நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை அவர்களே வாங்கித் தந்து விடுவதாகவும் சொன்னார்கள். பெண் , பெற்றோருக்கு ஒற்றைக்கொரு மகள் என்பதால் அவர்களது வீட்டோட இருந்து கொள்ளலாம் என்றனர்