ஆனால் அழகியசிங்கர் தாமாகவே சொல்வதுபோல் சொல்கிறார். இன்னார் சொல்வார்,
இன்னாரிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயம் இது என்று ஆகரம்(reference)
சொல்வது
வழக்கமில்லை போலும். "
இதேபோல் திரு உ.வே.பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி மீதும் குற்றம் சுமத்தி,
அது இன்னும் மோசம், அடுத்தவர் எழுதிய ஒரு கட்டுரையையே தான் எழுதியதாகப்
போட்டுக் கொண்டதாக,ஒரு இடத்தில் அதுவும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான
இதழ் ஒன்றில் சமீபத்தில் படித்தேன். அதை ஸ்கான் செய்து இங்கு எப்படி
இணைப்பது என்று தெரியவில்லை. அடியேனுக்கு மின்தமிழ் டைஜஸ்ட் ஆக
வருகிறது.
On Aug 1, 9:55 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வேதக் கருத்துகளை ஸ்ரீமத் அழகியசிங்கர் கூறுவது நன்றாக இருக்கிறது.
>
> எப்படி ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கும் மேலாக திவய ப்ரபந்தங்களை வேதங்களுக்குச்
> சமானமாக ஸ்ரீவைஷ்ணவம் கொண்டாடி வருகிறது என்பதை நன்கு வலியுறுத்துகிறார்.
>
> ஆனால் நான்கு வேதங்களுக்கும் ஈடாக நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்ய
> ப்ரபந்தங்களைச் சொல்லுமிடத்து ஏன் இவ்வளவு தடுமாட்டம் என்பது தெரியவில்லை.
> மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு போகிறார்.
>
> ருக் வேத ஸாரம் -- திருவிருத்தம்
>
> யஜுர் வேத ஸாரம் -- திருவாசிரியம்
>
> அதர்வண வேத ஸாரம் -- பெரிய திருவந்தாதி
>
> சாம வேத ஸாரம் -- திருவாய்மொழி.
>
> சுவாமிகள் இந்தக் க்ரமத்தைப் போட்டு இப்படியும் அப்படியும் மாற்றும் போது பாவம்
> நினைவுக் கோளாறோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
>
> மேலும் ஒரு விஷயம்.
>
> நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கள் வந்து நாலாயிரம் அருளப் போகிறார்கள் என்று வேதம்
> சூசிப்பிக்கின்றது ஒரு மந்திரத்தால் என்று பல ஆண்டுகளுக்கு முன் கூறியவர்
> ஸ்ரீமத் உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி அவர்கள்.
>
> ஆனால் அழகியசிங்கர் தாமாகவே சொல்வதுபோல் சொல்கிறார். இன்னார் சொல்வார்,
> இன்னாரிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயம் இது என்று ஆகரம்(reference) சொல்வது
> வழக்கமில்லை போலும்.
>
> பத்ரன் இருவருக்குத்தான் சொல்வது என்கிறார். பலபத்ரன் என்று சொல்வதுண்டே.
>
> ஆனால் வேதங்களைப் பற்றி ப்ராசீனமான அத்யயனம் பண்ணுகிறவர்களின் பார்வை என்ன
> என்று திரு திருதிரு அவர்கள் ஒலிப்பதிவுகள் நிறைய செய்வதற்கு ஸ்வாமிகள் ஒரு
> தக்க இடம்.
>
> வேதங்களைப் பற்றிய பேட்டிகளைப் பதிவு பண்ணிப் போடுவாரா திரு திருதிரு.
> எதிர்பார்க்கலாமா?
>
> ஆடியோ லிங்க் தந்தமைக்கு நன்றி.
>
> ***
>
> 2011/8/1 thiruthiru <rajamr...@gmail.com>> ஆழ்வார்கள் அருளிய நாலாயிரமும் வேதங்களின் சாரம் என்று பொதுவாகச் சொல்லி
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
க.>
2011/8/2 thiruthiru <raja...@gmail.com>:
On Aug 1, 11:55 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> வேதக் கருத்துகளை ஸ்ரீமத் அழகியசிங்கர் கூறுவது நன்றாக இருக்கிறது.
>
> எப்படி ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கும் மேலாக திவய ப்ரபந்தங்களை வேதங்களுக்குச்
> சமானமாக ஸ்ரீவைஷ்ணவம் கொண்டாடி வருகிறது என்பதை நன்கு வலியுறுத்துகிறார்.
>
திவ்விய பிரபந்தங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாகவா உள்ளன?
ஸ்ரீமத் அழகிய சிங்கர் உரையை நீங்களோ, ராஜம் ரகுவோ, இங்குள்ள மற்ற
அடியார்களோ தட்டச்ச வேண்டும். எல்லோருக்கும் படிக்கக் கிடைக்கும்.
அன்புடன்,
நா. கணேசன்
On Aug 2, 5:38 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> விளங்கவில்லை? யார் காலத்தில் யார், யார் எழுதியதை யார் எழுதியது என்று சொன்னது?
> கொஞ்சம் புரியும் படி சொல்லுங்கள் ஐயா!
>
> க.>
>
> 2011/8/2 thiruthiru <rajamr...@gmail.com>:> இதேபோல் திரு உ.வே.பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி மீதும் குற்றம் சுமத்தி,
இந்த அனுக்ரஹ பாஷணங்கள் சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் மாலை நேரங்களில்
நடக்கிறது. நேரில் கேட்பவர்கள் நாங்கள் ஒரு சிலரே.வெளியூரிலிருந்து வரும்
ஸேவார்த்திகளில் சிலர் ஒரு வேளை இங்கு தங்கி மறுநாள் போகிறவர்களாக
இருந்தால் வந்து கேட்பார்கள். அப்படி ஒரு அம்மணி-- ஏதோ தென்கலை என்று
இளப்பமாக ஆரம்பித்தாள்.அவள் என்ன சொல்ல வந்தாள் என்றுகூட ஜீயர்
கேட்கவில்லை. வாங்கு வாங்கென வாங்கி விட்டார்.அப்படி அந்த அம்மணியைத்
திட்டும்போது அவர் சிலாகித்தது அந்த நாள் பிரதிவாதி ஸ்வாமியில்
ஆரம்பித்து இந்த நாள் வேளுகுடி ஸ்வாமி வரையிலும்தான். இனி ஒரு முறை இந்த
மாதிரி எதுவும் எங்கும் பேசாதே என்றுதான் சொல்லி அனுப்பினார். ஆக
அவருக்கு உண்மையிலேயே ஸ்ரீ அண்ணங்கராச்சாரியார்தான் வேதக் கடலிலே
புகுந்து ஆராய்ச்சி பண்ணி பிறர் யாருமே அறிந்திராத விஷயத்தை முதன்
முதலில் உலகுக்குச் சொல்லியிருந்தாலும் அதை வேண்டுமென்றே மறைத்திருக்க
வாய்ப்பில்லை.
திரு நா.கண்ணன் ஸ்வாமி,
யார் யார் யார் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். படித்த ஒன்று
கிரந்தம் கலந்து வருவதால் உங்கு தண்ணச்சு செய்தாவது அதை இடுவோம் என்றால்
அதற்கும் முடியாமல் இருக்கிறது.
நக்கீர ரங்கனார் கொஞ்சம் மென்மையாகவே கண்டனங்களை இடலாம் என்பது அடியேன்
கருத்து.
அப்புறம் ரங்கனாரே!
(ஆனால் இதே அழகியசிங்கர், தேசிகன் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ஆழ்வார்கள்
என்னதான்
பெரும் ஞானவான்கள் என்றாலும் அவர்களிடத்தில் வர்ணாஸ்ரம ரீதியான ஜாதி
வ்யவஸ்தையைப் பார்த்தேயாக வேண்டும். அவர்கள் என்னதான் ஞானவான்களாயினும்
ஜாதி
போகாது என்று சொல்லி, உதாரணமாக, பசுவையும், மாதா என்பதையும் வைத்துக்
கொடுத்துள்ள விளக்கங்களுக்கு என்ன சொல்வார்? என்ற கேள்வியும் கூடவே
எழுந்தது.
சரி நமக்கு எதற்கு வம்பு என்று விட்டுவிட்டேன்)
இந்த தேசிகன்தான் நீர் ஏற்காத ஒன்றைச் சொல்லியிருக்கிறாரே! அவரை ஒதுக்கி
விட வேண்டியதுதானே! எதற்காக அவர் இயற்றியதைத் தமிழாக்கி
சிரமப்படவேண்டும்? அதுவும் உம் தெளிந்த கருத்துப் படி அவர்தான்
ஆழ்வார்களையே இழிவு படுத்தியிருக்கிறாரே!
அன்பின் திருதிரு
நம்ம ரங்கனை நாம் அறியாததா?
தமிழின் பால் உள்ள ஆழ்ந்த பற்றின் காரணமாக, ஆழ்வாராதிகளின் பனுவலில்
திளைக்கும் குழந்தையாக உள்ள அவருக்கு தன் தாயைப்பற்றி ஒரு மாத்து
குறைவாய் சொன்னால் கூட பொறுக்காது.
கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும்.
அவருக்கு இசப்பாட்டு பாட ஆள் இல்லை என்ற குறை எனக்கும் உண்டுதான் :-))
அவருக்கு வயதிற்கு மீறிய ஞானம். யாருக்கும் அஞ்சா நெஞ்சுரம். என்ன
செய்வது பாரதி, கவிஞர் (திருலோகம்) வழியில் வருபவர். அப்படித்தான்
இருக்கும்.
இவர்கள் அதிசயப்பிறவிகள். காந்தி பாரதியைப் பற்றிச் சொன்னது போல் நாம்
தான் இவர்களை அணுசரித்து அன்பு காட்ட வேண்டும்.
பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர் சாபம்!
கலியும் கெடும்!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
க.>
2011/8/3 Innamburan Innamburan <innam...@gmail.com>: