கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Jan 27, 2021, 10:24:38 PM1/27/21
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். சீற்றம் வளர்கிறது என்றால் முதலில் ஒரு மனிதனை எரித்து, அடுத்த தொகுதியில் ஊரை எரித்துப் பின் அதற்கடுத்துப் பிரபஞ்சத்தை எரிக்கிறது என்கிற பொருளை எடுத்துக் கொண்டுவிடலாகாது. அவரது சீற்றம் முதலில் சகமனிதனின் தவிப்பைக் காணாது செல்லும் கீழ்மை கண்டு எழுகிறது. பின் அது இம்மாதிரி இழி மனிதர்கள் முன்னால் ஏன் நிற்கிறாய் என்று இரைபவனை நோக்கியும் சீறுகிறது. பின் இதைக் கண்டு நீ என்ன செய்தாய் என்று தெய்வத்தின் மீதும் சீறுகிறது. அது ஒரு சீற்றம்தான் என்றாலும் சாபம் அல்ல. யாரையும் அழிந்து போ என்று ஆசிரியர் சபிப்பதில்லை. அது ஒருவகை கனிவே. இறுதியில் இம்மாதம் ஆவநாழியில் வெளியான அவரது சமீபத்தியக் கதைவரை படித்தபின் அடித்துச் சொல்ல முடிகிறது. அவை அனைத்தும் வெறும் கனிவாகவே எஞ்சி நிற்கின்றன என்று.
Reply all
Reply to author
Forward
0 new messages