Fwd: Fw: [ALUMINI] college

11 views
Skip to first unread message

kannan t

unread,
Nov 9, 2010, 12:51:41 AM11/9/10
to mse...@googlegroups.com
Hi,
 
not my message our seniors message
 
What we did we follow seniors.
 
Regards
kannan

---------- Forwarded message ----------
From: raja ramanathan <raja...@yahoo.co.in>
Date: 2010/11/3
Subject: Fw: [ALUMINI] college
To: tkan...@gmail.com




----- Forwarded Message ----
From: N.Sankara vadivel <sank...@hotmail.com>
To: MSEC GROUPS <ms...@yahoogroups.com>
Sent: Tue, November 2, 2010 9:48:45 AM
Subject: [ALUMINI] college

 

யாரோ ஒரு முன்னாள் மாணவன் (முகமது சதக் பொறியியல் கல்லூரி) எழுதிய வலைப்பூ  
 
 
 

Friday, January 9, 2009

கல்லூரி சாலை : முதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம்.

நான் படித்த சுய நிதி பொறியியல் கல்லூரியில், ஏறத்தாழ அனைத்து கல்லூரி நிர்வாக முடிவுகளும் கல்லூரி முதல்வரேதான் எடுப்பார்.கல்லூரி நிர்வாகம் எனக்கு தெரிந்தவரையில் தலையிட்டதில்லை.விழாக்களுக்கு மட்டுமே வருவர்.உதாரணமாக அங்கே இருக்கும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் இறைப்பவர்க்கு சம்பளம் கொடுப்பது முதல் சரஸ்வதி பூஜைக்கு நூலகத்தில் சுண்டல் கொடுப்பது வரை.

இப்போ எனக்கும் கல்லூரி முதல்வருக்குமான பாசப்பிணைப்பை மட்டும் எழுதறேன். முதலாண்டு படிக்கையில் மாசம் ஒருமுறை லீவு கேக்க போவேன்,ஒரு நாளும் அவர் மறுத்ததில்லை ஆனால் நண்பர்கள் லீவு கேட்டு அறை வாங்கி வந்திருக்கிறார்கள்.நான் தப்பித்தே வந்தேன்.

இரண்டாம் ஆண்டு படிக்கும்போது காலேஜ் பக்கம் அவ்வளவா(சுத்தமான்னும் வெச்சுக்கலாம்) போறதில்லை,கொஞ்சம் பெரிய ஆளுன்னு மத்தவங்களா நெனச்சிக்கிட்டாங்க போல,நானும் நண்பர் பாரிசும் ஹிட் லிஸ்ட்ல சேர்க்கப்பட்டோம். இரண்டாமாண்டு நண்பர் ஒருநாள் முதலாண்டு மாணவர்களை ராகிங் பண்ணும் போது அவர்களோடு ஏதோ பிரச்சினை,கேள்விப்பட்ட இரண்டாமாண்டு மாணவர்கள் எல்லாம் ஒரு இரவில் முதலாண்டு மாணவர் விடுதி புகுந்து கட்டையால கணிசமான மக்களை அடிச்சிட்டு வெற்றிகரமா யாருக்கும் தெரியாம விடுதிக்கு திரும்பிட்டாங்க.இரவோடு இரவா முதல்வருக்கு செய்தி போயாச்சு.

அடுத்த நாள் காலைல நான் ஊருலேந்து விடுதிக்கு வரேன் பசங்க மேலே நடந்த விசயத்தை சொன்னாங்க, நான் ரொம்ப நொந்து போயிட்டேன் நாமளும் நம்ம வீரத்தை காண்பிக்க கிடைச்ச வாய்ப்பு காலி ஆயிடுச்சுன்னு.சோகத்தோட காலேஜுக்கு போனேன், முதல்வரிமிருந்து நோட்டீஸ் வந்தது அடித்தவர்கள் லிஸ்டல நானும் பாரிசும் இருந்தோம், அவனும் சம்பவம் நடந்தப்ப விடுதில இல்லை.

கண்ணாடி போட்டுட்டு போனா அடிக்க மாட்டாருன்னு ஒரு நம்பிக்கை, நான் ஒரு கண்ணாடி போட்டிருந்தேன் அத போட்டிட்டு போனேன். லிஸ்ட்ல உள்ள ஆறு பேரும் வரிசைல நின்னோம். அதுல என்னையும் பாரிசையும் தவிர மத்தவங்கெல்லாம் நல்ல பேரு உள்ள பசங்க, அவங்கள பாத்த முதல்வர் வெங்கட்ன்னு ஒரு நண்பர பாத்து நீயுமா அடிச்சன்னு சொல்லி எல்லாரையும் போகச்சொல்லிட்டார்.வெங்கட் புண்ணியத்துல அடி வாங்காம தப்பிச்சாச்சு ஆனாலும் ஒரு உறுத்தல் ஏன் தேவையில்லாம நம்ம பேர எழுதி கொடுங்கராங்கன்னு.

இன்னொரு சம்பவம் இறுதியாண்டு தேர்வு விடுமுறைக்கு முன் கடைசி வகுப்புக்கு முந்திய நாள். எல்லாரும் டவுணுக்கு போயி கொண்டாடிட்டு வந்தோம். கொண்டாட்டத்தின் உச்சத்தில் எங்களால் கடைசி வரை கட்டுப்படுத்த முடியாமல் போன ஒரு அப்பாவி நண்பர்,ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டு கண்ணாடிய உடைச்சிட்டான்,இந்த நேரத்திலேயும் நாங்க எல்லாரும் மெஸ்ல இருந்தோம்.இவன் தனியா வெறிபிடித்த மாதிரி போய் கண்ணாடிய உடைச்சிட்டான்.கையில பெரிய காயம். நாங்க எல்லாரும் பக்கத்து டவுணுக்கு ஓடிட்டோம்.
அப்புரம் நள்ளிரவில் திரும்பவும் ஹாஸ்டல் போயி முதல்வர்கிட்ட மன்னிப்பு கேக்கிற முடிவ இறுதியாண்டு நண்பர்கள் ஆலோசனைப்படி எடுத்தோம்.

இப்போது முதல்வர் அறை, கண்ணாடி உடைத்தவரை கேட்டார் என்னத்த குடிச்சிட்டு உடைச்ச?

அப்பாவி: கள்ளு சார்.

முதல்வர் : கள்ளா? எவ்வளவுக்கு குடிச்ச?

அப்பாவி: ரெண்டு மட்டை சார் பத்து ரூபாய்க்கு.

முதல்வர் : ஏண்டா நாயே பத்து ரூபாய் கள்ள குடிச்சிபுட்டு பத்தாயிரம் ரூபாய் கண்ணாடியே உடைச்சிருக்க. are you proud of doing this?

அப்பாவி: யெஸ் சார்.

முதல்வர் : என்னது யெஸ் ஸாரா வெட்கமா இல்ல?உங்கப்பா என்ன பண்றார்?

அப்பாவி: நோ சார்,விவசாயம்

முதல்வர் : மாடு இருக்கா வீட்டில எத்தனை மாடு இருக்கு?

அப்பாவி: 5 மாடு இருக்கு சார்.

முதல்வர் : நீ ஒரு மாடு உன்னையும் சேத்து கட்டிப்போடச்சொல்லு, அந்தக்கயித்துல, வாட்ச்மேன் இவனுங்கள கட்ட நல்ல மாடு கட்டற கயிறு வாங்கிட்டு வா காலேஜ் கேட்ல கட்டிப்போடனும் இவனுங்கல.

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்

பாரிஸ் : மலேசியாவில இருக்கார்.

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்.

நான் : வாத்தியார்

முதல்வர் : உங்கப்பா கண்ணாடிய உடைச்ச பையன என்ன பண்ணுவார், சொல்லு நானும் அதையே பண்ணுரேன்.

நான் : மவுனம்

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்

நெட்டையன் : இறந்துட்டார்.

முதல்வர் : அம்மா

நெட்டையன் : அவங்களும் இறந்துட்டாங்க.

முதல்வர் : உங்கப்பா?

டொல்பி : இரண்டு பேரும் இறந்துட்டாங்க..

சரி இனிமே செய்ய மாட்டேன்னு எல்லா கிளால் ரூம்லயும் போயி மன்னிப்பு கேக்கனும் அப்ப்டின்னாரு? முதல்ல எங்க கிளாஸ் எல்லாரையும் பாத்து வெற்றிப் புன்னகையோட சிரிச்சோம்.முதல்வரின் மருமகன் தான் வழிநடத்தி சென்றார். எங்கள் வகுப்பு முடிந்த உடன் ஜீனியர் வகுப்புக்கு போக முடியாதுன்னு நான் சொல்லிட்டேன்.அவரும் சரின்னு சொல்லி பிரச்சினையின் விபரீதம் புரிந்து முதல்வரிடம் திரும்ப போயி மன்னிப்பு கேட்டாங்கன்னு சொல்லிட்டார். இந்த முறையும் தப்பிச்சோம் அடிவாங்காம..

கவலைப்படாதீங்க அடுத்த பாகத்தில ...........

Tuesday, January 13, 2009

முதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம் - பாகம் 2

கல்லூரி நான்காம் ஆண்டு வகுப்புகள் முடிந்து, தேர்வுக்கு முந்தைய விடுமுறை, இந்த விடுமுறையில் என்ன பாடம் இருக்கிறது என்று பெயர் தெரிந்து நோட்ஸ காப்பி எடுத்து படிக்கனும்.

பெரும்பாலான தேர்வு விடுமுறை நாட்களில் சிலர் விடுதியில் இருப்பது வழக்கம், அந்த நேரத்தில் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால்.அதில் நானும் ஒருவன். நண்பர் நெட்டையன் எந்தக்காலத்திலும் விடுதிக்கோ கல்லூரிக்கோ வந்து தொடர்ந்தார்போல் பத்து நாள் கூட தங்க மாட்டான்.

இந்த முறை திடீரென ஒருநாள் வந்தான்.இரவு எட்டு மணியளவில் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் காமராஜ் கடையில் சாப்பிடும் முடிவோடு நின்றிருந்தோம், நெட்டையன் சொன்னான் டவுண்ல போய் மீன் சாப்பிட்டு வருவோம்.ஆனா காலேஜ் கேட்,ஹாஸ்டல் கேட் இரண்டுமே 9 மணிக்கு பூட்டிருவாங்க.அப்புரம் நேர்மையா சுவரேறியோ வேலியேறியோ குதிச்சுதான் போகனும். பாம்புகள் தொலலை வேற கூட்டமா இருந்தா துணிச்சல் வரும்,எங்க ரெண்டு பேருக்கும் அப்போ அந்த துணிச்சல் வரவில்லை.நெட்டையன் சொன்னான் முதல்வர் வீடு எதிர்லதான இருக்கு வா போய் கேட்டுட்டு போய் சாப்பிட்டு பத்து மணிக்கு வருவோம்னான்.

சரின்னு போயி முதல்வர் வீட்டு காலிங் பெல்ல அடிச்சேன், வெளில வந்தாரு உன் பேரெண்ணன்னு கேட்டாரு,சொன்னேன் அடுத்த நிமிடம் கழுத்து பகுதியில் ஒரு நாளு அறை விழுந்தது.என்னடா பேர சொன்ன உடனே அடிக்கிறாருன்னு ஒன்னுமே புரியல. நெட்டையன பாத்து இந்த நாய் கூட ஏன் சேருற அப்படின்னு வேற சொன்னார். ஓடிப்போயிருன்னார்.

நெட்டையன் கிட்ட கேட்டேன் எதுக்குடா மனுசன் அடிச்சார்னு, அதுக்கு அவன் பிரின்ஸி அடிக்கிரது சாதாரண விசயந்தானே ஆனா என்னப்பாத்து நல்லவன்னு சொல்லிட்டாரு உங்கூட சேரகூடாதுன்னு சொல்லிருக்காரு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடான்னு சிரிச்சான்.

விதிய நொந்து காமராஜ் கடைல காஞ்ச புரோட்டாவை இழுத்துக் கொண்டிருந்தோம்,கணேசனிடம் என்ன உங்கண்ணன் ஆர்சி கடை தொறக்கலயான்னு கேட்டப்ப அவன் கடை அடுப்புல பூனை தூங்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டுருக்கும்போதே வாட்ச்மேன் வெள்ளையன் எங்களை தேடி வந்தார், என்னப்பா பிரின்ஸி நீங்க உள்ள வந்துட்டீங்களான்னு கேட்டு பத்து வாட்டி போன் பண்ணிட்டாரு,சீக்கிரம் சாப்பிட்டிட்டு வாங்கண்ணார்.

அடுத்த நாள் 9 மணிக்கு என்னை மட்டும் பிரின்ஸி ரூமுக்கு வரச்சொல்லி ஹாஸ்டல் வார்டன் கூட்டிட்டு போனார். என்னை நிக்க வெச்சிட்டு சிவில் டிபார்ட்மெண்ட்ல புதுசா வந்திருந்த HOD ய கூப்பிட்டார்.

அவருகிட்ட என்னக்காட்டி இந்த நாய்தானே வேலியேறிக் குதிச்சதுன்னார். அவரு என்னப்பாத்து இல்ல இவரு சிவிலே இல்லண்ணார். அப்பதான் எனக்கும் புரிஞ்சது என் பேர்ல சிவில் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் இருந்தான் அவன் மேல இவரு புகார் கொடுத்திருக்கார்.அதுக்காகத்தான் நான் போய் காலிங் பெல் அடிச்சவுடன் பேர கேட்டிருக்கார்,சொன்னவுடன் அடிச்சிருக்காருன்னு.

உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.

நம்ப முடியாத மாதிரி இருக்குல்ல, ஆனா அப்படிதான் அவர். தேர்வுக்கட்டணம் எழுதாட்டியும் தேர்வு எழுதவும் விடுவார். இப்படி அடிக்கவும் செயவார். மொத்தத்தில அவர் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்கவேண்டும். அந்த முதல்வர் இப்போது உயிருடன் இல்லை

 

 

Tuesday, August 11, 2009

அறிவு.

ஹாஸ்டலில் போரடித்துப்போன அறிவு ஒருநாள் எங்களிடம் ,டேய் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி வாங்கடா, ரெண்டு மணி நேரத்தில வீட்டுக்கு போயிரலாம் .

சரிடா ஹாஸ்டல் சாப்பாடும் கடுப்பா இருக்கு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் வரோம்டா,சாப்பாடு வெயிட்டா இருக்கனும். நான், ஷேக், மதிமாறன்,ஸ்டீபன் உட்பட ஆறு பேர் மேலூருக்கு அருகில் உள்ள அறிவின் குக்குக்குகிராமத்திற்கு சனி,ஞாயிறு சாப்பாட்டுகான பயணம்.

மேலூரில் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், அறிவு எங்களிடம் சொன்னான் பக்கத்து ஊருக்கு போற பஸ் போயிருச்சு நடந்துதான் போகனும், ஏழு கிலோமீட்டர்தான் ஒரு மணிநேரத்தில போயிரலாம்.

என்னடா சொல்ற?

அந்த நேரத்தில் அங்கே வந்த அறிவின் அப்பா, என்னடா அறிவு நீ எப்ப வந்த?

இப்பதான் வந்தேன் ,இவங்கெல்லாம் என்னோட படிக்கிறாய்ங்க, நம்ம ஊரை சுத்திக்காட்டலாம்னு கூட்டியாந்தேன்.

நல்லது , நான் மாட்டு வண்டிலதான் உரம் எடுக்க வந்தேன், உரத்தை ஏத்திட்டு நீங்க எல்லாரும் வண்டில போங்க தம்பிகளா வயசான நான் உங்க கூட வந்த நல்லா இருக்காது,நான் அப்புரமா வரேன்.
----------------------------------
அறிவின் ஊர் மொத்தம் 25 குடும்பங்களே உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம். அறிவு வீட்டு வாசலில் வண்டி நின்றவுடன் அறிவின் தம்பி நிலவும் அவங்க அம்மாவும் எங்களை வரவேற்றனர்.

ஏண்டா அறிவு சொல்லிட்டு வந்திருக்கலாம்லடா? காலை சாப்பாட்டுக்கு இட்லி தோசைக்கு ஊற வெச்சிருக்கலாம்லடா?

பரவாயில்லைம்மா நாங்க இருக்கிறத சாப்பிட்டுக்கறோம்.

என்னடா அறிவு இவ்வளவு சின்ன ஊரா இருக்கு.?

இப்ப இருட்டிருச்சு காலைல எந்திரிச்சி ஊர் சுத்தி பாப்பம்டா, நிறைய வயல் இருக்கு பெரியாத்துப்பாசனம் பச்சப்பசேல்னு இருக்கும்டா? அப்ப பாரு ஊரு பெரிசுன்னு சொல்வீங்கடா.!

அடுத்த நாள் காலையில் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

எல்லாரும் செருப்ப கையில எடுத்துக்கங்கடா , கம்மாங்கரைலதான் சாமி இருக்கு செருப்பு போட்டு நடக்கக்கூடாது?

சரளைக்கல்லா இருக்கு குத்துமேடா?

அதெல்லாம் குத்தாது எல்லாம் சாமி நடக்கிற பாதை, நீ நடந்து பாரு குத்தாது...

என்ன நிலவு ஓரளவு விவசாயம் பண்றீங்க ? ஆனால் எல்லார் வீடும் குடிசை வீடாவே இருக்கே ஏன்?

வசதியெல்லாம் பரவாயில்லை, இங்க யாரும் அவ்வளவா படிக்கலை, அண்ணன் தான் முதன்முதலா இஞ்சினியரிங்க் படிக்குது, இந்த ஏரியாவில அடிக்கடி சாதி சண்டை வரும், அதுக்கு கோர்ட் கேஸ்னு செலவுக்கே நிறைய செலவு ஆகும், அதுக்காக மட்டுமே எங்க ஊரு சார்பா 25 லட்சம் ஃபண்டு இருக்கு.

என்ன சொல்றீங்க இதை வெச்சே எல்லாரும் ஒரு நல்ல ஓட்டு வீடு கட்டிக்கலாம், ரோடு போட்டுக்கலாம் வசதியை பெருக்கிக்கலாமே, ஏன் அந்த சாதி காரங்க கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க? இரண்டு பேரும் சேந்தே முன்னேறலாமே?

அது அப்படியே ஆகிப்போச்சு, நாங்க படிச்சு பெரிய ஆளாகி எதாவது நடந்தாதான் உண்டு.

'பாரதிராஜா இந்த ஊரை வெச்சி ஒரு படம் டிரெக்ட் பண்ணலாம்' - எங்களில் ஒருத்தன்

என்ன தம்பி இஞ்சினியருக்கு படிக்கறீங்க டிரெக்ட் அப்படிங்கறீங்க அது டைரக்ட், டைரக்சன்னு சொல்லனும்- அறிவின் பங்காளி வீட்டு அண்ணன்.

அவரு நல்லா இங்கிலீஸ் பேசுவாரு ஜெர்மனியருதி போயி ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்காரு-- நிலவு..

அது ஒரு கதை தம்பி மலேசியா அனுப்பறேன்னு ஒரு திருட்டு கும்பல் கிட்ட காச குடுத்து , கடைசில ஜெர்மனி ஜெயிலில் இரண்டு வருசம் இருந்தேன்.

----------------

மீண்டும் அறிவின் வீடு.

அறிவின் அம்மா எல்லாருக்கும் பசுமாட்டுத்தயிருடன் பழையசோறு கலந்து சிறிய வெங்காயத்துடன் எல்லாருக்கும் காலை உணவு தந்தார், அமிர்தமாக இருந்தது, மதியம் அறிவு வீட்டில் இருந்த சில நாட்டுக்கோழிகள் எங்களுக்கு உணவாகின, இரண்டு நாளும் இப்படியே கழிந்தது.

தம்பிகளா தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வாங்க? நம்ம நிலவு மேலூர்ல வெடிக்கடை போடுறான் அவன் கூட இருந்து பாருங்க.சும்மா படிச்சா மட்டும் போதாது நாலு விசயம் கத்துக்கனும் என்று அறிவின் அப்பா எங்களை தீபாவளிக்கு அழைத்தார்.

சரிங்க கண்டிப்பா வர்றோம். தீபாவளிக்கும் சென்றோம்,வெடிக்கடையில் நின்று நிலவோடு வியாபாரம் பார்த்தோம், இது போல பலமுறை அறிவு வீட்டில் பழைய சோறு,நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி என்று அடிக்கடி விருந்து வாடிக்கையாகிப்போனது எங்களுக்கு.

----

கல்லூரி இறுதியாண்டு முடிந்து ரிசல்ட் வந்து மார்க் சீட் வாங்கிக்கொண்டு வந்து பஸ் ஸ்டாப்பில் உள்ள கணேசன் கடையில் டீ சொல்லி விட்டு திரும்பினேன். அறிவும் அவங்க அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். என்னைப்பாத்து அறிவின் அப்பா கேட்டார் ஏன் தம்பி வருசா வருசம் வீட்டூக்கு வந்தீங்க அறிவு ஒரு பரிட்சை கூட எழுதைலைங்கிற விசயத்தை எங்க காதுல ஒரு வாட்டி போட்டிருக்கலாமே என்றார்.

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு.

Thursday, June 18, 2009

கல்லூரி சாலை: கல்லூரி சாலையும் சாத்தூர் சாலையும்.

இந்தப்பதிவு வருங்கால முதல்வரில் விருதுநகர் பற்றிய நாநாவின் பதிவிற்கு துணைப்பதிவாக எழுதலாமென்றிருந்தேன்.நாநா ரெண்டு பதிவுக்கு அப்புரம் ஆளையேக்காணோம் அந்த வலைத்தளமும் விருதுநகர் மாதிரியே காஞ்சு போச்சு. இடையில் சஞ்சய் காந்தி வந்து தரும புரிய அவங்க ஊரு தோட்டம் மாதிரி பசுமையா காமிச்சாரு, கோடை காலம் வந்திருச்சா திரும்பவும் காஞ்சு போச்சு, தண்ணீர் இல்லாமேலேயே உயிர் வாழும் கலை அறிந்த புதுக்கோட்டை பத்தி எழுதி உயிர் கொடுக்க சொல்லி புதுகை அப்துல்லா கிட்ட சொன்னேன் அவரு சிங்கப்பூர், துபாய்னு குடும்ப விசயமாவும் வேலை விசயமாவும் பறந்துட்டே இருக்கிறதானலே ஜி சாட்ல ’பதிவு விரைவில் ரெடி’ அப்படின்னு தந்தி அடிக்கிறார், நானும் ஒரு தந்தி அடிச்சேன் பதிவு எங்கேன்னு அது எங்க வீட்டு பரண் மேல கெடக்குன்னு எடக்கா சொல்றார்.

இஞ்சினியரிங்க் இறுதித்தேர்வு முடிந்த சமயம், ஒரே ஒரு செய்முறைத்தேர்வு மற்றும் சேர்த்தவைகள் எழுதவேண்டிய நேரம். அயன் வடமலாபுரம்ன்னு ஒரு ஊர் அருப்புக்கோட்டைக்கும் , எட்டையபுரத்துக்கும் நடுவில் சாத்தூர் , விளாத்திக்குளம் சாலை சந்திப்பின் அருகில் இருக்கிறது. இந்த ஊரைச்சேர்ந்த நண்பன் பெரிசு அவங்க ஊர் திருவிழாவிற்கு கூப்பிட்டிருந்தான். அந்த மிகச்சிறிய கிராமம் பற்றிய பதிவுதான் இது.

ஜூலை மாதம் மதியம் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள தாப்பாத்தி என்ற ஊரில் பெரிசுவுடன்,டொல்பி மற்றும் நான் சென்று இறங்கினோம். அங்கிருந்து பெரிசு ஊருக்கு 3 கிலோமீட்டர் நடக்கவேண்டும்.ஜூலை மாதம் கரிசல்காட்டில் தார் ரோட்டில் மதிய நேரம் என் வாழ்க்கையில் முதன் முதலாக பூமியில் இருந்து ஒரு சூரியனும் மேலேயிருந்து ஒரு சூரியனும் சேர்ந்து தாக்குவதை கண்டேன். வெயிலின் கொடுமையை சொல்வதென்றால், சங்கமம் என்றொரு படத்திற்கு குமுதம் விமர்சனத்தில் ரகுமானும், விந்தியாவும் நடனமாடுவதை உச்சி வெயிலில் தார் ரோட்டில் செருப்பில்லாதவன் படும் அவஸ்தை போன்று இருந்தது வர்ணித்திருப்பார்கள் , ஓசி செருப்பு அணிந்திருந்தும் எங்கள் நிலைமையும் அதுதான்.

ஊரில் திருவிழாக்கோலம் கலை கட்டி இருந்தது, ஊரில் வாழும் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள்.பெரிசு வீட்டின் அருகில் ஒரு மிகப்பெரிய பங்களா இருந்தது, அது மதுரை அரவிந்த கண் மருத்துவமனை உரிமையாளரின் வீடு. சிறிய ஊரில் பிறந்து கண் மருத்துவத்தில் பெரிய புரட்சி செய்த அவரை எப்படி வேண்டுமானாலும் பாரட்டலாம்.

100 வீடுகளுக்கு குறைவாக உள்ள ஊர், மிக ஒழுங்கான இரண்டு மூன்று தெரு, சாக்கடையை நடு ரோட்டில் ஓட விடமால் சிமெண்ட் குழாய்கள் வழியாக எடுத்துச்செல்ல வசதி, மழையே பெய்யாவிட்டாலும் அருமையான வடிகால் வசதி. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பல ஏக்கர் நிலம் இருக்கிறது,ஆனால் அனைத்தும் விவசாயம் செய்யவே முடியாத கரிசல் காடு, ஏக்கர் 2000 ரூபாய்க்கு விற்றால் பெரிய விசயம் , அதுவும் இந்த ஊர்ப்பக்கம் உள்ள ரெஜிஸ்ட்டர் ஆபிஸில் கல்யாணம் ரெஜிஸ்ட்டர் ஆனால்தான் உண்டாம், பெரிசுக்கு தெரிந்து யாரும் நிலம் வாங்கியதோ விற்றதோ இல்லை.

திருவிழாவிற்கு வந்த இளம்பெண்கள் மத்தியில் எங்கள் பெரிசுதான் ஹீரோ, சினிமாவில மட்டும்தான் பெரிசுங்க ஹீரோ அப்படின்னு நெனச்சிருந்தா உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், பெரிசும் பெண்களும் தெலுங்கில் சிரித்துக்கொண்டார்கள் எங்களுக்கும் புரிந்தது, முளைப்பாறி பால் குடம் போன்ற திருவிழாக்கு உரித்தான அனைத்தும் முடிந்தவுடன், பெரிசு வீட்டில் எங்களுக்காக தயாராக இருந்த மட்டன் பிரியாணி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.

போகும் வழியில் எங்கள் பெரிசுவிடம் அதைவிடப் பெரிசு ஒன்று
“என்ன விருந்தாடிகள் வந்திருக்காங்க வீட்டுல ஆட்டு மட்டனா , கோழி மட்டனா தம்பி எனக்கேட்டார்.பெரிசு சிரித்தபடியே ஆட்டு மட்டன் தான், கோழிக்கறிய சிக்கன்னு சொல்லுவாங்க என்று தெலுங்கிவிட்டு எங்களுக்கு நடந்ததை தமிழினார். நிறைய சிரிப்பு வந்தாலும் என் சிந்தனையெல்லாம் சீக்கிரமாக ஆட்டு மட்டன் பிரியாணியை சாப்பிடுவதிலேயே இருந்தது.

அருமையான பிரியாணி சாப்பிட்டோம், டொல்பி ரொம்பவே பிரியாணிய பாராட்டினான், உண்மையிலேயே துளுக்க வீட்டு பிரியாணி மாதிரியே இருக்கு அப்படின்னான். என்ன ஒரு குவாட்டர் உட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னான்.அவன் குவாட்டர் உட்டிருந்தா எங்க நிலைமை வேற மாதிரி ஆயிருக்கும்.டொல்பி வீட்லேயும் பக்ரீத்துக்கு ஆடு வெட்டி சாப்பிட்டிருக்கேன்(நான் சாப்பிடதா ஊடு எதுன்னு கேக்காதீங்க) அதனால் அவன் சொன்னது சரியென்றே பட்டது.

எனக்கு அடுத்த நாள் செய்முறைத்தேர்வு இருந்ததால் நான் அன்று மாலையே மீண்டும் தாப்பாத்தி வந்து காலேஜுக்கு வந்துவிட்டேன்,அடுத்த நாள் ஹாஸ்டலுக்கு பெரிசு போன் பண்ணினார், டொல்பிய நட்டுவாக்கலி கடிச்சிருச்சு, இப்பதான் ஹாஸ்பிட்டலேந்து வரோம், ஒன்னும் பயமில்ல நாளைக்கு வந்திருவான் அப்படின்னார்.

இங்க ஹாஸ்டலில் நட்டுவாக்கலி , தேள், விஷப்பாம்புகள் வண்டுகள் எல்லாம் காசு குடுக்காம எங்க கூட தங்கியிருக்கும் ஜந்துக்கள்,ஆனாலும் ஒரு நாளும் இவைகள் எங்களை கடித்ததில்லை, இந்த அருப்புக்கோட்டை நட்டுவாக்கலி ஏன் டொல்பிய கடிச்சதுன்னு இன்னமும் எனக்கு புரியல..ஒருவேளை கரிசல் காட்டு நட்டுவாக்கலிக்கு செட்டிநாட்டு இரத்தம் பிடிக்குமோ?
 

Wednesday, June 17, 2009

கல்லூரி சாலை: இதோ எந்தன் கள்ளுக்கடை

நான் படித்த கல்லூரி ஒரு வித்தியாசமான கல்லூரி, கல்லூரிக்குள்ளேயே நிறைய பனைமரங்கள் உண்டு, அதில் கள் இறக்கமாட்டார்கள் ஆனால் பதனீர் இறக்குவார்கள். பதனீர் காலையில் தான் இறக்குவார்கள், நானெல்லாம் காலை நேரம் என்ற ஒன்று இருப்பதே அறியாதவன்.சிலர் மாணவர்கள் காலையில் எழுந்து 75 பைசா கொடுத்துவிட்டு ஒரு டம்ளர் பதனீர் குடிப்பார்கள்.

எனக்கும் பதனீர் பிடிக்கும் ஆனால் குடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில நாட்களே கிடைத்திருக்கிறது, ஆனால் கல்லூரியை சுற்றி அங்கீகரிக்கப்படாத கள்ளுக்கடைகள் நிறைய,கல்லூரி சென்று படித்த கலைப்பு நீங்க மாலை நேரங்களில் மதி மயங்க நாங்கள் தேர்த்தெடுக்கும் மதுபானம் கள், வெறும் பத்து ரூபாய்க்கு இரண்டு மட்டை கொடுப்பார்கள். இருக்கிற வசதிக்கேத்த மாதிரி வாழ்ந்துக்கனும் கிற விசயத்தை இந்தக்காலேஜ்லதான் நாங்க படிச்சோம். பொருளாதாரத்தில opportunity cost அப்படின்னு ஒன்னுசொல்வாங்க, மதி மயங்க தேவை போதை அதற்கு பாரின் சரக்கு அடிக்க தேவை பஸ்ஸுக்கு காசு , மேலும் குறைந்த பட்சம் ஒரு குவாட்டர் 50 ரூபாய் , குவார்ட்டர் எடுத்து வாந்தி எடுத்தால் லாட்ஜ்ல ரூம் போட்டு தங்க 100 ரூபாய் வேணும் , ஆனால் அதே போதையை 10 ரூபாய்க்கு பனைமரக் கள் தரும் இதுக்கு பேர் தான் opportunity cost. இஞ்சினியரிங் காலேஜ் படிச்சிட்டு கள்ளு குடிக்கிறோம்னு சொன்னா அது இழுக்கு இல்லையா அதுனாலா நாங்களும் ஸ்டைலா stoning அப்படின்னு இங்கிலீஸ் பேரு வெச்சிட்டோம்.

காலேஜ் சுத்தி பிரபலமா உள்ள ஸ்டோன் கடைகள்னா, முள்ளுவாடி சுருட்டண்ணன் கடை, மற்றும் பாட்டி கடை, சின்ன மாயாகுளம் பக்கம் போனா மரத்தடி கடை, இது ஹாஸ்டல் லேந்து 100 மீட்டர்தான். புது மாயாகுளம் இடுகாட்டுக்கடை மற்றும் தர்கா கடை. மரத்தடி கடைல பேண்ட் போட்டுட்டு போனா கள்ளு குடுக்கமாட்டாங்க , போலிஸ் கெடுபிடி ஜாஸ்தி அப்படின்னு விரட்டி விட்டிருவாங்க அதுனால லுங்கி கட்டிட்டுதான் போகனும், அங்கே விக்கிற பழைய மீன் குழம்ப சாப்பிட்டு கீழே கிடக்கிற எச்சித்தொன்னைல இரண்டு மட்டைய அடிச்சிட்டு ஹாஸ்டல் வந்து மட்டை ஆயிர வேண்டியதுதான்.பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.

சுருட்டண்ணன் கடைக்கு ஹாஸ்டல் மெஸ்லேந்து கூஜாவில சுண்டல் எடுத்துட்டு போய் நல்லா நேரம் எடுத்து குடிக்கலாம். அவரு கிட்ட என் கூட படிச்சவங்க சிலர் தின வாடிக்கையாளர்கள், சுருட்டண்ணன் கிட்டேயே ஓசில பீடி வாங்கி குடிக்கிற அளவுக்கு சிநேகம்.
இவரு கடையில ஒருத்தர் சைடிஷ் ஆ கறி வித்துட்டு இருந்தார், வாங்கி சாப்பிட்டு பாத்தேன் ஜவ்வு மாதிரி இருந்தது , இது என்னா கறிங்க கேட்டதுக்கு ஆட்டின் மடிப்பகுதி கறி இதுக்கு பேரு சவாஸ்கறி அப்படின்னார். அடப்பாவிகளே சாப்பிடவே முடியாத ஜவ்வுக்கூட வியாபாரம் பண்றீங்களேன்னு நினைச்சிட்டிருக்கும்போதே அங்கே வந்த ஒல்லியன் சவாஸ்கறியை சாப்பிட்டு முடித்திருந்தான்.

இந்தக்கள்ளில் கூட, விஸ்கி,பிராந்தி , ரம் மாதிரி நிறைய வெரைட்டி இருக்குங்க, சிலர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கள் மட்டும் குடிப்பார்கள், அது கூடுதலாக கசக்கும் அல்லது இனிக்கும் தினமும் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் குடிமக்கள் சொன்னது.

இன்னோரு வகை எல்லா மரத்திலேந்து இறக்கி மிக்ஸ் பண்ணி உடனே குடிக்கிறது, சிலர் புளித்த கள்தான் குடிப்பார்கள் கள் இறக்கி இரண்டு நாள் கழித்தோ ஒரு வாரம் கழித்தோ இது போதை அதிகம் தருமாம்.

கல்லூரி சாலைன்னு சொல்லிட்டு ஒரு கள்ளுசாலையைப்பத்தி எழுதிட்டிருகேன், கல்லூரில என்ன கத்துக்கிட்டோம் கிற ரொம்ப முக்கியமானது இல்லையா? அது என்னான்னா ஒரு புது தொழில்நுட்பம்

பாட்டி கடைல தெரிஞ்சுகிட்டது, இந்த பதநீர் இறக்குறாங்கள்ல அது சட்டப்படி குற்றமல்ல, பதநீர் காய்ச்சி கருப்பட்டி செய்யலாம் ஆனா அதுக்கு வேலை அதிகம் டிமாண்டும் கம்மி, அதுனால பதிநீர் இறக்கி(கள் பானையில் சுண்ணாம்பு தடவினால் மரத்தில் இருந்து கிடைப்பது பதநீர், போதை இருக்காது சுவையானது) அதுல மீண்டும் கொஞ்சம் கள் ஊற்றி உரை கட்டி இரண்டு நாள் புளிக்க வெச்சா மீண்டும் கள் ஆயிடுமாம். (பாலை தயிராக்குவது போன்று) இதுக்கு பேருதான் லீகலா பதிநீர் இறக்கி இல்லீகளா கள்ளாக்குறது.

இந்த மாதிரி புதிய தொழில் நுட்பங்களை நாங்க அறிந்துகொண்டோம்.

கதையின் நீதி என்னன்னா கள் குடிக்கிறவன் குடிச்சிட்டுதான் இருப்பான், ஏன்னா அவனோட பொருளாதார நிலைமை அப்படி, கிடைக்காட்டி வேலி முட்டியாவது வாங்கி குடிச்சிட்டு வேலிலதான் கிடப்பான். அதிகம் உடலுக்கு கேடு தராத கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?ஏன் கள்ளுக்கடைய திறக்கக்கூடாது அதில் என்ன தவறு.? இயறகையாய் கிடைக்கும் ஒரு பாணம் தானே அது. இலங்கையில் இருந்து பாட்டிலில் அடைத்து வெளிநாட்டில் விற்கிறார்கள், மலையாளிகள் அதை வாங்கி ஆப்பம் சுட்டு சாப்பிடுகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பனைமரங்கள் நிறைய கள் தருமே அதை நியாயமாக காசாக்களாமே ?

__._,_.___
Recent Activity:
    "MSEC'92 BATCH EMAIL COMMUNICATION NETWORK"
    .

    __,_._,___


    Ramesh Durairaj

    unread,
    Nov 10, 2010, 12:33:45 PM11/10/10
    to mse...@googlegroups.com
    Kannan,
    Thanks for forwarding. Enjoyed reading!

    - Ramesh

    On 11/8/10, kannan t <tkan...@gmail.com> wrote:
    > Hi,
    >
    > not my message our seniors message
    >
    > What we did we follow seniors.
    >
    > Regards
    > kannan
    >
    > ---------- Forwarded message ----------
    > From: raja ramanathan <raja...@yahoo.co.in>
    > Date: 2010/11/3
    > Subject: Fw: [ALUMINI] college
    > To: tkan...@gmail.com
    >
    >
    >
    >
    > ----- Forwarded Message ----

    > *From:* N.Sankara vadivel <sank...@hotmail.com>
    > *To:* MSEC GROUPS <ms...@yahoogroups.com>
    > *Sent:* Tue, November 2, 2010 9:48:45 AM
    > *Subject:* [ALUMINI] college


    >
    >
    >
    > யாரோ ஒரு முன்னாள் மாணவன் (முகமது சதக் பொறியியல் கல்லூரி)
    > எழுதிய வலைப்பூ
    >
    > http://kudukuduppai.blogspot.com/
    >
    >
    > Labels:

    > அனுபவம்<http://kudukuduppai.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D>,
    > கல்லூரி
    > சாலை<http://kudukuduppai.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88>


    > Friday, January 9, 2009
    > கல்லூரி சாலை : முதல்வரிடம் அடி வாங்கிய

    > அனுபவம்.<http://kudukuduppai.blogspot.com/2009/01/blog-post_09.html>

    > 2<http://kudukuduppai.blogspot.com/2009/01/2.html>

    > அறிவு. <http://kudukuduppai.blogspot.com/2009/08/blog-post_11.html>

    > சாலையும்.<http://kudukuduppai.blogspot.com/2009/06/blog-post_18.html>

    > கள்ளுக்கடை<http://kudukuduppai.blogspot.com/2009/06/blog-post_17.html>

    > Reply to sender <sank...@hotmail.com?subject=college> | Reply to
    > group<ms...@yahoogroups.com?subject=college>| Reply
    > via web
    > post<http://groups.yahoo.com/group/msec/post;_ylc=X3oDMTJwbTlyc2NvBF9TAzk3MzU5NzE0BGdycElkAzEwODIzNzIEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjQwBG1zZ0lkAzI4NDkEc2VjA2Z0cgRzbGsDcnBseQRzdGltZQMxMjg4NjcxNjA0?act=reply&messageNum=2849>|
    > Start
    > a New
    > Topic<http://groups.yahoo.com/group/msec/post;_ylc=X3oDMTJlMTU2c3ZyBF9TAzk3MzU5NzE0BGdycElkAzEwODIzNzIEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjQwBHNlYwNmdHIEc2xrA250cGMEc3RpbWUDMTI4ODY3MTYwNA-->
    > Messages in this
    > topic<http://groups.yahoo.com/group/msec/message/2849;_ylc=X3oDMTM0cHFtc2JpBF9TAzk3MzU5NzE0BGdycElkAzEwODIzNzIEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjQwBG1zZ0lkAzI4NDkEc2VjA2Z0cgRzbGsDdnRwYwRzdGltZQMxMjg4NjcxNjA0BHRwY0lkAzI4NDk->(


    > 1)
    > Recent Activity:
    >
    >
    > Visit Your

    > Group<http://groups.yahoo.com/group/msec;_ylc=X3oDMTJlNTVrcDZtBF9TAzk3MzU5NzE0BGdycElkAzEwODIzNzIEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjQwBHNlYwN2dGwEc2xrA3ZnaHAEc3RpbWUDMTI4ODY3MTYwMw-->


    > "MSEC'92 BATCH EMAIL COMMUNICATION NETWORK"
    > MARKETPLACE
    >
    > Get great advice about dogs and cats. Visit the Dog & Cat Answers

    > Center.<http://us.ard.yahoo.com/SIG=15ol6aado/M=493064.13814537.14041040.10835568/D=groups/S=1705079640:MKP1/Y=YAHOO/EXP=1288678805/L=785bb620-e638-11df-b825-fbab799752da/B=wEsFPEwNPKs-/J=1288671605633398/K=9hByetULXqzg5EUzB8uDBQ/A=6078812/R=0/SIG=114ae4ln1/*http://dogandcatanswers.yahoo.com/>
    > ------------------------------


    >
    > Stay on top of your group activity without leaving the page you're on - Get
    > the Yahoo! Toolbar

    > now.<http://us.ard.yahoo.com/SIG=15o5ffj1m/M=493064.13983314.14041046.13298430/D=groups/S=1705079640:MKP1/Y=YAHOO/EXP=1288678805/L=785bb620-e638-11df-b825-fbab799752da/B=v0sFPEwNPKs-/J=1288671605633398/K=9hByetULXqzg5EUzB8uDBQ/A=6060255/R=0/SIG=1194m4keh/*http://us.toolbar.yahoo.com/?.cpdl=grpj>
    > ------------------------------


    >
    > Hobbies & Activities Zone: Find others who share your passions! Explore new

    > interests.<http://us.ard.yahoo.com/SIG=15o3p09vd/M=493064.14012770.13963757.13298430/D=groups/S=1705079640:MKP1/Y=YAHOO/EXP=1288678805/L=785bb620-e638-11df-b825-fbab799752da/B=wUsFPEwNPKs-/J=1288671605633398/K=9hByetULXqzg5EUzB8uDBQ/A=6015306/R=0/SIG=11vlkvigg/*http://advision.webevents.yahoo.com/hobbiesandactivitieszone/>
    > [image: Yahoo!
    > Groups]<http://groups.yahoo.com/;_ylc=X3oDMTJkdDN1Ym9wBF9TAzk3NDc2NTkwBGdycElkAzEwODIzNzIEZ3Jwc3BJZAMxNzA1MDc5NjQwBHNlYwNmdHIEc2xrA2dmcARzdGltZQMxMjg4NjcxNjA0>
    > Switch to:
    > Text-Only<msec-tra...@yahoogroups.com?subject=Change+Delivery+Format:+Traditional>,
    > Daily Digest <msec-...@yahoogroups.com?subject=Email+Delivery:+Digest> •
    > Unsubscribe <msec-uns...@yahoogroups.com?subject=Unsubscribe> • Terms
    > of Use <http://docs.yahoo.com/info/terms/>
    > .
    >
    > __,_._,___
    >

    abbas...@yahoo.com

    unread,
    Nov 10, 2010, 1:55:43 PM11/10/10
    to mse...@googlegroups.com

    Sent using BlackBerry® from Orange
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages