ஒரு சுவையான பேட்டி

63 views
Skip to first unread message

devoo

unread,
Aug 10, 2010, 2:06:13 PM8/10/10
to மின்தமிழ்
அண்மையில் நம் குழுமத்தில் இணைந்த திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள்
Public Relations துறையில் இரண்டாவது பெரிய யாஹூ குழுமத்தை (Image
management) நடத்தி வருபவர். இவரை செல்வன் அவர்கள் தொலைபேசி வாயிலாகப்
பேட்டி கண்டார்.

தெளிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு அனுமன் காட்டும் வழி, பல
பேரிடர்களைச் சந்தித்தபோதும் பாரதத்தின் உறுதி குலையாமை, நாட்டு
நலனுக்கு மக்களின் பங்களிப்பு, அயலகம் வாழ் இந்தியர்களின் பொறுப்பு, மொழி
நீடித்து வளர நாம் செய்ய வேண்டுபவை இவை குறித்து இவர் கூறும்
கருத்துக்கள் மனம் கவர்வதாக உள்ளன. 20 நிமிடம் நீடிக்கும் இந்த
பேட்டியைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்

http://blip.tv/file/3988212


தேவ்

Prime Point Srinivasan

unread,
Aug 11, 2010, 2:19:54 AM8/11/10
to மின்தமிழ், prpoint, DEV RAJ, செல்வன்
நண்பர்கள் தேவ், செல்வன் இருவருக்கும் நன்றி. நிர்வாக இயல்
சம்பந்தப்பட்ட என்னுடைய ஒவ்வொரு பேச்சுகளிலும், வகுப்புகளிலும்,
திருக்குறளை மேற்கோள் காட்டாமல் நான் பேசுவதில்லை. தமிழரகள்
ஒவ்வொருவரும் பெருமைபடட்தக்க ஒரு நூல் திருக்குறள்.

பாரதிய வித்யா பவனில், ‘பிசினஸ் கம்யூனிகேஷன்’ பற்றிய ஒரு டிப்ளமா
படிப்பு அணமையில் டாக்டர் கலாம் அவர்களால் துவக்கப்பட்டது. அதற்கு
அடியவன் தான் பிரொகிராம் இயக்குநராக இருக்கிறேன். சென்ற வகுப்பில்,
சோஷியல் மீடியா மற்றும் டுவிட்டர்’ பற்றி பேசும் போது, 140 எழுத்துகளில்
எழுதுவதை அனைவரும் ஒரு பெரிய உலக சாதனையாக கருதுவதைப்பற்றி கூறி,
திருக்குறளைத்தான் உதாரணமாக கூறினேன். ஒவ்வொரு திருக்குறளும் 25 முதல்
40 எழுத்துக்களில் அமைக்கப்பட்ட்டுள்ளது. டுவிட்டரில் கால் பகுதியிலேயே
அரிய கருத்துக்களை கொடுத்தவர் திருவள்ளுவர்.

தமிழ்நாட்டு தமிழர்களை விட அயல் நாடு வாழ் தமிழர்கள் தான் அதிக அளவில்,
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தமிழை வளர்க்கிறார்கள். இன்றைய
இளைஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டுமென்றால், நவீன தொழில்
நுட்பம் வாயிலாகத்தான் செல்லவேண்டும்.

அன்புடன்
சீனிவாசன்
91766 50273

Tthamizth Tthenee

unread,
Aug 11, 2010, 2:38:42 AM8/11/10
to mint...@googlegroups.com
பேட்டி மிக அருமை
 
தொலைபேசி வாயிலாக  அளித்த பேட்டி என்றாலும் தெளிவாக  உள்ளது
 
இணையத்தின் பயன்பாடு பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவேண்டும்  என்று நிதர்சனமாகத் தெரிகிறது
 
நல்ல முயற்சி
 
வாழ்த்துக்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
11-8-10 அன்று, Prime Point Srinivasan <prp...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Swarna Lakshmi

unread,
Aug 11, 2010, 3:46:32 AM8/11/10
to mint...@googlegroups.com
நல்ல பேட்டி - நன்றி.இந்தியாவுக்கு நல்லது தான் நடக்கும் என்பது மிக அழகான வார்த்தை. இத்தனை குழப்பங்களிலும் நாடு வாழ்ந்து கொண்டிருப்பதே அதற்கு சான்று.
 
திரு ஸ்ரீனிவாசன், நான் ஒரு communication professional. பெங்களூரில் ஒரு IT/ ITeS நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன். உங்கள் foundation சம்பந்தமாக ஏதாவது உதவி செய்ய முடிந்தால் மகிழ்வேன்.

நன்றி
ஸ்வர்ணா

 

From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 11 August, 2010 12:08:42 PM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

N. Kannan

unread,
Aug 11, 2010, 9:41:38 AM8/11/10
to mint...@googlegroups.com
அன்பர்களே:

எத்தனை பேர் இந்த மின்செவ்வியைக் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. தேவ்
அவர்கள் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள். ஒரு மடலாடற்குழுவின்
சார்பாக, மடலாடற்குழுவின் சீரிய நடவடிக்கையாக, மடலாடற்குழு உருப்பினர்களை
வைத்தே, மடலாடல் என்பதின் அடுத்த நிலையான நேர் (ஒலி) காணல் எனும்
நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதன் அடுத்த வளர்ச்சியாக நான்
வீடியோ கான்பெரன்சிங் (விழியப்பேச்சு) என்பதை எதிர் நோக்குகிறேன்.

மின்தமிழ் என்பது வெறும் ஊர் வம்பு பேசும் குழு அல்ல என்பதை எவ்வளவு
தூரம் உள்வாங்கியிருந்தால் தேவ் போன்ற பெரியவர்கள் மரபு விக்கி எனும்
பெரும் பொறுப்பையும், இப்போது மின்காணல் (மின்னாடல்?) எனும் உத்தியைக்
கையாண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வலது கை போல் இருக்கும்
திரு.ஸ்ரீநிவாசன் அவர்களைப் பேட்டி கண்டிருப்பார்கள் என்று வியக்கிறேன்.

ஒரு மடலாடற்குழு எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாகத் தன்னை வெளிக்காட்டிக்
கொள்ள முடியும் என்பதற்கு இதுவொரு உதாரணம். இதில் என்னைக் கவர்ந்த
இன்னொரு உளவியல் கூறு என்னவெனில், அந்தக்காலத்து மடலாடற்குழுக்களெல்லாம்
வெறும் hero worship செய்யும் தனிநபர் பஜனை மடங்களாக இருக்கும் போது,
தன்னியல்பாக எங்கள் உந்துதல் ஏதுமில்லாமல் ‘இது தம் குழு’ எனும் பீடுடன்
தமிழ் மடலாடற்குழு சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அதிசயமாக இம்மாதிரி
ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுவே நல்லதொரு மடலாடற்குழு என்பது எப்படி
இயங்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் போலவும்
அமைந்துவிட்டது.இம்மாதிரியான ஜனநாயகச் சிந்தனையை, செயலை நாம்
வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே மின்தமிழ் மின்வெளியில் நிரந்தரமாக இருக்க
வழிசெய்யும். மடலாடற்குழுக்கள் தனி நபர்களை மட்டும் நம்பி செயல்படல்
கூடாது. அந்த நபர் இல்லையெனில் பின் இயக்கம் முடங்கிவிடும்!

தேவ் அவர்கள் ஒரு தேர்ந்த போட் காஸ்டர் போல் (மின்தமிழ் வானொலி அண்ணா!)
இதை அவரது வளமான குரலில் வழங்கி, இதன் தொழில்நுட்ப வேலையையும்
(ஒலிவாங்கி, சீர்செய்து, சேவியில் ஏற்றி, சோதனை செய்து வெளியிடுவது
வரையிலான அனைத்துப் பொறுப்பையும்) ஏற்று செய்திருப்பது ஆச்சர்யப்பட
வைக்கிறது. வாழ்த்துக்கள் தேவ்,

அடுத்து செல்வன். அவர் குரலை இப்போதுதான் முதன்முறை கேட்கிறேன். அவர்
எழுத்தை வைத்து வேறு மாதிரி குரலை எதிர்பார்த்தேன் :-) மிகத் தேர்ந்த
நிருபர் என்பதை இப்பேட்டியில் நிலைநாட்டி இருக்கிறார். ஏதோ சி.என்.என்
பேட்டி போல் கால அளவைக் கணக்கில் கொண்டு, பேச்சு போகிற திசையில் வழி
தவறிவிடாமல் தம் பணியை மிகக்கவனமாகச் செய்திருக்கிறார். மிக நல்ல
கேள்விகள். அவரது கடைசி கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. மின்தமிழ்
2020 என்னவாக இருக்கும்?

பேட்டியின் நாயகர் ஸ்ரீநிவாசன். வழக்கம் போல் அருமையாக பதில்
சொல்லியிருக்கிறார். ‘சொல்லின் செல்வன்’ அநுமனை மறக்காமல், strategist
கிருஷ்ணன் எனும் புதுக்கோணம் காட்டி old wine in new bottle என்பதைச்
சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் உலகின் முதல் டிவிட்டர்
(சிட்டி) திருக்குறள்தான்!!

I strogly believe in Positive Thinking and the power of cooperative
(collective) thinking in changing ourselves, thereby changing the
society. அந்த வழியில்தான் மின்தமிழ் நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
அதற்கு ஸ்ரீநிவாசன் போன்றோரின் உற்ற துணை அவசியம் தேவை. அவர் நம்
குழுவிற்காக எதுவும் செய்யத்தயாராக உள்ளதை தன் செல்பேசி எண்ணைக்
கொடுத்திருப்பதன் மூலம் கோடிகாட்டி இருக்கிறார்.

இது போன்ற மின்னாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அடுத்ததாக யாரைப்
பேட்டி காணலாம் என்று இங்கு பரிந்துரை செய்யலாம்.

நாளை நமதே! வாழ்க!

Kudos to Dev & Selvan!!

அன்புடன்,
நா.கண்ணன்

2010/8/11 devoo <rde...@gmail.com>:
>
> http://blip.tv/file/3988212
>

Suresh sundaresan

unread,
Aug 11, 2010, 10:28:06 AM8/11/10
to mint...@googlegroups.com
கலந்துரையாடல் மிக நன்றகா இருந்தது
 
இன்னம்புரன் நண்பன்

2010/8/10 devoo <rde...@gmail.com>

Annakannan

unread,
Aug 11, 2010, 10:37:50 AM8/11/10
to மின்தமிழ்
இந்த மின்செவ்வியைக் கேட்டு மகிழ்ந்தேன். ஓர் ஆளுமையை அறிமுகப்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்தை நன்கு நிறைவேற்றியிருக்கிறது. சுருக்கமாக
இருப்பினும் சிறப்பாக இருக்கிறது. தேவ் அவர்களின் குரல் வளம் மிக நன்று.
செல்வன் நல்ல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஏற்றத் தாழ்வுகள் எப்போதும் இருக்கும் என்ற சீனிவாசனின் பதில், உண்மையே.
ஆயினும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது நம் கனவு. அப்போது
தான், மக்களாட்சியின் முழுப் பயனையும் மக்கள் பெற முடியும். இவ்வளவு
அறிவியல் - நுட்பியல் வளர்ச்சி இருந்தும், இந்த இடைவெளிகளைக் குறைக்க
இயலாது எனில் அது, உண்மையான வளர்ச்சி இல்லை.

பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சீனிவாசன்,
திவ்யம், சத்தியம் உள்ளிட்ட சில சொற்களுக்குத் தமிழில் பொருத்தமான
மாற்றுச் சொற்கள் இல்லை என்கிறார். சத்யமேவ ஜெயதே என்பதை வாய்மையே
வெல்லும் என மொழிபெயர்த்த போது, சத்தியத்தின் மூன்றில் ஒரு பகுதி பொருளே
வாய்மை என இராஜாஜி விமர்சித்ததாகக் கூறியுள்ளார். இந்தக் கூற்றினைத்
தமிழறிஞர்களுக்கு மடை மாற்றுகிறேன். தக்க சொற்களைத் தெரிவிக்க
வேண்டுகிறேன். ஒருவேளை அவ்வாறு இல்லாவிடில் தமிழில் உருவாக்க முயல்வோம்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.


Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 11, 2010, 10:37:34 AM8/11/10
to mint...@googlegroups.com
மிக நன்றாகவும் அருமையான சப்ஜெக்டாகவும் இருந்தது. பாராட்டுக்கள். மேலும் பல பல விஷயங்கள் தொடரவேண்டும் என ப்ரார்த்தனையுடன்.
கே.வீ.விக்னேஷ் சென்னை

K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

Swarna Lakshmi

unread,
Aug 11, 2010, 11:06:01 AM8/11/10
to mint...@googlegroups.com
கண்ணன்,
 
>>இது போன்ற மின்னாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அடுத்ததாக யாரைப்
பேட்டி காணலாம் என்று இங்கு பரிந்துரை செய்யலாம்.
 
அடுத்ததாக ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பேட்டி காண வேண்டுமென்று தோன்றுகிறது. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார். அவரிடம் மரபு சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றிக் கேட்டு அறியலாம். இவ்வாறான பேட்டிகளை ஒரு project management போல செய்வது மிக்க பலனளிக்கும் அல்லவா! எக்கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று கூட கலந்துரையாட வேண்டும். அதேபோல், இசை, இலக்கியம், மருந்துவம், சிற்பம், ஓவியம், textile technology evolution, பட்டு பருத்தி உற்பத்தி, இயற்கை - பாரம்பரிய விவசாயம் போன்ற துறைகளை சேர்ந்த பலரிடம் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து பேசலாம். பிரபலமானவர்கள் மட்டுமல்லாது பலதுறை வல்லுனர்களை பேட்டி காணலாம். ஒரே ஒரு முறை மட்டும் என்றில்லாது, e-learning போன்று தொடர்ந்த திட்டமிட்ட உரையாடல்கள் தொடர்ச்சியாக முழுமையாகக் கற்றுக்கொள்ள உதவும். skype போன்றவற்றின் உதவியினால் அதிக செலவில்லாமல் செய்ய முடியும்.
 
audio, video editing, project planning, publication, communication போன்ற விஷயங்களில் என்னால் ஆன முயற்சிகளை நிச்சயம் செய்கிறேன்.
 
 நன்றி
ஸ்வர்ணா

 

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 11 August, 2010 7:11:38 PM
Subject: Re: [MinTamil] ஒரு சுவையான பேட்டி

geeyes

unread,
Aug 11, 2010, 2:20:35 PM8/11/10
to மின்தமிழ்
திரு.தேவ், திரு.செல்வன் ஆகியோர்களின் பணி பாராட்டிற்குரியது. இதுபோல்
மேலும் தொடரவேண்டும்.

செல்வன்

unread,
Aug 11, 2010, 3:54:29 PM8/11/10
to mint...@googlegroups.com
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

எனக்கு டெக்னிக்கல் அறிவு பூஜ்ஜியம்.தமிழ் தட்டச்சவே இன்னும் சுரதா பெட்டியை தான் பயன்படுத்துகிறேன்.ஸ்ரி என்பதை அதற்கான குறியீடில் சுரதா பெட்டியில் அடிப்பது எப்படின்னு கூட தெரியாது:-)..என்னை தேவ் பேட்டி எடுக்க சொன்னப்ப இந்த லிமிடேஷனை சொன்னேன்..விடியோ கான்பரன்சிங்குக்கு ஸ்கைப், கூகிள் டாக் என முயன்றோம்.ஆனால் என்னால் அது எதையும் ஒழுங்கா இன்ஸ்டால் செய்ய முடியலை.கடைசியில் தேவ் சிரமபட்டு இதை பாட்காஸ்ட ஆக ஒலிபரப்பினார்...அதனால் இதுக்கு அனைத்து பாராட்டுகளும் தேவுக்கும், ஸ்ரினிவாசன் அவர்களுக்கும் தான் போகணும்.

அப்புறம் இப்பதான் பல பத்தாண்டுகள் கழித்து என் குரலை ரெகார்ட் செய்து நான் கேட்கிறேன்...சிறுவயதில் முதல் முதலில் ஒரு டேப்ரிகார்டர் வாங்கினப்ப கடைசியா என் குரலை ஒலிப்பதிவு செய்து கேட்டது..டெக்னாலஜியில் எத்தனை தூரம் பிந்தங்கி இருக்கேன்னு பாருங்க:-)

பேட்டியில் ஸ்ரினிவாசன் அவர்கள் சொன்ன கருத்துக்களை பற்றி என் 2 சென்ட்சை விரைவில் எழுதுகிறேன்



--
செல்வன்

www.holyox.blogspot.com


"Communism doesn't deserve to advance. It deserves to end. Communism has failed. It fails every time it's tried, and yet, for some reason, people keep giving it another chance."-Rush Limbaugh

N. Kannan

unread,
Aug 11, 2010, 6:39:39 PM8/11/10
to mint...@googlegroups.com
செல்வன்:

முதல்ல இங்க போய் NHM Writer install செய்யுங்க. ஆன்லைன் பெட்டியிலேயே
காலத்தை ஓட்டிடாதீங்க!

http://software.nhm.in/products/writer

தாயார் மகாலக்ஷ்மியைப் பற்றி அவ்வளவு அழகாக எழுதிய தாங்கள், ‘ஸ்ரீ’ என்று
எழுத முடியவில்லை என்றால், ‘திரு’வே திரு திருவென்று முழிப்பாள். Key in
”sri” ’ஸ்ரீ’ வந்துவிடும். கேப்பிட்டல் அல்ல ஸ்மால் லெட்டர்ஸ்.

ஸ்கைப், பேஸ்புக் இவையெல்லாம் குழந்தைகளே பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டார்கள். எனவே தயக்கமின்றி, உள்ளே புகுந்து விளையாடிப்
பாருங்கள். ஜிடாக்கில் கூட பேசலாம் (கூகுள் எல்லாம் செட்டு, செட்டாகத்
தருகிறது). நாம் கணினியில் கேட்கும் எதையும் உடனே பதிவு செய்ய முடியும்.
Wavepad என்றொரு செயலி (மென்பொருள்). அதை வைத்து இதைச் செய்ய முடியும்.
நான் இங்கு அதை அறிமுகப்படுத்தி, தேனீ போன்றோர் கரை கண்டுவிட்டனர் ;-)

தங்களது கேள்விகள் பிடித்திருந்தது. ஸ்ரீநிவாசன் ‘எப்படி’ பதில் சொல்வார்
என்று சிந்திக்க வைத்த கேள்விகள். உதாரணமாக மின்தமிழ் பற்றிய கேள்வி ;-)
மின்தமிழ் என்றவுடன் அவர் ‘தமிழ் கலைச்சொற்களுக்கு’ போய்விட்டார்.
என்னைப் பொறுத்த மின்தமிழ் என்பது ஒரு உளவியல் பொறி. மின்தமிழில் தினம்
நாம் காணும் முகத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் உலகமே தெரியும்!
நல்லது, கெட்டது, ஆசாபாசங்கள் எல்லாம். நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும்
பொறி ‘மின்தமிழ்’. இந்த தரிசனம் முதலில் ஆகிவிட்டால் இறை தரிசனம் அடுத்த
கட்டம் :-)) [இது புரிந்தால் ஆன்மீகத்தின் முதல் கட்டம் என்று பொருள்!]

கண்ணன்

2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 11, 2010, 6:44:51 PM8/11/10
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்வர்ணா:

மிக நல்ல சிந்தனை. ’செந்தமிழ் மாநாடு’ கண்டு மீண்டிருக்கும் ஐராவதம் ஐயா
மிகச் சரியான தேர்வு. ஐயாவின் தோழர், சீடர் நம் நரசய்யாதான் (அவர்
பேரிலேயே ஐயா இருக்கு). அவர்தான் இதைச் செய்து தர வேண்டும். எப்படிச்
செய்வது போன்ற தொழில் நுணுக்கங்களை நாம் ஒரு குழு அமைத்து சொல்லித்
தரலாம். அந்தக் குழுவில் தாங்கள் அவசியம் சேர வேண்டும்.

//இசை, இலக்கியம், மருந்துவம், சிற்பம், ஓவியம், textile technology
evolution, பட்டு பருத்தி உற்பத்தி, இயற்கை - பாரம்பரிய விவசாயம்//

மிக நல்ல யோசனை. முதலில் ஒரு பட்டியல் தயாரித்தால் தேவலை.

1. திரு. ஐராவதம் மகாதேவன்.
2.
3.
4.
5.

???


கண்ணன்

2010/8/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
> கண்ணன்,

ஆராதி

unread,
Aug 11, 2010, 8:23:13 PM8/11/10
to mintamil
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தெளிவாகச் சொல்லவந்த கருத்தை விளக்கினார்கள். திரு செல்வன் பேட்டி எடுப்பவர் எப்படிப் பேட்டி எடுக்க வேண்டுமோ அந்த நுட்பம் தெரிந்து பேட்டி கண்டுள்ளார். நலல பணி. மேலும் இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் தொடர வேண்டும். இவற்றிற்கெல்லாம் அடிப்படையை, சூழலை அமைத்துக் கொடுத்த திரு தேவ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்புடன்
ஆராதி

2010/8/11 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Aug 11, 2010, 9:12:08 PM8/11/10
to mint...@googlegroups.com
அந்த உணர்வு எனக்குப் பிடிந்திருந்தது. நம் எல்லோரின் சார்பாகவும்
எடுத்துச் செய்யும் ஒரு நல்ல காரியம். இது நம் மரபின் தொடர்ச்சி இல்லையா?
வேதம் என்ன சொல்லுகிறது? தமிழ் மறைகள் என்ன சொல்லுகின்றன? இந்த
ஒருமையைத்தானே!

சர்வ ஜனா சுகினோ பவந்து!

க.>

2010/8/12 ஆராதி <aara...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 12, 2010, 1:25:23 AM8/12/10
to mint...@googlegroups.com
பேட்டியில் ஸ்ரினிவாசன் ஐயா தெரிவித்த கருத்துக்களை பற்றிய என் கண்ணோட்டம்.

கம்யூனிகேஷன் திறமையை மாணவர்களீடம் வளர்ப்பது எப்படி?


மேடையேறி பேசும் திறன், ஊடகங்களை பயன்படுத்தும் திறன், வைரல் மார்க்கடிங், சோஷியல் மீடியா ஸ்கில்ஸ் ஆகியவற்றை பாடமாகவே கற்றுதரலாம்.வேலை தேடும் ஒவ்வொரு மாணவரும் இலவச வலைபதிவு அல்லது டொமைன் மூலம் தனக்கு ஒரு வலைதளம் உருவாக்கி, அதில் தனது ரெசுமே போஸ்ட் செய்து அதன் முலம் வேலை தேடூம் நிலை வரவேண்டும்.லிங்கிடின்னை இதற்கு நன்கு பயன்படுத்தலாம்.

ரெசுமே எழுதுவதும், வேலைக்கு அப்ளிகேஷன் எழுதுவதும் தனிகலை.வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படிக்க அப்ளிகேஷன் போடும்போது "எனக்கு ஏன் இந்த கோர்ஸில் இடம் தரணும்" என்பதை பற்றி ஒரு கட்டுரை மாதிரி எழுத சொல்லுவார்கள்.லஞ்ச் இன்டர்வியூ இருக்கும்.அப்ப டேபிள் மானர்ஸ் பார்ப்பார்கள்.டைனிங் எடிக்க்வெட்ஸ், புரபஷனல் டிரஸ்ஸிங் எல்லாம் மாணவர்கள் கல்லூரியிலேயே பழகிக்கணும்.

வேலை தேடும் கம்பனியை பற்றி நிறைய படித்து ஹோம் ஒர்க் செய்துட்டு போகணும்.வேலைக்கு ஏற்ப நம்ம ரெசுமேவை மாற்றி எழுதணும். சேல்ஸ்மேன் வேலைக்கு போனால் நம் பிரண்டேஷ்ச்ன் ஸ்கில்சை ஹைலைட் செய்யும்படி ரெசுமே எழுதணும்.அக்கவுண்டண்ட் வேலைக்கு போனால் நம் நம்பர் ஸ்கில்ஸை ஹைலைட் செய்யணும்.இது பொய் சொல்லுவதாகாது...ப்ளெக்சிபிளிட்டியை தான் காட்டுது.ஒரே ரெசுமேவை ஸ்டாண்டர்டாக எல்லா வேலைக்கும் அனுப்பி வைக்கும் பழக்கத்தை விடவேண்டும்.

இதுபோன்ற முயற்சிகளுக்கு கல்லூரியிலேயே பயிர்சிகள் அளிக்கலாம்.அது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

N. Kannan

unread,
Aug 12, 2010, 2:40:58 AM8/12/10
to mint...@googlegroups.com
இப்படி ஒவ்வொரு கேள்வியாக அலசுவோமா?
அவர்தான் இங்கு இருக்கிறாரே! அலசல் சுவையாகலாம்!

க.>

2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 12, 2010, 2:50:56 AM8/12/10
to mint...@googlegroups.com


2010/8/12 N. Kannan <navan...@gmail.com>

இப்படி ஒவ்வொரு கேள்வியாக அலசுவோமா?
அவர்தான் இங்கு இருக்கிறாரே! அலசல் சுவையாகலாம்!


நல்ல யோசனை.அவர் தன் கருத்தை சொல்லிவிட்டார்.இனி நாம் அதை பற்றி கருத்து சொல்லலாம்.It will add value to his interview


--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 3:26:44 AM8/12/10
to mint...@googlegroups.com
மேடையேறி பேசும் திறன்
 
மிகத் திறமையான அறிவாளிகல் பலரும் தாங்கள் மனதில் நினைத்திருக்கும் கருவின் வடிவத்தை  வார்த்தைகளில் வடிக்க பெரும் முயற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன்
 
 
மேடையில் நாம் ஒளி வெள்ளத்தில் நிற்போம், அனேகமாக  அரங்கில் உட்கார்ந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையோருடைய  முகம் கூட  நமக்குத் தெரியாது, அறிமுகம் இருப்பினும் அரங்கினுள் இருக்கும் இருளில்  அவர்களின் முகம் தெரியாது
 
முன்பெல்லாம்  ஒரு சொல் வழ்க்கு உண்டு
 
லஜ்ஜையை விட்டுக் கஜ்ஜயைக் கட்டு  என்று
 
முதலில் சபைக்கூச்சம்  விடவேண்டும்
 
அப்போதுதான்  நாம் பேச வந்த கருத்தை தெளிவாக  கூறமுடியும்
 
ஆகவே மேடையேறிப் பேசும் திறனை வளர்த்துக்கொள்வதைப் பற்றி  விவாதிக்கலாம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
12-8-10 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 3:27:37 AM8/12/10
to mint...@googlegroups.com
மிகத் திறமையான அறிவாளிகள்
 
என்று படிக்கவும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 
12-8-10 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதினார்:

செல்வன்

unread,
Aug 12, 2010, 3:39:31 AM8/12/10
to mint...@googlegroups.com
நல்ல தலைப்பு தமிழ்தேனி ஐயா

நான் கிராமத்தை சேர்ந்தவன்.பி.காம் படித்தபோது மேடையேறி பேசும் வாய்ப்பு எதுவும் வரவில்லை.எம்.பி.ஏ வகுப்பில் சேரும்போது எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது.மேடையேறி செமினார் எடுக்க சொன்னால் நடுக்கமாக இருக்கும்.அப்புறம் பயத்தை போக்கிகொள்ள அடிக்கடி மேடையேறி பேசினேன்.டேல் கார்னிகியின் பப்ளிக் ஸ்பீக்கிங் புத்தகத்தை லைப்ரரியில் படித்தேன்.மனதில் துணிவு வர அதெல்லாம் ஒரு காரணம்.டிகிரி வாங்கியபோது மேடையேறி பேசுவதில் நல்ல தேர்ச்சி அடைந்துவிட்டேன்.

என் அனுபவத்தில் மேடைபேச்சின் சில டெக்னிக்குகள்

1. நன்கு தயார் செய்துகொண்டு போகவேண்டும்

2. நல்ல சரளமாக பேச வேண்டும்.ஆடியன்ஸ் நாம் பேசுவதில் எந்த அளவு ஒன்றியிருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.நடுவே பேச்சை நிறுத்தி சின்ன சின்ன கேள்விகள் கேட்கவேண்டும்.

3. ஆடியன்சிடம் இருந்து கோபமான கேள்விகள் வந்தால் சின்ன,சின்ன ஜோக் மூலம் நிலயை சமாளிக்கலாம்.

4. பேச்சை சுவாரசியமா ஆரம்பிக்கணும்.நிறைய உதாரணம் தரணும்.

5. ஐந்து நிமிடம் முன்னதாகவே ஸ்டேஜுக்கு போய் மைக், கணிணி வேலை செய்யுதனனு பார்த்துக்கணும்

6.

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 4:25:36 AM8/12/10
to mint...@googlegroups.com
மிக  முக்கியமாக  முதன் முதலாக நாம்  பேழும் சொல்லுக்கு  அரங்கத்திலுள்ளோரின்
 
ப்ரதிபலிப்பு எப்படி இருக்கிறது  என்று எடை போடவேண்டும்
 
அடுத்ததாக  நாம் மேடையேறிப் பேசுகிறோம்  அவர்களெல்லாம் கீழே இருக்கிறார்கள்  என்னு  மன உணர்வை  நீக்க வேண்டும் அவர்கள் மனதிலிருந்து
 
நாமும் அவர்களோடு கலந்து  அவர்களின் பக்கத்திலே  இருந்துகொண்டு  பேசுவதான  ஒரு பாவனை ஏற்படுத்தி விடவேண்டும்
 
நாமும் அவர்களில் ஒருவனே  அவர்களை விடப் பெரிய மேதையல்ல  என்னும் சம உணர்வை  ஏற்படுத்திவிட்டு
 
அதன் பின்னர் நம் மேதாவிலாசத்தினால், நகைச்சுவை உணர்வால்  அவர்களின் மனத்தின் அடி ஆழம் வரை  ஊடுருவி
அவர்களை நம் வசப்படுத்த  முடியும்
 
இன்னும் சற்று நேரம் இவர் பேசியிருக்கலாமே  என்று அவர்கள் நினைக்கும் வண்ணம்
 
சற்று முன்னரே  சுவைபட  முடித்து விடவேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
12-8-10 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதினார்:
நல்ல தலைப்பு தமிழ்தேனி ஐயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 12, 2010, 5:06:08 AM8/12/10
to mint...@googlegroups.com
கோட் போட்டுண்டா, நடுங்கறது தெரியாம சமாளிக்கலாம்.

2010/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 12, 2010, 5:08:39 AM8/12/10
to mint...@googlegroups.com
2010/8/12 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> கோட் போட்டுண்டா, நடுங்கறது தெரியாம சமாளிக்கலாம்.


மேடையில் பேசுவது ஒரு கலைதான். ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்
நுணுக்கி, நுணுக்கி ஆராய்கிறேன். புரியவில்லை. நம் அறியாமை நம்மையறியாமலே
தொடையில் இறங்கி ஆட்டுகிறது போலும் :-))

க.>

Innamburan Innamburan

unread,
Aug 12, 2010, 5:34:49 AM8/12/10
to mint...@googlegroups.com
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம்.
-ஒவ்வையார்

நீட்ட்டோலை கூட இல்லையென்றால்! ரண்டாங்கிளாஸ்லே பாலு வாத்தியார்
சொல்லிகொடுத்ததை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் திலகர் மடலில், மஹாகவி
பாரதியின் புகழ் பாட, அடித்த பரிசு அவரின் 'பகவத்கீதை'. பத்திரமா
இருக்கு.
இன்னம்பூரான்
பி.கு. கோட் போட்டுக்கலை.
2010/8/12 N. Kannan <navan...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 6:04:09 AM8/12/10
to mint...@googlegroups.com
ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்
நுணுக்கி, நுணுக்கி ஆராய்கிறேன். புரியவில்லை
 
கிட்டத்தட்ட  600 முறை மேடையேறி இருக்கிறேன்
ஒரே நாடகத்தை  ,ஒரே கதா பாத்திரத்தை  பல முறை நடித்திருக்கிறேன்
 
ஆனாலும் ஒவ்வொரு முறையும் நாடகம் தொடங்கும் போது  ஒரு நடுக்கம் வரும்
 
அந்த நடுக்கம்தான்  நம்முடைய  கடமை உணர்வை, நம்முடைய  பொறுப்பை  உணர்த்தும்  கருவி’’அந்த நடுக்கத்தைக்  கட்டுப்படுத்திக்கொண்டு   மன உறுதியுடன்  செயல்படும்போது  இன்னும் சரியான முறையிலே நம் நடிப்பும் பேச்சும் அமையும்  என்பதில் சந்தேகம் இல்லை
 
அந்த நடுக்கம்தான்  நுணுக்கம்
 
அது நடுக்கமல்ல      நுணுக்கம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
12-8-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 12, 2010, 7:27:24 AM8/12/10
to mint...@googlegroups.com
நுட்பமாக ஆடும்போது...


2010/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 9:05:22 AM8/12/10
to mint...@googlegroups.com
நுட்பமாக  ஆடும் தருணம்  சமாதி நிலைக்கு சமானம்
 
அந்தக் கணத்தில்  அப்படியே கரைந்துவிட்டால்  ஜென்ம சாபல்யம்
 
அங்கே ஆடுவது நாமல்ல  அவன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
12-8-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

seethaalakshmi subramanian

unread,
Aug 12, 2010, 3:28:15 PM8/12/10
to mint...@googlegroups.com

அர்த்தமுள்ள பேட்டி

வாய்ச் சொல்லீல் வீரரடி பாட்டுக்குப் பலர் இருக்கின்றனர்.

எழுதுவது, அதைவிட பேசுவது எளிது. ஆனால் செயல் என்று வரும் பொழுது பல காரணங்களைக் கூறி ஓடி ஒளிந்து விடுபவர்கள் அதிகம்.

ஆக்க பூர்வமான செயல்களைச் செய்து வருவது கண்டு மனத்திலே ஓர் நிம்மதி தோன்றுகின்றது. மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்கள். இளைஞர்களை மிகவும் ஈர்த்து ஓர் பாதையைப் போட்டுக் கொடுத்திருக்கின்றார். மற்றவர்கள் அந்தப் பதையில் சென்று சமுதாயத்தைக் காப்பொம். அது அரசியல் பாதயல்ல. மனித நேயம் காக்கும் உன்னதப் பாதை.

திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சொன்ன விதம் அருமையாக இருந்தது

Communication skill

அது மிகவும் முக்கியம் சொல்லிவரும் பொழுது சொல்லின் செல்வனை எடுத்துக்காட்டாகக் காட்டினார்.

வாழ்க்கை சக்கரத்திற்கு நம்பிக்கைதான் அச்சாணி. அது ராமர் சேது பாலம் விஷயமாக இருந்தாலும் சரி. முதலில் மனிதனின் நம்பிக்கையைப் புரிந்து கொண்டு அணுக வேண்டும். அழகாகச் சொன்னார். எல்லாவற்றையும் விட தமிழ் மொழி வாழ தமிழன் வாழ வேண்டும் என்றார். அவர் சொன்னவைகளில் இதுதான் உச்ச நிலையைப் பார்க்கச் செய்கின்றது.

பண்பாடு பேசுகின்றவர்கள் முதலில் அதனைப் பின்பற்ற வேண்டும். தமிழ் வாழ முதலில் தமிழ்க் காவலர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களிடம் இருக்கும் தொலைக் காட்சியில் ஆங்கிலம் கலக்காமல் பார்த்துக் கொள்ளட்டும். அரை நிர்வாண உடை ஆட்டத்தை நிறுத்தட்டும். சினிமாவிற்குத் தலைப்பு தமிழில் வைத்தால் பரிசு என்று அறிவிப்பது மட்டும் போதாது. தன் வீட்டைத் திருத்தாதவன் எப்படி நாட்டை சீர்திருத்த முடியும். இளைஞர்கள் இந்தப் போலித் தனத்தைக் கண்டு கொதித்துப் போயிருக்கின்றார்கள். ஊடகங்கள் என்ற அரக்கர்களிடமிருந்து முதலில் குழந்தைகளைக் காப்பாற்றட்டும்.

ஸ்ரீனிவாசன் அவர்களே, நீங்கள் ஆற்றும் பணி சிறந்தது. உங்கள் என்ணம் போகும் திக்கும் தெரிகின்றது. துணிச்சலுடன் முன்னேறுங்கள்.

ராமர் பாலம் கட்ட அணி உதவி செய்தது போல். இளைஞர்களின் நற்பணிக்குத் துணை புரிவோம்.

செல்வன், என் மகனே, சரியான பாதையில் நீ செல்லத் தொடங்கியிருக்கின்றாய். இந்த அம்மாவின் மனம் பூரிக்கின்றது..

தொடர்ந்து நம் நாட்டுக்கு எவை நல்லனவோ அவைகளைச் செய்.

இந்த அம்மாவின் ஆத்மா உன்னை ஆசிர்வதிக்கும்.

சீதாம்மா



2010/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

செல்வன்

unread,
Aug 12, 2010, 11:54:09 PM8/12/10
to mint...@googlegroups.com
அம்மா,

மின் தமிழை பற்றி என்னிடம் சொல்லியதே நீங்கள் தான்.நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் இப்படி ஒரு அற்புதமான குழுவை, அறிஞர்கள் சபையில் இணையும் வாய்ப்பை இழந்திருப்பேன்.உங்களை மாதிரி பெரியவர்களிடம் வாழ்த்து பெறுவது என் தகுதிக்கு மீறிய பெருமை...நான் ஏதோ தத்துபித்து என உளறிகொட்ட மட்டுமே செய்கிறேன்.அதை எல்லாம் என்றோ செயல்படுத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் நீங்கள்..என்னவோ அம்மா, உங்கள் வயதில் உங்கள் சாதனையில் நூற்றில் ஒரு பங்கை செய்ய முடிந்தாலும் என் வாழ்க்கை பயனுள்ளதாக அமைந்தது என்ற திருப்தியில் மகிழ்ச்சியாக இருப்பேன்
 
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

Madhurabharathi

unread,
Aug 13, 2010, 12:00:38 AM8/13/10
to mint...@googlegroups.com
இந்த வேண்டுகோள் செல்வனுக்கு மட்டுமல்ல.
 
ஒரு மின்மடலுக்கு விடைதருகையில் அதற்கு முன்னர் அந்தத் திரியில் வெளியான 723 மடல்களையும் அப்படியே அனுமார் வாலாக அனுப்புவதும் தவறு.
 
அதே நேரத்தில், இந்த மடலில் செல்வன் செய்திருப்பது போல, யாருக்கு அல்லது எதற்கு பதிலளிக்கிறார் என்று அறியமுடியாத அளவுக்குச் சுத்தமாக மழித்து அனுப்புவதும் சரியல்ல. எந்தக் கூற்றுக்கு மறுமொழியோ அதையும், அதை எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி கொண்ட பகுதியையும் விட்டுவைப்பது ஏனைய வாசகர்களுக்குச் செய்யும் உதவியாக அமையும்.
 
நன்றி.
 
அன்புடன்
மதுரபாரதி

2010/8/13 செல்வன் hol...@gmail.com

Innamburan Innamburan

unread,
Aug 13, 2010, 1:39:32 AM8/13/10
to mint...@googlegroups.com
கவலையற்க, செல்வன்,
'...நான் ஏதோ தத்துபித்து என உளறிகொட்ட மட்டுமே செய்கிறேன்...'
Not always! இது செல்லக்குட்டு.

இன்னம்பூரான்

2010/8/13 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 13, 2010, 2:06:50 AM8/13/10
to mint...@googlegroups.com


2010/8/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Not always! இது செல்லக்குட்டு.


:-)))

உங்களுக்கு பூர்விகம் தஞ்சையா?:-)
--

Innamburan Innamburan

unread,
Aug 13, 2010, 3:18:19 AM8/13/10
to mint...@googlegroups.com
தஞ்சையா? என்ன அப்டி கேட்டுவிட்டீர்கள்? தஞ்சை அருகில் கும்பகோணம்
தெரியுமோ? உலகபுகழ். அதுக்கு கிட்ட ஐய்யம்பேட்டை. செவிவாய்புகையூர்.
பக்கத்திலே இன்னம்பூர். எங்க ஊர். கும்பகோணத்தை தூக்கியடித்த ஊர் என்று
தலபுராணம். ஐய்யம்பேட்டையை முழுங்கிய ஊர். மெளண்ட் ரோடு மஹா
விஷ்ணுவுக்கும் அது தான் ஊர்.

செல்வன்

unread,
Aug 13, 2010, 3:26:12 AM8/13/10
to mint...@googlegroups.com
நான் யூகித்தது சரியா தான் இருக்கு:-)

2010/8/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

tirumalainumbakkam

unread,
Aug 13, 2010, 4:43:23 AM8/13/10
to மின்தமிழ்
http://www.pbase.com/svami/innambur-kutanthai
3 . Innambur (Bhaskara Kshetram) Perumnal on Garuda Vahanam & Innambur
Srinivasar flanked by Ubhaya Nachiyars.
((Innambur is also native of Founder of News Paper "THE HINDU" , who
do lot of
Kainkaryams to this temple. It is said people from
Veeravalli a place in Andhara Pradesh migrated and settled in this
prosperous village, Innambur and it is said this Moorthy is originally
from Thirupathi , then it was worshipped in Kanchipuram and then
finally perumal
came to INNAMBUR. ))
god நித்யகல்யானசமேத எழுத்தறினாதர்--endowed the poet அகஸ்தியர் with
the rules of tamil grammar ; so he came to named as such
-- To dispel any suspicions of the king against Sudhanman’s
governance, He took the form of Sudhanman and presented the king with
all the accounts of the temple activities. To increase a student’s
mental capacities, devotees offer prayers at this temple, which is
also famous for the worship of Airavadham- the white elephant of the
Devas.

On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:

tirumalainumbakkam

unread,
Aug 13, 2010, 4:48:50 AM8/13/10
to மின்தமிழ்
The temple is about 7kms from Kumbakonam.

This is one of 275 Siva Devara Sthalam.

Main deity is Huge Swayambu linga known as ezuthari nathaswarar and
his consort Amman, Sugandha Kundhalambikai.


Sthala vruksham is Sanbakam Teertham known as Iravatha Teeertham.

Importance: Lord appeared in human form and acounted for temple
expenses to the King. Iravatham (Indra’s elephant) worshipped Siva in
this place and was blessed.

Sambandhar and Navukkuarasar sang hymns on Lord Siva of this place.

On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:

tirumalainumbakkam

unread,
Aug 13, 2010, 4:50:14 AM8/13/10
to மின்தமிழ்
The temple is about 7kms from Kumbakonam.

This is one of 275 Siva Devara Sthalam.

Main deity is Huge Swayambu linga known as ezuthari nathaswarar and

his consort Amman, Sugandha Kundhalambiki.


Sthala vruksham isSanbakamTeertham known asIravatha Teeertham.

Importance: Lord appeared in human form and acounted for temple
expenses to the King. Iravatham (Indra’s elephant) worshipped Siva in
this place and was blessed.

Sambandhar and Navukkuarasar sang hymns on Lord Siva of this place.

On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 13, 2010, 5:45:07 AM8/13/10
to mint...@googlegroups.com
கிருதஞ்னன் ஆனேன்.
வேணும்,
தாசன்

இன்னம்பூரான்

2010/8/13 tirumalainumbakkam <tnke...@gmail.com>:

devoo

unread,
Aug 13, 2010, 1:01:16 PM8/13/10
to மின்தமிழ்
ஒரு சிறு முயற்சி பெரிய பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. பாராட்டிய
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

நேர நெருக்கடி இருப்பினும் இருவரும் மின் தமிழுக்காக முழுமனத்துடன்
ஒத்துழைத்தனர்; இதற்காக அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். வேறு வேறு
நேரப்பகுதியைச் சேர்ந்த இருவரை அவர்களுக்குத் தோதான நேரம் பார்த்து
இணைப்பது சற்றுக் கடினமாக இருந்தது உண்மைதான்.

சொல்லின் செல்வனின் சொல்லாற்றலை ஸ்ரீநிவாசன் தெளிவான கருத்துப்
பரிமாற்றத்துடன் பொருத்திக் காட்டுகிறார். Communication skill இன்று
எத்தனை தூரம் மதிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

’அவிஸ்தரம், அஸந்திக்தம், அவிலம்பிதம், அவ்யதம்’ என்று இருந்ததாம் அஞ்சனை
மைந்தரின் சொல்லாடல் திறன். ’மிக விரிவாக இல்லாமலும், குழப்பத்துக்கு
இடம் தராமலும், நீட்டி முழக்கிச் சொல்லாமலும், தெளிவாகவும் அமைந்துள்ளது
இவன் பேசும் முறை’ என்று இராமபிரானே சான்றிதழ் தருகிறார். இது
மேடைப்பேச்சு, கட்டுரை, குழும மடலாடல் அனைத்துக்கும் பொருந்தும்தானே !

Live Blogging பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்; ஏனெனில் இது மிகவும்
பயனுள்ள தொழில்நுட்பம். இம்முறையில் ஓரிடத்தில் நடைபெறும் கருத்தரங்கு,
பயிலரங்கு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை உடனடியாக இணையத்தில் ஏற்றி
அனைவரும் காணச் செய்ய லாம். காண்போருக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையும் உடனே
வல்லுநர்களின் கவனத்துக்குக் கொணர்ந்து அங்கேயே விடை களைத்
தெரிவிக்கும் வசதியும் இதில் உள்ளது.

வெற்றிகரமாக ப்ரம்ம குமாரிகள் நிறுவனத்துக்காக இதைச் செய்துள்ளார்
ஸ்ரீநிவாசன் அவர்கள் -

http://prpoint.blogspot.com/2009/09/national-media-conference09-day-2.html

http://prpoint.blogspot.com/2009/09/national-media-conference09-day-2_13.html

Live blogging பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ள -

http://wordpress.org/extend/plugins/live-blogging

http://www.readwriteweb.com/archives/live_blogging_20.php

Live Blogging, Cyber Laws இவை பற்றி ஸ்ரீநிவாசன் அவர்கள் விரிவாகச்
சொல்ல வேண்டும் என்று நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்


தேவ்

Subashini Tremmel

unread,
Aug 13, 2010, 2:12:13 PM8/13/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
இன்று சற்று நேரம் கிடைத்ததில் அமைதியாக இந்தப் பேட்டியை கேட்க முடிந்தது. 
 
பேட்டியின் ஆரம்பம் மிக நன்று.  திரு.தேவ் பேட்டிக்கு வழங்கியுள்ள அறிமுகம் விரிவாக சிறப்பாக வந்துள்ளது. மெல்லிய பின்னனி இசையுடன் ஆரம்பித்து இசையுடன் முடிவது கலைத்துவத்துடன் இருக்கின்றது.
 
இது தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ள ஒரு பேட்டி. மாணவர்கள், அதிலும் கல்லூரி மாணவர்கள் கேட்டுப் பயன் பெற வேண்டும்.

பொருளாதாரத்துறையில் நிறைந்த அனுபவம் மிக்க திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் இந்தப் பேட்டியில் கலந்து கொள்வது நமக்கும் பெறுமை.
Attitude, குறிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும் என்கின்றார். இது ஒரு முக்கியமான கருத்து. செல்வனின் கேள்விகள் நல்ல பதிலை திரு.ஸ்ரீநிவாசனிடமிருந்து வரவழைக்க உதவியிருக்கின்றன என்றே சொல்ல வண்டும். சுவாரசியமாக தடையின்றி செல்கின்றது பேட்டி.
communication skill  மிக முக்கியமான ஒன்று. பல துறை கல்விகளில் இதனை ஒரு தனிப்பாடமாக பல பல்கலைக்கழகங்களும் இணைத்திருக்கின்றன. ஒரு மனிதரின் தனிப்பட்ட வெற்றியானாலும் சரி, தொழில் சார்ந்த வெற்றியானாலும் சரி திறமையான தொடர்புத்துறை அறிவும் அனுபவும் வெற்றிக்கு மிகவும் உறுதுணை சேர்ப்பவை.
 
இடையில் வரும் ஹனுமன் கதையும் சுவாரசியமாக இருந்தது. சுருக்கமாக ஒரு சில வார்த்தைகளில் விஷயத்தை எப்படி சமர்ப்பிக்க முடியும் என்னும் உதாரணம் பிரமாதம். 
 
நாமே உருவாக்கிக் கொள்ளும் perception, அந்த எண்ணங்களே நிஜம் என நினைத்து உண்மையைப் பார்க்காமல் இருப்பது..., நாமே மனதில் ஒரு கற்பனையை உருவாக்கிக் கொண்டு அதுவே உண்மை என நினைப்பது..
காலத்துக்கு ஏற்றார் போல வாழ்க்கை முறை,  மொழி போன்றவற்றில் வளர்ச்சி வரவேண்டும்.., நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடிய விஷயங்களை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.... 
போன்ற practical கருத்துக்கள் காலத்துக்கு ஏற்றவை, பொறுந்துபவை!. .
 
பொருளாதார துறை சார்ந்த ஒரு நல்ல உரையாடலை நல்ல தமிழில் கேட்டு மகிழ முடிந்தது.
 
பேட்டி கண்ட திரு.செல்வனுக்கும், பேட்டியில் கலந்து சிறப்பித்த திரு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும் இப்பேட்டியை ஏற்பாடு செய்து பதிவேற்றி நாம் கேடு மகிழ வாய்ப்பளித்த திரு.தேவ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
 
அன்புடன்
சுபா


2010/8/10 devoo <rde...@gmail.com>
அண்மையில் நம் குழுமத்தில் இணைந்த திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள்
Public  Relations  துறையில் இரண்டாவது பெரிய யாஹூ குழுமத்தை  (Image
management) நடத்தி வருபவர். இவரை செல்வன் அவர்கள் தொலைபேசி வாயிலாகப்
பேட்டி கண்டார்.

தெளிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு அனுமன் காட்டும் வழி, பல
பேரிடர்களைச்  சந்தித்தபோதும் பாரதத்தின்  உறுதி குலையாமை, நாட்டு
நலனுக்கு மக்களின் பங்களிப்பு, அயலகம் வாழ் இந்தியர்களின் பொறுப்பு, மொழி
நீடித்து வளர நாம் செய்ய வேண்டுபவை   இவை குறித்து இவர் கூறும்
கருத்துக்கள்  மனம் கவர்வதாக உள்ளன. 20 நிமிடம் நீடிக்கும் இந்த
பேட்டியைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்

http://blip.tv/file/3988212


தேவ்

N. Kannan

unread,
Aug 13, 2010, 8:16:50 PM8/13/10
to mint...@googlegroups.com
அன்பின் தேவ்:

இது ஒரு மின்செவ்வியுடன் நின்றுவிடக் கூடாது. ஸ்வர்ணா சொல்லியது போல்,
தாங்கள் ஒரு குழு அமைத்து தொடர்ந்து செயல்பட வேண்டும். நம் குழுவில்
இருக்கும் திறமையானவர்களை வெளிக்கொணர வேண்டும். ஒவ்வொரு பேட்டிக்கும்
ஒவ்வொரு நபர் என்று தயார் செய்ய வேண்டும். திரு.ஐராவதம் ஐயாவைப் பேட்டி
கண்டால் என்ன? திரு.நரசய்யா அவர்கள் மூலமாக அவர் ஒப்புதல் வாங்கலாம்.
ஒப்புதல் வாங்கியவுடன், எம்மாதிரிக் கேள்விகள் கேட்கலாம் என்று நம்
குழுவில் ஆலோசிக்கலாம்.

க.>

2010/8/14 devoo <rde...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Aug 13, 2010, 9:00:01 PM8/13/10
to mint...@googlegroups.com
அனபுடைய கண்ணன் அவர்களே,
நல்ல தொடக்கம்.  நான் மின்வெளிக் கற்றலுக்காக இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுதியுள்ளேன்.  தேவையான மென்பொருள் மற்றும் மின் புத்தக வடிவிலான கையேடும் என்னால் இக்குழுவுக்குக் கொடுக்க இயலும்
பேட்டி எடுக்கும் திறமை உள்ளவர்கள் கிடைத்துவிட்டால் குழு செயல்பட அடுத்த முயற்சியை நீங்கள் மேற்கொள்ளவேண்டும்
நாகராசன்

2010/8/14 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

tirumalainumbakkam

unread,
Aug 13, 2010, 10:16:15 PM8/13/10
to மின்தமிழ்
http://temple.dinamalar.com/New.aspx?id=674-----for a clear vivid
annotation of the temple

On Aug 13, 2:45 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> கிருதஞ்னன் ஆனேன்.
> வேணும்,
> தாசன்
> இன்னம்பூரான்
>

> 2010/8/13 tirumalainumbakkam <tnkesa...@gmail.com>:


>
>
>
> > The temple is about 7kms from Kumbakonam.
>
> > This is one of 275 Siva Devara Sthalam.
>
> > Main deity is Huge Swayambu linga known as ezuthari nathaswarar and
> > his consort Amman, Sugandha Kundhalambiki.
>
> > Sthala vruksham isSanbakamTeertham known asIravatha Teeertham.
>
> > Importance: Lord appeared in human form and acounted for temple
> > expenses to the King. Iravatham (Indra’s elephant) worshipped Siva in
> > this place and was blessed.
>
> > Sambandhar and Navukkuarasar sang hymns on Lord Siva of this place.
>
> > On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > wrote:
> >> தஞ்சையா? என்ன அப்டி கேட்டுவிட்டீர்கள்? தஞ்சை அருகில் கும்பகோணம்
> >> தெரியுமோ? உலகபுகழ். அதுக்கு கிட்ட ஐய்யம்பேட்டை. செவிவாய்புகையூர்.
> >> பக்கத்திலே இன்னம்பூர். எங்க ஊர். கும்பகோணத்தை தூக்கியடித்த ஊர் என்று
> >> தலபுராணம். ஐய்யம்பேட்டையை முழுங்கிய ஊர்.  மெளண்ட் ரோடு மஹா
> >> விஷ்ணுவுக்கும் அது தான் ஊர்.
>
> >> இன்னம்பூரான்
>
> >> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Aug 13, 2010, 10:40:13 PM8/13/10
to mint...@googlegroups.com
ஆகா! பிறகென்ன? மட, மடவென்று காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.

முன்னமே யோசித்த ஒரு திட்டம், பல்வேறு செயற்குழுக்களை நாம் உருவாக்க
வேண்டும். அச்செயற்குழுக்களின் வாயிலாக ஆக்கம் என்பது தொடர்ந்து நடைபெற


வேண்டும்.

‘மின்செவ்விக் குழு’ என்றொரு குழு உருவாக்கி, அதன் மூலம் உற்சாகத்துடன்
செயலாற்றத் தொடங்கலாம்.

என் பரிந்துரை:

பேரா.நாகராஜன்,
பிரைம்பாயிண்ட் ஸ்ரீநிவாசன்
தேவ் (தேவராஜன்)
செல்வன்,
ஸ்வர்ணா,
சுபா
தேனீயார்
ரங்கன்

இவர்கள் கொண்ட குழு இதைத் தொடங்கலாம். நானும் இக்குழுவில் இருக்க
ஆசைப்படுகிறேன். வேறு யாராவது?

கண்ணன்

2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 5:31:49 AM8/14/10
to mint...@googlegroups.com
நானும் தயார்.
 
@பேரா.நாகராசன் - கையேட்டையும் வழி முறைகளையும் எந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம் என்ற செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
முயற்சிப்போம்.
 
-சுபா
2010/8/14 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 14, 2010, 5:37:07 AM8/14/10
to mint...@googlegroups.com
அருமையான  தொடக்கம்
 
நான் தயார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Swarna Lakshmi

unread,
Aug 14, 2010, 6:03:57 AM8/14/10
to mint...@googlegroups.com
 நானும் தயார்!! இந்தக்குழு மட்டுமே ஒரு கலந்துரையாடலை முயற்சி செய்யலாமே!! project management மாதிரி...
 
ஸ்வர்ணா


From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sat, 14 August, 2010 3:07:07 PM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

Tthamizth Tthenee

unread,
Aug 14, 2010, 6:07:11 AM8/14/10
to mint...@googlegroups.com
நல்ல திட்டம்  ஒரு கலந்துரையாடல் செய்தால் ஒரு தெளிவு வரும்
 
சரியான நோக்கம் தெரியும்
 
வழி மொழிகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 6:54:58 AM8/14/10
to mint...@googlegroups.com

அன்புடையீர்,

இங்கே இணைக்கப்பட்ட கையேடு நம் பணிக்கு உதவியாக இருக்கும். பென்னி ஹைனஸ் இத்துறையில் வல்லுநர்.  அவரின் உதவி தேவைப்பட்டால் கிடைக்கும்.
பொட்கஸ்டிங் என்பது வணிகத்தில் அதிகம் பயன்பட்டாலும் மக்கள் இத்ழியல் இயக்கத்தில் இதன் பங்கு மகத்தானது.  பொதுமக்கள் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கும்போதும் அதன் பின்னரும் அதனைப் பதிவு செய்து மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒலி/ஒளி பரப்பும் முயற்சி.
இத்தொழில் நுட்பம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்குத் தேவையான விள்க்கமும் மேற்கோள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன்.
பயன்படும் மென்பொருட்கள்/வன்பொருட்கள் பற்றிய செய்தி கையேட்டில் உள்ளது
பொதுவாக இது நேரடி ஒலி/ஒளி பரப்பில் இயங்குவதில்லை.  பதிவு செய்யப்பட்டு இணைய தளத்தில் மேலேற்று செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது
இத்திட்டத்தை பற்றி கலந்துரையாட ஸ்கைப் போன்ற மற்ற மென்பொருட்கள் உள்ளன
நேரடி குழு உரையாடலுக்கான மென்பொருள் விஜிக் வசதி என்னிடம் உள்ளது. நூறுபேர் வரை கலந்துரையாடலாம்
விருப்பம் இருந்தால் குழு உரையாடலுக்கான நேரத்தை உறுதி செய்து கொண்டு தொடங்கலாம்
தங்களின் ஆர்வமே என்போன்றோருக்கு உந்துவிசை
நட்புடன்
பேரா.நாகராசன்

2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 7:43:29 AM8/14/10
to mint...@googlegroups.com

அன்புடையீர்,

இங்கே இணைக்கப்பட்ட கையேடு
http://www.tamilheritage.org/depot/sw/PodcastingHandbook_2007.pdf

நம் பணிக்கு உதவியாக இருக்கும். பென்னி ஹைனஸ் இத்துறையில் வல்லுநர்.  அவரின் உதவி தேவைப்பட்டால் கிடைக்கும்.
பொட்கஸ்டிங் என்பது வணிகத்தில் அதிகம் பயன்பட்டாலும் மக்கள் இத்ழியல் இயக்கத்தில் இதன் பங்கு மகத்தானது.  பொதுமக்கள் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கும்போதும் அதன் பின்னரும் அதனைப் பதிவு செய்து மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒலி/ஒளி பரப்பும் முயற்சி.
இத்தொழில் நுட்பம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்குத் தேவையான விள்க்கமும் மேற்கோள்களும் இக்கையேட்டில் உள்ளது.
பயன்படும் மென்பொருட்கள்/வன்பொருட்கள் பற்றிய செய்தியும் கையேட்டில் உள்ளது

பொதுவாக இது நேரடி ஒலி/ஒளி பரப்பில் இயங்குவதில்லை.  பதிவு செய்யப்பட்டு இணைய தளத்தில் மேலேற்று செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது
இத்திட்டத்தை பற்றி கலந்துரையாட ஸ்கைப் போன்ற மற்ற மென்பொருட்கள் உள்ளன
னேரடி குழு உரையாடலுக்கான மென்பொருள் விஜிக் வசதி என்னிடம் உள்ளது. நூறுபேர் வரை கலந்துரையாடலாம்

விருப்பம் இருந்தால் குழு உரையாடலுக்கான நேரத்தை உறுதி செய்து கொண்டு தொடங்கலாம்
தங்களின் ஆர்வமே என்போன்றோருக்கு உந்துவிசை
நட்புடன்

2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 8:08:58 AM8/14/10
to mint...@googlegroups.com
பேரா.நாகராசன்,

2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அன்புடையீர்,

இங்கே இணைக்கப்பட்ட கையேடு
http://www.tamilheritage.org/depot/sw/PodcastingHandbook_2007.pdf


 
கையேட்டுக்கு மிக்க நன்றி. இரவு வாசிக்கின்றேன்.
 
பொதுவாக இது நேரடி ஒலி/ஒளி பரப்பில் இயங்குவதில்லை.  பதிவு செய்யப்பட்டு இணைய தளத்தில் மேலேற்று செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது
இத்திட்டத்தை பற்றி கலந்துரையாட ஸ்கைப் போன்ற மற்ற மென்பொருட்கள் உள்ளன.
ஸ்கைப் முயன்றிருக்கின்றேன்.
 
னேரடி குழு உரையாடலுக்கான மென்பொருள் விஜிக் வசதி என்னிடம் உள்ளது. நூறுபேர் வரை கலந்துரையாடலாம்.
இது சுவாரசியமாக உள்ளது. முயற்சி செய்து பார்ப்போம். நாளைக் காலை எனக்கு 7:30am-9:30am CET  நேரம் உள்ளது. உங்களில் யாருக்கேனும் நேரமிருந்தால் முயன்று பார்க்கலாம்.
 
அன்புடன்
சுபா
 
 
விருப்பம் இருந்தால் குழு உரையாடலுக்கான நேரத்தை உறுதி செய்து கொண்டு தொடங்கலாம்
தங்களின் ஆர்வமே என்போன்றோருக்கு உந்துவிசை.
 
 
நட்புடன்

 

Innamburan Innamburan

unread,
Aug 14, 2010, 8:41:37 AM8/14/10
to mint...@googlegroups.com
செல்வன் - ப்ரைம்பாயிண்ட் ஶ்ரீனிவாசன் உரையாடலை காண இன்று தான் நேரம் கிடைத்தது. நல்வரவு ஆகுக. செம்மையாகவும், தெளிவாகவும் அமைந்தது உரையாடல். A feather in Dev's cap.

ப்ளிப் டீ.வியில் கருத்து பதிக்க இயலவில்லை; பே பால் சிக்கல். 
நன்ரி, வணக்கம்.
இன்னம்பூரான்

2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Aug 14, 2010, 9:52:01 AM8/14/10
to mint...@googlegroups.com
நாளை (ஞாயிறு என்னால் நேரம் ஒதுக்கமுடியும்)

நானும் தயார்.

7:30am-9:30am CET - இது எனக்கு மாலை 3 மணி போல். தயாராகிறேன்.

நாகராஜன் சொல்லும் மென்பொருள்(செயலி) என்னிடம் இல்லையே? Skype, Gtalk OK

க.>

2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 14, 2010, 10:12:14 AM8/14/10
to mint...@googlegroups.com
முன்னால் திட்டம் வகுத்துககொள்ள வேண்டாமா? இந்தியன் டைம் சொல்ல முடியுமா? Skype?
இன்னம்பூரான்

2010/8/14 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 10:16:41 AM8/14/10
to mint...@googlegroups.com
aஅன்புடையீர்
விஜிக் தளத்தில் என் நன்பரின் ஒளிப்பதிவு கீழே கொடுக்கபப்ட்டுள்லது

http://www.wiziq.com/online-class/282842-podcasting

சுபா அவர்களின் நேரத்தைக் கணக்கில் கொண்டு நாளைய கலந்துரையாடலை அமைக்கிறேன்
அவர் கொடுத்துள்ள நேரம் 7.30-9.30 சீஇடி நேரம்.  கல்ந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் 90 மணித்துளிகள்
விவாத்மேடையைச் சரி செய்து தகவல் அனுப்புகிறேன்
நாகராசன்
2010/8/14 N. Kannan <navan...@gmail.com>
நாளை (ஞாயிறு என்னால் நேரம் ஒதுக்கமுடியும்)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 11:34:41 AM8/14/10
to mint...@googlegroups.com
aமிகச்சரியான அறிவுரை.
ஒருவர் ஜெர்மையில் காலை 7.30 முதல் 9.30 வரை.  இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நேர வேருபாட்டின் அடிப்படையில் இந்திய நேரம் அதிகாலை 3.30 ஆக இருக்கும்
எனவே நாளை எனது மென்பொருளை நாள் முழுதும் இயங்கும் வண்ணம் அமந்துள்ளது
நாளை கீழே கொடுக்கப்பட்டுள்ள
http://www.fms.edhub.net/
இணைப்பைச் சொடுக்கி
விவாத அரங்கில் நுழையவும்
மாணவ்ர் என்ற இடதுபுறம் உள்ள படத்தைச் சுட்டியால் சொடுக்கவும்
திரையின் நடுவில் தோன்றும் படத்தில் அனுமது எனொஅதற்கு நிகரான ஆங்கில பொத்தனை அழுத்தவும்
எதேனும் சிக்கன் இருந்தால் மின்தமிழுக்கு செய்து அனுப்பவும்
நாகராசன்
2010/8/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Ganesan

unread,
Aug 14, 2010, 11:40:37 AM8/14/10
to மின்தமிழ்

On Aug 14, 10:34 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


>> எதேனும் சிக்கன் இருந்தால் மின்தமிழுக்கு செய்து அனுப்பவும்
> நாகராசன்

ஐயா,

இங்கிருப்போர் பெரும்பாலும் சைவம் அல்லவா :)

சரி, சரி - கண்ணன் வைணவம் என்பதறிவேன்.

அன்புடன்,
நா. கணேசன்

Innamburan Innamburan

unread,
Aug 14, 2010, 11:51:11 AM8/14/10
to mint...@googlegroups.com
ரோஸ்ட் பண்ணா போச்சு.


2010/8/14 N. Ganesan <naa.g...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 12:00:03 PM8/14/10
to mint...@googlegroups.com
திரு கனேசனார் அவர்களே
தவறைச் சுடட்டிக்காட்டியதற்கு ந்ன்றி
எழுத நினைத்தது சிக்கல் எழுதியது சிக்கன்
செய்தி செய்து என்று மாறி விட்டது
நாகராசன்


2010/8/14 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 1:00:21 PM8/14/10
to mint...@googlegroups.com
எதற்கும் ஒரு பின்புலம் இருக்கும்.  அதை உணர்ந்தால் கனேசனார் போன்ற எழுத்துக் கடவுள் எள்ளி நகையாடமாட்டார்.  என் இல்லத்தில் என்னைத்தவிர யாருக்கும் தமிழ் தெரியாது.  கடந்த 34 வருடங்களாக ஆங்கிலமே என் வீட்டில் ஆட்சிமொழி
கணினியைப் பொருத்தவரையில் தமிழ் பயன்பாடு எனக்குப் புதியது
என் வேலையின் காரணமாக நான் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் அடிக்கடி மாற வேண்டிய நிலை
இவை அனைத்தையும் கண்கிடும்போதும் சைவ வைணவக் குறும்பினைக் கணக்கில் கொண்டு இனிமேல் தமிழில் எழுத்வுது இல்லை என்ற முடிவுக்கு வதுவிட்டேன்.
நாகராசன்

2010/8/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ரோஸ்ட் பண்ணா போச்சு.

Swarna Lakshmi

unread,
Aug 14, 2010, 1:01:06 PM8/14/10
to mint...@googlegroups.com
இந்த கலந்துரையாடல் நாளை இருக்கிறதா? Central European Time 7.30 காலை நேரம் என்றால் இந்திய நேரம் காலை 11 மணி அல்லவா. யாராவது உறுதிப்படுத்த முடியுமா??!!
நன்றி
ஸ்வர்ணா


From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sat, 14 August, 2010 9:04:41 PM

Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 1:10:23 PM8/14/10
to mint...@googlegroups.com
Thanks for drawing my attention to the timezone issue.  I assume that the time difference will be four and half hours. I will try to setup the discussion forum as open forum so that whoever wants to can join the group tomorrow.  I will setup the time as 11 AM
Nagarajan


2010/8/14 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Tthamizth Tthenee

unread,
Aug 14, 2010, 1:11:52 PM8/14/10
to mint...@googlegroups.com
நான் துபாயில் உள்ளேன்
 
இந்திய நேரத்தின் படி   மதியம் 12.00   என்றால்
 
இங்கே  10.30   காலை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
On 8/14/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:



--

Swarna Lakshmi

unread,
Aug 14, 2010, 1:15:17 PM8/14/10
to mint...@googlegroups.com
Mr. Nagarajan, please dont worry about the spelling mistakes when you type in  tamil. it takes a few days of practice to get it right. it is a pleasure to read and write in tamil and I suggest you continue to type in Tamil. All of us had problems earlier and now we are ok.
 
To my knowledge 7.30 AM in Germany is 12 Noon in India. I am available for a chat at this hour tomorrow (Sunday 15th Aug).
 
எல்லாருக்கும் என் மனம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
 
Thanks
Swarna

 


From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sat, 14 August, 2010 10:40:23 PM

Tthamizth Tthenee

unread,
Aug 14, 2010, 1:19:47 PM8/14/10
to mint...@googlegroups.com
அப்படியானால்  நான்   11. மணிக்கு  வருகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 8/14/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:



--

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 1:20:41 PM8/14/10
to mint...@googlegroups.com
aதங்களின் மடலுக்கு நன்றி.  நீங்கள் வேண்டியவாறு தமிழில் தொடர்ந்து எழுதுவேன்.
நன்றியுடன்
நாகராசன்

2010/8/14 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Aug 14, 2010, 1:45:50 PM8/14/10
to mint...@googlegroups.com
அப்பாடா! என்னை ஆசுவாசப்படுத்தினீர்கள். நானும் பிழையுடன் எழுதுபவன் தான். உடனக்குடன் கேலி செய்து கொள்வது, நட்பை உறுதி படுத்தும். நான் பயந்தேவிட்டேன்.
அன்புடன்,
இன்னம்பூரான்

2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 14, 2010, 2:16:32 PM8/14/10
to mint...@googlegroups.com
பிழைத்தீர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

sharadha subramanian

unread,
Aug 14, 2010, 6:14:13 AM8/14/10
to mint...@googlegroups.com



From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sat, 14 August, 2010 8:10:13 AM

Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

ஆகா! பிறகென்ன? மட, மடவென்று காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.

முன்னமே யோசித்த ஒரு திட்டம், பல்வேறு செயற்குழுக்களை நாம் உருவாக்க
வேண்டும். அச்செயற்குழுக்களின் வாயிலாக ஆக்கம் என்பது தொடர்ந்து நடைபெற
வேண்டும்.

‘மின்செவ்விக் குழு’ என்றொரு குழு உருவாக்கி, அதன் மூலம் உற்சாகத்துடன்
செயலாற்றத் தொடங்கலாம்.

என் பரிந்துரை:

பேரா.நாகராஜன்,
பிரைம்பாயிண்ட் ஸ்ரீநிவாசன்
தேவ் (தேவராஜன்)
செல்வன்,
ஸ்வர்ணா,
சுபா
தேனீயார்
ரங்கன்
சாரதா

இவர்கள் கொண்ட குழு இதைத் தொடங்கலாம். நானும் இக்குழுவில் இருக்க
ஆசைப்படுகிறேன். வேறு யாராவது?

கண்ணன்

2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> அனபுடைய கண்ணன் அவர்களே,
> நல்ல தொடக்கம்.  நான் மின்வெளிக் கற்றலுக்காக இத்தொழில் நுட்பத்தைப்
> பயன்படுதியுள்ளேன்.  தேவையான மென்பொருள் மற்றும் மின் புத்தக வடிவிலான கையேடும்
> என்னால் இக்குழுவுக்குக் கொடுக்க இயலும்
> பேட்டி எடுக்கும் திறமை உள்ளவர்கள் கிடைத்துவிட்டால் குழு செயல்பட அடுத்த
> முயற்சியை நீங்கள் மேற்கொள்ளவேண்டும்
> நாகராசன்

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 2:35:17 PM8/14/10
to mint...@googlegroups.com
ஜெர்மனியில் காலை 7:30 என்றால் உறுதியாக இந்திய நேரம் காலை 11 மணிதான்.  ஆக :
 
ஜெர்மனி : 7:30
இந்தியா: 11.00
கொரியா: 14:30
 
-சுபா

 
2010/8/14 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 2:40:24 PM8/14/10
to mint...@googlegroups.com
டுபாய் : 9:30 காலை

http://www.timeanddate.com/worldclock/meeting.html பக்கத்தில் Meeting planner  இருக்கின்றது. இதில் பார்த்து நேரத்தை பிற நாடுகளிலிருப்போர் உறுதி செய்து கொண்டு இணைந்து கொள்ளலாம்.
 
-சுபா
2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Aug 14, 2010, 8:07:57 PM8/14/10
to mint...@googlegroups.com
2010/8/15 N. Ganesan <naa.g...@gmail.com>:

> இங்கிருப்போர் பெரும்பாலும் சைவம் அல்லவா :)
>
> சரி, சரி - கண்ணன் வைணவம் என்பதறிவேன்.
>

கோவையிலும் குசும்பு உண்டோ? ;-)

வட இந்தியாவில் வைஷ்ணவ உணவு என்று சொன்னால்தான் மரக்கறி உணவு கிடைக்கும்.
அது தெரியுமோ:-))

ஆனால் சர்வதேச விமானப்பயணத்தில் ‘சமண (ஜெய்ன்) உணவு’ என்று
தேர்ந்தெடுத்தால்தான் இந்திய மரக்கறி உணவு கிடைக்கும்.

அது சரி, சைவம் எப்படி மரக்கறியுடன் சம்மந்தப்படுகிறது. சிவனார்
பிள்ளைக்கறி சாப்பிட்டவராச்சே!!

க.>

பிகு: இது இவ்விழைக்கு சம்பந்தமில்லாதது. மன்னிக்க. பேரா.நாகராஜன்
தொடர்ந்து தமிழில் எழுதுக. சித்திரமும் கைப்பழக்கம்! நான் மதியம்
2:30க்கு தயாராக இருப்பேன்.

N. Kannan

unread,
Aug 14, 2010, 8:10:13 PM8/14/10
to mint...@googlegroups.com
2010/8/14 sharadha subramanian <shara...@yahoo.co.in>:
> பேரா.நாகராஜன்,
> பிரைம்பாயிண்ட் ஸ்ரீநிவாசன்
> தேவ் (தேவராஜன்)
> செல்வன்,
> ஸ்வர்ணா,
> சுபா
> தேனீயார்
> ரங்கன்
> சாரதா
 
நல்லது, தாங்கள் மின்னரட்டையில் கலந்து கொள்கிறீர்களா? தாங்கள் இருப்பது எந்த நாட்டில்?
 
க.>
 
 
 

N. Kannan

unread,
Aug 14, 2010, 8:19:25 PM8/14/10
to mint...@googlegroups.com
@Nagarajan Vadivel
 
video=conference2.jpg
 
இப்படி அரட்டையில் கலந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். சரியா?
 
க.>
video=conference2.jpg

karthi

unread,
Aug 14, 2010, 8:52:31 PM8/14/10
to mint...@googlegroups.com
சாப்பிடவில்லை; ஆனால் "எனக்கு வேண்டும்" என்று மிரட்டி
பாவலா பண்ணினார். அதற்காக அவர் மாமிசம் சாப்பிடாதவர்
என்று சொல்லவில்லை. கணணப்பனார் கொண்டு வைத்த
கறி வகைகளைச் சாப்பிட்டிருக்கவும் கூடும்.

ஒய் வைணவரே! விஷ்ணு நரமாமிசம் சாப்பிடவில்லையா?
ஹவியில் போட்ட குதிரையிறைச்சியெல்லாம் தேவர்கள்
சாப்பிடவில்லையா?

இறைவன் மனிதன் சாப்பிடத்தான் இந்த மிருகங்களைப்
படைத்தான் என இஸ்லாமும் சொல்லுகிறது.

மலேசியாவில் சில புத்தர் கோயில்களில் மாமிசம் சமைக்கிறார்கள்.
அங்குள்ள பூசாரிகள் மாமிசம் சாப்பிடத் தடையேதுமில்லை.

மனிதன் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பதற்கு எந்த மதத்திலும்
வலுவான வாதங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் eco ஆதரவாளர்கள்
அதனை வலியுறுத்துகிறார்கள். அது போற்றத்தக்கதே!

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>

Sent: Sunday, August 15, 2010 8:07 AM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

N. Kannan

unread,
Aug 14, 2010, 9:06:50 PM8/14/10
to mint...@googlegroups.com
ஹ..ஹா! அப்படி வாங்க வீரசைவரே!!

பொன்னன் (ஹிரண்யன்) வயிற்றைக் கிழித்துக் கொன்றார் என்றுதான்
நினைக்கிறேன். அவனை சாப்பிட்டு முழுங்கிவிட்டாரா என்று தெரியவில்லை. தேவ்
போன்றவர்களுக்குத் தெரியலாம் ;-)

ஆனால் அவன் ‘உலகமுண்ட பெரு வாயன்’. உலகமென்றால் எல்லாம் அடக்கம்தான் :-))

>
> மனிதன் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பதற்கு எந்த மதத்திலும்
> வலுவான வாதங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் eco ஆதரவாளர்கள்
> அதனை வலியுறுத்துகிறார்கள். அது போற்றத்தக்கதே!
>
>

உண்மைதான். நமது மூதாதையர் மாமிசம் சாப்பிட்டு இருக்க வேண்டும். அறன்
வலியுறுத்தும் போது ‘கொல்லாமை’ சிறப்புறுகிறது. எல்லா உயிர்களுக்கும்
வாழும் உரிமையுண்டு என்று பார்ப்பது நல்ல நோக்கு.

ஆயினும் என் கேள்விக்கான சரித்திர விடை கிடைக்கவில்லை. அக்காலத்தில்
சமணர்கள் மட்டுமே மரக்கறி உணவாளர்களாக இருந்திருக்க வேண்டும். இப்போதும்
விமானத்தில் ‘இந்து உணவு’ என்று போட்டுவிட்டோமெனில் மாமிசம் வந்துவிடும்.
ஆனால் ஜெயின் உணவு என்றால் அது இந்திய மரக்கறி மட்டுமே. வெறுமே
‘வெஜிடேரியன்’ என்று போட்டுவிட்டால் வசதிக்கேற்றபடி ஐரோப்பிய, ஆசிய
மரக்கறி உணவு வரும்.

ஆக, மரக்கறி உணவு ‘சைவ உணவு’ என்று ஆன கதை எப்படி :-))

க.>

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 10:21:15 PM8/14/10
to mint...@googlegroups.com
சிக்கன் செய்து என்ற எழுதுப்பிழையைக் கருத்துப் பிழையாக மாற்றிக் காட்டியுள்ளார் கனேசன்.  செய்து என்பது சமைப்பது என்ற பொருளில் எடுத்துக் கொண்டு சைவரும் வைணவ்ரும் சாப்பிடுவது எப்படி என்று கவலைப்படுகிறார்.
சென்னையில் பொன்னுசாமி ஹோட்டல் என்ற அசைவ உணவகம் இருகிறது என்பதை கனேசன் அறிவார் என்று நம்புகிறேன்.  அங்கு பிசுசுப்போட்ட கோழி என்பது மிகவும் சுவையானதாகும்
நான் அவர்களுக்கு நெருக்கமானவன்.  சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து பிச்சுப்போட்ட கோழி எனக்குப் பிடித்த உணவு
நான் எனது ஆராய்ச்சிக்காக ஆறு ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியுள்ளேன்.  அதனால் மூன்று தலைமுறை அரசியல்வாதிகளின் நட்பும் நெருக்கமும் எனக்கு உண்டு. 

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு மீன்.  அதுவும் பொன்னுசாமி ஹோட்டல் இராதா என்ற ஊழியர் தான் வறுத்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவார். எனக்கு மீன் அவ்வளவாகப் பிடிக்காது.  ஆனால் இராதா வறுத்துக் கொடுத்தால் விரும்பி உண்பேன். இதைச் சொல்வதன் காரணம் இராதா திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர், பிறப்பால் ஒரு அந்தணர். மிக அருமையாக மீன்கறி சமைப்பார் ஜோதிடத்தில் திறமை வாய்ந்தவர்.  தான் ஒரு குறிப்பிட்ட நாளில் இறந்து விடுவேன் என்று கணித்து அதே நாளில் இறந்து போனார்

அறிஞர் அண்ணா ஒரு அசைவப் பிரியர்.  அவரோடு நாங்கள் சுற்றுப் பயணம் செல்லும்போது ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க வினர் போட்டி போட்டுக்கொண்டு விதம் விதமாக சமைத்துக் கொண்டு வருவார்கள்.  சில நேரம் நாவலர் அவர்களும் இருப்பார். அவர் சுத்த சைவம்.  சாப்பிடும் இடத்திலேயே சைவ உண்வின் பெருமையை எடுத்துச் சொல்வார். அண்ணா அவர்கள் நகைசுவை உணர்வுடன் குரங்குகூடத்தான் சைவம் என்று கூறுவார் சென்னை வந்தால் அண்ணா அவ்ரகள் கூட்டம் முடிந்தபின் ந்ள்ளிரவு நேரம் இராயப்பேட்டை கேஃப்  அமினில் அசைவ உணவு விரும்பி உண்பார். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு கருவாட்டுக் குழம்பு.  அதுவும் அவரது நண்பர் வி.பி.இராமனின் மனைவி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்.  அட்வகேட் ஜெனராலாக இருந்த இராமன் ஒரு அந்தணர்.  அவரது அப்பா இராமனும் இராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள்.  கருவாட்டுக் குழம்பே தி.மு.க ஆட்சியைப் பிடிக்க அடிப்படையாக அமைந்தது.  அண்ணா இராஜாஜியைச் சந்த்தித்ததும் கூட்டஃணி உருவாக்கியதும் இராமனின் இல்லத்தில்தான்,

அமெரிக்காவுக்கு என் பேராசிரிய ந்ண்பர் ஒரு பல்கலையில் குறுகிய கால்ப் பணிக்காகச் செல்ல நேர்ந்தது.  அவர் ஒரு வைணவர்.  தான் வைணவர் என்றும் அசைவ ஊண் கூடவே கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.  பல்கலை சென்றடைந்ததும்
உணவுக்கூடத்துக்குச் சென்று தனக்கு அரிசிச் சாதமும் தயிரும் மட்டும் இருந்தால் பொதும் என்று கூறியிருந்தார்
முதல்நாள் அரிசிச் சோறும் தயிரும் சுவையாகத்தான் இருந்தது ஆயினும் அரிசியின் நிறம் தும்பைப்பூ போல் வெண்மையாக இல்லை என்பதால் மறுநாள் அவ்ர் ஏன் இந்த நிறமாற்றம் என்று அற்ந்து கொள்ள விரும்பினார்.  அரிசியை மாட்டுகறி வேகவைக்கப்பட்ட நீரில் சமைத்ததால் இந்த நிறமாற்றம் என்பதைத் தெரிந்துகொண்டார்.  அடுத்த நாளில் இருந்து த்ண்ணிரில் அரிசியை வேகவைக்கவேண்டும் என்று எடுத்துச் சொல்லி அந்தச் வைணவப் பேராசிரியர் சைவர் ஆனார்
கனேசன் அவர்களே ஒரு வைணவர் உணவு காரணமாக சைவம் என்று கூறுகிறீர் ஆனால் சைவரை உணவு காரணமாக வைணவர் என்று கூற மறுக்கிறீர்கள்.  மரக்கறி என்பது சைவம உணவு என்று அழக்கப்படுவது ஏன்?    சில ஆண்டுகளுக்கு முன் தழிழ்நாட்டில் பாடப்புத்தகத்தில் சைவத்திற்கு எடிர்ப்பதம் உறு என்று கேள்வி கேட்டு அசைவம் என்ற பதிலும் கொடுக்கப்பட்டிருந்தது
திருச்சியைச் சேர்ந்த என் நண்பர் வீரசைவர்.  நல்ல அசைவர்.  எனது பகக்த்து வீடடுக்காரர் வைணவர்.  வீட்டுக்கு வெளியே அடுப்பு மூட்டி அசைவ உணவு சமைப்பார்
நாகராசன்

2010/8/15 karthi <karth...@gmail.com>

N. Kannan

unread,
Aug 14, 2010, 10:38:01 PM8/14/10
to mint...@googlegroups.com
சுவையான அலசல் நண்பரே! உங்களிடம் இப்படி நிறையக் கதை கேட்க ஆசை!

சில பேருக்கு இயல்பாக சில உணவுகள் பிடிப்பதில்லை. சைனா 5 முறை போய்
இருக்கிறேன். ஒரு கருத்தரங்கில் நிறைய இந்திய மாணவர்கள் வந்திருந்தனர்.
எனவே எங்களுக்கு சைவ உணவு தனியாக வழங்கப்பட்டது. எங்களோடு ஒரு
பிரென்சுக்காரரும் சேர்ந்து கொண்டார். என்ன விஷயம் என்று கேட்டால், அவர்
குழந்தையாக இருக்கும் போதே பெற்றோர் கொடுத்த சிக்கன் சூப, ஆட்டுக்கால்
சூப் இவையெல்லாம் அவருக்குப் பிடிக்கவே இல்லையாம். அவர் பிறவிச் சைவர்!
வள்ளலார் போல.

வாடிய பயிரைக் காணும் போது வாடும் உள்ளம் வந்துவிட்டால், நமக்கு மரக்கறி
உணவு கூட நஞ்சுதான். சில நேரம் தோன்றும் சில சாதுக்கள் போல் எந்த உணவும்
இல்லாமல் வாழ்ந்து விட்டால் எப்படி இருக்குமென்று. ஆனால் ஆசை விட
மாட்டேன் என்கிறதே, என்ன செய்ய? அது சரி, இந்த நளபாகம் இழை என்னாச்சு
:-)))

க.>

2010/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 14, 2010, 10:56:19 PM8/14/10
to mint...@googlegroups.com
விசிக் தளத்தில் பதிவு செய்துவிட்டேன்.இந்திய நேரம் 11 மணி என்றால் எனக்கு இரவு 1:30 மணி.ஆனால் நான் தூங்கபோவது 3:30 என்பதால் பிரச்சனையில்லை.ஒரே பிரச்சனை இரவு மைக்கில் பேசினால் தங்கமணி பத்திரகாளியாக மாறும் வாய்ப்பு உள்ளதுதான்.நேரடி ஒளிபரப்பில் நான் அடிவாங்குவதை பார்த்தால் அகில உலக ஆண்கள் உரிமை சங்கத்துக்கு ஒரு போன் செய்துவிடுங்கள்:-)

--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

செல்வன்

unread,
Aug 14, 2010, 11:19:36 PM8/14/10
to mint...@googlegroups.com
பொதுவா இந்துக்களுக்கு அவர்கள் கடவுள் செய்வது எல்லாம் சுன்னாஹ் கிடையாது.சாமி பிள்ளைகறி கேட்டால் நாமளும் கேட்பதில்லை, சாமிக்கு ரெண்டு பொண்டாட்டி என்றாலும் நமக்கு ஒன்றுதான்.

சைவமும்,வைணவமும் மரக்கறி உணவை தான் வலியுறுத்தும்.பெரும்பாலான சிவன்,விஷ்ணு ஆலயங்களில் மரக்கறி உனவை தான் படைப்பார்கள்.சிவராத்திரி,ஏகாதசி மற்றும் பிற நல்ல நாட்களில் அசைவம் தவிர்ப்பார்கள்.அனைவரையும் அசைவத்தை தவிர்க்க சொல்லாத ஒரே இந்திய மதம் இந்துமதமே. சமணம்,பவுத்தம் ஆகியவை சைவத்தை எல்லோருக்கும் வலியுறுத்தின.இந்த மாதிரி பிராக்டிகலா நடக்காத விசயத்தை வலியுறுத்தியதால் இன்று சமணம் காணாமல் போனது.பவுத்தர்கள் பாம்பு,பல்லியை எல்லாம் சீனாவில்,தாய்லாந்தில் உண்கிறார்கள்.உலகில் அதிக எண்ணிக்கையில் சைவர்கள் இருக்கும் ஒரே மதம் இந்துமதமாக ஆகிபோனது

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2010, 11:34:46 PM8/14/10
to mint...@googlegroups.com
திரு. கண்ணன் மற்றும் குழு உறுபினர்களுக்கு
அரட்டை நிகழும் தளம்
www.wiziq.com
 பற்றிய செய்தி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது
திருமிகு.சாரதா அவர்களின் மின் அஞ்சல் முகவரி கிடைத்தால் அவர்களையும் குழுவில் இணைத்து விடுவேன்.

திரு.கண்ணன் அவ்ர்கள் இந்திய நேரம் 11 மணிக்கு கொரியாவின் நேரத்தச் சரிபார்க்கவும்
நாகராசன்


2010/8/15 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 14, 2010, 11:58:08 PM8/14/10
to mint...@googlegroups.com
1. ஒரு கேலி அருமையான பன்முகப்படைப்பு ஒன்றை தருவித்து விட்டது பாருங்கள், பேராசிரியர். நாகராசன்.

2. யான் எங்குளேன், ஐயா? கண்ணனின் பட்டியலில் இல்லை. ஆனால், உங்களின் கனிவான அழைப்பு வந்துள்ளது. ஏது செய்வது என்று அறிய இயலவில்லையே, பராபரமே.
அன்புடன்,
இன்னம்புரான்


2010/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

karthi

unread,
Aug 15, 2010, 12:04:55 AM8/15/10
to mint...@googlegroups.com
கண்ணன்,

இது கதை சொல்லும் நேரம் என்பதால் சொல்கிறேன்.

எங்கள் குடும்பம் இறைச்சி உண்ணும் குடும்பம். எங்கள் அம்மாவும்
பாட்டியும் தினசரி ஏதாவது கறி அல்லது மீன் சமைப்பார்கள்.
வாரத்தில் ஒரு நாள் நண்டு, இரால் உண்டு.

சில நேரங்களில் எங்கள் கம்பத்தில் மான் இறைச்சி, வவ்வால் இறைச்சி,
காடை இறைச்சி எல்லாம் கொண்டுவந்து விற்பார்கள். வாங்கிச்
சாப்பிட்டதுண்டு. ஒரு வேட்டைக்காரர் காட்டுப் பன்றி சுட்டு அந்த இறைச்சியைக்
கூறு போட்டு விறபார். அதுவும் சமைத்துச் சாப்பிட்டதுண்டு.
மருத்துவக் காரணம் என்று சொல்லி உடும்புக் கறி சமைத்த நாட்களும்
உண்டு.

எங்களைச் சுற்றி மலாய்க்காரர்கள் மாடு அறுத்து உண்பார்கள். கொஞ்சம்
தள்ளிப்போனால் சீனர் மார்க்கெட்டில் பன்றிக் கறியும் கிடைக்கும். எங்கள்
குடும்பம் அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்து வந்தது. இத்தனைக்கும்
ரொம்பவும் பக்தியான குடும்பம் இல்லை. பழக்கமின்மையால்தான் என
நினைக்கிறேன்.

குவாலா லும்பூரில் வேலை செய்த நாட்களில் வார இறுதியில் போர்ட்
க்ளாங் துறைமுக நகருக்கு நண்டு சாப்பிடுவதற்காகவே சீன ரெஸ்டாரண்ட் செல்வோம்.
நண்டு சமைத்து ஓடு உடைத்து ஓட்டிலேயே நண்டு இறைச்சி வைத்துக்
கொடுப்பார்கள். அதே போல சாத்தே (கோழி அல்லது ஆட்டிறைச்சி ஊறவைத்து
சமைத்து குச்சியில் குத்தி நெருப்பில் வாட்டித் தருவார்கள்.
நிலக்கடலை சம்பலுடன் சாப்பிடலாம்) சாப்பிட காஜாங் நகருக்கும்
செல்வதுண்டு. இந்தப் பயணங்களுக்குத் தலைவர் மறைந்த நண்பர்
இரா.பாலகிருஷ்ணன். நண்பர் மட்டுமல்ல, தலைவர்.
தட்டமுடியாது. மேலும் அவர் செலவு. ஏன் தட்ட வேண்டும்?

நான் திருமணம் செய்தது ஒரு தீவிர இலங்கைச் சைவர் குடும்பத்துப் பெண்.
காதல் அரும்பிவிட்டதால் இந்த சைவ - அசைவ வித்தியாசம் பெரிதாகத்
தோன்றவில்லை. மனைவியான பின்னும் அவர் சைவமாகவே இருந்தாலும்
எனக்குச் சமைத்துக் கொடுப்பார். என் நண்பர்கள் (பாலா உட்பட) வீட்டுக்கு
வந்து விரும்பி உண்பார்கள்.

பிள்ளைகள் மூவருக்கும் குழந்தை வயதில் கோழி, மீன், முட்டை எல்லாம் ஊட்டினோம்.
ஆனால் ஏழெட்டு வயதில் அவர்களாகவே வெறுத்து விட்டுவிட்டார்கள்.
(இதை எப்படி விளக்குவது? அம்மாவின் தாக்கம் ஒன்றும் இல்லை. அவரும்
பிள்ளைகள் மாமிசம் சாப்பிட்டு "புஷ்டியாக" வளருவதை விரும்பினார்.ஒரு வேளை
அம்மாவின் மௌனமான முன்னுதாரணமாக இருக்கலாம்.)
அவர்களில் இருவர் இப்போதும் முப்பதுகளில் தீவிர சைவம். ஒருவர் லண்டனில் பயின்ற
காலத்தில் அசைவத்துக்கு மாறிவிட்டார். இப்போது சுத்த அசைவம்.

சைவமான மகளுக்கு வாய்த்த கணவர் நன்றாக அசைவம் சாப்பிடும் மலையாளக்
குடும்பத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் படித்த காலத்தில் மெக்டொனாட்சில்
சமையல் வேலைக்குப் போய் பர்கர் சமைத்து வெறுத்துப்போய் சைவர் ஆகிவிட்டார்.
இப்போது தீவிர சைவம். ஆகவே உணவில் அவர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை.
அவர்கள் பிள்ளைகளுக்குக் கோழி, மீன் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஏழு வயதில்
மூத்தவன் அவற்றை விருப்பமில்லாமல் சாப்பிடுவதைப் பார்க்கிறேன். இனி
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நான் 30 ஆண்டுகளுக்கு முன் சைவமான குடும்பத்து மத்தியில் உட்கார்ந்து
சாப்பிடக் கூசி வீட்டில் இறைச்சி சாப்பிடுவதை விட்டேன். வெளியில் சாப்பிடுவேன்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும் ஆரம்பித்த நேரத்தில்
மருத்துவர் விட்டுவிடச் சொன்னதும் விட்டுவிடுவதில் சிரமம் ஒன்றும்
இருக்கவில்லை.
இன்று அசைவம் விரும்பிச் சாப்பிடும் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து கிடைக்கின்ற
காய்கறிகளை மட்டும் வைத்து உண்பதில் எனக்குச் சிரமம் இல்லை. அந்த
இறைச்சிப் பொருள்களை தொடும் விருப்பமும் உண்மையிலேயெ போய்விட்டது.

ஆனால் நான் ஆர்த்தடொக்ஸ் சைவன் இல்லை. இன்றும் எங்கள் தேசிய
உணவான நாசி லெமாக் (தேங்காய்ப்பால் கலந்த சாதம்) சாப்பிடுகிறேன்.
அதில் நெத்திலிக் கருவாட்டுச் சம்பல் தவறாமல் இருக்கும். பூலோட்
உடாங் (glutonous rice with prawn paste) கிடைக்கும்போது சாப்பிடுகிறேன்.
ஆனால் எல்லாம் ஒரு அளவோடும் பழைய வாசம் விடாமல் இருப்பதாலும்தான்.

"நீலகண்டன் வாழ்க, கதை கேட்ட நீங்களெல்லாம் வாழ்க!"

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, August 15, 2010 10:38 AM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

srirangammohanarangan v

unread,
Aug 15, 2010, 12:13:44 AM8/15/10
to mint...@googlegroups.com
"நீலகண்டன் வாழ்க, கதை கேட்ட நீங்களெல்லாம் வாழ்க!"

ரெ.கா. <<<
 
மற்ற ஜீவராசிகள் மட்டும் ஒழிக !
:---))

 

Innamburan Innamburan

unread,
Aug 15, 2010, 12:43:51 AM8/15/10
to mint...@googlegroups.com
'மேலும் அவர் செலவு. ஏன் தட்ட வேண்டும்?
அதானே!
நண்டு பிடித்தது உண்டா?

இன்னம்பூரான்

2010/8/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2010, 12:46:35 AM8/15/10
to mint...@googlegroups.com
aதிரு.கண்ணன்,
திரு.கணேசன் அவர்களை வைணவ அசைவர் என்ற அளவில் அச்சமுறச் செய்துவிட்டீர்கள்.  செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் என்பது தானே பொதுவிதி
இந்நன்னாளில் IATR INFITT கன்னிமாடக் கலாச்சாரத்திலிருந்தும் அரசியல் ஆக்கிரமிப்பில் இருந்தும் உலகத்தமிழ் ஆராய்ச்சிப் பனிகளுக்கு விடுதலை வாங்கித் தருவது பற்றியும் சிந்தியுங்கள்
கோவையில் சந்தித்த இணைய வித்வான்கள் பாலா, முத்து, மணிவண்ணன் போன்றோரை வரவேற்று ஒரு புதிய transnational அமைப்பை உருவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்.
அன்புடன்
நாகராசன்

2010/8/15 karthi <karth...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 15, 2010, 12:56:40 AM8/15/10
to mint...@googlegroups.com
2010/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> aதிரு.கண்ணன்,
> திரு.கணேசன் அவர்களை வைணவ அசைவர் என்ற அளவில் அச்சமுறச் செய்துவிட்டீர்கள்.
> செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் என்பது தானே பொதுவிதி

கணேசனார் என்னை வைணவர் என்று அடையாளப்படுத்தியவுடன் சும்மா ஒரு ரோஷம்!
வைணவன் என்று சொல்லிக் கொள்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் ஆழ்வார்களிடம் சரண் புகுந்துள்ளேன். அவர்களுக்கு என் கஷ்ட, நஷ்டம்
புரியும். நான் அடியார்க்கு, அடியேன்...கீழ்நிலை அடியேன். அவ்வளவுதான்.
ஒரு அசத்து என்றும் சொல்லலாம்.

> இந்நன்னாளில் IATR INFITT கன்னிமாடக் கலாச்சாரத்திலிருந்தும் அரசியல்
> ஆக்கிரமிப்பில் இருந்தும் உலகத்தமிழ் ஆராய்ச்சிப் பனிகளுக்கு விடுதலை வாங்கித்
> தருவது பற்றியும் சிந்தியுங்கள்
> கோவையில் சந்தித்த இணைய வித்வான்கள் பாலா, முத்து, மணிவண்ணன் போன்றோரை வரவேற்று
> ஒரு புதிய transnational அமைப்பை உருவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்.


இது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறேன். நேற்று சுபாவுடன் இது
குறித்து பேசினேன். ஒரு தனி இழை ஆரம்பித்து, ‘உலகத் தமிழ் ஆய்வுப் பேரவை’
எப்படி அமைப்பது என்று யோசிக்கலாம்.

கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2010, 12:57:22 AM8/15/10
to mint...@googlegroups.com
பொன்னுசாமியின் நண்டுக்கறியும் சுவையானதுதான்.  புது டில்லியில் இருந்த உயர் அலுவலருக்கு நண்டு பிடிக்கும் என்பதைத் தெரிந்து வாரத்தில் இரண்டு நாட்கள் பொன்னுசாமி நண்டு விமான வழியாகச் சென்று அவரை மகிழ்வித்து அதனால் பயன் பெற்ற ஒரு தொழில் அதிபரை நான் அறிவேன்.
நாகராசன்


2010/8/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 15, 2010, 1:00:20 AM8/15/10
to mint...@googlegroups.com
சார்! நான் அத்தளத்தில் பதிவு செய்து தற்போது ஆன்லைனில் இருக்கிறேன்.
உங்கள் கடிதம், தேவ் கடிதம் படித்தேன். சரி, இணைப்பு எப்படி நடக்கப்
போகிறது? அது இன்னும் விளங்கவில்லை. திருமிகு.சாரதா அவர்களுக்கும் விஜிக்
தளத்திலிருந்து அழைப்பு விடுத்துள்ளேன். இன்னும் 30 நிமிடங்கள்தான்
உள்ளன!

கண்ணன்

2010/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

செல்வன்

unread,
Aug 15, 2010, 1:02:47 AM8/15/10
to mint...@googlegroups.com


2010/8/14 N. Kannan <navan...@gmail.com>

இது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறேன். நேற்று சுபாவுடன் இது
குறித்து பேசினேன். ஒரு தனி இழை ஆரம்பித்து, ‘உலகத் தமிழ் ஆய்வுப் பேரவை’
எப்படி அமைப்பது என்று யோசிக்கலாம்.

எதாவது ஒரு பல்கலைகழகத்தின் சார்பில் ஆரம்பிப்பது நல்லது. தனியார் அமைப்பாக ஆரம்பித்தால் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாது. அரசியல் சார்பின்றி எத்தனை தூரம் இயங்க முடிகிறது என பார்க்கவேண்டும். தமிழகம்,தமிழ் வரலாறு பற்றிய ஆய்வுகளை வெளியிட ஒரு ஜர்னல் அவசியம் தேவை.வருடா வருடம் ஒரு கான்பரன்ஸ் கட்டாயம் நடத்த வேண்டும்.

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2010, 1:02:52 AM8/15/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
இன்னும் முப்பது நிமிடங்களில் அரட்டைத் தளம் திறந்துவிடும்.  மினஞ்சலில் உள்ள இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்யவும்.
உதவிக்கு இங்கே பதிவு செய்யுங்கள்
நாகராசன்

2010/8/14 N. Kannan <navan...@gmail.com>
ஆகா! பிறகென்ன? மட, மடவென்று காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.

முன்னமே யோசித்த ஒரு திட்டம், பல்வேறு செயற்குழுக்களை நாம் உருவாக்க
வேண்டும். அச்செயற்குழுக்களின் வாயிலாக ஆக்கம் என்பது தொடர்ந்து நடைபெற

வேண்டும்.

‘மின்செவ்விக் குழு’ என்றொரு குழு உருவாக்கி, அதன் மூலம் உற்சாகத்துடன்
செயலாற்றத் தொடங்கலாம்.

என் பரிந்துரை:

பேரா.நாகராஜன்,
பிரைம்பாயிண்ட் ஸ்ரீநிவாசன்
தேவ் (தேவராஜன்)
செல்வன்,
ஸ்வர்ணா,
சுபா
தேனீயார்
ரங்கன்

இவர்கள் கொண்ட குழு இதைத் தொடங்கலாம். நானும் இக்குழுவில் இருக்க
ஆசைப்படுகிறேன். வேறு யாராவது?

கண்ணன்

2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> அனபுடைய கண்ணன் அவர்களே,
> நல்ல தொடக்கம்.  நான் மின்வெளிக் கற்றலுக்காக இத்தொழில் நுட்பத்தைப்
> பயன்படுதியுள்ளேன்.  தேவையான மென்பொருள் மற்றும் மின் புத்தக வடிவிலான கையேடும்
> என்னால் இக்குழுவுக்குக் கொடுக்க இயலும்
> பேட்டி எடுக்கும் திறமை உள்ளவர்கள் கிடைத்துவிட்டால் குழு செயல்பட அடுத்த
> முயற்சியை நீங்கள் மேற்கொள்ளவேண்டும்
> நாகராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Aug 15, 2010, 1:22:30 AM8/15/10
to mint...@googlegroups.com
I'm logged in.

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2010, 1:23:43 AM8/15/10
to mint...@googlegroups.com
OK Thanks


2010/8/15 செல்வன் <hol...@gmail.com>
I'm logged in.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 15, 2010, 1:26:24 AM8/15/10
to mint...@googlegroups.com
2010/8/15 செல்வன் <hol...@gmail.com>:
> I'm logged in.

me too.
I'm ready!

Kannan

Innamburan Innamburan

unread,
Aug 15, 2010, 1:33:24 AM8/15/10
to mint...@googlegroups.com
I am in as an observer.
Innamburan

2010/8/15 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 15, 2010, 1:36:35 AM8/15/10
to mint...@googlegroups.com
Hello Sir:

Where do we have our chat(audio/video)?

here:
http://www.fms.edhub.net/tutorflash.html

or
http://www.wiziq.com/

I'm online on both. So far no communication?

Kannan

ps. how will an observer sit?

devoo

unread,
Aug 15, 2010, 1:37:15 AM8/15/10
to மின்தமிழ்
ஐயா, அடியேன் வகுப்பறைக்குள்
வேறு யார் உள்ளனர் ?

தேவ்

On Aug 15, 12:33 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> I am in as an observer.
> Innamburan
>
> 2010/8/15 N. Kannan <navannak...@gmail.com>:
>
> > 2010/8/15 செல்வன் <holy...@gmail.com>:
> >> I'm logged in.
>
> > me too.
> > I'm ready!
>
> > Kannan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2010, 1:37:47 AM8/15/10
to mint...@googlegroups.com
In wiziq.com
Nagarajan

2010/8/15 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2010, 1:38:18 AM8/15/10
to mint...@googlegroups.com
Subha
Sevan

2010/8/15 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
It is loading more messages.
0 new messages