ஒரு சுவையான பேட்டி

44 views
Skip to first unread message

devoo

unread,
Aug 10, 2010, 2:06:13 PM8/10/10
to மின்தமிழ்
அண்மையில் நம் குழுமத்தில் இணைந்த திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள்
Public Relations துறையில் இரண்டாவது பெரிய யாஹூ குழுமத்தை (Image
management) நடத்தி வருபவர். இவரை செல்வன் அவர்கள் தொலைபேசி வாயிலாகப்
பேட்டி கண்டார்.

தெளிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு அனுமன் காட்டும் வழி, பல
பேரிடர்களைச் சந்தித்தபோதும் பாரதத்தின் உறுதி குலையாமை, நாட்டு
நலனுக்கு மக்களின் பங்களிப்பு, அயலகம் வாழ் இந்தியர்களின் பொறுப்பு, மொழி
நீடித்து வளர நாம் செய்ய வேண்டுபவை இவை குறித்து இவர் கூறும்
கருத்துக்கள் மனம் கவர்வதாக உள்ளன. 20 நிமிடம் நீடிக்கும் இந்த
பேட்டியைக் கீழ்க்கண்ட சுட்டியில் கேட்கலாம்

http://blip.tv/file/3988212


தேவ்

Prime Point Srinivasan

unread,
Aug 11, 2010, 2:19:54 AM8/11/10
to மின்தமிழ், prpoint, DEV RAJ, செல்வன்
நண்பர்கள் தேவ், செல்வன் இருவருக்கும் நன்றி. நிர்வாக இயல்
சம்பந்தப்பட்ட என்னுடைய ஒவ்வொரு பேச்சுகளிலும், வகுப்புகளிலும்,
திருக்குறளை மேற்கோள் காட்டாமல் நான் பேசுவதில்லை. தமிழரகள்
ஒவ்வொருவரும் பெருமைபடட்தக்க ஒரு நூல் திருக்குறள்.

பாரதிய வித்யா பவனில், ‘பிசினஸ் கம்யூனிகேஷன்’ பற்றிய ஒரு டிப்ளமா
படிப்பு அணமையில் டாக்டர் கலாம் அவர்களால் துவக்கப்பட்டது. அதற்கு
அடியவன் தான் பிரொகிராம் இயக்குநராக இருக்கிறேன். சென்ற வகுப்பில்,
சோஷியல் மீடியா மற்றும் டுவிட்டர்’ பற்றி பேசும் போது, 140 எழுத்துகளில்
எழுதுவதை அனைவரும் ஒரு பெரிய உலக சாதனையாக கருதுவதைப்பற்றி கூறி,
திருக்குறளைத்தான் உதாரணமாக கூறினேன். ஒவ்வொரு திருக்குறளும் 25 முதல்
40 எழுத்துக்களில் அமைக்கப்பட்ட்டுள்ளது. டுவிட்டரில் கால் பகுதியிலேயே
அரிய கருத்துக்களை கொடுத்தவர் திருவள்ளுவர்.

தமிழ்நாட்டு தமிழர்களை விட அயல் நாடு வாழ் தமிழர்கள் தான் அதிக அளவில்,
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தமிழை வளர்க்கிறார்கள். இன்றைய
இளைஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டுமென்றால், நவீன தொழில்
நுட்பம் வாயிலாகத்தான் செல்லவேண்டும்.

அன்புடன்
சீனிவாசன்
91766 50273

Tthamizth Tthenee

unread,
Aug 11, 2010, 2:38:42 AM8/11/10
to mint...@googlegroups.com
பேட்டி மிக அருமை
 
தொலைபேசி வாயிலாக  அளித்த பேட்டி என்றாலும் தெளிவாக  உள்ளது
 
இணையத்தின் பயன்பாடு பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவேண்டும்  என்று நிதர்சனமாகத் தெரிகிறது
 
நல்ல முயற்சி
 
வாழ்த்துக்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
11-8-10 அன்று, Prime Point Srinivasan <prp...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Swarna Lakshmi

unread,
Aug 11, 2010, 3:46:32 AM8/11/10
to mint...@googlegroups.com
நல்ல பேட்டி - நன்றி.இந்தியாவுக்கு நல்லது தான் நடக்கும் என்பது மிக அழகான வார்த்தை. இத்தனை குழப்பங்களிலும் நாடு வாழ்ந்து கொண்டிருப்பதே அதற்கு சான்று.
 
திரு ஸ்ரீனிவாசன், நான் ஒரு communication professional. பெங்களூரில் ஒரு IT/ ITeS நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன். உங்கள் foundation சம்பந்தமாக ஏதாவது உதவி செய்ய முடிந்தால் மகிழ்வேன்.

நன்றி
ஸ்வர்ணா

 

From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 11 August, 2010 12:08:42 PM
Subject: Re: [MinTamil] Re: ஒரு சுவையான பேட்டி

N. Kannan

unread,
Aug 11, 2010, 9:41:38 AM8/11/10
to mint...@googlegroups.com
அன்பர்களே:

எத்தனை பேர் இந்த மின்செவ்வியைக் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. தேவ்
அவர்கள் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள். ஒரு மடலாடற்குழுவின்
சார்பாக, மடலாடற்குழுவின் சீரிய நடவடிக்கையாக, மடலாடற்குழு உருப்பினர்களை
வைத்தே, மடலாடல் என்பதின் அடுத்த நிலையான நேர் (ஒலி) காணல் எனும்
நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதன் அடுத்த வளர்ச்சியாக நான்
வீடியோ கான்பெரன்சிங் (விழியப்பேச்சு) என்பதை எதிர் நோக்குகிறேன்.

மின்தமிழ் என்பது வெறும் ஊர் வம்பு பேசும் குழு அல்ல என்பதை எவ்வளவு
தூரம் உள்வாங்கியிருந்தால் தேவ் போன்ற பெரியவர்கள் மரபு விக்கி எனும்
பெரும் பொறுப்பையும், இப்போது மின்காணல் (மின்னாடல்?) எனும் உத்தியைக்
கையாண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வலது கை போல் இருக்கும்
திரு.ஸ்ரீநிவாசன் அவர்களைப் பேட்டி கண்டிருப்பார்கள் என்று வியக்கிறேன்.

ஒரு மடலாடற்குழு எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாகத் தன்னை வெளிக்காட்டிக்
கொள்ள முடியும் என்பதற்கு இதுவொரு உதாரணம். இதில் என்னைக் கவர்ந்த
இன்னொரு உளவியல் கூறு என்னவெனில், அந்தக்காலத்து மடலாடற்குழுக்களெல்லாம்
வெறும் hero worship செய்யும் தனிநபர் பஜனை மடங்களாக இருக்கும் போது,
தன்னியல்பாக எங்கள் உந்துதல் ஏதுமில்லாமல் ‘இது தம் குழு’ எனும் பீடுடன்
தமிழ் மடலாடற்குழு சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அதிசயமாக இம்மாதிரி
ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுவே நல்லதொரு மடலாடற்குழு என்பது எப்படி
இயங்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் போலவும்
அமைந்துவிட்டது.இம்மாதிரியான ஜனநாயகச் சிந்தனையை, செயலை நாம்
வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே மின்தமிழ் மின்வெளியில் நிரந்தரமாக இருக்க
வழிசெய்யும். மடலாடற்குழுக்கள் தனி நபர்களை மட்டும் நம்பி செயல்படல்
கூடாது. அந்த நபர் இல்லையெனில் பின் இயக்கம் முடங்கிவிடும்!

தேவ் அவர்கள் ஒரு தேர்ந்த போட் காஸ்டர் போல் (மின்தமிழ் வானொலி அண்ணா!)
இதை அவரது வளமான குரலில் வழங்கி, இதன் தொழில்நுட்ப வேலையையும்
(ஒலிவாங்கி, சீர்செய்து, சேவியில் ஏற்றி, சோதனை செய்து வெளியிடுவது
வரையிலான அனைத்துப் பொறுப்பையும்) ஏற்று செய்திருப்பது ஆச்சர்யப்பட
வைக்கிறது. வாழ்த்துக்கள் தேவ்,

அடுத்து செல்வன். அவர் குரலை இப்போதுதான் முதன்முறை கேட்கிறேன். அவர்
எழுத்தை வைத்து வேறு மாதிரி குரலை எதிர்பார்த்தேன் :-) மிகத் தேர்ந்த
நிருபர் என்பதை இப்பேட்டியில் நிலைநாட்டி இருக்கிறார். ஏதோ சி.என்.என்
பேட்டி போல் கால அளவைக் கணக்கில் கொண்டு, பேச்சு போகிற திசையில் வழி
தவறிவிடாமல் தம் பணியை மிகக்கவனமாகச் செய்திருக்கிறார். மிக நல்ல
கேள்விகள். அவரது கடைசி கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. மின்தமிழ்
2020 என்னவாக இருக்கும்?

பேட்டியின் நாயகர் ஸ்ரீநிவாசன். வழக்கம் போல் அருமையாக பதில்
சொல்லியிருக்கிறார். ‘சொல்லின் செல்வன்’ அநுமனை மறக்காமல், strategist
கிருஷ்ணன் எனும் புதுக்கோணம் காட்டி old wine in new bottle என்பதைச்
சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் உலகின் முதல் டிவிட்டர்
(சிட்டி) திருக்குறள்தான்!!

I strogly believe in Positive Thinking and the power of cooperative
(collective) thinking in changing ourselves, thereby changing the
society. அந்த வழியில்தான் மின்தமிழ் நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
அதற்கு ஸ்ரீநிவாசன் போன்றோரின் உற்ற துணை அவசியம் தேவை. அவர் நம்
குழுவிற்காக எதுவும் செய்யத்தயாராக உள்ளதை தன் செல்பேசி எண்ணைக்
கொடுத்திருப்பதன் மூலம் கோடிகாட்டி இருக்கிறார்.

இது போன்ற மின்னாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அடுத்ததாக யாரைப்
பேட்டி காணலாம் என்று இங்கு பரிந்துரை செய்யலாம்.

நாளை நமதே! வாழ்க!

Kudos to Dev & Selvan!!

அன்புடன்,
நா.கண்ணன்

2010/8/11 devoo <rde...@gmail.com>:
>
> http://blip.tv/file/3988212
>

Suresh sundaresan

unread,
Aug 11, 2010, 10:28:06 AM8/11/10
to mint...@googlegroups.com
கலந்துரையாடல் மிக நன்றகா இருந்தது
 
இன்னம்புரன் நண்பன்

2010/8/10 devoo <rde...@gmail.com>

Annakannan

unread,
Aug 11, 2010, 10:37:50 AM8/11/10
to மின்தமிழ்
இந்த மின்செவ்வியைக் கேட்டு மகிழ்ந்தேன். ஓர் ஆளுமையை அறிமுகப்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்தை நன்கு நிறைவேற்றியிருக்கிறது. சுருக்கமாக
இருப்பினும் சிறப்பாக இருக்கிறது. தேவ் அவர்களின் குரல் வளம் மிக நன்று.
செல்வன் நல்ல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஏற்றத் தாழ்வுகள் எப்போதும் இருக்கும் என்ற சீனிவாசனின் பதில், உண்மையே.
ஆயினும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது நம் கனவு. அப்போது
தான், மக்களாட்சியின் முழுப் பயனையும் மக்கள் பெற முடியும். இவ்வளவு
அறிவியல் - நுட்பியல் வளர்ச்சி இருந்தும், இந்த இடைவெளிகளைக் குறைக்க
இயலாது எனில் அது, உண்மையான வளர்ச்சி இல்லை.

பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சீனிவாசன்,
திவ்யம், சத்தியம் உள்ளிட்ட சில சொற்களுக்குத் தமிழில் பொருத்தமான
மாற்றுச் சொற்கள் இல்லை என்கிறார். சத்யமேவ ஜெயதே என்பதை வாய்மையே
வெல்லும் என மொழிபெயர்த்த போது, சத்தியத்தின் மூன்றில் ஒரு பகுதி பொருளே
வாய்மை என இராஜாஜி விமர்சித்ததாகக் கூறியுள்ளார். இந்தக் கூற்றினைத்
தமிழறிஞர்களுக்கு மடை மாற்றுகிறேன். தக்க சொற்களைத் தெரிவிக்க
வேண்டுகிறேன். ஒருவேளை அவ்வாறு இல்லாவிடில் தமிழில் உருவாக்க முயல்வோம்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.


Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 11, 2010, 10:37:34 AM8/11/10
to mint...@googlegroups.com
மிக நன்றாகவும் அருமையான சப்ஜெக்டாகவும் இருந்தது. பாராட்டுக்கள். மேலும் பல பல விஷயங்கள் தொடரவேண்டும் என ப்ரார்த்தனையுடன்.
கே.வீ.விக்னேஷ் சென்னை

K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

Swarna Lakshmi

unread,
Aug 11, 2010, 11:06:01 AM8/11/10
to mint...@googlegroups.com
கண்ணன்,
 
>>இது போன்ற மின்னாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அடுத்ததாக யாரைப்
பேட்டி காணலாம் என்று இங்கு பரிந்துரை செய்யலாம்.
 
அடுத்ததாக ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பேட்டி காண வேண்டுமென்று தோன்றுகிறது. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார். அவரிடம் மரபு சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றிக் கேட்டு அறியலாம். இவ்வாறான பேட்டிகளை ஒரு project management போல செய்வது மிக்க பலனளிக்கும் அல்லவா! எக்கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று கூட கலந்துரையாட வேண்டும். அதேபோல், இசை, இலக்கியம், மருந்துவம், சிற்பம், ஓவியம், textile technology evolution, பட்டு பருத்தி உற்பத்தி, இயற்கை - பாரம்பரிய விவசாயம் போன்ற துறைகளை சேர்ந்த பலரிடம் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து பேசலாம். பிரபலமானவர்கள் மட்டுமல்லாது பலதுறை வல்லுனர்களை பேட்டி காணலாம். ஒரே ஒரு முறை மட்டும் என்றில்லாது, e-learning போன்று தொடர்ந்த திட்டமிட்ட உரையாடல்கள் தொடர்ச்சியாக முழுமையாகக் கற்றுக்கொள்ள உதவும். skype போன்றவற்றின் உதவியினால் அதிக செலவில்லாமல் செய்ய முடியும்.
 
audio, video editing, project planning, publication, communication போன்ற விஷயங்களில் என்னால் ஆன முயற்சிகளை நிச்சயம் செய்கிறேன்.
 
 நன்றி
ஸ்வர்ணா

 

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 11 August, 2010 7:11:38 PM
Subject: Re: [MinTamil] ஒரு சுவையான பேட்டி

geeyes

unread,
Aug 11, 2010, 2:20:35 PM8/11/10
to மின்தமிழ்
திரு.தேவ், திரு.செல்வன் ஆகியோர்களின் பணி பாராட்டிற்குரியது. இதுபோல்
மேலும் தொடரவேண்டும்.

செல்வன்

unread,
Aug 11, 2010, 3:54:29 PM8/11/10
to mint...@googlegroups.com
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

எனக்கு டெக்னிக்கல் அறிவு பூஜ்ஜியம்.தமிழ் தட்டச்சவே இன்னும் சுரதா பெட்டியை தான் பயன்படுத்துகிறேன்.ஸ்ரி என்பதை அதற்கான குறியீடில் சுரதா பெட்டியில் அடிப்பது எப்படின்னு கூட தெரியாது:-)..என்னை தேவ் பேட்டி எடுக்க சொன்னப்ப இந்த லிமிடேஷனை சொன்னேன்..விடியோ கான்பரன்சிங்குக்கு ஸ்கைப், கூகிள் டாக் என முயன்றோம்.ஆனால் என்னால் அது எதையும் ஒழுங்கா இன்ஸ்டால் செய்ய முடியலை.கடைசியில் தேவ் சிரமபட்டு இதை பாட்காஸ்ட ஆக ஒலிபரப்பினார்...அதனால் இதுக்கு அனைத்து பாராட்டுகளும் தேவுக்கும், ஸ்ரினிவாசன் அவர்களுக்கும் தான் போகணும்.

அப்புறம் இப்பதான் பல பத்தாண்டுகள் கழித்து என் குரலை ரெகார்ட் செய்து நான் கேட்கிறேன்...சிறுவயதில் முதல் முதலில் ஒரு டேப்ரிகார்டர் வாங்கினப்ப கடைசியா என் குரலை ஒலிப்பதிவு செய்து கேட்டது..டெக்னாலஜியில் எத்தனை தூரம் பிந்தங்கி இருக்கேன்னு பாருங்க:-)

பேட்டியில் ஸ்ரினிவாசன் அவர்கள் சொன்ன கருத்துக்களை பற்றி என் 2 சென்ட்சை விரைவில் எழுதுகிறேன்



--
செல்வன்

www.holyox.blogspot.com


"Communism doesn't deserve to advance. It deserves to end. Communism has failed. It fails every time it's tried, and yet, for some reason, people keep giving it another chance."-Rush Limbaugh

N. Kannan

unread,
Aug 11, 2010, 6:39:39 PM8/11/10
to mint...@googlegroups.com
செல்வன்:

முதல்ல இங்க போய் NHM Writer install செய்யுங்க. ஆன்லைன் பெட்டியிலேயே
காலத்தை ஓட்டிடாதீங்க!

http://software.nhm.in/products/writer

தாயார் மகாலக்ஷ்மியைப் பற்றி அவ்வளவு அழகாக எழுதிய தாங்கள், ‘ஸ்ரீ’ என்று
எழுத முடியவில்லை என்றால், ‘திரு’வே திரு திருவென்று முழிப்பாள். Key in
”sri” ’ஸ்ரீ’ வந்துவிடும். கேப்பிட்டல் அல்ல ஸ்மால் லெட்டர்ஸ்.

ஸ்கைப், பேஸ்புக் இவையெல்லாம் குழந்தைகளே பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டார்கள். எனவே தயக்கமின்றி, உள்ளே புகுந்து விளையாடிப்
பாருங்கள். ஜிடாக்கில் கூட பேசலாம் (கூகுள் எல்லாம் செட்டு, செட்டாகத்
தருகிறது). நாம் கணினியில் கேட்கும் எதையும் உடனே பதிவு செய்ய முடியும்.
Wavepad என்றொரு செயலி (மென்பொருள்). அதை வைத்து இதைச் செய்ய முடியும்.
நான் இங்கு அதை அறிமுகப்படுத்தி, தேனீ போன்றோர் கரை கண்டுவிட்டனர் ;-)

தங்களது கேள்விகள் பிடித்திருந்தது. ஸ்ரீநிவாசன் ‘எப்படி’ பதில் சொல்வார்
என்று சிந்திக்க வைத்த கேள்விகள். உதாரணமாக மின்தமிழ் பற்றிய கேள்வி ;-)
மின்தமிழ் என்றவுடன் அவர் ‘தமிழ் கலைச்சொற்களுக்கு’ போய்விட்டார்.
என்னைப் பொறுத்த மின்தமிழ் என்பது ஒரு உளவியல் பொறி. மின்தமிழில் தினம்
நாம் காணும் முகத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் உலகமே தெரியும்!
நல்லது, கெட்டது, ஆசாபாசங்கள் எல்லாம். நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும்
பொறி ‘மின்தமிழ்’. இந்த தரிசனம் முதலில் ஆகிவிட்டால் இறை தரிசனம் அடுத்த
கட்டம் :-)) [இது புரிந்தால் ஆன்மீகத்தின் முதல் கட்டம் என்று பொருள்!]

கண்ணன்

2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 11, 2010, 6:44:51 PM8/11/10
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்வர்ணா:

மிக நல்ல சிந்தனை. ’செந்தமிழ் மாநாடு’ கண்டு மீண்டிருக்கும் ஐராவதம் ஐயா
மிகச் சரியான தேர்வு. ஐயாவின் தோழர், சீடர் நம் நரசய்யாதான் (அவர்
பேரிலேயே ஐயா இருக்கு). அவர்தான் இதைச் செய்து தர வேண்டும். எப்படிச்
செய்வது போன்ற தொழில் நுணுக்கங்களை நாம் ஒரு குழு அமைத்து சொல்லித்
தரலாம். அந்தக் குழுவில் தாங்கள் அவசியம் சேர வேண்டும்.

//இசை, இலக்கியம், மருந்துவம், சிற்பம், ஓவியம், textile technology
evolution, பட்டு பருத்தி உற்பத்தி, இயற்கை - பாரம்பரிய விவசாயம்//

மிக நல்ல யோசனை. முதலில் ஒரு பட்டியல் தயாரித்தால் தேவலை.

1. திரு. ஐராவதம் மகாதேவன்.
2.
3.
4.
5.

???


கண்ணன்

2010/8/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
> கண்ணன்,

ஆராதி

unread,
Aug 11, 2010, 8:23:13 PM8/11/10
to mintamil
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தெளிவாகச் சொல்லவந்த கருத்தை விளக்கினார்கள். திரு செல்வன் பேட்டி எடுப்பவர் எப்படிப் பேட்டி எடுக்க வேண்டுமோ அந்த நுட்பம் தெரிந்து பேட்டி கண்டுள்ளார். நலல பணி. மேலும் இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் தொடர வேண்டும். இவற்றிற்கெல்லாம் அடிப்படையை, சூழலை அமைத்துக் கொடுத்த திரு தேவ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்புடன்
ஆராதி

2010/8/11 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Aug 11, 2010, 9:12:08 PM8/11/10
to mint...@googlegroups.com
அந்த உணர்வு எனக்குப் பிடிந்திருந்தது. நம் எல்லோரின் சார்பாகவும்
எடுத்துச் செய்யும் ஒரு நல்ல காரியம். இது நம் மரபின் தொடர்ச்சி இல்லையா?
வேதம் என்ன சொல்லுகிறது? தமிழ் மறைகள் என்ன சொல்லுகின்றன? இந்த
ஒருமையைத்தானே!

சர்வ ஜனா சுகினோ பவந்து!

க.>

2010/8/12 ஆராதி <aara...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 12, 2010, 1:25:23 AM8/12/10
to mint...@googlegroups.com
பேட்டியில் ஸ்ரினிவாசன் ஐயா தெரிவித்த கருத்துக்களை பற்றிய என் கண்ணோட்டம்.

கம்யூனிகேஷன் திறமையை மாணவர்களீடம் வளர்ப்பது எப்படி?


மேடையேறி பேசும் திறன், ஊடகங்களை பயன்படுத்தும் திறன், வைரல் மார்க்கடிங், சோஷியல் மீடியா ஸ்கில்ஸ் ஆகியவற்றை பாடமாகவே கற்றுதரலாம்.வேலை தேடும் ஒவ்வொரு மாணவரும் இலவச வலைபதிவு அல்லது டொமைன் மூலம் தனக்கு ஒரு வலைதளம் உருவாக்கி, அதில் தனது ரெசுமே போஸ்ட் செய்து அதன் முலம் வேலை தேடூம் நிலை வரவேண்டும்.லிங்கிடின்னை இதற்கு நன்கு பயன்படுத்தலாம்.

ரெசுமே எழுதுவதும், வேலைக்கு அப்ளிகேஷன் எழுதுவதும் தனிகலை.வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படிக்க அப்ளிகேஷன் போடும்போது "எனக்கு ஏன் இந்த கோர்ஸில் இடம் தரணும்" என்பதை பற்றி ஒரு கட்டுரை மாதிரி எழுத சொல்லுவார்கள்.லஞ்ச் இன்டர்வியூ இருக்கும்.அப்ப டேபிள் மானர்ஸ் பார்ப்பார்கள்.டைனிங் எடிக்க்வெட்ஸ், புரபஷனல் டிரஸ்ஸிங் எல்லாம் மாணவர்கள் கல்லூரியிலேயே பழகிக்கணும்.

வேலை தேடும் கம்பனியை பற்றி நிறைய படித்து ஹோம் ஒர்க் செய்துட்டு போகணும்.வேலைக்கு ஏற்ப நம்ம ரெசுமேவை மாற்றி எழுதணும். சேல்ஸ்மேன் வேலைக்கு போனால் நம் பிரண்டேஷ்ச்ன் ஸ்கில்சை ஹைலைட் செய்யும்படி ரெசுமே எழுதணும்.அக்கவுண்டண்ட் வேலைக்கு போனால் நம் நம்பர் ஸ்கில்ஸை ஹைலைட் செய்யணும்.இது பொய் சொல்லுவதாகாது...ப்ளெக்சிபிளிட்டியை தான் காட்டுது.ஒரே ரெசுமேவை ஸ்டாண்டர்டாக எல்லா வேலைக்கும் அனுப்பி வைக்கும் பழக்கத்தை விடவேண்டும்.

இதுபோன்ற முயற்சிகளுக்கு கல்லூரியிலேயே பயிர்சிகள் அளிக்கலாம்.அது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

N. Kannan

unread,
Aug 12, 2010, 2:40:58 AM8/12/10
to mint...@googlegroups.com
இப்படி ஒவ்வொரு கேள்வியாக அலசுவோமா?
அவர்தான் இங்கு இருக்கிறாரே! அலசல் சுவையாகலாம்!

க.>

2010/8/12 செல்வன் <hol...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 12, 2010, 2:50:56 AM8/12/10
to mint...@googlegroups.com


2010/8/12 N. Kannan <navan...@gmail.com>

இப்படி ஒவ்வொரு கேள்வியாக அலசுவோமா?
அவர்தான் இங்கு இருக்கிறாரே! அலசல் சுவையாகலாம்!


நல்ல யோசனை.அவர் தன் கருத்தை சொல்லிவிட்டார்.இனி நாம் அதை பற்றி கருத்து சொல்லலாம்.It will add value to his interview


--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 3:26:44 AM8/12/10
to mint...@googlegroups.com
மேடையேறி பேசும் திறன்
 
மிகத் திறமையான அறிவாளிகல் பலரும் தாங்கள் மனதில் நினைத்திருக்கும் கருவின் வடிவத்தை  வார்த்தைகளில் வடிக்க பெரும் முயற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன்
 
 
மேடையில் நாம் ஒளி வெள்ளத்தில் நிற்போம், அனேகமாக  அரங்கில் உட்கார்ந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையோருடைய  முகம் கூட  நமக்குத் தெரியாது, அறிமுகம் இருப்பினும் அரங்கினுள் இருக்கும் இருளில்  அவர்களின் முகம் தெரியாது
 
முன்பெல்லாம்  ஒரு சொல் வழ்க்கு உண்டு
 
லஜ்ஜையை விட்டுக் கஜ்ஜயைக் கட்டு  என்று
 
முதலில் சபைக்கூச்சம்  விடவேண்டும்
 
அப்போதுதான்  நாம் பேச வந்த கருத்தை தெளிவாக  கூறமுடியும்
 
ஆகவே மேடையேறிப் பேசும் திறனை வளர்த்துக்கொள்வதைப் பற்றி  விவாதிக்கலாம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
12-8-10 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 3:27:37 AM8/12/10
to mint...@googlegroups.com
மிகத் திறமையான அறிவாளிகள்
 
என்று படிக்கவும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 
12-8-10 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதினார்:

செல்வன்

unread,
Aug 12, 2010, 3:39:31 AM8/12/10
to mint...@googlegroups.com
நல்ல தலைப்பு தமிழ்தேனி ஐயா

நான் கிராமத்தை சேர்ந்தவன்.பி.காம் படித்தபோது மேடையேறி பேசும் வாய்ப்பு எதுவும் வரவில்லை.எம்.பி.ஏ வகுப்பில் சேரும்போது எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது.மேடையேறி செமினார் எடுக்க சொன்னால் நடுக்கமாக இருக்கும்.அப்புறம் பயத்தை போக்கிகொள்ள அடிக்கடி மேடையேறி பேசினேன்.டேல் கார்னிகியின் பப்ளிக் ஸ்பீக்கிங் புத்தகத்தை லைப்ரரியில் படித்தேன்.மனதில் துணிவு வர அதெல்லாம் ஒரு காரணம்.டிகிரி வாங்கியபோது மேடையேறி பேசுவதில் நல்ல தேர்ச்சி அடைந்துவிட்டேன்.

என் அனுபவத்தில் மேடைபேச்சின் சில டெக்னிக்குகள்

1. நன்கு தயார் செய்துகொண்டு போகவேண்டும்

2. நல்ல சரளமாக பேச வேண்டும்.ஆடியன்ஸ் நாம் பேசுவதில் எந்த அளவு ஒன்றியிருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.நடுவே பேச்சை நிறுத்தி சின்ன சின்ன கேள்விகள் கேட்கவேண்டும்.

3. ஆடியன்சிடம் இருந்து கோபமான கேள்விகள் வந்தால் சின்ன,சின்ன ஜோக் மூலம் நிலயை சமாளிக்கலாம்.

4. பேச்சை சுவாரசியமா ஆரம்பிக்கணும்.நிறைய உதாரணம் தரணும்.

5. ஐந்து நிமிடம் முன்னதாகவே ஸ்டேஜுக்கு போய் மைக், கணிணி வேலை செய்யுதனனு பார்த்துக்கணும்

6.

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 4:25:36 AM8/12/10
to mint...@googlegroups.com
மிக  முக்கியமாக  முதன் முதலாக நாம்  பேழும் சொல்லுக்கு  அரங்கத்திலுள்ளோரின்
 
ப்ரதிபலிப்பு எப்படி இருக்கிறது  என்று எடை போடவேண்டும்
 
அடுத்ததாக  நாம் மேடையேறிப் பேசுகிறோம்  அவர்களெல்லாம் கீழே இருக்கிறார்கள்  என்னு  மன உணர்வை  நீக்க வேண்டும் அவர்கள் மனதிலிருந்து
 
நாமும் அவர்களோடு கலந்து  அவர்களின் பக்கத்திலே  இருந்துகொண்டு  பேசுவதான  ஒரு பாவனை ஏற்படுத்தி விடவேண்டும்
 
நாமும் அவர்களில் ஒருவனே  அவர்களை விடப் பெரிய மேதையல்ல  என்னும் சம உணர்வை  ஏற்படுத்திவிட்டு
 
அதன் பின்னர் நம் மேதாவிலாசத்தினால், நகைச்சுவை உணர்வால்  அவர்களின் மனத்தின் அடி ஆழம் வரை  ஊடுருவி
அவர்களை நம் வசப்படுத்த  முடியும்
 
இன்னும் சற்று நேரம் இவர் பேசியிருக்கலாமே  என்று அவர்கள் நினைக்கும் வண்ணம்
 
சற்று முன்னரே  சுவைபட  முடித்து விடவேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
12-8-10 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதினார்:
நல்ல தலைப்பு தமிழ்தேனி ஐயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 12, 2010, 5:06:08 AM8/12/10
to mint...@googlegroups.com
கோட் போட்டுண்டா, நடுங்கறது தெரியாம சமாளிக்கலாம்.

2010/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 12, 2010, 5:08:39 AM8/12/10
to mint...@googlegroups.com
2010/8/12 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> கோட் போட்டுண்டா, நடுங்கறது தெரியாம சமாளிக்கலாம்.


மேடையில் பேசுவது ஒரு கலைதான். ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்
நுணுக்கி, நுணுக்கி ஆராய்கிறேன். புரியவில்லை. நம் அறியாமை நம்மையறியாமலே
தொடையில் இறங்கி ஆட்டுகிறது போலும் :-))

க.>

Innamburan Innamburan

unread,
Aug 12, 2010, 5:34:49 AM8/12/10
to mint...@googlegroups.com
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம்.
-ஒவ்வையார்

நீட்ட்டோலை கூட இல்லையென்றால்! ரண்டாங்கிளாஸ்லே பாலு வாத்தியார்
சொல்லிகொடுத்ததை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் திலகர் மடலில், மஹாகவி
பாரதியின் புகழ் பாட, அடித்த பரிசு அவரின் 'பகவத்கீதை'. பத்திரமா
இருக்கு.
இன்னம்பூரான்
பி.கு. கோட் போட்டுக்கலை.
2010/8/12 N. Kannan <navan...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 6:04:09 AM8/12/10
to mint...@googlegroups.com
ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்
நுணுக்கி, நுணுக்கி ஆராய்கிறேன். புரியவில்லை
 
கிட்டத்தட்ட  600 முறை மேடையேறி இருக்கிறேன்
ஒரே நாடகத்தை  ,ஒரே கதா பாத்திரத்தை  பல முறை நடித்திருக்கிறேன்
 
ஆனாலும் ஒவ்வொரு முறையும் நாடகம் தொடங்கும் போது  ஒரு நடுக்கம் வரும்
 
அந்த நடுக்கம்தான்  நம்முடைய  கடமை உணர்வை, நம்முடைய  பொறுப்பை  உணர்த்தும்  கருவி’’அந்த நடுக்கத்தைக்  கட்டுப்படுத்திக்கொண்டு   மன உறுதியுடன்  செயல்படும்போது  இன்னும் சரியான முறையிலே நம் நடிப்பும் பேச்சும் அமையும்  என்பதில் சந்தேகம் இல்லை
 
அந்த நடுக்கம்தான்  நுணுக்கம்
 
அது நடுக்கமல்ல      நுணுக்கம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
12-8-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 12, 2010, 7:27:24 AM8/12/10
to mint...@googlegroups.com
நுட்பமாக ஆடும்போது...


2010/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஏன் நடுக்கம் வருகிறது என்று நானும்

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2010, 9:05:22 AM8/12/10