமான அந்த ஒரு நிமிடம் ஊத்திக்கொண்டது.
 
 

vishalam raman

unread,
Sep 9, 2009, 1:31:10 PM9/9/09
to panb...@googlegroups.com
அன்பு வேணு சினிமா பாடலுடன் கர்நாடக இசையில் ப்லர் இயற்றிய பாடல்களும்
இத்துடன் தந்தால் பலருக்கு இதைப்பற்றி மேலும் தெரிய வாய்ப்பு இருக்குமே
!
தியாகராஜஸ்வாமிகள் பாடல் "மரிவேரேகதி " என்று ஆரம்பித்து பலர்
இயற்றிய எல்லோருக்கும் தெரிந்த பாடல்களை இடலாமே
தமிழில் திரு பாபநாசம்சிவன் அவர்களின் பாடலகள் பல உள்ளன ,

தமிழன் வேணு

unread,
Sep 9, 2009, 1:37:01 PM9/9/09
to panb...@googlegroups.com

அன்பு வேணு சினிமா பாடலுடன்  கர்நாடக இசையில் ப்லர் இயற்றிய பாடல்களும்
இத்துடன் தந்தால்   பலருக்கு இதைப்பற்றி மேலும் தெரிய வாய்ப்பு இருக்குமே
!
 தியாகராஜஸ்வாமிகள் பாடல்  "மரிவேரேகதி "   என்று ஆரம்பித்து  பலர்
இயற்றிய எல்லோருக்கும் தெரிந்த பாடல்களை இடலாமே
தமிழில் திரு பாபநாசம்சிவன் அவர்களின் பாடலகள்  பல உள்ளன ,

அவசியம் முயற்சிக்கிறேன்!  அடுத்த பதிவில் கண்டிப்பாக பிரபலமான கீர்த்தனங்களையும் தமிழ் இசையையும் ஒப்பீட்டுக்காகவாவது சேர்த்துக் கொள்ளுகிறேன். உங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி அம்மா!

தமிழன் வேணு
 


Chandar Subramanian

unread,
Sep 9, 2009, 1:38:26 PM9/9/09
to panb...@googlegroups.com
I am attaching songs of Utthukkadu Venkata Subhaiyar!!!

2009/9/9 தமிழன் வேணு <venugopal...@gmail.com>



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Utthukkadu Venkata Subhaiyar.doc

தமிழன் வேணு

unread,
Sep 9, 2009, 1:42:08 PM9/9/09
to panb...@googlegroups.com
I am attaching songs of Utthukkadu Venkata Subhaiyar!!!

மிக்க நன்றி! இது நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

தமிழன் வேணு
 

ஆசாத்

unread,
Sep 10, 2009, 12:23:18 AM9/10/09
to பண்புடன்
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> அம்ருதவர்ஷிணி

வேணு,

கலக்குங்க!

தமிழன் வேணு

unread,
Sep 10, 2009, 1:15:05 PM9/10/09
to panb...@googlegroups.com
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 300-வது படமான "திரிசூலம்" படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, வெளிவந்த படம் "கவரிமான்." பல வெற்றிப்படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் முதல் முறையாக சிவாஜியை இயக்கிய படம். "அவன் தான் மனிதன்" படத்திற்குப் பிறகு, பஞ்சு அருணாச்சலம் சிவாஜிக்கு வசனம் எழுதியதும் இப்படத்தில் தான். அத்தோடு சிவாஜி நடித்து முதன் முதலாக "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்று "A" தணிக்கச்சான்றிதழ் வாங்கிய படமும் இதுவே. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

என்னைப் பொறுத்தவரைக்கும், பொதுவாக தொய்வே இல்லாமல் படங்களை இயக்குகிற திறன் படைத்த எஸ்.பி.முத்துராமன், இந்தப் படத்தில் தனது குருநாதர் ஏ.சி.திருலோக்சந்தரைப் பின்பற்றி, படம் ஆரம்பித்து ஏறக்குறைய அரைமணி நேரத்தை, கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலேயே செலவழித்து, செமத்தியான பிளேடு போட்டிருந்தார்.

"சங்கராபரணம்" வெற்றி பெற்ற சமயம் என்பதால், தமிழ்ப்படங்களில் வலுக்கட்டாயமாக ஒரு கர்னாடக சங்கீதப்பாடலை நுழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர் சில இயக்குனர்கள். அதிலும் "கவரிமான்" படத்தில் "சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ?" என்ற பாரதியாரின் பாடலை எஸ்.வரலட்சுமி பாடி முடித்து எச்சில் விழுங்குவதற்குள்ளாகவே சிவாஜி "ப்ரோவ பாரம்மா ரகுராமா," என்று நடுஹாலில் சம்மணம் போட்டுக்கொண்டு தியாகராஜ கீர்த்தனையைப் பாட ஆரம்பித்ததும் "மக்கா, படம் பொளிஞ்சிரிச்சு" என்று என்னருகிலிருந்து படம் பார்த்துக்கொண்டிருந்த குமரி மாவட்ட சிவாஜி தலைமை ரசிகர் மன்றச் செயலாளர் வீர்சிங் கூறிவிட்டு விரக்தியோடு கத்திரி சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது. அவரது கணிப்பு தவறவில்லை; படம் ஊற்றிக்கொண்டது.

ஆனால், ஜேசுதாஸின் குரலில் அந்தத் தியாகராஜ கீர்த்தனையை இப்போது கேட்டாலும் பெரும் சுகானுபவமாக இருக்கிறது. பஹுதாரி ராகத்தில் அமைந்த அந்தத் தெலுங்குக் கீர்த்தனையில் அத்தனை குழைவுகளையும் தனது குரலில் காட்டியிருப்பார் ஜேசுதாஸ்.

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போலவோ என்னவோ, இளையராஜா அடுத்து பஹுதாரி ராகத்தில் இசையமைத்ததும் ஒரு சிவாஜி படத்தில் தான். "நல்லதோர் குடும்பம்" என்ற படத்தில் கோடீஸ்வரர் சிவாஜி ஒரு கிளப்பில் ஒரு நடனக்காரிக்குப் போட்டியாக கர்னாடக இசையில் பாடுவதோடு, பரத நாட்டியம் வேறு ஆடி (கஷ்டம்!) காட்டியிருப்பார். அந்தப் பாட்டு...

ஒன் அண்ட் டூ சச்சச்சா
நானிங்கே சச்சச்சா
நீயெங்கே சச்சச்சா சச்சச் சச்சச் சா!
துள்ளும் கால்கள் இங்கு உண்டு
சொல்லும் கண்கள் இங்கு உண்டு
என்னம்மா பாரம்மா
சக்சஸ் ஆஃபன் கம்ஸ் டு மீ!

என்று மேற்கத்திய இசையில் ஆடிக்கொண்டிருக்கும் சிவாஜி திடீரென்று கர்னாடகத்துக்கு மாறி.....

"ஆயிரம் சபைதனில் வருவேன்
 எழுந்ததுண்டு விழுந்ததில்லை
 அறியாமல் உளறாதே ஓடிப்போடி
 ஆயிரம் சபைதனில் வருவேன்

 அலைகளாடுமடி தாளத்துக்கு-இந்த
 அகம்பாவம் இன்று உனக்கெதற்கு?
 ஜதியா? நீ என்ன ரதியா?
 அசைந்தால் உலகம் அசையும்!"

என பரதநாட்டிய அடவுகள் பிடித்துப் பாடுவாரே, அந்தப் பாட்டும் பஹுதாரி ராகத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தது.

பஹுதாரி ராகத்தில் இசைமுத்தேவியரில் ஒருவரான எம்.எல்.வசந்தகுமாரி பாடியுள்ள "உன்னடியே கதி" என்ற பாடலை கீழே காணும் இழையைச் சொடுக்கிக் கேட்கலாம். இந்தத் தமிழிசைப்பாடலை இயற்றியவர் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியம்.

http://www.mediafire.com/?wvrjd1woynm


பல்லவி

உன்னடியே கதி என்றடைந்தேன் தாயே
உண்மை நீ அறியாயோ உலக நாயகியே

அனுபல்லவி

பொன்னையும் புகழையும் பூவையரையும் தேடி
சின்னத்தனமாகவே நித்தமும் தினம்வாடி

உன்னடியே கதி என்றடைந்தேன் தாயே
உண்மை நீ அறியாயோ உலக நாயகியே

சரணம்

முன்னமே உன்னிடம் சொல்லி வைத்தேனே
என்ன வந்தாலும் நின் பொன்னடி மறவேனே
பன்னக பூஷணன் பரிவுடன் மகிழும்
மின்னல்கொடியாளே இன்னல்கள் தீர்ப்பாயே!

உன்னடியே கதி என்றடைந்தேன் தாயே
உண்மை நீ அறியாயோ உலக நாயகியே

அடுத்து, பாகேஷ்ரீ ராகம் பற்றி எழுதலாம் என்று உத்தேசம். (கொஞ்சம் வீட்டுப்பாடம் பாக்கியிருப்பதால் தாமதமாகலாம்.)

தமிழன் வேணு

vishalam raman

unread,
Sep 11, 2009, 6:17:24 AM9/11/09
to panb...@googlegroups.com
அன்பு வேணு {அ ..ஆ வில் அசாவேரி ஆரபி
ஆந்தோளிகா ஆஹிரி ஆபோகி அடாணா என்று முக்கிய ராகங்கள் இருக்கின்றன
ஆரபியில் மாமரத்துச்சோலையில் மச்சான வரும் வேளையிலே என்ற பாடல்
மிகவும் அழகான ஆரபி ராகத்தில் இருக்கிறது தொடருங்கள் நன்றி

தமிழன் வேணு

unread,
Sep 11, 2009, 6:44:17 AM9/11/09
to panb...@googlegroups.com
 
அன்பு வேணு {அ ..ஆ வில்   அசாவேரி  ஆரபி
ஆந்தோளிகா  ஆஹிரி   ஆபோகி அடாணா என்று முக்கிய ராகங்கள் இருக்கின்றன
ஆரபியில்   மாமரத்துச்சோலையில்   மச்சான வரும் வேளையிலே என்ற பாடல்
மிகவும் அழகான ஆரபி ராகத்தில் இருக்கிறது தொடருங்கள் நன்றி
நன்றி அம்மா!

எனது முதல் பதிவிலேயே "ஆரபி" ராகத்தில் அமைந்த "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே," பற்றி எழுதியிருக்கிறேன். அடாணாவில் இளையராஜா "சலங்கை ஒலி" படத்தில் தியாகராஜரின் "பால கனக மாயா," என்ற கீர்த்தனையை (கல்யாண வீட்டில் மஞ்சு பார்கவி நடனம்) கையாண்டிருந்தார். இது தவிர வேறு இசையமைப்பாளர்களின் பாடல்கள் பற்றி விசார்த்து எழுதுகிறேன். அந்தோளிகா ராகத்தில் "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே," என்ற பாடல் இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனந்த பைரவி ராகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு," என்ற பாடலைக் குறிப்பிடாமல் விட்டு விட்டேன். இன்னும் நிறைய பாடல்கள் இருக்கும், அவசியம் சேகரித்து எழுதமுயல்வேன்.

தமிழன் வேணு

 

vishalam raman

unread,
Sep 11, 2009, 12:50:48 PM9/11/09
to panb...@googlegroups.com
ஒ அந்த இழை என்னிடமிருந்து மாயமாக போய்விட்டதே ஏன் ?
நான் தேடத்தேட கிடைக்கவில்லை ,கணினி ஒரு தமாசுதான்

தமிழன் வேணு

unread,
Sep 12, 2009, 5:10:06 AM9/12/09
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
அடுத்து பாகேஸ்ரீ ராகம்!

இது குறித்த சில தகவல்களைத் தெரிவிப்பதற்குள்ளாக, இந்த ராகத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ஒரு பாடலை,கீழ்க்காணும் இழையைச் சொடுக்கிப் பாருங்களேன்! "புதுப்புது அர்த்தங்கள்" படத்தில் இடம்பெற்றதும், இளையராஜாவே பாடியதுமான........

எடுத்து நான் விடவா என் பாட்டை..தோ..தோ..தோ...!

http://www.youtube.com/watch?v=KpoJ4GbnUPU

பாகேஸ்ரீ ராகம் பொதுவாக இரவில் பாடுவதற்கு உகந்த ராகமாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தலைவனைப் பிரிந்த தலைவியோ, தலைவியைப் பிரிந்த தலைவனோ, ஒருவர் மற்றவரின் வருகைக்காகக் காத்திருக்கிறபோது அவரவர் ஏக்கத்த்தை வெளிப்படுத்த இந்த ராகம் ஒரு அருமருந்து போலும்.

பக்த மீராவின் "மேரே தோ கிரிதர் கோபால..தூஸ்ரோ நா கோயி..." என்ற மீராபஜன் பாடல் ஒரு சிறந்த உதாரணம் என்று கூறலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், அனுராதா பௌட்வால் என்று பல பிரபலங்கள் பாடிய இந்தப் பாடலை அனுப் ஜலோட்டா ஒரு முறை தூரதர்ஷனில் பாடியதைக் கேட்டதும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

பிமல் ராய் அவர்கள் இயக்கிய "மதுமதி" படத்தில் சலீல் சௌத்ரியின் இசையமைப்பில் லதா மங்கேஷ்கரின் "ஆஜாரே பர்தேசி!" என்ற பாடல் பாகேஸ்ரீ ராகத்தின் இன்னொரு சிறப்பான உதாரணம்.

http://www.youtube.com/watch?v=E5c6ErBNsf4


அதே படத்தில் வருகிற "கடி கடி மோரா தில் தடுக்கே..ஹாய் தடுக்கே..க்யூன் தடுக்கே.." என்ற பாடலும் இதே பாகேஸ்ரீ ராகத்தில் அமைக்கப்பட்ட பாடலே!

http://www.youtube.com/watch?v=QQ0tiifw9W8

"செம்மீன்" மலையாளப்படத்தில் இடம்பெற்ற "மானச மைனே வரு.." என்ற பாடலின் இடையே "கடி கடி மோரா தில் தடுக்கே" பாடலில் பல்லவி அனுபல்லவிக்கு இடைப்பட்ட இசையும் வரும். அதற்கும் சலீல் சௌத்ரி தான் இசை!

http://www.youtube.com/watch?v=ynIA7NDr41I

இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட இன்னொரு பாடல் இதோ:

பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனிதூங்கும் நிலவே நில்!
என்மனத்தோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல்! சொல்!! சொல்!!

"கலங்கரை விளக்கம்" படத்தில் டி.எம்.எஸ்-பி.சுசீலா பாடிய இந்தப் பாடல், சற்று நீளமானதென்றாலும் கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடலை கவியரசு கண்ணதாசனோ, கவிஞர் வாலியோ தான் எழுதியிருக்க வேண்டும் என்று எண்ணியிருந்த எனக்கு, இது பஞ்சு அருணாச்சலம் எழுதியது என்று "பண்புடன்"ல் வந்த "இந்தி-தமிழ்-திரைப்பட அரட்டை (1960-1980 அல்லது அவை தொடர்பானவை)" இழையைப் படித்தபிறகே தெரிய வந்தது.

"மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்," என்று திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் "அன்னை இல்லம்" படத்தில் இடம்பெற்ற பாடலும் டி.எம்.எஸ்-பி.சுசீலா ஜோடியின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.

மலையாள நடிகர் ரகுமான் தமிழில் கதாநாயகனாகவும், மைதிலி என்னக் காதலி-க்குப் பிறகு அமலாவும் (இவுங்களைப் பற்றி பெருமூச்சு இழையில் இன்னும் ஏன் எழுதாமல் இருக்கிறேன்?) இணைந்து நடித்த "கண்ணே கனியமுதே" என்ற படத்தில் மெல்லிசை மன்னர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலை மிக அற்புதமாக பாகேஸ்ரீ ராகத்தில் கையாண்டிருந்தார். பாடிய கே.ஜே.ஜேசுதாஸும் பி.எஸ்.சசிரேகாவும் இனிமையாகப் பாடியிருந்தனர். அந்தப் பாடல்:

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா

பாகேஸ்ரீயின் மேளகர்த்தா எனப்படுகிற மூலராகம் கரகரப்ரியா என்கிறார்கள். பாகேஸ்ரீயில் அமைந்த கர்னாடக சங்கீதப்பாடல்கள் குறித்து இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.

பாகேஸ்ரீ ராகத்தில் இளையராஜா இசையமைத்த இன்னும் சில திரைப்பாடல்கள்.....!

"ரொக்கம் இருக்கிற மக்கள் மனசிலே துக்கமில்லே!" ஹரிஹரனின் குரலில் "காசி" படத்தில் இடம்பெற்ற பாடல்.

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா," ஜேசுதாஸ்-சித்ரா ஜோடி "ராஜா கையை வச்சா," படத்தில் பாடிய பாடல்.

"மேளத்தை மெல்லத் தட்டு," என்ற மலேசியா வாசுதேவனின் குரலில் ஒலித்த "அறுவடைநாள்" படப்பாடல்.

"சிங்களத்துச் சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே," என்ற எஸ்.பி.பி-சித்ராவின் "புன்னகை மன்னன்" படத்தில் இடம்பெற்ற பாடல்.!

இன்னும் இருக்கிறதாம் பெரிய பட்டியல்!

அடுத்து பிலஹரி ராகம்! இதில் கர்னாடக சங்கீதத்தில் ஏகப்பட்ட பிரபலமான கிருதிகள் இருக்கிறதாம். மலைப்பாக இருக்கிறது. (ஆழம் தெரியாமல்....????)

மஞ்சூர் ராசா

unread,
Sep 12, 2009, 6:23:15 AM9/12/09
to panb...@googlegroups.com
வேணு மிகவும் ரசித்து படித்துக்கொண்டிருக்கிறேன்.  சுவையான விவரணை.
 
நன்றி. தொடரவும்.
 
 
பின்குறிப்பு: கவரிமான் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி முதன்முதலில் நடித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாததும் அது தோல்வியை தழுவியதற்கு ஒரு காரணம் என கேள்விப்பிட்டேன் உண்மையா? (இழைக்கு சம்பந்தமில்லாத கேள்விக்கேட்பதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை என ஆசிப் உறுமுவது கேட்கிறது)
 
சரி  பரவாயில்லை சந்தடி சாக்கில் அழகான அமலாவை பற்றியும் ஒரு இழை ஆரம்பிய்யும்.

தமிழன் வேணு

unread,
Sep 12, 2009, 7:20:53 AM9/12/09
to panb...@googlegroups.com

வேணு மிகவும் ரசித்து படித்துக்கொண்டிருக்கிறேன்.  சுவையான விவரணை.

நன்றி மஞ்சூரய்யா, உங்களது பின்னூட்டம் உற்சாகமூட்டுகிறது.
 
 
நன்றி. தொடரவும்.

இன்னும் நிறைய ராகங்கள் உள்ளன. எனது வீட்டுப்பாடம் தொடருகிறது. :-)) 
 
 பின்குறிப்பு: கவரிமான் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி முதன்முதலில் நடித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாததும் அது தோல்வியை தழுவியதற்கு ஒரு காரணம் என கேள்விப்பிட்டேன் உண்மையா?

அய்யய்யோ! கவரிமானில் ஸ்ரீதேவி சிவாஜியின் மகளாக நடித்திருந்தார். மனைவியாக பிரமீளா! காதாபாத்திரம் அப்படி! :-))

(இழைக்கு சம்பந்தமில்லாத கேள்விக்கேட்பதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை என ஆசிப் உறுமுவது கேட்கிறது)

அடியேனும் இங்கே பரவலாக அதையே செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.
 
 
சரி  பரவாயில்லை சந்தடி சாக்கில் அழகான அமலாவை பற்றியும் ஒரு இழை ஆரம்பிய்யும்.

"வேணு+ஆசாத் பெருமூச்சு பழைய நடிகைகள்" என்ற  இழையில் அமலாபதிகம் விரைவில் அரங்கேறலாம். 

தமிழன் வேணு

மஞ்சூர் ராசா

unread,
Sep 12, 2009, 7:26:35 AM9/12/09
to panb...@googlegroups.com
அப்ப எந்த படத்தில் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தார்?
 

தமிழன் வேணு

unread,
Sep 12, 2009, 7:33:20 AM9/12/09
to panb...@googlegroups.com
"விஸ்வரூபம்" என்று ஒரு படம். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த "அதாலத்" என்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்திருந்தார்கள். தயாரித்தவர், பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா. அண்மையில் "கந்தசாமி" தமிழ்ப்படத்தில் கூட நடித்திருக்கிறாராம். பெயருக்கேற்ற மாதிரி சிவாஜி அதில் உருவத்திலும் விஸ்வரூபம் எடுத்திருக்க, ஸ்ரீதேவியோடு டூயட் பாடியது படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை வெகுவாகக் குறைத்தது. அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் மன்மோகன் தேசாயின் "நசீப்" படத்தை "சந்திப்பு" என்று சிவாஜி சொந்தத்தில் தயாரித்தபோது அதில் ஒரு சிவாஜிக்கு மீண்டும் ஸ்ரீதேவி தான் ஜோடி. படம் சூப்பர் ஹிட்! :-))

தமிழன் வேணு


2009/9/12 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Sep 12, 2009, 7:36:04 AM9/12/09
to panb...@googlegroups.com
நன்றி வேணு.
 
உங்கள் விஸ்வரூபம் (ஞாபகசக்தி அபாரம்)
 
 
 
 

தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 11:58:44 AM9/15/09
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
பிலஹரி!

இந்த ராகம் காலையில் பாடுவதற்கு உகந்த ராகம் என்று கருதப்படுகிறது. மனச்சோர்வை நீக்குகிற உற்சாகமான ராகம் என்றும் கூறுகிறார்கள். "நா ஜீவாதாரா," என்ற கிருதியைப் பாடி தியாகராஜர் இறந்தவரது உயிரை மீட்டுத் தந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ராகத்தை பலஹரி என்றும், பிலாஹரி என்றும் கூட அழைப்பார்களாம். இதன் ஆரோகணம் மற்றும் அவரோகணம் தலைகீழாகப் பாடுகையில் அதுவே கருடத்வனி என்ற இன்னோர் ராகமாகி விடுகிறது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் "ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஆகச்ச...," என்ற பிலஹரி ராகத்தில் அமைந்த கிருதியை உன்னிகிருஷ்ணன் பாடுவதை கீழே தரப்பட்டுள்ள இழையைச் சொடுக்கிக் கேட்கலாம்.

http://www.mediafire.com/?aatdw2tti2t

இது தவிர,

தொலி ஜன்ம," என்ற தியாகராஜ கீர்த்தனையும், சுவாதித்திருநாள் இயற்றிய "அரத்யாமி," என்ற கிருதியும் பிலஹரி ராகத்திலுள்ள பல சிறப்பான பாடல்களின் சில உதாரணங்களாகக் கருதப்படுகின்றன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாகவும், ஷோபனா கதாநாயகியாகவும் நடித்த "ருத்ரவீணா" என்ற தெலுங்குப்படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். அதே படம் பின்னாளில் "உன்னால் முடியும் தம்பி," என்ற பெயரில் தமிழில் கமல்ஹாசன்-சீதா ஜோடியை வைத்து உருவாக்கப்பட்டது. இரண்டு படங்களிலுமே கதாநாயகனின் தந்தை வேடத்தில், கர்னாடக சங்கீத வித்துவானாக நடித்தவர் ஜெமினி கணேசன். தமிழ்ப்படத்தில் அவரது பெயர் "பிலஹரி" மார்த்தாண்டம் பிள்ளை. கமலின் பெயர் உதயமூர்த்தி! (உன்னால் முடியும் தம்பி+உதயமூர்த்தி! கே.பி. யாரைக்குறிப்பிடுகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ?)

இரண்டு படங்களுக்குமே இசையமைத்தவர் இசைஞானி தான்! ஒரு கர்னாடக சங்கீத வித்துவானுக்கும், மிகவும் இறுக்கமான கொள்கைகளையுடைய ஒரு லட்சியவாதி மகனுக்கும் இடையே ஏற்படுகிற மோதல் பற்றிய கதை என்ற முறையில் "உன்னால் முடியும் தம்பி," படத்துக்கும் "வறுமையின் நிறம் சிவப்பு," படத்துக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன.

"உன்னால் முடியும் தம்பி," படத்தைப் பற்றி இன்னொரு குறிப்பிடத்தக்க தகவல். "16 வயதினிலே" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இளையராஜாவின் ராஜபாட்டை தொடங்கியபோது, அவர் இசையமைபில் இசைத்தட்டுக்கள் வெளியாகியும், வெளியிடப்படாத சில படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு படம் "மணிப்பூர் மாமியார்.". இப்படத்தின் இசைத்தட்டில் மலேசியா வாசுதேவன்-எஸ்.பி.சைலஜா பாடிய "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே," என்ற ஒரு பாடலுண்டு. அதில் மலேசியா வாசுதேவன் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் பாடியிருப்பார். அதே இசைத்தட்டில் இருந்த "சமையல்பாடமே பொறுமையாகப் படிக்க வேண்டும்," என்ற பாடல்கள் ஏறக்குறைய இருபது வருடங்கள் கழித்து "உன்னால் முடியும் தம்பி"யில் இடம்பெற்றது.

"எல்லாம் இன்பமயம்" படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதி, மலேசியா வாசுதேவன் பாடிய "மாமன் வூடு மச்சு வூடு பரிசம் போட்டது குச்சு வூடு," என்ற பாடலை இசைஞானி பிலஹரி ராகத்தில் தான் இசையமைத்திருக்கிறார். இந்தப்பாடல் "ராஜ வேணு கோபால...," என்ற கர்னாடக சங்கீதப்பாடலின் மெட்டின் பல்லவியையே ஒட்டியிருக்கும்.

"பாலநாகம்மா" என்ற படத்தில் சரத்பாபு-ஸ்ரீதேவி இருவரும் பாடுகிற கீழ்க்காணும் பாடல் இசைஞானி பிலஹரி ராகத்தில் இசையமைத்த மற்றோர் பாடலாகும்.

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

அடுத்து பிருந்தாவன சாரங்கா ராகம் குறித்து எழுத வேண்டும் என்று கால அட்டவணை சொல்கிறது.

shylaja

unread,
Sep 15, 2009, 12:10:41 PM9/15/09
to panb...@googlegroups.com

வேணூ ஸார்
 
இந்த இழைல நான் எப்போதோ வந்து கருத்து சொல்லி இருக்கவேண்டும் சில விஷயங்களை உடனே செய்யலேன்னா செய்யவே முடியாமல்போய்விடுகிறது  மன்னிக்கவும்
 
அருமையாக சொல்லி வருகிறீர்கள்.
பிலஹரியில் யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே எனும் அருணாசலக்கவிராயரின் பாடலை திருவரங்கத்தில் பாட்டுவாத்தியாரிடம் கற்றுக்கொண்டபோது  அப்படியே மிதிலையின் செல்வியாக உணர்ந்தேன்!
பாடலும் ராகமும் அப்படியே வசப்படுத்திவிடும்!
 
விரிவான ஆலாபனைக்கு உரிய ராகம் இது
அடுத்து ப்ருந்தாவன சாரங்காவா?
இப்போதே ரங்கபுரவிஹாரா காதில் ஒலிக்கிறதே!

 
2009/9/15 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
--
*******
At first, one loves, when one is loved!

* Next, one loves spontaneously, but wants to be loved in return!

* Then, one loves, even if one is not loved, but one still wants one's love to be accepted!

* And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!

-- The Mother-Sri Aurobindo
**********************

தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 12:23:02 PM9/15/09
to panb...@googlegroups.com
மிக்க நன்றி, வெறும் கேள்வி ஞானத்தை வைத்து, என் அம்மாவிடமும் இன்னும் சில நண்பர்களிடமும் கேட்டு கேட்டு எழுதுகிறேன். இதில் ஏதேனும் குளறுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது. :-)

சுட்டிக்காட்டினால் கர்நாடக சங்கீதம் குறித்த எனது அறிவு இன்னும் கொஞ்சம் தேறும் என்பதால், தவறாமல் சுட்டிக்காட்டுங்கள்.

ரங்கபுர விஹாரா!

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரல் எனக்கும் கேட்பது போலிருக்கிறது.

தமிழன் வேணு

shylaja

unread,
Sep 15, 2009, 12:28:32 PM9/15/09
to panb...@googlegroups.com
2009/9/15 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
மிக்க நன்றி, வெறும் கேள்வி ஞானத்தை வைத்து, என் அம்மாவிடமும் இன்னும் சில நண்பர்களிடமும் கேட்டு கேட்டு எழுதுகிறேன். இதில் ஏதேனும் குளறுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது. :-)

சுட்டிக்காட்டினால் கர்நாடக சங்கீதம் குறித்த எனது அறிவு இன்னும் கொஞ்சம் தேறும் என்பதால், தவறாமல் சுட்டிக்காட்டுங்கள். >
 
 
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள்  ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை   பாடி இருக்கலாம்! அந்தவயசில்  சீரியஸ்னஸ்  இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!

தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 12:41:26 PM9/15/09
to panb...@googlegroups.com
 
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள்  ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை   பாடி இருக்கலாம்! அந்தவயசில்  சீரியஸ்னஸ்  இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!

சரி தான்! நீங்களும் என்னைப் போலத் தானா?

நானும் ஜரளி, ஜண்டை வரிசை முடித்து கீர்த்தனை வருகிற நேரம் பார்த்து இடம் பெயர வேண்டி வந்து விட்டது. அதன் பிறகு செவிக்குணவு மட்டும் தான் கொடுப்பினை!

தமிழன் வேணு

vishalam raman

unread,
Sep 15, 2009, 12:49:25 PM9/15/09
to panb...@googlegroups.com
அன்பு ஷைலஜா யாரோ இவர் யாரோ பாடல் பைரவியில் உள்ளது
அதில் சந்த்ரபிம்ப முக மலராலே என்ற இடத்தில் நிரவல் மதுரைமணிஅவர்களும்
எம் எஸ் அம்மா அவர்களும் செய்ய சபை அப்படியே மயங்கி அமர்ந்திருக்கும்

shylaja

unread,
Sep 15, 2009, 12:51:40 PM9/15/09
to panb...@googlegroups.com
ஆமாம் பைரவியில்தான் அந்தப்பாடல் உள்ளது.
 
எத்தனை எளிமையான வரிகளில் அவை வலிமையாய் இதயத்தில்போய் உட்கார்ந்துகொள்ளும் இல்லையா  விசாலம் மேடம்?

2009/9/15 vishalam raman <rvis...@gmail.com>

shylaja

unread,
Sep 15, 2009, 12:52:33 PM9/15/09
to panb...@googlegroups.com
2009/9/15 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள்  ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை   பாடி இருக்கலாம்! அந்தவயசில்  சீரியஸ்னஸ்  இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!

சரி தான்! நீங்களும் என்னைப் போலத் தானா? >>
 
கீதம் கிர்த்தனை வரை வரமுடிந்தது!!! அப்றோம்தான் எஸ்கேப்:)

 


shylaja

unread,
Sep 15, 2009, 12:56:33 PM9/15/09
to panb...@googlegroups.com
பைரவியில் காதலாகி  எனும்  தேவாரமும்  அருமையாக  இருக்கும்

2009/9/15 shylaja <shyl...@gmail.com>

ezhil arasu

unread,
Sep 15, 2009, 1:30:17 PM9/15/09
to panb...@googlegroups.com
"ராஜ வேணு கோபால...," என்ற கர்னாடக சங்கீதப்பாடலின் மெட்டின் பல்லவியையே ஒட்டியிருக்கும்.>>>>

வேணு ஜி

அது 'ரா ரா வேணு கோபாஆலா'!

2009/9/15 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

ezhil arasu

unread,
Sep 15, 2009, 1:32:21 PM9/15/09
to panb...@googlegroups.com
நானும் ஜரளி, ஜண்டை வரிசை முடித்து கீர்த்தனை வருகிற நேரம் பார்த்து இடம் பெயர வேண்டி வந்து விட்டது. அதன் பிறகு செவிக்குணவு மட்டும் தான் கொடுப்பினை! >>>>

என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.

2009/9/15 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

shylaja

unread,
Sep 15, 2009, 1:35:22 PM9/15/09
to panb...@googlegroups.com


2009/9/15 ezhil arasu <nan...@gmail.com>
நானும் ஜரளி, ஜண்டை வரிசை முடித்து கீர்த்தனை வருகிற நேரம் பார்த்து இடம் பெயர வேண்டி வந்து விட்டது. அதன் பிறகு செவிக்குணவு மட்டும் தான் கொடுப்பினை! >>>>

என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.9/9/15
 
 
 
>>>எழில்ஜீயின் கீதம்  கேட்க அவருக்குக்கொடுத்து வைக்கல!
வேணு <venugopal...@gmail.com>
 
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள்  ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை   பாடி இருக்கலாம்! அந்தவயசில்  சீரியஸ்னஸ்  இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!

சரி தான்! நீங்களும் என்னைப் போலத் தானா?

நானும் ஜரளி, ஜண்டை வரிசை முடித்து கீர்த்தனை வருகிற நேரம் பார்த்து இடம் பெயர வேண்டி வந்து விட்டது. அதன் பிறகு செவிக்குணவு மட்டும் தான் கொடுப்பினை!

தமிழன் வேணு


தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 9:30:16 PM9/15/09
to panb...@googlegroups.com
அதில் சந்த்ரபிம்ப முக மலராலே என்ற இடத்தில் நிரவல்  மதுரைமணிஅவர்களும்
எம் எஸ் அம்மா அவர்களும் செய்ய சபை அப்படியே  மயங்கி அமர்ந்திருக்கும்

அண்மையில் ஒரு காலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் யாரோவை வேறு யாரோ பாடியதும் 'இந்தப் பாட்டை எம்.எஸ்.பாடி கேட்கணும்," என்று என் அம்மா சொல்லியது ஞாபகத்துக்கு வருகிறது.

தமிழன் வேணு
 
On 15/09/2009, தமிழன் வேணு <venugopal...@gmail.com> wrote:

தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 9:32:15 PM9/15/09
to panb...@googlegroups.com
அது 'ரா ரா வேணு கோபாஆலா'!

ஒ! மிக்க நன்றி! திருத்திக் கொள்ளுகிறேன்.

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 9:34:58 PM9/15/09
to panb...@googlegroups.com

என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.

ஆஹா! இந்த இழை மூலமாக சங்கீத உலகம் எத்தனை ஜாம்பவான்களை இழந்திருக்கிறது என்ற உண்மை வெளிப்படுகிறதே! (என்னையும் சேர்த்துத் தான்...!)

தமிழன் வேணு
 

shylaja

unread,
Sep 15, 2009, 9:40:02 PM9/15/09
to panb...@googlegroups.com
வேணு சார் ரொம்ப நாள ஒரு சந்தேகம் ஜாம்பவான்னு எதுக்கு திறமையானவர்களை குறிப்பிடறோம்?

2009/9/15 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.

ஆஹா! இந்த இழை மூலமாக சங்கீத உலகம் எத்தனை ஜாம்பவான்களை இழந்திருக்கிறது என்ற உண்மை வெளிப்படுகிறதே! (என்னையும் சேர்த்துத் தான்...!)

தமிழன் வேணு
 

தமிழன் வேணு

unread,
Sep 15, 2009, 9:45:30 PM9/15/09
to panb...@googlegroups.com
இராமாயணத்தில் ஜாம்பவான் தான் இலங்கைக்கு செல்லுகிற பாலத்தை அமைத்தாராம். முடியாத காரியங்களை முடிப்பதில் ரொம்ப வல்லவராம். விசாலம் அம்மாவிடம் இன்னும் தகவல்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழன் வேணு

2009/9/16 shylaja <shyl...@gmail.com>

vishalam raman

unread,
Sep 16, 2009, 5:53:37 AM9/16/09
to panb...@googlegroups.com
ஜாம்பவான் என்றவர் கரடிகளுக்குத்தலைவர் மிக்ச்சிறந்த அறிவாளி வயதில்
மூத்தவர் திரேதா யுகத்தில் சுக்கீரவரின் மந்திரி அவருடைய பலம்
மூளையிலும் சரி உடலிலும் சரி அவருக்கு நிகர் அவரேதான்
எந்தப்பிரச்சனையிலும் மனம் அமைதியாகவே வைத்துக்கொள்வதில் வல்லவர் சிறந்த
தீர்க்கத்தரிசி
ஹனுமான் தான் இலங்கையை எப்படிததாண்டப்போகிறோம் என்று
மலைத்து நிற்கையில் ஜாம்பவான் தான் அவரது பலத்தை உண்ரச்செய்து
அவரைக்கடலைக்கடக்கும்படி செய்தார் ராமர் ஒவ்வொன்றுக்கும் அவரது
அறிவுரையைக்கேட்பார் ,இராம இராவண யுத்தத்தில் இந்திரஜித் தன்னுடைய
மாயையால் எல்லோரையும் தாக்க பலரும் மனம் ஒடிந்துப்போய் நின்றனர் ,ஆனால்
ஜாம்பவான் ஒன்றும் ஆகாதது போல் மன அமைதியுடன் நின்றார் பின் இராவணனையும்
மேகநாத்தையும்
மிகவும் வெற்றியாகப்போர் புரிந்து அவர்களை மூர்ர்ச்சையடையச்
செய்தார். யுத்த வெற்றிக்குப்பின் அவரவர்கள் தங்கள் நாடு போக் ஜம்பவான்
மட்டும் ஸ்ரீ ரமரிடம் ஒரு வரம் கேட்டார் அடுத்த யுகத்திலும் உங்கள்
சம்பந்தம் எனக்குக் கிட்ட வேண்டும் என்று ,,,
அதே போல் துவபரயுகத்தில் கிருஷண்ருடன் சம்பந்தம் ,,ச்யாமந்தகமணி கொடுத்து
தன் பெண் ஜாம்பவதியையும்
கண்ணனுக்கு மணம் முடித்து வைக்கிறார் ,,,
எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவர் அன்பவஸ்தர் என்பதால் நாம் சிலரை
ஜாம்பவான் என்கிறோம்

Naresh Kumar

unread,
Sep 16, 2009, 6:24:37 AM9/16/09
to panb...@googlegroups.com
//எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவர் அன்பவஸ்தர் என்பதால்  நாம் சிலரை
ஜாம்பவான் என்கிறோம்//

நல்ல விளக்கம் அம்மா!!!

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

தமிழன் வேணு

unread,
Sep 16, 2009, 6:27:35 AM9/16/09
to panb...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா! ஜாம்பவானைப் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

தமிழன் வேணு

2009/9/16 vishalam raman <rvis...@gmail.com>

ezhil arasu

unread,
Sep 16, 2009, 7:04:45 AM9/16/09
to panb...@googlegroups.com
இந்த இழை மூலமாக சங்கீத உலகம் எத்தனை ஜாம்பவான்களை இழந்திருக்கிறது என்ற உண்மை வெளிப்படுகிறதே! <<<

அதாவது சங்கீத பூஜையில் கரடி போல என்று சொல்லி விட்டீர்கள் :)))))))

2009/9/16 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

தமிழன் வேணு

unread,
Sep 16, 2009, 7:07:40 AM9/16/09
to panb...@googlegroups.com
அதாவது சங்கீத பூஜையில் கரடி போல என்று சொல்லி விட்டீர்கள் :)))))))

அச்சச்சோ! இந்த இழையை ஆரம்பித்த புண்ணியவானே அடியேனல்லவா? :-))

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Oct 30, 2009, 11:05:56 AM10/30/09
to panb...@googlegroups.com, தமிழ்த்தென்றல்
பிருந்தாவன சாரங்கா ராகத்தில் நிறைய திரைப்பாடல்கள் இருக்கும் என்று எண்ணியிருந்த எனக்கு சற்று ஏமாற்றம் தான்.

நீண்ட நாட்கள் சிலபல முயற்சிகளை மேற்கொண்டும் மிகக்குறைவான பிரபலமான பாடல்களைப் பற்றியே அறிய முடிந்தது. இன்னும் சில பாட்டுக்கள் குறித்துத் தகவல் கிடைத்தபோதிலும், அவற்றைக் கேட்பதற்கு ஒலிநாடாவோ, குறுந்தகடோ அல்லது வலைத்தளங்களோ கிடைக்காமல் போகவே, இம்முறை ஒரு சுருக்கமான மடலையாவது பதிவு செய்து விடலாம் என்று உத்தேசம்.

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

"ஒருதலை ராகம்," திரைப்படம் வெளியானதும், அதன் எல்லாப் பாடல்களும் (என்னடி ரோசா உட்பட!) பெரிதாகப் பேசப்பட்டன என்றாலும், "இது குழந்தை பாடும் தாலாட்டு" பாடல் எஸ்.பி.பியின் குரல், இனிமையான இசை இவற்றோடு அந்தப் பாடலிலிருந்த கவித்துவத்துக்காகவும் பிரபலமானது.

கல்லூரிகளின் அனைத்து மரத்தடிகளிலும் இந்தப்பாடலின் வரிகள் அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து மேயப்பட்டன. டி.ராஜேந்தர்-எஸ்.பி.பி.கூட்டணியில் அதன்பிறகு பல காதல் தோல்வி பாடல்கள் வந்துவிட்டபோதிலும், குழந்தை பாடும் தாலாட்டு இன்னும் கேட்கத் தெவிட்டுவதில்லை. ஒரு வேளை, இந்தப் பாடலின் ராகமும் ஒரு காரணமாக இருக்குமோ?

பிருந்தாவன சாரங்கா!

பிருந்தாவனி என்றும் அழைக்கப்படுகிற பிருந்தாவன சாரங்கா ராகம், ஹிந்துஸ்தானி இசையிலிருந்து கர்னாடக இசை விற்பன்னர்களால் ஆட்கொள்ளப்பட்டது என்று கூறுகிறார்கள். முத்துசாமி தீட்சிதர் இந்த ராகத்தில் காலத்தால் அழியாத மூன்று அரும்பெரும் கிருதிகளைப் படைத்துள்ளார். அவையாவன:

ரங்கபுர விஹார, ஸ்வாமி நாதேன சம்ரக்ஷிதோஹம் ..மற்றும் சௌந்தர ராஜம்.

இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடியுள்ள "ரங்கபுர விஹார," பாடலை உற்றுக் கவனித்தால், அதன் ஆரம்பம் மேல்ஸ்தாயியில் துவங்கி, அதன் பின்பகுதியில் சற்றே கீழிறங்கி ராகத்திலேயே மிதந்து கொண்டிருப்பது போல ஒரு மெல்லிய மயக்கத்தையே ஏற்படுத்துவது போலிருக்கும். (விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இழையைச் சொடுக்கிக் கேட்டு மகிழலாம்)

http://www.youtube.com/watch?v=3j38JtCHuSo

தியாகராஜ ஸ்வாமிகள் இந்த ராகத்தில் "ஸ்ரீ கமலாப்த குல," என்ற கீர்த்தனையையும் இயற்றியுள்ளார்.

பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த சில பிரபலமான பழைய பாடல்கள் இதோ:

1.பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
 (படம்: படித்தால் மட்டும் போதுமா?,பாடியவர்கள்: டி.எம்.எஸ்-பி.பி.ஸ்ரீநிவாஸ், இசை:விஸ்வநாதன்-ராமமூர்த்தி)

2.தங்கமகள் வயிற்றில் பிஞ்சுமகன் உருவம்
 (படம்: வாழ்க்கைப்படகு, பாடியவர்: பி.சுசீலா, இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி)

3.பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா
 (படம்: இதயத்தில் நீ-பாடியவர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்,இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி)

4.முத்துநகையே உன்னை நானறிவேன்
 (படம்: என் தம்பி, பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன், இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

5.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
 (படம்: நெஞ்சிருக்கும் வரை, பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி. சுசீலா இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

இசைஞானி மட்டும் இந்த ராகத்தைக் கையாளாமலா இருப்பார்? இதோ, அவர் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் இசையமைத்த சில பாடல்களின் பல்லவிகள்....!

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது

"என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்," படத்தில் கவிஞர்.மு.மேத்தாவின் வரிகளை, பி.சுசீலா பாடிய பாடல்.

ஜெயசித்ராவுடன் ரகுமான்(?!?) ஜோடியாக நடித்த "புதிய ராகம்" படத்தில் வந்த "தெய்வங்கள் கண் பார்த்தது," இன்னொரு உதாரணம்.

சில நல்ல பாடல்கள், படங்களின் படுதோல்வி காரணமாக யாரது கவனத்தையும் ஈர்க்காமல் போய் விடுவதுமுண்டு. அந்த வகையில் "தெய்வங்கள் கண் பார்த்தது," பாடலும் ஒரு துரதிர்ஷ்டவசமான பாடல் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல, இன்னும் நிறைய இளையராஜா பாடல்கள் இந்த ராகத்தில் இருக்கக் கூடும். ஆனாலும், அவை குறித்த தகவல்களைச் சேகரிக்கிற முயற்சியைத் தொடர்ந்து கொண்டே, அடுத்த ராகத்துக்குச் செல்வதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். அதன்படி....!

அடுத்தபடியாக, சக்ரவாகம், சலநாட்டை,சந்த்ரகௌன்ஸ் என்ற மூன்று ராகங்கள் பற்றி எழுத முயல்கிறேன். காரணம், அதற்கு அடுத்தபடி வரப்போவது பல திரைப்பாடல்களுக்கு இனிமை தந்த "சாருகேசி" என்ற இன்னோர் அற்புத ராகம்.

தமிழன் வேணு

unread,
Oct 30, 2009, 11:08:40 AM10/30/09
to panb...@googlegroups.com, தமிழ்த்தென்றல்
நான் கொடுத்த youtube இழை வேலை செய்யவில்லை. :-((

மன்னிக்கவும்.

தமிழன் வேணு

Chandar Subramanian

unread,
Oct 30, 2009, 11:31:42 AM10/30/09
to panb...@googlegroups.com
I have that song as MP3 but that is of 5MB and will take time in uploding ...

2009/10/30 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

Naresh Kumar

unread,
Nov 3, 2009, 1:38:17 AM11/3/09
to panb...@googlegroups.com
வேணுஜி,
 
ராகம்னா என்னான்னே தெரியாத என்னைப் போன்ற ஆட்களுக்கும் கூட தெளிவாகப் புரியும்படி இருக்கிறது...
 
அருமையான இழை....

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Naresh Kumar

unread,
Nov 3, 2009, 1:41:18 AM11/3/09
to panb...@googlegroups.com
//சில நல்ல பாடல்கள், படங்களின் படுதோல்வி காரணமாக யாரது கவனத்தையும் ஈர்க்காமல் போய் விடுவதுமுண்டு. அந்த வகையில் "தெய்வங்கள் கண் பார்த்தது," பாடலும் ஒரு துரதிர்ஷ்டவசமான பாடல் என்றே சொல்லலாம்.//
 
உண்ஐ..சில மிக அருமையான பாடல்கள் வெகு ஜன ரசிகர்களின் கவனத்திற்கு வராமலே போயிருக்கிறது...
 
எனக்கு தெரிந்த அப்படி ஒரு பாடல் - இன்று நீ நாளை நான் படத்தில் வரும் “பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்” பாடல்...
 
இந்தப் பாடலைப் பற்றி கூடிய சீக்கிரம் “மகேந்திரனின் இசைப்பக்கங்கள்” இழையில் போடுகிறேன்.

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

ஆசாத்

unread,
Nov 3, 2009, 2:15:06 AM11/3/09
to பண்புடன்
> ஆஹா! இந்த இழை மூலமாக சங்கீத உலகம் எத்தனை ஜாம்பவான்களை

சே!

இப்படியெல்லாம் குழுமத்துல பேசிக்குவாங்கன்னு தெரிஞ்சிருந்தா ஒழுங்கா
பேஞ்சோ மாஸ்டர் அபூபக்கர் கிட்டக்க கொஞ்சமாவது சங்கீதவாசம்
புடிச்சிருப்பேன். எவ்ளோ நாள் அவரோட இருந்தேன், பாட்டெழுதுறதோட நம்ம வேல
முடிஞ்சிருச்சுன்னு இந்த ராகம் மேட்டர்ல கவனமே செலுத்தாம வுட்டுட்டேன்.

அபூபக்கர் - 'மேளத்தை மெல்லத் தட்டு மாமா' பாடலின் பின்னணி இசையில்
முக்கியமான பங்கேற்றவர்.

தமிழன் வேணு

unread,
Nov 8, 2009, 8:18:53 AM11/8/09
to panb...@googlegroups.com, தமிழ்த்தென்றல்
அடுத்து, சக்ரவாகம் ராகம் பற்றி....!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா-கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா!

அர்ச்சுனன் (முத்துராமன்) எய்த அம்புகள் உடலைத் தைத்திருக்க, தர்மதேவதை வான்வெளியிலிருந்து சொரிந்த மலர்மாலைகளை அணிந்தபடி, இரத்தம் பெருகியபடி, கண்கள் செருகியபடி, இழுத்து மூச்சு விட்டபடி கர்ணன் (நடிகர் திலகம்) தேர்ச்சக்கரத்தில் சாய்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். கிருஷ்ண பரமாத்மா (வேறு யார், நந்தமூரி தாரக ராமராவ்) மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவிஞர் கண்ணதாசனின் வரிகளை, சீர்காழி கோவிந்தராஜனின் குரலின் துணையோடு பாடிய இந்தப் பாட்டை எப்படி மறக்க முடியும்?

எல்லா சொத்தையும் வில்லனுக்கு தாரை வார்த்து விட்டு, வீட்டை விட்டு கதாநாயகன் ரஜினி வெளியேறுகையில் இசைப்புயல் ரஹ்மானின் கைவண்ணத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், ஹரிஹரனின் குரலில் ஒலித்த "முத்து" படப் பாடலும் ஞாபகம் வருமே?

"விடுகதையா இந்த வாழ்க்கை?"

இரண்டு சகாப்தங்களிலிருந்து உதாரணமாக இரண்டு பாடல்களைக் குறுப்பிட்டிருக்கிறேன். இவ்விரண்டு பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை; இவை இரண்டுமே சக்ரவாகம் என்ற ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பது தான்.

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரைப் பொறுத்தவரையில், அவர் சக்ரவாகத்தை "தோயவேகவாஹினி" என்று தான் அழைத்தாராம். (நன்றி: விக்கி). இந்த ராகம் ஹிந்துஸ்தானி இசையின் ஆஹிர் பைரவ் என்ற ராகத்தை ஒத்திருக்கிறதாம். பக்தி, கருணை, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிற ராகமாக சக்ரவாகம் கருதப்படுகிறது.

முத்துசாமி தீட்சிதரின் "கஜானனயுதம் கணேஷ்வரம் பஜாமி சததம் சுரேஷ்வரம்," என்ற கிருதி கர்னாடக இசையில் மிகவும் பிரபலமானதாகும். அதே போல, கோடீஸ்வர ஐயரின் "காணக்கண் கோடி வேண்டும்," என்ற தமிழிசைப் பாடலும் சக்ரவாக ராகத்தில் அமைக்கப்பட்டதாகும். தியாகராஜரின் "ஏதுல புரோதுவோ," மற்றும் "சுகுணமுலே" ஆகிய இரு கீர்த்தனைகளும் இதே ராகத்தில் தான் அமைக்கப்பட்டவை. (நன்றி: விக்கி)

மெல்லிசை மன்னரின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் "அபூர்வ ராகங்கள்" படத்தில் ஒலித்த "அதிசய ராகம் ஆனந்த ராகம்" பாடல் இன்றும் இனிக்கிறதே! அது சக்ரவாகத்தில் அமைந்தது.

அதே எம்.எஸ்.வி, அதே பாலசந்தரின் இன்னொரு படமான "தண்ணீர் தண்ணீர்" படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைத்த இந்தப் பாடல்:

"கண்ணான பூகமனே கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுதகண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
தொட்டில் நனைக்கும்வரை-உன்
தூக்கம் கலைக்கும்வரை"

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில், சக்ரவாகம் ராகத்தில் அமைந்துள்ள பல பிரபலமான பாடல்கள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:

1. கேளடி கண்மணி - நீ பாதி நான் பாதி கண்ணே
2. விக்ரம் - வனிதாமணி வனமோகினி வந்தாடு
3.காக்கிச்சட்டை- வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
4. பாயும் புலி- ஆப்பக்கடை அன்னக்கிளி
5. காதல் ஓவியம்-பூஜைக்காக வாழும் பூவை

மேற்கண்ட பாடல்களில், "ஆப்பக்கடை அன்னக்கிளி" தவிர மீதமுள்ள அனைத்துப்பாடல்களும் மிகவும் பிரபலமானவை என்பதை சொல்லத் தேவையில்லை.

சக்ரவாகத்தைத் தொடர்ந்து சலநாட்டை ராகம் குறித்து சில குறிப்புக்கள். இந்த ராகம் ஒரு இசைநிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இசைப்பதற்கு மிகவும் உகந்த, மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது என்றாலும் இந்த ராகத்தின் மூலம் "வீரம்" வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த ராகத்தில் பிரபலமான கர்னாடக இசைப்பாடல்கள் பல இருப்பினும், மிகவும் பிரபலமான சில பாடல்களின் ஆரம்பவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஜகதானந்த காரகா-தியாகராஜ சுவாமிகள். (ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறும் தியாகராஜ ஆராதனையின் போது தவறாமல் பாடப்படுகிற பஞ்சரத்தின கீர்த்தனைகளில் இது முதலாவதாகும். "அந்நியன்" படத்தில் வரும் "ஐயங்காரு வீட்டு அழகே," பாடலுக்கு முன்னர் இந்தக் கீர்த்தனையின் வரிகள் வருவது நினைவிருக்கலாம்.)

2.சுவாமிநாத பரிபாலய-முத்துசாமி தீட்சிதர்
3. உமையோர் பாகனே-பாபநாசம் சிவன்

சலநாட்டை ராகத்தில் இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களில் சில:

1.கன்னிராசி-ஆளை அசத்தும் மல்லியே மல்லியே
2.நினைவெல்லாம் நித்யா-பனிவிழும் மலர்வனம்
3.வீரா-பட்டுப் பூ பூ
4.கல்லுக்குள் ஈரம்- கொத்துமல்லிப் பூவே புத்தம்புதுக் காத்தே!

மேற்கூறிய பாடல்கள் அனைத்துமே மிகப்பிரபலமானவை. அதிலும், ஆளை அசத்தும் மல்லியும், பனிவிழும் மலர்வனமும் தினசரி ஏதாவது ஒரு அலைவரிசையில் கேட்காமல் இருப்பதேயில்லை என்று சொல்லலாம்.

சந்திரகௌன்ஸ்! இதுவும் ஹிந்துஸ்தானி இசையிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டுள்ள ஒரு ராகமாகும். இந்த ராகத்தில் இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களில் சில:

1.வைதேகி காத்திருந்தாள்-அழகு மலராட அபிநயங்கள் கூட
2.இளமைக்காலங்கள்-பாட வந்ததோ கானம்
3.காதல் ஓவியம்-வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
4.ராசய்யா-உன்னை நினைச்சு உருகும்
5.வில்லுப்பாட்டுக்காரன்-வானம் எனும்

அடுத்து சாருகேசி!

shylaja

unread,
Nov 8, 2009, 8:31:18 AM11/8/09
to panb...@googlegroups.com
விவரமானபதிவு!
 
அதிசிய ராகம்  பாட்டில்...
 
இந்திரலோகத்து சக்கரவாகம்"  என்று வரும்.
 
சக்கரவாகம் என்பது ஒரு தேவலோக பறவை.. அதன் கண்கள் மிக மிக அழகாக இருக்கும்.. (பாடலுக்கு உரிய)ஸ்ரீவித்யாவின் கண்களுக்கு இதை விட என்ன சிறந்த உவமை இருக்க முடியும்? மேலும் சக்கரவாகம்  இரண்டுபறவைகளாய் சேர்ந்தே  ஜோடியாய் இருக்கும் என்பார்கள்.  இலக்கியத்தில்  சில வர்ணனைகளிலும் படித்திருக்கிற நினைவு!

2009/11/8 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
இம்மையே ராமா என்று இரண்டு எழுத்தினால்//

கம்பர்

துரை.ந.உ

unread,
Nov 8, 2009, 8:48:12 AM11/8/09
to thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com

இசைப் பிரவாகம் அய்யா இது
 
வேணு அய்யாவின் வெளியே தெரியாத
இன்னுமொரு பரிமாணம் இது
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

தமிழன் வேணு

unread,
Nov 8, 2009, 9:15:09 AM11/8/09
to panb...@googlegroups.com
சக்கரவாகம் என்பது ஒரு தேவலோக பறவை.. அதன் கண்கள் மிக மிக அழகாக இருக்கும்.. (பாடலுக்கு உரிய)ஸ்ரீவித்யாவின் கண்களுக்கு இதை விட என்ன சிறந்த உவமை இருக்க முடியும்?

எனக்குத் தெரிந்து "பேசும் விழிகள்" என்று ஒரு நடிகையின் கண்களை அனைத்துப் பத்திரிகைகளும் வருணித்தார்கள் என்றால் அது ஸ்ரீவித்யாவை மட்டும் தான். "சொல்லத்தான் நினைக்கிறேன்," படமும் அந்த வருணனைக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

உற்சாகமூட்டியமைக்கு மிக்க நன்றி.

தமிழன் வேணு

ezhil arasu

unread,
Nov 8, 2009, 9:41:47 AM11/8/09
to panb...@googlegroups.com
வேணு ஜி

உள்ள்ளத்தில் நல்ல உள்ளம்' பாட்டு சக்ரவாகம் என்று  அறிகிறோம். இருப்பினும் கர்நாடக சங்கீத வித்வான் சேஷகோபாலன் அதை சரஸாங்கி என்று சொன்னதாக ஆனந்த விகடனில் முன்பு படித்தேன்.

அமைச்சர் துரைமுருகன் மேடையில் அதை சக்ரவாகம் என சொல்லவும் அடுத்து பேசிய சேஷகோபாலன் அதை சரஸாங்கி என்று திருத்தியதாகவும் படித்தேன்.

ஆனால் இது வரை நானறிந்த சங்கீத வித்வான்கள் அதை சக்ரவாகம் என்றுதான் சொல்கிறார்கள். எது சரியோ?

2009/11/8 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

ezhil arasu

unread,
Nov 8, 2009, 9:46:26 AM11/8/09
to panb...@googlegroups.com
 அதிசய ராகம் பாடல் மஹதி இராகம் வேணுஜி! அந்த பாடலுக்காக மிக அதிசயமான இராகம் ஒன்றை சொல்லுமாறு கேட்க பாலமுரளி கிருஷ்ணா மஹதி இராகத்தை சொன்னதாக படித்திருக்கிறேன்.

2009/11/8 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

தமிழன் வேணு

unread,
Nov 8, 2009, 10:44:30 AM11/8/09
to panb...@googlegroups.com
ஆனால் இது வரை நானறிந்த சங்கீத வித்வான்கள் அதை சக்ரவாகம் என்றுதான் சொல்கிறார்கள். எது சரியோ?

தி.நகரில் கர்நாடக இசை கற்பிக்கிற ஒரு வித்துவானிடம் கேட்டபோது, அவர் தொலைபேசியிலேயே சக்ரவாகத்தின் ஆரோகணம், அவரோகணம் ஆகியவற்றைப் பாடிக் காட்டி, இது சக்ரவாகம் என்று கூறினார். இருப்பினும் மீண்டும் விசாரிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

தமிழன் வேணு 

தமிழன் வேணு

unread,
Nov 8, 2009, 10:45:24 AM11/8/09
to panb...@googlegroups.com
 அதிசய ராகம் பாடல் மஹதி இராகம் வேணுஜி! அந்த பாடலுக்காக மிக அதிசயமான இராகம் ஒன்றை சொல்லுமாறு கேட்க பாலமுரளி கிருஷ்ணா மஹதி இராகத்தை சொன்னதாக படித்திருக்கிறேன்.

இது குறித்தும் விசாரிக்கிறேன். நன்றி.

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Nov 9, 2009, 10:23:57 PM11/9/09
to panb...@googlegroups.com
உள்ளத்தில் நல்ல உள்ளம் மற்றும் அதிசய ராகம் இரண்டுமே 'சக்ரவாகம்" தான் என்று நான் விசாரித்தவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது குறித்து இன்னும் தீர விசாரித்து எழுதுகிறேன். சில நேரங்களில் பல ராகங்களுக்கு அடித்தளமாக ஒரு ஜன்ய ராகம் இருப்பதுண்டு. இவையும் அது போலத் தானா என்று உறுதிப்படுத்திச் சொல்லுகிறேன்.

தமிழன் வேணு
 
 அதிசய ராகம் பாடல் மஹதி இராகம் வேணுஜி! அந்த பாடலுக்காக மிக அதிசயமான இராகம் ஒன்றை சொல்லுமாறு கேட்க பாலமுரளி கிருஷ்ணா மஹதி இராகத்தை சொன்னதாக படித்திருக்கிறேன்.

ezhil arasu

unread,
Nov 10, 2009, 4:19:37 AM11/10/09
to panb...@googlegroups.com
வேணுஜி உங்கள் பார்வைக்கு:

From: Narayanan (@ 195.224.238.98) on: Mon Apr 10 06:11:44 EDT 2000
Nado:
Balamurali has "created" many other ragas and another example is "Mahathi" (he named his daughter after this raga). The scale is
Aro: s g p n S Ava: S n p g s Mela - 29
The popular film song "Adhisaya Ragam" is based on this raga.

உண்மையில் இது ராகமாலிகை வேணுஜி. இரண்டு மூன்று இராகங்களின் கலவை நடுவில் வரும். ஆனால் அதிசய ராகம் என்ற வரிகள் மஹதி ராகமே.

காரணம் அதிசய, அபூர்வ இராகம் ஒன்றே இதன் பெயருக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும், எம்.எஸ்.வியும் விரும்பினார்கள்.

பாலமுரளி கிருஷ்ணாவிடம் கேட்டப்போது அவர் தந்தது இந்த இராகம். மஹதி.

2009/11/10 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

வில்லன்

unread,
Nov 10, 2009, 6:44:47 AM11/10/09
to panb...@googlegroups.com
சக்கரவாகமோ மழையை அருந்துமா

நான் சக்கரவாக பறவையாவேனோ....

அப்படினு எதோ ஒரு படத்துல வரும்.....

2009/11/8 shylaja <shyl...@gmail.com>



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

     "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”

சென்ஷி

unread,
Nov 10, 2009, 7:13:05 AM11/10/09
to panb...@googlegroups.com
அரவிந்த்சாமி நடிச்ச படம்தானே.. இந்த படத்தோட டைரக்டர் கூட கே. எஸ். ரவியாச்சே.. மியுசிக் ஏ.ஆர்.ரஹ்மான்.. வைரமுத்து எழுதுன பாட்டுதானே இது..

ஒரு துளி ஒரு துளி ஒரு துளி வருதே.. சிறு துளி வருதேன்னு ஆரம்பிக்குமுல்ல

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ - தானே பாட்டோட முதல் வரி

என் சுவாசக்காற்றேதானே இந்தப் படம் பேரு

2009/11/10 வில்லன் <oms...@gmail.com>



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

வில்லன்

unread,
Nov 10, 2009, 7:17:45 AM11/10/09
to panb...@googlegroups.com
பரவாயில்லையே பழைய ஆளுங்களுக்கும் புதுசு வெயிட்டாத்தாம்லே மனசுல பதிஞ்சிருக்கு,

அப்படியே வேணு அய்யா இந்த இழையிலேயே தீர்ப்பை புதுப்பாடல்கள் சார்பா எழுதிட்டு இந்த இழையை தொடர்ந்தாலும் தப்பில்லைன்றேன்

2009/11/10 சென்ஷி <senshe...@gmail.com>

சென்ஷி

unread,
Nov 10, 2009, 7:20:59 AM11/10/09
to panb...@googlegroups.com
பின்னே இப்படி ஒரு மொக்கைப் படத்த காலேஜ் கட் அடிச்சுட்டு பார்த்தவனாச்சே.. லேசுல மறக்குமா :(

Jeevaa KS

unread,
Nov 10, 2009, 7:21:33 AM11/10/09
to panb...@googlegroups.com
பாவம் வில்லன். நினைப்புத்தான் அவரோட பொழப்பைக் கெடுக்குதாம் :))

ஏன்யா எதோ பாட்டு தெரியலைன்னு கேட்ட, எங்காளு பதில் சொன்னாரு ;) அதுக்கு
இந்த துள்ளு துள்ளலாமா ? புதுபாட்டுக்காரய்ங்க உங்களுக்கே மனசுல இந்த
பாட்டு நிக்கலைன்னா ... எம்புட்டு மோசமா இருக்குன்னு யோசிச்சுக்கோ!!

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2009/11/10 வில்லன் <oms...@gmail.com>:

தியாகு

unread,
Nov 10, 2009, 7:23:20 AM11/10/09
to panb...@googlegroups.com
திரு .தமிழன் வேணு அய்யாவின் ராகத்தை பற்றிய குறிப்புகள் அருமை மற்றவற்றை
பொறுமையாக வாசிக்கிறேன்

சிறந்த இழை

2009/11/10 Jeevaa KS <jee...@gmail.com>:

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

தமிழன் வேணு

unread,
Nov 10, 2009, 7:24:20 AM11/10/09
to panb...@googlegroups.com
From: Narayanan (@ 195.224.238.98) on: Mon Apr 10 06:11:44 EDT 2000
Nado:
Balamurali has "created" many other ragas and another example is "Mahathi" (he named his daughter after this raga). The scale is
Aro: s g p n S Ava: S n p g s Mela - 29
The popular film song "Adhisaya Ragam" is based on this raga.

நன்றி எழில்ஜீ! எனது தகவல் தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. விரைவில் சரிசெய்து கொண்டு வருகிறேன்.

தமிழன் வேணு

ezhil arasu

unread,
Nov 10, 2009, 8:54:25 AM11/10/09
to panb...@googlegroups.com
வில்லன்! மழை நீரை அருந்துவது சாதகப் பறவை. சக்கரவாகம் என்பது இரவில் தன் துணையை பிரிந்திருக்கும். அப்போது சோக கீதமாக கத்தும். பகலில் ஜோடியுடன் சேர்ந்திருக்கும்.

2009/11/10 வில்லன் <oms...@gmail.com>
சக்கரவாகமோ மழையை அருந்துமா

சென்ஷி

unread,
Nov 10, 2009, 9:14:39 AM11/10/09
to panb...@googlegroups.com
அது ஏன் ராத்திரியில பிரிஞ்சு சோக கீதம் பாடணும். ராத்திரியிலயும் சேர்ந்தே இருக்க வேண்டியதுதானே.. என்ன பிரச்சினை அதுக்கு?!

2009/11/10 ezhil arasu <nan...@gmail.com>

ezhil arasu

unread,
Nov 10, 2009, 12:17:06 PM11/10/09
to panb...@googlegroups.com
அப்பா! சாமீ! அது ஒரு mythical bird! புராண கால பறவை. ஒரு உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. :))



2009/11/10 சென்ஷி <senshe...@gmail.com>
அது ஏன் ராத்திரியில பிரிஞ்சு சோக கீதம் பாடணும். ராத்திரியிலயும் சேர்ந்தே இருக்க வேண்டியதுதானே.. என்ன பிரச்சினை அதுக்கு?!

வில்லன்

unread,
Nov 10, 2009, 11:40:29 PM11/10/09
to panb...@googlegroups.com
நீங்க பழைய பாடல்கள் கட்சி ஆளா...

இப்படி புதுப்பாடலுக்கு எதிரா குரல் கொடுக்கறிங்களே...



2009/11/10 ezhil arasu <nan...@gmail.com>

ச.பிரேம்குமார்

unread,
Nov 10, 2009, 11:43:25 PM11/10/09
to panb...@googlegroups.com

அப்போ ‘சக்கரவாகமோ மழை அருந்துமாம்’ என்பது வைரமுத்து செய்த வரலாற்று பிழையா?

சென்ஷி

unread,
Nov 10, 2009, 11:44:13 PM11/10/09
to panb...@googlegroups.com
ஹாஹ்ஹ்ஹாஹா... ஹ்ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... வில்லன், தோல்வி பயம் உனக்கு வந்துடுச்சு.. இழையில நீ எழுதற ஒவ்வொரு வார்த்தையிலயும் அந்த பயம் தெரிய ஆரம்பிச்சுடுச்சு..  அதனால எல்லோரும் எங்க கட்சியா இருக்காங்க.. இவங்க எல்லோரும் நல்லவங்க கட்சியில இருக்காங்க...

தமிழன் வேணு

unread,
Nov 10, 2009, 11:47:44 PM11/10/09
to panb...@googlegroups.com
நடுவருக்கு அரை நாள் விடுப்பு கொடுங்கையா! இந்த ஆடிட்டருங்க பண்ணுற அலம்பல் தாங்க முடியலியே! :-(((

தமிழன் வேணு 

சென்ஷி

unread,
Nov 10, 2009, 11:51:08 PM11/10/09
to panb...@googlegroups.com
அச்சச்சோ.. நடுவரா நீங்க இருக்கறது வேற இழையில.. இங்கன நீங்க பாட்டு வாத்தியார்.. ஓக்கேவா!

2009/11/10 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

நடுவருக்கு அரை நாள் விடுப்பு கொடுங்கையா! இந்த ஆடிட்டருங்க பண்ணுற அலம்பல் தாங்க முடியலியே! :-(((

தமிழன் வேணு 



ezhil arasu

unread,
Nov 11, 2009, 3:52:32 AM11/11/09
to panb...@googlegroups.com
வைரமுத்து அப்படி எழுதியிருக்கிறாரா என எனக்குத் தெரியாது. அப்படி எழுதியிருந்தால், சக்கரவாகம் மழையை மட்டுமே அருந்தும் என எழுதியிருந்தால் பிழைதான். (வரலாற்று பிழையல்ல; பொருட் குற்றம்)

எல்லா பறவைகளும் மழை நீரை அருந்தும்; அருந்தாமல் போகும். ஆனால் சாதகப்பறவை எனும் பறவை மழை நீரை மாத்திரமே அருந்தும் என சொல்லப்படுகிறது.

ஆகவே சக்ரவாகத்தை இந்த பொருளில் வைரமுத்து சொல்லியிருந்தால் பிழைதான், பிரேம்குமார்.

2009/11/11 ச.பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

தமிழன் வேணு

unread,
Nov 11, 2009, 8:52:30 AM11/11/09
to panb...@googlegroups.com
அச்சச்சோ.. நடுவரா நீங்க இருக்கறது வேற இழையில.. இங்கன நீங்க பாட்டு வாத்தியார்.. ஓக்கேவா!

இந்த அழகுலே தான் நான் மடல் பார்த்திருக்கேன்!

தமிழன் வேணு

ஆசாத்

unread,
Nov 14, 2009, 2:39:56 AM11/14/09
to பண்புடன்
நமக்கு இந்த ராகமெல்லாம் படிக்கணும்னு ஆசைதாங்க, ஆனா பாருங்க தாழ்வு
மனப்பான்மை, எனக்கு இதெல்லாம் ஓடாதுன்ற முன்முடிவு. அப்பப்ப கொஞ்சம்
எடுத்து வுடுவேன், அதே ராகத்துல வேற பாட்டுங்க இருந்தா தடவிடுவேன்.
நமக்கு வந்துக்க செய்திதான். இப்ப பாருங்க, 'ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ' பாட்டு வந்து ஹம்சாநந்தின்னு சொன்னாங்க, அது மனசுல
பதிஞ்சுருச்சு. ஒருநாளு ஒரு இசைக்கச்சேரி ஒளிப்பேழை ஓடிக்கினு
இருந்துச்சு, கூட இருந்த ரெண்டு மூணு பேர்ல பெரிய ஆளுங்களும் இருந்தாங்க,
அப்ப பாருங்க ஒரு பாகவதரு ஆலாபன ஆரம்பிச்சாரு, அந்த ஒதறல் நமக்கு ராக
தீபம் ஏற்றும் நேரத்த ஞாபகப்படுத்துச்சு, ஒடனே இது ஹம்சாநந்தின்னு
அடிச்சேன், அப்புறம் வந்த டைட்டில்ல ராகம் ஹம்சாநந்தின்னு போட்டாங்க.
சுத்தி இருந்தவங்கள்ளாம் நம்மள பெரிய்ய சுப்புடு ரேஞ்சுக்கு பாக்க
ஆரம்பிச்சுட்டாங்க. நாமதான் எப்பவுமே கிரீடம் சொமக்றதில்லைல்ல, ஒடனே
சொன்னேன் ஏங்க இதுதான் நான் கவனிச்ச எடம், மத்தபடி, 'காலையும் நீயே
மாலையும் நீயே'வும் ஹம்சாநந்திதான்னு சொல்ற ஞானம் கெடையாதுன்னு சொல்லி
நம்மள சராசரிதான்னு நெலை நாட்டிக்க வேண்டியதாகிருச்சு.

என்னைப் பொறுத்தவரைக்கும் ராகம் தெரிஞ்சவங்கல்லாம் குடுத்து
வெச்சவங்கய்யா!

நானு 'மலர்கள் நனைந்தன பனியாலே' கேக்றதுக்கு, அது மோகனம்தான்னு தெரிஞ்சு
கேக்றதுகும் வித்தியாசம் இருக்குங்க.

மஞ்சூர் ராசா

unread,
Nov 14, 2009, 2:54:37 AM11/14/09
to panb...@googlegroups.com
//சந்திரகௌன்ஸ்! //

இன்று தான் இந்த ராகத்தின் பெயரை கேள்விப்படுகிறேன். (ஏதோ சில ராகங்களின் பெயர்கள் மட்டுமே தெரியும் என்பது வேறு விசயம்) ஆனால் இந்த ராகத்தில் பாடப்பட்டுள்ள பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவையாக இருப்பதால் இது சிறந்த ராகமாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழன் வேணு

unread,
Nov 14, 2009, 10:34:27 PM11/14/09
to panb...@googlegroups.com
நமக்கு இந்த ராகமெல்லாம் படிக்கணும்னு ஆசைதாங்க, ஆனா பாருங்க தாழ்வு
மனப்பான்மை, எனக்கு இதெல்லாம் ஓடாதுன்ற முன்முடிவு.

என் தாயார் முறைப்படி சங்கீதம் கற்றவர். வீட்டில் ஒருவராவது பாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவரது ஆசைக்காக, கொஞ்ச நாள் படித்தேன். ஆனால், கவனம் திசைதிரும்பி விட்டது. அதற்கு பிராயச் சித்தமாக இப்போது என் மகளை சங்கீத வகுப்புக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
 
என்னைப் பொறுத்தவரைக்கும் ராகம் தெரிஞ்சவங்கல்லாம் குடுத்து
வெச்சவங்கய்யா!

சத்தியமாக! ராகங்கள் குறித்து யாராவது விவாதித்தால் பொறாமையோடு அவர்களது பேச்சைக் கேட்பேன். :-)

நானு 'மலர்கள் நனைந்தன பனியாலே' கேக்றதுக்கு, அது மோகனம்தான்னு தெரிஞ்சு
கேக்றதுகும் வித்தியாசம் இருக்குங்க.

எழில்ஜீ கேட்ட கேள்விகளுக்காக, சங்கீதம் பற்றி தெரிந்த சிலரிடம் "அதிசய ராகம்," மற்றும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" குறித்து பல தடவை கைபேசியில் விசாரித்தது ஒரு நல்ல அனுபவம். (இதில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் கைபேசியில் "தாய்க்கு நீ மகன் இல்லை தம்பிக்கு அண்ணன் இல்லை," என்று என் நண்பர் ஒருவருக்குப் பாடிக் காட்ட, பக்கத்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்ததும் அடங்கும்) விசாலம் அம்மா "காணக்கண் கோடி வேண்டும்" குறித்துக் கேட்ட சந்தேகத்தைத் தீர்க்க இன்று ஒரு நடை மாம்பலம் போய் வரலாம் என்று இருக்கிறேன். 

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Nov 14, 2009, 10:37:09 PM11/14/09
to panb...@googlegroups.com
//சந்திரகௌன்ஸ்! //

இன்று தான் இந்த ராகத்தின் பெயரை கேள்விப்படுகிறேன்.

மஞ்சூர் ஐயா!

இது ஹிந்துஸ்தானி இசையிலிருந்து எடுத்து கையாளப்பட்டுள்ள ராகமாம். இது போன்ற ராகங்களை பட்டியலிட்டு எழுத வேண்டும் என்றும் நப்பாசை இருக்கிறது. :-))

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Nov 22, 2009, 8:44:00 AM11/22/09
to panb...@googlegroups.com, தமிழ்த்தென்றல்
மன்மத லீலையை வென்றார் உண்டோ

மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பாராமுகம்-
மன்மத லீலையை வென்றார் உண்டோ

பாபநாசம் சிவன் இயற்றி, எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடி, டி.ஆர்.ராஜகுமாரியுடன் நடித்த "ஹரிதாஸ்" பாடலை ஆனமட்டும் யூட்யூபில் தேடினேன். கொலம்பியா பிக்சர்ஸின் காப்புரிமை காரணமாக அதை மாத்திரம் எடுத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு வந்த பல படங்களில் வேடிக்கையாக இந்தப் பாட்டை "ஸ்ருங்கார" ரசத்தை வெளிப்படுத்த உபயோகப்படுத்தியிருந்தனர்.

அடிக்கடி பொதிகையில் இந்தப் பாடலைக் காட்டுகிறபோதெல்லாம், ஒளிப்பதிவாளர் பாட்டின் ஆரம்பத்தில் காமிராவை முடுக்கி விட்டு, காப்பி சாப்பிடப் போய் விட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுவதுண்டு. இருந்தாலும், இன்னும் காமரசம் ததும்புகிற பாடல்களின் வரிசையில் இப்பாடல் இருப்பதில் பெரிய வியப்பு எதுவுமில்லை.

ஒரு வேளை, அந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம் தான் காரணமோ?


சாருகேசி!

ஏழு சுரங்களையும் உள்ளடக்கிய ராகங்களை சம்பூர்ண ராகம் என்பார்களாம். சாருகேசி ஒரு சம்பூர்ண ராகம். இந்த ராகத்தை முத்துசாமி தீட்சிதர், "தரங்கிணி" என்றும் அழைப்பாராம். எப்போதும் மயங்கவைக்கிற ஒரு ராகமாக சாருகேசி கருதப்படுகிறது. இந்த ராகத்தில் சிருங்கார ரசம் சற்று தூக்கலாக இருப்பதாலோ என்னவோ, பொதுவாக இந்த ராகத்தை அதிக அளவில் இசைக்கச்சேரிகளில் பயன்படுத்துவது இல்லையாம். சாருகேசி ராகத்தில் பிரபலமான பாடல்கள் எதுவென்று கேட்டால், ஏறக்குறைய அனைவரும் கீழ்க்காணும் பாடல்களையே குறிப்பிட்டார்கள். அவையாவன:

1.அஷ்டபதி-ஜெயதேவர்
2.அதமொதி கலதே-தியாகராஜர் கீர்த்தனை
3.கிருபயா பாலய-சுவாதித்திருநாள்
 
சாருகேசி ராகத்தில் அமையப்பெற்ற சில பாடல்களைக் கீழே தந்துள்ளேன்.

1.வசந்தமுல்லை போலே வந்து-டி.எம்.எஸ்-சாரங்கதாரா
2.ஆடல் காணீரோ திருவிளையாடல்-எம்.எல்.வசந்தகுமாரி-மதுரை வீரன்
3.மலரே குறிஞ்சி மலரே-கே.ஜே.ஜேசுதாஸ்-டாக்டர் சிவா

வசந்தமுல்லை போலே வந்து - டி.எம்.எஸ், டி.எம்.எஸ்.தான் என்பதை இன்றளவும் நிரூபிக்கிற பாடல். (இதை ரீமிக்ஸ் செய்த போக்கிரிகள் -வெளங்க மாட்டார்கள்!)

"இந்திரவில் நீயே சந்திரன் ஒளி நீயே!" என்ற அந்த ஒரு வரியை, அந்த உச்சஸ்தாயியில் பாடக்கூடியவர்கள் எவரேனும் இருக்கிறார்களா, தெரியவில்லை!

அது போலவே, ஆடல் காணீரோ பாடலைக் குறித்து எண்ணும்போதெல்லாம் நாட்டியப்பேரொளி பத்மினியின் நடனம் கண்முன் வந்து போகிறது.

மலரே குறிஞ்சி மலரே- சிவாஜிக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களிலேயே எனக்குப் பிடித்த ஒரே பாடல் இது தான். காரணம், இயக்குனர் ஏ.சி.திரிலோக்சந்தர் இந்தப் பாடலுக்காக சிவாஜியை வாயசைக்க வைத்திருக்கவில்லை. இல்லாவிட்டால், இதுவும் "தெருக்கோவிலே ஓடி வா," மாதிரி ஆகியிருக்கும்.

இளையராஜா சாருகேசியில் பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். பொதுவாக, ஸ்ருங்காரம் என்ற ரசத்திலேயே இந்த ராகத்தை முன்பு பிரயோகித்திருக்க, இசைஞானி இதைப் பல்வேறு காட்சியமைப்புகளுக்கு உபயோகப்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக, சோகத்தில் கூட!

இதோ சில சாருகேசி பாடல்கள்:

ஆடல் கலையே தேவன் தந்தது - கே.ஜே.ஜேசுதாஸ்-ஸ்ரீ ராகவேந்திரா

அம்மா நீ சுமந்த பிள்ளை-டி.எம்.சௌந்திரராஜன்-அன்னை ஓர் ஆலயம்

சின்னஞ்சிறு கிளியே-எஸ்.பி.பி-ஜானகி-முந்தானை முடிச்சு

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே-எஸ்.பி.பி-தம்பிக்கு எந்த ஊரு

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்-ஜெயச்சந்திரன்-பி.சுசீலா-நானே ராஜா நானே மந்திரி

சக்கரக்கட்டி சக்கரக்கட்டி-எஸ்.பி.பி-ஜானகி-உள்ளே வெளியே

சிறிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறதே-எஸ்.பி.பி-ஜானகி-அந்த ஒரு நிமிடம்

பெத்த மனசு-இளையராஜா-என்னப் பெத்த ராசா

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்- மாஸ்ட்ரோவின் மாஸ்டர்-பீஸ்!

அடுத்து, தர்பாரி கானடாவும், தர்மாவதியும்...!

தமிழன் வேணு

unread,
Nov 30, 2009, 12:12:20 PM11/30/09
to தமிழ்த்தென்றல், பண்புடன்
தர்பாரி கானடா ராகம் என்பது கர்னாடக சங்கீதத்தின் சுத்த கானடா என்ற ராகத்தின் இந்துஸ்தானி வடிவம் என்று கருதப்படுகிறது. எனவே, இயல்பாகவே இந்த ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ள பல இந்தித் திரைப்படப்பாடல்களும் உள்ளன. அவற்றில் அதே மெட்டில் தமிழிலும் "கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே!" என்ற "அக்பர்" படத்தில் பி.சுசீலா பாடிய பாடலின் மூலப்பாடலான "மொஹப்பத் கி ஜூட்டி கஹானி பே ரோயே! படீ சோட் காயீ ஜவானி பே ரோயே" என்ற மொகல்-ஏ-ஆஜம் படப் பாடலின் இழையைத் தந்திருக்கிறேன். லதா மங்கேஷ்கரின் குரலினிமையைக் கேட்க விரும்புகிறவர்கள் கேட்டு மகிழலாம். (மதுபாலாவைப் பார்க்க விரும்புகிறவர்களும் பார்க்கலாம்.)


தர்பாரி கானடாவில் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்த ஒரு பிரபலமான பாடல், "மூன்று தெய்வங்கள்," படத்தில் பீ.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் அமைந்த "வசந்தத்தில் ஓர் நாள் மணவறையோரம் வைதேகி காத்திருந்தாளோ," என்ற பாடல் ஆகும்.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பில் வெளிவந்த தேவரின் "தெய்வம்" படத்தின் முதல் பாடலான "மருதமலை மாமணியே முருகையா," என்ற பாடலில் மதுரை சோமு பக்தியில் கனிந்து உருகியிருப்பதைக் கேட்டவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதுவும் தர்பாரி கானடா தான்.

இசைஞானி இளையராஜா தர்பாரி கானடாவில் இசையமைத்த பாடல்கள் சில:

(1) இசைமேடையில் இன்பவேளையில் சுகராகம் பொழியும்-இளமைக்காலங்கள்
(2) ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?-அரங்கேற்றவேளை
(3) கல்யாணத்தேனிலா காய்ச்சாத பால்நிலா-மவுனம் சம்மதம்
(4)மன்னவா மன்னவா-வால்டர் வெற்றிவேல்

அடுத்து, தர்மவதி

தர்மவதி ராகத்தை முத்துசாமி தீட்சிதர் தாமவதி என்று அழைத்தாராம். ஹிந்துஸ்தானி இசையில் உள்ள மதுவந்தி  ராகம் கர்னாடக இசையின் தர்மவதி ராகத்தை மிகவும் ஒத்த ராகமாகக் கருதப்படுகிறது.

தர்மவதி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துசாமி தீட்சிதரின் "பரந்தாமவதி ஜெயதி," என்ற கிருதியை நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் கேளுங்களேன்.

தர்மவதியில் அமைந்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பாடல் இருக்கிறது. அது, முதல் முதலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பீ.சுசீலாவுடன் இணைந்து பாடிய "அடிமைப்பெண்," படத்தில் இடம்பெற்ற "ஆயிரம் நிலவே வா."

முன்பு ஒரு முறை கூறியது போல, சில சமயங்களில் சில படங்கள் வியாபாரரீதியாகத் தோல்வியுறும்போது, சில நல்ல பாடல்கள் கவனிக்கப்படாமலே போய்விடுவதற்கு இன்னோர் உதாரணம்:

புஷ்பா தங்கதுரையின் நாவல் அதே பெயரில் "நந்தா  என் நிலா." என்று தயாரிக்கப்பட்டபோது, அதில் வி.தட்சிணாமூர்த்தியின் இசையில்  இடம்பெற்ற "நந்தா நீ என் நிலா..நிலா..நாயகன் வடிவில் காண்பது சுகமே..," என்ற பாடலும் தர்மவதியில் அமைந்தபாடல் தான்.

ஊர்வசி சாரதாவின் முதல் தமிழ்ப்படமான "குங்குமம்," படத்தில் இடம்பெற்ற, டி.எம்.எஸ்-எஸ்.ஜானகி இருவரும் பாடிய "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா,"வும் தர்மவதியே!

இது தவிர,

(1) இரவும் நிலவும் வளரட்டுமே-கர்ணன்
(2) ஹலோ மை டியர் ராங் நம்பர்-மன்மத லீலை
(3) அம்மானை அழகு மிகும் பெண்மானை- அவன் ஒரு சரித்திரம்

போன்ற பாடல்களும் மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் தர்மவதி ராகத்தில் அமைந்த சில பாடல்களாகும்.

இசைஞானி இளையராஜா தர்மவதியில் இசையமைத்த பல பாடல்கள் மிகப்பிரபலமானவை. அவற்றில் சில:

(1)என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்-ரோசாப்பூ ரவிக்கைக்காரி
(2)ராஜராஜசோழன் நான்-இரட்டைவால் குருவி
(3)பூப்பூக்கும் வாசம் தைமாசம்-வருஷம் 16
(4)மீண்டும் மீண்டும் வா-விக்ரம்
(5)வாழ்வே மாயமா-காயத்ரீ
(6)வானவில்லே வானவில்லே-ரமணா

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் தர்மவதி
ராகத்தை விட்டு வைப்பாரா?

"ஒட்டகத்தைக் கட்டிகோ கெட்டியாக ஒட்டிக்கோ," ஜென்டில்மேன்

"செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே!" வண்டிச்சோலை சின்னராசு.
அடுத்து கௌரிமனோஹரி ராகம்!

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Dec 1, 2009, 2:17:32 AM12/1/09
to பண்புடன்
இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.

தமிழன் வேணு


சென்ஷி

unread,
Dec 1, 2009, 2:20:32 AM12/1/09
to panb...@googlegroups.com
நன்றி வேணு அய்யா.

2009/11/30 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.

தமிழன் வேணு




Ahamed Zubair A

unread,
Dec 1, 2009, 2:26:04 AM12/1/09
to panb...@googlegroups.com


2009/12/1 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.
 
என்னாதிது??
 
யாரைக் கேட்டு நிறுத்தினீங்க?? நாங்கெல்லாம் என்ன செய்யுறது??
 
க, ச, த முடிஞ்சா எல்லாம் முடிஞ்சு போச்சா??
 
இன்னும் வேணும்...

ஆசாத்

unread,
Dec 1, 2009, 2:29:49 AM12/1/09
to பண்புடன்
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.

வேணுவின் இசைப்பயணம் சிறிய இடைவெளிக்குப் பின் தொடருமா? இணையத்தில்
'சிமுலேஷன்' இப்படியான கட்டுரைகள் எழுதினார், பிறகு ஒரு நூலும்
வெளியிட்டார். சிமுலேஷனைத் தொடர்ந்து வேணுவும் நூலாக்கங்களில்
ஈடுபடுவாரா? சமயம் கிடைக்குமா? கொஞ்சம் சினிமா, கொஞ்சம் நுணுக்கம்,
கொஞ்சம் பொதுஜனப் பார்வை என நோக்கம் வைத்து எழுதினால் அறிமுகநிலை
வேண்டுவோர்க்கு எளிதாகப் புரியும்படி நூலைப் படைக்கலாம்.

தமிழன் வேணு

unread,
Dec 1, 2009, 3:24:09 AM12/1/09
to panb...@googlegroups.com
 
என்னாதிது??
 
யாரைக் கேட்டு நிறுத்தினீங்க?? நாங்கெல்லாம் என்ன செய்யுறது??
 
க, ச, த முடிஞ்சா எல்லாம் முடிஞ்சு போச்சா??
 
இன்னும் வேணும்...


இப்போதைக்கு இல்லை சுபைர். முடியலே....!

தமிழன் வேணு

தமிழன் வேணு

unread,
Dec 1, 2009, 3:26:34 AM12/1/09
to panb...@googlegroups.com
> இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.

வேணுவின் இசைப்பயணம் சிறிய இடைவெளிக்குப் பின் தொடருமா?

என்னுடைய இசைப்பயணம் இனிமே மெட்டுக்கு பாட்டு எழுதுவதோடு முடிந்து விடலாம் ஆசாத். மிகவும் உழைத்து எழுதுகிற பதிவுகள் இனிமேல் நீங்கள் விரும்பிய "கனாக்காலம்," மீண்டு வந்தால் வரலாம். :-))

தமிழன் வேணு
 
இணையத்தில்

Ahamed Zubair A

unread,
Dec 1, 2009, 3:30:30 AM12/1/09
to panb...@googlegroups.com
வேணு ஐயா...
 
நம்ம படம் கூட பாதியில நிக்குது...
 
புலி உறுமுது பாட்டு மெட்டுல அண்ணாச்சிக்கு க்ளைமேக்ஸ் பாட்டு வைக்கணும்..
 
எழுதித்தாங்களேன்... ப்ளீஸ்...!

2009/12/1 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
என்னுடைய இசைப்பயணம் இனிமே மெட்டுக்கு பாட்டு எழுதுவதோடு முடிந்து விடலாம் ஆசாத்.
 

தமிழன் வேணு

unread,
Dec 1, 2009, 3:51:00 AM12/1/09
to panb...@googlegroups.com


2009/12/1 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

வேணு ஐயா...
 
நம்ம படம் கூட பாதியில நிக்குது...
 
புலி உறுமுது பாட்டு மெட்டுல அண்ணாச்சிக்கு க்ளைமேக்ஸ் பாட்டு வைக்கணும்..
 
எழுதித்தாங்களேன்... ப்ளீஸ்...!

கண்டிப்பாக....இன்று வீடு திரும்பியதும் எழுதி அனுப்புகிறேன். புலி உருமுதா??? எந்தப்படம்...? எந்தப் பாடல்...? தெரியலியே...

தமிழன் வேணு 

ஆசாத்

unread,
Dec 1, 2009, 3:53:44 AM12/1/09
to பண்புடன்
> மிகவும் உழைத்து எழுதுகிற பதிவுகள் இனிமேல் நீங்கள் விரும்பிய
> "கனாக்காலம்," மீண்டு வந்தால் வரலாம். :-))

அதேதான் ஸ்வாமி இங்கயும். இப்பல்லாம் வெவ்வேற நெனப்புங்க. மொதல்ல
காசுக்கு உழைச்சோம், இப்ப ரெக்கக்னிஷன் கேக்குது. இத்தவுட்டு அங்க
போலாமா, அத்தவுட்டு இங்க போலாமா, போகணும்னா என்னா செய்யணும், எல்லாம்
மெட்டீரியலிஸ்ட்டிக்கா ஆகிருச்சு, அப்புறம் ரீடிங் இண்டரெஸ்ட்டும்
இலக்கியம் கதை இதுலேர்ந்து சீரியஸ் சமூக, அரசியல் சமாசாரங்களுக்குப்
போயிருச்சு. மொத்தத்துல வயசாகிருச்சு.

It is loading more messages.
0 new messages