பாடல்கள் பலவிதம் - III

7,357 views
Skip to first unread message

Umanath Selvan

unread,
Oct 22, 2011, 7:01:42 AM10/22/11
to பண்புடன்
வணக்கம்,

பாடல்கள் பலவிதம் இழை 2000த்தை கடந்தது. பாடல்கள் பலவிதம் - II ம் 1000 கடந்துவிட்டதால், இசை பிரியர்கள் இனி இங்கே தொடரவும்.

விழியன்
http://vizhiyan.wordpress.com

சென்ஷி .

unread,
Oct 22, 2011, 7:03:06 AM10/22/11
to panb...@googlegroups.com
:-)

2011/10/22 Umanath Selvan <uman...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
- senshe

Jayaprakash N

unread,
Oct 22, 2011, 7:09:42 AM10/22/11
to panb...@googlegroups.com
இல்லையே.. இன்னும் நாலு பாக்கி இருக்கு போலிருக்கே..
 :-)))

With Lots OF Love,
JP



2011/10/22 Umanath Selvan <uman...@gmail.com>

--

சென்ஷி .

unread,
Oct 22, 2011, 7:28:26 AM10/22/11
to panb...@googlegroups.com
சின்ன வயசுல, சோகமா முடியற படம் எனக்கு பிடிக்காது.. அதனாலேயே நிச்சயம் ஹீரோ ஜெயிப்பார்ன்னு நம்பற படங்களுக்கா போறது வழக்கம். (அதுக்குப் பிறகு சோகம் பழகி, எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பிச்சது தனிக்கதை). சில நேரங்கள்ல எதிர்பார்க்காம ஆக்சன் ஹீரோவோட படம் சோகமா முடியும். உதாரணம் விஜயகாந்தோட தழுவாத கைகள்.

கார்த்திக்கைப் பொறுத்தவரை ரொமாண்டிக் ஹீரோ, அப்பப்ப ஆக்சன் அவதாரம்னு கலக்கிட்டு இருந்தாரு. கார்த்திக்கோட நடுத்தர (80-85) படங்கள் நல்ல மசாலாக் கலவையா இருக்கும். ஊரைக் காப்பாத்த கார்த்திக் வந்தார்ன்னா நிச்சயம் வில்லன் ராதாரவியா இருக்கும். அப்படி ஒரு நட்பு அவங்க மத்தியில :))

கார்த்திக்,  ரேவதி ஜோடியில தூர்தர்சன்ல இதயத்தாமரை படத்தோட பாடல்களையும், சில காட்சிகளையும்  பார்த்ததும், அதைப் பார்த்தே ஆகணுங்கற ஆவல் அதிகமாகிடுச்சு. ஆனால் எதிர்பாராத விதமா இந்தப் படத்தோட முடிவும் சோகமானதே.. (கிட்டத்தட்ட இதே போன்ற கதையமைப்பு கொண்ட இன்னொரு படம் அர்ஜூன் நடித்த படிச்ச புள்ள.. ரெண்டு படத்துலயுமே கண்ணு தெரியாதவரா நிழல்கள் ரவி நடிச்சு ஹீரோ காதலிக்கற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்குவாரு!)

இதயத்தாமரை படத்துல வர்ற இந்தப் பாட்டு என்னோட ஆல்டைம் ஃபேவரைட் பாட்டுக்கள்ல ஒண்ணு..

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்.. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. பாட்டுக்கு முன்னே, கார்த்திக் ரேவதிக்கு மத்தியில நடக்கற அந்த ஓட்டப்பந்தய காட்சியமைப்பு அருமையான ஒளிப்பதிவு.

Jayaprakash N

unread,
Oct 22, 2011, 8:20:15 AM10/22/11
to panb...@googlegroups.com
பி.சி.ஸ்ரீராம். 
அது கார்த்திக்கு அதிர்ஷ்டமா என தெரியவில்லை.. இவரின் நிறைய படங்கள் பி.சி.ஸ்ரீராமின் ஒளிபதிவில் வந்தது.
அக்னி நட்சத்திரம், கோபுரவாசலிலே, இதய தாமரை, மௌன ராகம், அமரன் என. 
அமரன் பட பாடல்கள் பட்டையை கிளப்பியது. ஆதித்யன் இசை. 
நாங்கள் ஒருமுறை பள்ளி சுற்றுலாவுக்கு போயிருந்தோம்-மூன்று நாட்கள். அந்த டூர் முழுக்க, பேருந்தில் , திரும்ப திரும்ப "சண்ட பஜாறு மாமா கொஞ்சம் உசாரு", " வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துனேன் மூக்கில வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்", சூரியனில் வரும் "லாலாக்கு டோல் டப்பி மா கண்ணே கனகம்மா உன் இடுப்ப சுத்தி  திருப்பி பாரம்மா" பாடல்களை கதற கதற திரும்ப போட்டு செம குத்து டான்ஸ் போட்டோம்..

ஹ்ம்ம்..மலரும் நினைவுகள்.


With Lots OF Love,
JP



2011/10/22 சென்ஷி . <me.s...@gmail.com>

Omprakash

unread,
Oct 22, 2011, 8:52:15 AM10/22/11
to panb...@googlegroups.com
//சூரியனில் வரும் "லாலாக்கு டோல் டப்பி மா கண்ணே கனகம்மா உன் இடுப்ப சுத்தி  திருப்பி பாரம்மா" பாடல்களை கதற கதற திரும்ப போட்டு செம குத்து டான்ஸ் போட்டோம்..//
 
இது தேவா... இல்ல?

lucky shajahan

unread,
Oct 22, 2011, 9:04:05 AM10/22/11
to panb...@googlegroups.com
> "சண்ட பஜாறு மாமா கொஞ்சம் உசாரு",
 
இந்த பாடல் பாடியது காலம் சென்ற கட்டழகு பெட்டகம் ஸ்ரீவித்யா..
அனேகமாய் திரையில் அவர் பாடிய ஒரே பாடல் :-(((
 
>வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துனேன் மூக்கில வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்"
 
இந்த பாட்டு நடிகர் கார்த்திக் சொந்தக் குரல். அந்த சோக்குல என்பதை ஷோக்குல என குஷாலாய் பாடுவார். இந்தப் படம் கார்த்திக்கின் சொந்தப்
படம்.. வசந்தமே அருகில் வா என்றொரு சூப்பர் மெலடி இருக்கிறது இந்த
படத்தில் ம்.. அந்த பாட்டெல்லாம் வச்சி ஷோ காட்னது ஒரு காலம்..
ஷாஜி உனக்கு வயசாகிட்டே போகுதப்பா..

2011/10/22 Jayaprakash N <naa...@gmail.com>
"சண்ட பஜாறு மாமா கொஞ்சம் உசாரு", " வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துனேன் மூக்கில வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்", சூரியனில் வரும் "லாலாக்கு டோல் டப்பி மா கண்ணே கனகம்மா உன் இடுப்ப சுத்தி  திருப்பி பாரம்மா" பாடல்களை கதற கதற திரும்ப போட்டு செம குத்து டான்ஸ் போட்டோம்..

ஹ்ம்ம்..மலரும் நினைவுகள்.


With Lots OF Love,
JP



2011/10/22 சென்ஷி . <me.s...@gmail.com>

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்.. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. பாட்டுக்கு முன்னே, கார்த்திக் ரேவதிக்கு மத்தியில நடக்கற அந்த ஓட்டப்பந்தய காட்சியமைப்பு அருமையான ஒளிப்பதிவு.


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

மரவண்டு

unread,
Oct 22, 2011, 1:26:05 PM10/22/11
to பண்புடன்
test

வில்லன்

unread,
Oct 22, 2011, 1:39:03 PM10/22/11
to panb...@googlegroups.com
http://inbaminge.com/t/o/Osthi/Kalaa%20Salaa%20Kalasalaa%20Vadakke%20Kettu%20Paaru%20Enna%20Paththi.eng.html

எல் ஆர் ஈஸ்வரி, டி ராஜேந்தர் பாடிய பாட்டு ஒஸ்தியில்

கல்லா சல்லா கலாசா கல்லா சல்ல்ல கலா சலா

வடக்கே கேட்டுப்பாரு என்னைப்பத்தி சொல்லுவான்
ஜர்தா பீடா போல என் பேரைத்தான் மெல்லுவான்


Ganesh kumar

unread,
Oct 22, 2011, 1:52:45 PM10/22/11
to பண்புடன்
ஒரு காலத்தில்
தன் காதலிக்காகத்
தன் தலையைக் கொடுத்தான்
ஒரு கவிஞன்
என்று படித்த பொழுது
இது என்ன மூடத்தனம்
என்று எண்ணிப் பரிகசித்தேன்...

இப்போதோ
எனக்கு ஒரு தலை தானே
இருக்கிறது
என்று எண்ணிப் பரிதவிக்கிறேன்.

0

காதலி கிட்டியவனுக்கு அவளைக் கொஞ்சுவதற்கே நேரம் பத்தாது . காதலி கிட்டாத
வெட்டிகள் தான் கவிதை கழுதைகுட்டி என்று எதையாவது எழுதி நம்மை
வறுத்தெடுப்பார்கள்.

25 வயது வரை காதலைப் பற்றி பெரிய அபிப்ராயம் ஒன்றும் என்னிடமில்லை.
எனினும் காதல் கவிதைகள் என்றால் விரும்பிப் படிப்பேன்.
பெங்களூர் கூதலால் காதல் மேல் கொஞ்சம் பிடிப்பு வந்தது .

வேப்பங்காயைப் போல பெண்ணை
எண்ணியிருந்த என்னை
ஆப்பிள் என்று கருதும் படி
மாற்றிவிட்டாய் கண்ணே

என்று சீர்காழியைப் போல் நானும் எவளையாவது பார்த்துப் பாட வேண்டும் என
ஆசைப்பட்டேன் , ஒருத்தியும் சிக்கவில்லை

ஒரு கட்டத்தில் காதல் திருமணம் தான் செய்து கொள்ளவேண்டும் என
வைராக்கியத்துடன் இருந்தேன். ஊகூம் ..முடி கொட்டியது தான் மிச்சம் !

0

சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி
என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம்
பொங்கும் பாடல்களை மட்டுமே மிகவும் விரும்பிக் கேட்பேன்.

அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு - தைபிறந்தால் வழி பிறக்கும்

0

மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம்,
மணக்க வரும் மாலைப் பொழுதோடு
மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும்
மலர்ந்து வரும் ஆசை விழியோடு
மன்மதன் வந்தான் தேரோடு....இங்கே
காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட்
- ஒளிவிளக்கு

0

வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிக்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி - பழனி

0

அன்பே என் ஆரமுதே வாராய்
தென்றலலை மீதினிலே திங்கள் பிறை தோணியினிலே
தேன்மொழி உனை அழைத்தே செல்வேனே - கோமதியின் காதலன்

0

கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே

0

பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ
இங்கு குயில போல பாட்டு வந்தது பாடியது யாரோ
மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது அடியது யாரோ - வாழ்க்கைப் படகு

0

காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே
நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே
அடே கண்ணு சின்ன பொண்ணு
என்னை கொஞ்சாதே கோழிமுட்டை கண்ணாலே - இரு வல்லவர்கள்

0

வாம்மா வாம்மா சின்னம்மா வயசு வந்த பொன்னம்மா
இந்த நேரம் காட்டுக்குள்ளே எங்கே வந்த செல்லம்மா - தாயில்லா பிள்ளை

0

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது - கொடுத்து வைத்தவள்

0

எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்நாளே
இமையும் விழியும் போலே இணைந்தோம் அன்பினாலே
- சக்கரவர்த்தித் திருமகள்

0

கரும்பாக இனிக்கின்ற பருவம்
இதை கதையாக சொல்லுது
உன் காதல் உருவம்
அழகான மொழி பேசும் விழி இரண்டும் அமுதம்
அதிலே நீ தருகின்றாய் பருகாத அமுதம் -
கொங்கு நாட்டு தங்கம்

0

ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்கார சிலையே
நீ திரும்பி பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே - சபாஷ் மீனா

0

காதலென்னும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே - சக்கரவர்த்தித் திருமகள்

0

தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும் - சாரதா

0

சிங்கார தேருக்கு சேலை கட்டி
சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி
தெரு தெருவா அத நடக்கவிட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் - இது சத்தியம்

0

சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா
மச்சான் தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா
ஆறு புரம் தங்க மணி
அல்லி வேஷம் போடுறாளாம்
நாடகம் பார்க்கப் போறேன் வாரியா
பொண்ணே நாளைக்கி திரும்பிடலாம் ஜாலியா - பிள்ளைக்கனி அமுது

0

பொங்கும் அழகு பூத்து குலுங்கும்
தங்கதாமரையே
அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும்
இன்பக் காவிரியே - தங்கம் மனசு தங்கம்

0

உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது
உன் உருவம் ஒளிவிளக்காய் காணுது -
கலைகள் எல்லாம் உன் வடிவினால்
மெய்க் காதலினால் எனக்கு சொந்தமானது-
நான் கண்ட சொர்க்கம்

0

வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பூ - எங்கள் குல தேவி

0

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா - ராஜாதேசிங்கு

0

யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன
சொல்வது - சபாஷ் மாப்பிள்ளை

0

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் - யானைப்பாகன்

0

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் உனைதேடுதே - ராஜராஜன்

0

இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கியிசை பாடுதே - ராஜராஜன்

0

சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள்
தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம்
கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி
வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன்,
இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது
நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை
அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை
நடிகராகச் சேர்த்துவிட்டார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத
சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர்
ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று
அப்போதே கணித்துச்சொன்னார்கள்.

0

பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ்
இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத
வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது..

0

கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.
துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது
வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம்
திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன்.

0

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும்
பாடி வந்தார்கள்.


கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு
நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு
முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார்.

பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில்
மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88)

sirkali.gif

மரவண்டு

unread,
Oct 23, 2011, 7:34:49 AM10/23/11
to பண்புடன்
சிவாஜி நடித்த தெய்வப் பிறவி என்ற படப் பெயரிலேயே இன்னொரு படம்
வெளிவந்தது (1985) .மோகன், ராதிகா, ஊர்வசி நடித்திருப்பார்கள்.

இந்தப் படத்தில் வாலி எழுதிய கிளர்ச்சிப் பாடலொன்று சங்கர் கணேஷ் இசையில்
பாலா & சுசிலா குரல்களில் சுகமாக ஒலிக்கும்.

0

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப்போனதோ

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை

கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மோத
ஜீவனோடு ஜீவன் கலந்தாட
சின்னஞ்சிறு மாது கன்னித்தன்மை மீது
காதலென்னும் வண்ணம் நீ கூட்ட

வஞ்சிப் பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
ஆ .. துடித்தேன் துவண்டேன் மயக்கமும்...ஏனோ

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உன்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் ஆ.. உரச உரசத்தான் .. ஏ
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப்போனதோ

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உன்னையன்றி யாருமில்லை

சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அறியேனே
முத்தம் இட்ட வேளை மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே

கட்டித் தங்கம் என்று
தோகை கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து
நீயும் முத்தம் இட்டதென்ன
தரலாம் பெறலாம் தடுப்பவர்...யாரோ

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப்போனதோ

பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி... ஆ ஆ

http://www.raaga.com/play/?id=317437

மரவண்டு

unread,
Oct 23, 2011, 3:29:46 PM10/23/11
to பண்புடன்
சிவாஜிராஜா என்றொரு இசையமைப்பாளர் தனது 21 வது வயதில் காற்றுக்கென்ன
வேலி என்ற படத்திற்கு இசையமைத்தார். மோகன் & ராதா நடித்த இந்தப் படத்தில்
ஜாலி ஆப்ரகாம் & சுசிலா பாடிய ரேகா ரேகா பாடலை வானொலியில் அடிக்கடி ஒலி
பரப்புவார்கள்.

முதல் சரணத்திற்குப் பின் ஒலிக்கும் சுசிலாவின் ஹம்மிங் அடடா ...
மோகனுக்கு நல்ல ராசி , பாட்ட வச்சே படம் ஓடிடும்..

ரேகா ரேகா - www.youtube.com/watch?v=WET0UyeP584

0

ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

பூப்போல உன் மேனியில் புது வாசம் மயக்கம் தரும்
பூப்போல உன் மேனியில் புது வாசம் மயக்கம் தரும்

பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பூப்போல உன் மேனியில் புது வாசம் மயக்கம் தரும்

பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே


ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

இளங்காலை பொழுதாக வா புதுராகச் சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனி ஆடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர் மேனி கொதிக்கின்றதே

ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

ராஜா ரேகா
ராஜா ரேகா
ராஜா ரேகா
ராஜா ரேகா


0

இதே படத்தில் இடம்பெற்ற

சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டுப் போகும்
நினைவுகள் பூவாகும் பாடலும் இனிமையான பாடலே ........

Ganesh kumar

unread,
Oct 23, 2011, 4:56:18 PM10/23/11
to பண்புடன்
On 10/24/11, மரவண்டு <mara...@gmail.com> wrote:
> சிவாஜிராஜா என்றொரு இசையமைப்பாளர் தனது 21 வது வயதில் >காற்றுக்கென்ன வேலி என்ற படத்திற்கு இசையமைத்தார். மோகன் & ராதா >நடித்த இந்தப் படத்தில் ஜாலி ஆப்ரகாம் & சுசிலா பாடிய ரேகா ரேகா >பாடலை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.


மன்னிக்கவும் கடந்த மடலில் இட்ட ரேகா ரேகா பாடலை எழுதியவர் பஞ்சு
அருணாச்சலம் என குறிப்பிட மறந்துவிட்டேன்.

பஞ்சு அருணாச்சலம் எழுதுன எல்லாப்பாட்டுமே ஹிட் !

இரண்டில் ஒன்று அப்படின்னு ஒருபடம் ,1988 ல வந்தது.. ராம்கி நதியா
நடிச்சது.. அதுல ஒரு பாட்டு பஞ்சு எழுதுனது தான்..

சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலையே (மனோ & சித்ரா)

www.youtube.com/watch?v=7aYwttOuk5E

0


இந்தப் பாடலில் ராம்கி தனது கற்பனையில் கருவைச் சுமந்து குழந்தையும்
பெற்றுக் கொள்கிறாரே , இதைக் காணும் பொழுது ஆணழகன் படம் ஞாபகத்திற்கு
வருகிறது

ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண்ணாக நடித்து அனைவரையும் ஏமாற்றுவார் ,
ஒருகாட்சியில் பிரசாந்த் மாசமாக இருக்கிறாரா என்று சோதிக்க நடிகை
வைஷ்ணவி(செளகார் ஜானகியின் பேத்தி) டாக்டராக வருவார் . தனி அறையில்
பிரசாந்தைச் சோதிக்கையில் உண்மையறிந்து அலறிவிட்டுப் போவார் . நல்ல
நடிகையை இந்தக் காட்சியில் நடிக்க வைத்து கேவலப்படுத்துகிறார்களே என
நொந்து கொண்டேன் . ஒரு வீடு இருவாசல் படத்தில் வைஷ்ணவியின் நடிப்பு
அருமையாக இருக்கும், அந்தப் படத்தின் ஒரு காட்சியில் புதிதாக மணமான
வைஷ்ணவியை மோகிக்க அவரது கணவன் மதிய உணவு வேளையில் அலுவலகத்திலிருந்து
வீட்டிற்கு வருவான் . எரிச்சலுறும் வைஷ்ணவி தன் கணவனை விலங்குகள் கூட
நேரம் காலம் பாத்து தான் வச்சுக்கும் என திட்டி அனுப்பிவிடுவார்.

0

சங்கீத பூ மழையே பாடலில் ஆசிரியராக வருகிறாரே அவர் பெயர் தான் டைப்பிஸ்ட்
கோபு, இவரைப் பற்றி ஏ.பி.ராஜநாயகம் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

சித்ராலயா கோபு என்றொருவர் இருக்கிறார். இவர் டைரகர் ஸ்ரீதரின் வகுப்புத்
தோழர் , ஸ்ரீதரின் படங்களுக்கு இவர்தான் காமெடி ட்ராக் எழுதுவார்.

CHITRALAYA_GOPU.jpg

Ganesh kumar

unread,
Oct 23, 2011, 5:37:46 PM10/23/11
to பண்புடன்
மழை வெளியே கொட்டுகிறது ............

பாட்டு வாத்தியார் என்றொரு படத்தில் மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவும்
யேசுதாசும் பாடிய நீ தானே நாள் தோறும் நான் பாடக் காரணம் பாடலை ரசித்துக்
கொண்டிருக்கிறேன்

www.youtube.com/watch?v=rv3GhId7I8Q

0

இதே போல் இசையை மையமாக வைத்து மரகத வீணை என்றொரு படம் வந்தது. சுரேஷும்
ரேவதியும் நடித்திருப்பார்கள். ஒரு பள்ளிக்கூடத்தைச் சுற்றியே நகரும்
திரைக்கதை.

மனோரமா , கவுண்டமணி , சுரேஷ் , ரேவதி இவர்கள் எல்லோரும் ஒரு பள்ளியில்
ஆசிரியர்கள் வேலை பார்ப்பார்கள்.

இந்தப் படத்தில் செந்தில் விக் வைக்காமல் நடித்திருப்பார். விக் வைத்து
நடித்திருக்கும் கவுண்டமணி செந்திலை அடிக்கடி அம்மிக் கல் மண்டையன் என்று
திட்டுவார்.

கவுண்டமணி மனோரமாவை உஷார் பண்ணுவதற்காக செந்திலைத் தூதுவனாக அனுப்புவார்.
கவுண்டமணி , மனோரமாவிற்குக் கொடுக்கச் செல்லும் அல்வா , ஜாங்கிரி போன்ற
பலகாரங்களை செந்திலே சாப்பிட்டு விடுவார். ஒருகட்டத்தில் உண்மை தெரிய
செந்திலை எட்டி உதைப்பார் கவுண்டமணி

0

பள்ளிச் சுற்றூலாவில் ரேவதி(ஜானகி) பாடும் ஒரு பூவனக் குயில் மாமரத்துல்
கூடு கட்டுனது

ஆரம்ப காட்சிகளில் முட்டிக் கொள்ளும் ரேவதிக்கும் சுரேஷுக்கும் இடையே
காதல் முளைத்ததும் ஒலிக்கும் மரகத வீணை இசைக்கும் நேரம்

ஊர்த் திருவிழாவில் ரேவதி(ஜானகி) பாடும் கண்ணா வா கவிதை சொல்வேன் வா

www.youtube.com/watch?v=1dTr8CysS4I

தண்ணீர் நடுவில் சிறுவயது ரேவதிக்கு சோமராஜுலு சொல்லிக்கொடுக்கும் சாதகப்
பாடல் என அனைத்துப் பாடலும் அருமையாக இருக்கும்.

சங்கராபரணம் படப் புகழுக்குப் பின் தமிழ்ப் படங்களில் இசை சம்பந்தமான
படங்கள் என்றால் சோமராஜுலுவை நடிக்க வைத்திருப்பார்கள்.

J V Somarajulu.png

ஆசாத்

unread,
Oct 24, 2011, 1:09:17 AM10/24/11
to panb...@googlegroups.com
கன்ஸ்,
 
சீர்காழியை நக்கீரராக நடித்து இந்தப் பாடலைப் பாடும்படி ஏ.பி.நாகராஜன் கேட்டிருக்கிறார். அதற்கு சீர்காழி, ’நக்கீரர் என்றால் நீங்கள்தான். நீங்கள் எடுத்து நடித்து மக்கள் மனதில் இருக்கும் ஒரு பாத்திரத்தை நான் சிறப்பாகச் செய்யமுடியாது’ என மறுத்திருக்கிறார்.
 
அதற்கு ஏ.பி.நாகராஜன், ‘அது பேசுற நக்கீரர், நான். இது பாடற நக்கீரர், அதனால நீங்க’ எனச் சொல்லி சம்மதிக்கவைத்திருக்கிறார்.
 
’வா ராஜா வா’ படத்துல சீர்காழி சி.ஐ.டி. ஆபீசர் மாறுவேஷத்துல வந்து பாடுறாப்ல கதையமைப்புல நடிச்சு பாடியும் இருப்பாரு.

lucky shajahan

unread,
Oct 24, 2011, 2:25:16 AM10/24/11
to panb...@googlegroups.com
>இரண்டில் ஒன்று அப்படின்னு ஒருபடம் ,1988 ல வந்தது.. ராம்கி நதியா
நடிச்சது.. அதுல ஒரு பாட்டு பஞ்சு எழுதுனது தான்..

இதில இன்னொரு பாட்டு இருக்கே கன்ஸ் அண்ணா, நாரிலே பூ முடித்து
மாலையாக்கினேன்.. இளையராஜா சும்மா சொகமா வருடியிருப்பார்..
2011/10/23 Ganesh kumar mara...@gmail.com


சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலையே (மனோ & சித்ரா)

www.youtube.com/watch?v=7aYwttOuk5E

0


இந்தப் பாடலில் ராம்கி தனது கற்பனையில் கருவைச் சுமந்து குழந்தையும்
பெற்றுக் கொள்கிறாரே , இதைக் காணும் பொழுது ஆணழகன் படம் ஞாபகத்திற்கு
வருகிறது

ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண்ணாக நடித்து அனைவரையும் ஏமாற்றுவார் ,
ஒருகாட்சியில் பிரசாந்த் மாசமாக இருக்கிறாரா என்று சோதிக்க நடிகை
வைஷ்ணவி(செளகார் ஜானகியின் பேத்தி) டாக்டராக வருவார் . தனி அறையில்
பிரசாந்தைச் சோதிக்கையில் உண்மையறிந்து அலறிவிட்டுப் போவார் . நல்ல
நடிகையை இந்தக்  காட்சியில் நடிக்க வைத்து கேவலப்படுத்துகிறார்களே என
நொந்து கொண்டேன் . ஒரு வீடு இருவாசல் படத்தில் வைஷ்ணவியின் நடிப்பு
அருமையாக இருக்கும், அந்தப் படத்தின் ஒரு காட்சியில் புதிதாக மணமான
வைஷ்ணவியை மோகிக்க அவரது கணவன் மதிய உணவு வேளையில் அலுவலகத்திலிருந்து
வீட்டிற்கு வருவான் . எரிச்சலுறும் வைஷ்ணவி தன் கணவனை விலங்குகள் கூட
நேரம் காலம் பாத்து தான் வச்சுக்கும் என திட்டி அனுப்பிவிடுவார்.

0

சங்கீத பூ மழையே பாடலில் ஆசிரியராக வருகிறாரே அவர் பெயர் தான் டைப்பிஸ்ட்
கோபு, இவரைப் பற்றி ஏ.பி.ராஜநாயகம் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

சித்ராலயா கோபு என்றொருவர் இருக்கிறார். இவர் டைரகர் ஸ்ரீதரின் வகுப்புத்
தோழர் , ஸ்ரீதரின் படங்களுக்கு இவர்தான் காமெடி ட்ராக் எழுதுவார்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

மரவண்டு

unread,
Oct 24, 2011, 2:58:12 AM10/24/11
to பண்புடன்

On Oct 24, 10:09 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> கன்ஸ்,
>
> சீர்காழியை நக்கீரராக நடித்து இந்தப் பாடலைப் பாடும்படி ஏ.பி.நாகராஜன்

தகவலுக்கு நன்றி அண்ணாத்த..

உங்கள் முகத்தில் சீர்காழியின் சாயல் கொஞ்சம் இருப்ப்பதைக்
கவனித்திருக்கிறேன் :)

மரவண்டு

unread,
Oct 24, 2011, 2:59:54 AM10/24/11
to பண்புடன்
>
> இதில இன்னொரு பாட்டு இருக்கே கன்ஸ் அண்ணா, நாரிலே பூ முடித்து
> மாலையாக்கினேன்.. இளையராஜா சும்மா சொகமா வருடியிருப்பார்..


ஹ்ம் யுடூப்புல கூட நம்ம மக்கள் ஏத்தி வச்சிருக்காங்க

lucky shajahan

unread,
Oct 24, 2011, 3:02:59 AM10/24/11
to panb...@googlegroups.com
> உங்கள் முகத்தில்  சீர்காழியின் சாயல் கொஞ்சம் இருப்ப்பதைக்
கவனித்திருக்கிறேன் :)
திருப்போரூர் கோவிந்தாசாத் :-)

2011/10/24 மரவண்டு <mara...@gmail.com>


On Oct 24, 10:09 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> கன்ஸ்,
>
> சீர்காழியை நக்கீரராக நடித்து இந்தப் பாடலைப் பாடும்படி ஏ.பி.நாகராஜன்

தகவலுக்கு நன்றி அண்ணாத்த..

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Jayaprakash N

unread,
Oct 25, 2011, 1:24:40 AM10/25/11
to panb...@googlegroups.com
சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'சதுரங்கம்' பட பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?
இந்த படத்தின் பாடல்கள் 2004  லேயே வெளிவந்துவிட்டது. என்ன காரணத்தாலோ இத்தனை வருடம் கழித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில், 
"விழியும் விழியும் நெருங்கும் பொழுது 
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
 வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இணையும் பொழுது
 இமையில் நிலவு நுழையும் பொழுது 
 வசதியாக வசதியாக வளைந்து கொடு" என்ற அருமையான மெலடி பாடல் உள்ளது. 

வைரமுத்துவின் வரிகளும், வித்யாசாகரின் இசையும் அற்புதமாக இருக்கும். இந்த பாடலை 2004 -லிலேயே  நான் பதிவு செய்து வைத்திருந்தேன்.

Jayaprakash N

unread,
Oct 25, 2011, 1:31:16 AM10/25/11
to panb...@googlegroups.com
மன்னிக்கவும். ..இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி.. இந்த வரிகளை மெனக்கெட்டு ஒருமுறை வாசித்து பாருங்கள்.. அற்புதமான கவியனுபவம்..இலை மறை காயாக..

விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு இதழும் இதழும் இழையும் பொழுது இமையில் நிலவு நுழையும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு காதலினால் காதல் தொட்டு விடு ஆதலினால் நாணம் விட்டு விடு
1 முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள் மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள் உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும் ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும் விரலும் விரலும் இறுகும் பொழுது முதுகின் சுவரில் வழியும் விழுது உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு
2 புயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும் கண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும் உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை இன்றி கிள்ளும் ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும் இமையின் முடியால் உடலை உழவா இளமை வயலில் புயலை நடவா இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு

With Lots OF Love,
JP



2011/10/25 Jayaprakash N <naa...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Oct 25, 2011, 2:21:52 AM10/25/11
to panb...@googlegroups.com
நல்லவேளை மாற்றினீர்கள்
இல்லையேல் கொலையே நடந்திருக்கும் :-))

மன்னிக்கவும். ..இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி.. இந்த வரிகளை மெனக்கெட்டு ஒருமுறை வாசித்து பாருங்கள்.. அற்புதமான கவியனுபவம்..இலை மறை காயாக..

இதே ப்டத்தில்

என்ன தந்திடுவேன்
நான் என்னைத் தந்திடுவேன்..  பாடலும் மிக அழகாக இருக்கும்

Jayaprakash N

unread,
Oct 25, 2011, 10:33:10 AM10/25/11
to panb...@googlegroups.com
நல்லவேளை... தப்பிச்சிட்டேன்..


With Lots OF Love,
JP



2011/10/24 Asif Meeran AJ <asifm...@gmail.com>
32B.gif
342.gif
360.gif

V Ramesh

unread,
Oct 26, 2011, 12:50:45 AM10/26/11
to panb...@googlegroups.com
7ம்  அறிவு படப்பாடல் கேட்டுட்டு  இருக்கேன்...  இந்த எஸ்பிபி பாடல் செமய இருக்கே.. என்னம்மோ பண்ணுதே.. யாருக்கும் ஏதும் பண்ணுச்சான்னு கேட்டுப்பாருங்க

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003133

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

படம் : ஏழாம் அறிவு
குரல் : SPB
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



V Ramesh

unread,
Oct 26, 2011, 4:59:17 AM10/26/11
to panb...@googlegroups.com
பாடல் வரிகள் சுமாரா இருக்கே.. மேலும் முதல்மரியாதை படத்தை எல்லாம் சிலோகிச்சு எழுதுறவர் ரெபர் பண்ணுற பாட்டேச்சுன்னு டவுட்டு இருந்தாலும் கேட்டு பார்த்தேன்.. என்னோட  அலைவரிசைக்கு ஒத்து வரலை இருந்தாலும் ஆறுதலா இதே படத்துல இன்னொரு பாட்டு..

என்ன தந்துவிட்டேன் நான் என்னை தந்துவிட்டேன்

பாடல் நல்லா இருக்குது. வரிகளும் நல்லாவே இருக்கு..



நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



2011/10/25 Jayaprakash N <naa...@gmail.com>
மன்னிக்கவும். ..இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி.. இந்த வரிகளை மெனக்கெட்டு ஒருமுறை வாசித்து பாருங்கள்.. அற்புதமான கவியனுபவம்..இலை மறை காயாக..

விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடுஉறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு

Asif Meeran AJ

unread,
Oct 26, 2011, 5:09:37 AM10/26/11
to panb...@googlegroups.com
உங்க ரேஞ்சுக்கு

ஆடுங்கடா என்னைச் சுத்தி
நான் அய்யனார் வெட்டுக்கத்தி தாங்க சரிப்பட்டு வரும்

V Ramesh

unread,
Oct 26, 2011, 5:09:37 AM10/26/11
to panb...@googlegroups.com
யாரு இந்த சத்யா ? எங்கேயும் எப்போதும் இப்போதான் முதல் தடவையா கேக்கிறேன்..
உன் பேரை தெரியாது
உனை கூப்பிட முடியாது

பாடல் கலக்கலா இருக்கே. இன்னும் 2 பாடல் தேறுதே.. கொஞ்சம் கேப் விட்டா கூட இந்த மாதிரி நிறைய பாடல்கள் மிஸ் ஆகிடும் போலிருக்கே. யாரும் கேக்கணும்ன்னு நினைச்சா இதுல கேளுங்க

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003110

V Ramesh

unread,
Oct 26, 2011, 6:06:10 AM10/26/11
to panb...@googlegroups.com
ஹல்லோ போக்கிரி பொங்கல் எல்லாம் சூப்பர் பொங்கல்.. போங்க போங்க.. ஏதோ சிவாஜி 8,9 வேடங்களில் நடித்த புத்தம் புது காப்பி ரிலிஸ் ஆகி இருக்கும்.. அதை பார்த்துட்டு சிலோகிச்சிட்டு கிடங்க.. ஒத்த ஆளா நடிச்சாலே 10 பேருக்கு சேர்த்து நடிப்பார். இது 8,9 வேடம்ன்னா ஹய்யோ நினைச்சு பாக்கவே நடுங்குது...

இதெல்லாம் யூத் ஏரியா உள்ளே வராதீங்க

 
நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



2011/10/26 Asif Meeran AJ <asifm...@gmail.com>

senshe senshe

unread,
Oct 26, 2011, 9:21:07 AM10/26/11
to panb...@googlegroups.com
எனக்குப் பிடிச்ச பாட்டுல ஒண்ணு.. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப் பாடல்..

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
கருணை உனது கோயில்
கலைகள் உனது காதல்


இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
மான்கள் உனது உறவாகும்
மானம் உனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம் -
குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம் -
அதில்மயக்கம் கூட வரலாம்
(பருவம்)


சின்னஞ்சிறிய கிளி பேசும்
கன்னங்கரிய குயில் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்குத் துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை உனக்குத் துணையாகும்
பழகும் விதம் புரியும் -
அன்பின்பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும் -
புதுவாழ்க்கை அங்கு மலரும்

மரவண்டு

unread,
Oct 28, 2011, 4:39:32 AM10/28/11
to பண்புடன்
தமிழ்த் திரைப்பட வசனம் இசைத்தட்டு வடிவில் வெளியாகத் தொடங்கியது 1945
இல் வெளிவந்த ஸ்ரீவள்ளி படத்தி்லிருந்து தான்....

இந்தப் படத்தில் நடித்த குமாரி ருக்மணி நடிகை லட்சுமியின் தாயார் ஆவார்.

ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் குமாரி ருக்மணியைப்
பார்த்துப் பேசும் காதல் வசனம் ..

0

"இனி பொறுக்கமுடியாது "

"என்றால்"

"காந்தர்வ விவாகம் தான்"

" நிஜமாகவா ? "

"கட்டாய காந்தர்வ விவாகம் தான்"

"நில் என்னைத் தொட்டால் , உன் உயிர் உன் உடலில் நிற்காது .."

"உன்னைத் தொடாவிட்டாலும் உன் உயிர் உன் உடலில் நிற்காது ,அப்படித்
தொடாமாலே போகும் உயிர் உன்னைத் தொட்டே போகட்டும்"


0

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் காதலர்கள் தொடாமல் கொடாமல் நடித்ததற்காக
அந்தப் படத்தின் இயக்குநர்கள் பாரதி வாசுவை மக்கள் வெகுவாகப்
பாராட்டினர்.

பூந்தளிர் ஆட பாடல்

www.youtube.com/watch?v=aAOU70veO5w

0

சந்தான பாரதியும் பி.வாசுவும் ஆரம்பகாலத்தில் இணைந்து பாரதி வாசு என்ற
பெயரில் சிலபடங்களை இயக்கினார்கள் என முன்பே எழுதியிருக்கிறேன்.

பாரதிவாசு இயக்கிய 3 படங்கள்

1) பன்னீர் புஷ்பங்கள் 2) மதுமலர் 3 ) நீதியின் நிழல்

மரவண்டு

unread,
Oct 28, 2011, 5:26:55 AM10/28/11
to பண்புடன்
>> உன்னைத் தொடாவிட்டாலும் உன் உயிர் உன் உடலில் நிற்காது

உன்னைத் தொடாவிட்டாலும் *எ*ன் உயிர் *எ*ன் உடலில் நிற்காது

மோர் சுப்ரா

unread,
Oct 31, 2011, 4:07:11 AM10/31/11
to panb...@googlegroups.com
கண்ணை திறந்த கருனை கார்மேகமே
என் 
கண்ணை திறந்த கருனை கார்மேகமே

மனமே உருக 
உன்னையே அனுதினம் தினம் வலம் வர 
கண்ணை திறந்த கருனை கார்மேகமே

கலைமகள் என் நாவில் துணை வந்ததும் 
அலையாய் ஒளிவீசி அருள் செய்ததும்

கலைமகள் என் நாவில் துணை வந்ததும் 
அலையாய் ஒளிவீசி அருள் செய்ததும்

ஐந்திறன் சிறக்க அருள் வளம் நிலைக்க 

ப ப க ரி க ச ரி 
ப க ரி ச நி த ப 
ம ம ம 
ப ப ப 
த ச நி த ப 
ம க ரி 

கண்ணை திறந்த கருனை கார்மேகமே
என் 
கண்ணை திறந்த கருனை கார்மேகமே

அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

ஆசாத்

unread,
Oct 31, 2011, 11:51:04 PM10/31/11
to panb...@googlegroups.com
நேற்றிரவு பொதிகையில் கவிஞர் முத்துலிங்கத்தின் செவ்வி மறுஒளிபரப்பானது. மிகவும் அழகாக முரசொலியைக் குறிப்பிடாமல், தி.மு.கவைக் குறிப்பிடாமல் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ’அலை ஓசை’யைக் குறிப்பிட்டார்.
 
1.
அவர் எழுதிய முதல் பாடல், பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இடம்பெற்ற, ‘தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்த பொன்னியம்மா’.
 
2.
அவர் எழுதி முதலில் அச்சானது குறள் வெண்பா. அதன் ஈற்றடி ‘பறக்கின்ற நாவல் பழம்’. குறள் வெண்பாப் போட்டியை இலக்கியம் என்னும் பத்திரிகை நடத்தியது. அதன் ஆசிரியர் உவமைக்கவிஞர் சுரதா.

Jayaprakash N

unread,
Nov 5, 2011, 5:01:12 AM11/5/11
to panb...@googlegroups.com
எங்கேயும் காதல் என்றொரு மொக்கை படம்..  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஓரளவு ஹிட்.

எனக்கு பிடித்தது :

"நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ, 
காதல் காதல் பிறந்ததோ,
 கொஞ்சும் காற்றில் மயங்கியே,
கொஞ்சம் மேலே பறந்ததோ,
 மாலை வேளை வேலை காட்டுதோ,
 என் ஓலை வானம் ஜுவாலை மூட்டுதோ" என்றொரு மெலடி சாங்.

இந்த வருடத்தின் சிறந்த பத்து பாடல்கள் என எடுத்து கொண்டால், இதுவும் ஒன்றாக இருக்கும் என்பது என் கருத்து. 

மோர் சுப்ரா

unread,
Nov 5, 2011, 2:34:55 PM11/5/11
to panb...@googlegroups.com
என்னோட பிளாட்டினம் ஃபேவரிட்ல ஒரு பாடல் இதோ....

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா பால் நிலா ராத்திரி பாவையொ மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாரளம் மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ தேன் இடை விரல் தீண்டினால் சந்திரன் அம்ஸமோ தொடங்க மெல்ல தொடங்க வழங்க அள்ளி வழங்க இந்த வார்த்தை தான் இன்ப கீதை தான் அம்மம்மா தாக்கிட தக்ஜும் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம் விரகம் போலெ உயிரை வாட்டும் நரகம் வேறெது சரச கலையை பழகி பார்த்தால் விரசம் கிடையாது தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம் ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாஸ்திரம் கவிதை கட்டில் கவிதை எழுது அந்தி பொழுது கொஞ்சம் பாடல் தான் கொஞ்சம் கூடல் தான் அம்மம்மா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

வில்லன்

unread,
Nov 5, 2011, 4:11:35 PM11/5/11
to panb...@googlegroups.com
அந்த கடவுள் அடடா 
ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி 
அது ஒவ்வொரு நொடியும்
 பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி 
இந்த மௌனத்தின் மயக்கம், 
ரொம்ப பிடிக்குது என்னக்கும் 
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே
 நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே 
கொண்டதே கொண்டதே வென்றதே


ஷக்திக்கு பிடித்த பாடல் என்பதைத்தவிர இந்த பாடல் எனக்கு பிடிக்க
எந்த முகாந்திரமும் இல்லாமல் போனது.

வில்லன்

unread,
Nov 5, 2011, 6:33:01 PM11/5/11
to panb...@googlegroups.com
என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
வாழ்க்கையொரு கனவுதானய்யா சாமி

ஒன்றை ஒன்று உந்தன் மனம் கேட்டது
அந்த ஒன்று வேறு இடம் போனது
கையில் வரும் எனப்பார்த்தது
இன்று கைநழுவி ஏன் போனது

என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
வாழ்க்கையொரு கனவுதானய்யா சாமி

ஓடை குளிர் ஓடை என மான்கள் நம்பி ஓடும்
வேளை அது கோடை எழும் கானல் என்று மாறும்
நெஞ்சோடு தோன்றுகின்ற நேசம் யாவும்
நில்லாமல் ஓடுகின்ற நீர் மேகம்
கண்னோடு காணுகின்ற கோலம் யாவும்
தண்ணீரில் போட்டு வைத்த கோடாகும்

வழிக்கு வந்தது துணையா
இல்லை வழுக்கி விட்டிடும் வினையா
இதை என்னவென்று சொல்வது சித்திர பதுமையே!

என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
வாழ்க்கையொரு கனவுதானய்யா சாமி

காலை அந்தி மாலை இந்த பாவை செய்யும் யாகம்
நாளை நல்ல வேளை வந்து சேர நிறைவேறும்
பொல்லாது பூமியிலே பெண்ணின் பாவம்
நாளான போதும் அது தீராது
வெல்லாது போனதில்லை பெண்ணின் நியாயம்
உண்டான நீதியிங்கு மாறாது

வரட்டும் என்று இங்கு இருப்பாள்
தர்மம் ஜெயிக்குமென்றிவள் பொறுப்பாள்
இந்த உத்தம பத்தினி தத்துவம் தவறுமோ

என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
வாழ்க்கையொரு கனவுதானய்யா சாமி


பாட்டுக்கான சரியான சுட்டி கிடைக்கலை, 
கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க
பெல் பாட்டம் முதலாளி

வில்லன்

unread,
Nov 5, 2011, 6:46:14 PM11/5/11
to panb...@googlegroups.com
கடலிலே தனிமையில் போனாலும்....
கண்மணியின் நினைவில் இளைப்பாருவேன்
அலைகடலில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முத்துக்குளிப்பேன்
அடியே அமுதே இதுவே போதும்

நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டி போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

பிரிந்தது உயிரல்ல உடல்தான்.....
விட்டு விலகாது உயிர் காதலே
தரையிலே கன்னி துடித்தாளே
கட்டு மரம் மீது காளை தவித்தானே
இதுதான் காதலில் இடை வேளை.

வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்
சுத்தி வரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்
தெய்வத்திற்கு திரை என்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்

ஆற்றிலே இக்கரையில் நின்று...
அக்கரைக்கு தூது விடக்கூடாலாம்
எண்ணத்தை சொல்ல நடு ஆழியில்
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே.....

விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்
கட்டு மரம் கடல் ஆடி கரை யேரும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்புக்குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்ய்யும் இன்று
நித்திலமே முத்து ரதமே

நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டி போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே



மோர் சுப்ரா

unread,
Nov 6, 2011, 5:44:49 AM11/6/11
to panb...@googlegroups.com
எங்க தலைவர் பாட்டு....
இதில் பல்லவி தாளம் பிடிக்கும் அதனால் பாட்டும்....
Song: kattaana kattazhagu - பாடல்: கட்டான கட்டழகு கண்ணா 
Movie: Kudumba thalaivan - திரைப்படம்: குடும்பத் தலைவன் 
Singers: P. Suseela, T.M. Soundararajan - பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன் 
Lyrics: இயற்றியவர்: கண்ணதாசன் 
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1962

கட்டான கட்டழகு கண்ணா உன்னக் 
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா 
கட்டான கட்டழகு கண்ணா உன்னக் 
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா 
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப் 
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா 
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப் 
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா 
பட்டாடை கட்டி வந்த மைனா

நடை போடு நடை போடு 
நடை போடு நடை போடு மனமென்ற தேரில் 
நடமாடும் மயில் போலவே 
நடை போடு நடை போடு மனமென்ற தேரில் 
நடமாடும் மயில் போலவே உன் 
இடையோடு இடையோடு கொடிபோல உள்ளம் 
விளையாட வந்த நிலவே

கட்டான கட்டழகு கண்ணா

விளையாடு நீ விளையாடு 
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில் 
அழகோடு வந்த துணையே 
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில் 
அழகோடு வந்த துணையே பொன் 
வளையோடு வளையோடு இசைபாடும் கையில் 
வளைந்தாட வந்த கலையே

பட்டாடை கட்டி வந்த மைனா

பாலென்ற பருவமே பழமென்ற உருவமே 
சேலென்ற கண்களே வா நீ வா 
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே 
சேலென்ற கண்களே வா சிறு 
நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே 
நோய் தந்த பெண்மையே வா காதல் 
நோய் தந்த பெண்மையே வா

மதயானை வடிவமே நடமாடும் வீரமே 
மலர் போன்ற உள்ளமே வா வாவா 
மதயானை வடிவமே நடமாடும் வீரமே 
மலர் போன்ற உள்ளமே வா நாம் 
அறியாத பூமியில் தெரியாத பாதையில் 
இரு பேரும் போகலாம் வா நாம் 
இரு பேரும் போகலாம் வா

ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் 
ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் 
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

Ahamed Zubair A

unread,
Nov 6, 2011, 5:32:46 PM11/6/11
to panb...@googlegroups.com
திடீர்னு ஒரு பாட்டு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு...

வெடி படத்துல “ரைட்டா?? ரைட்டு”ன்னு பாட்டு நடுல வரும்...

அந்த அம்மணி ரைட்டான்னு குழைஞ்சு கேக்கும் போது, ஓ மை காட்... செம ஃபீல்..........

படத்தில இந்த சிச்சுவேசனுக்கு என்னக் கொடுமை படுத்தி இருக்காய்ங்களோ....ஹ்ம்...


சங்கீதா ராஜேஸ்வரனாம்....

மோர் சுப்ரா

unread,
Nov 11, 2011, 8:25:24 AM11/11/11
to panb...@googlegroups.com

துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)

பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா… (துள்ளித்துள்ளி)

படம்: வெளிச்சம்
பாடியவர்: 
KJ ஜேசுதாஸ்
இசையமைத்தவர் : மனோஜ்க்யான்

http://www.youtube.com/watch?v=4P4TzFq2oq4&feature=related

 அன்போடு 

மோர்சுப்ரா

வில்லன்

unread,
Nov 11, 2011, 1:24:24 PM11/11/11
to panb...@googlegroups.com
Film: Thai pongal 
song : kann malargalin 
singers -IR SJ 
Music : IR 


கண் மலர்களில் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ் 
கண் மலர்களில் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ் 
இனி வரும் இரவுகள் 
இளமையின் கனவுகள்தான் 
காண்போமே சேர்ந்தே நாமே 

கண் மலர்களில் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ் 

நான் ஆளும் மனம் பூவோ 
நீ நாளும் தமிழ்ப் பாவோ 
பூவாடும் விழிதானோ 
நீ பாட மொழி ஏனோ 
என்ன இன்று...ஆஹா 
கண்ணில் என்னை வென்று...ஆஹா 
கண்ணன் எண்ணுவதோ 
எனக்கென ஒரு கனமோ 
விளக்கங்கள் தரும் மனமோ 
நமக்கென விழித்திடும் 
மலர்களோ...மனங்களோ 

கண் மலர்களில் அழைப்பிதழ் 
லல லல லல லல 
பொன் இதழ்களின் சிறப்பிதழ் 
லல லல லா 

தாம்பூல நிறம் தானே 
மாம்பூவின் இளமேனி 
ஆ...தாங்காது இனிமேலே 
தூங்காது மனம் நாளை 
கண்ணில் என்ன...லால 
மின்னல் கண்டபின்னும்...லால 
இன்னும் மின்னுவதோ 
உனக்கென்று ஒரு மனமோ 
நமக்கென்று திருமணமே 
இணைக்கின்ற இயற்க்கையின் 
உறக்கமோ...மயக்கமோ 

கண் மலர்களில் அழைப்பிதழ் 
லல லல லல லல 
பொன் இதழ்களின் சிறப்பிதழ் 
லல லல லல லல 
இனி வரும் இரவுகள் 
இளமையின் கனவுகள்தான் 
காண்போமே சேர்ந்தே நாமே
 

Jayaprakash N

unread,
Nov 12, 2011, 3:11:44 AM11/12/11
to panb...@googlegroups.com
1994 ஆம் வருடம். கல்லூரியில் சேர்ந்த வருடம். எங்கள் வகுப்பில் இரண்டே பெண்கள். (ஜொள்ளு ஜான்சி, கடலை கஸ்தூரி என்று காரண பெயர்கள்).
 
சிவில் பிரிவில், நிறைய பெண்கள். அப்போது கல்லூரியயியே கலக்கிய பெயர் 'சிம்லா'.. நான் அதற்க்கு முன் ஒரு பெண்ணுக்கு இந்த பெயர் வைப்பார்களா என அறிந்ததில்லை. ஜட்ஜ் மகள் என்று சொன்னார்கள்.. காரில் வருவாள். எல்லோருக்கும் அவள்மேல் ஒரு அலாதி பிரேமை.. மாலை நேர ஹாஸ்டல்  மாணவர்கள்  அனைவரின் பேசு பொருளானாள்..

தினமும் அவர்களுக்கும், எங்களுக்கும் கம்பைன் கிளாஸ் நடக்கும்.. எனவே அவளின் தரிசனத்துக்காக  நேராக இரண்டாவது பீரியட்  கம்பைன் கிளாசுக்கு வரும் பையன்கள் அநேக பேர்.. சில சமயங்களில் நானும்.. ஹிஹி..

இந்த சூழ்நிலயில், என் நண்பன் சீனி, எப்படியோ அந்த பெண்ணிடம் பேசி கரெக்ட் பண்ணி விட்டான்..எங்கள் எல்லோர் முன்னிலும், பைக்கில் ஏற்றிக்கொண்டு எல்லோர் காதிலும் புகை விட வைத்தான்.. அந்த நாட்களில் , எங்களிடம் இருந்து ஜாக்கிரதையாக விலகியே இருந்தான்..
அதிகமில்லை ஜென்டில்மேன்..மூன்று மாதங்களில், ஒரு சில தவறான புரிதல்களால், கசந்து போனது உறவு..

அதற்க்கு பிறகுதான் நாங்களெல்லாம் அவன் கண்ணுக்கு தென்பட்டோம்..ஆறுதல் சொல்வதற்கு.!!. 
அந்த சமயத்தில், கோவை பல்லவியில், "கண்மணி" படம் பார்க்க சென்றோம்.. ஆர்.கே.செல்வமணி, இளையராஜா, பிரசாந்த் என்று எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு சரியான மண்டை காய்ச்சல்.. செம கடி படம்..

பாடல்கள் என் மனதில் பதியவே இல்லை. அனால் இந்த படத்தை சிலாகித்த ஒரே ஆள் , நம்ம சீனி அவர்கள் தான்..
அதில் வரும், 
"ஒ என் தேவ தேவியே.. 
ஒ என் காதல் ஜோதியே" என்ற பாடல் அவனின்  காயத்துக்கு மருந்தானது.. 'இந்த பாட்டுல சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமே இல்லையே' என்றேன், "வரிகளை கேட்டு பார். எனக்காகவே எழுத பட்ட பாட்டு" என்று பீல் பண்ணினான்..

இந்த பாடல், யு டியூபில்கூட கிடைக்க வில்லை..

பி.கு.:சீனு இப்ப்போது யு.எஸ்.சில். ஐந்து மாதங்களுக்கு முன் இந்தியா வந்தபோது, பலத்த சரக்குகளுக்கு பிறகு, நள்ளிரவில் "உன் பேவரைட்  பாட்டு இப்போலாம் கேக்குறியா" என்றேன்.  "அட ஆமால்ல, இப்பல்லாம் எங்கடா இருக்கு டைம் பாட்டு கேக்க?" என்றான்.

காலம்....!!

ஆசாத்

unread,
Nov 13, 2011, 10:56:24 PM11/13/11
to panb...@googlegroups.com
நேற்று சினிமா 360டிகிரியோ அல்லது வேறு எதும் பெயரோ, புதிய தலைமுறையில் ’அரவான்’ படப் பாடல்கள் குறைத்து அரைமணி நேர நிகழ்ச்சி (விளம்பரதாரர் நேரத்தையும் சேர்த்து). திரைப்படக்காரர்கள் ரொம்ப உஷாரான பார்ட்டிகள்தான். டீசருக்குக் காண்பிப்பதற்கென வைத்திருந்த அதே காட்சிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள்.
 
கார்த்திதான் அதிகநேரம் பேசினார். இசையமைப்பாளராகவும் வெற்றிபெற்றுவிட்டார் என நினைக்கத் தோன்றுகிறது. கவிஞர்களுள் நா.மு. மட்டும் பேசிய நினைவு, விவேகாவுக்கும் ஒரு பாட்டு இருப்பதாக அறிகிறேன். விவேகா குறித்து கார்த்திதான் பேசினார்.
 
ரகுமான் சொல்லிய கமெண்ட்டை ஹைலைட் செய்கிறார்கள். சல்தாஹை!
 
இன்றைக்கு மார்க்கெட்டிங்கிற்காக இப்படியெல்லாம் தங்களை பூஸ்ட் பண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்று. முன்பெல்லாம், நான் பேசக்கூடாது, என் படைப்புகள் பேசவேண்டும் என்று சொல்லுவார்கள், இன்று ப்ரொமோ இல்லையென்றால் ஒன்றும் இல்லை. 

ஆசாத்

unread,
Nov 13, 2011, 11:07:47 PM11/13/11
to panb...@googlegroups.com
> ஆசாத் wrote:
’அரவான்’ படப் பாடல்கள் *குறைத்து* அரைமணி நேர
 
*குறித்து*
 
இப்பொழுதெல்லாம் நிறைய தட்டச்சுப்பிழைகள் எனது இடுகைகளில் காணக்கிடைக்கின்றன, ஏன்? வயதாகிவிட்டதோ? 

Ahamed Zubair A

unread,
Nov 14, 2011, 12:53:59 AM11/14/11
to panb...@googlegroups.com
கார்த்தி என்றே விளித்திருக்கிறீர்கள்... கார்த்தி என்பவர் சூர்யாவின் தம்பி... அண்ட் எ மாஸ் ஹீரோ :)))

கார்த்திக் என்பவர் தான் பாடகர் அண்ட் நவ் இசையமைப்பாளர்...

2011/11/14 ஆசாத் <banu...@gmail.com>

ஆசாத்

unread,
Nov 14, 2011, 1:57:44 AM11/14/11
to panb...@googlegroups.com
> அகமது சுபைர் wrote:
கார்த்தி என்றே விளித்திருக்கிறீர்கள்... கார்த்தி என்பவர் சூர்யாவின் தம்பி
 
ஹஹ்ஹா! நீங்க சொல்றதுதான் சரி.
 
அது செரி இங்க எங்கியும் நானு தன்ஷிகா மஞ்ச சேலைல வர்ரது பத்தி எதுவும் பேஸ்லல்ல...நல்லதுப்பா.

மோர் சுப்ரா

unread,
Nov 15, 2011, 1:54:45 AM11/15/11
to panb...@googlegroups.com
ரர ஆசாத்ஜி இந்த பாடலை காலைல டிவியில் பார்த்தேன் ..உடனே உங்களுக்கு டெடிகேட் பன்னலாமேன்னு...தலைவர் இதில் மிக அழகா இருப்பார்.....


திரைப்படம்:மன்னாதி மன்னன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

இயற்றியவர்:கண்ணதாசன் 
பாடகர்கள்:டி.எம்.சௌந்தராஜன், பி.சுசீலா


கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
(கனிந்த)


காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
(கனிய)


அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ..
உம்..............உம்...............
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே


நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ....ஆ....ஆ...ஆ.

ஆசாத்

unread,
Nov 15, 2011, 2:43:47 AM11/15/11
to panb...@googlegroups.com
> மோரு@மோர்சுப்ரா wrote:
உங்களுக்கு டெடிகேட் பன்னலாமேன்னு
 
நன்றி.
 
 
இயற்றியவர்:கண்ணதாசன் 
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி *பங்கயமாகாதோ*
 
பங்கயமுன்னு கூகுள்ள அடிச்சுப் பாருங்க. ஆச்சரியப்பட்டுப் போவீங்க. *மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளைமுன்*னுல [அதே சொல்லடி அபிராமி பாட்டுத்தான்]பங்கயத்துக்கு நாங்க ஸ்கூல் படிக்கும்போது அர்த்தம் பாக்க பட்ட பாடு கொஞ்சம்...கஷ்டந்தான்.
 
மைபொதி விளக்கு போலலேர்ந்து தொழுது வென்றார் வரைக்கும் படபடன்னு மனப்பாடப்பகுதி சொல்ற ஸ்டூடியஸ் பையனா இருந்தாலும் சினிமாப்பாட்டுக்கு தமிழ் வாத்தியார்ட்ட போயி நிக்க முடியுமா? (சிலப்ப நிண்ணிருக்கோம் அது வேற விஷயம்...வுடு ஜூட்)
 
அஞ்சு விரல் பட்டால் என்ன? அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன? அட அஞ்சுகமுன்னா என்னான்னும் தெரியாதுங்க.
 
யார்ட்ட அகராதி இருந்துச்சு? மவன லிஃப்கோ வெச்சிருந்தாலே ஷேக்ஸ்பியர் ரேஞ்சு. தமிழ் அகராதியா? எங்க கிட்ட செவண்டீஸ்ல கெடையாது.
 
இப்பப் பாத்தா சொடக்கு போர்ரதுக்குள்ள சர்ச் பண்ணலாம்.
 
சூப்பர்.

ஆசாத்

unread,
Nov 15, 2011, 4:02:17 AM11/15/11
to panb...@googlegroups.com
வைரமுத்து மொதமொதல்ல பாட்டு எழுதுனப்ப வேள்வி அது இதுன்னெல்லாம் போட்டு எழுதுனப்ப ரொம்ப இலக்கியமா இருக்கேன்னு யாரோ கேட்டிருக்காங்க. அப்ப அவரு சொன்னாராம், ’உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’னு கண்ணதாசன் கூடத்தான் எழுதியிருக்காரு, ‘ஆயிழை’ன்னா என்னான்னு கேட்டாராம்.
 
எப்பவோ எங்கியோ படிச்சது.
 
*
 
அப்புறம் இந்த டூயட் படத்துல ’சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்’ இருக்குல்ல அத்த பிரபு சொல்லும்போது வைரமுத்து ச்பாட்ல இருந்திருக்காரு, பிரபு கொஞ்சம் தடவியிருக்காரு, அப்ப  வைரமுத்து சிரிச்சிக்கினே சொன்னாராம், ‘ம்ம்ம்...நடிகர் திலகம் மகனா’.
 
பாடலாசிரியருங்கள்ள இந்த கண்ட்ரோல் வாலிக்கு அடுத்து வைரமுத்து ஃபீல்டுல வெச்சிருக்காரு . வெச்சிருந்தாரு.
 
நா.மு.வுது எதுனாச்சும் இப்படி கண்ட்ரோல் பண்ண செய்தி இருக்கா?
 
(வைரமுத்து சார் - உதித் நாராயண் எபிசோட் ஃபுல்லா தெரிஞ்சவங்க ஆரும் இருக்காங்களா?)

Ahamed Zubair A

unread,
Nov 15, 2011, 4:11:44 AM11/15/11
to panb...@googlegroups.com


2011/11/15 ஆசாத் <banu...@gmail.com>

அப்புறம் இந்த டூயட் படத்துல ’சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்’ இருக்குல்ல அத்த பிரபு சொல்லும்போது வைரமுத்து ச்பாட்ல இருந்திருக்காரு, பிரபு கொஞ்சம் தடவியிருக்காரு, அப்ப  வைரமுத்து சிரிச்சிக்கினே சொன்னாராம், ‘ம்ம்ம்...நடிகர் திலகம் மகனா’.
 
பாடலாசிரியருங்கள்ள இந்த கண்ட்ரோல் வாலிக்கு அடுத்து வைரமுத்து ஃபீல்டுல வெச்சிருக்காரு . வெச்சிருந்தாரு.
 
நா.மு.வுது எதுனாச்சும் இப்படி கண்ட்ரோல் பண்ண செய்தி இருக்கா?

நாமுவை கண்ட்ரோல் பண்ண செய்தி இருக்கு....

நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனிடா :)))
 

lucky shajahan

unread,
Nov 15, 2011, 5:05:45 AM11/15/11
to panb...@googlegroups.com


>ஆசாத்
 
(வைரமுத்து சார் - உதித் நாராயண் எபிசோட் ஃபுல்லா தெரிஞ்சவங்க ஆரும் இருக்காங்களா?)
 
ஈஸ்வரா ஈஸ்வரா பாடலில் ஒரு வரியை மாற்றிப் பாடிய சம்பவம்
பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்
 
பிரியமான பொண்ணை ரசிக்கலாம் என்ற வைரமுத்து வரியை
பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம் என்று பாடினாராம் . வைமுத்து ஆன் ஸ்பாட்டில் இருந்ததால் ' எப்பா உறவு முறையில பிரசனைய ஏற்படுத்திராதப்பா " என்று திருத்தினாராம் .
 
 
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

மோர் சுப்ரா

unread,
Nov 15, 2011, 5:15:11 AM11/15/11
to panb...@googlegroups.com

அண்ணா இதை நானே கூட இங்கே சொல்லியிருக்கிறேன் அந்த அளவுக்கு பிரபலமானது இது :))))

காதல் பிசாசு பாடலில் கூட “ பரவாயில்லை” என்பதை பர்ர்ர்வாயில்லைனு பாடுவார் :))

2011/11/15 lucky shajahan <luckys...@gmail.com>


 
பிரியமான பொண்ணை ரசிக்கலாம் என்ற வைரமுத்து வரியை
பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம் என்று பாடினாராம் . வைமுத்து ஆன் ஸ்பாட்டில் இருந்ததால் ' எப்பா உறவு முறையில பிரசனைய ஏற்படுத்திராதப்பா " என்று திருத்தினாராம் .
 
 
 அன்போடு 

மோர்சுப்ரா

Ganesh kumar

unread,
Nov 19, 2011, 4:45:31 AM11/19/11
to panb...@googlegroups.com

என் மகள் முதன் முதலாக முணுமுணுத்தது ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஆத்தி ஆத்தி என்னாச்சோ பாடலைத்தான் , ஆடுகளம் படப் பாடல்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக முன்னாள் ஓட்ட நாயகி பி.டி.உஷாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

என் மகளின் விருப்பப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவை வெடி படத்திலிருந்து இப்படி மழையடித்தால் எப்படிக் குடை பிடிப்பேன் பாடலும், வாகை சூட வா படத்திலிருந்து சர சர சாரக் காத்து பாடலும்....

தேன்கிண்ணம் தளத்தில் சாரக்காத்து பாடலின் வரிகளை நிறைய தவறுகளுடன் போட்டிருக்கிறார்கள் .

 
பாடலை தவறில்லாமல் எழுதுவதுதான் பாடலாசிரியருக்கு நாம் தரும் குறைந்தபட்ச மரியாதையாகும்.
 

சாரக் காத்து பாடலை விட எனக்கு போறானே போறானே காத்தோட தூத்தலைப் போல பாடல்தான் மிகவும் பிடித்திருக்கிறது

உன்ன பார்த்து பேசயில .. ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
 

பாடலாசிரியர் கார்த்திக் நேதா சிறப்பாக எழுதியிருக்கிறார் . பாடகி நேஹா பஸின்
வரிகளைக் கொஞ்சம் காயம் செய்துவிட்டார்
 
 
 

மோர் சுப்ரா

unread,
Nov 19, 2011, 5:15:17 AM11/19/11
to panb...@googlegroups.com

இதுக்கு என்னன்னமோ எழுத தோனுது.ஆனா இப்ப பாட்ட கேட்டுக்கிட்டே தட்டச்சுறேனா அதுனால் இதயமும் விரலும் ஒரே வரிசையில் இல்லை....

காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ...
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக

இனிமை தான் ... இனிமை தான் பொழிந்ததே வழிந்ததே
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா... படிக்கலாம்... ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய ... ஹோய்
மேலும் கீழும் கண் பார்வை அபினயம் புரிய
பூ உடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க
பாற் கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
சமயம் தான் ...
சமயம் தான் அமைந்ததே அழைத்ததே

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

திரைப் படம்: சூரக் கோட்டை சிங்கக் குட்டி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

மோர் சுப்ரா

unread,
Nov 19, 2011, 5:37:09 AM11/19/11
to panb...@googlegroups.com

இந்த பாட்டு வரிகள் கிடைக்கவேயில்லை...ஆங்கிலத்தில் இருந்து நானே தட்டச்சினேன்.அந்த அளவுக்கு பிடிக்கும் 
இந்த பாடலில் வரும் தபேலா ஸ்கொரை கவனியுங்களேன் இதமா இருக்கும்.


மாதுளங் கனியே நல்ல மலர்வன குயியே
மரகத மணியே என் மயில் இளம் மயிலே
மாறன் கனை போடும் விழியே
மாலை தனில் பாடும் மொழியே
மாறன் கனை போடும் விழியே
இள மாலை தனில் பாடும் மொழியே

மாதுளங் கனியே நல்ல மலர்வன குயியே
மரகத மணியே என் மயில் இளம் மயிலே

(M)
தங்க மலர் பாதம் மேவி தாளம் போடும் கொலுசு போல
அங்கும் இங்கும் ஆடி பார்க்கும் ஆசை எனக்கு
(F)
ஓ செங்கமலம் போல தேவி தேரில் ஏறி உன்னைக் கூட
இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு
(M)
அள்ளி அள்ளி கோடும்போது ஆசை வளர
அங்கும் எங்கும் காதல் என்ற பூவும் மலர
(F)
கிள்ளி கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர
சொல்லிச் சொல்லி காம தேவன் பானம் படர
(M)
என்னை தினம் பாடும் குயிலே
வண்ணம் கொண்டு ஆடும் மயிலே

மாதுளங் கனியே நல்ல மலர்வன குயியே
மரகத மணியே என் மயில் இளம் மயிலே

(M)
உச்சி முதல் பாதம் தோறும் நேரில் காண போதை ஏறும்
கொஞ்சி கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும்
(F)
ஓ வெற்றிக்கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி
சுற்றி வந்த ராஜ ராஜன் உன் தாழ் போற்றி
(M)
முற்றுகையை போட்டபோதும் மோகம் விடுமோ
முன்னிருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ
(F)
கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா
காதலிக்கு நாணம் மேலும்கோடும் அல்லவா
(M)
மோகம் இசை பாடும் உடலே
காமன் விளையாடும் திடலே

மாதுளங் கனியே நல்ல மலர்வன குயியே
மரகத மணியே என் மயில் இளம் மயிலே


 அன்போடு 

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

lucky shajahan

unread,
Nov 19, 2011, 7:35:51 AM11/19/11
to panb...@googlegroups.com
நம்ம ஊரு பூவாத்தா - முரளி படம்னு நினைக்கிறேன் மோர்..
 
இந்த பாட்டு சூப்பரா இருக்கும்.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்..

2011/11/19 மோர் சுப்ரா <mors...@gmail.com>


இந்த பாட்டு வரிகள் கிடைக்கவேயில்லை...ஆங்கிலத்தில் இருந்து நானே தட்டச்சினேன்.அந்த அளவுக்கு பிடிக்கும் 
இந்த பாடலில் வரும் தபேலா ஸ்கொரை கவனியுங்களேன் இதமா இருக்கும்.


மாதுளங் கனியே நல்ல மலர்வன குயியே
மரகத மணியே என் மயில் இளம் மயிலே
மாறன் கனை போடும் விழியே
--

ஆசாத்

unread,
Nov 19, 2011, 9:25:13 AM11/19/11
to panb...@googlegroups.com
ஃபில்மி கெமிஸ்ட்ரின்னா இது!

http://www.youtube.com/watch?v=RyZUCaw4-hQ&feature=related

மையலை சொல்லத் தெரியாமலே
ஏன் ஏன் ஏன் இந்தக் கேள்விகள்?

வாஆஆஆலீஈஈஈஈ சாப்! க்யா பாத் ஹை!

ஆசாத்

unread,
Nov 19, 2011, 9:29:15 AM11/19/11
to panb...@googlegroups.com

இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ?

இந்த வரிக்கு எவ்ளோ டேக் வாங்கியிருக்கும்? ஸ்க்ரீன்ல எவ்ளோ அப்ளாஸ் வாங்கியிருக்கும்?


WebRep
Overall rating
 

Asif Meeran AJ

unread,
Nov 20, 2011, 4:44:43 AM11/20/11
to panb...@googlegroups.com


௧௯ நவம்பர், ௨௦௧௧ ௬:௨௫ பிற்பகல் அன்று, ஆசாத் <banu...@gmail.com> எழுதியது:

நேற்றுதான் வாலியின் நினைவு நாடாக்களை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்
வாலியின் வரிகளில் பொங்கும் இளமை வாக்குகளில் ஆடும் கண்ணாமூச்சி
வாலியின் விற்பனை வரிகளுக்கிடையிலும் அவர் மேல் பிரியங்கொள்ள வைக்கிறது


வில்லன்

unread,
Nov 20, 2011, 11:37:23 AM11/20/11
to panb...@googlegroups.com
http://inbaminge.com/t/09/3%20Moondru/

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் மூன்று படத்திற்காக தனுஷ் எழுதி பாடிய வொய் திஸ் கொல வெறி கொல வெறி டி பாடல், செம்ம கல்லகலுப்பா...

why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி de

Distancela moonu moonu
moonu  coloru  whiteu
white background nightu nightu
nightu coloru blackku

why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de

White skin girlu girlu
girlu heartu blacku
Eyes eyes meettu meettu
my future darkku
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de

மாமா நோட்ஸ் எடுத்துக்கோ அப்ப்டிய்யே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ

சூப்பர் மாமா ready ready 1 2 3 4
what a change over மாமா

Ok மாமா now tune changeu

Hmmmm 
கையிலே க்ளாசு
only english
Handla glass glassla scotch
eyes fulla tearu

Empty life girl come
life reverse gearu
Love love oh my love
You show to me pow-vu
Cow cow kozhi cow
I want u here now
God i am dying now
she is happy howu

This song pass to boys
we dont have choiceu
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de
why this கொலவெறி கொலவெறி கொலவெறி de

Kandavel Rajan

unread,
Nov 20, 2011, 12:34:41 PM11/20/11
to panb...@googlegroups.com


2011/11/15 ஆசாத் <banu...@gmail.com>

வைரமுத்து மொதமொதல்ல பாட்டு எழுதுனப்ப வேள்வி அது இதுன்னெல்லாம் போட்டு எழுதுனப்ப ரொம்ப இலக்கியமா இருக்கேன்னு யாரோ கேட்டிருக்காங்க. அப்ப அவரு சொன்னாராம், ’உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’னு கண்ணதாசன் கூடத்தான் எழுதியிருக்காரு, ‘ஆயிழை’ன்னா என்னான்னு கேட்டாராம்.
 



ஆயிழை =ஆய் + இழை – ஆராய்ந்து செய்த ஆபரணம்.


குறள் 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து
விளக்கம் 
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடுகூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்


--
விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது 
அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது 
வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.
 -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

ஆசாத்

unread,
Nov 20, 2011, 8:02:14 PM11/20/11
to panb...@googlegroups.com
> Kandavel Rajan C. wrote:
ஆயிழை =ஆய் + இழை – ஆராய்ந்து செய்த ஆபரணம்.

நன்றி கந்தவேல்ஜி.

Raja sankar

unread,
Nov 21, 2011, 12:23:53 AM11/21/11
to panb...@googlegroups.com
மிக மிக அருமையான தமிழில் எழுதப்பட்ட பாட்டு.

ராஜசங்கர்



2011/11/20 வில்லன் <vom...@gmail.com>

மோர் சுப்ரா

unread,
Nov 21, 2011, 9:37:13 AM11/21/11
to panb...@googlegroups.com
கும்பக்கரை தங்கையா படப்பாடல் இது. இந்த படத்துல பாட்டு எல்லாமே ஹிட்தான்.
ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.......

பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ...ஓ....

பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

வைக்காத செந்தூரம் தான் வஞ்சி வந்த உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ
மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை பிடிக்குது
வா வா மானே......


பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ......
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.....

பட்டோடு பொன்னாடைதான் பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடடுதே
தோளோடு தோளோகத்தான் மேலோடு மேலோகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
செம்மேனிய செந்தாழம் பூவா....
அது உன்மேனியா பொன் மேனியா
பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா மாமா....

பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ....ய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு......

அன்போடு


மோர்சுப்ரா

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 22, 2011, 4:57:49 AM11/22/11
to panb...@googlegroups.com

எம்மா எம்மா காதல் பொன்னம்மா...

நீ என்னை விட்டு போனதென்னம்மா...

நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா...

என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா...

அடி, ஆணோட காதல்… கைரேகை போல...

பெண்ணோட காதல்… கைக்குட்ட போல...

கனவுக்குள்ளே அவளை வச்சேனே...

என் கண்ண ரெண்டைத் திருடி போனாளே...

புல்லாங்குழலைக் கையில் தந்தாளே...

என் மூச்சுக் காத்தை வாங்கிப் போனாளே...

 

பொம்பளய நம்பி

கெட்டுப் போனவங்க ரொம்ப

அந்த வரிசையில் நானும்

இப்ப கடைசியில் நின்னேன்…

முத்தெடுக்கப் போனால்

உன் மூச்சடங்கும் தன்னால்…

காதல் முத்தெடுத்தப் பின்னால்

மனம் பித்தமாகும் பெண்ணால்…

அவ கைய விட்டுத்தான் போயாச்சு

கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு

காதல் என்பது வீன்பேச்சு

மனம் உன்னாலே புண்ணாப் போச்சு…

காதல் பாதை கல்லு முள்ளுடா

அதைக் கடந்து போன ஆளே இல்லைடா…

காதல் ஒரு போதை மாத்திரை

அதைப் போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை…

எம்மா எம்மா காதல் பொன்னம்மா...

நீ என்னை விட்டு போனதென்னம்மா...

நெஞ்சுக்குள்ளே காயமாச்சும்மா...

என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா...

 

ஓட்டை போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்

மனம் உன்னைப் பத்தி பாடும்…

வந்து போனதாரு

ஒரு நந்தவனத்தேரு

நம்பி நொந்து போனேன் பாரு

அவ பூவு இல்ல நாரு…

என்னை, திட்டம் போட்டு நீ திருடாதே

எட்ட நின்னு நீ வருடாதே

கட்டெறும்பைப் போல் நெருடாதே

மனம் தாங்காதே… தாங்காதே…

வானவில்லின் கோலம் நீயம்மா

என் வானம் தாண்டி போனதெங்கம்மா…

காதல் இல்லா ஊரு எங்கடா…

என்னை கண்ண கட்டி கூட்டி போங்கடா…

 

எம்மா எம்மா காதல் பொன்னம்மா...

நீ என்னை விட்டு போனதென்னம்மா...

நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா...

என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா...

அடி, ஆணோட காதல்… கைரேகை போல...

பெண்ணோட காதல்… கைக்குட்டை போல...

கனவுக்குள்ளே அவளை வச்சேனே...

என் கண்ண ரெண்டைத் திருடி போனாளே...

புல்லாங்குழலைக் கையில் தந்தாளே...

என் மூச்சுக் காத்தை வாங்கிப் போனாளே...

 

படம்: ஏழாம் அறிவு

(பாடலைக் எம்பி 3 யில் கேட்டு தட்டச்சியது... )

பாடல் நல்ல பாடல் தான்... இசை மீண்டும் மீண்டும் கேட்க வைக்க கூடியது தான்... இருந்தாலும் இதன் வரிகள் ஒரு இடத்தில என்ன சொல்லுதுனு புரியலை...

//

ஓட்டை போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்

மனம் உன்னைப் பத்தி பாடும்…//


ஓட்டை போட்ட மூங்கில் பாட்டு பாடுது. ஓகே. நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் இதுல பின்னும் என்ற வார்த்தையால சொல்ல வர்ரது என்ன? எனி ஒன் ஹெல்ப் மீ இன் திஸ் ரிகார்ட்... ஆசாத்ஜி, மரவண்டு ஜி போஸ்ட்...


--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு



Jayaprakash N

unread,
Nov 22, 2011, 5:53:52 AM11/22/11
to panb...@googlegroups.com
இத்க்காகதான் கமல் ஏற்கனவே சொல்லி வச்சார்.. 'பழமொழி சொன்னா அனுபவிக்கனும்; ஆராயக்கூடாது'னு.

இதையும் ஒரு 'டைப்'பான பழமொழினே எடுத்துக்கங்க.. :-))))


With Lots OF Love,
JP



2011/11/22 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>


//

ஓட்டை போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்

மனம் உன்னைப் பத்தி பாடும்…//


ஓட்டை போட்ட மூங்கில் பாட்டு பாடுது. ஓகே. நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் இதுல பின்னும் என்ற வார்த்தையால சொல்ல வர்ரது என்ன? எனி ஒன் ஹெல்ப் மீ இன் திஸ் ரிகார்ட்... ஆசாத்ஜி, மரவண்டு ஜி போஸ்ட்...


--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு

மோர் சுப்ரா

unread,
Nov 22, 2011, 5:54:56 AM11/22/11
to panb...@googlegroups.com
இந்த பாட்டுல வர காவிரியையும் இப்ப சாக்கடை ஓடும் காவிரியையும் பார்த்தா கண்ணுள நீர் கோர்க்கும். 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

மார்பினில் நானும் மாராமல் சேரும்
காலம் தான் வேண்டும்...ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்....ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்...ம்ம் சேரும் நாள் வேண்டும். 

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்...ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா... ஆனந்தம்...
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்..ம்ம். ஏக்கம் உள்ளாடும்...ம்ம்


படம்: அகல்விளக்கு,
பாடியவர்:கே.ஜே யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா

மோர் சுப்ரா

unread,
Nov 22, 2011, 5:58:02 AM11/22/11
to panb...@googlegroups.com
இதுள என்னையா இருக்கு. நெஞ்சில ஓட்டை போட்ட பின்பு மரித்து போயிடனும் அப்படியல்லாமல் புல்லாங்குழல் போட பாடுது. ஓட்டை போட்டது நீயென்று இருந்தும். அது உன்னை நினைத்தே அப்பொழுதும் பாடுது. 

2011/11/22 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

எம்மா எம்மா காதல் பொன்னம்மா...

நீ என்னை விட்டு போனதென்னம்மா...

நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா...


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

ஆசாத்

unread,
Nov 22, 2011, 5:58:38 AM11/22/11
to panb...@googlegroups.com
> பிரசாத் வேணுகோபால் wrote:

பாடல் நல்ல பாடல் தான்... இசை மீண்டும் மீண்டும் கேட்க வைக்க கூடியது தான்... இருந்தாலும் இதன் வரிகள் ஒரு இடத்தில என்ன சொல்லுதுனு புரியலை...

ஓட்டை போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்

மனம் உன்னைப் பத்தி பாடும்

ஓட்டை போட்ட மூங்கில் பாட்டு பாடுது. ஓகே. நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் இதுல பின்னும் என்ற வார்த்தையால சொல்ல வர்ரது என்ன? எனி ஒன் ஹெல்ப் மீ இன் திஸ் ரிகார்ட்... ஆசாத்ஜி, மரவண்டு ஜி போஸ்ட்...
 
 
ஓட்டை போட்டால் புல்லாங்குழலாகி இசையெழுப்பும் தன்மை மூங்கிலுக்கு உண்டு, ஆனால், இதயம் காயப்பட்டுவிட்டால் பாடாது, இருப்பினும் கதாநாயகனின் இதயம் காயப்பட்ட பின்னும் பாடுகிறது. இதில் பாட்டு என்பதைக் குறியீடாகக்கொள்ளவேண்டும், நாயகன் சொல்ல வருவது தன் இருப்பை.

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 22, 2011, 6:30:04 AM11/22/11
to panb...@googlegroups.com
ஐயா, நான் கேட்க வந்தது, ஓட்டை போட்ட பின்னும் மனம் உன்னைப் பத்தி பாடும்ன்றது...

ஓட்டை போட்ட பின்னாலயும் மனசு அவளைப் பத்தி பாடுதுனு பிரசென்ட் டென்ஸ்ல சொல்லி இருந்தா பிரச்சினையே இல்லை... ஆனால், பாடும்னு பியூச்செர் டென்ஸ்ல போட்டது தான் மனசுல உறுத்திட்டே இருக்கு இந்த வரிகள்...

2011/11/22 ஆசாத் <banu...@gmail.com>

>
 
ஓட்டை போட்டால் புல்லாங்குழலாகி இசையெழுப்பும் தன்மை மூங்கிலுக்கு உண்டு, ஆனால், இதயம் காயப்பட்டுவிட்டால் பாடாது, இருப்பினும் கதாநாயகனின் இதயம் காயப்பட்ட பின்னும் பாடுகிறது. இதில் பாட்டு என்பதைக் குறியீடாகக்கொள்ளவேண்டும், நாயகன் சொல்ல வருவது தன் இருப்பை.




--
பிரசாத் வேணுகோபால்

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 22, 2011, 6:31:56 AM11/22/11
to panb...@googlegroups.com
எப்பொழுதும் பாடுதுனு சொல்லலயே பாட்டுல... பாடும்னு சொன்னா இன்னைக்கு் என் மனசு பாடலை, ஆனா நாளைக்கு ஒரு வேளை பாடும்னு அர்த்தம் வருது பாஸ்...

2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>

இதுள என்னையா இருக்கு. நெஞ்சில ஓட்டை போட்ட பின்பு மரித்து போயிடனும் அப்படியல்லாமல் புல்லாங்குழல் போட பாடுது. ஓட்டை போட்டது நீயென்று இருந்தும். அது உன்னை நினைத்தே அப்பொழுதும் பாடுது. 

--
பிரசாத் வேணுகோபால்

துரை.ந.உ

unread,
Nov 22, 2011, 6:36:29 AM11/22/11
to panb...@googlegroups.com


2011/11/22 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

ஐயா, நான் கேட்க வந்தது, ஓட்டை போட்ட பின்னும் மனம் உன்னைப் பத்தி பாடும்ன்றது...

ஓட்டை போட்ட பின்னாலயும் மனசு அவளைப் பத்தி பாடுதுனு பிரசென்ட் டென்ஸ்ல சொல்லி இருந்தா பிரச்சினையே இல்லை... ஆனால், பாடும்னு பியூச்செர் டென்ஸ்ல போட்டது தான் மனசுல உறுத்திட்டே இருக்கு இந்த வரிகள்...

இதெல்லாம் இசையமைப்பாளருக்குத் தேவையான ’மீட்டர் லென்த்’ சம்பந்தப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் 
 

2011/11/22 ஆசாத் <banu...@gmail.com>
>
 
ஓட்டை போட்டால் புல்லாங்குழலாகி இசையெழுப்பும் தன்மை மூங்கிலுக்கு உண்டு, ஆனால், இதயம் காயப்பட்டுவிட்டால் பாடாது, இருப்பினும் கதாநாயகனின் இதயம் காயப்பட்ட பின்னும் பாடுகிறது. இதில் பாட்டு என்பதைக் குறியீடாகக்கொள்ளவேண்டும், நாயகன் சொல்ல வருவது தன் இருப்பை.




--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு



--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

ஆசாத்

unread,
Nov 22, 2011, 6:46:34 AM11/22/11
to panb...@googlegroups.com
> பிரசாத் வேணுகோபால் wrote:
பாடும்னு பியூச்செர் டென்ஸ்ல போட்டது தான் மனசுல உறுத்திட்டே இருக்கு இந்த வரிகள்...
 
நாங்க சின்ன வயசுல இங்கதான் கிரிக்கெட் *விளையாடுவோம்*.
 
மேல இருக்ற வாக்கியம் நாம எல்லாம் சாதாரணமா பேசறதுதான. அதுல கடந்த காலத்த நாம எத்ரிகாலமா சொல்றதில்லையா. கிட்டத்தட்ட அதைப்போலத்தான்.
 
ப்ளீஸ் கன்சிடர் வழுவமைதி அட் திஸ் பாய்ண்ட்.

மோர் சுப்ரா

unread,
Nov 22, 2011, 6:49:36 AM11/22/11
to panb...@googlegroups.com
இதுல காலம் வராது.

புல்லாங்குழல் பாடும் என்பது எதிர்காலம் என்பதை தாண்டி அறியப்பட்ட ஒன்றுன்னு வச்சிக்கலாமில்லையா. அப்படித்தான் இதுவும். இன்னிக்கு பாடலை ஓட்டைபோட்டா பாடும்னு இல்லை.

புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.( இது உலமறிந்த ஒன்றுன்னு எடுத்துக்கனும்) அட அப்படித்தான் என மனமும். ஆனாம் அப்பவும் உன்னை பத்தியே பாடும் ஓட்டைப்போட்டவள் நீயாய் இருந்தும். இதுதான் என் புரிதல் .

2011/11/22 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மோர்சுப்ரா

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 22, 2011, 6:51:32 AM11/22/11
to panb...@googlegroups.com
அக்செப்டட் ஆசாத்ஜி...

2011/11/22 ஆசாத் <banu...@gmail.com>
>
 
மேல இருக்ற வாக்கியம் நாம எல்லாம் சாதாரணமா பேசறதுதான. அதுல கடந்த காலத்த நாம எத்ரிகாலமா சொல்றதில்லையா. கிட்டத்தட்ட அதைப்போலத்தான்.
 
ப்ளீஸ் கன்சிடர் வழுவமைதி அட் திஸ் பாய்ண்ட்.



--
பிரசாத் வேணுகோபால்

Ahamed Zubair A

unread,
Nov 22, 2011, 6:53:15 AM11/22/11
to panb...@googlegroups.com
2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>
புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.

புல்லாங்குழல் எப்படிலே பாடும்???

யாராவது எடுத்து ஊதுனாத்தான் பாடும்...

#எதுக்கோ எதையோ பேசுவோர் சங்கம் 

துரை.ந.உ

unread,
Nov 22, 2011, 6:57:29 AM11/22/11
to panb...@googlegroups.com


2011/11/22 Ahamed Zubair A <ahamed...@gmail.com>



2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>
புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.

புல்லாங்குழல் எப்படிலே பாடும்???

யாராவது எடுத்து ஊதுனாத்தான் பாடும்...

அதெப்படிலே பாடும் ...
சத்தம்தான் வரும் 

# எதிலும் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்   

#எதுக்கோ எதையோ பேசுவோர் சங்கம் 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

மோர் சுப்ரா

unread,
Nov 22, 2011, 7:03:37 AM11/22/11
to panb...@googlegroups.com
மரியாதையா திருச்சிக்கு டிக்கெட் புக் பண்ணிடு....சென்னைக்கு பண்ணிடாத

2011/11/22 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>
புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.

புல்லாங்குழல் எப்படிலே பாடும்???

 அன்போடு 


மோர்சுப்ரா

Ahamed Zubair A

unread,
Nov 22, 2011, 7:05:18 AM11/22/11
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா...

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் திருச்சி தான் டிக்கட் புக் பண்ணுவேன் :))

இந்த இழையையும் மொக்கையாக்கியாச்சு...

இன்னும் காவல் கோட்டம் மட்டும் பாக்கி ;))

2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>
மரியாதையா திருச்சிக்கு டிக்கெட் புக் பண்ணிடு....சென்னைக்கு பண்ணிடாத

ஆசாத்

unread,
Nov 22, 2011, 7:17:46 AM11/22/11
to panb...@googlegroups.com
> அகமது சுபைர் wrote:
இன்னும் காவல் கோட்டம் மட்டும் பாக்கி ;))
 
அங்கன கைய வெச்சா வெட்டிருவோமுல்ல. எனக்கு நேரங்கெடைக்காததால இந்த இழை தூங்குது. அரவான் ரிலீஸ் டேட் வரட்டும் அதுக்குள்ள அடியடின்னு அடிச்சு முடிச்சுருவோம்.

lucky shajahan

unread,
Nov 22, 2011, 7:43:30 AM11/22/11
to panb...@googlegroups.com
>
நாங்க சின்ன வயசுல இங்கதான் கிரிக்கெட் *விளையாடுவோம்*.
 
மேல இருக்ற வாக்கியம் நாம எல்லாம் சாதாரணமா பேசறதுதான. அதுல கடந்த காலத்த நாம எத்ரிகாலமா சொல்றதில்லையா. கிட்டத்தட்ட அதைப்போலத்தான்.
 
ப்ளீஸ் கன்சிடர் வழுவமைதி அட் திஸ் பாய்ண்ட்.

 

நச் ஆசாத் அண்ணா
 


 
2011/11/22 ஆசாத் banu...@gmail.com
--

Jayaprakash N

unread,
Nov 22, 2011, 7:46:35 AM11/22/11
to panb...@googlegroups.com
சமீபத்தில் வந்த 'தம்பி வேட்டோத்தி சுந்தரம்' படத்தில் வரும் 'கொலைகாரா  கொலைகாரா' பாடல் கவனம் ஈர்க்கிறது..
வித்யா சாகர் இசையில், வைரமுத்து வரிகளில் கேட்க  இனிமையாக இருக்கிறது.

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. அழகே நீராட்டு..

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..

பாலும் சோறும் உங்காம பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே..
எச்சி முத்தம் எல்லாம நெஞ்ஜாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காணாம
காமன் செய்யும் நாட்டாமை..
பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்திவெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல..

கொலைகாரி..

நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கர எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்
பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா
ஆசை வெச்சிப் பொம்பளைக்கு அஞ்சுநாலா தூக்கமில்லை
மீச வெச்ச ஆம்பளைக்கு மெத்த வாங்க நேரமில்லை..

கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. என் அழக நீராட்டு..

ஸ் பெ

unread,
Nov 22, 2011, 7:59:47 AM11/22/11
to panb...@googlegroups.com
யாராச்சும் குழுமத்துல இந்த கொலவெறி பாட்டு பத்தி பேசினீங்களா?



Hello ajoks.. I am jinging Song..
Soup Song.. Flop Song..

Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri? Dee..

Ruling party motheru motheru
Motheru colouru white’tu
White'tu heart worst’tu worst’tu
worst’tu CM waste’u

Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?

Mother’u changing aalu aalu
what is her goal’lu?
I was like a shark’ku shark’ku
Now’wu Future Dark'ku..

Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?

Mama, sarakku Eduthuko..
Apdiye Kaila murukku Eduthuko..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama
Nøw Tune Change'ju..

Paalu price'su.. Only Ènglish'sa..

Milk price’su.. Goes’u high
people spill’u Tear'ru

thatha went’u Motheru come’mu
Life'fu Reverse'su Gear'ru

Bus’su Bus’su Oh ! my Bus’su
ur ticket cost’tu sucks’su
Book’ku book’ku reading book’ku
you dont have luck’ku

All price’su hike’u hike’u
People dont like’u
My shoes’vu nike’u nike’u
My hairu stylu spike’u

Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee



தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Ahamed Zubair A

unread,
Nov 22, 2011, 8:01:27 AM11/22/11
to panb...@googlegroups.com
ஸ்டாலின்,

ஒரிஜினல் பாட்டைக் காபி பண்ணி போடுய்யா...

இது கார்க்கி காமெடி பண்ண வரிகள்....

:)))

2011/11/22 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
Nov 22, 2011, 8:03:04 AM11/22/11
to panb...@googlegroups.com
இது வேற வெர்சன்



--

துரை.ந.உ

unread,
Nov 22, 2011, 8:19:37 AM11/22/11
to panb...@googlegroups.com
இது தனுஷ் எழுதி பாடிய பாடல் .....


எவ்ளோ அனுபவிச்சு பாடி இருக்கிறார் என்பது பார்த்துக் கேட்டால்தான் புரியும் 

2011/11/22 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ganesh kumar

unread,
Nov 22, 2011, 11:18:27 AM11/22/11
to பண்புடன்
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி) இசையமைத்த பிள்ளையார்
படத்தில் யேசுதாஸும் சுசிலாவும் இணைந்து பாடிய ஓர் இனிமையான பாடலைக்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இணைத்திருக்கும் புகைப்படத்தில் இடமிருப்பவர் ஜெயலட்சுமி (அக்கா),
வலமிருப்பவர் ராஜலட்சுமி

0


பெண்:- மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டாள்
அவன் மயங்கிய பாவையில் வழங்கிய போதையில் தன்னையும் மறந்து நின்றாள்

ஆண்:- நாட்டியம் ஆடிடும் விழிகளில் இவள் ஒரு ஆயிரம் கனவு கண்டாள்
அந்த ஆயிரம் கனவினில் தோன்றிய ஆசையில் வாழ்ந்திடும் நினைவு கொண்டாள்

பெண்:- காவிய நாயகன் பொன் உடல் பார்த்த பின் கண்களும் திரும்பவில்லை
இந்த கங்கையில் ஆடிட சங்கமம் தேடிய நெஞ்சமும் உறங்கவில்லை

ஆண்:- கன்னியின் குங்குமம் காதலன் மார்பினில் கலந்திட வேண்டும் என்றாள்
அவள் கண்களும் குங்குமம் ஆனதன் காரணம் கேட்டதும் நாணி நின்றாள்

(மரகத தோரணம்)

ஆண்:- ஆடைகள் சரிந்ததும் கார் குழல் கலைவதும் பார்த்திட நேரமில்லை
ஒரு அங்குலம் அங்குலமாய் இதழ் பதிந்தது ஆசையும் தீரவில்லை

பெண்:- தாவிய கைகளும் தழுவிய உடல்களும் ஒரு கணம் பிரியவில்லை
இங்கு தந்தது எத்தனை கொண்டது எத்தனை அதற்கொரு கணக்கும் இல்லை

(மரகத தோரணம்)

0

தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம், தேரோட்டம், பிள்ளையார்,
மகிழம்பூ ஆகிய படங்களுக்கு சூலமங்கலம் சகோதரிகள்
இசையமைத்திருக்கிறார்கள்.

சூலமங்கலம் சகோதரிகளின் இசைத் திறமையைக் கண்ட எம்.ஜி.ஆர், சூலமங்கலம்
சகோதரிகள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார்.
அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று
பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து
விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை.

soolamangalam.JPG

Imsai Arasi

unread,
Nov 22, 2011, 8:44:16 PM11/22/11
to panb...@googlegroups.com
அழகான பாட்டு... இளையராஜா இஸ் கிரேட்!

2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>

V Ramesh

unread,
Nov 25, 2011, 1:36:47 AM11/25/11
to panb...@googlegroups.com
புதுசா ஏதும் பாடல் வந்திருக்கான்னு தேடினப்போ யுவன் இசை ரஜினி பட டைட்டிலா இருக்கேன்னு கழுகு பாடல் கேட்டேன்.. தமன் ஜிப்ரான்னு கொஞ்சம் யுவனுக்கு போட்டி அதிகமாகும் வேளையில் யுவன் என்ன பண்ண போறாரோன்னு என்ற எதிர்பார்ப்பில் கேட்டேன். ம்ம் பரவாயில்லை 2 பாட்டு தேறுது.
ஆனா ஏனோ பாடல்கள் கேக்கும் போது ஏற்கனவே கேட்ட இசை அடிக்கடி வர்ற மாதிரி இருக்கு. குறிப்பா ஆத்தாடி மனசுதான் பாடல் கேக்கும் போது காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் பாடல் சாயம் தெரியுது.


ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
காதல்ன்னு சொல்லுறாங்க அனைவரும்

ஒரு தத்துவப்பாடல்.  அந்த கால காதல் இந்த கால காதல்ன்னு பிபி ஏறி சுத்துறவங்களுக்குன்னே இந்த பாட்டு போட்டிருக்காங்க.

http://www.tamilpaadalgal.com/kazhugu-mp3-songs-download/

இந்த இணையத்தில் கொஞ்சம் நல்ல க்வாலிட்டி பாடல்கள் கிடைக்குது. tamilbeat and tamimp3wire விட கொஞ்சம் பாடல்கள் க்வாலிட்டி நல்லா இருக்கு. tamilmp3world.com தவிர வேற ஏதும் இந்த மாதிரி நல்ல க்வாலிட்டி பாடல்கள் கிடைக்கும் தளம் இருந்தா சொல்லுங்களேன்




நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/


Jayaprakash N

unread,
Nov 25, 2011, 7:45:39 AM11/25/11
to panb...@googlegroups.com
நேற்று லோக்கல் கேபிளில், ஒரு பாடல் பார்க்க நேர்ந்த்தது.. 

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே... பாடுமே...."

நான் சின்ன வயதிலிருந்து இந்த பாடலை  அவ்வப்போது கேட்க வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கும்.. நான் நினைத்தது, எதோ, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயசங்கர், முத்துராமன் போன்ற ஏதோ ஒரு நடிகர் நடித்த பழைய படமென்று..

ஆனால் மோகன் (பிரெஞ்ச் தாடியுடன்,) + ராதா காம்பினேசன் பார்த்ததும் ஆச்சர்யம்.. பின்பு இணையத்தில் தேடி கண்டு பிடித்தேன்..
படம்: நெஞ்சமெல்லாம் நீயே
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்.

வாணி ஜெயராம் அவர்களின் மற்றுமொரு அருமையான மெலடி பாடல்..

அவர் உருகி பாடியிருக்கும் அந்த சுக அனுபவத்தை  கேட்டு பாருங்களேன்.. . 

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே... பாடுமே (யாரது )

மார்கழி  பூக்கள் என்னை தீண்டும்  ஆஅ ஆஆ
மார்கழி  பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும் 
சிந்து பாடும் இன்பமே..
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்ற வரும்
பார்த்தாலே போதை தரும் (யாரது)

மோர் சுப்ரா

unread,
Nov 29, 2011, 6:18:54 AM11/29/11
to panb...@googlegroups.com

வாத்தியாரின் காதல் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். தலைமைப் பண்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் நடிப்பு காதல் காட்சிகளிலும் வெளிப்படும். கம்பீரமாக நடப்பார். மரத்தைச் சுற்றி ஓடியாடினாலும் அதையும் தலைவனுக்குரிய கம்பீரத்துடன், புன்னகையுடன் செய்வார்!

அடிமைப் பெண் (1969) படத்தில் கேவி மகாதேவன் இசையில் புலமைப் பித்தனின் வரிகளில் பாலுவும் சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டிராதவர்கள் இருக்க முடியாது. தர்மாவதி (தாமாவதி) ராகத்தில் அமைந்த பாடல்.

உற்சாகமும், காதலும், இளமையும் துள்ளித் தெறிக்கும் பாடல் இது. புலமைப் பித்தனின் வரிகள் அபாரமானவை! பரபரப்பான ஆரம்ப இசையுடன் இளமை ததும்பும் பாலுவின் குரலும், சுசீலாவின் சீரான துல்லிய உச்சரிப்புடனான மென்மையான குரலும் நம்மைச் சொக்க வைக்கின்றன. நான்கு சரணங்கள். ஆனாலும் இசையை அடக்கமாக வைத்து இருவரையும் பாடவைத்து நேரம் போவதைத் தெரியாமல் அற்புதமாகச் செய்திருக்கிறார் கேவியெம்.

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ

(ஆயிரம்)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்

இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ

அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

(ஆயிரம்)

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்


சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ

சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
இன்பம் இதுவோ 

இன்னும் எதுவோ 
தந்தாலும் ஆகாதோ

(ஆயிரம்)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ 
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் 

தந்த சுகத்தை 
நான் உணரக் காட்டாயோ

(ஆயிரம்)

நன்றி : http://myspb.blogspot.com/2006/05/blog-post.html

அன்போடு

மோர்சுப்ரா

துரை.ந.உ

unread,
Nov 29, 2011, 6:21:53 AM11/29/11
to panb...@googlegroups.com


2011/11/29 மோர் சுப்ரா <mors...@gmail.com>


வாத்தியாரின் காதல் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். தலைமைப் பண்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் நடிப்பு காதல் காட்சிகளிலும் வெளிப்படும். கம்பீரமாக நடப்பார். மரத்தைச் சுற்றி ஓடியாடினாலும் அதையும் தலைவனுக்குரிய கம்பீரத்துடன், புன்னகையுடன் செய்வார்!


temp-100-15246512.gif :)
temp-100-15246512.gif

Jayaprakash N

unread,
Nov 29, 2011, 6:27:07 AM11/29/11
to panb...@googlegroups.com





2011/11/29 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

அதையும் தலைவனுக்குரிய கம்பீரத்துடன், புன்னகையுடன் செய்வார்!

temp-100-15246512.gif :)

இதுதானா அந்த  தலைவனுக்குரிய 'டச்.."?!  
 
துரை அய்யா கலக்கல்... :-)))))
temp-100-15246512.gif

மோர் சுப்ரா

unread,
Nov 29, 2011, 6:30:53 AM11/29/11
to panb...@googlegroups.com
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும்.இத்தனை அழகாய் ரொமான்ஸ் செய்யும் தலைவன் எவனும் இல்லை இங்கே...

2011/11/29 Jayaprakash N <naa...@gmail.com>


temp-100-15246512.gif :)

இதுதானா அந்த  தலைவனுக்குரிய 'டச்.."?!  
 


அன்போடு


மோர்சுப்ரா

temp-100-15246512.gif

மோர் சுப்ரா

unread,
Nov 29, 2011, 6:31:14 AM11/29/11
to panb...@googlegroups.com

என் புது ஹெட்போன்ல இந்த பாட்ட கேட்டு அசந்து போயிட்டேன்.
இசை அமைப்பாளர் தமன் ஒரு ரவுண்டு வருவார் என்றே எதிர்பார்க்கிறேன்.

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி... நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி... அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி... நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
ஒஸ்தியில் லவ் யூ டில் யூ ஆர் ஏ பாட்டி...
தேவையில்லை வாப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...


ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...


காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..


உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேக படு மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை டெய்லி நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...


ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...


உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..


ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி....

Jayaprakash N

unread,
Nov 29, 2011, 6:33:22 AM11/29/11
to panb...@googlegroups.com
நானும் பாராட்டித்தான் சொன்னேன் மோர் ஜி..  :-))))


With Lots OF Love,
JP



2011/11/29 மோர் சுப்ரா <mors...@gmail.com>

மோர் சுப்ரா

unread,
Nov 29, 2011, 6:35:39 AM11/29/11
to panb...@googlegroups.com
ஐயா, உங்களிடத்து என்னை ஆச்சர்யம் கொள்ள செய்வது ஒன்றுதான். பொறுத்தமான் குறும் படத்தை எடுத்துப்போடுவதில் இருக்கும் அந்த பொறுத்தத்தின் ஆவரேஜ் 99.9% கண்டிப்பா இருந்துவிடுகிறது. ஆனால் டைமிங்தான் ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தனை வேகத்தில் எப்படி எடுக்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை.

2011/11/29 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு


மோர்சுப்ரா

temp-100-15246512.gif

துரை.ந.உ

unread,
Nov 29, 2011, 6:36:18 AM11/29/11
to panb...@googlegroups.com


2011/11/29 Jayaprakash N <naa...@gmail.com>

நானும் பாராட்டித்தான் சொன்னேன் மோர் ஜி..  :-))))
temp-100-44217071.gif அது :))


With Lots OF Love,
JP



2011/11/29 மோர் சுப்ரா <mors...@gmail.com>
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும்.இத்தனை அழகாய் ரொமான்ஸ் செய்யும் தலைவன் எவனும் இல்லை இங்கே...

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
temp-100-44217071.gif

மோர் சுப்ரா

unread,
Nov 29, 2011, 6:36:41 AM11/29/11
to panb...@googlegroups.com
ஹம்ம்ம்ம்... :)))

(அதுக்குத்தான் நீங்கள் விரும்பினும்,விரும்பாவிடினும்னு போட்டேன் )

2011/11/29 Jayaprakash N <naa...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு


மோர்சுப்ரா

It is loading more messages.
0 new messages