சுருளி - Indian benzoin tree (Hardwickia Pinnata) - மரப்பெயர் ஆய்வு

122 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 21, 2017, 10:14:03 AM11/21/17
to Santhavasantham
சுருளி - Indian benzoin tree (Hardwickia Pinnata) - மரப்பெயர் ஆய்வு:
--------------------------------------------------------------------------------------------------------------------

சுருளுதல் - 

சுருள்¹(ளு)-தல் curuḷ-
, 2 v. intr. [K. suruḷ, M. curuḷ.] 1. To become coiled; to roll; to curl, as hair; சுருளாதல். நீண்டு குழன்று . . . கடைசுருண்டு (கம்பரா. உருக்காட்டு. 57). 2. To shrivel, shrink, as leaf; சுருங்குதல். 3. To droop, as from heat, hunger; சோர்தல். 4. To be reduced to severe straits; துன்பத்திற்குள்ளா தல். Loc.

சுருண்டுபோ-தல் curuṇṭu-pō-
, v. intr. < சுருள்- +. 1. To droop, as under scorching sun; to be weakened, as by disease; to wither, as crop from drought; வாடியொடுங்குதல். 2. To die; இறத்தல்.

குமை¹-தல் kumai-
, 4 v. intr. 1. To be over-boiled; to be boiled soft to a mash, as greens; குழையவேகுதல். சோறுகுமையச் சமைத்தாள். 2. To be in a state of confusion; to be mixed up; குழம்புதல். எல்லாம் ஒன்றாய்க் குமைந்துகிடக்கின் றன. (W.) 3. To be hot, sultry; வெப்பத்தாற் புழுங்குதல். 4. To close together, as the eyelids from heat in the system; கண்முதலியன இறுகிக் கொள்ளுதல். (W.) 5. To faint, droop, as one in a swoon; சோர்தல். 6. To be destroyed; அழிதல். (W.) 7. To be distressed, worried; வருந்துதல். கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா. 259).

குமைஞ்சான், சுராலை என்ற சொற்கள் முறையே குமை-தல், சுருளு-தல் என்ற வினைச்சொற்கள் அடியாகப் பிறப்பவை. சாம்பிராணியின் பெயர்கள்.
சுருளி/சுள்ளி என்ற மரத்தின் பழந்தமிழ்ப் பெயரும் அதன் விளைபொருள் ஆகிய பாலில் இருந்து பெறும் சாம்பிராணி தூபப்பொருளால் அமைந்தது.
சுராலைக்கட்டி சுருளுதலை/குமைதலைக் காட்டும் காணொளி:

சுருளி/சுள்ளி மரம் தென் சையமலையின் மரம். சுருளி என்னும் பெயர் சினையாகுபெயர். சாம்பிராணி (=சுராலை) விளைபொருளால் பெறும் பெயர்.
இந்த சுருளி/சுள்ளி மரத்திற்கு மடையன்சாம்பிராணி மரம் என்ற பெயரும் உண்டு. 

2017-11-20 16:07 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

CORRIDORS OF TIME
Dr Suvarna Nalapat
page: 352

[...]
Wherever the kings of vanchi had their residence due to political reasons certain important rites like crown and coronation, taking the divine sword (udavaal) and climbing the nilapaduthara was always done at Thirunaava and old Vanchi in Vannery till the kochi kings were thrown out of vannery to kochiinThrikkalkara. About the aadikaruvoor aadimahodayapuram Nakkeranar says that itwas in the sands of Porunai (ponnani puzha)

Kadambu kattiyaanai nedumtherkothai
Thirumaaviyanakar karuvur moonturai-
Thenneeruyarkaraikuvalayathannan
Porunai manalinum palawe.

Ship, measurements, elephant,big chariots, kotha (king/beautiful women) were the wealths of the divine city of karuvur and in front of that city flow the cold waters of porunai to the port through the sandbeds.

The second thruvanchikalam came intobeing only during the times of 50th king perumal.(802-818AD) In PurananuruThiruthaamanar. calls him the Vaymozhivanchan.In Akananur Maamoolanar says:
Valampadu murachir cheralathan 
Munneerottikkadamberinthimayathu 
Munnor marula vanankuvir porithu 
Nannakar maanthai muraithonnar 
Panithirai thantha paduchaannelkkalam
Ponchey paavai vayiramodaamba
[...]

>  ..... தேமொழி 

நூறாண்டுக்கு முன்னரே ராகவையங்கார்கள் இவையெல்லாம் சான்றில்லாதவை என நிறுவினார்கள். சங்க இலக்கியம் பதிப்பித்தவர்களில் முக்கியமானவர் ரா. ராகவையங்கார். அவரால் தான் அகநானூறு அச்சில் வெளிப்போந்தது. பிங்கலந்தை பதிப்பாசிரியர் பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை போன்றோரிடம் ஏடுகள் பெற்று ராகவையங்கார் ஸ்வாமி பதிப்பித்தார். அகநானூற்றில் உள்ள பாடல்கள் புரிதற்குப் பெரும் சவாலாய் இருந்த காலம். தன் நுண்ணிய அறிவால் கண்ணகி தெய்வமான இடம் சுருளிமலைப்பகுதி என எழுதினார். பொருனை, ஆன்பொருனை கேரளாவில் இல்லாததும் காட்டி 100+ ஆண்டுகள் ஆகிவிட்டன. திருக்குறள் சமண சமயத்தவர் எழுதினது என்று அ. சக்கிரவர்த்தி நயினாரும், திரு.வி.க.வும், மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையும், சுவலபில்லும், கா. ம. வேங்கடராமையாவும், ஐராவதமும், .... என்று காட்டிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் சிலர் சைவ சித்தாந்தம் குறள் என்றும், (மேலைக் கடற்கரைக்கே வராத) செயின்ட் தாமஸ் சொல்லி எழுதியது குறள் என்றும் மதவாதிகள் எழுதுவதும் பார்க்கிறோமே. அதுபோலத் தான் பொருனை கேரளா ஆறுகள் என்பது.

தமிழர்கள் லெமூரியாக்கண்டம் (குமரிக்கண்டம்) போன்ற எழுத்துக்களை இணையத்தில் பெரிதாகி வருவதைப் பார்க்கலாம். இன்னும் சில புதுப்புராணங்கள் உருவாகிவருகின்றன. அவற்றில் சில நான்காண்டு+ முன்னர் குறிப்பிட்டேன்: http://nganesan.blogspot.com/2013/09/google-aandavar-j-fletcher.html  ஆறாம்திணையில் புராண வளர்ச்சி.  மலையாளிகளுக்கு கொடுங்கோளூர் தான் எல்லாம். 20-ஆம் நூற்றாண்டில் கண்ணகிக்கு செங்குட்டுவன் கட்டிய கோயில் கொடுங்கோளூர் பகவதி கோயில் என்றனர். ஆராய்ச்சியால் அது சரியில்லை. சுருளிமலையில் உள்ள ராஜராஜன் எடுப்பித்த இடம் எனக் காட்டினார்கள் ராகவையங்கார்கள் என்னும் தமிழின் பேராசிரியர்கள். அதனைப் பின்னர் விரிவாகப் போய்ப் பார்த்து எழுதினார் சி. கோவிந்தராசனார். புலவர் கோவை. இளஞ்சேரனார் (மரைக்காடு என்று மறைக்காட்டை விளக்கியவர்களில் ஒருவர்) மலையாளநாடடார் சொல்லும் கொடுங்கோளூர் கண்ணகி என்பதைப் பொய்யாக்கிவிட்டது சுருளிமலைக் கண்ணகி கோட்டம் என எழுதினார். அவரது எழுத்தைப் பின்னர் தருகிறேன். மூன்று பழைய கண்ணகி சிலைகள் பற்றி எழுதவேண்டும். மங்கலாதேவி கண்ணகியின் புராதன விக்கிரகங்கள் என்ற இழையில் சொல்லலாம். பலரும் கண்ணகியின் பழைய 3 வடிவங்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். அந்தக் கட்டுரைகளின் அச்சில் தெளிவில்லை. அவற்றின் இன்றைய ஒளிப்படங்களும், அச் சிறப்ங்களை வைத்து பத்மவாசன், மணியன்செல்வன், மாருதி போன்றோரைக்கொண்டு ஓவியம் எழுதலாம்.

சொர்ணா நளபாடு பொன்வானி (பொன்னானி) எனும் பாரதப்புழை பொருனை என்கிறார். ராமன் நம்பூதிரியோ சூர்ணி/சுள்ளிப் பெரியாறு பொருனை என்கிறார். இதற்கெல்லாம் சான்றுகள் எங்காவது உள்ளனவா என அறிய ஆவல். தமிழ்ச் சங்கம், மலையாளம், கல்வெட்டுகள் ... ஏதாகிலும் இருந்தால் காட்டினால் மகிழ்ச்சி. குமரிக்கண்டம், சிலப்பதிகாரம் கி.மு. நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றெல்லாம் தமிழறிஞர்கள் இன்று எழுதுவதில்லை. அதே போலத்தான் கொடுங்கோளூர் முசிறிப் பட்டினத்தைச் சங்க கால வஞ்சி, சேரர் தலைநகர் என்பதும். மலையாளிகளுக்கு பொருனை என்று தமிழ்ச் சங்க இலக்கியம் சுள்ளிப் பெரியாற்றைக் கூறுவதாகக் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டேன், சங்க கால நகரம் மேலைக்கடற்கரை முசிறி. போனால் போகுதுன்னு இரண்டாம் பட்சமாக கரூரை வஞ்சி என்று இரண்டாவதாக ஏற்கலாம் என்னும் ஆராய்ச்சிகள், அஸ்திவாரம் அற்றவை. மணலில் கட்டும் மாளிகைகள். சங்க இலக்கியத்தை ஊன்றிப்படித்தாலோ, கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்தாலோ மேலைக் கடற்கரையில் வஞ்சி காணோம். அப்பர் பெருமான், சுந்தரர் எல்லாம் அஞ்சைக்களத்தைப் பாடியுள்ளனர். அஞ்ஞைக்களம் என்பர் மலையாளிகள். ஒரு சில இன்ச் உயரமே கொண்ட அஞ்சைக்களத்தப்பர் பழமையானவர். இதனை ராஜராஜசோழன் ஓவியம் ஆக்கியுள்ளான் பெருவுடையார் கோயிலில். இப்போது மலையாளிகள் வஞ்சிக்குளம் என்கிறார்கள். அஞ்சைக்களத்து அப்பனைப் பார்க்க, வஞ்சி என்னும் சிறுபடகில் போகவேண்டும். அதனால் திருவஞ்சைக்களம் வஞ்சிக்குளம் ஆகியுள்ளது அண்மைக்காலத்தில். பூர்ணா, பூர்ணவாகினி என்பது பாரதப்புழையைத்தான் பழைய நூல்களில். அதன்படி பார்த்தால் காலடி பொன்னானி தாலூக்கா, அரசியல் காரணங்களுக்காக, சிக்கலைத் தவிர்க்க, சிருங்கேரி சுவாமிகள் அண்மைக்காலத்தில் சுள்ளி/சூர்ணி ஆற்றங்கரைக் காலடிக்கு மாற்றிப் பெரிய தீப ஸ்தம்பமும், கோயிலும் எழுப்பினார்கள்.

சுராலை எனத் தமிழ் இலக்கியத்தில் சாம்பிராணியைக் குறிப்பிடுவர். சுருளி/சுள்ளி மரம் Indian benzoin tree (= Hardwickia pinnata). குடகில் இருந்து குமரி வரை சையமலையிம் விசேஷமான மரங்களில் ஒன்று. உலகில் வேறெங்கும் இல்லாதது. சுருளி(சுள்ளி) is *endemic* to Southern Ghats. இதனைப் பழந்தமிழர் 3000, 4000 ஆண்டு முன்னர் சுள்ளிப் பெரியாறு எனப் பெயர் கொடுத்தது அருமை. சுருளி என்னும் மரப்பெயர் சுராலை என்று சாம்பிராணிக்கு பெயர் அளிப்பதுங் காண்க. சாம்பிராணி என்பது இந்தோனேசிய மலாய் மொழி. அங்கே உள்ள ஒரு பிரதேசம். ஆனால், தூய தமிழ்ப் பெயர் சுராலை என்பது. மறைமலை அடிகள் திருமகன் மறை. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை: சங்ககால வஞ்சி மாநகரின் அருகே உள்ள ஈரோட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி:
அவர்கள் வீட்டிலே, நான் போவதற்கு முன்னாலேயே, அவர்கள் குடும்பத்திலே, அவர் இறை மறுப்புக் கொள்கையுடையவராகிவிட்ட காரணத்தால், அங்குள்ள பூசை அறையைப் பூட்டி வைத்திருந்தார்கள். ஆனால் நான் போன அன்று, அந்தப் பூசை அறைக் கதவு திறக்கப் பெற்றிருந்தது. அது மட்டுமின்றி அறை முழுவதும் கழுவித் தூய்மை செய்து, சுராலைக்குச்சி (ஊதுவத்தி) கற்றையாகப் புகைய வைத்து, விளக்கும் ஏற்றி வைக்கப் பெற்றிருந்தது. அத்துடன் ஒரு தட்டில் மலர்கள், கற்பூரம், சுராலை (சாம்பிராணி) எல்லாம் வைக்கப் பெற்றிருந்தன. இது பற்றி, ‘என்ன’ என்று அங்கிருந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், நீங்கள் இங்கிருக்கும் வரை, உங்கள் வழக்கப்படியே பூசை - முதலியவற்றையெல்லாம் செய்து கொள்ளுங்கள்; இங்கு இருப்பதனால் உங்கள் பூசை பழக்க வழக்கங்களுக்குக் கெல்லாம் முட்டுப்பாடு கூடாது’ என்று சொன்னார்கள்; நான் மிகவும் வியப்புக் கொண்டேன்; மகிழ்ச்சியும் அடைந்தேன்.”
சுருளிமலை போன்றவற்றிற்குப் பெயர்தரும் சுருளிமரத்தின் விளைபொருள் ஆகிய சுராலைக்கட்டி சுருண்டு நெருப்பில் குமைவதால் ஏற்படும் பெயரா? ஆண்குமைஞ்சான் என யா மரங்களின் dammar resinக்கும், பெண்குமைஞ்சான் என்று சுருளிமரத்தின் benozoin resin-கும் பழைய பெயர்கள். குங்கிலியம் = dammar resin, சுராலை = சாம்பிராணி (benzoin resin).

இன்னொரு செய்தி:
கிழக்குக் கடற்கரையில் பாண்டியர் துறைமுகம் தொண்டி பற்றி விரிவாக ஆய்வுக்கட்டுரை சங்கப்பாடல், சிலம்பில் இருந்து எழுதியவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
அரிய கட்டுரை அது.
யாவகம் (ஜாவா) தீவுகளில் இருந்து தொண்டி (பாண்டிநாட்டுக்கு) துறைமுக வாணிகம்’

"இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக் கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில்
இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப் படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம்.
[...]
வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை."


இளங்கோ அடிகள் குறிப்பிடும் கருப்பூரம் = https://en.wikipedia.org/wiki/Camphor
இதனை தொண்டி துறைமுகத்துக்கு பாண்டியர் இறக்குமதி செய்தனர்.

இதில் குங்குமப்பூ (Saffron) யாவகம், சுமத்ராவில் இருந்து வந்ததாய் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார் அது பிழை. குங்குமப்பூ ஆப்கானிஸ்தான், ஈரான், காஷ்மீரில் விளைவது. யாவகத்தில் இல்லாதது.

இளங்கோ அடிகள் கீழைத்துறைமுகங்களுக்கு (கொற்கை, மருங்கூர் பட்டினம், தொண்டி, நாகை, பூம்புகார்,  ...)
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்” வந்தன என்று பாடியுள்ளார்.
வாசம் என்பது மணப்பொருள். கந்த தூபம். கந்தரசு எனப்படும் குங்கிலியம், சுராலை.
யா (= shorea robusta. = சாலம், ஆ. ஆச்சா) தரும் குங்கிலியம் தமிழர் தேடிச் சென்ற பொருள்.
அதனை இறக்குமதி செய்ததால்தான் யாவகத் தீவு என பெயரிட்டனர்.
அதே போல, சுராலை (சாம்பிராணி) தரும் மரங்களும் உண்டு. இந்த மரப்பால் பிசின்கள்.
பிற்காலத்தில் ரப்பர் மரங்களின் பாலும் கிடைத்தது ஆங்கே.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இளங்கோ அடிகள் குறிப்பிடும் வாசம் = கந்த தூபம் ஏற்றப்
பயன்படும் குங்கிலியம் (யா இன மரங்கள் அளிப்பது),
சுராலை (சுருளி இன மரங்கள் அளிப்பது). 

NG
இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு:

 

N. Ganesan

unread,
Nov 24, 2017, 7:57:26 AM11/24/17
to Santhavasantham
தூபம் (சாம்பிராணி) புகைப்பொருளுக்குப் பயனாகும் சுருளி/சுள்ளி (Hardwickia Pinnata) மரம் பற்றி விரிவாகப் பார்த்தோம்.  இந்தச் சுருளி/சுள்ளியை சாம்பிராணி மரம் என்பர்.  இந்தச் சுள்ளிமரம் குடகில் இருந்து குமரி வரை உள்ள (endemic) பெருமரம். இதனை ஆச்சா மரவகை என்றார் நச்சினார்க்கினியர். முதலாம் ராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் “சுள்ளி சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்” எனப் புகழப்படுவது. இப் பெரிய சுள்ளிமரம் சாலமரம் (சங்க இலக்கிய யா மரம், shorea robusta = யா/ஆ/ஆச்சா (பிங்கலந்தை) ) போலப் நீண்டு வளர்வது. எனவே, கோட்டை மதில்கள் அமைக்கப்பயன்பட்டுள்ளதைச் சோழ மகாராசன் மெய்க்கீர்த்தி காட்டுகிறது.  சுள்ளியம் பேரியாறு (சூர்ணி) என்ற கேரளாவின் பெரிய ஆற்றின் பெயர் தரும் இது. சுருளிமலைப் பகுதியில் முல்லைப்பெரியாறு எனத் தோன்றி, கொடுங்கோளூர் அருகே கடலில் கலக்கும் பெருநதிக்கு இப் பெருமரம் பெயர் தருகிறது.  சுள்ளியம்பேரியாறு/சுள்ளியாறு இன்று பெரியாறு எனக் கேரளாவில் பெயர். 

பழைய தமிழ் இலக்கியங்களிலே, நாகம் என்ற மரம்பற்றிச் செய்திகள் உண்டு.:
நாக நறுமணம் - பெருங்கதை
நல்லிணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரிபாடல்
நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்து - சிறுபாண்
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம் - பரிபாடல்

அதாவது, பாம்புப் படத்தில் உள்ள பொரிகள் போல, நாக மரத்தின் பூக்கள் இருப்பவை. வடமொழியில் இம்மரப் பெயர் ‘நாககேசரம்’. தமிழில் நாககேசரம் > நாகேசுரம் என்று வழங்குகிறது.

நாகம் (நாககேசரம்) - தமிழ்ச் சங்க இலக்கியத்தில்
Sri Lankan ironwood, Indian rose chestnut, or cobra's saffron
”The flowers are 4-7.5 cm diameter, with four white petals and a centre of numerous yellow stamens. The flowers have many uses - they are used to make an incense and also used to stuff pillows in some countries.”
“Also known as Ceylon Ironwood, Penaga Lilin and many other names, this is a medium to large evergreen tree that can reach up to 36 meters tall and originated from Sri Lanka. The young leaves are usually red in colour, turning greyish-green when mature.It has smooth barks but sometimes scaly (as in the picture below), exuding aromatic white resin when bruised. The thing about its flower is that it only blooms during dry season and lasts only for a day. The flower may blossoms as early as 3 a.m. and closes just before sunset.  After some times, it bears round fruit that is dehiscent (the type of fruit that split opens when ripe).”
”While the incense sticks made from the flowers of this plant are popular worldwide for their intense fragrance”

சங்கத் தமிழில் நாகம் எனப்படும் இம்மரம் (Cobra's Saffron)
பூக்கள் நறுமணம் மிக்கவை. ஊதுவத்தி தயாரிப்பில் பயன்படுவதுண்டு.
எனவே, சுருளி என இதனை அழைப்பதும் உண்டு. தூப நறுமணப் பொருளால்
சுருளி/சுள்ளி என்று முதன்மைப் பெயர் சங்கத்தில் பெறுவது Hardwickia Pinnata மரம்தான்.

குமைஞ்சான், சுராலை என்ற சொற்கள் முறையே குமை-தல், சுருளு-தல் என்ற வினைச்சொற்கள் அடியாகப் பிறப்பவை. சாம்பிராணியின் பெயர்கள்.
சுருளி/சுள்ளி என்ற மரத்தின் பழந்தமிழ்ப் பெயரும் அதன் விளைபொருள் ஆகிய பாலில் இருந்து பெறும் சாம்பிராணி தூபப்பொருளால் அமைந்தது.
சுராலைக்கட்டி சுருளுதலை/குமைதலைக் காட்டும் காணொளி:

சுருளி/சுள்ளி மரம் தென் சையமலையின் மரம். சுருளி என்னும் பெயர் சினையாகுபெயர். சாம்பிராணி (=சுராலை) விளைபொருளால் பெறும் பெயர். இந்த சுருளி/சுள்ளி மரத்திற்கு மடையன்சாம்பிராணி மரம் என்ற பெயரும் உண்டு.

தூபப்புகைக்கான பெயரால் மரங்களுக்குச் சினையாகுபெயராய்த் பழந்தமிழர் கொடுத்த பெயர் சுருளி/சுள்ளி. இது அரிய செயல். இரு வெவ்வேறு தாவரக் குடும்ப மரங்களைக் கொண்டு காட்டியுள்ளேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 21, 2017, 8:57:54 AM12/21/17
to Santhavasantham, மின்தமிழ், vallamai, panbudan
சாம்பிராணி, ஊதுவத்தி செய்பொருள்கள் தரும் மரப் பெயர்கள் சுருளி. (1) Indian benzoin tree (Hardwickia Pinnata)  (2) Mesua_ferrea
குமைஞ்சான், சுராலை என்ற சொற்கள் முறையே குமை-தல், சுருளு-தல் என்ற வினைச்சொற்கள் அடியாகப் பிறப்பவை. சாம்பிராணியின் பெயர்கள்.
சுருளி/சுள்ளி என்ற மரத்தின் பழந்தமிழ்ப் பெயரும் அதன் விளைபொருள் ஆகிய பாலில் இருந்து பெறும் சாம்பிராணி தூபப்பொருளால் அமைந்தது.
சுராலைக்கட்டி சுருளுதலை/குமைதலைக் காட்டும் காணொளி:

சுருளி/சுள்ளி மரம் தென் சையமலையின் மரம். சுருளி என்னும் பெயர் சினையாகுபெயர். சாம்பிராணி (=சுராலை) விளைபொருளால் பெறும் பெயர். இந்த சுருளி/சுள்ளி மரத்திற்கு மடையன்சாம்பிராணி மரம் என்ற பெயரும் உண்டு.

தூபப்புகைக்கான பெயரால் மரங்களுக்குச் சினையாகுபெயராய்த் பழந்தமிழர் கொடுத்த பெயர் சுருளி/சுள்ளி. இது அரிய செயல். இரு வெவ்வேறு தாவரக் குடும்ப மரங்களைக் கொண்டு காட்டியுள்ளேன்.

சுள்ளி/சூர்ணி ஆறு என்பது இம்மரப் பெயர்கள் என மடலை வாசித்த மலையாளம் நன்கறிந்த, அங்கே படித்த, மலையாளநூல்களை மொழிபெயர்க்கும் கவிஞர் சிற்பி பாராட்டினார்,
சுள்ளிக்காடு என்பதும் இம்மரப்பெயரால் உருவானதே என்றார். அவரது நண்பர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மலையாளக் கவிதை, ஆங்கில மொழிபெயர்ப்பில் இன்று
நண்பர் அனுப்பினார். இந்தப் புதுக்கவிதை மலையாளமூலம் கிடைக்குமா?

Poem by famous Malayalam poet – Balachandran Chullikkad. In current issue of Mathrubhumi Illustrated 

Weekly

 Translation By Binu Karunakarana

Indian without an Aadhaar

by Balachandran Chullikkad

Court: Do you have Aadhaar?

Accused: No I’m Niraadhaar

Court: Hope you got a name?

Accused: Indian.

Court: Don’t you have any other?

Accused: No

Court: Name your father?

Accused: Mahatma Gandhi.

Court: Isn’t he the father of the nation?

Accused: Don’t know if there’s another one.

Court: And your mother?

Accused: Bharat Mata.

Court: You got to be an orphan?

Court: No. I’ve a guardian. The President.

Court: (Annoyed) Anything else to tell the court?

Accused: When memories rise…

Court: (Interrupting) A story of yourself?

Accused: Story without self.

Court: Cut the long story short.

Accused: It’s not much.

Court: Go ahead

Accused: When memories rise I was licking turd on a railway track.

Court: Yuck! What the heck!

Accused: Had no free ration since I had no ration card.

Court: Oh! Malnutrition.

Accused: Not really. Had banana skins on day and cum shot by cops in the night. And flies, in my dreams.

Court: (With contempt) Anything more?

Accused: That’s all I got.

Court: (Turning red) Stop it

Accused: (Politely) I rest my case

Court: It has been proved beyond doubt that the accused stabbed to death a religious preacher sermoning at the railway station ground. But considering the mental health of the accused the court orders incarceration in a mental asylum for life.

N. Ganesan

unread,
Dec 21, 2017, 9:24:51 AM12/21/17
to Santhavasantham, மின்தமிழ், vallamai
பால. சுள்ளிக்காட்டின் புதுக்கவிதையை அழகுத்தமிழில் வடித்துத் தாருங்களேன்.

இந்த்யன்ʼ - பா³லசந்த்³ரன்ʼ சுள்ளிக்காட்

கோடதி: ஆதா⁴ர்ʼகார்ʼட்³ இல்லே?
ப்ரதி: நிராதா⁴ரனாண்
கோடதி: பேர்?
ப்ரதி: இந்த்யன்ʼ
கோடதி: வேறே பேரில்லெ?
ப்ரதி: இல்ல
கோடதி: பிதாவின்றெ பேர்
ப்ரதி: மஹாத்மாகா³ந்தி⁴
கோடதி: அது ராஷ்ட்ரபிதாவல்லே?
ப்ரதி: வேறே பிதாவுள்ளதாயி அறிவில்ல
கோடதி: மாதாவ்?
ப்ரதி: பா⁴ரதமாதாவ்
கோடதி: அனாத²னாணல்லே?
ப்ரதி: அல்ல .ரக்ஷாகர்ʼத்தாவுண்ட். ராஷ்ட்ரபதி
கோடதி: ( நீரஸம்ʼ ) மற்றெந்தெங்கிலும்ʼ பறயானுண்டோ?
ப்ரதி: ஓர்ʼம்மகள்ʼ துடங்ஙும்போள்ʼ
கோடதி: (இடக்கு கயறி ) ஆத்மகத²யாணோ?
ப்ரதி: ஆத்மாவ் இல்லாத்த கத²
கோடதி: சுருக்கிப்பறயணம்ʼ
ப்ரதி: அதி⁴கமில்ல
கோடதி: துடராம்ʼ
ப்ரதி :ஓர்ʼம்மகள்ʼ துடங்ஙும்போள்ʼ ஞான்ʼ றெயில்ʼப்பாளத்திலெ மலம்ʼ நக்கி தின்னுகயாண்.
கோடதி: செ². அதெந்தினாண்?
ப்ரதி: றேஷன்ʼ கார்ʼட்³ இல்லாத்ததினால்ʼ ஸௌஜன்யறேஷன்ʼ கிட்டியிருன்னில்ல
கோடதி: ஒ.போஷகாஹாரக்குறவ்
ப்ரதி: இல்ல.பகல்ʼ பழத்தொலியும்ʼ ராத்ரி போலீஸுகாருடெ ஶுக்லவும்ʼ ப⁴க்ஷிச்சிருன்னு. ஸ்வப்னத்தில்ʼ ஈச்சகளேயும்ʼ
கோடதி: (வெறுப்போடெ ) கூடுதலெந்தெங்கிலும்ʼ?
ப்ரதி: கூடுதலொன்னும்ʼ கிட்டியிருன்னில்ல.
கோடதி: (க்ஷோபி⁴ச்ச்) நிர்ʼத்தாம்ʼ
ப்ரதி 😞 வினயபூர்ʼவ்வம்ʼ) நிர்ʼத்தி
கோடதி: ப்ரதி றெயில்ʼவே ஸ்ற்றேஷன்ʼ மைதானியில்ʼ ப்ரஸங்கி³ச்சுகொண்டிருன்ன மதப்ரபா⁴ஷகனெ குத்திக்கொன்னதாயி ஸம்ʼஶயாதீதம்ʼ தெளிஞ்ஞிரிக்குன்னு. என்னால்ʼ ப்ரதியுடெ மானஸிகாவஸ்த² பரிக³ணிச்ச் ஜீவபர்யந்தம்ʼ மானஸிகாரோக்³ய கேந்த்³ரத்தில்ʼ அடக்கான்ʼ ஈ கோடதி விதி⁴க்குன்னு.

(இன்னத்தெ மாத்ருʼபூ⁴மி ஆழ்சப்பதிப்ப் - லக்கம்ʼ 41)
From: 


ഇന്ത്യൻ - ബാലചന്ദ്രൻ ചുള്ളിക്കാട്

കോടതി: ആധാർകാർഡ് ഇല്ലേ?
പ്രതി: നിരാധാരനാണ്
കോടതി: പേര്?
പ്രതി: ഇന്ത്യൻ
കോടതി: വേറേ പേരില്ലെ?
പ്രതി: ഇല്ല
കോടതി: പിതാവിന്റെ പേര്
പ്രതി: മഹാത്മാഗാന്ധി
കോടതി: അതു രാഷ്ട്രപിതാവല്ലേ?
പ്രതി: വേറേ പിതാവുള്ളതായി അറിവില്ല
കോടതി: മാതാവ്?
പ്രതി: ഭാരതമാതാവ്
കോടതി: അനാഥനാണല്ലേ?
പ്രതി: അല്ല .രക്ഷാകർത്താവുണ്ട്. രാഷ്ട്രപതി
കോടതി: ( നീരസം ) മറ്റെന്തെങ്കിലും പറയാനുണ്ടോ?
പ്രതി: ഓർമ്മകൾ തുടങ്ങുമ്പോൾ
കോടതി: (ഇടക്കു കയറി ) ആത്മകഥയാണോ?
പ്രതി: ആത്മാവ് ഇല്ലാത്ത കഥ
കോടതി: ചുരുക്കിപ്പറയണം
പ്രതി: അധികമില്ല
കോടതി: തുടരാം
പ്രതി :ഓർമ്മകൾ തുടങ്ങുമ്പോൾ ഞാൻ റെയിൽപ്പാളത്തിലെ മലം നക്കി തിന്നുകയാണ്.
കോടതി: ഛെ. അതെന്തിനാണ്?
പ്രതി: റേഷൻ കാർഡ് ഇല്ലാത്തതിനാൽ സൗജന്യറേഷൻ കിട്ടിയിരുന്നില്ല
കോടതി: ഒ.പോഷകാഹാരക്കുറവ്
പ്രതി: ഇല്ല.പകൽ പഴത്തൊലിയും രാത്രി പോലീസുകാരുടെ ശുക്ലവും ഭക്ഷിച്ചിരുന്നു. സ്വപ്നത്തിൽ ഈച്ചകളേയും
കോടതി: (വെറുപ്പോടെ ) കൂടുതലെന്തെങ്കിലും?
പ്രതി: കൂടുതലൊന്നും കിട്ടിയിരുന്നില്ല.
കോടതി: (ക്ഷോഭിച്ച്) നിർത്താം
പ്രതി 😞 വിനയപൂർവ്വം) നിർത്തി
കോടതി: പ്രതി റെയിൽവേ സ്റ്റേഷൻ മൈതാനിയിൽ പ്രസംഗിച്ചുകൊണ്ടിരുന്ന മതപ്രഭാഷകനെ കുത്തിക്കൊന്നതായി സംശയാതീതം തെളിഞ്ഞിരിക്കുന്നു. എന്നാൽ പ്രതിയുടെ മാനസികാവസ്ഥ പരിഗണിച്ച് ജീവപര്യന്തം മാനസികാരോഗ്യ കേന്ദ്രത്തിൽ അടക്കാൻ ഈ കോടതി വിധിക്കുന്നു.

(ഇന്നത്തെ മാതൃഭൂമി ആഴ്ചപ്പതിപ്പ് - ലക്കം 41)

From: 
Reply all
Reply to author
Forward
0 new messages