நான் சிறுவனாக இருந்த காலத்தில் கதை எழுதியவர்களும் சினிமா எடுத்தவர்களும் ரிக்க்ஷாக்காரனுக்கு
, வேலைக்காரனுக்கு
, காவல்காரனுக்கு
, வேலைக்காரிக்கு
, பூக்காரிக்கு முனியன்
, முனியாண்டி எனப் பெயர் சூட்டினர்
. ஆபீஸ் மேனேஜரின் செக்ரட்டரியாக இருப்பவள்
, எந்த நேரத்திலும் மேனேஜர் மடியில் ஏறி அமரத் தயாராக இருப்பவள்
, குட்டைப் பாவாடை போடுபவள்
, லிப்ஸ்டிக் பூசுபவள் பெயர் அன்றெல்லாம் ஸ்டெல்லா
, மேரி
, நான்சி என்றே இருக்கும்
. எப்போதும் வரலட்சுமி
, காமாட்சி
, செங்கமலம் என்று இருக்காது
. அலுவலகம் கூட்டிப் பெருக்கித் துடைப்பவள் முனியம்மா
. வாட்ச்மேன் முனிசாமி
, ப்யூன் முனியன்
. இது அன்றைய எழுத்தாளர்
, சினிமாக்காரர் சமூக நீதி
!