சாமுத்திரிகா லட்சணம்

1,544 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jun 29, 2012, 9:58:37 PM6/29/12
to tamil_ulagam, mint...@googlegroups.com

சாமுத்திரிகா லட்சணம்

..மார்புப்பகுதியில் அதிக முடியிருந்தால் பாலுணர்வு அதிகமாம் .. ஆண்களுக்கு

ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம்

இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து

சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து

கொள்ளுங்களேன்.


 செல்வம் பெருகும்

ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின்

நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக

இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும்

செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில்

ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

 

உலகை ஆளும் ஆண்

ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான்.

கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு

உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி

உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.


அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக,

பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய்

அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம்

அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம்.

தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த

காரியம் முடியாது.

 

நாக்கில் மச்சம்

நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப்

புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும்,

வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.காது மேல் செவி அகலமானால் முன் கோபம்

இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

 

அரசாளும் ஆண்

நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை

கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல்

கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக்

கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின்

செல்வந்தன் ஆவான். மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும்.

மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும்,

மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

 

பாலுணர்வு அதிகம் உண்டு

கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு.

விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால்

அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும்

சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.


அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ்

பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம்.

ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு

அதிகம் இருக்குமாம்.

 

புகழ் கிடைக்கும்

கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின்                                                      தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால்                                                   நன்மைகள் பெருகும் கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான்.                                                        பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம்                                                    இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும்                                                       வறுமை வாட்டும்..                                                                                                                                                                                                                                                                                                             [from my file - நமது கோப்பிலிருந்து ]

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/



--

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/


Prakash Sugumaran

unread,
Jun 30, 2012, 11:30:30 AM6/30/12
to mint...@googlegroups.com
அவங்கவங்க போயி கண்ணாடி முன்ன நின்னோ, இல்ல குனிஞ்சி நல்லா பாத்தோ முதல்ல தெரிஞ்சுகிடுங்க.. இப்போ உங்க சொந்த அனுபவத்த வெச்சி சொல்லுங்க.. இன்னுமாபா இதுகள நம்புறீங்க ??

2012/6/30 Krishnan S <krishna...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Subashini Tremmel

unread,
Jul 2, 2012, 4:08:21 PM7/2/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
ப்ரகாஷ்,

இப்படி சிரிக்க வைக்க எப்போது கற்றுக் கொண்டீர்கள்..? எப்பவும் சீரியஸா இருக்கிற ஆளாச்சே நீங்கள்..

சுபா

2012/6/30 Prakash Sugumaran <praka...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Prakash Sugumaran

unread,
Jul 2, 2012, 4:11:17 PM7/2/12
to mint...@googlegroups.com
அப்பப்போ..

2012/7/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

செல்வன்

unread,
Jul 2, 2012, 4:32:03 PM7/2/12
to mint...@googlegroups.com


2012/6/29 Krishnan S <krishna...@gmail.com>

..மார்புப்பகுதியில் அதிக முடியிருந்தால் பாலுணர்வு அதிகமாம் .. ஆண்களுக்கு

ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம்

இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது



அறிவியல் ரீதியாக இது சரியே

காரணம் டெஸ்டஸ்டிரோன் எனும் ஹார்மோன் ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்க கூடியது. பெண்மையை அளிக்கும் ஹார்மோனின் பெயர் எஸ்ட்ரோஜன். டெஸ்டஸ்டிரோன் அதிகமாக சுரக்கும் ஆண்களுக்கு மார்பிலும், உடலிலும் நிறைய முடி இருக்கும், ஆனால் தலைமுடி வழுக்கையாக இருக்கும். ஆஜானுபாகுவாக கட்டுடலுடன் காணப்படுவார்கள். நடிகர் சத்தியராஜ் இந்த வர்ணனைக்கு அழகாக பொருந்தி வருகிறார் அல்லவா?

அதனால் வழுக்கை விழுந்தால் அது உங்களுக்கு டெஸ்டஸ்டிரோன் அதிகம் சுரப்பதால் என பாஸிடிவாக எடுத்து கொள்க.
--
செல்வன்


N. Kannan

unread,
Jul 2, 2012, 5:09:20 PM7/2/12
to mint...@googlegroups.com
2012/7/2 செல்வன் <hol...@gmail.com>:

> அதனால் வழுக்கை விழுந்தால் அது உங்களுக்கு டெஸ்டஸ்டிரோன் அதிகம் சுரப்பதால் என
> பாஸிடிவாக எடுத்து கொள்க.
> --

அப்பா! பொழைச்சேன் :-))

க>

Nagarajan Vadivel

unread,
Jul 3, 2012, 12:17:09 AM7/3/12
to mint...@googlegroups.com
ஆஹா என்னமா ரீல் விடறாய்ங்க
மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைக் கேள்விப்பட்டிருக்கேன்
இங்கே வழுக்கைத் தலைக்கும் சாமுத்ரிகா லட்சணத்துக்கும் முடிச்சுப் போடறாய்ங்க
டெஸ்டோடிரோன் அதிகம் சுரந்தால் அதனால் வழுக்கை விழுந்தால் அது ஒரு லட்சணம் என்று சொல்வது உலகமஹா கண்டுபிடிப்புங்கோ நோபல் பரிசுக்கு முயற்சி பண்ணலாம்
அப்புடியே பெண்களுக்கு வழுக்கை விழுந்தால் அது சாமுத்ரிகா லச்சணத்தில் வருமா என்ற ஐயத்தைத் தெளிவுபடுத்தவும்
நாகராசன்


2012/7/3 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 3, 2012, 1:44:51 AM7/3/12
to mint...@googlegroups.com
இருதய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்னர்  எனக்கு ரோம வளர்த்தி கிடையாது,  அவ்வளவு ஏன்  மீசை வளர்க்க ஆசை கொண்டு பல முறை பலருடைய  அறிவுறை கேட்டு    ரேசரால் எதிர் ஷேவ் எனப்படும்  உத்தியைக் கையாண்டு  அப்போதும் சரியாக மீசை  வளராத நிலையில் வெகு நாட்கள் வளர்த்து ஓரளவு மீசை வளர்த்தேன்.

 

அதையும்   எங்கள்  ஆசாரியனைத் தரிசிக்கச் சென்ற போது மழித்துவிட்டு  மழுங்க
 எங்கள் குல ஆசாரப்படி திருநாமம் தரித்து  ,பஞ்சகச்ச வேட்டி உடுத்துக்கொண்டு  ஆசாரியனுக்கு தெண்டம் சமர்ப்பித்து விட்டு வந்தேன்.
 
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு சுமார்  ஒரு மாதத்துக்கு பிறகு
என் உடலில் , மார்பில்,கைகளில் ,முகத்தில் முடி நன்றாக வளரத் தொடங்கியது.
 
இப்போது  மீசை,தாடி,  ஃப்ரென்ச்பிஎர்ட் , எல்லாம் வைத்துக் கொள்கிறேன்,ஒவ்வொரு முறை ஒவ்வொன்றாக .

 

ஆகவே  ரத்த ஓட்டம் உடலில் சீராக இருப்பவர்க்கு  ரோமத்தின் வேர்கள் வலுப்பெருகிறது.  ரோமம் வளர்கிறது,
 
நம் உடலில் , நகம் , ரோமம், போன்ற எல்லாமே  சீரான ரத்த ஒட்டம் இருந்தால் சீராகவே வளரும்  என்பதை அனுபவ பூர்வமாக கண்டுணர்ந்தேன்.
 
திரு செல்வன் சொல்வது போல   டெஸ்டஸ்டிரோன் எனும் ஹார்மோன் வளர்ச்சிக்கும்   சீரான ரத்த ஓட்டம் தேவை
 
பின் குறிப்பு  :  பல பெண்டிரைப் பார்த்திருக்கிறேன்  அவர்களுக்கு  முகத்தில் மீசை  தாடியும் வளர்வதுண்டு, அதனால்தான்   மஞ்சள்பூசிக் குளிக்கும் வழக்கம் ஏற்பட்டது
 
மஞ்சள் முடி வளர்வதை தடுக்கும்,
 
 
பெண்மையை அளிக்கும் ஹார்மோனின் பெயர் எஸ்ட்ரோஜன்.  இந்த எஸ்ட்ரோஜன் குறைவாகவும் ,   டெஸ்டஸ்டிரோன் அதிகமாகவும்   சுரந்தால்
 
 
ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான் .
 
ஆண்மைக்கும் பெண்மைக்கும்   மனக் கட்டுப்பாடே பெரிய வரப்ரசாதம்
 
ஆகவே முடி வளச்சிக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன்
 
பாரம்பரியமாகவே பலருக்கு  மார்பில் முடி இருப்பதில்லை
அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன
 
மார்பில் நிறைய முடி இருப்பவர்கள் பலருக்கும்  குழந்தை பாக்கியம்  இல்லாமல்
உள்ளது .
 
ஆகவே முடி வளர்ச்சிக்கும்  ஆண்மைக்கும் தொடர்பில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
2012/7/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Kannan

unread,
Jul 3, 2012, 2:01:59 PM7/3/12
to mint...@googlegroups.com
2012/7/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> ஆஹா என்னமா ரீல் விடறாய்ங்க
> மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைக் கேள்விப்பட்டிருக்கேன்
> இங்கே வழுக்கைத் தலைக்கும் சாமுத்ரிகா லட்சணத்துக்கும் முடிச்சுப் போடறாய்ங்க

எல்லாம் கொஞ்சம் தலையில முடி இருக்கிற ஆண் + அவம் :-)))

க.>

செல்வன்

unread,
Jul 3, 2012, 2:04:59 PM7/3/12
to mint...@googlegroups.com


2012/7/2 N. Kannan <navan...@gmail.com>

அப்பா! பொழைச்சேன் :-))

க>


:-))))))

செல்வன்

unread,
Jul 3, 2012, 2:13:24 PM7/3/12
to mint...@googlegroups.com


2012/7/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

டெஸ்டோடிரோன் அதிகம் சுரந்தால் அதனால் வழுக்கை விழுந்தால் அது ஒரு லட்சணம் என்று சொல்வது உலகமஹா கண்டுபிடிப்புங்கோ நோபல் பரிசுக்கு முயற்சி பண்ணலாம்
அப்புடியே பெண்களுக்கு வழுக்கை விழுந்தால் அது சாமுத்ரிகா லச்சணத்தில் வருமா என்ற ஐயத்தைத் தெளிவுபடுத்தவும்


டெஸ்டெஸ்டிரோன் சுரந்தால் உடலெங்கும் முடி வரும், தலை வழுக்கையாகும் என்பது என் கண்டுபிடிப்பாக இருந்தால் கட்டாயம் நோபல் பரிசுக்கு முயற்சி பண்ணியிருப்பேன். ஆனால் அதை நான் கண்டுபிடிக்கலையே?:-) 


In men, testosterone plays a key role in the development of male reproductive tissues such as the testis and prostate as well as promoting secondary sexual characteristics such as increased muscle,bone mass, and the growth of body hair



அனைத்து வழுக்கைக்கும் காரணம் டெஸ்டெச்ட்ரோன் அல்ல. வழுக்கைக்கு அது ஒரு காரணம். சோ ராம்சாமிக்கு வேறு ஏதோ அலர்ஜியால் உடலெங்கும் முடி கொட்டி விட்டது. புருவத்தை ஐப்ரோ பென்சிலால் வரைந்து கொண்டுள்ளார். அதுக்கு காரணம் டெஸ்டஸ்ட்ரோன் அல்ல.

டெஸ்டெஸ்ட்ரோன் அதிகம் சுரந்தால்

1) கட்டுடல் வரும்

2) உடலெங்கும் முடி அசுரவேகத்தில் முளைக்கும்

3) வழுக்கை விழும்

4) முரட்டுதனம் அதிகமாக இருக்கும்.

5) பாலியல் உணர்வு, பெர்பார்மென்ஸ் எல்லாம் கலக்கலாக இருக்கும் :-)

செல்வன்

unread,
Jul 3, 2012, 2:22:12 PM7/3/12
to mint...@googlegroups.com


2012/7/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஆகவே முடி வளச்சிக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன்
 
பாரம்பரியமாகவே பலருக்கு  மார்பில் முடி இருப்பதில்லை
அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன
 
மார்பில் நிறைய முடி இருப்பவர்கள் பலருக்கும்  குழந்தை பாக்கியம்  இல்லாமல்
உள்ளது .
 
ஆகவே முடி வளர்ச்சிக்கும்  ஆண்மைக்கும் தொடர்பில்லை


குழந்தை பெற ஆண்/பெண் இருவருக்கும் உடலியல் ரீதியாக தகுதி வேண்டும்.ஆணுக்கு டெஸ்டெஸ்ட்ரோன் குறைவாக இருந்தால் ஆண்மைகுறைவும், பிள்ளை பெறுவதில் சிக்கலும் உருவாகும். ஆணுக்கு மட்டும் டெஸ்டெஸ்ட்ரோன் இருந்து பெண்ணுக்கு எதாவது பிரச்சனை இருந்தால் அப்புறம் குழந்தை பிறக்காது:-)

மத்தபடி ஒருவரை பார்த்து இவருக்கு டெஸ்டஸ்ட்ரோன் அதிகம், இவருக்கு குறைவு என கூற முடியாது. ஆணாக பிறந்த எல்லோருக்கும் டெஸ்டஸ்ட்ரோன் சுரக்கும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது சுரப்பது குறையும். உடல்பயிற்சி செய்தால் அது சுரப்பது அதிகரிக்கும். இப்படி ஒரே நபருக்கு கூட அவர் பணி, உடல்பயிர்சி போன்ரவற்றை பொறுத்து டெஸ்டஸ்ட்ரோன் சுரத்தல் நாளுக்கு நாள் மாறுபடும். ஆனால் பொதுவாக அதிகம் டெஸ்டட்ஸ்ரோன் சுரந்தால் அவருக்கு கட்டுமஸ்தான உடலும், உடலெங்கும் முடி வளர்ச்சியும், வழுக்கையும் ஏற்படும்.

Physical Signs/Symptoms of Low Testosterone

Low Testosterone Symptoms in Men
  • Erectile dysfunction (impotence: inability to develop or maintain an erection)

  • - Fatigue (lack of energy)

  • Muscle mass and strength (reduced)

  • - Body fat (increased)

  • Back pain

  • Osteoporosis development (reduced bone mass/density and increased risk of fracture)

  • Heart attack risk (higher incidence of sudden death)

  • - Cholesterol (high: especially LDL/HDL ratio)

  • - Refractory period increased (time it takes to have sex again)

  • - Sperm count (reduced fertility)

  • - Gynecomastia (development of male breasts)

Nagarajan Vadivel

unread,
Jul 3, 2012, 2:37:16 PM7/3/12
to mint...@googlegroups.com
நீங்கள் கூறும் மனித இயல்புகளுக்கு மற்ற ஹார்மோன்கள் அதிகம் சுரப்பது காரணமாக இருக்கலாம்
அத்தைக்கு மீசை முளைப்பது டெஸ்டோட்ரீன் அதிகம் சுரப்பதால் அல்ல
ஆணும் பெண்னும் பூப்பெய்தும் காலை ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகம் டெஸ்டோட்ரீன் சுரக்கும்
உடலில் மட்டுமன்றி உளவியல் அடிப்படையிலும் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையில் இப்பருவத்தில் பெரும் மாற்றம் நிகழ்வதாக உளவியலார் கூறுவர்
ஆணுக்குப் போர்க்குணம் இந்தக் காலகட்டத்தில் தோன்றூவதாக உளவியலார் கூறுகின்றனர்
அகம் புறம் என்று நுண்ணிய உணர்வுகளுக்கு இலக்கிய வடிவம் கொடுத்த தமிழப் புலவர்கள் தமிழ்ப் பெண்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்றூ பாடிவைத்தார்கள்., புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப் பெண், வீரத்தாயர் ராணி மங்கம்மா, ராணி மீனாட்சி, வேலு நாச்சியார் போன்றவர்கள் டெஸ்டோட்ரீன் அதிகம் சுரந்த காரணத்தால் போர்க்குணம் கொண்டார்கள் என்று நம்பலாம்
டெஸ்டொட்ரீன் முடியரசிகளை உருவாக்கியிருக்கிறது
ஆண்களுக்கு மார்பிலும் உடலிலும் முடியை வளர்த்தது என்பது வெறும் அக்கப்போர்
நாகராசன்

2012/7/3 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jul 3, 2012, 4:13:03 PM7/3/12
to mint...@googlegroups.com


2012/7/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அத்தைக்கு மீசை முளைப்பது டெஸ்டோட்ரீன் அதிகம் சுரப்பதால் அல்ல

டெஸ்டஸ்ட்ரோன் அதிகம் சுரப்பதால் தான் சில பெண்களுக்கு முகத்தில் தாடி,மீசை முளைக்கிறது. இது ஹார்மோன் கோளாறு

http://www.ehow.com/how-does_4568356_do-women-grow-facial-hair.html

Excess facial hair in women is defined by the presence of coarse, dark hair on the lip, chin, chest and sideburn area. It is the result of higher levels of the hormone dihydrotestosterone, a precursor to testosterone.



 
ஆணும் பெண்னும் பூப்பெய்தும் காலை ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகம் டெஸ்டோட்ரீன் சுரக்கும்


டெஸ்டஸ்ட்ரோன் சுரந்தால் தான் ஆண் பூப்பே எய்துவான்.

புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப் பெண், வீரத்தாயர் ராணி மங்கம்மா, ராணி மீனாட்சி, வேலு நாச்சியார் போன்றவர்கள் டெஸ்டோட்ரீன் அதிகம் சுரந்த காரணத்தால் போர்க்குணம் கொண்டார்கள் என்று நம்பலாம்

வீரம் இரு பாலுக்கும் பொது. மத்தபடி நான் முன்பு சொன்னது போல யாருக்கு டெஸ்டஸ்ட்ரோன் அதிகம் சுரக்கிறது, யாருக்கு இல்லை என்பதை ஆளை பார்த்து கண்டுபிடிக்க முடியாது.
Reply all
Reply to author
Forward
0 new messages