32 ஆவது சென்னைப் பொத்தக வியந்தைச் செய்திகள்

266 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 7:08:24 PM1/11/09
to Min Thamizh
நியூசெஞ்சுரியின் தமிழ்ப்பணி
 
அச்சிட்ட நூல்களைக் கிளைகள் வாயிலாக
  • விற்பனை செய்தல்
  • நடமாடும் புத்தகநிலையங்கள் வழியாக நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நூல்களைக் கொண்டு செல்லுதல்
  • பொது இடங்களிலும் கல்விச் சாலைகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்துதல்
  • வாசகர்களைத் திரட்டுதல்

என்ற பல்வேறு பணிகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செய்துவருகிறது.

மக்கள்நூல் வெளியீட்டகம் (People's Publishing House) தொடங்கப்பட்டது. புதிய கருத்துகளை மக்களிடையே கொண்டுசென்று
  • அவர்களைப் பக்குவப்படுத்தி
  • நாட்டு விடுதலைக்காகப் போராடுவது
  • முற்போக்குக் கருத்துகளை வளர்த்து சமுதாய மாற்றத்திற்கு அடிகோலுவது
  • இந்திய மக்களை அறிவியலில் ஈடுபடுத்துவது

என்ற பல்வேறு இலக்குகளை நோக்கமாகக் கொண்டு எழுந்தது மக்கள் நூல் வெளியீட்டகம்.

நூற்றுக்கு மேற்பட்ட இளைய எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், அறிவியலாளர்களும் எழுதிய நூல்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

பலதுறை வல்லுநர்களும் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் கல்வி நிலையங்களில் செல்வாக்குப் பெற்ற வல்லுநர்களும் இப்பட்டியலில் அடங்குவர். நிறுவனத்தின் நூல் வெளியீட்டோடு தொடர்புடைய தகைசான்ற எழுத்தாளர் பலர் விருதுகள் பெற்றுள்ளனர்.

 
இதுவரை;
  • சிறுவர் இலக்கியம்
  • இலக்கியம்
  • இலக்கியத் திறனாய்வு
  • அறிவியல்
  • மெய்யியல்
  • தொழில்நூட்ப இயல்
  • சமூகவியல்
  • சட்டம்

ஆகிய துறைகளில் ஏறத்தாழ 2500க்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெரும்பாலானவை மூலநூல்கள். இவற்றுள் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டு உள்ளன.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 7:15:10 PM1/11/09
to Min Thamizh

சோதிடத்தை ஏற்க சோதித்து இடம் சேருங்கள்!

சோதிடம் பொய் என்றும் சோதிடர்கள் பொய்யர்கள் என்றும் அவசரப்பட்டு முடிவுக்கு வருபவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் கூறுகிறார் திரு. இரவி தமிழ்வாணன்.
 
சோதிடத்தைத் தெளிவு இன்றிக் கற்றுக் காசுக்கு ஆசைப்பட்டுக் கண்ட கண்ட பலன்களைக் கற்றுக்குட்டித்தனமாகச் சொல்பவர்களால்தான் சோதிடம் சறுக்குவதுண்டே தவிர, விபரமானவர்கள், துல்லியமாகக் கணிப்பவர்களால் சோதிடத்திற்குப் பெருமையே சேர்ந்திருக்கிறது.

என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் தாய் மணிமேகலை தமிழ்வாணன் சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் உயிர்ப் போராட்டம் நடத்தியபோது அம் மருத்துவமனையின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த தலைசிறந்த மருத்துவர்கள் என் தாயாரைக் கவனித்து வந்தார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் என் தாயாரைக் காப்பாற்றுங்கள் என்றும்கூட நான் வேண்டிக் கொண்டேன்.

இவர்கள் ஒன்றுகூடிப் பேசி "சாரி, இவர்கள் பிழைக்கப்பட்டார்கள்" என்றனர்.

ஆனால் என் உள்ளுணர்வு மட்டும் இந்தச் சிறந்த மருத்துவர்களின் கருத்திற்கு மாறாக இருந்தது. தாயின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு எங்கள் குடும்ப ஜோதிடரான பாலன் நாயரிடம் சென்று காண்பித்தேன்.

அவர் "இந்த ஜாதகர் இன்டென்சிவ் கேரில் அல்லவா இருக்கிறார்" என்றார். அத்துடன் இன்னும் 11 நாளில் நார்மல் வார்டுக்கு வருவாங்க. அதிலேர்ந்து 8 நாளில் டிஸ்சார்ஜ் ஆவாங்க. இப்போது மாரக திசையே (மரண அறிகுறி) இல்லை. நிச்சயமம் பிழைப்பாங்க. அதன் பிறகு ஒன்றரை வருஷம் வாழ்வாங்க. இதற்குப் பிறகுதான் ஒரு பெரிய கண்டம் இருக்கு என்றார். அது போல் மிகச் சரியாக 11ஆவது நாள் நார்மல் வார்டுக்கு மாறி, பின்னர் 8ஆம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி மிகச் சரியாக ஒன்றரை ஆண்டுகளில் காலமானார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

மருத்துவர்களால் கைவிடப்பட்டு, சோதிடரால் நம்பிக்கையூட்டப்பட்டதால் என் தாய்க்குக் கடைசி வரை சிறப்பான கவனிப்பை அளித்தோம். பாலன் நாயரைச் சந்தித்திராவிட்டால் எங்கள் தாயை நாங்கள் என்றோ இழந்திருப்போம். தமிழகத்திலேயே சோதிட நூல்களை அதிகமாக வெளியிட்டிருக்கும் மணிமேகலைப் பிரசுர இயக்குனருக்கு அதில் நம்பிக்கை இல்லாவிடில் எப்படி?

 
கடினமான விஞ்ஞானமான சோதிடத்தை மிக எளிமையாக்கி முதன் முதலில் நூல்களை எழுதி வெளியிட்டவர் என் தந்தை.
 
அதிர்ஷ்ட எண்கள், ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள், ஜாதகம் பார்ப்பது எப்படி? என்று மூன்று துறைகளிலும் நூல்களை வெளியிட்டு அமோக வரவேற்பை அந்தக் காலத்தில் பெற்றவர் தமிழ்வாணன்.

தமிழ்நாட்டில் அதிகமான ஜோதிட நூல்களை ஒரே கூரையின் கீழ் வெளியிட்டிருக்கும் நிறுவனம் எங்கள் மணிமேகலைப் பிரசுரம் தான். எங்களிடம் இருக்கும் ஜோதிட நூல்களின் தலைப்பு எண்ணிக்கை மட்டும் 76.

எங்கள் பதிப்பகத்தின் ஜோதிடப் புரட்சி என்று ஒன்றை அவசியம் குறிப்பிட வேண்டும். காலங்காலமாகத் தொட்டால் அப்பளம்போல் உடைகிற பழங்காலத்துப் பஞ்சாங்க இதழ்களை வைத்துக் கொண்டு பல ஜோதிடர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

இதைப் பார்த்ததும் எனக்கு இவற்றையெல்லாம் தொகுத்து நவீன, கையடக்கப் பதிப்பாக வெளியிட்டால் என்ன என்று சிந்தித்தேன்.

20 ஆண்டுகளுக்கு ஒரு நூல் வீதம் திருக்கணிதப் பஞ்சாங்க முறையில் 1926 முதல் 1945 என்று ஆரம்பித்து 2020 வரை 7 தொகுதிகளை வெளியிட்டேன். பின்னர் ஜோதிடர்களின் கோரிக்கைக்கிணங்க வாக்கியப் பஞ்சாங்கமும் 20 வருடங்களுக்கு ஒரு தொகுதி வீதம் 1926இல் ஆரம்பித்து 2010 வரை வெளியிட்டிருக்கிறேன். 2020க்கான தொகுதிக்குப் பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஜாதகத்தை எவரிடம் கொண்டு போனாலும் சற்று உற்றுக் கவனியுங்கள். உடனே அவர் ஜோதிட வேதப்புத்தகம் போல் ஒன்றை எடுத்துச் சரிபார்ப்பார். அது பெரும்பாலும் மணிமேகலைப் பிரசுரப் பஞ்சாங்கமாகத்தான் இருக்கும்.

அந்த அளவிற்கு இன்று ஜோதிடர்கள் மத்தியிலும் எங்கள் வெளியீடுகள் மிகப் பிரபலம்.

இப்போதுள்ள 76 ஜோதிட நூல்களின் எண்ணிக்கையோடு புதிதாக ஒரு நூலை 18.1.09 அன்று சென்னைப் புத்தகத் திருவிழாவில் மதியம் 3 மணிக்கு வெளியாகும். 32 நூல்களுடன் சேர்த்து வெளியிடுகிறோம். எண் கணித மேதை டாக்டர் ஜே.என்.எஸ். செல்வன் எழுதியுள்ள எண்கள் எதையும் செய்யும் என்ற நியூமராலஜி புத்தகம் தான் அது.

சோதிடத்தை முழுமையாக ஏற்க, வாழ்வின் துன்பங்களை மனரீதியாக வெற்றிகொள்ள நம்மிடமே வழி இருக்கிறது. ஜோதிட நூல்களைப் பயிலாமல் தள்ளியிருந்துகொண்டு இதை ஏற்க முடியாது என்கிற வாதத்தை எப்படி ஏற்கச் சொல்கிறீர்கள்?

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 7:20:03 PM1/11/09
to Min Thamizh

திருமகள் நிலையத்தின் புதிய வெளியீடுகள்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறது திருமகள் நிலையம்.

  • தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்
  • திரு. பாலகுமாரன்
  • திரு. இந்திரா செளந்தர்ராஜன்
  • திரு. வைரமுத்து
  • காலச்சென்ற திரு. சுஜாதா

போன்ற எழுத்தாளர்களின் நூல்கள் உள்பட பல நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளது திருமகள் நிலையம்.

இந்த ஆண்டு பல புதிய நூல்களை வெளியிட்டுள்ளது திருமகள் நிலையம்.

குறிப்பாக எழுத்தாளர் ஜெய்சக்தியின் "கனிந்த மனத் தீபங்களாய்" (3 பாகங்கள்) வெளிவந்துள்ளது.

கனிந்த மனத் தீபங்களாய் மனித உறவுகளின் மேன்மையை உணர்த்தும் ஓர் இனிய நாவல். ஜெய்சக்தி அவர்களின் முதல் நாவல் என்றால் நாம் நம்பிதான் ஆக வேண்டும். காரணம் நாயகன், நாயகி கதாபாத்திரங்களை மிகவும் அழகாக கையாண்டுள்ளதை பார்க்கும் போது ஏதோ பொன்னியின் செல்வன் கால கட்டத்திற்கு சென்றுவிட்ட பிரமிப்பு ஏற்படுகிறது.

 
மனிதநேயத்தின் அத்தனை அடிப்படை குணங்களான
  • அன்பு
  • பாசம்
  • கருணை
  • நேசம்
  • கனிவு
  • தயவு
  • காருண்யம்
இவைகளை கதையில் மிக அழகாக பயன்படுத்தியுள்ளார்.
 
கதையில் அனைத்து பாத்திரங்களும் அன்புடனும், பொறுப்புடனும் இருப்பது இக்கால கட்டத்திற்கு மிகவும் தேவையான நன்று.

தனது எழுத்தில் முழு ஈடுபாடு கொண்டு எழுதும் போதுதான் இவ்வாறு எழுத முடியும். அவ்வகையில் "கனிந்த மனத் தீபங்களாய்" நாவலில் எழுத்தாளர் ஜெய்சக்தி, மிக பெரிய தவமாக இருந்து இவ்நாவலை படைத்து இருக்கிறார் என்பது புரிகிறது.

 
மேலும்;
  • திரு. நா. பார்த்தசாரதி அவர்களின் "வெற்றி முழக்கம்"
  • திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்களின் "தங்க திரிசூலம்"
  • ஜெய்சக்தி அவர்களின் "விழிகளில் எத்தனை மொழிகள்"

என பல புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது திருமகள் நிலையம்.

சென்னை புத்தகக் காட்சி அரங்க எண். 366, 377ல் இந்நூல்கள் விற்பனைக்கு உள்ளது. இத்தகவல்களை திருமகள் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. திருப்பதி அவர்கள் தெரிவித்தார்.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 7:24:35 PM1/11/09
to Min Thamizh

தனித்தன்மையுடன் விளங்கும் பூம்புகார் பதிப்பகம்

தமிழ் மக்களின் அன்பால் அரவணைப்பால் வளர்ந்துவரும் எங்கள் பூம்புகார் பதிப்பகம் கால் நூற்றாண்டைத் தாண்டி கன்னித் தமிழ் வளர்ச்சிக்குத் தனது எளிய பங்கை இனிதே வழங்கி வருகிறது.

1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோற்றம் கண்ட பூம்புகார் பதிப்பகம் "காமராஜ் ஒரு சரித்திரம்" என்ற நூலை முதல் வெளியீடாக்கித் தனது வரலாற்றைத் தொடங்கியது.

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் திருமிகு பிரம்மானந்த ரெட்டி அவர்கள் கரங்களால் வெளியிடப்பட்டு டாக்டர் செவாலியர் சிவாஜிகணேசன், கவிஞர் கண்ணதாசன், தமிழ்வாணன் ஆகியோரால் பெற்றுக்கொள்ளப்பட்ட "காமராஜ் ஒரு சரித்திரம்" பூம்புகாரின் முதல் வெளியீட்டு விழாவாகும்.

புகழ்மிக்க அம்மனிதமாமணி பற்றிய ஒரு நூல் பதினொன்று பதிப்புகள் கண்டது; ஒரு இலட்சம் படிகளை விற்பனையில் தாண்டியது என்பது சாதனை நாயகருக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை. "வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறி வகுத்த" வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் நூலுக்கு எங்கள் பதிப்பகப் புதிய உரை இப்போது இருபத்தி ஐந்தாம் பதிப்பு வெளிவந்துள்ளது. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் படிகள் தமிழ் மக்கள் கரங்களுக்குச் சென்று சேர்ந்துள்ளன.

தரத்தில் சிறந்த எங்கள் வெளியீடுகளில் பல, தமிழ் அரசின் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசுகளைப் பெற்றுள்ளன.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்து வேந்தர்களின் படைப்புகளை வெளியிடும் பெரும் பேறு பெற்றிருக்கிறது எங்கள் பூம்புகார் பதிப்பகம்.

கவிதை, நாவல், சிறுகதை, தத்துவம், ஆன்மிகம், அறிவியல் நுண்கலை எனத் துறைதோறும் பயனளிக்கிற, பண்பை வளர்க்கிற படிப்பவர் சுவையுணர்வைப் பேணுகிற படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வள்ளுவப் பெருந்தகை வரையறுத்துக் கூறும் "இலங்கு நூல்" நவில்தொறும் நயம் பயக்கும் நூல் - "நுண்ணிய நூல்" என்பன எங்கள் இதயதாகமாகவும், இலட்சிய வெறியாகவும் உள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் சீரிய எழுத்துச் செல்வம் இதுவரை பதின்மூன்று பெரும் தொகுதிகளாக எங்கள் பூம்புகார் வாயிலாக வெளிவந்துள்ளது.

 
தமிழகத்தின் பதிப்புத் துறையில் தனக்கென ஒரு தடம் போட்டு, புடம் போட்ட தங்கமாய் விளங்கி வரும் பூம்புகார் பதிப்பகத்தின் 901ஆவது வெளியீடாக கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சட்டமன்ற உரைகள் - பாகம் 7 ஈறாக வெளியீடு 906 வரை நீளுகிறது. தமிழ்ச் சான்றோர் ஆன்றோர் நூல்களை புத்தகமாக வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 7:28:15 PM1/11/09
to Min Thamizh

10வது ஆண்டில் சீதை பதிப்பகம்

 
2008ல் மட்டும் 200க்கு மேல் புத்தங்களை வெளியிட்டிருக்கும் சீதை பதிப்பகம்.
  • மணிவாசகப் பெருமான் வரலாறு
  • பிற்காலச் சோழர் சரித்திரம்
  • பன்னிரு திருமுறை வரலாறு
  • சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு (1935 - 2007)
  • சோழர் சரித்திரம்
  • முற்காலச் சோழர் கோயில் வரலாறும், கலையும்
  • தகடூர் வரலாறும் பண்பாடும்
போன்ற வரலாற்று நூல்கள் மற்றும் பல நூல்களை வெளியிட்டுள்ளது.
 
சீதை பதிப்பகத்தின் 10ஆம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே பல சலுகைகளை வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு: +91-44-94440-82232.
 
நன்றி:தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 7:30:27 PM1/11/09
to Min Thamizh

நாற்பதாம் ஆண்டில் வசந்தா பதிப்பகம்

ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் பணியாற்றி வருபவர் முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன். எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தார். தம் நூல்களைத் தாமே வெளியிட்டார். தாமே சுமந்து விற்றார். பல நூறு பைந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். இலக்கிய வரலாற்றில் சாதனைச் செம்மலாகத் திகழ்பவர். அடக்கத்தோடு தம்மைத் தமிழ்த் தொண்டர் என்று சொல்லிக் கொள்பவர்.
 
இவருடைய பல நூல்களை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பல பரிசுகள் பெற்றவை. தமிழ்நாட்டுப் பாட நூல்களிலும் பிற மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளிலும் பாடமாக இடம் பெற்றவை. பல மொழிகளில் மொழி பெயர்த்த சிறப்புடையவை. பல பல்கலைக் கழக மாணவர்கள் இவர் படைப்புகளை ஆய்வு செய்து எம்.பில்., டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். நாற்பது ஆண்டுகளாக வசந்தா பதிப்பகம் சிறப்பாக இயங்க வழிகாட்டி வருபவர். இன்று அவர் வழியைப் பின்பற்றி அவர் மகன் டாக்டர் மோ. பாட்டழகன் தம் முழு நேரத்தையும் பதிப்புத் துறையில் செலுத்தி எழுச்சி மிக்க இளம் பதிப்பாளர் வரிசையில் நிற்பவர்.

 

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:07:17 PM1/11/09
to Min Thamizh
குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பு!

சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (8/1/09) 32வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. "இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புச்செய்திருக்கிறோம். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நிறைய ஏற்பாடு செய்திருக்கிறோம்."

குழந்தைகளுக்கான குறும்படம் காட்டப்படுகிறது. குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்துகிறோம். இந்த ஓவியப் போட்டி பற்றி எல்லாப் பள்ளிகளுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கிறோம். சுமார் 1000 குழந்தைகள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகளை மூன்று வயதுப்பிரிவுகளாகப் பிரித்து போட்டியை நடத்துகிறோம். "நான் கண்ட புத்தகக் காட்சி" என்ற தலைப்பில் மாணவர்கள் ஓவியம் வரைய வேண்டும்.

 
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை இராணிமேரி கல்லூரியுடன் இணைந்து நடத்துகிறோம். இதில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு;
  • முதல் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும்
  • இரண்டாவது பரிசாக 1500 ரூபாயும்
  • மூன்றாம் பரிசாக 1000 ஆயிரம் ரூபாயும்
வழங்க இருக்கிறோம்.
 
பள்ளி மாணவர்கள் 6 பேருக்கும், கல்லூரி மாணவர்கள் மூவருக்கும் இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

இதுதவிர நுழைவுச் சீட்டைத் தினசரி குலுக்கல் நடத்தி அதற்கும் பரிசு கொடுக்கிறோம்.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 3 இலட்சம் இலவச நுழைவுச் சீட்டுகளை விநியோகித்திருக்கிறோம். சென்ற ஆண்டு 528 அரங்குகள் புத்தகக் காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு அது 600 ஆக உயர்ந்திருக்கிறது.

நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன் போன்ற அரசு சார்ந்த பதிப்பகங்களும் இந்த ஆண்டு இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிற மொழி பதிப்பக அரங்குகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கென்றே ஓர் அரங்கு இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் உள்ளது. இதை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல பதிப்பாளர்கள் இந்த வருடம் குறைந்தபட்சம் 10 - 20 தலைப்புகளில் புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இன்னொன்று எல்லா பதிப்பாளர்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 
தினமணி நாளிதழ் எங்களுடை மீடியா பார்ட்னராக இந்த ஆண்டு செயல்படுகிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
 
32வது சென்னை புத்தகக் காட்சி பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காரணம், முதல் நாளே அதிக அளவில் மக்கள் வருகை தந்துள்ளனர் என்றார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம்.

 

 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:12:47 PM1/11/09
to Min Thamizh

சுனாமி போல வந்த படிக்கும் ஆர்வம்!

சென்னை புத்தகக் காட்சியில் காலச்சுவடு பதிப்பக அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (11/1/09), பழ.அதியமான் எழுதிய,
  • சக்தி வை.கோவிந்தன் - தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை
  • கல்பனாதாசன் எழுதிய "சில தீவிர இதழ்கள்"

ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

சக்தி வை.கோவிந்தன் பற்றிய நூலை வெளியிடுவதற்காக வந்திருந்த திரைப்பட நடிகர் சிவகுமாரைச் சந்தித்துப் பேசினோம்.
 
அவர் கூறியது:-
 
சக்தி வை.கோவிந்தன் அந்தக் காலத்திலேயே சக்தி இதழையும், பதிப்பகத்தையும் நடத்திய முன்னோடி. அவரின் தம்பி இராம.தியாகராஜனிடம் கவிஞர் கண்ணதாசன் பணியாற்றியிருக்கிறார். லூயி பிஷரின் நூல்களைப் பதிப்பித்த பழனியப்பாவின் குரு, சக்தி வை.கோவிந்தன்தான். தமிழ்ப் பண்ணை என்று சின்னஅண்ணாமலை பதிப்பகம் துவக்கியபோது இராஜாஜியைக் கொண்டு அதைத் தொடங்கி வைத்தவர் சக்தி வை.கோவிந்தன்.

அந்தக் காலத்திலேயே ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் "போரும் வாழ்வும்" என்ற 2,100 பக்கம் உள்ள மிகப் பெரிய புத்தகத்தைத் தமிழில் கொண்டு வந்தவர் அவர்.

பாரதியார் கவிதைகளை ஒன்றரை ரூபாய் மலிவு விலையில் கொண்டு வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜைக் கொண்டு வெளியிடச் செய்தார். கிட்டத்தட்ட 191 புத்தகங்களைப் பதிப்பித்த அவர் தனது 54 வயதிலேயே மறைந்துவிட்டார் என்பது வருத்தத்திற்குரிய செய்தி. தனது வருமானத்தை எல்லாம் நல்ல நூல்களைக் கொண்டு வருவதில் செலவழித்த அவர் இறுதியில் வறுமைப்பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்.

இந்த நூலை எழுதிய பழ.அதியமானையும் நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்டுகிறேன்.

 
புத்தக வாசிப்பைப் பொறுத்தவரை இன்று பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. இவ்வளவு மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவது உண்மையிலேயே பெரிய விஷயம். திடீரென வரும் சுனாமிபோல, படிக்கும் ஆர்வம் மக்களிடம் திடீரென வளர்ந்திருக்கிறது. 500 - 600 அரங்குகள் உள்ளதாகப் புத்தகக் காட்சி பெரிதாகியிருக்கிறது. மக்களுக்கும் புத்தகம் வாங்கும் வசதி, படிக்கும் வசதி வந்திருப்பது நல்ல விஷயம் என்றார் சிவகுமார்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:15:53 PM1/11/09
to Min Thamizh

திருப்பாவைதான் எனக்குப் பிடித்தது!

சென்னை புத்தகக் காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (11/1/09)  வந்திருந்த திரைப்பட எடிட்டர் பி.லெனினிடம் பேசினோம்.
 
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். எனக்குப் பிடித்தது ஆண்டாளின் திருப்பாவைதான். ஆண்டாளின் திருப்பாவையை எல்லாரும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் சாப்பிடும் உணவைப் பற்றிக் கூட ஆண்டாள் சொல்கிறார்.

திருப்பாவையைச் சின்ன வயதில் கேட்டபோது புரிந்து கொண்டவிதம் வேறு. வயதாக ஆக அதைப் புரிந்து கொள்வது வேறு.

எல்லாரும் மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையில் "பீடு" மாதம். குளிரில் முடங்கிக் கிடக்காமல் செயல்பட வேண்டும் என்ற சொல்வதற்கே அதைப் பீடு மாதம் என்றார்கள். மார்கழி மாதத்தைப் பற்றி - அதன் பனியைப் பற்றி - எல்லாம் ஆண்டாள் சொல்லியிருக்கிறார்.

படிக்கும் பழக்கம் இப்போது ரொம்பவும் குறைந்து போய்விட்டது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நெட்டில் போய்ப் பார்த்தாலும் அங்கேயும் படிக்கத்தானே செய்கிறோம்?

40 - 50 வருடங்களுக்கு முன்பு நூலகம்தான் உலகைத் தெரிந்து கொள்ள இருந்த ஒரே சாதனம். அதுவும் எங்கேயாவது ஒன்று இருக்கும். நூலகத்தைத் தேடித் தேடி அலைய வேண்டும். புத்தகங்களைத் தேடி எடுத்து, குறிப்பு எடுத்துப் படித்த காலம் ஒன்றிருந்தது. அப்படிப் படித்ததினால் சமூகப் பார்வை, சமூகச் சார்பு படித்தவர்களுக்கு அதிகம் ஏற்பட்டது.

ஆனால் இப்போது புத்தகக் காட்சிக்கு சுற்றுலா வருவதுபோல வருகிறார்கள்.

இங்கு வாங்கும் புத்தகங்களை மறக்காமல் அவசியம் படிக்க வேண்டும்.

 
நான் நவீன புத்தகங்களில் சே குவேரா பற்றிய புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அவரைப் பற்றி படித்த விஷயங்களைத் திரும்பவும் படிக்கும்போது புதிது புதிதாக ஏதேனும் புரிகிறது என்றார் லெனின்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:20:53 PM1/11/09
to Min Thamizh

எழுத்தாளர் பதில் சொல்ல வேண்டும்!

மதுரையிலிருந்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் "அறிவை விரிவு செய்" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்த பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறியதாவது:-

"இப்போது வருகிற புத்தகங்களின் கட்டமைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. புத்தகத்தைப் பார்த்தவுடனேயே அதை வாங்க வேண்டும் என்று தூண்டும் அளவில் புத்தகங்களின் அழகு நம்மைக் கவர்கிறது.

முன்பெல்லாம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பதற்காக பாரதி, பாரதிதாசன் நூல்களைத் தருவார்கள். அவற்றைப் பார்த்தவுடனேயே மாணவர்களுக்கு போட்டிகளில் ஏன் கலந்து கொண்டோம் என்றிருக்கும்.

 
இப்போது தன்வரலாற்று நூல்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் அதிகம் வருகின்றன. இந்த ஆண்டு
  • அண்ணா
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
  • எம்.ஆர்.இராதா
  • கே.பி.சுந்தராம்பாள்
போன்றோரின் நூற்றாண்டு.
 
அதனால் அவர்களைப் பற்றிய புத்தகங்கள் அதிகம் வெளிவந்தன.
  • அ.வெண்ணிலா எழுதிய "மீதமிருக்கும் சொற்கள்"
  • பெளத்த அய்யனாரின் துணைவியார் எழுதிய "முள்"

போன்றவை எனக்குப் பிடித்த நூல்கள்.

புத்தகக் கண்காட்சிகளில் வருங்காலத்தில்
  • எழுத்தாளர்
  • விமர்சகர்
  • வாசகர்
முடிந்தால்
  • பதிப்பாளர்
கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
 
புத்தகங்களைப் பற்றிய வாசகர்களின் கேள்விகளுக்கு எழுத்தாளர் பதில் சொல்லும்படி அந்த நிகழ்ச்சி அமைய வேண்டும். இது ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்றார் கு. ஞானசம்பந்தன்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:24:04 PM1/11/09
to Min Thamizh

உரையாடல் வடிவ நூல்களின் முன்னோடி!

புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ள தென்திசை பதிப்பகத்தை ஆரம்பித்து ஒரு சில ஆண்டுகளேயானாலும் தமிழ்ப் பதிப்புலகில் தனக்கெனத் தனிப்பாதையை வகுத்துக் கொண்டு செயல்படுகிறது.

நல்ல புத்தகம் மட்டுமே கொண்டு வரவேண்டும். அதிலும் நான்கு பேருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதுதான் எங்கள் முக்கிய குறிக்கோள்.

பறவையியல் அறிஞரான சலீம் அலி குறித்த நூலை எங்கள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இஸ்லாமிய பக்கீர்கள் குறித்து இரஹ்மத்துல்லா எழுதியுள்ள புத்தகமும், அரவானிகளின் வாழ்வு குறித்து ப்ரியா பாபு எனும் திருநங்கை எழுதியிருக்கும் அரவாணிகள் & சமூக வரைவியல் என்ற புத்தகமும் நாங்கள் வெளியிட்டவையே.

 
  • கோணங்கி
  • தமிழருவி மணியன்
  • சுகுமாரன்
  • தொ.பரமசிவன்
  • அஜயன் பாலா
  • ப.திருமாவேலன்
  • கலை இலக்கியா
  • ஸ்டாலின் இராஜாங்கம்

என வித்தியாசமான படைப்பாளிகளின் படைப்புகளின் அணிவகுப்பு தென்திசை மூலமாகவே நடந்தேறியுள்ளது.

ஒரே துறை சார்ந்த இரண்டு அறிஞர்களைச் சந்திக்க வைத்து அவர்களை விவாதிக்கவிட்டு அந்த உரையாடலை புத்தகமாக்க முடிவு செய்தோம்.

அரசியல் குறித்து நல்லகண்ணு - அ.மார்க்ஸ் ஆகியோரும், பாலியல் குறித்து சாருநிவேதிதா - நளினி ஜமீலா ஆகியோரும் கலந்துரையாடியதைப் புத்தகங்களாகக் கடந்த வருடம் கொண்டு வந்தோம்.

இந்த நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த வருடம் சமயம் குறித்து தொ.பரமசிவம் - சுந்தர்காளி ஆகியோரைச் சந்திக்க வைத்து புத்தகமாக்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.

 
இசையறிஞர் நா.மம்மதுவின் "இழை இழையாய் இசைத் தமிழாய்" என்னும் புதிய நூல் அரிய கருத்துக்கருவூலமாய் மலர்ந்திருக்கிறது என்றார் பதிப்பகத்தின் மை.பா.நாராயணன்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:26:22 PM1/11/09
to Min Thamizh
இராம. கோபாலனுக்கு பிடித்தது
 
 
செங்கோட்டை ஸ்ரீராம் என்பவர் எழுதிய "ஏன்? எதற்காக?" என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நமது பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள் எல்லாவற்றிற்கும் என்ன காரணம் என்று அது கூறுகிறது.
 
பாலகுமாரனின் ஆன்மிகப் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். திருஞானசம்பந்தர் பற்றியும், சித்தர்கள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை என்றார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராமகோபாலன்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:30:11 PM1/11/09
to Min Thamizh

தவணை முறையில் விற்பனை!

சென்னை புத்தகக் காட்சியில் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே உள்ள ஓர் அரங்கம் நம் கவனத்தை ஈர்த்தது. உள்ளே சென்று பார்த்தால் ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் நம்மை அதிர்ச்சியடைய வைத்தது!
 
  • ஒரு புத்தகத்தின் விலை 11 ஆயிரத்து 450 ரூபாய்
  • இன்னொரு புத்தகத்தின் 43 பாகங்களின் விலை 1 இலட்சத்து 25 ஆயிரத்து 295 ரூபாய்.
"தி ஸ்டாண்டர்டு லிட்ரேச்சர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்" என்ற அந்தப் புத்தக நிறுவனத்தின் சென்னைப் பிரிவு மேலாளரான பி.என். மனோகரன் நம்மிடம் கூறியதாவது:-
 
எங்களுடைய நிறுவனம் 1913ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது. 1960ல் சென்னையில் துவங்கப்பட்டது. இந்தியாவின் பல இடங்களில் கிளைகள் உள்ளன.

நாங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலப் புத்தகங்களையே வெளியிட்டிருக்கிறோம். குறிப்பாக "என்சைக்கிளோபிடியா" என்று சொல்லப்படுகிற கலைக் களஞ்சியங்களை அதிகமாக வெளியிட்டிருக்கிறோம். விஞ்ஞான கலைக் களஞ்சியம், உலக மிருகங்களைப் பற்றிய கலைக் களஞ்சியம் என்று நிறைய வெளியிடுகிறோம். "ஹால்ஸ்பரீஸ் லாஸ் ஆஃப் இந்தியா" என்ற புத்தகம் 43 பாகங்களைக் கொண்டது. அதன் விலை 1 இலட்சத்து 25 ஆயிரத்து 295 ரூபாய். "என்சைக்ளோபிடியா ஆஃப் ரிலிஜியன் அன்ட் எதிக்ஸ்" என்ற புத்தகத்தின் விலை 62 ஆயிரம் ரூபாய்.

 
 
விலை அதிகமாக இருந்தாலும் எங்களுடைய புத்தகங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். நிறுவனங்கள் வாங்குகிறார்கள் என்பதைவிட தனிநபர்கள் அதிகம் வாங்குகின்றனர். இவ்வளவு விலையை ஒரே சமயத்தில் கொடுத்து வாங்க முடியாது என்பதால் தவணைமுறையில் விற்பனை செய்கிறோம். 3 அல்லது 4 தவணைகளில் விலையைக் கொடுக்கலாம் என்றார்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 11, 2009, 8:44:19 PM1/11/09
to Min Thamizh

இந்த ஆண்டு...இவை புதுசு!

 
ஐந்திணைப் பதிப்பகம்:-
 
பழம் இலக்கிய நூல்களை வெளியிட்டு வரும் ஐந்திணைப் பதிப்பகம் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்காக வெளியிட்ட நூல்கள்:
  • குழ. கதிரேசன் எழுதிய "எளிய தமிழில் பாலைக்கலி"
  • வி.சி.புருஷோத்தம் எழுதிய "எல்லோருக்கும் தொல்காப்பியம்"

150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஜி.யு.போப்பின் "தமிழிலக்கண நூல்" புதுவடிவம் எடுக்கிறது.

 
பொற்கோ எழுதிய "ஆராய்ச்சி நெறிமுறைகள்" நூல் மறுபதிப்பு எனினும் பயனுள்ள பதிப்பு.
  • இனிக்கும் அறிவியல்
  • தமிழைப் படிப்பேன்
  • பாட்டு மழை

போன்ற குழந்தைகளுக்கான நூல்கள்.

குமரன் பதிப்பகம்:-
 
குமரன் பதிப்பகம் இந்த வெளியிட்ட நூல்களில் முக்கியமானது
  • கவிஞர் வாலி எழுதிய "வாரந்தோறும் வாலி"
  • கே.ஜீவபாரதியின் "அந்த நாள் ஞாபகம்"
  • தா.பாண்டியனின் "பாரதியும் யுகப்புரட்சியும்"

குறிப்பிடத்தக்க பிற நூல்கள்.

தன்னம்பிக்கை நூல் எழுத்தாளர் மெர்வின் எழுதிய
  • நல்ல எண்ணம் நன்மை தரும்
  • தடைக்கு விடை கொடு

ஆகியவை நம்பிக்கை மலர்களாக மலர்ந்திருக்கின்றன.

வேலை தேடுவோருக்கு உதவும் வகையில் "வங்கித் தேர்வு வழிகாட்டி"யை நெல்லை கவிநேசன் எழுதியுள்ளார்.

 
முல்லைப் பதிப்பகம்:-
 
பழைய இலக்கியங்களை எல்லாரும் புரிந்து கொள்ளும்வகையில் முல்லைப் பதிப்பகம் அவற்றைக் கதை வடிவில் வெளியிட்டுள்ளது.
 
சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய
  • கலித்தொகை
  • குறுந்தொகை

போன்றவை இந்த வரிசையில் நிற்கின்றன.

"தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதிய "சுதந்திரப் போராட்ட வரலாறு" இந்த ஆண்டு மறுபதிப்பு கண்டுள்ளது. முல்லை முத்தையா தொகுத்த "காணக் கிடைக்காத கடிதங்கள்" என்ற 100 சிறந்த கடிதங்களின் தொகுப்பு, முல்லையின் கொல்லையில் இந்த ஆண்டு பூத்திருக்கின்றன.

 
நியூசெஞ்சுரி புத்தக நிலையம்:-
 
நியூசெஞ்சுரி புத்தக நிலையம் சிறுவர்களுக்காக
  • விளையாட்டுப் பிள்ளைகள்
  • நீச்சல் பயிற்சி

ஆகிய ரஷ்ய மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

"கடலோரத்தில் ஒரு சிறுவன்" என்.துபொவ் எழுதிய ரஷ்ய நாவல். இதைத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்

 
  • சீனத்து செவ்வியல் கவிதைகள்
  • சியாம் சுதாகர் மலையாளக் கவிதைகள்

போன்ற மலையாளக் கவிதை நூல்களையும், கரிவெள்ளூர் முரளி எழுதி யூமா வாசுகி மொழிபெயர்த்த "சே குவேரா" மலையாள நாடகத்தையும் என்.சி.பி.எச் வெளியிட்டுள்ளது.

அரபி மொழியையும் என்.சி.பி.எச் விட்டுவைக்கவில்லை.
  • நவீன அரபிக் கவிதைகள்
  • நவீன அரபி உரைநடை வரலாறு

போன்ற நூல்களை அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அலைகள்:-
 
ஆழமான புத்தகங்களை வெளியிடும் "அலைகள்" ரொமிலா தாப்பரின்,
  • வரலாறும் வக்கிரங்களும்
  • கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா

ஆகிய நூல்களை வெளியிடுகிறது.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் "அறிவியல், தத்துவம், சமுதாயம்" அலைகளின் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க வீச்சாகத் திகழ்கிறது.

"பெளத்தத்தின் சமூகத் தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும்" என்ற உமா சக்ரவர்த்தியின் நூலும், "ஆளும்வர்க்கமாக அறிவு ஜீவிகள்" என்ற அசோக் சக்ரவர்த்தியின் நூலும் புதிய வெளியீடுகள்.

நா.வானமாமலை எழுதிய 6 - 7 நூல்கள் இந்த ஆண்டு அலைகளின் வரிசையில் சேர்கின்றன.

 
கிழக்கு பதிப்பகம்:-
 
அன்றாட நாட்டு நடப்பு, உலக நடப்புகளைப் புத்தகங்களாகக் கொண்டு வரும் கிழக்குப் பதிப்பகம் இந்த ஆண்டு "இந்தியாவில் தீவிர வாதம் - ஒரு முழுமையான ஆய்வு" என்ற பா.இராகவனின் நூலை வெளியிடுகிறது.

மருதனின் "இந்தியப் பிரிவினை - இரத்த சரித்திரம்" என்ற நூலும், "ஒபாமா பராக்" என்ற ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் கிழக்கின் புதிய வரவுகள்.

  • வேலை விதிகள்
  • நிர்வாக விதிகள்
  • செல்வம் சேர்க்கும் விதிகள்
  • வாழ்க்கையின் விதிகள்

என்று மொழிபெயர்ப்பு நூல்களை ஆங்கிலப் புத்தக வடிவமைப்புடன் தரமாக வெளியிட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு "பிரபாகரன்" என்ற பெயரில் வெளிவருகிறது.

 
"மாய வலை" கிழக்கின் குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்று.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 12, 2009, 4:29:09 PM1/12/09
to Min Thamizh

600 ஆண்டு கால மதுரை வரலாறு!

தமிழினி பதிப்பகம் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்காக ஒரு பெரிய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளது.

 
1,048 பக்கம் உள்ள "காவல் கோட்டம்" என்ற அந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் சு.வெங்கடேசன்.
 

மதுரையைச் சேர்ந்த சு.வெங்கடேசன் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றை நாவல் வடிவில் எழுதியிருக்கிறார்.

கி.பி.1310 இல் மாலிக்காபூர் படையெடுப்பு தொடங்கி 1910 வரை மதுரையின் வரலாறு நூல் முழுக்க விரிந்து செல்கிறது.

மாலிக்காபூர் (1310 - 1350), விஜயநகரப் பேரரசு (1350 - 1737), அதன்பின் கிழக்கிந்திய கம்பெனி, ஆர்க்காடு நவாபு, பிரெஞ்ச் படையெடுப்புகள் என மதுரை அழிந்து, சிதைந்து, மீண்டும் மீண்டும் உதித்தெழுந்த வரலாறு நாவலாகியுள்ளது.

 
நாவலில் நூற்றுக்கணக்கான கிளைக் கதைகள் உள்ளன. 1876ம் ஆண்டு தாதுவருஷப் பஞ்சம், 1890ல் முல்லைப் பெரியார் அணை உருவானது, குற்றப் பழங்குடியினர் சட்டம் என நிறைய வரலாற்றுத் தகவல்களை வைத்து உருவான இந்த உருப்படியான நாவல், சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதற்கென்றே உருவான கலைப் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 12, 2009, 5:25:45 PM1/12/09
to Min Thamizh

இந்த ஆண்டு... இவை புதுசு!

பாரி நிலையம்:-
 
  • திருக்குறள் வ.உ.சி. உரை
  • தெ.பொ.மீ.யின் "தமிழும் பிற பண்பாடும்"
  • கா.சுப்பிரமணிய பிள்ளையின் "மெய்கண்ட சாத்திரம்"
  • "டெக்கமரான் கதைகள்"

இந்த ஆண்டு பாரிநிலையத்தின் புதிய வெளியீடுகள்.

இராதா மணாளன் எழுதிய "திராவிட இயக்க வரலாறு" சென்ற ஆண்டு அதிகம் விற்பனையான நூல்களில் முதலிடத்தைப் பிடிக்கிறது.

 
செண்பகா பதிப்பகம்:-
 
செண்பகா பதிப்பகம் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி 70 நூல்களை வெளியிடுகிறது.

செண்பகா பதிப்பகம் "ஓவியக் குறள்" என்கிற பெயரில் வெளியிட்டிருக்கும் திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு வண்ண ஓவியமென 133 வண்ண ஓவியங்களுடன் ஆர்ட் பேப்பரில் பரிசுப் பதிப்பாக வெளிவருகிறது.

  • மராட்டியப் பெரியார் ஜோதிராவ் பூலே: வாழ்வும், பணியும்
  • தீரமிகு நேதாஜியின் வீரமிகு வரலாறு

ஆகிய இரு நூல்களும் எம்.ஏ.பழனியப்பன் செண்பகா பதிப்பகத்திற்காக எழுதிய நூல்கள்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் மூன்று குறுநாவல்கள் தனித்தனி நூல்களாக வெளிவருகின்றன.

பத்து ரூபாய் விலையில் மருத்துவம், வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகளுக்கான நூல்களை செண்பகா பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.

 
வானதி:-
 
வானதி பதிப்பகம் இந்த ஆண்டு
  • கோபால தேசிகாச்சாரியாரின் "மறைமூர்த்திக் கண்ணா" நூலை வெளியிடுகிறது
  • முக்கூர் நரசிம்மாச்சாரியாரின் "அமுதக் கலசம்"
  • இன்னொரு நூல். நா.மகாலிங்கம் எழுதிய "எனக்குள் பூத்த எண்ணங்கள்"
இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க புத்தகமாக வெளிவருகிறது. அமரர் கல்கியின் "சிரிப்பும் கண்ணீரும்."
 
சுப.அண்ணாமலையின் "இலக்கியச் சங்கம்" வானதியின் பிற நூல்கள்.
 
பூங்கொடி பதிப்பகம்:-
 
பெ.சு.மணி எழுதிய;
  • வ.வே.சு. அய்யரின் கட்டுரைக் களஞ்சியம்
  • கம்பன் புகழ் பரப்பிய வ.வே.சு.அய்யர்

ஆகிய இரண்டு நூல்களும் பூங்கொடி பதிப்பகத்தின் குறிப்பிட வேண்டிய நூற்களாக இந்த ஆண்டு மலர்கிறது.

  • நாகர்கோவில் கிருஷ்ணன் எழுதிய "அயோத்தியில் அக்னிப் பிரவேசம்"
பருத்தியூர் சந்தானராமனின்
  • இலலிதா சகஸ்ரநாமம்
  • அபிராமி அந்தாதி
  • கந்தபுராணம்

விரிவுரை பூங்கொடியின் பக்திக் கடலில் சிறு துளிகள்.

மா.கி. இரமணனின்
  • வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்
  • ஞானியர் பூமி

பூங்கொடி பதிப்பகத்தின் புது மலர்களாக மலர்கின்றன.

கவிதா:-
 
தமிழ்ப் படைப்பிலக்கிய நூல்களை வெளியிடும் கவிதா இந்த ஆண்டு
  • சா.கந்தசாமியின் "மாயாலோகம்"
  • பிரபஞ்சனின் "எனக்குள் இருப்பவள்"

ஆகிய நூல்களைக் கொண்டு வருகிறது.

  • ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் முழுத் தொகுப்பாக ரூ.500 விலையில் வருகிறது
  • ஜோதிர்லதா கிரிஜாவின் சிறுகதைத் தொகுதி 5 புத்தகங்களும்
  • வாசந்தியின் "வல்லினமே மெல்லினமே"
  • சூர்யகாந்தனின் "எதிர் எதிர் கோணங்கள்"
  • சுகிசிவத்தின் "பெண்ணே நீ வாழ்க"

நூலும் கவிதாவின் புதிய வெளியீடுகள்.

பிரேமா பிரசுரம்:-
 
எல்லாத் தரப்பு வாசகர்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேமா பிரசுரம் விலை குறைவான நூல்களை வெளியிட்டு வருகிறது.
 
இந்த ஆண்டு பிரேமா பிரசுரம் வெளியிடும் சிறப்பான நூல்களாக
  • குறிஞ்சி ஞான வைத்தியநாதன் எழுதிய "திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்"
  • துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி எழுதிய "சிவ மகாபுராணம்"
ஆகியவற்றைச் சொல்லலாம்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 12, 2009, 5:34:46 PM1/12/09
to Min Thamizh

குழந்தைகளைப் பற்றி 3 குறும் படங்கள்!

சென்னை புத்தகக் காட்சியில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (9/1/09)  உலக திரைப்படம் மற்றும் குறும்பட ஆவணப்படத் திரைவிழா நடைபெற்று வருகிறது.

 
திங்கள்கிழமை (12/1/09) மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.
  1. ஜாபர் பனாகி இயக்கிய "தி மிரர்"
  2. நடிகை ரோகிணி இயக்கிய "சைலன்ட் கியூஸ்" மற்றும்
  3. கீதா இளங்கோவன் இயக்கிய "லிட்டில் ஸ்பேஸ்"

ஆகிய மூன்று குறும்படங்களே அவை.

இதில் முதலிரண்டு குறும்படங்களும் திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வற்புறுத்தி நடிக்க வைக்கப்படும் குழந்தை நட்சத்திரங்களின் அவல நிலை பற்றிய படங்கள்.

கீதா இளங்கோவனின் "லிட்டில் ஸ்பேஸ்" ஒரு இரயிலில் பயணம் செய்யும் மனவளர்ச்சி குறைந்த சிறுவனைப் பற்றிய கதை. தனது மனவளர்ச்சிக் குறைபாட்டால் பிற பயணிகளிடத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும் அந்தச் சிறுவன், அங்குள்ள ஒரு பெண்ணின் அன்பான பேச்சால் எப்படி இயல்பான குழந்தைபோல மாறுகிறான் என்பதே கதை.

 
இந்தக் குறும்பட விழாவுக்கு வந்த நடிகை ரோகிணி படத்தைப் பார்த்த இரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சுவையான நிகழ்ச்சியும் நடந்தது.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 12, 2009, 5:40:42 PM1/12/09
to Min Thamizh

குழந்தைகளுக்கான "சி.டி" மாத இதழ்!

சென்னை புத்தகக் காட்சி இந்த வருடம் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான அரங்குகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றான "சட்வட் இன்ஃபோசல்" அரங்கில் குழந்தைகளுக்கான சிடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு கூட "சி பாலக்" என்ற குழந்தைகளுக்கான ஆங்கில "சி.டி" இதழ் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

சிறுவர்களுக்கான குறுந்தகடு விற்பனை அரங்கத்தில்.
 
 
சட்வட் இன்ஃபோசலைச் சேர்ந்த வி.நந்தகோபாலிடம் அது பற்றிக் கேட்டோம்.

இன்றைய குழந்தைகள் புத்தகம் படிப்பதை விட "டி.வி" போன்ற காட்சி ஊடகங்களைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். குழந்தைகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களுடைய நேரத்தை வீணாக்குவதைவிட உருப்படியாக அவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கும், பொது அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையில் "சி.டி" தயாரித்தால் என்ன என்று தோன்றியது. அதில் தோன்றியதுதான் எங்களுடைய "சி பாலக்" சிடி மாத இதழ்.

 
இந்த சிடியில் குழந்தைகளுக்குத் தேவையான பல அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த சிடியைப் பார்த்து குழந்தைகள் முறைப்படி
  • படம் வரையக் கற்றுக் கொள்ளலாம்
  • ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்ள ஸ்போக்கன் இங்கிலீஷ்
  • ஆங்கிலச் சொல் விளையாட்டு
  • ஆங்கில இலக்கணம்

என அனைத்தும் கற்றுக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு மாதமும் 4 கதைகள் வெளியிடப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் கொடுக்கப்படுகின்றன.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக யோகா கற்றுத் தரும் பாடங்களும் இந்த சிடியில் உள்ளன.

இந்தி கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு அதை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பல இடங்களில் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியும் இந்த சிடியில் உள்ளது.

விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்காகவும், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும் நிறைய அறிவியல் விஷயங்களும் இந்த சிடியில் உள்ளன. உதாரணமாக "மோட்டார் இன்ஜின் எப்படி வேலை செய்கிறது?" என்பதைப் படங்களுடன் விளக்கியிருக்கிறோம்.

வரலாறு தொடர்பான செய்திகளும் இதில் உள்ளன.

பொது அறிவு என்கிற பகுதியில் உலகச் செய்திகள், இந்தியச் செய்திகள் தரப்படுகின்றன.

 
சிறந்த சாதனையாளர்களின் பேட்டிகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிடி மாத இதழுக்கு ஓராண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு கூரியர் மூலமாக ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய வீட்டுக்கு சிடியை அனுப்பிவிடுகிறோம் என்றார் நந்தகோபால்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 12, 2009, 5:44:59 PM1/12/09
to Min Thamizh

புத்தகங்களைப் படிக்கவைக்க வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்

சென்னை புத்தகக் காட்சியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையைச் சேர்ந்த ஸ்டாலின் குணசேகரன் "இளைய பாரதமே எழு" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற திங்கள்கிழமை (12/01/09) வந்திருந்தார்.

அவர் நம்மிடம் கூறியதாவது:-

நிறையப் படித்தவர்கள், ஆய்வாளர்கள்தாம் புத்தகம் வாசிப்பார்கள் என்று கருத்து இருக்கிறது. உண்மை அப்படியில்லை. கூலித் தொழிலாளி கூட புத்தகம் படிக்க ஆர்வமாக இருப்பார். என்னுடைய "விடுதலை வேள்வியில் தமிழகம்" என்ற புத்தகத்தின் விலை ரூ.600. அந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் ஒரு தனியார் நூலகத்தில் படித்துவிட்டு புத்தகத்தை வாங்க ஆசைப்பட்ட கூலித் தொழிலாளி ஒருவருக்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்க வசதியில்லை. அவர் தினமும் தனது மதிய உணவுக்காகச் செலவு செய்யும் 20 ரூபாயை ஒரு மாதம் சேமித்து அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கிறார். இதை அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.

நான் சிறுவயதாக இருக்கும்போது "குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்" என்ற ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகத்தை எனது தந்தை வாங்கிக் கொடுத்தார். அதைத்தான் முதன்முதலில் வாசித்தேன்.

நான் சிறுவயதில் படித்த இன்னொரு புத்தகம், பூ.சோமசுந்தரம் மொழிபெயர்த்த "உண்மை மனிதனின் கதை" என்ற புத்தகம். அது நீண்டநாட்களாக மறுபதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது மறுபதிப்புக் கண்டிருக்கிறது. அது எனக்கு இப்போதும் பிடித்த புத்தகம்.

விடியல் பதிப்பகம் வெளியிட்ட "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகமும் எனக்குப் பிடித்தது.

 
இப்போது எல்லா ஊர்களிலும் புத்தகக் காட்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. புத்தகக் காட்சிகளுக்கு மக்களை வரவழைப்பது, அவர்களைப் புத்தகங்களை வாங்கச் செய்வது வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது. அடுத்து புத்தகம் வாங்கிய மக்களைப் படிக்கச் செய்வதற்கான இயக்கம் நடைபெற வேண்டும் என்றார் ஸ்டாலின் குணசேகரன்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 5:49:48 PM1/13/09
to Min Thamizh
சென்னை புத்தகக் காட்சியில் காலச்சுவடு பதிப்பகத்தில் நாள்தோறும் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. செவ்வாய்க்கிழமை (13/1/09)  5 நூல்கள் வெளியிடப்பட்டன.
  • எஸ்.தேன்மொழியின் "துறவி நண்டு"
  • இசை எழுதிய "உறுமீன்களற்ற நதி"
  • மரகதமணியின் "கடலுக்குச் சொந்தக்காரி"
ஆகிய நூல்களைத் தவிர, ஆ.சிவசுப்பிரமணியனின்
  • "ஆகஸ்ட் போராட்டம்"
  • "வரலாறும் வழக்காறும்"

வெளியிடப்பட்டன.

காலச்சுவடு பதிப்பக அரங்கில் நூலை வெளியிடுகிறார் கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன். பெறுகிறார் எழுத்தாளர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா. உடன் (இடமிருந்து) தேவி பாரதி, காலச்சுவடு கண்ணன்.

ஆ.சிவசுப்பிரமணியனின் நூல்களை வெளியிட கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் வந்திருந்தார்.

அவர் கூறியதாவது:-

"தமிழ் மக்களுக்குப் புத்தகம் வாங்கும் பழக்கமும், படிக்கும் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. இது மேலும் மேலும் வளர வேண்டும். புத்தகக் காட்சிகள் மூலம் எல்லாப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. நூல்களைப் படைப்பவர்களின் எண்ணிக்கையும் பதிப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது. எனக்குப் பிடித்த புத்தகம் பாரதியின் படைப்புகள்தான். அதையும் தாண்டி புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 6:07:35 PM1/13/09
to Min Thamizh

இந்த ஆண்டு...இவை புதுசு!

அம்ருதா பதிப்பகம்:-
 
இலக்கிய நூல்களை வெளியிடுவதையே உயிர்மூச்சாகக் கொண்டிருப்பது அம்ருதா பதிப்பகம். புகழ்மிக்க இலக்கியப் படைப்பாளிகளான
  • அசோகமித்திரன்
  • நீல.பத்மநாபன்
  • சா.கந்தசாமி
  • ஆ.மாதவன்
  • சூர்யகாந்தன்
  • ஆதவன்
  • பிரமிள்
  • கந்தர்வன்
  • இராஜம்கிருஷ்ணன்
ஆகியோரின் சிறந்த கதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது.
 
சிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து "முத்துக்கள் பத்து'' என்கிற பெயரில் வரிசை நூல்களை வெளியிட்டிருக்கிறது.
 
இந்த ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிந்தனைகளைத் தொகுத்து "ஜெயகாந்தன் சிந்தனைகள்" என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது. திரைப்படமாக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்த
  • உமாசந்திரனின் "முள்ளும் மலரும்"
  • எம்.சி.ஸித்தி லெவ்வையின் "அசன்பே சரித்திரம்"
சுரேஷ்குமாரின்
  • "வெற்றிப் பாதை"
  • "விக்ரமாதித்யன் கவிதைகள்"

முழுத் தொகுப்பு அம்ருதா பதிப்பகத்தில் இருந்து வந்த அமுதக் கலசங்கள்.

மொழிபெயர்ப்பு நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்களை அம்ருதா வெளியிட்டுள்ளது. வங்கமொழிச் சிறுகதைகளை,
  • சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் "வங்காள மொழிபெயர்ப்பு சிறுகதை"
  • குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் "மலையாள சிறுகதைகள்"
  • இரவீந்திரநாத் தாகூரின் நூல் "சிதைந்த கூடு"

ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறது.

எனி இந்தியன் பதிப்பகம்:-
 
புத்தகப் பதிப்பில் புதிய பாதையை அமைத்து புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களில் "எனி இந்தியன்" பதிப்பகமும் ஒன்று.
 
எனி இந்தியன் பதிப்பகத்தின் குறிப்பிடத்தக்க நூல்களாக தமிழின் முதல் இசை நாடகமான
  • "பிரதாப சந்திர விலாசம்"
  • "ஞானரதம்"

இதழ் தொகுப்பு, "வெளி"நாடக இதழ்த் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம்.

ஜெயகாந்தனைப் பற்றி அமெரிக்க வாழ் தமிழர்களின் பார்வையில் பதிவு செய்த "அமெரிக்காவில் ஜெயகாந்தன்" என்ற நூல்,
  • உமா மகேஸ்வரியின் சிறுகதைத் தொகுப்பு "அரளிவனம்"
  • ஜெயமோகனின் "ஈழ இலக்கியம்"
  • பி.ச.குப்புசாமியின் சிறுகதைத் தொகுப்பு "தெரிந்த முகங்கள்"

ஆகிய நூல்கள் புதிய வெளியீடுகளாகும்.

கருப்புப் பிரதிகள்:-
 
தலித் அரசியல், அழகியல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய "மீள்கோணம்" என்ற புத்தகமும், சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களைப் பற்றி மு.வளர்மதி எழுதிய சுயமரியாதை வீராங்கனைகள் என்ற இரண்டு புத்தகங்களும், சேதுகால்வாய் பற்றிய புத்தகமும் கருப்புப் பிரதிகளின் வெளிச்ச வெளியீடுகளாக இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.

முத்தையா வெள்ளையன் எடுத்த பேட்டிகளின் தொகுப்பான "அது - இது - எது", மொழிபெயர்ப்பு நூலான "குழந்தைப் போராளி" ஆகியவை கருப்பு பிரதிகளின் வெளிச்ச வெளியீடுகளாக இந்த ஆண்டு உருவாகியுள்ளன.

பாரதி புத்தகாலயம்:-
 
அறிவியல், அரசியல், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்வேறு தளங்களில் பயணம் செய்யும் பாரதி புத்தகாலயம் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க நூல்களைக் கொண்டு வந்துள்ளது.
  • என்.ராம் எழுதிய "திபெத் - சில புரிதல்கள்" தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது
  • பாண்டியக் கண்ணன் எழுதிய "சலவான்"
  • போடி மாலன் எழுதிய "அலையும் காலம்"
பாரதி புத்தகாலயத்தின் நாவல் வெளியில் நிகழ்ந்த புதிய வீச்சுகளாக உள்ளன.
  • தி.குழந்தைவேலுவின் "அகலாத நினைவுகள்"
  • க.சுப்பராவின் "குருவிகள்"
  • வெ.ஜீவகுமாரின் "சொல்ல மறுத்த கதை"

பாரதி புத்தகாலயத்தின் பாதையில் பதிந்த சிறுகதைத் தடங்கள்.

அறிவியல் நூல்களில் இரா.நடராசனின் "விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்" குறிப்பிடத்தக்கவை.

விகடன் பிரசுரம்:-
 
பல்துறை நூல்களை வாசகர்களை ஈர்க்கும்விதத்தில் வெளியிட்டுச் சாதனை புரிந்து வருவது விகடன் பிரசுரம்.
 
சென்னைப் புத்தகக் காட்சிக்காக விகடன் பிரசுரம்;
  • டாக்டர் எம்.பார்த்தசாரதி எழுதிய "மிஸ்டர் போன்ஸ்" என்ற மருத்துவ நூலை வெளியிட்டிருக்கிறது
சத்குரு ஜக்கி வாசுதேவின்
  • கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
  • மூன்றாவது கோணம்
ஆகியவை விகடன் பிரசுரத்தில் புதிதாகப் பிறந்தவை.
  • ஆரூர்தாஸின் "சிவாஜி வென்ற சினிமா இராஜ்ஜியம"
  • சி.சரவணன் எழுதிய "சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம்"
  • டாக்டர் எஸ்.ஷாலினியின் "பெண்ணின் மறுபக்கம்"

போன்றவை விகடன் பிரசுரத்தின் பன்முகத்தன்மைக்குக் கண்ணாடியாக அமைந்தவை.

அறவாணன் தமிழ்க் கோட்டம்:-
 
அறவாணன் தமிழ் கோட்டத்தின் வெளியீடுகளாகச் சென்னைப் புத்தகக் காட்சிக்கு மலர்ந்திருக்கும் நூல்களில் தாயம்மாள் அறவாணன் எழுதிய "அவ்வையார் - அவரைப் பற்றியும், அவர்தம் படைப்புகள் பற்றியும்" என்ற நூலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
 
க.ப.அறவாணன் எழுதிய
  • சொல்ல முடிந்த சோகங்கள்
  • தமிழர் உணரவும் உயரவும்
இந்த ஆண்டு தமிழ் கோட்டத்தில் பூத்திருக்கின்றன.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 6:18:06 PM1/13/09
to Min Thamizh

40 நிமிடத்தில் 11 குறும்படங்கள்!

சென்னை புத்தகக் காட்சியில் உலக திரைப்படம் மற்றும் குறும்பட ஆவணப்படத் திரைவிழா நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை (13/01/09),
  • புதுயுகம் நடராஜன் இயக்கிய "பிஞ்சுகள்"
  • சசி இயக்கிய "ஓடி விளையாண்ட காலம்"
  • விக்டோரியா டிசிகாவின் "தி சில்ரன் ஆர் வாட்சிங் அஸ்" மற்றும்
  • எஸ்.சத்யேந்திரா இயக்கிய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

பெற்றோரின் சச்சரவுகள் குழந்தைகளின் மனதை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைச் சித்திரிக்கும் "தி சில்ரன் ஆர் வாட்சிங் அஸ்" ஓர் இத்தாலிய குறும்படமாகும்.

குழந்தைகளின் பழைய விளையாட்டுகள் காணாமல் போய்விட்டதை "ஓடி விளையாண்ட காலம்" சோகத்துடன் சொல்கிறது. தெருக்கூத்து என்பது எப்படி கடலூர் மாவட்டத்துக்குரியது என்பதை பிஞ்சுகள் விளக்குகிறது. எஸ்.சத்யேந்திராவின் 11 குறும்படங்கள் 40 நிமிடத்தில் ஒளிபரப்பப்பட்டன.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 6:21:34 PM1/13/09
to Min Thamizh

ஆங்கிலத்துக்கென்றே ஓர் அரங்கம்!

சென்னைப் புத்தகக் காட்சியில் தனித்துவமிக்க அப்படிப்பட்ட அரங்குகளில் நம் கண்ணைக் கவர்ந்தது "ஷேக்ஸ்பியர் பப்ளிகேஷனின்" அரங்கம். முழுக்க முழுக்க ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியத்திற்கான இந்த அரங்கை நடத்தும் ஷேக்ஸ்பியர் பப்ளிகேஷனின் நிறுவனர் வி.எச்.பாஸ்கரனிடம் பேசினோம்.
 
ஷேக்ஸ்பியர் பப்ளிகேஷனின் பதிப்பாக்க முயற்சிகள் பற்றி அவர் கூறியதாவது:-
 
நான் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவன். எஸ்.ஆர்..எம் ஆர்ட்ஸ் அன்ட் சைன்ஸ் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

இன்று பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எது தேவை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஷேக்ஸ்பியர் 37 நாடகங்களை எழுதியுள்ளார். நான் அவற்றில் இருபத்திரண்டை கதை வடிவில் எழுதியிருக்கிறேன்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் திறன் அவசியம் என்பதால் ஆங்கிலத்தில் திறனை வளர்க்கும் வகையில் ஆங்கில இலக்கணம், ஸ்போக்கன் இங்கிலீஷ், லெட்டர் ரைட்டிங் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறேன். பதிப்பகம் ஆரம்பித்து 9 வருடம் முடிந்து 10 ஆண்டு நடந்து வரும் வேளையில், மொத்தம் 86 புத்தகங்களை நானே எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த கல்லூரி ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டு அதற்காகப் புத்தகம் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

ஆங்கிலத்தில் திறனை வளர்க்கும் புத்தகங்கள் தவிர, பொது அறிவு புத்தகங்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்களையும் வெளியிட்டு இருக்கிறேன் என்றார்.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 6:25:52 PM1/13/09
to Min Thamizh
கண்காட்சிக்குள் ஓர் கண்காட்சி!
 
சென்னை புத்தகக் காட்சியில் கண்ணைக் கவரும் இன்னொரு கண்காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. புத்தகக் காட்சியின் ஒரு பகுதியில் அழகழகான நவீன ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
 
புத்தகக் காட்சிக்காக வருகிறவர்கள் ஒரு நிமிடம் நின்று இரசித்துப் பார்க்கிறார்கள். விசாரிக்கிறார்கள்.
 
இந்த ஓவியக் கண்காட்சியை நடத்திவரும் ஓவியர் எம்.இராகவனிடம் (படம்) பேசினோம். அவர் கூறியதாவது:-
 
சினிமாத்துறையில் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்து வருகிறேன். பி.வி.ஆனந்தகுமாரின் "மய்யம்" திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் நான்தான்.

சென்னை புத்தகக் காட்சிக்கு உள்ளே வரும் பாதையில் காணப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் வளைவுகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறேன். குமுதத்திற்கான வளைவுகளையும் வடிவமைத்தேன்.

இந்தக் கண்காட்சியைப் பலரும் இரசித்துப் பார்க்கிறார்கள். நிறையப் பேர் விசாரித்திருக்கிறார்கள். தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு போனவர்கள் ஏராளம். இதற்கு முன் நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும், புனேயிலும், பெங்களூரிலும் இதுபோல கண்காட்சிகள் நடத்தி இருக்கிறேன் என்றார்.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 6:36:29 PM1/13/09
to Min Thamizh

சிறந்த தமிழ் நூல்கள், பதிப்பகங்களுக்குப் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

2007ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு பரிசுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் மற்றும் வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (13/1/09) வெளியிட்டுள்ளது.

சிறந்த தமிழ் நூலுக்கு ரூ. 20 ஆயிரமும், அதனை வெளியிட்ட பதிப்பகத்துக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.

பரிசு பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்கள்:-

  • திருத்தொண்டர் காப்பியம் - சூ. இன்னாசி காவ்யா பதிப்பகம்
  • கனவைப் போலொரு மரணம் - அ. வெண்ணிலா, காதைப் பதிப்பகம்
  • நதியின் மடியில் - ப. ஜீவகாருண்யம், அருள் புத்தக நிலையம், கடலூர்
  • ஆலமர இடையழகு - எழில் வரதன், காதைப் பதிப்பகம்
  • நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள் - சு. குப்புசாமி, பழனியப்பா பிரதர்ஸ்
  • சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும் - முனைவர் கா. மீனாட்சிசுந்தரம், ருக்மணி இராமநாதன் அறக்கட்டளை, காரைக்குடி.
  • வ.அய். சுப்பிரமணியம் கட்டுரைகள் - வ.அய். சுப்பிரமணியம், அடையாளம் பதிப்பகம், திருச்சி
  • அடோல்ப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் - மு. சுப்பிரமணி, சீதை பதிப்பகம்
  • உலக சினிமா வரலாறு மௌனயுகம் - அஜயன் பாலா, தென்திசை பதிப்பகம்
  • நடுநாட்டு சொல்லகராதி - கண்மணி குணசேகரன், தமிழினி பதிப்பகம்
  • கலை வரலாற்றுப் பயணங்கள் - மு. ஸ்ரீனிவாசன், சேகர் பதிப்பகம்
  • தமிழர் தந்தை வ.உ. சிதம்பரனார் - அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், திருப்பூர்.
  • புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும் - முனைவர் சு. தில்லைவனம், சிவசக்தி பதிப்பகம், புதுச்சேரி
  • பெரும்புகழ் எறும்புகள் - முனைவர் மலையமான், அன்புப் பதிப்பகம்
  • மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை, பாவை பப்ளிகேஷன்ஸ்
  • இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும் - டாக்டர் ஜி. பாலன், டாக்டர் டி. தட்சிணாமூர்த்தி, வானதி பதிப்பகம்
  • மாற்று மருத்துவங்கள் பகுதி 1,2,3,4 - டாக்டர் இரா. மாணிக்கவாசகம், அன்னை அபிராமி அருள் பதிப்பகம்
  • உயிர்காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர் கே.ஏ. சிதம்பர காங்கேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  • மாணிக்கவாசகரும், சிவப்பிரகாசரும் - முனைவர் க. விநாயகம், ஸ்ரீ அன்னை நூலகம், திண்டிவனம்
  • கற்பித்தலில் புதிய அணுகுமுறை (வரலாறு) - முனைவர் க. வசந்தி, முனைவர் பி. இரத்தினசபாபதி, வனிதா பதிப்பகம்
  • ஜெட்ரோபா சாகுபடியும் பயோ டீசலும் - முனைவர் வெ. சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ், மெர்க்குரிசன் பப்ளிகேஷன்ஸ்
  • தமிழக சுற்றுச்சூழல் - இரா. பசுமைக்குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ்
  • தமிழர் கலை இலக்கிய மரபுகள் - முனைவர் ஆறு. இராமநாதன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
  • திராவிட இயக்க வரலாறு - கே.ஜி. இராதாமணாளன், பாரி நிலையம்.
மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் பிரிவுகளுக்கான பரிசு ஜி. மணிமாறன், கே, ரேணுகா எழுதிய பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம் (ரேணுகா பதிப்பகம், நெல்லை) என்ற நூலுக்கும்,
 
இராஜரத்தினம் எழுதிய பண்பாடு வேரும் விழுதும் (தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன், கனடா) என்ற நூலுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 13, 2009, 6:46:42 PM1/13/09
to Min Thamizh

சத்தமில்லாமல் ஒரு தொண்டு!

தமிழுக்குப் பயனுள்ள தொண்டுகளைச் சத்தமில்லாமல் செய்துவருவது பா.ரா.சுப்பிரமணியத்தின் செயல்பாட்டில் இயங்கிவரும் "மொழி அறக்கட்டளை".
 
அது வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் தமிழ் கற்க ஆர்வமாக இருப்பவர்களுக்கும், தமிழ்நாட்டில் பிறந்து பட்டப்படிப்பு வரை ஆங்கிலத்திலேயே பயின்று "தமிழ் தெரியாமல் உள்ள தமிழர்"களுக்கும் பயன்படக்கூடிய வகையில் ஒரு நூலை இந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் கொண்டு வந்துள்ளது.

"A Contemporary Tamil Prose Reader" என்ற அந்தப் புத்தகத்தின் மூலம் இக்காலத் தமிழில் உள்ள பல்வேறு எழுத்து நடைகளைத் தெரிந்து கொள்ள முடியும். படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாதவகையில் தயாரிக்கப்பட்ட 23 பாடங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் 15 படைப்புகளும், 8 கட்டுரைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுரைகளிலும், படைப்புகளிலும் உள்ள பல்வேறு எழுத்து நடை தொடர்பான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் படைப்புகளில் காணப்படும் கடின சொற்களுக்கும், அதில் உள்ள பண்பாட்டு அடிப்படையில் உருவாகி வழங்கிவரும் சொற்களுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த படைப்புகளின் உரைநடையில் உள்ள இலக்கண நுட்பங்களும் ஆங்கிலத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.

அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார். "நெல்லுக்குப் பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்வதைப் போல" வெளிநாட்டு மாணவர்களுக்கும், வேறு மாநிலத் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் கற்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நூல், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யும் நமது மொழிபெயர்ப்பாளர்களுக்கும் உதவுகிறது.
 
நன்றி: தினமணி

annamalai sugumaran

unread,
Jan 14, 2009, 5:16:43 AM1/14/09
to minT...@googlegroups.com
ஐயா ,
எனது உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் !
 தங்களின் இசைப் பற்றிய கட்டுரைகளும் , மற்றும் பல
பயனுள்ள செய்திகளை திரட்டித் தந்தற்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

2009/1/14 Kannan Natarajan <thar...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 14, 2009, 5:32:33 AM1/14/09
to minT...@googlegroups.com
மதிப்பிற்குரிய திரு கண்ணன் நடராஜன் அவர்களே வணக்கம்
இனிய புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
 
புத்தகக் கண்காட்சி பற்றி மிகவும் உபயோகமாக நீங்கள் அளித்த குறிப்புகளைப் படித்த மகிழ்ச்சியில் , அங்கு நேரிலேயும் சென்று  உங்கள் வர்ணனைகளை மனதில் கொண்டு பயனுள்ளதாக நேரத்தை கழிக்கலாம் என்று திட்டமிட்டு நாளை செல்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 

Kannan Natarajan

unread,
Jan 14, 2009, 5:54:34 AM1/14/09
to minT...@googlegroups.com
நன்றி திருவாளர்கள் தமிழ்த்தேனீயார் மற்றும் அண்ணாமலை சுகுமாரன்

Subashini Tremmel

unread,
Jan 14, 2009, 6:13:06 AM1/14/09
to minT...@googlegroups.com
நீங்கள் சேகரித்து வழங்கிய இந்த தொகுப்பிற்கு மிக்க நன்றி கண்ணன் நடராஜன் அவர்களே. இதுவரை நான் இந்த கண்காட்சியைப் பார்த்ததில்லை. இந்த தொகுப்பு செய்திகளைப் படித்த போது ஒரு முறை சென்னையில் இந்த கண்காட்சியை நேரடியாக சென்று பார்க்க ஆவலாகவே உள்ளது.
 
அன்புடன்
சுபா

2009/1/14 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jan 14, 2009, 5:46:52 PM1/14/09
to minT...@googlegroups.com
நன்றி சுபா அவர்களே.

என்னை விட இந்த நன்றிக்கு உரிமையானவர்கள்,

1. இவ்விழையின் தலைப்பிற்கு - இராமகி ஐயா அவர்கள்
2. தொடர்ச் செய்திகளுக்கு - தினமணி நாளிதழ்

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Saravana Rajendran

unread,
Jan 14, 2009, 1:47:45 AM1/14/09
to minT...@googlegroups.com


வணக்கம் இந்த வருடம் புத்தக விழாவில் இந்த குட்டிப்பையனின் புத்தகமும்(அமர்நாத்யாத்திரை) கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடபட்டுள்ளது.

எனக்கு கொஞ்சம் வேலைப்பழு இருந்த காரணத்தால் மராட்டிய மாநில அரசின் கொங்கன ரெயில்வே பற்றிய (ஹிஸ்டோரிகல் இங்சீனியரீங்)Part I பாதியில் நிற்கிறது(திடீரென்ற மராட்டிய மாநில அரசியலில் மாற்றம் (தற்போதைய முதல்‍மந்திரி அசோக் சவானும் எனக்கு நல்ல நன்பர் தான் இருந்தாலும் அவர்களை தொந்திரவு செய்ய விருப்பமில்லை, அதனால் கொங்கான ரெயில்வே புத்தகம்(ஆங்கிலம், தமிழ், இந்தி மராட்டி) இந்த கண்காட்சியில் இடம் பெறவில்லை, அதே போன்று ராக தேவன் இளையராஜா,(தமிழ்) அஸ்டவிநாயக‌ர்(மராட்டியமாநில புகழ்பெற்ற எட்டு விநாயகர் ஆலய வரலாறு(மராட்டி தமிழ்,) விட்டல் ருக்மனி திருக்கோவில் (தமிழ் மராட்டி), மற்றும் கடற்கோட்டை(மாவிரன் சத்திரபதி சிவாஜி தனது ஆட்சிகாலத்தில் கட்டிய கடற்கோட்டைகள் பற்றிய புத்தகம் (ஆங்கிலம் தமிழ்) போன்றவைகள் இந்த வருடத்தின் முடிவிற்குள் உங்களின் கரங்களுக்கு வந்து சேரும்.

உங்களது ஊக்கம் தான் எனக்கு பெரிய பரிசு,

 

 


 
On 1/14/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
 
நன்றி: தினமணி



உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 5:34:05 PM1/15/09
to minT...@googlegroups.com
மனதில் பதிந்த "முள்"
 
சென்னைப் புத்தகக் காட்சி அரங்கொன்றில் நம் கண்ணில்பட்ட ஒரு நூல் "முள்". இதன் ஆசிரியர் புகழ்மிக்க இலக்கியப் படைப்பாளியோ அல்லது இலக்கிய உலகில் இதற்குமுன் பரிச்சயமான முகமோ அல்ல. ஆனால் அவர் எழுதிய இந்த நூல் பல இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்திழுத்திருக்கிறது.
 
மதுரைமாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த முத்துமீனாள் என்பவரே "முள்" நாவலின் நூலாசிரியர்.
 

சிறுவயதில் தொழுநோய்க்கான அறிகுறி இருக்கவே அதற்குச் சிகிச்சை பெறுவதற்காக இளமையிலிருந்தே குடும்பத்தைப் பிரிந்து, கும்பகோணத்தில் கிறிஸ்தவக் கன்னியர்கள் நடத்தும் மடத்தில் வளர்ந்தவர். தொழுநோய் முற்றிலும் நீங்கிய நிலையில் திருமணம் முடித்து ஒரு மகனுக்குத் தாயாகியுள்ள முத்துமீனாள், தன் சிறுவயது முதல் தொழுநோயின் காரணமாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களை மிக இயல்பாக இந்த நாவலில் சித்திரித்துள்ளார்.

பெரிய இலக்கியவாதி என்ற எந்த பிம்பமும் தனது தலைக்குள் புகுந்துவிடாத அவர் எழுதிய இந்த நாவல், உண்மையான வாழ்க்கையை எந்தவித செயற்கை அலங்காரமுமில்லாமல் சொல்கிறது. அதனாலேயே மிகச் சிறந்த கலைப்படைப்பாகவும் மாறியிருக்கிறது. பலரும் அறியாத ஓர் உலகத்தை வாசகர்கள் தெரிந்து கொள்வதற்கான பதிவு இந்த நாவல். தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் தனி இடம் இந்த நூலுக்கு உண்டு என்றால் அது மிகையில்லை. இந்த புத்தகத்தை "ஆழி" பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 5:38:36 PM1/15/09
to minT...@googlegroups.com
பாடம் படிக்க குறுந்தகடுகள்!
 
சென்னை புத்தகக் காட்சியில் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும்விதமாகப் பல அரங்குகள் உள்ளன. அவற்றில் ஒன்று "எடுரைட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்" நிறுவனம். பள்ளி மாணவர்கள் தங்களுடைய பாடங்களை எளிதில் படிக்க உதவும் வகையில் நிறைய குறுந்தகடுகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள் இந்த நிறுவனத்தினர். இந்த சிடிகளை சென்னையில் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள இராம. சுப்ரமண்யத்திடம் பேசினோம்.
 
அவர் கூறியதாவது:-

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் "எடு ரைட்" குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலத்தின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பாடத்திற்கும் குறுந்தகடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு மாணவர் முதல் 10ம் வகுப்பு மாணவர் வரை இந்தக் குறுந்தகடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதுபோல சி.பி.எஸ்.ஐ பாடத் திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் குறுந்தகடுகளை எடுரைட் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகடுகளில் ஒலி, ஒளி, அனிமேஷன் போன்றவை மூலம் பாடங்கள் விளக்கப்படுகின்றன. அறிவியல் பாடங்களுக்குச் சோதனைக்கூட செய்முறைகள் படங்களுடன், அனிமேஷன் முறையில் செய்துகாட்டப்பட்டுள்ளன. வெறும் புத்தகத்தை மட்டும் படித்து பாடங்களை மாணவர்கள் புரிந்து கொள்வதைவிட இம்மாதிரியான ஒலி, ஒளி, அனிமேஷன்கள் மூலம் புரிந்து கொள்வது மிகவும் எளிது. மனதில் பாடங்கள் எளிதாகவும் ஆழமாகவும் நன்றாகவும் பதிய இது ஒரு சிறந்தமுறை.

இதுதவிர கேள்வி, பதில்களும், மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளும் இந்தக் குறுந்தகடுகளில் உள்ளன. போட்டி நிறைந்த உலகில் நிறைய மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவும் வகையில் இந்த கல்விக் குறுந்தகடுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 5:47:39 PM1/15/09
to minT...@googlegroups.com

வாசிப்புப் பழக்கம் குறையவில்லை!

சென்னை புத்தகக் காட்சிக்கு புகழ்பெற்ற எழுத்தாளர் கி.இராஜநாராயணன் வியாழக்கிழமை (15/01/09) வந்திருந்தார். அவருடைய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட உள்ளது. வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த அவரை அணுகினோம். சிரிப்பு மாறாத முகத்துடன் அவர் நம்மிடம் பேசியதாவது:-

"இப்போது பக்தி குறைந்துவிட்டது சிலர் சொல்வார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்பேன். திருப்பதி உண்டியலிலும், பழனி உண்டியலிலும் குவிகிற பணத்தைப் பற்றி என்ன சொல்றீங்க? ஐயப்பன் கோவிலுக்குப் போகிற மக்கள் கூட்டத்தைப் பற்றி என்ற சொல்றீங்க? என்று." அதுபோலத்தான் வாசிப்புப் பழக்கமும் குறைந்து போய்விட்டது என்று சொல்வது.

இப்போது எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் முதலில் இலக்கிய வாசிப்பிற்கு வரும்போது நிறைய படிக்கிறார்கள். புத்தக வணிகம் பெருகிவருகிறது. சிறு பத்திரிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

கிராமப்புறங்களிலும், கிராமப்புறங்களுக்கு பக்கத்தில் உள்ள சிறுநகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் அதிகமாக வாசிக்கிறார்கள். இலக்கியக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். எனவே புத்தக வாசிப்புப் பழக்கம் நகரங்களில் வேண்டுமானால் சிறிது குறைந்திருக்கலாம்.
 
தமிழ் எழுத்தாளர் கி. இராஜநாராயணனுடன் அவரது துணைவியார் கணவதியம்மாள்
 
தமிழில் கதைகள் எழுதுவதில் எழுத்துநடை, போக்கு மாறி வந்திருக்கிறது. இப்போது மட்டுமல்ல, ஆதிகாலத்தில் இருந்து இந்த மாற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
 
சங்க காலக் கவிதைகள் போலவா இப்போதுள்ள கவிதைகள் உள்ளன?
 
முப்பது வருடத்திற்கு ஒருமுறை எல்லாமும் மாறும்.
 
அதனால்தான் சொல்வார்கள். "முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருடம் கெட்டவனும் இல்லை" என்று.
 
சமீபத்தில் வந்த புத்தகங்களில் எனக்குப் பிடித்த புத்தகம் சு.வெங்கடேசனின் "காவல் கோட்டம்". நான் வாசித்த பழைய நூல்களில் எனக்குப் பிடித்தது "மதகுரு" என்ற செல்மா சாகர்லேவின் ஸ்விடீஷ் நாவல். அந்தப் புத்தகத்தை வாசித்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மறக்க முடியவில்லை.
 
இப்போது எந்தப் புத்தகக் கண்காட்சிக்குப் போனாலும் அந்தப் புத்தகம் கிடைக்குமா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 5:53:21 PM1/15/09
to minT...@googlegroups.com
கல்வி நூல்களுக்கு ஒரு பதிப்பகம்
 
கல்வியியல் சார்ந்த நூல்களை அதிகம் வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்று சாந்தா பப்ளிஷர்ஸ். ஆசிரியர் பயிற்சி, பி.எட். மாணவர்களுக்குப் பயன்படும் பல நூல்களை சாந்தா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளது.
  • இயற்பியல், வேதியியல் கற்பிக்கும் முறைகள்
  • கணக்கு கற்பிக்கும் முறைகள்
  • அறிவியல் கற்பிக்கும் முறைகள்
  • வரலாறு கற்பிக்கும் முறைகள்
என கற்பிக்கும் முறைகளைப் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
"கற்பித்தலின் சிக்கல்களும் தீர்வுகளும்" கூட நூல்களாகியுள்ளன. கற்கும் மாணவர்களின் உளவியல் பற்றித் தெரிந்து கொள்ளும் விதமாகவும் நிறைய நூல்களைச் சாந்தா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர்.
 
  • கல்வியில் மனவியல்
  • குழந்தை உளவியல்
  • கல்வி மனவியலும் குழந்தைக் கல்வியும்
  • கல்வி உளவியல் துணைவன்
ஆகிய நூல்கள் கல்வியியல்துறையில் இப்பதிப்பகம் பதித்த முத்திரைகள்.
  • வணிகவியல்
  • பொருளியல்
  • மக்கள் தொகைக் கல்வி
  • மேலைநாட்டுக் கல்வி வரலாறு
  • மழலையர் பள்ளிக் கல்வி பயிற்று முறைகள்
  • கல்வி மேலாண்மையும் பள்ளி நிர்வாகம்

என கல்வியியல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தனது தனித்துவத்தை நிறுவியுள்ளது சாந்தா பப்ளிஷர்ஸ்.

நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 5:57:55 PM1/15/09
to minT...@googlegroups.com

ஏன் கேட்க வேண்டும்?

சென்னை புத்தகக் காட்சியில் தினம்தோறும் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. "ஒளிபரவட்டும்" என்ற தலைப்பில் வியாழக்கிழமை (15/01/09)  சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சுகி.சிவம் கலந்து கொண்டார்.
 
அதில் சில துளிகள்:-
 
நமக்குத் தேவையான நல்லவற்றை நிறைவேற்றித் தருகிற இலாபகரமான ஆசாமியாக நமக்குக் கடவுள் இருக்கிறார் என்று நாம் நினைக்கிறோம். நாம் புத்தகங்களைப் படிக்கிறபோது புத்தகம் புகட்டும் தகவல்களை நமது மனதில் பதிவு செய்து கொள்கிறோம்.
 
ஆனால் தகவல்கள் மீதான சுயவிசாரணையைச் செய்திருக்கிறோமா?
 
புத்தகங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சரியா? தவறா? என்று சுயவிசாரணை செய்ய வேண்டும்.

தாயின் கர்ப்பத்தில் நாம் இருந்தபோது நமக்குத் தேவையான எல்லாமும் எந்த முயற்சியும் இல்லாமல் நமக்குக் கிடைத்தன. பிறந்த பின்பும் அந்தக் கர்ப்பத்தில் இருந்த குழந்தையைப் போலவே எல்லாமும் எந்த முயற்சியும் செய்யாமல் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காகத் தேடலில் ஈடுபடுகிறோம். அப்படி நமக்குத் தேவையானதைத் தேடும்போது கிடைப்பவர்தான் கடவுள்.

ஆனால் இரமணர், இராமகிருஷ்ணர் போன்றவர்கள் இந்த மனப்போக்கை உடைத்திருக்கிறார்கள்.
 
நம்மைப் படைத்த கடவுளுக்கு நமக்கு எது தேவை என்று தெரியாதா?
 
அதை அவரிடம் ஏன் கேட்க வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள் என்றார்.
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 6:02:04 PM1/15/09
to minT...@googlegroups.com

ஆங்கிலத்தில் தமிழை டைப் அடிக்கலாம்!

சென்னைப் புத்தகக் காட்சியில் நமது கவனத்தை ஈர்க்கும் இன்னொரு விஷயம் கணினித் தமிழ். கணினித் தமிழ் தொடர்பாக நிறைய அரங்குகள் இடம் பெற்றிருக்கின்றன.

எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் உள்ள கீ போர்டு ஆங்கில மொழிக்கானது. அந்தக் கீ போர்டுகளைப் பயன்படுத்தியே தமிழை டைப் செய்ய வேண்டியுள்ளது.

தமிழில் டைப் செய்ய தமிழ் டைப் ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. தமிழில் டைப் செய்ய மென்பொருள்களை பல நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

அவற்றில் சாப்ட்வியூ நிறுவனம் உருவாக்கியுள்ள "அமுதம்" என்ற மென்பொருளும் ஒன்று. இது கம்ப்யூட்டரில் தமிழை டைப் அடிக்க எளிமையான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள டிரான்ஸ்லிட்டரெஷன் முறையில் ஆங்கிலத்தில் தமிழை எளிதாக டைப் செய்யலாம். "அவன்" என்பதற்கு "avan" என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதுமானது.

இந்த மென்பொருள், விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் விஸ்டா வரையிலுள்ள ஆபரேடிங் சிஸ்டம் அனைத்திலும் வேலை செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்லிட்டரெஷன் முறை தவிர, தமிழ் 99, தமிழ் டைப்ரைட்டர் ஆகிய முறைகளும் அமுதத்தில் உள்ளன.

நன்றி: தினமணி

Tthamizth Tthenee

unread,
Jan 15, 2009, 10:53:40 PM1/15/09
to minT...@googlegroups.com
திரு கண்ணண் நடராஜன் அவர்களே
அழகி என்றொரு மென் பொருள் இருக்கிறதே அதிலும் ஆங்கிலத்திலேயே தமிழை டைப் அடிக்கலாமே,
இந்த மென்பொருளை திரு விஷி அவர்கள் உருவாக்கி இருக்கிறார்
உங்களுக்கு  தெரிந்திருக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2009/1/16 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jan 15, 2009, 11:27:22 PM1/15/09
to minT...@googlegroups.com
"அழகி" விஸ்வநாதனை இணையத்தின் வழியாக அறிந்திருக்கிறேன். சென்ற ஆண்டிலா அல்லது 2007லா என்று நினைவில்லை கணினியில் அவர் செய்தப் தமிழ்ப் பணிகளுக்கு உயரிய விருது கிடைத்தச் செய்தியைப் படித்துள்ளேன். அழகி யாகூ குழுமத்தில் அடியேன் உறுப்பினராக உள்ளேன்.

Softview Media - நம் குழும அன்பர்கள் சிலருக்கும், உங்களுக்கும் நன்கு பழக்கமான - திரு ஆண்டோ பீட்டரின் நிறுவனம். இரண்டாண்டுகளுக்கு முன் த.ம.அ வின் சென்னைக் கூட்டம், அந்நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில் தான் நடைபெற்றது.கணித்தமிழ் சங்கத்தின் தோற்றத்தின் முக்கியமானவர் கூட அல்லவா!

Narayanan Kannan

unread,
Jan 15, 2009, 11:55:36 PM1/15/09
to minT...@googlegroups.com
2009/1/16 Kannan Natarajan <thar...@gmail.com>:

> இரண்டாண்டுகளுக்கு முன் த.ம.அ வின்
> சென்னைக் கூட்டம், அந்நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில் தான்
> நடைபெற்றது.கணித்தமிழ் சங்கத்தின் தோற்றத்தின் முக்கியமானவர் கூட அல்லவா!
>


கோலாலம்பூர் தமிழ் இணைய மாநாடு ஓர் உணர்ச்சி மிகு மாநாடு. தமிழ் மரபு
அறக்கட்டளை உருவான தருணம் பலரைப் பாதித்தது. அதிலொருவர் ஆண்டோ! இவர் மிக,
மிக சுறு, சுறுப்பான நபர் (பிசி). ஆயினும் தமிழ் மரபு அறக்கட்டளையை
இந்தியாவில் பதிவு செய்ய நேரம் எடுத்துக் கொண்டது அவர்
பெருந்தன்மையையும், நம்மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையையும்
காட்டுகிறது. த.ம.அ காரியதரிசி அவர்.

க.>

Tthamizth Tthenee

unread,
Jan 16, 2009, 1:35:40 AM1/16/09
to minT...@googlegroups.com
நம்முடைய ஆன்டோ பீட்டர் அமைதியான புயல்
ஆழ்ந்த கடல், அறிவுசார்ந்து,ஆன்றோர் போற்றி, அமைதியாக தமிழ் வளர்க்கும் பெருந்தகையோர் என்பது நமக்கு பெருமையே
 
ஆன்டோ பீட்டர் நம் வீட்டு செல்லக் குழந்தை
 
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்
அது போல தானே வளர்ந்து தமிழையும் வளப்பவர் ஆன்டோ பீட்டர் அல்லவா..? அவர் என்னைப் போன்றோருக்கு தானும் வளர்ந்து தமிழையும்  வளர்க்க உதவும் ஒரு முன்மாதிரி அல்லவா..?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

V, Dhivakar

unread,
Jan 16, 2009, 2:49:34 AM1/16/09
to minT...@googlegroups.com
Yes. Mr.Anto was doing so many things for Tamil computing when I met him in the stall at Book fair. He teaches tamil typing to so many unknown passer byes in simple way. Lot of softwares he creates interested me. I will put up his Tamil learning softwares list in all tamil sanghams (we have a federation of Tamils sanghams of India for which we are Joint Secretary) in the country first.
 
Dhivakar

Kannan Natarajan

unread,
Jan 16, 2009, 5:01:51 PM1/16/09
to minT...@googlegroups.com

புத்தகம் வாங்க வந்த குழந்தைகள்!

சென்னை புத்தகக் காட்சியில் "காணும் பொங்கலான" வெள்ளிக்கிழமை (16/01/09) விடுமுறை நாளானதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் - குழந்தைகள் கூட்டம் புத்தகக் காட்சி அரங்கை நிறைத்தது. அரங்கிற்குள் செல்ல நுழைவுச் சீட்டு வாங்க நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

 
கைகளில் நிறையப் புத்தகங்களுடன் வந்த குழந்தைகள் கூட்டமொன்றை வழி மறித்து என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்? என்று கேட்டோம்.
 
முண்டியடித்துக் கொண்டு குழந்தைகள் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பெயர்களை குதூகலத்துடன் சொன்னதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

எங்கிருந்து வருகிறீர்கள்? என்று விசாரித்தோம்.

 
சென்னை இராமாவரம் "புதியதோர்" அமைப்பில் இருந்து வருகிறோம் என்று கோரஸாகச் சொன்னார்கள்.
 
 
 
எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா விஷயங்களும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் அமைப்பின் பெயர்தான் "புதியதோர்" என்றும் அவர்கள்தான் புத்தகக் காட்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த பெண்ணிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 16, 2009, 5:06:49 PM1/16/09
to minT...@googlegroups.com

வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும்!: எழுத்தாளர் பொன்னீலன்

சென்னை புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை (16/01/09)  சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்ற வந்திருந்தார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன். அவரைச் சந்தித்துப் பேசினோம். புத்தக வாசிப்புப் பழக்கம், இப்போது வருகிற புத்தகங்களின் போக்கு, அவருக்குப் பிடித்த புத்தகங்கள் என்று அவர் நம்மிடம் புத்தகம் தொடர்பான பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
 

அவர் கூறியது:-

தாய்மொழிக் கல்வி இன்று குறைந்துவிட்டது என்பதற்காக புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. புத்தகம் படிப்பவர் புத்தகம் படிப்பதால் தனது வாழ்க்கைப் பார்வையை விசாலப்படுத்திக் கொள்கிறார். இந்தக் கோணத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. புத்தக வாசிப்பை இரசிப்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

என்னுடைய பேத்தி ஹாரிபாட்டர் கதைகளை எல்லாம் படித்துவிட்டாள். "பட்டாம் பூச்சி" என்ற நெடுங்கதைப் புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன். படித்து முடித்துவிட்டாள். புத்தகத்தில் அவளுக்குப் புரியாத சொற்களைப் பற்றிச் சந்தேகம் கேட்டாள். இதிலிருந்து பெற்றோர் புத்தக வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தால் வாசிப்புப் பழக்கம் குறையாது என்பது தெரிகிறது.

முன்பைப் போல் இடதுசாரி சிந்தனை உள்ள புத்தகங்கள் அதிகம் வருவதில்லை, குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. தலித்தியம், பெண்ணீயம் சார்ந்த நிறையப் புத்தகங்கள் வெளிவருகின்றன. அவையும் இடதுசாரி சிந்தனை உள்ள புத்தகங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மார்க்சியம் என்பது பொருளாதார, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் விடுதலைக்கானது. அதில் தலித்தியம், பெண்ணியம் ஆகியவையும் அடங்கும். எனவே இந்த மாதிரி புத்தகங்களை மார்க்சியத்தின் வளர்ச்சிநிலை என்றுதான் பார்க்க வேண்டும். இப்போது வருகிற புத்தகங்களின் கருத்துகளைச் சரியான முறையில் ஒருங்கிணைத்தால் நல்ல வளர்ச்சிநிலை சமூகத்தில் ஏற்படும்.

எனக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு புத்தகங்கள் பிடித்தன. ஆரம்ப காலத்தில் மு.வ.வின் புத்தகங்கள் பிடித்தன. பின்னர் கல்கி. அதன் பின் ஜெயகாந்தனின் எழுத்துகள்.

இரகுநாதனின் "பஞ்சும் பசியும்" நாவல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என் மனதில் இருக்கிறது. ப.சிவகாமி எழுதிய "ஆனந்தாயி", ஜே.டி.குரூஸ் எழுதிய "ஆழி சூழ் உலகு" எல்லாம் என்னைக் கவர்ந்த நூல்கள்.

 
மொழிபெயர்ப்பு நூல்களில் டால்ஸ்டாயின் "பீட்டர் சக்ரவர்த்தி" இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது. மைக்கேல் ஷோலக்கோவின் "டான் நதி அமைதியாக ஓடுகிறது" என்னுள் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய நூல்.
 
இன்றைக்கு எழுதப்படுகிற இலக்கியம் அடையாளம் சார்ந்த இலக்கியமாக இருக்கிறது. இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து என்பது தானாகவே சமூகச் சூழல்களிலிருந்து புறப்பட்டு வளர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட அடையாளம் சார்ந்த புத்தகங்கள் எல்லாம் எனக்குப் பிடித்த புத்தகங்களே என்றார்.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 16, 2009, 5:13:53 PM1/16/09
to minT...@googlegroups.com

முன்னோடிக்கு முதல் மரியாதை!

தமிழின் முன்னோடிப் பதிப்பாளரான சக்தி வை.கோவிந்தன் (1912 - 1966) சக்தி காரியாலயம் என்ற பதிப்பகத்தையும், "சக்தி" என்ற இதழையும் நடத்தியவர். கால்நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகப் பதிப்புலகில், இதழியலில் தனது கடும் உழைப்பின் மூலம் புதுமைகள் பல செய்து பிறருக்கு வழிகாட்டியவர். ஆங்கிலத்தில் சிறந்த நூல்களை வெளியிட்டு வந்த பெங்குவின் வெளியீடுகளைப் பார்த்து அதைப் போலவே தமிழிலும் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற பேரார்வம் கொண்டு நூல்களை வெளியிட்டவர்.
 

சக்தி வை.கோவிந்தனின் அரும்பணிகளைப் பற்றி பலவித ஆய்வுகள் செய்து "சக்தி வை.கோவிந்தன்: தமிழின் முன்னோடி படைப்பாளுமை" என்ற நூலை பழ.அதியமான் எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த அரிய நூலை வெளியிட்டிருக்கிறது. இதுவரை யாருக்கும் தெரியாத பல அரிய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்காக நூலாசிரியர் மேற்கொண்ட கடும் உழைப்பு நூல் முழுக்கத் தெரிகிறது. நூலின் பின்னிணைப்பாக சக்தி காரியாலயம் வெளியிட்டுள்ள 191 நூல்களைப் பற்றிய விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

 
சக்தி வை.கோவிந்தன் தொடர்பான அரிய புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பதிப்புலகிற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த மாமனிதருக்கு நன்றி சொல்லும்விதமாகவும், அவரது அரும்பணிகளை நினைவுபடுத்தும்விதமாகவும் மலர்ந்திருக்கும் இந்த நூல் இந்த ஆண்டு வெளிவந்த தமிழின் குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 16, 2009, 5:17:19 PM1/16/09
to minT...@googlegroups.com

ஓர் எழுத்தாளர்...பல நூல்கள்...ஓர் அரங்கு!

சென்னை புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள் பல உள்ளன. ஓர் எழுத்தாளர் எழுதிய பல நூல்களை விற்பனை செய்வதற்கென்றே தனி அரங்குகளும் உள்ளன. அப்படிப்பட்ட அரங்குகளில் ஒன்று நம் கண்ணைக் கவர்ந்தது.
 

பத்திரிகையாளர் ஞாநி எழுதிய பல நூல்கள் அந்த ஓர் அரங்கில் இடம் பெற்றிருந்தன. இதில் இன்னுமொரு சிறப்பு, ஞாநி எழுதிய "ஓ பக்கங்கள்" என்ற நூலை மூன்று பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. குமுதம் பு(து)த்தகம், விகடன் பிரசுரம், கிழக்குப் பதிப்பகம் ஆகியவை அந்த நூலின் வெவ்வேறு தொகுதிகளை வெளியிட்டுள்ளன.

 
பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்திவரும் ஞாநி எழுதிய;
  • எண் மகன்
  • வட்டம்
  • சண்டைக்காரிகள்
  • ஒரு விசாரணை
ஆகிய நாடக நூல்களும் இந்த அரங்கில் விற்பனை செய்யப்படுகிறது.
 
"கண்டதைச் சொல்லுகிறேன்" என்ற கட்டுரைத் தொகுப்பும், "தவிப்பு" என்கிற நாவலும் இன்னும் ஞாநி எழுதிய பிற நூல்களும் அந்த ஒரே அரங்கில் இடம் பெற்றிருந்தது மக்களின் கவனத்தைக் கவர்வதாக இருந்தது.
 
நன்றி: தினமணி

Kannan Natarajan

unread,
Jan 16, 2009, 5:54:38 PM1/16/09
to minT...@googlegroups.com

இந்த ஆண்டு...இவை புதுசு...

தமிழ்ப் புத்தகாலயம்:-
 
குறிப்பிடத்தக்க நூல்களைப் பதிப்பித்து தனக்கென தனி இடத்தைத் தமிழ்ப் பதிப்புலகில் என்றென்றும் தக்க வைத்துக் கொண்டுள்ள பழம்பெரும் நிறுவனம் தமிழ்ப் புத்தகாலயம்.

புதிய பதிப்பு முயற்சிகளை விட சிறந்த பழைய நூல்களின் மறுபதிப்பே தமிழ்ப் புத்தகாலயத்தின் பிரதான பணியாக இருக்கிறது. அகிலனின் "வேங்கையின் மைந்தன்" சரித்திர நாவலின் 19ம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

அகிலனின் பிற நாவல்களான "சித்திரப் பாவை", "வெற்றித் திருநகர்" மீண்டும் பதிப்பிக்கப்பட்டவை. க.அபிராமியின் "மல்டி மீடியா கற்றுக் கொள்ளுங்கள்" என்ற நூலின் திருத்தப்பட்ட நான்காம் பதிப்பும், "பேசாமல் பேசுவோம் - வெற்றியளிக்கும் உடல்மொழி"யும் தமிழ்ப் புத்தகாலயத்தின் முத்திரை பதித்த குறிப்பிடத்தக்க நூல்கள்.

 
உயிர்மை பதிப்பகம்:-
 
ஆழமானதும் சுவையானதுமான நூல்களை வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகத்தில் இருந்து இந்த ஆண்டு பத்திரிகையாளர் மணா எழுதிய "கனவின் பாதை", "பள்ளிப்பிராயம்" ஆகிய இரண்டு நூல்கள் வெளிவருகின்றன. எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய "உலக சினிமா" குறிப்பிடத்தக்க படைப்பு. உயிர்மை வெளியிட்ட சிறுகதை நூல்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று தமிழ்மகனின் "மீன்மலர்". சிறந்த நாவலாசிரியரான சு.தமிழ்ச்செல்வியின் "கண்ணகி" உயிர்மைப் பதிப்பகத்தில் உதித்த சிறப்பு வெளியீடு. கழனியூரனின் "மண்ணின் கதைகள்", தமிழச்சி தங்கபாண்டியனின் "பேச்சரவம் கேட்டிலையோ" இந்த ஆண்டின் சிறந்த வெளியீடுகளாக உயிர்மைப் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்தவை.
 
பரிசல்:-
 
சிறிய பதிப்பகமாயினும் ஆழமான நூல்களை வெளியிட்டு வரும் பரிசல் இந்த ஆண்டு மிக முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளது.
  • பா.இளமாறன் எழுதிய "தொல்காப்பியம் பன்முக வாசிப்பு"
  • ஆல்பெர்காம்யுவின் "மரணதண்டனை என்றொரு குற்றம்"
  • கே.ஜெ.அஜயகுமாரின் "திராவிட இயக்கம்: உரையாடல்கள்"
  • இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான "பாலை நண்டுகள்".
பரிசலின் பாதையில் தோன்றிய புதிய நூல்கள்.
  • "தமிழ் ஒளி கடிதம்"

பரிசலின் இன்னொரு குறிப்பிடத்தக்க நூல்.

அன்னம்:-
 
சிறப்பான இலக்கியப் புத்தகங்களை வெளியிடும் பாரம்பரியம் உள்ள அன்னம் வெளியிட்ட நூல்களில்;
 
  • கி.இராஜநாராயணனின் "வழக்குச் சொல் அகராதி"
  • க.பஞ்சாங்கத்தின் "ஒட்டுப்புழு" கவிதைத் தொகுப்பு
  • தேனி.சீருடையானின் "நிறங்களின் உலகம்"
ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
  • "சங்க இலக்கியங்களின் பொன்மொழிகள்" என்ற க.முத்துசாமியின் ஆய்வு நூல் அன்னத்திலிருந்து வெளிவந்த புதிய நூலாகும்
  • "மண்ணின் மரபுகளும் மக்கள் நம்பிக்கைகளும்" என்ற கழனியூரனின் நூல் நாட்டுப்புற இலக்கியத்திற்கு அன்னம் அளித்த குறிப்பிடத்தக்க கொடை.
  • கி.இரா.வின் புகழ்பெற்ற நூல்கள் எல்லாம் அன்னத்தின் அரங்கத்தில் கொலுவீற்றிருக்கின்றன

என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

நர்மதா:-
 
தமிழ்ப் பதிப்புலகில் சிறந்த கட்டமைப்புடன் நூல்களை வெளியிட்டுத் தடம் பதித்துவரும் நர்மதா பதிப்பகத்தின் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க வெளியீடுகளாக; 
  • பரமேஸ்வரன் எழுதிய "கிருஷ்ணாஜியுடன் நாற்பதாண்டுகள்"
  • இரா. இராஜசேகரனின் "ஊரெல்லாம் சிவமணம்"
  • சி.எஸ்.தேவ்நாத்தின் "உலகம் பிறந்த கதை"
  • கிருஷ்ணமாச்சார்யர் எழுதிய "புராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் களஞ்சியம்"
ஆகிய நூல்களைச் சொல்லலாம்.
 
மருத்துவத்துறை சார்ந்த நூலான "செவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளுக்கான பொது பராமரிப்பு முறைகளும்" குறிப்பிடத்தக்க பயனுள்ள நூல். ப.இளவழகனின் "தமிழ் இலக்கியச் சிகரங்கள் ஐம்பது" நர்மதா பதிப்பகத்தின் புதிய நூல் வரிசைக்கு அணி சேர்க்கும் ஒன்று.
 
ஆழி பப்ளிஷர்ஸ்:-
 

    • சுற்றுச் சூழல்

    • அரசியல்
    • இலக்கியம்
    • பண்பாடு

    எனப் பல்வேறு பாதைகளில் பயணம் செய்யும் ஆழி பப்ளிஷர்ஸ் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க பல நூல்களை வெளியிட்டுள்ளது.

    இரா.செழியன் எழுதிய "சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை" ஆழியின் குறிப்பிடத்தக்க சிறப்பான நூல்.
    • பா.வெங்கடேசனின் "தாண்டவராயன் கதை"
    கோணங்கியின்
    • பாழி
    • ஞானக்கூத்தன் கவிதைகள்
    • பிரபஞ்சன் சிறுகதைகள்
    1. யோ.திருவள்ளுவர் எழுதிய "திரைகடல் ஓடியும் துயரம் தேடு"
    2. சா.தேவதாஸின் "லியனார்டோ டாவின்சி"

    ஆகிய நூல்கள் ஆழியின் பரந்த தளத்திற்குச் சாட்சியமாகத் தோன்றியிருக்கின்றன.

    அடையாளம்:-
     
    தமிழின் வித்தியாசமான ஆழமான நூல்களை வெளியிடும் அடையாளம் இந்த ஆண்டு தனக்கேயுரிய பாணியில் சிறப்பான நூல்களை வெளியிட்டுள்ளது. இலங்கைப் பிரச்னையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையில் கலாநிதி குமார் ரூபசிங்க எழுதிய "இலங்கையில் சமாதானம் பேசுதல்" (இரு தொகுதிகள்) அடையாளம் பதிப்புலகில் பதித்த முக்கிய முத்திரையாகும்.
    • அஸ்கர் அலி எஞ்ஜினியர் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்"
    அடையாளத்தின் இன்னொரு முக்கியமான நூல்.
    • கு.பா.ரா.கதைகளின் (முழுத்தொகுப்பு)
    • தோப்பில் முஹம்மது மீரானின் "ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்"

    அடையாளத்தின் அழுத்தமான பதிவுகள். உலகப் புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் அறிமுகம் செய்யும் முயற்சியாக;

    • ஜானதன் கல்லரின் "இலக்கியக் கோட்பாடு"
    • மான்ஃப்ரட் பி.ஸ்டெகரின் "உலகமயமாக்கல்"
    போன்ற பல நூல்களை அடையாளம் வெளியிட்டுள்ளது.
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 17, 2009, 3:54:08 PM1/17/09
    to minT...@googlegroups.com

    வாசகர்களுடன் "தினமணி" ஆசிரியர் உரையாடல்

    சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களையும், புத்தக ஆர்வலர்களையும் "தினமணி" ஆசிரியர்
    கே.வைத்தியநாதன் சந்தித்து கலந்துரையாடினார். சனிக்கிழமை (17/01/09) மாலை 6 மணி முதல் 8 மணி வரை
    இச்சந்திப்பு நடந்தது.
     

    இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பக உரிமையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஆசிரியரிடம் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    மற்ற பதிப்பகங்களில் தாங்கள் வாங்கிய புத்தகங்களை ஆசிரியரிடம் காட்டி ஆட்டோகிராப் வாங்கிச் சென்றவர்களும் உண்டு.

     
    நவீன இலக்கியம் வேண்டும்:-
     
    "தினமணி"யில் நவீன இலக்கியமும் வர வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிட்டார் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வாசகர் சபாபதி.

    "நவீன இலக்கியங்களைப் பற்றி எழுத பல இலக்கிய ஏடுகள் இருப்பதால், பழந்தமிழ் இலக்கியங்களை ஜனரஞ்சகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம், காலத்தைக் கடந்து நிற்கும் போதுதான் படைப்புகள் இலக்கிய அந்தஸ்தைப் பெறும்" என்று ஆசிரியர் பதில் அளித்தார்.

    புதினங்கள், சிறுகதைகள், புதுக் கவிதை பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த படைப்புகள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தால் அதற்கு இலக்கிய அந்தஸ்து அளித்தால் போதுமானது என்று கருத்துத் தெரிவித்தார். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற படைப்புகளின் சமகால இலக்கியங்கள் பல காணாமல் போனதுபோல, இப்போது எழுதப்படுவதிலும் ஒரு சில மட்டுமே காலத்தின் பரிசோதனைக் கூடத்தில் தேர்வு பெறும் என்று கருத்துத் தெரிவித்தார்.

     
    மீண்டும் இளைஞர் மணி வர வேண்டும்:-
     
    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சி. வள்ளிநாயகம், "இளைஞர்மணியை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் "தினமணி" கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

    தான் ஊர் ஊராகப் பிரயாணம் செய்பவர் என்றும் பல ஊர்களில் "தினமணி" கடைகளில் கிடைப்பதில்லையே ஏன் என்கிற கேள்வியுடன் ஆசிரியரை எதிர்கொண்ட தாராபுரம் அன்வர் அலி, "தினமணி"யின் துணிவான தலையங்கங்களையும் தெளிவான கண்ணோட்டத்தையும் பாராட்டினார். வெளிமாநிலங்களுக்குச் சென்றாலும், திரும்பி வந்து அத்தனை நாள் தினமணியையும் படித்துவிட்டுத்தான் மறுவேலை என்று தெரிவித்தார். திருப்பூர் புத்தகத் திருவிழாவின் அமைப்பாளரும், பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகியுமான கே. நாகராஜன், திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "தினமணி" பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    பெண்களுக்கான பகுதிகள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்றும் தான் "தினமணி"யின் வாசகி என்பதில் பெருமையடைவதாகவும் சொன்னார் புழுதிவாக்கத்தைச் சேர்ந்த வாசகி கோமதி குணசேகரன்.

    மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தைத் தொடங்க வேண்டும், சிறுவர்மணியில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு, "தமிழ் மணி, கார்ட்டூன், துணிச்சலான தலையங்கம் என்று "தினமணி" தூள் கிளப்புகிறது," என்று பாராட்டினார் பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.சி. மகாலிங்கம்.

    "தினமணி"யின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமனின் கட்டுரைகள் புத்தகமாக வெளிவர வேண்டும்; ஆசிரியரின் துணிவை தலையங்கம் வெளிப்படுத்துகிறது என்றார் சென்னை பிராட்வேவைச் சேர்ந்த புலவர் தமிழ்மணி.

     
    "தினமணி" அரங்கிற்கு வந்த கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, நடுப்பக்கத்தில் சமூகக் கட்டுரைகளுக்கும் இடம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இரண்டு மணி நேரம் ஆசிரியரிடம் உற்சாகமாக உரையாடினார்கள் வாசகர்கள்.
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 17, 2009, 3:59:38 PM1/17/09
    to minT...@googlegroups.com

    சித்த மருத்துவ நூல்களுக்காக ஓர் அரங்கு!

     
    சென்னை புத்தகக் காட்சியில் மருத்துவ நூல்களை விற்பனை செய்வதற்கென்றே அரங்குகளும் உள்ளன. அவற்றில் ஒன்று "மூலிகை மணி" அரங்கு.
     
    சித்த மருத்துவ நூல்களை விற்பனை செய்யும் அந்த அரங்கு பற்றி டாக்டர் அபிராமியிடம் கேட்டோம்.
     
    அவர் கூறியதாவது:-

    "மூலிகைமணி" மாத இதழை நாங்கள் 1965ல் தொடங்கினோம். அதற்கு முன்பு எங்களுடைய தாத்தா ஏ.ஆர்.கண்ணப்பர் மூலிகைகளைப் பற்றி 1964ல் தினமணியில் தொடராக எழுதினார்.

    நாங்கள் பரம்பரை சித்த மருத்துவர்கள். மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பற்றியும் அவை வேலை செய்யும் விதத்தைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்களையே இங்கு விற்கிறோம்.

     
    உதாரணமாக "ஆபத்துக்கு உதவும் வீட்டு மருந்துகள்" என்ற நூல் வீட்டில் உள்ள;
    • சீரகம்
    • பெருங்காயம்
    • ஓமம்
    • மிளகு
    • சுக்கு
    ஆகியவற்றைக் கொண்டு அவசரத்துக்குச் சிகிச்சை செய்யும் முறைகளைப் பற்றியது.
     
    இன்னொரு புத்தகம் "மூலிகை உணவுகள்" என்பது. இந்த நூலில் நமது உணவில் நாம் செய்யும்
    • துவையல்
    • வற்றல் குழம்பு

    போன்றவற்றின் மருத்துவ குணங்களை விளக்கியிருக்கிறோம்.

    இதைப் போன்ற இன்னொரு நூல் "கிச்சன் கிளினிக்".
     
    மருத்துவச் செலவுகள் அதிகரித்துவிட்ட இந்நாளில் மூலிகைகளின் பயன்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நூல்களை வெளியிட்டிருக்கிறோம்.

    இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

     
    தினமணி கதிரில் என் தந்தை க.வேங்கடேசன் எழுதிய தொடர் கட்டுரைகள் "இல்லந்தோறும் இயற்கை மருந்துகள்" என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன என்றார்.
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 17, 2009, 4:04:16 PM1/17/09
    to minT...@googlegroups.com

    "சந்திரயான்" அண்ணாதுரையிடம் சில கேள்விகள்!

    சென்னை புத்தகக்காட்சியில் சனிக்கிழமை (17/01/09) சிறப்புரையாற்ற வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டனர்.
     

    மாணவர்களின் கேள்விகளுக்கு எளிமையாக அவர் பதில் கூறினார்.

    சந்திரயான்-1 இல் ஏன் மனிதர்களை அனுப்பவில்லை?

    சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். சந்திரயான்-4 ஐ அனுப்பும்போது நிச்சயமாக மனிதனை அனுப்புவோம். 2018 இல் அமெரிக்கா மனிதனை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அந்தச் சமயத்தில் நாமும் அனுப்ப முயற்சி செய்வோம்.

    நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பியது போல வேறு கிரகங்களுக்கு அனுப்பும் எண்ணம் உண்டா?

    செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    புத்தகக் காட்சிகள் ஒவ்வோராண்டும் நடைபெறுகின்றன. அதுபோல விண்வெளி தொடர்பான காட்சிகளை நடத்துவீர்களா?

    விண்வெளி தொடர்பான நடமாடும் கண்காட்சிகள் நடத்த வாகனங்கள் எங்களிடம் உள்ளன. முறையாகத் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    உங்களுக்குச் சிறுவயதிலேயே விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்ததா?

    நான் விண்வெளித்துறையில் சேர்ந்தது ஒரு விபத்து. விபத்தாக நேர்ந்த ஒன்றிலேயே நான் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் இளமையில் விஞ்ஞானத்தில் ஆர்வமாக உள்ள நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.

    சந்திரயான்-1 இல் ஏன் நீங்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினீர்கள்?

    உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். சந்திரயான்-1 முழுக்க முழுக்க நமது தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு வெளிநாடுகள் நமக்குத் தொழில்நுட்ப உதவிகளைத் தர மறுத்துவிட்டன.

    முன்பெல்லாம் நமக்கான செயற்கைக்கோள்களை வெளிநாடுகளில் செய்து வெளிநாடுகளிலேயே ஏவிக் கொண்டிருந்தோம். பின்னர் இங்கே தயாரித்து வெளிநாடுகளில் இருந்து ஏவிக் கொண்டிருந்தோம். இப்போது நம்நாட்டில் தயாரித்து நாம் நாட்டிலேயே ஏவுகிறோம்.

    சந்திரயான்-1 ஐச் செலுத்தியதால் ஏதாவது பொருளாதார நன்மை இருக்கிறதா?

     
    நிச்சயமாக. நமது தொழில்நுட்பம் மிகவும் செலவு குறைவானது. இதனால் இப்போது செயற்கைக் கோள்கள் செய்யச் சொல்லி வெளிநாடுகளிடமிருந்து ஆர்டர்கள் வருகின்றன. இப்போது ஒரு செயற்கைக் கோளைச் செய்து அனுப்பிவிட்டோம். இது நமக்கு பொருளாதாரரீதியாக நல்லதுதானே?
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 17, 2009, 4:28:17 PM1/17/09
    to minT...@googlegroups.com

    இந்த ஆண்டு...இவை புதுசு...

    அநுராகம்:-
     
    அநுராகம் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடுகள் வரிசையில் 12 ரூபாய் விலையில் நூற்றுக்கணக்கான நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்களாக;
    • கம்ப்யூட்டர் கேள்வி பதில்
    • 350 பொது அறிவுத் துளிகள்
    • கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்
    • பரதநாட்டியம்
    • நான் ஒரு முட்டாளாங்க
    • இலக்கியத்தில் நகைச்சுவைகள்
    • உன்னத வாசகங்கள்

    ஆகியவற்றைச் சொல்லலாம்.

    சக்தி புத்தக நிலையம்:-
     
    ஆன்மிகத்தையும் தேசபக்தியையும் பரப்புவதையே நோக்கமாகக் கொண்ட சக்தி புத்தக நிலையம் இந்த ஆண்டு சிறப்பான பல நூல்களைக் கொண்டு வந்துள்ளது.
    • ஹொ.வெ.சேஷாத்ரியின் "தேசப் பிரிவினையின் சோக வரலாறு"
    • எம்.எஸ்.கோல்வால்கரின் "ஞான கங்கை" நான்கு பாகங்கள்
    • இரமேஷ் பதங்கேயின் "மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்"

    ஆகிய நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    சிறுவர்களுக்கான "பண்புமலர்க் கதைகள்" 5 பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கு.சீ.சுதர்ஸன் எழுதிய "ஹிந்துத்துவம் - ஓர் அறிவியல் கண்ணோட்டம்" சக்தி புத்தக நிலையத்தின் சிறந்த வெளியீடுகள்.

    கி.சூர்யநாராயணராவ் எழுதிய "மாதவனின் அடிச்சுவட்டில்" இன்னொரு சிறந்த நூல்.

     
    விழிகள் பதிப்பகம்:-
     
    விழிகள் பதிப்பகத்தில் இருந்து இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களில் ஆ.சந்திரபோஸின் நூல்கள் முதலிடம் பிடிக்கின்றன. அவருடைய;
    • தமிழ் சினிமா சில பார்வைகளும் சில பதிவுகளும்
    • ஒரு அன்னையின் காணிக்கை

    ஆகிய நூல்களைச் சொல்லலாம்.
     

    பேராசிரியர் அ.அய்யாசாமி எழுதிய "வைக்கம் - வரலாற்றுக் கவிதை நாடகம்" விழியில் மலர்ந்து அச்சில் விளைந்த முக்கியமான நூல்.
    • டாக்டர். டி.ஆர்.சுரேஷ் எழுதிய "முறிந்த மனங்கள்: மனச்சிதைவு பற்றி ஒரு விளக்கம்"
    • ஈரோடு தமிழன்பனின் "கதவைத் தட்டிய பழைய காதலி"

    ஆகியவை விழிகளுக்குப் பெருமை சேர்ப்பவை.

    புதுப்புனல்:-
     
    புதுப்புனலில் இந்த ஆண்டு வந்த புதுவெளியீடுகளாக;
    • பரிக்கல் மணிகண்டனின் "பிரம்மாக்கள்"
    • மு.இரமேஷின் "காட்சியதிகாரம்"
    • சி.லிங்கசாமியின் "அனுபவ மொழிகள் ஆயிரம்"
    ஆகியவற்றைச் சொல்லலாம்.
     
    ஹெரால்ட் ப்ளூம் எழுதி கோ.பிரேம்குமார் மொழிபெயர்த்த "கவித்துவத்தின் தொடக்கமும், அதன் இறுதி வளர்ச்சி நிலைகளும்" புதுப்புனலில் வந்த சிறந்த நூல்களாகும்.
     
    பொன்னி புத்தக வெளியீட்டாளர்:-
     
     "அந்தக் கேள்விக்கு 98 ஆண்டுகள்" - இரா.எட்வின் எழுதிய சிறந்த நூல் இந்த ஆண்டு பொன்னியில் பூத்திருக்கிறது.
    • சி.பி.சிற்றரசு மொழிபெயர்த்த "எமிலிஜோலா"
    • அம்மணி எழுதிய "சொப்பு" தலித் சிறுகதைகள்
    பொன்னியின் புது வெளியீடுகள்.
     
    தொகுப்பு நூல்களான "பாலம் சிறுகதைகள்", "பாலம் கட்டுரைகள்"
     
    இந்த ஆண்டு வெளிவந்திருக்கிற பொன்னியின் புதிய நூல்கள்.
     
    போதி:-
     
    ஜெ.பிஸ்மி எழுதிய நூல்களை வெளியிடும் போதியில் இந்த ஆண்டு;
    • நிழல்களின் தேசம்
    • தமிழ் சினிமா: சில நிகழ்வுகள் பதிவுகள்
    • தமிழ் சினிமா எழுச்சியும் வீழ்ச்சியும்
    • தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள்
    • உலகைக் கலக்கிய திரைப்படங்கள்

    என எல்லா நூல்களும் சினிமா...சினிமா என்றே போதி வெளியிட்டுள்ளது.

    கீழைக் காற்று:-
     
    இடதுசாரி நூல்களை வெளியிடும் கீழைக்காற்று இந்த ஆண்டு ஸ்டாலின் எழுதிய "லெனியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்" என்ற நூலை வெளியிடுகிறது.
    • அமெரிக்க நெருக்கடி,முதலாளித்துவத்திற்கு சவுக்கடி
    • காஷ்மீர் யாருக்குச் சொந்தம்
    • கம்யூனிஸ்ட் அறிக்கையின் கதை

    ஆகியவை கீழைக்காற்றில் தோன்றிய ஒளிக்கீற்றுகள்.

    தமிழினி:-
     
    "காவல் கோட்டம்" என்ற சிறந்த நூலை வெளியிட்ட தமிழினி இந்த ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் "காவலன் காவான் எனின்" நூலை வெளியிடுகிறது.
    • பாதசாரி எழுதிய "பேய்க்கரும்பு"
    • அ.கா.பெருமாளின் "தாணுமாலயன் ஆலயம்"
    ஆகியவை தமிழினியில் உதித்த புதிய நூல்கள்.
     
    கண்மணி குணசேகரனின் "மானுடர்களும் அமானுடர்களும்" தமிழினியின் சிறப்பு வெளியீடாக இந்த ஆண்டு மலர்ந்திருக்கிறது.
     
    நிவேதிதா பதிப்பகம்:-
     
    நிவேதிதா பதிப்பகத்தின் இந்த ஆண்டின் சிறந்த வெளியீடுகளாக
    • சேலம் பா.அன்பரசு எழுதிய "கடல் மல்லை முதல் திருத்தில்லை வரை"
    • கவிஞர் பூவை.செங்குட்டுவனின் "பெரியபுராணம் காட்டும் சமுதாய நிலை"
    • ஆருர்தாஸின் "ஒரு யாகம் ஒரு தியாகம்"
    • மேகலா சித்ரவேலின் "பாதரச உறவுகள்"

    ஆகிய நூல்களைச் சொல்லலாம்.
     

    "சாவி சிறுகதைகள்" குறிப்பிடத்தக்க இன்னொரு வெளியீடாக நிவேதிதா பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது.
     
    நன்றி: தினமணி

    வேந்தன் அரசு

    unread,
    Jan 17, 2009, 10:48:57 PM1/17/09
    to minT...@googlegroups.com
    >சந்திரயான்-1 இல் ஏன் நீங்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினீர்கள்?

    உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். சந்திரயான்-1 முழுக்க
    முழுக்க நமது தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக பொக்ரான்
    அணுகுண்டு சோதனைக்குப் பிறகு வெளிநாடுகள் நமக்குத் தொழில்நுட்ப
    உதவிகளைத் தர மறுத்துவிட்டன.

    கணேசர் என்ன சொல்லுகிறார்.

    நாசா ஒத்துழைப்பு இருக்கு என்ற செய்திகளை நான் வாசித்தேன். ஒருகால்
    சந்திரயானில் மட்டும் இராமல் இருக்கலாம்.

    கிரயோஜனிக் இயலி ருசியாவின்தொழில் நுட்பம்

    --
    வேந்தன் அரசு
    சின்சின்னாட்டி
    (வள்ளுவம் என் சமயம்)
    I have enough love for you to forgive your follies.

    Kannan Natarajan

    unread,
    Jan 18, 2009, 5:12:41 PM1/18/09
    to minT...@googlegroups.com
    இந்த ஆண்டு...இவை புதுசு...
     
    பாவை பப்ளிகேஷன்ஸ்:-
    • சேதுபதி எழுதிய "தமிழில் மகாகவி தோன்றுக"
    • கல்பனாதாசன் மொழிபெயர்த்த "மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு"
    • புலமை வேங்கடாசலத்தின் "ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் (நூல் வரிசை 1 - 7)"
    • ஏ.எஸ்.கே.யின் "பகுத்தறிவின் சிகரம் ஈ.வே.இரா."

    ஆகிய நூல்களை பாவை பப்ளிகேஷனில் வந்த சிறந்த புத்தகங்களில் சில எனச் சொல்லலாம்.

     
    தோழமை வெளியீடு:-
     
    சூரங்குடி முத்தானந்தத்தின் "கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்" என்ற நூலை தோழமை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
     
    பா.செயப்பிரகாசத்தின்
    • ஈழக்கதவுகள்
    • அக்னிமூலை
    1. மணாவின் "மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்"
    2. கி.பார்த்திபராஜாவின் "பிரதியிலிருந்து மேடைக்கு"

    ஆகியவை தோழமையின் வெளியீடே.

     
    இலக்கியச் சோலை:-
     
    இலக்கியச் சோலையில் இந்த ஆண்டு பூத்த மலர்களாக,
    • இஃப்திகார் ஜீலானி எழுதிய "சிறையில் எனது நாட்கள்"
    • அலெக்ஸ் ஹேலி எழுதிய "வேர்கள் - ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக்கப்பட்ட வரலாறு"
    ஆகியவற்றைச் சொல்லலாம்.
     
    யூசுஃப் அல் கர்ளாவீ எழுதிய "திருக்குர்ஆன் கூறும் பொறுமை" இலக்கியச் சோலையில் மலர்ந்த இன்னொரு மலர்.
     
    விடியல் பதிப்பகம்:-
     
    விடியல் பதிப்பகம் இந்த ஆண்டு;
    • எஸ்.வி.இராஜதுரையின் "மனிதாபிமான ஏகாதிபத்தியம்: தேசிய விடுதலை"
    • சுநீத்குமார் கோஷ் எழுதிய "இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்"
    • அ.மார்க்ஸின் "உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்"
    • சரண்குமார் விம்பாலேயின் "தலித் அரசியல்: விடுதலையின் திசைகள்"

    ஆகியவை இந்த ஆண்டு விடியலில் உதித்த சிறந்த நூல்கள்.

    மதிநிலையம்:-
     
    மதிநிலையம் இந்த ஆண்டு சா.இலாகுபாரதியின்,
    • கூந்தலிலிருந்து வழியும் வாசனை
    • தேவதைகள் உலா வருகிற நேரம்

    ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறது.

    யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்:-
     
    யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் இந்த ஆண்டு எம்.ஆர்.எம்.அப்துற் - றஹீம் எழுதிய "நெடுங்காலம் வாழ்வது எப்படி?" என்ற நூலை வெளியிட்டிருக்கிறது. அப்துல் இரகுமானின் "தட்டாதே திறந்திருக்கிறது" குறிப்பிடத்தக்க நூல்.
     
    எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபாவின்,
    • இதயத்தின் இரகசியம்
    • அறிவுச் சுருள்
    • அறிவும் பண்பும்

    ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.

    நிவேதிதா புத்தகப் பூங்கா:-
     
    நிவேதிதா புத்தகப் பூங்காவின் சிறப்பு வெளியீடுகளாக;
    1. மகரிஷியின் "சாணக்கியனின் சாம்ராஜ்யம்"
    2. புக்கர் டி வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறான "அடிமையின் மீட்சி"
    3. தமிழ்மகனின் நாவலான "ஏ.வி.எம் ஏழாவது தளம்"
    4. டாக்டர் பத்மாவின் "உங்களுக்கு நீங்களே மருத்துவர்" மற்றும்
    5. நிவேதிதா சுவாமிநாதனின் சிறுகதைகள்
    6. கெளதம நீலாம்பரனின் சிறுகதைகள்

    ஆகியவற்றைச் சொல்லலாம்.

    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 18, 2009, 5:16:58 PM1/18/09
    to minT...@googlegroups.com

    200 ஆண்டுகளுக்கு முன்பு...!

    இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்?
     
    அவர்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் யாவை?
     
    • மதநம்பிக்கை
    • கடவுள் வழிபாடு
    • உணவுமுறை
    • உடை உடுத்தும் முறை
    • பெண்களின் நிலை

    என சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் நூல் ஒன்றை "அலைகள் வெளியீட்டகம்" கொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் இந்த நூலை வி.என்.இராகவன் மொழிபெயர்த்திருக்கிறார்.

    கிறிஸ்தவ மத பிரச்சாரத்திற்காகப் பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு வந்த (கி.பி.1789 - 1828) அபே ஜெ.எ.துபுவா தனது மதப் பிரசாரத் தேவைக்காக இந்திய மக்களைப் பற்றிய - குறிப்பாகத் தென்னிந்திய மக்களைப் பற்றி தொகுத்த விவரங்கள் நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு பதிப்பை ஜி.யு.போப் தொகுத்திருக்கிறார். அவர் எழுதிய குறிப்புகளும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

     
    தென்னிந்திய பகுதியில் சாதிமுறை எப்படி இருந்தது என ஆராயும் இந்நூல், குறிப்பாக பிராமணர்களின் வாழ்க்கைமுறையை மிக விரிவாக ஆராய்கிறது.
    • கிரகஸ்தனான ஒரு பிராமணரின் அன்றாட வாழ்க்கை எவ்விதம் நடைபெற்றது
    • பிராமணக் குடும்பங்களில் பெண்களின் அன்றாட வேலைகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், அவர்களின் சமூகநிலைகள் எவை

    என்பதைப் பற்றியெல்லாம் மிகத் துல்லியமாக நூல் எடுத்துக் கூறுகிறது.

    இந்த நூலில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்திய மக்களை நன்கு புரிந்து கொள்ளவும், அவர்களை ஆளுவதற்கான தந்திரங்களை வகுத்துக் கொள்ளவும் ஆங்கிலேயர்களுக்கு இந்த நூல் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 18, 2009, 5:42:16 PM1/18/09
    to minT...@googlegroups.com

    குறையவில்லை புத்தக விற்பனை!

    சென்னைப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருந்த பதிப்பாளர்கள் சிலரைச் சந்தித்து இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் விற்பனை எப்படி, எந்த வகைப் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின, அடுத்த வருடப் புத்தகக்காட்சி எப்படி மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கேள்விகளை அடுக்கினோம்.

    பாரதி புத்தகாலயம் நாகராஜன்:- போன வருட அளவுக்கு இந்த ஆண்டும் விற்பனையாகியுள்ளது. சீரியஸான புத்தக வாசகர்கள் வழக்கமாக வருகிறார்கள்.

    ஏற்கெனவே வெளிவந்த புத்தகங்களைவிட புதிய புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. "ஜோதிபாசு வாழ்க்கை வரலாறு" அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்று. கல்விச் சிந்தனைகள் பற்றிய புத்தகங்கள், நாவல்கள் அதிகம் விற்பனையாகின.

    ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே வாசிக்கும் வாசகர்கள் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களையும் அதிகம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல மாற்றம்.

    சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இளைஞர்கள் அதிகமாக புத்தகக் காட்சிக்கு வந்திருந்தனர். குழந்தைகள் அதிகம் வந்திருந்தனர். குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கித் தர வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது நல்ல விஷயம்.

    தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன்:- இந்த ஆண்டு மக்கள் வருகை குறைவு. அதற்குக் காரணம் புத்தகக் காட்சியைப் பற்றிய விளம்பரங்கள் குறைவு. குறிப்பாக அச்சு ஊடகமான பத்திரிகைகளில் விளம்பரம் குறைவு. தொலைக்காட்சிகளும், சில பத்திரிகைகளும் தந்த செய்திகளால்தான் இந்த அளவுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். மக்களின் தேடல்களை நிறைவு செய்யும்விதத்தில் புத்தகங்கள் வந்திருந்தன. பலவித சப்ஜெக்ட்களை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.

     
    எங்களுடைய பதிப்பகத்தில்,
    • இராகுலசாங்கிருத்தியாயனின் "வால்காவிலிருந்து கங்கை வரை"
    • அகிலன் எழுதிய "வேங்கையின் மைந்தன்"
    அதிகமாக விற்பனையாகின.
    • தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்?
    • பேசாமல் பேசுவோம்

    அதிகமாக விற்பனையான பிற நூல்கள்.

    இப்போது மக்கள் வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படக்கூடிய புத்தகங்களையே நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதிலும் சிரமம் இல்லாமல் படிக்கவே விரும்புகிறார்கள். பாரதியார் கவிதைகள் புத்தகத்தைக் கூட கவிதைகளை விளக்கி புத்தகம் வெளியிட்டால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தோன்றுகிறது.

    நிவேதிதா பதிப்பகம் ஆர்.தேவகி:-  இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு மாணவர்கள் வருவது குறைவாக இருந்தது. ஆனால் இளைய வயதினர் அதிகம் வந்தனர். ஆன்மிகத் தேடல் அதிகமாக உள்ளது. ஆன்மிகத்துடன் சுயமுன்னேற்றம் சேர்ந்துள்ள நூல்களை இன்னும் அதிகம் வாங்கினார்கள்.

    வழக்கமாகச் சமையல் நூல்கள் அதிகம் விற்பனையாகும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. "உணவின் வழி உடல் நலம்" என்ற புத்தகத்தை விரும்பி வாங்கிச் சென்றார்கள். இந்த ஆண்டு முதல் நான்கு நாட்கள் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. பின்னர் கூட்டம் அதிகரித்ததால் பாதிப்பில்லை. புத்தகம் வாங்குவது குறையவில்லை.

     
    ஸ்டால்களைக் கண்டுபிடிப்பது இந்த வருடம் மிகச் சிரமமாக இருந்ததென்று எல்லாரும் சொன்னார்கள். மற்றபடி மிகச் சிறப்பாகவே இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடந்து முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது.
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 18, 2009, 5:48:22 PM1/18/09
    to minT...@googlegroups.com

    படைப்புகளுக்கே முக்கியத்துவம்...

    32வது சென்னைப் புத்தகக் காட்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (18/01/09) நடைபெற்றது. பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
    • பொது நூலகத்துறையின் இயக்குநர் ஆர்.இரமணி
    • மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் உதயசந்திரன்

    உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில்
    • "மணிவாசர் பதிப்பகம் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது" இரவி புக் ஹவுஸின் என்.கோபாலகிருஷ்ணன்
    • "பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது" மீனாட்சி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த சி.முருகப்பன்
    • தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான "ஆர்.கே.நாராயணன் விருது" ஜானகி வெங்கட்ராமன்
    • "குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது" ஏ.ஜி.எஸ்.மணிக்கும் வழங்கப்பட்டன.
    உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கூறியதாவது:-
     
    காட்சி ஊடகங்கள் அதிகமாக உள்ள காலத்தில் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்கும் சூழ்நிலையில் புத்தக வாசிப்பு அவசியமானது. குழந்தைகளின் கற்பனைத் திறனை, படைப்பாக்கத் திறனை அதிகரிக்க புத்தக வாசிப்பு உதவும்.  சமீபத்தில் வெளிவந்த நூல்களில் சு.வெங்கடேசன் எழுதிய "காவல்கோட்டை" நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. 600 ஆண்டுகால மதுரையின் வரலாற்றைச் சொல்லும் நூல். மதுரையின் சிதைவை, வீழ்ச்சியை, எழுச்சியை கலாபூர்வமாக விவரித்துச் செல்கிறது அந்த நாவல் என்றார்.
     
    நன்றி: தினமணி

    Kannan Natarajan

    unread,
    Jan 18, 2009, 5:51:19 PM1/18/09
    to minT...@googlegroups.com
    குழந்தைகளும் பெண்களும் அதிகம் வந்தது வெற்றி!

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசனைச் சந்தித்து 32வது புத்தகக் காட்சியைப் பற்றியும், அடுத்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்றும் கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது:-

    சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் காட்சியைப் பற்றிய விளம்பரம் குறைவு. அதற்கு முக்கிய காரணம், விளம்பரத்திற்கு உதவும் இரண்டு முக்கிய ஸ்பான்சர் இந்த வருடம் கிடைக்காததுதான். ஆனால் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் கொடுத்த பெரிய ஆதரவு மக்களை இந்த அளவுக்கு வரவழைத்திருக்கிறது. அதற்காக ஊடகங்களுக்கு என் நன்றி.

    சென்ற வருடத்தைவிட இந்த ஆண்டு 20%லிருந்து 40% வரை அதிகம் வருவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் 10% பேரே அதிகம் வந்திருந்தனர். அது சிறிது ஏமாற்றமளித்தாலும், ரொம்ப சந்தோஷம் தரக்கூடிய செய்தி குழந்தைகள் அதிக அளவில் வந்திருந்ததுதான். வருங்காலத் தலைமுறைக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் ஏற்படுவது மிக முக்கியமானது. குழந்தைகளின் கூடவே பெண்களும் வந்திருந்தார்கள்.

    எவ்வளவுதான் புத்தக அட்டையைக் கவரும் விதமாக போட்டாலும் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மட்டுமே தேடிச் சென்று வாங்கினார்கள்.

    புத்தகக் காட்சி நடக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி அதிகமாக உள்ளது. அதனால் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை.

    33வது புத்தகக் காட்சிக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பணிகளை முடுக்கிவிட நினைத்திருக்கிறோம். இதைவிடச் சிறப்பாகத் திட்டமிட்டுப் புத்தகக் காட்சியை நடத்த அது உதவும் என்றார்.

    நன்றி: தினமணி

    Reply all
    Reply to author
    Forward
    0 new messages