மிருதங்க கலைஞர் மன்னார்குடி ஈஸ்வரன்
உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் சங்கீத நாடக அகடமி விருதுகளை
வழங்கி கவுரவித்தார்.
இசை, நாட்டியம், நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த
சேவையாற்றிய கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி
கவுரவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகடமி விருதுகள்
நேற்று (14/07/09) புதுடில்லியில் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இந்த விருதுகளை
வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தை
சேர்ந்த,
- மிருதங்க வாத்திய கலைஞர் மன்னார்குடி ஈஸ்வரன்
- பரதநாட்டிய கலைஞர்
சரோஜா வைத்தியநாதன்
- குச்சுபுடி நடன கலைஞர்கள் வசந்தலட்சுமி மற்றும்
நரசிம்மாச்சாரி ஆகிய இருவருக்கும் இணைந்ததாக விருது
- நாடகத்துறையில்
சிறந்த சேவையாற்றிய இராமானுஜம்
ஆகியோருக்கு சங்கீத நாடக அகடமி விருதுகள்
வழங்கப்பட்டன.
இந்துஸ்தானி கலைஞர் பூபேன் ஹசாரிகா உட்பட நாடு முழுவதும்
மொத்தம்
33 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருது,
- 50
ஆயிரம் உரூபாய் ரொக்கமும்
- அங்கவஸ்திரமும்
- தாமிர பட்டயமும்
அடங்கியது.
- இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகா
- பிரபல நடன கலைஞர் சித்தாரா தேவி
உள்ளிட்ட
34 கலைஞர்களுக்கு நேற்று (14/07/09) இந்த விருது வழங்கப்பட்டது.
நன்றி:- தினமலர்