நம்பிள்ளை படி - இயற்பா வ்யாக்யானம்

110 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Feb 9, 2012, 9:23:14 AM2/9/12
to min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான். 

முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளுக்கு விளக்கமான உரைகள் இந்த நூலில் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள உரைகள் என்ன காரணத்தாலோ மிகவும் சுருக்கமாக இருக்கின்றன. ஆனால் இந்த மறைந்திருந்த மா உரையில் அந்தத் தேவையும் பூர்த்தியாகி விபுலமான உரைப் புதையலாகக் கிடைத்திருக்கிறது. எல்லாம் பகவத் க்ருபையினாலும், டாக்டர் எம் ஏ வேங்கடகிருஷ்ணனின் விடாமுயற்சியினாலும் என்று சொல்ல வேண்டும். 

எதற்கோ முதல் திருவந்தாதிகளுக்கு உரைகளை ஓலை கோசங்கள் இருந்தால் அதில் ஓரிடத்தைப் பார்க்க வேண்டும் என்று அரசாங்க ஓரியண்டல் மானஸ்க்ரிப்ட் நூலகத்தில் நோண்டியவர் கண்களில் இப்படி ஒரு மாணிக்கம் கிடைக்கும் என்று அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்தான். ஆனால் எது எது எப்பொழுது வெளிப்பட வேண்டும் என்று அவன் திருவுள்ளம் இருக்கும் பொழுது என்ன சொல்ல முடியும்? ‘நாமார்? நம்பிள்ளை படிதான் என்? நம்பெருமாள் நம்மைக் கருவியாக்கி இதில் ஏவுவதே !’ என்று அவரால் வியக்கத்தான் முடியும். 

பார்த்த ஓலைச் சுவடிகளில் எல்லாம் ‘பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்’ என்று இருக்கவும் அதில் ஓர் ஓலைச்சுவடியில் கண்ட உரை அச்சேறிய உரையின் நடையினின்றும் வேறுபட்டுக் காணவும், மனிதருக்குப் பொறி தட்டியிருக்கிறது. முகப்பில் பார்த்தால் ‘நம்பிள்ளை படி’ என்று இருக்கவும் முனைவர் முழுமூச்சாக முனைந்துவிட்டார். முதல்வன் அருளும் நமக்குக் கனிந்து விட்டது. 

முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளான முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி ஆகிய நான்கு இயற்பா திவ்ய ப்ரபந்தங்களுக்கு நம்பிள்ளை படி கிடைத்து அச்சு நூல் ஆகியுள்ளது. 

திருக்கோவலூர் இடைகழியில் ஓரிரவுப் பொழுதில், கனத்த மழையில், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்படி முதலாழ்வார்கள் மூவரையும் கூட்டினான் திருமகள் கேள்வன். ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்கலாம். இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்கலாம் என்று நின்றார்கள் ஓடித்திரியும் யோகிகள் மூவர். அந்த மகான்களைப் பேராத திவ்ய ஆனந்த உணர்வாக வெளிப்பட்டு நெருக்கினார்கள் திவ்ய தம்பதிகள். சொல்லாமல் வந்து சொல்லிறந்து புகுந்து நெருக்கும் அவர்களைக் காண வேண்டி, பகவானின் விபூதிகளையே அவனைக் காட்டும் விளக்காக ஏற்றினார் பொய்கையார். அவனிடத்தில் ஆராத காதல் அன்பினையே அரும் விளக்காகக் கொளுத்தினார் பூதத்தார். உள்ளும், புறமும் விளக்கேற்றி விட்டால் அந்த மறை புலர் நாயகனும், மாதவனின் மருவு திருவும் ஒளியுமாறு எங்ஙனே? ஏற்றிய விளக்கத்தில் ஏறு திருவுடையானைக் கண்டார் பேயாழ்வார். 

இந்த இடத்தை மிக அழகாக விளக்குகிறது நம்பிள்ளை படி. 

“இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி ‘நீயும் திருமகளும் நின்றாயால்’ என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், ‘இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !’ என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது.” 

அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். 

முதல் மூன்று திருவந்தாதிகளுக்கு உரை விரிவாகவும், நான்முகன் திருவந்தாதிக்குச் சிறிது சுருக்கமாகவும் நம்பிள்ளைபடி அமைந்திருக்கிறது. 

பொதுவாக திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் என்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நுட்பங்கள் சூர்ணைகளின் வடிவில் நூல்களாக ஆனது பிள்ளை லோகாச்சாரியாரின் காலத்தை ஒட்டித்தான். சற்று முன்னர், பின்னர் என்றபடி. பகவத் விஷய வ்யாக்யானங்களிலும், மற்றைய திவ்ய பிரபந்த உரைகளிலும் ரஹஸ்யங்கள் என்னும் மேற்கூறிய மூன்று நுட்பங்களின் பொருள் சிறப்புகள் விரவித் துலங்கிக் கிடக்கும். நம்பிள்ளை படியிலோவெனில் ரஹஸ்யார்த்தங்களான திருமந்திர, த்வய, சரம ஸ்லோக நுட்பங்கள் இடத்திற்கு இடம் விளக்கெரித்துக் காட்டப் படுகின்றன. இந்த அம்சம் இந்த நூலின் காலத்தைச் சரிவர கணக்கிடப் பயன்படலாம். 

நம்பிள்ளை செய்ததோ அன்றி அவர் காலத்தை ஒட்டிப் பின்னர் வந்த மகனீயர்கள் யாரேனும் செய்ததோ நிச்சயம் இந்த வ்யாக்யானம் ஒரு விசேஷமான வ்யாக்யானம். There is very large presence of Nampillai in and through this commentary. 

இந்த நூலின் அர்த்த விசேஷங்களைத் தொடர்ந்து இந்த இழையில் எழுதுவதாக எண்ணம். 

நூல் விவரம் :- 

நம்பிள்ளை படி - இயற்பா வ்யாக்யானம் 

(முதல் நான்கு திருவந்தாதிகள்) 

டாக்டர் M A வேங்கடக்ருஷ்ணன், 

(பேராசிரியர், துறைத்தலைவர், 
வைணவத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்) 

ரூ 400 . 00 (ரூபாய் நானூறு மட்டும்) 

கீதாசார்யன் 
7, தெற்கு மாட வீதி, 
திருவல்லிக்கேணி, 
சென்னை 600005 
போன் 28441653 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Innamburan Innamburan

unread,
Feb 9, 2012, 10:12:13 AM2/9/12
to thamiz...@googlegroups.com, mintamil

அடியேன் திக்குமுக்காடிவிட்டேன்.

“...“இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி ‘நீயும் திருமகளும் நின்றாயால்’ என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், ‘இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !’ என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது...” 


இது மொழி நடையா? தத்துவ விசாரணையா? பக்தி மஞ்சரியா? ஆழ்கடலில் மூழ்கி நித்தியசுகானுபவம் போல.

~

மனிதருக்குப் பொறி தட்டியிருக்கிறது: பழம் நழுவினால் போதாது; பாலில் விழுந்ததே; அதை சொல்லும்.

~

ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் வந்துட்டார்! வந்துட்டார்! வந்துட்டார்! யார்ரா! மோளம் கொட்றது? கெட்டி மேளம்! கெட்டி மேளம்! ஹே! கெட்டி மேளம்!


இந்த அரிய நூலை வாங்கி வர ஏற்பாடு ஆகிறது. இந்த பூலோகத்தில் எங்கு இருந்தாலும் தெண்டன் சமர்ப்பித்த வண்ணமிருக்க ஹேதுவாயிற்று.

இன்னம்பூரான்

09 02 2012 

Swarna Lakshmi

unread,
Feb 9, 2012, 10:49:24 AM2/9/12
to mint...@googlegroups.com
வாருங்கள் வாருங்கள் ரங்கன்...உங்களை மறுபடி வரவேற்பதில் மிக்க சந்தோஷம். இனிமேல் இப்படி காணாமல் போகாதீர்கள்.... :)))
 
ஸ்வர்ணா

09 02 2012  --
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


கி.காளைராசன்

unread,
Feb 9, 2012, 11:53:58 AM2/9/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன்.
அதை மோகரங்கனார் மோகித்து அரங்கத்தினேலே எமக்கு அருளிய அருமைதான் என்னே !
நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். 
தொடர்ந்து காணக் காத்திருக்கிறேன்.
--
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,




Mohanarangan V Srirangam

unread,
Feb 9, 2012, 1:02:43 PM2/9/12
to thamiz...@googlegroups.com, mintamil
இன்னம்பூராரின் அன்புக்கு நன்றி. 

***

2012/2/9 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Mohanarangan V Srirangam

unread,
Feb 9, 2012, 1:04:36 PM2/9/12
to mint...@googlegroups.com
இல்லை ஸ்வர்ணா. மறுபடியும் போக வேண்டியிருக்கும். இது சும்மா நடுவில் எட்டிப் பார்த்தல். 

***

2012/2/9 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Mohanarangan V Srirangam

unread,
Feb 9, 2012, 1:05:34 PM2/9/12
to mint...@googlegroups.com
நன்றி ஐயா காளைராசரே ! 

***

2012/2/9 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Sridharan Raghavan

unread,
Feb 9, 2012, 10:07:31 AM2/9/12
to mint...@googlegroups.com
மிக்க ஆவலுடன் எதிர்பார்கிறோம் ரங்கன்ஜி

2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான். 
--

Geetha Sambasivam

unread,
Feb 9, 2012, 7:37:14 PM2/9/12
to thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
நல்வரவு,  இத்தனை நாட்களாக எங்கிருந்தீர்கள்??  உடல் நலம் தானே?


2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான். 


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Mohanarangan V Srirangam

unread,
Feb 9, 2012, 9:46:35 PM2/9/12
to tamizhs...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல்
சரம -- என்பது ‘முடிந்த நிலை’ என்பதைக் குறிக்கும். 

ஒரு ஜீவன் மரணம் அடைந்த பிற்பாடு அது அடையும் நிலை, அதன் கதி, நன்மை முதலியன பற்றிச் செய்யுள் இயற்றி, உறவினர், நண்பர்கள் சேர்ந்த கூட்டத்தில் எடுத்துச் சொல்லி நடத்தப்படும் சடங்கிற்குப் பெயர் ‘சரம ஸ்லோகம்’. 

ஆனால் இங்கு ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படும் சரம ஸ்லோகம் என்பது வேறு. 

இங்கு சரம ஸ்லோகம் என்பது ஸ்ரீமத் பகவத் கீதையின் இறுதி அத்யாயமான 18 ஆம் அத்யாயத்தில், ஸ்ரீகிருஷ்ணன் கூறும் அனைத்து யோகங்களுக்கும் முடிந்த கருத்தாக வரும் ஸ்லோகமான 

சர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | 
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி 
மாசுச: || 

என்பதை ‘சரம ஸ்லோகம்’ என்று குறிப்பிடுவது சம்ப்ரதாயம். இதன் பொருள் -- 

‘என்னை அடைவதற்கு அனைத்து நெறிகளையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று. நான் உன்னை என்னை அடையவிடாமல் தடுக்கும் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுவித்து என்னை அடைய வைப்பேன்’ 

என்பதாகும். 

அதேபோல் இங்கு கூறப்படும் திருமந்திரம் என்பது ஸ்ரீ அஷ்டாக்ஷர மந்திரமாகிய நாராயண மந்திரம் ஆகும். 

எட்டு எழுத்துக்கள் கொண்டமையால் அதற்குத் தமிழில் திரு எட்டெழுத்து என்று பெயர். (அஷ்ட அக்ஷரம் - எட்டு எழுத்து). 

இந்த மந்திரத்தின் உட்பொருள் கடலைனைய ஆழமும், விண்ணொத்த விரிவும் கொண்டது. இந்த ரஹஸ்யத்தை பத்ரிகாச்ரமத்தில் நர ரிஷிக்கு நாராயணனாய் நின்று பகவான் வெளிப்படுத்தினார். 

த்வயம் என்பது ஈரடி கொண்ட மந்திரம். பெருமாளையும், பிராட்டியையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத ஏக தத்துவமாகக் கண்டு சரண் புகும் மந்திரம். 

இந்த மூன்று மந்திரங்களும் சேர்ந்து ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ரஹஸ்ய த்ரயம் என்று சுட்டப்படும். 

இங்கு ரஹஸ்யம் என்பது அதற்கான தீக்ஷை பெற்று, உரிய ஆர்வமும், ஈடுபாடும் கொண்டோர் தம் ஆத்ம சாதனையில் கைக்கொள்ளும் மந்திரம் என்பதைச் சுட்டும். 

Mystical secrets என்றபடிப் பொருள் கொள்ள வேண்டும். 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.
*


2012/2/10 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
அன்பு மோகனரங்கம்,

எனக்கு ஒரு சந்தேகம்.  சரம ஸ்லோகம் என்பது என்ன?  இது நாள் வரை சரம ஸ்லோகம் என்பது ஒருவர் இறந்த பின் அவர் பெருமைகள் குறித்து பாடப்படும் வரிகள் என நினைத்திருந்தேன்.  

இது பற்றி ஒரு கதையும் கேட்டுள்ளேன்.  ஒரு அரசன் ஒரு புலவரை அழைத்து தன்னைப் பற்றி ஒரு சரம ஸ்லோகம் பாடச் சொல்கிறான்.  புலவர் மறுக்கிறார்.  மன்னன் கட்டாயப் படுத்திட வேறு வழியின்றி அவரும் பாடுகிறார்.  அவர் பாடி முடிக்கும் தருணம் மன்னன் இறந்து விழுகிறான்.  இறந்த அரசன் யார், பாடிய புலவர் யார் என்பதெல்லாம் மறந்து விட்டது.

சிரித்திடாதீர்கள் என் அறிவுக் குறைவு குறித்து.  விளக்கம் தந்திடுங்கள் எனக்கு.

N. Kannan

unread,
Feb 9, 2012, 10:29:33 PM2/9/12
to mint...@googlegroups.com
2012/2/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> 2012/2/10 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
>>
>> அன்பு மோகனரங்கம்,
>>
>> எனக்கு ஒரு சந்தேகம்.  சரம ஸ்லோகம் என்பது என்ன?  இது நாள் வரை சரம ஸ்லோக என்பது ஒருவர் இறந்த பின் அவர் பெருமைகள் குறித்து பாடப்படும் வரிகள் என> நினைத்திருந்தேன்.


தங்கள் மீள் வருகைக்கு நன்றி. மீண்டும் அந்தர்தியானமாகிவிடுவேன்
என்றெல்லாம் பயமுறுத்த வேண்டாம்:-) இந்த மண்ணில் சத்யத்தைப் பேசுவோர்
குறைந்து வரும் வேளையில் வேதங்களை இயற்றிய வேத வியாசரே தலையில் அடித்துச்
சத்தியம் செய்யும் விஷயங்களை எங்களைப் போன்ற அறிவிலிகளும் புரிந்து
கொள்ளும் வண்ணம் எழுதும் உங்கள் எழுத்து ஓர் சேவை. எனவே தொடர்ந்து
எங்களுடன் இருந்து ஜீவன் உய்விக்கும் வழிதனைக் காட்டுவீர்.

இந்த அன்பர் (நடராஜன்) செய்வதே சரி. தெரியாத விஷயங்களைக் கேட்டுட்
தெளிதல் மதி. நம்மில் பலர் அபிப்பிராயங்களே உண்மை என்று மதி மயங்குவதைக்
காண்கிறேன். தங்களுக்கு இன்று ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அறிவுத்
தேட்டமுடைய ஒரு சம்பிரதாயம் பெரும் தனமாகக் கிடைத்துள்ளது. அதைத் தாங்கள்
மின்வெளியில் விநியோகம் செய்வது எங்கள் நல்லூழ். வாழ்க!

நா.கண்ணன்

S.Krishnamoorthy

unread,
Feb 9, 2012, 10:35:27 PM2/9/12
to mint...@googlegroups.com
கண்ணபிரானின் இந்த உள்ளாந்த பாராட்டுக்கு முற்றிலும் தகுதி படைத்தவர் நமது மோஹனரங்கன். 
அவர் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும், நாங்கள் மோஹம்கொண்டு படித்துகொண்டே இருப்பதற்கு.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

2012/2/10 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

Tthamizth Tthenee

unread,
Feb 10, 2012, 6:20:30 AM2/10/12
to mint...@googlegroups.com
"இது சும்மா நடுவில் எட்டிப் பார்த்தல்" 
 
 
எட்டிப் பார்த்தலே இவ்வளவு ரசமாய்  இருக்கிறதே
 
நாங்களும் எங்களால்   முடிந்தவரை  எட்டி.......ப் பார்க்கிறோம்
 
எட்டிய வரை  எட்டட்டுமே!
 
மனிதருக்குப் பொறி தட்டியிருக்கிறது: பழம் நழுவினால் போதாது; பாலில் விழுந்ததே; அதை சொல்லும்.
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இது சும்மா நடுவில் எட்டிப் பார்த்தல். 

N. Ganesan

unread,
Feb 10, 2012, 5:41:19 AM2/10/12
to மின்தமிழ்

On Feb 9, 6:23 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும்,
> வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம்
> இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான்.
>

அரிய கண்டுபிடிப்பு. நம்மாழ்வார் ஆரியத்தமிழால்
சங்கம் வென்ற அகவல் சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. அதில்
சொல்லப்படும் பெருமரம்
- யால் (ஆலமரம்) பரிபாடல் சொல்லும் வேதப்பொருள்.
ஆமா தொடர்பும் அரிதானது. ஆரியத்தமிழை விளக்கும்
அரியசொல் ஆமா. நம்மாழ்வார் அகவல் ஏட்டில்
கிடைத்ததுபோல், ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பிள்ளை படியை
தேடியெடுத்து அச்சிட்ட அமுதான சேதியை எங்களுக்கு
அளிப்பதற்கு நன்றி.

திருமிகு. வேங்கடகிருஷ்ணன் போல் தமிழ்ப் பேராசிரியர்கள்
பாடுபட்டால் இன்னும் எத்தனையோ கருவூலங்கள்
தமிழன்னைக்குச் சேரும். பல பிரபந்தங்கள், தலபுராணங்கள்,
வ்யாக்கியானங்கள் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா’ நிலையில் உள்ளன.

முனைவர் நா. கண்ணன் தமிழ்நாட்டில் இருக்கும்போது
பேரா. வே. ரா. மாதவனைத் தமிழ்ப் பல்கலையில் பேட்டி
காண வேண்டும். ஏடு தேடி அளிக்கும் அ. சுகுமாரன் அவர்களின்
முயற்சியால் கிட்டிய பண்டில்களில் ஏதாவது இலக்கியம்,
இலக்கணம், உரைகள் சிக்கினவா என்று வே. ரா. மாதவன்
போன்றோர் அறிவித்தால் மகிழ்வு.

நிறைய எழுதுங்கள்.

நல்ல தமிழில் எழுதுவோர் இணையத்தில்
உங்களை முன்மாதியாய்க் கொண்டு இன்னும்
அதிகம்பேர் முன்வரணும்.

அன்புடன்
நா. கணேசன்

> ஸ்லோக நுட்பங்கள் இடத்திற்கு ...
>
> read more »

sk natarajan

unread,
Feb 10, 2012, 8:41:29 AM2/10/12
to tamizhs...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், Mohanarangan V Srirangam
நீண்ட நாட்களாயிற்று ஐயா உங்களின் வரிகளை கண்டு
கண்டதும் மகிழ்ந்தேன்
நீண்ட இடைவெளியால் மிகப் பெரிய படைப்பு உங்களிடம் இருந்து  வரப் போகின்றது  என  எதிர்நோக்கியுள்ளேன் .

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான். 

Hari Krishnan

unread,
Feb 10, 2012, 8:44:32 AM2/10/12
to mint...@googlegroups.com
2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான். 

ரங்கன்,

பெரிய பார்ட்டி பாராட்டியாகிவிட்டது.  எதற்கும் உங்க வீட்டுக்குக் கீழேயுள்ள ஃபார்மஸிகாரர் (லக்ஷ்மி ஹயவதனாதானே அது?) போஸ் கிட்ட சொல்லி ஒரு ஸ்டதாஸ்கோப் வாங்கி வைத்துக் கொள்ளவும்.  இதே வாய் நாளைக்கு ‘நீ டாக்டரா’ என்று கேட்கும்போது உதவியாக இருக்கும். :)

--
அன்புடன்,
ஹரிகி.

Subashini Tremmel

unread,
Feb 11, 2012, 1:54:14 AM2/11/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ய்வாக்யான விமர்சனத்திற்கு நன்றி. 

2012/2/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
..


அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். 

அழகிய வரிகள்.

சுபா
 

முதல் மூன்று திருவந்தாதிகளுக்கு உரை விரிவாகவும், நான்முகன் திருவந்தாதிக்குச் சிறிது சுருக்கமாகவும் நம்பிள்ளைபடி அமைந்திருக்கிறது. 

பொதுவாக திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் என்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நுட்பங்கள் சூர்ணைகளின் வடிவில் நூல்களாக ஆனது பிள்ளை லோகாச்சாரியாரின் காலத்தை ஒட்டித்தான். சற்று முன்னர், பின்னர் என்றபடி. பகவத் விஷய வ்யாக்யானங்களிலும், மற்றைய திவ்ய பிரபந்த உரைகளிலும் ரஹஸ்யங்கள் என்னும் மேற்கூறிய மூன்று நுட்பங்களின் பொருள் சிறப்புகள் விரவித் துலங்கிக் கிடக்கும். நம்பிள்ளை படியிலோவெனில் ரஹஸ்யார்த்தங்களான திருமந்திர, த்வய, சரம ஸ்லோக நுட்பங்கள் இடத்திற்கு இடம் விளக்கெரித்துக் காட்டப் படுகின்றன. இந்த அம்சம் இந்த நூலின் காலத்தைச் சரிவர கணக்கிடப் பயன்படலாம். 

நம்பிள்ளை செய்ததோ அன்றி அவர் காலத்தை ஒட்டிப் பின்னர் வந்த மகனீயர்கள் யாரேனும் செய்ததோ நிச்சயம் இந்த வ்யாக்யானம் ஒரு விசேஷமான வ்யாக்யானம். There is very large presence of Nampillai in and through this commentary. 

இந்த நூலின் அர்த்த விசேஷங்களைத் தொடர்ந்து இந்த இழையில் எழுதுவதாக எண்ணம். 

நூல் விவரம் :- 

நம்பிள்ளை படி - இயற்பா வ்யாக்யானம் 

(முதல் நான்கு திருவந்தாதிகள்) 

டாக்டர் M A வேங்கடக்ருஷ்ணன், 

(பேராசிரியர், துறைத்தலைவர், 
வைணவத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்) 

ரூ 400 . 00 (ரூபாய் நானூறு மட்டும்) 

கீதாசார்யன் 
7, தெற்கு மாட வீதி, 
திருவல்லிக்கேணி, 
சென்னை 600005 
போன் 28441653 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Feb 11, 2012, 1:55:40 AM2/11/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2012/2/10 Hari Krishnan <hari.har...@gmail.com>




 
 இதே வாய் நாளைக்கு ‘நீ டாக்டரா’ என்று கேட்கும்போது உதவியாக இருக்கும். :)

மறந்து போன இந்த விஷயத்தைத் தவிர்க்கலாமே!.

சுபா



--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Mohanarangan V Srirangam

unread,
Feb 26, 2012, 9:56:07 AM2/26/12
to tamizhs...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல்
நம்பிள்ளை படி இயற்பா வ்யாக்கியானம் - சில சிந்தனைகள் 

பகுதி ஒன்று 


***

Innamburan Innamburan

unread,
Feb 26, 2012, 11:14:14 AM2/26/12
to mint...@googlegroups.com
நடை இனிக்க, சுவை ததும்ப, பக்தி பிடித்திழுக்க, ஞானவைராக்யம் சித்திக்க...


2012/2/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages