--- On Mon, 6/7/09, desikan desikan <srithooppul@yahoo.com> wrote:
From: desikan desikan <srithooppul@yahoo.com>
Subject: விண்ணப்பம், 1,
To: "Dr.V.Sadagopan" <yennappan@computer.net>
Date: Monday, 6 July, 2009, 10:05 PM
தாஸன்,
லோகத்தில் வரம் என்ற சப்தத்தை கேட்டவுடன் நமக்கு நினைவு வருவது ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபு முதலானவர்கள் பெற்ற வரங்களாகும், இவர்கள் மிகவும் கடினமான தபஸ் செய்து அதனால் ப்ரீதியையடைந்த தேவர்களிடமிருந்து வரம் பெற்றார்கள்,
1அதுபோல் சம்பராசுர யுத்ததத்தில் கைகேயின் உதவியினால் மகிழ்ந்த தசரதன் இரண்டு வரங்களை தருவதாக கூறினார், அதையே பிறகு காலவிசேஷத்தில் கைகேயி பெற்றுக்ககொண்டாள் என்பதை ஸ்ரீமத்ராமாயணத்தில் காண்கிறோம்,
2ஸ்ரீமஹாலக்ஷியின் அனுக்ரஹத்தால் மீண்டும் இந்த்ரபதவியையடைந்த இந்திரன் பிராட்டியை குறித்து ஸ்தோத்ரம் செய்கிறான், அவனுடய ஸ்தோத்ரத்தால் ப்ரீதியையடைந்த பிராட்டியானவள் வேண்டியவரத்தை பெற்றுக்கொள்ளுமாறு वरं वृणीष्व यस्त्विष्टो वरदाहं तवागता,என்று
கூறினாள், இந்த்ரனும் இரண்டுவரங்களை கோருகிறான், முதலாவதாக இந்த மூன்று லோகத்தை எப்பொழுதும் விடாமலிருக்கவேணும், என்றும், இரண்டாவதாக யாதொருவன் இந்தஸ்தோத்ரத்தால் உன்னை துதிக்கிறானோ அவனையும் விடாமலிருக்கவேணும், என இரண்டுவரங்களை பெற்றான் என்பதாக உபப்ரஹ்மணமாக கூறப்படும் புராணங்களில் ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் காணலாம்,
3 இதுபால் ஹஸ்திகிரிமாஹாத்ம்யத்தில் ப்ரஹ்மா ஸத்யவ்ரதக்ஷேத்ரத்தில் அச்வமேத யாகம் செய்கிறார்,அதில் ஸ்ரீவரதன் அவதரித்தார், அவருக்கு திருவாராதனத்தை,அநேக உதஸவாதிகளை ப்ரஹ்மா செய்துவருகிறார், இதனால் ஸந்துஷ்டரான பகவான் வேண்டித்தெல்லாம் வரும் வள்ளலாய் வேண்டிய வரம் தருகிறோம் என்றார், ப்ரஹ்மாவும் காஞ்சீபுரத்திலேயே நித்யவாஸம் செய்யவேணுமென ப்ரார்த்தித்தார், அதன்படியே இன்றளவும், வரதன் வேகவடகரையில் புண்யகோடியுடியில் அடியார்களுக்கு ஸேவைஸாதித்து வருகிறார்,
இப்படியாக இன்னும் பல காணலாம்,ஆயினும் வேதத்தில் சிரிது மாற்றம் க்ண்கிறது, அதாவது கொடுப்பவர் கேட்டு கொடுக்காமல் பெறுபவர் கேட்டுப்பெறுவது என,
.
வேதத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கர்மாவை விதிப்பதின் பொருட்டு அங்கு ப்ரஸங்கரூபமாய் ஒரு வ்ருத்தாந்தத்தை தெரியப்படுத்துவது என்பதாக காண்கிறோம்,இந்த க்ரமத்தில் தேவர்களும் மற்றவர்களும் கேட்டுப்பெறும் வரங்களை நாம் சிறிது காண்போம்.
தற்சமயம் தாஸனுக்கு 32 வ்ருத்தாந்தங்கள் கிடைத்துள்ளன., அவைகளை விஞ்ஞாபித்துக்கொள்கிறேன், திருத்திப்பணிகொள்ளவும்.
தாஸன்,
(वेगवत्युत्तरे तीरे पुण्यकोट्यां हरिस्स्वयम्। वरदस्सर्वभूतानां अद्यापि परिदृश्यते.)