இரண்டு கல்லூரிகள், ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவரியருடன் இரண்டு நாட்கள் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட வலுவான எண்ணம், சாதாரண வசதிகள்கூட இல்லாமல் கற்கும் இம்மாணவர் இந்நாட்டில் சகல வசதிகளுடனும் கற்கும் மாணவருடன் போட்டியிட்டுத்தானே வெல்ல வேண்டும் ? ஆனால் வாழ்க்கையில் கற்ற பாடங்கள் தெம்பு தந்தன. போராடும், பாடுபடும், உழைக்கும் துணிவும் ஆற்றலும் உடைய எம் மாணவரை உலகின் எத்தகு செல்வாக்குள்ள சக்தியும் தோற்கடிக்க இயலாது.