மெளனம் என்பதன் பொருள் என்ன?

1,402 views
Skip to first unread message

Krishnan S

unread,
Aug 22, 2013, 11:10:02 PM8/22/13
to tamil_ulagam, mint...@googlegroups.com
மெளனம் 
                 மெளனம் என்பதன் பொருள் என்ன?

 மெய்,வாய் இரண்டையும் சங்கற்பித்து கொண்டே இருக்கிறது. அதை அடக்கும் முறை யாது?


   மெளனத்திற்குப் பல படிதங்கள் உண்டு. ஓயாது மிகைபட பொருளற்ற பேச்சுகளைப் பேசி 
கொண்டிருப்பனுக்குப்  பொருள் உள்ள பேச்சுக்களை மட்டும் பேசுவது மெளனமாகும்.பொருள் உள்ள பேச்சுக்களை மிகைபடப் பேசுபவனுக்கு அவைகளை அளவுபடப் பேசுதல் மெளனமாகும்.பேச வேண்டிய நல்ல விழங்களை பிறர் கேட்டாலொழிய பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த மெளனமாம். தனக்கோ அதிகம் பயன்படாது என்று தெரிந்தால் பேசாது அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த மெளனமாம்.
  
  இப்படி மெளனத்திலேயே போகப் போக மனம் அடங்கியிருப்பது 
 அந்த மெளன நிலையே புறக்குறியது. 
   ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் மனதுக்குள்ளே வித விதமான எண்ணங்களை உதித்துக் 
கொண்டிருக்குமாம்.   அது கிட்டத்தட்ட பேசுவதற்கு சமம். அத்தகைய எண்ணங்கள் உதிக்கலாகாது. கடவுள் சிந்தனை வலுத்து வந்தால்
  வேறு எண்ணங்கள் அடிப்பட்டுப் போகும். கடவுளுடைய ஓரே ஓர் எண்ணம் நிலைத்துவிட்டால் அது பண்பட்ட நிலை.’ அந்த நிலையில் மனம் நசிந்து விட்டால் மெளனம் பூர்த்தியாகிறது. எஞ்சியிருப்பது பிரம்ம சொரூபம்

            மெளனம் என்பது பேசாதிருக்கும் நிலைமை
      மெளனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல.பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதான் மெளனம் என்று யோக நூல்களும், சித்ததை அடக்கி வாழும் சித்தர்களும் கூறுகிறார்கள். வாய் திறந்து பேசும் பேச்சுகளை  ‘’ஸ்தூல வைகரி வாக்’’எனப்படும்.
    
          வாயைத் திறக்காமலே மனதில் ஓடும் எண்ணங்களை ‘’சூக்கும் வைகரி வாக்’  என்பார்கள். ஓசை, பேச்சு, வார்த்தை என்ற உருவில் அல்லது அதன் கருப் பொருளாக விளங்கும் போது, அதனை ’மத்யமா வாக்’ என்பார்கள்.   அதிசூக்குமமான இரு நிலைகள் இருக்கின்றன.

    ’அபஸ்யந்தி பார’ என்று பெயர். ’அபரா வாக்’ என்பது எண்ணம் அல்லது பேச்சின் ஆரம்பநிலை.பேசுவதை குறைத்து அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டு அறிய ‘அனாநந்த கிரி’ சுவாமிகள் கூறியுள்ளார்.
 இதனை ‘மோன நிலை’ என்பார்கள். உண்மையான மெளனம்.  ‘’ மோனம் என்பது ஆனந்த வரம்பு’ என்பார் ஒளவையார்.

    
மெளன விரதம் என்றால் பேசாமை. இதில் சில படி நிலைகள் உளன.எழுதிக் காட்டுவது, சைகை காட்டுவது. இவைகள் உடலிம் மொழியாகும்.  ரமண மகரிஷியும் மெளனமாக நாள் முழுவதும் இருப்பதுண்டு.  பால் பிரண்ட்டன் ரமண ரிஷியை பேட்டி காண பல கேள்விகளை தயாரித்து வைத்திருந்தார்.  ஆனால், ரமண ரிஷிடம் ஒரு கேள்வியை கூட கேட்காமல்
  மெளனத்தில் இருவருமே அமர்ந்தினர். இறுதியில் 
பால் பிரண்ட்டன் தன் கேட்ட இருந்த அனைத்து கேள்விகளும்
   மெளத்தின் மூலம் அறிந்துக்கொண்டார். 
    திருவண்ணாமலையில் அவரை தரிசித்த 
பால் பிரண்ட்டன் தன்னுடைய தன்னுடைய  ''Search in Ancient India' என்னும் நூலில் எழுதியுள்ளார். யோகியர்கள், ஞானியர் தங்கள் மெளனத்தின் மூலம் அறிவர்.
  காஞ்சி பெரியாரும் மெளனத்தை கடைப்பிடித்து வந்துள்ளார். நம்மை நோக்கி பார்த்துக்கொண்டு இருப்பதாக நாம் நினைப்போம்.ஆனால் அவரின் இலக்கு வேறாக இருக்கும்.
இப்படி மெளனமாக இருப்பதிலும் ஓர் நன்மை உண்டு. நம்முடைய ஆற்றல்,  உயிர் சக்தி வீணாக்கப்படாது சேமிக்க வைப்படுகிறது
                           --------------------------------------------------------
-- அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

seshadri sridharan

unread,
Aug 23, 2013, 5:24:28 AM8/23/13
to mintamil
மௌனம் என்றால் சிந்திக்காது இருத்தல் என்று கடைப்பை சச்சிதானந்த யோகீசுவரர் சொல்கிறார். மௌனமாய் இருப்பவர்க்கு நிர்விகல்ப சமாதி அதிகம் நேரும் வாய்ப்பு உள்ளது. 

இந்த வகை மௌனம் வாய்கப்பெற்றவன் என்ற முறையில் மேற்சொன்ன சச்சிதானந்தர் கருத்து 100% உண்மை என்பேன்.


சேசாத்திரி    


2013/8/23 Krishnan S <krishna...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Rishi Raveendran

unread,
Aug 23, 2013, 5:01:21 PM8/23/13
to mintamil
மெளன விரதம் / மெளனம் என்பது பேசாதிருத்தல் அல்ல. 

எண்ணங்களற்ற நிலை.

இதற்காகவே யோகாவில் மெளனவிரதம் இருக்க பயிற்றுவிப்பர் நம் முன்னோர்கள் !


2013/8/23 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


Tthamizth Tthenee

unread,
Aug 23, 2013, 5:12:30 PM8/23/13
to mint...@googlegroups.com
அதனால்தான்  மௌனம் சர்வார்த்த சாதகம் என்போர் பெரியோர்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/8/24 Rishi Raveendran <rishira...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 23, 2013, 10:29:37 PM8/23/13
to mintamil
இந்த மௌனம் வாய்ப்பது அரிதினும் அரிது. ரிஷிகேஷத்து சிவானந்தர் மனதின் விருப்பாற்றலை (இச்சா சக்தி) பெருக்கினால் மனம் வலுவடைந்து மனமே சிந்திப்பதை நிறுத்து என்று கட்டளையிட்டால் நினைவுகளின் பதிவான சித்தின் தொடர்பு அறுந்து நிற்கும் என்கிறார்.

சிவானந்தரின்  கருத்து 100% உண்மை. நான் மௌனம் எய்துவதற்கு முன் என் விருப்பாற்றலை பெருகினேன். எப்படி என்றால். ஆறு மாதங்களுக்கு காலையிலும் மாலையிலும் வேகாத காய் கனிகளை மட்டும் புசிப்பது என்றும்  நண்பகல் மட்டும் மட்டான சோறு உண்பது என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்தினேன். அடுத்து மனம் கற்பனை செய்வதை நிறுத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டேன். அப்போது சிந்தித்ததில் அதிகம் பெண்ணைப் பற்றிய சிந்தனை கற்பனை தான் அதில் இடம்பெறுகிறது என்பதை உணர்ந்து. அடுத்து ஓராண்டிற்கு எந்தப் பெண்ணையும் சிந்திப்பதில்லை என்று உறுதி ஏற்றுக்கொண்டேன். இதனால் விந்துப் போக்கு கட்டுப்படும். இந்த இரு குறிக்கோளையும் அந்தந்த காலக் குறி வரை சிதறாமல் நிறைவேற்றினேன். 

ஒரு நாள் உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் அரவிந்தர் பற்றிய நூல் ஒன்றைக் கொடுத்தார் . அதில் அரவிந்தரது குரு அவர்க்கு மனதை நிறுத்தும் பயிற்சியை கற்றுக் கொடுத்ததாகவும் அதன்படி ஒழுக்கிய அவர் மூன்றே நாளில் மனதை நிறுத்தியதாகவும் இருந்தது. அதை படித்த நான் அதிக ஊக்கமுற்றவனாக இந்த அரவிந்தர் என்னைவிட சிறியவர் நான் அவரைவிட மிகப்பெரியவன் என்று எண்ணிக்கொண்டேன். அரவிந்தரால் மட்டும் தான் மனதை நிறுத்த முடியுமா என்ன! நான் நிறுத்துகிறேன் என்று உறுதி பூண்டு அன்று இரவு தூக்கும்போது மனமே நாளைக் காலை எழும்போது  நீ எந்த சிந்தனையும் செயக் கூடாது என்று கட்டளையிட்டு படுத்துவிட்டேன்.

என் கட்டளையை என் மனம் ஏற்று சிந்திப்பதை நிறுத்தியது. எனக்கும் நான் காணும் உலகிற்கும் ஒரு இடைவெளியே இருப்பது போல் உணர்ந்தேன். நடந்தால் எதோ தட்டுத்தடுமாறி நடப்பதாக இருந்தது. அன்ற்ஹா நிலையில் தியானம் செய்தேன். மனம் குளிர்ந்தது போல சமாதி நிலை கிட்டியது. என் மூச்சோட்டம் இயல்பாக இருப்பதை விட குறைந்து  போனது அதனால் ரத்தஓட்டம் குறைந்து போனது. காற்றும் ரத்த ஓட்டமும் குறைந்ததால் என் நரம்புகள் அடங்கிப்போயின. நினைவுபதிவில் இருந்து விலகியதால் என்னால் வழியில் இருந்த விளம்பரப் பலகைகளை படிக்க முடியவில்லை. நரம்பு அடங்கியதால் ஆண்மையும் அடங்கியது . நான்கு நாள்கள் சிந்தனையை நிறுத்தியது எனக்கு மாறுபட்ட உணர்வைத் தந்ததால்  அதில் இருந்து விலக நினைத்தேன் ஒரு செய்தி ஏட்டை பத்து நிமிடங்கள் படித்தேன் மனம் நினைவுப்பதிவோடு அதிக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் சிந்திப்பது மீண்டும் தொடங்கியது. மீண்டும் சில மாதங்கள் கழித்து கட்டளையிட்டு மனம் சிந்திப்பதை நிறுத்தினேன். மூச்சோட்டம் ரத்தஓட்டம் குறைந்ததால் மார்பின் இடப்பக்கம் விளா எலும்பு அருகே அவ்வப்போது வலி தெரிந்ததால் நெஞ்சழுத்த நோயை ஏற்படுத்துமோ என்று அஞ்சி 3 நாள்களில் அதை விட்டேன் எழுத்துக்களைப் படித்து.  அப்போது அணைக்கு 23 அகவை தான். பின்பு பிரபத் ரஞ்சன் சர்க்காருடைய நூலை படித்த போது இந்த சித்தம் பற்றி தெளிவாக கூறியிருந்தார். மீண்டும் ஊக்கம் பெற்றவனாக அன்று இரவில் மனதிற்கு சிந்திக்கக் கூடாது என்று கட்டையிட்டு படுத்து விட்டேன் ஆனாலும் சிந்தனை நிற்கவில்லை. எனினும் விடாமுற்சியோடு இருந்ததால் அன்று நண்பகலே என் மனம் சிந்திப்பதை நிறுத்தியது. சிந்தனை நின்ற நிலையில் சர்காருடைய செய்முறையை பின்பற்றி தியானம் செய்தேன். அதில் அகம் புறம் என்றும் ஆள், இடம், காலம் என்று பாகுபாடற்ற நிர்விகல்ப சமாதி கிட்டியது. இதை 10 நாள்கள் காலை மாலை என்று நிர்விகல்ப சமாதியை அனுபவித்தேன். ஆனால் எவரோ எதோ ஒன்றைச் சொல்ல நான் சினமுற்றதால் என் மூச்சோட்டம் மாறியதால் சிந்தனையற்ற நிலை என்னை விட்டு நீங்கியது. மீண்டும் 2000 ஆண்டில் பக்தி உணர்வோடு நீ சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்று மனதிற்கு கட்டளையிட்டேன். மனம் சிந்திப்பதை நிறுத்தியது. 10 நாள்கள் அதே நிலையை பேணி காலை மாலை இரு வேளைகளிலும் நிர்விகல்ப சமாதியை அனுபவித்தேன். இந்த நிர்விகல்ப சமாதி நிலையே கடவுளின் நிலை. இதை அனுபவித்தோர் கடவுளை உணர்ந்தோர், கண்டோர் ஆவர். ஆனால் மீண்டும் எதோ ஒன்றன் பொருட்டு கோவம் உற்றதால் மனம் சிந்தனையற்ற நிலையை இழந்தது. 

சிந்திப்பதை நிறுத்துவது ஒரு அறிய செயல் என்றால் அதை தக்கவைப்பது அதனினும் அறிய செயல். அதை தக்கவைக்க ஒருவர் கோவப்படக்கூடாது வெறுத்தாலும் கூடாது. 

அதன் பின் கடந்த இரு ஆண்டுகளாக சிந்திக்க கூடாது என்று என் மனதிற்கு கட்டளையிட்டாலும் என் மனம் அதை ஏற்கவில்லை. ஆதலால் இச்சா சக்தியை கூட்ட என்ன செயலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். வாய் பேசாது மௌனமாய் இருப்பதும் இச்சா சக்தியை வளர்க்கும் ஒரு வழிதான் என்று கருதுகிறேன். அது மௌனம் எய்த வழிகோளலாம். இச்ச சக்தி மன திடத்தால் கூடுகிறது. 


சேசாத்திரி                                                    


2013/8/24 Rishi Raveendran <rishira...@gmail.com>
மெளன விரதம் / மெளனம் என்பது பேசாதிருத்தல் அல்ல. 

எண்ணங்களற்ற நிலை.

இதற்காகவே யோகாவில் மெளனவிரதம் இருக்க பயிற்றுவிப்பர் நம் முன்னோர்கள் !


2013/8/23 seshadri sridharan <ssesh...@gmail.com>
மௌனம் என்றால் சிந்திக்காது இருத்தல் என்று கடைப்பை சச்சிதானந்த யோகீசுவரர் சொல்கிறார். மௌனமாய் இருப்பவர்க்கு நிர்விகல்ப சமாதி அதிகம் நேரும் வாய்ப்பு உள்ளது. 

இந்த வகை மௌனம் வாய்கப்பெற்றவன் என்ற முறையில் மேற்சொன்ன சச்சிதானந்தர் கருத்து 100% உண்மை என்பேன்.


சேசாத்திரி    



2013/8/23 Krishnan S <krishna...@gmail.com>
மெளனம் 
                 மெளனம் என்பதன் பொருள் என்ன?

 மெய்,வாய் இரண்டையும் சங்கற்பித்து கொண்டே இருக்கிறது. அதை அடக்கும் முறை யாது?


   மெளனத்திற்குப் பல படிதங்கள் உண்டு. ஓயாது மிகைபட பொருளற்ற பேச்சுகளைப் பேசி 
கொண்டிருப்பனுக்குப்  பொருள் உள்ள பேச்சுக்களை மட்டும் பேசுவது மெளனமாகும்.பொருள் உள்ள பேச்சுக்களை மிகைபடப் பேசுபவனுக்கு அவைகளை அளவுபடப் பேசுதல் மெளனமாகும்.பேச வேண்டிய நல்ல விழங்களை பிறர் கேட்டாலொழிய பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த மெளனமாம். தனக்கோ அதிகம் பயன்படாது என்று தெரிந்தால் பேசாது அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த மெளனமாம்.
  
  இப்படி மெளனத்திலேயே போகப் போக மனம் அடங்கியிருப்பது 
 அந்த மெளன நிலையே புறக்குறியது. 
   ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் மனதுக்குள்ளே வித விதமான எண்ணங்களை உதித்துக் 
கொண்டிருக்குமாம்.   அது கிட்டத்தட்ட பேசுவதற்கு சமம். அத்தகைய எண்ணங்கள் உதிக்கலாகாது. கடவுள் சிந்தனை வலுத்து வந்தால்
  வேறு எண்ணங்கள் அடிப்பட்டுப் போகும். கடவுளுடைய ஓரே ஓர் எண்ணம் நிலைத்துவிட்டால் அது பண்பட்ட நிலை.’ அந்த நிலையில் மனம் நசிந்து விட்டால் மெளனம் பூர்த்தியாகிறது. எஞ்சியிருப்பது பிரம்ம சொரூபம்

            மெளனம் என்பது பேசாதிருக்கும் நிலைமை
      மெளனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல.பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதான் மெளனம் என்று யோக நூல்களும், சித்ததை அடக்கி வாழும் சித்தர்களும் கூறுகிறார்கள். வாய் திறந்து பேசும் பேச்சுகளை  ‘’ஸ்தூல வைகரி வாக்’’எனப்படும்.
    
          வாயைத் திறக்காமலே மனதில் ஓடும் எண்ணங்களை ‘’சூக்கும் வைகரி வாக்’  என்பார்கள். ஓசை, பேச்சு, வார்த்தை என்ற உருவில் அல்லது அதன் கருப் பொருளாக விளங்கும் போது, அதனை ’மத்யமா வாக்’ என்பார்கள்.   அதிசூக்குமமான இரு நிலைகள் இருக்கின்றன.

    ’அபஸ்யந்தி பார’ என்று பெயர். ’அபரா வாக்’ என்பது எண்ணம் அல்லது பேச்சின் ஆரம்பநிலை.பேசுவதை குறைத்து அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டு அறிய ‘அனாநந்த கிரி’ சுவாமிகள் கூறியுள்ளார்.
 இதனை ‘மோன நிலை’ என்பார்கள். உண்மையான மெளனம்.  ‘’ மோனம் என்பது ஆனந்த வரம்பு’ என்பார் ஒளவையார்.

    
மெளன விரதம் என்றால் பேசாமை. இதில் சில படி நிலைகள் உளன.எழுதிக் காட்டுவது, சைகை காட்டுவது. இவைகள் உடலிம் மொழியாகும்.  ரமண மகரிஷியும் மெளனமாக நாள் முழுவதும் இருப்பதுண்டு.  பால் பிரண்ட்டன் ரமண ரிஷியை பேட்டி காண பல கேள்விகளை தயாரித்து வைத்திருந்தார்.  ஆனால், ரமண ரிஷிடம் ஒரு கேள்வியை கூட கேட்காமல்
  மெளனத்தில் இருவருமே அமர்ந்தினர். இறுதியில் 
பால் பிரண்ட்டன் தன் கேட்ட இருந்த அனைத்து கேள்விகளும்
   மெளத்தின் மூலம் அறிந்துக்கொண்டார். 
    திருவண்ணாமலையில் அவரை தரிசித்த 
பால் பிரண்ட்டன் தன்னுடைய தன்னுடைய  ''Search in Ancient India' என்னும் நூலில் எழுதியுள்ளார். யோகியர்கள், ஞானியர் தங்கள் மெளனத்தின் மூலம் அறிவர்.
  காஞ்சி பெரியாரும் மெளனத்தை கடைப்பிடித்து வந்துள்ளார். நம்மை நோக்கி பார்த்துக்கொண்டு இருப்பதாக நாம் நினைப்போம்.ஆனால் அவரின் இலக்கு வேறாக இருக்கும்.
இப்படி மெளனமாக இருப்பதிலும் ஓர் நன்மை உண்டு. நம்முடைய ஆற்றல்,  உயிர் சக்தி வீணாக்கப்படாது சேமிக்க வைப்படுகிறது.. அதுவே புறமாக 

Nagarajan Vadivel

unread,
Aug 23, 2013, 10:31:49 PM8/23/13
to மின்தமிழ்

2013/8/23 Krishnan S <krishna...@gmail.com>

மெளனம் என்பதன் பொருள் என்ன?

​​சும்மா இருப்பது

சும்மா இருப்பது என்றால் என்ன என்று சும்மா சும்மா கேட்கக் கூடாது

வவ

seshadri sridharan

unread,
Aug 24, 2013, 11:54:46 AM8/24/13
to mintamil
மௌனம் பெறாமலேயே நிர்விகல்ப சமாதியை பெற முடியும். அது இயல்பாக வரும் எதிர்பார்பிலாத் தொண்டின் மூலம் வாய்க்கும். கடந்த ஏப்ரல் மாதம் காலை 8 மணி அளவில் guindy, olympia கட்டடத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு scooty இல் ஒரு கணவர் தன் மனைவி மகனுடன் அமர்ந்து வண்டியை ஒட்டிக் வந்தார். அவருக்கு முன்னே வலப்புறம் ஒரு நாய் குறுக்கிடுவதை பார்த்து  விபத்து நேராமல் தடுக்க தன் வண்டியை சற்றே இடப்பக்கம் திருப்பினார். அந்த நேரம் வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு மகிழுந்து அவரது வண்டியை முட்டித் தள்ளி முன்னேறிச் சென்றது. இதனால் scooty சாய்ந்து கீழே விழுந்தது. மூவரும் தரையில் மோதி வலுத்த காயமுற்றனர். மனைவி மகனுக்கு தலையில் அடி இருவரும் வழியால் துடித்தனர். கணவருக்கு புருவத்திற்க்கு மேலே தோல் வெட்டுப்பட்டு குருதி வழிந்தது. இது  என் கண்முன்னே நடந்ததால் நான் ஓடிச்சென்று வம்ன்ட்டியைத் தூக்கினேன். காயமுற்றவர் மூவரையும் எதிரே இருந்த நடைபாதைக்கு அழைத்துச் உட்கார வைத்தேன். இன்னொருவர் அவருடைய வண்டியை சாலையின் மறு ஓரத்தில் கொண்டு வந்தது  நிறுத்தினார். இதை அறிந்த தொழிலக காவலர்கள் தம் தொழிலகத்தில் இருந்து திஞ்சர் கொண்டு வந்து கொடுத்து பஞ்சால் ஒத்தி ரத்தக் கசிவை நிறுத்தினர். நான் ரத்தக்கறை சட்டையில் ஒட்டுமோ என்று ஓரம் ஒதுங்கினேன். 


பின்னர் போக்குவரத்து காவல் துறையினர் அங்கவு வந்து அவசர நோயற் ஊர்தியை வரவழைத்து அவர்களை மருத்துவ நடவடிக்கைக்கு அனுபிவைத்தனர். இதன் பின்  நான் வீடு வந்து  சேர்ந்தேன். மாலை 5மணிக்கு ஊழ்கம் செய்தேன். அப்போது நான் எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவருடைய உயிர் காக ஓடியதால் அதன் பயனாக மௌனத்தோடு செய்யும் ஊழ்கச் செய்முறையில் எப்படி ஒருமுனைப்பட்ட ஒருமுகப்பாடு கிட்டுமோ அப்படி கிட்டியது.  ஆனால் அது மணிபூரச் சக்கரத்தோடு  நின்றது. இப்படி இடையிலேயே நிட்ரதர்க்கு காரணம் என்மேல் ரத்தக்கறை படியுமோ என்று அஞ்சி நான் ஒதுங்கியது தான்  என்று  எண்ணினேன். நாம எந்த அளவிற்கு தொண்டு செய்கிறோமோ அந்த அளவிற்கு ஆன்மீக முன்னேற்றம் கிட்டுகிறது. நாம் செய்யும் தொண்டில் மிச்சம் மீதி இருக்கக்கூடாது. நான் மட்டும் ரத்தக்கறை படிந்தாலும் முழுமையை தண்டு செய்திருந்தால் எனக்கு நான் எதிர்பார்த்த நிர்விகல்ப சமாதி மீண்டும் வாய்த்திருக்கும்.
எஎன்னை நானே நொந்து கொண்டேன்.   


சேசாத்திரி                           


2013/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 25, 2013, 3:14:30 AM8/25/13
to mintamil

On Sat, Aug 24, 2013 at 8:01 AM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:

சும்மா இருப்பது என்றால் என்ன என்று சும்மா சும்மா கேட்கக் கூடாது - வவ
 

சும்மா இருப்பதை சவிகல்ப சமாதி என்கின்றனர். அதனினும் மேம்பட்டதே நிர்விகல்ப சமாதி. இது நிர்குணத் பிரம்மத் தன்மையது.

The People's God
23 October 1978, Patna

Karmádhyakśa sarvabhútádhivásah sákśii cetá kevalo nirguńashca. -  Shvetáshvataropaniśad.

When the actional expressions take a definite form, a definite shape or a definite size, that shape is known as “kriyá”. And before that, when there are only actional expressions but no definite form, or shape, or size, it is called “karma”. Now, in this universe of ours there are both karma and kriyá. Without karma there cannot be any kriyá. So all the vibrational expression, all the actional expressions, actional manifestations, come from the Supreme Nucleus. Everything cometh from Him, remaineth in Him and goeth back to Him. But these actional expressions are made with the help of the Cosmic Operative Principle, and that Principle can function only within a short arena, the arena prescribed by the Cosmic Lord. The Operative Principle cannot function anywhere and everywhere: it functions in a limited sphere. That is why it is said that this universe is a very small finite island in an ocean of infinity. The actional expressions are made by the dexterous hands of the Operative Principle, but the prior sanction, the pre facto permission, of the Cosmic Entity, the Cosmic Puruśa, must be there.

And not only is He the approving authority, He is the supervisor also. He is the Supreme Supervisor. The actual action is not done by Him, however, but by the Operative Principle with His permission. So as Supervisor, He has to, or rather he should, keep a condor eye on each and every activity. Nothing should be done without His knowledge, nothing can be done without His knowledge, and nothing can be finished without His knowledge. So He is karmadhyaksa. Karma, I have already said, is actional manifestation. Action is constant change of place. All karmas are to be performed under His condor vision.

“Karmádhyakśa sarvabhútádhivásah.” Yesterday I explained properly the meaning of “sarva”. And the inner spirit of the term “bhúta” has already been explained – “bhúta” means all created beings. Now, “adhivása”. In Laokika Saḿskrta, “adhivása” means “proper habitation”. Here the word (root “adhi” + “vás” + “ghaiṋ”) means a place, or space, which is fit for living. In this world each and every animate, inanimate, or abstract entity must have its proper abode. Even abstract entities, that is, abstracts, should have a proper abode of their own. Without an abode even an abstract cannot stay.

Now, in the physical sphere, not on the psychic or suprapsychic level, but just in the physical sphere, what do we see? We see that this city of Patna has its adhivása in the district of Patna, and this district of Patna has its shelter in the division of Patna. Patna division has its shelter in the state of Bihar. Finally, we have our adhivasa on this earth, on this planet earth, and this earth has its shelter in the solar system, and the solar system has its shelter in Parama Puruśa. Parama Puruśa is the shelter of the solar system; in this respect He is the adhivása of sarvabhúta. He is the Supreme Shelter of each and every entity, whether physical, psychic, or supra-psychic - “sarvabhútádhivásah.”

On the psychic level, this adhivása, this shelter, this mental pabulum, is known as “ábhoga” in Saḿskrta. In the physical sphere, physical ábhoga is a necessity; and in the psychic sphere, psychic ábhoga is an even greater necessity. As soon as we fail to provide this psychic body of ours with psychic ábhoga, the psychic body stops functioning. This stoppage of functioning of our psychic body is known as “psychic suspension” or “cittavrttinirodhah”. It is a sort of samádhi, but this samádhi is an attributional samádhi. It gives much pleasure, but in this samádhi one does not become one with Parama Puruśa.

This stoppage of functioning of our psychic body is known as “psychic suspension” or “cittavrttinirodhah”. It is a sort of samádhi, but this samádhi is an attributional samádhi. It gives much pleasure, but in this samádhi one does not become one with Parama Puruśa. அன்று மாலை அதே நிலையில் தியானம் செய்தேன். மனம் குளிர்ந்தது போல சமாதி நிலை கிட்டியது.

“Sarvabhútádhivásah sákśiceta kevalo nirguńashca”. Here the word “sákśii” has been used. “Sákśii” means “witness”. But if you remember, He is not a mere witnessing Entity, He is also the Supervisory Entity and He is the first causal factor. Actually He is the causal matrix and not the Operative Principle, because without His permission, without His definite permission, that Operative Principle cannot function. So He is sákśii: He sees everything. And not only does He see everything, He also witnesses everything, because He is the Supreme reflecting plate – not only the seer, but the reflecting plate as well.

“Ceta”. In physical sphere there must be some physical reflecting plate for the recognition of a physical action. And for mental actions, there must be a cognitive reflecting plate. And that cognitive reflecting plate is the reflecting plate not only for psychic actions but also for physical actions. And in the actional field of unit consciousness, of reflected cognition, the supreme reflecting plate is Parama Puruśa. Without the presence of this supreme reflecting plate, nothing can function in this universe. And this supreme reflecting plate is called “citi shakti” or “ceta”.

“Kevalo nirguńashca”. An entity without any particular qualification, any particular attribution, can only be One; that is, there is only one such Singular Entity in the entire universe, and that Entity is called “Kevala”, or “Kevalam”. In this respect not only is He the Supreme Attributional Entity, but He is the only Entity. There is no second entity. That is why He is called Keva lam.

“Nirguńashca”. All the guńas are functioning within His periphery, within His arena, within His scope. When all these attributions, all these qualifications, are functioning within Him, how can we say that He is nirguńa? There are innumerable guńas within Him. But His guńas are beyond the capacity of measurement and that�s why He is Nirguńa. It does not mean the absence of guńas.

Prabhumiisham aniisham asheśaguńam
Guńahiinamaheshagańábharańaḿ.

“Prabhumiisham” – “Thou art the controller of everything.” “Aniisham” – “but there is no controller over you”. “Asheśaguńam” – “Your guńas are countless.” “Guńahiina” – an object is called “attributional” when it comes within the noose of the guńas. But “Since You are beyond the realm of the guńas, You are not within the serpentine noose the guńas.” But since You are beyond the realm of the guńas, You are not within their serpentine noose. So you are guńahiina. “Mahesha” means “Lord of all lords”. “Gańábharańaḿ” – many mythological gods and goddesses are laden with necklaces, rings, padma, gadá, cakra, etc. But the people�s god (He is the people�s god as no money is required to worship Him) has no ornaments, as ornaments are costly. His devotees, His followers, His disciples are His ornaments. He requires no other ornaments. He is nirguńa because He is beyond the bondage of the guńas.


23 October 1978, Patna, Published in: Ánanda Vacanámrtam Part 4, Chapter : The Peoples God

Seethaalakshmi Subramanian

unread,
Aug 25, 2013, 3:54:17 AM8/25/13
to மின்தமிழ்

ஐயா, வணக்கம்

இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுத வேண்டிக் கொள்கின்றேன்.எழுதுவதை நிறூத்திவிட்டேன். பேசுவது,படிப்பதையும் குறைத்துவிட்டேன். கவனச் சிதறல்கள் கூடாது என்பதில் முயல்கின்றேன். தங்கள் அனுபவங்களையும் அல்லது தாங்கள் அறிந்தவர்களீன் அனுபவங்க்களையோ எழுதினால் என் தவ வாழ்க்கை.பயன் பெறூம் என் முதுமை காலத்தில் அமைதி வேண்டி முயல்கின்றேன். தொடர்ந்து எழுதுங்கள். ஓர் மூதாட்டிக்கு வழிகாட்டுதல்களாக இருக்கும்

தாங்கள் இருப்பது சென்னையிலா?

சீதாம்மா



On Sun, Aug 25, 2013 at 3:14 AM, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ssesh...@gmail.com) Add cleanup rule | More info
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

seshadri sridharan

unread,
Aug 25, 2013, 5:24:02 AM8/25/13
to mintamil
On Sun, Aug 25, 2013 at 1:24 PM, Seethaalakshmi Subramanian <seethaa...@gmail.com> wrote:

இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுத வேண்டிக் கொள்கின்றேன்.எழுதுவதை நிறூத்திவிட்டேன். பேசுவது,படிப்பதையும் குறைத்துவிட்டேன். கவனச் சிதறல்கள் கூடாது என்பதில் முயல்கின்றேன். தங்கள் அனுபவங்களையும் அல்லது தாங்கள் அறிந்தவர்களீன் அனுபவங்க்களையோ எழுதினால் என் தவ வாழ்க்கை.பயன் பெறூம் என் முதுமை காலத்தில் அமைதி வேண்டி முயல்கின்றேன். தொடர்ந்து எழுதுங்கள். ஓர் மூதாட்டிக்கு வழிகாட்டுதல்களாக இருக்கும்

தாங்கள் இருப்பது சென்னையிலா? -சீதாம்மா


ஆம் அம்மணி நான் சென்னையில் தான் உள்ளேன். உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன். 

ஆன்மீகத்தில் முன்னேற்றம் வேண்டுமானால் மனதை பொருள்உலகியல் சிந்தனையில் இருந்து ஒறுக்க(withdraw) வேண்டும். இதாவது, ஐம்பெரும் பூதத் தொடர்பில் வரும் எதுவும் பொருள் தான். அப்போது தான் ஆன்மீக முன்னேற்றம் விரைந்து கிட்டும். சுரைக்காய் சித்தர் மன ஊசலாட்டம் இல்லாது இருக்கவேண்டும் என்கிறார்.    

மனம் சிந்திக்காமல் இருப்பதற்கு வயது, படிப்பு, சாதி, மதம் ஒரு தடை இல்லை. ஆனால் மனம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்பதை வெறித்தனமான கொள்கையாக கொள்ளவேண்டும். இயன்றபோது ரயில்,பேருந்து பயணங்களில் அடிகடி சென்றுவரும் இடமென்றால் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்காமல் கண்ணை பொத்திக்கொண்டு கவனத்தை இரு  புருவங்களின் நடுவே குவிக்க வேண்டும். அப்போது சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் 100 சிந்தனை கொள்கின்றீர்கள் என்றால் 10 -15 ஆக அதை குறைக்க இது உதவும். 100 சிந்தனைக்கு 10 சிந்தனை என்பது நல்ல முன்னேற்றம். நான் என் 1 1/2 மணி நேர பேருந்து பயணத்தில் இதைக் கடைபிடித்தேன். 

அதே போல் கடந்த கால நிகழ்சிகளை நினைவு படுத்திக்கொண்டே இருக்க கூடாது.  எதிர் காலம் பற்றி எந்த திட்டமும் கொள்ளக் கூடாது. ஒருவரது எண்ணம் ஒன்று கடந்த காலத்தைப் பற்றியதாகவோ அல்லது எதிர் காலம் பற்றியதாகவோ இருக்கும் என்பதை உணர்க. எப்போதும் நிகழ் காலத்திலேயே மனதை வைத்திருக்க வேண்டும். இதன் பொருள் உண்மையில் நிகழ் காலம் என்பது கிடையவே கிடையாது. அது இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறு இடைவெளி தான். ஒருவர் ஒரு சொல்லை பேசிய பின் தான் இன்னொருவர் அதை கேட்கின்றார். இங்கு பேசிமுடிப்பது இறந்த காலம். பேச்சு முடியாமல் அதை கேட்பவருக்கு கேட்க இருக்கும் சொல் எதிர் காலம். நிகழ் காலம் என்பது இங்கு fraction of micro seconds தான். 

ஆணோ பெண்ணோ 13 அகவையில் பருவம் எய்தியது முதல் தமக்கென எதிர்கால ஆசையை வளர்த்துக் கொண்டு கற்பனையில் ஈடுபடுகின்றனர்.  இந்த கற்பனையில் 1000 இல் ஒன்று நிறைவேறினால் கூட அது அரிதினும் அரிது. இப்படிப்பட்ட நிலையில் கற்பனை என்பது வீண் காலக் கழிவு. அதனால் கற்பனை செய்வோருக்கோ பிறருக்கோ எந்த நன்மையையும் இல்லை. இதை நன்றாக ஒவ்வொருவரும் உணர்ந்து தெளிய வேண்டும். கற்பனை கூடவே கூடாது அதை விட்டொழிக்கவேண்டும் என்று  மனதின் ஆழம் வரை வலுவாக எண்ண வேண்டும். வாழ்கையை எளிமையாக செலுத்தப் பழக வேண்டும். இரவில் தூங்கும்போது சிந்தனை இல்லாமல் தூங்க வேண்டும். இது கனவு ஏற்படுவதைத் தடுக்கும். இதற்கு ஓக நித்திரை பழக வேண்டும். அது ஒன்றும் காட்டினமானது அல்ல. உறங்கும்போது நெஞ்சத் துடிப்பை கவனித்தபடி தூங்க வேண்டும்.  இதை ஒரு பழக்கமாக செய்யவேண்டும்.  படிகின்ற நூல்களை யோகிகளின் வாழ்கை வரலாறாக படிக்கவேண்டும். அவர்களுக்கு ஒப்பாக அல்லது அவர்களையும்  விட உயர்வானவர் நாம் என்று கருதிக்கொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் நம்மைவிட பலமடங்கு பெரியவர்கள் என்றாலும் இந்த எண்ணம் நம்மனதை மிக உயரத்தில் வைக்க உதவும். பிற செய்திகளை படிப்பதை கூடிய மட்டில் தவிர்க்க வேண்டும். விவாதங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். 

மனம் எப்போதும் நாடும் ஒன்றை நாடவிடாமல் அதற்கு எதிராக செயல்பட வேண்டும். 48 நாள் விரதம் என்பதெல்லாம் இதை  நோக்கியது தான் என்பதை உணருங்கள். இது மனதின் will power ஐ, இச்சா சக்தியை அதிகரிக்க உதவும். மேற்சொன்ன படியெல்லாம் உங்கள் மனதை 6 மாதங்களுக்கு கடுமையாகப் பழக்கினால் உங்கள் மனம் உங்கள் சொல்படி நடக்கும். அப்போது ஒரு நாள் இரவில் மனதிற்கு சிந்திக்காதே! சிந்திப்பதை நிறுத்து! என்று கட்டளையிட்டால் உங்கள் சொற்படி நடந்து சிந்திப்பதை நிறுத்தும்.  அஞ்ச வேண்டாம் 85% நினைவுபடுத்தல் வழி சிந்தனையை தான் அது நிறுத்தும். சிந்தனை நின்றாலும் 155 நினைவுத் தொடர்பால் உங்களால் நடக்க முடியும், உண்ணமுடியும், குளிக்க முடியும், ஒன்றிரண்டு சொற்கள் பேசுவத்தில் தப்பு இல்லை. நீண்ட நேரம் பேசுவதை தவிர்த்தால் அந்த சிந்தனையற்ற நிலையை பலநாள்கள் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

சிந்தனை நிறுத்திய நிலையில் இரு புருவங்கள் நடுவே நினைவைக் குவித்து தியானம் செய்தால் சவிகல்ப சமாதியை கடந்த நிர்விகல்ப சமாதி கிட்டும். 

வேத மொழியில் brahman என்றால் இறைவன் என்று பொருள். இந்த இறைவனை நிர்விகல்ப சமாதியில் உணர்ந்தவர் braahman எனப்பட்டனர். ஆனால் இன்று உள்ள பிராமணர்கள் அவ்வாரனவர் அல்லர். வேதம் ஓதுவதால், வேள்வி இயற்றுவதால் பிரம்மத்தை உணரமுடியாது. சிந்தனையை நிறுத்தி தியானம் செய்வதால் மட்டுமே நிர்குண பிரமத்தை உணரமுடியும். அதிலேயே ஒன்று கலப்பது தான் வீடுபேறு என்னும் மோட்சம்.

Tthamizth Tthenee

unread,
Aug 25, 2013, 11:52:02 AM8/25/13
to mint...@googlegroups.com
திரு சேஷாத்திரி  அவர்களுக்கு  வணக்கம்

படித்தேன்    மிகவும்  விளக்கமாக இருக்கிறது

முதலில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தாலும்  பயிற்சியினால் கிட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ



2013/8/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

--

seshadri sridharan

unread,
Aug 25, 2013, 10:57:24 PM8/25/13
to mintamil

2013/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com
படித்தேன்    மிகவும்  விளக்கமாக இருக்கிறது. முதலில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தாலும்  பயிற்சியினால் கிட்டும் - தமிழ்த்தேனீ

ஐயா! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி.

ஒருக்க (withdraw) என்று பிழை திருத்துகிறேன்..

ஒருவர் சிந்திப்பதை நிறுத்தினால் அது சவிகல்ப சமாதி நிலை. இதுதான் இறுதியா என்றால் இல்லை இது தான் தொடக்கம் எனலாம். ஏனென்றால் சிந்தனை நின்றபின் கண்ணை மூடி புருவ நடுவில் கவனம் கொள்வதால் நிர்விகல்ப சமாதி கிட்டாது. அதற்கு ஒரு செய்முறை (technic) உண்டு. இங்கே அதை சொல்லிவிடுகிறேன். உங்களில் எவருக்கேனும் சிந்தனையை நிறுத்தும் பேறு கிட்டினால் இந்த செய்முறை தெரியாததாலேயே நீங்கள் நிர்விகல்ப சமாதியை அடைய முடியவில்லை என்ற குறை தோன்றக்கூடாது. வரலாற்றில் பலர் இவ்வாறுஒரு செய்முறை தெரியாததாலேயே நிர்விகல்ப சமாதி எய்தாமல் வாழ்வை முடித்துள்ளனர். நானும் இதைச் சொல்லாவிட்டால் அரைகுறையாய் சொன்னதாகிவிடும். இந்த செய்முறை எஞ்சிய 15% நினைவுப் பதிவில் இருந்து மனதை ஒருக்க உதவும். இந்த செய்முறை 2000 ஆண்டுகள் முன்பு மகரிஷி அஷ்டவக்கிரரால் தம் மாணவன் மன்னன் அலர்க்கனுக்கு சொல்லித் தரப்ப்பட்டதாக பிரபாத் ரஞ்சன் சர்க்கார் சொல்கிறார். இன்றும் சர்க்காருடைய ஆனந்த மார்க்க ஊழ்க(தியான)த்தில் இது எல்லாரும் பழகும் செய்முறை. யாரிடத்திலும் இதை வெளிப்படுத்தக் கூடாது என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு தான் இதை ஒவ்வொருவருக்கும் கற்றுத் தருகிறார்கள். நான் எல்லாரும் பயனடையட்டும் என்று நோக்கில் இங்கு எல்லாருக்கும் பொதுவாக அதை வெளிப்படுத்துகிறேன்.

இதை ஊழ்கம் செய்யும் முன் ஒவ்வொருவரும் 5 - 10 நிமிடங்கள் இந்த செய்முறையைச் செய்ய வேண்டும். இதுவும் கற்பனையானது தான் ஆனால் இது ஏற்படுத்தும் விளைவு விந்தையிலும் விந்தை. ஊழ்கம் செய்யும் ஒருவர் ஒரு தரை விரிப்பின் மேல் பத்மாசனத்தில் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கண்களை மூடிவிட வேண்டும். இப்போது உலகப் பந்தின் (globe) மேல் தான் மட்டுமே தன்னந்தனியாக உட்கார்ந்திருப்பது போல் எண்ணிக் கொள்ள வேண்டும். இது உலகியல் நடவடிக்கையின் ஈடுபாட்டில் இருந்து நம்மை விலக வைக்கிறது. அடுத்ததாக வெண்மையான ஒளிக் கீற்று காலின் இரு கட்டைவிரல்கள் வழியாக மெல்ல மேலே ஏறிச் செல்வதாக கற்பனை செய்ய வேண்டும். அப்படியே பாதம், முழங்கால், முட்டி, தொடையை கடந்து அந்த ஒளிக்கீற்று மெல்ல பயணிப்பது போல் கற்பனை செய்ய வேண்டும். இதைத் தவிர வேறு எதையும் நினைக்க்கூடாது. இரு கால்களின் உள்ளே ஊடுருவி வரும் அந்த ஒளிக் கீற்றுகள் முதுகந் தண்டின் கீழ் முனையில் சேருவதாக எண்ண வேண்டும். அந்த இடத்திற்கு பெயர் மூலாதாரம். அந்த ஒளிக்கற்றையை மெல்ல மேலே சுவாதிஷடான சக்கரத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும். அங்கிருந்து மெல்ல மணிபூரக சக்க்ரத்திற்கு மேலே நகர்த்த வேண்டும். இப்படியாக ஒவ்வொரு சக்கரமாக மேலே உயர்த்திக் கொண்டே போய் புருவ நடுவில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் நிறுத்த வேண்டும். ஆக்ஞா சக்கரம் தான் மனதின் இருப்பிடம் என்று சொல்லப்படுகின்றது. இந்த செய்முறையை அன்றாட ஊழ்கத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் பழக வேண்டும். இதைப் பழகிக் கொண்டால் சிந்தனையை நிறுத்தும் பேறு கிட்டிய போது இதைச் செய்ய எளிதாக இருக்கும் ஏனென்றால் சிந்தனை ஒழிந்த நிலையில் கற்பனை செய்வது என்பது இயலாதது. சிந்தனை ஒழிந்த பேது இதை 1 - 2 நிமிடங்களில் சுறுக்கமாக செய்து முடித்தால் போது. அந்த ஒளியை  புருவ நடுவில் நிறுத்தியதும் மனம் ஆன்மாவில் ஒடுங்கிவிடும். உடல், ஐம்பொறிகள்  இருப்பது மறந்துபோகும். மனமும் தன் இருப்பை இழந்து போகும். இதாவது, மனதின் நான் என்ற உணர்வு இறை நான் உணர்வோடு ஒன்றிப்போகும். இதுவே நிர்விகல்ப சமாதி என்னும் நிர்குண சேர்க்கையாகும். 

இதன் பின் ஒருவர் சிந்தனை அற்ற நிலையை இழந்தாலும் இந்த நிர்விகல்ப சமாதியை எய்தியதன் விளைவாக, அந்த தாக்குறுத்தத்தின் காரணமாக மனம் எப்போதும் சலசலப்பில்லாத நீர்நிலை போன்ற அமைதி நிலையிலேயே இருக்கும். காதில் விட்டில் பூச்சியின் ஓசை கேட்கும். 

இதன் பின் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர், பெருமூச்சு குறைபாடு உள்ளவர் அந்த நோயிலிருத்து விடுபடுவர். ஆனால் ரத்த அழுத்தம் 70 - 80 என்று குறைந்து போகும். அதிக புரதமுள்ள உணவை உட்கொண்டால் அடங்கிய நரம்பும் எழுச்சி பெறும். ரத்த அழுத்தகுறைவும் நீங்கி இயல்பு நிலைக்கு வரும். சிந்தனையை நிறுத்தியவர் சினம், வெறுப்பு ஆகியவற்றை தவிர்த்தால் அதை நீண்ட நாள்களூக்கு தக்க வைத்துக் கொள்ளலாம். 

seshadri sridharan

unread,
Aug 26, 2013, 1:51:25 AM8/26/13
to mintamil
ஒளிக் கற்றையை புருவ நடுவில் கொண்டு குவித்ததும் அந்த ஒளியைப் பார்க்காமல் அந்த ஒளியைச் சுற்றிய பகுதியை பார்க்க வேண்டும்.  இப்படி தியானம் செய்யும் போது தூக்கம் வருவது கூடாது. தூக்கம் வந்தால் தமோ பண்பின் தாக்கம் இருக்கின்றது என்று பொருள். இரவில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருந்தால் கூட தியானத்தின் போது தூக்கம் வரும். அதை விட்டு விடுங்கள்.

தமோ பண்பின் தாக்கம் தமோ பண்பு உள்ள உண்வுகளான மீன், முட்டை, புலால், வெங்காயம், பூண்டு, வெள்ளைக் கத்தரிக்காய், காளான், கன்று போட்ட மாட்டின் மூதல்15 நாள் பால் ஆகியவற்றால் ஏற்படும்.. இவற்றை உண்ணாது தவிர்க்க வேண்டும். காபி, தேநீர், கோலா கடுகு போன்ற ரஜோ குண உணவைத் தவிர்க்க வேண்டும்.

சரி ஏதோ கலியாணம் போன்ற நிகழ்ச்சிகளில் இந்த உணவுகளை தவிர்க்க முடியாமல் உண்டாகிவிட்டது. அப்போது தமோ குண தாக்கத்தை தவிர்ப்பது எப்படி. ஒரு நாள் முழுவதும் தண்ணீர் பவருகாமலும் எந்த உணவும் கொள்ளாமலும் இருந்தால் ஏற்கெனவே செல்களில் உள்ள தமோ பண்பு கரைக்கப்பட்டு உடலுக்கு புது ரத்த ஓட்டம் கிடைக்கும்.  அப்படி வயதானவர்களால் இருக்க முடியாது என்றால் ஒரு நாள் முழுவதும் வேக வைத்த அல்லது வேக வைக்காத காய் அல்லது பழத்தை மட்டும் உண்டால் அது ரத்த்த்தில் காரத்தன்மையை (அல்கலினை) அதிகரிக்கும். இதனால் தமோ குணத்தின் தாக்கம் குறையும் தூக்கமற்ற தியானம் வாய்க்கும்.

seshadri sridharan

unread,
Aug 31, 2013, 12:51:19 PM8/31/13
to mintamil
நாள்தோறும் நடைபயிலும் போதும் சிந்திப்பதை நிறுத்திப் பழகலாம்.  இதாவது, அக்கம்பக்கத்து காட்சிகளைப் பார்க்காமல் தரையை மட்டுமே பார்த்து நடப்பது ஒரு உத்தி. இதன் போது குறிப்பிட்ட தொலைவு வரை நான் சிந்திக்காமல் நடப்பேன் என்று உறுதி பூண்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் நடக்கவேண்டும். நான் இரவு நேரங்களில் நடந்து பழகுபவன். இருட்டில் பொருள்கள் சரியாகத் தெரியாது. ஆதலால் தெளிவற்ற காட்சிப்பொருள் பற்றிய சிந்தனை எழாது. என் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விநாயகர் கோவில் வரை சிந்திக்காமல் நடப்பேன் என்று மனதிற்கு சொல்லிவிட்டு நடப்பேன். அதிகம் 1 அல்லது 2 சிந்தனைக்கு மேல் வராது 8 நிமிட நடைக்கு. இது ஒரு நல்ல முன்னேற்றம். இது  விளையாட்டு போல் இருந்தாலும் ஒரு நல்ல மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சி. 

சிந்தினை எப்போது கிளைபோல் கிளைக்கிறது?  நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அப்பொருளைப் பார்த்தவுடன் நாம் முதலில் அப்பொருளின் பெயர் என்ன என்பதைத்தான் எண்ணுகிறோம் என்பதை உணரவேண்டும். இது எப்படி நிகழ்கிறது என்றால் ஏற்கெனவே நாம் அப்பொருளை அறிந்திருப்பதால் நம் மனம் நினைப்பதிவோடு தொடர்புகொண்டு அப்பொருளின் பெயரைத்தான் முதலில் எண்ணுகிறது. பின்பு அதன் வடிவு , வண்ணம், பண்பு  என யாவற்றையும் நினைவு கொள்கிறது. வேறு எப்போதேனும் அதன் தொடர்பு  முன்னமேயே நமக்கு ஏற்பட்டிருந்தால் அந்த நினைவும் நமக்கு ஏற்படுகின்றது. இப்படித் தான் எண்ணங்கள் கிளைத்து வளர்கின்றன. பல பொருளைப் பற்றி ஒரே நேரத்தில் எண்ணும் போது மனம் குதிரைப் பாய்ச்சலில் எண்ணமிடுகிறது. இப்போது நாம் ஒரு பொருளைப் பார்கின்றோம். நம் பார்வை காட்சி என்ற அளவிலேயே  நின்றுவிட்டால் இதாவது, காணும் பொருளின் பெயரை நினைவுகூறாவிட்டால் அப்போது எண்ணம் கிளைப்பதில்லை. அப்போது வெறுமை தான் நிலவுகிறது. நடந்து போகும்போது மூக்கால் மணத்தை முகர்கிறோம் அது அவித்த உருளை அல்லது மல்லிகையாக இருக்கலாம். இது உருளை, மல்லிகை என்று நாம் நினைவோடு தொடர்புபடும் போது எண்ணம் கிளைத்து வளர்கிறது.  மணக்கும் பொருளின் பெயரை நினைவு கொள்ளாது விட்டால் அங்கே எண்ணம் வளர்வதில்லை. ஆக எண்ண வளர்ச்சிக்கு ஒரு பொருளின் பெயர் இன்றியமையாததாகிறது.  நீங்கள் பார்கின்ற,  கேட்கின்ற, முகர்கின்ற, சுவைக்கின்ற, தொடுகின்றவற்றின் பெயரை மட்டும்  சிந்திக்காமல், நினைவுபடுத்தாமல் இருங்கள். அப்போது சிந்தனையை நிறுத்தும் உங்கள் முயற்சி வெற்றிபெறும். எல்லோரும் இதை 5 நிமிடம் ஆய்வு செய்து பார்த்து உங்கள் கருத்தை, அனுபவத்தை பதிவு செய்யுங்கள். 


சேசாத்திரி                    

On Sun, Aug 25, 2013 at 1:24 PM, Seethaalakshmi Subramanian <seethaa...@gmail.com> wrote: 

இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுத வேண்டிக் கொள்கின்றேன்.எழுதுவதை நிறூத்திவிட்டேன். பேசுவது,படிப்பதையும் குறைத்துவிட்டேன். கவனச் சிதறல்கள் கூடாது என்பதில் முயல்கின்றேன். தங்கள் அனுபவங்களையும் அல்லது தாங்கள் அறிந்தவர்களீன் அனுபவங்க்களையோ எழுதினால் என் தவ வாழ்க்கை.பயன் பெறூம் என் முதுமை காலத்தில் அமைதி வேண்டி முயல்கின்றேன். தொடர்ந்து எழுதுங்கள். ஓர் மூதாட்டிக்கு வழிகாட்டுதல்களாக இருக்கும் - சீதாம்மா

N. Kannan

unread,
Aug 31, 2013, 11:43:01 PM8/31/13
to மின்தமிழ்
அருமையான பதிவு சேசாத்திரி.

சிந்தனையை, அதன் இயக்கத்தைப் புரிந்து கொள்ளலே அறிவின் விழிப்பிற்கு முதல் படி.
சபாஷ்! பாண்டியா!

நா.கண்ணன்


2013/9/1 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

seshadri sridharan

unread,
Sep 1, 2013, 3:11:21 AM9/1/13
to mintamil
நம் எண்ணங்கள் நம் நினைவுப் பதிவுகளால் எப்போதும் தாக்கம் பெறுபவை. நினைவுப் பதிவு மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடையது. அதிலும் ஒரு மொழியில் வழங்கும் பெயர் சொற்கள் நம் சிந்தனையை ஊற்றெடுக்கச் செய்பவை. நாம் எதிர்கொள்ளும் பொருள்களின் பெயர் சொற்களை நினைவுபடுத்தாமல் அடைத்துவிட்டால். அங்கே எண்ணங்கள் ஊற்றோட்டம் இல்லாமல் வற்றிப்போகின்றன.

ஆக எண்ணத்திற்கும் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை மனதை அடக்க முயலுவோர் உணர வேண்டும். மனதிற்கு கட்டளையிட்டு அதை நிறுத்துவது முதன்மையான (primary) நிலை. மனதில் எண்ணம் எவ்வாறு தோன்றுகிறது என்பதை உணர்ந்து அதன் வழிகளை அடைக்கும் மேற்சொன்ன உத்திகள் இரண்டாம் (secondary) நிலையன ஆகும். ஆனால் இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெறாமல் முதன்மை நிலையை எய்த முடியாது. அது மிகவும் கடினம். பல நூறு போர்களை வென்றவனை விட மன அடக்கத்தில் முதன்மை நிலையை எய்தியவனே சிறந்தவன் என்கிறார்கள் சிவானந்தா, கடப்பை சச்சிதானந்த யோகிசுவரர் போன்றோர்.               

மனம் காமமய கோசம், மனோமய கோசம், அதிமன கோசம், விஞ்ஞானமய கோசம், ஹிரண்மய கோசம் என கீழ்  மேல் அடுக்குகளால் ஆனது. மதங்களைப் பின்பற்றுவோர் அதிமன கோசத்திற்கு மேல் செல்ல முடியாது என்பார் பிரபாத் ரஞ்சன் சர்க்கார். ஆனால் பௌத்தம் விஞ்ஞானமன கோசத்திற்கு ஒருவரை கொண்டு செல்லவல்லதாய் இருந்தது என்கிறார் அவர். மன அடக்கத்தின் முதன்மை நிலை ஒருவர் ஹிரண்மய கோசத்திற்கு செல்ல வழி செய்கிறது. முதன்மை நிலை கிட்டாவிட்டாலும் இரண்டாம் நிலை மன அடக்க உத்தி விஞ்ஞான மன கோசம் வரை செல்ல உதவுகிறது.   



சேசாத்திரி         


2013/9/1 N. Kannan <navan...@gmail.com>


சிந்தனையை, அதன் இயக்கத்தைப் புரிந்து கொள்ளலே அறிவின் விழிப்பிற்கு முதல் படி. சபாஷ்! பாண்டியா! - நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Sep 4, 2013, 10:19:14 PM9/4/13
to mintamil
தனிஒரு வீரன் யானை, குதிரை, காலாள் படைகளால் சூழ்ந்து தாக்கப்படுவது போல கற்பனை, பகற்கனவு, மனஉரையாடல், புலன் வழிப் பொருள் நினைவூட்டல் என பல எண்ணங்களால் தாக்கப்படுகிறான் மனிதன்.      

எண்ணங்கள் பிள்ளைப் பருவத்தைவிட வளரிளமைப் (adolescence) பருவத்தில்தான் பெருகிப் பொங்கியெழுந்து இளமை உள்ள காலம்வரை வலுவோடு நடையிடுகின்றது. தன்னை நடுப்படுத்திய (self-centered) கற்பனை, தன்னை நடுப்படுத்திய பகற்கனவு, தன்னை நடுப்படுத்திய மனஉரையாடல் ஆகியன எண்ண வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றுகின்றன. இதுவே (self centered 'I') யான்மை, அகந்தை, ஆணவம் , ego  எனப்படுகிறது   

சிந்தனையற எண்ணங்கள் அடங்க வேண்டும். நாம் நம்மை நடுப்படுத்தி பல கற்பனைகள் செய்கிறோம்,  பகற்கனவு காணுகிறோம். இவ்வற்றில் ஒன்று கூட மெய்ப்படுவதில்லை. எல்லாம் வீண் நேரக் கழிவு என்று அறிவால் உணர்ந்து அவற்றை விட்டுவிட வேண்டும்.  இதற்கு நெஞ்சுறுதி மட்டுமே போதும். ஆக இதனால் கற்பனை, பகற்கனவு ஆகியவற்றால் எழும் எண்ணங்களை அடக்கியாகிவிட்டது. ஆனால் இதனால் மட்டும் சிந்தனையறாது. கற்ற மக்களிடையே மிக அதிகமாக மனஉரையாடல் ஊடாக பல எண்ணங்கள் எழுகின்றன. ''அந்த ஆள் அப்படி ஒரு கருத்தை சொல்லிவிட்டார், தப்பு அது மிகவும் தப்பு நான் சொல்லுவது தான் சரி'' என்று யான்மையின் (ego) ஆட்சியினால், இதாவது, ஆணவத்தால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் தனக்குத் தானேயே மனதுள்ளே ஒரு நிழலுருவோடு உரையாடிக் கொண்டிருப்பர் கற்றோர். இந்த வகையான மன உரையாடலும் சிந்தனையின் பாற்படுவதே. இந்த மன உரையாடலை வெளியே யாரும் கேட்கப்போவதில்லை. ஆதலால் யாருக்கும் இதனால் பயன் கிடையாது. மன உரையாடலில் ஈடுபட்டுள்ளவருக்கு அது ஒரு நேரக் கழிவு தான். கற்பனையை பகற்கனவை அறிவால் வீண் என்று உணர்ந்து அவற்றை விலக்கியது போல மன உரையாடலை அவ்வளவு எளிதாக அறிவால்  உணர்ந்து விலக்கமுடியாது அல்லது அதன் பிடியில் இருந்து விடுபட முடியாது எனலாம். ஏனென்றால், இது ஒருவர் 'நான்' உணர்வின் ('I' feeling) ஓங்கிய பிடிக்கு ஆட்படிருப்பதால் அவ்வாறு செய்ய இயலாது. நானும் இந்த மனஉரையாடலால் அதிகம் பாதிக்கப்பட்டவன் தான். 

புலன்களின் தொடர்பில் வரும் எந்த ஒரு பொருளின் பெயரையும் நினையாமல் இருப்பதால் அதன் பழைய நினைவுகளின் தொடர்பால் புதிய எண்ணங்கள் தோன்றாமல் கட்டுப்படுத்த முடிந்தது என்னால். கற்பனை, பகற்கனவுகளை அறிவால் உணர்ந்து விட முடிந்தது என்னால். இதனால் எண்ணங்களை குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இந்த மன உரையாடல் மட்டும் பால்போல் பொங்கி எண்ணங்களால் என்னை மூழ்கடித்தது. திணறிக் கொண்டிருந்த எனக்கு ஒரு அருமையான உத்தி மனதில்  தோன்றியது. மன உரையாடல் யான்மையால் வளர்ந்து பெருகுகிறது ஆதலால் யான்மையை அடக்கினால் எண்ணம் அடங்கும் என்று தோன்றியது. அதனால் யான்மையை அடங்க ''எனக்கு எதுவும் தெரியாது, ஏதும் தெரியாது'' (I don't know anything, I know nothing) என்று இருமுறை மனதிற்குள்ளே சொல்லிப் பார்த்தேன். அவ்வளவுதான் பொங்குகிற பாலில் சிறிது நீர் தெளிக்க அது எவ்வாறு சட்டென்று அடங்குகிறதோ அதே போல்  மன உரையாடலும் அடங்கி நிற்கிறது. எண்ணங்களும் சிந்தனையும் அற்று மனம் வற்றிப்போய் அமைதியாகிறது. இது விந்தையிலும் விந்தை நீங்களும் முயன்று அமைதி காணுங்கள். மனதை நிறுத்தும் உங்கள் முயற்சியில் இன்னொரு படியைக் கடந்திடுங்கள். இது யான்மையை அடங்குவதாலேயே நிகழ்கிறது.  இந்த முறையால் ஊழ்கம் மிகுந்த ஒருமுகப்பாடு பெறுகிறது. யான்மையின் ஆட்சியால் மனஉரையாடல் ஏற்படும்போதெல்லாம் இதை கடைபிடிக்கலாம்.   


சேசாத்திரி              .                                  .   

Gowri Vimalendran

unread,
Sep 5, 2013, 7:13:44 AM9/5/13
to mint...@googlegroups.com
மெளனம் பற்றிய உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை. சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள்.தெரியாத பல விடயங்களை அறிந்துகொண்டேன்
 மிக்க நன்றி.
 .  சரியோ தப்போ நானும் படித்து அறிந்த சில தகவல்களை பகிர விரும்புகிறேன். நுனிப்புல்லாக மேய்ந்து அறிந்து கொண்டவைதான்.

 மெளனத்தைக் கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.  மெள்னமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்று சொல்வார்கள். 
"மோனம் (மெளனம்) என்பது ஞான வரம்பு" என்று ஒளவையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால் மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா.... மெளனமொழி. ஆம். இவர் பேசுவதில்லை. சைகைமூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். மெளனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மெளனவிரதம் மேற்கொள்வது இதனால்தான். 
பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமிகளில் பேசுவதில்லை.
மெளனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மெள்னம். வாக்கு மெளனம், மன மெளனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மெளனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். 
வாக்கு மெளனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மெளனமாக இருப்பதே மன மெளனம். இந்த மெளனத்தைக் கடைப்பிடிப்பவர்கள்  ஞான நிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள். 

-
கெளரி விமலேந்திரன்

ஜீவ்ஸ்

unread,
Sep 5, 2013, 10:03:40 AM9/5/13
to mint...@googlegroups.com
தொடர்புடையது என்பதால் அடியேன் ஏற்கனவே எழுதிய கட்டுரை ஒன்றின் மீள்பதிவு இங்கே.

சும்மா இரு.. சொல்லற
____

"மனம் ஒரு குரங்கு.. மனித மனம் ஒரு குரங்கு "

கண்ணதாசனின் வரிகள் பாடலாக டி.எம்.எஸ்ஸின் குரலில்  என் கணினியில் ஒலித்துக் கொண்டிருந்தது.  உண்மை தான். மனித மனம் என்றும் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. எதையும் வெகு இலகுவில் நம்பிவிடுவதில்லை.  எத்தனை முயற்சித்தாலும் அது தன்னிலையில் ஒருமித்து இருப்பதில்லை. அப்படி ஒருமித்திருப்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கு மட்டுமே  வாய்க்கும் போலிருக்கிறது.  இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட  பல நினைவுகள் இங்கும் அங்குமாய் அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது.  

அருணகிரி நாதர், சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தமக்கையின் வளர்ப்பில் வளர்ந்தவர்.  போகங்களில் நாட்டம் கொண்டு தீ வழியில் சென்று தொழுநோயால் இடர்பட்டுக் கிடந்த போதும் அவரின் காமம் தணியவில்லை. ஆனால் தொழுநோய்க்காட்பவரை  எத்தனைப் பணம் கொடுத்தாலும் பரத்தையர் ஏற்கமாட்டார். இவரிடம் பணம் வேறு இல்லை. அவரின்  தமக்கையார் இவரை திருத்த  எடுத்த செயல்கள் யாவும் தோல்வியிலே முடிந்தது.  கடைசியாக  உனக்குத் தேவை பெண் தானே. நானும் பெண்தான் என்னை எடுத்துக் கொள் என்று தமக்கை அரற்றிய போது புத்தியில் தெளிவேற்பட்டது. கண்கெட்ட பின் செய்யும் சூரிய வணக்கம் போல உடல் தொழுநோயால் சிதைந்த பின் திருவண்ணாமலை மூன்றாம்  கோபுரத்தின் மேலேறி குதிக்கிறார்.

ஆனால் அவனன்றி  அணுவும் அசையாது எனும் போது இவரின் முயற்சி முருகப்  பெருமானின்  சித்தமின்றி நடைபெருமா என்ன ?  முருகா என்று கதறிக் கொண்டே விழும்  அருணகிரி நாதரை கந்தன் ஏந்தி நிற்கிறான்.  அப்போது அருணகிரியாருக்கு முருகன்  உபதேசிக்கிறான். அது என்ன என்பதை அருணைகிரியாரின் பாடல் மூலமே பார்ப்போமா ?

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.

புள்ளைங்க அப்பா இல்லாட்டி அம்மாவை உரிச்சுட்டு வந்திருக்கும். இந்த முருகன் இருக்கானில்ல அப்படியே அவங்க மாமன் கிருஷ்ணனை மாதிரி. என்ன பண்ணாங்கறீங்க ? மான் வயிற்றில் பிறந்தவளான வள்ளிய களவாடிட்டான்.  அப்படி திருடும் திருடனான பெருமான் முருகனுக்கு பிறப்பு இறப்பு எதுவுமே இல்லைங்க.  அந்த  முருகன் எமக்கு  சொன்ன உபதேசம் என்ன தெரியுமா ? சும்மா இரு.. பேச்சற்றிரு. ஆனா அதற்கு பொருள்  அடியேன் அறியலையே .. என்று அருணகிரி நாதர் பாடி இருக்கிறார்.

சும்மா இருத்தல் என்றால் என்ன? செயலெதுவும் செய்யாமல் இருப்பதா ?   சும்மா இருத்தலும் சொல்லற்றிருத்தலும் நம்மில் இன்று எத்தனை சாத்தியம் ?  ஆனால் அருணகிரி நாதர் அதை சாதித்திருக்கிறார். அந்தச் சாதனைக்குப் பின் தெளிந்தவர். முழு ஞானம் அடைந்தவர். அவர் அளித்த திருப்புகழ் அத்தனைக்கும்  சாட்சியாய் நம்மிடை இருக்கிறது.

பட்டினத்தாரும் இப்படித்தான் புலம்பி இருக்கிறார்

"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"

தாயுமானவரும் விட்டாரா ? அவரும் "சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே" என்று புலம்பி விட்டு  பின், சும்மா இருக்க அறிந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்கிறார் கேளுங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
விண்ணவரை  யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி மும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.

– தாயுமானவர்.


யானையை அடக்கலாம், குதிரையை அடக்கலாம், சிங்கத்தின் முதுகில் ஏறி செல்லலாம். இரசவாதம் செய்யலாம். எப்பவும் இளமையோட இருக்கலாம். தண்ணீர் மேல் நடக்கலாம்.  தீயில் நிற்கலாம்.. தன்னிகர் இல்லாத சித்தி பெறலாம். இதெல்லாம் எப்ப நடக்கும் ? சும்மா இருக்கும் திறம் அறிஞ்சா நடக்குமாம்.


உண்மையில் அலைபாயும் மனதால் எதையும் முழுமையாக சாதிக்க முடியாது.  ஒரு ஜென் கதை உண்டு.  ஜென் துறவி ஒருத்தரிடம்  சீடனாக ஒருவன் சேர விரும்பினான். ஆனால் குரு  ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது அங்கே இருக்கும் காலத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இரண்டு வார்த்தைகள் பேச அனுமதி உண்டு.   மற்ற நேரத்தில் மௌனம் மட்டுமே பயில வேண்டும் என்பதாய் அந்த நிபந்தனை இருந்தது.  சேரும் ஆர்வத்தில் அவனும் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு சேர்ந்து ஆறு மாதம் கழித்து அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை குருவிடம் சென்று சொன்னான்.

" படுக்கை கரடுமுரடு " அவ்வளவு தான். மீண்டும் பாடசாலைக்கு திரும்ப அனுப்பப் பட்டான். அடுத்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பேச வாய்ப்பு கொடுக்கப் பட்டது. 

சீடன் சொன்னான்

" சாப்பாடு பிடிக்கல" சொல்லி  முடிந்ததும் மீண்டும் பாடசாலைக்கு திரும்பச் சென்றான். அடுத்த ஆறு மாதம் முடிந்தது குருவிடம் வேக வேகமாகச் சென்றான். இந்த தடவை அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை வேகமாக உதிர்த்தான்

" நான் போகிறேன் "

இப்படியாக கற்கவேண்டியதை விடுத்து மாதம் முழுதும் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவன் என்ன கற்க முடியும் சொல்லுங்க. குரு  " போய்வா தம்பி.  நீ இங்கிருந்த காலம் முழுதும் குறை சொல்வதை மட்டுமே உன் குறிக்கோளாய் கொண்டிருந்தாய். உன்னால் இங்கே மேலும்  பயில்வது என்பது இயலாது " என்றார். 


இதைத்தான் பகவத் கீதையில் கண்ணன் அர்ஜ்ஜுனனுக்கு சொல்கிறான் யோகநிலையில் நில். யோகம் செயல்களிலே  திறமையானது என்று.  குழந்தையின் மனது நிஷ்கலங்கமற்றது.   உணவின் போது உணவு மட்டுமே அதற்கு நினைவில் இருக்கும். தூக்கத்தின் போது அலைபாயா மனமும் கொள்கிறது. அதனால் தான் குழந்தைகள்  நித்திரை என்று வரும் போது  படுத்த உடன் சட்டென்று தூங்க முடிகிறது.   பைபிளில் " நீங்கள் குழந்தைகள் போலானாலன்றி மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியாது" என்று சொல்வதும் இதைத் தான். இதயச் சுத்தி வேண்டும்.  தூய்மை இல்லா இதயத்தில் தெளிவேற்பட்டாற்போல் தெரிந்தாலும் மீண்டும்  குழம்பி விடும்.

யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥

என்கிறான் கண்ணன். அதாவது , அர்ச்சுனா, யோகத்தில் நின்று  உன் கடமையை செய்.  வெற்றியோ தோல்வியோ அதை உன் கவனத்தில் கொள்வது வேண்டாம். மன ஒருமித்தலோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் என்று அறிவுறுத்துகிறான்.

எளிய உதாரணத்தோடு  சொல்வதென்றால்  ஜென் குருவிடம் ஒருத்தர் கேட்டாராம். ஜென் என்றால் என்ன என்று. அதற்கு அவர் சொன்னார் " உண்ணும் போது உண்ணுவது, உறங்கும் போது உறங்குவது. இது தான் ஜென்" என்றார்.  யோசித்து பாருங்கள். நம்மில் எத்தனை பேர் நாம் உண்ணும் போது உணவில்  கவனமும், உறங்கும் போது வேறெதுவும் நினைவுகளின்றி உறங்கவும் செய்கிறோம்.

ஆனால் பாருங்க இந்த அடங்கா மனசு எல்லாவற்றிற்கும் ஆசைப்படும். எதிலும் திருப்தி அடையாது.   ஒருவனுக்கு அவன் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். ஊர் ஊராக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்லி தவிர்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் எல்லோரும் நம்பிக்கை இழந்து இருந்த நிலையில் இவனே தேடி கண்டுபிடித்து இவன் நினைத்தபடியான அழகு, உயரம், கருங்கூந்தல் என எல்லா வகையிலும் தான் நினைத்தவகையில் இருந்த பெண்ணை தேர்ந்தெடுத்தான்.   திருமணமும் நடந்து முடிந்தது.

அந்த காலத்தில் வருசத்துக்கு ஒரு முறை பாரதப் பிரசங்கம் செய்யும் வழக்கம் உண்டு என்பார்கள். அப்படியாவது மக்கள் ஏதேனும் காதில் போடுவார்கள் என்று நம்பிக்கை போல.  பிரசங்கம் ஆரம்பிப்பதை ஊருக்கே அறிவிக்கும் வரையில் மூன்று முறை வெடி வைத்து அறிவிப்பார்கள்.  இந்தப் பிள்ளையாண்டான் அந்தப் பெண்ணை மணம் முடித்து ஊருக்கு திரும்பும் போது தெரியாமல் அந்த வெடி வைக்கும் பக்கத்தில் வந்துவிட்டான். வெடி படார் படார் என்று வெடித்தது. இவன் காதைப் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.  கொஞ்ச தூரம் போனதும்  மணப் பெண் இவனிடம் கேட்டாள்.

" ஏங்க அங்க பொகை வரும் போது நீங்க ஏன் காதைப் பொத்துனீங்க ? பொகை வந்தா மூக்கைத்தானே பொத்தனும் "

seshadri sridharan

unread,
Sep 7, 2013, 4:50:15 AM9/7/13
to mintamil
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல 
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து 
சும்மா இருக்கும்  சுகம்                                 >             திருவருட்பா 1959    



conquest of mind என்ற தலைப்பில் வெளியான சிவானந்தரின் (இவர் பிறப்பால் தமிழர்) ஆங்கில நூல் ''மனத்தை வெல்வது எப்படி?'' என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு அதன் இரண்டாம் பதிப்பு  2010 இல் வெளியானது. தமிழாக்கியவர் சுவாமி சுவருபானந்தா.  அதில் முதல் 50 பக்கங்கள் வரை சிதானந்தாவின் அறிமுகவுரை. அதில் இருந்து சில துணுக்குகள் கீழே.  பக்கம் - 25 > மனஅடக்கம் மிகவும் முக்கியமானது, மிகவும் கடினமானது. ஆனால் அதைச் செய்தே ஆகவேண்டும். எனவே தான், பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நீங்கள் நீண்ட காலம் முயற்சி செய்ய வேண்டும். எஃகனைய உறுதியும் தீவிரமான இச்சா சக்தியும் (will power) கொண்ட ஒரு சாதகனுக்கு முடியாதது என்று எதுவும் கிடையாது.       

மனம் எதைச் செய்ய விரும்புவதில்லையோ அதைச் செய்யுங்கள். மனம் செய்ய விரும்புவதைச் செய்யாதீர்கள். இது இச்சா சக்தியை (விருப்பாற்றலை) வளர்க்கவும் மனதை அடக்கவும் உள்ள பல வழிகளில் ஒன்றாகும்.

மனம் அதிகமாக விரும்பும் பொருள்களை விட்டுவிட வேண்டும். மனம் எந்தப் பொருளைப் பற்றி இடைவிடாது எண்ணி நிற்கிறதோ, அடிக்கடி எண்ணுகிறதோ அதை நீக்கிவிட வேண்டும். உங்களுக்கு கத்தரிக்காயோ, ஆப்பிளோ மிகவும் பிடிக்கும் என்றால் அதை முதலில் விட்டுவிட வேண்டும். இதனால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி, இச்சா சக்தி வாய்த்ததாக இருக்கிறது. 

மனமானது சினம் கொண்டு பகைவனைத் தாக்க முற்படுகையில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டு 'நான் கோவத்திற்கும், வெறுப்பிற்கும் அடிமையில்லை' என்று சொல்லுங்கள். இவ்வாறாக மனமானது  இச்சா சக்தியை வளர்ப்பதால் அடக்கப்படுகிறது.             

பக்கம் - 39 ''எழுந்திருங்கள், வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த சம்ஸார சக்கரத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பல்வேறு எதிர்பார்புகள் மற்றும் சிக்கல்களால் நீங்கள் வறுத்தெடுக்கப்படுகிறீர்கள். நீங்கள் அதை உணர்வதில்லை. ஆனால் வாழ்க்கை படிப்படியாக கழிந்து கொண்டேயிருக்கிறது என்ற  இந்த எண்ணங்களை இடைவிடாது எண்ணுங்கள்.உங்களால் படிப்படியாக மனதை அடக்கமுடியும். யோக வாஷிஷ்டத்தின் வைராக்ய ப்ரகரணத்தைப் படியுங்கள். உடலுக்கு இயற்கையாக எந்தவித அழகும் கிடையாது. அதன் அழகு ஆத்மனில் ஒளிரும் பிரகாசத்தினாலேயே யாகும். பஞ்ச பூதங்களால் ஆன உடலில்  ஒன்பது  ஓட்டைகள் எனும்  சாக்கடைகள் வழியாக எத்தனையோ இழிவான பொருள்கள் வெளியேறிய வண்ணம் உள்ளன.  இது ஒரு ஜடப்பொருள். அபவித்ரமானது. இந்த எண்ணத்தை எப்பொழுதும் மனதில் கொள்ளுங்கள். இதைப் பற்றிய ஒரு தெளிவான படத்தை மனதில் யாண்டும் வைத்திருங்கள். இத்தகையதொரு மனப்பயிற்சியால் நீங்கள் காமத்தையும் மனத்தையும் வெல்லலாம். 


பக்கம் - 42 . மனவெற்றிக்கு சுயதண்டனை எவ்விதம் பயன்படுகிறது என்பதைப் சுவாமி சிவானந்தா, ''மனதைக் கட்டுப்படுத்துங்கள், 'ஏ மனமே! உறுதியாயிரு. ஒரே எண்ணத்தில் உறுதியாயிரு. பரம்பொருளே ஒரே உண்மையாகும் என்று மனதிடம் சொல்லுங்கள். அது சுற்றித்திரியுமானால், அது அலையுமானால் தனிமையான ஒரு இடத்திற்கு செல்லுங்கள்.உங்கள் கன்னத்தில்  நீங்களே இரண்டுமூன்று அடி கொடுங்கள். அப்பொழுது மனம் நிலைபெறும்.சுயதண்டனை மனதை அடக்குவதில் பெரிதும் உதவுகிறது. லக்ஷியத்திலிருந்து மனம் நழுவுகையில், கேட்ட எண்ணங்களை மனம் வரவேற்கையில் அதை நீங்கள் சாட்டையினாலோ கழியினாலோ அதை அடித்துவிடுவதாக பயமுறுத்துங்கள்'' என்று கூறுகிறார்.

Inline image 1

இனி, சிவானந்தரின் நேரடி உரை. இதற்கும் 1 முதல் 318 வரை பக்கங்கள் இடப்பட்டுள்ளன.

பக்கம் 1 > மனதை அடக்கி, எல்லா எண்ணங்கள், ஆசைகளையும் அமைதிப்படுத்தி உயர்த்துவது என்பது மனிதனை எதிநோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சனையாகும். மனதை அடக்கிவிட்டால் அவனை அரசர்க்கு அரசனாகக் கருதலாம்.     

பக்கம் - 5 > ஆன்மீகத்தின் முதற்படியே மன அடக்கம்தான். மனதை அடக்குதல் என்பது உலகை வெல்வதற்கு நிகர். தன்னை வெல்லுதல் அல்லது மனதை வெல்லுதலே அனைத்திலும் உயர்ந்த வெற்றியாகும்.

பக்கம் - 9 .> மனதை இல்லாதாக்க மற்றொரு முறை வைராக்கியமாகும். புலன் வாழ்க்கையில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து அதில் ஒரு ருசியின்மையை உண்டாக்கிக் கொள்வதாகும். பொருள்கள் அழிபவை. புலன் இன்பம் தற்காலிகமானது, பொய்யானது.

மனதைப் பொருள்களில் இருந்து அகற்றவும். அகற்றி பகவானுடன் சேர்க்கவும்.

ஆசையைத் துறத்தல் வாசனாக்ஷயமாகிறது. இது மனோ நாசத்திற்கு வழி வகுக்கும். இன்பம் தரும் பொருள்களை விரும்புதல் பந்தம். அதை விடுத்தல் மோட்சம். ஆசைதான் மனதின் மிக அடிப்படை அம்சமாகும். மனமும் ஆணவமும் (யான்மை) ஒரு பொருள் இருசொற்கள் ஆகும்.    

பக்கம் - 10 > எண்ணங்கள் அல்லது சங்கல்பங்களை அடக்குங்கள். கற்பனை அல்லது பகற்கனவை தவிருங்கள். அப்போது மனம் அழிந்துவிடும். சங்கல்பங்களை இல்லாதாக்குவதே மோட்சம் அல்லது விடுதலையாகும். கற்பனை இன்றேல் மனம் இல்லை. உலகம் எனும் பொய்த்தோற்றம் உங்கள் கற்பனையினாலேயே யாகும். உங்களது கற்பனை பூரணமாக நின்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது.                
                                      
பக்கம் - 13 > "ஓம், நான் சாட்சி மாத்திரமே. நான் யார்? நன் எண்ணமற்ற ஆத்மா. இந்தப் பொய்யான எண்ணங்கள் மற்றும் மனப் படங்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவை அப்படியே இருக்கட்டும். அவற்றுடன்  எனக்கு சம்பந்தம் இல்லை" என்று சொல்லுங்கள். எல்லா எண்ணங்களும் மறைந்துவிடும். நெய்யற்ற விளக்கு போல மனம் அழியும். 

பக்கம் - 17 > ஒழுக்கத் தூய்மையின்றி எந்த சாதனையும் வெற்றி பெறாது. காரமான எரிச்சலூட்டும் உணவுகளை தவிருங்கள். இரவு வெகு தாமத உணவைத் தவிருங்கள். இடையிடையே கொறிக்கும் வழக்கத்தைத் தவிருங்கள். 

பக்கம் - 22 > ஒரு நாளில் மன அடக்கத்தைப் பெற்றுவிட முடியாது. ஆனால் இடையறாத பயிற்சியினாலும் தொடர்ந்த வைராக்கியத்தினாலும் வெற்றி உங்களுடையதே. உண்மையான ஒரு வீரராகுங்கள். தன்னை வெல்லுங்கள் , அதாவது மனதை வெல்லுங்கள்.

பக்கம் - 23 > அனைத்து தீமைக்கும் காரணம் "யான்" "எனது" தான். பயம், வெறுப்பு, பொறாமை, சந்தேகம், ஏமாற்றம், கோவம் போன்றவற்றின் வடிவில் தோன்றும் ஆணவத்தை அழியுங்கள்.

நெருப்பின் முன்னிலையில்  இருன்பு தகதகவென ஒளிர்கிறது. இரும்பிற்கும் தனக்கென எந்தவித பிரகாசமும் கிடையாது. ஆனால் நெருப்புடன் தொடர்பு ஏற்படுகையில் அது அதைப்போல ஒளிர்கிறது. அது போல் அறிவு ஆத்மனின் ஒளியைக் கடன் வாங்கி, "நான் செய்பவன், நன் அனுபவிப்பவன்" என உணர்கிறது. 

பக்கம் - 24 > மனதை அடக்கி உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துங்கள். மனதை கலங்காமல் வைத்திருங்கள். தீயதை நினையாதீர்கள். நீங்கள் மரணமிலாப் பெருவாழ்வினுள் புகுவீர்கள்.மனமெனும் பாம்பை அடக்கியவன் எவனோ அவனே மோட்சமெனும் சாம்ராஜ்யத்தினுள் புகுகின்றான். 

    மனம் வெறுமையை வெறுக்கிறது. ஆசையைப் போலவே வெறுப்பும் குருடானது. அதே வேரைக் கொண்டது. ஆசையும் வெறுப்பும்  இதயம் எனும் மரத்தில் உட்கார்ந்திருக்கும் இரு குரங்குகள். அவை இரண்டும் மரத்தை ஆட்டி அசைக்கின்ற வரை அமைதி அங்கே இராது.

பக்கம் - 26 > காமம் நிறைந்த மனம் ஆன்மாவைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ ஆழ்ந்த விஷயங்களையோ ஒருபொழுதும் அறிய முடியாது. புலன் வழி மனம் ஆன்மீக விஷயங்களைப் புரிந்து கொள்ளாது. தெய்வீக எண்ணங்களால் உங்கள் மனதை நிரப்புங்கள். தீய ஆசைகள் கற்றும் உணர்ச்சிகள் எழுவதை கட்டுப்படுத்துங்கள். நல்ல எண்ணங்களால் உணர்சிகளை எழுப்புங்கள். மனதில்  எழும் எண்ணங்களை தொடர்ந்து கட்டுப்பாடிற்குள் வைத்திருத்தல் பயிற்சியாகும். 

பக்கம் - 27 > கடந்த எண்ணத்தின்  விளைவே மனமாகும். அது நிகழ்கால சிந்தனையால் தொடர்ந்து  மாற்றப்படுகிறது. பகற்கனவு, மனசுழற்சி மற்றும் நெறியற்ற எண்ணத்தால் மனதின் சக்திகள் விரயமாவதைத் தவிருங்கள். தன்னடக்கம் என்பது முதலில் மனதில் தான் ஆரம்பமாக வேண்டும். முதலில் சமம் (மன அடக்கம்) வருகிறது. அதன் பின் தமம் (புலனடக்கம்) வருகிறது. உணர்வு மனதின் (conscious mind) கீழே ஒரு பெரும் சேமிப்பு கிடங்கு போல அடி உணர்வு மனம் (subconscious mind ) பெரும் பங்கு வகிக்கிறது. அந்த அடி உணர்வு மனத்திலிருந்து தான் உங்களது ஆசைகள், தூண்டுதல்கள் மற்றும் சிதறல்கள் தோன்றுகின்றன. 

உணர்வு மனம் அடி உணர்வு மனதுடன் சேர்ந்தே செயல்புரிகிறது. ஒருபொழுதும் அது மற்றதை கண்டிப்பதில்லை. உங்கள் மனம் வெறுமையாய் இருக்க வேண்டாம். வாய் மௌனத்தை விட மனோ மௌனம், இதய மௌனம் சிறந்தது. கடவுளிடம் ஓய்வைக் காணும் வரை மனித மனம் ஓய்வைக் காணாது.

பக்கம் - 28 > சித்தம் என்பது அடிஉணர்வு மனம். அதுவே மனதின் பொருள். அது நினைவின் இருப்பிடம். செயல்களின் சம்ஸ்காரங்கள் அல்லது பதிவுகள் இங்கே உள்ளன. ஆணவம் மறைந்தால் பிரபஞ்ச உணர்வு வாய்க்கிறது.       

பக்கம் - 29 > மனம் குதித்துக் கூத்தாடும் குரங்கைப் போன்றது.மனம் எனும் குரங்கு முடிந்தவரை ஆடட்டும்.பொறுமையாய் இருந்து கண்காணியுங்கள். அதற்கு கொஞ்சம் அனுமதி அளியுங்கள். ஒழுங்காக தியானம் செய்ந்கள். தினம் தினம் மனதின் குதி யாட்டம் குறையும். மனதை அடக்கியவனே உண்மையில் பலவான். மனதை வெல்பவனே அனைத்து வீரர்களிலும் சிறந்தவன்.               

பக்கம் - 30 > பிராணனின் மகிமையில்தான் உடல் தோலின் அழகு அடங்கியிருக்கிறது. ஆத்மனிலிருந்து வெளியாகும் ஒளியினால் தான் உடல் அழகு பெறுகிறது. பஞ்ச பூதங்களால் ஆன இந்த ஒன்பது ஓட்டைகளைகே கொண்ட நாறும் சரீரம் ஒரு ஜடவஸ்து. அபவித்ரமானது. பலவிதமான கழிவுப பொருள்கள் இதிலிருந்து சதா வெளியேறிக் கொண்டிருக்கின்றன. எப்பொழுதும் இந்த எண்ணத்தை வரவழையுங்கள். தெளிவான, விளக்கப்பட்ட,இத்தகைய உருவத்தை மனதில் கொள்ளுங்கள். இத்தகைய மனப் பயிற்சியால் நீங்கள் மனதை வெல்லமுடியும். 

பக்கம் -32 > கோவத்திலிருந்து தான் எல்லாத் தீயகுணங்களும் எழுகின்றன. நீங்கள் கோவத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் அனைத்து தீய குணங்களும் தாங்களாகவே மறைந்துவிடும்.      

 பக்கம் - 36 > சுதந்திரமாக உள்ளவர் மனதை அடக்கியவர் மட்டுமே. உண்மையான சுதந்திரம் என்பது மனம் பொருளில் இருந்து விடுபடுவதே. போர்க்களங்களில் அடையப்பெரும் வெற்றியைவிட மனதை வெல்வது சிறந்ததாகும். அமைதி உடைய மனிதன் ஆகுங்கள். உலகியல் மனிதனை உடல் வெல்கிறது. ஆனால் யோகி உடலை வெல்கிறான். மனஅடக்கம் தான் தன்னடக்கம்.

மனமானது தீய எண்ணங்களுக்கு ஆட்படாமலும், புலன் பொருள்களின் கவர்ச்சிக்கு உட்படாமலும் இருக்கையில் அது பேருண்மைகளை கிரக்கிறது. நிரந்தர அமைதியின் உரைவிடமாகிறது. தூய்மைபடுத்தப்பட்ட மனம் உங்களது சிறந்த நண்பன். 

பக்கம் - 49 > ''நான் யார்?'' என்று விசாரம் செய்யுங்கள். மானசீகமாக ஓம் ஜெபம் செய்யுங்கள். ஆத்மனில் தியானம் செய்யுங்கள். அனைத்து எண்ணங்களும் தாமாகவே மறைந்துபோம். நீங்கள் சத்சிதானந்த அத்மனில் வசிப்பீர்கள்.    

தனியே அமர்ந்து மனதின் விருத்திகளைக் கவனியுங்கள். உதாசீனமாயிருங்கள் (carefree). சாட்சி மாத்திரமாயிருங்கள். விருத்திகளுடன் உங்களை ஒன்றுபடுத்திக் கொள்ளாதீர்கள். அப்பொழுது  மனம் உங்களுக்கு அடங்கும்.   

ஆசையாம் எரிபொருளை இல்லதாக்கிவிட்டால் எண்ணமாகிய தீ அடங்கிவிடும். சங்கல்பம் இல்லாதானால் பிரமம் மட்டுமே ஒளிரும். நட்பு, கருணை, சந்தோசம், இன்பத்தில் உதாசீனம், துன்பம், பண்பு போன்ற தெய்வீக குணங்களை வளருங்கள். நீங்கள் பூரண அமைதியைப் பெறுவீர்கள்.  

கடந்த காலத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.எதிர் காலத்திற்கு திட்டம் வகுக்காதீர்கள். மனத்தை கோட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள் (Be in present). மனமேதை விருன்பவில்லையோ அதை செய்யுங்கள்.உங்கள் ஆசைகளை பூர்த்திசெய்ய விரும்பாதீர்கள். எதையும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல ஆசைகளால் கேட்ட ஆசைகளை அழியுங்கள். முக்தி என்னும் ஒரே ஆழமான ஆசையால் நல்ல ஆசைகளையும் அழியுங்கள்.

பக்கம் - 70 > எண்ணம் அற்றால் உலகம் இல்லை. எண்ணங்கள், பெயர்கள், உருவங்கள் பிரிக்கமுடியாதவை. மனதின் இயல்பு புறத்தே பாய்வது. புலன்கள் பொருளுடன் தொடர்பு ஏற்படுவதால் உண்டாகும் எண்ணங்களின் மூலம் அவை இன்பத்தை நுகர முயல்கின்றன.

ஒரு பொருளுடன் மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுகிறது. ஏனெனில் பொருளும் தொடர்ந்து திருப்தியை அளிக்காது. எனவே அவை அடிக்கடி தொடர்ந்து மாற்றப்படவேண்டும். இவ்வாறு மனம் அமைதியற்றிருக்கிறது. அமைதியற்ற மனதில் உலகிற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட உண்மை அறிவு தோன்றாது. எனவேதான் எண்ணம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு அழிக்கப்பட வேண்டும். 

பிறகு ஞானம் எழுகிறது. அது எண்ணத்திற்கு அப்பாற்பட்டது. மனதை வெல்லுங்கள். அதை உங்கள் வேலைக்காரனாக்குங்கள் அது உங்கள் எஜமானனாக அனுமதிக்காதீர்கள்.              

தைரியமாய் இருங்கள். ஆண்மையுடனிருங்கள். தூண்டுதல்களுக்கு இரையாகாதீர்கள். அதைரியமடையாதீர்கள்.எழுந்திருங்கள். 
கச்சை கட்டிக்கொண்டு மனதை வெல்லுங்கள்.

நீங்கள் மனதை வென்றுவிட்டால் உங்களை புற உலகத்தால் ஒன்றும் செய்யஇயலாது.   


பக்கம் - 78 > பொருள்களில் நாட்டம் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறையுங்கள். வைராக்கியத்தை வளருங்கள். வைராக்கியம் மனதை மெலிதாக்குகிறது. அதிகமாகப் பழகாதீர்கள், அதிகமாகப் பேசாதீர்கள், அதிகமாக நடக்காதீர்கள், அதிகமாக சாப்பிடாதீர்கள், அதிகமாகத் தூங்காதீர்கள்.

உங்கள் உணர்சிகளை அடக்குங்கள். ஆசைகள் வாசனைகளை விடுங்கள். கோவம், காமத்தை அடக்குங்கள். தியானத்தின் மூலம் அசுத்த மனதை அடித்து வீழ்த்துங்கள். பூரண பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள். ஆன்மீகப் பாதையில் அரைகுறை பேச்சே கிடையாது.

பக்கம் - 84 > மனம் மிகவும் ஏமாற்றும் தன்மையது.அது உங்களை அறியாமைக் குழியில் தள்ளிவிடும். மனதின் சொல்லைக் கேட்காதீர்கள் மன ஓட்டத்திற்கு எதிராக நீந்துங்கள். மனம் தான் உங்கள கடும் பகைவன். இதை எப்பொழுதும் நினையுங்கள். இவ்விதம் மனதை நடத்துங்கள். மனதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் மௌன சாட்சியாய் இருங்கள். மனம் அதன் விருத்திகளுடன் ஒன்றிவிடாதீர்கள். எப்பொழுதும் அக ஆய்வு செய்து சுய சோதனையைச் செய்யுங்கள். மனம் ஒரு திருடனைப்போல் பதுங்கும். அதனால் எந்த தீமையையும் செய்ய முடியாது. படிப்படியாக அது கட்டுக்குள் வரும். அது உங்கள் பணிவான வேலையாளாக மாறும்.

 மனதுடன் ஒத்துழைகாதீர்கள். மனதை மென்மையாக்க இது தான் வழி. மனதை அடக்க இதுவே வழி. ''சினிமாவுக்கு போ'' என்று மனம் சொன்னால், ''நான் சாதனா வாரத்திற்கு தான் போவேன்'' என்று அதனிடம் சொல்லி உடனே ஆனந்த குடீருக்கு கிளம்புங்கள். '' மாமிசமும் முட்டையும் சாப்பிடு '' என்று மனம் சொன்னால் பால், பழம், சாப்பிடுங்கள், ''நாவல் செய்தித் தாள்களை படி'' என்று மனம் சொன்னால் கீதை, உபநிஷதம், கர்மயோக சாதனையைப் படியுங்கள்.

பக்கம் - 87 > அனைத்து மனித துயரங்களுக்கும் பிறப்பு இறப்புக்கும் அடிப்படைக் காரணம் அஹங்காரம் (யான்மை, ego) தான். அஹங்காரம் தன்னை உடல், மனம், பிராணன் மற்றும் புலன்களுடன் ஒன்றுபடுத்திக் கொள்கிறது. எங்கு அஹங்காரம் உண்டோ அங்கு எனது சுயநலம்,விருப்பு, வெறுப்பு, காமம், கோவம், பேராசை, வஞ்சகம், கர்வம், பொறாமை, மயக்கம், அறியாமை,ஏமாற்றுத்தனம், துடுக்குத்தனம், வாசனைகள், ஆசைகள், சங்கல்பங்கள்  விருத்திகள், பூவுலக வாழ்வுடன் ஒட்டிக்கொள்ளுதல் (அபிநிவேசம்), கர்த்தா மனப்பான்மை, கர்த்ருத்வம்அனைத்தும் உண்டு.

அஹங்காரத்தை அழித்தல் என்பது மனதை அழிப்பதாகும். புலன்களை அடக்குவதும் மனம் அல்லது  அஹங்காரத்தை அழிப்பதுவேயாகும். 

பிறர் மீது அதிகாரத்தையும் செல்வாக்கையும் அஹங்காரம் செலுத்த விரும்புகிறது. பட்டங்கள், பதவி, மதிப்பு, புகழ், செல்வம், வீடு, மனைவி, குழந்தைகள் ஆகியவற்றை அவன் விரும்புகிறான். அவன் கதனக்கு புகழ் தேடுகிறான். பிறரை அவன் ஆள விரும்புகிறான். யாராவது அவனது குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டினால் அவன் மனம் நோகிறான். யாராவது அவனைப் புகழ்ந்தால் அவன் பெருமிதம் கொள்கிறான். அவனுக்கு ஒன்றும் தெரியாது நான் சொல்வது தான் சரி. அவன்  சொல்வது முற்றிலும் தவறு. என்னைவிட அவன் கீழானவன், நான் அவனைவிட மேலானவன் என்று ஆணவம் சொல்கிறது. தன கொள்கையை பிறர் அங்கீகரிக்க வேண்டும். தன்வழியில் பிறர் வரவேண்டும்என்று அவன் விரும்புகிறான்.

அஹங்காரம் (ego அல்லது யாண்மை) அல்லது ஆணவம் என்பது மனிதனிடம் உள்ள தன்னை முன்னிறுத்தும் உணர்வாகும். பிரார்தனை மற்றும் பக்தியின் மூலம் நீங்கள் இறைவனின் அருளைப் பெற்றால் ஆணவத்தை எளிதில் அழிக்கலாம். இந்த அஹங்காரம் (I feeling) பிரபஞ்ச அஹங்காரத்தில் (cosmic I feeling) கரையும்பொழுது நீங்கள் கடவுளுடன் ஒன்றிப்பீர்கள். ஆத்மஞானம் கிட்டும்.     //எனக்கு எதுவும் தெரியாது, ஏதும் தெரியாது -  i don't know anything, I know nothing//      

பக்கம் - 93 >பக்தி மார்கத்தில் ஒரு சாதகன் பகவானிடம் சரணாகதி அல்லது தன்னை ஒப்படைப்பதன் மூலம் தனது அஹங்காரத்தை இல்லாதாக்கின்றான். ''இறைவா! நான் உன்னுடையவன். அனைத்தும் உன்னுடையதே. உனது இச்சைப்படியே நடக்கும்'' என்று அவன் சொல்கிறான். அவன் தன்னை இறைவன் கையில் உள்ள கருவியாக எண்ணுகிறான். தனது செயல்கள், அவற்றின் பயன்கள் அனைத்தையும் பகவானிடம் ஒப்படைத்துவிடுகிறான். இறைவனைத் தவிர வேறெதுவும் இல்லை. அனைத்தும் பகவானாலேயே நிகழ்கின்றன. அவனன்றி ஓரணுவும் அசையாது, அனைத்தும் இருப்பதும் அமைவதும் அவனாலேயே என்று அவன் கருதுகிறான்.

பக்கம் - 95 > வயல்களில் பாயும் தண்ணீர் அந்தந்த வயல்களின் உருவத்தை ஏற்பது போல ஒரு பொருளை நாடும் மனமும் அந்தப் பொருளின் உருவத்தை எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒருஎண்ணமே. அது மனதிலிருந்து தொடங்கி, மனதிலேயே ஒடுங்குகிறது.

பார்ப்பவன் புலன் உறுப்புகள் மற்றும் பொருள்கள் இருந்தாலும் மனம் அவற்றுடன் சேரும் போதுதான் பொருளைப் பார்க்க முடியும். எனவே மனம் ஒரு கருவி.

பக்கம் - 98 > மனம் குரங்கைப் போன்றது. தன்னிடம் இருக்கும் பொருள்களால் அது ஒருபொழுதும் திருப்தி அடையாது. தன்னிடம் இல்லாத பொருள்களை நோக்கி அது தாவும். அதற்கு எப்பொழுதும் பன்மை தேவைப்படுகின்றது. ஒருமையை அது வெறுக்கிறது. ஒழுங்கான தியானத்தினால் இதைப் பழக்கி ஆத்ம அமிருதத்தை அதை சுவைக்க  வையுங்கள்.

//ஒவ்வொரு நாளும் வாக்குறுதி மேற்கொள்ள வேண்டும். இதாவது, எந்த பெண்ணையும் கற்பனையால் நினைக்கமாட்டேன். பகல்கனவு, மனவுரையாடல் ஆகியவற்றில் ஈடுபடமாட்டேன் என்று.//

பக்கம் - 102 > உங்கள் வாக்குறுதிகளை உங்களால் காப்பாற்ற முடியாவிட்டால், புதிய வாக்குறுதிகளை உண்டாக்குங்கள். புதிய சாதகன் தனது உறுதிமொழிகளில் பல தடவை தவறுவான். அவன் மீண்டும்மீண்டும் முயலவேண்டும். கடைசியில் வெற்றி அடைவான்.

பக்கம் - 103 > அனைத்து புலன் இன்பங்களும் பொய்யானவை, முற்றிலும் அர்த்தமற்றவை, மிகவும் ஆபத்தானவை என்று திரும்பத்திரும்ப மனதுக்கு பாடம் புகட்டுங்கள். புலனின்பம் எவ்வளவு பொய்யானது, துன்பமயமானது என்று தெளிவாக எண்ணுங்கள்.எந்தநிலையிலும் அசுத்த மனதின் போதனைகளுக்கு செவி கொடுக்காதீர்கள்.

பக்கம் - 125 > ஒரு புள்ளி நிலையில் ஒரு எண்ணத்திற்கு மேல் இருக்க முடியாது. ஒருஎண்ணம் மனதைவிட்டு அகன்றால் தான் மற்றொரு எண்ணம் மனதினுள் புகமுடியும்.
யாருடைய பயிற்சியும், வைராக்கியமும் தீவிரமாக இருக்கிறதோ அவருக்கு தியானத்தில் சீக்கிரமாக வெற்றி கிட்டும்.


பக்கம் - 143 > நிறையப் படித்து, அறிந்து, கற்பித்த பின்னரும் தனது மனம் புலன்களைஅடக்காதவன்ஒருமாபெரும் முட்டாள்.

பக்கம் - 145 > மனதிற்கு சலுகை காட்டாதீர்கள். அதனுடன் கடுமையாகிருங்கள். பொறுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுமை இச்சாசக்தியை வளர்க்கிறது.மனதையும் புலன்களையும் யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ அவனே ஆத்ம நாயகன், ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன். சண்டையில் ராஜ்ஜியத்தை வெல்பவனை விட மனதை வெல்பவனே பெரியவன். மனம் கொந்தளிப்பது அழிவுக்கு அறிகுறி. மனோநாசம் முக்தி. மனதை இல்லாதாக்குங்கள் பூரணத்துவத்தை அடையுங்கள். உங்கள்  சத்சிதானந்த சொரூபத்தில் நிலைத்திருங்கள்.

பக்கம் - 157 > மனம் ஒரு ஆட்டைப் போன்றது. ஆடு ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குத் தாவுகிறது. அது எந்த செடியையும் முழுவதுமாக உண்பதில்லை. சித்தம் பன்றி போன்றது. பன்றி மலத்தில் உழல்கிறது. அது எப்பொழுதும் மோசமான விஷயங்களையே எண்ணுகின்றது. பன்றியை பலியிடுவதற்கு பதிலாக சித்தத்தைப் பலியிடுங்கள்.  


பக்கம் - 169 > ''நான் பிராணன் அல்ல, புலன்கள் அல்ல' இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவன் நான். நான் இவற்றினுடையவும்இவற்றின் செயல்களுடையவும் வெறும் சாட்சி மாத்திரமேஎ. நான் ஸத்சிதானந்த சொரூபம்'. இது மட்டுமே வேதாந்த நிர்குண தியானத்திற்கு போதுமானது. உடனேயே நீங்கள் உயர்ந்த நிலைக்குப் போய்விடுவீர்கள். இதுவே மிகச் சிறந்த சூத்திரம்.

பக்கம் - 172 > மனதில் ஏதாவது எண்ணம் எழுகையில்,''இந்த விருத்தி(எண்ணம்) ஏன் எழுந்தது? அது யாருடன் தொடர்புடையது? நான் யார்?'' என்று விசாரம் செய்யுங்கள். எல்லா எண்ணங்களும் தாமாகவே அழியும். எல்லா மனசெயலகளும் நிற்கும். மனம் உள்நோக்கித் திரும்பும். அது ஆத்மனில் நிலைபெறும். இதுவே வேதாந்தசாதனை. சாதனையில் தொடர்ந்து நீங்கள் முயலவேண்டும். எந்த வகையான எண்ணங்கள் எழுந்தாலும் ''நான் யார்'' என்ற எண்ணம் அனைத்து உலகியல் எண்ணங் களையும் அழித்துவிடும். அந்த எண்ணமும் தானே மறையும். ஆணவம் அகலும். எஞ்சுவது கேவல அஸ்தி.
images.jpg

seshadri sridharan

unread,
Oct 17, 2013, 8:03:13 AM10/17/13
to mintamil
இந்த மௌன அனுபவம் குறித்த அரவிந்தரின் பதிவு.  (sri Aurobindo autobiography & history  என்றநூலில் பக்கம் 471 முதல் 474 இல் உள்ளபடி)

1907 இல் தமது 35 ஆம் அகவையில் அவர் சூரத்தில் இருந்து பரோடா சென்று அங்கு இருவாரங்கள் தங்கி இருந்தார். சூரத்தில் அரவிந்தர் சகரே பாப என்ற மராட்டிய ஓகியை சந்தித்து அவரிடம் தான் இதுவரை செய்துவந்த்து போல் அல்லாமல் முறையாக ஓகத்தை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்கு விஷ்ணு பாஸ்கர் லேலே என்ற மற்றொரு மராட்டிய ஓகி இதில் அரவிந்தருக்கு உதவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதனால் விஷ்ணு பாஸ்கர் லேலே தாம் தங்கி இருந்த குவாலியரிலிருந்து பரோடாவிற்கு வருவிக்கப்பட்டார். இந்நேரத்தில் அரவிந்தர் துறவிக்குரிய கட்டுப்பாடான வாழ்க்கையை ஏற்று பருத்தி சட்டைகளை மட்டுமே அணிந்து வந்தார்.  இரயிலில் மூன்றாம் நிலை பெட்டியில் பயணித்து மரப்பலகை இருக்கைகளில் தம் கையையே தலையணையாய் வைத்து உறங்கினார். அப்போது பரோடாவில் பருவநிலை நடுக் கோடைப் நிலையில் இருந்த்து.

முதன்முதலாக அரவிந்தர் லேலேவை தாம் தங்கி இருந்த காசிராவ் யாதவின் விட்டில் சந்தித்தார். ஓகத்தை பொருத்தமட்டில்,  அரவிந்தர் தமது அரசியல் நடவடிக்கைகளை முற்றுமுழுதாக சில நாள்களுக்கு நிறுத்த வேண்டும் என்றார் லேலே. பின் அவர் இருவரும் சர்தார் மசூம்தாரின் வீட்டு உச்சி மாடியில் இருந்த சிறு அறையின் கதவைச் சாத்திக் கொண்டு அதில் மூன்று நாள்கள் இருந்தனர். இதை பின்னர் அரவிந்தர் 1932 இல் நினைவு கூர்ந்தார்.

"Sit down," I was told, "look and you will see that your thoughts come into you from outside. Before they enter, fling (throw) them back." I sat down and looked and saw to my astonishment that it was so; I saw and felt concretely the thought approaching as if to enter through or above the head, and was able to push it back concretely before it came inside. In three days - really in one - my mind became full of an eternal silence - it is still there.  (as in the book Sri Aurobindoi on himself - PP 130 - I)  

Lele's advice was that Sri Aurobindo should strive to empty his mind of all mere mental stuff - to make the mind  a sheet of white paper ready to recieve a piece of Divine calligraphy - to purify the system by ejecting all ego-stuff so that the Divine might take possession of it and direct its future operations. It was but a little hint from " a man without fame ... a bhakta with a limited mind but with some experience and evocative power", ( as in the book ibid PP 126 - 7) no more than a tiny seed, yet it fell on the most fertile soil, and grew into a mighty tree branching so broad and long that in the ground The bended twigs take root, and daughters grow Above the mother tree, a pillared shade high overarched, and echoing walks between. (as in the book paadise Lost, IX,11, 1004 - 7)

The three days effort to insulate (protect) the mind from the invasion of extraneous thoughts had brought Sri Aurobindo to a condition  of unbelievable silence of the mind, a condition which he was able to maintain for many months, and indeed always thereafter. As  he described the condition to one of his disciples subsequently: 

In a moment my mind became silent as a windless air on a high mountain summit, and then I saw one thought and then another coming in a concrete way from outside; I flung them away before they could enter and take hold of the brain, and in three days I was free. From the moment in principle, the mental being in me became a free Intelligence, a universal Mind, not a limited to the narrow circle of personal thoughts as a labourer in a thought factory, but a receiver of knowledge from all the hundred realms of being and free to choose what it willed in this vast sight - empire and thought - empire. (as in the book Sri Aurobindo on Himself, P 133)

The body, of course, continued its manifold functions of walking, talking, eating, seeing, hearing, sleeping, but without any obtrusive egoistic consciousness. it was as though he had dissolved and become one with the etheric oneness of omnipresent realit. By achieving this ineffable (extreme to be expressed) silence of mind and consciousness, Sri Aurobindo had become one with the ineffable Brahman, which made all else seem unimportant. It was this stupendous experience that Sri Aurobindo later described poetically in  his Nirvana: and Plays,

All is abolished but the mute alone
The mind from thought released,the heart from grief
Grow inexistent now beyond belief; 
There is no I,noNature, known - unknown  (collected poems and Plays,vol. II p.298)

This immaculate crown of Advaitic or Nirvanic realisation, while inducing the supernal inner calm, rendered even normal surface activities an unreal continuum of unconsciousness. Things were happening, he was apparently engaged in activity, but he himself didn't know how or why.  
Reply all
Reply to author
Forward
0 new messages