உயிர் எழுத்துக்களின் முன் ஓர் வர வேண்டும் என்று நினைக்கின்றேன்.
உதாரணம் ஓர் இரவு - ஓரிரவு,
ஓர் உலகம் - ஓருலகம்
உயிர்மெய் எழுத்துக்கள் முன் ஓர் வருவது சரியா?
உதாரணம் - ஓர் மதிப்பீடு
ஒரு மதிப்பீடா அல்லது ஓர் மதிப்பீடா
உயிர்மெய் எழுத்துக்கள் முன் ஓர் வருவது சரியா தவறா என்ற விளக்கம் தேவை.
தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒருவர் கூறினார் - உயிர் எழுத்துக்கள் முன் ஓர் வருவது கட்டாயம்.
உயிர்மெய் எழுத்துக்கள் முன் ஓர், ஒரு இரண்டும் வரலாம் என்றார்.
அக்கூற்று சரிதானா
சரியான இலக்கண விளக்கம் யாராவது அளித்தால் நலம்.
சுந்தரராஜன் ஜெயராமன்
கோயம்புத்தூர்