பெண்களுக்குக் கொடி இடை என்பது சாத்தியமா?

630 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 6:23:12 AM5/14/15
to mintamil
ஒருவழியா என்னோட 100 வது கட்டுரை இன்று எனது வலைப்பூவில் அரங்கேறி விட்டது.

இக் கட்டுரையில் பெண்களுக்குக் கொடி இடை என்பது சாத்தியமா? உண்மையா? என்பதைப் பற்றிய ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

படித்து விட்டுக் கருத்தைக் கூறுங்கள்.


http://thiruththam.blogspot.in/2015/05/blog-post_14.html


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எமக்கு நல்லது எதுவென்று
எம்மைக் காட்டிலும் நன்றாக
எம்பெருமானே அறியும் - மன்றுடைய
எம்பெருமானைக் காட்டிலும் நன்று
எம்மையிலும் வேறில்லை என்று
எமக்கும் தெரியும் அன்றோ!
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Innamburan S.Soundararajan

unread,
May 14, 2015, 6:51:45 AM5/14/15
to mintamil
அவரது காப்பகத்தில் கட்டுரை காணக்கிடைக்கவில்லையெனினும், பெண்களுக்கு கொடி இடை சாத்தியம் என்பதை நிலை நாட்ட முன் வருகிறேன். பொன். சரவணன் திருத்தம் மட்டும் செய்வதில்லை. எனினும், அந்த விருது பொருத்தமே. கயல் விழியாள் என்றால் சுறா மீன் விழியாள் என்று பொருள் அல்ல. காமாட்சி என்றால் காமத்தைத் தூண்டும் கண்கள் உடையவள் என்று மட்டும் பொருள் கொள்ளல் குற்றமே. ஆண்சிங்கம் என்றால் சோம்பேறிப்பயல், பல தாரம் கொண்ட மாபுருடன் என்று பொருள் கொள்ளலாகாது. பல்லழகி என்றால் கழட்டிப்பார்க்கலாகாது. எல்லா மொழிகளிலும், தமிழில் தொல்காப்பியம் முதல் தண்டியலங்காரத்துக்கு பிறகும் உவமைக்கும் உருவகத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. உவமை எல்லா அணிகளின் தாய்.

ஆகவே Timeglass போன்ற விரிந்த மார்பகமும், துடியிடையும், விரிந்த தொடையழகையும் கொண்ட பெண்கள் அழகின் மறு உருவம் தான். அதை அழகியல் நோக்கில், கவின் கலையாக பார்த்தால், பெண்களுக்கு கொடி இடை சாத்தியமே. அவளது இடையை போகப்பொருளாகப் பார்த்தால், அது அரைகுறை சாத்தியம்.

வர்ரே....ன்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 7:28:35 AM5/14/15
to mintamil
கட்டுரை வருகிறதே ஐயா.

இன்னும் நீங்க மெயின் பாய்ன்டையே டச் பண்ணலை. :)))

சீக்கிரம் வாங்க சார். வந்து உங்கள் அனுபவ மூட்டையை அவிழ்த்து விடுங்கள்.

காத்துக் கெடக்கோம்.
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
May 14, 2015, 7:40:14 AM5/14/15
to மின்தமிழ்
கொடி இமை என்று கூற வருகிறீர்களா. 
சிருங்காரக் கவிஞர்கள் இடையைக் கொடியாகவும் மார்பை மலராகவும் உருவகப்படுத்தி கொடி இடை என்று சொன்னது தவறு. 
முகத்தை மட்டும்வைத்து மூக்கைக்கொடியாகவும் விழிகள் மலராகவும் கருத வேண்டும் என்று திருத்தம் தறுகிறீர்கள்.  நல்லது
வலையானந்தா

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 7:47:01 AM5/14/15
to mintamil
சார் சார் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துராதீக.

கண்ணிமையினைக் கொடியாகவும்

கண்ணிமையில் பூசப்பட்ட மையணியைக் கொடியில் பூத்த பூவாகவும் தான்

உவமைப் படுத்தி இருக்கின்றனர் என்று தெளிவாகச் சொல்லியுள்ளேன்.

நுசுப்பு என்ற சொல்லுக்கு இடுப்பு என்று தவறாகப் பொருள்கொண்டதால் வந்த
விளைவு தான் ' கொடி இடை '.

உண்மையில் அது கொடி இமை.

Dhivakar

unread,
May 14, 2015, 8:04:16 AM5/14/15
to மின்தமிழ்
நால்வர் பாடல்களில் கொடியிடையை வர்ணித்து பாடல்கள் உள்ளன. உமையம்மையை நேரில் பார்த்தவர் பாடல்கள் மட்டும் தருகிறேன்.

கோல விழாவி னரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்துமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே  01=008-09

வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி
புனைகொடியிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன் 01-019-04

கூழையங் கோதைகுலா யவ டம்பிணை புல்கமல்
    குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
    வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள் 01-136-06

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் 01-041-05

குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் 02-106-08

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோ
டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா ரான்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.03-065-03 



 


Hari Krishnan

unread,
May 14, 2015, 8:06:18 AM5/14/15
to mintamil

2015-05-14 17:17 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
நுசுப்பு என்ற சொல்லுக்கு இடுப்பு என்று தவறாகப் பொருள்கொண்டதால் வந்த
விளைவு தான் ' கொடி இடை '.

உண்மையில் அது கொடி இமை.

மாலையுள் கரந்த பந்து வந்து கைத் தலத்த ஆம்
ஏல நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்த ஆம்
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம்
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே

சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம்.

அதாவது, ஐந்து பந்துகளைக் கொண்டு பந்தாடிக் கொண்டிருக்கிறாள்.  பந்துகள் சுழன்று சுழன்று செல்கின்றன.  மாலைக்குள் மறைந்து கைக்கு வருகின்றன.  ஏலம் மணக்கும் கூந்தல் புறத்துக்குச் சென்று (முகத்தை வட்டமிட்டுக் கொண்டு) ஒளிபொருந்திய முகத்துக்கு நேராக வருகின்றன.

அப்புறம்தான் வருது டொக்கு.

நூல் போன்ற இமை நோகும்படியாக அந்தப் பந்துகள் தலைக்கு உச்சியில் சூட்டப்பட்டுள் மாலைக்குப் போகின்றன.

ஐந்து பந்தாட்டத்த கண் இமையாலயே ஆடியிருக்காங்கப்பா.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 8:10:34 AM5/14/15
to mintamil
2015-05-14 17:36 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> அதாவது, ஐந்து பந்துகளைக் கொண்டு பந்தாடிக் கொண்டிருக்கிறாள். பந்துகள்
> சுழன்று சுழன்று செல்கின்றன. மாலைக்குள் மறைந்து கைக்கு வருகின்றன. ஏலம்
> மணக்கும் கூந்தல் புறத்துக்குச் சென்று (முகத்தை வட்டமிட்டுக் கொண்டு)
> ஒளிபொருந்திய முகத்துக்கு நேராக வருகின்றன.


ஹரியண்ணா, இது பொண்ணா இல்ல வேற எதாவதா?

மேலெ இருக்கிற விளக்கத்தின்படி யாராலயும் பந்து வெளையாட முடியுங்களா?

பெரிய மேஜிக் காரியோ?.

நம்ப முடியாத கற்பனை விளக்கம். மன்னிக்கணும் அண்ணா.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
May 14, 2015, 8:13:01 AM5/14/15
to mintamil

2015-05-14 17:40 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஹரியண்ணா, இது பொண்ணா இல்ல வேற எதாவதா?

மேலெ இருக்கிற விளக்கத்தின்படி யாராலயும் பந்து வெளையாட முடியுங்களா?

பெரிய மேஜிக் காரியோ?.

நம்ப முடியாத கற்பனை விளக்கம். மன்னிக்கணும் அண்ணா.

கழங்காட்டத்தை மாதிரியான மிக மென்மையான பந்துகளால் ஆடும் ஆட்டம்.

தப்புன்னா எழுதின திருத்தக்க தேவரதான் கேக்கணும்.  அவருக்கு நுசுப்புன்னா இமைன்னு கத்துக்குடுக்க நீங்க இல்லாம போயிட்டீங்களேண்ணா.


இங்க பாத்துக்கலாம்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 8:14:43 AM5/14/15
to mintamil
திவாகர் ஐயா

இப் பாடல்களில் வரும் இடை என்பதற்கு என்ன பொருள் கொள்கிறீர்கள்?

அந்தப் பாடல் வரிகளில் இருந்தே இதற்குப் பதில் கிடைக்கும்.

இருந்தாலும் நானே சொல்லி விடுகிறேன். ' இமை'

இடை என்னும் சொல் பற்றிய முழு ஆய்வுக் கட்டுரை இனும் முடியவில்லை.

முடிந்ததும் தருகிறேன்.

அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 8:18:41 AM5/14/15
to mintamil
ஹரியண்ணா

திருத்தக்கத் தேவர் பாட்டு மட்டும் தான் எழுதினார்.

வெளக்கம் நாம் தானுங்னா சொல்றோம். ::))

அவர் மேல் குத்தம் இல்லீங்ணா.

குத்தம் வெளக்கம் சொல்ற நம்ம மேல தானுங்


அன்புடன்,

தி.பொ.ச.
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
May 14, 2015, 8:24:11 AM5/14/15
to mintamil
2015-05-14 17:48 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஹரியண்ணா

திருத்தக்கத் தேவர் பாட்டு மட்டும் தான் எழுதினார்.

வெளக்கம் நாம் தானுங்னா சொல்றோம். ::))

அவர் மேல் குத்தம் இல்லீங்ணா.

குத்தம் வெளக்கம் சொல்ற நம்ம மேல தானுங்

அப்ப வௌக்கத்த நீங்களே எடுத்து உடுங்கண்ணா.   ஐந்து பந்தாட்ட வர்ணனை இது:

அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை
மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்
பொங்கி மீது எழுந்து போய்ப் பிறழ்ந்து பாய்தல் இன்றியே
செங்கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியுமே
 

மாலையுள் கரந்த பந்து வந்து கைத் தலத்த ஆம்
ஏல நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்த ஆம்
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம்
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே
 

கொண்டு நீங்கல் கோதை வேய்தல் குங்குமம் அணிந்துராய்
எண் திசையும் ஏணி ஏற்று இலங்க நிற்றல் பத்தியின்
மண்டிலம் வரப் புடைத்தல் மயிலின் பொங்கி இன்னணம்
வண்டும் தேனும் பாட மாதர் பந்து மைந்துற்று ஆடுமே
 

பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையில் குங்குமம்
சுந்தரப் பொடி தெளித்த செம் பொன் சுண்ணம் வாள் நுதல்
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே
 

நன் மணிச் சிலம்பினோடு கிண் கிணிந் நகந் நகும்
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து
பொன் மலர்ந்த கோதை பந்து பொங்கி ஒன்று போந்து பாய்ந்து
மின் மலர்ந்த வேலினான் முன் வீதி புக்கு வீழ்ந்ததே
வீழ்ந்த பந்தின் மேல் விரைந்து மின்னின் நுண் நுசுப்பினாள்
சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூங்குழல்
தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம் முலைகள் தைவரப்
போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூங்கொடியின் நோக்கினாள்

எனக்குக் காலேஜ்ல கத்துக் குடுத்த வாத்தியாரெல்லாம் தப்புன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.  நுசுப்பை விளக்கினா மாதிரியே ஐந்த பந்தாட்டத்தையும் ஒருகை வௌக்கிப் போடுங்ணா.

Hari Krishnan

unread,
May 14, 2015, 8:38:02 AM5/14/15
to mintamil

2015-05-14 17:54 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அப்ப வௌக்கத்த நீங்களே எடுத்து உடுங்கண்ணா.   ஐந்து பந்தாட்ட வர்ணனை இது:

அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை
மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்
பொங்கி மீது எழுந்து போய்ப் பிறழ்ந்து பாய்தல் இன்றியே
செங்கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியுமே

ஒரு சாம்பிளுக்கு இது:


புலவர் 'அரசு' 
பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை

அங்கையந்த லத்தகத்த வைந்துபந்த மர்ந்தவை
மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்த லின்றியே
செங்கயற்கண் புருவந்தம்மு ளுருவஞ்செய்யத் திரியுமே.

   (இ - ள்.) அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை - அகங்கையாகிய அழகிய இடத்தில் ஐந்து பந்துகள் அமர்ந்தவை; மங்கை ஆட - மங்கை ஆடுதலாலே; மாலைசூழும் வண்டுபோல வந்து - மாலையைச் சூழும் வண்டுபோலக் கீழே வந்து; உடன் பொங்கி மீது எழுந்து போய் - உடனே பொங்கி மேலேழுந்து சென்று; பிறழ்ந்து பாய்தல் இன்றி - முறை குலைந்து வீழ்தலின்றி; செங்கயற்கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியும் - செவ்விய கயற்கண்ணும் புருவமும் கூடத்திரிந்து அழகு செய்யுமாறு திரியும்.

   (வி - ம்.) 'வண்டு போலப் பொங்கி மீதெழுந்து போய் உடனே வந்து' என மாற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர்



1954 மாலையுட்க ரந்தபந்து வந்துகைத்த லத்தவா
மேலநாறி ருங்குழற்பு றத்தவாண்மு கத்தவா
நூலினோ்நு சுப்புநோவ வுச்சிமாலை யுள்ளவா
மேலெழுந்த மீநிலத்த விரலகைய வாகுமே.

 (இ - ள்.) மாலையுள் கரந்த பந்து வந்து கைத்தலத்த ஆம் - மாலையிலே மறைந்த பந்து வந்து கையிடத்திலாகும்; ஏலம் நாறு இருங்குழல் புறத்த - மயிர்ச் சாந்து மணக்கும் கருங்குழலின் புறத்தனவாகிய பந்துகள்; வாள் முகத்த ஆம் - ஒளி பொருந்திய முகத்தனவாக ஆகும்; நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம் - நூலைப் போன்ற இடைவருந்தத் தலையிலே சென்ற பந்து மார்பின் மாலையிலே திரும்ப வரும் ; மேலெழுந்த மீநிலத்த விரல கைய ஆகும் - மாலையின் மேலேபோய் உயர்ந்த பந்து மீண்டும் விரலிடத்தன, கையிடத்தன ஆகும்.

   (வி - ம்.) கரந்த - மறைந்த. ஏலம் - மயிர்ச்சாந்து. இருங்குழல் - கரிய கூந்தல். நூலின்நேர் என்புழி 'நேர்' உவமச்சொல். விரல - விரலிடத்துளளன, கைய - கையிடத்துள்ளன.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 14, 2015, 8:52:03 AM5/14/15
to mintamil
2015-05-14 18:08 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> மாலையுள் கரந்த பந்து வந்து கைத்தலத்த ஆம் - மாலையிலே மறைந்த பந்து வந்து
> கையிடத்திலாகும்; ஏலம் நாறு இருங்குழல் புறத்த - மயிர்ச் சாந்து மணக்கும்
> கருங்குழலின் புறத்தனவாகிய பந்துகள்; வாள் முகத்த ஆம் - ஒளி பொருந்திய
> முகத்தனவாக ஆகும்; நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம் - நூலைப்
> போன்ற இடைவருந்தத் தலையிலே சென்ற பந்து மார்பின் மாலையிலே திரும்ப வரும் ;
> மேலெழுந்த மீநிலத்த விரல கைய ஆகும் - மாலையின் மேலேபோய் உயர்ந்த பந்து மீண்டும்
> விரலிடத்தன, கையிடத்தன ஆகும்.


இதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது...

நுசுப்பு என்றால் இடுப்பா? இல்லை. இமை தான்.

நூல் ல என்ன இருக்கும்? எழுதி இருக்கும்.

அத மாதிரி நுசுப்பு அதாவது இமையில மை எழுதி இருக்காங்க.

அதுனால நூலின் நேர் நுசுப்பு. அம்புட்டுதேன். :))

இதுக்குப் போயி எதுக்கு எல்லாத்தையும் வெளக்கணும் கிறேன்.





--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
May 14, 2015, 9:03:22 AM5/14/15
to mintamil

2015-05-14 18:22 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

இதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது...

நுசுப்பு என்றால் இடுப்பா? இல்லை. இமை தான்.

நூல் ல என்ன இருக்கும்? எழுதி இருக்கும்.

அத மாதிரி நுசுப்பு அதாவது இமையில மை எழுதி இருக்காங்க.

அதுனால நூலின் நேர் நுசுப்பு. அம்புட்டுதேன். :))

இதுக்குப் போயி எதுக்கு எல்லாத்தையும் வெளக்கணும் கிறேன்

இந்த இழையும் முன்னூறைத் தாண்டி கன்னித் தீவா மணக்கறதுல எனக்கு இஷ்டமில்ல.  உங்களுக்கு என்ன விளக்கம் தோணுதோ அத சொல்லிக்கலாம்.  கேக்கறவங்க கேட்டுக்கட்டும்.  



--
அன்புடன்,

Megala Ramamourty

unread,
May 14, 2015, 10:22:16 AM5/14/15
to மின்தமிழ்
//கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றை - குறு 21/3

கண்ணிமையானது கொன்றைப் பூவினைப் போல மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாக இப் பாடல் கூறுகிறது//


ஐயா! அப்படியெல்லாம் இப்பாடல் கூறவில்லையே!

வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங்....
(குறுந்: 21)

வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படிசெறிந்து மலர்ந்த, நீட்சியை உடைய பூங்கொத்துக்களைத் தழைகளின் இடையே மேற்கொண்டு, பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை, கோத்துக் கட்டியமகளிருடைய கூந்தலைப் போலக் கண்ணிற்குத் தோன்றுகின்ற புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களுடைய காடு...என்பதல்லவா இவ்வரிகளின் பொருள்.

இங்கே கொன்றை மரம் பெண்களுக்கும், அதில் செறிந்துள்ள தழைகள் மகளிரின் கூந்தலுக்கும் அம்மரத்தில் பூத்துள்ள பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அம்மகளிரின் தலையணிக்கும் அல்லவா உவமையாகக் கூறப்பட்டிருக்கின்றன! நீங்கள் சொல்வதுபோல் பெண்களின் கண்ணிமை, கொன்றைப்பூ வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டதாகக் குறிப்பேதுமில்லையே! அத்தோடு அது இப்பாடலுக்குப் பொருத்தமாகவும் இல்லையே!

*****

//முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
வண்டினந் தவிர்க்குந் தண்பதக் காலை... (அகம்: 244)//

எனும் வரிகளுக்குக் கண்ணிமைகள் முல்லை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்று இதுவரை யாரும் பொருள்கூறி நான் கேட்டதில்லை!!

கொடியின்மீது அரும்புகள் வாய்திறந்து மலர்ந்த ஒளிபொருந்திய முல்லை, மணமகள் கூந்தலைப் போல மணந்து, வண்டின் தொகுதிகளைச் செல்லவொட்டாது தடுக்கும் குளிர்ந்த செவ்வியையுடைய கார்காலத்தே...என்பதே இப்பாடல் வரிகளுக்கான பொழிப்புரை.


//மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49
மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம் - 389
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே நற் -57


மேற்காணும் பாடல்களில் ஓதியானது கரிய மையினால் பூசப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின் தலைமுடியில் எண்ணை பூசுவதுதான் வழக்கமே ஒழிய மை கொண்டு பூசுவது வழக்கமல்ல.//

ஐயா!  இங்கே ’மை’ என்பது ’கருமை’ என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. ’மையீர் ஓதி’ என்பதற்கு கருமையான, ஈரிய (மென்மை) கூந்தல் என்றல்லவா பொருள்கொள்ள வேண்டும்? மையைப் பூசினர் என்றா அறிவுக்குப் பொருந்தா வகையில் பொருள்சொல்வது? It's ridiculous!


//வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22

இப்பாடல்களில் ஓதியினை வாழைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். பொதுவாக, பூவினை ஒத்த கண்ணின் உறுப்பு கண்ணிமையே என்பதால், ஓதி என்பது கண்ணிமையைத் தான் குறிக்கும் என்று தெளியலாம். மேலும் வாழைப்பூவானது கண் போன்ற வடிவத்தில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பல வரிகளை உடையதாக இருக்கும். இவ் வாழைப்பூவினைப் போல பல செவ்வரிகளால் வரையப்பட்டிருப்பதால் இங்கே கண்ணிமையினை வாழைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.//


கடவுளே... இது என்ன தமிழுக்கு வந்த சோதனை!  :-(

இங்கே வாழைப்பூவை ஓதிக்கு உவமையாகக் கூறியிருப்பது அதன் வண்ணம் நோக்கியன்று...வடிவம் நோக்கி. பெண்கள், வாழைப்பூ போல ஓதியைக் கோபுர வடிவில் கொண்டையிட்டுக்கொள்வதுண்டு. ’ஐம்பால்’ என்று பெண்களின் கூந்தலை ஐந்து வகைகளாகக் குறிப்பர்; அதில் இவ்வாறு கொண்டையிடுவதற்குப் ’பனிச்சை’ என்று பெயர்.  அதன் அடிப்படையிலேயே இங்கே கூந்தலுக்கு வாழைப்பூவை ஒப்பிட்டுள்ளனர்; மற்றபடி வாழைப்பூவின் வண்ணத்திற்கும் கூந்தலின் வண்ணத்திற்கும் தொடர்பேதுமில்லை என்பதைக் குழந்தைகூட அறியுமே!!!

இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.
மன்னிக்கவும்!

அன்புடன்,
மேகலா




Hari Krishnan

unread,
May 14, 2015, 10:44:04 AM5/14/15
to mintamil

2015-05-14 19:52 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.
மன்னிக்கவும்!

பம்மல் கே சம்பந்தத்துல சொல்றா மாதிரி,

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.  அர்த்தம் கேக்கக் கூடாது.  ஆம்மா.

துரை.ந.உ

unread,
May 14, 2015, 11:53:19 AM5/14/15
to Groups
2015-05-14 20:14 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-05-14 19:52 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.
மன்னிக்கவும்!

பம்மல் கே சம்பந்தத்துல சொல்றா மாதிரி,

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.  அர்த்தம் கேக்கக் கூடாது.  ஆம்மா.
​:))

​​
​கொடி இடை :)​

சொ. வினைதீர்த்தான்

unread,
May 14, 2015, 12:24:27 PM5/14/15
to mint...@googlegroups.com
On 5/14/15, Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:
> //*கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றை* - குறு 21/3
>
> கண்ணிமையானது கொன்றைப் பூவினைப் போல மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு
> இருந்ததாக இப் பாடல் கூறுகிறது//
>
> ஐயா! அப்படியெல்லாம் இப்பாடல் கூறவில்லையே!
>
>
>
>
> *வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபுபொன்செய் புனையிழை கட்டிய
> மகளிர்கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்கானங்.... *(குறுந்: 21)
>
> வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படிசெறிந்து மலர்ந்த, நீட்சியை உடைய
> பூங்கொத்துக்களைத் தழைகளின் இடையே மேற்கொண்டு, *பொன்னால் செய்த
> அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை, கோத்துக் கட்டியமகளிருடைய கூந்தலைப் போலக்*
> கண்ணிற்குத் தோன்றுகின்ற புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களுடைய
> காடு...என்பதல்லவா
> இவ்வரிகளின் பொருள்.
>
> இங்கே கொன்றை மரம் பெண்களுக்கும், அதில் செறிந்துள்ள தழைகள் மகளிரின்
> கூந்தலுக்கும் அம்மரத்தில் பூத்துள்ள பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அம்மகளிரின்
> தலையணிக்கும் அல்லவா உவமையாகக் கூறப்பட்டிருக்கின்றன! நீங்கள் சொல்வதுபோல்
> பெண்களின் கண்ணிமை, கொன்றைப்பூ வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டதாகக்
> குறிப்பேதுமில்லையே! அத்தோடு அது இப்பாடலுக்குப் பொருத்தமாகவும் இல்லையே!
>
> *****
>
>
>
> *//முகைவாய் திறந்த நகைவாய் முல்லைகடிமகள் கதுப்பின் நாறிக்
> கொடிமிசை**வண்டினந்
> தவிர்க்குந் தண்பதக் காலை...* (அகம்: 244)//
>
> எனும் வரிகளுக்குக் கண்ணிமைகள் முல்லை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது
> என்று இதுவரை யாரும் பொருள்கூறி நான் கேட்டதில்லை!!
>
> *கொடியின்மீது அரும்புகள் வாய்திறந்து மலர்ந்த ஒளிபொருந்திய முல்லை, மணமகள்
> கூந்தலைப் போல மணந்து*, வண்டின் தொகுதிகளைச் செல்லவொட்டாது தடுக்கும்
> குளிர்ந்த செவ்வியையுடைய கார்காலத்தே...என்பதே இப்பாடல் வரிகளுக்கான ப
> ொழிப்புரை.
>
>
> *//மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29*
>
>
> *மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம்
> - 389மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே நற் -57*
>
> மேற்காணும் பாடல்களில் ஓதியானது கரிய மையினால் பூசப்படுவதாகக்
> கூறப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின் தலைமுடியில் எண்ணை பூசுவதுதான் வழக்கமே ஒழிய
> மை கொண்டு பூசுவது வழக்கமல்ல.//
>
> ஐயா! இங்கே ’மை’ என்பது ’கருமை’ என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. ’மையீர்
> ஓதி’ என்பதற்கு கருமையான, ஈரிய (மென்மை) கூந்தல் என்றல்லவா பொருள்கொள்ள
> வேண்டும்? மையைப் பூசினர் என்றா அறிவுக்குப் பொருந்தா வகையில் பொருள்சொல்வது?
> It's
> ridiculous!
>
>
> //*வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22*
>
> இப்பாடல்களில் ஓதியினை வாழைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். பொதுவாக,
> பூவினை ஒத்த கண்ணின் உறுப்பு கண்ணிமையே என்பதால், ஓதி என்பது கண்ணிமையைத் தான்
> குறிக்கும் என்று தெளியலாம். மேலும் வாழைப்பூவானது கண் போன்ற வடிவத்தில்
> இளஞ்சிவப்பு வண்ணத்தில் பல வரிகளை உடையதாக இருக்கும். இவ் வாழைப்பூவினைப் போல
> பல செவ்வரிகளால் வரையப்பட்டிருப்பதால் இங்கே கண்ணிமையினை வாழைப்பூவுடன்
> ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.//
>
> கடவுளே... இது என்ன தமிழுக்கு வந்த சோதனை! :-(
>
> இங்கே வாழைப்பூவை ஓதிக்கு உவமையாகக் கூறியிருப்பது அதன் வண்ணம்
> நோக்கியன்று...வடிவம் நோக்கி. பெண்கள், வாழைப்பூ போல ஓதியைக் கோபுர வடிவில்
> கொண்டையிட்டுக்கொள்வதுண்டு. ’ஐம்பால்’ என்று பெண்களின் கூந்தலை ஐந்து
> வகைகளாகக் குறிப்பர்; *அதில் இவ்வாறு கொண்டையிடுவதற்குப் ’பனிச்சை’ என்று
> பெயர்.* அதன் அடிப்படையிலேயே இங்கே கூந்தலுக்கு வாழைப்பூவை ஒப்பிட்டுள்ளனர்;

அருமை திருமிகு மேகலா.

>
> இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத
> எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக்
> கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை
> என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.
> மன்னிக்கவும்!

திருத்தம் பொருத்தமாக இருக்கணும் என்கிறீங்க!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Oru Arizonan

unread,
May 14, 2015, 12:54:19 PM5/14/15
to mintamil
திருத்தம் சரவணாரே,

தங்களுக்குத் தெரியாததல்ல.  கவிதை புனைவதில் "மிகைப்படுத்தல்" என்ற ஒரு அணியும் உண்டு.

எடுத்துக்காட்டாக, உலகமே புகழ்ந்தது என்றால், "உலகத்திற்கு வாய் இருக்கிறதா?  அது போகட்டும், உலகத்தில் உள்ள மாந்தர்கள் என்று எடுத்துக்கொண்டால், நூறு பேர் கூடப் புகழாதவனை, உலகமே புகழ்ந்தது என்பது //நம்ப முடியாத கற்பனை விளக்கம். மன்னிக்கணும் அண்ணா.//  என்று சொல்லலாமா? 

"கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!" என்பதும், //நம்ப முடியாத கற்பனை விளக்கம். மன்னிக்கணும் அண்ணா.//  என்றா சொல்வீர்கள்! 

"திருத்தம்" என்றால் இப்படி ஒரு திருத்தமா? பால்வழி மண்டலத்திலேயே உங்களைப்போல ஒரு திருத்தமானவர் இதுவரை இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை!

இதுவும் மிகைப்படுத்தலே! 

பால்வழி மண்டலத்தை யாரைய்யா சுற்றிப்பார்த்திருக்கிறார்கள்!

ஒரு அரிசோனன்
 

Innamburan S.Soundararajan

unread,
May 14, 2015, 9:15:47 PM5/14/15
to mintamil
எல்லாம் படித்தேன். 'திருத்தத்தில்' குறியாக இருக்கும் யாவரும் அருத்தம் தவறி விட்டீர்களே ~

Nagarajan Vadivel

unread,
May 14, 2015, 9:21:47 PM5/14/15
to மின்தமிழ்
டையை (கொடியிடை) மையாகத்  (கொடியிமை) திருத்தம் திருத்திய திருத்தத்துக்கு இவ்வளவு எதிர்ப்பா?  டையும் மையும் ஒன்றே என்று நாட்டாமை தீர்ப்புச் சொல்லுங்க
வலையானந்தா

B05.gif

Oru Arizonan

unread,
May 14, 2015, 9:27:42 PM5/14/15
to mintamil
"மிகைப்படுத்தல்" என்று எழுதியதைக் கவனிக்க மறந்ததும் ஏனோ, சித்தரே?

ஒரு அரிசோனன் 

Dhivakar

unread,
May 15, 2015, 12:29:33 AM5/15/15
to மின்தமிழ்
அடக் கடவுளே!

அப்போ

‘கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி,,

என ‘தாண்டகம் பாடிய திருநாவுக்கரசர் எதைச் சொல்கிறார் என சொல்லுங்கள் சரவணனரே!


திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 15, 2015, 12:34:03 AM5/15/15
to mintamil
திருமதி மேகலா

JUST IMAGINE.

ஒரு பெண் முன்னாடி இருக்கிறார். அவர் தனது தலைமுடியினை வாரி சடையாகப்
பின்னி பூ வைத்திருக்கிறார். இவரைப் பார்த்தால் எப்படி இருக்கும். அழகாக
இருப்பார் இல்லையா?

அதே பெண் தனது தலைமுடியினை விரித்து நாலா புறங்களிலும் அதைப்
பரப்பிவைத்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை நம்மால்
பார்க்க சகிக்குமா?. நிச்சயம் சகிக்காது தானே. இந்நிலையில் அவர் தனது
அலங்கோலமான தலைமுடியில் பூச் சூட முடியுமா?. முடியாதன்றோ?. இந்த
இரண்டாவது நிலை தான் நீங்கள் கூறிய கொன்றை மர உவமை. பெண்ணைக் கொன்றை
மரமாகவும் கொன்றையின் கிளைகளை பெண்ணின் தலைமுடிக்கும் உருவகப்
படுத்தினால் நிலைமை இப்படித் தான் இருக்கும். :)))

ஒரு உவமை இருந்தால் அதில் நிச்சயம் அழகுணர்ச்சி இருக்க வேண்டும். ஒரு
நோக்கம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கூறிய உவமையில் அழகுணர்ச்சி
இருக்கிறதா?. நோக்கம் இருக்கிறதா? எதுவுமே இல்லை. இதை எப்படி ஒரு உவமையாக
உங்களால் ஏற்க முடிகிறது?.

ஆனால் நான் கூறிய உவமை விளக்கத்தை எண்ணிப் பாருங்கள். அப் பெண் தனது
கண்ணிமையினை மஞ்சள் வண்ணத்தில் பூசி அலங்கரித்திருக்கிறாள். அதைப்
பார்க்கும்போது கொன்றை மலரின் இதழ் போலத் தோன்றி இருக்கிறது. அதனால் அவ்
உவமை கூறப்பட்டு இருக்கிறது. இப்போது சொல்லுங்கள். இந்த உவமையில்
அழகுணர்ச்சி இல்லையா?. நோக்கம் இல்லையா?.

உங்களைப் போலத்தான் நானும் எனது ஆசிரியர்கள் கூறிய விளக்கம் சரி என்று
இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் எனக்குள் நான் கேள்வி
கேட்டேன். இவ் உவமை சரியா? இல்லை. தவறு. இப்படி ஓர் இழிவான உவமையினைப்
புலவர்கள் கூற மாட்டார்கள். அப்படியானல் உண்மை என்ன?. ஆய்வு செய்ததின்
விளைவினைத் தான் உங்களுக்குக் கூறினேன்.

நீங்கள் கூறிய விளக்கம் அனைத்தும் நான் ஒன்றும் அறியாதவனல்ல.

ஆனால், நான் கூறிய விளக்கங்களை சற்றுப் பொறுமையாக ஆழமாக சிந்தித்துப்
பாருங்கள். அதன் உண்மை புரியும்.

நீங்கள் எழுப்பிய அனைத்து ஐயங்களுக்கும் இப்போது பதிலளிக்க நேரமில்லை.
பின்னர் தருகிறேன்.

அன்புடன்,










2015-05-14 19:52 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 15, 2015, 7:16:37 AM5/15/15
to mintamil
2015-05-14 19:52 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
> //கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றை - குறு 21/3
>
> கண்ணிமையானது கொன்றைப் பூவினைப் போல மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு
> இருந்ததாக இப் பாடல் கூறுகிறது//
>
> ஐயா! அப்படியெல்லாம் இப்பாடல் கூறவில்லையே!
>
> வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
> பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
> கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
> கானங்.... (குறுந்: 21)
>
> வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படிசெறிந்து மலர்ந்த, நீட்சியை உடைய
> பூங்கொத்துக்களைத் தழைகளின் இடையே மேற்கொண்டு, பொன்னால் செய்த
> அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை, கோத்துக் கட்டியமகளிருடைய கூந்தலைப் போலக்
> கண்ணிற்குத் தோன்றுகின்ற புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களுடைய
> காடு...என்பதல்லவா இவ்வரிகளின் பொருள்.
>
> இங்கே கொன்றை மரம் பெண்களுக்கும், அதில் செறிந்துள்ள தழைகள் மகளிரின்
> கூந்தலுக்கும் அம்மரத்தில் பூத்துள்ள பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அம்மகளிரின்
> தலையணிக்கும் அல்லவா உவமையாகக் கூறப்பட்டிருக்கின்றன!


இதைப் பற்றி ஏற்கெனவே விளக்கி விட்டேன். இது தவறான உவமை.


>
> *****
>
> //முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
> கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
> வண்டினந் தவிர்க்குந் தண்பதக் காலை... (அகம்: 244)//
>
> எனும் வரிகளுக்குக் கண்ணிமைகள் முல்லை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது
> என்று இதுவரை யாரும் பொருள்கூறி நான் கேட்டதில்லை!!
>
> கொடியின்மீது அரும்புகள் வாய்திறந்து மலர்ந்த ஒளிபொருந்திய முல்லை, மணமகள்
> கூந்தலைப் போல மணந்து, வண்டின் தொகுதிகளைச் செல்லவொட்டாது தடுக்கும் குளிர்ந்த
> செவ்வியையுடைய கார்காலத்தே...என்பதே இப்பாடல் வரிகளுக்கான பொழிப்புரை.

நீங்கள் முல்லை மலர் சூடியிருக்கிறீர்களா?. சூடி இருந்தால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அது ஒரு மிக சுமாரான மணம் கொண்ட பூவென்று!. மல்லிகையைப் போலவோ பிச்சியைப் போலவோ அதற்கு நல்ல அடர்த்தியான வாசம் இல்லை. எனவே முல்லை மணம் சிறப்புடையதன்று. நிற்க,

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா இல்லையா? என்ற பஞ்சாயத்து முடிந்து இல்லை என்பது நாட்டாமையின் தீர்ப்பாகிவிட்ட நிலையில் ' மணமகள் கூந்தலைப் போல மணந்து ' எனத் தாங்கள் கூறுவதும் ஏனோ?

ஆனால் நான் கூறிய உவமையில், முல்லை மலரானது மணமகளின் வண்ணமிட்ட கண்ணிமையினைப் போல மலர்ந்து ஒளிவீசியது என்பது பொருள். இதில் பிழையென்ன?. பொருத்தமாகத் தானே இருக்கிறது?

இங்கு நாறி என்பது மணந்து என்று பொருள்வராது. ஒளிவீசி என்று பொருள்வரும்.

>
>
> //மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29
> மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49
> மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம் - 389
> மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே நற் -57
>
> மேற்காணும் பாடல்களில் ஓதியானது கரிய மையினால் பூசப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
> ஆனால் பெண்களின் தலைமுடியில் எண்ணை பூசுவதுதான் வழக்கமே ஒழிய மை கொண்டு பூசுவது
> வழக்கமல்ல.//
>
> ஐயா!  இங்கே ’மை’ என்பது ’கருமை’ என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. ’மையீர்
> ஓதி’ என்பதற்கு கருமையான, ஈரிய (மென்மை) கூந்தல் என்றல்லவா பொருள்கொள்ள
> வேண்டும்? மையைப் பூசினர் என்றா அறிவுக்குப் பொருந்தா வகையில் பொருள்சொல்வது?
> It's ridiculous!
>

கருமையான மென்மையான தலைமயிர் அந்தப் பெண்ணுக்கு மட்டும் தான் இருக்கிறதா?. மற்ற பெண்களுக்கு என்ன நரைமுடியும் சடைமுடியுமா?. சரி, ஈர் என்றால் மென்மை என்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் உண்டா?. காட்டுங்கள்.

பெண்களின் தலைமயிரின் இயல்பே அது கருமையாகவும் மென்மையாகவும் இருப்பதுதானே!. இதில் சிறப்பு என்ன இருக்கிறது?. சிறப்பே இல்லாத போது அப்படி ஒரு விளிப்பு ஏன்? அதாவது கருமையாக்வும் மென்மையாக்வும் இருக்கும் கூந்தலை உடையவளே என்று ஏன் விளிக்க வேண்டும்?. இதில் என்ன நோக்கம் இருக்கிறது?. அழகு இருக்கிறது?

ஆனால் அதே சமயம் நான் கூறிய உவமையில், கரிய மையினால் பூசப்பட்ட கண்ணிமையினை உடையவளே என்பதில், அப் பெண்ணின் கண்கள் மையுண்டதால் அழகாகத் தோன்றுகின்றன என்ற கருத்து வெளிப்படவில்லையா?. அழகுணர்ச்சி தோன்றவில்லையா?


> //வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22
>
> இப்பாடல்களில் ஓதியினை வாழைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். பொதுவாக,
> பூவினை ஒத்த கண்ணின் உறுப்பு கண்ணிமையே என்பதால், ஓதி என்பது கண்ணிமையைத் தான்
> குறிக்கும் என்று தெளியலாம். மேலும் வாழைப்பூவானது கண் போன்ற வடிவத்தில்
> இளஞ்சிவப்பு வண்ணத்தில் பல வரிகளை உடையதாக இருக்கும். இவ் வாழைப்பூவினைப் போல
> பல செவ்வரிகளால் வரையப்பட்டிருப்பதால் இங்கே கண்ணிமையினை வாழைப்பூவுடன்
> ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.//
>
> கடவுளே... இது என்ன தமிழுக்கு வந்த சோதனை!  :-(
>
> இங்கே வாழைப்பூவை ஓதிக்கு உவமையாகக் கூறியிருப்பது அதன் வண்ணம்
> நோக்கியன்று...வடிவம் நோக்கி. பெண்கள், வாழைப்பூ போல ஓதியைக் கோபுர வடிவில்
> கொண்டையிட்டுக்கொள்வதுண்டு. ’ஐம்பால்’ என்று பெண்களின் கூந்தலை ஐந்து வகைகளாகக்
> குறிப்பர்; அதில் இவ்வாறு கொண்டையிடுவதற்குப் ’பனிச்சை’ என்று பெயர்.  அதன்
> அடிப்படையிலேயே இங்கே கூந்தலுக்கு வாழைப்பூவை ஒப்பிட்டுள்ளனர்; மற்றபடி
> வாழைப்பூவின் வண்ணத்திற்கும் கூந்தலின் வண்ணத்திற்கும் தொடர்பேதுமில்லை
> என்பதைக் குழந்தைகூட அறியுமே!!!

வாழைப்பூவுக்கும் கூந்தலுக்கும் என்ன தொடர்பு?. வடிவமா? வண்ணமா? வரிகளா?

வாழைப்பூவின் சிறப்பே அதன் சிவந்த வண்ணமும் கூரிய முனையும் செவ்வரிகளும் தான். இதில் எதாவது ஒன்று கூந்தலுடன் ஒத்து வருகிறதா?. நீங்கள் சொல்லும் பனிச்சைக் கொண்டையை வாழைப்பூவின் கூர்மையுடன் போட முடியுமா?. முடியாது. பெண்கள் கோபுர வடிவில் வேண்டுமானால் கொண்டை போடலாமே ஒழிய வாழைப்பூவினைப் போல கூரிய நுனியுடன் கொண்டை போட முடியாது. அப்படிப் போட்டாலும் அது வடிவேலுவைப் போல நகைச்சுவையாகி விடுமே ஒழிய பாராட்டு பெறாது. எனவே வாழைப்பூக் கொண்டை தவறான உவமை.


>
> இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத
> எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக்
> கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை
> என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.
> மன்னிக்கவும்!
>
> அன்புடன்,
> மேகலா
>
>
>
>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 15, 2015, 7:23:19 AM5/15/15
to mintamil
ஹரியண்ணா

மேகலாவிற்கு விளக்கம் அளிக்க சற்று தாமதாகி விட்டது.

சந்து கேப்புல பூந்து வெளையாடீட்டீங்களேண்ணா.

சரி சரி, பெரியவா சொன்னா கேட்டுக்கணும், கேட்டுக்கறேன். :))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 15, 2015, 7:31:12 AM5/15/15
to mintamil
கொம்பு = மெல்லிய பூங்கிளை.

கிளையில் பூத்த பூவினைப் போல அம்மையின் இமையில் மையணி.

சரி, நீங்களே சொல்லுங்க திவாகர் ஐயா

இடை நுட்பமானதா? அல்லது

இமை நுட்பமானதா?

Nagarajan Vadivel

unread,
May 15, 2015, 7:50:47 AM5/15/15
to மின்தமிழ்
2015-05-15 17:01 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இடை நுட்பமானதா? அல்லது

இமை நுட்பமானதா?

​இடை வளரும் தளரும்
இமை பிறப்பிலிருந்து இறப்புவரை மாறாதது
வலையானந்தா​

Innamburan S.Soundararajan

unread,
May 15, 2015, 10:44:31 AM5/15/15
to mintamil
வலையானந்தா! உமக்கு கலையானந்தா என்றும் நாமகரணம் செய்வித்தோம்.

Nagarajan Vadivel

unread,
May 15, 2015, 10:56:32 AM5/15/15
to மின்தமிழ்
கண் மங்கலாக இருந்ததால் நித்தியானந்தா என்று போட்டுவிட்டீர்களோ என்று பயந்துபோனேன். பின்னர் நித்யனானேன்
வலையானந்தா

Innamburan S.Soundararajan

unread,
May 15, 2015, 11:35:51 AM5/15/15
to mintamil

Megala Ramamourty

unread,
May 15, 2015, 8:29:32 PM5/15/15
to மின்தமிழ்
//ஒரு உவமை இருந்தால் அதில் நிச்சயம் அழகுணர்ச்சி இருக்க வேண்டும். ஒரு

நோக்கம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கூறிய உவமையில் அழகுணர்ச்சி
இருக்கிறதா?//

அன்பின் சரவணரே,

அழகிய கொன்றை மரத்தை மங்கையாகவும், அதன் செழித்து அடர்ந்த இலைகளை அம்மங்கையின் கூந்தலாகவும், அம்மரத்தின் உச்சியில் பொலிகின்ற பொன்னிறக் கொன்றைப் பூக்களை மங்கையர் அணியும் பொன்னாலியன்ற தலையணிகளுக்கு (also known as தலைக்கோலம்) உவமையாகவும் சொல்லுவதில் அழகுணர்ச்சி இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்குப் பெருவியப்பைத் தருகிறது.

அதற்கு மாற்றாக நீங்கள் வலிந்து உருவாக்கியிருக்கும் கொன்றைப்பூ வண்ணக் கண்ணிமைப் பூச்சு (eye-shadow) பூசிய பெண்ணிடம் எந்த அழகும் மிளிரக் காணோமே!

சொல்லப் போனால் அவ்விதம் எந்தப் பெண்ணாவது yellow-color eye-shadow அணிந்து எங்கள்முன் வந்தால் பயந்துபோய் நாங்களெல்லாம் தலைதெறிக்க ஓடுவோம்! :-)))



***

//நீங்கள் முல்லை மலர் சூடியிருக்கிறீர்களா?. சூடி இருந்தால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அது ஒரு மிக சுமாரான மணம் கொண்ட பூவென்று!. மல்லிகையைப் போலவோ பிச்சியைப் போலவோ அதற்கு நல்ல அடர்த்தியான வாசம் இல்லை. எனவே முல்லை மணம் சிறப்புடையதன்று. நிற்க//

என்ன சொன்னீர்கள்? முல்லையின் மணம் சுமாரென்றா? நீங்கள் மிகவும் வித்தியாசமான மனிதர்தான் சரவணன்! முல்லை மலர் அளவில் சிறியதாயினும் மணத்தில் மிகப் பெரிது! எந்த மலரும் மணத்தில் அதனருகில் வரமுடியாது. அத்தோடு, கற்பின் அடையாளமாகவும் அன்று அம்மலர் கருதப்பட்டதால் முல்லையை மங்கையரோடு இணைத்துப் பார்ப்பதில் அன்றைய புலவர்கட்கு ஓர் அலாதி மகிழ்ச்சி எப்போதுமே!

அதனால்தான் மங்கையின் கூந்தல் மணத்தை முல்லை மணத்தோடு ஒப்பிட்டார் புலவர் மதுரை மள்ளனார். இதை உணராது, அப்பெண்ணுக்கு (மீண்டும்) முல்லைவண்ண eye-shadow தீட்டப் போய்விட்டீர்களே சரவணன்! (நீங்கள் பேசாமல் அழகுக்கலை நிபுணராகப் போயிருக்கலாம்!)  :-)))

***

அடுத்தபடியாக, வாழைப்பூவைப் பாவையரின் கண்களோடு ஒப்பிட்டு அடுத்த அதிர்ச்சியை எமக்குத் தந்திருக்கிறீர்கள்!

வண்ணம், வடிவம் எதிலுமே வாழைப்பூவைக் கண்களோடு ஒப்பிடமுடியாது. அப்படி ஒரு பெண்ணுக்குக் கண்கள் இருந்தால் அது மிகப் பயங்கரமாகத்தான் இருக்கும். பெண்ணின் கண்களைக் கபிலர் வருணித்திருப்பார் நற்றிணைப் பாடலொன்றில் வெகுஅற்புதமாக! எந்தப் புலவனும் அவ்வளவு நுட்பமாகவும், அழகாகவும் கன்னியரின் கண்களை இன்றுவரை வருணித்ததில்லை...இனி வருணிக்கப் போவதுமில்லை. கபிலரின் கண்ணழகியை மனக்கண்ணில் பார்த்துவிட்டு, உங்கள் வாழைப்பூ கண்ணழகியை அவளோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்! வாழ்வையே வெறுத்தேன் ஐயா!   :-)))))))))

புலவர் தோழ! வாழைப்பூவைப் புலவர்கள் தம்முடைய பல பாடல்களில் பெண்களின் கொண்டையான பனிச்சையோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்கள் (உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும்). உடனே கணித உபகரணங்களையெல்லாம் எடுத்துச்சென்று கொண்டையின் நீளம், அகலம், கூர்மை ஆகியவையெல்லாம் துல்லியமாக வாழைப்பூவை ஒத்திருக்கிறதா என்று ஆராயப்புகுவது சிறுபிள்ளைத்தனமானது. ’கூந்தலை உயரத்தூக்கி முடிந்திருந்தார்கள் வாழைப்பூவைப் போல்’ என்பதே அதன் பொருள். எனவே கோபுரக் கொண்டையை வாழைப்பூக் கொண்டை என்று கொள்ளலாம்; தவறில்லை! 

நீங்கள் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?அதில் குந்தவைப் பிராட்டியாரின் கொண்டை இவ்விதம்தான் போடப்பட்டிருக்கும். மிக அழகாக இருக்கும்!
இதோ கீழுள்ள படத்தில் இடப்புறம் நிற்கும் குந்தவையின் தலையலங்காரத்தைப் பனிச்சையோடு ஒப்பிடலாம். இது வாழைப்பூவின் வடிவத்தை ஒத்திருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன். இது வடிவேலுவைப்போல் காமெடியாகவெல்லாம் இல்லை!   :-)




***

அதுபோல், மையீரோதி, அஞ்சிலோதி போன்ற தொடர்களும் இலக்கியத்தில் அடிக்கடி வருபவையே! மையீரோதி என்பதற்குக் கறுத்த ஈரிய கூந்தல் என்று பொருள் சொல்வர். இவ்வாறு கூறுவதில் என்ன அழகுணர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்? எல்லா இடங்களிலும் அழகுணர்ச்சியோடு ’உயர்வுநவிற்சி’யாகவே உவமைகள் அமையவேண்டும் என்பதில்லை; அவை, இதுபோல் ’இயல்புநவிற்சி’யாக வருமிடங்களும் இலக்கியங்களில் உண்டு!

’ஈர்’ என்ற சொல் ஈரம், நுண்மை, இனிமை என்று பலபொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. இடம்நோக்கிப் பொருள்கொள்ள வேண்டும்.

’மையீர் ஓதியில்’ கருமையான, நெய் தடவப்பட்ட கூந்தல் என்று கொள்வது பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.

***

சரவணரே! உங்கள் தமிழாராய்ச்சியும், பழைய உரைகளில் உள்ள பொருந்தாப் பொருளை நீக்கிவிட்டுப் புதுப்பொருள் புகுத்துவதும் பாராட்டத்தக்கதே! எனினும் சில இடங்களில் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் என் சிற்றறிவுக்குப் பொருத்தமாகப் படாததாலேயே இம்மடல்கள்! மற்றபடி உங்கள் நன்முயற்சிகளுக்கு என் மடல்களை முட்டுக்கட்டையாய் எண்ணவேண்டா!

நம் இலக்கியங்களுக்குப் புத்தொளி பாய்ச்சும் வகையில் உங்கள் பணிகள் துடிப்போடு தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே!

அன்புடன்,
மேகலா

அன்புடன்,
மேகலா


PRASATH

unread,
May 15, 2015, 10:01:38 PM5/15/15
to mint...@googlegroups.com

நடைக்கோர் உவமையாம் அன்னமது யாதோ
விடைதெரியும் முன்பே படைத்தனர்;இன் னொன்றாய்
இடைக்கோர் உவமை கொடியில் பிழையென்று
உடைக்கும் வருமோ அடுத்து.

Nagarajan Vadivel

unread,
May 15, 2015, 10:19:24 PM5/15/15
to மின்தமிழ்
அன்னமோ கொடி இடையோ 
மின்தமிழ்ச் சங்கத்தில் கருத்துக்கள் அவ்வளவு எளிதாகக் கரையேற முடியாது
கோவைப் பக்கம் கேக்குறவன் கேனயனா இருந்தா எருமையும் ஏரோப்ளான் ஓட்டும் என்று சொல்வார்கள்
மின்தமிழில் பைலட்டே வந்தாலும் பரிசோதனைக்குப் பிறகே வண்டி ஓட்ட முடியும்
ஒரு காலத்தில் உரையாசிரியர்கள் கொடி இடைக்கு விரிவான விளக்கம் கொடுத்தது மாறி உரையாசிரியர்களுக்குக் கரைச்சல் கொடுக்குறாங்களே 
நடக்கட்டும் நடக்கட்டும்
அறிஞர்கள் மோதினால் அறிவின் ஒளிச் சிதறல்கள் தோன்றுமே
அப்பாபப் புகையும் பகையும் இருக்கத்தான் செய்யுது என்ன செய்ய
வலையானந்தா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
May 15, 2015, 10:30:32 PM5/15/15
to mint...@googlegroups.com
உடுக்கை இடை  என்றால்  உவமை  சரிதான்

கொடியிடை  என்றால்   எப்படி?

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



PRASATH

unread,
May 15, 2015, 10:37:08 PM5/15/15
to mint...@googlegroups.com

ஐயா, தவறாக நினைக்க வேண்டாம்... பின்வரும் பதில் நகைச்சுவைக்கு மட்டும்...

அடுத்து யாராச்சும் வந்து கொடின்னா அவரைக் கொடியா, தொப்புள் கொடியா இல்லை ஏதும் கட்சிக் கொடியானு கேட்குற்துக்கு முன்னால மீ த எஸ்கேப்...

Megala Ramamourty

unread,
May 15, 2015, 10:42:35 PM5/15/15
to மின்தமிழ்
காமெடி செய்வதை விட்டுவிட்டு, ’நுசுப்பு’ எனும் சொல் இடையைத்தான் குறிக்கும், நண்பர் சரவணர் சொல்வதுபோல் ’கண்ணிமையை அன்று’ என அன்னப்பறவை ஆராய்ச்சியாளர் வலையானந்தாவோ இல்லை குட்டிக் கதைகள் கூறி நீதியை உணர்த்தும் தம்பி பிரசாத்தோ ஆதாரங்களுடன் நிறுவலாமே! :-))


இணையப்ப வள்ளல்

unread,
May 15, 2015, 11:34:51 PM5/15/15
to mint...@googlegroups.com
அடங்கொப்புறான வல்லமைக் கவிஞரே கொடியப் பாத்து பச்சப்பாம்புன்னு பஞ்சகல்யானியா ஓடிக்கிட்டிருக்காரு.  நான் மட்டும் ஏமாளியா அவர முந்தி ஓடிக்கிட்டிருக்கேன்
தமிழ்க் கவிஞர் சொல்றது எது சரின்னு விளங்கவே மாட்டேங்குது
திருத்தம் ஐயா எழுதுனது சரின்னு நினச்சா மேகலா வாரியார் கொட்டி முழக்கி  வார்ப்பிடிக்கிறார்
சின்னப்புள்ளங்களுக்கு ஜவ்வுமிட்டாய்காரன் கடிகாரம் வளையல் இழுத்து இழுத்துச் செஞ்சு கையில் கட்டிவிடறமாதிரி ஜமாய்க்குறாங்க.  எப்படியிருந்தாலும் அது சுவைப்பதற்குத்தானே
அவரைக்கொடியோ அரசியல் கொடியோ கொழுகொம்பு வேண்டும் வளரவும் உயரவும்
இணையப்ப வள்ளல்

PRASATH

unread,
May 15, 2015, 11:51:25 PM5/15/15
to mint...@googlegroups.com

உடுக்கை, பெண்களின் உடலமைப்பை குறிப்பிடச் சொல்வது உண்டு ஐயா, இடைக்கு மட்டும் சொல்வதில் பொருளில்லை என்பது எனது எண்ணம்...

On 16 May 2015 08:00, "Tthamizth Tthenee" <rkc...@gmail.com> wrote:

PRASATH

unread,
May 15, 2015, 11:57:10 PM5/15/15
to mint...@googlegroups.com

உலகம் உருண்டை என வழக்கு இருக்கையில் உலகம் தட்டையாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது, அதனால் உலகம் தட்டைதான் எனச் சொல்லுமிடத்து, உலகம் தட்டையானது தான் என்று சொல்பவரே அதனை நிரூபிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்...

ஏனென்றால் உலகம் உருண்டை எனப் பலரும் அருமையான விளக்கங்களைத் தந்திருக்கின்றனர். புதிதாக ஒரு விளக்கம் தேவையில்லை...

என்ன அக்கா, சொல்வது சரிதானே...

On 16 May 2015 08:12, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:
காமெடி செய்வதை விட்டுவிட்டு, ’நுசுப்பு’ எனும் சொல் இடையைத்தான் குறிக்கும், நண்பர் சரவணர் சொல்வதுபோல் ’கண்ணிமையை அன்று’ என அன்னப்பறவை ஆராய்ச்சியாளர் வலையானந்தாவோ இல்லை குட்டிக் கதைகள் கூறி நீதியை உணர்த்தும் தம்பி பிரசாத்தோ ஆதாரங்களுடன் நிறுவலாமே! :-))


Hari Krishnan

unread,
May 16, 2015, 12:45:03 AM5/16/15
to mintamil

2015-05-16 8:00 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
உடுக்கை இடை  என்றால்  உவமை  சரிதான்

கொடியிடை  என்றால்   எப்படி?

பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்.

பொய்யோவெனும் இடை தப்பான கற்பனை.  இல்ல? :)


--
அன்புடன்,

Hari Krishnan

unread,
May 16, 2015, 12:49:00 AM5/16/15
to mintamil

2015-05-16 5:59 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
அடுத்தபடியாக, வாழைப்பூவைப் பாவையரின் கண்களோடு ஒப்பிட்டு அடுத்த அதிர்ச்சியை எமக்குத் தந்திருக்கிறீர்கள்!

அவருக்குக் பெண்களின் கண் மேல தீராத தாகம்.  கண்ணகி திருகி எறிந்தது மார்பையன்று கண்ணை.  அல்குல் என்றால் கண், நுசுப்பு என்றால் கண்ணிமை, இப்ப வாழைப்பூ என்றால் கண்.  அடுத்ததாக வருக்கை என்றாலும் கண் என்று சொல்லும் நாளும் வரலாம்.


--
அன்புடன்,

Hari Krishnan

unread,
May 16, 2015, 1:03:14 AM5/16/15
to mintamil

2015-05-16 10:18 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அவருக்குக் பெண்களின் கண் மேல தீராத தாகம்.  கண்ணகி திருகி எறிந்தது மார்பையன்று கண்ணை.  அல்குல் என்றால் கண், நுசுப்பு என்றால் கண்ணிமை, இப்ப வாழைப்பூ என்றால் கண்.  அடுத்ததாக வருக்கை என்றாலும் கண் என்று சொல்லும் நாளும் வரலாம்.

இங்க பாருங்க:


தொடி என்றால் கண்ணில் இட்டுக்கொள்ளும் மை

ஆகம் என்றால் கண் அல்லது கண்ணிமை

மிக்க அன்புடையார், அன்புடையேன் என்றாலும் சொல்ல வேண்டியதைச் சொல்வது கடன்.  பிறகு அவர் விருப்பம்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 1:28:01 AM5/16/15
to mintamil
ஹரியண்ணா

ரொம்பச் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

பெண்களின் கண்களின் மேல் தீராத காதல் தான்.

ஆனால் எனக்கில்லை; புலவர்களுக்கு.

அவர்கள் ஒரு பெண்ணைப் பார்க்கும்பொழுது முகத்தை விட்டுக் கீழே இறங்காத பார்வையினை உடைய கண்ணியவான்கள்.

அவர்களின் பாடுபொருளில் பெரிதும் இடம் பிடித்திருப்பது கண் தான் அண்ணா.

ஆனால் நம்மவர்கள்தான் கண்ணை விட்டு இறங்கி எங்கெங்கெல்லாமோ சென்று எதெதையோ அர்த்தமாகச் சொல்லி புலவர்களின் கண்ணியத்தையே கொச்சைப்படுத்தி விட்டார்கள்.

இதைத்தானே எனது எல்லா கட்டுரைகளிலும் சொல்லி இருக்கிறேன்.

கேட்பவர்கள் கேட்கட்டும். :)))



அன்புடன்,


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

N. Ganesan

unread,
May 16, 2015, 1:32:22 AM5/16/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, May 15, 2015 at 7:30:32 PM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
உடுக்கை இடை  என்றால்  உவமை  சரிதான்

கொடியிடை  என்றால்   எப்படி?

திருமுல்லைவாயில் கொடியிடைநாயகி பற்றி எழுதியவர் நீங்கள். அவள் பேரில் மாலை 200 வருஷத்திற்கு முன்னால் அச்சானது இருக்கிறது. Hourglass மாதிரி இடை - எனவே துடியிடை என்பர். துடி - சிறிய உடுக்கை. கொடியிடை என்றாலும் அதுவே பொருள்.
கொடியிடையின் நேர் மொழிபெயர்ப்பு லதாங்கி. லதா = கொடி. அங்கம் = இடை(இடுப்பு), உடல் அங்கங்களில்(பாகங்களில்) ஒன்று. 

நளவெண்பா:

கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதாரம் இன்மை அறிந்து.

(இ - ள்.) கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து - (நாயகன் ஒருவன்) தான் பறித்த பூக்களைத் தன் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு போய், மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தன் நாயகியின் அடர்ந்த கூந்தலிலணிவதற்கு அவள் நேரேவந்து நின்று (உற்று நோக்கி), பாவை இடைக்கு ஆதாரம் இன்மை அறிந்து - பாவைபோல்வாளாகிய தன் காதலியின் நுசுப்பிற்கு யாதொரு பற்றுக்கோடு மில்லாதிருத்தலைத் தெரிந்துகொண்டு, பாத அரவிந்தத்தே சூட்டினான் - அவளின் தாமரை மலரனைய அடிகளில் வைத்தான். (ஏ! நங்காய் பார்.)

திருவள்ளுவர் தந்த காதலன், தன் காதலி பூக்களின் காம்புகளைக் களையாமல் சூடியதற்கு, ‘அவள் இடை தாங்காமல் முறியுமே ! என்னாங்கொல் ! இனி இறந்துபடுவளே ! அதற்காகச் சாப்பறையன்றோ முழங்கும் ! என் செய்வேன் ! இவள் தன்நிலைக் கொவ்வாததைச் செய்தனளே !’ என, வருந்துவதாகக் காட்டுகின்றார். அக்கருத்தோடொத்ததே இப்பாடலும். எனவே, அவ் வள்ளுவர் காட்டும் பாவையையும் இங்கே காண்க:

‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை’

என்பது அது.


நளவெண்பாவில் தான் நளன் தமயந்திக்கு தூது அனுப்பியது எந்த அன்னம் எனச் சொல்கிறார்.
செங்கால் அன்னமாம். அதன் ஆங்கிலப் பெயர்: graylag goose. இதனை அரச அன்னம் (ராஜ ஹம்சம்)
என்ற வைரமுத்து சினிமாப் பாடலை விளக்குகிறார் N. சொக்கன்



நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
May 16, 2015, 1:35:56 AM5/16/15
to மின்தமிழ்

2015-05-16 10:57 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஆனால் நம்மவர்கள்தான் கண்ணை விட்டு இறங்கி எங்கெங்கெல்லாமோ சென்று எதெதையோ அர்த்தமாகச் சொல்லி புலவர்களின் கண்ணியத்தையே கொச்சைப்படுத்தி விட்டார்கள்.

​அதானே

N. Ganesan

unread,
May 16, 2015, 1:55:53 AM5/16/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Friday, May 15, 2015 at 7:30:32 PM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
உடுக்கை இடை  என்றால்  உவமை  சரிதான்

கொடியிடை  என்றால்   எப்படி?


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?

குலுங்கும் முந்தானை,
சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ?
உந்தன் கொடி இடை இன்று,
படைகொண்டு வந்து கொல்வவதும் ஏனடியோ! 

அகலவுரை: என். சொக்கன்:

நா. கணேசன்

Seshadri Sridharan

unread,
May 16, 2015, 2:05:01 AM5/16/15
to mintamil
//இக் கட்டுரையில் பெண்களுக்குக் கொடி இடை என்பது சாத்தியமா? உண்மையா? என்பதைப் பற்றிய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டுக் கருத்தைக் கூறுங்கள்.

http://thiruththam.blogspot.in/2015/05/blog-post_14.html

அன்புடன், திருத்தம் பொன்.சரவணன்//

  Image result for sand clock  Inline image 1

கொடி என்றால் மெல்லியது என்ற பொருள் தவறானது.குல் > கொல் > கொடி = வளைவுக்  கருத்து.

இடைக்கு கீழே புட்டமும், தொடையும் தடித்தும்,  அதுபோலே தோள் மார்பு தடித்து வயிறு மட்டும் ஒடுங்கி இருந்தால் மேல் உள்ள மண் கடிகாரம் போல் ஓரளவு தோற்றம் ஏற்படும். தெருவில்  நடக்கும் மணமாகாத பெண்களில் சிலரை இவ்வாறு நான் பார்த்துள்ளேன். இதைத் தான் கொடி இடை என்றிருக்க வேண்டும். கண் புருவமும் வளைந்தே உள்ளது. 

கைத்தொழுவான் 

N. Ganesan

unread,
May 16, 2015, 2:19:46 AM5/16/15
to mint...@googlegroups.com


On Friday, May 15, 2015 at 11:05:01 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
//இக் கட்டுரையில் பெண்களுக்குக் கொடி இடை என்பது சாத்தியமா? உண்மையா? என்பதைப் பற்றிய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டுக் கருத்தைக் கூறுங்கள்.

http://thiruththam.blogspot.in/2015/05/blog-post_14.html

அன்புடன், திருத்தம் பொன்.சரவணன்//

  Image result for sand clock  Inline image 1

கொடி என்றால் மெல்லியது என்ற பொருள் தவறானது.குல் > கொல் > கொடி = வளைவுக்  கருத்து.

கோடுதல் என்பது கொடி என்றாதல் இயல்பே. கொடுமணம். கொடுவாள் போல எனலாம்.
லதா என்னும் தாவரக் கொடிக்கும் அதனாற்றான் கொடி எனப் பெயர் (கொடி < கோடு-தல்).
ஆமாவின் கோடு அணிந்த கொற்றவை 4500 வருடமாய்.  எனவே கௌடி/கௌரி < கோடு.

கொடு-/கோடு- & குள்-/கொள்- (குளம், குண்டம், குட்டை, குடம், ..._
இந்த வளைநா (retroflex) ஒலிகள் திராவிட மொழிகளில் அடிப்படையானவை.
(1) குள்-/கொள்-/கொட்-/குட்- ... வேறு.
vs.
(2) குல்-/கொல்- வேறு. குலைத்தல், கொல்லுதல் போன்ற சொற்கள் பிறக்கும்.

Lots of semantic difference exist between (1) vs. (2). Dravidian -L- vs. -l-, they are not the same.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
May 16, 2015, 2:25:38 AM5/16/15
to மின்தமிழ்
என்னங்கையா இது கூத்து
கண்ணாடிக்குடுவை மணல் என்று பலசரக்கையெல்லாம் கொண்டுவந்துபோட்டு
கொடி இடை என்பது பெண்ணின் மெல்லியல்பைக் குறிப்பது
சில்ப சாஸ்திர அடிப்படையில் தமிழ்ப்பெண் கொஞ்சம் தாட்டியா பூசி மெழுகிய தசைக் கொழுப்புடன் இருப்பதுபோன்று வடிப்பது மரபு.  மேல்நாட்டுப் பெண்களுக்கு கிரேக்க தேவதை வீனஸ் தான் மாதிரி
தமிழ்நாட்டுக்கு அப்படி ஒரு மாதிரி இருந்தால் மட்டுமே கொடி இடையா அல்லது துடி இடையா என்று முடிவுகட்ட முடியும்
நம்மவர்கள் சாமுத்ரிகா லட்சணம் என்று 64 வகையைக் கூறுகிறார்கள்.  ஆண்களுக்கு 32 மட்டும்தான்.  அதுவும் புத்தர் போன்ற பூரணர்கள் மட்டுமே 32 சாமுத்ரிகா லட்சணங்களுடன் இருக்க முடியுமாம்.
சாமுத்ரிகா லட்சணத்தில் தேடினால் இடை இமை பற்றிய விடை கிடைக்கும்
இணையப்ப வள்ளல்

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 2:26:14 AM5/16/15
to mintamil
கணேசர் ஐயா

தயவுசெய்து இழைக்குத் தொடர்பில்லாததை இடவேண்டாம்.

அன்புடன்,

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

N. Ganesan

unread,
May 16, 2015, 2:34:23 AM5/16/15
to மின்தமிழ்
2015-05-15 23:26 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
கணேசர் ஐயா

தயவுசெய்து இழைக்குத் தொடர்பில்லாததை இடவேண்டாம்.


கொடி என்பது இழைக்கு தொடர்பு இல்லையா?

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 2:49:27 AM5/16/15
to mintamil

2015-05-16 12:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொடி என்பது இழைக்கு தொடர்பு இல்லையா?

உங்களுக்குப் பச்சைக்கொடி காட்டினால் பின்னாலேயே

அன்னக்கொடி வரும்.  அதன் பின்

அன்னம் வரும்.

இன்னும் எதெதோ வரும்.

தேவையா ?

Nagarajan Vadivel

unread,
May 16, 2015, 2:57:14 AM5/16/15
to மின்தமிழ்

2015-05-16 12:19 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இன்னும் எதெதோ வரும்.

​​என்னைத்தானே சொல்றீங்க
இணையப்பன்

N. Ganesan

unread,
May 16, 2015, 3:04:11 AM5/16/15
to mint...@googlegroups.com


On Friday, May 15, 2015 at 11:49:27 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2015-05-16 12:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொடி என்பது இழைக்கு தொடர்பு இல்லையா?

உங்களுக்குப் பச்சைக்கொடி காட்டினால் பின்னாலேயே

கொடி என்றால் என்ன? என சொல்கிறீர்கள். 

நா. கணேசன்

Hari Krishnan

unread,
May 16, 2015, 3:09:30 AM5/16/15
to mintamil

2015-05-16 12:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொடி என்றால் என்ன? என சொல்கிறீர்கள். 

நா. கணேசன்

ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.

(திருத்தம்!  இனி இங்க வரல! :)) )


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 4:01:28 AM5/16/15
to mintamil
நாகராஜன் ஐயா

ஏன் ஐயா இப்படி?

உங்களைச் சொல்வேனா? :)))

ஏற்கெனவே அன்னம் இழையில் உங்களைப் பாடாய்ப் படுத்தினாரே அவரைப் பற்றித்தான் சொன்னேன்.

அன்புடன்,


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 4:03:45 AM5/16/15
to mintamil
கணேசர் ஐயா

கொடின்னா....

கொடி தான்.

இதுல நான் என்ன சொன்னேன் ?

இடத்திற்கேற்றாற் போலப் பொருள் கொள்ளவேண்டும். அவ்வளவே.

அன்புடன்,

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 16, 2015, 4:06:23 AM5/16/15
to mint...@googlegroups.com


On Saturday, May 16, 2015 at 1:03:45 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
கணேசர் ஐயா

கொடின்னா....

கொடி தான்.

இதுல நான் என்ன சொன்னேன் ?

இடத்திற்கேற்றாற் போலப் பொருள் கொள்ளவேண்டும். அவ்வளவே.

இமை என்ற பொருள் கொடிக்கு வரும் இடங்களை நான் பார்த்ததில்லை.
இமை என்ற சொல் பற்றி எழுதியுள்ளேன். பாருங்கள்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 4:07:03 AM5/16/15
to mintamil

2015-05-16 12:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.

(திருத்தம்!  இனி இங்க வரல! :)) )

ஏன் ஹரியண்ணா? கோபமா?

பாரதி கூறும் கொடி தாவரத்தின் கொடி தான். அதில் என்ன ஐயம்? மாற்றம்? :)))

கொடி என்பது பல இடங்களில் தாவரக்கொடி, பறக்கும் கொடி என்றும் வருமே. :)))


--
அன்புடன்,

Hari Krishnan

unread,
May 16, 2015, 4:16:10 AM5/16/15
to mintamil
2015-05-16 13:36 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஏன் ஹரியண்ணா? கோபமா?


எனக்கென்ன கோவம்.  பெரியவர் எதையாவது சொல்வார்.  அதுக்கு பதில் சொன்னா தனிப்பட்ட காழ்ப்புன்னு அர்த்தம் எடுத்துக்கறவங்க பெருகிட்டாங்க.  வேணாமேன்னுதான்.
 
பாரதி கூறும் கொடி தாவரத்தின் கொடி தான். அதில் என்ன ஐயம்? மாற்றம்? :)))

இல்லீங்கோ.. இந்த இழைல என் கட்டுரைகளைக் குறிப்பிடலாமா?

இதோ ஒண்ணு--

ரெண்டு--

நவம்பர், டிசம்பர் 2007 தென்றலில் எழுதியது.  தாழ்மரமும் கொடியும். 

கொடி என்பது பல இடங்களில் தாவரக்கொடி, பறக்கும் கொடி என்றும் வருமே. :))

துணி உணத்தற கொடியும் உண்டு.  கொடி என்னும் சொல்லுக்கு லெக்சிகன் படி மொத்தம் 19 வெவ்வேறு பொருளுண்டு.


--
அன்புடன்,

N. Ganesan

unread,
May 16, 2015, 4:18:14 AM5/16/15
to mint...@googlegroups.com


On Saturday, May 16, 2015 at 1:07:03 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2015-05-16 12:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.

(திருத்தம்!  இனி இங்க வரல! :)) )

ஏன் ஹரியண்ணா? கோபமா? 

பெரியவர் என்றால் ஹரிகி தான்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 16, 2015, 4:26:47 AM5/16/15
to mintamil

2015-05-16 13:36 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
2015-05-16 12:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.

(திருத்தம்!  இனி இங்க வரல! :)) )

ஏன் ஹரியண்ணா? கோபமா?

பாரதி கூறும் கொடி தாவரத்தின் கொடி தான். அதில் என்ன ஐயம்? மாற்றம்? :)))

கொடி என்பது பல இடங்களில் தாவரக்கொடி, பறக்கும் கொடி என்றும் வருமே. :)))


ஹரியண்ணா

பாருங்க உங்க பாரதி பாடல்லேயே ரெண்டு விளக்கம் வருது.

தாவரக் கொடி சுற்றும் மரம் -  இதில் ஆசையெனும் கொடி சுற்றிப் படரும்.

பறக்கும் கொடி ஏற்றும் மரம் - இதில் ஆசை எனும் கொடி ஏறிப் பறக்கும்.

அன்புடன்,

Hari Krishnan

unread,
May 16, 2015, 4:30:12 AM5/16/15
to mintamil

2015-05-16 13:56 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஹரியண்ணா

பாருங்க உங்க பாரதி பாடல்லேயே ரெண்டு விளக்கம் வருது.

இந்தப் பாடலில் இந்தக் குறிப்பிட்ட இரண்டு அடிகளுக்கு வேற விளக்கம் எதுவும் கிடையாது.  ரெண்டாவது விளக்கம் எது என்பது எனக்குத் தெரியாது.

அது என்ன உங்க பாரதி?  உங்களுக்கு பாரதி இல்லையா?  




--
அன்புடன்,

வேந்தன் அரசு

unread,
May 16, 2015, 6:18:38 AM5/16/15
to vallamai, மின்தமிழ்
கொடி இடை:

தொப்பை இல்லாமல் இருந்தால் கொடி இடைதான். முன் இருந்து பார்க்காமல் அல்லை-பார்வையில் பார்க்கணும். முன்பாரத்தால் ஒடிந்து முன்பக்கமாக ஒடியும் போல் இருக்கும்.

16 மே, 2015 ’அன்று’ 1:55 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Seshadri Sridharan

unread,
May 16, 2015, 7:45:26 AM5/16/15
to mintamil
2015-05-16 15:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கொடி இடை:
தொப்பை இல்லாமல் இருந்தால் கொடி இடைதான். முன் இருந்து பார்க்காமல் அல்லை-பார்வையில் பார்க்கணும். முன்பாரத்தால் ஒடிந்து முன்பக்கமாக ஒடியும் போல் இருக்கும்.

அப்படியானால் கொடி என்பது வளைவு கருத்தைத்தானே குறிக்கிறது. 

Nagarajan Vadivel

unread,
May 16, 2015, 7:51:52 AM5/16/15
to மின்தமிழ்
ஐயா
விவாதப்பொருள் கொடிபற்றியதன்று
இடையா இமையா
இணையப்பன்

--

Tthamizth Tthenee

unread,
May 16, 2015, 11:22:06 AM5/16/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
​திருமுல்லைவாயில் கொடியிடை  நாயகி பற்றி  நினைத்துத்தான்​     கொடியிடை  என்று எழுதினேன்

மிகச்சரியாக  என் நினைவுகளைப் பிடித்துவிட்டீர்கள்    திரு கணேசன்  அவர்களே

கொடி போன்ற  இடை   வில் போன்ற  புருவம்,   தாமரை இதழ் போன்ற  இமைகள்  என்று வர்ணிப்பார்கள்


ஆகவே   

இது    இமையன்று        இடைதான்  என்பதை வலியுறுத்தவே   சொன்னேன்

  அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 16, 2015, 11:25:39 AM5/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, May 16, 2015 at 8:22:06 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
​திருமுல்லைவாயில் கொடியிடை  நாயகி பற்றி  நினைத்துத்தான்​     கொடியிடை  என்று எழுதினேன்

மிகச்சரியாக  என் நினைவுகளைப் பிடித்துவிட்டீர்கள்    திரு கணேசன்  அவர்களே

கொடி போன்ற  இடை   வில் போன்ற  புருவம்,   தாமரை இதழ் போன்ற  இமைகள்  என்று வர்ணிப்பார்கள்

ஆம் தமிழ்த்தேனீ. வில் வளைந்திருக்கும். சாய்-தல் என்ற வினையிலிருந்து வில்லுக்கு சாவம்
எனப் பெயர். சாவம் சாபம் என வடமொழியில் வில்லுக்கு ஒருபெயர். இது தமிழ் என்பர் சம்ஸ்கிருத அறிஞர்கள்.
தாமஸ் பர்ரோ, பின்னர் பேரா. அ. சிதம்பரநாதன் செட்டியார். சாவத்தை (வில்லை) புருவத்துக்கு ஒப்பிடுவர்.

இமையை கொடி என நான் படித்ததில்லை.

நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
May 17, 2015, 7:48:19 AM5/17/15
to mintamil
சொல்லப் போனால் அவ்விதம் எந்தப் பெண்ணாவது yellow-color eye-shadow அணிந்து எங்கள்முன் வந்தால் பயந்துபோய் நாங்களெல்லாம் தலைதெறிக்க ஓடுவோம்! :-)))

நாங்களும் தான் ! :-))) ! :-)))


2015-05-16 5:59 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//ஒரு உவமை இருந்தால் அதில் நிச்சயம் அழகுணர்ச்சி இருக்க வேண்டும். ஒரு
நோக்கம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கூறிய உவமையில் அழகுணர்ச்சி
இருக்கிறதா?//


அன்பின் சரவணரே,

அழகிய கொன்றை மரத்தை மங்கையாகவும், அதன் செழித்து அடர்ந்த இலைகளை அம்மங்கையின் கூந்தலாகவும், அம்மரத்தின் உச்சியில் பொலிகின்ற பொன்னிறக் கொன்றைப் பூக்களை மங்கையர் அணியும் பொன்னாலியன்ற தலையணிகளுக்கு (also known as தலைக்கோலம்) உவமையாகவும் சொல்லுவதில் அழகுணர்ச்சி இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்குப் பெருவியப்பைத் தருகிறது.

அதற்கு மாற்றாக நீங்கள் வலிந்து உருவாக்கியிருக்கும் கொன்றைப்பூ வண்ணக் கண்ணிமைப் பூச்சு (eye-shadow) பூசிய பெண்ணிடம் எந்த அழகும் மிளிரக் காணோமே!

சொல்லப் போனால் அவ்விதம் எந்தப் பெண்ணாவது yellow-color eye-shadow அணிந்து எங்கள்முன் வந்தால் பயந்துபோய் நாங்களெல்லாம் தலைதெறிக்க ஓடுவோம்! :-)))



***

//நீங்கள் முல்லை மலர் சூடியிருக்கிறீர்களா?. சூடி இருந்தால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அது ஒரு மிக சுமாரான மணம் கொண்ட பூவென்று!. மல்லிகையைப் போலவோ பிச்சியைப் போலவோ அதற்கு நல்ல அடர்த்தியான வாசம் இல்லை. எனவே முல்லை மணம் சிறப்புடையதன்று. நிற்க//

என்ன சொன்னீர்கள்? முல்லையின் மணம் சுமாரென்றா? நீங்கள் மிகவும் வித்தியாசமான மனிதர்தான் சரவணன்! முல்லை மலர் அளவில் சிறியதாயினும் மணத்தில் மிகப் பெரிது! எந்த மலரும் மணத்தில் அதனருகில் வரமுடியாது. அத்தோடு, கற்பின் அடையாளமாகவும் அன்று அம்மலர் கருதப்பட்டதால் முல்லையை மங்கையரோடு இணைத்துப் பார்ப்பதில் அன்றைய புலவர்கட்கு ஓர் அலாதி மகிழ்ச்சி எப்போதுமே!

அதனால்தான் மங்கையின் கூந்தல் மணத்தை முல்லை மணத்தோடு ஒப்பிட்டார் புலவர் மதுரை மள்ளனார். இதை உணராது, அப்பெண்ணுக்கு (மீண்டும்) முல்லைவண்ண eye-shadow தீட்டப் போய்விட்டீர்களே சரவணன்! (நீங்கள் பேசாமல் அழகுக்கலை நிபுணராகப் போயிருக்கலாம்!)  :-)))

***

அடுத்தபடியாக, வாழைப்பூவைப் பாவையரின் கண்களோடு ஒப்பிட்டு அடுத்த அதிர்ச்சியை எமக்குத் தந்திருக்கிறீர்கள்!

வண்ணம், வடிவம் எதிலுமே வாழைப்பூவைக் கண்களோடு ஒப்பிடமுடியாது. அப்படி ஒரு பெண்ணுக்குக் கண்கள் இருந்தால் அது மிகப் பயங்கரமாகத்தான் இருக்கும். பெண்ணின் கண்களைக் கபிலர் வருணித்திருப்பார் நற்றிணைப் பாடலொன்றில் வெகுஅற்புதமாக! எந்தப் புலவனும் அவ்வளவு நுட்பமாகவும், அழகாகவும் கன்னியரின் கண்களை இன்றுவரை வருணித்ததில்லை...இனி வருணிக்கப் போவதுமில்லை. கபிலரின் கண்ணழகியை மனக்கண்ணில் பார்த்துவிட்டு, உங்கள் வாழைப்பூ கண்ணழகியை அவளோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்! வாழ்வையே வெறுத்தேன் ஐயா!   :-)))))))))

புலவர் தோழ! வாழைப்பூவைப் புலவர்கள் தம்முடைய பல பாடல்களில் பெண்களின் கொண்டையான பனிச்சையோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்கள் (உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும்). உடனே கணித உபகரணங்களையெல்லாம் எடுத்துச்சென்று கொண்டையின் நீளம், அகலம், கூர்மை ஆகியவையெல்லாம் துல்லியமாக வாழைப்பூவை ஒத்திருக்கிறதா என்று ஆராயப்புகுவது சிறுபிள்ளைத்தனமானது. ’கூந்தலை உயரத்தூக்கி முடிந்திருந்தார்கள் வாழைப்பூவைப் போல்’ என்பதே அதன் பொருள். எனவே கோபுரக் கொண்டையை வாழைப்பூக் கொண்டை என்று கொள்ளலாம்; தவறில்லை! 

நீங்கள் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?அதில் குந்தவைப் பிராட்டியாரின் கொண்டை இவ்விதம்தான் போடப்பட்டிருக்கும். மிக அழகாக இருக்கும்!
இதோ கீழுள்ள படத்தில் இடப்புறம் நிற்கும் குந்தவையின் தலையலங்காரத்தைப் பனிச்சையோடு ஒப்பிடலாம். இது வாழைப்பூவின் வடிவத்தை ஒத்திருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன். இது வடிவேலுவைப்போல் காமெடியாகவெல்லாம் இல்லை!   :-)




***

அதுபோல், மையீரோதி, அஞ்சிலோதி போன்ற தொடர்களும் இலக்கியத்தில் அடிக்கடி வருபவையே! மையீரோதி என்பதற்குக் கறுத்த ஈரிய கூந்தல் என்று பொருள் சொல்வர். இவ்வாறு கூறுவதில் என்ன அழகுணர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்? எல்லா இடங்களிலும் அழகுணர்ச்சியோடு ’உயர்வுநவிற்சி’யாகவே உவமைகள் அமையவேண்டும் என்பதில்லை; அவை, இதுபோல் ’இயல்புநவிற்சி’யாக வருமிடங்களும் இலக்கியங்களில் உண்டு!

’ஈர்’ என்ற சொல் ஈரம், நுண்மை, இனிமை என்று பலபொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. இடம்நோக்கிப் பொருள்கொள்ள வேண்டும்.

’மையீர் ஓதியில்’ கருமையான, நெய் தடவப்பட்ட கூந்தல் என்று கொள்வது பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.

***

சரவணரே! உங்கள் தமிழாராய்ச்சியும், பழைய உரைகளில் உள்ள பொருந்தாப் பொருளை நீக்கிவிட்டுப் புதுப்பொருள் புகுத்துவதும் பாராட்டத்தக்கதே! எனினும் சில இடங்களில் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் என் சிற்றறிவுக்குப் பொருத்தமாகப் படாததாலேயே இம்மடல்கள்! மற்றபடி உங்கள் நன்முயற்சிகளுக்கு என் மடல்களை முட்டுக்கட்டையாய் எண்ணவேண்டா!

நம் இலக்கியங்களுக்குப் புத்தொளி பாய்ச்சும் வகையில் உங்கள் பணிகள் துடிப்போடு தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே!

அன்புடன்,
மேகலா

அன்புடன்,
மேகலா


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2015, 12:28:44 AM5/18/15
to mintamil
சிந்தாமணியில் பல பாடல்களில் ஒரு பிடி நுசுப்பு என்ற சொல்லாடல் வருகிறது.

இதன் விளக்கம் கீழே வருமாறு:

பிடி என்பது நான்கு விரல் அகலம் என்று அகராதி கூறுகிறது.

அவ் வகையில், பெண்கள் தமது நான்கு விரல்களைக் ( கட்டைவிரல் தவிர்த்து) கொண்டு மூடும் அளவினதே கண்ணிமையாகும்.

இதைவிடுத்து, ஒரு கையால் பிடிக்கும் அளவினதே இடை என்று கூறினால் நான் பொறுப்பல்ல. :)))

டிஸ்கி: உடனே கைகளைக் கொண்டு கண்களைப் பொத்திப் பார்க்கிறேன் என்று கொண்டுபோய் விரலால் கண்ணைக் குத்திக் கொண்டால் என்னைச் சொல்லக்கூடாது. சொல்லிப்புட்டேன். ))





--
அன்புடன்,

சொ. வினைதீர்த்தான்

unread,
May 18, 2015, 1:15:47 AM5/18/15
to mintamil
பிடி என்ற சொல்லுக்கு பெண்யானை என்பதற்கும் நான்குவிரல் அகலத்திற்கும் என்று அளவில் பெரிதினுக்கும் சிறியதற்கும் பொருள் இருக்கிறதென்பது தெரிகிறது!

ஒன்றையெழுதி அதற்கு முயன்று சான்றுகள் தரும் வல்லமையாளர் திரு பொன்.சரவணன்.
(இருந்தாலும் இமைக்கு மஞ்சள் வண்ணம் வெறிக்கிறது)

வாழ்த்துக்கள் இளைய நண்பரே!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2015, 2:19:23 AM5/18/15
to mintamil

2015-05-18 10:45 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
(இருந்தாலும் இமைக்கு மஞ்சள் வண்ணம் வெறிக்கிறது)

நாம செய்யிற பெரிய தவறு என்னன்னா

எல்லாத்தையுமே நாம நம்ம கண்ணோட்டத்துல இருந்தே பார்க்கீறதுதான்.

மஞ்சள் கலர் நகர்புற மக்களுக்கு பிடிக்காது. ஆனால் கிராமப்புற மக்களுக்குப் பிடிக்கும்.

மஞ்சள் சட்டை போட்டவனை கிராமத்தான் என்று கிண்டல் பண்ணியதால் அவர்களும் தற்போது அக் கலரை விரும்புவதில்லை.

நான் சொல்லுவது சங்க காலம் ஐயா. அவர்களது

வண்ண விருப்பத்தை

எண்ண அலைகளை

இக்காலத்து நமது அளவுகோல் கொண்டு அளப்பது சரியா?


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
Reply all
Reply to author
Forward
0 new messages