ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்
22)
துறந்தார் பெருமை துணைக்கூறி வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
அ)
துறந்தோரின் நற்பெருமை கூறல்; உலகில்
இறந்தோரை எண்ணுதல் போல்
ஆ)
துறவியர் நற்பெருமை கூறுதலின் ஞாலத்(து)
இறந்தோரை எண்ணுவ(து) எளிது
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்
26)
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
அ)
பெரியோர் பெரும்செயல் செய்வார்; சிறியோர்
பெருமைச் செயல்செய்யா தோர்
ஆ)
அருஞ்செயல் செய்வோரே சான்றோர் ; சிறியோர்
எனப்படுவோர் ஒன்றும்செய் யார்
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
அ)
புலம்ஐந்தும் ஆள்பவனைத் தேடிவந்து சேரும்
உலகினை ஆளும் பலம்
ஆ)
ஐம்புலன் ஆட்க்கொள்ளும் ஆற்றல் உடையோரை
என்றும் போற்றும் உலகு
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
விளக்கக் குறள் :
அ)
நற்பண்புச் சான்றோர் பெருங்கோபம் கொண்டால்
சிறுகணம் கூடநிலைக் காது
ஆ)
நற்பன்புச் சான்றோரின் கோபம் எதிர்த்து
ஒருகணம் நிற்கஇய லாது
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
அனைத்துயிர் அன்புகொண்(டு) அருள்புரிவார் அந்தணர்
என்ற அறஞ்செய் பவர்
ஆ)
அனைத்துயிர் அன்பால் அருளால் அறமாய்
அணைப்பார் அந்தணர்என் போர்