--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆனால் தாங்கள் கூறுவதுபோல் பரதனின் மனைவியான நீலி மறுபிறப்பில் கண்ணகியாகப பிறந்திருக்க வாய்ப்பில்லை .
மணிமேகலைக் காப்பியத்தில் காணும் பெண்களைப் பற்றி எழுத விரும்பி மேற்கொள்ளும் முதல் முயற்சி இது. கண்ணகி இல்லாமல் சிலப்பதிகாரம் இல்லை என்று தெரியும். அந்தக் கண்ணகியே "மணிமேகலைக்" கதையையும் தொடங்கிவைக்கிறாள்!
இந்தப் பகுதி "மணிமேகலையில் கண்ணகி" பற்றியது. ..
மணிமேகலைக் காப்பியத்தில் காணும் பெண்களைப் பற்றி எழுத விரும்பி மேற்கொள்ளும் முதல் முயற்சி இது. கண்ணகி இல்லாமல் சிலப்பதிகாரம் இல்லை என்று தெரியும். அந்தக் கண்ணகியே "மணிமேகலைக்" கதையையும் தொடங்கிவைக்கிறாள்!இந்தப் பகுதி "மணிமேகலையில் கண்ணகி" பற்றியது.++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++படித்து மகிழ்க!அன்புடன்,ராஜம்
பல கேள்விகளையும் முன் வைக்கின்றீர்கள். இவை விடை காண வேண்டியவையே..
மணிமேகலைக் காப்பியத்தில் விசாகை என்ற ஒரு பெண்ணின் கதை சொல்லப்படுகிறது.அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளணுமா?
நான் பாட்டுக்கு எங்க அம்மா சொன்ன மாதிரி ஓலைப் பாயிலெ நாய் ... பெஞ்ச மாதிரி ... என்னவோ கொட்டித் தள்றேனே, பரவாயில்லயா?
'விசாகை' பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.
இழை பல சாகைகளோடு விரியட்டும்.
ஆர்வலர்கள் பலரும் கட்டாயம் இணைந்து ஈடுபடுவர்
தேவ்
|
'நான் பாட்டுக்கு ... என்னவோ கொட்டித் தள்றேனே, பரவாயில்லயா? ' என்றெல்லாம் எழுதலாகாது. நீங்கள் க்ளுப்தமாக எழுதுவதால், நாங்கள் விரும்பிப் படிக்கிறோம்.
பயனடைகிறோம். அன்புடன், இன்னம்பூரான் |
என்ன இருந்தாலும் என்ன, காதல் இனிமையானது, நிரந்தரமானது, காமமில்லாத
காதல் இன்னமும் இனிமையானது என்பதையே இந்தக் கதை சொல்வதாக எனக்குத்
தோன்றுகிறது.
மணிமேகலையில் அதிகமான அளவுக்கு வடசொல் கலந்திருப்பதாகப் படுகிறது. ராஜம்
அம்மா, சரிதானா?
விசாகை எனும் இன்னொரு பெண் பௌத்தத்தில் பேசப்படுகிறாள். எங்கள்
ஆந்திரப்பகுதியில் பௌத்தம் பழைய கால மதம் என்பதற்கு ஏராளமான பழைய
சின்னங்கள் இன்னும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. விசாகை எனும் பௌத்தத்
துறவிப் பெண் இங்கு இருந்தமையால் விசாகப்பட்டினம் என்று சொல்வதாக சிலர்
சொல்கிறார்கள்.
இதை ஹிண்டு வில் ஒருவர் எழுத அதை மறுத்து விசாகேசுவரன் என்கிற முருகன்
பெயரால் வந்ததுதான் இந்த நகரம் என்று நான் எழுதியது வேறு கதை.
அன்புடன்
திவாகர்
2011/10/17 rajam <ra...@earthlink.net>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
திவாகர்
2011/10/17 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
~ சரியாக சொன்னீர்கள். செய்தி மட்டுமல்ல. மென்மையாக பகரும் வாழ்வியல் தத்துவங்கள். என்னை ஆக்ரமித்த இலக்கியம் மணிமேகலை.
ஒரு சிறிய பிற்கால செய்தியை விசாகையின் '.....இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?" ...’ நினைவூட்டுகிறது.ஜெர்மனியின் பிரபல இருதய அறுவை டாக்டர் சாவர்ப்ரூக் முதுமை அடைந்து, தள்ளாமையால் வாடும்போது, அவரது உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்ட சிஷ்ய கோடிகள், அவரை, அவருடைய இளமை காதலியிடம் இட்டு செல்கிறார்கள். ஒப்பன் ஹார்ட் அறுவையை கண்டுபிடித்த அவரின் அறுபது வருட காதலி, சர்ஜரி̀~ அறுவை சிகிச்சை! அவர் தன்னுடைய இளமை காதலியுடைய புறங்கைகளை பிடித்து, வருடி, ‘ரத்தக்குழாய்கள் தடித்து விட்டன. நானே அறுவை சிகிச்சை செய்கிறேன்’ என்கிறார். கூட இருந்தவர்கள் மெளனமாக கண்ணீர் வடித்தனர். இதை படித்து ஐம்பது வருடங்கள் ஆயின. கண்ணின் முன் விசாகை நிறுத்தி விட்டார். நன்றி, ராஜம்.
இன்னம்பூரான்
17 10 2011
சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள். //அப்புறமா எப்படி வைதீக முறைத் திருமணம்??
ஆம், ஒரு "கன்னி மாடம்" மணிமேகலைக் காப்பிய காலத்தில் பூம்புகாரில் இருந்திருக்க வேண்டும். முதல் முதலாக ஒரு கன்னி மாடம் பற்றி மணிமேகலையில்தான் தெரியவருகிறது. பிற குறிப்பு ஏதும் இல்லை.
அப்புறம்? தருமதத்தன் என்ன செய்கிறான்?தருமதத்தன், அவன் தந்தை, தாய் எல்லாரும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளியேறுகிறார்கள். தாழ்ந்துபோகச் செய்யும் துன்பத்தை நீக்கின கந்திற்பாவையைப் புகழ்கிறார்கள். தக்கண (== தென்) மதுரைக்குப் போகிறார்கள்.தென்மதுரைக்குப் போன தருமதத்தன் ஒரு முடிவு செய்கிறான்.
இனி இந்தப் பிறவியில் விசாகையைத் தவிர வேறொரு பெண்ணை விரும்புவதில்லை என்று உறுதிகொள்கிறான்.வணிகம் செய்கிறான். பெரும் பொருள் ஈட்டுகிறான். சிறந்த வணிகர்களுக்கு வேந்தன் கொடுக்கும் "எட்டி"ப் பட்டத்துக்குரிய பூவைப் (== எட்டிப்பூ) பெறுகிறான். மிக உயர்ந்த செல்வப் பெருக்குடன் வாழ்ந்துவருகிறான்.
இப்படியே ... ஆண்டுகள் உருண்டு போயின. அவனுக்கும் 60 ஆண்டு அகவை ஆகிறது.
....
[சுருக்கமான பொருள்: இந்தப் பிறவியில் உனக்கு அடிச்சியாக இருக்கமாட்டேன். அடுத்த பிறவியில் உனக்கு அடித்தொழில் செய்வேன்.]
இப்படி மாமன் மகள் விசாகை சொன்னதைத் தருமதத்தன் கேட்கிறான்.விசாகையுடன் சேர்ந்து பலவகை நல்ல அறம் செய்கிறான்.
....
ககந்தனுக்குக் கடுமையான சினம் பொங்குகிறது. மகனின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான்!அப்படிப்பட்ட முறை தவறாத மன்னர் குலம் சோழர் குலம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++....
மன்னனுக்கு அவன்மகன் உதயகுமரனின் செய்தி தெரிவிக்கப்படுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++விசாகையின் கதையில் புதைந்து கிடக்கும் உண்மைகள் பல.காப்பியத்தின் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது; தேடுபவருக்குத் திறமை இருந்தால் கிட்டும் புதைபொருள் நிறைய.
மாமன் மகள், மைத்துனன் உறவு முறை, யாழோர் மணமுறை, ஊரார் வம்பு, கன்னி மாடம், தென்மதுரையில் வணிகம் செய்ய வாய்ப்பு, வணிகத்தில் சிறந்தோர் வேந்தனிடமிருந்து எட்டிப்பூ பெறுதல், வணிகன் போனபின் மதுரை வெறிச்சோடுதல், பத்தினி இல்லாமல் எந்த அறம் செய்தாலும் பயன் இல்லை என்பது, அகவை முதிர்ந்த நிலையில் காமம் விலகுதல், சோழர் குல அரசியல் நேர்மை, ...இப்படி ஒரு சிறு கிளைக்கதையில் எத்தனைத் துணைக்கருத்து வளம்!"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா" என்று தொடங்கும் வரிகளை எத்தனைப்பேர் மனப்பாடம் செய்திருப்போம்! அவை யாரால் எப்போது ஏன் சொல்லப்பட்டன என்று விசாகை கதையைப் படித்தால் அல்லது எப்படித் தெரியவரும்?அதனால்தான் மணிமேகலையைப் படிக்கவேண்டும்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++அன்புடன்,ராஜம்
On Monday, October 17, 2011 5:51:14 PM UTC+5:30, myself wrote:சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் அருகதேவனை வணங்கும் ஜைன சிராவகர்கள். //அப்புறமா எப்படி வைதீக முறைத் திருமணம்??நான் படித்தவரை:
--
[சுருக்கமான பொருள்: இந்தப் பிறவியில் உனக்கு அடிச்சியாக இருக்கமாட்டேன். அடுத்த பிறவியில் உனக்கு அடித்தொழில் செய்வேன்.]வயதாகி விட்டதால் விசாகை இப்படி குறிப்பிடுகின்றாரா அல்லது காதல் குடும்ப வாழ்க்கை என்பது நிலையற்றது என்ற தெளிவின் அடிப்படையிலா ? எது பொருந்தும் ?
விசாகை அவனுக்கு சேவையென்னும் நல்ல வழி காட்டியிருக்கின்றாள் என்றே கொள்ளலாம் இல்லையா ?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதை எழுதும் போது எனக்கொரு கேள்வி எழுந்தது, மகளை பிர்ந்த தாய் பாடுவது போல் பல சங்க பாடல்கள் உள்ளன. ஆனால் மருமகளை கொண்டு வர போன மகனைப்பற்றி தாய்/தந்தை பாடுவது போல் ஏதேனும் பாடல்கள் உண்டா?
சிலம்பு - மேகலை காப்பியங்களைப் படிக்கும்போது
சமய ஒழுக்கம் பற்றிய குழப்பம் நேர்வது இயற்கை.
"சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் ..... "
"குன்றாக் கொள்கைக் கோவலன்.."
போன்ற வரிகள் கோவலனைச் சாவக நோன்பைக்
கடைப்பிடிப்பவன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து
"கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவையின் மந்திர மாதலின்...."
என வரும்போது ச்ராவகர்களுக்கு தெய்வங்களைக்
குறித்த மந்திர ஜபம் உண்டா எனும் கேள்வியும் எழுகிறது.
மாதவியும், மணிமேகலையும் பவுத்தப் பள்ளி சேர்ந்ததற்கும்
பவுத்த ஈர்ப்பைக் காட்டிலும் சமூகக் காரணமே
மையமாகத் தோன்றுகிறது
(குறுக்கீடாயின் ராஜம் அவர்கள் மன்னிக்க வேன்டும்)
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
'ணமோகார மந்த்ரம்' தவிர ரோக நிவர்த்தி போன்ற காம்யார்த்த மந்திரங்கள்
வேத சமயத்தைப்போலச் சமணத்திலும் உள்ளன போலும் ! இவ்வழக்கம்
மூவகை மூடத்துடனும் சேராதா ?
தனி இழையில் நீங்கள் இதை விரிவாக எழுதலாம்.
தேவ்
On Oct 18, 10:16 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
"யாழோர்" என்று தமிழில்/தமிழக வழக்கத்தில் சொல்லப்பட்டவர்கள் ஆரிய வழக்கத்தில் "கந்தருவர்" என்று அறியப்படுவார்கள்.
யாழோர் மிக நல்ல இணையாக இருக்கிறது. வடசொல்லுக்கு இணைச்சொல் தேடி இடும் முயற்சி காலம்தோறும் நிழ்கிறது போலும்.
"நம்முள் நாம் அறிந்திலம்; நம்மை முன்னாள்மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன?ஆறைந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது; என்நாறைங்கூந்தலும் நரை விராவுற்றன;இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?"
"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா;புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;மிக்க அறமே விழுத்துணை ஆவது;தானம் செய் ..."
மணிமேகலையின் தலைமையறம்.
காப்பியத்தின் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது; தேடுபவருக்குத் திறமை இருந்தால் கிட்டும் புதைபொருள் நிறைய.
அகவை முதிர்ந்த நிலையில் காமம் விலகுதல்
|
Following are some terminology used in Nagarathar lifestyle. |
|
| Aiyyah |
Grandpa (Paternal & Maternal) |
| Appatha | Grandma (Faternal) |
| Aayyah | Grandma (Maternal) |
| Appachi | Father |
| Aatha | Mother |
| Periappachi | Father 's elder brother/ Mother's elder sister's husband |
| Periatha | Father's elder brother's wife/Mother's elder sister |
| Chithappa | Father's younger brother/Mother's younger sister's husband |
| Chinnatha | Father's younger brother's wife/Mother's younger sister |
| Ammaan | Mother's brother/Father in law/Father's sister's husband |
| Ammaanpendir | Mother's brother's wife |
| Annan | Elder brother |
| Aachi | Elder sister |
| Thambi | Younger brother |
| Thangachi | Younger sister |
| Annanpendir | Elder brother's wife |
| Aiythan | Sister's husband/Mother's brother's son/Father's sister's son/brother in law |
| Aiythai | Father's sister/Mother in law |
| Aiythiandi | Father's sister's daughter/Mother's brother's daughter/Sister in law |
| Thambipendir | Younger brother's wife |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
கன்னி மாடம் என்பது பெண் துறவிகள் தங்கும் இடம் என்று கொள்ளலாமா? //திருமணம் ஆகாத இளம்பெண்கள் தங்க வைக்கப்படும் இடம். கடுமையான சட்டதிட்டங்கள் உண்டு என்பார்கள். அரசகுமாரிகள் கூடக் கன்னிமாடத்தில் இருப்பார்கள்.
மாமன் மகள் விசாகை எனும் போது அவர்கள் இணைந்திருக்க ஏன் சமூகம் குறை சொல்கின்றது. மாமன் மகளை காதலிப்பது தமிழ் பண்பாட்டில் வழக்கில் உள்ள ஒன்று தானே. //அதான் எனக்கும் புரியலை; வட மாநிலங்களில் இப்படியான முறையில் திருமணம் முடிப்பது பழக்கம் இல்லை. ராஜம் அம்மா தான் தெளிவு ஆக்கவேண்டும்.
2011/10/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil