சாமுத்திரிகா லட்சணம்
..மார்புப்பகுதியில் அதிக முடியிருந்தால் பாலுணர்வு அதிகமாம் .. ஆண்களுக்கு
ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம்
இருக்கும்
என்று சாமுத்திரிகா லட்சணம்
தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து
சாமுத்திரிகா
லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து
கொள்ளுங்களேன்.
செல்வம் பெருகும்
ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ
இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின்
நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம்.
தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக
இருப்பாராம். அதேபோல்
அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும்
செல்வமும் உண்டு. நெற்றியில் பல
ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில்
ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.
உலகை ஆளும் ஆண்
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக
யானைக்கண் போல் இருந்தால் உலகை
ஆள்வான்.
கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய
கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு
சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு
உடையவர்கள் பணம், பதவி, புகழ்
உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ,
நடுப்பகுதி
உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.
அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி,
சக்தி,
கருணை உடையவர்களாக, அறிஞர்களாக,
பெரும்பதவியில்
இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே
பிதுங்கியும் உள்ள வாய்
அதிகமாகப்
பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்.
உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம்
அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம்.
தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின்
செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால்
நீண்ட ஆயுள் உண்டு.
சமமாக இருப்பின்
அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர்
அதிகம் இருந்தால் நினைத்த
காரியம் முடியாது.
நாக்கில் மச்சம்
நீளமான நாக்கு இருப்பின் சிறந்த
பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு
நுனியில் அழியாத கருப்புப்
புள்ளிகள்
இருப்பின் சொன்ன சொல் பலிக்கும்.
நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம்.
கருத்தும்,
வெளுத்தும், உலர்ந்தும்
இருப்பின் தரித்திரமாம்.காது மேல் செவி அகலமானால் முன் கோபம்
இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
அரசாளும் ஆண்
நீளமான,
சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள்
சிறப்பாக வாழ்வர். முழங்கால்
வரை
கை நீண்டிருப்பின் அரசன் ஆவான்.
தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல்
கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம்.
கைகள் ஒன்றுக்
கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர்.
கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின்
செல்வந்தன் ஆவான். மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக
இருப்பின் அரசு பதவி கிட்டும்.
மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட
ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி
இருந்தாலும்,
மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.
பாலுணர்வு அதிகம் உண்டு
கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை
ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை
அதிகம் உண்டு.
விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால்
அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும்
சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.
அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ்
பெற்று
விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று
நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம்.
ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு
அதிகம் இருக்குமாம்.
புகழ் கிடைக்கும்
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க
விருதுகள் பெறுவான். கால்கள்
குட்டையாக இருப்பின் தரித்திரமாம்.
முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள்
பெருகும் கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி
இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள்
சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க
வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம்
இருந்தாலும், நகங்கள்
கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே
விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.. [from my file - நமது கோப்பிலிருந்து ]
அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
..மார்புப்பகுதியில் அதிக முடியிருந்தால் பாலுணர்வு அதிகமாம் .. ஆண்களுக்கு
ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம்
இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது
> அதனால் வழுக்கை விழுந்தால் அது உங்களுக்கு டெஸ்டஸ்டிரோன் அதிகம் சுரப்பதால் என
> பாஸிடிவாக எடுத்து கொள்க.
> --
அப்பா! பொழைச்சேன் :-))
க>
எல்லாம் கொஞ்சம் தலையில முடி இருக்கிற ஆண் + அவம் :-)))
க.>
டெஸ்டோடிரோன் அதிகம் சுரந்தால் அதனால் வழுக்கை விழுந்தால் அது ஒரு லட்சணம் என்று சொல்வது உலகமஹா கண்டுபிடிப்புங்கோ நோபல் பரிசுக்கு முயற்சி பண்ணலாம்
அப்புடியே பெண்களுக்கு வழுக்கை விழுந்தால் அது சாமுத்ரிகா லச்சணத்தில் வருமா என்ற ஐயத்தைத் தெளிவுபடுத்தவும்
ஆகவே முடி வளச்சிக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன்பாரம்பரியமாகவே பலருக்கு மார்பில் முடி இருப்பதில்லைஅவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனமார்பில் நிறைய முடி இருப்பவர்கள் பலருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல்உள்ளது .ஆகவே முடி வளர்ச்சிக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லை

- Erectile dysfunction (impotence: inability to develop or maintain an erection)
- Fatigue (lack of energy)
- Muscle mass and strength (reduced)
- Body fat (increased)
- Back pain
- Osteoporosis development (reduced bone mass/density and increased risk of fracture)
- Heart attack risk (higher incidence of sudden death)
- Cholesterol (high: especially LDL/HDL ratio)
- Refractory period increased (time it takes to have sex again)
- Sperm count (reduced fertility)
- Gynecomastia (development of male breasts)
அத்தைக்கு மீசை முளைப்பது டெஸ்டோட்ரீன் அதிகம் சுரப்பதால் அல்ல
ஆணும் பெண்னும் பூப்பெய்தும் காலை ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகம் டெஸ்டோட்ரீன் சுரக்கும்