தமிழ்மணம் - தமிழ் இலக்கியங்களில்
தமிழ்மணம் (
http://tamilmanam.net ) 5 ஆண்டுகள் நிறைவுவிழாவை
இன்னும் 3 வாரங்களில் கொண்டாட இருக்கிறது.
தமிழ்மணம் குழுவின் உழைப்பு, நிரல் எழுதுகை,
நிதி நல்கையால் 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன!
தமிழ் இலக்கியங்களில் தமிழ்மணம் என்ற சொல்லாட்சி
உள்ளதா? 20-ஆம் நூற்றாண்டு அல்லது அதன் முன்னர்.
நேற்று பாரதிதாசனின் காதல் பாட்டுகள் நூலில்
கிடைத்த பாடலைத் தருகின்றேன். இணையத்திலே
நேரத்தைச் செலவிடுவதால் மனையாளின்
சீறாட்டு! தமிழ்மணமே கதியென்று இருப்போருக்குப்
பொருத்தம்தான்!
தமிழ்வாழ்க்கை
(காதலி கூற்று)
~ புரட்சிக் கவிஞர்
தமிழ் வாழ்க்கை
பாரதிதாசன்
இரண்டடிதான் வாழ்க்கைத்துணை
என்றானே - என்னை
ஏறெடுத்துப் பார்க்காமலே
சென்றானே
திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும்
கூத்துண்டா - அவள்
சிலம்பொலிதான் தித்திக்கின்ற
கற்கண்டா? (இரண்டடிதான்)
மேகலையும் கையுமாக
வாழ்கின்றான் - என்
விருப்பம் சொன்னால் சீறி
என்மேல் வீழ்கின்றான்
சாகையிலும் அவள் அகமே
தாழ்கின்றான் - அவன்
தமிழ்மடந்தை புறப்பொருளே
சூழ்கின்றான் (இரண்டடிதான்)
தமிழ்மணத்தில் என்னையும்வை
என்றேனே - அவன்
தனிமனத்தில் இருநினைவா
என்றானே
தமியாளும் இந்தி அன்றோ
என்றேனே - நான்
தமிழனடி என்று சொல்லிச்
சென்றானே!
உங்கள் உதவிக்கு நனிநன்றி!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com