சங்கத்தமிழ் நாள்காட்டி : சங்க இலக்கியப்பாடல்கள்—விளக்கங்கள் ஓவியங்களுடன்

177 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 31, 2025, 6:54:57 PMJul 31
to மின்தமிழ்
Screenshot 2025-08-01.jpg

அவள் கண்களைக் காண்பதற்கு முன்புவரை

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே!
... இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே! (நற். 160:1-3, 10,11)
        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
பாங்கனே! குளிர்ந்த கண்களையுடைய தலைவியைக் காண்பதற்கு முன்பு வரை,
அறத்துடன் பழகும் முறையும் நட்பும் நாணமும்
பயன் தரும் வகையில் செயல்படுவதும்
நற்பண்பும் பிறர் தன்மை அறிந்து ஒழுகும் பண்பாடும்
உன்னைப் போலவே என்னிடமும் இருந்தன.

O my friend! There was a time,
When I excelled you in equity, friendliness,
Modesty, usefulness, cultured mien and amicability.
But it was prior to meeting this girl of tranquil eyes!

தேமொழி

unread,
Aug 2, 2025, 12:13:59 AMAug 2
to மின்தமிழ்
Screenshot 2025-08-02.jpg

மழை வேண்டி, குறவர் எடுக்கும் வழிபாடு

அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
'அணங்கொடு நின்றது மலை வான் கொள்க' என,
கடவுள் ஓங்குவரை பேண்மார், வேட்டு எழுந்து,
கிளையொடு மகிழும் குன்ற நாடன்! (நற். 165:1-5)

        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
பெரிய கண்ணை உடைய காட்டுப்பசுவின் நெஞ்சில்
குறிவைத்து, கானவன் ஓர் அம்பினை எய்தான். அந்த அம்பு குறி தவறியது.
குறி தவறியதால், இந்த மலையில் ஒரு தெய்வம் இருக்கிறது என்று எண்ணினான்.
அந்தத் தெய்வத்திடம் மழை வேண்டிப் பூசை செய்வோம் என்று கருதி,
தன் உறவினர்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்து படையல் போட்டு
மகிழும் மலை நாட்டுத் தலைவன்.

As his dart misses its target, a wild cow,
A hunter ascibes it to the fury of a powerful hill deity.
To allay her, he prays with his kin,
For the rain clouds to settle on the hill.


தேமொழி

unread,
Aug 2, 2025, 8:35:14 PMAug 2
to மின்தமிழ்
Screenshot 2025-08-03.jpg

குறவர் உண்ணும் தேன்

சுரும்பு உண விரிந்த கருங்கால் வேங்கைப்
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல்அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன்தலை மந்தி வன்பறழ் நக்கும்! (நற். 168:1-5)

        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
கரிய அடிப்பாகத்தையுடைய வேங்கை மரப் பூக்களில் உள்ள தேனை வண்டுகள் உண்ணும்.
அந்த மரக் கிளையில் தொங்கிய தேன்கூட்டிலிருந்து வடிந்த தேன்,
பாறை இடுக்கில் தேங்கியது.
குறவர் குடிச் சிறுவர்கள் அந்தத் தேனை உண்டனர். எஞ்சிய தேனை,
சிறிய தலையை உடைய குரங்குக் குட்டிகள் நக்கும்

Venkai trees are loaded with honey-laden flowers;
When buzzed by swarms of bees
The dripping honey fills the pits on the rock below,
The mountain dwellers relish it;
The leftover honey is enjoyed by the infants of the downy-headed monkeys.

Dr. Chandra Bose

unread,
Aug 3, 2025, 1:35:37 AMAug 3
to mint...@googlegroups.com
நற்றிணையில் அனைத்து பாடல்களுக்கும்  எழுதியவர் யார் என பேராசிரியர் அவ்வை துரைசாமி அவர்கள் கண்டறிந்து தான் பதிப்பித்த நூலில் தந்துள்ளார். 1970 வாக்கில் அது வெளிவந்தது. இது விஷயமாக நான் அவரை மதுரை அண்ணா நகர் வீட்டில் சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். அதற்கு வழிகாட்டியவர் பேராசிரியர் கண. சிற்சபேசன். 

சந்திர போஸ் 
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/872f6550-03ed-4f52-b543-f8e1e4a19cbcn%40googlegroups.com.

தேமொழி

unread,
Aug 3, 2025, 7:06:56 PMAug 3
to மின்தமிழ்
Screenshot 2025-08-04.jpg

உண்மையைச் சொல்

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ! (குறுந். 75:1-2)
        படுமரத்து மோசி கீரனார்

பொருள்:
பாணனே! தலைவன் வருவதை நீ கண்டாயா? அல்லது
வருவதைக் கண்ட பிறர் கூறியதைக் கேட்டாயா?
தலைவனின் வருகை குறித்த உண்மை நிலையை
அறிந்துகொள்ள விரும்புகிறேன். சொல்வாயாக!

(The Heroine enquires with the bard about the Hero's return)
Did you see for yourself? Or heard from those who saw?
I'd like to know for sure; please tell me!

தேமொழி

unread,
Aug 4, 2025, 9:24:31 PMAug 4
to மின்தமிழ்
Screenshot 2025-08-05.jpg

கொல்லிப்பாவை போன்றவள்

கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்இயல் பாவை அன்ன இம்
மெல்இயல் குறுமகள் பாடினள் குறினே! (குறுந். 89:4-6)
        பரணர்

பொருள்:
அச்சம் தரும் கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில்,
பெரிய கண்களையுடைய கொல்லிப் பாவையின் ஓவியம் தீட்டப்பெற்றுள்ளது.
அந்தக் கொல்லிப் பாவையைப் போல்
அழகான மென்மைத் தன்மை கொண்ட தலைவி,
பாடிக் கொண்டே உரலில் இடிக்கிறாள்.

This pleasant young girl resembles
The painting of beautiful dark eyed goddess
Drawn on west side of kolli hills.

தேமொழி

unread,
Aug 5, 2025, 8:12:02 PMAug 5
to மின்தமிழ்
Screenshot 2025-08-06.jpg

அவர் செல்லமாட்டார், அழாதே!

வினையே ஆடவர்க்கு உயிரே, வாள்நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே! (குறுந். 135)
        பாலை பாடிய பெருங்கடுங்கோ

பொருள்:
ஆண்களுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது உயிராகும்.
அழகான நெற்றியுடைய, இல்வாழ்க்கையில் ஈடுபட்ட
பெண்களுக்கு அவர்தம் ஆடவர்களே உயிராவர் என்று
நமக்கு எடுத்துக் கூறியவர் தலைவர். அப்படிப்பட்டவர்
உன்னை விட்டுப் பிரிந்து போக மாட்டார். அழாதே!

It was he who told us "Work is the life of men;
But men are life of bright faced homebound women"
So don't cry my friend! He will not leave.

தேமொழி

unread,
Aug 7, 2025, 2:30:42 AMAug 7
to மின்தமிழ்
Screenshot 2025-08-07.jpg

முழவும் யாழும்

அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்! (பட்டினப். 252-254)
         கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
விழாக் காலங்களில்,
அரிய மதிப்புடைய மணக்கும் பூக்களைத் தெருவில் தூவுவர்,
கூத்தர்கள், பெரிய வாய்ப்பகுதியைக் கொண்ட முழவினையும்
நன்கு முறுக்கேறிய நரம்புகளைக் கொண்ட இனிய இசையை
வழங்கும் யாழினையும் இசைப்பர்.

In the grand festivals celebrated
On the streets strewn with expensive fragrant flowers,
Artists with ancient wisdom danced and sang
With sweet sounds of drums
And yaal with tightly twisted strings.

தேமொழி

unread,
Aug 7, 2025, 11:10:07 PMAug 7
to மின்தமிழ்
Screenshot 2025-08-08.jpg

பண்பில்லாதவன் படைத்த உலகம்

படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ்வுலகம்!
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே! (புறம். 194:5-7)
        பக்குடுக்கை நன்கணியார்

பொருள்:
படைப்புத்தொழிலைச் செய்பவன் பண்பில்லாதவன்.
இந்த உலகத்து இயற்கை என்பது கொடியது.
வாழும்  முறை அறிந்தோர், துன்பத்திலும் இன்பம் காணுமாறு
வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.

He created this world with inequality, the unjust one!
This world is full of pain;
Those who realize its nature,
Do good deeds.

தேமொழி

unread,
Aug 8, 2025, 7:50:05 PMAug 8
to மின்தமிழ்
Screenshot 2025-08-09.jpg

எத்திசைச் செலினும்

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே! அதனால்
காவினெம் கலனே, சுருக்கினெம் கலப்பை,
மரம்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே,
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! (புறம். 206:8-13)
        ஒளவையார்

பொருள்:
இவ்வுலகம் அறிவும் புகழும் உடையவர்கள் இல்லாமல்
வெறுமை ஆகிவிடவில்லை. ஆதலால், நான் எனது
காவுதடியை எடுத்து அதில், இசைக் கருவிகள் இருக்கும் பையைக் கட்டிவிட்டேன்.
கோடரியுடன் தச்சரின் சிறுவர்கள் காட்டுக்குள் சென்றால்
அவர்களுக்குத் தேவையான மரங்கள் கிடைக்கும்.
அதைப் போல் என்னைப் போன்றோர்,
எத்திசைக்குச் சென்றாலும் அங்கு எனக்குச் சோறு கிடைக்கும் (பரிசில் கிடைக்கும்).

This world hasn't run out of famed wise people!
So I gather my musical things and leave this place;
Forests will always provide for skilled carpenters;
Whichever direction I go, there will be those who value me.

தேமொழி

unread,
Aug 9, 2025, 9:16:41 PMAug 9
to மின்தமிழ்
Screenshot 2025-08-10.jpg
வேறிடம் செல்கிறேன் இளவெளிமானே!

பெரிதே உலகம், பேணுநர் பலரே!
மீளி முன்பின் ஆளிபோல,
உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன் வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவோரே! (புறம். 207:7-11)
        பெருஞ்சித்திரனார்

பொருள்:
திறமையுடைய புலவருக்கு உலகம் பெரியது. அப்புலவரை விரும்புவோரும் உலகத்தில் பலர்.
எனவே வலிமையுடைய யாளி அடங்கி இருப்பதைப் போல்
நானும் இருக்கமாட்டேன். பொழுது விடிந்த பின்னும்
பரிசில் பெறலாம் என்று ஒடுங்கி இருப்போரைப் போல்,
பழுக்காத கனிக்காகக் காத்திருப்பவன் நான் இல்லை!

Wide is this world, many are the benefactors;
So is there anyone who will wait for unripe fruits
Given away callously, making alms-seekers fume
Like an enraged mythical beast?

தேமொழி

unread,
Aug 10, 2025, 7:54:00 PMAug 10
to மின்தமிழ்
Screenshot 2025-08-11.jpg

அறிந்து கொடு அதியமானே!

யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்! பேணி,
தினைஅனைத்து ஆயினும், இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து, நல்கினர் விடினே! (புறம். 208:5-9)

        பெருஞ்சித்திரனார்

பொருள்:
பகைவரால் தடுப்பதற்கரிய மன்னன், என்னைப் பற்றி என்ன  கருதினான்!
என்னைப் பார்க்காமலேயே தந்த இப்பொருளைப் பெற்றுச் செல்ல,
நான் ஒன்றும் வருவாயைப் பெரிதாக எண்ணும் பரிசிலன் அல்லன்.
பரிசிலரை நேரில் சந்தித்து, விருப்பத்துடன் கொடுத்தால்
தினையளவு சிறிய பொருளாயினும் அது சிறந்த பரிசில் ஆகும்.

I am not just an alms seeker to take theses gifts
The mighty ruler gave even without seeing me;
Of much more value is even a small gift
Given appreciating the wisdom of the seeker.

தேமொழி

unread,
Aug 11, 2025, 9:10:39 PMAug 11
to மின்தமிழ்
Screenshot 2025-08-12.jpg

கோப்பெருஞ்சோழனின் நட்பு

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே!
செல்வக் காலை நிற்பினும்
அல்லல் காலை நில்லலன் மன்னே! (புறம். 215:6-9)
        கோப்பெருஞ்சோழன்

பொருள்:
தென்பொதிகை மலையையுடைய பாண்டிய நாட்டில், தொலைவாக உள்ள
பிசிர் என்னும் ஊரில் என் உயிரைக் காக்கும் நண்பன் உள்ளான்.
செல்வம் மிகுந்திருக்கும் காலத்தில் என்னிடம் அவன் வராமல் இருந்தாலும்,
நான் துன்பம் அடையும் இக்காலத்தில் வராமல் இருக்கமாட்டான்.

In the blessed southern Pandya kingdom
Is Pisirandhayar, a friend and keeper of my life;
Though he wasn't with me when I was prosperous,
He will be there for me when I'm suffering.

தேமொழி

unread,
Aug 13, 2025, 12:39:58 AMAug 13
to மின்தமிழ்
Screenshot 2025-08-13.jpg

முகம் காணா நட்பு

'வருவன்' என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே!
அதனால் தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இவ்வுலகம்
என் ஆவதுகொல், அளியது தானே! (புறம். 217:7-13)
        பொத்தியார்

பொருள்:
இவன் வருவான் என்று கோப்பெருஞ்சோழன் துணிந்து சொல்லிய பெருமையையும்,
அவன் சொல்லிய சொல் பிழைபடாது வந்த பிசிராந்தையாரின் அறிவையும்
எண்ணிப் பார்க்கும்போது வியப்புக்கு மேல் வியப்பாக இருக்கிறது.
தன் செங்கோலாட்சி நடக்காத நாட்டில் வாழும்
சான்றோனின் நெஞ்சத்து அன்பைப் பெற்ற
கோப்பெருஞ்சோழனை இழந்த இந்த நாடு
இனி என்ன ஆகுமோ? இது இரங்கத்தக்கது!

The greatness of the King who made his faraway friend
Visit him in times of his distress,
And the wisdom of the friend who came are remarkable;
Pitiable is this world that has lost a king
Who inspired wise men even in countries he didn't rule.

தேமொழி

unread,
Aug 13, 2025, 10:31:53 PMAug 13
to மின்தமிழ்
Screenshot 2025-08-14.jpg

கூற்றுவனை வையலாம் வாருங்கள்!

... அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று!
பைதல் ஒக்கல் தழீஇ அதனை,
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்க,
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன், புரவலன் எனவே! (புறம். 221:7-13)

        பொத்தியார்

பொருள்:
சிறந்த தன்மைகளைக் கொண்டவன் என்று எண்ணிப் பார்க்காமல்,
கூற்றமானது கோப்பெருஞ்சோழனது உயிரைக் கொண்டுசென்றது.
மெய்ம்மையுடைய புலவர்களே!
கேடு இல்லாத  நல்ல புகழ் மாலையைச் சூடி நம்மைக் காப்பவன்,
இந்த உலகத்தில் உள்ளோர் வருந்தும்படியாக
நடுகல் ஆயினான் என்று சொல்லி,
நமது உறவினரை அழைத்துக் கொண்டு போய்,
அந்தக் கூற்றுவனை வையலாம் வாருங்கள்!

Thoughtless of his deeds, kootruvan seized the life of our virtuous king;
Let us berate kootruvan, O poets of honest words,
For causing this wide world to suffer
And making the famed man who sheltered us
To become a memorial stone!

தேமொழி

unread,
Aug 14, 2025, 8:46:51 PMAug 14
to மின்தமிழ்
Screenshot 2025-08-15.jpg

மயிலா? நானா?

ஒள் ஒளி மணிப்பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்!
உள்ளியது உணர்ந்தேன், அஃது உரை! இனி, நீ எம்மை
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு! என்பாளைப் பெயர்த்து, அவன்
காதலாய்! நின் இயல், களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி, என்று ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு! (பரி. 18:7-14)
        குன்றம் பூதனார்

பொருள்:
மணி நிறப் புள்ளிகளைக் கொண்ட மயில் ஆடுவதைப் பார்த்த கானவனிடம்,
'இம்மயில் என்னைவிட அழகில் சிறந்தது என்று நினைத்து நீ என்னை
மனத்துள் இகழ்கிறாய். அதை மறைக்கப் பார்க்கிறாய்!'
என்று கூறி ஊடல் கொண்டாள் கொடிச்சி. அதற்கு அக்கானவன்,
'இம்மயிலைக் கண்ட நான், அது உன்னுடைய அழகைக் களவாடிவிட்டது
என எண்ணி நின்றேன். நீ அதை அறியாமல்
உன்னை இகழ்ந்ததாக எண்ணுகிறாய்' என்று சொல்லி
அவளுடைய ஊடலைத் தீர்க்க முயன்றான்.
இத்தகைய காட்சிகளையுடையது அழகிய தேரை உடைய பாண்டிய மன்னனின் திருப்பரங்குன்றம்.

For being lost in the thoughts of a gleaming peacock that he beheld,
The man attempted to console his beloved,
Who mistook his musings for complaints of her shallow beauty.
Such is the nature of the mountain, belonging to the Pandiyan king.

தேமொழி

unread,
Aug 15, 2025, 9:41:26 PMAug 15
to மின்தமிழ்
Screenshot 2025-08-16.jpg
கற்களால் உயர்ந்த இமயமலை

அமைவரல் அருவி இமயம் வில் பொறித்து,
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நறீஇத் தகைசால் சிறப்பொடு!
(பதிற்று. இரண்டாம் பத்தின் பதிகம் 4-6)
        குமட்டூர்க் கண்ணனார்

பொருள்:
அருவி பாயும் இமயச்சாரலில் வில் சின்னத்தைப் பொறித்து,
கடலால் சூழப்பட்ட நிலப்பகுதியைத் தமிழகம் என நிறுவி,
சிறப்புடன் ஆட்சி செய்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

He carved his insignia - a bow symbol
On the Himalayas with perennial waterfalls,
And ruled splendidly with a just scepter,
The entire Tamilakam surrounded by loud oceans as its fences.
(Imayavaramban Neduncheralaathan)

தேமொழி

unread,
Aug 17, 2025, 12:25:00 AMAug 17
to மின்தமிழ்
Screenshot 2025-08-17.jpg

பழையனை வெற்றிகொண்ட செங்குட்டுவன்

படுபிணம் பிறங்க, பாழ்பல செய்து,
படுகண் முரசு நடுவண் சிலைப்ப,
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர்பட,
கருஞ்சினை விறல்வேம்பு அறுத்த
பெருஞ்சினக் குட்டுவன்! (பதிற்று, 49:13-17)
        பரணர்

பொருள்:
இறந்துவிழும் பிணங்கள் எங்கும் குவிந்தன. எல்லாவற்றையும் பாழ் செய்து
ஒலிக்கும் போர் முரசு ஒலித்தது. அப்பழையனின் செல்வம் முழுவதும் கெட,
அங்கு வாழ்வதற்குரியோர் இல்லாமல் போகும்படி,  
பெரும்போர் புரிந்த செங்குட்டுவன்,
அவனது வலிமையான காவல் மரமான வேம்பினை வெட்டி வீழ்த்தினான்.

The furious King Kuttuvan
Destroyed his foes and proclaimed victory,
Sounding his war drum in battlefield piled up with dead bodies,
Killing young warriors and cutting down the royal neem tree.

தேமொழி

unread,
Aug 18, 2025, 12:13:38 AMAug 18
to மின்தமிழ்
Screenshot 2025-08-18.jpg

அவளை நன்கு அறிவோம்

கண்டிகும் அல்லமோ கொண்க! நின் கேளே,
வண்டல் பாவை வெளவலின்
நுண்பொடி அளை இக்கடல் தூர்ப்போளே! (ஐங். 124)
        அம்மூவனார்

பொருள்:
தலைவனே!  கடலின் அலை வந்து,
தான் செய்த வண்டல் மண் பாவையை இழுத்துச் சென்றதால், கோபத்துடன்
நுண்ணிய மணலை அள்ளி, அதனைக் கடலில் வீசித் தூர்க்கத் துணிந்தவள் தலைவி.
அப்படிப்பட்ட உனது அன்பிற்கு உரியவளை நாங்கள் நன்றாக அறிவோம்.

O Chief, have we not seen your love-mate
Who scooped the fine dust, at the sea
Which stole her sand-toy away.

தேமொழி

unread,
Aug 18, 2025, 10:43:56 PMAug 18
to மின்தமிழ்
Screenshot 2025-08-19.jpg

நான் துன்பமின்றி இருப்பது எப்படி?

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே! (ஐங். 141)

        அம்மூவனார்

பொருள்:
தோழியே! நீரினால் அடித்துவரப்பட்ட மணல் பரந்த நிலத்தில்
ஞாழலின் மலர், செருந்திப் பூவுடன் மணம் கமழ்கிறது.
நீர்த்துறையில் மழையானது, குளிர்ந்த துளிகளைப்
பசலை கொண்ட என்மேல் வீசிக் கொடுமை செய்தது.
(கார் காலம் வந்த பிறகும் தலைவன் வராததால்
தலைவியின் மேனியில் பசலை படர்ந்தது.)

(Dear friend) The blooms of gnaalal and cerunti on the dune,
Which emit fragrance, and the cool drops of the cool ghats
Which sprayed, gently, intensified the pallid hue on me.

தேமொழி

unread,
Aug 19, 2025, 10:38:16 PMAug 19
to மின்தமிழ்
Screenshot 2025-08-20.jpg
மறி துள்ளும் சீறூர்

பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன
உள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி,
மாழ்கி அன்ன தாழ் பெருஞ்செவிய,
புன்தலைச் சிறாரொடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம்குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய! (அகம். 104: 8-13)
      மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
புதர்களில் படர்ந்த அவரையின்
உள்ளீடு இல்லாத காய் போன்ற வயிற்றையும்,
தாழ்ந்து தொங்கும் பெரிய காதுகளையும் கொண்டவை வெள்ளாட்டுக்குட்டிகள்.
அவை சிறிய தலையையுடைய சிறுவர்களோடு துள்ளிக் குதித்து விளையாடிய பின்,
மன்றத்தில் உள்ள அத்தி மரத்தின் இளம் தளிரைக் கடிக்கும்.
இத்தகைய சிற்றூர் பலவற்றைக் கடந்து வந்தாய்!

Fast ran your chariot past many a village
Where the lambs, white and soft, having frisked with the boys
Graze the split leaves of aathi that grow beside the common yard.
Thus have you arrived here this evening.
 

தேமொழி

unread,
Aug 21, 2025, 2:18:22 AMAug 21
to மின்தமிழ்
Screenshot 2025-08-21.jpg

முட எருதுக்கு உணவூட்டும் சிறுவர்

வல்ஆண் அருமுனை நீந்தி, அல்லாந்து,
உகுமண் ஊறு அஞ்சும் ஒருகாற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்! (அகம். 107:12-18)
        காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்

பொருள்:
பாலை நிலத்தின் போர் முனையைக் கடந்து வந்த எருது
ஒன்று, ஓடையில் சறுக்கும் மண்கொண்ட
ஏற்றத்தில் சறுக்கி விழுந்ததால் அதன் ஒரு கால் முடம்பட்டு,
ஒரு தனியிடத்தில் கிடந்தது. சிறிய தலைமயிரை உடைய
சிறுவர்கள், அழகிய தளிரையுடைய இருப்பையின் மலரை,
வில்லால் உதிர்த்து, எருதுக்கு அருகில் போட்டு அதனை
உண்ணச் செய்தனர். அந்தத் தளிரை உண்ண வரும்
மரை மானை அவர்கள் விரட்டும் காட்சியை உடையது மலைச்
சாரலில் உள்ள சிற்றூர்.

Beyond this are villages nestling in the hills;
Here, a strong bull plodded its way through a sloping path,
Slipped and broke its leg to grieve sorely all alone.
The urchins of the village strike with their darts
And cause the tender leaves, as also the blooms, to fall;
They chase away the competing marai deers
And feed the forlorn bull.

தேமொழி

unread,
Aug 21, 2025, 8:12:36 PMAug 21
to மின்தமிழ்
Screenshot 2025-08-22.jpg

குளிர்ந்த கண்களுடன் காத்திருப்பாள்

நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர்
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங்கடிக் காப்பின், அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்,
அரிமதர் மழைக்கண், அமைபுரை பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக் காண்குவம்! (அகம். 114:9-15)

        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
வானத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்த மதிலில் நீண்ட கொடிகள் அசையும்.
அந்த மதிலைக் காப்போர் இரவில் ஏற்றிய விளக்குகள்
வானில் உள்ள மீன்களைப்போல் காட்சியளிக்கும்.
அரிய காவலையுடையதும் பகைவர்க்கு அச்சத்தைத் தருவதுமான பழமையான ஊர் அது.
அவ்வூரில் செல்வம் நிறைந்த இல்லத்தில், கற்பு நெறியுடன்
செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையும் மூங்கில் போன்ற தோள்களையும் கொண்ட
அழகிய தலைவி, கவலையுடன் உள்ளாள்.
தேர்ப்பாகனே! அவளைப் போய்க் காண்போம்.

O Charioteer!
Let us go to meet my divine and flawlessly chaste love
Who is in profound grief, born of her loneliness:
In our town dreadful to the foes
And where lamps lit up by the night guards on the fort walls
Look bright like the stars in the heavens.

தேமொழி

unread,
Aug 22, 2025, 8:13:37 PM (14 days ago) Aug 22
to மின்தமிழ்
Screenshot 2025-08-23.jpg

ஊர் திரும்புவது உண்மையாய் நிகழும்

நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்துதிறை கொடுத்து, வணங்கினர்! வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின், வேந்தனும்
நிலம் வகுத்து உறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே! (அகம். 124:1-5)
        மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

பொருள்:
பகைவர்கள் அவர்களாகவே,
அணிகலன்களையும் ஆண் யானைகளையும்
திறையாகக் கொடுத்து வணங்கினர்; பணிவாகப்
பேசி, 'சென்றருளுக' என வேண்டினர்.
பகைவர் அவ்வாறு பணிந்ததால் நம் மன்னனும்
அவர்களின் நாட்டை அவர்களுக்கே கொடுத்துவிட்டு,
அளவிட முடியாத படையுடன்
இன்றே ஊருக்குத் திரும்புவது நிகழும்.

As foes paid their tributes- fine ornaments and elephants
And bowed at our lord's feet,
Our lord, with his immense army,
Will return to his capital, today itself.

தேமொழி

unread,
Aug 23, 2025, 9:29:25 PM (13 days ago) Aug 23
to மின்தமிழ்
Screenshot 2025-08-24.jpg
கொற்கைத் துறைமுகம்

இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்,
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்,
நல்தேர் வழுதி கொற்கை முன்துறை! (அகம். 130: 9-11)
        வெண்கண்ணனார்

பொருள்:
அலைகள் கரையில் பரப்பிய குளிர்ந்த ஒளியையுடைய முத்துகள்,
குதிரையின் காலில் காயத்தை ஏற்படுத்தி, அதன் நடையைக் கெடுக்கும்.
இந்த இயல்பு கொண்டது
நல்ல தேரையுடைய பாண்டியனின் கொற்கைத் துறைமுகம்.

Korkai is the seaport of the Pandiyas,
Where dashing breakers wash ashore the shining pearls
That obstruct the passage of beauteous steeds.

தேமொழி

unread,
Aug 24, 2025, 10:19:33 PM (12 days ago) Aug 24
to மின்தமிழ்
Screenshot 2025-08-25.jpg

ஏறு தழுவும் பொதுவர்

அவரைக் கழல உழக்கி, எதிர் சென்று சாடி,
அழல்வாய் மருப்பினால் குத்தி, உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு!
தொட்ட தம் புண்வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரி,
தங்கார் பொதுவர், கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார்! (கலி. 106: 20-25)
        சோழன் நல்லுருத்திரன்

பொருள்:
தொழுவத்திலிருந்து விடுபட்ட காளைகள் ஆயர்கள் ஓடும்படி மிதிக்கும்.
ஓடாமல் நின்றவர்களை எதிர்சென்று கூரிய கொம்பால் குத்திச் சாடி உழலை
மரத்தின் துளையைப் போல் உடலைத் துளையாக்கும்.
காளைகளினால் துளைக்கப்பெற்ற தம் புண்களிலிருந்து வடியும்
குருதி வழுக்குவதால் மணலில் கையைப் பிசைந்துகொள்வர்.
உடம்பிலும் அம்மணலைப் பூசிக் கொள்வர். கடலுக்குள் பரதவர்
சிறிய படகில் தாவி ஏறுவதைப் போல் மீண்டும் காளையைத் தழுவினர் ஆயர்கள்.

The bulls take on the men with their fiery horns, goring them;
The injuries resemble wooden bars with holes, placed in doorways.
Blood oozing from the wounds, the herdsmen daub sand
Over their bodies and come capturing the bulls
Like the maritime men rafting on the seas.

தேமொழி

unread,
Aug 25, 2025, 7:53:57 PM (11 days ago) Aug 25
to மின்தமிழ்
Screenshot 2025-08-26.jpg

தலையில் சூடிக்கொண்டேன்

... தொழுவத்து,
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ்கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும்புகர் பொங்க, அப்பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
அதனை, கெடுத்தது பெற்றார்போல் கொண்டு யான் முடித்தது! (கலி. 107:5-10)

        சோழன் நல்லுருத்திரன்

பொருள்:
தொழுவத்திலிருந்து விடுபட்ட
சிறிய செவி கொண்ட காளையைக் களத்தில் எதிர்கொண்டு
தழுவியவனின் தலையில் இருந்த முல்லைப்
பூமாலையை, தன் கொம்பால் எடுத்து ஆட்டியது
அந்தக் கரும்புள்ளிக் காளை. அப்போது அப்பூமாலை வந்து என்
கூந்தலில் விழுந்தது. தொலைந்து போன பொருள் கிடைத்தது போல
அம்மாலையை எடுத்து நான் சூடிக்கொண்டேன்.

That man, with the arched jasmine wreath on his head,
Seized the wild bull that took up his wreath over its horns.
The bull swayed off the wreath that came to settle over my tresses;
I grabbed it as if regaining a thing unmade.

தேமொழி

unread,
Aug 26, 2025, 9:37:07 PM (10 days ago) Aug 26
to மின்தமிழ்
Screenshot 2025-08-27.jpg

தயவுசெய்து வேறிடம் செல்லேன்!

இவள்தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று ஊர்ப்பெண்டிர்,
'மாங்காய் நறுங்காடி கூட்டுவேம் யாங்கும்
எழுநின் கிளையொடு போக' என்று தத்தம்
கொழுநரைப் போகாமல் காத்து முழுநாளும்
வாயில் அடைப்பவரும்! (கலி. 109: 21-26)

        சோழன் நல்லுருத்திரன்

பொருள்:
பார்க்கும் ஆண்கள் எல்லோரும் துன்பம் அடையும்படியாகக் காதலில் வீழ்த்தி
இறக்கச் செய்யும் தன்மையுடையவள் என்று கருதிய அவ்வூர்ப் பெண்டிர்,
அவள் கொண்டுவரும் மோருக்குப் பதிலாக நாம் அனைவரும் கஞ்சியை
மாங்காயுடன் சேர்த்துக் குடிப்போம் என்று முடிவெடுத்தார்கள்.
அப்படிச் செய்தால் இங்கே மோர் விற்க முடியவில்லை என்று அவள் தன்
உறவினருடன் வேறு ஊருக்குப் போய்விடுவாள் என்று கருதிய அப்பெண்கள்
தங்கள் கணவர், வெளியே வராமல் வீட்டின் வாயிலை அடைத்தார்கள்.

(On the sight of the beautiful woman selling buttermilk)
The women of the village speak thus:
"The source of affliction to all she is;
Let's go then for the odorous mango pickles";
And they confine their husbands in their homes,
Guarding the doorway all day thro'.

தேமொழி

unread,
Aug 27, 2025, 8:21:10 PM (9 days ago) Aug 27
to மின்தமிழ்
Screenshot 2025-08-28.jpg
வளமான மருத நிலம்

தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட, அலர் முலைச்
செவிலி அம் பெண்டிர் தழீஇ, பால் ஆர்ந்து,
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்!
(பெரும்பாண். 248-252)
        கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
தச்சரின் குழந்தைகளும் விரும்பும் வகையில் செய்த
ஊர்ந்து செல்லும் நல்ல தேரை உருட்டி விளையாடிய புதல்வரின்
பசியைப் போக்கிட, பூப்போன்ற முலையைக்
கொண்ட செவிலித் தாயர், பாலை ஊட்டுவர். பால் குடித்த
புதல்வர் படுக்கையில் படுத்து உறங்கும் அழகுடைய
வீடுகளைக் கொண்டது மருத நிலம்.

Children who roll their beautiful toy chariots that
Are coveted by the children of carpenters, get tired,
And embrace and drink abundant milk from their
Foster mothers and sleep in their fine, lovely houses
Of the prosperous Marutham land.

தேமொழி

unread,
Aug 28, 2025, 9:09:33 PM (8 days ago) Aug 28
to மின்தமிழ்
Screenshot 2025-08-29.jpg

கலங்கரை விளக்கம்

இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி,
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்,
துறை பிறக்கு ஒழியப்போகி, கறைஅடிக்
குன்று உறழ் யானை மருங்குதல் ஏய்க்கும்
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை,
தண்டலை உழவர் தனிமனை! (பெரும்பாண். 350-355)

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள் :
உப்புநீர்க் கடலில் ஓடும் கப்பல்களுக்குக் கரையைக்
காட்டுவதற்காக ஒளி பொருந்திய விளக்கைத் தாங்கிய
கலங்கரை விளக்கம், கடற்கரையில் அமைந்துள்ளது.
அந்தக் கடற்கரையைக் கடந்து போனால்  உரல் போன்ற கால்களைக்
கொண்ட யானையின் உடலை ஒத்த உழவர் குடியிருப்புகள்தோன்றும்.
அங்கே முன் பகுதியில் உலர்த்திய மஞ்சளும்
பின் பகுதியில் மணக்கும் பூந்தோட்டமும் கொண்ட
தனித்தனி வீடுகள் நிறைந்திருக்கும்.

A Light house there is that appears to prop the sky,
In it are lamps that shine to guide the ships.
In groves where ploughmen live,
The huts are thatched with dry, plaited leaves of coconut trees
Resembling elephants with mortar-like legs.


தேமொழி

unread,
Aug 29, 2025, 11:21:27 PM (7 days ago) Aug 29
to மின்தமிழ்
Screenshot 2025-08-30.jpg

தலையாலங்கானத்துப் போர்

கால் என்னக் கடிது உராஅய்,
நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசுபட அமர் உழக்கி,
முரசு கொண்டு களம் வேட்ட,
அடுதிறல் உயர் புகழ் வேந்தே! (மதுரை. 125-130)
        மாங்குடி மருதனார்

பொருள்:
காற்று வீசுவதைப் போல் விரைவாக,
பகைவரின் நாடு அழியும்படி தீயைப் பரப்பி,
தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில், எதிர்த்த ஏழு மன்னர்களும் இறக்கும்படி வென்று,
மற்ற மன்னர்க்கும் அச்சம் உண்டாகுமாறு செய்து,
அம்மன்னரின் முரசுகளைக் கைப்பற்றி மறக்கள வேள்வியைச் செய்த
பேராற்றல் வாய்ந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன்!

O warrior great!
You did fly like the wind, spread the fire around,
Destroy the country of your foes, encamp
At aalangaanam scarring them,
Cut down their chiefs and seize their drums.

தேமொழி

unread,
Aug 31, 2025, 12:11:36 AM (6 days ago) Aug 31
to மின்தமிழ்
Screenshot 2025-08-31.jpg

நெடுஞ்செழியனின் படை வேகம்

விரிகடல் வியன் தானையொடு,
முருகு உறழப் பகைத் தலைச் சென்று,
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ,
பெயல் உறழக் கணை சிதறி,
பல புரவி நீறு உகைப்ப,
வளை நரல, வயிர் ஆர்ப்ப,
பீடு அழியக் கடந்து அட்டு, அவர்
நாடு அழிய எயில் வெளவி ... (மதுரை. 179-186)

        மாங்குடி மருதனார்

பொருள்:
பாண்டியன் நெடுஞ்செழியனே!  கடல் போன்ற பெரும்படையுடன்
போர் புரியும் முருகப் பெருமானைப் போல, பகைவர் இடத்திற்குச் சென்றாய்.
படையெழுச்சி முழக்கம் வானை எட்ட,
மழை போன்று அம்புகளை எய்து,
குதிரைகள் ஓடுவதால் துகள்கள் மேலே எழுந்திட,
சங்குகள் முழங்க, கொம்புகள் ஒலிக்க,
பகைவரின் வீரம் அழியும்படி வென்று அவர்களது
நாடுகளைப் பாழாக்கி, அரண்களைக் கைப்பற்றினாய்!

You, like the god of war, attack thy foes,
Your army's shouts resounding throughout the skies.
You reduce the states of your foes and destroy their lands,
Making wide and ancient kingdoms yours.

Reply all
Reply to author
Forward
0 new messages