மணியின் வழிவந்த இலய மணி!

3 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jun 2, 2009, 10:22:16 PM6/2/09
to Nallisai Group
கர்நாடக இசை உலகின் மூத்த மிருதங்க மகாவித்வானாக விளங்கிய பாலக்காடு ஆர்.ரகு (81) செவ்வாய்(02/06/09) காலை சென்னையில் காலமானார். அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கர்நாடக இசை உலகின்
  • இளம் வாய்ப்பாட்டு வித்வான் அபிஷேக் ரகுராம்
  • மிருதங்க வித்வான் ஆனந்த்
ஆகியோர் ரகுவின் பேரன்கள்.

மிருதங்க வாசிப்பு மரபில் தஞ்சாவூர் பாணியை, மறைந்த
லயமேதை பாலக்காடு மணி ஐயருக்குப் பின் ஏந்தி நின்ற அரிய கலைஞர் ரகு. அவரது மறைவு லய உலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamani.com/Images/article/2009/6/3/3music.jpg
குரு மணி அய்யருடன்...

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாக விளங்கிய பர்மாவின் தலை நகர்
ரங்கூனில் ராமசாமி ஐயர் - அனந்தலட்சுமியம்மாள் தம்பதிக்கு 1928ஆம் ஆண்டு ரகு பிறந்தார். ராமசாமி ஐயர் பர்மாவில் பணி புரிந்துவந்தார். ரகு மிக இளம் வயதிலேயே லயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். இந்தியாவிலிருந்து பர்மாவுக்கு அவ்வப்போது வரும் லய வித்வான் திண்ணியம் வெங்கட்ராமய்யரிடம் ஆரம்பகால லய பாடங்களை ரகு கற்றார். பின்னர் திருச்சி ராகவையரிடமும் லய பாடங்களைக் கற்றார்.

இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவரது குடும்பம் இந்தியா வந்தது. இந்தியா வந்த பிறகு அவர்
லய மேதை பாலக்காடு மணி ஐயரிடம் நேரடியாக மிருதங்க சிட்சை பெற்றார். அது அவரது வாழ்வில் பெரிய திருப்பம். ஏதேனும் ஒரு மிருதங்க வாசிப்பை ஒரு முறை கேட்டாலும் போதும்...அதைச் சித்திரம் போல மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் ரகுவுக்குக் கிடைத்த வரம். அத்தோடு இணையற்ற லய மகாவித்வானாகிய மணியின் சிட்சையும் சேர்ந்து ரகுவை மிருதங்க மணியாகப் பட்டை தீட்டியது.

அன்றைய மூத்த வித்வான்களாக விளங்கிய
  •  அரியக்குடி
  • மதுரை மணி
  • ஜி.என்.பி.
  • செம்பை
  • செம்மங்குடி
  • கே.வி.நாராயணசாமி
உள்ளிட்ட பலருக்கும் அவர் வாசித்திருக்கிறார்.

ரகுவின் வாசிப்பை ஜி.என்.பி. மிகவும் பாராட்டி ஊக்கம் தந்தார்.அந்த நாளில் மிருதங்கக் கல்வியோடு, கல்லூரிக் கல்வியையும் சிறப்பாக முடித்தார் ரகு. கணிதப் பிரிவில் பட்டம் பெற்ற ரகு, பிற்காலத்தில் வித்வான்களின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் பல்லவிக் கணக்குகளிலும் நிகரற்று விளங்கியவர்.ரகுவின் வாசிப்பில் அவரது கணக்குகள் மிகத் துல்லியமாக பளிச்சென்று இருக்கும். கணக்கில் வழ வழாவே அவரிடம் பார்க்க முடியாதென்று லய விற்பன்னர்கள் கூறுவார்கள். அது நூற்றுக்கு நூறும் உண்மை.தன் குருநாதரான பாலக்காடு மணி போட்டுக் கொடுத்த லய மார்க்கத்தின் ஆதாரஸ்ருதி கலையாமல் உள் வாங்கிக் கொண்டு அந்த மரபு குலையாமல் அதிலேயே தனக்கென புதிய பாணியை வடித்தெடுத்தவர் அவர்.

மரபுகளைக் குலைக்காதவர் ஆயினும் வேறு பாணிகளிலிருந்து நல்ல அம்சங்களைக் கை கொள்வதை அவர் தவிர்க்கவில்லை. குறிப்பாக அன்றைய
லயசிம்மங்களில் ஒருவரான பழனி சுப்பிரமணியப் பிள்ளையின் வாசிப்பிலிருந்து சில அம்சங்களை தன் பாணியின் மரபு குலையாமல் அவர் பயன்படுத்தினார்.

திருச்சூர் நரேந்திரன், திருவனந்தபுரம் வைத்தியநாதன் முதல் மனோஜ் சிவா வரை ஏராளமான சிஷ்யர்களை உருவாக்கியவர் அவர். பத்மஸ்ரீயிலிருந்து சங்கீத கலாநிதி வரை எத்தனையோ விருதுகளைப் பெற்றவர். எல்லாவற்றையும் விட சங்கீத
ரசிகர்களின் மனத்தில் என்றென்றும் நீங்காத பெருமையையே மாபெரும் விருதாகப் பெற்றவர் அவர்.

நன்றி:- தினமணி
Reply all
Reply to author
Forward
0 new messages