திருக்குறள் உரைகளும், மறுஆய்வும்!

839 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 1, 2008, 4:48:28 PM11/1/08
to Min Thamizh
 
 
 
தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை வரையப்பட்ட பெருமைக்குரிய நூல் திருக்குறள். அதற்குத்
  1. தருமர்
  2. மணக்குடவர்
  3. தாமத்தர்
  4. நச்சர்
  5. பரிமேலழகர்
  6. பரிதி
  7. திருமலையர்
  8. மல்லர்
  9. பரிப்பெருமாள்
  10. காளிங்கர்

ஆகிய பத்துபேர் உரையெழுதினர் என்று பழைய வெண்பா ஒன்று தெரிவிக்கிறது.

அவற்றுள்;
  1. பரிமேலழகர்
  2. மணக்குடவர்
  3. பரிப்பெருமாள்
  4. பரிதியார்
  5. காளிங்கர்
ஆகிய ஐவர் உரைகள் கிடைத்துள்ளன.
 
  • மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.
  • பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்வது.
  • பரிதியார் உரை பல இடங்களில் நூலறுந்த காற்றாடிபோல் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்பது.
  • காளிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருப்பது.
  • பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருப்பது.
இப்பழைய உரைகளில் பரிமேலழகர் உரையே தனிச்சிறப்போடு திகழ்கிறது. அதனை மூலநூலுக்கு இணையாகப் போற்றுவோரும் உண்டு.
 
சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் திருக்குறளுக்கு வந்துள்ள உரைகள்தாம் எத்தனை! எத்தனை!
  1. நாகை தண்டபாணிப்பிள்ளை
  2. தேவநேயப்பாவாணர்
போன்றோர் புலமையுரை கண்டனர்.
  1. கா.சு.பிள்ளை
  2. மு.வரதராசனார்
  3. இரா.சாரங்கபாணி

போன்றோர் எளியவுரை படைத்தனர்.

  1. வ.உ.சி.
  2. நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை
போன்றோர் காந்தியப் பார்வையில் உரை வடித்தனர்.
  1. கலைஞர் கருணாநிதி
  2. நாவலர் நெடுஞ்செழியன்

போன்றோர் பகுத்தறிவுப் பார்வையில் உரை தந்தனர். பொதுவுடைமைப் போக்கிலும் சமயநோக்கிலும் எழுதப்பட்ட உரைகளும் உண்டு. இவ்வுரைகளில் பலவற்றுள் திருவள்ளுவரின் முகம் தெரியவில்லை. உரையாசிரியர்களின் முகங்களே தெளிவாகத் தெரிகின்றன.

  1. கோ.வடிவேலுச்செட்டியார்
  2. வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்
போன்றோர் தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரை படைத்தனர்.
 
டாக்டர் மு.வ அவர்களின் கையடக்க உரைப்பதிப்பினையொட்டி வெளிவந்துள்ள அவ்வகைப் பதிப்புக்குக் கணக்கில்லை. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது.
  1. பன்மொழிப்புலவர் அப்பாதுரையார்
  2. திரு.வி.க

போன்றோர் விரிவாக எழுதியுள்ள உரைகள் தொடங்கிக் குறளினும் சுருக்கமாக வந்துள்ள திரு.வெற்றிவேலின் ஒரு வரி உரை ஈறாக அமைந்துள்ள உரைகள் கற்பாரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இவை தவிரக் திருக்குறள் குறித்துப் பல்வேறு நோக்கில் வந்துள்ள நூல்களுக்கு அளவில்லை. அவற்றுள்;
  1. திருமணம் செல்வக்கேசவராய முதலியாரின் திருவள்ளுவர்
  2. அறிஞர் வ.சு.ப.மாணிக்கனாரின் வள்ளுவம்
  3. மு.வரதராசனாரின் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
  4. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் திருக்குறள் புதைபொருள்
  5. அறிஞர் வா.செ.குழந்தைசாமியின் வாழும் வள்ளுவம்

போன்றவை புதிய ஒளி வழங்கும் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன.

எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம். ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பரிமேலழகரை நச்சுக்கருத்துகளை விதைத்தவர் என்று குற்றஞ் சுமத்தும் அறிஞர் தேவநேயபாவாணர்கூட அவருடைய பதசாரங்களையும் நுட்பவுரைகளையும் அங்கங்கே அப்படியே ஏற்றுத் தனித்தமிழ்ப்படுத்திப் போற்றிக்கொள்வது காணலாம்.

ஒரு குறளுக்குப் பல பொருள் சொல்லப்படும்போது எது சரியான பொருள் என்பதைத் தெளிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டுப் பண்டைய உரைகளோடு பின் வந்த உரைகள் பலவற்றையும் ஒப்பநோக்கி, அவற்றில் நிலவும் உரை வேற்றுமைகளை ஆய்ந்து தம்முடிபினைத் தந்து "திருக்குறள் உரை வேற்றுமை" என்னும் நூலை முனைவர் இரா. சாரங்கபாணி உருவாக்கியுள்ளார். பல தெளிவுகளைத் தருவது அந்நூல். இத்தனை முயற்சிக்குப் பின்னும் சில குறட்பாக்கள் பெரும்பாலோர் தெரிவிக்கும் விளக்கத்துக்கு வேறான புதிய விளக்கம் காண்பதற்கு இடம் அளிக்கின்றன.

பண்டைய உரையாசிரியர்களையும் இன்றைய அறிஞர்களையும் மயங்கச் செய்யும் குறள்களில் ஒன்றாக அமைச்சு அதிகாரத்தின் இரண்டாவது குறள் அமைந்துள்ளது. அமைச்சர்க்கு இருத்தற்குரிய இயல்புகளைத் தெரிவிக்கும் அக்குறள்:

 
"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
 ஐந்துடன் மாண்ட தமைச்சு." (632)
 
என்பதாகும்.
 
இதில் முதலடியில் நான்கு பண்புகளே குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டாம் அடியில் ஐந்து என்னும் தொகைச்சொல் இடம்பெற்றிருக்கிறது. இந்த வேறுபாடு பொருள் காண்பதில் இடரைத் தோற்றுவித்துள்ளது.

இக்குறளில் ஐந்து தன்மைகள் குறிக்கப்படுவதாகக் கொண்டு பண்டைய உரையாசிரியர்கள் உரைகண்டுள்ளனர். மணக்குடவர் குடிகாத்தல் என்பதைக் குடி என்றும், காத்தல் என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு சேர்த்து, "அஞ்சாமையும் குடிகாத்தலும் இந்திரியங்களைக் காத்தலும் நூன்முகத்தான் அறிதலும் முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சன் ஆவான்," என்று உரையிட்டுள்ளார். பரிப்பெருமாளும் காளிங்கரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.

பரிதியார் குடிகாத்தல் என்பதைப் பிரிக்காமல், கற்றறிதல் என்பதைக் "கற்று" என்றும் "அறிதல்" என்றும் இரண்டாகப் பிரித்து, ஏனையவற்றோடு கூட்டி, "தருகணாண்மை, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, உத்தியோகம் என்னும் அஞ்சு குணமுள்ளவன் மந்திரி என்றவாறு," என்று உரைகண்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும் இவ்வாறே இக்குறளுக்குப் பொருள் கண்டுள்ளார் என்பது தொல்காப்பியப் பொருளதிகார 273ம் நூற்பாவுக்கு அவர் வரைந்துள்ள உரைப்பகுதியில் தெரிகிறது.

 
இப்படிப் பிரித்துப் பொருள் காண்பது இலக்கண நெறிக்குப் பொருந்துவதன்று. "குடிகாத்தல்" என்பதனை இருசொல்லாகப் பிரித்துக் "குடி" என்பதற்குக் குடிகாத்தல் என்று பொருள் கூறுவது பிரித்ததைப் பின்னும் கூட்டுவதாக அமைகிறது. "காத்தல்" என்பதற்கு இந்திரியங்களைக் காத்தல் என்று பொருள் கொள்ளும்போது எதைக் காத்தல் என்பது குறளில் தெளிவாகச் சுட்டப்படவில்லை என்று ஆகிறது. உரை வரைவோர் தாமாக இந்திரியங்களை என்று செயப்படுபொருள் தேடவேண்டி நேரிடுகிறது. எனவே குடிகாத்தல் என்பதனைப் பிரித்து இரண்டாக்குவது ஏற்குமாறு இல்லை.
 
"கற்றறிதல்" என்பதை இருசொற்களாகப் பிரித்தலும் பொருத்தமாக அமையவில்லை. "கற்று" என்பது வினையெச்சமும், "அறிதல்" என்பது தொழிற்பெயரும் ஆகும். "ஓடி ஆடிப் பாடி மகிழ்ந்தான்" என்று வினையெச்சம் அடுக்கி வந்தால், ஓடியும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தான் என்று எண்ணும்மை விரிக்கலாம். "ஓடுதல் ஆடுதல் பாடுதல் மகிழ்ச்சியின் அடையாளம்" என்று அமைந்திருந்தாலும் உம்மை விரிக்கலாம். அவ்வாறன்றி ஒன்று (கற்று) வினையெச்சமும் பிறிதொன்று (அறிதல்) தொழிற்பெயருமாகத் தொடரும் தொடரை உம்மை விரித்துக் கற்றலும் அறிதலும் என்று பொருள் கொள்வது இலக்கண நெறிக்குப் பொருந்தாது. அறிதல் காரியமாகவும் அதற்குக் கற்றல் காரணமாகவும் இருக்கும் தொடரினைக் காட்டுவதாகவே கற்றறிதல் என்பது அமைந்துள்ளது. இலக்கண நெறி மாறாமல் நுட்பமாக உரைகண்ட பரிமேலழகர் அதனால்தான் இவ்விரு வகைப் பிரிப்பையும் ஏற்காமல் வேறுவகையாக உரைகண்டுள்ளார்.

இனிப் பரிமேலழகர் கண்ட உரையினைக் காணலாம். அவர் இக்குறளோடு இதற்கு முன்னுள்ள குறளை இணைத்து உரை வரைந்துள்ளார். இதற்கு முன்னுள்ள குறள்,

"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு." (631)

இரண்டாம் குறளில் இடம்பெற்றுள்ள ஐந்து என்பது அதற்கு முன்னுள்ள குறளில் இடம் பெற்றுள்ளவற்றைச் சுட்டுவதாகக் காட்டினார். ஆனால் அதிலும் ஐந்து பொருள்கள் இல்லை.

  1. கருவி
  2. காலம்
  3. செய்கை
  4. அருவினை
என்னும் நான்கே உள்ளன. அதனால் கருவியைத்
  1. தானை
  2. பொருள்

என்று இரண்டாகப் பிரித்து ஐந்தாக்கிக் கொண்டார். அதனை இக்குறளோடு தொடர்புபடுத்தி, "வினை செய்தற்கண் அசைவின்மையும், குடிகளைக் காத்தலும், நீதிநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்," என்று விளக்கம் தந்துள்ளார்.

பரிமேலழகர் இரண்டாவது குறளில் நான்கு பண்புகளே சுட்டப்படுகின்றன என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஆனால் இக்குறளை மேற்குறளோடு இணைத்து உரை கண்டிருப்பது இயல்பாக இல்லை.

திருக்குறள் நூல் முழுவதிலும் ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு தனிக்கருத்தைத் தெரிவிக்கும் தனித்தனி அலகாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் பண்டைய உரையாசிரியர்கள் அதிகாரக் குறள்வரிசையினைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். எனவே பரிமேலழகர் தரும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

 
இக்குறள் அமைப்பினைக் கூர்ந்து நோக்கினால்,
  • வன்கண்
  • குடிகாத்தல்
  • கற்றறிதல்
  • ஆள்வினை

ஆகிய நான்கும் ஒரு பகுதியாகவும், ஐந்து என்பது மற்றொரு பகுதியாகவும் சுட்டப்பெறுதல் காணலாம். ஓடு (ஆள்வினையோடு) என்னும் உருபும், உடன் (ஐந்துடன்) என்னும் சொல்லுருபும் இப்பிரிவினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

திருக்குறளில் சில இடங்களில் "ஐந்து" என்னும் தொகைச்சொல் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் அஃது எப்பொருளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இங்கு அஃது உணர்த்தும் பொருளை அறுதியிடத் துணைபுரியும்.

திருவள்ளுவர் ஐந்து என்னும் தொகைச்சொல்லால் சுட்டப்படுவன புதியனவாக இருந்தால் அவற்றை விரித்துக் கூறி ஐந்து என்று தொகைச்சொல் கொடுத்து முடிக்கிறார். ஐந்து என்னும் தொகைச் சொல்லால் சுட்டப்படுவன பலருக்கும் எளிதில் அறியக் கூடிய பொருள்களாக இருந்தால் ஐந்து என்று மட்டும் குறித்துச் செல்கிறார். இது திருவள்ளுவர் மேற்கொண்ட நெறியாக அமைந்துள்ளது.

 
  • பொருள், கருவி, காலம், வினை இடனோடு ஐந்தும் (675)
  • பிணியின்மை, செல்வம், கல்வி, விளைவு, இன்பம், ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து (738)
  • உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும் (939)
  • அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து (983)

என்னும் இடங்களில் ஐந்து என்பதால் குறிக்கப்படுவனவற்றை முன்னே கூறிப் பின்னர் ஐந்து என்னும் தொகைச்சொல் குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு விரித்துக் கூறாவிட்டால் அவை யாவை என்பது விளங்காமல் போய்விடும்.

  • உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் (24)
  • ஐந்து அவித்தான் ஆற்றல் (25)
  • ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் (126)

என்னும் இடங்களில் ஐம்பொறிகளைக் கிளந்து கூறாமல் தொகைச் சொல்லால் குறித்துச் செல்வது காணலாம்.

இதனால் ஐம்பொறிகளை விளக்கிக் கூறாமல் ஐந்து என்று குறித்துச் செல்வது திருவள்ளுவரிடம் காணப்படுவதோர் இயல்பு என்பது தேற்றம்.

இதனை மனதில் கொண்டு "வன்கண்" என்று தொடங்கும் குறட்பாவினை நோக்கினால், "வன்கண்மையும் (தளரா முயற்சியும்) குடிகாத்தலும், கற்றறிதலும் ஆள்வினையும் ஆகிய நான்கும் பொறிகள் ஐந்துடனே செம்மையாக உடையவனே அமைச்சனாவான்," என்பதே இதன் பொருள் என்பது விளங்கும்.

அமைச்சன் குறையில்லா ஐம்பொறிகளையும் அவற்றை அடக்கிக் காக்கும் திறனும் உடையவனாக இருப்பதே அவனுக்கு மாட்சியாகும். அரசியல் தலைமை ஏற்போர்க்குப் பொறிகளில் குறை இருத்தல் கூடாது என்பதனால்தான் திருதராட்டிரன் அரசாள முடியவில்லை என்பது பாரதத்தால் விளங்குகிறது. பொறிகளில் குறைபாடுடைய அமைச்சனின் செயற்பாட்டில் இடர்பாடு நேரிடும். பொறிகளின் ஆசைக்கு இடம் கொடுக்கும் அமைச்சன் இடறி விழுந்து தான் அழிவதோடு, தன் அரசனுக்கும் அழிவினை ஏற்படுத்துவான். பெண்ணிடம் கொண்ட காமத்தால் நெறி தவறிய அமைச்சர் சிலரை வரலாறு கண்டிருக்கிறது. இக்கருத்துக்கு ஏலாதி எனும் நூலும் வலிமை சேர்க்கிறது. "நாற்றம் சுவைவெஃகி நல்லார் இனம்சேர்தல் தேற்றானேல் தேறும் அமைச்சு" (17) என்கிறது ஏலாதி.

இவ்வாறு இக்குறளுக்குப் பொருள் கண்டவர் யாரேனும் உண்டோ என்று தேடியபோது, பின்னாளைய உரையாசிரியர்களுள் கடவுள் மறுப்புக் கொள்கை என்னும் தளத்தில் நின்று தம் போக்கில் உரைகண்ட புலவர் குழந்தை ஒருவர் மட்டும் பொருள் கண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. "வன்கண் முதலிய நான்கும், ஐம்பொறித் தூய்மையும் திருந்த உடையவனே அமைச்சனாவான். ஐந்து - தொகைக்குறிப்புச் சொல். வன்கண் முதலிய நான்கோடு ஐம்பொறித் தூய்மையும் உடையவனென்க," என்பது அவரது உரை.

திருக்குறளில் எழும் ஐயங்களுக்குத் திருக்குறளின் துணைகொண்டு தெளிவு தேடினால் தகுந்த விளக்கம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

முனைவர் தெ.ஞானசுந்தரம்,
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
பச்சையப்பன் கல்லூரி
சென்னை
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

annamalai sugumaran

unread,
Nov 2, 2008, 12:30:29 AM11/2/08
to minT...@googlegroups.com
முனைவர் தெ.ஞானசுந்தரம் ஐயா  அவர்கள்
திரு சுஜாதாவின் எளிய சுருக்கமான உரையை கூற மறந்து
விட்டார் போலும் . அது ஒரு தவிர்க்க முடியாத உரை  நூல் என நினைக்கிறேன் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

2008/11/2 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Nov 2, 2008, 3:37:17 AM11/2/08
to minT...@googlegroups.com
முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் சுஜாதாவின் உரையை மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் இலக்கிய வட்டத்தில் பெரும்பான்மையான திருக்குறள் உரைகள் பரிமேலழகர் உரையைச் சார்ந்தே இருப்பதனால்,
முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளின் உரைகளை மட்டுமே இக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போல், சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் திருக்குறளுக்கு வந்துள்ள உரைகள்தாம் எத்தனை! எத்தனை! யார் யார் திருக்குறளுக்கு உறை எழுதியுள்ளனர் என்பதைப் பற்றி,ஒரு தனிக்கட்டுரையே விரைவில் வரக்கூடும்!

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Satheesh kumar R

unread,
Nov 3, 2008, 11:59:37 AM11/3/08
to minT...@googlegroups.com
===============================================================================================
வணக்கம்,

திருக்குறளை எதில் வடித்து வைத்தார் திருவள்ளுவர்? ஒலைச் சுவடியெனில் அது இன்னமும் எங்கேயேனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? யாரேனும் அறிந்திருந்தால் தையை கூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்,
சதீஷ் குமார்

Hari Krishnan

unread,
Nov 3, 2008, 12:21:23 PM11/3/08
to minT...@googlegroups.com


2008/11/3 Satheesh kumar R svp...@gmail.com


வணக்கம்,

திருக்குறளை எதில் வடித்து வைத்தார் திருவள்ளுவர்? ஒலைச் சுவடியெனில் அது இன்னமும் எங்கேயேனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? யாரேனும் அறிந்திருந்தால் தையை கூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன்.

 
என்னாங்ணா இப்படியெல்லாம் கேக்கறீங்க!  ஓலைச்சுவடி என்ன இரும்பாலயும் கல்லாலயுமா பண்ணி வச்சிருக்கு, 2000 வருஷம் தாண்டியும் அப்படியே இருக்க?  மிக நன்றாகப் பராமரித்தால் ஓலைச்சுவடி 200 வருடம் தாங்கும், சில சுவடிகள் 300 வருடங்களும் தாங்குவது உண்டு என்று என் சரித்திரத்தில் உவேசா சொல்கிறார்.
 
அப்படி, மக்கி, உதிர்ந்து போகும் நிலைக்கு சுவடி வந்துவிட்டால் மறுபடி ஒருமுறை பிரதி எடுப்பார்கள்.  அப்படி எடுத்து எடுத்து, கை ஒடிய காப்பி எடுத்து வைத்துதான் இன்றைக்கு இத்தனைச் செல்வங்கள் நம்மை வந்து அடைந்திருக்கின்றன. 
 
மூல ஓலை, அதுவும் திருக்குறளுக்கு, எப்டிங்ணா கிடைக்கும்!  சத்தியமா கிடைக்கவே கிடைக்காது.  பரிமேலழகர் கைப்பட எழுதிய சுவடிகூட கிடைக்கவே கிடைக்காது.  எல்லாம் காலவெள்ளத்தில் காற்றில் கரைந்து போயே போயாயிற்று.  'இதுஇது வேண்டும்' என்று, காதல் மிகுந்து, போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், தணியாத தாகத்தால் நம்முடைய முன்னவர்கள் செய்த பெரிய தொண்டில்லையா பிரதி எடுத்து வைத்தது! 


--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Nov 3, 2008, 4:43:27 PM11/3/08
to minT...@googlegroups.com
2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>:

>
> திருக்குறளை எதில் வடித்து வைத்தார் திருவள்ளுவர்? ஒலைச் சுவடியெனில் அது
> இன்னமும் எங்கேயேனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? யாரேனும்
> அறிந்திருந்தால் தையை கூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன்.
>

இதற்குப் பேர்தான் "அப்துல்கலாம் கேள்வி" என்பது! அவரிடம் தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி விளக்கியபோது இப்படித்தான் கேட்டார். தெரியாமல்
கேட்கவில்லை. வள்ளுவனின் மீது அவருக்குள்ள கட்டற்ற காதலால் அப்படிக்
கேட்டார். வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலை கிடைத்தால் கண்ணில்
ஒட்டிக்கொள்ளலாமே எனும் ஆதங்கத்தால் அப்படிக் கேட்டார். ஏதாவது தெய்வீக
அதிசயம் நடந்தாலன்றி அவ்வோலை 2000 சொச்சம் வருடங்களுக்குப் பிறகு இன்று
கிடைக்க வழியில்லை. ஹரி அண்ணா விளக்கிவிட்டார்.

க.>

Satheesh kumar R

unread,
Nov 3, 2008, 9:31:53 PM11/3/08
to minT...@googlegroups.com
மூல ஓலை, அதுவும் திருக்குறளுக்கு, எப்டிங்ணா கிடைக்கும்!  சத்தியமா கிடைக்கவே கிடைக்காது.  பரிமேலழகர் கைப்பட எழுதிய சுவடிகூட கிடைக்கவே கிடைக்காது.  எல்லாம் காலவெள்ளத்தில் காற்றில் கரைந்து போயே போயாயிற்று.  'இதுஇது வேண்டும்' என்று, காதல் மிகுந்து, போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், தணியாத தாகத்தால் நம்முடைய முன்னவர்கள் செய்த பெரிய தொண்டில்லையா பிரதி எடுத்து வைத்தது! 
--
அன்புடன்,
ஹரிகி.


இதற்குப் பேர்தான் "அப்துல்கலாம் கேள்வி" என்பது! அவரிடம் தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி விளக்கியபோது இப்படித்தான் கேட்டார். தெரியாமல்
கேட்கவில்லை. வள்ளுவனின் மீது அவருக்குள்ள கட்டற்ற காதலால் அப்படிக்
கேட்டார். வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலை கிடைத்தால் கண்ணில்
ஒட்டிக்கொள்ளலாமே எனும் ஆதங்கத்தால் அப்படிக் கேட்டார். ஏதாவது தெய்வீக
அதிசயம் நடந்தாலன்றி அவ்வோலை 2000 சொச்சம் வருடங்களுக்குப் பிறகு இன்று
கிடைக்க வழியில்லை. ஹரி அண்ணா விளக்கிவிட்டார்.

க.>
========================================================================================

உண்மைதான் ஐயா சற்று சிந்திக்காமல் கேள்வி எழுப்பிவிட்டேன், ஒலை எப்படி இத்தனை ஆண்டுகள் இருக்கமுடியும், பிரதி எடுத்து வைத்தவர்களை தெய்வமாக கும்பிட வேண்டும்.

கல்கியின் பார்த்திபன் கனவில் படித்ததாக ஞாபகம்: பார்த்திப மன்னன் வள்ளுவர் கைப்பட எழுதிய ஓலைகளை தன் மகனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்கச் சொல்வதை. இதனை கல்கி கற்பனையாக எழுதினாரோ அல்லது ஏதேனும் ஆதாரத்தோடு எழுதினாரோ தெரியவில்லை!


என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்


வேந்தன் அரசு

unread,
Nov 3, 2008, 9:45:37 PM11/3/08
to minT...@googlegroups.com


2008/11/3 Narayanan Kannan nka...@gmail.com



 
இதற்குப் பேர்தான் "அப்துல்கலாம் கேள்வி" என்பது! அவரிடம் தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி விளக்கியபோது இப்படித்தான் கேட்டார்.
 
கண்ணன் இந்த உலகம்  அழிஞ்சு மின் தமிழ் உறுப்பினர்கள் மட்டும் தப்பித்தால் தமிழ் மரபு அறக்கட்டளை  சேமித்து வைத்ததை மீட்க முடியுமா?
 
பேசாமல் கல்லில் செதுக்கு வைச்சிடலாமே?
 
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

வேந்தன் அரசு

unread,
Nov 3, 2008, 9:53:58 PM11/3/08
to minT...@googlegroups.com
இக்குறள் அமைப்பினைக் கூர்ந்து நோக்கினால்,
  • வன்கண்
  • குடிகாத்தல்
  • கற்றறிதல்
  • ஆள்வினை

ஆகிய நான்கும் ஒரு பகுதியாகவும், ஐந்து என்பது மற்றொரு பகுதியாகவும் சுட்டப்பெறுதல் காணலாம். ஓடு (ஆள்வினையோடு) என்னும் உருபும், உடன் (ஐந்துடன்) என்னும் சொல்லுருபும் இப்பிரிவினைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

திருக்குறளில் சில இடங்களில் "ஐந்து" என்னும் தொகைச்சொல் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் அஃது எப்பொருளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இங்கு அஃது உணர்த்தும் பொருளை அறுதியிடத் துணைபுரியும்.

திருவள்ளுவர் ஐந்து என்னும் தொகைச்சொல்லால் சுட்டப்படுவன புதியனவாக இருந்தால் அவற்றை விரித்துக் கூறி ஐந்து என்று தொகைச்சொல் கொடுத்து முடிக்கிறார். ஐந்து என்னும் தொகைச் சொல்லால் சுட்டப்படுவன பலருக்கும் எளிதில் அறியக் கூடிய பொருள்களாக இருந்தால் ஐந்து என்று மட்டும் குறித்துச் செல்கிறார். இது திருவள்ளுவர் மேற்கொண்ட நெறியாக அமைந்துள்ளது.

 
  • பொருள், கருவி, காலம், வினை இடனோடு ஐந்தும் (675)
  • பிணியின்மை, செல்வம், கல்வி, விளைவு, இன்பம், ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து (738)
  • உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும் (939)
  • அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து (983)

என்னும் இடங்களில் ஐந்து என்பதால் குறிக்கப்படுவனவற்றை முன்னே கூறிப் பின்னர் ஐந்து என்னும் தொகைச்சொல் குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு விரித்துக் கூறாவிட்டால் அவை யாவை என்பது விளங்காமல் போய்விடும்.

  • உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் (24)
  • ஐந்து அவித்தான் ஆற்றல் (25)
  • ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் (126)

என்னும் இடங்களில் ஐம்பொறிகளைக் கிளந்து கூறாமல் தொகைச் சொல்லால் குறித்துச் செல்வது காணலாம்.

இதனால் ஐம்பொறிகளை விளக்கிக் கூறாமல் ஐந்து என்று குறித்துச் செல்வது திருவள்ளுவரிடம் காணப்படுவதோர் இயல்பு என்பது தேற்றம்.

 
மேற்கூறிய லாஜிக்படி குறள் இப்படி இருக்கணுமே
 
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினை
ஐந்தொடு   மாண்ட தமைச்சு." (632)
 
 
வன்கண்
குடிகாத்தல்
கற்றறிதல்
ஆள்வினை
ஐம்புலன்
 
என  பெருமை பெற்றது அமைச்சு

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 12:35:41 AM11/4/08
to minT...@googlegroups.com

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் "

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் வரும் இந்தக்குறளில்
குறிப்பிடப்படும் மலர் எதுவாக இருக்கலாம் .?
எந்த மலரில் ஏகியதால் இறைவனுக்கு பெருமை வந்திருக்கும் ?.
இதுக்குறித்து அறிந்தவர்கள் விளக்கினால் தெரிந்தது கொள்ளலாம் .
எனக்கு சில கருத்துக்கள் இது பற்றி உண்டு , அதையும் சரி பார்க்கலாம் .


அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

2008/11/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


இக்குறள் அமைப்பினைக் கூர்ந்து நோக்கினால்,
  • வன்கண்
  • குடிகாத்தல்
  • கற்றறிதல்
  • ஆள்வினை

 




--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com

Narayanan Kannan

unread,
Nov 4, 2008, 1:02:35 AM11/4/08
to minT...@googlegroups.com
2008/11/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> கண்ணன் இந்த உலகம் அழிஞ்சு மின் தமிழ் உறுப்பினர்கள் மட்டும் தப்பித்தால்
> தமிழ் மரபு அறக்கட்டளை சேமித்து வைத்ததை மீட்க முடியுமா?
>
> பேசாமல் கல்லில் செதுக்கு வைச்சிடலாமே?


சுவாரசியமான கேள்வி.

கணினியின் மூளை "கல்" (மண்) தானே! சிலிகான் :-)

பிரபஞ்சத்தில் சேதிகள் (information) அழிவதில்லை என்பதோர் கோட்பாடு!

மறந்துவிட்டால், எங்கு இச்சிந்தனை வந்ததோ அந்த இடத்திற்குப் போனால்
மீண்டும் ஞாபகம் வந்துவிடும் :-) சிந்தனை கூட அந்தரத்தில் நிற்கும் போல
;-)

க.>

Kannan Natarajan

unread,
Nov 4, 2008, 1:56:36 AM11/4/08
to minT...@googlegroups.com

"மலர்மிசை ஏகினான் குறளில் குறிப்பிடப்படும் மலர் எதுவாக இருக்கலாம்?

எந்த மலரில் ஏகியதால் இறைவனுக்கு பெருமை வந்திருக்கும்?

அடியார்களின் மனமாகிய "தாமரை" மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாது நினைப்பவர், மேலான வீட்டுலகில் அழிவின்றி வாழ்வர்.-  முனைவர் ச.சாம்பசிவனார் உரை.

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 2:29:22 AM11/4/08
to minT...@googlegroups.com

//அடியார்களின் மனமாகிய "தாமரை" மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாது நினைப்பவர், மேலான வீட்டுலகில் அழிவின்றி வாழ்வர்.-  முனைவர் ச.சாம்பசிவனார் உரை.//

பதிலுக்கு நன்றி !

வேறு யாராவது இது வரை மனத்தினை தாமரை மலர் என்று கூறி இருக்கிறார்களா ?
நம் மனமான தாமரையில் இறைவன் குடியேறியபின் , அவரை மேலும் நினைக்க வேண்டுமா ?

//"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் "//
 மனமாகிய தாமரை மலரில்  குடிகொண்ட இறைவனின் திருவடியை நினைப்பவர்
மேலுஉலகதிலேயே இருப்பார்கள் என்பது தான் பொருளா ?
நிலமிசை என்பது மேல் உலகமான வீடா ?
அது இந்த பூமியை குறிப்பது ஆகாதா ?
  தயவு கூர்ந்து எனக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2008/11/4 Kannan Natarajan <thar...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2008, 6:04:27 AM11/4/08
to minT...@googlegroups.com
"தாமரை  நெஞ்சம்" நு பாரதிராஜா ஒரு படம் எடுத்தாருன்னு நினைவு


 
2008/11/4 annamalai sugumaran <amirth...@gmail.com>

வேறு யாராவது இது வரை மனத்தினை தாமரை மலர் என்று கூறி இருக்கிறார்களா ?
நம் மனமான தாமரையில் இறைவன் குடியேறியபின் , அவரை மேலும் நினைக்க வேண்டுமா ?

 
 

Kannan Natarajan

unread,
Nov 4, 2008, 6:13:28 AM11/4/08
to minT...@googlegroups.com

> "தாமரை  நெஞ்சம்"  பாரதிராஜா ஒரு படம் எடுத்தாருன்னு நினைவு

வள்ளுவம் என் சமயம் என்று கூறுபவரிடம் இப்படியான பதிலா!!!!

திரைப்படத்தின் இயக்குனரின் பெயர் தவறு. தாமரை நெஞ்சம் 1968ல் வெளிவந்த படம். அதன் இயக்குனர் கே.பாலச்சந்தர்.

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 6:14:14 AM11/4/08
to minT...@googlegroups.com
நெஞ்சம் வேறு மனம் வேறு !
எல்லா மனிதருக்கும் மனம் உண்டு ,மனம் இருப்பதால் தான்
மனிதன் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்

2008/11/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
"தாமரை  நெஞ்சம்" நு பாரதிராஜா ஒரு படம் எடுத்தாருன்னு நினைவு

Tirumurti Vasudevan

unread,
Nov 4, 2008, 6:16:05 AM11/4/08
to minT...@googlegroups.com
அப்ப நெஞ்சம் என்னது? இதயம்? மனம்? புத்தி? அகங்காரம்? இதெல்லாம் என்ன?
வித்தியாசங்கள் இருக்கா?
திவா

2008/11/4 annamalai sugumaran <amirth...@gmail.com>:


> நெஞ்சம் வேறு மனம் வேறு !
> எல்லா மனிதருக்கும் மனம் உண்டு ,மனம் இருப்பதால் தான்
> மனிதன் .
> அன்புடன்

--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 6:32:23 AM11/4/08
to minT...@googlegroups.com
அந்தகரணங்கள் என்பது வட மொழி , தமிழில் அகக் கருவிகள்
அவை மனம் ( மனஸ்), அறிவு ( புத்தி ) , நினைவு ( சித்தம் ) , முனைப்பு ( அகங்காரம் )
என நான்கு வகைப் படும் .
நமது உடம்பு இத்தகைய  96  தத்துவங்கள ஆனது .
இவைகளை பிறகு பார்ப்போம் . ஞானக்கடவுள்  விநாயகரை சித்தி , புத்தி உடன் பார்த்திருபிர்களே ?
அன்புடன் ,
ஏ .சுகுமாரன் 

2008/11/4 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2008, 6:40:12 AM11/4/08
to minT...@googlegroups.com


2008/11/4 Kannan Natarajan <thar...@gmail.com>


> "தாமரை  நெஞ்சம்"  பாரதிராஜா ஒரு படம் எடுத்தாருன்னு நினைவு

வள்ளுவம் என் சமயம் என்று கூறுபவரிடம் இப்படியான பதிலா!!!!

திரைப்படத்தின் இயக்குனரின் பெயர் தவறு. தாமரை நெஞ்சம் 1968ல் வெளிவந்த படம். அதன் இயக்குனர் கே.பாலச்சந்தர்.
 
ஹி ஹீ
 
எத்தனை நாளுக்கு நானே அறிவாளியாக இருப்பது. நான் கலைஞர் போல இல்லை. எல்லாருக்கும் தக்க வாய்ப்பு கொடுப்பேன்
 
ஒரு புன்சிரி  போட்டுக்கணும்
 

Kannan Natarajan

unread,
Nov 4, 2008, 6:43:08 AM11/4/08
to minT...@googlegroups.com
எந்த மலர் என்ற குழப்பத்தை நீக்கிவிட - பொதுவாக மலர் என்று பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தவுலகில் நிலைத்து நீடூழி வாழ விரும்புபவர் "மலர்" மீது வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளைப் பணிய வேண்டும்,என்று 3ஆம் குறளுக்கு விளக்கவுரை மணிமேகலைப் பிரசுரத்தின் திருக்குறள் உரை தெரிவிக்கிறது.

திவா அவர்கள் பரிணாமக் கோட்பாட்டிற்கு உட்பட்ட "டார்வின்" கருத்தை முன் வைத்து,அறிவியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறார். "படைத்தல் அல்லது தோற்றுவித்தல்" கருத்தை முன் வைப்பதானால் வலுவான கருத்தாக இருப்பின் நலமே.

வேந்தனாரும் "தக்க வாய்ப்பை"யும் அளித்து விட்டார்.

சபாஷ்! சரியான போட்டி, தொடரட்டும்:-):-):-)

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 6:58:37 AM11/4/08
to minT...@googlegroups.com

//மலர்" மீது வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளைப் பணிய வேண்டும்,என்று 3ஆம் குறளுக்கு விளக்கவுரை மணிமேகலைப் பிரசுரத்தின் திருக்குறள் உரை தெரிவிக்கிறது//

மலர்மிசை ஏகினான் என்பதற்கு வீற்றிந்தான்  என்ற பொருள் வராதே ?
ஏகியதால் இறைவன் பெருமைக்கொண்ட அந்த மலரைப்பற்றி
நிச்சயம் நமது பெரியோர்கள் கூறியிருப்பார்கள் .
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் !
ஏ.சுகுமாரன்

2008/11/4 Kannan Natarajan <thar...@gmail.com>
எந்த மலர் என்ற குழப்பத்தை நீக்கிவிட - பொதுவாக மலர் என்று பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்தவுலகில் நிலைத்து நீடூழி வாழ விரும்புபவர் "மலர்" மீது வீற்றிருக்கும் இறைவனின் சிறந்த திருவடிகளைப் பணிய வேண்டும்,என்று 3ஆம் குறளுக்கு விளக்கவுரை மணிமேகலைப் பிரசுரத்தின் திருக்குறள் உரை தெரிவிக்கிறது.



annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 7:13:09 AM11/4/08
to minT...@googlegroups.com

நெஞ்சம் என்பதற்கு மனம் என்றே மு.வா ,மற்றும் சாலமன் பாப்பையா முதலியோர் குறள் உரை , "நெஞ்சம் அடுத்தது காட்டும் முகம் " என்பதற்கு   மனம்  என்று கூறியிருக்கிறார்கள் .
ஆனால் வைர நெஞ்சம், என்கிறோம் , நெஞ்சக்கு நீதி என்கிறோம் ,நெஞ்சம் நிறைய
அன்பு என்கிறோம் .
இத்துடன் மனம் என்பதை பொருத்தி பாருங்கள் .
பொருள் சரியாக வருகிறதா ?
மனம் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது .
நெஞ்சம் மனிதனுடன் மட்டும் இப்போது உருவாகிறது ,
மனிதனுடன் மடிகிறது .
ஏ.சுகுமாரன்



 

2008/11/4 annamalai sugumaran <amirth...@gmail.com>

Kannan Natarajan

unread,
Nov 4, 2008, 7:34:43 AM11/4/08
to minT...@googlegroups.com
மலர்மிசை ஏகினான் என்பதற்கு வீற்றிந்தான்  என்ற பொருள் வராதே?
நிச்சயம் நமது பெரியோர்கள் கூறியிருப்பார்கள்!

கூறியிருக்கிறார்கள் சுகுமாறன்.

சில விளக்கவுரைகள்:

மு.வா. - அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்,இன்ப உலகில் நினைத்து வாழ்வார்.

கருணாநிதி: - மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

சாலமன் பாப்பையா: - மனமாகிய மலர் மீது சென்று வீற்றுப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை, எப்போதும் நினைப்பவர் இப்புவியில் நெடுங்காலம் வாழ்வர்.

Kannan Natarajan

unread,
Nov 4, 2008, 7:36:52 AM11/4/08
to minT...@googlegroups.com

மு.வா. - அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்,இன்ப உலகில் (நினைத்து அல்ல) நிலைத்து வாழ்வார்.

Kannan Natarajan

unread,
Nov 4, 2008, 7:43:04 AM11/4/08
to minT...@googlegroups.com
> மனம் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது .
> நெஞ்சம் மனிதனுடன் மட்டும் இப்போது உருவாகிறது ,
> மனிதனுடன் மடிகிறது.

உய்த்துணர்வாக வெளிப்படுகிறதே தவிர, மனநிறைவு தரும் விளக்கமாக ஏற்றுகொள்ள நற்சான்றுகளோடு மேலும் சிந்திக்க வேண்டும் போல உள்ளது!

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 8:06:55 AM11/4/08
to minT...@googlegroups.com


//மு.வா. - அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்,இன்ப உலகில் நினைத்து வாழ்வார்.

கருணாநிதி: - மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.//

நான் திரும்ப சந்தேகப்படுவது
மலர் என்றால் மனம் என்று எந்த அகராதியில் உள்ளது .
மலர்மிசை என்பதை ஏன் மனம்மீது  என்று பொருள் கொள்ளவேண்டும் .
தயவு செய்து , விளக்குங்கள் .

மலராகிய மனம் என்பது சரியாக படுகிறதா ?
நானும் மூ ,வா வின் ரசிகன் தான் ,
அனைத்து உரையையும் பார்த்து விட்டுதான் இந்த சந்தேகம் .
ஒரு அவாதான் , ஏதாவது நல்ல விஷயம் கிடைக்கும் என்று .
//இன்ப உலகில் நினைத்து வாழ்வார்.//
//புகழ்வாழ்வு,உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்//
எத்தனை முரண்பாடு பாருங்கள்
உங்கள் சிந்தனையில் ஒன்றும் தோன்றவில்லையா ?
அன்புடன்,
ஏ.சுகுமாரன்


 

2008/11/4 Kannan Natarajan <thar...@gmail.com>

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 8:10:07 AM11/4/08
to minT...@googlegroups.com
மனம் பற்றி விரித்தால் இந்த இழை மாறிவிடும் .
மனம் ,நெஞ்சம் , பற்றி தனியே ஒரு இழையில் பார்க்கலாம்
அன்புடன்,
ஏ.சுகுமாரன்


2008/11/4 Kannan Natarajan <thar...@gmail.com>
> மனம் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது .

Satheesh kumar R

unread,
Nov 4, 2008, 9:52:50 AM11/4/08
to minT...@googlegroups.com
<<<<"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் ">>>>

ஐயா,

பிராணனையும் அபானனையும் அடக்கி இரண்டையும் வெளியே போகவிடாமல் ஒன்றை ஒன்று மோத உருவாகும் சூட்டினால் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை தட்டி எழுப்பி சுவாதிட்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை முதலிய சக்கரங்களின் மூலம் மேல் நோக்கி நகர்த்தி, ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாம் சகஸ்ராரத்தில் நிலை நிறுத்தினால் அன்ன ஆகாரமின்றி ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழலாம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

இது இந்த குறளுக்கு பொருந்துமா என்று பாருங்கள்...

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 11:33:22 AM11/4/08
to minT...@googlegroups.com
உண்மை சதிஷ் குமார் ,
இது தான் திருவள்ளுவர் கூறிய மலர் .
நாம் இதை ஒப்புக்கொள்வோமா என்பது கேள்விக்குறிதான் .
நாம் அப்பன் வெட்டியா கிணறு என்று உப்பு தண்ணீர் குடிப்பவர்கக்ள்
வள்ளுவரின் பெருமையே நமது டாம்பிகதால் சரிவர புரிந்து கொள்ளப்படவில்லை
திறந்த மனதுடன் எதையும் அணுகுவது சிறந்த பலனை அளிக்கும் .
ஆனால் இதை ஒப்புகொள்ளச்சொல்லி யாரையும் வற்ப்புறுத்தவில்லை.
இது ஒரு சிந்தனைதான் . நன்றி .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
 .


2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>
<<<<"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

Satheesh kumar R

unread,
Nov 4, 2008, 12:14:51 PM11/4/08
to minT...@googlegroups.com
 நன்றி ஐயா,

ஒரு சந்தேகம், சகஸ்ராரம் என்பதற்கு தமிழ் பெயர் என்ன?


என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்

2008 நவம்பர் 4 22:03 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 12:18:48 PM11/4/08
to minT...@googlegroups.com
சிற்றம்பலம் என நினைக்கிறேன் .
பேரம்பலம் பிரபஞ்சம் .
சிற்றம்பலத்தில் தான் ஆடல் வல்லன் அபூர்வ நடனம் .

அன்புடன்,
ஏ.சுகுமாரன்

2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>
 நன்றி ஐயா,

devoo

unread,
Nov 4, 2008, 12:21:27 PM11/4/08
to மின்தமிழ்
On Nov 4, 7:52 pm, "Satheesh kumar R" <svp...@gmail.com> wrote:
//அன்ன ஆகாரமின்றி ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழலாம் என்று எங்கோ படித்த
ஞாபகம்.//

ஆஹா ! வெளுத்து வாங்குகிறார் சதீஷ்.

மூலாதாரம்,
மணிபூரகம்,
ஸ்வாதிஷ்டாநம்,
அநாஹதம்,
விசுத்தி,
ஆக்ஞா என்பது சரியான வரிசை.

மூலாதாரத்தில் ஒரு கனலாக மூண்டெழும் குண்டலினி ஸஹஸ்ராரத்தில் தாமரையை
மலரச்செய்து தண்மை நிறைந்த அமுத ஊற்றைப் பெருகச் செய்கிறது.

தேவ்

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 12:30:55 PM11/4/08
to minT...@googlegroups.com
சித்தாகாசம் என்றும் கூறப்படுவதுண்டு .
பாற்கடல் தான்  milky way .

அன்புடன்,
ஏ.சுகுமாரன்

2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>
 நன்றி ஐயா,

Narayanan Kannan

unread,
Nov 4, 2008, 5:23:14 PM11/4/08
to minT...@googlegroups.com
வாழ்த்துக்கள். நேற்றிரவு இக்கருத்து என்னுள்ளும் தோன்றியது, சில மாறுதல்களுடன்.

வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்தில் கேட்டது. மிகச்சரியாக நாடிகளின்
பெயர் தெரியவில்லை. கருத்து இதுதான். அதாவது,

இதயக்கமலம் எனும் பயன்பாடு நீண்டநாட்களாக நம் மண்ணில் உள்ளது. வேத
காலத்திலிருந்து இறைவன் நம் இதயத்தில் வாழ்கிறான் என்று சொல்வதுண்டு.
இறைவன் எங்கு, எங்கு? என்று தேடமுடியாதற்குக் காரணமும் இதுவே. அவன்
நாமாகவே இருந்து செயல்படுத்துகிறான் என்பது இந்திய நோக்கு.

மேலும் இங்கு "நிலம்" என்பது புவி அல்ல. அது புவி எனில் 'புவிமிசை' என்று
கையாண்டிருப்பார் வள்ளுவர். இங்கு நிலம் என்பது 'திருநாடு' அல்லது
'வைகுந்தம்' (உம்.அருளொடு "பெருநிலம்" அளிக்கும் - என்பது கலியன்
வாக்கு).

இந்த இதயக்கமலத்தில்தான் ஆழ்துயிலில் ஆன்மா அடங்குகிறது. இதை
நித்தியப்பிரளயம் என்பர். ஒவ்வொருநாளும் நாம் புதிது, புதிதாய்
உயிர்த்தெழுகின்றோம் (இயேசு கதை நினைவிற்கு வருகிறது).

சதீஷ் சொல்லுகின்ற கிரமம் பிராணன் வெளியேறுவதைத்தான் வேதம் முதல், யோக
சாத்திரங்கள் பேசுகின்றன. ஆனால் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்
வேறுவகையாகச் சொன்னார். அதாவது, இதயத்தினுள்ளே சில நாடிகள் உண்டாம்
(மீண்டும் கேட்டால் பெயர்களை எடுக்கமுடியும்). அந்த நாடிகளுள் முதன்மையான
நாடி ஒன்று உண்டாம். அந்த நாடியில் பிராணனை நிறுத்திக் காத்திருக்க
விஷ்ணு தூதர்கள் வந்து வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்வர் என்று
சொன்னார். "தூதர்கள்" போன்றவை metaphor என்று கொண்டாலும் வள்ளுவர் இந்த
யோகமுறையைத்தான் அப்பாடலில் சொல்கிறார் என்று கொள்ளமுடியும்.

வேளுக்குடி இப்பாடலுக்கான பொருள் இது என்று சொல்லவரவில்லை. வேறொரு
இழையில் பேசிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்.

பொருந்துகிறது. சரியாக!!

கண்ணன்


2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2008, 9:14:38 PM11/4/08
to minT...@googlegroups.com
2008/11/4 Satheesh kumar R <svp...@gmail.com>
<<<<"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
இருக்கும் பொருளைவிட்டு
இல்லாத பொருள் தேடி
ஏதேதோ சொல்லுகிறார்
ஞானத்தங்கமே இவர்
ஏதும் அறியாரடி ஞானதங்கமே!

Satheesh kumar R

unread,
Nov 4, 2008, 9:25:12 PM11/4/08
to minT...@googlegroups.com
2008 நவம்பர் 5 07:44 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

இருக்கும் பொருளைவிட்டு
இல்லாத பொருள் தேடி
ஏதேதோ சொல்லுகிறார்
ஞானத்தங்கமே இவர்
ஏதும் அறியாரடி ஞானதங்கமே!
===================================
வேந்தர் ஐயா,

உண்மைதான் யாமொன்றும் அறியோம்,
அறியாதவற்றை அறிந்துகொள்ளவே அடியேன் அறிஞர்களை நாடி வந்துள்ளேன்.
தாங்களும் உதவுங்கள்....

devoo

unread,
Nov 4, 2008, 9:57:15 PM11/4/08
to மின்தமிழ்
On Nov 5, 3:23 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
// மேலும் இங்கு "நிலம்" என்பது புவி அல்ல. அது புவி எனில் 'புவிமிசை'
என்று
கையாண்டிருப்பார் வள்ளுவர். இங்கு நிலம் என்பது 'திருநாடு' அல்லது
'வைகுந்தம்' //

’நிலம்’ என்பதை வைகுந்தம் என்று கொண்டால் காமத்துப் பாலில் இடம் பெறும்
‘தாமரைக் கண்ணான் உலகு’ என்பதுடன் ஒத்திருக்கும். அங்கு பெறும்
பேரானந்தத்தோடு ஒப்பீடு செய்யப்படுகிறது.
ஆறு வைதிக மதங்களுள் ‘யோகம்’ கூறும் ’ஸுஷும்னா நாடி’ மூலாதாரத்தையும்
ஸஹஸ்ராரத்தையும் இணைப்பது.
‘வேதாந்தம்’ கூறும் ‘ஸுஷும்னா நாடி’ ஹ்ருதயாகாசத்தையும்
ஸஹஸ்ராரத்தையும் இணைப்பது.
காம்பறத் தலை சிரைத்துக் கடைத்தலை இருந்து, எம்பெருமானையே
ஸித்தோபாயமாகப் பற்றி வாழும் ஜீவனுக்கு முடிவில் வழி காட்டும்
பொறுப்பையும் பரமனே ஏற்கிறான்.
அதையொட்டி வேளுக்குடி அவர்கள் கூறியதும் அமைந்துள்ளது.
உபநிஷத் கூறிய முறையிலேயே பெரியவர்கள் ஆராய்ந்து ‘யோகம்’, ‘வேதாந்தம்’
இரண்டும்
ஸுஷும்னா நாடி விஷயத்தில் வேறுபடுவதைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
(தெய்வத்தின் குரல்)

தேவ்







Narayanan Kannan

unread,
Nov 4, 2008, 10:09:56 PM11/4/08
to minT...@googlegroups.com
நன்றி தேவ்,

அதே போல் "நீடு வாழ்வார்" என்பதையும் "அமரத்தன்மையுடன்" என்று கொள்ள
வேண்டியுள்ளது. இவர்கள் தேவர்கள் அல்ல. தேவர்களும் சம்சாரிகளே.
அவர்களுக்கு 'பதிவிக்காலம்' உண்டு. ஆயின் இறைவனுடன் சேர்ந்து வாழும்
வைகுந்தவாசிகளுக்கு 'காலம் நித்யமாய் அழிந்துவிடுகிறது. எனவே அவர்களைத்
தேவர்களிடமிருந்து வேறுபடுத்த "நித்யசூரிகள்" எனும் பதத்தைப்
பயன்படுத்துகின்றனர்.

எனவே வள்ளுவர் இக்கருத்தை, மலர்மிசை ஏகினான் (இறைவன்) மாணடி வேண்டும்
போது (சரணாகதி), அவனே இச்ஜீவனை தன் இல்லத்திற்கு அழைத்துக் கொள்கிறான்
என்றும் அதன் பின் அவன் நீடு வாழ்வான் (நித்யசூரியாய்) என்றும் கொள்ள
வேண்டியுள்ளது.

வள்ளுவர் இந்திய உள்ளத்தின் நாடி பிடித்து குறள் செய்தவர்.

கண்ணன்

2008/11/5 devoo <rde...@gmail.com>:

annamalai sugumaran

unread,
Nov 4, 2008, 11:25:03 PM11/4/08
to minT...@googlegroups.com
//இருக்கும் பொருளைவிட்டு
இல்லாத பொருள் தேடி
ஏதேதோ சொல்லுகிறார்
ஞானத்தங்கமே இவர்
ஏதும் அறியாரடி ஞானதங்கமே!//
 
 
 
வேந்தர் ஐயா ,

தந்தை பெரியாரிடம் ஒரு நிருபர் , இவ்வளவு தீவிரமாக கடவுளை எதிர்கிறிர்களே ,
அவர் நேரில்வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டார் .
பெரியார் சற்று கூட தயங்காமல் , அவரே நேரில் வந்துவிட்டால் கடவுள் இருக்கிறார் என ஒப்புகொள்வேன் , வேறு வழி என்ன இருக்க்கிறது  என்றார்

அப்படித்தான் இந்தகுறளுக்கு மிக பொருத்தமான அர்த்தம் கூறிவிடுங்கள் .
நாங்களும் உங்களுக்கு வாழ்க போட்டுவிட்டு உங்கள் பக்கம் வந்து விடுகிறோம் .
எங்களுக்கு எந்த பிடிவாதமும் இல்லை .

 96 தத்துவங்களைப்பற்றி திரு மூலர் பாடல்
""முப்பதும் முப்பதும்
முப்பதருவரும்
செப்ப மிதிளுடைக்
கோயிலுள் வாழ்வார்கள் "


அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

2008/11/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2008, 9:55:13 PM11/5/08
to minT...@googlegroups.com


2008/11/4 annamalai sugumaran <amirth...@gmail.com>

//இருக்கும் பொருளைவிட்டு
இல்லாத பொருள் தேடி
ஏதேதோ சொல்லுகிறார்
ஞானத்தங்கமே இவர்
ஏதும் அறியாரடி ஞானதங்கமே!//
 
 
 
வேந்தர் ஐயா ,

தந்தை பெரியாரிடம் ஒரு நிருபர் , இவ்வளவு தீவிரமாக கடவுளை எதிர்கிறிர்களே ,
அவர் நேரில்வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டார் .
பெரியார் சற்று கூட தயங்காமல் , அவரே நேரில் வந்துவிட்டால் கடவுள் இருக்கிறார் என ஒப்புகொள்வேன் , வேறு வழி என்ன இருக்க்கிறது  என்றார்

அப்படித்தான் இந்தகுறளுக்கு மிக பொருத்தமான அர்த்தம் கூறிவிடுங்கள் .
நாங்களும் உங்களுக்கு வாழ்க போட்டுவிட்டு உங்கள் பக்கம் வந்து விடுகிறோம் .
எங்களுக்கு எந்த பிடிவாதமும் இல்லை 

 
அன்பின் சுகுமாரன்
 
அந்த குறளுக்கு என்ன பொருள்னு உங்களுக்கு தோணுதோ அதுதான் பொருள்
 
வள்ளுவர் திருக்குறளை நம்போல் எளிய மக்களுக்குதான் 1.75 அடியில் எழுதி இருககார்/
 
அரும் சொற்பொருள் தேவைனா தரலாம்.

Hari Krishnan

unread,
Nov 5, 2008, 11:05:43 PM11/5/08
to minT...@googlegroups.com


2008/11/6 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

 
அன்பின் சுகுமாரன்
 
அந்த குறளுக்கு என்ன பொருள்னு உங்களுக்கு தோணுதோ அதுதான் பொருள்
 
வள்ளுவர் திருக்குறளை நம்போல் எளிய மக்களுக்குதான் 1.75 அடியில் எழுதி இருககார்/
 
 
அன்புள்ள திரு வேந்தன் அரசு,
 
எங்கேயிருந்து இந்த ஒண்ணே முக்கால் அடி கதையைப் பிடிக்கிறீர்கள்? :D (கோவம் இல்லீங்கணா.. மெய்யாலுமே சிரிச்சிட்டுதான் கேக்கறேன்.)
 
திருக்குறள் ஒண்ணே முக்கால் அடி என்று சொல்வது தவறு ஐயா.  அதுவும் வள்ளுவம் என் சமயம் அப்படின்னு சொல்ற நீங்க இப்படி சொல்லவே கூடாது.  யாப்பிலக்கண விதிகளின்படி, முதலடி நான்குசீர், இரண்டாம் அடி மூன்று சீர் என்று அமைவது குறள்வெண்பா.  ஈற்றடி முச்சீராக அமைவது சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை வெண்பாக்களுக்கும், குறள் வெண்பாவுக்கும் இயல்பு. 
 
ஆகவே அந்த மூன்று சீர்களால் ஆன அடியை ஒரு முழு அடியாகத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.  குறள் இரண்டு அடிகளால் ஆனது.  ஒண்ணேமுக்கால் அடியால் அன்று.
 
'இல்ல இல்ல, நாந்தான் கரெக்டு' என்று யாராவது பிடிவாதம் பிடித்தீர்களானால், நாலடியார் என்ற பெயரையும் மாற்றி மூணேமுக்கால் அடியார் என்று அழைக்கவும்.  அதன்பிறகு திருக்குறள் ஒண்ணேமுக்கால் அடி என்று சொல்லலாம்.  :-)))



--
அன்புடன்,
ஹரிகி.

Tirumurti Vasudevan

unread,
Nov 6, 2008, 12:23:06 AM11/6/08
to minT...@googlegroups.com


2008/11/6 Hari Krishnan <hari.har...@gmail.com>


'இல்ல இல்ல, நாந்தான் கரெக்டு' என்று யாராவது பிடிவாதம் பிடித்தீர்களானால், நாலடியார் என்ற பெயரையும் மாற்றி மூணேமுக்கால் அடியார் என்று அழைக்கவும்.  அதன்பிறகு திருக்குறள் ஒண்ணேமுக்கால் அடி என்று சொல்லலாம்.  :-)))

:-))))))))))))))))))))))))))))
thivaa

வேந்தன் அரசு

unread,
Nov 6, 2008, 8:53:40 PM11/6/08
to minT...@googlegroups.com


2008/11/5 Hari Krishnan hari.har...@gmail.com


 
 
ஆகவே அந்த மூன்று சீர்களால் ஆன அடியை ஒரு முழு அடியாகத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.  குறள் இரண்டு அடிகளால் ஆனது.  ஒண்ணேமுக்கால் அடியால் அன்று.
 
 
நன்றிங்க.
 
இனிமேல் குறள்பா அடியால ஆனதுனு என் பா மர மண்டையில், ஏத்திக்கிறேன்.
 
இரண்டு அடி ஆனால் ஒன்னே முக்கால் வரி

devoo

unread,
Nov 7, 2008, 2:14:59 AM11/7/08
to மின்தமிழ்
// Nov 7, 6:53 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:

// இரண்டு அடி ஆனால் ஒன்னே முக்கால் வரி//

பண்களோடு இசைவித்துக் கானல்வரி பாடிய காலத்தில் நாம் இப்போது இல்லை.
உரைநடையில்தான் வரிகள் இடம்பெறும். பாக்களில் அடி மட்டுமே.
பாக்களைப் பண்ணோடு கற்றுத்தரும் முறையும் நின்று விட்டது.
முற்போக்குச் சிந்தனையாளரான தாங்கள் அறியாததா?

தேவ்

Hari Krishnan

unread,
Nov 7, 2008, 5:01:33 AM11/7/08
to minT...@googlegroups.com


2008/11/7 devoo <rde...@gmail.com>
பாக்களில் பயில்வதை அடி என்று சொல்வதே வழக்கம்.  மாத்திரை, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன பாவின் உறுப்புகள்.  The components that go into the making of a verse.  பாவில் பயில்வது அடி எனப்படும்.  வரி என்று சொல்லப்படுவதில்லை. 
 
மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடை வகை எனாஅ.................
நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என
வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே.
 
நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே.
அடி உள்ளனவே தளையொடு தொடையே.
அடி இறந்து வருதல் இல் என மொழிப.
அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே.
 
தொல்காப்பியம், செய்யுளியல். 
 
இன்னொன்று.  நேரிசை ஆசிரியப்பாவில் ஒவ்வோரடியும் நான்கு நான்கு சீர்களாலும், கடைசி அடிக்கு முந்தைய அடி (ஈற்றயலடி) மூன்று சீர்களாலும் அமையும்.  ஈற்றயலடியில் ஒரு சீர் குறைந்தாலும் அது முழு அடிதான்; முக்கால் அடியி்ல்லை.  இந்த ஒண்ணே முக்காலடிக் கணக்கைப் பலர் சொல்கிறார்கள்.  அப்படி இல்லை என்று சொல்வதற்காகவே இதைப் பேசினேன். 
 
அது போகட்டும்.  திருக்குறள் உரை மறு ஆய்வுகளுக்குத் திரும்புவோம்.

வேந்தன் அரசு

unread,
Nov 7, 2008, 6:26:43 AM11/7/08
to minT...@googlegroups.com


2008/11/7 devoo <rde...@gmail.com>
முதலடிக்கு அடுத்த அடி அதன் முக்கால்வாசிதானே அதை எப்படி சொல்லுவீர்களாம்?
 
தமிழில் சொல்லே இல்லையோ?
 
முழு அடியானாலும் முக்கால் அடியானாலும் அடி அடிதான்
 
குறளடி ஒன்னு இருக்காமே? அதி ஏமி?
--

Hari Krishnan

unread,
Nov 7, 2008, 6:54:40 AM11/7/08
to minT...@googlegroups.com


2008/11/7 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

 
 
முழு அடியானாலும் முக்கால் அடியானாலும் அடி அடிதான்
 
செம அடி.
 
 
குறளடி ஒன்னு இருக்காமே? அதி ஏமி?
 
இங்க போயி பாருங்க: http://www.tamilnation.org/literature/pmunicode/mp258.htm
 
குறளடி யிருசீர் சிந்தடி முச்சீ
ரளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி
கழிநெடிலடி யைந்தே கடந்த சீரிவற்று
ளெண்சீர் மிக்கடி யெனிற்சிறப் பன்றே.
இரண்டு இரண்டு சீர்களாகப் போட்டால் குறளடி.  (வாசி தீரவே||காசு நல்குவீர்||மாசின் மிழலையீர்||ஏச லில்லையே--திருஞான சம்பந்தர்.)  மூன்று சீர்களால் அமைந்த அடி என்றால் அது சிந்தடி (சிந்து அடி).  நான்கு சீர்களால் அமைந்தால் அளவடி.  ஐந்துசீர் நெடிலடி.  ஐந்துக்கு மேல் எல்லாமே கழிநெடிலடி.  எண்சீருக்கு மேல் ஓர் அடியில் இருந்தால் சிறப்பில்லை என்று மேற்படி சூத்திரம் சொன்னாலும், அடிக்கு 130 சீர்கள் கொண்ட பாக்களும் உண்டு. திருப்புகழ், திருவகுப்பு.... என்று ஓர் அடியில் சீர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கில்லை. 
 
ஏமி? இப்புடு தெலுசா?
 
யாப்பிலக்கணத்துக்குள் இறங்குவானேன் ஆப்பலக்கணப் படுவானேன்!!! (ஆப்பு அலக்கண் அப்படின்னேன்....)

வேந்தன் அரசு

unread,
Nov 8, 2008, 9:50:58 AM11/8/08
to minT...@googlegroups.com


2008/11/7 Hari Krishnan hari.har...@gmail.com

 
ஏமி? இப்புடு தெலுசா?
 
பாகனே!
பேகனே! (கன்னடம்)
 
இப்போ ஒன்னு புரிஞ்சது
 
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்
 
குட்டி அடி குறளடி.
அதனால் 16 அடி போட்டால் தான் தாயோடு ஓட முடியும்
 
அவனா? காதா?
 
Reply all
Reply to author
Forward
0 new messages