தெளிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு அனுமன் காட்டும் வழி, பல
பேரிடர்களைச் சந்தித்தபோதும் பாரதத்தின் உறுதி குலையாமை, நாட்டு
நலனுக்கு மக்களின் பங்களிப்பு, அயலகம் வாழ் இந்தியர்களின் பொறுப்பு, மொழி
நீடித்து வளர நாம் செய்ய வேண்டுபவை இவை குறித்து இவர் கூறும்
கருத்துக்கள் மனம் கவர்வதாக உள்ளன. 20 நிமிடம் நீடிக்கும் இந்த
பேட்டியைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்
தேவ்
பாரதிய வித்யா பவனில், ‘பிசினஸ் கம்யூனிகேஷன்’ பற்றிய ஒரு டிப்ளமா
படிப்பு அணமையில் டாக்டர் கலாம் அவர்களால் துவக்கப்பட்டது. அதற்கு
அடியவன் தான் பிரொகிராம் இயக்குநராக இருக்கிறேன். சென்ற வகுப்பில்,
சோஷியல் மீடியா மற்றும் டுவிட்டர்’ பற்றி பேசும் போது, 140 எழுத்துகளில்
எழுதுவதை அனைவரும் ஒரு பெரிய உலக சாதனையாக கருதுவதைப்பற்றி கூறி,
திருக்குறளைத்தான் உதாரணமாக கூறினேன். ஒவ்வொரு திருக்குறளும் 25 முதல்
40 எழுத்துக்களில் அமைக்கப்பட்ட்டுள்ளது. டுவிட்டரில் கால் பகுதியிலேயே
அரிய கருத்துக்களை கொடுத்தவர் திருவள்ளுவர்.
தமிழ்நாட்டு தமிழர்களை விட அயல் நாடு வாழ் தமிழர்கள் தான் அதிக அளவில்,
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தமிழை வளர்க்கிறார்கள். இன்றைய
இளைஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டுமென்றால், நவீன தொழில்
நுட்பம் வாயிலாகத்தான் செல்லவேண்டும்.
அன்புடன்
சீனிவாசன்
91766 50273
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எத்தனை பேர் இந்த மின்செவ்வியைக் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. தேவ்
அவர்கள் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள். ஒரு மடலாடற்குழுவின்
சார்பாக, மடலாடற்குழுவின் சீரிய நடவடிக்கையாக, மடலாடற்குழு உருப்பினர்களை
வைத்தே, மடலாடல் என்பதின் அடுத்த நிலையான நேர் (ஒலி) காணல் எனும்
நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதன் அடுத்த வளர்ச்சியாக நான்
வீடியோ கான்பெரன்சிங் (விழியப்பேச்சு) என்பதை எதிர் நோக்குகிறேன்.
மின்தமிழ் என்பது வெறும் ஊர் வம்பு பேசும் குழு அல்ல என்பதை எவ்வளவு
தூரம் உள்வாங்கியிருந்தால் தேவ் போன்ற பெரியவர்கள் மரபு விக்கி எனும்
பெரும் பொறுப்பையும், இப்போது மின்காணல் (மின்னாடல்?) எனும் உத்தியைக்
கையாண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வலது கை போல் இருக்கும்
திரு.ஸ்ரீநிவாசன் அவர்களைப் பேட்டி கண்டிருப்பார்கள் என்று வியக்கிறேன்.
ஒரு மடலாடற்குழு எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாகத் தன்னை வெளிக்காட்டிக்
கொள்ள முடியும் என்பதற்கு இதுவொரு உதாரணம். இதில் என்னைக் கவர்ந்த
இன்னொரு உளவியல் கூறு என்னவெனில், அந்தக்காலத்து மடலாடற்குழுக்களெல்லாம்
வெறும் hero worship செய்யும் தனிநபர் பஜனை மடங்களாக இருக்கும் போது,
தன்னியல்பாக எங்கள் உந்துதல் ஏதுமில்லாமல் ‘இது தம் குழு’ எனும் பீடுடன்
தமிழ் மடலாடற்குழு சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அதிசயமாக இம்மாதிரி
ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுவே நல்லதொரு மடலாடற்குழு என்பது எப்படி
இயங்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் போலவும்
அமைந்துவிட்டது.இம்மாதிரியான ஜனநாயகச் சிந்தனையை, செயலை நாம்
வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே மின்தமிழ் மின்வெளியில் நிரந்தரமாக இருக்க
வழிசெய்யும். மடலாடற்குழுக்கள் தனி நபர்களை மட்டும் நம்பி செயல்படல்
கூடாது. அந்த நபர் இல்லையெனில் பின் இயக்கம் முடங்கிவிடும்!
தேவ் அவர்கள் ஒரு தேர்ந்த போட் காஸ்டர் போல் (மின்தமிழ் வானொலி அண்ணா!)
இதை அவரது வளமான குரலில் வழங்கி, இதன் தொழில்நுட்ப வேலையையும்
(ஒலிவாங்கி, சீர்செய்து, சேவியில் ஏற்றி, சோதனை செய்து வெளியிடுவது
வரையிலான அனைத்துப் பொறுப்பையும்) ஏற்று செய்திருப்பது ஆச்சர்யப்பட
வைக்கிறது. வாழ்த்துக்கள் தேவ்,
அடுத்து செல்வன். அவர் குரலை இப்போதுதான் முதன்முறை கேட்கிறேன். அவர்
எழுத்தை வைத்து வேறு மாதிரி குரலை எதிர்பார்த்தேன் :-) மிகத் தேர்ந்த
நிருபர் என்பதை இப்பேட்டியில் நிலைநாட்டி இருக்கிறார். ஏதோ சி.என்.என்
பேட்டி போல் கால அளவைக் கணக்கில் கொண்டு, பேச்சு போகிற திசையில் வழி
தவறிவிடாமல் தம் பணியை மிகக்கவனமாகச் செய்திருக்கிறார். மிக நல்ல
கேள்விகள். அவரது கடைசி கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. மின்தமிழ்
2020 என்னவாக இருக்கும்?
பேட்டியின் நாயகர் ஸ்ரீநிவாசன். வழக்கம் போல் அருமையாக பதில்
சொல்லியிருக்கிறார். ‘சொல்லின் செல்வன்’ அநுமனை மறக்காமல், strategist
கிருஷ்ணன் எனும் புதுக்கோணம் காட்டி old wine in new bottle என்பதைச்
சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் உலகின் முதல் டிவிட்டர்
(சிட்டி) திருக்குறள்தான்!!
I strogly believe in Positive Thinking and the power of cooperative
(collective) thinking in changing ourselves, thereby changing the
society. அந்த வழியில்தான் மின்தமிழ் நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
அதற்கு ஸ்ரீநிவாசன் போன்றோரின் உற்ற துணை அவசியம் தேவை. அவர் நம்
குழுவிற்காக எதுவும் செய்யத்தயாராக உள்ளதை தன் செல்பேசி எண்ணைக்
கொடுத்திருப்பதன் மூலம் கோடிகாட்டி இருக்கிறார்.
இது போன்ற மின்னாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அடுத்ததாக யாரைப்
பேட்டி காணலாம் என்று இங்கு பரிந்துரை செய்யலாம்.
நாளை நமதே! வாழ்க!
Kudos to Dev & Selvan!!
அன்புடன்,
நா.கண்ணன்
2010/8/11 devoo <rde...@gmail.com>:
>
> http://blip.tv/file/3988212
>
ஏற்றத் தாழ்வுகள் எப்போதும் இருக்கும் என்ற சீனிவாசனின் பதில், உண்மையே.
ஆயினும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது நம் கனவு. அப்போது
தான், மக்களாட்சியின் முழுப் பயனையும் மக்கள் பெற முடியும். இவ்வளவு
அறிவியல் - நுட்பியல் வளர்ச்சி இருந்தும், இந்த இடைவெளிகளைக் குறைக்க
இயலாது எனில் அது, உண்மையான வளர்ச்சி இல்லை.
பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சீனிவாசன்,
திவ்யம், சத்தியம் உள்ளிட்ட சில சொற்களுக்குத் தமிழில் பொருத்தமான
மாற்றுச் சொற்கள் இல்லை என்கிறார். சத்யமேவ ஜெயதே என்பதை வாய்மையே
வெல்லும் என மொழிபெயர்த்த போது, சத்தியத்தின் மூன்றில் ஒரு பகுதி பொருளே
வாய்மை என இராஜாஜி விமர்சித்ததாகக் கூறியுள்ளார். இந்தக் கூற்றினைத்
தமிழறிஞர்களுக்கு மடை மாற்றுகிறேன். தக்க சொற்களைத் தெரிவிக்க
வேண்டுகிறேன். ஒருவேளை அவ்வாறு இல்லாவிடில் தமிழில் உருவாக்க முயல்வோம்.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
முதல்ல இங்க போய் NHM Writer install செய்யுங்க. ஆன்லைன் பெட்டியிலேயே
காலத்தை ஓட்டிடாதீங்க!
http://software.nhm.in/products/writer
தாயார் மகாலக்ஷ்மியைப் பற்றி அவ்வளவு அழகாக எழுதிய தாங்கள், ‘ஸ்ரீ’ என்று
எழுத முடியவில்லை என்றால், ‘திரு’வே திரு திருவென்று முழிப்பாள். Key in
”sri” ’ஸ்ரீ’ வந்துவிடும். கேப்பிட்டல் அல்ல ஸ்மால் லெட்டர்ஸ்.
ஸ்கைப், பேஸ்புக் இவையெல்லாம் குழந்தைகளே பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டார்கள். எனவே தயக்கமின்றி, உள்ளே புகுந்து விளையாடிப்
பாருங்கள். ஜிடாக்கில் கூட பேசலாம் (கூகுள் எல்லாம் செட்டு, செட்டாகத்
தருகிறது). நாம் கணினியில் கேட்கும் எதையும் உடனே பதிவு செய்ய முடியும்.
Wavepad என்றொரு செயலி (மென்பொருள்). அதை வைத்து இதைச் செய்ய முடியும்.
நான் இங்கு அதை அறிமுகப்படுத்தி, தேனீ போன்றோர் கரை கண்டுவிட்டனர் ;-)
தங்களது கேள்விகள் பிடித்திருந்தது. ஸ்ரீநிவாசன் ‘எப்படி’ பதில் சொல்வார்
என்று சிந்திக்க வைத்த கேள்விகள். உதாரணமாக மின்தமிழ் பற்றிய கேள்வி ;-)
மின்தமிழ் என்றவுடன் அவர் ‘தமிழ் கலைச்சொற்களுக்கு’ போய்விட்டார்.
என்னைப் பொறுத்த மின்தமிழ் என்பது ஒரு உளவியல் பொறி. மின்தமிழில் தினம்
நாம் காணும் முகத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் உலகமே தெரியும்!
நல்லது, கெட்டது, ஆசாபாசங்கள் எல்லாம். நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும்
பொறி ‘மின்தமிழ்’. இந்த தரிசனம் முதலில் ஆகிவிட்டால் இறை தரிசனம் அடுத்த
கட்டம் :-)) [இது புரிந்தால் ஆன்மீகத்தின் முதல் கட்டம் என்று பொருள்!]
கண்ணன்
2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:
மிக நல்ல சிந்தனை. ’செந்தமிழ் மாநாடு’ கண்டு மீண்டிருக்கும் ஐராவதம் ஐயா
மிகச் சரியான தேர்வு. ஐயாவின் தோழர், சீடர் நம் நரசய்யாதான் (அவர்
பேரிலேயே ஐயா இருக்கு). அவர்தான் இதைச் செய்து தர வேண்டும். எப்படிச்
செய்வது போன்ற தொழில் நுணுக்கங்களை நாம் ஒரு குழு அமைத்து சொல்லித்
தரலாம். அந்தக் குழுவில் தாங்கள் அவசியம் சேர வேண்டும்.
//இசை, இலக்கியம், மருந்துவம், சிற்பம், ஓவியம், textile technology
evolution, பட்டு பருத்தி உற்பத்தி, இயற்கை - பாரம்பரிய விவசாயம்//
மிக நல்ல யோசனை. முதலில் ஒரு பட்டியல் தயாரித்தால் தேவலை.
1. திரு. ஐராவதம் மகாதேவன்.
2.
3.
4.
5.
???
கண்ணன்
2010/8/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
> கண்ணன்,
சர்வ ஜனா சுகினோ பவந்து!
க.>
2010/8/12 ஆராதி <aara...@gmail.com>:
க.>
2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:
இப்படி ஒவ்வொரு கேள்வியாக அலசுவோமா?
அவர்தான் இங்கு இருக்கிறாரே! அலசல் சுவையாகலாம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நல்ல தலைப்பு தமிழ்தேனி ஐயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேடையில் பேசுவது ஒரு கலைதான். ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்
நுணுக்கி, நுணுக்கி ஆராய்கிறேன். புரியவில்லை. நம் அறியாமை நம்மையறியாமலே
தொடையில் இறங்கி ஆட்டுகிறது போலும் :-))
க.>
நீட்ட்டோலை கூட இல்லையென்றால்! ரண்டாங்கிளாஸ்லே பாலு வாத்தியார்
சொல்லிகொடுத்ததை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் திலகர் மடலில், மஹாகவி
பாரதியின் புகழ் பாட, அடித்த பரிசு அவரின் 'பகவத்கீதை'. பத்திரமா
இருக்கு.
இன்னம்பூரான்
பி.கு. கோட் போட்டுக்கலை.
2010/8/12 N. Kannan <navan...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அர்த்தமுள்ள பேட்டி
வாய்ச் சொல்லீல் வீரரடி பாட்டுக்குப் பலர் இருக்கின்றனர்.
எழுதுவது, அதைவிட பேசுவது எளிது. ஆனால் செயல் என்று வரும் பொழுது பல காரணங்களைக் கூறி ஓடி ஒளிந்து விடுபவர்கள் அதிகம்.
ஆக்க பூர்வமான செயல்களைச் செய்து வருவது கண்டு மனத்திலே ஓர் நிம்மதி தோன்றுகின்றது. மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்கள். இளைஞர்களை மிகவும் ஈர்த்து ஓர் பாதையைப் போட்டுக் கொடுத்திருக்கின்றார். மற்றவர்கள் அந்தப் பதையில் சென்று சமுதாயத்தைக் காப்பொம். அது அரசியல் பாதயல்ல. மனித நேயம் காக்கும் உன்னதப் பாதை.
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சொன்ன விதம் அருமையாக இருந்தது
Communication skill
அது மிகவும் முக்கியம் சொல்லிவரும் பொழுது சொல்லின் செல்வனை எடுத்துக்காட்டாகக் காட்டினார்.
வாழ்க்கை சக்கரத்திற்கு நம்பிக்கைதான் அச்சாணி. அது ராமர் சேது பாலம் விஷயமாக இருந்தாலும் சரி. முதலில் மனிதனின் நம்பிக்கையைப் புரிந்து கொண்டு அணுக வேண்டும். அழகாகச் சொன்னார். எல்லாவற்றையும் விட தமிழ் மொழி வாழ தமிழன் வாழ வேண்டும் என்றார். அவர் சொன்னவைகளில் இதுதான் உச்ச நிலையைப் பார்க்கச் செய்கின்றது.
பண்பாடு பேசுகின்றவர்கள் முதலில் அதனைப் பின்பற்ற வேண்டும். தமிழ் வாழ முதலில் தமிழ்க் காவலர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களிடம் இருக்கும் தொலைக் காட்சியில் ஆங்கிலம் கலக்காமல் பார்த்துக் கொள்ளட்டும். அரை நிர்வாண உடை ஆட்டத்தை நிறுத்தட்டும். சினிமாவிற்குத் தலைப்பு தமிழில் வைத்தால் பரிசு என்று அறிவிப்பது மட்டும் போதாது. தன் வீட்டைத் திருத்தாதவன் எப்படி நாட்டை சீர்திருத்த முடியும். இளைஞர்கள் இந்தப் போலித் தனத்தைக் கண்டு கொதித்துப் போயிருக்கின்றார்கள். ஊடகங்கள் என்ற அரக்கர்களிடமிருந்து முதலில் குழந்தைகளைக் காப்பாற்றட்டும்.
ஸ்ரீனிவாசன் அவர்களே, நீங்கள் ஆற்றும் பணி சிறந்தது. உங்கள் என்ணம் போகும் திக்கும் தெரிகின்றது. துணிச்சலுடன் முன்னேறுங்கள்.
ராமர் பாலம் கட்ட அணி உதவி செய்தது போல். இளைஞர்களின் நற்பணிக்குத் துணை புரிவோம்.
செல்வன், என் மகனே, சரியான பாதையில் நீ செல்லத் தொடங்கியிருக்கின்றாய். இந்த அம்மாவின் மனம் பூரிக்கின்றது..
தொடர்ந்து நம் நாட்டுக்கு எவை நல்லனவோ அவைகளைச் செய்.
இந்த அம்மாவின் ஆத்மா உன்னை ஆசிர்வதிக்கும்.
சீதாம்மா
2010/8/13 செல்வன் <hol...@gmail.com>:
Not always! இது செல்லக்குட்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:
This is one of 275 Siva Devara Sthalam.
Main deity is Huge Swayambu linga known as ezuthari nathaswarar and
his consort Amman, Sugandha Kundhalambikai.
Sthala vruksham is Sanbakam Teertham known as Iravatha Teeertham.
Importance: Lord appeared in human form and acounted for temple
expenses to the King. Iravatham (Indra’s elephant) worshipped Siva in
this place and was blessed.
Sambandhar and Navukkuarasar sang hymns on Lord Siva of this place.
On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:
This is one of 275 Siva Devara Sthalam.
Main deity is Huge Swayambu linga known as ezuthari nathaswarar and
his consort Amman, Sugandha Kundhalambiki.
Sthala vruksham isSanbakamTeertham known asIravatha Teeertham.
Importance: Lord appeared in human form and acounted for temple
expenses to the King. Iravatham (Indra’s elephant) worshipped Siva in
this place and was blessed.
Sambandhar and Navukkuarasar sang hymns on Lord Siva of this place.
On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:
நேர நெருக்கடி இருப்பினும் இருவரும் மின் தமிழுக்காக முழுமனத்துடன்
ஒத்துழைத்தனர்; இதற்காக அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். வேறு வேறு
நேரப்பகுதியைச் சேர்ந்த இருவரை அவர்களுக்குத் தோதான நேரம் பார்த்து
இணைப்பது சற்றுக் கடினமாக இருந்தது உண்மைதான்.
சொல்லின் செல்வனின் சொல்லாற்றலை ஸ்ரீநிவாசன் தெளிவான கருத்துப்
பரிமாற்றத்துடன் பொருத்திக் காட்டுகிறார். Communication skill இன்று
எத்தனை தூரம் மதிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
’அவிஸ்தரம், அஸந்திக்தம், அவிலம்பிதம், அவ்யதம்’ என்று இருந்ததாம் அஞ்சனை
மைந்தரின் சொல்லாடல் திறன். ’மிக விரிவாக இல்லாமலும், குழப்பத்துக்கு
இடம் தராமலும், நீட்டி முழக்கிச் சொல்லாமலும், தெளிவாகவும் அமைந்துள்ளது
இவன் பேசும் முறை’ என்று இராமபிரானே சான்றிதழ் தருகிறார். இது
மேடைப்பேச்சு, கட்டுரை, குழும மடலாடல் அனைத்துக்கும் பொருந்தும்தானே !
Live Blogging பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்; ஏனெனில் இது மிகவும்
பயனுள்ள தொழில்நுட்பம். இம்முறையில் ஓரிடத்தில் நடைபெறும் கருத்தரங்கு,
பயிலரங்கு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை உடனடியாக இணையத்தில் ஏற்றி
அனைவரும் காணச் செய்ய லாம். காண்போருக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையும் உடனே
வல்லுநர்களின் கவனத்துக்குக் கொணர்ந்து அங்கேயே விடை களைத்
தெரிவிக்கும் வசதியும் இதில் உள்ளது.
வெற்றிகரமாக ப்ரம்ம குமாரிகள் நிறுவனத்துக்காக இதைச் செய்துள்ளார்
ஸ்ரீநிவாசன் அவர்கள் -
http://prpoint.blogspot.com/2009/09/national-media-conference09-day-2.html
http://prpoint.blogspot.com/2009/09/national-media-conference09-day-2_13.html
Live blogging பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ள -
http://wordpress.org/extend/plugins/live-blogging
http://www.readwriteweb.com/archives/live_blogging_20.php
Live Blogging, Cyber Laws இவை பற்றி ஸ்ரீநிவாசன் அவர்கள் விரிவாகச்
சொல்ல வேண்டும் என்று நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்
தேவ்
அண்மையில் நம் குழுமத்தில் இணைந்த திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள்
Public Relations துறையில் இரண்டாவது பெரிய யாஹூ குழுமத்தை (Image
management) நடத்தி வருபவர். இவரை செல்வன் அவர்கள் தொலைபேசி வாயிலாகப்
பேட்டி கண்டார்.
தெளிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு அனுமன் காட்டும் வழி, பல
பேரிடர்களைச் சந்தித்தபோதும் பாரதத்தின் உறுதி குலையாமை, நாட்டு
நலனுக்கு மக்களின் பங்களிப்பு, அயலகம் வாழ் இந்தியர்களின் பொறுப்பு, மொழி
நீடித்து வளர நாம் செய்ய வேண்டுபவை இவை குறித்து இவர் கூறும்
கருத்துக்கள் மனம் கவர்வதாக உள்ளன. 20 நிமிடம் நீடிக்கும் இந்த
பேட்டியைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்
http://blip.tv/file/3988212
தேவ்
இது ஒரு மின்செவ்வியுடன் நின்றுவிடக் கூடாது. ஸ்வர்ணா சொல்லியது போல்,
தாங்கள் ஒரு குழு அமைத்து தொடர்ந்து செயல்பட வேண்டும். நம் குழுவில்
இருக்கும் திறமையானவர்களை வெளிக்கொணர வேண்டும். ஒவ்வொரு பேட்டிக்கும்
ஒவ்வொரு நபர் என்று தயார் செய்ய வேண்டும். திரு.ஐராவதம் ஐயாவைப் பேட்டி
கண்டால் என்ன? திரு.நரசய்யா அவர்கள் மூலமாக அவர் ஒப்புதல் வாங்கலாம்.
ஒப்புதல் வாங்கியவுடன், எம்மாதிரிக் கேள்விகள் கேட்கலாம் என்று நம்
குழுவில் ஆலோசிக்கலாம்.
க.>
2010/8/14 devoo <rde...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 13, 2:45 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> கிருதஞ்னன் ஆனேன்.
> வேணும்,
> தாசன்
> இன்னம்பூரான்
>
> 2010/8/13 tirumalainumbakkam <tnkesa...@gmail.com>:
>
>
>
> > The temple is about 7kms from Kumbakonam.
>
> > This is one of 275 Siva Devara Sthalam.
>
> > Main deity is Huge Swayambu linga known as ezuthari nathaswarar and
> > his consort Amman, Sugandha Kundhalambiki.
>
> > Sthala vruksham isSanbakamTeertham known asIravatha Teeertham.
>
> > Importance: Lord appeared in human form and acounted for temple
> > expenses to the King. Iravatham (Indra’s elephant) worshipped Siva in
> > this place and was blessed.
>
> > Sambandhar and Navukkuarasar sang hymns on Lord Siva of this place.
>
> > On Aug 13, 12:18 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > wrote:
> >> தஞ்சையா? என்ன அப்டி கேட்டுவிட்டீர்கள்? தஞ்சை அருகில் கும்பகோணம்
> >> தெரியுமோ? உலகபுகழ். அதுக்கு கிட்ட ஐய்யம்பேட்டை. செவிவாய்புகையூர்.
> >> பக்கத்திலே இன்னம்பூர். எங்க ஊர். கும்பகோணத்தை தூக்கியடித்த ஊர் என்று
> >> தலபுராணம். ஐய்யம்பேட்டையை முழுங்கிய ஊர். மெளண்ட் ரோடு மஹா
> >> விஷ்ணுவுக்கும் அது தான் ஊர்.
>
> >> இன்னம்பூரான்
>
> >> 2010/8/13 செல்வன் <holy...@gmail.com>:
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
முன்னமே யோசித்த ஒரு திட்டம், பல்வேறு செயற்குழுக்களை நாம் உருவாக்க
வேண்டும். அச்செயற்குழுக்களின் வாயிலாக ஆக்கம் என்பது தொடர்ந்து நடைபெற
வேண்டும்.
‘மின்செவ்விக் குழு’ என்றொரு குழு உருவாக்கி, அதன் மூலம் உற்சாகத்துடன்
செயலாற்றத் தொடங்கலாம்.
என் பரிந்துரை:
பேரா.நாகராஜன்,
பிரைம்பாயிண்ட் ஸ்ரீநிவாசன்
தேவ் (தேவராஜன்)
செல்வன்,
ஸ்வர்ணா,
சுபா
தேனீயார்
ரங்கன்
இவர்கள் கொண்ட குழு இதைத் தொடங்கலாம். நானும் இக்குழுவில் இருக்க
ஆசைப்படுகிறேன். வேறு யாராவது?
கண்ணன்
2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இங்கே இணைக்கப்பட்ட கையேடுஅன்புடையீர்,
http://www.tamilheritage.org/depot/sw/PodcastingHandbook_2007.pdf
பொதுவாக இது நேரடி ஒலி/ஒளி பரப்பில் இயங்குவதில்லை. பதிவு செய்யப்பட்டு இணைய தளத்தில் மேலேற்று செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது
இத்திட்டத்தை பற்றி கலந்துரையாட ஸ்கைப் போன்ற மற்ற மென்பொருட்கள் உள்ளன.
னேரடி குழு உரையாடலுக்கான மென்பொருள் விஜிக் வசதி என்னிடம் உள்ளது. நூறுபேர் வரை கலந்துரையாடலாம்.
விருப்பம் இருந்தால் குழு உரையாடலுக்கான நேரத்தை உறுதி செய்து கொண்டு தொடங்கலாம்
தங்களின் ஆர்வமே என்போன்றோருக்கு உந்துவிசை.
நட்புடன்
7:30am-9:30am CET - இது எனக்கு மாலை 3 மணி போல். தயாராகிறேன்.
நாகராஜன் சொல்லும் மென்பொருள்(செயலி) என்னிடம் இல்லையே? Skype, Gtalk OK
க.>
2010/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 14, 10:34 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
>> எதேனும் சிக்கன் இருந்தால் மின்தமிழுக்கு செய்து அனுப்பவும்
> நாகராசன்
ஐயா,
இங்கிருப்போர் பெரும்பாலும் சைவம் அல்லவா :)
சரி, சரி - கண்ணன் வைணவம் என்பதறிவேன்.
அன்புடன்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கோவையிலும் குசும்பு உண்டோ? ;-)
வட இந்தியாவில் வைஷ்ணவ உணவு என்று சொன்னால்தான் மரக்கறி உணவு கிடைக்கும்.
அது தெரியுமோ:-))
ஆனால் சர்வதேச விமானப்பயணத்தில் ‘சமண (ஜெய்ன்) உணவு’ என்று
தேர்ந்தெடுத்தால்தான் இந்திய மரக்கறி உணவு கிடைக்கும்.
அது சரி, சைவம் எப்படி மரக்கறியுடன் சம்மந்தப்படுகிறது. சிவனார்
பிள்ளைக்கறி சாப்பிட்டவராச்சே!!
க.>
பிகு: இது இவ்விழைக்கு சம்பந்தமில்லாதது. மன்னிக்க. பேரா.நாகராஜன்
தொடர்ந்து தமிழில் எழுதுக. சித்திரமும் கைப்பழக்கம்! நான் மதியம்
2:30க்கு தயாராக இருப்பேன்.
ஒய் வைணவரே! விஷ்ணு நரமாமிசம் சாப்பிடவில்லையா?
ஹவியில் போட்ட குதிரையிறைச்சியெல்லாம் தேவர்கள்
சாப்பிடவில்லையா?
இறைவன் மனிதன் சாப்பிடத்தான் இந்த மிருகங்களைப்
படைத்தான் என இஸ்லாமும் சொல்லுகிறது.
மலேசியாவில் சில புத்தர் கோயில்களில் மாமிசம் சமைக்கிறார்கள்.
அங்குள்ள பூசாரிகள் மாமிசம் சாப்பிடத் தடையேதுமில்லை.
மனிதன் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பதற்கு எந்த மதத்திலும்
வலுவான வாதங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் eco ஆதரவாளர்கள்
அதனை வலியுறுத்துகிறார்கள். அது போற்றத்தக்கதே!
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, August 15, 2010 8:07 AM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி
பொன்னன் (ஹிரண்யன்) வயிற்றைக் கிழித்துக் கொன்றார் என்றுதான்
நினைக்கிறேன். அவனை சாப்பிட்டு முழுங்கிவிட்டாரா என்று தெரியவில்லை. தேவ்
போன்றவர்களுக்குத் தெரியலாம் ;-)
ஆனால் அவன் ‘உலகமுண்ட பெரு வாயன்’. உலகமென்றால் எல்லாம் அடக்கம்தான் :-))
>
> மனிதன் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பதற்கு எந்த மதத்திலும்
> வலுவான வாதங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் eco ஆதரவாளர்கள்
> அதனை வலியுறுத்துகிறார்கள். அது போற்றத்தக்கதே!
>
>
உண்மைதான். நமது மூதாதையர் மாமிசம் சாப்பிட்டு இருக்க வேண்டும். அறன்
வலியுறுத்தும் போது ‘கொல்லாமை’ சிறப்புறுகிறது. எல்லா உயிர்களுக்கும்
வாழும் உரிமையுண்டு என்று பார்ப்பது நல்ல நோக்கு.
ஆயினும் என் கேள்விக்கான சரித்திர விடை கிடைக்கவில்லை. அக்காலத்தில்
சமணர்கள் மட்டுமே மரக்கறி உணவாளர்களாக இருந்திருக்க வேண்டும். இப்போதும்
விமானத்தில் ‘இந்து உணவு’ என்று போட்டுவிட்டோமெனில் மாமிசம் வந்துவிடும்.
ஆனால் ஜெயின் உணவு என்றால் அது இந்திய மரக்கறி மட்டுமே. வெறுமே
‘வெஜிடேரியன்’ என்று போட்டுவிட்டால் வசதிக்கேற்றபடி ஐரோப்பிய, ஆசிய
மரக்கறி உணவு வரும்.
ஆக, மரக்கறி உணவு ‘சைவ உணவு’ என்று ஆன கதை எப்படி :-))
க.>
சில பேருக்கு இயல்பாக சில உணவுகள் பிடிப்பதில்லை. சைனா 5 முறை போய்
இருக்கிறேன். ஒரு கருத்தரங்கில் நிறைய இந்திய மாணவர்கள் வந்திருந்தனர்.
எனவே எங்களுக்கு சைவ உணவு தனியாக வழங்கப்பட்டது. எங்களோடு ஒரு
பிரென்சுக்காரரும் சேர்ந்து கொண்டார். என்ன விஷயம் என்று கேட்டால், அவர்
குழந்தையாக இருக்கும் போதே பெற்றோர் கொடுத்த சிக்கன் சூப, ஆட்டுக்கால்
சூப் இவையெல்லாம் அவருக்குப் பிடிக்கவே இல்லையாம். அவர் பிறவிச் சைவர்!
வள்ளலார் போல.
வாடிய பயிரைக் காணும் போது வாடும் உள்ளம் வந்துவிட்டால், நமக்கு மரக்கறி
உணவு கூட நஞ்சுதான். சில நேரம் தோன்றும் சில சாதுக்கள் போல் எந்த உணவும்
இல்லாமல் வாழ்ந்து விட்டால் எப்படி இருக்குமென்று. ஆனால் ஆசை விட
மாட்டேன் என்கிறதே, என்ன செய்ய? அது சரி, இந்த நளபாகம் இழை என்னாச்சு
:-)))
க.>
2010/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது கதை சொல்லும் நேரம் என்பதால் சொல்கிறேன்.
எங்கள் குடும்பம் இறைச்சி உண்ணும் குடும்பம். எங்கள் அம்மாவும்
பாட்டியும் தினசரி ஏதாவது கறி அல்லது மீன் சமைப்பார்கள்.
வாரத்தில் ஒரு நாள் நண்டு, இரால் உண்டு.
சில நேரங்களில் எங்கள் கம்பத்தில் மான் இறைச்சி, வவ்வால் இறைச்சி,
காடை இறைச்சி எல்லாம் கொண்டுவந்து விற்பார்கள். வாங்கிச்
சாப்பிட்டதுண்டு. ஒரு வேட்டைக்காரர் காட்டுப் பன்றி சுட்டு அந்த இறைச்சியைக்
கூறு போட்டு விறபார். அதுவும் சமைத்துச் சாப்பிட்டதுண்டு.
மருத்துவக் காரணம் என்று சொல்லி உடும்புக் கறி சமைத்த நாட்களும்
உண்டு.
எங்களைச் சுற்றி மலாய்க்காரர்கள் மாடு அறுத்து உண்பார்கள். கொஞ்சம்
தள்ளிப்போனால் சீனர் மார்க்கெட்டில் பன்றிக் கறியும் கிடைக்கும். எங்கள்
குடும்பம் அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்து வந்தது. இத்தனைக்கும்
ரொம்பவும் பக்தியான குடும்பம் இல்லை. பழக்கமின்மையால்தான் என
நினைக்கிறேன்.
குவாலா லும்பூரில் வேலை செய்த நாட்களில் வார இறுதியில் போர்ட்
க்ளாங் துறைமுக நகருக்கு நண்டு சாப்பிடுவதற்காகவே சீன ரெஸ்டாரண்ட் செல்வோம்.
நண்டு சமைத்து ஓடு உடைத்து ஓட்டிலேயே நண்டு இறைச்சி வைத்துக்
கொடுப்பார்கள். அதே போல சாத்தே (கோழி அல்லது ஆட்டிறைச்சி ஊறவைத்து
சமைத்து குச்சியில் குத்தி நெருப்பில் வாட்டித் தருவார்கள்.
நிலக்கடலை சம்பலுடன் சாப்பிடலாம்) சாப்பிட காஜாங் நகருக்கும்
செல்வதுண்டு. இந்தப் பயணங்களுக்குத் தலைவர் மறைந்த நண்பர்
இரா.பாலகிருஷ்ணன். நண்பர் மட்டுமல்ல, தலைவர்.
தட்டமுடியாது. மேலும் அவர் செலவு. ஏன் தட்ட வேண்டும்?
நான் திருமணம் செய்தது ஒரு தீவிர இலங்கைச் சைவர் குடும்பத்துப் பெண்.
காதல் அரும்பிவிட்டதால் இந்த சைவ - அசைவ வித்தியாசம் பெரிதாகத்
தோன்றவில்லை. மனைவியான பின்னும் அவர் சைவமாகவே இருந்தாலும்
எனக்குச் சமைத்துக் கொடுப்பார். என் நண்பர்கள் (பாலா உட்பட) வீட்டுக்கு
வந்து விரும்பி உண்பார்கள்.
பிள்ளைகள் மூவருக்கும் குழந்தை வயதில் கோழி, மீன், முட்டை எல்லாம் ஊட்டினோம்.
ஆனால் ஏழெட்டு வயதில் அவர்களாகவே வெறுத்து விட்டுவிட்டார்கள்.
(இதை எப்படி விளக்குவது? அம்மாவின் தாக்கம் ஒன்றும் இல்லை. அவரும்
பிள்ளைகள் மாமிசம் சாப்பிட்டு "புஷ்டியாக" வளருவதை விரும்பினார்.ஒரு வேளை
அம்மாவின் மௌனமான முன்னுதாரணமாக இருக்கலாம்.)
அவர்களில் இருவர் இப்போதும் முப்பதுகளில் தீவிர சைவம். ஒருவர் லண்டனில் பயின்ற
காலத்தில் அசைவத்துக்கு மாறிவிட்டார். இப்போது சுத்த அசைவம்.
சைவமான மகளுக்கு வாய்த்த கணவர் நன்றாக அசைவம் சாப்பிடும் மலையாளக்
குடும்பத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் படித்த காலத்தில் மெக்டொனாட்சில்
சமையல் வேலைக்குப் போய் பர்கர் சமைத்து வெறுத்துப்போய் சைவர் ஆகிவிட்டார்.
இப்போது தீவிர சைவம். ஆகவே உணவில் அவர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை.
அவர்கள் பிள்ளைகளுக்குக் கோழி, மீன் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஏழு வயதில்
மூத்தவன் அவற்றை விருப்பமில்லாமல் சாப்பிடுவதைப் பார்க்கிறேன். இனி
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நான் 30 ஆண்டுகளுக்கு முன் சைவமான குடும்பத்து மத்தியில் உட்கார்ந்து
சாப்பிடக் கூசி வீட்டில் இறைச்சி சாப்பிடுவதை விட்டேன். வெளியில் சாப்பிடுவேன்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும் ஆரம்பித்த நேரத்தில்
மருத்துவர் விட்டுவிடச் சொன்னதும் விட்டுவிடுவதில் சிரமம் ஒன்றும்
இருக்கவில்லை.
இன்று அசைவம் விரும்பிச் சாப்பிடும் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து கிடைக்கின்ற
காய்கறிகளை மட்டும் வைத்து உண்பதில் எனக்குச் சிரமம் இல்லை. அந்த
இறைச்சிப் பொருள்களை தொடும் விருப்பமும் உண்மையிலேயெ போய்விட்டது.
ஆனால் நான் ஆர்த்தடொக்ஸ் சைவன் இல்லை. இன்றும் எங்கள் தேசிய
உணவான நாசி லெமாக் (தேங்காய்ப்பால் கலந்த சாதம்) சாப்பிடுகிறேன்.
அதில் நெத்திலிக் கருவாட்டுச் சம்பல் தவறாமல் இருக்கும். பூலோட்
உடாங் (glutonous rice with prawn paste) கிடைக்கும்போது சாப்பிடுகிறேன்.
ஆனால் எல்லாம் ஒரு அளவோடும் பழைய வாசம் விடாமல் இருப்பதாலும்தான்.
"நீலகண்டன் வாழ்க, கதை கேட்ட நீங்களெல்லாம் வாழ்க!"
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, August 15, 2010 10:38 AM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி
2010/8/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கணேசனார் என்னை வைணவர் என்று அடையாளப்படுத்தியவுடன் சும்மா ஒரு ரோஷம்!
வைணவன் என்று சொல்லிக் கொள்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
நான் ஆழ்வார்களிடம் சரண் புகுந்துள்ளேன். அவர்களுக்கு என் கஷ்ட, நஷ்டம்
புரியும். நான் அடியார்க்கு, அடியேன்...கீழ்நிலை அடியேன். அவ்வளவுதான்.
ஒரு அசத்து என்றும் சொல்லலாம்.
> இந்நன்னாளில் IATR INFITT கன்னிமாடக் கலாச்சாரத்திலிருந்தும் அரசியல்
> ஆக்கிரமிப்பில் இருந்தும் உலகத்தமிழ் ஆராய்ச்சிப் பனிகளுக்கு விடுதலை வாங்கித்
> தருவது பற்றியும் சிந்தியுங்கள்
> கோவையில் சந்தித்த இணைய வித்வான்கள் பாலா, முத்து, மணிவண்ணன் போன்றோரை வரவேற்று
> ஒரு புதிய transnational அமைப்பை உருவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்.
இது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறேன். நேற்று சுபாவுடன் இது
குறித்து பேசினேன். ஒரு தனி இழை ஆரம்பித்து, ‘உலகத் தமிழ் ஆய்வுப் பேரவை’
எப்படி அமைப்பது என்று யோசிக்கலாம்.
கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கண்ணன்
2010/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறேன். நேற்று சுபாவுடன் இது
குறித்து பேசினேன். ஒரு தனி இழை ஆரம்பித்து, ‘உலகத் தமிழ் ஆய்வுப் பேரவை’
எப்படி அமைப்பது என்று யோசிக்கலாம்.
ஆகா! பிறகென்ன? மட, மடவென்று காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.
முன்னமே யோசித்த ஒரு திட்டம், பல்வேறு செயற்குழுக்களை நாம் உருவாக்க
வேண்டும். அச்செயற்குழுக்களின் வாயிலாக ஆக்கம் என்பது தொடர்ந்து நடைபெற
வேண்டும்.
‘மின்செவ்விக் குழு’ என்றொரு குழு உருவாக்கி, அதன் மூலம் உற்சாகத்துடன்
செயலாற்றத் தொடங்கலாம்.
என் பரிந்துரை:
பேரா.நாகராஜன்,
பிரைம்பாயிண்ட் ஸ்ரீநிவாசன்
தேவ் (தேவராஜன்)
செல்வன்,
ஸ்வர்ணா,
சுபா
தேனீயார்
ரங்கன்
இவர்கள் கொண்ட குழு இதைத் தொடங்கலாம். நானும் இக்குழுவில் இருக்க
ஆசைப்படுகிறேன். வேறு யாராவது?
கண்ணன்
2010/8/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> அனபுடைய கண்ணன் அவர்களே,
> நல்ல தொடக்கம். நான் மின்வெளிக் கற்றலுக்காக இத்தொழில் நுட்பத்தைப்
> பயன்படுதியுள்ளேன். தேவையான மென்பொருள் மற்றும் மின் புத்தக வடிவிலான கையேடும்
> என்னால் இக்குழுவுக்குக் கொடுக்க இயலும்
> பேட்டி எடுக்கும் திறமை உள்ளவர்கள் கிடைத்துவிட்டால் குழு செயல்பட அடுத்த
> முயற்சியை நீங்கள் மேற்கொள்ளவேண்டும்
> நாகராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Where do we have our chat(audio/video)?
here:
http://www.fms.edhub.net/tutorflash.html
I'm online on both. So far no communication?
Kannan
ps. how will an observer sit?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil