சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?

1,861 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 27, 2017, 5:38:00 AM5/27/17
to mintamil

http://thiruththam.blogspot.in/2017/05/7.html



கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 7 ( சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா? )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பல்வேறு பெயர்ச் சொற்கள் குறிக்கின்ற பெண்களின் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இவற்றில் குறிப்பாக முலை என்ற பெயரும் கொங்கை என்ற பெயரும் பெரும்பாலான இடங்களில் பெண்களின் கண்களையே குறிக்கும் என்று ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டோம். இந்த புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஆதரவாகக் கூறப்படுவது யாதெனில், சங்ககாலப் பெண்கள் தமது முலைகளிலும் கொங்கைகளிலும் சந்தனம், குங்குமத்தால் மெழுகுவதும் மைகொண்டு தொய்யில் எழுதுவதும் பூந்தாதுக்களைக் கொண்டு அப்பி அழகுசெய்வதும் ஆகிய செயல்களைச் செய்ததாக இலக்கியப் பாடல்கள் பலவும் கூறுகின்ற செய்திகளாகும்.

ஆனால் சிலர் இதை ஏற்க மறுத்து, முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகங்களையே குறிக்கும் என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்றுப்படி, முலையும் கொங்கையும் மார்பகத்தினைக் குறிப்பதாக இருந்தால், பெண்கள் இத்தகைய அழகூட்டும் செயல்பாடுகளை மூடி மறைக்கப்படுவதான தங்கள் மார்பகத்தில் ஏன் செய்யவேண்டும்?. இவ்வளவு அழகு செய்துவிட்டு அதனை ஆடைகொண்டு மூடிமறைத்து விட்டால் அதனை யாரும் கண்டு மகிழமுடியாது; பாராட்டவும் முடியாது. எனவே முலையும் கொங்கையும் மூடி மறைக்கப்படுவதான மார்பகங்களை அன்றி எப்போதும் எளிதாகக் காணப்படத்தக்க கண்களையே பெரும்பாலும் குறிக்கும் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதையும் அவர்கள் ஏற்க மறுத்து, சங்க காலப் பெண்கள் யாரும் மேலாடை இன்றியே வாழ்ந்தனர் என்றும் தமது அழகூட்டும் செயல்கள் அனைத்தையும் மூடி மறைக்கப்படாத தமது மார்பகங்களிலேயே செய்துவந்தனர் என்றும் எவ்வித ஆதாரங்களும் இன்றி கூறிவருகின்றனர். இவர்களது தவறான எண்ணங்களுக்கும் பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழந்தமிழர் ஆடைப் பெயர்கள்:

பழந்தமிழர்கள் அணிந்த பல்வேறு ஆடைகளின் பெயர்களாக தமிழ் விக்கிப்பீடியா கீழ்க்காண்பவற்றைக் காட்டுகிறது.

உடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை,     கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை,     தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம்,     கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம்,     மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு,   காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.

இவை அனைத்தையும் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிட இயலாது என்பதால் இவற்றுள் சில ஆடைப்பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தொடர்பான ஆதாரங்கள் மட்டுமே இங்கு முன்வைக்கப் படுகிறது.

சங்கத் தமிழரின் ஆடைக் கொள்கை:

சங்க காலத் தமிழர்கள் ஆடைகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்தினர் என்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஆடைப்பெயர்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆடை என்று வரும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். ஒரு ஆண் குறைந்தபட்சமாக தனது இடுப்பில் ஒரு ஆடையினை சுற்றிக் கொண்டுவிட்டால் போதுமானது. அதுவே அவனது மானத்தைக் காக்கப் போதுமானது என்று நாம் கருதுகிறோம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அது மட்டும் போதாது. குறைந்தது கீழாடை, மேலாடை என்ற இரண்டு ஆடைகளாவது வேண்டும். ஒரு சாதாரணப் பெண்ணாகட்டும் அல்லது அரசனின் மனைவியாகட்டும் இந்த இரண்டு உடைகள் அவசியமே. ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ இரண்டு ஆடைகளுக்கு மேல் தேவையில்லை என்றும் எஞ்சியிருக்கும் ஆடைகளை இல்லாதோருக்குக் கொடுத்து உதவலாம் என்றும் கீழ்க்காணும் பாடலில் அறிவுறுத்துகிறார் புலவர் நக்கீரனார்.

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே - புறம். 189

வேட்டையாடி உண்ணும் ஒருவனுக்கும் நாட்டை ஆளும் அரசனுக்கும் தேவையான உணவு மற்றும் உடை பற்றி இப் பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். ஒருநாள் உண்பதற்கு நாழி உணவும் உடுத்துவதற்கு மேலாடை, கீழாடை என்ற இரண்டு ஆடைகளும் இவ் இருவருக்குமே போதுமானது என்கிறார். கீழாடை மட்டும் போதும் மேலாடை தேவையில்லை என்று அவர் சொல்லவில்லை. ஒரு ஆணுக்கே குறைந்தது இரண்டு ஆடைகள் என்று கூறும்போது பெண்ணுக்கு எத்தனை என்று சொல்லத்தேவையில்லை. அவர்களுக்கும் குறைந்தபட்சமாக இரண்டு ஆடைகள் என்பது உறுதி. இதிலிருந்து, சங்க காலத்தில் ஆண்கள் குறைந்தது இரண்டு ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் இரண்டு முதல் மூன்றுவரையிலான ( மேலாடை, கீழாடை, உள்ளாடை உட்பட ) ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் முடிவுக்கு வரலாம்.

ஈரணி என்னும் நீச்சலாடை:

சங்கத் தமிழ்ப் பெண்கள் கீழாடையும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்கள் அணியும் நீச்சல் உடுப்புக்கு ஈரணி என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஈரணி என்பது இரண்டு அணி அதாவது இரண்டு உடுப்பு என்ற பொருள் தரும். இளைஞர்களும் இளைஞிகளும் புனல் விளையாட்டில் ஈடுபடும்போது இந்த ஈரணி ஆகிய நீச்சலாடையினை அணிந்துகொண்டே விளையாடுவர். இது கீழாடை, மேலாடை என்று இரு பிரிவாக இருக்கும். தற்காலத்தில் நீச்சலின் போது அணியப்படும் டூபீஸ் ஆடை போன்றதாக இதைக் கருதலாம். இதுபற்றிக் கூறும் இலக்கியப் பாடல் கீழே: 

.... இளையரும் இனியரும் ஈரணி அணியின்
இகல் மிக நவின்று தணி புனல் ஆடும் ... - பரி. 6

புனல் விளையாட்டு முடிந்தபின்னர், தான் அணிந்திருந்த ஈரணியின் ஈரம் காயும்வரை தனது கண்களையும் இமைகளை அழகுசெய்யத் துவங்குகிறாள் ஒரு பெண். இதைப்பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்.

.... விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் ... பரி. 7

வைகை ஆற்றில் புனல் விளையாட்டுக்குச் செல்லும்போது பெண்கள் இந்த ஈரணியினை வரிசையாக ஏந்திச்செல்லும் காட்சியினை விவரிக்கிறது கீழ்க்காணும் பரிபாடல்.

....ஈரணிக்கு ஏற்ற நறவு அணி பூந்துகில் நன் பல ஏந்தி
பிற தொழின பின்பின் தொடர
செறி வினை பொலிந்த செம் பூங்கண்ணியர்.. - பரி. 22

சங்க காலத்தில் வைகை ஆற்றில் புனல் விளையாட்டு என்பது ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது என்ற செய்தியை மேற்காணும் பரிபாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதை உறுதிப்படுத்துவதைப் போல பெருங்கதையிலும் சில செய்திகள் காணக் கிடைக்கின்றன.  புனல் விளையாட்டுக்குரிய ஈரணி என்னும் ஆடையினை விற்பனை செய்தனர் என்றும் அதனை முதல்நாளே பலரும் வாங்கினர் என்றும் கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன.

... நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும்
விளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும்
தொலைவுஇல் மூதூர் தொன்றின மறந்து உராய்.... - உஞ்சை. 37

புனல் விளையாட்டுக்கென்றே சிறப்பாக தனி ஆடையினை அணிந்த பண்பாட்டினை உடையவர்கள் சங்கத் தமிழர்கள். இவ்வளவு உயர்ந்த பண்பாட்டினை உடைய இவர்கள் மேலாடை இன்றி வாழ்ந்தனர் என்ற செய்தி எவ்வளவு தவறானது என்பது தெள்ளிதின் விளங்கும்.

மங்கையும் மஞ்ஞையும்:

சங்கப் பாடல்கள் பலவற்றில் பெண்களை மயிலுடன் உவமைப் படுத்திப் புலவர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணமாகத் தற்போது கூறப்படுகின்ற கருத்து யாதெனின், பெண்களின் தலைமயிர் பின்னால் தொங்குவதைப் போல மயிலுக்குத் தோகையானது பின்னால் தொங்குகிறது என்பதாகும். இது மிகத் தவறான கருத்தாகும். காரணம், கருமைநிறத்தில் அழகின்றி இருக்கும் தலைமயிரானது பலவண்ணங்களில் பல வடிவங்களில் அழகாகக் காணப்படும் மயில் தோகைக்கு ஒருபோதும் ஒப்புமையாக முடியாது.

சங்க கால இளம்பெண்கள் பலரும் பூவேலைப்பாடுகளை கரைகளில் அதாவது ஓரங்களில் உடைய நீலநிற ஆடையினை அணிந்திருந்தனர். இந்த ஆடையினைப் பூங்கரை நீலம் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. பூங்கரை நீலம் = பூ + கரை + நீலம் = பூவேலைப்பாடுகளை ஓரங்களில் உடைய நீல ஆடை. ஆடையின் மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் இருக்கும். இந்த ஆடையைப் பற்றிக் கூறுகின்ற சில இலக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

... தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த
பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ .... - கலி. 111

பசுக்களில் இருந்து பாலைக் கறந்தபின்னர் கன்றுகளை எல்லாம் தாம்புக் கயிற்றுடன் பிணித்து வீட்டில் இருத்திவிட்டு தனது அன்னை தந்த பூங்கரை நீல ஆடையினை பக்கங்களில் தாழ்ந்து தொங்குமாறு உடல்முழுவதும் உடுத்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ' புடை தாழ மெய் அசைஇ ' என்ற சொற்றொடரே போதும் அக்காலத்தில் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடைகொண்டு மறைத்தே இருந்தார்கள் என்பதை உறுதி செய்வதற்கு.

... யானும் என் சாந்து உளர் கூழை முடியா
நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் .... - கலி. 115

நிலம் தாழ தான் அணிந்திருந்த பூங்கரை நீலமாகிய ஆடையினை மெய்யுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு தளர்வாக நடந்து சென்றாள் என்ற செய்தியினை மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. மயில் கழுத்து போலும் நீல வண்ணமும் பூவேலைப்பாடுகளும் கொண்ட ஆடையினை அணிந்த இளம்பெண்கள் வேங்கை மரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்கும்போது அதைப் பார்க்கும் புலவருக்கு வண்ண மயில் ஒன்று வேங்கை மரத்தின் மேல் இருப்பதாகத் தோன்றுகிறது. காரணம், அப் பெண்கள் அணிந்திருக்கும் நீலநிற மேலாடையும் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் பூவேலைப்பாடுகளும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் .. - குறு.26

விரிந்த வேங்கை பெரும் சினை தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட.... - ஐங்கு.297

எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட .. - ஐங்கு. 294

நாட்பட்ட பழச்சாற்றினை நீர் என்று கருதி பருகிய வண்ண மயிலொன்று போதையேறியதால் ஆடுமகள் கயிற்றின் மேல் இருபுறங்களிலும் மாறிமாறிச் சாய்ந்தவாறு நடப்பதைப் போல தள்ளாடித் தள்ளாடி நடப்பதைக் காட்டும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.....பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் .... - குறி.190

இப்பாடலில் ஆடுமகளை மயிலுடன் ஒப்புமைப் படுத்தியன் காரணம், அவள் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணமே. மயில்கழுத்து போன்ற நீலநிற மேலாடையும் மயில்தோகை போன்று பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்கும் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் மயிலின் நினைவு தோன்றாது?. எனவே புலவர் அப்பெண்ணை மயிலுடன் உவமைப்படுத்தியதில் வியப்பில்லை. அடுத்து இன்னொரு சான்று.

தலைவனைச் சந்திப்பதற்கு தலைவியானவள் நள்ளிரவில் மழைபெய்யும் நேரத்தில் வருகிறாள். அப்போது அவள் நுண்ணிய நூலினால் செய்யப்பட்ட ஆடையினை தனது உடல் முழுவதும் போர்த்தியவாறு காலில் அணிந்திருக்கும் சிலம்புகள் கூட ஒலிக்காதவண்ணம் மெதுவாக மழையில் நனையாமல் மறைந்து மறைந்து வருகிறாள். அவள் அணிந்திருக்கும் ஆடையினைப் பார்க்கின்ற புலவருக்குக் கார்மேகங்களைக் கண்டு தோகை விரித்தாடுகின்ற மயிலின் நினைவு வந்துவிட்டது. இதை அழகாக விவரிக்கும் பாடல்வரிகள் கீழே:

கூறுவம் கொல்லோ கூறலம்கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல ..... - அகம். 198

இப்பாடலில் வரும் ' நுண் நூல் ஆகம் பொருந்தினள் ' என்ற வரியானது ' நுட்பமான ஆடையினை உடலின்மேல் அணிந்திருந்தாள் ' என்ற செய்தியினைத் தாங்கி நிற்கிறது. மயிலுடன் இப் பெண்ணை உவமைப்படுத்தியதில் இருந்து இந்தப் பெண்ணும் முன்னர் கண்டதுபோல நீலநிற மேலாடையும் பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. மயிலுக்கு மஞ்ஞை என்று பெயர் வைத்ததுகூட மங்கையுடன் அதற்குள்ள இத் தொடர்பு கருதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சமையலும் சங்ககாலப் பெண்களும்:

சங்க காலப் பெண்கள் சமையல் செய்யும் அழகினைப் பற்றி ஒருசில பாடல்கள் விரிவாகவே கூறியுள்ளன. அவற்றுள் நற்றிணை காட்டும் நளபாகத்தினை முதலில் காணலாம்.

தட மருப்பு எருமை மட நடை குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ       
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று       
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே - நற். 120

எருமை மாட்டினை அதன் கன்றுடன் சேர்த்து தூணில் கட்டிவிட்டு வாளைமீனை சமைக்கிறாள் தலைவி. அப்போது அவள் கண்களில் புகை சூழ்ந்து கண்சிவந்து முகமெல்லாம் வியர்க்கிறது. அந்த வியர்வையினை தனது மேலாடையின் நுனி அதாவது முந்தானை கொண்டு துடைக்கிறாள். இப்பாடலில் வரும் ' சிறுநுண் பல்வியர் அம் துகில் தலையில் துடையினள் ' என்ற சொற்றொடர் அவள் மேலாடை அணிந்திருந்தாள் என்று மிகத் தெளிவாகக் காட்டுகிறது. காரணம், கீழாடை கொண்டு தலையில் உள்ள வியர்வையினைத் துடைப்பது கடினம் என்பதால் அப்படி யாரும் செய்வதில்லை.

இதேபோன்ற ஒரு காட்சி குறுந்தொகையிலும் உண்டு. அப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்   
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே. - குறு. 167

கெட்டியாகிப்போன தயிரினைக் கைவிரல்களால் பிசைந்தவள் விரல்களைக் கழுவாமல் அப்படியே தனது ஆடையில் துடைத்துக் கொள்கிறாள். அத்துடன் தாளிக்கும்போது எழுந்த புகையினால் கலங்கிய தனது கண்களையும் வியர்த்த தனது முகத்தினையும் நீரில் கழுவாமல் அதே துணியினால் துடைத்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' கழுவுறு கலிங்கம் கழாது துடைஇ ' என்ற சொற்றொடரை இவ் இரண்டுக்குமே பொருத்திக் கொள்ளலாம். முன்கண்ட பாடலில் உள்ளதைப் போலவே இப்பாடலில் வரும் தலைவியும் தனது முகத்தினையும் கையினையும் தனது மேலாடையின் முந்தானையால் தான் துடைத்திருக்க வேண்டும். ஆக, சங்க காலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இவ் இரண்டு பாடல்களையும் சான்றாகக் கொள்ளலாம்.

கண்ணீரும் முந்தானையும்:

பெண்கள் அழும்போது கண்களில் பெருகும் கண்ணீரைத் தமது ஆடையின் முந்தானை கொண்டு துடைப்பது வழக்கம். இதேபோன்ற ஒரு காட்சியினை படம்பிடித்துக் காட்டுகிறது கீழ்க்காணும் பரிபாடல்.

.....கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி .... - பரி. 16

பொருள்: கருங்கை உடைய ஆயத்தாராகிய கள்வர்களை அழித்து வென்று பெருமைகொண்ட படைத்தலைவனைப் போல வருபவனைக் கண்டு நுங்கினை ஒத்த தனது கண்களில் பொங்கிய ஆனந்தக்கண்ணீரைத் துடைக்காமல் அப்படியே இருந்த அவள் பின்னர் தனது மேலாடையின் முந்தானையால் ஒற்றி எடுத்து......

இப்பாடலில் வரும் ' இரும் துகில் தானை ' என்பது அப்பெண் அணிந்திருந்த ' ஆடையின் முந்தானை ' என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. ஆடையின் முன் பகுதி என்று பொருள்தருவதான முன்தானை என்பதே முந்தானை என்று மருவி வழங்கப்படுகிறது. முந்தானை என்று கூறப்படுவதில் இருந்தே அது மேலாடை தான் என்பது உறுதியாகிறது. சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

சங்ககாலப் பெண்களும் மேலாடையும்:

சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு மேலே பல சான்றுகளைக் கண்டோம். இருப்பினும் இன்னும் சில சான்றுகளைக் கீழே விரிவாகக் காணலாம்.

அகநானூற்றின் கீழ்க்காணும் பாடலானது சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணமும் முதலிரவும் எப்படி நடைபெற்றது என்பதை மிக விரிவாக விளக்குகிறது.


உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
...........................................................................
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்தகாலை ..... - அகம்.86

முதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா?. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.

இதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
...............................................................
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே .......... - அகம். 136

இப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.

பழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக .... - கலி. 69

திருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:

...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - பெருங். உஞ்சை. 42

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்கள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

கடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் - குறள் - 1087.

இக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும்.

சங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்ட நிலையில், அவர்கள் தமது மார்பகங்களில் தொய்யில் எழுதவோ சந்தன குங்குமத்தால் பூசவோ, பூந்தாதுக்களை அப்பவோ செய்திருக்க மாட்டார்கள் என்பதும் உறுதியாகிறது. முடிவாக, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முலை என்ற சொல்லானது பெரும்பாலும் கண் / கண்ணிமையினைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் மிகச் சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் ஆணித்தரமாக உறுதிசெய்யப் படுகிறது.

......... தொடரும்......


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 2:17:53 AM5/29/17
to mint...@googlegroups.com

அறிதலும் உண்மையையும் தொடர்ந்து…..2 } சங்கர சுப்பிரமணியன்.

May 20, 2017 6:42 am / by amuthan
இதற்குமுன் நான் எழுதிய கட்டுரையில் கம்பரையும் கம்பராமாயாணத்தையும் பற்றிய சில
தகவல்களை தந்துள்ளேன். இந்த தகவல்களின் அடிப்படையில் திரு. ஏலையா க. முருகதாசன்
அவர்களின் கலந்துரையாடலுக்காக எனது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் “ஒளிவீசுமா மார்பகம்?” என்ற கேள்விக்கு வருவோம். இக்கேள்விக்கு செல்லுமுன்
அந்த செய்யுளைப் பார்க்கலாம்.
“எங்கு நின்று எழுந்தது இந்த
இந்து வந்து? என் நெஞ்சு உலாய்
அங்கி என்று அனங்கன் எய்த
அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல் விடம்
பொழிந்தது என்னினும்
கங்குல்வந்த திங்கள் அன்று
அகம் களங்கம் இல்லையே”
இப்பாடலில் சீதை நிலவைப்பார்த்து கோபமடைகிறாள். அதற்கு காரணம் காமன் எய்த
அம்பைப்போல் இந்த நிலவு எங்கிருந்து வந்து எனக்கு காமநோயைத் தருகிறது என்ற வேதனை.
அதனால் நிலவைக் குறைகூறுகிறாள்.
கம்பனோ கற்பனைக்கு அரசன். ஆதலால் செய்யுளுக்குள் செல்லுமுன் நாமும் சிறிது கற்பனை
நயத்துடன் செல்ல வேண்டும். சொல்லாற்றலும் சொற்களை எங்கு எப்படி பயன்படுத்தவேண்டும்
என்ற ஆளுமையும் மிக்க கம்பர் உபயோகிக்கும் சொல்லுக்கு தகுந்த பொருளைத் தேடவேண்டும்.
ஆதலால் பொங்குகின்ற கொங்கை என்பதில் பொங்கு என்பதற்கு என்ன பொருள் என பார்ப்போம்.
பொங்கு என்பதற்கு பல பொருட்கள் இருப்பினும் இங்கு விம்முகின்ற , புடைக்கின்ற அல்லது
பருக்கின்ற என்று பொருள் கொள்ளவேண்டும். நிலவு தேய்ந்து வளர்வதைப்போல் கொங்கையும்
உணர்ச்சியின்பால் சிறிதாகவும் பெரிதாகவும் மாறும் தன்மையுடையது. அதனால் தான் பொங்குகின்ற
கொங்கை என்றார் கம்பர். அடுத்ததாக விடம் பொழிந்தது என்பதில் பொழிந்தது என்பதற்கு தங்கியது
என்ற பொருள் வருவதுண்டு. எனவே விம்முகின்ற கொங்கையின்மேல் விடம்போன்ற கருமை
இருந்தாலும் இரவில் வரும் நிலவைப்போல் களங்கம் உடையதாக இல்லை என்கிறாள்.
இனி முழுதாய் இச்செய்யுளுக்கு பொருளைப் பார்ப்போம். “காமன் எய்த அம்பினால் ஏற்படும் காம
நோயைப்போல எங்கிருந்து வந்து இந்த நிலவு எனக்கு அந்நோயை ஏற்படுத்துகிறது. என்கொங்கையின்
மேல் விடம்போல் கருமை தங்கியிருந்தாலும் இரவில் வரும் இந்த நிலவைப்போல் களங்கம்
அதில் இல்லை”
இதைத்தான் சீதை கூறுவதாக கம்பர் சொல்கிறார். இதில் மார்பில் எங்கிருந்து ஒளி வீசுகிறது? கம்பர்
எப்படிப்பட்டவர் என்றால் எந்த ஒரு செய்தியைச் சொன்னாலும் அச்செய்தியில் சந்தர்ப்பம் கிடைத்தால்
காமத்தையும் நுழைத்துவிடுவார். இச்செய்யுளில் சீதையின் அப்போதைய சூழலைப் பயன்படுத்தி அத்தோடு
கொங்கையையும் நிலவையும் சம்பந்தப்படுத்தி தன் விளையாட்டைக் காட்டியுள்ளார். அவ்வளவுதான்.
அடுத்ததாக, “கண்ணீர் கோக்குமா மார்பகத்தில்?” என்ற இரண்டாவது கேள்விக்கு வருவோம். பொதுவாக
மார்பகத்தில் கண்ணீர் கோக்காது. ஆனால் கைகேயிக்கு மார்பில் கண்ணீர் கோத்தது என்பதில்
உண்மை இருக்கத்தான் வேண்டும். எப்படி என்றுபார்ப்போம். பொதுவாக பெண்கள், ஆண்கள் பலவீனமாக
இருக்கும்போது தாங்கள் நினைத்ததை அடைந்துவிடுவார்கள். பெண்கள் யாரும் என்மேல் கோபம்
கொள்ளாதீர்கள். பெண்ணடிமைச் சமுதாயம் இருந்த அந்நாளில் உண்டான வழக்கு இது. இப்போது
எப்படி என்பது அந்தந்த கணவன் மனைவியருக்கு மட்டுமே தெரியும். இப்படி ஆண் பலவீனமாக இருப்பது
அவன் பெண்ணிடம் தனித்திருக்கும் நேரம்தான். அப்படி தனித்திருக்கையில் பெண்ணும் ஆணும் ஆடை
நெகிழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி கைகேயியின் மேலாடை நெகிழ்ந்த நிலையில் கண்களில்
கண்ணீர் பெருக்கெடுத்து ஓட தன்மீது உண்மையிலேயே அன்பிருந்தால் தனக்கு தருவதாக வாக்களித்த
வரங்களை இப்போது தாருங்கள் என்று தசரதனை நிர்ப்பந்தப்படுத்தி வரங்களைப் பெற்றுக்கொள்கிறாள்
கைகேயி.
இந்த அருமையான சந்தர்ப்பத்தை விட்டுவிடுவாரா கம்பர். அங்கே தனது கற்பனையை உலவவிடுகிறார்.
கைகேயியின் பெருக்கெடுத்த கண்ணீர் கன்னத்தின் வழியேபாய்ந்து கீழே சிதறிவிழும்போது கைகேயியின்
கொங்கைமேல் படுகிறது. இப்படி கொங்கையின்மேல் விழுந்துதங்கிய கண்ணீரைத்தான் “கொங்கை கோப்ப”
என்கிறார் கம்பர். “கொங்கை கோப்ப” என்று வருவதால் கொங்கையில் கண்ணீர் கோக்குமா என்று
நேரடியான பொருள் காணுதல் கூடாது. ஊர் சிரிக்கிறது என்று சொல்லும்போது ஊர் சிரிக்குமா? என்று
நேரடியான பொருள் கொண்டு யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாக ஊரிலுள்ள மக்கள் சிரிப்பதைத்தான்
இவ்வாறு சொல்லும் வழக்கு என்பதை இலக்கணசான்றுடன் புரிந்து கொள்கிறோம். அதே கோனத்தில்தான்
இதையும் அணுகவேண்டும்.
கவி நயமிக்கவர்கள் தமிழோடு விளையாடுவார்கள். தமிழகத்தில் சிலகடைகளின் பெயர்ப்பலகைகள்
வித்தியாசமாக இருக்கும். ஜவுளிக்கடல், பழமுதிர்ச்சோலை போன்ற பெயர்களை அப்பெயர்ப்பலகைகள்
தாங்கி நிற்கும். ஜவுளிக்கடை, பழக்கடை என்றுதானே இருக்கவேண்டும். கடலுக்குள் ஜவுளி(துணி)
இருக்குமா அல்லது கடைக்குள் சோலை இருக்குமா? என்று யாரும் நினப்பதில்லை. மாறாக கடல் போன்ற
பெரிய துணிக்கடை என்றும் சோலை போன்று பழங்கள் நிறைந்த இடம் என்பதை எப்படி கவிநயத்துடன்
கடைக்கு பெயராக வைத்திருக்கிறார்கள் என்று பாராட்டுடிச்செல்வார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கே
இவ்வளவு கவி நயம் இருக்கும்போது கம்பரின் கவிநயத்தையும் திறனையும் சொல்லத்தேவையில்லை.
கொங்கை கோப்ப என்பதையும் கம்பர் இப்படித்தான் சொல்லியிருக்கிறார். கொங்கையில் கண்ணீர் கோக்க
வில்லை. கண்ணிலிருந்த விழுந்த கண்ணீர் கொங்கையில் தங்கியிருப்பதைதான் கொங்க கோப்ப என்கிறார்
கவிப்பேரரசான கம்பர். இதையுணர்ந்தே கொங்கையில் கண்ணீர் கோக்கும் என்ற கருத்தை தெளிவுடன்
தெரிவித்த திரு. ஏலையா க. முருகதாசன் அவர்களின் கருத்துக்கு நானும் உடன் படுகின்றேன்.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 2:25:34 AM5/29/17
to mint...@googlegroups.com
திருத்தம் திரு.பொன் சரவணன் அவர்களே! மின்தமிழ் குழுமத்தில் கம்பராமாயணத்தை அக்கு வேறு ஆணி வேராக படித்த பலர்  இருந்தும் நீங்கள்  கொங்கைகளைக் கண்கள் என நிறுவ முயற்சித்த உங்கள் அறிதலுக்கு சார்பாக அத்தகைய எவருமே நீங்கள் சால்வதுதான் சரியென எவருமே தமது கருத்தை இதுவரை பதிவு செய்யவில்லை.எங்கே உங்களைக் காணவில்லையே என நினைத்தேன் ஆனால் வந்துவிட்டீர்கள்.உங்களின் இப்பதிவின் முதல் பதிவாக அக்கினிக்குங்சு இணையத்தளத்தில் எழுத்தாள நண்பர் திரு.சங்கர சுப்பிரமணியம் அவர்கள் இட்ட பதிவை முதல் பதிலாக இட்டுள்ளேன்.

தொடர்வோம் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 29, 2017, 2:34:42 AM5/29/17
to mintamil

2017-05-29 11:55 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
திருத்தம் திரு.பொன் சரவணன் அவர்களே! மின்தமிழ் குழுமத்தில் கம்பராமாயணத்தை அக்கு வேறு ஆணி வேராக படித்த பலர்  இருந்தும் நீங்கள்  கொங்கைகளைக் கண்கள் என நிறுவ முயற்சித்த உங்கள் அறிதலுக்கு சார்பாக அத்தகைய எவருமே நீங்கள் சால்வதுதான் சரியென எவருமே தமது கருத்தை இதுவரை பதிவு செய்யவில்லை.எங்கே உங்களைக் காணவில்லையே என நினைத்தேன் ஆனால் வந்துவிட்டீர்கள்.உங்களின் இப்பதிவின் முதல் பதிவாக அக்கினிக்குங்சு இணையத்தளத்தில் எழுத்தாள நண்பர் திரு.சங்கர சுப்பிரமணியம் அவர்கள் இட்ட பதிவை முதல் பதிலாக இட்டுள்ளேன்.

தொடர்வோம் 

அன்பு நண்பருக்கு

வணக்கம். நீங்கள் தொடருங்கள்.

உங்கள் குறையைச் சுட்டிக்காட்டி உங்களைப் புண்படுத்த விரும்பாததால் நான் எனது பதில் ஏதும் சொல்வதாக இல்லை. :)))

எனக்கு அடுத்த கட்டுரை எழுத வேண்டிய வேலை இருக்கிறது.

உங்கள் தவறுகளை நீங்களே உணர்வீர்கள்.

மன்னிக்கவும்.

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 5:17:17 AM5/29/17
to mint...@googlegroups.com
நான் எந்தத் தவறும் விடவில்லை.கம்பர் எதைக் குறித்து எழுதினாரோ அதைத்தான் அது இதுதான் எனக் குறிப்பிட்டேன்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் மிகச்சிறந்த தமிழ்த்துறையைக் கொண்டது என பலராலும் உற்று நோக்ககின்ற பல்கலைக்கழகத்தில; பணிபுரிகின்ற கம்பராமாயணம் தொட்டு அனைத்து புரான இதிகாசங்களில் புலமைமிக்க பேராசியரை அல்லது புலவரைக்  கொண்டு கம்பர் கண்களைத்தான் கொங்கைகள் எனச் சொன்னார் எனச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

இன்னொன்று நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்  பட்டிமன்றங்களில் பங்கெடுப்பவர் தமிழ; இலக்கியத்தில்  நீச்சல்  அடிப்பவர் அவரின் மின்னஞ்சலையும் முனைவர் ஞானசம்பந்தன் அவர்களின்( சரவணன; மீனாட்சியில; இப்பொழுது நடிக்கிறார்) மின்னஞ்சலையும்  தந்து உதவ முடியுமா

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 29, 2017, 5:56:49 AM5/29/17
to mintamil

2017-05-29 14:47 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
நான் எந்தத் தவறும் விடவில்லை.கம்பர் எதைக் குறித்து எழுதினாரோ அதைத்தான் அது இதுதான் எனக் குறிப்பிட்டேன்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் மிகச்சிறந்த தமிழ்த்துறையைக் கொண்டது என பலராலும் உற்று நோக்ககின்ற பல்கலைக்கழகத்தில; பணிபுரிகின்ற கம்பராமாயணம் தொட்டு அனைத்து புரான இதிகாசங்களில் புலமைமிக்க பேராசியரை அல்லது புலவரைக்  கொண்டு கம்பர் கண்களைத்தான் கொங்கைகள் எனச் சொன்னார் எனச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

இன்னொன்று நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்  பட்டிமன்றங்களில் பங்கெடுப்பவர் தமிழ; இலக்கியத்தில்  நீச்சல்  அடிப்பவர் அவரின் மின்னஞ்சலையும் முனைவர் ஞானசம்பந்தன் அவர்களின்( சரவணன; மீனாட்சியில; இப்பொழுது நடிக்கிறார்) மின்னஞ்சலையும்  தந்து உதவ முடியுமா

2017-05-29 8:34 GMT+02:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

ஐயா

நான் கூறிய புதிய பொருட்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் புதியவை. இவற்றை யாரும் முன்னர் கூறவில்லை என்னும் நிலையில், யாரை நான் அணுகி ஆதரவு கேட்கச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

நீங்கள் சொந்தமாக உங்கள் கருத்தினை தரவுகளுடன் கூறி மறுக்கலாம். மற்றவர் கருத்தினை இங்கே பகிரத் தேவையில்லை. நீங்கள் நேர்மையான வாதத்திற்கு தரவுகளுடன் வாதிடத் தயார் என்றால் கூறுங்கள்.

நான் ரெடி. நீங்கள் ரெடியா?.:))

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 6:20:13 AM5/29/17
to mint...@googlegroups.com
ஆரம்பத்தில் இருந்து உங்களுக்கு ஒரு விடயத்தை கூறி வருகிறேன்.மனித குலம் என;று பேச ஆரம்பித்ததோ என்று எழுத ஆரம்பித்ததோ அன்றிலிருந்து மனித உடலில் இருக்கும் உறுப்புக்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு அழைத்மு வருகின்றது. கம்பரும் பெண்களின் தனத்தை கொங்கைள் எனக் குறிப்பிட்டார். அதனை தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டது. 

கண்களை மூக்குகள்  என்று இன்றிலிருந்து உலகத்தமிழர்கள் அழைக்கத் தொடங்கினால் அதை தவறென்று சொல்வீர்களா?.

மின் தமிழக் குழுமத்தில்  எழுதுபவர்கள் தமது சொந்த ஆக்க

--

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 6:25:55 AM5/29/17
to mint...@googlegroups.com
ஆரம்பத்தில் இருந்து உங்களுக்கு ஒரு விடயத்தை கூறி வருகிறேன்.மனித குலம் என;று பேச ஆரம்பித்ததோ என்று எழுத ஆரம்பித்ததோ அன்றிலிருந்து மனித உடலில் இருக்கும் உறுப்புக்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு அழைத்மு வருகின்றது. கம்பரும் பெண்களின் தனத்தை கொங்கைள் எனக் குறிப்பிட்டார். அதனை தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டது. 

கண்களை மூக்குகள்  என்று இன்றிலிருந்து உலகத்தமிழர்கள் அழைக்கத் தொடங்கினால் அதை தவறென்று சொல்வீர்களா?.

மின் தமிழக் குழுமத்தில்  எழுதுபவர்கள் தமது சொந்த ஆக்கங்களையும் எழுதுகிறார்கள். வேறு இடத்திலிருந்தும் பதிவிடுகிறார்கள். அது போலவே சங்கர சுப்பிரமணியம் எழுதியதை இங்கு பதிவு செய்திருந்தேன். 

நான் கம்பர் கூறியதை அவர் இதைத்தான் கூறினார் என எழுதினேன். ஆனால; கம்பர்  கூறியது  அதுவல்ல என்கிறீர்கள்.  நீங்கள்  கூறியதை புலமைமிக்கோர் சரியெனச் சொல்ல வையுங்களேன்.....

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 6:28:20 AM5/29/17
to mint...@googlegroups.com

அறிதலும் உண்மையையும் தொடர்ந்து…..3: …. } சங்கர சுப்பிரமணியன்.

May 24, 2017 7:17 am / by amuthan
இந்த கட்டுரையில் நாம் பேசப்போவது மூன்றாவது கேள்வி. அக்கேள்வி, இராமன் பார்த்தது
மார்பகமா? என்பது. காலம் செய்யும் கொடுமையைப் பார்த்தீர்களா? ஒருபக்கம் இராமனைக்
கடவுளாக வணங்குகிறார்கள். இன்னொரு பக்கம் அவர் பார்த்தது சீதையின் மார்பகமா
இல்லையா என்று பட்டிமன்றமும் நடத்துகிறார்கள். இராமன் சீதையின் மார்பகத்தைப்
பார்த்தான் என்றால் அது இராமனுக்கு அழகல்ல. கம்பருக்கும் அழகல்ல. இராமனை இழிவு
செய்யும் நோக்கம் கம்பருக்கும் இல்லை என்றால் இராமன் எதைத்தான் பார்த்தான்? ஒன்றை
தப்பு என்று சொல்லும்போது அதற்கு சரியான விடையை சொல்லியே ஆகவேண்டும்.
அந்தவகையில் திரு. ஏலையா க. முருகதாசன் அவர்கள் விடையைச் சொல்லியிருக்கிறார்
எனலாம்.
இதற்கு என் கருத்தைச்சொல்ல நான் குறிப்பிட்ட பாடலுக்குள் செல்லப்போவதில்லை. அதற்கு
பதிலாக கம்பர் எப்படிப்பட்டவர் என்பதையும் அவர் இராமனை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்
என்பதையும் கம்பராமாயணத்தில் வரும் அவரது இன்னொரு பாடலைக்கொண்டே உங்களுக்கு
தெளிவுபடுத்துகிறேன். அதன்பின் நீங்களே கம்பரின் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து
கொள்ளுங்கள்.
சீதையைத் தேடிப்போகும் அனுமனுக்கு இராமன் சீதையைப் பற்றிய அங்க அடையாளங்களைச்
சொல்கிறார். ஒருவர் தன்மனைவியைக் காணவில்லை என்று தேடும்போது இன்னொரு
ஆண்மகனும் உதவிக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த ஆணிடம்
மனைவியை தொலைத்தவர் எப்படி அங்க அடையாளங்களைச் சொல்வார். குள்ளமானபெண்
என்றோ அல்லது உயரமான பெண் என்றோ சொல்வார். நிறத்தைப் பற்றிசொல்வார். முடி என்ன
நிறம், என்னவிதமான உடை அணிந்திருந்தார் அந்த உடையின் நிறமென்ன என்றுதான் சொல்வார்.
இன்னும் வேண்டுமானால் என்ன நகை அணிந்திருந்தார் என்று கூடச்சொல்லலாம். ஆனால்
இராமன் அனுமனிடம் சீதையைப்பற்றி பாடல் ஒன்றில் சொல்லும் அடையாளங்களைப் பாருங்கள்.
“வார் ஆழிக் கலச கொங்கை
 வஞ்சிபோல் மருங்குலாள் தன்
 தார் ஆழிக் கலைசார் அல்குல்
 தடம் கடற்கு உவமை தக்கோய்
 பார் ஆழி பிடரில் தங்கும்
 பாந்தளும் பனி வென்று ஓங்கும்
 ஓர் ஆழித் தேரும் ஒவ்வா
 உனக்கு நான் உரைப்பது என்னோ”
மேற்காணும் பாடலில் உள்ளபடி சீதையின் அடையாளங்களை அனுமனிடம் சொல்லியிருக்கிறார்
இராமன். நான் சொல்லியிருப்பது ஒரு சோறுதான். இன்னும் ஒருபானைச்சோறு இருக்கிறது. இதைத்
தவிர அனுமன் ஒரு பிரம்மச்சாரி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு பிரம்மச்சாரியிடம்
பெண்ணைப்பற்றி அங்கஅடையாளங்களை எப்படிச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒரு எல்லை
உள்ளது அல்லவா? ஆனால் இரமன் இதற்கு எப்படி சொல்லியிருக்கிறார் என்பதையும் நாம் உணர
வேண்டும். நான் பொருள் சொல்வதைவிட நீங்களே பொருள் தேடினால் கம்பருக்கு இராமனை
இழிவுபடுத்தும் நோக்கம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
“தண்ணீர் தெளிப்பார்களா மார்பகத்தில்?” என்பதே அடுத்த கேள்வியாகும்.
இதற்கு முதலில் செய்யுளைப் பார்ப்போம்.
“கைகளால் தன் கதிர் இளங் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள்
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்”
மேலுள்ள பாடலில் முதல் வரியில் வரும் கதிர் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? கதிர் என்றால்
கூர்மை என்றொரு பொருள் உண்டு. இனி அப்பாடலின் பொருளைக்காண்போம். சூர்ப்பநகை தனது
கூரான இளங்கொங்கை மேல் குளிர்ந்த தண்ணீரை அள்ளித் தெளித்தாள். அப்படி அள்ளித் தெளித்த
நீர் சுற்றிலும் தீப்பிடித்தெரியும் பாறையில் வைத்த வெண்ணெய்போல் மறைந்து போயிற்று என்பதே
அப்பாடலின் பொருள். கதிர் இளங் கொங்கை என்பது மார்பகம் அல்ல என்றால் அது வேறு என்ன
என்று விளக்கமாகச் சொல்லி சந்தேகத்தைப் போக்கவேண்டும். குளிர்ந்த நீரை முகத்தில்தான்
அப்புவார்களேயொழிய மார்பகத்தில் அப்பிக்கோள்ள மாட்டார்கள் என்பதுவும் தவறு. அதற்குண்டான
காரணத்தை அதற்கு முன்வரும் பாடல்கொண்டு அறியவேண்டும்.
அதற்குமுன் வரும் பாடல்,
அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் ஓடி எனக் கொதித்து உன்னுவள்
பணை இன் மென் முலை பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்
சூர்ப்பணகை இராமனைக் கானகத்தில் கண்டு அவன்மேல் மோகம் கொள்கிறாள். அதனால் காமநோய்
வயப்படுகிறாள். அதனால் பருத்த அவளது மென்மையான இனிய முலையினை குளிர்ந்த காற்று மோத
அவளது அருமையான உயிர் வெப்பத்தினால் சூடேறுவதாக மேலுள்ள பாடலில் கடைசி இருவரிகளில்
விளக்குகிறார் கம்பர்.
உயிர் எங்கிருக்கிறது என்பதே இங்கு கேள்வி. நீ தான் என் உயிர் என்று சொல்லும்போது உள்ளங்கையை
நெஞ்சின் மேல் வைப்பார்களா அல்லது முகத்தின்மீது வைப்பார்களா? என் உயிருக்கும் மேலாய் உன்னை
நேசிக்கிறேன் என்று சொல்லும்போது கையை முகத்தின்மீது வைப்பார்களா அல்ல நெஞ்சின்மீது
வைப்பார்களா? எனக்குத் தெரிந்தவரை நெஞ்சில்தான் கைவைப்பார்கள். எனவே உயிராய் எண்ணும்
நெஞ்சின் மேல் குளிர்ந்த நீரை அள்ளித்தெளிக்கிறாள். அப்படி சொன்னாலே போதுமானது. ஆனால்
கம்பருக்கு நெஞ்சின் மேல் குளிர்ந்த நீரைத்தெளிக்கிறாள் என்றுமட்டும் சொல்லிவிட்டுப் போக மனமில்லை.
அப்படிச்செய்தால் அதில் ஒரு சிறப்பு இருக்காது. எனவே தனது கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு
கூரான இளங்கொங்கை மேல் குளிர்ந்த நீரை அள்ளித் தெளிப்பாதகச் சொல்லியிருக்கிறார்.
ஆகையால் தன் நெஞ்சில் எழுந்த வெப்பத்தை தணிக்க மார்பகத்தில் தண்ணீர் தெளித்ததாக சொன்னது
சரிதான். இன்னொன்று, இந்தவேளையில் சூர்ப்பணகையின் மூக்கு அறுபடவில்லை. அவள் செய்வதறியாதும்
மார்பின்மேல் தண்ணீரை தெளிக்கவில்லை தெரிந்தே தண்ணீரை மார்பின்மீது தெளித்தாள் என்பதையும்
தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

Kandiah MURUGATHASAN

unread,
May 29, 2017, 6:30:10 AM5/29/17
to mint...@googlegroups.com

அறிதலும் உண்மையையும் தொடர்ந்து…..4: } சங்கர சுப்பிரமணியன்.

May 29, 2017 7:16 am / by amuthan
வருந்தினால் கொதிக்குமா மார்பகம்? என்பதே ஐந்தாவது கேள்வி. முதலில் பாடலைப் பார்ப்போம்.
பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லன
நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையோ
மேலேயுள்ள கொதிக்கும் கொங்கை என்பதற்கு கொதிக்குமா மார்பகம் என்று குழம்பக்கூடாது.
இங்கே கொதிக்கும் என்பதற்கு வருந்தும் எனப் பொருள் காணல் அவசியம். ஒருவர் நமக்கு
நம்பிக்கை துரோகம் செய்தால் அந்த துரோகத்தை எண்ணி நெஞ்சு கொதிக்கிறது என்று
சொல்வதில்லையா? அப்படிப்பட்டதுதான் இந்த கொதிக்கும் என்பதும். அதாவது வேதனை அடைவதை
கம்பர் இப்படி சொல்கிறார். காதலியைக் காணாமல் கண் தேடுகிறது. நல்ல இன்னிசையை கேட்க
காது ஏங்குகிறது. காதலனைத் தேடி மனம் அலைகிறது. என்றெல்லாம் சொல்வதில்லையா? அது
போலத்தான் இதுவும். கண் தேடும், காது ஏங்கும், மனம் அலையும் என்பதை ஏற்றுக்கொண்டால்
கொங்கையும் அதற்குண்டான தேடலுக்காக வருந்தும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது பாடலின் பொருளைப் பார்க்கலாம். சோலையில் பூத்த மலர்களில் தேன் சொரிகின்றது.
அப்போது வண்டும்  தென்றலும் மெல்ல நுழைகின்றன. தலைவனைப் பிரிந்த தலைவியோ காம
நோயால் வாட கொங்கையும் வருந்தியது. இதுதான் அப்பாடலின் பொருள்.
என்ன அருமையான கற்பனை. சோலையில் பூத்த மலர்களில் தேன்சொரிய அதைக்குடிக்க வண்டு
வருகிறது. இதமான தென்றல் காற்று வீசுகிறது. ஆனால் இந்த தென்றலையும் வண்டையும் பார்த்த
தனித்திருக்கும் தலைவியை காமநோய் வாட்ட அந்த வேதனையால் கொங்கையும் வருந்துகிறது
என்கிறார் கம்பர். கொங்கை கொதிக்கும் என்பதை பிரிவால் கொங்கை வருந்தும் என்று கம்பர்
உருவகப்படுத்துகிறார் என்பது என் கருத்து. திரு. ஏலையா க. முருகதாசன் அவர்களோ ஏக்கத்தினால்
கொங்கை கொதிக்கும் என்கிறார். இவ்விடத்தில் அவரிடமிருந்து நான் மாறுபடுகிறேன்.
கடைசியாக, கொங்கைக்கும் கூந்தலுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விக்கு வருவோம். மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதென்பார்களே அப்படித்தான் இருக்கிறது இக்கேள்வியும்.
முதலில் பாடலைப்பார்க்கலாம்.
சிறு நிலை மருங்கின் கொங்கை
ஏந்திய செல்வம் என்னும்
நெறி இருங் கூந்தல் நங்கை
சீறடி நீர்க் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று
நடந்தன நவையுள் நீங்கும்
உறுவலி அன்பினூங்கு ஒன்று
உண்டு என உணர்வது உண்டோ?
இப்பாடலில் செல்வம் என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் மிகவும் சரியான பொருளைக் காணவேண்டும்.
அப்படிப் பார்க்குமிடத்து அழகு என்ற பொருளே பொருத்தமாய் அமைகிறது. சிற்றிடையின் கொங்கை
அழகிய சுருண்டு புரளும் கருங்கூந்தலை தாங்கிய பெண் என்பதே முதல் மூன்று வரிகளுக்கும்
சரியான பொருளாகும். செல்வம் என்ற சொல்லுக்கு செழிப்பு அல்லது பேறு என்பதைவிட அழகு என்பதே
இங்கும் மிகவும் சரியானது. கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்கு பொய் அழகு….கன்னத்தில் குழி அழகு….
கருங்கூந்தல் பெண் அழகு….என்ற கவிப்பேரரசின் பாடல் வரிகள் பொய்யாகுமா? சற்று கற்பனைபண்ணி
பாருங்கள். ஓர் அழகிய இளம்பெண் இருக்கிறாள். அவள் தலைமயிரை நீக்கி மொட்டை அடித்தால் அவள்
முன்பு இருந்தமாதிரி அழகாய்த் தெரிவாளா? நிச்சயம் அப்படித் தெரியமாட்டாள். பழங்காலத்தில் ஒரு வழக்கம்
இருந்தது. அதாவது கணவனை இறந்த மனைவியின் தலைமயிரை அகற்றி அவளுக்கு மொட்டை
அடிப்பதுதான். அதன் காரணம் என்னாவாக இருக்கும்? கணவனை இழந்த பெண்ணுக்கு அழகு தேவையில்லை
என்ற தவறான எண்ணமே காரணம். இன்னும் ஒரு பழக்கமும் நம்மில் இருந்திருக்கிறது. ஏதாவது குற்றம்
செய்தவருக்கு தண்டனையாக அவரது தலைமயிரை அகற்றி மொட்டை அடிப்பதுதான் அத்தண்டனை.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கூந்தலை செல்வம் என்று சொல்வதைவிட அழகு என்பதே சரி
என்பது தெள்ளத்தெளிவாகிறது.
அடுத்ததாக, பெண்கள் தலைமயிரை எடுத்து முன்னால் விரித்துப் போட்டுக்கொள்வது அவர்களுக்கு அழகல்ல
என்பதைப்பற்றி பார்ப்போம். பொதுவாக பெண்கள் மரணம் போன்ற பெருந்துயர நிகழ்வுகளில் மட்டுமே அப்படி
இருப்பர் என்ற கூற்றுக்கும் வருவோம். இப்பாடலில் சீதையின் நிலை என்ன? சீதை மகிழ்ச்சியான சூழலில்
இல்லை. தலையை வாரிமுடித்து அலங்காரம் செய்துகொண்டு இருக்க அவள் அரண்மனையில் இல்லை.
மாறாக வனம்புகுந்து மிகவும் துயரமான சூழலில் அல்லவா இருக்கிறாள். அப்படியிருக்கும்போது விரிந்து
கிடக்கும் தலைமயிர் முன்னால் கிடந்தால் என்ன பின்னால் கிடந்தால் என்ன? அதிலொன்றும் பெரிதாக
வித்தியாசம் இருந்துவிடப்போவதில்லை என்பதே என் கருத்து.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் நமது சந்தேகம் முற்றிலும் மறைய வாய்ப்புள்ளது. கைகேயியின் வரம்
இராமன் காடுசெல்ல வேண்டும் என்பது மட்டுமல்ல. காடுசெல்லும் இராமன் துறவுக்கோலம் பூண்டு தவம்
செய்யவேண்டும் என்பதும் ஆகும். இராமனோ சீதையை மிகவும் நேசிப்பவன். எந்த அளவுக்கு? சீதையை
அங்கம் அங்கமாக ரசித்து நேசிப்பவன். அப்படிட்டவன் வனம் புகுந்து துறவுக்கோலம் பூண்டுள்ள நிலையில்
தனது கொங்கைகளால் சலனமடைந்து விடக்கூடாது என்று சீதை நினைக்க வாய்ப்புள்ளது. அதனாலேயே
சிற்றிடையின் கொங்கை அழகிய கருங்கூந்தலை தாங்கிய பெண் என்று சீதையை வர்ணிக்கிறார் கம்பர்.
ஆதலால் சீதையின் கொங்கை அழகிய நெறித்த கருங்கூந்தலை ஏந்தியிருந்தது என்ற கம்பர் கூற்று சரியே
என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.
ஆனால் இராமன் சீதையை அங்கம் அங்கமாக நேசித்தவனா? என்ற சந்தேகம் பலருக்கு வரவாய்ப்புள்ளது.
அந்த சந்தேகத்தை தீர்ப்பது அவசியம். அவர்கள் சந்தேகத்தைப் போக்க இராமனைப்பற்றி கம்பராமாயணத்தில்
கம்பர் சொன்னதை இங்கே தருகிறேன். இராமன் சீதையை தேடிச்செல்லும் அனுமனுக்கு சீதையின் அங்க
அடையாளங்களை குறிப்பிடுகிறான். அப்படிச் சொல்லும்போது சீதையின் கொங்கையைப்பற்றி அனுமனுக்கு
எப்படி விவரிக்கிறான் என்பதை கீழ்க்காணும் பாடல் மூலம் காண்போம்.
செப்பு என்பென் கலசம் என்பென்
செவ் இள நீரும் தேர்வென்
துப்பு ஒன்று திரள் சூது என்பென்
சொல்லுவென் தும்பிக் கொம்பும்
தப்பு இன்றிப் பகலின் வந்த
சக்கர வாகம் என்பென்
ஒப்பு ஒன்றும் முலைக்குக் காணேன்
பல நினைந்து உலைவென் இன்னும்
இனி இந்த பாடலின் பொருளை தெரிந்து கொள்வோம்.
சீதையின் மார்பை சிமிழ் என்பேன். கலசம் என்பேன். ஆராய்ந்து பார்த்தால் இளநீர் என்பேன். பவளத்தில் கடைந்து
செய்யப்பட்ட சூதாட்டக்காய் என்பேன். அவற்றை யானைத்தந்தங்கள் என்றும் சொல்வேன். இரவில் வரும் சக்கர
வாகப்பறவை பகலில் வந்ததோ என்பேன். இதற்கு உவமையாக சொல்ல ஒன்றையும் இல்லையே என்று பலவிதமாக
நினத்து வருந்துகிறேன். இதுவே இப்பாடலின் பொருள். இப்போது இராமன் எப்படிப்பட்டவன் அவனது மனநிலை
என்ன என்பது புரிகிறதல்லவா?
இப்படிப்பட்ட இராமனின் மனநிலையை நன்று உணர்ந்த சீதை கானகத்தில் இராமன் தனது மார்பைப் பார்த்தால்
சபலமடைந்து துறவுநிலையை துறக்க நேரும் என்பதை உணர்ந்தாள். அதனால் இராமனைச் சலனமடையாது தடுக்க
தனது கொங்கைகளை மறைத்து அழகிய நெறித்த கருங்கூந்தலை கொங்கையில் ஏந்தினாள் சீதை என்பதைத்தான்
கொங்கை அழகிய கருங்கூந்தலை ஏந்தியிருந்தது என்று கவிவடித்திருக்கிறார் கம்பர். இதன் மூலம் கொங்கைக்கும்
கூந்தலுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது அல்லவா?
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 27, 2017, 9:04:24 AM6/27/17
to mintamil, Kalai Email

'எப்போதும் வென்றான்' அருள்மிகு சோலைசாமி கோயிலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்டீர் சிற்பங்கள் உள்ளன. யாரும் மேலாடை அணியவில்லை.  இரண்டு படங்களை இத்துடன் தகலுக்காக இணைத்துள்ளேன்.

TimePhoto_20170627_134900.jpg
TimePhoto_20170627_134915.jpg

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 27, 2017, 9:24:46 AM6/27/17
to mintamil

2017-06-27 18:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
யாரும் மேலாடை அணியவில்லை. 

ஹஹ்ஹ் ஹாஹா

சிலைகள் மேலாடை அணிவதில்லை. மனிதர்கள் தான். :))

மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம். கீழாடை வடிப்பது எளிது.

தேமொழி

unread,
Jun 27, 2017, 2:01:04 PM6/27/17
to மின்தமிழ்


On Tuesday, June 27, 2017 at 6:24:46 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

2017-06-27 18:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
யாரும் மேலாடை அணியவில்லை. 

ஹஹ்ஹ் ஹாஹா

சிலைகள் மேலாடை அணிவதில்லை. மனிதர்கள் தான். :))

மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம்.

 
எதனால் கடினம்?  சிற்பக்கலை வல்லுநர்கள் அவ்வாறு பதிவு செய்துள்ளனரா?!!

..... தேமொழி

Oru Arizonan

unread,
Jun 27, 2017, 2:08:34 PM6/27/17
to mintamil


2017-06-27 6:24 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

//மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம். கீழாடை வடிப்பது எளிது. //

 சரவணன் அவர்களே,

தாங்கள் தில்லை ஆடலரசன் கோவிலுக்குச் சென்றிருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.  கிழக்குவாசல் வழியாக நீங்கள் கோவிலுக்குள் நுழைந்தால், அங்கு நுழைவாசல் தூண்களில் பெண்கள் மேலாடையுடனுள்ள சிற்பத்தைக்காணலாம்.  

எல்லாச் சிற்பங்களும் மேலாடையின்றி வடிவடைக்கப்பட்டிருக்கும்போது, இந்த இரண்டு சிற்பங்கள் மட்டும் மேலாடையுடன் ஏன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று எனக்கு வெகுநாளாக ஐயமுண்டு.
  
தெரிந்தவர், அறிந்தவர் யாராவது விளக்கினால் நலம்.

சிற்பிகளுக்கு -- அதுவும் பல நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கீழாடையுடன் பெண்களின் சிற்பத்தைச் செதுக்கும் திறமையுள்ளபோது -- மேலாடையுடன் வடிவமைப்பது கடினம் என்று என்னால் நம்பமுடியவில்லை.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dr.Chandra Bose

unread,
Jun 27, 2017, 2:34:34 PM6/27/17
to mint...@googlegroups.com
பெண்களின் சிலைகளில் மேலாடை செதுக்குவது என்பது ஒரு விஷயமே அல்ல. ஹைதராபாத் ஜாலர்ஜங் அருங்காட்சியகத்தில் ரெபக்கா சிலையைப் பார்த்தால் இது புரியும். மேலாடை மட்டுமல்ல, முகத்தை மூடும் கண்ணாடி இழையிலானதொரு மேலாடை, அதனுள் தெரியும் நாணத்தில் மலரும் முகம் என அமர்க்களமாய் அசத்தும்.

Inline image 1Inline image 3
பெ.சந்திர போஸ்
முகாம் அட்லாண்டா.


--

N D Logasundaram

unread,
Jun 27, 2017, 5:31:19 PM6/27/17
to mintamil
மேலாடை  வடிப்பது எளிதல்ல  என்பதெல்லாம் கலை அறியாநிலை
மேலாடை அணிந்த புத்தபிரானின் படிமங்கள் நூற்றுக்கணக்கில் இல்லையா 

உண்மை சங்க கால பெண்டிர் மார்பகத்தில் யாரும் ஆடைகள் அணிவதில்லை 
12 ம் நூற்றாண்டு மன்னர்களின் பட்டத்தரசிகள் வரை  இதனில் சொல்வதற்கு என்ன வெட்கம் 

ஏ ன் பாவை விளக்கேந்தி நிற்கும் பொதுப்பெண்டிர்கள்  மட்டுமல்ல  வழி படும் தெய்வ படிமங்களும் கூட  மேலாடை கிடையாதே 

அதான்று 
தஞ்சை பெருவுடையார் கோயில் கருவறை யில்  கண்டெடுக்கப்பட்ட இராச ராசன் கால
ஓவியத்தில் ஓர் பொதுமகள் முழுதும் ஆடையின்றிதான் நடனம் ஆடும் காட்சி உள்ளது

துரியோதனன்தான் பெண்களின் ஆடையை பொது மன்றத்தில் அவிழ்த்தான் என்பதில் தவறாக காட்டுவது குலமகளிரை செய்ததால்தான் அதாவது பொதுமகளிருக்கே உடைய நிலைதனை குலப்பெண்களுக்கு ஏற்றுவதுதான் பிழை ஆகியது.

அதுவே பிற்காலத்தில் கோயிகளில்  ஆடையுடன் ஆடும் தேவதாசிகளாக உருவெடுத்துள்ளது

மேலும் இராச ராசன் காலத்தில் தோன்றியதும் இல்லை திருஞானசம்பந்தர் காலத்தில் (650 CE) கோயிலில் பெண்டிர்எல்லாரும் பார்க்க   நடனமாடினார் எனத்தான் பாடி ஆவணமாக்கியுள்ளார்
 
கேரளாவில் குறிப்பிட்ட இனத்தினர்மார்பகத்தில் ஆடைகள் ஏதும் அணியக்கூடாது எனும் சட்டமே இருந்து சென்ற நூற்றாண்டு வரை அதற்கு போராட்டங்கள் நடந்தான் எனபது பற்றி சிலஇழைகள் இங்கு சென்றனவே

 ஓர் செப்புப்பட்டயத்தில் பிற்கால நாயக்கர் காலத்தில் ஓர் சமூகத்தினர் கேட்க அரசாட்சியில் இருந்த ஓர் தலைவர் மார்பகத்தில் இனி அவர்களிலின் பெண்கள்  ஆடை அணிந்து கொள்ளலாம் என அறிவித்து ஆணை இடுகின்றான் எ னக்காணலாம்  இத்துடன் வீட்டிற்கு வெள்ளை அடித்துக்கொள்ளலாம் தெருவில் செல்லும்போது காலணி  அணிந்து கொள்ளலாம் என்பதெல்லாமு ம் அடங்கியுள்ளது மன்னனைத்தவிர மற்றோர் தலைக்கு மேல் குடை 
பிடிக்கஊடாது எனபது நீங்கவில்லை
 இந்நாளில் தப்பிரதமர் தவிர மற்றோர் வாகனங்களின் மேல் சூழல் விளக்குக கூடாது  என்பதைப்போல் 

இன்றும் ஆண்கள் இடைக்கு மேல் ஆடையின்றி பல கோயில்களுக்கு உள்  செல்ல முடியாதல்லவா? ஏ னோ பெண்களுக்கு வில க்களித்துள்ள நிலை உள்ளது சிறப்பு 

ஓர் முறை ஆண்டாள் நாச்சியார் கோயிலில் நடமாடுபவள்தான் என எழுதியதை திரு கண்ணன் அவர்கள் விவேகம் இன்றி சினம் கொண்டார்  ஏனெனில் பிற்காலத்தில் அந்த கோயிலில் நடமாடுவளை யே தெலுங்கர்கள் ஆட்சியில் தெய்வமாக்கி தனிக்கோயில் கூட கட்டி  யுள்ளனர் ஏன் திரு வ ரங்கத்தில் துலுக்க(முகம்மத) நா ச்சியாருக்கும்  ஓர் சன்னதி உள்ளது நாச்சியார் என்ற சொல்லுக்கு  நடனம்ஆ டுபவள் கூத்தியார் எ ன்றுதான்  பொருள்  MR இராதா  அவர்கள் ஓர் திரைப்படத்தில் ஒரு மகளிரை ஆண்டாளு    எனத்தான்வழங்கும் உட்பொருளுடன்  கேலியாக அழைப்பர் 
 
மாணிக்க வாசகர் தன்  திருவெம் பா வையில்  இந்த  பாவை நோன்புநோர் போ ரை 
கோயில் பிணாப்பிள்ளைகாள் எனவே குறிப்பார் 
" பெண்ணும் பிணாவும் மகட்குரிய"62" மரபியல் >>  தொல்காப்பியம் 

  பாவைகள் என்றால் பெருந்தலைவர்கள் தங்களுக்கு எடுபிடி வேலைகளுக்கு வைத்துக்கொண்ட குல மகளிரல்லாதவர்  வேண்டிய இடத்தில் விளக்கினை தூக்கிச் செல்ல அரசவையில் கவரி வீச என பற்பல அது அந்தக்கால நிலைமை 

மார்பில் கச்சு மட்டும்  அணிவது மிகவும் பிற்காலம் 

இந்நாளைய பார்வையிலிருந்து முன்னாளைப்பார்ப்பது முரணாபாடாகத்தெரிவது ஒன்றும் புதிதல்ல  இந்த மடலாடல் குழுவில் பெண்ணின் உறுப்பு பற்றி பேசுவதே எதோ பெரிய பிழை என விவேகம் மிக்க இந்த மடலாடல் குழுவில் இழைகள் சென்றன நினைவு 

லஜ்ஜ கவுரி (&&)எனும் ஓர் வகை சக்தியில் வழிபாடாகக் காட்டும்  படிமங்கள் தமிழகத்து கோயில் தூண்களை பற்பல உள்ளனவே  தொல்லியலாளர் நாகசாமி அவர்கள் வலைதளத்தில் ஆய்வுக்க ட்டுரை  கூட உள்ளது 

இந்த லஜ்ஜை கவு ரி பற்றி அகோம் (அசாம்) மாநிலத்தில் தலைநகர் கவுகாத்தி யில் உள்ள மிகவும் பேர்பெற்ற  காமாக்கியா கோயிலே இந்த லஜ்ஜகவு ரிதானே  இவைகளை அறிந்தால் இந்த மூட நம்பிக்கைகளை தொடர நி னைக்கும் அதனாலேயே வாழ்வு நடத்தும் சமூகத்தினையும் என்ன என்று சொல்வது.  இந்த காமக்கிய கோயில் மாதத்தில் மூன்று நாட்கள் மூடி இருக்குமாம்  
(&&) 
கீழே செல்ல



 











(&&) 
ஓர் பெண் தன இரு கால்களை நன்றாக  விரித்து பால்குறியைக்கட்டும் நிலை தான் லஜ்ஜ கவுரி 
இது வணங்கப்படும் மரபு 
 படமாகப்பார்க்கச் செல்ல 
கவனிக்க
 விவேகத்துடன் செயல்படுக 






நூ த லோ சு
மயிலை

--

செல்வன்

unread,
Jun 27, 2017, 7:57:50 PM6/27/17
to mintamil
செம்பியன்மாதேவி

10ம் நூற்ராண்டு உருவச்சிலை



பிற்கால சோழர் கால சீதை சிலை



--

செல்வன்

செல்வன்

unread,
Jun 27, 2017, 8:08:39 PM6/27/17
to mintamil
கண்னனுக்கு பாலூட்டும் யசோதை. பிற்கால சோழர் சிற்பம்





பெரியகோயில் பிற்கால சோழர் கால ஓவியங்கள்


மாமல்லபுரத்தில் பல்லவ மகேந்திரவர்மன் தன் இரு மனைவியருடன்



சிம்மவிஷ்ணு பல்லவர். இரு மனைவியருடன்



ராஜ ராஜ சோழன், மனைவியருடன். பெரிய கோயில் ஓவியம்

Innamburan S.Soundararajan

unread,
Jun 27, 2017, 9:07:10 PM6/27/17
to mintamil
இந்த இழை தமிழ்மொழியின் மேலாடையை உரிக்கும் என்ற தோற்றம். தமிழ் மரபு அறக்கட்டளை இதை மின்மேடையில் ஏற்றி அழகு பார்க்க விழையலாம்.

iraamaki

unread,
Jun 27, 2017, 9:13:50 PM6/27/17
to mint...@googlegroups.com
பெண்கள் மட்டுமில்லை. ஆண்களும் நெடுங்காலம் தமிழ்நாட்டில் (சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் அலங்காரமாய் இருந்ததன்றி) இடுப்பிற்குமேல் ஏதும் துணி அணியாதுதான் இருந்தார். நண்பர் வேந்தன் சரவணன் 13 ஆம் நூற்றாண்டு மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புக்களைப் படிக்கவேண்டும்.  சுந்தரபாண்டியனைப்பற்றி தன் கண்டதையும் கேட்டதையும் மார்க்கோபோலோ விவரிப்பான். தமிழகம் முழுதும் ஆண்ட, தக்கணத்தில் சிலபகுதியையும் கைப்பிடித்த, சோழர் பரம்பரையை முற்றிலும் பூண்டோடு ஒழித்த, ஆனானப்பட்ட பேரரசனே சட்டை போடாதுதான் நின்றிருக்கிறான். அதை இழுக்கென்று யாரும் எண்ணவில்லை. அது அந்தக்காலப் பழக்கம். அவ்வளவு தான்.
 
நுட்பியல் அவ்வளவு விரிவடையாத காலத்தில் வெயில் கொளுத்தும் இடத்தில் இடுப்பிற்குமேல் சட்டை போடுவது இயல்பாய் இருக்கமுடியுமா? மேற்சட்டைப் பழக்கம் குளிர்மிகுந்த நாடுகளிலும், மணல்வாரிக் காற்றுவீசும் பாலைநாடுகளிலும் தான் உலகில் முதலிலெழுந்தது. வெளிநாட்டவர் நம் நாட்டிற்கு வந்த பின்னால் பல நூற்றாண்டுகள் கழித்துக் கொஞ்சங்கொஞ்சமாய்ப் பழக்கம்மாறி நாம் மேலாடை போட்டுக்கொண்டோம்.
 
மேற்பாதி அம்மணமாய் நாம் கருப்பாயிருந்ததைப் பார்த்தே ”நாகர்/நக்கர் என்றால் இப்படியிருப்பார்” என்ற பொருள் அவர் மொழிகளில் ஏறியது.  நக்கர் என்ற நம் சொல் இன்று உலகெங்கும் அவரால் பரவிவிட்டது. அதை இன்னொரு நாள் சொல்கிறேன். 
 
கருப்பு என்றுமே நமக்கு அழகுதான். சிவப்பைத் தேடுவது நம்மேற் சுமத்தப்பட்ட பழக்கம்.
 
அன்புடன்,
இராம.கி.  
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 28, 2017, 12:25:15 AM6/28/17
to mintamil
அன்புப் பெரியோர்களுக்கு

பெண்களின் சிலைகளை மேலாடையின்றி வடிப்பது அக்காலத்து கலைமரபாக இருக்கலாம்.

இதை ஆதாரமாகக்கொண்டு பெண்கள் மேலாடையே அணியவில்லை என்று முடிவு கட்டுவது எப்படி சரியாகும்?

பெண்கள் மேலாடை அணியவில்லை என்று இலக்கிய ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். நிற்க,

நான் இந்த இழையின் துவக்கத்திலேயே எனது கட்டுரையில் ஏராளமான ஆதாரங்களைக் காட்டி சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தார்கள் என்று நிறுவியிருக்கிறேன்.

தயவுசெய்து அதைப் படித்துவிட்டு மாற்றுக்கருத்து இருந்தால் / தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் ஆதாரங்களுடன்.



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Kandiah MURUGATHASAN

unread,
Jun 28, 2017, 8:03:04 AM6/28/17
to mint...@googlegroups.com
அன்புடன்  திருத்தம் திரு.பொன்.சரவணன்  அவர்களே!

தமிழர்களின் வரலாறு சங்க காலத்துடனா ஆரம்பித்தது இல்லையே.அப்படியிருக்கையில் ஏதோ திருத்தம் செய்கிறேன் என வரல◌ாற்று உண்மைகளை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது  அந்தந்த சமகால நிகழ்வுகளை மறைக்க முயற்சித்து திருந்தாத சரவணனாக உங்களை நிறுவி வருகிறீர்கள். கொங்கைகளை கண்கள; எள்று சொல்லிக் குழம்பினீர்கள். இபபொழுது சங்ககாலத் தமிழ்ப; பெண்கள் மேலாடை அணிந்தார்களா எனச் சொல்லிக் குழும்பத் தொடங்கியிருக்கின்றீர்கள்.

உங்கள; பதிவுக்கு தமது கருத்துக்களை  நிரூபணத்துடன் பதிவிட்டவர்களை நோக்கி நக்கலாக சிலைகள் எப்பொழுது மேலாடை அணிந்தது எனக் கேட்டுள்ளீர்கள்.

தமிழர் வரலாற்றுப் பதிவு ஊடகமாக சிலைகள் கற்பாறைகளில; எழுதுதல் ஓலைச் சுவடிகள் பின்னர் காகிதம் இப்பொழுது கணிணி என வளரச்சி பெற்றுள்ளது.

தமிழர் வரலாற்றைக் காவிச் செல்லும் ஊடகங்களாக இருந்தவை அந்தந்த சமகால சம்பவங்களை மேற்கூறப்பட்ட ஊடக  படிமுறை வளரர்ச்சிப் பாதையில் அதற்குரிய தளத்தில் பதவிட்டிருக்கின்றன. மேலாடை இல்லாமல; செதுக்கப்பட்ட பெண்களின் சிலைகளாகட்டும் ஓவியங்களாகட்டும்  சமகாலப் பதிவுகளே.

காடுகளின் திரிந்த மனிதர்களே  ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிர்வாணமாகத்தான் திரிந்தார்கள் தமிழர்கள் அதற்கு விதிவிலக்கல்ல.

சங்ககாலத்திற்கு முந்திய காலத்தில் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்கள். தமிழர்களின் வரலாறு  சங்ககாலத்திலிருந;தா ஆரம்பித்தது?

LNS

unread,
Jun 28, 2017, 8:11:31 AM6/28/17
to மின்தமிழ், minT...@googlegroups.com
அருமையான இடுகை. ஒப்புதற்குரிய மேற்கோள்கள்.

ஆயினும் சிந்திக்கத்தக்க சில விஷயங்கள். மேலாடை யார் அனிந்தார்கள், எந்த சந்தர்ப்பத்தில் அணிந்தார்கள் என்பதைப் பற்றி தெளிவாக தெரிய வேண்டி இருக்கிறது.

நீங்கள் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் மேற்குடி பெண்டிர் சம்பந்தப்பட்டவையா? அல்லது சங்கச் சமூகத்துக்கே பொதுவானவையா? மேலாடை உடுத்துவது எல்லா சூழ்நிலையிலுமா அல்லது பொதுவிடங்களில் இருக்கும்போது மட்டுமா?

உதாரணமாக, இன்றைய சவுதி அராபியாவில் மகளிர் பொதுவாக 'நிக்காப் ' என்ற முகமூடி (veil) அணிவது வழக்கம். ஆனால் வீட்டுக்குள்ளோ அல்லது மகளிர் நடுவில் இருக்கும்போதோ அணிவதில்லை. சவுதி திரைப்படங்களில் நடிகையர் பொதுவிடங்களில் மட்டும் நிக்காப் அணிவதைக் காணலாம். சங்க காலத்து மேலாடையும் இந்த மாதிரி ஒன்றா?

அன்புடன்,

Srini

Kandiah MURUGATHASAN

unread,
Jun 28, 2017, 8:18:21 AM6/28/17
to mint...@googlegroups.com
லிங்கமாய் ஆண்குறியும் பீடமாய் பெண்குறியும் இருக்கும் லிங்க வழிபாடு போல பெண்குறியை வழிபடும் மறை இந்தியாவில் அசாம்  மாநிலத்தில் இருப்பது உண்மையே. திருவள்ளுவரும்  வாத்சணாயரும் என்ற கட்டுரைக்காக தேடிய போது பெண்குறியை வழிபடம் சிலைகளை கண்டறிய முடிந்தது.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 28, 2017, 8:25:05 AM6/28/17
to mintamil

2017-06-28 17:41 GMT+05:30 LNS <lns2...@gmail.com>:
அருமையான இடுகை. ஒப்புதற்குரிய மேற்கோள்கள்.

ஆயினும் சிந்திக்கத்தக்க சில விஷயங்கள். மேலாடை யார் அனிந்தார்கள், எந்த சந்தர்ப்பத்தில் அணிந்தார்கள் என்பதைப் பற்றி தெளிவாக தெரிய வேண்டி இருக்கிறது.

நீங்கள் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் மேற்குடி பெண்டிர் சம்பந்தப்பட்டவையா? அல்லது சங்கச் சமூகத்துக்கே பொதுவானவையா? மேலாடை உடுத்துவது எல்லா சூழ்நிலையிலுமா அல்லது பொதுவிடங்களில் இருக்கும்போது மட்டுமா?

உதாரணமாக, இன்றைய சவுதி அராபியாவில் மகளிர் பொதுவாக 'நிக்காப் ' என்ற முகமூடி (veil) அணிவது வழக்கம். ஆனால் வீட்டுக்குள்ளோ அல்லது மகளிர் நடுவில் இருக்கும்போதோ அணிவதில்லை. சவுதி திரைப்படங்களில் நடிகையர் பொதுவிடங்களில் மட்டும் நிக்காப் அணிவதைக் காணலாம். சங்க காலத்து மேலாடையும் இந்த மாதிரி ஒன்றா?

அன்புடன்,

கருத்துக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மையில் மேலும் ஆராயத்தக்கவையே. இருப்பினும்,

சங்ககாலத்திலும் சரி, அதற்கடுத்த திருக்குறள் காலத்திலும் சரி, பெண்கள் மேலாடை அணிவது பொதுவழக்காகவே இருந்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

நமது சங்ககாலப் பெண்களும் கூட வடமாநிலங்களில் இன்றும் பின்பற்றுவதைப் போல பாதி முகத்தினை மேலாடை கொண்டு முகத்திரையாக மூடி வாழ்ந்தவர்கள் தான். இப்போது தமிழ்நாட்டில் அப்பழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது.

காலப்போக்கில் நமது தமிழர்கள் இழந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிகப்பல. :((

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 28, 2017, 8:42:25 AM6/28/17
to mintamil

2017-06-28 17:32 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
மேலாடை இல்லாமல; செதுக்கப்பட்ட பெண்களின் சிலைகளாகட்டும் ஓவியங்களாகட்டும்  சமகாலப் பதிவுகளே

இந்தக் காலத்தில் கூட புதியதாக பல கோவில்களில் பெண் சிலைகளை மேலாடை இன்றி வடித்திருக்கிறார்கள்.

ஏன், உலோகத்திலும் மரத்திலும் கூட மேலாடை அணியாத பெண் சிலைகள் பல உள்ளன.

அப்படியென்றால்..

இந்தக் காலத்திலும் பெண்கள் யாரும் மேலாடை அணியவில்லையோ?.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 28, 2017, 8:52:27 AM6/28/17
to mintamil

2017-06-28 17:48 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
லிங்கமாய் ஆண்குறியும் பீடமாய் பெண்குறியும் இருக்கும் லிங்க வழிபாடு போல பெண்குறியை வழிபடும் மறை இந்தியாவில் அசாம்  மாநிலத்தில் இருப்பது உண்மையே. திருவள்ளுவரும்  வாத்சணாயரும் என்ற கட்டுரைக்காக தேடிய போது பெண்குறியை வழிபடம் சிலைகளை கண்டறிய முடிந்தது.

கடந்த 100 ஆண்டுகளில் வரையப்பட்ட பெண்களின் நிர்வாண ஓவியங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கும்.

வேண்டுமானால் தருகிறேன். இவற்றைச் சமகால வரலாற்றின் பதிவுகள் என்று கொண்டால்...

20 ம் நூற்றாண்டுப் பெண்கள் ஆடை அணியாமல் நிர்வாணமாகவே வாழ்ந்தனர் என்று பொருள்கொள்ள வேண்டுமா?.

சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பதிவுசெய்தவை. காமத்தை அல்ல.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 28, 2017, 9:47:00 AM6/28/17
to mintamil

2017-06-28 9:55 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
அன்புப் பெரியோர்களுக்கு

பெண்களின் சிலைகளை மேலாடையின்றி வடிப்பது அக்காலத்து கலைமரபாக இருக்கலாம்.

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண் சிலை

லலித் கலா அகாதமி வெளியீடான “லலித் கலா” என்னும் ஆங்கில இதழில் (Lalit Kala -A Journel of Oriental Art- Chiefly Indian) 1988 ஆம் ஆண்டு  (இதழ்-23) வெளி வந்தவை. தமிழில் அரவக்கோன்

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலை படைக்கப்பட்ட காலம் தொடர்பான இருவேறு கருத்துக்களை முன்வைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை களுக்குள் போகும் முன் அந்த சிலை சார்ந்த சில விவரங்கள் படிபோர்க்கு விளக்கமும் தெளிவும் பெற உதவும் என்பதால், தொடக்கமாக அச்சிலை பாதுகாக்கப்படும் பாட்னா அருங்காட்சியகத்து விளியீட்டில் (2012) கூறப் பட்டிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

“வரலாற்றில் நமக்குக் கிட்டும் செய்திகள் தற்செயலாக ஒன்றுக்கு ஒன்று தொடர் புடையதாக அமைவதுண்டு. புகழ்பெற்ற சாமரம் சுமக்கும் பெண் சிலை உண்மையில் நமக்குக் கிட்டிய ஒரு அரிய சிலைதான். 1917 இல் (99ஆண்டு களுக்கு முன்னர்) குலாம் ரசூல் என்பவர் பாட்னா திதர்கஞ்ச் கங்கை நதிக் கரையில் தற்செயலாக மணலிலிருந்து எழும்பியிருந்த கல்மேடையைக் கண்டார். ஆர்வம் காரணமாக  சுற்றியிருந்த மணலை அப்புறப்படுத்திய போது அந்த கல் மேடை உண்மையில் ஒரு சிலையின் அடிப்பகுதி என்பது தெரியவந்தது.

அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்தவிதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்லது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன..

“ஆனால் மக்களிடையே செவிவழியே வழங்கிவரும் கதை ஒன்றும் உண்டு. அது சிறிது கற்பனை கூடியது, சுவையானதும்கூட. பாட்னா நகரத்துச் சலவைத் தொழிலாளர் கங்கைக் கரையில் மணலுக்கு மேலே எழும்பியிருந்த ஒரு கற்பரப்பில் துணி துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு தினம் அருகில் அமைந்திருந்த ‘யட்சி’ ஆலயத்திலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியேறுவதைக் கண்ட சிலர் அதைப் பின்தொடர்ந்தனர். அந்த சர்ப்பம் கல்பரப்பிற்கருகில் இருந்த ஒரு பொந்தில் நுழைந்து மறைந்து போனது.  கிராமத்து மக்கள் கல் மேடையைச் சுற்றியிருந்த  மணலை அப்புறப்படுத்திய போது அது புதைந்துகிடக்கும் ஒரு சிலை என்பதைக் கண்டனர்.” இவ்வாறு பாட்னா அருங்காட்சியக வெளியீடு குறிப்பிடுகிறது

ஒற்றைக்கல்லில் (chunar sand stone) வடிக்கப்பட்ட இந்தச்சிலையை பார்வையாளர் சுற்றிவந்து அனைத்துக்கோணங்களிலும் பார்க்கமுடியும். பலகாலம் புதைந்து கிடந்ததால் அதன் இடக்கை உடைந்து மூளியாகிவிட்டது. நாசியின் முனையும் சிதைந்து விட்டது. இதன் உயரம் 5அடி 2அங்குலங்கள்.  அது 1அடி 71/2 அங்குலம் அளவுள்ள கற்பீடத்தின்மேல் நிற்கிறது.

செல்வன்

unread,
Jun 28, 2017, 10:45:45 AM6/28/17
to mintamil
2017-06-28 7:52 GMT-05:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2017-06-28 17:48 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
லிங்கமாய் ஆண்குறியும் பீடமாய் பெண்குறியும் இருக்கும் லிங்க வழிபாடு போல பெண்குறியை வழிபடும் மறை இந்தியாவில் அசாம்  மாநிலத்தில் இருப்பது உண்மையே. திருவள்ளுவரும்  வாத்சணாயரும் என்ற கட்டுரைக்காக தேடிய போது பெண்குறியை வழிபடம் சிலைகளை கண்டறிய முடிந்தது.

கடந்த 100 ஆண்டுகளில் வரையப்பட்ட பெண்களின் நிர்வாண ஓவியங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கும்.

வேண்டுமானால் தருகிறேன். இவற்றைச் சமகால வரலாற்றின் பதிவுகள் என்று கொண்டால்...






செம்பியன்மாதேவி சோழ அரசி. அவரது மேலாடை அணியாத சிலை சோழர்களாலேயே செதுக்கபடுவது அன்றைய உடையை தெளிவாக காட்டுகிறது. ராஜராஜனும் அவனது மனைவியரும் மேலாடை இன்றியே நிற்பதை காணலாம்.
 

தேமொழி

unread,
Jun 28, 2017, 2:24:19 PM6/28/17
to மின்தமிழ்


On Wednesday, June 28, 2017 at 5:25:05 AM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:

2017-06-28 17:41 GMT+05:30 LNS <lns2...@gmail.com>:
அருமையான இடுகை. ஒப்புதற்குரிய மேற்கோள்கள்.

ஆயினும் சிந்திக்கத்தக்க சில விஷயங்கள். மேலாடை யார் அனிந்தார்கள், எந்த சந்தர்ப்பத்தில் அணிந்தார்கள் என்பதைப் பற்றி தெளிவாக தெரிய வேண்டி இருக்கிறது.

நீங்கள் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் மேற்குடி பெண்டிர் சம்பந்தப்பட்டவையா? அல்லது சங்கச் சமூகத்துக்கே பொதுவானவையா? மேலாடை உடுத்துவது எல்லா சூழ்நிலையிலுமா அல்லது பொதுவிடங்களில் இருக்கும்போது மட்டுமா?

உதாரணமாக, இன்றைய சவுதி அராபியாவில் மகளிர் பொதுவாக 'நிக்காப் ' என்ற முகமூடி (veil) அணிவது வழக்கம். ஆனால் வீட்டுக்குள்ளோ அல்லது மகளிர் நடுவில் இருக்கும்போதோ அணிவதில்லை. சவுதி திரைப்படங்களில் நடிகையர் பொதுவிடங்களில் மட்டும் நிக்காப் அணிவதைக் காணலாம். சங்க காலத்து மேலாடையும் இந்த மாதிரி ஒன்றா?

அன்புடன்,

கருத்துக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மையில் மேலும் ஆராயத்தக்கவையே. இருப்பினும்,

சங்ககாலத்திலும் சரி, அதற்கடுத்த திருக்குறள் காலத்திலும் சரி, பெண்கள் மேலாடை அணிவது பொதுவழக்காகவே இருந்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

 

நமது சங்ககாலப் பெண்களும் கூட வடமாநிலங்களில் இன்றும் பின்பற்றுவதைப் போல பாதி முகத்தினை மேலாடை கொண்டு முகத்திரையாக மூடி வாழ்ந்தவர்கள் தான். இப்போது தமிழ்நாட்டில் அப்பழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது.

அதாவது அப்பொழுதே பண்பாட்டைக் காட்டாத, முகத்திரையிடாத பெண்கள் சிலை, ஓவியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன !!!!!!!

 

காலப்போக்கில் நமது தமிழர்கள் இழந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிகப்பல. :((


அடாடா!!!  இதற்கெல்லாமா வருத்தப்படுவது?  விட்டால் கத்தி கேடயம் கொண்டு போருக்குச் செல்லும் பண்பாட்டையும் இழந்துவிட்டோம் என்று வருந்துவீர்கள் போலிருக்கிறது!!

பண்பாடு என்றால் முன்னோர் பழக்கவழங்களை  நகலெடுப்பது என்பது என்ற புரிவால் விளைவது இந்த வருத்தம். 

வாழ்வில் பண்பட்டு முன்னேறுவதில்  இருக்கிறது பண்பாடு 

..... தேமொழி

Suba

unread,
Jun 28, 2017, 3:55:25 PM6/28/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இந்த இழை மீண்டும் அதே வகை கருத்தாடல்களுடன் செல்கின்றதே.. :-)

முன்னர் நான் வழங்கிய செய்திகள், குறிப்பாக மார்க்கோபோலோவின் குறிப்புக்கள்,  லூத்தரன் பாதிரிமார் ஓவியங்கள், சோழர்கால இளவரசிகளின் சிலை வடிவங்கள் என்பவற்றோடு இப்போது சில நண்பர்கள் வழங்கியிருக்கும் செய்திகளையும் சேர்த்து ஒரு தனிப்பதிவே உருவாக்கலாம் தமிழகப் பெண்களின் மேலாடை அணியும் நிலை பற்றி.

அண்மையில் பிரான்சு தேசிய நூலகத்து மின்னாக்கத்தில் ஒரு நூலைக் கண்டேன். இது தமிழகத்தின் மக்களின் ஆடை உடுத்தும் நிலையைக் காட்டும் நூல். 1830ம் ஆண்டில் வரைந்து உருவாக்கப்பட்டது. இதில் தொழில் நிலையில் வெவ்வேறு சாதிக்குழு என்ற அடிப்படையில் பெண்கள் சேலையோடு மேலாடை அணிந்திருக்கின்றார்களா என்பதை வேறுபடுத்திக் காட்டும் படங்கள் உள்ளன. சில சாதி பெண்கள் போட்டிருக்கின்றார்கள். சில சாதியினர் மேலாடை அணியவில்லை. சேலையால் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 

சில சாதி மக்களை மேலாடை அணிய சாதிச்சூழல் அனுமதிக்காத சூழல் இருந்திருக்கின்றது என்பதை ராஜம் அம்மையார் தொடக்கிய இழையிலும் விவாதித்தோம்.
 
சுபா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 29, 2017, 12:36:30 AM6/29/17
to mintamil

2017-06-29 1:25 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
சில சாதி மக்களை மேலாடை அணிய சாதிச்சூழல் அனுமதிக்காத சூழல் இருந்திருக்கின்றது என்பதை ராஜம் அம்மையார் தொடக்கிய இழையிலும் விவாதித்தோம்.

அன்புடையீர்,

நான் எனது கருத்துக்களை மிகத் தெளிவாகவே பதிவுசெய்து விடுகிறேன்.

1. சங்ககாலத்தில் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்திருந்தனர். இதனை நான் எனது ஆய்வுக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவி இருக்கிறேன்.

2. திருக்குறள் எழுந்த காலகட்டத்திலும் கூட பெண்கள் மேலாடை அணிந்திருந்தனர். முலைமேல் துகில் என்று வள்ளுவர் கூறுவதே இதற்குப் போதுமான சான்றாகும்.

3. இதனை அடுத்த வந்த காலங்களில் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய உணர்வுகள் மிகவும் தலையெடுத்து உயர்வு தாழ்வு பாராட்டத் துவங்கினர். விளைவு?. ஒருவரையொருவர் அசிங்கப்படுத்திக்கொள்ள, ஒரு குலம் சார்ந்த பெண்களையும் ஆண்களையும் மேலாடை அணிய மறுத்து அடக்கி ஆண்டு வந்தனர்.

4. தமிழரின் ஆடை வரலாறு மிகவும் நெடியது. அதைப்பற்றி விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

5. ராஜராஜ சோழன் மிகப்பெரிய மன்னனாக இருக்க, அவனது மனைவியர் மேலாடை இன்றி இருப்பார்களா?. ஏதோ ஒரு ஓவியத்தை யாரோ சொல்லிவிட்டார்கள் என்று கண்ணைமூடிக் கொண்டு நம்புவதனை என்னவென்று சொல்வது?

6. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. இது அனைத்து ஆதாரங்களுக்கும் பொருந்தக் கூடியதே.

Nagarajan Vadivel

unread,
Jun 29, 2017, 1:37:10 AM6/29/17
to மின்தமிழ்
சங்ககாலப் பெண்களின் உடை பற்றி ராணு மேரி கல்லூரியைச் சேர்ந்த ராசமாணிக்கம் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 1960களில் எம்.லிட் பட்டத்துக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தாத். அதைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய தகவலைப் பெறலாம்
சரடுநாதன்

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 29, 2017, 1:55:05 AM6/29/17
to mintamil

2017-06-29 11:07 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
சங்ககாலப் பெண்களின் உடை பற்றி ராணு மேரி கல்லூரியைச் சேர்ந்த ராசமாணிக்கம் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 1960களில் எம்.லிட் பட்டத்துக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தாத். அதைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய தகவலைப் பெறலாம்
சரடுநாதன்


அந்த ஆய்வறிக்கையைப் படிக்க ஏதேனும் வழி இருந்தால் கூறி உதவுங்கள் ஐயா.

Nagarajan Vadivel

unread,
Jun 29, 2017, 1:59:43 AM6/29/17
to மின்தமிழ்
​சென்னைப் பல்கலிக் கழக நூல்கத்துக்குச் சென்று ஆய்வறிக்கையைப் பார்க்கலாம்​

--

Suba

unread,
Jun 29, 2017, 9:35:52 AM6/29/17
to மின்தமிழ்
Inline image 1
பல்லக்கு முன்னால் தீப்பந்தம் கொண்டு போகிறவன் பெண்சாதி - 1830ம் ஆண்டு தமிழகத்து மக்களைப் பார்த்து வரைந்த ஓவியங்களில் ஒன்று.

சுபா

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
Jun 29, 2017, 9:42:56 AM6/29/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
Inline image 1

தென்னை மரம் ஏறும் சாணான் - கள்ளு விக்கிற அவன் மனைவி என்ற குறிப்புடன் 1830ம் ஆண்டு  ஓவியம். தென்னிந்திய சாதி தொழில் என்ற தமிழ் பிரஞ்சு நூலிலிருந்து


சுபா

Suba

unread,
Jun 29, 2017, 10:03:14 AM6/29/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
Inline image 1

நெல்லு நாத்து நடுகிற பள்ளர் சாதி பெண்


Inline image 2

பில்லு விக்கிறவன் சாதி பறையன் மனைவி - இவளும் மேலாடை போட வில்லை..

Inline image 3

விறகு விக்கிர கள்ளர்  - அவன் பெண்சாதி - மேல் துனியால் மறைத்துக் கொள்ளலாம்.

அதோடு
பன்றி வளர்த்து விக்கிர குறவன் - இவன் பெண்சாதி கூட மேலாடை போடவில்லை

ஆனால் கோயிலில் பூக்கட்டும் சாதி,  வியாபாரி என சில சாதிப் பெண்கள் மேலாடை போட்டிருக்கின்றனர்.


சங்க காலம் எப்படியோ.. இன்றைக்கு 200 ஆண்டுகள் கால கட்டத்தில் சாதி அடிப்படையில் பெண்கள் மேலாடை அணிவதா கூடாதா என்பது சாதி அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. 

  1. சாரிஜாக்கெட் போன்ற உடையுடன் சில சாதிப் பெண்கள்
  2. சாரிஜாக்கெட் இல்லாமல் சேலையால் மார்புப்பகுதியை மறைத்துக் கொண்ட வகையில் சில சாதிப் பெண்கள்
  3. மேலாடை இல்லாமல் திறந்த மார்புடன் சில சாதி பெண்கள் 
என்ற வகையில் 1830ம் ஆண்டு ஆவணம் இச்செய்தியைக் காட்டுகின்றது.

சுபா


Krishnan S

unread,
Jun 29, 2017, 10:07:13 AM6/29/17
to mint...@googlegroups.com
நல்லதோர் பதிவு
 தொடர்க


🍀அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை

Inline images 2 தமிழ் எமது மொழி
      இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/


2017-06-27 21:04 GMT+08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

'எப்போதும் வென்றான்' அருள்மிகு சோலைசாமி கோயிலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்டீர் சிற்பங்கள் உள்ளன. யாரும் மேலாடை அணியவில்லை.  இரண்டு படங்களை இத்துடன் தகலுக்காக இணைத்துள்ளேன்.

தேமொழி

unread,
Jun 29, 2017, 3:49:14 PM6/29/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
இது போன்று படங்கள் கொண்ட பதிவு ஒன்று முன்னர் குழுமத்தில் விவாதிக்கப்பட்டது நினைவு வருகிறது.

Seventy two specimens of castes in India - Yale University Beinecke Rare Book & Manuscript Library

http://brbl-dl.library.yale.edu/pdfgen/exportPDF.php?bibid=2039774&solrid=3442310 << குறிப்பாக இதில் 50 ஆம் பக்கத்தில் இருந்து பார்க்கலாம் 


ஆண்டு:  1837  


மின்தமிழில் இந்த இழையில் இது விரிவாக அலசப்பட்டது >>>  https://groups.google.com/d/msg/mintamil/a1lgzyzsVGY/LbCJ2UpCAgAJ

அதிலும் மேலாடை/மேலாடையற்ற பெண்கள் ஆண்கள் படங்கள் உள்ளன.

பொதுவாக தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தில்,  உடல் முழுவதும் மூடிய ஆண்பெண் குறைவாகவே இருந்துள்ளனர். 


..... தேமொழி 

Suba

unread,
Jun 29, 2017, 4:01:37 PM6/29/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-29 21:49 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது போன்று படங்கள் கொண்ட பதிவு ஒன்று முன்னர் குழுமத்தில் விவாதிக்கப்பட்டது நினைவு வருகிறது.

Seventy two specimens of castes in India - Yale University Beinecke Rare Book & Manuscript Library

http://brbl-dl.library.yale.edu/pdfgen/exportPDF.php?bibid=2039774&solrid=3442310 << குறிப்பாக இதில் 50 ஆம் பக்கத்தில் இருந்து பார்க்கலாம் 


ஆண்டு:  1837  


மின்தமிழில் இந்த இழையில் இது விரிவாக அலசப்பட்டது >>>  https://groups.google.com/d/msg/mintamil/a1lgzyzsVGY/LbCJ2UpCAgAJ

அதிலும் மேலாடை/மேலாடையற்ற பெண்கள் ஆண்கள் படங்கள் உள்ளன.

பொதுவாக தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தில்,  உடல் முழுவதும் மூடிய ஆண்பெண் குறைவாகவே இருந்துள்ளனர். 


..... தேமொழி 


​நினைவிருக்கின்றது தேமொழி.
இப்போது மீண்டும்பார்த்தேன். மதுரை மிஷனரி இதனை தயாரித்திருக்கின்றார்கள் எனத்தெரிகின்றது.

நான் சுட்டிக்காட்டிய நூல் சென்னை, பாண்டிச்சேரி பகுதி மக்கள். 

இரண்டுமே நல்ல வரலாற்று செய்திகள் தரும் ஆவணங்கள். .தமிழக பல்கலைகழகங்கள் ஆராய்ச்சிக்கு எடுஹ்த்டுக் கொண்டு ஆய்வு செய்தால் நல்லது.

உழைக்கும் வர்க்கம் குறைவாக ஆடை அணிந்தனர் என்பதை அவர்கள் இயல்பாகச் செய்ததாக நன நினைக்கவில்லை. மாறாக அவர்கள் உயர் சாதி நில உரிமையாளர்களால் அப்படி செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என்பதை மறுத்து விட முடியாது.

தாழ்ந்த சாதியினர் உயர் சாதி மிராசுதாரரை பார்த்தால் இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்து நின்று கும்பிட வேண்டும்
வயல் வெளியில் வேலை செய்யும் தாழ்ந்த சாதி பெண்கள் சேலை கணுக்காலுக்கு மேலே தூக்கி அணிய வேண்டும் என அவர்கள் சட்டம் போட்டிருந்தார்கள்.

இதெல்லாம் பெரிய கதை . பேசினால் நீளும்.

சுபா

nkantan r

unread,
Jun 30, 2017, 6:36:17 AM6/30/17
to மின்தமிழ்
ஜனகராஜ் எருமைகளை பார்த்து "எங்க ஊருலே நாங்க இதை யானைன்னுதான் சொல்லுவோம்" னு  சொல்லுவார்! 
https://www.youtube.com/watch?v=8M6MT7hi3-o

நாமும் கண்களைக்  கொங்கைகள் என்றும், கொங்கைகளைக்  கண்கள் என்றும் கொள்வோமே / சொல்வோமே!!
regards
rnkantan

Suba

unread,
Jun 30, 2017, 7:15:03 AM6/30/17
to மின்தமிழ்

2017-06-30 12:36 GMT+02:00 nkantan r <rnka...@gmail.com>:
ஜனகராஜ் எருமைகளை பார்த்து "எங்க ஊருலே நாங்க இதை யானைன்னுதான் சொல்லுவோம்" னு  சொல்லுவார்! 
https://www.youtube.com/watch?v=8M6MT7hi3-o

நாமும் கண்களைக்  கொங்கைகள் என்றும், கொங்கைகளைக்  கண்கள் என்றும் கொள்வோமே / சொல்வோமே!!
regards
rnkantan


​இதைப் படித்து விட்டு எப்படி சிரிக்காமல் இருப்பது??​

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 30, 2017, 7:41:07 AM6/30/17
to mintamil

2017-06-30 16:06 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
ஜனகராஜ் எருமைகளை பார்த்து "எங்க ஊருலே நாங்க இதை யானைன்னுதான் சொல்லுவோம்" னு  சொல்லுவார்! 
https://www.youtube.com/watch?v=8M6MT7hi3-o

ஜனகராஜின் நகைச்சுவைகளில் மிகவும் கலக்கலானது இதுதான். மிக்க நன்றி. :)))

Kandiah MURUGATHASAN

unread,
Jun 30, 2017, 3:00:15 PM6/30/17
to mint...@googlegroups.com
திரு.திரு.பொன்.சரவணன் அவர்களே!

யானை எருமைக் கதைகள் எல்லாம் உங்களுக்குத்தான்.பக்கம் பக்கமாக எழுதிய உங்களுக்கு nkantanனின் நறுக்கான பதில்

--

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2017, 10:32:35 PM6/30/17
to மின்தமிழ்
சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா இல்லையா என்ற கேள்வி எழுப்புவதன் அடிப்படை நோக்கம் என்ன?
ஆடை அணிவது ஒரு புற அடையாளத்தை உருவாக்கும் செயல்.  காலப்போக்கில் ஆடைகள் ஆயத்தம் மற்றும் அணியும் முறை மாறுவது இயல்பு
கோவிலில் வடிக்கப்பட்ட சிலைகளை வைத்து அல்லது பிற்கால ஓவியங்களை வைத்து அறிய இயலாது
சரடுநாதன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 30, 2017, 11:54:56 PM6/30/17
to mintamil
2017-07-01 0:30 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
யானை எருமைக் கதைகள் எல்லாம் உங்களுக்குத்தான்.பக்கம் பக்கமாக எழுதிய உங்களுக்கு nkantanனின் நறுக்கான பதில்

நறுக்கான பதிலை சிறுபிள்ளை கூட எழுதிவிடுமே. :)))

முடிந்தால் எனது கட்டுரையில் இருக்கும் தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுங்கள்.

இப்படியே அடுத்தவர் தயவில் எத்தனை நாள்....?

Suba

unread,
Jul 1, 2017, 4:30:37 AM7/1/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-01 5:54 GMT+02:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2017-07-01 0:30 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
யானை எருமைக் கதைகள் எல்லாம் உங்களுக்குத்தான்.பக்கம் பக்கமாக எழுதிய உங்களுக்கு nkantanனின் நறுக்கான பதில்

நறுக்கான பதிலை சிறுபிள்ளை கூட எழுதிவிடுமே. :)))

முடிந்தால் எனது கட்டுரையில் இருக்கும் தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுங்கள்.

இப்படியே அடுத்தவர் தயவில் எத்தனை நாள்....?

​தேவையற்ற பயன்பாடு.

நான் அறிந்து திரு.கந்தையா நீள மாக தனித்தனியாக என விவரித்து உங்களுக்கு ஏற்கனவே நீண்ட விளக்கங்களை   எழுதிவிட்டார். 
ஒரு வகையில் கேட்டால் இங்கு வைக்கப்பட்ட பல செய்திகளை நீங்கள் வாசித்தீர்களா,  சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்ற சந்தேகம் வலுக்கின்றது. இல்லை என்றே தெரிகின்றது.

சுபா

 


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 1, 2017, 5:15:18 AM7/1/17
to mintamil
2017-07-01 14:00 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
தேவையற்ற பயன்பாடு.

ஏன் அப்படி கூறினீரகள் என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்து, நீங்களே முன்முடிவு கொள்வது தவறாகுமே அக்கா. :))
 

நான் அறிந்து திரு.கந்தையா நீள மாக தனித்தனியாக என விவரித்து உங்களுக்கு ஏற்கனவே நீண்ட விளக்கங்களை   எழுதிவிட்டார். 

எதற்கு?. கொங்கைகள் பற்றித் தானே. கம்பனையும் ராமனையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டார். தனது மனைவியின் உள் உறுப்புக்களின் அடையாளங்களை அனுமனுக்கு விளக்கி ராமன் கூறியதாக இவர் சொல்கிறார். எந்த ஒரு சாதாரண மனிதனாவது இதைச் செய்வானா?. ஆனால் ராமன் செய்வான் என்று கம்பர் கூறுவதாக இவர் சொல்கிறார். ராமனை அவ்வளவு மோசமான நிலையில்தான் கம்பர் வைத்திருந்தார் என்று வேறு இவர் முழக்குகிறார்.

இல்லை தெரியாமல் கேட்கிறேன், கம்பர் ராமாயணம் எழுதியது ராமனைப் பாராட்டவா? இல்லை இழிவுபடுத்தவா?. இவ்வளவு கேவலமான குணம் கொண்ட ஒருவரை யாராவது காவியத் தலைவனாக்குவார்களா?. நீங்களே பதில் கூறுங்கள்.

எனக்குக் காமத்தை விளக்குவதாக நினைத்துக்கொண்டு ஏகப்பட்ட அரைநிர்வாணப் படங்களை வேறு காட்டியிருந்தார். நான் என் வாழ்க்கையில் இதுபோல பார்த்ததே இல்லை. இவர் புண்ணியத்தில் நான் அவற்றைக் காணும் பேறு பெற்று பேருவகையும் பெருங்களிப்பும் கொண்டேன். இவற்றை அனுமதித்ததால் உங்களுக்கும் அதில் புண்ணியமுண்டு. :)))
 
ஒரு வகையில் கேட்டால் இங்கு வைக்கப்பட்ட பல செய்திகளை நீங்கள் வாசித்தீர்களா,  சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்ற சந்தேகம் வலுக்கின்றது. இல்லை என்றே தெரிகின்றது.

சுபா

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2017, 5:30:18 AM7/1/17
to mintamil
//எனக்குக் காமத்தை விளக்குவதாக நினைத்துக்கொண்டு ஏகப்பட்ட அரைநிர்வாணப் படங்களை வேறு காட்டியிருந்தார். நான் என் வாழ்க்கையில் இதுபோல பார்த்ததே இல்லை. இவர் புண்ணியத்தில் நான் அவற்றைக் காணும் பேறு பெற்று பேருவகையும் பெருங்களிப்பும் கொண்டேன். இவற்றை அனுமதித்ததால் உங்களுக்கும் அதில் புண்ணியமுண்டு. :)))//

கலைக்கண்ணோடு பார்கக்வேண்டும் ஐயா. நீங்கள் கொலைக்கண்ணோடு பார்க்கிறீர்கள்

Suba

unread,
Jul 1, 2017, 5:33:21 AM7/1/17
to மின்தமிழ்
2017-07-01 11:15 GMT+02:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2017-07-01 14:00 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
தேவையற்ற பயன்பாடு.

ஏன் அப்படி கூறினீரகள் என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்து, நீங்களே முன்முடிவு கொள்வது தவறாகுமே அக்கா. :))
 

நான் அறிந்து திரு.கந்தையா நீள மாக தனித்தனியாக என விவரித்து உங்களுக்கு ஏற்கனவே நீண்ட விளக்கங்களை   எழுதிவிட்டார். 

எதற்கு?. கொங்கைகள் பற்றித் தானே. கம்பனையும் ராமனையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டார். தனது மனைவியின் உள் உறுப்புக்களின் அடையாளங்களை அனுமனுக்கு விளக்கி ராமன் கூறியதாக இவர் சொல்கிறார். எந்த ஒரு சாதாரண மனிதனாவது இதைச் செய்வானா?. ஆனால் ராமன் செய்வான் என்று கம்பர் கூறுவதாக இவர் சொல்கிறார். ராமனை அவ்வளவு மோசமான நிலையில்தான் கம்பர் வைத்திருந்தார் என்று வேறு இவர் முழக்குகிறார்.

இல்லை தெரியாமல் கேட்கிறேன், கம்பர் ராமாயணம் எழுதியது ராமனைப் பாராட்டவா? இல்லை இழிவுபடுத்தவா?. இவ்வளவு கேவலமான குணம் கொண்ட ஒருவரை யாராவது காவியத் தலைவனாக்குவார்களா?. நீங்களே பதில் கூறுங்கள்.

எனக்குக் காமத்தை விளக்குவதாக நினைத்துக்கொண்டு ஏகப்பட்ட அரைநிர்வாணப் படங்களை வேறு காட்டியிருந்தார். நான் என் வாழ்க்கையில் இதுபோல பார்த்ததே இல்லை. இவர் புண்ணியத்தில் நான் அவற்றைக் காணும் பேறு பெற்று பேருவகையும் பெருங்களிப்பும் கொண்டேன். இவற்றை அனுமதித்ததால் உங்களுக்கும் அதில் புண்ணியமுண்டு. :)))
எழுத்தில் பல வகை.
ஒன்று சொல்வார்கள். 
தெரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம். தெரிந்து கொண்டே தெரியாதது போல எழுதுவோருக்கு ஏதும் சொல்வதற்கில்லை. 


சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 1, 2017, 6:16:20 AM7/1/17
to mintamil
+1

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Kandiah MURUGATHASAN

unread,
Jul 1, 2017, 4:44:52 PM7/1/17
to mint...@googlegroups.com
திருத்தம் திரு.பொன் சரவணன் அவர்கள்  என்னை வேறு ஒருவிதமாகக் காட்ட முயற்சிக்கிறார் என்று தோன்றுகின்றது.
கம்பர் பெண்களின; தனத்தைத்தான் கொங்கைகள் என்று சொன்னார் என்பதே உண்மையாகும். மனித குலத்தால் ஒரு பொருளை சுட்டி நின்று அது இதுதான் என  அழைக்கப்பட்டு அதை எல்லோரும் அழைக்கம் போது இது அதுவல்ல என ஒரு பெயரை கொண்டு வந்தால் அதற்கான பதிலாகவே எனது பதிவுகளை இட்டேனஇ. ஒரு உதாரணமாக மலையை  மலை என்றுதான் அழைத்து வருகிறோம். ஆனால் மலை என்பது கடலே என்கிறார். இன்னும் எமது கால்களை அவை  கால்கள்  அல்ல கைகளே என்றாலஇ என்ன செய்வது. தமிழக்கடல் நெல்லை திரு.கண்ணன் அவர்களையோ முனைவர் திரு.ஞானசம்பந்தன் அவர்களிடமோ உங்கள் கருத்தைச் சொல்லி  அவர்களிடமிருந்து பதிலைப் பெற்று அதனைப் பதிவு செய்யுங்கள்  அல்லது அவர்களின் முகவரியயாவது தாருங்கள்  நான் அவர்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன்.நான் யார் தயவிலும்  எனது கருத்தை பதிவு செய்யவில்லை.அது தொடர்பாக அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் சங்கர சுப்பிரமணியம் அவர்கள் எழுதியதை இங்கே பதிவு செய்திருந்தேன் வாசிக்கவில்லையா)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 4, 2017, 12:41:11 AM7/4/17
to mintamil, Kalai Email

வணக்கம்.
On 27-Jun-2017 6:54 PM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:


>
>
> 2017-06-27 18:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> யாரும் மேலாடை அணியவில்லை. 
>
>

> ஹஹ்ஹ் ஹாஹா
>
> சிலைகள் மேலாடை அணிவதில்லை. மனிதர்கள் தான். :))
>
> மேலும் சிலையில் மேலாடையினை வடிப்பது மிகக் கடினம். கீழாடை வடிப்பது எளிது.
>

திருவேடகத்தில் மேலாடையுடன் உள்ள சிற்பம் ஒன்றை இணைத்துள்ளேன்.

>
> --
> அன்புடன்,
>

> திருத்தம் பொன்.சரவணன்

> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

TimePhoto_20170704_073721.jpg

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 4, 2017, 12:53:48 AM7/4/17
to mintamil

2017-07-04 10:11 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
திருவேடகத்தில் மேலாடையுடன் உள்ள சிற்பம் ஒன்றை இணைத்துள்ளேன்.

ஐயா

முதலில் மேலாடை அணியாத சிற்பங்களை இணைத்தீர்கள். இப்போது மேலாடையுடன் கூடியது.

இதனால் தாங்கள் இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கூறவிழையும் கருத்து யாதென்று தெளிவாக்குங்களேன். :))

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 5, 2017, 9:53:51 AM7/5/17
to mintamil, Kalai Email

வணக்கம்.


On 04-Jul-2017 10:23 AM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2017-07-04 10:11 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> திருவேடகத்தில் மேலாடையுடன் உள்ள சிற்பம் ஒன்றை இணைத்துள்ளேன்.
>
>
> ஐயா
>
> முதலில் மேலாடை அணியாத சிற்பங்களை இணைத்தீர்கள். இப்போது மேலாடையுடன் கூடியது.
>

> இதனால் தாங்கள் இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கூறவிழையும் கருத்து யாதென்று தெளிவாக்குங்களேன். :))
>
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.

"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது இழைத் தலைப்பு.
மேலாடை அணியாத பெண் சிற்பத்தின் படத்தையும்,
மேலாடை அணிந்த பெண் சிற்பத்தின் படத்தையும் தகவலுக்காக இணைத்தேன்.
என்னுடைய கருத்து ஏதும் கிடையாது.

------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 4, 2017, 11:58:26 AM11/4/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது எனக்குத் தெரியாது !

மேலாடை அணியாத பெண்ணுடன் மேலாடை அணிந்த பெண் இருக்கும் படங்களைத் தகவலுக்காக இணைத்துள்ளேன். ( இவை நண்பர் ஒரிசா பாலு அவர்களில் முகநூல் பதில் இருந்தன ).

FB_IMG_1509808586712.jpg
FB_IMG_1509808578585.jpg

இசையினியன்

unread,
Nov 5, 2017, 10:38:48 AM11/5/17
to மின்தமிழ்
தமிழரில் ஆணும்பெண்ணும் மேலாடை,கீழாடை அணிந்தனர் என்பதை இரு குறட்பாக்கள் மூலம் அறியலாம்.

உடுக்கை இழந்தவன்கை பாேல
ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு. 788

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 1087

திருக்குறள் 2000 ஆண்டு பழமையானது என்றால் சங்க காலதமிழர் ஆடைகளை அணிந்தனர் என்பதும் உண்மையாகிறது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 5, 2017, 12:29:26 PM11/5/17
to mintamil
சிறப்பான எடுத்துக்காட்டு திரு இசையினியன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

nkantan r

unread,
Nov 5, 2017, 12:53:10 PM11/5/17
to மின்தமிழ்
எல்லா ஆனைகளுக்கும் படாமிட்டுருந்தனரோ?

எல்லா இளவயது பெண்களும் (படா முலையுடயோர், மங்கை-மடந்தை-அரிவை?) துகில் கொண்டனரோ?

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 5, 2017, 11:44:11 PM11/5/17
to mintamil
2017-11-04 21:28 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது எனக்குத் தெரியாது !


சங்காலப் பெண்கள் மேலாடை அணிந்தார்கள் என்று கூறிய சங்கப் புலவர்களின் எழுத்துக்களை நம்ப மாட்டீர்கள். ஆனால்

யாரோ எப்போதோ கிறுக்கிவைத்த ஓவியங்களை உண்மையான ஆதாரங்கள் என்று நம்புவீர்கள்.

என்ன உலகம்டா சாமீ !!
 

மேலாடை அணியாத பெண்ணுடன் மேலாடை அணிந்த பெண் இருக்கும் படங்களைத் தகவலுக்காக இணைத்துள்ளேன். ( இவை நண்பர் ஒரிசா பாலு அவர்களில் முகநூல் பதில் இருந்தன ).

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

N D Logasundaram

unread,
Nov 6, 2017, 12:36:23 AM11/6/17
to mintamil, தமிழ் மன்றம், vallamai, thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, SivaKumar, Seshadri Sridharan, Suresh Kumar, Raji M, Thenee MK
​​
​​
திரு நீலகண்டன் இந்நாளில் பலருக்கும் மின்னஞ்சல் வாட்ஸ் அப் டுவிட்டர் முகநூல் என பலலப்பல உள்ளன 

This is a list of the leading social networks based on number of active user accounts as of August 2017

  1. Facebook: 2,047,000,000 users
  2. YouTube: 1,500,000,000 users
  3. WhatsApp: 1,200,000,000 users
  4. Facebook Messenger: 1,200,000,000 users
  5. WeChat: 938,000,000 users
  6. QQ: 861,000,000 users
  7. Instagram: 700,000,000 users
  8. QZone: 638,000,000 users
  9. Tumblr: 357,000,000 users
  10. Twitter: 328,000,000 users
  11. Sina Weibo: 313,000,000 users
  12. Baidu Tieba: 300,000,000 users
  13. Skype: 300,000,000 users
  14. Viber: 260,000,000 users
  15. Snapchat: 255,000,000 users
  16. Line: 214,000,000 users
  17. Pinterest 175,000,000 users
​எனவே அகில உலக ஞானி  திருவள்ளுவரும் ஒன்று நிச்சயம் வைத்திருப்பார் 
அவரிடமே நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் 
நல்லதொரு மடல் வை ய்ப்பினை வைத்தவரை கண்டனவர்கள் கேட்டால் 
 அவரை எப்படி திருவள்ளுவருக்கான  வினாவிற்கு விடை அளிப்பார் ??

உங்களுக்கென்ன திருவள்ளுவரின் முகவரிகள் இவற்றில் கிட்டவேண்டும் அவ்வளவுதானே 
அதனில் ஒன்றினில் நீங்கள் பதிவு செய்து கொண்டு தேட முற்படலாம் 

திரு வள்ளுவர் உங்களைப்போல் nkantan r  என புனைப்பெயரில் இந்நாளைய மாயாவாத உலகில் 
இருந்தால் (வர்சுவல் வஃர்ல்டு)எந்த ஊரினில் வாழ்கின்றீர் மின் / கணினி வழி அல்லாமல் நேரடி
தபாலிலோ அனுப்பவாவது முடியாதல்லவா  அப்படி அவரை தேடமுடியாமல் போகலாம் சில நாட்களாவது 
முயலுங்கள் கிட்டலாம் அவ்வழி கிட்டினால் எனக்கும் தெரிவிக்கவும் நானும் பல ஆண்டுகளாக முயலுகின்றேன் கிடைக்காமல் எதோ ஒரு password பெயரில் இருந்து வருகின்றார் போலும் 
 

நூ த லோ சு
மயிலை

kanmani tamil

unread,
Nov 6, 2017, 6:47:25 AM11/6/17
to mintamil
தென்தமிழகத்தில் (நாகர்கோவில் பகுதி )20ம்.நூ-ன்.தொடக்கத்தில் 'தோள்சீலைக் கலகம்' என்று ஒரு கலகத்தை கிறிஸ்துவர்களாக மதம் மாறிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் துணிந்து நடத்தி வெற்றி பெற்றனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர்களுக்கு கல்வி அறிவூட்டி துணிச்சலை வளர்த்தவர்கள் மேலைநாட்டு கிறித்தவப் பாதிரியார்கள் .அவர்கள் பொதுஇடங்களுக்கு வரும்போது தோளில் சீலை போடக்கூடாது என்று சமுதாயம் வைத்திருந்த சட்டத்தை எதிர்த்து தம் உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள் .
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pitchai Muthu

unread,
Nov 7, 2017, 12:36:06 PM11/7/17
to mint...@googlegroups.com
 திரு வினைதீர்த்தான் அவர்களுக்கு நன்றிகள் பல.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/y2tbK9yqWeI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 7, 2017, 2:49:23 PM11/7/17
to மின்தமிழ்
இந்த ஒவியங்கள் இலங்கை ஓவியங்கள்

(இதைக் கிறுக்கல் என்பது அவரவர் கலைநயம் பாராட்டலில் அடங்கும் <<< இது யாருக்கோ சொன்னது)


..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 7, 2017, 10:50:48 PM11/7/17
to mintamil
2017-11-08 1:19 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்த ஒவியங்கள் இலங்கை ஓவியங்கள்

(இதைக் கிறுக்கல் என்பது அவரவர் கலைநயம் பாராட்டலில் அடங்கும் <<< இது யாருக்கோ சொன்னது)

அக்கா, கிறுக்குதல் = எழுதுதல் என்ற அகராதிப் பொருளும் உண்டு. :))

இது இலங்கை ஓவியங்கள் என்பது காளைராசன் ஐயாவுக்குத் தெரியுமா?

இலங்கை ஓவியங்களை அவர் இங்கே இட்டதன் நோக்கம் புரியவில்லை.

ஆனால் இறுதிவரையிலும் ஏதாவது ஓவியங்களை இட்டுக்கொண்டு மறுத்துக்கொண்டே வருகிறார். :))
 


..... தேமொழி



On Saturday, November 4, 2017 at 8:58:26 AM UTC-7, கி. காளைராசன் wrote:

"சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா?" என்பது எனக்குத் தெரியாது !

மேலாடை அணியாத பெண்ணுடன் மேலாடை அணிந்த பெண் இருக்கும் படங்களைத் தகவலுக்காக இணைத்துள்ளேன். ( இவை நண்பர் ஒரிசா பாலு அவர்களில் முகநூல் பதில் இருந்தன ).

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

செல்வன்

unread,
Nov 7, 2017, 11:46:45 PM11/7/17
to mintamil
ரோமானிய பேரரசில் இருந்த பாம்பி நகரில் கண்டெடுக்கபட்ட தந்த இலக்குமி சிலை. காலம் கிமு 1ம் நூற்றாண்டு.
 இந்த சிலை பாம்பி நகருக்கு சென்று சுமாராக 19 ஆண்டுகள் கழித்து திருவள்ளுவர் பிறக்கிறார். 
இதன் பூர்விகம் சாதவகனர்கள் ஆண்ட மராட்டியபகுதி என தெரிகிறது.



தேமொழி

unread,
Nov 8, 2017, 12:30:43 AM11/8/17
to மின்தமிழ்
இது தமிழக சிற்பமஅல்லவே !!!
The Kharosthi letter śi was inscribed on the base of the statuette.[6]
 Statuetta eburnea di arte indiana a Pompei, Maiuri p.112

The Kharosthi script, also spelled Kharoshthi or Kharoṣṭhī, is an ancient script used in ancient Gandhara and ancient India[1] (primarily modern-day Afghanistan and Pakistan) to write the Gandhari Prakrit and Sanskrit. It was popular in Central Asia as well.[1] An abugida, it was in use from the middle of the 3rd century BCE until it died out in its homeland around the 3rd century CE.[1] It was also in use in Bactria, the Kushan EmpireSogdia and along the Silk Road, where there is some evidence it may have survived until the 7th century in the remote way stations of Khotan and Niya. Kharosthi is encoded in the Unicode range U+10A00–U+10A5F, from version 4.1.

அதில் எழுதியுள்ளதாக சொல்லப்படும் எழுத்து தமிழல்ல 

தமிழக ஓவியம் / சிற்பம் என்றால் ஒப்பிடுவதில் பொருள் உள்ளது. 

..... தேமொழி 

nkantan r

unread,
Nov 8, 2017, 12:47:28 AM11/8/17
to மின்தமிழ்
ஆடை அணியக் காரணம்:
1. இயற்கை சூழ்நிலை. ( வெம்மை, குளிர், மழை, இப்படி..)
2. பூச்சிக்கடியிலிருந்து, முள், மற்றும் ஒவ்வாமைப் பொருட்களிலிருந்து தப்பிக்க
3. அலங்காரம்
4. கூத்தில்

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 8, 2017, 12:58:24 AM11/8/17
to mintamil
மானத்தைக் காக்க என்பது கடைசியாகக் கூட இல்லையா உங்கள் அகராதியில். ? :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 8, 2017, 1:06:55 AM11/8/17
to மின்தமிழ்
And also the impact of cultural import..

1. With good trade connections between Tamils and Greek/romans, some impact on wearing upper clothing would have been there.
2. I remember attending a lecture years back, where it was claimed that Gujarati's and rajastani women started wearing head/face shields and covering breasts as mughal/ Arabian invaders (1000-1200 AD) unused to see uncovered women found it arousing (no pun intended)
3.pallu is probably from roman interaction and blouse/salwar/kameez from Arabs

rnk

nkantan r

unread,
Nov 8, 2017, 1:20:57 AM11/8/17
to மின்தமிழ்
சொல் தவறாமை, ஒழுக்கம், மனித நேயம் இவையல்லவோ மானத்தின் அடிப்படை.

இதில் ஆடை எங்கு வந்தது?

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 8, 2017, 1:23:47 AM11/8/17
to mintamil
On Wed, Nov 8, 2017 at 11:50 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
சொல் தவறாமை, ஒழுக்கம், மனித நேயம் இவையல்லவோ மானத்தின் அடிப்படை.

உடுக்கை இழந்தவன் கை எதற்காக எதை மறைக்கிறது?.

சொல்தவறாமைக்காகவா? ஒழுக்கத்திற்காகவா?. மனிதநேயத்திற்காகவா?.

பதில் கூறுங்கள் ஐயா. :)))
 

இதில் ஆடை எங்கு வந்தது?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 8, 2017, 5:43:41 AM11/8/17
to மின்தமிழ்
அதேதான் கேள்வி - அதில்தான் பதிலும்!

அம்மூன்றுக்கும் இல்லையெனில், மானத்திற்கல்ல - பின்?
In English one would say it is a conditioned 'shame' ( in recent episode of KBC amitabh explained his school days: where there is a common bath-hall with showers and all students will walk around, shower, dry themselves naked. Something like a nudist colony..). ஆடையில்லாமல் இருப்பது மானங்கெட்ட செயல் என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று! கடுங்குளிரில், வெய்யிலில், மழையில் ஒருவன் /ஒருத்தி சரியான உடையணியாமல் இருப்பதைக் கண்டு அவருக்கு உதவாமல் போவதே மானம்ற்ற /மனிதாபிமானமற்ற செயல்.

Read:
https://www.quora.com/When-does-a-human-being-start-to-feel-ashamed-while-naked

https://www.reddit.com/r/AskReddit/comments/2v1s5y/why_is_nudity_socially_unacceptable/

N. Kannan

unread,
Nov 8, 2017, 11:22:28 AM11/8/17
to மின்தமிழ்
இலங்கைத் தமிழில் ஓவியத்தைக் கிறுக்கத்தான் வேண்டும் :-)

நா.கண்ணன்

செல்வன்

unread,
Nov 8, 2017, 11:32:11 AM11/8/17
to mintamil
2017-11-08 4:43 GMT-06:00 nkantan r <rnka...@gmail.com>:
அதேதான் கேள்வி - அதில்தான் பதிலும்!

அம்மூன்றுக்கும் இல்லையெனில், மானத்திற்கல்ல - பின்?
In English one would say it is a conditioned 'shame' ( in recent episode of KBC amitabh explained his school days: where there is a common bath-hall with showers and all students will walk around, shower, dry themselves naked. Something like a nudist colony..). ஆடையில்லாமல் இருப்பது மானங்கெட்ட செயல் என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று! கடுங்குளிரில், வெய்யிலில், மழையில் ஒருவன் /ஒருத்தி சரியான உடையணியாமல் இருப்பதைக் கண்டு அவருக்கு உதவாமல் போவதே மானம்ற்ற /மனிதாபிமானமற்ற செயல்.





கடும்குளிரில் அவதிப்படும் ஒருவருக்கும் உதவவேண்டும் என்பதும் கற்பிக்கபட்டதுதான். 



--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 4:02:21 PM11/8/17
to மின்தமிழ்
Altruism seems to be an innate behavior

Innate Altruism: Humans May Have Been Born With Selfless Behavior, UCLA Study



--

செல்வன்

செல்வன்

unread,
Nov 8, 2017, 5:15:55 PM11/8/17
to mintamil
The studies don't prove what they claim to prove.

People can be depressed and commit suicide for cultural reasons. Learning can affect feelings, harmones and brain. 

So what if altruism is cultural and hence it affects brain the same way any other cultural activity does?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 5:25:29 PM11/8/17
to மின்தமிழ்
///what if altruism is cultural and hence it affects brain the same way any other cultural activity does?///

(கரடி) படம் பார்த்து கதை சொல்வீர்>>>  https://www.youtube.com/watch?v=gJ_3BN0m7S8

if altruism is cultural . . . >>> கரடியின் பண்பாடு யாது?

உயிருக்குப் போராடும் பறவைக்கு  உதவ நினைத்த கரடி பண்பாட்டுப் பள்ளியில் பாடம் பயின்றதா ?

செல்வன்

unread,
Nov 8, 2017, 5:47:41 PM11/8/17
to mint...@googlegroups.com
சமூக அறிவியலின் முக்கிய பாடம் don't try to measure intention from behavior.

கரடி பறவைக்கு உதவுகிறது. சரி. ஆனால் அதற்கான காரணம் உதவி செய்யும் நோக்கம் என எப்படி கூறமுடியும்?

டால்பின்கள் இதேபோல் தான் மூழ்கும் நிலையில் உள்ள மனிதர்கள் பலருக்கு உதவி கரைசேர்த்துள்ளன. ஆனால் அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் பலரும் அதற்கு காரணம் டால்பின்களின் curiosity தானே ஒழிய உதவி செய்யும் நோக்கம் அல்ல என்கின்றனர்.


--

செல்வன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 6:24:19 PM11/8/17
to மின்தமிழ்
இழை திசை மாறுவதைத் தவிர்க்க 

https://groups.google.com/d/msg/mintamil/cOYMEIWd7Oc/FOl7HrXHAAAJ <<< இங்கே தொடர்கிறோம் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 8, 2017, 11:24:35 PM11/8/17
to mintamil
2017-11-08 21:52 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
இலங்கைத் தமிழில் ஓவியத்தைக் கிறுக்கத்தான் வேண்டும் :-)

அப்படியா?. எதேச்சையாகத்தான் அப்படி எழுதினேன். மிக்க நன்றி ஐயா. :)))

Kandiah MURUGATHASAN

unread,
Nov 14, 2017, 3:13:11 PM11/14/17
to mint...@googlegroups.com
ஐயா திரு.சரவணன் 

இந்தப் பிரச்சனையைத்தான் பல மாதங்களுக்கு முன் விவாதப் பொருளாக எடுத்தீர்கள்.மீண்டும்  தொடங்கிவிட்டடடீர்கள். வரலாற்றுக்கு மிக மிக மிக ஆதிகால வரலாற்று எல்லை இல்லை. தமிழப் பெண்கள் மட்டுமல்ல அனைத்து இனப் பெண்களுமே மிக மிக மிக ஆதிகாலத்தில் மேலாடை அணியாமல் இருந்திருக்கலாம். மனிதர்கள் பூமியில் தோன்றிய போதே ஆடையுடனேயா தோன்றினார்கள். ஆடைகள் மனிதர்களால் காலப் போக்கில் கண்டு பிடிக்கப்பட்டதே. தமிழப் பெண்கள் தமிழ் வரலாற்றின் எவ்வெல்லையிலிருந்து மேலாடை அணிந்தார்களோ அதற்கு முதல் அவர்கள் அணிந்தார்களா என்பதே கேள்வி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 14, 2017, 11:12:49 PM11/14/17
to mintamil
2017-11-15 1:43 GMT+05:30 Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com>:
ஐயா திரு.சரவணன் 

இந்தப் பிரச்சனையைத்தான் பல மாதங்களுக்கு முன் விவாதப் பொருளாக எடுத்தீர்கள்.மீண்டும்  தொடங்கிவிட்டடடீர்கள். வரலாற்றுக்கு மிக மிக மிக ஆதிகால வரலாற்று எல்லை இல்லை. தமிழப் பெண்கள் மட்டுமல்ல அனைத்து இனப் பெண்களுமே மிக மிக மிக ஆதிகாலத்தில் மேலாடை அணியாமல் இருந்திருக்கலாம். மனிதர்கள் பூமியில் தோன்றிய போதே ஆடையுடனேயா தோன்றினார்கள். ஆடைகள் மனிதர்களால் காலப் போக்கில் கண்டு பிடிக்கப்பட்டதே. தமிழப் பெண்கள் தமிழ் வரலாற்றின் எவ்வெல்லையிலிருந்து மேலாடை அணிந்தார்களோ அதற்கு முதல் அவர்கள் அணிந்தார்களா என்பதே கேள்வி.

நண்பரே

தலைப்பை ஒருமுறைச் சரிபாருங்கள்.

சங்ககாலம் என்பது ஆதிவாசிக் காலமா?

இங்கே நாம் பேசுவது சங்ககாலப் பெண்களின் மேலாடை பற்றியே அன்றி ஆதிகால உடைகள் பற்றியல்ல. :))

இசையினியன்

unread,
Nov 18, 2017, 12:23:23 PM11/18/17
to மின்தமிழ்
Rnk கேட்டிருந்தகேள்விகளுக்குப் பதில்,

எல்லா ஆனைகளுக்கும் படாமிட்டுருந்தனரோ?

எல்லா இளவயது பெண்களும் (படா முலையுடயோர், மங்கை-மடந்தை-அரிவை?) துகில் கொண்டனரோ?
rnk

அக் கேள்விகளுக்குப் பதில் முறையே,
முதல் கேள்வி பதில் இல்லை.
இரண்டாம் கேள்வி பதில், மடந்தை, அரிவை,

என வள்ளுவரின் பிற குறள்கள் மூலம் நம்மால் தெளிவுக்கு வர முடிகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages