கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்

184 views
Skip to first unread message

dorai sundaram

unread,
May 15, 2016, 5:14:41 AM5/15/16
to mintamil

மொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு



கல்வெட்டு அறிஞர் மா. கணேசனார்


         அவிநாசியைச் சேர்ந்த மறைந்த கல்வெட்டு அறிஞர் முனைவர் மா.கணேசன் அவர்கள் 1980களில் கோவை மாவட்டக் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாகப் பதிப்பித்தவர். அவரது ஆய்வுகளில், சேவூருக்கருகில் அமைந்துள்ள குட்டகம் என்னும் ஊரில் இருக்கும் மொக்கணீசுவரர் கோயிலும் ஒன்று. அக்கோயிலில், வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டினை அவர் கண்டறிந்தார். ஆனால், அக்கல்வெட்டு நீண்டகாலமாகப் படிக்கப்படாமலேயே இருந்தது. இக்கட்டுரை ஆசிரியரிடம் இக்கல்வெட்டைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.


2014-ஆம் ஆண்டில் வட்டெழுத்துக்கல்வெட்டு ஆய்வு


         2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கல்வெட்டு, கட்டுரையாசிரியரால் ஆய்வு செய்யப்பட்டுக் கல்வெட்டின் பாடமும் பெருமளவு படிக்கப்பட்டது. முழுமையாகப் படித்தபின்பே சரியான செய்தி வெளிப்படும் என்னும் காரணத்தால், மீண்டும் கல்வெட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அண்மையில், 2016 மே மாதம் 8-ஆம் தேதி, தஞ்சை-தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோது, நானும் (இக்கட்டுரை ஆசிரியர்) அவரும் இணைந்து இகல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்துவிடவேண்டும் என்னும் முனைப்போடு செயலில் இறங்கினோம். (கட்டுரை ஆசிரியரும் தஞ்சை-தொல்லியல் கழக உறுப்பினரே.) வீரராகவன் அவர்கள் ஓர் அற்புதமான தொல்லியல் ஆய்வாளர். முறைப்படி கல்வெட்டுகளையும் புடைப்புச் சிற்பங்களையும் வெள்ளைத்தாளில் படியெடுத்து கல்வெட்டுகளின் வடிவங்களையும், புடைப்புச் சிற்பங்களின் வடிவங்களையும் நம் கண்முன்னே உயிரோட்டமாக ஆக்கித்தருவதில் வல்லவர். அவிநாசியைச் சேர்ந்த வரலாறு மற்றும் கல்வெட்டு  ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர் ஜெயசங்கரும் எங்களுடன் இணைந்துகொண்டார். வீரராகவன் அவர்களது பணி வாயிலாகக் கல்வெட்டு முழுமையாகப் படியெடுக்கப்பட்டு அதன் பாடம் படிக்கப்பட்டது. கல்வெட்டின்மேல் ஒட்டிய வெள்ளைத்தாளுடன் எடுக்கப்பட்ட கல்வெட்டின் ஒளிப்படத்தைப் பார்த்தாலே, படியெடுத்ததன் நேர்த்தி புலப்படும்.


கோயிலின் தோற்றம்


         மொக்கணிசுவரர் கோயில் ஒரு பழமை வாய்ந்த கோயிலாக இருந்துள்ளது. கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்காலக் கட்டுமானத்துடன் தற்போது கோயில் தோற்றமளித்தாலும் பழமையான் கட்டுமானத்தின் எச்சங்கள் தற்போதும் கோயிலில் உள்ளன. சேவூர்ப்பகுதியில் ஒரு வணிக வழி இருந்துள்ளதாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுகொண்ட வணிகர் ஒருவர் இப்பகுதிக்கு வருகையில் இங்கு இளைப்பாறி உணவு உண்ணுமுன் சிவ பூசை செய்ய முனைந்தார். உதவிக்கு வந்தவர், தாம் எப்போதும் கொண்டுவரும் சிவலிங்கத்திருமேனியைக் காணாது, குதிரைக்கு உணவான கொள்ளுப்பயறு நிரம்பிய பையை லிங்க வடிவில் திரட்டி மண்ணில் பதித்து விட்டதாகவும், வணிகர் சிவபூசையை முடித்தெழுந்தபோது, உதவியாளர் மீண்டும் கொள்ளுப்பையை எடுக்க முனைந்ததில், கொள்ளுப்பை சிவலிங்கமாக உருவெடுத்திருந்ததைக் கண்டு வியப்பெய்தி வணிகரிடம் சொல்ல, அங்கு ஒரு சிவன் கோயில் எழுப்பப்பட்டதாகவும் செவி வழி வரலாறு ஒன்று இக்கோயிலைப்பற்றி நிலவிவருகிறது.. இச்செவிவழிச் செய்திக்கு வேறு மாற்று வடிவங்கள் முன்வைக்கப்படலாம். எனினும், அடிபடைக்கருத்து மொக்கணி சிவலிங்கமாக வழிபடப்பட்டது என்பதேயாகும். கொள்ளுப்பை, மொக்கணி என்னும் பெயரால்  வழங்கப்பட்டதன் காரணமாக இறைவன் பெயர் மொக்கணீசுவரர் என்றாயிற்று.  


                கோயிலின் தோற்றம்  

  




12-13 -ஆம் நூற்றாண்டு எச்சங்கள்







    வட்டெழுத்துக் கல்வெட்டு - மூலத்தோற்றம்


   கல்வெட்டு படித்தல் - முதல் முயற்சியின்போது



கல்வெட்டின் பழமை ஆயிரம் ஆண்டுகள்


         கோயிலின் திருச்சுற்றுப்பாதையில் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பலகைக்கருங்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்து என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழி (அல்லது தமிழ் பிராமி) என்னும் தமிழ்த் தொல்லெழுத்திலிருந்து தோன்றிய எழுத்து வடிவமாகும். தமிழி எழுத்திலிருந்து தோன்றிய மற்றொரு எழுத்து வடிவம் தமிழ் எழுத்து. இரண்டு எழுத்துகளும் ஒன்றாகத் தோன்றி வளர்ச்சியுற்றாலும், சோழர் ஆட்சியின்போது தமிழகம் முழுதும் தமிழ் எழுத்துக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால், காலப்போக்கில் வட்டெழுத்தின் பயன்பாடு மறைந்தது. இருப்பினும், வட்டெழுத்து, மக்கள் எழுத்தாக நீண்ட காலம்வரை அதாவது கி.பி. 12-ஆம் நூற்றாண்டுவரை கொங்குநாட்டில் வழக்கில் இருந்துள்ளது. கொங்குநாட்டை ஆட்சி செய்த கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரன் காலத்திலும் (கி.பி. 1207-1256) கொங்கு நாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்தது. பிரமியத்தில் இவன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டு இருக்கிறது.


               கல்வெட்டு படியெடுத்தல்








         மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் இருபது வரிகள் காணப்படுகின்றன. எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் முதல் வரி, “ (ர பதி) மூர்க்கஸ்ரீ பராக்கிரம சோழ தேவர்க்குத் திருவெழுத்திட்டு”  என்று தொடங்குகிறது.  முதல் ஒன்பது வரிகளில் இவ்வரசனுடைய மெய்க்கீர்த்தி கூறப்படுகிறது. பதினோராவது வரியில் இந்த அரசனது ஆட்சியாண்டு “அஞ்சாவது என்று குறிப்பிடப்படுகிறது. கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் கொங்குச்சோழ அரசர்களில், மூர்க்க பராக்கிரம சோழன் பெயர் காணப்படாமையாலும், அதேபோழ்து, கலிமூர்க்க விக்கிரம சோழன் என்னும் அரசன் கி.பி. 1004 முதல் கி.பி. 1047 வரை ஆட்சியில் இருந்துள்ளதாகக் குறிப்புள்ளதாலும் அவனைப்பற்றிய குறிப்புகளைத்தேடியபோது, திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள் நூலில், தாராபுரம் வட்டம் பிரமியம் என்னும் ஊரின் வலஞ்சுழிநாதர் கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் “கோக்கலிமூர்க்க விக்கிரமச்சோழன்”  என்னும் அரசனின் கல்வெட்டில் மேற்படி மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டில் வருகின்ற அதே மெய்க்கிர்த்தி வரிகள் காணப்ப்டுவதைப் பார்த்தேன். அரசனின் பெயர் மாறினாலும் மெய்க்கீர்த்தி ஒன்றே. அரசன்பெயரைத் தெளிந்துகொள்ள தொல்லியல்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் அர.பூங்குன்றன் அவர்களைத் தொடர்புகொண்டபோது, கலிமூர்க்க விக்கிரமச்சோழனுக்கு “பராக்கிரமச் சோழன்” என்று வேறொரு பெயரும் இருந்ததாகவும், அன்னூர்க்கோயிலில் ஒரு வரி மட்டும் உள்ள வட்டெழுத்துக்கல்வெட்டொன்றில் பராக்கிரம சோழன் பெயர் வருவதாகவும், ஆனால் இக்கல்வெட்டு நூலில் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார். எனவே, கல்வெட்டு, கலிமூர்க்க விக்கிரமச்சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாயிற்று. ஆட்சியாண்டு ஐந்து என்பதால்  இக்கல்வெட்டு கி.பி. 1009-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது என்று உறுதியாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டது என்பது கல்வெட்டின் சிறப்பு. 

         வழக்கமாக அரசர்களின் மெய்க்கீர்த்திகளில், அரசனது போர் வெற்றியும் புகழும் இடம்பெறும். ஆனால், இவ்வரசனின் மெய்க்கீர்த்தியில், இவன், குடிமக்களிடம் ஆறில் ஒன்றை வரியாகக் கொண்டான் என்றும், அல்லவை கடிந்து குடிபுறம் காத்தான் என்றும், பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய் போல் குடிமக்களைக் காத்து நாடு வளம் பெருக்கினான் என்றும் கூறப்படுகிறது. இதுவும் இக்கல்வெட்டில் காணப்படும் சிறப்பாகும். கொங்குநாட்டை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட அரசர் இருவரில் இவன் ஒருவன். இன்னொருவன் வீரராசேந்திரன் ஆவான்.


கல்வெட்டின் செய்தி


         கல்வெட்டில், இக்கோயில் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. கொங்கு நாட்டில் பழங்காலத்து இருந்த இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் வடபரிசார நாடும் ஒன்று. இந்த் நாட்டுப்பிரிவில், பேரூர், அவிநாசி, சேவூர் போன்ற ஊர்கள் அடங்கும். வடபரிசார நாட்டில் இருந்த குடவோடான இராசவிச்சாதிர நல்லூரில் வாழும், முள்ளிகள் என்னும் வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த கோவன் விச்சாதிரன் என்பானின் மனைக்கிழத்தி  எறுளங்கோதை என்னும் பெண்மணி இக்கோயிலை எடுப்பித்தாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இதனால், மொக்கணீசுவரர் கோயில் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து மாற்றம் பெறுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டது என அறிகிறோம்வெள்ளாளர் குலப்பெண் ஒருத்தி கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 10, 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்டிரின் சமூக நிலை இக்கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. அவர்களுக்கு இருந்த பொருளாதார உரிமை, கோயில் கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் உரிமை ஆகியன தெளிவாகின்றன. கொங்குப்பகுதியில் பழங்காலத்தில் எழுப்பப்பட்ட சிறு கோயில்கள் (கற்களால் கட்டப்பெற்றவை) எளிமையான வடிவில் கட்டப்பட்டன என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கருவறையும் அதனை அடுத்து அர்த்தமண்டபமும் மட்டும் எழுப்பப்பட்டன. பெரும்பாலும், கருவறையின்மேல் பகுதியில் விமானம் கட்டப்படவில்லை. வெள்ளாளர் குலப்பெண் கோயில் கட்டும்போது, அதுபோலவே எளிமையாகக் கட்டப்பெற்றுப் பின்னர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் சற்றே விரிவாகக் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், கோயிலில், கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் எவையுமில்லை. இருப்பினும், கோயில் வளாகத்தில் கி.பி. 12-13 நூற்றாண்டைச் சேர்ந்தன எனக் கருதத்தக்க சில சிற்பங்களூம், உடைந்த தூண்களும், பழமையான ஒரு மண்டபப் பகுதியும் காணப்படுவது இக்கருத்தை ஏற்கத் துணைசெய்கிறது. இக்கோயில் வளாகத்தில் விசயநகர அரசர் காலத்தைச் சேர்ந்த ஒரு பலகைக்கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தது. மொக்கணீசுவரர் கோயிலுக்குச் சேவூரில் இருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்க்ப்பட்ட செய்தியைச் சொல்லும் இக்கல்வெட்டில், கோயில் அமைந்திருக்கும் குட்டகம் ஊரானது குடக்கோட்டூர் என்று குறிப்பிடப்படுகிறது.


              படியெடுத்தல் - பாதிப்பணியில்



                                  படியெடுத்தல் - முழுமை பெற்றபின்



குடவோடு என்னும் இராசவிச்சாதிர நல்லூர்


         மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில், குட்டகம் ஊரானது, குடவோடான இராசவிச்சாதிர நல்லூர் என்று குறிப்பிடப்பெறுகிறது. எனவே, இவ்வூர் குடவோடு என்னும் பெயரிலிருந்து குடக்கோடு (குடக்கோட்டூர்), குட்டகம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்மாற்றம் பெற்றுள்ளதை அறிகிறோம். இராசவிச்சாதிரன் என்பான் கலிமூர்க்க பராக்கிரம சோழனின் கீழ் இப்பகுதியில் ஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு தலைவனாய் இருந்திருக்கலாம்; அரசன், குடவோடு ஊருக்கு இந்த இராசவிச்சாதிரன் பெயரில் சிறப்புப் பெயர் வழங்கியிருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. முள்ளிகள் என்னும் வெள்ளாளர் குலப்பிரிவு இருந்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.


எறுளங்கோதை

கோயில் எடுப்பித்த வெள்ளாளர்குலப் பெண்ணின் பெயர் அழகிய தமிழ்ப்பெயராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எறுளம் என்பது ஒரு மரத்தையும், அதன்வழி ஒரு மலரையும் குறிப்பதாகத் தமிழ் அறிஞரும் மொழி ஆய்வாளருமான நா.கணேசன் அவர்கள் கூறுவது எறுளங்கோதை என்னும் தமிழ்ப்பெயரும், மனைக்கிழத்தி என்னும் அழகான தூய தமிழ்ச் சொல்லும், பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ் வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கின்றன.


மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டு  பாடம்


  1. (ர பதி) மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழ(தே)
  2. வர்க்குத் திருவெழுத்திட்டுச் செ
  3. ங்கோலோச்சி வெள்ளிவெண்குடை மி
  4. ளிரவேன்தி ஆறில் ஒன்று கொ
  5. ண்டல்லவை கடின்து நாடு வள
  6. ம் படுத்து நை குடியோம்
  7. பிக் கோவீற்றிருன்து குடி
  8. புறங்காத்துப் பெற்றகுழ
  9. விக்குற்ற நற்றாய்போல் செ
  10. ல்லாநின்ற திருநாள் யாண்டு
  11. அஞ்சாவதில் இத்திருக்கோ
  12. யில்லெடுப்பிச்சேந் வட
  13. பரிசாரத்தில் குடவோ
  14. டாந இராசவிச்சாதிர நல்
  15. லூரிருன்து வாழும் வெள்
  16. ளாளந் முள்ளிகளில் கோ
  17. வன் விச்சாதிரந் மநை
  18. க்கிழத்தி எறுளங்கோ
  19. தையேன் என் நி
  20. ............  ந் தாந்


குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.



முடிவுரை


         வரலாற்றுச் சிறப்பும், ஆயிரம் ஆண்டுப் பழமைப்பின்னணியும் உள்ள குட்டகம் ஊரும், அதன் கோயிலும், வட்டெழுத்துக் கல்வெட்டும் நம் செல்வங்கள் என்னும் பெருமையுடன் இவ்வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம்.





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


அலைபேசி : 9444939156.


N D Logasundaram

unread,
May 15, 2016, 11:45:43 AM5/15/16
to mintamil, ara...@gmail.com, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A
உயர்திரு 
திருநாவுக்கரசு பு. பு. ப  அவர்களுக்கு 

மொக்கணீ சுவரம் திருவசகத்தலம் ஆகும் 
எனவே தயைசெய்து குரக்குத்தளிக்கு முன் 
 நாம் சென்று பார்த்தோமே அந்த சேவூருக்கு அருகு குட்டகம் எனும் ஊரில் உள்ள கோயில் பற்றி விசாரிக்கவும் படங்கள்
மேலே உள்ளன காண்க 
---------------
மேலும் நிற்க 
குறைந்தது நான்கு சேவூர்கள் காணப்படுகின்றன 
மேல்சேவூர்(செஞ்சி ) //  புதுக்கோட்டை //
வேலூர் (ரயிலடி) // சிவகங்கை கானப்பேர் நாடு

 ஐந்தாவது 
கொங்கு அவினாசி  சேவூரும் கல்வெட்டில் வடபரிசாரநாடு என உள்ளது இப்போதுள்ள  பெருமாள் கோயிலில்தான் கல்வெட்டுகள் 

Inline image 1
குதிரைத்தீனி கொள்ளுப்பையே சிவலிங்க மானது 

மொக்கணீ சுவரம் = திருவாசகத்தலம் 
திருவாசகம் கீர்த்தித் திருவகவல்

- - - - -         - - - - -         - - - - -         - - - - -
- - - - -         - - - - -         - - - - -         - - - - -
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசை
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவறி வொண்ணான் 35
நரியை குதிரை ஆக்கிய நன்மையையும்

- - - - -         - - - - -         - - - - -         - - - - -
- - - - -         - - - - -         - - - - -         - - - - -

குடவோடாகிய  = மேற்காக செல்லும் வழியில் உள்ள 

"குடக்கோடு தேருடையன் தெவ்வுக்கு"
= தென்றலை தேராக உடைய மன்மதனுக்கு   >>>> குமரகுருபரர்  


Inline image 1

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
May 15, 2016, 9:26:46 PM5/15/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram
On Sunday, May 15, 2016 at 2:14:41 AM UTC-7, dorai sundaram wrote:

மொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு



கல்வெட்டு அறிஞர் மா. கணேசனார்


         அவிநாசியைச் சேர்ந்த மறைந்த கல்வெட்டு அறிஞர் முனைவர் மா.கணேசன் அவர்கள் 1980களில் கோவை மாவட்டக் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாகப் பதிப்பித்தவர். அவரது ஆய்வுகளில், சேவூருக்கருகில் அமைந்துள்ள குட்டகம் என்னும் ஊரில் இருக்கும் மொக்கணீசுவரர் கோயிலும் ஒன்று. அக்கோயிலில், வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டினை அவர் கண்டறிந்தார். ஆனால், அக்கல்வெட்டு நீண்டகாலமாகப் படிக்கப்படாமலேயே இருந்தது. இக்கட்டுரை ஆசிரியரிடம் இக்கல்வெட்டைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.


2014-ஆம் ஆண்டில் வட்டெழுத்துக்கல்வெட்டு ஆய்வு


         2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கல்வெட்டு, கட்டுரையாசிரியரால் ஆய்வு செய்யப்பட்டுக் கல்வெட்டின் பாடமும் பெருமளவு படிக்கப்பட்டது. முழுமையாகப் படித்தபின்பே சரியான செய்தி வெளிப்படும் என்னும் காரணத்தால், மீண்டும் கல்வெட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அண்மையில், 2016 மே மாதம் 8-ஆம் தேதி, தஞ்சை-தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோது, நானும் (இக்கட்டுரை ஆசிரியர்) அவரும் இணைந்து இகல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்துவிடவேண்டும் என்னும் முனைப்போடு செயலில் இறங்கினோம். (கட்டுரை ஆசிரியரும் தஞ்சை-தொல்லியல் கழக உறுப்பினரே.) வீரராகவன் அவர்கள் ஓர் அற்புதமான தொல்லியல் ஆய்வாளர். முறைப்படி கல்வெட்டுகளையும் புடைப்புச் சிற்பங்களையும் வெள்ளைத்தாளில் படியெடுத்து கல்வெட்டுகளின் வடிவங்களையும், புடைப்புச் சிற்பங்களின் வடிவங்களையும் நம் கண்முன்னே உயிரோட்டமாக ஆக்கித்தருவதில் வல்லவர். அவிநாசியைச் சேர்ந்த வரலாறு மற்றும் கல்வெட்டு  ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர் ஜெயசங்கரும் எங்களுடன் இணைந்துகொண்டார். வீரராகவன் அவர்களது பணி வாயிலாகக் கல்வெட்டு முழுமையாகப் படியெடுக்கப்பட்டு அதன் பாடம் படிக்கப்பட்டது. கல்வெட்டின்மேல் ஒட்டிய வெள்ளைத்தாளுடன் எடுக்கப்பட்ட கல்வெட்டின் ஒளிப்படத்தைப் பார்த்தாலே, படியெடுத்ததன் நேர்த்தி புலப்படும்.


கோயிலின் தோற்றம்


         மொக்கணிசுவரர் கோயில் ஒரு பழமை வாய்ந்த கோயிலாக இருந்துள்ளது. கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்காலக் கட்டுமானத்துடன் தற்போது கோயில் தோற்றமளித்தாலும் பழமையான் கட்டுமானத்தின் எச்சங்கள் தற்போதும் கோயிலில் உள்ளன. சேவூர்ப்பகுதியில் ஒரு வணிக வழி இருந்துள்ளதாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுகொண்ட வணிகர் ஒருவர் இப்பகுதிக்கு வருகையில் இங்கு இளைப்பாறி உணவு உண்ணுமுன் சிவ பூசை செய்ய முனைந்தார். உதவிக்கு வந்தவர், தாம் எப்போதும் கொண்டுவரும் சிவலிங்கத்திருமேனியைக் காணாது, குதிரைக்கு உணவான கொள்ளுப்பயறு நிரம்பிய பையை லிங்க வடிவில் திரட்டி மண்ணில் பதித்து விட்டதாகவும், வணிகர் சிவபூசையை முடித்தெழுந்தபோது, உதவியாளர் மீண்டும் கொள்ளுப்பையை எடுக்க முனைந்ததில், கொள்ளுப்பை சிவலிங்கமாக உருவெடுத்திருந்ததைக் கண்டு வியப்பெய்தி வணிகரிடம் சொல்ல, அங்கு ஒரு சிவன் கோயில் எழுப்பப்பட்டதாகவும் செவி வழி வரலாறு ஒன்று இக்கோயிலைப்பற்றி நிலவிவருகிறது.. இச்செவிவழிச் செய்திக்கு வேறு மாற்று வடிவங்கள் முன்வைக்கப்படலாம். எனினும், அடிபடைக்கருத்து மொக்கணி சிவலிங்கமாக வழிபடப்பட்டது என்பதேயாகும். கொள்ளுப்பை, மொக்கணி என்னும் பெயரால்  வழங்கப்பட்டதன் காரணமாக இறைவன் பெயர் மொக்கணீசுவரர் என்றாயிற்று.  



குடவோடு மொக்கணீச்சுர வட்டெழுத்துக் கல்வெட்டு அருமை. மூன்று சொற்களைச் சற்றுச் சிந்திப்போம்:

(1)  (ர பதி) மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழ(தே)

    (ர பதி) - சத்திர பதி என்பதாக இருக்கலாமோ?
    சத்ரபதி சிவாஜி என்பதுபோல மன்னர்களுக்கு ‘சத்திரபதி’ எனப் பட்டமுண்டு.

{சத்(ர பதி) கலி} மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழதேவர்க்குத்
திருவெழுத்திட்டுச்
செங்கோலோச்சி
வெள்ளி வெண்குடை மிளிர
வேன்தி ஆறில் ஒன்று கொண்டு

   ’வேந்தி(ன்) ஆறில் ஒன்று கொண்டு’ எனப் படிக்கவேண்டும்.
    விளைச்சலில், வணிகத்தில் 1/6 பங்கு அரசாங்கத்துக்குச் சொந்தம். வரி.

   ’இராசவிச்சாதிர நல்லூரிருன்து வாழும் வெள்ளாளந்’ என்று
     பின்னரும் வருகிறது: “நல்லூர் இருந்து வாழும்” எனப் படிப்பதுபோல.
   ’அல்லவை கடின்து’ = அல்லவை கடிந்து
   ‘கோவீற்றின்து = கோவீற்றிருந்து’

அல்லவை கடின்து நாடு வளம் படுத்து 
நை குடியோம்பிக் கோவீற்றிருன்து 

 நைகுடி = எளிய குடிசனங்கள்

குடிபுறங்காத்துப் 
பெற்றகுழவிக்கு உற்ற நற்றாய்போல் 
செல்லாநின்ற திருநாள் யாண்டு
அஞ்சாவதில் இத்திருக்கோயில் லெடுப்பிச்சேந் 
வடபரிசாரத்தில் குடவோடாந 
இராசவிச்சாதிர நல்லூரிருன்து வாழும் 
வெள்ளாளந் முள்ளிகளில் 
கோவன் விச்சாதிரந் 
மநைக்கிழத்தி எறுளங்கோதையேன் 
என் நி
............  ந் தாந்

------------------------

எறுழங்கோதை - அருமையான பெண்பெயர். அல்லியங்கோதை திருவாரூர் அம்மன்பெயர் போல.
எறுழ மலர்மாலை அணிந்த பெண். அருகுள்ள கோயில் ஒன்றின் அம்மன் பெயராகவும் இருக்கலாம்.
எறுழம் - சேவூருக்கருகான மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே வளரும் மரப் பூ. 
’எரிபுரை எறுழம்’ - கபிலர் குறிஞ்சிப்பாட்டில். ’நெருப்பையொத்த எறுழம்பூ’ (நச்சினார்க்கினியர்).
எறுழம்பூப் பூப் பூக்கும் மரத்தைப் பார்ப்போம்.

முள்ளி குலம்: முள்ளி - கத்தரி வகை. வெண்டுவன் குலத்தார் வெண்டை உண்ணார்.
கணமாளர்/கணவாளர்க்கு திரண்டமான் ஆகிய கடமான் Totem symbol. மிழா என்பர் நாஞ்சில் நாட்டில்.
முள்ளி = Indian nightshade, m. sh., Solanum indicum; (MTL).

குடவோடு - காபாலிகர், காளாமுகர் தொடர்பைக் காட்டும் கொங்குநாட்டுத் தலங்கள் போலப் பெயர்கொண்டுள்ளது. விச்சாதிரன் - வித்யாதரன் என்னும் சம்ஸ்கிருதத்தின் பிராகிருதச்சொல். கல்விமான் என்ற பொருளில் சோழர்க்கொரு பட்டம். அப்பெயர் கொண்ட வெள்ளாளரில் முள்ளி குலத்தான் விச்சாதிரன் மனைக்கிழத்தி எறுழங்கோதை திருக்கோயில் கட்டி வெட்டுவித்த கல்வெட்டு. மொக்கணீச்சர வரலாறு காண்போம்.

நா. கணேசன்

dorai sundaram

unread,
May 16, 2016, 2:35:59 AM5/16/16
to N. Ganesan, mintamil
கணேசன் அவர்களுக்கு,
”ரபதி’  என்னும் சொல்லைப்பார்த்ததும் எனக்கும் “சத்ரபதி” என்ற சொல்
நினைவுக்கு வந்தது. 
கடிந்து, வீற்றிருந்து, இருந்துவாழும் என்னும் சொற்களில் வரவேண்டிய
தந்நகரம், கல்வெட்டில் றன்னகரமாக எழுதப்பட்டுவிட்டது. அதே பிழைதான்
வெண்குடை மிளிரவேந்தி (மிளிர+ஏந்தி)  என்பதிலும் ஏற்பட்டுள்ளது.
“வேன்தி”  என்பதை  ”மிளிர”  என்னும் சொல்லோடு சேர்த்துப்படிக்கவேண்டும். 
பூங்குன்றன் ஐயாவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆறில் ஒன்று கொண்டு என்பது நீங்கள் கூறியவாறு, விளைச்சலில் ஆறில் ஒரு 
பகுதியை அரசு வரியாகக் கொள்வதுதான்.
எறுளங்கோதைக்கு நீங்கள் தந்த விளக்கம் சிறப்பாக உள்ளது. இக்கருத்தை நான்
கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். கொங்கு குலங்களில் இன்றும் முள்ளி குலம்
உள்ளதா?
கொங்குநாட்டில் காபாலிகம் இருந்துள்ளதைப் பூங்குன்றன் ஐயா குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், இக்கல்வெட்டு வெறும் வரலாற்றுச் செய்தியைச் சொல்லும் ஒன்றாக மட்டும் அமையாமல் இலக்கிய நயமும் கொண்டுள்ளது சிறப்பு.
சுந்தரம்.


Seshadri Sridharan

unread,
May 16, 2016, 6:54:38 AM5/16/16
to mintamil, yesura...@gmail.com, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti
பாராட்டுதலுக்கு உரிய முயற்சி. உம்மைப்போல் பலர் உருவானால் திருத்திய தமிழக வரலாற்றை அடுத்த  தலைமுறைக்கு அளிக்க    முடியும். 

மின்தமிழில்  என் இந்த பதிவு வெளியாகுமா என்று தெரியவில்லை ஏனென்றால் மட்டுறுத்துனர்கள் அடாவடியாக என் பதிவுகளை .முடக்கியுள்ளார்கள்.  நான் கூகிளில்  சென்று பார்த்தால் என் பதிவுகள் ஏதும் எதிர்படுவதில்லை என்பது  உறுப்பினர்கள் எனது பதிவுகளை படிக்கவிடாமல் தடுக்கப்படுகிறார்கள் என்று தானே பொருள். 

நேற்று நான் மூன்று தொல்லியல் செய்திகளை பதிவிட்டிருந்தேன் அதில் ஒன்று கூட வரவில்லை. வந்திருந்தால் தொல்லியல் ஆர்வலர்கள்  படித்துவிட்டு  மறுபதிவு இட்டிருப்பார்கள்.

தொல்லன் 




2016-05-15 14:44 GMT+05:30 dorai sundaram <doraisu...@gmail.com>:

Oru Arizonan

unread,
May 16, 2016, 10:16:29 PM5/16/16
to mintamil
சிறந்ததொரு பதிவு, துரை சுந்தரம் அவர்களே!  

ஒரு ஐயம்:  வட்டெழுத்துக் கல்வெட்டுகள், இராஜராஜ சோழன் காலத்திற்கு முந்தையவையாகத்தானே இருக்கவேண்டும்?  அவர் காலத்தில்தானே வட்டெழுத்து தடைசெய்யப்பட்டது என்று வரலாறு வல்லுனர்கள் கூறுகிறார்கள்?
ஒரு அரிசோனன் 

dorai sundaram

unread,
May 17, 2016, 12:58:12 AM5/17/16
to mintamil
ஆம். வட்டெழுத்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலேயே
உருப்பெறத் தொடங்கிவிட்டது. இராசராசன் காலத்தில் தமிழுக்கு
முதன்மையிடம் வழங்கப்பட்டாலும், வட்டெழுத்து கி.பி 12-13 வரை  
வழக்கில் இருந்துள்ளது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், கோயில்கள்
புதிப்பிக்கப்படும்பொழுது, வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சில, தமிழில்
மீண்டும் பொறிக்கப்பட்ட செய்தியும் உண்டு.
சுந்தரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 18, 2016, 1:39:30 AM5/18/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Dr. Y. Manikandan, Erode Tamilanban Erode Tamilanban

http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html

கொங்குநாட்டின் குடவோடு மொக்கணீச்சுர வட்டெழுத்துக் கல்வெட்டு அருமை. மொக்கணீச்சரம் மாணிக்கவாசகரால் புகழப்பெற்றது. பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே இந்தச் சேவூரில் இரண்டு போர்கள் நடந்தன.

 

வட்டெழுத்துக் கல்வெட்டு:

{சத்(ர பதி) கலி} மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழதேவர்க்குத்

திருவெழுத்திட்டுச்

செங்கோலோச்சி

வெள்ளி வெண்குடை மிளிரவேந்தி

ஆறில் ஒன்று கொண்டு

அல்லவை கடிந்து நாடு வளம் படுத்து

நை குடியோம்பிக் கோவீற்றிருந்து

குடிபுறங்காத்துப்

பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய்போல

செல்லாநின்ற திருநாள் யாண்டு அஞ்சாவதில்

இத்திருக்கோயில் லெடுப்பிச்சேந்

வடபரிசாரத்தில் குடவோடான

இராசவிச்சாதிர நல்லூரிருந்து வாழும்

வெள்ளாளன் முள்ளிகளில்

கோவன் விச்சாதிரன்

மனைக்கிழத்தி எறுளங்கோதையேன்

என் நி

............  ந் தாந்

From http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html

(Dorai Sundaram, Coimbatore read this Vattezutthu inscription)

எறுழம் எந்த மரத்தின் மலரைக் குறிக்கும்? இந்தப் பிரதேசத்திற்குத் தொடர்புடைய தாவரமா? எறுழங்கோதை என்ற பெண்ணின் அழகிய பெயரின் சிறப்பு - இவற்றைப் பார்ப்போம்.

 

எறுழங்கோதை:

 

கோதை என்றால் மாலை. சங்கப் பாடலில் பலமுறை பயிலும் சொல்.

       இளமையும் காமமும் நின் பாணி நில்லா

       இடை முலைக் கோதை குழைய முயங்கும்

       முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை

http://www.tamilvu.org/slet/l1260/l1260son.jsp?a=12

 

கோதை என்ற பெயரிலே முடியும் பெயர்கள் தமிழில் மிகுதி. தாமரைக்கோதை என்று திருமகளைச் சீவகசிந்தாமணி குறிக்கிறது. பூங்கோதை – காளத்தியில். முருகுவளர்கோதை – கண்ணார்கோயிலில். திருவைகல் மாடக்கோயிலில் செண்பகாரண்யேசுவரர் – கொம்பியல்கோதை.

 

        கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்

        தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்

        வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்

        செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே

 

அணிகொண்ட கோதை – தென் திருமுல்லைவாயிலில். அல்லியங்கோதை திருவாருரில் அம்பாள் பெயர்.

          வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த
          நல்லிய னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
          அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
          புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. (தேவாரம்)

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெண்பெயராக அல்லியங்கோதை:

மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,

நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?

அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,

சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே!

 

மணம் கமழும் மாலை அணிந்த நப்பின்னை = வம்பவிழ்கோதை

வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,

செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,

கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,

தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?

 

சம்பந்தர் – சீகாழித் தேவாரம்

புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்

வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.

           

பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்

பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை

ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்

ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே

 

எறுழம் – என்ன மரம்?

செங்கை பொதுவன் எறுழம் என்பது எருக்கு என்று எழுதியுள்ளார்.

http://vaiyan.blogspot.com/2015/09/erulam-kurinjipattu.html

ஆனால், எறுழம் தீயைப் போல இருக்கும் என்று கபிலரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவதால் எருக்கு அல்ல. வைரம் குறிஞ்சிப்பாட்டு மலர்களுக்கு ஒளிப்படங்கள் தந்த கட்டுரையில் calycopteris floribunda எனக் குறிப்பிடுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Calycopteris_floribunda

இதில் ‘மின்னற்கொடி’ என்று இத்தாவரத்தைத் தமிழர்கள் அழைப்பதாகக் கூறுகின்றனர். காரணம், calycopteris floribunda தாவரத்தின் பூக்கள் பெரும்பாலும் வெண்மையாக இருப்பதால் போலும். ஒருசில பூக்கள் salmon red என்னும் இளஞ்சிவப்பு நிறம். என்றாலும், பெரும்பான்மை, வெண்மை நிறத்திலே இதன் பூக்கள் இருப்பதால், எறுழம் calycopteris floribunda அல்ல என்று கருதுகிறேன்.

இதன் பூக்களைப் பாருங்கள், கொழுந்து விட்டு எரியும் நெருப்புப் போல இல்லையே.

https://www.google.com/search?rlz=1C1NHXL_enUS693US693&biw=1920&bih=979&tbm=isch&sa=1&q=calycopteris+floribunda+&oq=calycopteris+floribunda+&

பி. எல். சாமி (The Plant Names in Kurinchippattu, JTS, 1972) கட்டுரையில் அவ்வாறு கருத்தை முதன்முதல் வெளியிட்டார். அதை வைரம் தம் ‘கற்கநிற்க’ வலைப்பதிவில் பயன்படுத்தியுள்ளார் . ஆனால், வெண்ணிறப்பூக்களைப் பெரும்பாலும் கொண்ட calycopteris floribunda எறுழம் என தாவரவியல் பேரா. கு. சீனிவாசன், சங்க இலக்கிய தாவரங்கள் நூலில் கருதவில்லை.

எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.நெருப்பை ஒத்த எறுழம்பூ - நச்சினார்க்கினியர் உரை.விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய் (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).

 

சேவூர்க் கல்வெட்டில் உள்ள எறுழங்கோதை என்னும் பெயரும் கொங்குநாட்டு மலைகளில் பூக்கும் Rhododendron Nilagiricum = எறுழம் என்னும் தெரிவுக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் பெண் தெய்வப் பெயர்கள் பெண்குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கம். மதுரை என்றால் மீனாட்சி என்ற பெயரும், திருச்செங்கோடு என்றால் பாவை, பாவாயி (பாவை+ஆயி), பேரூரில் பச்சைநாயகி, பச்சையம்மாள் என்னும் பேர்களை நிறையக் கேட்கலாம். அதுபோல, சேவூர் அருகே ஒருகோயிலின் அம்மன் பெயர் எறுழங்கோதை என இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

 

எறுழம் - Rhododendron Nilagiricum -

http://www.flowersofindia.net/catalog/slides/Nilgiri%20Rhododendron.html

http://www.rufford.org/files/Current%20Science,%20Vol.%2094,%20No.%2012,%2025%20June%202008.pdf

http://www.biotik.org/india/species/r/rhodarni/rhodarni_13_en.html

http://www.indiamike.com/india-images/pictures/nilgiri-red-rhododendron-pongal-pooh

https://www.flickr.com/photos/nilgiriswildflora/4225168300

http://www.flickriver.com/photos/tags/nilgirirhododendron/interesting/

http://www.kew.org/mng/gallery/217.html

மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும் மரத்துக்கு எறுழம் என்று சங்க காலப் பெயர் ஒரு காரணப் பெயர் எனலாம். இதன் மலர்கள் நெருப்பை ஒத்த Scarlet சிவப்பு. மேலும், இம்மரங்கள் தங்கள் நீர்ச் சத்தால் காட்டுத் தீ பரவினாலும் அழிவதில்லை. தெறு- என்பது தீச் சூடு. தீப்போல சிவந்த மண்காடுகள் தெற்றிக் காடு/தேரிக்காடு. காட்டுத் தீயாலும் அழியாத வலிமைபெற்ற மரங்கள் எறுழம் (< தெறுழ்-) என்றும் கொள்ளலாம். இவை வெளிநாட்டு மரங்கள் யூகலிப்டஸ், டீ, காப்பி போன்ற தாவரங்களால் அழிந்துவருகின்றன.

நெருப்பு நெருங்காத மரம்:

http://periyarpinju.com/2010/august/page14.php

அந்நிய மரங்களால் அழியும் நீலகிரி ரோடோ டென்ரான் மரங்கள்: காட்டுத்தீயில் இருந்து பறவை, பூச்சிகளை பாதுகாக்கும் அபூர்வ மரம்:

 

ஆனைமலை, பழனிமலை, நீலகிரி என்னும் கொங்குநாட்டு மலைகளில் வளரும் காட்டுப்பூவரசு என்னும் மரத்தின் பூக்கள் எரியும் தீப் போல இருப்பதாலும், காட்டுத் தீயிலிருந்து காத்து பறவை, விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையாலும் எறுழம் என்ற பெயர் பண்டைத் தமிழர் வழங்கினர் எனலாம். அந்த அழகிய நெருப்புப்போன்ற மலர்மாலையை அணிந்த பெண்ணுக்கு ‘எறுழங்கோதை’ என்ற பெயரும் சேவூர் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டில் இருப்பதான செய்தி அம் மரங்கள் தமிழ்நாட்டில் வளரும் மலைகளுக்கு அருகே மக்கள் அப்பூவை மிகக் கொண்டாடினர் எனக் காட்டுகிறது.


எறுழம் -  Rhododendron Nilagiricum (as identified by botanist prof. K. Srinivasan)

                   

                                    























நா. கணேசன்

தேமொழி

unread,
May 18, 2016, 1:59:04 AM5/18/16
to மின்தமிழ்
கோதை என்று ஆண் பெயரும் உண்டே ... 'வில்லவன் கோதை'

3. கால்கோள் காதை

வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.

உரை:
      வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல் வேல் தானைப்படை பல ஏவி - வில்லவன் கோதை யென்னும் அமைச்சனுடன் போரினை வென்று முடித்த பல வேற்படைகளை யுடைய சேனை பலவற்றை ஏவி, பொற்கோட்டு இமயத்து - பொன்னாலாய சிமையத்தினையுடைய இமய மலையின்கண், பொருவறு பத்தினிக் கல்கால் கொண்டனன் காவலன் ஆங்கென் - ஒப்பற்ற பத்தினிக்கடவுட்குக் கற்செய்தலை அடிக்கொண் டான் அரசன் என்க.

       வில்லவன் கோதை - படைத் தலைவனுமாம். கால்கொண்ட னன் - தொடங்கினான் ; கடவுள் வடிவெழுதத் தொடங்கினான் என்றபடி , குட்டுவனாகிய காவலன் காமினெனச் சொல்லி ஏவி இமயத்துக் கல் கால் கொண்டனனென்க.


சிலப்பதிகாரம் - மூலமும்  உரையும்
நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் 

தேமொழி

unread,
May 18, 2016, 2:05:02 AM5/18/16
to மின்தமிழ்


On Tuesday, May 17, 2016 at 10:39:30 PM UTC-7, N. Ganesan wrote:
இனி தலபுராணம் எழுதுபவர்கள், அத்தல விருட்சத்தின்  botanical name என்னவென்றும் எழுதி வைக்கும்   முறையைப் பின்பற்ற வேண்டும்.

Suba

unread,
May 18, 2016, 2:34:10 AM5/18/16
to மின்தமிழ், Dr.Subashini

​மிக பயனுள்ள கட்டுரை.
மரபு விக்கியில் கல்வெட்டு பகுதியில் இணைத்து விடுவோம்.
மின்தமிழ் மேடையிலும் ஒரு பதிவை இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

இதில் அஞ்சாவது என வரும் சொல் வியப்பு தருகின்றது. அப்படியென்றால் அக்காலத்தில் ஐந்தாவது என்ற சொல்பயன்பாடு இல்லை. மாறாக அஞ்சு என்று 5ம் எண்ணை சுட்டுவதாக வழக்கில் கொள்ளலாமா?

படங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.

சுபா

dorai sundaram

unread,
May 18, 2016, 2:54:47 AM5/18/16
to mintamil
சுபா அவர்களுக்கு,
மரபு விக்கியிலும், மின்தமிழ் மேடையிலும் இணைப்பதற்கு நன்றி.
நிறையக்கல்வெட்டுகளில் ஐந்து என்பதற்கு அஞ்சு என்று வருகின்றது.
நாம் இன்று பேச்சு வழக்கில் (எழுத்து நடையில் அல்ல) சொல்லும்
அஞ்சு, குடுத்து, குடுத்தோம் என்று பல சொற்கள் கல்வெட்டில் வருகின்றன.
கணேசன் அவர்களுக்கு,
எறுளம் (எறுழம்) பற்றிய விளக்கங்கள் மற்றும் விரிவான செய்திகளுக்கு
மிக நன்றி. தெரிந்துகொள்ள  கடலளவு செய்திகள் உள்ளன என்பதை
அறியும்போது  என்றும் ‘தமிழ் மாணவனாகவே’ இருப்பதை விரும்புகிறேன்.
சுந்தரம்.

தேமொழி

unread,
May 18, 2016, 3:38:40 AM5/18/16
to மின்தமிழ், ksuba...@gmail.com


On Tuesday, May 17, 2016 at 11:34:10 PM UTC-7, Suba.T. wrote:

​மிக பயனுள்ள கட்டுரை.
மரபு விக்கியில் கல்வெட்டு பகுதியில் இணைத்து விடுவோம்.
மின்தமிழ் மேடையிலும் ஒரு பதிவை இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

மின்தமிழ் மேடையில் இங்கே >>>>> http://mymintamil.blogspot.com/2016/05/mokaneeswarar-temple-stone-inscription-by-doraisundaram.html இணைக்கப்பட்டுள்ளது 
[பிறகு மரபு விக்கியில் இணைக்கத் தேவை என்றக்  குறிப்பெடுத்துக் கொண்டேன் ...விரைவில் இணைத்துவிடுகிறேன்]

..... தேமொழி

N. Ganesan

unread,
May 18, 2016, 10:37:47 AM5/18/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram


On Tuesday, May 17, 2016 at 10:59:04 PM UTC-7, தேமொழி wrote:



கோதை என்று ஆண் பெயரும் உண்டே ... 'வில்லவன் கோதை'

3. கால்கோள் காதை

வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.

உரை:
      வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல் வேல் தானைப்படை பல ஏவி - வில்லவன் கோதை யென்னும் அமைச்சனுடன் போரினை வென்று முடித்த பல வேற்படைகளை யுடைய சேனை பலவற்றை ஏவி, பொற்கோட்டு இமயத்து - பொன்னாலாய சிமையத்தினையுடைய இமய மலையின்கண், பொருவறு பத்தினிக் கல்கால் கொண்டனன் காவலன் ஆங்கென் - ஒப்பற்ற பத்தினிக்கடவுட்குக் கற்செய்தலை அடிக்கொண் டான் அரசன் என்க.

       வில்லவன் கோதை - படைத் தலைவனுமாம். கால்கொண்ட னன் - தொடங்கினான் ; கடவுள் வடிவெழுதத் தொடங்கினான் என்றபடி , குட்டுவனாகிய காவலன் காமினெனச் சொல்லி ஏவி இமயத்துக் கல் கால் கொண்டனனென்க.


சிலப்பதிகாரம் - மூலமும்  உரையும்
நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் 




ஆமாம். கொங்குநாடு சேரர்கள் ஆண்ட நாடு. கோதைமங்கலம் (பழனி), கோதைவாடி (கிணற்றுக்கடவு, கோவை-பொள்ளாச்சி ரோடு. மயில்சாமி அண்ணாதுரையின் ஊர்), ....
சேரர் குலப் பட்டமாகிய கோதை மிகப் பழைய ஆயுதப்படையாகிய வில், அம்பொடும் தொடர்புடையது எனலாம். கோதுதல் - கிழித்தல்/பிளத்தல். உ-ம்: கிளி மாம்பழத்தைக் கோதுகிறது. 
சேரர் குலச் சின்னமாகிய வில், அம்பு செய்யும் தொழிற்பெயராக “கோதை”. குட்டுவன் கோதை, வில்லவன் கோதை, .... சேரரின் சங்ககால நாணயங்களில் வில்லிம் அம்பும் பொறிக்கப்பட்டிருக்கும்.

-----------------------

குடவோட்டுக் கல்வெட்டு கோவன் விச்சாதிரன் மனைவி எறுழங்கோதை என்னும் பெண்மணி வெட்டுவித்தது. அல்லியங்கோதை, தாமரைக்கோதை, ... போல கொங்கின் மலைகளில்
வளரும் காட்டுப்பூவரச மரம் எறுழம் பூவால் அடைந்த பெயர். பவழம்/பவளம் போல எறுழம் பேச்சுத்தமிழில் எறுளம் என வழங்கியிருக்கிறது எனக் குடவோட்டுக் கல்வெட்டு அறிவிக்கிறது.
எறுழம் & தெறுழம் தொடர்புபடுத்தி எழுதுகிறார் பி. எல். சாமி. (1)  தழல் > அழல் (2) திமில் > இமில்  ... போல, தெறுழ்- > எறுழம். திமில்/ர் என்னும் கால்நடை வேளாண்சொல் திமிர (= கருமை, இருள்) என்னும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பிறப்பித்தது. எறுழ மரம் காட்டுத் தீயிலும் சாம்பிப் பொசுங்குவதில்லை, பறவை, பூச்சிகட்கு அடைக்கலம் அளிக்கிறது.  ’நீங்கின் தெறூஉம் ,குறுகுங்கால் தண்ணென்னும் - தீ யாண்டுப் பெற்றாள் இவள்?’ என்று கேட்டவர் வள்ளுவர். எறுழம் என்னும் மரம் எதுவென விளக்கிய பேரா. கு. சீனிவாசன் வள்ளலார் அன்பர், பொள்ளாச்சி சமரச சன்மார்க்க சங்க விழாக்களுக்கு 70களிலே வந்திருக்கிறார். அப்போது அண்ணாமலைப் பல்கலை. வ. ஐ.சு தமிழ்ப் பல்கலைக்கு அழைக்கச் சென்றார். இப்போது ‘எறுழங்கோதை’ கொங்குக் கல்வெட்டில் கிடைப்பது கு. சீனிவாசனின் தேற்றத்துக்கு அரணமைக்கிறது.

தெறு- > எறுழ் (Cf. திமில் > இமில், தழல் > அழல்.


DEDR 3440 Ta. teṟu (teṟuv-, teṟṟ-)

3440 Ta. teṟu (teṟuv-, teṟṟ-) to burn, scorch, be angry, sting (as wasp), punish, destroy; teṟal anger, heat, affliction; tēṟu sting (as of a wasp). Nk. (Ch.) tirup sun's ray. Pa. ted- (tett-), (NE.) ṭeḍ- (ṭeṭṭ-) to be fierce (of sun's heat). Go. (A. Y.) ter- to be fierce (heat of the sun); (Tr.) tarītānā to be hot (of sun); tarīstānā to heat bread over a flame after it has been cooked on the iron; (Ph.) tarrānā, (Ma.) tar̥-, (Ko.) tar- to be fierce (of sun); (Mu.) tars-/taris- to heat (Voc. 1778); (Ma.) ter̥k- to warm oneself by fire, (?) recover from illness (Voc. 1783). Konḍa (BB) teṟ- to be fierce (heat of sun); teṟvel sunshine; (K.; Sova dial.) teṟveli id. / Cf. Mar. tirīp gleam of sunshine, hot blaze. DED(S, N) 2832


எறுவை (dark red) எருவை என்றாகியுள்ளது:

DEDR 817 Ta. eruvai

817 Ta. eruvai blood, (?) copper. Ka. ere a dark-red or dark-brown colour, a dark or dusky colour; (Badaga) erande sp. fruit, red in colour. Te. rēcu, rēcu-kukka a sort of ounce or lynx said to climb trees and to destroy tigers; (B.) a hound or wild dog. Kol. resn a·te wild dog (i.e. *res na·te; see 3650). Pa. iric netta id. Ga. (S.3rēs nete hunting dog, hound. Go. (Ma.) erm ney, (D.) erom nay, (Mu.) arm/aṛm nay wild dog (Voc. 353); (M.) rac nāī, (Ko.) rasi ney id. (Voc. 3010). For 'wild dog', cf. 1931 Ta. ce- red, esp. the items for 'red dog, wild dog'. DED 417, DED(N) 700.


எறுழம் (Cf. DEDR 3440)
DEDR 865 Ta. eṟur̤

865 Ta. eṟur̤ a hill tree with red flowers; eṟur̤am a hill tree. Te. eṟupa, eṟṟa, eṟṟana, eṟṟani redness, red, scarlet, crimson; (K.) Eṟṟana n. pr. 14th cent. author (eṟṟa + anna elder brother); Eṟama n. pr. man (8th cent.; inscr., p. 355); modern names Errayya, Erramma (MBE 1978, p. 355).Kol. (SR.) erroḍī, (Kin.) eroṛi red. Go. (S. Ko.) erra red (Voc. 355; < Te.). Konḍa eṟa, eṟani red. DED(S) 700.


கொங்குச் சோழர்களின் பட்டமான விச்சாதரன் (< வித்யாதர) பற்றிய அழகான வெண்பாப் பார்ப்போம்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages