நகரத்தார் திருமணச் சடங்கு முறை வேள்வெடுத்தல் பற்றிய கட்டுரை

527 views
Skip to first unread message

Palaniappan M

unread,
Dec 9, 2012, 6:28:11 AM12/9/12
to mintamil

வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்)  என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
                        முனைவர் மு.பழனியப்பன்
தமிழாய்வுத் துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி
சிவகங்கை
94442913985
                       
    நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும்.

    சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத விளக்கினை வீட்டின் முன்புறத்தில் வைத்து இந்தச் சடங்கு முறை செய்யப்படும். இந்த விளக்கே மங்களகரமான விளக்கு ஆகும். ஏனெனில் அக்காலத்தில் எண்ணெய் என்பது எள் எண்ணெயான நல்லெண்ணையையே குறிக்கும். இந்த எள் மங்கலத்திற்கு ஆகாதது. எனவே அதனை விளக்கவேண்டும் என்பதற்காக மெழுகு வர்த்தி கொண்டு ஒரு விளக்கு செய்யப்பட்டு அதற்கு வண்ணக் கண்ணாடி குமிழை வைத்து உருவாக்கப்படும்படியாக இந்தச் சிலேட்டு விளக்கு வடிவமைக்கப் பெற்றுள்ளது. இதற்கு ஏன் சிலேட்டு விளக்கு என்று பெயர் வந்தது என்பதை மற்றொரு முறை ஆராயலாம்.
வீட்டிற்கு வருகின்றவர்களை வரவேற்கும் முகப்பு என்ற முன்புறத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடத்தப் பெறும். அவ்வகையில் வேவும் இம்முகப்புப் பகுதியில் இருந்துத் தொடங்குகின்றது. முன்பகுதியில் மாக்கோலம் இடப்பெற்று அதில் சிலேட்டு விளக்கு வைத்து வெள்ளிக் கூடை அல்லது எவர்சில்வர் கூடை  ஏதேனும் ஒன்றில் உணவுக்கு உரிய அரிசியை முக்கால் அளவில் நிரப்பி, அதன் மேல் பகுதியி; ஒரு சில காய்கறிகள் (தற்போது ஒரே ஒரு கத்திரக்காய், அதுவும் மணியால் அழகாகச் செய்யப்பட்ட செயற்கைக் கத்திரிக்காய் தற்போது பயன்படுத்தப்படுகிறது, விற்கும் கத்தரிக்காய் விலையி;ல் இதுவே போதும்) வைத்து இ;க்கூடை தயார் செய்யப்படும். இதற்கு வேவுக்கடகம் என்று பெயர். இதனை ஒரு உறவு முறையினர் தர மற்றொரு முறையினர் பெற்றுக் கொள்ளுவது என்பதே இச்சடங்காகும்.

    இந்தச் சடங்கிற்கு வேவு என்ற பெயர் சரிதானா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். வேவு பார்த்தல் என்றால்  உளவு பார்த்தல் என்று பொருள். அத்தகைய பெயரை இதற்கு வைத்திருக்கமுடியுமா என்ற சிந்தனை நீண்ட நாளாக இருந்து வந்தது.

    சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தில் ஒரு தொடர் வரும் “விழவும், வேள்வும் விடுத்தல் ஒன்றின்மையால்” என்பது அந்தத் தொடர் (சீவக சிந்தாமணி – 138). இந்தத் தொடரில் வரும் வெள்வு என்ற சொல் கவனிக்கத்தக்கது.விழாக்களும் வேள்வும் ஒன்றுடன் பிரியாதவை என்று இதற்குப்பொருள். விழா என்றால் அதற்கான பொருள்களைக் கொண்டு வந்துக் குவித்தல் என்பதுதான் முதல் நிகழ்வாக இருக்கும். அதனால்தான் பொருள்களைக் கொண்டுவந்துக் குவித்தலை வேள்வு என்று அந்த காலத்தில் வழங்கியுள்ளனர். எனவே விழாவும் வேள்வும் பிரிக்க முடியாதனவாக விளங்குகின்றன.

வேள்வெடுத்தல் என்பதற்குச் சிறப்பான பொருள் உண்டு.  “விவாகத்தில் மண மக்கள் வீட்டார்கள் வரிசையாக எடுக்கும் உணவுப்பண்டம்” என்று வேள்வு என்ற சொல்லுக்குப் பொருள் தருகின்றது தமிழ்லெக்சிகன் (ப.3843). இதனை இன்னும் விளக்கமாக நோக்கவேண்டுமானல் வேள்வெடுத்தல்  என்ற தொடராகக் கொள்ளவேண்டும். இதற்கு “ வேள்வு – எடு, மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை அனுப்புதல்” என்று பொருள்தருகிறது தமிழ் லெக்சிகன்.

    இப்பொருள்களில் இருந்துக் கட்டாயம் ஒன்றை மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதாவது வேவு எடுத்தல் என்ற பெயரை வேள்வெடுத்தல் என்றுச் சரியாக உச்சரிக்க வேண்டும். வேள்வெடுத்தல் என்று மாற்றிக் கொள்ளவேண்டும். ( இனி இக்கட்டுரையில் வேவு எடுத்தல் என்பது வேள்வெடுத்தல் என்றே பயன்படுத்தப்பெறும். ) இந்தச் சடங்கு ஒரு பழமையான சடங்கு. இதனை இன்னமும் நகரத்தார்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது அவர்களின் மரபு பேணலை எடுத்துரைப்பதாகும்.

    வேக வைக்கப்படாத உணவுப் பொருள்களைக் கூடை கூடையாகச் சுமந்து வர அதனை இறக்கிக் கொள்ளும் நடைமுறை தற்போது இவ்வழக்கமாகச் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாகத் தற்போது ஒரே ஒரு கூடையாக (கடகமாக) இது கொண்டுவரப்படுகிறது. அக்காலத்தில் பல கடகங்கள் இருந்திருக்க வேண்டும். அதன் எண்ணிக்கைப்படி ஆண்களும் பெண்களும் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது ஆள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரே கடகம் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளப் படுகிறது. இது மங்கலமான எண்ணில் முடிதல் வேண்டும் என்பது மட்டும் உறுதி.

    இந்த வேள்வெடுத்தல் என்ற முறை மாமவேள்வெடுத்தல், பால்வேள்வெடுத்தல், பொங்கல்வேள்வெடுத்தல், விளையாட்டுப் பெட்டி வேள்வெடுத்தல்  என்ற வகைகளிலும் செய்து கொள்ளப்படுகின்றது. ஒவ்வெர்ரு வேள்வெடுத்தலிலும் சிறப்புப் பொருட்கள் இடம்பெற்றிருக்கும். மாம வேள்வெடுத்தலில் இன்னமும் கட்டாயம் இடம்பெறுவது பறங்கிக்காயும், வாழையிலையும், காய்கனிகளும், தேங்காயும். பால்வேள்வெடுத்தலில் பெண்வீட்டுப் பால்செம்பும் இடம் பெற்றிருக்கும். கல்யாணவேவில் கத்தரிக்காய், தேங்காய் பச்சரிசி இடம்பெறும். விளையாட்டுப் பெட்டி வேள்வெடுத்தலில் விளையாட்டுப் பொருள்களும் இருக்கும்.

    அதாவது பெண் வீட்டிற்கு வரும் பெண் வீட்டுச் சார்பாளர்கள் வெறுங்கையை வீசிக்கொண்டு வராமால் தலை தாங்கும் அளவிற்கு நிறைய பொருள்களை அக்காலத்தில் தலைச்சுமையாகக் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அவ்வாறு கொண்டு வருகையில் அதனை மாப்பிள்ளை வீட்டார் நல்ல மனத்துடன் அவர்களும் தலைச்சுமையாய் இறக்கிக் கொண்டு சாமி வீட்டில் வைப்பது என்ற நடைமுறை பழங்கால நடைமுறை என்றாலும் இக்காலத்திலும் பின்பற்றவேண்டிய நடைமுறையாகின்றது.  இதன்வழியாக பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இணையும் நன்முறை ஏற்படுகிறது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் இணைத்து வைத்து அவர்களின் இணைப்பினை இவர்கள் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்நடைமுறை ஏற்படுத்துகின்றது,

    சமீபத்தில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்றபோது இந்த வேள்வெடுத்தலில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டு தீர்வு காண வயதில் பெரிய ஆண், பெண் புள்ளிகளை அழைக்கவேண்டி வந்துவிட்டது. அதாவது திருமண வீட்டில் திருமணத்தன்று காலையில் நடைபெறும் இச்சடங்கில்; யார் பொருள்களைக் கொண்டுவருவது யார் பெற்றுக் கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. பெண்வீட்டார் “;நாங்கள்தான் தருவோம்;;;;, மாப்பிள்ளை வீட்டார் நாங்கள்தான் தருவோம் , நீங்கள் இறக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூற முடிவு காண பெரும்பாடு பட்டாகிவிட்டது.

    மணவீட்டார் தமக்குள் உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்ளுகின்ற இந்தச் சடங்கில் இருவரும் கொண்டு வரும் பொருள்களை ஒருவருக்கு ஒருவர் இறக்கிக்கொள்வது என்பது பழங்கால நடைமுறை. தற்போது ஒருபகுதி மட்டுமே நடைபெறும் முறை வந்துவிட்டது. இதன் காரணமாகத்தான் இந்தக் குழப்பம். மேலும் ஒருகாலத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டிற்குப் பொன், பொருள் கொடுத்துப் பெண்கொள்வது என்ற வழக்கமும் இருந்துள்ளது. இதன் காரணமாக மாப்பிள்ளைவீட்டார் பொருள்களைத் தர பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளும் நடைமுறையாக வேள்வெடுத்தல் அக்காலத்தில் மாப்பிள்ளை வீட்டில் செயல்படுத்தப்பெற்றுள்ளது. தற்போது பெண்வீட்டில் திருமணம் நடப்பதால் பெண் வீடு இறக்குவதா மாப்பிள்ளைவீடு இறக்குவதா என்ற குழப்பநிலை வந்துள்ளது. மாப்பிள்ளை வீட்டார் முன்பு வேள்பொருள்களைக் கொடுத்துவிட்டதால் கல்யாணத்தில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் இறக்கிக் கொள்ளும் முறையாக இதனைக் கொள்ளவேண்டி உள்ளது. கல்யாணம் கடந்த பல தலைமுறைகளுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டில் நடந்திருக்கவும் வாய்ப்புண்டு. இதன் காரணமாக பெண் வீட்டார் கொண்டு வந்த பொருள்களை மாப்பிள்ளை வீட்டார் தன் வீட்டில் இறக்கிக் கொள்ளும் நடைமுறை இன்னும் தொடர்வதாகக் கொள்ளலாம். இத்தெளிவிற்கு வந்து அன்றைக்கு வேள்வெடுத்து திருமணத்தை நன்முறையில் நடத்திக் கொண்டோம்.

    திருமணவேள்வெடுத்தல் தவிர மற்ற வேள்வெடுத்தல்களில் இந்தக் குழப்பம் நிகழுவதில்லை. தாய்வீட்டில் இருந்துக் கொண்டு வரும் பொருட்களைப் பெண் வீட்டார் பெற்றுக் கொள்ளும் முறையில் மாமவேள்வெடுத்தல் சிறப்பாக நடைபெறுகிறது. விளையாடடுப்பெட்டி வேள்வெடுத்தலும் பெண்வீட்டில் பிரசவம் பார்ப்பதால் மாப்பிள்ளை வீட்டார் பொருள்கள் கொண்டுவர பெண்வீட்டார் ஏற்கின்றனர். பால்வேள்வெடுத்தல், பொங்கல்வேள்வெடுத்தல் என்ற நடைமுறைகளிலும் குழப்பம் ஏற்படுவதில்லை.

    இவ்வகையில் மிக முக்கியமான திருமணச்சடங்காக வேள்வெடுத்தல் சடங்கு இன்னமும் நடைபெற்றுவருகிறது. இதனை வரும் காலங்களிலும் காப்பற்ற வேண்டும். திட்டமிட்ட திருமணமாக நகரத்தார்கள் தம் திருமணத்தை நடத்திக்கொண்டனர் என்பதற்கு இச்சடங்கும் ஒரு சான்றாகும்.
  இவ்வாறு திருமணச் சடங்குகள் உறவை, அன்பை, பொருளைப் பரிமாறி;கொள்ளும் அடையாள நிகழ்வுகளாக விளங்குகின்றன. ஆனால் ஒரே ஒரு வேள்வெடுக்கும் கடகத்தை  பதினாறு முறை வைத்து வைத்து எடுத்து வர அதற்கென்று சிறுபிள்ளைகளைத் தேட கல்யாணவீடு கலகலப்பாகின்றது. மேலும் வேள்வெடுத்தல் என்ற நடைமுறையின்போது ஆண்கள் துண்டைத் தலையில்கட்டிக் கொள்ளவேண்டும் என்ற நடைமுறையும் உண்டு. இதற்காக துண்டைத் தேடும் படலமும் அவ்வப்போது அரங்கேறும். மாமப் பட்டினைப் போல் இதற்கும் ஒரு துண்டினை ஏற்பாடு செய்து கொள்ள திருமண வீட்டார் முன்வரவேண்டும். இல்லையானால் அந்நேரம் துண்டைத் தேட வெண்டி வரும். மேலும்அத்துண்டையும் சரியாக ஆண்கள் கட்டிக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் புகைப்படக்காரர் சரிசெய்வார்.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனித மனங்களை ஒருங்கிணைக்கவே என்பதில் ஐயமில்லை. சடங்குகளால் ஒருங்கிணைவோம். மனங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் எல்லையின்றி ப+க்கட்டும்.
   

--
M.Palaniappan
muppal...@gmail.com
manidal.blogspot.com

N. Ganesan

unread,
Dec 9, 2012, 7:37:25 AM12/9/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, Santhavasantham
On Dec 9, 3:28 am, Palaniappan M <muppalam2...@gmail.com> wrote:
> வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்)  என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
>                         முனைவர் மு.பழனியப்பன்
> தமிழாய்வுத் துறைத் தலைவர்
> மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி
> சிவகங்கை
> 94442913985
>

அன்பின் பேரா. பழனியப்பன் அவர்களுக்கு,

வணக்கம். நல்ல கட்டுரை.

(1) எள் (எண்ணெய்) விலக்கி ஆவின் நெய்யோ,
ஆமணக்கு போன்றவற்றின் நெய்யோ திருமணத்தில்
பயன்படுத்துவதுண்டு.கம்பரில் இராவணன் மடிந்தபோது
‘எள் இருக்கும் இடமின்றி’ என மண்டோதரி அரற்றுகிறாள்.
ஆனால், சீதை திருமணத்திலோ உழுந்தைத் தான் பயனிக்கிறார்.
சங்க இலக்கியத்திலும் எள்ளைப் பாடுநர் கூட்டத்துக்கும்,
இன்றும் 60-ஆம் ஆண்டு பூர்த்தியில், தங்கத்தை (எள்) எண்ணெயில்
இட்டு தீமைவிலக்ச் செய்வடதைச் செய்கிறார்கள்.

(2) >இந்தச் சடங்கிற்கு வேவு என்ற பெயர் சரிதானா என்பது ஆராயப்பட


வேண்டிய
> ஒன்றாகும்.

வேவெடுத்தல் என்னும் பேச்சு வழக்கு வேவு + எடுத்தல்.
வேவு என்பது வேய்வு என்பதன் சுருக்கம். பேச்சில்.
வே-/வே(ய்)- என்னும் வினைச்சொல் வேய்தல்.
கூரை வேய்கிறோம். அதாவது, விட்டத்தை முதலில் இட்டு
அதன் மேல் ஒலையோ, ஒட்டையோ வேய்கிறோம்.
அதுபோல், சீர்வரிசையில் ஒன்றன்மேல் ஒன்றாக
உணவுப் பண்டங்களை வேய்ந்து அம்பாரமாகக் குவித்து
எடுத்தல் வேவு எடுத்தல் (அ) வேவெடுத்தல்/வேய்வெடுத்தல்.

கொற்றக்குடை ஏன் வேந்தனுக்கு என்றும் ஆராய்ந்து பாருங்கள்.
சிந்து சமவெளியில் பண்டைப் பாரத நாகரிகம் உருவானது.
அதிலே மீனுக்கு மேல் கூரை இருக்கும். வேந்து (அ) வேந்தன்
எனப் பொருள். கடுமையான வெயிலில் கூரையாக இருப்பவன்
வேந்து/வே(ய்)ந்து (அ) வேந்தன்.

(3) சீவக சிந்தாமணி போல, ஆழ்வார்களிலும் வேள்வு உள்ளது.
அப்பாடல்களின் பொருளுக்கும் வேய்வு எடுத்தலுக்கும் தொடர்பில்லை.
யக்ஞம்/யாகம் என்ற பொருளில் திருத்தக்கதேவரும், ஆழ்வாரும்
பயன்படுத்துகின்றனர்.

வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

பழைய உரை மரபு பாருங்கள்:
”திருநறையூரில், ஸந்நிதியில் உத்ஸவகோஷங்களும் திருமாளிகையில்
யஜ்ஞகோஷங்களும் மலிந்திருக்கு மென்கிறது மூன்றாமடி.”
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2156

அன்புடன்,
நா. கணேசன்

> muppalam2...@gmail.com
> manidal.blogspot.com

Karuannam Annam

unread,
Dec 9, 2012, 9:12:23 AM12/9/12
to mint...@googlegroups.com
அருமையான பதிவு திரு பழனியப்பன். சொல்லையும் பொருளையும் நிகழ்வுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
கல்யாணவேவு மாப்பிள்ளைவீட்டார் வேவு தரப் பெண்வீட்டார் பெற்றுக்கொள்கின்றனர். பெண்ணழைத்த வீட்டில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் பெறுகிறார்கள். யார் தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் தலையில் தானே!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2012/12/9 Palaniappan M <muppal...@gmail.com>
   

--
M.Palaniappan
muppal...@gmail.com
manidal.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Dec 9, 2012, 10:59:03 AM12/9/12
to mint...@googlegroups.com
2012/12/9 Karuannam Annam <karu...@gmail.com>

>யார் தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் >தலையில் தானே!


விந்துப்பங்களிப்பு ஆணை சமூகத்தின் உயரத்தில் வைத்தது. ஆணின்றி பெண்ணால்
சுயமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் வந்த மரபு.

அறிவியல் மாற்று கண்டுள்ளது. ஜெனிடிக் குளோனிக் முறையில் பெண் தன்னைப்
போல் ஒரு பெண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆண் கலப்பு இல்லாமல் ஐவிஎஃப்
முறையில் ஆண்/பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலம் மாறும்!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Dec 9, 2012, 12:22:33 PM12/9/12
to வல்லமை, mintamil, thami...@googlegroups.com
பேராசிரியர் மு. பழனியப்பன்,

வேள்வு குடுத்தல் - இந்தச் சீர் யாழ்ப்பாண வெள்ளாளர்களிடையேயும் உண்டு.
நண்பர் பேரா. ஆ. வேலுப்பிள்ளையவர்கள் (பேராதனை/யாழ், உப்சாலா(ஸ்வீடன்))
சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து எழுதிய மடலை உங்கட்குத்
தருவதில் மகிழ்வெய்துகிறேன். காந்தளகம் சச்சி ஐயா போன்றோர்
விளக்கலாம்.

-----------------------------

Dear Dr.Ganesan,

I just want to inform you that the usage veeLvu kuTuttal is an
important feature in Saiva Tamil wedding rituals in Jaffna. I am not
sure whether it is more widely prevalent among other groups in Jaffna
and elsewhere in the island. It seems to be the same practice except
for the usage of kuTuttal instead of eTuttal.

Regards,
A.Veluppillai
December 9, 2012
--------------------------------

Hope this helps,
N. Ganesan

On Dec 9, 7:11 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > நலமா? விளக்கத்திற்கு நன்றி.


> > அன்புடன்
> > சொ.வி
>

> மேலும், சிந்திப்போம், சொ. வி. ஐயா,
>
> நீ > நீவு, நீ- என்னும் வேர் நீள்தல், நீட்டம், நீண்ட
> மா(மாய்தல்) > மறைதல் மாயை (மயங்கு) மாயோன், மாயோள்
> இது மாள்- என்றாகிறது (அவள் மாண்டாள், ....)
> அது போலவா வேவு > வேள்வு என ஆராயக்கூடும்.
>
> சீ என்றால் palm tree species. If you look at words in Tamil,
> from the root, cii we have many words, iintu, iingu, iiyal, ....
> for date palm (like ippi < cippi, cii(ntu) < cii becomes iinthu).
> This ciinthu, land of palm trees, is what gives the name to
> river Sindhu. It is a prakritization where the first long vowel
> shortens like kuurma > kumma, kiirNa > kiNNa, ...
> சீ என்னும் பெயர் ள்/ழ் பெற்று சீழம் ‘பனை மரங்களின்
> நிலம்’ என்றாகி ஈழம் < சீ- பெயர் பெற்றுள்ளது.
> அங்கே சிங்கம் எப்பொழுதும் இல்லை.  பல்லவர்
> தொடர்புடைய சிங்களர் ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
> பின்னர் சீகம் (< சீ-) என்பதை சிங்களம் என மாற்றியுள்ளனர்,
>
> நா. கணேசன்


>
>
>
>
>
>
>
> > On Dec 9, 6:12 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>
> > > அருமையான பதிவு திரு பழனியப்பன். சொல்லையும் பொருளையும் நிகழ்வுகளையும்
> > > சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
> > > கல்யாணவேவு மாப்பிள்ளைவீட்டார் வேவு தரப் பெண்வீட்டார் பெற்றுக்கொள்கின்றனர்.
> > > பெண்ணழைத்த வீட்டில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் பெறுகிறார்கள். யார்
> > > தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் தலையில் தானே!
> > > அன்புடன்
> > > சொ.வினைதீர்த்தான்.
>

> > மா > மாவு, நா > நாவு, வே > வேவு, கா > காவு (ஆரியங்காவு), நீ >
> > நீவு, ...
>
> > யாரோ தவறாக சென்னை அகராதிக் குழுவினருக்கு வேவு எடுத்தலை
> > வேள்வெடுத்தல் என்று சொல்லி இருக்கின்றனர். பாவாணர் சென்னை
> > அகராதியில் பல பிழைகளைச் சொல்லி யுள்ளார்.
>
> > வெஃகா ஆற்றை வேகவதி மூலம் என்று சொல்வதும்,
> > வேவு எடுத்தலின் வேவை வேள்வு என்பதும் சென்னைப்
> > பேரகராதியில் திருத்தம் பெற வேண்டியவை எனக் கருதுகிறேன்.
>
> > நா. கணேசன்
>
> > > 2012/12/9 Palaniappan M <muppalam2...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 9, 2012, 10:11:29 AM12/9/12
to வல்லமை, mintamil, thami...@googlegroups.com
> நலமா? விளக்கத்திற்கு நன்றி.
> அன்புடன்
> சொ.வி

மேலும், சிந்திப்போம், சொ. வி. ஐயா,

நீ > நீவு, நீ- என்னும் வேர் நீள்தல், நீட்டம், நீண்ட
மா(மாய்தல்) > மறைதல் மாயை (மயங்கு) மாயோன், மாயோள்
இது மாள்- என்றாகிறது (அவள் மாண்டாள், ....)
அது போலவா வேவு > வேள்வு என ஆராயக்கூடும்.

சீ என்றால் palm tree species. If you look at words in Tamil,
from the root, cii we have many words, iintu, iingu, iiyal, ....
for date palm (like ippi < cippi, cii(ntu) < cii becomes iinthu).
This ciinthu, land of palm trees, is what gives the name to
river Sindhu. It is a prakritization where the first long vowel
shortens like kuurma > kumma, kiirNa > kiNNa, ...
சீ என்னும் பெயர் ள்/ழ் பெற்று சீழம் ‘பனை மரங்களின்
நிலம்’ என்றாகி ஈழம் < சீ- பெயர் பெற்றுள்ளது.
அங்கே சிங்கம் எப்பொழுதும் இல்லை. பல்லவர்
தொடர்புடைய சிங்களர் ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பின்னர் சீகம் (< சீ-) என்பதை சிங்களம் என மாற்றியுள்ளனர்,

நா. கணேசன்


> On Dec 9, 6:12 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>

> > அருமையான பதிவு திரு பழனியப்பன். சொல்லையும் பொருளையும் நிகழ்வுகளையும்
> > சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
> > கல்யாணவேவு மாப்பிள்ளைவீட்டார் வேவு தரப் பெண்வீட்டார் பெற்றுக்கொள்கின்றனர்.
> > பெண்ணழைத்த வீட்டில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் பெறுகிறார்கள். யார்
> > தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் தலையில் தானே!
> > அன்புடன்
> > சொ.வினைதீர்த்தான்.
>

> மா > மாவு, நா > நாவு, வே > வேவு, கா > காவு (ஆரியங்காவு), நீ >
> நீவு, ...
>
> யாரோ தவறாக சென்னை அகராதிக் குழுவினருக்கு வேவு எடுத்தலை
> வேள்வெடுத்தல் என்று சொல்லி இருக்கின்றனர். பாவாணர் சென்னை
> அகராதியில் பல பிழைகளைச் சொல்லி யுள்ளார்.
>
> வெஃகா ஆற்றை வேகவதி மூலம் என்று சொல்வதும்,
> வேவு எடுத்தலின் வேவை வேள்வு என்பதும் சென்னைப்
> பேரகராதியில் திருத்தம் பெற வேண்டியவை எனக் கருதுகிறேன்.
>
> நா. கணேசன்
>
>
>
>
>
>
>
> > 2012/12/9 Palaniappan M <muppalam2...@gmail.com>
>

Subbs shan

unread,
Dec 10, 2012, 3:42:38 AM12/10/12
to mint...@googlegroups.com
அருமையான அழகான கட்டுரை. எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
நன்றி வணக்கம் சுப்பு

2012/12/9 Palaniappan M <muppal...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
பயணங்கள் பல வகையானாலும்,
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இலக்கு என்பதும்
செல்லும் பாதை என்பதும் நிச்சயம் இருக்கும்.
இலக்குகள் அற்ற போக்கும்,
பாதைகள் வரையறுக்காத பயணமும்
வெற்றிபெறாது

வணக்கம் சுப்பு

Palaniappan M

unread,
Dec 10, 2012, 8:42:20 AM12/10/12
to mintamil
விவாதிப்புகளுக்கு நன்றி
சீவக சிந்தாமணியில் வரும் பகுதிக்கு வேள்வி என்பதே பொருந்தும்
இருப்பினும் வேள்வு என்பதே பொருத்தம் என நான் கருதுகிறேன்
மேலும் லெக்சிகனில் திருத்தம் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும் விவாதங்கள் தொடரட்டும்
 எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்க அவசரம்  மற்றும் கைப்பிழைகள் கலந்து வந்ததைத் தவிர்த்துக் கொள்கிறேன்.

அன்புடன் அனைவருக்கும் நன்றிகள்


10 டிசம்பர், 2012 3:42 pm அன்று, Subbs shan <subb...@gmail.com> எழுதியது:

கி.காளைராசன்

unread,
Dec 13, 2012, 4:44:13 AM12/13/12
to mint...@googlegroups.com, muppal...@gmail.com
வணக்கம் ஐயா,

கடந்த 25 ஆண்டுகளாகப் பல நகரத்தார் திருமணங்களுக்குச் சென்றுள்ளேன்.
ஆனால் பெரும்பாலும், போனமா, வயிறு முட்டச் சாப்பிட்டோமா,  மணமக்களை வாழ்த்தினோமா, போட்டோவுக்குப் ‘போஷ்‘ கொடுத்தோமா என்று மட்டுமே இருந்து வந்துள்ளேன்.

தங்களது பதிவு அருமையான பல மரபுகளைக் காட்டுகிறது.  இனியொருமுறை நகரத்தார் திருமணத்திற்குச் செல்லும் போது இது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பும் வகையில் தங்களது பதிவு உள்ளது.

மிக்க நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

2012/12/9 Palaniappan M <muppal...@gmail.com>
   

--
M.Palaniappan
muppal...@gmail.com
manidal.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Dec 13, 2012, 4:46:14 AM12/13/12
to mint...@googlegroups.com, muppal...@gmail.com
வணக்கம்.

திருமணங்களில் “முந்தி (முந்தானை) மாற்றுதல்“ என்று ஒரு சடங்கு பார்த்துள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்

2012/12/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Karuannam Annam

unread,
Dec 13, 2012, 5:44:23 AM12/13/12
to mint...@googlegroups.com, N. Kannan, muppal...@gmail.com


2012/12/9 N. Kannan <navan...@gmail.com>

2012/12/9 Karuannam Annam <karu...@gmail.com>

>யார் தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் >தலையில் தானே!


விந்துப்பங்களிப்பு ஆணை சமூகத்தின் உயரத்தில் வைத்தது. ஆணின்றி பெண்ணால்
சுயமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் வந்த மரபு.
 
 அன்பிற்கினிய நண்பர் திரு கண்ணன் இந்த மரபுகளுக்கு பற்றாக்குறை என்பதும் ஒரு காரணம். அருமைப்பாட்டால் மூன்று தலைமுறைகளில் மூன்று வகையில் முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறேன். முதலில் நகரத்தார் சமூகத்தில் பெண்கள் இல்லாதபோது சைவவெள்ளாளர் வீட்டிலிருந்து பெண்ணெடுத்ததாகப் பழைய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இன்றும் நகரத்தார் கலியாணத்தில் இருவீட்டாரும் கையெழுத்திடும் திருமண நிகழ்வு ஆவணமான இசைபிடிமானத்தில் வெள்ளாட்டிக்குப் பணம் மாப்பிள்ளை வீட்டார் தருவதாகத்தான் குறிப்பிடப்படுகிறது.
சுமார் 100 வருடங்களுக்கு முன்னாலும் பெண்கள் பற்றாக்குறையில் பெண்களுக்கு மாப்பிள்ளை வீட்டார் தொகைகொடுப்பது இருந்துள்ளது. அந்தத்தொகையை பெண்வீட்டார் வைத்துக்கொள்வதில்லை. அதனைக்கொண்டு பெண்ணுக்கே சீர் வைத்துக் கலியாணம் செய்வார்கள்.
 பெண்கொடுத்துப்பெண் எடுப்பது,மாற்றுதல், என்பது பெரும்பாலும் வழக்கத்தில் இருந்துள்ளது.
 கடந்த 50,60 ஆண்டுகளாகத்தான் மாப்பிள்ளைக்குத் தொகை கொடுப்பதும் பெண்ணுக்குச் சீர்செய்வதும் பெருகியுள்ளது.
இப்பொழுது பெண்கள் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல காலம் மாறும் ஆனால் அருமைப்பாடு (scarcity) காரணமாக.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

அறிவியல் மாற்று கண்டுள்ளது. ஜெனிடிக் குளோனிக் முறையில் பெண் தன்னைப்
போல் ஒரு பெண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆண் கலப்பு இல்லாமல் ஐவிஎஃப்
முறையில் ஆண்/பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
காலம் மாறும்!
நா.கண்ணன்
Reply all
Reply to author
Forward
0 new messages