பழந்தமிழரின் அளவை முறைகள்.

2,935 views
Skip to first unread message

Nakinam sivam

unread,
Jul 9, 2010, 7:33:46 AM7/9/10
to mint...@googlegroups.com

இந்த வலைப்பதிவின் மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

அறுபது விநாடி = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

annamalai sugumaran

unread,
Jul 9, 2010, 7:57:54 AM7/9/10
to mint...@googlegroups.com
நன்றி சிவம் அவர்களே ,

ஆனால் ஏன் நாழிகை என்பதையெல்லாம் அறுபது விநாடி = ஒரு நாளிகை.என்றே குறிப்பிடப்பட்டுள்ளது .
  http://siththarkal.blogspot.com க்கு கொஞ்சம் சொல்லிமாற்ற சொல்லுங்களேன் .

அன்புடன் 
சுகுமாரன் 

2010/7/9 Nakinam sivam <nak...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

senthil

unread,
Jul 9, 2010, 8:04:23 AM7/9/10
to mint...@googlegroups.com
அது போல் 2  1/2 நாழிகை ஒரு மணி என்பது  சரியா? 

2010/7/9 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
செந்தில்

Nakinam sivam

unread,
Jul 9, 2010, 8:21:22 AM7/9/10
to mint...@googlegroups.com
அன்பு அய்யா அண்ணாமலை சுகுமாரன் அவர்களுக்கு

நன்றி உரித்தாகுக.

அன்பு சகோதரர் செந்தில் அவர்களுக்கு,

60 ௦ நாழிகை ஒரு நாள் 
ஆக 24 மணி நேரம் ஒரு நாள் எனும்போது
24 மணி x 2.5 நாழிகை  = 60 நாழிகை = ஒரு நாள் 

சிவம்


2010/7/9 senthil <senth...@gmail.com>

vinoth kumar

unread,
Jul 9, 2010, 9:29:38 AM7/9/10
to mint...@googlegroups.com
ஐயா,
ஒரு நாழிகை என்பது இறுபது நான்கு நிமிடங்கள் தானே குறிக்கிறது

2 1/2 நாழிகை* 24 நிமிடங்கள்=1 மணி

அன்புடன் ,
வினோத்

Nagarajan Vadivel

unread,
Jul 9, 2010, 11:48:43 AM7/9/10
to mint...@googlegroups.com
மேற்கத்திய காலவரை உலக உருண்டையை தன்னைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரத்தை வட்டம் எனக் கருதி 360 டிகிரிகளை 24 ஆகப் பிரித்து ஒவ்வொரு 15 டிகிரிகலைக் கடக்க எடுதுதுக் கொள்ளும் நேரத்தை ஒரு மணி என அளவீடு செய்திருப்பதாக அறியப்படுகிறது.  நாளிகை என்பது இதிலிருந்து வேறுபட்ட அளவீடு முறை.  மணல் நிறைந்த இருவழிக் கூட்டில் மணல் மேல் கூட்டிலிருந்து கீழ்கூட்டிற்குச் செல்ல எடுக்கும் கால் அளவும் ஒரு அளவீடே
எந்த்க் கருவியும் அளவீடு செய்ய ஒரு கருத்துப் புலம் இருக்கும்.  நாளிகை என்பது அளவீடு செய்த கருத்துப் புலம் யாது?
நாழியும் நாளிகையு வெவ்வேறு அளவீடுகள் அல்லவா
உண்பது நாழி என்பது இன்னொரு அளவீட்டுமுறை அல்லவா?
நாகராசன்

2010/7/9 vinoth kumar <univ...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

annamalai sugumaran

unread,
Jul 9, 2010, 2:28:05 PM7/9/10
to mint...@googlegroups.com

மேற்க்கத்தைய நாடுகள் உலகம் உருண்டை அது 
 360 டிகிரிகளை கொண்டது என அறிந்து கொள்வதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னேயே நாம் அதை உருண்டை என அறிந்திருந்தோம் .
நேரத்தை நாழிகை எனவே நமது அத்துணை பண்டைய வான இயல் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன .
அந்த நாளில் நேரத்தை அளவிடுவதர்க்கும் ,அதை சொல்வதற்கும் 
நாழிகை கணக்கர் என்று ஒரு பதவியே இருந்திருக்கிறது .

வானத்தையும் ,கோள்களையும் பற்றி தெரிந்து அதனை பார்ப்பதனாலேயே பார்ப்பனர் என சிலர்  அழைக்கப்பட்டனர் .
நாழிகை அளவிட குறிநீர்க் கன்னல் என்ற கருவியே இருந்திருக்கிறது .

இதை முல்லைப்பாட்டு எனும் சங்க கால நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது .

பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள் 
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி 
எறிநீர் வையம் வெலீஇய செல்வாய் நின் 
குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப 
  முல்லைப்பாட்டு --(55-58)

குறிநீர்க் கன்னல் என்பது தலைகிழ் வைக்கப் பட்ட ஒரு வட்டிலில் இருந்து சொட்டு சொட்டாக சொட்டும் குறுநீர்
கொண்டு காலம் அறிவதாம் .
நீருக்குப் பதிலாக மணலையும் பயன்படுத்தியிருக்கின்றனர் .
வராக மிகிறார் ஆரியபட்டர் முதலியோர் வானியலில் மிக புலமைக் கொண்டிருந்தனர் .
குறிப்பிட்டநாளில் சூரியனின் ஒளி இறைவன் வடிவத்தின் மேல் விழுமாறு கோவில் அமைப்பது நமது சிர்ப்பிகளுக்கு கைவந்தக் கலை .
கணியன் என்போரும் வானவியல் நிபுணர்கள்தான் .
நாழிகை எனும் சொல்  நேரடியாக 
மதுரைக் காஞ்சி எனும் நூலில் அமைத்துள்ளது  

வேதாளிகரோடு நாழிகை இசைப்ப 
இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப
மதுரைக் காஞ்சி(    671-672 )

இவ்வாறு நாழிகை என்பது பண்டைய காலம் தொட்டு வழங்கிவரும் சொல் என அறியலாம் அது நாளிகைஎன்பதாக இராது என்பதும் புரியவரும் .
நாழி என்பது சிறிய அளவுள்ள ஒரு முகத்தல் அளவை படியாகும் .இன்னும் தஞ்சைப் பகுதியில் சில இடங்களில் நாழி எனும் சொல் வழக்கில் இருக்கிறது .
நன்றி .வரலாறு .கம 
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 

2010/7/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--

vadivelu kaniappan

unread,
Jul 9, 2010, 2:32:14 PM7/9/10
to mint...@googlegroups.com
வாழ்க வளமுடன்! தங்களின் கருத்து மிகச்சரியே. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்

9 ஜூலை, 2010 11:58 pm அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

Innamburan Innamburan

unread,
Jul 9, 2010, 8:49:48 PM7/9/10
to mint...@googlegroups.com
சுகுமாரா! அருமையான விளக்கம். நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன்.
இன்னம்பூரான்

2010/7/10 vadivelu kaniappan <vkte...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Jul 11, 2010, 6:15:55 AM7/11/10
to mint...@googlegroups.com
அருமையான குறிப்புகளுக்கு நன்றி. சேமித்துக்கொள்கிறேன்.

2010/7/9 annamalai sugumaran <amirth...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 11, 2010, 6:40:48 AM7/11/10
to mint...@googlegroups.com
ஆமாம். நான் அனுப்பும் பழைய நளபாகங்களை புரிந்து கொள்ள உதவும். 
இன்னம்பூரான்

2010/7/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
980.gif

Geetha Sambasivam

unread,
Jul 11, 2010, 10:59:17 AM7/11/10
to mint...@googlegroups.com
மாமியாருக்கு 85 வயசு ஆகிறது. இப்போவும் பழைய அளவையிலேதான் நளபாகங்கள் சொல்லுவாங்க. அதனால் அதுவும் பழக்கமே!  புது அளவைச் சொன்னால் அவங்களுக்குக் குழம்பிப் போகும்!

2010/7/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>
980.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Jul 11, 2010, 11:43:47 AM7/11/10
to mint...@googlegroups.com
இதோ:

என்னது இது! அக்ருமமா இருக்கு! 
தேங்காய் சாதம்: பக்குவமான, பழங்கால முறை:

"பாணலியில் உரி நல்லெண்ணெய் வார்த்து 1 தேங்காய் திருகி போட்டு சிவக்க வறுத்து அதில் உரி கடலைப்பருப்பும் 2 தோலா உளுத்தம்பருப்பும், 1 தோலா கடுகும் போட்டு, கடுகு வெடித்த பின், 10 பச்சை மிள்காயும், கருவேப்பிலையும் அரித்ன்ஹ் போட்டு, வதக்கி இறக்கி, 3 நாழி பச்சரிசியைமுக்கால் வேக்காட்டில் வடித்து, முன் தயாரித்ததில் கொட்டி 11/2 தோலா உப்பு தூள் செய்து அதில் போட்டு கிளறி மூடி விடவும்." 
இது மஞ்சேரி பேடண்ட் என்று அறியவும்.
980.gif
360.gif

Swarna Lakshmi

unread,
Jul 14, 2010, 4:01:13 AM7/14/10
to mint...@googlegroups.com
நீள அகலக் கணக்குகளும் கிடைக்குமா! மீட்டர், கிலோமீட்டர், மைல் போன்றவற்றிற்கு ஒப்பாக....
 
நன்றி


From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 9 July, 2010 5:27:54 PM
Subject: Re: [MinTamil] பழந்தமிழரின் அளவை முறைகள்.

வி. சு.

unread,
Jul 14, 2010, 8:09:08 AM7/14/10
to மின்தமிழ்

On Jul 11, 8:43 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
...


> என்னது இது! அக்ருமமா இருக்கு!

...

கிரமம் - first in, first out (queue)
அக்கிரமம் - last in, first out (stack)

வரிசைக் கிரமம், அல்லது கிரம வரிசை - முதலில் வந்தவர் முதலில் செல்வது
அக்கிரம வரிசை, அல்லது அக்கிரமம் - கடைசியில் வந்தவர் முதலில் செல்வது
(குறுக்கே நுழைவது)

Innamburan Innamburan

unread,
Jul 14, 2010, 10:42:45 AM7/14/10
to mint...@googlegroups.com
திருமாலை மாமூலுக்கு அழைத்தது போல!

2010/7/14 வி. சு. <vijayakuma...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 14, 2010, 10:45:55 AM7/14/10
to mint...@googlegroups.com
மா மூலவர் திருமால்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2010/7/14, Innamburan Innamburan <innam...@googlemail.com>:
திருமாலை மாமூலுக்கு அழைத்தது போல!


2010/7/14 வி. சு. <vijayakuma...@gmail.com>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

aruran visu

unread,
Jul 15, 2010, 12:31:18 AM7/15/10
to mint...@googlegroups.com
கணக்காயிரம் செய்யுளின் படி,

ஒரு மனிதனின் சராசரி விரல் அளவை, ஒரு விரக் கடை என்பார்கள்.  12 விரக்கடைகள் சேர்ந்தது 1சாண்.  ரெண்டு சாண் சேர்ந்தது ஒரு அடி. இரண்டு முழம் சேர்ந்தது ஒரு சிறு கோல். நான்கு சிறுகோல் சேர்ந்தது ஒரு பெருங்கோல்.500 பெருங்கோல் சேர்ந்தது கூப்பிடுதூரம்.  4 கூப்பிடுதூரம் சேர்ந்தது ஒரு காத தூரம்.

அணு 8 சேர்ந்தது                -                       கதிரெழுதுகள்
கதிரெழுதுகள் 8 கொண்டது                       பஞ்சத்துகள்
பஞ்சித்துக்கள் 8 கொண்டது                       மயிர்முனை
மயிர்முனை   8  கொண்டது                       நுண்மணல்
நுண்மணல்     8  கொண்டது                       வெண்சிறுகடுகு
வெண்சிறுகடுகு 8 கொண்டது                    எள்ளு
எள்ளு       8   கொண்டது                             நெல்லு
நெல்லு     8    கொண்டது                           விரல்
விரல்      12    கொண்டது                            சாண்
சாண்       2       கொண்டது                           முழம்

நன்றி:  பதிவர் பழமைபேசியின்  சமீபத்திய வெளியீடான  “ ஊர்ப்பழமை”  நூலிலிருந்து........எழிலாய்ப் பழமைபேச

அன்புடன்
ஆரூரன்.







14 ஜூலை, 2010 1:31 pm அன்று, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> எழுதியது:

Swarna Lakshmi

unread,
Jul 18, 2010, 10:42:52 AM7/18/10
to mint...@googlegroups.com
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??
 
நன்றி
ஸ்வர்ணா


From: Innamburan Innamburan <innam...@googlemail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sun, 11 July, 2010 9:13:47 PM
Subject: Re: [MinTamil] பழந்தமிழரின் அளவை முறைகள்.

srirangammohanarangan v

unread,
Jul 18, 2010, 11:13:03 AM7/18/10
to mint...@googlegroups.com
On 7/18/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??
 
நன்றி
ஸ்வர்ணா
 
அது சரி. இந்த ‘காதம்’ என்பது தமிழ்ச் சொல்லா?
அறிந்தவர்கள் உரைக்கலாமே:--))

 

devoo

unread,
Jul 18, 2010, 11:32:26 AM7/18/10
to மின்தமிழ்
> காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம்<


1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ

பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி =
1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

http://ezilnila.com/archives/1329


தேவ்


On Jul 18, 9:42 am, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
> காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள
> அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து
> கொள்ளமுடியுமா??
>
> நன்றி
> ஸ்வர்ணா
>
> ________________________________

> From: Innamburan Innamburan <innambu...@googlemail.com>


> To: mint...@googlegroups.com
> Sent: Sun, 11 July, 2010 9:13:47 PM
> Subject: Re: [MinTamil] பழந்தமிழரின் அளவை முறைகள்.
>
> இதோ:
>
> என்னது இது! அக்ருமமா இருக்கு! 
> தேங்காய் சாதம்: பக்குவமான, பழங்கால முறை:
>
> "பாணலியில் உரி நல்லெண்ணெய் வார்த்து 1 தேங்காய் திருகி போட்டு சிவக்க வறுத்து
> அதில் உரி கடலைப்பருப்பும் 2 தோலா உளுத்தம்பருப்பும், 1 தோலா கடுகும் போட்டு, கடுகு
> வெடித்த பின், 10 பச்சை மிள்காயும், கருவேப்பிலையும் அரித்ன்ஹ் போட்டு, வதக்கி
> இறக்கி, 3 நாழி பச்சரிசியைமுக்கால் வேக்காட்டில் வடித்து, முன் தயாரித்ததில் கொட்டி
> 11/2 தோலா உப்பு தூள் செய்து அதில் போட்டு கிளறி மூடி விடவும்." 
> இது மஞ்சேரி பேடண்ட் என்று அறியவும்.
>
> இன்னம்பூரான்
>

> 2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
>  மாமியாருக்கு 85 வயசு ஆகிறது. இப்போவும் பழைய அளவையிலேதான் நளபாகங்கள்
> சொல்லுவாங்க. அதனால் அதுவும் பழக்கமே!  புது அளவைச் சொன்னால் அவங்களுக்குக்
> குழம்பிப் போகும்!
>
>
>

> >2010/7/11 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
> >ஆமாம். நான் அனுப்பும் பழைய நளபாகங்களை புரிந்து கொள்ள உதவும். 

> >>இன்னம்பூரான்
>

> >>2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:


>
> >>> அருமையான குறிப்புகளுக்கு நன்றி. சேமித்துக்கொள்கிறேன்.
>

> >>> 2010/7/9 annamalai sugumaran <amirthami...@gmail.com>

> >>>> 2010/7/9 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >>>>> மேற்கத்திய காலவரை உலக உருண்டையை தன்னைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும்
> >>>>> நேரத்தை வட்டம் எனக் கருதி 360 டிகிரிகளை 24 ஆகப் பிரித்து ஒவ்வொரு 15
> >>>>> டிகிரிகலைக் கடக்க எடுதுதுக் கொள்ளும் நேரத்தை ஒரு மணி என அளவீடு
> >>>>> செய்திருப்பதாக அறியப்படுகிறது.  நாளிகை என்பது இதிலிருந்து வேறுபட்ட அளவீடு
> >>>>> முறை.  மணல் நிறைந்த இருவழிக் கூட்டில் மணல் மேல் கூட்டிலிருந்து
> >>>>> கீழ்கூட்டிற்குச் செல்ல எடுக்கும் கால் அளவும் ஒரு அளவீடே
> >>>>> எந்த்க் கருவியும் அளவீடு செய்ய ஒரு கருத்துப் புலம் இருக்கும்.  நாளிகை
> >>>>> என்பது அளவீடு செய்த கருத்துப் புலம் யாது?
> >>>>> நாழியும் நாளிகையு வெவ்வேறு அளவீடுகள் அல்லவா
> >>>>> உண்பது நாழி என்பது இன்னொரு அளவீட்டுமுறை அல்லவா?
> >>>>> நாகராசன்
>

> >>>>> 2010/7/9 vinoth kumar <univ....@gmail.com>


>
> >>>>>> ஐயா,
> >>>>>> ஒரு நாழிகை என்பது இறுபது நான்கு நிமிடங்கள் தானே குறிக்கிறது
> >>>>>>  
> >>>>>> 2 1/2 நாழிகை* 24 நிமிடங்கள்=1 மணி
> >>>>>> அன்புடன் ,
> >>>>>> வினோத்
>
> >>>>>> --
> >>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
>

> ...
>
> read more »

kalairajan krishnan

unread,
Jul 19, 2010, 3:59:43 AM7/19/10
to mint...@googlegroups.com


On 7/18/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??
 
நன்றி
ஸ்வர்ணா
 
வணக்கம்.
காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,
இதற்கான பாடலை விரைவில் அனுப்பி ​வைக்கிறேன்,
 
திருப்பூவணப் புராணத்திலே,
யோசனை தூரம் குறிப்பிடப் பட்டுள்ளது,
இதன்படி ​யோசனை என்பது 18 கி,மீ, தூரமாகும்
"அன்ன திருப்பதிக் கங்கி திக்கினில் யோசனைக்கப்பா லமர்ந்து தோன்றுஞ்
சின்மயமாஞ் சிவலிங்கஞ் செங்கதிர் வெய்யோன் பூசை செய்யவைகு
மன்னுநவமணித்தேரூர் மறுகு தொறுமாளிகை சூளிகைநெருங்கும்
பொன்மதில்சூழாலயஞ் சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்"
         (பாடல் 166)
திருப்பூவணத் திருத்தலத்தின் அமைவிடம் பற்றி இப்பாடலிலே குறிப்பிடப்பெற்றுள்ளது.   பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரைக்கு அங்கி திக்கினிலே (அக்னித்திசை என்றழைக்கப்படுகின்ற தென்கிழக்குத்திசையிலே) ஒரு யோசனை (18 கி.மீ.) தூரத்திலே  திருப்பூவணம் உள்ளது.
 
அன்புடன்
கி, காளைராசன்,
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003

kalairajan krishnan

unread,
Jul 19, 2010, 5:41:45 AM7/19/10
to mint...@googlegroups.com
On 7/19/10, kalairajan krishnan <kalair...@gmail.com> wrote:


On 7/18/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??
 
நன்றி
ஸ்வர்ணா
 
வணக்கம்.
காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,
இதற்கான பாடலை விரைவில் அனுப்பி ​வைக்கிறேன்,
 
மன்னிக்கவும் இதற்கான பாடலை எண்ணால் எடுக்க முடியவில்லை,
எனவே எனது இக் கூற்று பிழையாகவும் இருக்கலாம்,

Innamburan Innamburan

unread,
Jul 19, 2010, 7:40:29 AM7/19/10
to mint...@googlegroups.com
காத தூரம் பத்து மைல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பள்ளிப் பாடங்களில். 16 கி, மீ?


2010/7/19 kalairajan krishnan <kalair...@gmail.com>

வி. சு.

unread,
Jul 19, 2010, 8:15:34 AM7/19/10
to மின்தமிழ்
On Jul 15, 9:31 am, aruran visu <visuaru...@gmail.com> wrote:
> கணக்காயிரம் செய்யுளின் படி,
>
> ஒரு மனிதனின் சராசரி விரல் அளவை, ஒரு விரக் கடை என்பார்கள்.  12 விரக்கடைகள்
> சேர்ந்தது 1சாண்.  ரெண்டு சாண் சேர்ந்தது ஒரு அடி. இரண்டு முழம் சேர்ந்தது ஒரு
> சிறு கோல். நான்கு சிறுகோல் சேர்ந்தது ஒரு பெருங்கோல்.500 பெருங்கோல் சேர்ந்தது
> கூப்பிடுதூரம்.  4 கூப்பிடுதூரம் சேர்ந்தது ஒரு காத தூரம்.
...

அது விரக்கடை இல்லை, விரற்கிடை. விரல்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு.

http://valavu.blogspot.com/2009/06/2.html

Innamburan Innamburan

unread,
Jul 19, 2010, 9:51:59 AM7/19/10
to mint...@googlegroups.com
ஒவ்வொரு 'எண்சாணும்' வேறுபடும்.

2010/7/19 வி. சு. <vijayakuma...@gmail.com>:

Dr M.D.Jayabalan

unread,
Jul 21, 2010, 8:09:57 AM7/21/10
to மின்தமிழ்

நாழிகை என்பது 24 நிமிடங்கயும் குறிக்கும். ஒரு நிமிடத்தையும்
குறிக்கும்.

இந்திய நீட்டல் அளவை:

3 வாற்கோதுமை 1 அங்குலம்
3 அங்குலம் 1 விரற்கடை
9 அங்குலம் 1 ஜாண்(சா)
2 சாண் 1 முழம்
1 முழம் 1 1/2 அடி(ஒன்றரை அடி)
1 மார் விரிந்த கைகளின் இடது விரல் நுனி முதல் வலது
விரல் நுனி வரை
12 அங்குலம் 1 அடி
3 அடி 1 கெஜம்
5 அடி 1 நடை அல்லது போக்கு


இந்திய கால அளவை

(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்

On Jul 19, 12:59 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:


> On 7/18/10, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
>
> >  காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான
> > நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால்
> > பகிர்ந்து கொள்ளமுடியுமா??
>
> > நன்றி
> > ஸ்வர்ணா
>
> வணக்கம்.

> *காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,*


> இதற்கான பாடலை விரைவில் அனுப்பி ​வைக்கிறேன்,
>
> திருப்பூவணப் புராணத்திலே,

> ​*யோசனை* தூரம் குறிப்பிடப் பட்டுள்ளது,
> இதன்படி ​யோசனை என்பது* 18 கி,மீ,* தூரமாகும்


> "அன்ன திருப்பதிக் கங்கி திக்கினில் யோசனைக்கப்பா லமர்ந்து தோன்றுஞ்
> சின்மயமாஞ் சிவலிங்கஞ் செங்கதிர் வெய்யோன் பூசை செய்யவைகு
> மன்னுநவமணித்தேரூர் மறுகு தொறுமாளிகை சூளிகைநெருங்கும்
> பொன்மதில்சூழாலயஞ் சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்"
>          (பாடல் 166)
> திருப்பூவணத் திருத்தலத்தின் அமைவிடம் பற்றி இப்பாடலிலே
> குறிப்பிடப்பெற்றுள்ளது.   பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரைக்கு அங்கி
> திக்கினிலே (அக்னித்திசை என்றழைக்கப்படுகின்ற தென்கிழக்குத்திசையிலே) ஒரு யோசனை
> (18 கி.மீ.) தூரத்திலே  திருப்பூவணம் உள்ளது.
>
> அன்புடன்
> கி, காளைராசன்,
>

> >   ------------------------------
> > *From:* Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > *To:* mint...@googlegroups.com
> > *Sent:* Sun, 11 July, 2010 9:13:47 PM
> > *Subject:* Re: [MinTamil] பழந்தமிழரின் அளவை முறைகள்.


>
> > இதோ:
>
> >  என்னது இது! அக்ருமமா இருக்கு!
> > தேங்காய் சாதம்: பக்குவமான, பழங்கால முறை:
>
> > "பாணலியில் உரி நல்லெண்ணெய் வார்த்து 1 தேங்காய் திருகி போட்டு சிவக்க வறுத்து
> > அதில் உரி கடலைப்பருப்பும் 2 தோலா உளுத்தம்பருப்பும், 1 தோலா கடுகும் போட்டு,
> > கடுகு வெடித்த பின், 10 பச்சை மிள்காயும், கருவேப்பிலையும் அரித்ன்ஹ் போட்டு,
> > வதக்கி இறக்கி, 3 நாழி பச்சரிசியைமுக்கால் வேக்காட்டில் வடித்து, முன்
> > தயாரித்ததில் கொட்டி 11/2 தோலா உப்பு தூள் செய்து அதில் போட்டு கிளறி மூடி
> > விடவும்."
> > இது மஞ்சேரி பேடண்ட் என்று அறியவும்.
>
> >  இன்னம்பூரான்
>

> > 2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> >> மாமியாருக்கு 85 வயசு ஆகிறது. இப்போவும் பழைய அளவையிலேதான் நளபாகங்கள்
> >> சொல்லுவாங்க. அதனால் அதுவும் பழக்கமே!  புது அளவைச் சொன்னால் அவங்களுக்குக்
> >> குழம்பிப் போகும்!
>

> >> 2010/7/11 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
> >>>  ஆமாம். நான் அனுப்பும் பழைய நளபாகங்களை புரிந்து கொள்ள உதவும்.

> >>> இன்னம்பூரான்
>

> >>> 2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:


>
> >>> > அருமையான குறிப்புகளுக்கு நன்றி. சேமித்துக்கொள்கிறேன்.
>

> >>> > 2010/7/9 annamalai sugumaran <amirthami...@gmail.com>

> >>> >> 2010/7/9 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >>> >>> மேற்கத்திய காலவரை உலக உருண்டையை தன்னைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும்
> >>> >>> நேரத்தை வட்டம் எனக் கருதி 360 டிகிரிகளை 24 ஆகப் பிரித்து ஒவ்வொரு 15
> >>> >>> டிகிரிகலைக் கடக்க எடுதுதுக் கொள்ளும் நேரத்தை ஒரு மணி என அளவீடு
> >>> >>> செய்திருப்பதாக அறியப்படுகிறது.  நாளிகை என்பது இதிலிருந்து வேறுபட்ட
> >>> அளவீடு
> >>> >>> முறை.  மணல் நிறைந்த இருவழிக் கூட்டில் மணல் மேல் கூட்டிலிருந்து
> >>> >>> கீழ்கூட்டிற்குச் செல்ல எடுக்கும் கால் அளவும் ஒரு அளவீடே
> >>> >>> எந்த்க் கருவியும் அளவீடு செய்ய ஒரு கருத்துப் புலம் இருக்கும்.  நாளிகை
> >>> >>> என்பது அளவீடு செய்த கருத்துப் புலம் யாது?
> >>> >>> நாழியும் நாளிகையு வெவ்வேறு அளவீடுகள் அல்லவா
> >>> >>> உண்பது நாழி என்பது இன்னொரு அளவீட்டுமுறை அல்லவா?
> >>> >>> நாகராசன்
>

> >>> >>> 2010/7/9 vinoth kumar <univ....@gmail.com>


>
> >>> >>>> ஐயா,
> >>> >>>> ஒரு நாழிகை என்பது இறுபது நான்கு நிமிடங்கள் தானே குறிக்கிறது
>
> >>> >>>> 2 1/2 நாழிகை* 24 நிமிடங்கள்=1 மணி
> >>> >>>> அன்புடன் ,
> >>> >>>> வினோத்
>
> >>> >>>> --
> >>> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> >>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> >>> may like to
> >>> >>>> visit our Muthusom Blogs at:

> >>> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> >>> group, send
> >>> >>>> email to minT...@googlegroups.com
> >>> >>>> To unsubscribe from this group, send email to
> >>> >>>> minTamil-u...@googlegroups.com
> >>> >>>> For more options, visit this group at
> >>> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>> >>> --
> >>> >>> visit :www.elearning.eduwww.radiusconsultancy.com
> >>>www.elearninglive.tv
>
> >>> >>> --
> >>> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to
> >>> >>> visit our Muthusom Blogs at:

> >>> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> >>> group, send
> >>> >>> email to minT...@googlegroups.com
> >>> >>> To unsubscribe from this group, send email to
> >>> >>> minTamil-u...@googlegroups.com
> >>> >>> For more options, visit this group at
> >>> >>>http://groups.google.com/group/minTamil
>
> >>> >> --
> >>> >> A.Sugumaran ,
> >>> >> PONDICHERRY INDIA
> >>> >> MOBILE 09345419948
>
> >>> >> My goal is simple.
> >>> >>  It is complete understanding of the universe, why it as it is     and
> >>> why
> >>> >> it exists as all !
>
> >>> >> --
> >>> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to
> >>> >> visit our Muthusom Blogs at:

> >>> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> >>> group, send
> >>> >> email to minT...@googlegroups.com
> >>> >> To unsubscribe from this group, send email to
> >>> >> minTamil-u...@googlegroups.com
> >>> >> For more options, visit this group at
> >>> >>http://groups.google.com/group/minTamil
>
> >>> > --
>
> >>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation.
> >>> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> >>> our
> >>> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >>> post
> >>> > to this group, send email to minT...@googlegroups.com
> >>> > To unsubscribe from this group, send email to
> >>> > minTamil-u...@googlegroups.com
> >>> > For more options, visit this group at
> >>> >http://groups.google.com/group/minTamil
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

Dr M.D.Jayabalan

unread,
Jul 21, 2010, 9:09:24 AM7/21/10
to மின்தமிழ்

ஒவ்வொரு சாணும் 9”. நான்கு விரல்களை உள்ளங்கை நோக்கி மடக்கி, கட்டை
விரலை உயர்த்திப் பிடித்தால் அது 1/2 (அரை) அடி = 6 “

உடல் உறுப்புகளைக் கொண்டே நீட்டல் அளவை அறியும் யுக்தியில் ஒரு தோராய
மதிப்பீடு தான் கிடைக்கும்

On Jul 19, 6:51 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> ஒவ்வொரு 'எண்சாணும்' வேறுபடும்.
> இ
>

fonio sivakumar

unread,
Jul 21, 2010, 9:05:44 AM7/21/10
to mint...@googlegroups.com
இந்த அளவைகளை தந்தமைக்கு நன்றி
 !!!!
பூனியோ


2010/7/9 Nakinam sivam <nak...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

fonio sivakumar

unread,
Jul 21, 2010, 9:14:16 AM7/21/10
to mint...@googlegroups.com
எட்டு முறை ஜான் போட்டால்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்கும். அனைவரும் அவரவர் கைகளில்  ஜான் போட்டு பாருங்கள்  இப்பொது !!!!!!!!!



போனியோ
 

2010/7/21 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 10, 2016, 9:29:47 AM7/10/16
to mintamil
வணக்கம்.

N. Ganesan

unread,
Jul 10, 2016, 11:22:53 AM7/10/16
to மின்தமிழ், kalair...@gmail.com


On Sunday, July 10, 2016 at 6:29:47 AM UTC-7, kalai wrote:
வணக்கம்.

2010-07-19 15:11 GMT+05:30 kalairajan krishnan <kalair...@gmail.com>:


On 7/19/10, kalairajan krishnan <kalair...@gmail.com> wrote:


On 7/18/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??
 
நன்றி
ஸ்வர்ணா
 
வணக்கம்.
காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,
இதற்கான பாடலை விரைவில் அனுப்பி ​வைக்கிறேன்,
 
மன்னிக்கவும் இதற்கான பாடலை எண்ணால் எடுக்க முடியவில்லை,
எனவே எனது இக் கூற்று பிழையாகவும் இருக்கலாம்,


என்னால் எடுக்க முடியவில்லை என்பதை ’எண்ணால் எடுக்க முடியவில்லை’ என typo.

காதம் 10 - 14 மைல். அலெக்ஸாண்டர் கன்னிங்காம் இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகளை
தொடங்கினவர். அவர் காதம் ~14 மைல் என அழகாக விளக்கியவர்களில் முதன்மையானவர்.
அவர் ஆய்வை சிங்கநெஞ்சன் ஐயா இழையில் சொல்கிறேன்.

காதம் பற்றின சேதி - 200 ஆண்டுகளுக்கு முன்னரே விளக்கிவிட்டனர். அவற்றைக் காட்டியுளேன்,

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 10, 2016, 1:01:55 PM7/10/16
to mintamil

கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.

பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்

பாடல் எண் 375
மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்

பாடல் எண் 376
சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே

திருப்பூவணத்திற்குத் தெற்கே திருச்சுழி = 47 கி.மீ. = 29. 4 மைல்

கி.பி. 1899 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களால் பாடப்பெற்ற
காளையார்கோயில் புராணத்தில் காவதம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

பாடல் எண் 54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்

விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்

திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்

Reply all
Reply to author
Forward
0 new messages