மதம் - என்றால் என்ன? இதல் எல்லைகள் எவை? அலசலாமா?

506 views
Skip to first unread message

Nagarethinam

unread,
Jul 26, 2011, 11:53:11 PM7/26/11
to மின்தமிழ்
மின் தமிழ் அன்பர்களே

நாம் ஒவ்வோருவரும் நாம் அறியும் உலகை , அதின் நிகழ்வுகளை, அதன்
வெளிப்பாடுகளை வெவ்வேறு விதமாக அறிகிறோம்.

அதனாலேயே நாம் ந்மது தனித்தன்மை ஆகிய்வை நம்மை பிரித்துக் காட்டுகின்றன.

இதை யாரும் மறுபார்களோ! சந்தேகம் தான்.

நாம் பல சமயங்களில் அறை குறையாக அறிந்த எல்லாவற்றையும் எல்லாமே தெரிந்தது
போல பேசுகிறொம் எழுதுகிறோம் விவாதிக்கிறோம

விவாதங்கள் ஆரோக்கியமான மான முறையில்
ஆக்க பூர்வமாக நடத்தினோ மானால் நமது அறைகுறை அறிவு முழுமை அடைய
வாய்ப்புகள் அதிகம்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் இருந்த்து.
அதனால் உலகில் எல்லா முயலுக்கும் மூன்று கால்கள் தான் என்று விவாதித்து
வந்தால் எவருக்கும் பயனில்லை.

இந்த விவாதத்தை இப்போது தொடங்கி வைக்கிறேன்.

(1) மதங்கள் என்பது மனிதர்கள் துன்பம் இல்லாமல் வாழும் வழிகள். மகாங்கள்
மக்கள் துயர் இல்லாது வாழ வகுத்துத் தந்த பாதைதான் மதங்கள்.

மதங்கள் தோன்ற காரண்ம் ஏதானாலும் குறிக்கோள் ஒன்றே! மதங்களிடையே உள்ள
வேறுபாடுகள் அவை
தோன்றிய இடம் காலம் ம்ற்றும் அன்றைய சமுதாய் சூழ்னிலைகளிப் பற்றியது.

அறிவில் மிகச் சிறந்தும், மனிதரின் மேல் (உயிர்களின் மேல்) அன்பும்
அனுதாபமும் கொண்டவர்களுமான சிலர் உயிர்களைப் படைத்த சக்தி ஒன்று
ஒருக்குமானால் அதன் பெயர கடவுளாக இருக்கும். அந்த கடவுளின்,,
தெய்வத்தின், சிறந்த குணங்களை தனதாகக் கொண்ட சிலர் இவற்றை
தோற்றுவித்தார்கள்.

(2) மத்ஙகளை ஒரு மாபெரும் சக்தி என்று கொள்ளலாம்..

ஏனென்றால் ஒரு நாணயத்திற்கு இருப்பது போல. எந்தவித சக்திக்கும் இரு
பக்கங்கள் உண்டு. ஓன்றும் ஆக்கம் மற்றது அழிவு.

நலமாக வழி செய்யும் மதங்கள் வரலாற்றின் பல கட்டங்களில் அதுவே மா பெரும்
அழிவிற்கும் காரணமாகி இருந்த்தை நாம் அறிவோம்.

(3) மதங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலானவை.
நம்ப்பிக்கைகள் - அறிந்து வாழும் முறைக்கு நேர் எதிரானது.

(4) ஆன்மிகம் அறிவு வழி வாழ்வது. ஆனால் ஆன்மிகர்கள் மற்றவர்களின்
தேடல்களிலிருந்து வேறுபட்டவர்கள்.

(5) நாத்திகர்கள் ஆன்மிகர்கள்மத்தியில் ஏராளம். நாத்திகர்கள்
நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாது அறிவுவழி ,, உலக வாழ்வில் முழுகி
வாழ்பவர்கள்.

(7) ஆன்மிகர்கள் மதங்கள் வழியாக வாழ்வில் சில கட்டங்க்களை
கடந்திருந்தாலும், அதைக் கடந்தவர்கள்,
மதங்கள் அவர்களுக்கு ஒரு ஏணி, ஆனால் ஒரு வேலி இல்லை.

கி.காளைராசன்

unread,
Jul 27, 2011, 7:54:14 AM7/27/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.
நாம் பல சமயங்களில் அறை குறையாக அறிந்த வற்​றை முழு​மையாக ஏற்றுக் ​கொண்டு, முழுவதும் தெரிந்து ​கொள்ள பேசுகிறொம் எழுதுகிறோம் விவாதிக்கிறோம்.
 

விவாதங்கள் ஆரோக்கியமான மான முறையில்
ஆக்க பூர்வமாக நடத்தினோ மானால் நமது அறைகுறை அறிவு முழுமை அடைய
வாய்ப்புகள் அதிகம்.
 மிகச் சரியாகச் ​சொல்லியுள்ளீர்கள்.
நானும் என்வாழ்வில் மிகச்சில துளிகளில் அறிந்து​கொண்ட​தை இங்​கே பகிர்ந்து ​கொள்ள விரும்பி எடுத்துச் ​சொல்ல முற்படுகி​றேன்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் இருந்த்து.
அதனால்  உலகில் எல்லா முயலுக்கும் மூன்று கால்கள் தான் என்று விவாதித்து
வந்தால் எவருக்கும் பயனில்லை.
​வெறுப்புதான் மிஞ்சும்.

இந்த விவாதத்தை இப்போது தொடங்கி வைக்கிறேன்.

(1) மதங்கள் என்பது மனிதர்கள் துன்பம் இல்லாமல் வாழும் வழிகள். மகான்கள்
மக்கள் துயர் (இல்லாது?) கு​றைந்து வாழ வகுத்துத் தந்த பாதைதான் மதங்கள்.
 

மதங்கள் தோன்ற காரண்ம் ஏதானாலும் குறிக்கோள் ஒன்றே!
ஐயா நீங்கள் மதங்கள் என்று  எவற்​றைக் குறிப்பிடுகின்றீர்கள் என்ற பட்டிய​லையும் ​கொடுத்தால் நன்றாக விளங்கும்.
 

  அதன் பெயர கடவுளாக இருக்கும்.  அந்த கடவுளின்,,
தெய்வத்தின்,  சிறந்த  குணங்களை தனதாகக் கொண்ட சிலர்  இவற்றை
தோற்றுவித்தார்கள்.
இந்து மதம் இவ்வாறு ​தோற்றுவிக்கப்பட்டதல்ல​வே?

(2)  மத்ஙகளை ஒரு மாபெரும்  சக்தி என்று கொள்ளலாம்..

ஏனென்றால் ஒரு நாணயத்திற்கு  இருப்பது போல. எந்தவித சக்திக்கும் இரு
பக்கங்கள் உண்டு. ஓன்றும் ஆக்கம் மற்றது அழிவு.

நலமாக வழி செய்யும் மதங்கள் வரலாற்றின் பல கட்டங்களில் அதுவே மா பெரும்
அழிவிற்கும் காரணமாகி இருந்த்தை நாம் அறிவோம்.
இந்துமதம் வழிந்து யா​ரையும் அழிக்கவில்​லை.
தன்​னை அழித்தவர்க​ளை அழித்து தன்​னைக் காப்பாற்றிக் ​கொண்டுள்ளது.

தங்களது இந்தப் பங்களிப்பால்
மதங்க​ளை முழு​மையாக அறிந்து ​கொள்ள முயற்சிக்கி​றேன்.

அன்பன்
கி.கா​ளைராசன்

Nagarethinam

unread,
Jul 27, 2011, 12:14:05 PM7/27/11
to மின்தமிழ்
உண்மையைச் சொன்னால் ஒப்புக்கணும்.

ம்தங்கள் தெரிந்து அறியும் தானே அறியும்சக்தி இல்லாத பெரும்பான்மை
மக்களுக்காக உண்டானது.

ஜீசஸ் ஒரு மத்த்தை உருவாக வேண்டும் என்று உருவாக்க வில்லை. சுமார் 35
வருடம் முன் நான் படித்த ஒரு புத்தகம் நான் சுலபமாக அறிய இயலாத
பாடபுத்தகங்களில் வெளிவராத பல உண்மைமைகளை வெளியிட்டுள்ளது. அதில் கண்ட்
ஒரு செய்தி சுமார் 80 வருடங்கள் முன்னால் உறுதி செய்தது.

அந்த புத்தகத்தில் கண்டது உண்மை என்றால் - ஸோபிஸ்ட் என்ற இயக்கம்
(அப்போது அரிஸ்டாடில் அதன் தலைவர்) இயேசுபிரான்
அவதரித்தில் ஒரு முக்கிய பங்கு வகித்ததை அறியலாம்.

இந்தியாவில் காஷ்மீரத்தில் ஏதென்ஸ் போனற நாடுகளுக்கு இயேசு பிரான்
விஜயம் செய்த்து நான் அறிந்த வரலாற்றில் இல்லை.

இவை எல்லாமே, இன்று, அவசியம் இல்லாதவை.

மனதில் சிந்திப்பதில் மிக அதிக உயரத்தை எட்டியவர்.ராமலிங்க அடிகள்போன்ற
மகான் களின் சிறப்பம்ஸமான (compassion) இவரின் சிறப்பு. ஆட்சியாளார்கள்
அன்றைய மதவாதிகளின் போக்கில் ஏழைகளின் துன்பத்தை அகற்றவும் அறியாமையில்
தி ளைக்கும் மக்களும் நலம்பெற வாழ்ந்த சில வருடங்களை கழித்தார்.

அவர் உலக மக்களின் நன்மைக்காக தியாகங்கள் செய்தார் என்பதைவிட அன்று
அவர்செய்த தியாகங்கள் உலகெல்லாம் உள்ள மக்கள் நல்ல வாழ்வு வாழ உதவும்
என்பதே சரி.

அவரின் சீடர்களும் எப்படி வாழ்ந்தால் நல் வாழ்க்கை பெறலாம் என்று சிறிது
சேர்த்து பல திசைகளின் சென்று இயேசுவின் செய்திகளை பரப்பினார்கள்.

எல்லா மக்களுக்கும் ஒரு குறை.

என் அம்மா சமயல்தான் சிறந்த்து. நான் வாழும் வீடு தான் நகரத்தின்
மைய்த்தில் உள்ளது.

இவர்கள் இருந்த மண்ணில் அறியாமை மண்டியிருக்கலாம் அதனால் உலகம் முழுவதும்
அறியாமை நான் வைத்திருப்பதே
ஒரு சிறந்த மருந்து என்று எண்ணுவதோடு வியாபார நுணுக்கங்களோடும் கட்டாயம்,
பொருள்ஆசை இவற்றைக் காட்டி
பறப்பப் படுகிறது.

இந்த மண்ணில் இயற்கையாக விளைந்த ஜாதியின் அடிப்படையில்
மக்கள் பிரிக்கப்பட்டு தீண்டாமை, ஏழ்மை போன்ற தீமைகள பிற மதங்களை வளர்க்க
பாடுபடும் மக்களுக்கு சாதமாக மாறுகின்றன.
இன்றும் நம் சமுதாயத்தில் தீண்டாமை பிரச்சினை தீர்ந்த பாடில்லை என்பது
மறுக்க முடியாத உண்மை. ஏழைகள் படு ஏழைகளாக மாறும் அதிசயமும் தொடர்கிறது.
அறியாமையில் வாழும் மக்களாய் ஏமாற்றி சுரண்டும் தலைவர் களுக்கும்
குறைவில்லை. மதம் மாற்றும் சிலரை குறை சொல்லிப் பயன் என்ன?

(2) ஒரு மதம் என்றால் அதற்கு (அ) வழிபாட்டு முறைகள் (ஆ) வாழ்க்கைப்பாதை -
வேத புத்தகம் என்று பொதுப்படையாக சொல்லலாம். குரான், பைபிள், என்று
அடுக்கலாம்.

(3) இந்துமதம் ஒரு மதங்களின் கூ ட்டமைப்பு. எண்ணற்ற விதமான வழிபாடுகள்
முறைகள் வழிபாட்டுத் தலங்கள். இதை ஒட்டு மொத்த்மாக கலாசாரம் என்றும்


சொல்லலாம்.

(4) இந்து மத (வேதங்கள் என்று சொல்வோமா?) SCRIPTURES ஒருவர்
உண்டாக்கவில்லை.இந்த எழுத்துக்கள் மதத்தை மாத்திரம் பற்றியதல்ல, மாறாக
ஆன்மிக சிந்தனையும் கொண்டது. எப்படி.

நம்ம வீட்டில் பருப்பு ரசம் வைப்பார்கள். மேலாக எடுத்தால் ரசம்
கீழாக எடுத்தால் குழம்பு. இந்து சமய இலக்கியங்களும் அப்படித்தான்.
மேலாக மதம் - சாதாரண பொருளுலக மக்களுக்கு. அடிவிஷயம்
அசல் 24 காரட் ஆன்மிகம். (படிக்க பொருமை இருந்தால் சொல்லுங்கள்
பிரசுரத்திற்காக காத்திருக்கும் எனது புத்தகம் "ஓட்டங்களை:
அனுப்பிவைக்கிறேன்.)
மதங்களை

இதே இந்துக் கலாசாரத்தில் உதித்த சமண பௌத மதவாதிகள் மற்றவரிடம்
அடைந்த தொல்லைகளும் சைவ - வைணவ பிரிவுகள்
ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்ட அவலம் சரித்திரம் வெளிச்சம் போட்டுக்
காட்டாதது ஒரு குறை.

இவர்களை சமாதானப் படுத்த விஷ்ணுவை பெண்ணாக்கி (மோஹினி) சிவபெருமான்
கூட்டு டன் ஐப்பனை உருவாக்கியதே
இந்த இரு கூட்டத்தாரை சமாதானம் செய்ய்த்தான்.

சைவத்திற்கும் வைணவத்திற்கும் நான் கேட்டறிந்த பலருக்கு
வித்தியாசம் தெரியாது.சொன்னாலும் புரியாது. சொல்வதற்கு ஆதாரம்
ஏதுமில்லை.பின் அத்வைதம் த்வைதம் விசிஷ்டாத்வைதம் - இதெல்லாம் என்ன?

விவரம் தேவையா ? ஆங்கிலத்தில் பதிப்பிற்கு காத்திருக்கும்

shake hands with your creator, Brahma

என்ற புத்தகத்தை 25 தடவையாக மாற்றி மாற்றி எழுதீருக்கிறேன்.
Dr Chandra Mohan அவர்கள் பாராட்டியிருக்கிறார், பொருமை இருந்தால்
சொல்லுங்கள் இதையும் அனுப்பியுள்ளேன்.

மதங்கள் நம்பிக்கையின் ஆதாரத்தில் இயங்குபவை. மத்த்தை கைலெடுத்தவர் தன்னை
பின்பற்றுபவர்களை என்னவெல்லாம் செய்யவைக்கலாம்? ஆக்க வழியும் அழிவு
வழியும் இரண்டுமே.
இது மத்ததிற்குமட்டுமில்லை ஜாதி இனம் மொழி என்று பிர்ந்திருக்கும் மக்கள்
எல்லாவருக்கும் இது பொருந்தும்.

நண்பரே

இப்பொது உங்கள் கேள்விகளை சரமாரியாக எழுப்புங்கள்.

நட்புடன்
நடராஜன்

Reply all
Reply to author
Forward
0 new messages