நினைவுகள்
ஓ வேப்பமரக்குயிலே உன்னை மீண்டும்,
என் வீட்டருகில் காண்பேன் , வேப்பமரம் இருக்கிறது என் வீடெங்கே, எனக்கும் உன் சிறகுகள் கொடு, வேலிகளுக்கு அப்பால் உன்னோடு , பறந்து திரிய பாட்டுப்பாட, வெயிலுக்கு குளுமை தரும்,
நாவல்மரக்காடே என் நிலைகண்டாயா, இந்த வருடம் உன் இடையில் கூட, துப்பாக்கியாமாமே, ஆனாலும் உறுதி உனக்கு , ஒரு குண்டு பட்ட என அப்பன் , மூச்சுவிட்டான் நிறந்தரமான, அன்று நடந்த சன்டைக்கு சாட்சியாக , உன்மீது பட்ட விழுப்புண்களாய், குண்டு பட்ட காயங்கள், முத்து என்றவுடன் தத்தி வரும் ,
நாய் குட்டியே இன்று , என்னையும் அழைத்து செல்வாயா, சிற்றீச்சை பழம் பறித்து , குளிர் ஓடையில் மணல்மேட்டில் இருவரும், மகிழ்ந்தாடுவோம் ஏன் மறந்தாய் எங்களை, அம்மா எங்கே? அப்பா எங்கே?
ஆசையாய் எனக்கு பண்டம் வாங்கிதரும் அக்கா எங்கே? அகதி அகதி என்கிறார்கள் கதியின்றி நிற்கும் என்னை யாரும் அனாதை என்று ஏன் சொல்ல வில்லை? ![]() goldentamilworld (yahoo groups)
tamilzan google groups
![]() |