Fwd: Read fully..its very interesting....

7 views
Skip to first unread message

renuga siva

unread,
Jan 7, 2013, 11:15:40 PM1/7/13
to mtechcse2011-13, p.sangeethaperumal, pandiselvi, tk priya, ponmalaicse08, packia3385
---------- Forwarded message ----------
From: anees appas <anees...@gmail.com>
Date: Sat, 20 Oct 2012 12:30:30 +0530
Subject: Fwd: Read fully..its very interesting....
To: aswathi sound <aswathi...@gmail.com>, ar ch
<archu...@gmail.com>, tharun priya <priya...@gmail.com>, Bala Devi
P <er.p.b...@gmail.com>, "a.rathika" <a.ra...@rocketmail.com>,
jannath firthows <babyj...@gmail.com>, Mohammed Ibrahim Jailani
<jai....@gmail.com>, jasmine syed
<jasmine.sye...@gmail.com>, sugasini k
<k.suga...@gmail.com>, "p.sangeetha Perumal"
<p.sangeet...@yahoo.com>, Parimal Parimala
<parimal...@yahoo.com>, Shahul Hameed <pkt.s...@gmail.com>,
renuga siva <rs6...@gmail.com>, Selvi Rajagopal
<selvira...@gmail.com>, Yaamini Kaliamurthi
<skyaa...@gmail.com>, vanaja srilatha <vanaja...@gmail.com>,
gayathri kalyani <vskga...@gmail.com>, ys_suneetha
<ys_su...@hotmail.com>

---------- Forwarded message ----------
From: lakshmi prabha <lp8...@gmail.com>
Date: 2012/10/20
Subject: Fwd:Read fully..its very interesting....
To: engineeri...@googlegroups.com, "ECE R.Priya" <
priyaram...@gmail.com>, kavithal...@gmail.com, Ammu <
amu...@gmail.com>, BackyaLakshmi <r.backi...@yahoo.co.in>, Jeeva
Sathya <gvsh...@gmail.com>, Lalitha <lalith...@gmail.com>, Maggi <
maragat...@yahoo.com>, Manjula <s.manj...@yahoo.in>, My Dear <
venkatesw...@yahoo.com>, Nancy Rani <nancydh...@gmail.com>,
Nandhini <nandhin...@gmail.com>, seetha n <seethan...@gmail.com>


> தெரியாம தான் கேட்கிறேன் இது தேவையா?
> **
>
>
>
>
> எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று
> சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு
> செய்தார் அவர்.
>
> தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.
> அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன்.
> இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள்
> இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன்,
> என்றார் அவர்.
> கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற
> எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.
> முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று
> கேட்டார்.
>
> கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து
> துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும்
> பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம்
> முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத்
> துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே
> நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக்
> கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று
> கெஞ்சியது.
>
> சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு
> ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.
> இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.****அடுத்ததாக
> இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.
> கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க
> வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும்.
> அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால்
> எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.
> உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து
> விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.
>
> மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.
> **குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று
> கேட்டார், கடவுள்.
> பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம்
> ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக
> நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ
> செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான்.
> முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது
> எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய
> முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.
>
> இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.
> குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. ****கடைசியாக இருந்த
> மனிதனை அழைத்தார் கடவுள்.
> உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.
> கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும்.
> அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள்
> குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும்
> முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.
>
> நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச்
> சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது
> எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான்
> அவன்.
> இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு
> ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது
> ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக்
> கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று
> கேட்டார் கடவுள்.
>
> மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.
> எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள்
> கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.****
> கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத்
> தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த
> காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால்
> கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின்
> ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத்
> தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான்.
> நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக்
> காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல
> வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான்.
> அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம்
> குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும்
> குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல
> வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக்
> காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.
> **
> ****
> எண்பது வருஷம் கேட்டு வாங்கின பெரிய மனுஷன் மட்டும் என்கைல கிடைக்கட்டும்...*
> *நாலு கேள்வி நாக்கை புடுங்குறமாதிரி **
> **
> [image: Join Only-for-tamil]
> **
> **
> *நட்புடன்...*
> <http://groups.yahoo.com/group/Only-for-tamil/join>
>

*Divya*

> [image: Join Only-for-tamil]
> <http://groups.yahoo.com/group/Only-for-tamil/join>
> __._,_.___
>


--

* ~~~~DivyaStar~~~~*

**

--
~Sweety.R

Reply all
Reply to author
Forward
0 new messages